ஸ்ரீ பெரும் பூதூரில் -ஸ்வாமி திருமஞ்சனக் கட்டியங்கள் – ஸ்ரீ கடிகா சதகம் அம்மாள் அருளிச் செய்த ஸ்ரீ யதிராஜ விஜய ஸ்லோகம் —

முதல் திருமஞ்சனக் கட்டியம்

நாயந்தே நாயந்தே

காஷாய சோபி கமநீய சிகா நிவேசம்
தண்டத்ரய உஜ்ஜ்வல கரம் விமல உபவீதம்
உத்யத் திநேச நிபம் உல்லஸத் ஊர்த்வ புண்ட்ரம்
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே

அப்பனுக்கு சங்காழி அளித்தருளும் பெருமாள்
அறமிகு நற் பெரும் பூதூர் அவதரித்த பெருமாள்
அறுசமயச் செடியதனை அடியறுத்த பெருமாள்
அருளாழி வரி வண்டே என்று ஆழ்வார் அழைக்கும் பெருமாள்
அருள் மாரி அடியிணைக் கீழ் அன்பு பூண்ட பெருமாள்
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாம் ஆண்டாள் தமக்கும் அண்ணரான பெருமாள்
அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் தாழ்வின்றி வாழும் பெருமாள்
அடியார் வினைத் தொடரை அருள் என்னும் ஒள் வாள் உருவிக் கிட்டிக் கிழங்கொடு வெட்டிக் களைந்த பெருமாள்
நம் தேசிக சிகாமணிப் பெருமாள்-

தேவரீர் திருவடித்த தாமரைகளின் தாஸ்யார்ஹ சாரஸ்ய தாநார்த்தமாக ஆசன அரவிந்தத்தில் அழுத்தியிட்ட இடது கழலும்
இடது துடையின் மேல் வளர்த்திக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்குக் காட்டியிட்ட வலது கழலும்
சாஷாத் மன்மத மன்மதாயமான மது மதன விஜய தூணிர யுகளம் போல் இணைந்து வைத்த கணுக் கால்களும்
கீழ் நோக்கும் ஒளி வெள்ளம் மறியுண்டு கழித்தால் போலே இரண்டுருவம் திரண்டு உருண்டு மடியுண்ட மூலம் தாள்களும்
கந்தளித கதலீ காண்ட கரிகர கலபகங்கள் போல் அதி ம்ருதுள மாம்சலங்களாய் விளங்குகின்ற திருத் துடைகளும்
சந்த்யா ரஞ்சிதா சாரதாப்ரத்தில் தனித்து எழுந்ததோர் கொடி மின்னல் நிலை நின்று வளர்ந்தால் போலே ஆஜங்கம் தழைத்து உடுத்து
அரைச் சிவந்த ஆடையின் மேல் வளைந்து வந்து நிகு நிகு என்ற பொன்னரை நாண் பூண்ட அழகும்
சேவா ரஸ பாச பரப்ராமித மதி மந்தார மா மத்யமான ஸுந்தர்ய துக்த சிந்தூதரம் நடுக்குழித்திட்ட சுழி போல் ஸூந்தரமாம் உந்தி மலரும்
மஞ்ஜூள தர மாயூரோ சீர வாலவ்யஜன வேவீ ஜ்யமான திவ்ய தூப குமிதமித மந்தகதவஹ கோதூயமான
திவ்ய லாவண்ய தரங்கிணீ தரங்கங்கள் போல் இருபாலும் திகழ்கின்ற திருவலிகளும்
அபிநவதர தர விகஸ்வர சரஸிஜ வர முகுள தளத் தளாயமான நிஜாஞ்சலி சிகாங்குளீ சோபையை நிஜ ஹ்ருதய ஜலஜததர ரசிக ஹார்த்த
ஜனார்த்தனனுக்கு அவநமித்துக் காட்டுவது போல் நெஞ்சுக்கு நேராகக் கொஞ்சம் சாய்த்து அஞ்சலித்த தடக் கைகளும்
தங்க வளை மேல் தங்கித் தொங்குகின்ற சங்கிலிகளோடு இணக்கமுற்ற கணுக் கைகளும்
முறுக்கியிட்ட முன்கையோடு உள் விம்மிப் புறங்குவித்து மடியுண்டு முழங்கைகளும்
கநகமய குல தரங்களைக் கடைந்து எடுத்து மடுத்தால் போல் திரண்டு நீண்ட பாஹு தண்டங்களும்
வைகுண்டாதி ப்ரஹ்ம கோசங்கள் வந்திருக்கும் மாணிக்கப் பண்டாரமான நெஞ்சமாகிய நீணகர்க்கு ஓர் கநகமய கவாடம் போல்
பளபளன்று அகன்று காட வ்யூடமாய்த் திகழ்கின்ற திரு மார்பின் அழகும்
அம்மார்பின் அழகில் ஆழங்கால் பட்டு மயங்கிவிடும் மநோ நயனங்களைத் தோள் அளவில் துவக்கி விடும் அவலம்ப ஸூ த்ரம் போல் இலங்குகின்ற முந்நூல் அழகும்
சேஸ்வர விபூதி த்வயமும் இளைப்பாறும் நிழல் தடமாய் வளர்ந்து உயர்ந்த திண் தோள்களும்
கண்ட வ்யக்த தாரா ஷரங்கள் புறம்பொசிந்து காட்டினால் போல் ரேகாத்ரய விபக்தாங்கமாய் வலம் புரியின் சுழி ஒழுங்கைப் பழித்து எழுந்த கழுத்தின் அழகும்
மறு கழித்தன சந்த்ர மண்டலத்தையும் அப்போது அலர்ந்த செந்தாமரைப் பூவையும் அதகரித்துக் கிட்டினாரை மையல் ஏற்றி மயக்கும் மாய மந்திரமாய்
விளங்குகின்ற ஸ்மயமான முகார விந்தமும்
இசைந்து கனிந்து த்ராஷாத்வயம் போல் வகுப்புண்ட கமுக விகாசமும்
அதிருசிர பாவ கர்ப்பமானதொரு வார்த்தை சொல்லத் தொடங்கித் துடிப்பது போல் விளங்குகின்ற திருப் பவளங்களும்
அபிமத ஜன தரிசன ஆனந்த வேகத்தால் அர்ச்சாவதார சமாதியைக் கடந்து விம்மி வெளி வழிகின்ற அவ்யக்த மதுர மந்த ஹாஸ விலாசமும்
ஸ்படிகமய முகர மண்டலங்கள் போல் தள தள வென்ற திவ்ய கபோலங்களும்
கந கநக மகர குண்டல த்வயத்தால் தழைந்து வளர்ந்து படிந்து வடிவிட்டு சுருண்டு நீண்டு தோள் அளவும் தொங்குகின்ற கர்ண பாசங்களும்
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ என்று நித்ய சந்தேக ஜனகமான கோலா நீள் கொடி மூக்கின் அழகும்
மிதோபத்த ஸ்பர்த ஸ்புரித சபரி த்வந்த்வ வல்லிதங்களாகப் புடை படர்ந்து மிளிர்ந்து நீண்ட தன தாமரைக் கண்களும்
குணோத்கர்ஷ குண்டிலதமான திருச் சார்ங்கம் போலே வளைந்த திருப் புருவ வட்டங்களும்
அஷ்டமீ சந்த்ர அம்ருத ப்ரவாஹங்கள் கற்பகக் கொடியடியில் பெருகி வந்து தேங்கினால் போலே திரு நுதல் மேல் இலங்குகின்ற
நாசிகா மூல த்ருத ஸ்ரீ ராமானுஜ தீவ்ய திவ்ய ஊர்த்வ புண்ட்ர விசேஷமும்
அதன் நடுவில் உபய விபூதி சாம்ராஜ்ய பட்டாபிஷேக லஷ்மீ விஹார நிஷிப்த பாத கமல லாஷா பங்கம் போல் சிவந்து படிந்து விளங்குகின்ற ஸ்ரீ சூர்ண ரேகையும்
உயர்ந்து மலர்ந்த திரு முடியும்
வளர்ந்து மடிந்து வ்யக்த அவ்யக்தமாய் விளங்குகின்ற திருக் குழல் ஒழுங்கும் -சுற்றிச் சுழற்றிக் குழைத்திட்டு முடித்துத் தொங்கவிட்ட சிகா பந்தமும்
பின் எடுத்த பிடரி அழகும்
திருவனந்தாழ்வான் பின் படம் போலே நடுப் பதிந்து விசாலமாய் நெரித்திட்ட திரு முதுகும்
வலவருகில் முன்னாட்டித் தாங்கியிட்ட த்ரிதண்டாக்ரமும்
சீரியதோர் நிதி போலே திரு முன்பே நோக்கிக் கொண்டிட்டு வைத்த திருவடி நிலைகளுமாய்
இப்போது தேவரீர் திரு மஞ்சனம் கண்டருள எழுந்து அருளி இருக்கும் அழகியது
ஏதேனும் சிந்தை மருளோ
ஜெகன் மோஹன மந்த்ர ப்ரபாவமோ
சகல ரஸ குளிகா விலாசமோ
சர்வ போக சிந்தாமணி பிரகாசமோ
அகில ஜகத் ஸூக்ருத விபாகமோ
நிகில பல கல்பலதா பிரசரமோ
ஸமஸ்த சம்பத் சாம்ராஜ்ய வேஷமோ
சர்வ மங்கள சந்தா ப்ரசவமோ
அகில ஜெகஜ் ஜீவன மூலமோ
அதுல ஆனந்த கந்த அவதாரமோ
சகல கலா ரஹஸ்ய சர்வஸ்வமோ
சர்வேஸ்வர ஆபத் தனமோ
ஈது எல்லாம் திரண்டு எழுந்து கொண்டதோர் வடிவமோ
இதுவும் அன்று அப்ரமேய தேஜஸோ
நாங்கள் ஏது ஓன்று அறியா இவ்வழகுடன் தேவரீர் ஊழி தொறும் ஊழி தொறும் வாழ்ந்திடுக வாழ்ந்திடுகவே
யதி ஸார்வ பவ்மனே
திருமஞ்சனம் கண்டருளவே ஜய விஜயீ பவ –

———————————–

இரண்டாவது திருமஞ்சனக் கட்டியம்

காஷாய சோபி கமநீய சிகா நிவேசம்
தண்டத்ரய உஜ்ஜ்வல கரம் விமல உபவீதம்
உத்யத் திநேச நிபம் உல்லஸத் ஊர்த்வ புண்ட்ரம்
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –

போதைச் சிவந்து பரிமளம் வீசிப் புதுக் கணித்த
சீதக் கமலத்தை நீரேற வொட்டிச் சிறந்தடியேன்
ஏதத்தை மாற்றும் எதிராசனார் தம் இனிமை தரும்
பாதக் கமலங்கள் வாழியரோ பாதக் கமலங்கள் வாழியரோ–

பற்பம் எனத் திகழ் பைங்கழலும் தம் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராடை பதிந்த மருங்கு அழகும்
முப்புரி நூலொடு முன் கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலா வழகும்
கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக் கண் அழகும்
காரி சுதன் கழல் சூடிய முடியும் கன நற் சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசன் வடிவு அழகு என் இதயத்து உளதால்
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே —

தேவரீருடைய திருவடித்த தாமரைகளின் போக்கிய அதிசயத்துக்கு ஒரு போலியாக கம்பீராம்பஸ் ஸமுத்பூத ஸூம்ருஷ்ட நாள ரவிகர விகசிதமான தோர் செந்தாமரைப் பூவை
அதனுடைய கர்வ சர்வஸ்வ நிர்வாபரண பூர்வகமாக திருவடிகளின் கீழ் அமுக்கி அதன் தலை மேல் வெற்றியுடன் வீற்று இருக்கும் இருப்பின் அழகும்
பங்கஜ ரஜஸ்ஸூம் பாதாருந்துதமாம்படி சேடீ ஜன சர்ச்சா ஸஹ ஸுகுமார்ய சாலிநிகளான பிராட்டிமாரும் பிடிக்கக் கூசும் படி புஷப ஹாஸ ஸூ குமாரதரரான
பெரிய பெருமாளுக்கும் மெத்தென்ற பஞ்ச சயனமாய்-அத்யந்த ஸூகுமாரரான தேவரீர் தமக்கு ஆசனமாய்க் கொண்டு தொண்டு பூண்ட புண்டரீகத்துக்கு
ஸ்வ தாஸ்யார்ஹ சாரஸ்யாதிகளை யூட்டுக்கைக்குத் ததாஸ்யாந்தரத்தில் சொருகிவிட்டு வைத்தால் போலே மறைத்திட்ட இடது திருவடிகளும்-
சம்சரண தவ தஹன தந்தஹ்யமான சகல ஜகதவநபர சந்தத சிந்தா ஸாமக்ராந்தியாலே நிப்ருததயா பணிபதி சயன சயானரான பெரிய பெருமாளுடைய
யோக நித்ரா முத்ர அனுசாரியாக இடது தொடையின் மேல் வளர்த்திக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்குக் காட்டியிட்ட வலத்திருவடிகளும்
பர ப்ரஹ்ம பூத பர புருஷ விஷயக சங்க காமத் யுத்தீபகரான மன்னிய சீர் மாறன் என்னும் மாறனுக்கு தேவரீருடைய பதசாசிஜ வியாஜேன
குஸூமாசர ஸஹிதமாக அமைத்து வைத்த அம்பறாத் துணிகள் போலே இணைத்து வைத்த கணுக் கால்களும்
கீழ் நோக்கிக் கிளர்கின்ற சுடர்ச் சோதி வெள்ளங்கள் ஆசன அபிகத்தால் மறியுண்ட கழித்தால் போல் இரண்டுருவம் திரண்டு உருண்டு மடியுண்ட முழம் தாள்களும்
கந்தளித கதளீ காண்ட கரிகர கரபங்களை வென்று அடி பெருத்து நுனி சிறுத்து மத மதவென்று மாம்ச லங்களாய் விளங்குகின்ற திருத் தொடைகளும்
சடப் ரமதன சமதன ஸார்வ பவ்ம ஜைத்ரயாத்ரா ரதம் போன்ற தேவரீருடைய திரு மேனிக்கு கீழ் உருண்டு வரும் இரண்டு சக்ர மண்டலங்கள் போன்ற ப்ருது நிதம்ப பிம்பங்களும்
திருவரையில் மடி தொடங்கிக் கணைக் கால்கள் நடுவளவும் உள்ளுள்ள வடிவு அழகுக்கு அத்யந்த பிரகாசகமாய் பொருத்தமுடன் தரித்து இருந்த கமநீய காஷாயமும்
இடவருகில் தொடையடியில் தொங்குகின்ற தலைப்புடனே நடுக்கோத்து மடித்துடுத்த சர்வோத்தர உத்தரீயமும்
சந்த்யா ரஞ்சிதா சாரதாப்ரத்தில் தனித்து எழுந்ததோர் கொடி மின்னல் நிலை நின்று வளர்ந்தால் போல் ஆஜங்கம் தழைத்து உடுத்து
அரைச் சிவந்த ஆடையின் மேல் வளைந்து வந்து நிகு நிகு என்ற பொன்னரை நாண் பூண்ட அழகும்
பகவத அனுபவ ரஸ விவசருடைய அபிநிவேச பாச பரிப்ராமித மதி மந்தார மா மத்யமான ஸுந்தர்ய துக்த சிந்துவான சுற்றோரம் திரைந்து எழுந்து
நடுக்குழித்திட்ட சுழி போல் ஸூ ந்தரமாம் உந்தி மலரும்
விநயமுடன் வீசுகின்ற வெட்டி வேர் விசிறிகளால் அத்யந்த குமுகுமித சனைச்சன ப்ரசரன் மந்த கந்தவஹ விஹரண விசேஷங்களாலே தேவரீருடைய
திவ்ய லாவண்ய தரங்கிணீ பார்ஸ்வ பாகங்களில் இரண்டு அலை வரிசை பரம்பினால் போல் இரு பக்கமும் திகழ்கின்ற திருவலிகளும்
மாம் ஏகம் என்பதை அபிநயித்துக் காட்டுவது போல் நெஞ்சுக்கு நேராகக் கொஞ்சம் சாய்த்து அஞ்ஜலித்த திருக்கைகளும்
தங்க வளை மேல் தங்கித் தொங்குகின்ற சங்கிலிகளோடு இணக்கமுற்ற கணுக் கைகளும்
அபிநவதரதர விகஸ்வர சரஜிஜவரே முகுள தளத் தளாயமான நிஜாஞ்ஜலி சிகாங்குளீ சோபையை நிஜ ஹ்ருதய ஜலஜததர ரசிக
ஹார்த்த ஜனார்த்தனனுக்கு அவனமித்துக் காட்டுகையால் முறுக்கியிட்ட முன் கைகளும்
அகடிதகடநா சமர்த்த சதுர்புஜ புஜதுர்ப்பர விபூதி த்வய பர பரணார்த்தமாகக் கனக மய கிரி வரங்கள் இரண்டை வெளிறறக் கழித்துப் புகர் எழக்கடைத்து
தூணாக்கி மடுத்தால் போல் இரண்டட்டத்திலும் திரள் திரண்டு நீண்டு த்ருட தரங்களுமாய் சிரீஷ குஸூம ஸுகுமார்யம் திரண்டு இரண்டு வடிவு கொண்டால் போல்
அத்யந்த ம்ருதுளங்களுமாய் சாஷாத் புஜகபதி போகாத்மகத்வ ப்ரத்யாயகங்களுமாய் விளங்குகின்ற பாஹு தண்டங்களும்-
ஹ்ருதயாந்தர நிஹித ப்ரஹ்ம புரகோபுர கோபநாத்தமிட்ட ஹாடகமய கவாடம் போல் பள பள என்றகன்று காட வ்யூடமாய்
வயபரிணாம ஸூசநார்த்தமாககே கொஞ்சம் தளர்ந்தது போல் விளங்குகின்ற விசால விமல வக்ஷஸ் ஸ்தலமும்
அழகு கொண்டாடுகிற அம்மார்பின் அழகிலே ஆழங்கால் பட்டு மயங்கி விழுகின்ற மநோ நயன யுகளங்கள் மூன்றுக்கும் கைப்பிடி கொடுத்து
அவற்றைத் தோள் அழகிலே துவக்குகைக்குத் தொங்கவிட்ட அவலம்ப ஸூத்ர த்ரயம் போன்ற ஸுதாமாநீ ஸ்வர்ண ஸுவர்ண யஞ்ஞ ஸூத்ரமும்
சேஸ்வர விபூதி த்வயத்துக்கும் நிழல் கொடுத்து வளர்ந்து விசாலங்களுமாய் கிரிவர சிகர ஸூக ப்ரதிஷ்டித்த ஸிம்ஹஸ் கந்த
சந்திபந்த சமஸ்தான பத்த ஸ்பர்சங்களுமாய்ச் சரிந்து உயர்ந்து விளங்குகின்ற திருத் தோள்களும்
கண்டருத்த பிரணவ அக்ஷரங்கள் கழுத்துள்ளே நெருக்குண்டு விம்மிப் புறம்பு பொசித்தால் போல் ரேகாத்ரய விபக்தாங்கமாய்
க்ரமுக தருண க்ரீவா கம்பு ப்ரதிமமாய் விளங்குகின்ற திருகி கழுத்தின் அழகும்
சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்தது என்கிறபடியே சாரத சர்வரீ பர்வாக்ர சமய சமேதித சகல கலா பரிபூர்ண சர்வ ஆஹ்லாத கரமான
மறுக்கழற்றின சந்த்ர மண்டலத்தையும் அப்போது அலர்ந்த செந்தாமரைப் பூவையும் ஸஹஜகாந்தி சைத்திய மார்த்வ ஸுராபாதிகளால்
அதிகரித்துக் கிட்டினாரை மையல் ஏற்றி மயக்கும் மாய மந்திரமாய் விளங்குகின்ற ஸ்மயமான முகாரவிந்தமும்
நின்றவா நில்லா நெஞ்சு பிணிப்புண்ணும் படி கண்ணிக் கயிற்றுச் சுருள்கள் போலே சுருண்டு உருண்டு நீண்டு மநோ ஹரங்களுமாய்-முன் சில நாள்
சாத்திக் களைந்த கநகநக மகர குண்டல த்வயத்தை தளர்ந்து வளர்ந்து வடிவிட்ட வடிவு அழகால் கோள் சொல்லித் தரக் கடவதுகளுமாய்
மார்த்தவ அதிசயத்தாலே மெல்ல அசைந்து ஆடுவது போல் தோள் அளவும் தள தள வென்று தொங்குகின்ற திருச் செவிகளும்
இசைந்து கனிந்த த்ராஷாத்வயம் போல் நடுப்பதிந்து வகுப்புண்டு திரண்டு எழுந்த சுபுக விகாசமும்
ஸ்வாந்த ஸ்வாந்தர் நிரந்தர சிந்த்யமான அனந்த சயாநந்த சிரந்தநோதந்த சந்தான சாஷாத்கார சமுதஞ்சித ரோமாஞ்ச விசேஷங்களாலே
பரம புருஷ சம்ச்லேஷ ஹர்ஷாதிரேக ஸூசககங்களுமாய்-அவ்யக்த அங்குர ஸ்மஸ்ரு சமூஹதயா –யத்ரர்ஷய பிரதம ஜாயே புராண -என்கிற
நித்ய யுவத்வத்தைக் கோள் சொல்லித் தரக் கடவதுகளுமாய்-புகர் படைத்துப் பெருத்து விளங்குகின்ற தாலு மூலங்களும்
சகல விபுத சதா ஸ்வாத்யமான தேவரீருடைய வதன ஸூதா நிதி மண்டலாந்தரளத்திலே திரட்டியிட்ட அம்ருத ரஸ சாரங்கள் போல்
அத்யந்த போக்யங்களுமாய்ச் சிவந்து கனிந்த கோவைப் பழத்தையும் கடைந்து துண்டிட்ட பவளக் கொடியையும் பரிஹஸித்துச் சிரிப்பது போலே
மந்த ஸ்மித மநோ ஹரங்களுமாய் அதி ருசிர பாவ கர்ப்பமானதொரு வார்த்தை சொல்லத் தொடங்கித் துடிப்பது போல் விளங்குகின்ற திருப் பவளங்களும்
அபிமத ஜன தர்சன ஆனந்த வேகத்தாலே அர்ச்சாவதார சமாதியைக் கடந்து விம்மி வெளி விழுகின்ற அவ்யக்த மதுர மந்தஹாஸ விலாசமும்
ஸ்படி கமய கண்ட சைல க்ருதங்களான இரண்டு முகுர மண்டலங்களை மாசறக் கடைந்து தூளிட்டுத் துலக்கித்
துடைத்திணத்து வைத்தால் போல் தள தள வென்ற திவ்ய கபோலங்களும்-
எப்பாலும் பரந்துள்ள சகல ஜனங்களுக்கும் தங்களையே நோக்கினால் போலே அத்யந்த ரஞ்சகங்களுமாய் புடை பரந்து மிளிர்ந்து இலங்கு ஒளி சேர்
அரவிந்தம் போன்று நீண்டு விசாலங்களுமாய் சண்டையிடும் இரண்டு கெண்டைகள் போன்ற தாண் தாமரைக் கண்களும்
குண ஆரோபணம் கொண்டு வளைந்து நின்ற சார்ங்க வில்லை நிஜமான வடிவு அழகால் வென்று கொண்டு வளைந்து நின்ற திருப் புருவ வட்டங்களும்
தொங்குகின்ற செண்பகப் பூ போலே நுனி நிமிர்ந்து உயர்ந்து அடி குறுகி நீண்டு நளிகாயுகம் போலே ஏகாந்தர த்வய சோபிதமாய்
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ என்று நித்ய சந்தேக ஜனகமாய் விளங்குகின்ற கோல நீள் கொடி மூக்கின் அழகும்
அம மூக்கின் அடியை விளாக்குலை கொண்டு விளங்குகின்ற ராமாநுஜாக்க்ய திவ்ய பீட சம்யுதமான திவ்ய ஊர்த்வ புண்ட்ர திலக பிரகாசமும்
அதன் இடையில் சகல விபூதி பட்டாபிஷேக சாம்ராஜ்ய லஷ்மியின் ஸ்வ இச்சா விஹார ரவி ஷிப்த பத கமல லாஷார சதாரா ரேகை போலச்
சிவந்து படிந்து விளங்குகின்ற ரக்த வர்ண ஸ்ரீ சூர்ண ரேகையும்
மலர்ந்து உயர்ந்த திரு முடியும்
வளர்ந்து மடிந்து வியக்த அவ்யக்தமாய் விளங்குகின்ற திருகி குழல் ஒழுங்கும்
சுற்றிச் சுழற்றிக் குளைத்திட்டு முடித்த சிகா பந்தமும்
பின்னெடுத்த பிடரி அழகும்
திருவனந்தாழ்வான் பின் படம் போல் நடுப் பதிந்து பரந்து நெறித்திட்ட திரு முதுகும்
வலவருகில் கை மேலும் மார்பிலுமாய் முன்னாட்டித் தாங்கியிட்ட த்ரிதண்டாக்ரமும்
சீரியதோர் நிதி போலே திரு முன்பே நோக்கி வைத்திட்ட பொன்னடியாம் செங்கமலப் போதுகளுமாய் தேவரீர் திருமஞ்சனம்
கண்டருள வீற்று இருக்கும் இவ் வழகு ஊழி தொறும் ஊழி தொறும் வாழ்ந்திடுக வாழ்ந்திடுகவே யதி ஸார்வ பவ்மனே

————————————————————

ஸ்ரீ கடிகா சதகம் அம்மாள் -அருளிச் செய்த ஸ்ரீ யதிராஜ விஜய ஸ்லோகம் –

மாயாவி மோஹித ஸூரா நஸூரா நலாவீத்
யேநாஸ்யுத குஹநாஸமயைர் மநுஷ்யன்
சம்மோஹ யத்ஸூ புநரேஷூ ஸூ தர்சன அபி
தாநேவ ஜேதுமதுநா யதி சேகர அபூத்–1-

தேவர்களை அசுரர்கள் மாயா வித்யைகள் மூலம் குழப்ப அச்சிட்டுதான் தனது ஸூ தர்சனம் கொண்டு வீழ்த்தி அருளினான் -இதே போலே மாயாவாதங்கள் கொண்டு பல மதங்கள் குழப்பிய போது அந்த ஸ்ரீ ஸூ தர்சனமே ஸ்ரீ யதிராஜராக ஆவிர்பவித்தது –

த்ரிதண்ட காஷாய சிக உபவீதை
ப்ரஸாதயன் பாரமஹம்ஸ்ய லஷ்மீம்
வைகுண்டம் ஆரோபயிதம் முமுஷூன்
சோபாந காரீ யதிராஜ ஏஷ–2

ஸ்ரீ யதிராஜர் -த்ரிதண்டம் -காஷாயம் -யஞ்ஜோ பவீதம் -கமநீய சிகா -வேஷத்துடன் மிகவும் அழகாக வீற்று இருந்து முமுஷுக்களுக்கு மோக்ஷம் செல்ல படிக்கட்டை அமைத்து அருளுகிறார் –

ச ஏஷ சாஷாத் க்ருத க்ருஷ்ணதத்தாம்
நிஷேப வித்யாம் நிரவத்ய பூமா
கத்யாத்மனா க்ருஷ்ண ஜநோப போக்யம்
சம்வாத ரூபாம் விததே தயாளு — 3-

ஸ்ரீ கிருஷ்ணன் அருளிச் செய்த சரம ஸ்லோகம் படியே அவனை நேராக சாஷாத்காரித்து –பெரிய பிராட்டி முன்னிலையாக -நம் பெருமாள் இடம் சரணாகதி அனுஷ்ட்டித்து -தம்முடைய சம்வாதத்தை நாம் உஜ்ஜீவிக்கவே கத்ய த்ரயம் மூலம் வெளியிட்டு அருளிச் செய்தார் –

ப்ரமாணேஷ்வேஷ வேதாந்த ப்ரமேயேஷூ பர புமான்
ப்ரமாத்ருஷூ யதீந்த்ர அயம் ந த்வதீயம் அபேக்ஷதே–4-

பிரமாணங்களில் உபநிஷத்துக்களுக்கு நிகரானவை இல்லை -அவை மூலம் கூறப்படும் பொருள்களில் ஸ்ரீ மன் நாராயணனுக்கு நிகர் இல்லை-இதே போன்று யதிகளில் எம்பெருமானாருக்கு நிகரானவர்கள் யாரும் இல்லையே –

கர்ம வ்யாஜ க்ருத அகிலாத்ம நிவஹ கிலேச அவபோதஸ் புரத்
பச்சாத்தாப க்ருபா விமோசித ஜகத் ஜென்மாதி லீலாதரம்
போகைக பிரணவம் விதாஸ்யதி பரம் ப்ரஹ்மாபி தாத்தாபய
பூதேப்யோ யதிராஜ ஏஷ இதி மே சேதஸ்ய பூந் நிச்சய -5-

கர்மாதீனமாக ஸ்ருஷ்டித்து -உண்டியே உடையே உகந்து போகும் இம்மண்டலத்தோரின் இழவு கண்டு வருந்திய எம்பெருமான்-எம்பெருமாரின் திருவவதாரத்துக்கு பின்பே தானும் பிழைத்து தான் செய்து அருளிய லீலா வியாபாரமாக ஸ்ருஷ்டிக்கும் பலம் கிட்டிற்றே என்று மகிழ்ந்தான்

தேஹாஷாதி விலக்ஷண அணு ரஜதோ நித்ய அஹமர்த்த அமல
ஞான ஆனந்தமய அப்ய தன்மய இவ ப்ராப்யத்ய வித்யாவ்ருத
பஞ்ச கிலேச விபாக பாவக சிகாலீடஸ்ய தஸ்யாத்மன
நிர்வாணாய நிசர்க ஸுஹ்ருத நிதே நான்யா கதி த்வாம் விநா –6-

ஆத்மா தேஹ வியதிரிக்த -புலன்களின் வேறுபட்ட அணு ஸ்வரூப -ஞான ஆனந்தம் -ஸ்வரூபனாய் இருந்தாலும் துயரத்தில் ஆழ்ந்து வருந்த-காரேய் கருணை இராமானுச -அநந்ய கதியான அடியோங்களை -நீரே ரஷித்து அருள வேணும் –

ஸர்வஞ்ஜோ ந ந வேத தஸ்ய கருணராசே ரூபேஷா குத
ஸர்வேச கிம் அசவ் ந சஷ்யதி பரித்ராதும் ததாபி ப்ரபு
சர்வான் ரஷதி யத் கடாக்ஷ கணி காபேஷீ நராநுத்தரான்
சம்சார அம்பு நிதே ச ஏவ ஹி குரு சர்வோத்தரம் தைவதம் —7-

சர்வஞ்ஞன் -சர்வ சக்தன் -சர்வ காருண்யன் -சர்வ ரக்ஷகன் -ஸ்ரீ யதிராஜர் உடைய கருணை மிகுந்த கடாக்ஷம் கொண்டே லோகத்தார் உஜ்ஜீவிக்க காத்து இருந்து அவரது மிக்க சீல குணங்களை பிரகாசித்து அருளுகிறார் அன்றோ –

த்ரிவர்க்கம் அவதீரயன் த்ரிவித சேதன அசேதன
பிரபஞ்ச மய கஞ்சுகே பகவதி ஸ்வயம் ஜ்யோதிஷி
நிவோசித தியாம் சதாம் நிகில மங்கலைகாஸ் பதம்
தமேவ கதயன் கதிம் யதி ப்ரீடித க்ரீடதி–8-

விஷயாந்தர ப்ராவண்யம் துறந்து -சேதன அசேதன அந்தர்யாமியாய் உள்ள ஜ்யோதிஸ் ஸ்வரூபமே -உயர்ந்த கதி என்று எதிராஜர் உபதேசித்து அருள -சத்துக்களால் வணங்கப்பட்டு மிகவும் ஆனந்தத்துடன் எழுந்து அருளி உள்ளார் –

குதர்சனா நீதர தர்ச நாதி யதீந்த்ர குர்வான் நிஜ தர்சநேந
சம்யக் சுருதி நியாய கலா பதர்சீ ஸூ தர்சன அஸி ப்ரிய தர்சன த்வம்-9-

யதிராஜரே -உமது ஸ்ரீ ஸூ க்திகளால் புற சமய வாதிகள் பலன் அற்றவை -என்றும் -வேதாந்த சித்தாந்தத்தை -வெளிப்படுத்தி அருளி-வேதாந்தங்களும் மகிழ -அதனால் ஸ்வாமியும் மிகவும் இனிமையாகக் காட்சி கொடுத்து எழுந்து அருளி உள்ளார் –

காலே வர்ஷது வாஸவ ஷிதி பூஷோ ரஷந்து சம்யக் மஹீம்
சர்வே சந்து நிராமயாச்ச க்ருதின சத்வோத்தரா ப்ராணிந
புண்யா லோகம் இதம் புனாது பகவத் பக்தி சிரஸ்தயிநீ
மாலாவத் யதிசேகரஸ்ய விஹரத் வாஞ்ஞா ந்ருணம் மூர்த்தஸூ –10- –

நாட்டில் நல்ல மழை பொழியட்டும் -அரசர்கள் சிறந்தவர்களாக இருந்து நாட்டை ரக்ஷிக்கட்டும் -அனைத்து உயிர்களும் நோய் இன்றி வாழட்டும்
ஞானம் செழிக்கட்டும் -தூய்மையான பக்தி வளரட்டும் -உலகம் தூய்மை யாகட்டும் –
ஸ்ரீ யதிராஜர் உடைய உபதேசங்கள் மாலை போலே அனைவராலும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டு உஜ்ஜீவனம் அடையட்டும் –

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கடிகா சதகம் அம்மாள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading