தபஸ் ஸ்வாத்யாய நிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம் -நாரதம் பரிபப்ரச்ச வால்மீகிர் முனி புங்கவம்
தபஸ்வீ –தன்னை கொண்டாடி சொல்வது இல்லை -நிர்வேதம் யுடையவர் என்று காட்டிக் கொள்ள –
சாஸ்த்ரார்த்தம் ஆச்சார்யர் வாயிலாக கேட்க உள்ள விருப்பம் –
நாரதர் சாஸ்த்ரார்த்தம் அனுபவித்து உருகி உள்ளவர் என்று காட்ட –வாக்விதாம் வரம் -என்றும் –முனி புங்கவம்-இரண்டு விசேஷணங்கள் –
–கோன் வஸ்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் கச் ச வீர்யவான் தர்மஞ்ஞ ச க்ருத்தஞ்ஞ ச ஸத்ய வாக்யோ த்ருட வ்ரத
அஸ்மின் லோகே –தேவ லோகத்தில் உள்ளவனை சொல்லல் ஆகாதே -/சாம்ப்ரதம்-என்றைக்கோ இருந்து மறைந்து போனவன் கூடாதே –
மஹர்ஷே த்வம் சமர்த்தோசி ஜ்ஞாது மேவம்விதம் நரம் –மனுஷ்ய யோனியில் பிறந்தவனையே சொல்ல வேணும் -மூன்று நிர்பந்தங்கள் –
1-குணவான் -சீலவான் -என்றபடி –வசீ வாதான்யோ குணவான்
2-வீர்யவான் –ஸுர்ய -வீர்ய பராக்ரமங்கள் மூன்றுக்கும் உப லக்ஷணம் -அஞ்சாமல் அசாஹயனாய் புகுந்து அநாயாசமாய் பொடி படுத்தினாலும்
தனக்கு ஷதி ஏற்படப்படாத மிடுக்கு -அஸஹாய சூர-அநபாய ஸாஹஸ –
3-தர்மஞ்ஞ–தருமம் அறியா குறும்பன்- –ஆன்ரு சம்சயம் பரோ தர்ம த்வத்த ஏவ மயா ஸ்ருத–கருணா காகுஸ்தன் -விவிதஸ் சாஹி தர்மஞ்ஞஸ் சரணாகத வத்ஸல
ஸத்ய வாக்ய -சத்யம் பூத ஹிதம் ப்ரோக்தம் –பூத ஹித வாதி என்றபடி
4-க்ருத்தஞ்ஞ ச –5-ஸத்ய வாக்யோ
6-த்ருட வ்ரத-அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே ச லஷ்மணாம் நஹி ப்ரதிஞ்ஞாம் ஸம்ஸருத்ய ப்ராஹ்மனேப்யோ விசேஷத-என்றும்
நத்யஜேயம் கதஞ்சன—அபயம் சர்வ பூதானாம் ஏ வ்ரதம் மம –-சாரித்ரேண ச கோ யுக்த சர்வ பூதேஷூ கோ ஹித -வித்வான் க சமர்த்தச்ச கச்ச ஏக ப்ரிய தர்சன-
7-சாரித்ரம்--நல்ல ஒழுக்கம் -நல்ல நடத்தை -/
8-சர்வ பூதேஷூ கோ ஹித- ஹிதம் -பிரியம் தத்கால இன்பம் -ஹிதம் உத்தர கால இன்பம் -ப்ரஹ்மாஸ்திரம் ஹிதம் என்றவாறு –
9-வித்வான் -வேத வேதாங்க தத்வஞ்ஞ சதுர்வேத ச நிஷ்டித-சர்வ சாஸ்த்ரார்த்த தத்தவஞ்ஞ ஸ்ம்ருதிமான் பிரதிபனாவான் —
10-சமர்த்த –வித்வான் வேற சமர்த்தம் வேறே -லௌகிக சாமர்த்தியமும் விஞ்சியவர் என்றபடி
11-ஏக ப்ரிய தர்சன –தருணவ் ரூப சம்பன்னவ் -வைய வந்த வாயாலும் வாழ்த்த வேண்டும் படி ரூப லாபவண்யம் —ஆத்மவான் கோ ஜிதக்ரோதோ த்யுதி மான் கோ அநஸூயா -கஸ்ய பிப்யதி தேவாச் ச ஜாத ரோஷஸ்ய சம்யுகே–
12-ஆத்மவான்-ஆத்மா ஜீவே த்ருதவ் தேஹே ஸ்வபாவே பரமாத்மநி–ஜய ஜய மஹா வீர –மஹா தீர தவ்ரேய -அநபாய அசஹாச /
13-ஜிதக்ரோதோ-கோபம் வென்றவன் -என்றபடி –
14-த்யுதி -காந்தி தேஜஸ் -வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு -பிரபாவான் சீதயா தேவ்யோ பரம வ்யோம பாஸ்கர —
அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா -/ அநன்யாஹி மயா சீதா பாஸ்கரேண ப்ரபா யதா–என்று
சொல்லும் படி நித்ய யோகத்தால் வந்த தேஜஸ் –
15-அநஸூயா–வாத்சல்யம் உடையவர் அன்றோ / சரணாகத வத்ஸல -ரிபூணாம் அபி வத்ஸல –
16-கஸ்ய பிப்யதி தேவாச் ச ஜாத ரோஷஸ்ய சம்யுகே–கீழே -15-குணங்களும் ஒரு தட்டாய் -இது மட்டும் ஒரு தட்டாய்
-சீற்றத்தின் மிகுதியால் அனுகூலராலும் அணுக ஒண்ணாத -ராகவ ஸிம்ஹம் அன்றோ –
குண பரீ வாஹாத்மநாம் ஜன்மநாம் –ஸ்ரீ பட்டர் —
——————————————————————
ஏதத் இச்சாம் யஹம் ஸ்ரோதும் பரம் கௌதூஹலம் ஹி மே மஹர்க்ஷே த்வம் சமர்த்தோசி ஜ்ஞாது மேவம் விதம் நரம் —
சொல்வதை விட கேட்பதே கௌதூஹலம் –ஞாதும் -அறிவின் பயனும் அறிவிப்பதே –
ஸ்ரோதும் இச்சாமி–ஸ்ரோதும் மே குதூஹலம் -வக்தாவுக்கு உரியவர் -நாரதரே-காது படைத்தது சபலமாம் படி கேட்டுக் கொண்டே இருப்பதில் குதூஹலம் என்றதாயிற்று –
முநே வஹ்யாம் அஹம் புத்தவா தைர்யுக்த க்ரூயதாம் நர —
வஹ்யாம் அஹம் புத்தவா-தெரிந்து கொண்டு சொல்லுவேன் என்பது பொருள் அல்ல -நான்முகக் கடவுள் இடம் பெருமாள் குணங்களை கேட்டு
நெஞ்சில் தரித்துக் கொண்டு இருப்பவர் அன்றோ நாரதர் -மோஹம் நீங்கி அறிவு தெளிந்த பின்பு சொல்லுவேன் என்றபடி
-குணக்கடலில் அமிழ்ந்து கரை காண மாட்டாதே முசித்திக் கிடக்கிற நான் புத்தி சுவாதீனம் வந்தால் அன்றோ சொல்ல இயலும் –காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -அன்றோ
தைர்யுக்த க்ரூயதாம் நர –கீழே —ஜ்ஞாது மேவம் விதம் நரம் —–
என்று இருக்கையாலே மனுஷ்ய யோனியில் பிறந்தவனைப் பற்றியே சொல்லுவது பிராப்தம் / தசரதாத் மஜன் -சக்கரவர்த்தி திருமகன் -என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்வான் அன்றோ –
பவான் நாராயணோ தேவ -என்று தேவர்கள் புகழ்ந்தாலும் –ஆத்மாநம் மானுஷம் மன்யே ராமம் தசாரதாத் மஜம் –என்று
மன்யே -பஹு மன்யே -மனுஷ்யத்வத்திலே தான் மிக உகப்பு என்பவன்
விச்வாமித்ரரும் மஹா சதஸிலே –வேதாஹ மேதம் புருஷன் மஹாந்தம் -என்ற ஸ்ருதி சாயையிலே –அஹம் வேத்மி மஹாத்மானம் -என்று சொல்லி வைத்து
ஏகாந்தத்தில் திருப் பள்ளி உணர்த்தும் பொழுது –உத்திஷ்ட நரசார்தூல -என்று சம்போதனம் பண்ணினார் –
வால்மீகியும் பட்டாபிஷேகத்தை பேசும் இடத்தில் அப்யஷிஞ்சன் நர வ்யாக்ரம் -என்றது
ஸ்ரீ ராமாயணம் குசலவர்கள் பாட முகம் சுளிக்காமல் பெருமாள் கேட்பதற்கு ஏற்ப அருளிச் செய்தார் –
ஆக –தைர்யுக்த க்ரூயதாம் நர –என்கிற இடத்தில் நாரத மகரிஷியின் விவஷிதம் –கீழே -வால்மீகி —ஜ்ஞாது மேவம் விதம் நரம் -என்று
நீர் சொன்னபடியே மனுஷ்ய விரக்தியைப் பற்றியே சொல்கிறேன் -என்பதாம் –
இஷுவாகு வம்ச ப்ரபவ –-என்று தொடங்கி —சத்யே தர்ம இவாபர என்னும் அளவும் -12-ஸ்லோகங்களில் பெருமாளுடைய திருக் கல்யாண குணங்களை பரக்க பேசி
தமேவம் குண சம்பந்தம் ராமம் சத்ய பராக்ரமம்-19—என்று தொடங்கி –ராமஸ் சீதா மநு ப்ராப்ய ராஜ்யம் புநர் அவாப்தவரன் -89-என்னும் அளவும்
சம்ஷேகமாகச் சொல்லி தலைக் கட்டி நாரதர் தேவ லோகம் போய்ச் சேர்ந்தார் –
———————————-
ச ஸத்ய வஸனாத் ராஜா தர்ம பாசேன சம்யத -விவாச யாமாச ஸூதம் ராமம் தசரத ப்ரியம் —-23-
தர்ம ஆபாசம் -என்றது குத்ஸித தர்மம் -என்றபடி –முன்பே வர பிரதானத்தைப் பண்ணி வைத்து -இப்போதாக மறுக்க ஒண்ணாது என்று ஆபாசமான
ஸத்ய தர்மத்தைப் பற்றி நின்று —ராமோ விக்ரஹவான் தர்ம –என்கிற பெருமாளோடே கூடி வாழ இருந்த பேற்றை இழந்த சக்கரவர்த்தி போலே
-மா முனிகள் வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் –
ச ஜகாம வனம் வீர ப்ரதிஞ்ஞா அநு பாலயன் -பிதுர் வசன நிர்தேசாத் கைகேய்யா ப்ரிய காரணாத் –24-
தண்டகாரண்யம் -செல்ல முக்கிய காரணம் பிதுர் வசன நிர்தேசாத் –
-விச்வாமித்ரஸ்ய சாஸனாத் -தாடகா நிரசனம்
-அகஸ்திய வஸனாத் -பரத்வாஜஸ்ய சாஸனாத் -ஸ்ரீ பரத ஆழ்வான் உடைய துடிப்பையும் மறந்து –
ந மே ஸ்நானம் பஹு மதம் வஸ்த்ராண் யாபரணா நிச தம் விநா கைகேயீ புத்ரம் பரதம் தர்ம சாரிணம்-என்று புஷபக விமானத்தில் விரைந்தாலும்
பரத்வாஜர் சொல்லை மீள மாட்டாரே பெருமாள் –
ஆக கைகேய்யா ப்ரிய காரணாத் -என்றது அமுக்கிய ஹேதுவாய் –-பிதுர் வசன நிர்தேசாத் -என்றதே பிரதானம் -என்றவாறு –
தம் வ்ரஜந்தம் ப்ரியோ ப்ராதா லஷ்மண அநு ஜகாம ஹ-25-என்ற அனந்தரம் –சீதாப் யனுகதா ராமம் சசிநம் ரோஹீணீயதா -28-என்று
இளைய பெருமாள் முன்னம் புறப்பட்டதாகவும் -பிராட்டி பின்னம் புறப்பட்டதாகவும் சொல்லி -மேலே அயோத்யா காண்டத்தில் விரித்து சொல்லும் பொழுது
முற்படப் பிராட்டியும் -பிறகு இளைய பெருமாளும் உடன் வர பிரார்த்திப்பதை சொல்லி –விரோதம் இல்லை -இருவரும் அநு சரர்கள் என்றவாறு இங்கே –
குஹமாசாத்ய தர்மாத்மா நிஷாதாதி பதிம் ப்ரியம் -குஹேந சஹிதோ ராமோ லஷ்மணே நச சீதயா -29-
ஆசிரித்தார்கள் உடன் கலந்து பரிமாறவே -சாது பரித்ராணாமே -அவதார பிரயோஜனம் -மற்ற இரண்டும் முக்கியம் –
குஹேந சஹிதோ ராமோ-என்று மட்டுமே சொல்லாமல் –லஷ்மணே நச சீதயா -என்றது -பெருமாள் குகனோடு சேர்ந்த பின்பே தம்பியோடும் தேவியோடும்
சேர்ந்ததாகத் திரு உள்ளம் பற்றினார் –
பெருமாளே ஆரண்ய காண்டத்தில் -19-40-கதா நு அஹம் சமேஷ்யாமி பரதேன மஹாத்மனா சத்ருக்நேந ச வீரேண த்வயா ச ரகு நந்தன –என்று
ரகு நந்தனான இளைய பெருமாள் –ச காரத்தால் சீதா பிராட்டி- உடன் கூடுவது -பரத்தாழ்வான் சத்ருக்ந ஆழ்வான் உடன் கூடின பின்பே என்று அருளிச் செய்கிறார்
அபரிமித அவா வுடன் அடியார்கள் உடன் பரிமாறவே திருவவதாரம் என்றதாயிற்று
தே வநேந வனம் கத்வா -30-அடுத்து அடுத்து வனமாகவே இருந்தன -என்றும் –தேவனம் -பாதசாரம் -நடந்து சென்றமையை சொன்னவாறு –
ரம்யமா வசதம் க்ருத்வா ரம மாணா வநே த்ரய -31-இங்கு த்ரய என்றது ராம லஷ்மண சீதா பிராட்டி மூவரையும் –
மூவருக்கும் ஆனந்தம் -என் நெஞ்சினால் நோக்கிக் கண்ணீர் -என்றபடி -அவர்கள் அவர்கள் திரு உள்ளத்தால் பார்த்தால் தான் நாம் அவர்கள் ஆனந்த ஹேது அறிவோம் –
ச காம மனவாப்யைவ ராமபாதா வுபஸ் ப்ருசன்-நந்தி க்ராமே அகரோத் ராஜ்யம் ராமா கமன காங்ஷயா -38-
பரத்தாழ்வான் மநோ ரதம் பெறாமல் திரும்பினாலும் ஆருரோஹ ரதம் ஹ்ருஷ்ட சத்ருக்நேந சமன்வித –அயோத்யா -113-1-ஸந்துஷ்டனாய் திரும்பினான் –
சேஷி யுகந்த அடிமையே -செய்ய வேணும் -ஸ்வரூப ஞான பூர்த்தி -சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல் அன்றே பார தந்தர்ய போக்யதைகள்
-லோக சாரங்க முனிவர் தோள்களில் இருந்தாலும் அடியார்க்கு என்னை ஆட்படுத்திய விமலன் -என்றார் அன்றோ திருப் பாண் ஆழ்வார்
அரசு அமர்ந்தான் அடி சூடும் ஆசை யல்லால் அரசாக எண்ணேண் மற்ற அரசு தானே -என்பார்கள் இறே-
ப்ரவிஸ்ய து மஹாரண்யம் ராமோ ராஜீவ லோசன –விராதம் ராக்ஷஸம் ஹத்வா சரபங்கம் ததர்ச ஹ -41-பெருமாள் சித்ர கூடத்தில் இருந்து
தண்டகாரண்யம் செல்வதை சொல்லும் -25-திரு நக்ஷத்ரம் பெருமாளுக்கு –
மா ச லஷ்மண ஸந்தாபம் கார்ஷீர் லஷ்ம்யா விபர்யயே ராஜ்யம் வா வனவாசோ வா வனவாசோ மஹோதய –அயோத்யா -22–29-என்று
வனவாசம் பெறாப் பேறு-அத்தை மனமார அருளிச் செய்தது என்று காட்டவே -உள்ளே பொங்கும் ஹர்ஷம் திருக் கண்களிலே தோன்ற இந்த சப்த பிரயோகம்
சரபங்க மஹரிஷியைக் காண விராத ஹதனம் அங்க அனுஷ்டானம் -என்றவாறு –
ஊன ஷோடச வருஷ மே ராமோ ராஜீவ லோசன –அஸ்தமித்தவாறே கண் உறங்குபவன் என் பிள்ளை –
ச சாஸ்ய கதயாமாச சபரீம் தர்ம சாரிணீம்–ச்ரமணீம் தர்ம நிபுணாம் அபி கச்சேதி ராகவம்--56-
இதில் விவாசித்தமான தர்மம் –ஆச்சார்ய சிசுருஷை -ஆச்சார்ய அபிமானம்
மேலே ஆரண்ய காண்டத்திலும் –கச்சித் தே குருஸ் ஸ்ருஷா சபலா சாரு பாஷிணி —என்றும் –
சஷூஷா தவ ஸும்யேந பூதாஸ்மி ரகு நந்தன பாதமூலம் கமிஷ்யாமி யாநஹம் பர்யசாரிஷம் –என்றும் சொல்லி
ஆச்சார்ய ஸ்ரீ பாத சேவை பண்ணி இருந்ததே இவளுடைய தர்மம் –
சோப்யகச்சன் மஹா தேஜாச் சபரீம் சத்ரு ஸூதன -சபர்யா பூஜிதஸ் சம்யக் ராமோ தசாரதாத்மஜ –57-என்று
மேலும் அபிகச்ச -சப்த பிரயோகம் –அபிகமனம்-சரம பர்வ நிஷ்டையில் இருந்தவளைக் கண்ட ப்ரீதியால் பெருமாள் மஹா தேஜஸ் -ஆனார்
-சபரியுடைய அனைத்து பிரதிபந்தகங்களையும் போக்கி அருளினார் என்பதையே சத்ரு ஸூ தன -கடாக்ஷ வீக்ஷணத்தாலே சங்கல்பித்து அருளினார் -என்றவாறு –
சபர்யா சம்யக் பூஜிதா –ரகுகுல திலகராய் ஆசார பிரதானரான பெருமாள் –சபர்யா பூஜிதஸ் சம்யக் ராமோ தசாரதாத்மஜ –என்னும்படி வேடுவச்சியாய் இருந்து வைத்தே
குரு சுச்ருஷையில் பழுத்து ஞானாதிகையாய் -தன நாவுக்கு இனிதாய் இருந்த பல மூலாதிகள் எல்லாம் இங்குத்தைக்கு என்று சஞ்சயித்துக் கொண்டு
வரவு பார்த்து இருந்த ஸ்ரீ சபரி தன ஆதார அனுகுணமாக தன கையாலே அமுது செய்யப் பண்ண அதி ஸந்துஷ்டாராய் அமுது செய்தார் -மா முனிகள் வியாக்யானம்
—பெருமாள் சபரி கையால் அமுது செய்து அருளினார் -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூ க்திக்கு-
கீழே சரபங்க முனிவர் அகஸ்திய முனிவர் போன்றோர் செய்தது சாமான்ய பூஜை –இங்கே சபரி செய்து அருளினது சம்யக் பூஜை என்பதே பெருமாள் திரு உள்ளம் –
இத்தையே கபந்தனும் பெருமாள் இடம் –சிரமணீ சபரி நாம காகுஸ்தா சிரஞ்சீவி நீ த்வாம் து தர்மே ஸ்திதா நித்யம் -என்றும் சிரமணீம் தர்ம நிபுணாம் அபிகச்ச -என்றான் –
பம்பாதீரே ஹனுமதா ஸங்கேதோ வானரேண ஹ -58-
ராஜ்யாத் ப்ரம்சோ வநே வாசோ நஷ்டா சீதா ஹதோ த்விஜ -ஈத்ருசீயம் மமா லஷ்மீர் நிர்தஹேதபி பாவகம் -என்று பரிதபித்து வந்த பெருமாள்
பொறுக்க ஒண்ணாத துயரத்தில் ஆழ்ந்து இருக்க -காட்டிலே வழி பறி யுண்டவர் தாய் முகத்திலே விழிக்குமா போலே —
தைவாதீனமாக பெருமாள் உயிர் பிழைத்தார் என்கிறார் முனி -ஆசுவாசம் அடைகிறார் வால்மீகி -இதனால் என்றவாறு –
ஹனுமத் வசனாச் சைவ ஸூக்ரீவேண சமாகத -ஸூக்ரீவாய ச தத் சர்வம் சம்சத் ராமோ மஹா பாலா –59- என்று
அக்னி சாஷிதமாக மஹாராஜர் உடன் நட்ப்பு-தீன பந்து தீன தயாளு -காட்டி அருளவே –அங்குல் அக்ரேண தான் ஹன்யாம் இச்சன் ஹரி கணேஸ்வர
-சங்கல்ப மாத்திரத்திலே அனைத்தையும் முடிக்க வல்ல பெருமாள் அன்றோ –
அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷ சேந்த்ரம் விபீஷணம்-க்ருதக்ருத்யஸ் ததா ராமோ விஜ்வர ப்ரமுமோத ஹ –86-
ஆக்க்யாஹி மம தத்வேந ராக்ஷஸா நாம் பலாபலம்-
விபீஷணனை ராவணன் குலா பாம்சனம் என்றான் -பெருமாள் இஷுவாகு வம்சராகவே நினைத்து வார்த்தை அருளிச் செய்தார் –
இஷுவாகு குல நாதரான பெருமாள் இவனை ஆதார பூர்வகமாக அங்கீ கரித்த அனந்தரம் –ஆக்க்யாஹி மம தத்வேந ராக்ஷஸா நாம் பலாபலம்–என்று
ராக்ஷஸருடைய பலாபலம் இருக்கும் படியை நமக்குச் சொல்லும் என்கையாலே இவனை ராக்ஷஸ சஜாதீயனாக நினையாதே
திருத்தம்பி மாரோபாதியாக அபிமானித்து வார்த்தை அருளிச் செய்தார் –
ஆச்ரித ரக்ஷணமே க்ருதக்ருத்யம் -ஆச்ரித சம்ரக்ஷணம் ஸ்வ லாபம் -ததா ராமோ பபூவ/ ததா விஜ்வர /துயர் அறும் சுடர் அடி அன்றோ –
ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே -ஹ –மகரிஷி மகிழ்ந்து என்ன ஸ்வ பாவமோ என்கிறார் –
ராமஸ் சீதா மநு ப்ராப்ய ராஜ்யம் புனர் அவாப்தவான் -ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோகஸ் துஷ்ட புஷ்டஸ் ஸூ தார்மிக -90–
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ்வேழ் யுலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் –-7–10–1-
மாதா பிதாக்கள் இருவரும் சேர இருந்து பரியப் புக்கால் பிரஜைகளுக்கு ஒரு குறையும் பிறவாது இ றே-ஆக இருவருமாக சேர்த்தியாலே
தங்களுக்கு ஆனந்தம் உண்டாக -அச் சேர்த்தியைக் காண்கையாலே லோகத்துக்கு ஆனந்தம் உண்டாக –பிரஜை பால் குடிக்கக் கண்டு உகக்கும் தாயைப் போலே
இவர்களுக்கு உண்டான ப்ரீதியைக் கண்டு திவ்ய தம்பதிகள் தங்கள் இனியராய் இருப்பார்கள் ஆயிற்று –ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள் –
அகர் தமமிதம் தீர்த்தம் பரத்வாஜ நிராமய -ரமணீயம் ப்ரசன்னாம்பு சன் மனுஷ்யானோ யதா –பாலா -2–5-என்று
தாம் அவகாஹிக்கப் புகும் தீர்த்தத்தை சன் மனுஷ்ய மனசுக்கு ஒப்பிட்டு பேசுகிறார்
அகர்தமம் -கர்த்தமாம் -சேறு -இது இல்லாமை -மனனகம் மலம் அற-அபஹத பாப் மாதவம் -உண்டாகி கழிந்தவை இல்லாமல் -பிரசக்தியும் அற்று இருக்கை-
காம க்ரோத லோப மோஹ மத மாத்சர்ய அஸூ யாதிகள் இல்லாமை –அகர்தமம் -பாப ரஹிதம் -பாப ஹேதுக்களை பாபமாகவே ஸ்ரீ கோவிந்த ராஜர் அருளிச் செய்வார் –
தீர்த்தம் -பரிசுத்த ஜலம் –காலை நல் ஞானத்துறை படிந்தாடி கண் போது செய்து -இவை பத்தும் வல்லார்களை தேவர் வைகல் தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர்
ரமணீயம் -மநோ தரம் -ரமிப்பதற்கு உரியதானவை-கண்டவர் மனம் வழங்கும் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரின்
பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டோடி வந்து என் மனக் கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ –
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை நிலை பேர்க்கலாகாமை நிச்சயித்து இருந்தேனே
ப்ரசன்னாம்பு –தெளிந்த நீர் -நீரகத்தான் நீர் வண்ணன் – நீர் புரை வண்ணன் -அம்புவத் பிரசன்னம் –
அவனை உள்ளே கொண்ட சத் மனுஷ்யர் திரு உள்ளங்களும் பிரசன்னமாகவே தானே இருக்கும் –
ததாவிதம் த்வீஜம் த்ருஷ்ட்வா நிஷாதேன நிபாதிதம்–ருஷேர் தர்மாத் மனஸ் தஸ்ய காருண்யம் சமபத்யத-13-
வேடனால் அடித்து வீழ்த்தப்பட்ட பறவை கண்ட தர்மாத்மா வால்மீகிக்கு காருண்யம் உண்டாயிற்று –
தயா கருணா அநு கம்பா அநு க்ரோசம் -பர்யாய சப்தங்கள் -பர துக்க துக்கித்தவம் /பர துக்க நிராசி கீர்ஷா/ பர துக்க அஸஹிஷ்ணுத்வம்
சோகம் ஸ்லோகத்துவம் ஆகத –
மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வாகமச் ஸாஸ்வதீஸ் சமா –யாத கிரௌஞ்ச மீது காதேகம் அவதீ காம மோஹிதம் —15-
மா நிஷாத ப்ரதிஷ்டாம் து அம கம ஸாஸ்வதீஸ் சமா –நிஷாதன் -வேடன் -/ அம –அவனுக்கு விசேஷணம் -திருவில்லாத வேடன் -என்றபடி –
ஸாஸ்வதீஸ் சமா ப்ரதிஷ்டாம் மா கம -வெகு காலம் நன்மை இழந்து இருப்பாய் -என்கை –காம மோஹிதமான ஆண் பறவையை கொன்றதினால் –
மா நிஷாத -மா நிஷீ ததி-சீதா பதி/ மண்டோதரி இராவணன் -ராக்ஷஸ மிதுனம் -காம மோஹம் கொண்ட இராவணனை கொன்றதால்
நெடு நாள் வாழ்வு அடைந்தீர் என்று வாழ்த்தினை படி –கிரௌஞ்ச சப்தம் பஷி விசேஷத்தையும் ஆசூர பிரக்ருதிகளையும் சொல்லக் கடவது –
தமுவாச ததோ ப்ரஹ்மா பிரஹசன் முனி புங்கவம் -30-
ச்சந்தா தேவ தே ப்ரஹ்மன் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ–ராமஸ்ய சரிதம் க்ருதஸ்தம் குரு த்வம் ருஷீ சத்தம–31-
நான்முகக் கடவுள் தம்முடைய உள்ளக்கருத்தை ஒட்டியே வந்த ஸ்லோகம் என்று ஆசுவாசப் படுத்தி
தமுவாச ததோ ப்ரஹ்மா பிரஹசன் முனி புங்கவம் -30–ஹாஸத்துக்கு காரணம் விஸ்மயம்/சரஸ்வதி அந்தர்வாஹினி அன்றோ /
மேலே –க்ருத்ஸ்னம் ராமாயணம் காவ்யம் ஈத்ருசை கரவாண் யஹம் -41-என்ற ப்ரதிஞ்ஜை-ஈத்ருசை -அந்தர்வாஹினியான சரஸ்வதி
ஜிஹ்வாக்ரத்திலே வந்து புகுந்து ஸ்லோகமாக வந்தமை -காட்டி அருள படும் –
—————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply