ஸ்ரீ யதிராஜ சப்ததி—ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

அவர் தமிழில் :
அடைக்கலப்பத்து,
மும்மணிக்கோவை,
நவமணிமாலை,
அதிகார சங்கிரகம்,
ஆகார நியமம்,
அம்ருதரஞ்சனி,
அம்ருதஸ்வாதினி,
அர்த்த பஞ்சகம்,
சரமஸ்லோக சுருக்கு,
த்வய சுருக்கு,
கீதார்த்த சங்கிரகம்,
பரமபத சோபனம்,
பிரபந்த சாரம்,
ஸ்ரீவைஷ்ணவ தினசரி,
திருச்சின்னமாலை,
திருமந்திர சுருக்கு,
உபகார் சங்கிரகம்,
விரோத பரிகாரம்,
பன்னிருநாமம்

வடமொழியில் :
பாதுகா சஹஸ்ரம்,
கோதாஸ்துதி,
யதிராஜ சப்ததி,
வைராக்ய பஞ்சகம்,
அபீதிஸ்தவம்,
ஆதிகாரண சாராவளி,
அஷ்டபுஜ அஷ்டகம்,
பகவத் தியான சோபனம்,
பூஸ்துதி,
சதுஸ்லோகி
பாஷ்யம்,
தசாவதார ஸ்தோத்திரம்,
தயாசதகம்,
வரதராஜ
பஞ்சாசத்,
தெய்வநாயக பஞ்சாசத்,
திவயதேச மங்களாசனம்,
கருட பஞ்சாசத்,
ஹயக்ரீவ ஸ்தோத்திரம்,
தேசிக மங்களம்,

மணிப்ரவாளத்தில் :
அம்ருதரஞ்சனி ரஹஸ்யம்,
அஞ்சலி பிரபாவம்,
ஹஸ்திகிரி மஹாத்ம்யம்,
குருபரம்பரா சாரம்,
முனிவாகன போகம்,
ஆராதன காரிகா,
ஊசல்பா

ப்ராக்ருதத்தில் :
அச்யுதசதகம்
என பல நூல்களை எழுதியுள்ளார்.

———

ஸ்ரீ லக்ஷ்மி நாதாக்ய சிந்தௌ சடாரிபு ஜலதஹா ப்ராப்ய காருண்ய நீரம்!
நாதா த்ரவப் க்ஷிஞ்சன் ததானு ரகுவரம் போஜ ஷக்சுர் ஜலாப்யம்!!
கத்வதாம் யாமுநாக்யம் சரிதாமத் யதீந்த்ராக்ய பாத்மாகாரேந்திரம்!
ஸம்பூர்ய ப்ராணி சாஸ்யே ப்ரவஹத பஹூதா தேசிகேந்த்ர பிரமேகைஹி.”!!

ஸ்ரீ லட்சுமி நாதன் ஒரு பெரிய கடல்.  நம்மாழ்வார் ஒரு மேகம்.
இந்த கருமேகம் ஆழ்வார் கடலில் இருந்து தண்ணீரை (ஞானம்/அறிவு) எடுத்து மலைகளில் மழையாக (பாசுரங்கள்) பொழிந்தார்.
மலை என்பது ஸ்வாமி நாதமுனிகல் என்று குறிப்பிடப்படுகிறது.
இரண்டு நீர்வீழ்ச்சிகளாக நீர் விழுகிறது,
இந்த நீர் வீழ்ச்சி ஸ்வாமி உய்யக்கொண்டார் மற்றும் ஸ்வாமி மணக்கால் நம்பி என்று குறிப்பிடப்படுகிறது,
இந்த நீர் அருவி ஸ்ரீ ஆளவந்தார் என்ற பெரிய ஆற்றை அடைந்தது.
அப்போது ஏரியில் தண்ணீர் தேங்கியது.
இந்த ஏரி ஸ்வாமி ராமானுஜரால் குறிப்பிடப்படுகிறது.
ஏரியில் இருந்து 74 கால்வாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

74 ஸ்லோகங்கள் ஸ்வாமி ராமானுஜர் உருவாக்கிய 74 சிம்ஹாசனங்களுக்குச் சமம்.

வீராணம் ஏரியில் 74 கடைமடைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஏரியின் 74 கடைகளும் ஸ்வாமி ராமானுஜரால் நியமிக்கப்பட்ட 74 சிம்மஸ்னாதிபதிகளை
சித்தரிப்பதாக நமது பூர்வாச்சாரியர்கள் விளக்கம் அளித்துள்ளனர்

ஸ்வாமி மணவாள மாமுனிகள் இப் பூலோகத்தில் 74 ஆண்டுகள் வாழ்ந்தார்,
ஸ்வாமி பிறந்தது 1370 ஆம் ஆண்டு ஐப்பசி மூலம்,
அவதார சமாப்தி 1443 ஆம் ஆண்டு மாசி கிருஷ்ண பக்ஷ துவாதசியில்.

ஆழ்வார்கள் ஆச்சார்யாக்கள் மற்றும் அவர்களின் படைப்புகள் பற்றிய அனைத்து விவரங்களையும் நமக்குத் தரும்
ஸ்ரீ மாமுனிகளின் ஒரு படைப்பான ஸ்ரீ உபதேச ரத்தினமாலாவும் 74 ஸ்லோகங்கள் கொண்டது
(இங்கு கவனிக்க வேண்டியது, ஸ்வாமி மணவாள மாமுனிகள் ஸ்வாமி ராமானுஜருக்கு
மரியாதை அளித்து 73 பாடல்களை மட்டுமே இயற்றியுள்ளார் என்பதும்,ஆனால் அவரது சிஷ்யரும் அஷ்டதிக்கஜங்களில் ஒன்றான
ஸ்ரீ எறும்பியப்பா 74 வது பாடலை இயற்றினார்

ஸ்வாமி ராமானுஜ @ 74 வயதில் திருக்குறுங்குடி நம்பிக்கு ஆச்சாரியார் ஆனார்-
ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பி ” ஸ்ரீ வைஷ்ணவ நம்பி” என்று அறியப்பட்டார்

———–

ஸ்ரீ யதிராஜ ஸப்ததி -மங்கள ஸ்லோகங்கள் —

ஸ்ரீபாஷ்யம் விரசய்ய ஸம்ய மிவரோ ஜித்வா ஸ்வயம் வாதிந :
பாஹ்யாம்ஸ்சாபி குத்ருஷ்டிகாந் புவிபுந : பாஷ்ய ப்ரதிஷ்டாஸயா |
ஸ்ரீமத் வேங்கடநாத தேஸிக சிரோ ரத்நாத்மநா வீர்பபௌ
இத்யேவம் ச வதந்தி ஹந்த !க்ருதிந :த்ரைகாலிக ஜ்ஞாநி ந : || –5-

ஸ்ரீ உடையவர், ஸ்ரீபாஷ்யத்தை அருளி அவைதிக மதங்களையும் ,பிற மதங்களையும் வாதிட்டு வென்றார்.
இவ்வுலகில், ஸ்ரீபாஷ்யம் நிலை பெற வேண்டும் என்கிற க்ருபையால்,அந்த ஸ்ரீ எம்பெருமானாரே
மறுபடியும், ஸ்ரீ வேதாந்த தேசிகனாக அவதரித்தார் என்று, முக்காலத்தையும் உணர்ந்த ஞாநிகள் கூறுகிறார்கள்.
ஸ்வாமி தேசிகன், எம்பெருமானாரின், அவதாரம் என்பதை, ஸ்வாமியின் திருக்குமாரரான ஸ்ரீ நயினாராசார்யர் –
ஸ்ரீமத் வேதாந்த தேசிக மங்களத்தில் புகழ்கிறார் —

வேங்கடசாவதாரோயம் தத் கண்டாம் ஸோதவா பவேத் |
யதீந்த்ராம் ஸோதவேத்யேவம் விதர்க்யா யாஸ்து மங்களம் || –6

ஸ்வாமி தேசிகன், திருவேங்கடமுடையானுடைய அவதாரமோ?
அவரது திருமணி ஆழ்வாரின் ( கண்டை–கண்டாமணி )அவதாரமோ?
அல்லது, எம்பெருமானார், இப்படி அவதரித்தாரா ? என்று, ஸ்வாமி தேசிகனைத் தரிசிப்போர்
பலபடியாக யூகித்துப் புகழும் ஸ்வாமி தேசிகனுக்கு மங்களம் —–என்கிறார்

ஸ்ரீ பாஷ்யகார : பந்தாந மாத்மநா தர்ஸிதம் புந : |
உத்தர்த்து மாகமதோ நூந மித்யுக்தாயாஸ்து மங்களம் || –7-

உலகுக்கு முன்பு வெளிப்படுத்திய விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை, மீண்டும் உலகில் தழைக்கச் செய்ய அவதரித்த
யதிராஜரோ இவர் என்று, வித்வான்களெல்லாம் வியந்து பாராட்டும் வேதாந்தாசார்யருக்கு மங்களம் —————-என்கிறார்

இப்படி, யதிராஜரே , கவிராஜராக –கவி ச்ரேஷ்டராக–ஸ்வாமி தேசிகனாக அவதரித்தார் என்பது, பூர்வாசார்யர்கள் துணிபு.
இந்த கவிராஜருக்கு, யதிராஜரிடம் , அளவில்லாத பக்தி.

லக்ஷ்மீ பதேர் யதி பதேஸ்ச தயைக தாம்நோ :
யோஸௌ புரா ஸமஜநிஷ்ட ஜகத்திதார்த்தம் |
ப்ராச்யம் ப்ரகாஸியது வ :பரமம் ரஹஸ்யம்
ஸம்வாத ஏஷ சரணாகதி மந்த்ர ஸார : || கத்ய பாஷ்யத்தில், ஸ்வாமி தேசிகன் அருள்கிறார்—-

வாத்ஸல்ய குண பரனான லக்ஷ்மிபதிக்கும், யதிபதிக்கும்( யதிராஜர் ) உலகத்தாருக்கு நன்மையை அளிக்கும் பொருட்டு,
எந்த ஸம்வாதம் முன்பு நடந்ததோ, த்வய மந்த்ரமான அந்த ஸம்வாதம் ,
முன்னோர்கள் உபதேசித்த அந்தப் பரம ரஹஸ்யத்தை நமக்கு வெளிப்படுத்துவதாக———என்கிறார்.
( பங்குனி உத்ர நந்நாளில் யதிராஜர், திருவரங்கத்தில், திவ்ய தம்பதிகளிடம் சரணாகதி செய்ததையும்,
அப்போது நடந்த ஸம்வாதத்தையும் குறிப்பிடுகிறார் )

பத்யு ஸம்யமிநாம் ப்ரணம்ய சரணௌ தத்பாத கோடிரயோ
ஸம்பந்தேன ஸமித்யமாந விபவாந் தந்யாம்ஸ் ததாந்யாந்குருந் |
ஸுத்தம் ஸம்ஸ்ரித பாதராய ணதநோர் நாராயணஸ்யோக்திபி :
ஸ்ரீமாந் வேங்கடநாயக : ஸ்திதிபதம் நிர்மாதி நீதே :ஸுபம் || ந்யாய பரிசுத்தியில் , ஸ்வாமி தேசிகன் யதிராஜரை நமஸ்கரிக்கிறார்

ஸ்ரீ யதிராஜரை நமஸ்கரித்து, அவருடைய திருமுடி சம்பந்தத்தாலும் திருவடி சம்பந்தத்தாலும் ,
பெருமைகளையும் பாக்யங்களையும் பெற்ற ஆசார்யர்களை நமஸ்கரித்து ,
பாதராயணராகிய ஸ்ரீ வேத வியாஸரை சரீரமாகக் கொண்ட ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்ரீஸுக்திகளைக் கொண்டு,
ஸ்ரீவேங்கடநாதன் ( ஸ்வாமி தேசிகன் ), ந்யாயபரிஸுத்தியை எழுதுகிறார் என்கிறார்.

காதா தாதாகதாநாம் களதி கமநிகா காபிலீ க்வாபி லீநா
க்ஷீணா காணாத வாணீ த்ருஹின ஹரதிர: ஸௌரபம் நாரபந்தே |
க்ஷாமா கௌமாரிலோக்திர் ஜகதி குருமதம் கௌரவாத் தூரவாந்தம்
காஸங்கா ஸங்கராதோர் பஜதி யதிபதௌ பத்ரவேதீம் த்ரிவேதீம் || -9. தத்வமுக்தா கலாபத்தில் , ஸ்வாமி தேசிகன் சொல்கிறார் –

யதிராஜர், வேதங்களாகிற பத்ர வேதியை அடைந்த போது,புத்த மதம் நழுவுகிறது ;
கபில மதம் ஓடி ஒளிகிறது ;கணாமதம் அழிகிறது;
ப்ரஹ்மாவால் தோற்றுவிக்கப்பட்ட யோக மதமும், பசுபதி மதமும் மணம் அற்றதாகிறது;
குமாரில மதம் நசிக்கிறது;குருமதம் , பெருமைக்கு வெகு தொலைவில் எறியப்படுகிறது.
இப்படியிருக்க, சங்கரர் முதலானவர்களின் மதங்களின் நிலையைப் பற்றிச் சந்தேகம் தேவையா ?

உக்த்யா தனஞ்ஜய விபீஷண லக்ஷ்யயாதே
ப்ரத்யாய்ய லக்ஷ்மண முநேர் பவதா விதீர்ணம் |
ச்ருத்வா வரம் ததநுபந்த மதாவலிப்தே
நித்யம் ப்ரஸீத பகவந் மயி ரங்கநாத ||ந்யாஸ திலகத்தில், யதிராஜருடைய ஸம்பந்தத்தால் ,செருக்கு வந்ததாகச் சொல்கிறார்.

பெருமை மிகு திருவரங்கச் செல்வனே ! அர்ஜுனனுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் ,
விபீஷணணுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் சொல்லி, நம்பச் செய்து,
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு உன்னால் அளிக்கப்பட்ட வரத்தைக் கேட்டு அறிந்து,
அவரது ஸம்பந்தத்தால் செருக்கு நிறைந்த எனக்கு, எப்போதும் வரம் தந்து அருள்வாயாக !
( வரம் யாதெனில் )
ஸ்ரீ பாஷ்யகாரரின் திருவடிகளிலோ அவரது சிஷ்ய பரம்பரை ஆசார்யர்களிடமோ ,
ப்ரபத்தியாகிய பரண்யாஸத்தைச் செய்தவர்கள் எல்லாருக்கும், பரமபதம் அளிப்பதே
( இன்னும் பல )

ப்ரதிஷ்டாபித வேதாந்த : ப்ரதிக்ஷிப்த பஹிர்மத : |
பூயாஸ் த்ரைவித்ய மாந்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜநம் || -சங்கல்ப ஸுர்யோதயத்தில் சொல்கிறார்–யதி சிஷ்யனுக்கு ஆசீர்வாதம் செய்கிறார்

நடாதூர் அம்மாள், ஸ்வாமி தேசிகனைப் பால்ய வயதில் அனுக்ரஹித்த ச்லோகம் .
ஸ்வாமி தேசிகன் , சிறு குழந்தையாகத் தன்னுடைய மாதுலர் ( மாமா) அப்புள்ளார் ( ஆத்ரேய ராமாநுஜர் )
கூடவே, நடாதூரம்மாளின் காலக்ஷேபத்துக்கு, கச்சி வாய்த்தான் மண்டபத்துக்குப் போன போது,
நடாதூரம்மாள், குழந்தையான ஸ்வாமி தேசிகனின் திருமுக காந்தியை–முக விலக்ஷணத்தைக் கடாக்ஷித்து ,
அநுக்ரஹித்து,ஆசீர்வாதமாக அருளிய ச்லோகம் .
இதைத் தான் இயற்றிய சங்கல்ப ஸுர்யோதய நாடகத்தில்,ஸ்வாமி தேசிகன் , யதி (ராஜன் ) தனக்கு ( சிஷ்யன் )
ஆசீர்வாதமாகச் சொன்னதாக, ஒரு காக்ஷியை ஏற்படுத்துகிறார்.
இது, ஸ்வாமி தேசிகனுக்கு, யதிராஜரிடம் உள்ள ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்துகிறது.

நம்முடையது…ராமாநுஜ ஸித்தாந்தம் –அப்படியென்றால் என்ன ?
சுருக்கமாக ஒரே வரியில் சொல்வதென்றால்,
ஸ்ரீ ராமாநுஜரால் தழுவப்பட்ட கொள்கை; இன்னும் சொல்வதென்றால்,
ஸ்ரீ ராமாநுஜரால் ப்ரமாணிகம் என்று நிச்சயிக்கப்பட்டு, பரப்பப்பட்ட வேதங்களின் அர்த்த விசேஷங்கள்.
இதுவே விசிஷ்டாத்வைத –ராமானுஜ ஸித்தாந்தம் .
ராமாநுஜ ஸித்தாந்தம் என்பது, ஆசார்ய–சிஷ்ய பரம்பரையாகத் தொடர்ந்து வரும் உபதேசங்கள்.

ஸ்தோத்ரங்கள், பாசுரங்கள் இவைகளைச் சொல்வதற்கு முன்பு , ஆசார்ய வந்தனம் செய்துப் பிறகு தொடங்குவது ,
தொன்று தொட்டு இருந்து வரும் மரபு.
ஸ்ரீ ஆளவந்தார், ஸ்தோத்ர ரத்னத்தில், முதல் மூன்று ச்லோகங்களில்,
ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு, மங்கள ச்லோகங்கள் இடுகிறார்.

நமோ சிந்த்யாத் புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஸயே |
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே || –1-

சிந்தனைக்கெட்டாத ,ஆச்சர்யமான, அநாயாசமாகத் தோன்றிய ஜ்ஞாநமும், வைராக்யமும் நல்லறிவும்
சேர்ந்த குவியலாக, ஆழமான பகவத் பக்தியின் கடலுமான, ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு வந்தனம் (நமஸ்காரம்)

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநுராஹமஹிமா திசயாந்த ஸீம்நே |
நாதாய நாதமுநயேத்ர பரத்ர சாபி —
நித்யம் யதீய சரணௌ சரணம் மதீயம் || -2-

ஜ்ஞாந ,வைராக்ய, பக்தி நிறைந்தவரும் ,மது என்கிற அசுரனை அழித்த பகவானின் ( ஸ்ரீ ஹயக்ரீவரின்)
திருவடித் தாமரைகளில் உண்மையான ஜ்ஞாநம் உடையவரும், அன்புக்கும், மேன்மையின் சிறப்புக்கும் ,
அந்த ஸீம்நே —கடைசி எல்லையானவரும், ஸ்ரீ வைணவர்களுக்கு, நாதருமான ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு நமஸ்காரம்
யாருடைய திருவடிகள், இங்கும் அங்கும் ப்ரக்ருதி மண்டலத்திலும் பரமபதத்திலும் கூட .
மதீயம் சரணம்—எனக்கு உண்டான சரணமாகும்.

பூயோ நமோ பரிமிதாச்யுத பக்திதத்வ —
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ சுபைர் வசோபி : |
லோகேவதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி–
யோகாய நாத முநயே யமிநாம் வராய || –3-

அளவே இல்லாத அச்யுதன் ( ஸ்ரீ தேவநாதன் )விஷயமான பக்தி,தத்வ ஜ்ஞானம் , இவைகளின் அமுதத் தடாகத்தில்( தேக்கம் )
பரிவாஹ —மேலே ததும்புகிற, தமது ஸ்ரீஸுக்திகள், ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் , இவைகளால்,
இவ்வுலகில் இறங்கிய பகவானைப் பற்றிய பக்தி யோகியும்,
யோகி ஸ்ரேஷ்டருமான ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு, மேன்மேலும் நமஸ்காரம்.

ஸ்ரீ ஆளவந்தாரின் ஆசார்யன், ஸ்ரீ மணக்கால் நம்பி, இவரின் ஆசார்யன், ஸ்ரீ உய்யக்கொண்டார் ,
அவருடைய ஆசார்யன் ஸ்ரீமந் நாதமுனிகள்.
மேற்சொன்னவாறு, மூன்று மங்கள ச்லோகங்களை தம் ஆசார்யனின், ஆசார்யனுக்கு ஆசார்யன் ,
என்று மூன்று படிகளுக்கு மேலே –
ஆசார்ய சம்பந்தம் (பிறவியில்) ஏற்படுவதால்,ச்லோகம், ப்ராசார்யனுக்கு என்று–2ம் ச்லோகம்,
அதற்கும் மேலே ஆசார்யன் என்று 3ம் ச்லோகம் என்று மூன்று ச்லோகங்களிலும்
மணக்கால் நம்பியையோ (ஸ்ரீராமமிஸ்ரர் ), உய்யக் கொண்டாரையோ (ஸ்ரீ புண்டரீகாக்ஷர்) வந்திக்காமல்,
அவர்கட்கும் ஆசார்யரான ஸ்ரீமந் நாதமுனிகளைத் துதிக்கிறார்.

இதற்கு, ஸ்வாமி தேசிகன், ஸ்தோத்ர ரத்ன பாஷ்யத்தில் சொல்லும்போது,
ஆசார்யனுடன் ப்ராசார்யனும் இருப்பாரேயானால், ப்ராசார்ய வந்தனம் ப்ரதானம் என்கிறார்.
ஆளவந்தார், இப்படித் தன்னுடைய க்ரந்தங்களில் மங்கள ச்லோகம் இடும்போது,
ஸ்ரீ உடையவரோ கீதாபாஷ்யத்தின் தொடக்கத்தில்,

யத்பதாம் போருஹத்யான வித்வஸ்தா சேஷ கல்மஷ : |
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் || என்று ஸ்ரீ ஆளவந்தாருக்கு மங்கள ச்லோகம் இடுகிறார்.

குரு பரம்பரைப்படி, ஸ்ரீ ராமாநுஜருக்கு முன்பு , பெரியநம்பிகள் (மஹா பூர்ணர் ); அவருடைய ஆசார்யன் ஸ்ரீ ஆளவந்தார்.
ஸ்ரீ இராமாநுஜர் , தன் ஆசார்யனின் ஆசார்யனுக்கு, மங்கள ச்லோகம் இடுகிறார்.

ஸ்வாமி தேசிகன், தன்னுடைய க்ரந்தங்களில் ( மேலே காண்பிக்கப்பட்ட சில உதாரணங்கள் )
இதே வழியைப் பின்பற்றி இருக்கிறார்.
ஆனால்,யதிராஜ ஸப்ததியில் ,
பிரதம ஆசார்யனான ஸ்ரீமன் நாராயணன் ,
பிறகு , பெரிய பிராட்டி,
பிறகு விஷ்வக்ஸேநர் ,
நம்மாழ்வார்,
நாதமுனிகள்,
உய்யக்கொண்டார்,
மணக்கால் நம்பி
ஆளவந்தார்,
பெரியநம்பி ( மஹா பூர்ணர் ),
யதிராஜர் என்கிற வரிசையில், மங்கள ச்லோகம் இடுகிறார்.

——-

சதாச்சார்ய உபதேச முகமாய் ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்களை அதிகரித்து -பல முறை
ஸ்ரீ பாஷ்ய பிரவசனம் நடத்திச் சாத்திய ஸ்ரீ வேதாந்தாச்சார்யார் ஸ்ரீ பாஷ்யகாரரான எம்பெருமானார் இடத்தில் தமக்கு உள்ள
பக்திக்கு போக்கு வீடாக ஸ்வாமியை ஸ்துதிக்க இழிந்து குரு பரம்பரா பூர்வகமாக ஸ்ரீ பகவத் ராமானுஜர் உடையவும் –
அவர் ஸ்ரீ ஸூக்திகள் உடையவும் ப்ரபாவங்களை பரக்கப் பேசி அனுபவிக்க உபக்ரமிக்கிறார் –

முதல் ஒன்பது ஸ்லோகங்களால்-அடைவே எம்பெருமான் -பிராட்டி -சேனை முதலியார் -ஆழ்வார் -நாத முனிகள் -முதல்
பெரிய நம்பி வரையில் உள்ள ஆச்சார்யர்களை அடி பணிகிறார் –

———————————————————

ஸ்ரீ வரதராஜப் பெருமான், யானை மலையில் (கரி-சைலம் ) அமர்ந்திருக்கும் கருமேகம்,
யதிராஜரின் தயா (62) என்ற அமிர்தப் பெருங்கடலில் இருந்து ஆழமாக குடித்ததால் மட்டுமே
அவரது பக்தர்களுக்கு விரும்பிய நன்மைகளை விட அதிகமாகப் பொழிகிறது.
யதிராஜர் என்பது இறைவனின் ஐந்து ஆயுதங்களின் (12), மற்றும்
ஸ்ரீ வைகுண்டத்தில் இறைவனின் படைத் தளபதியான விஷ்வக்சேனரின் அவதாரம் (32),
அல்லது இறைவனின் அவதாரம் (63).
ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதியில் உள்ள அமுதனரோ, யதிராஜ சப்ததியில் தேசிகரோ,
ராமானுஜரை சேஷ அவதாரம் (ஆதிசேஷ அவதாரம்) என்று குறிப்பிடவில்லை.

வேதாந்த தேசிகர் முதன் முதலில் யதிராஜரின் படைப்புகளால் அவரை நோக்கி ஈர்க்கப்பட்டார் என்பது
இந்த படைப்பில் உள்ள அவரது புகழ்ச்சியில் உள்ள முதல் ஸ்லோகத்திலிருந்து தெரிகிறது (10).
ஸ்லோகம் 33 இல் உள்ள படைப்புகளுக்கு தேசிகரின் பாராட்டுக்கள் அவரது பெரும் மதிப்பு மற்றும் போற்றுதலுக்கு பொதுவானதாகக் கொள்ளலாம்.
காரணம், ராமானுஜரின் படைப்புகள் மட்டுமே (கண்ணாடியில் இருப்பது போல), லட்சுமி-காந்தா (ஸ்ரீயின் மனைவி)
அவர் உண்மையில் இருப்பதைப் போலவே பிரதிபலிக்கின்றன,
மற்ற அமைப்புகளில் அவர் காணப்பட்டால், அவர் சிதைந்தவராகக் காணப்படுகிறார்.
ஹரி எனப்படும் தத்துவத்தை யதிராஜரின் சித்தாந்தத்தில் மட்டுமே முழுமையாகவும் (அக்ஷதம்) காண முடியும் என்றும் ஸ்லோகம் 16 கூறுகிறது.

யதிராஜரின் யசஸ் (புகழ்) (71) இல் மூழ்கிய பெரிய ஆச்சார்யர்களால் அவர் மீது பொழிந்த ஆசீர்வாதங்கள்.

——————-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

சதாச்சார்ய உபதேச முகமாய் ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்களை அதிகரித்து
பல முறை ஸ்ரீ பாஷ்ய பிரவசனம் நடத்திச் சாத்திய ஸ்ரீ வேதாந்தச்சார்யார்
ஸ்ரீ பாஷ்யகாரரான எம்பெருமானார் இடத்தில் தமக்கு உள்ள பக்திக்கு போக்கு வீடாக ஸ்வாமியை ஸ்துதிக்க இழிந்து
குரு பரம்பரா பூர்வகமாக ஸ்ரீ பகவத் ராமானுஜர் உடையவும் –
அவர் ஸ்ரீ ஸூக்திகள் உடையவும் ப்ரபாவங்களை பரக்கப் பேசி அனுபவிக்க உபக்ரமிக்கிறார் –

முதல் ஒன்பது ஸ்லோகங்களால்-அடைவே
எம்பெருமான் –
பிராட்டி –
சேனை முதலியார் –
ஆழ்வார் –
நாத முனிகள் -முதல்
பெரிய நம்பி வரையில் உள்ள ஆச்சார்யர்களை அடி பணிகிறார் –

—————————————————————–

1-கம் அபி ஆத்யம் குரும் வந்தே கமலா க்ருஹமேதி நம்
ப்ரவக்தா சந்தசாம் வக்தா பஞ்ச ராத்ரஸ்ய ஸ்வயம் –

வேதங்களை பிரமனுக்கு கற்பித்தவன்
பாஞ்சராத்ர ஆகமத்தை இயற்றியவன்
பெரிய பிராட்டியாருடன் இல்லறத்தில் உள்ளவன்
முதலாச்சார்யன்
இப்படிப்பட்ட பெரிய பெருமாளை அடியேன் வணங்குகிறேன்

முதன் முதலில் வேதங்களை வெளிப்படுத்தி பிரகாசிப்பித்தவனும் –
ஸ்ரீ பாஞ்ச ராத்ம ஆகமத்தை அருளிச் செய்தவனும்
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாக வந்து -என்கிறபடியே -பிரதம ஆச்சார்யனும்
ஸ்ரீயபதியுமான சர்வேஸ்வரனை
அடி பணிகிறேன் என்று பகவத் வந்தனம் பண்ணுகிறார் –

ஆத்யம்-பூர்வம் வேதம் சொல்வதையே இங்கு தேசிகன்
கள்ள வேடத்தை -இத்யாதி நாஸ்திக சாஸ்திரங்களும் இவனே பிரவர்த்தா –
கம் அபி -இதம் இத்தம் என்று சொல்ல முடியாத ப்ரஹ்மம் -வாசா அகோசரத்வம்
ஸ்ரீ வராஹ நாயனார் பூமிப் பிராட்டிக்கு உபதேசம் -அஹம் ஸ்மராமி
ஸ்ரீ கீதாச்சார்யனாகவும் உபதேசம் –
அக்னி தேவதை உபதேசம் -கொஞ்சம் விட்டு ஆச்சார்யர் மூலம் முறைப்படி உபாசித்து பெற்ற வித்யையே நிலைத்து நிற்கும் –
குரு சப்தம் அந்தகார நிரோதத்வம் –
லஷ்மீ நாத ஸமாரம்பாம் போல் இங்கும்

வந்தே -மங்களார்த்தம் -நமஸ்கார ரூபம் இது
கமலா க்ருஹமேதி நம் -கிருஹ லஷ்மீ இல்லாத வீடு சோபை இழக்கும் அன்றோ –பத்நியா ஸஹ
வேறு ஒரு கார்யமார்த்தமாக எழுந்து அருளும் பொழுது பிரார்த்திக்காமல் அந்தப்புர வாசத்திலே –
மிதுனத்தில் -பிரார்த்திக்க வேண்டுமே
பிரமேயமான அவனைப் போல் பிரமாணமும் நித்யம்
கல்பம் தோறும் நான்முகனுக்கும் மகரிஷிகளும் இவனே வேத உபதேசம்
தேன ப்ரோக்தம் -பிரவசனம் செய்து அருளுகிறார் –

பாஞ்ச ராத்ரம் இருளைப் போக்கி -கன இருள் அகன்றது
ஐவருக்கு
ஞான பாத யோக பாத கிரியா பாத –இத்யாதி ஐந்தும்
ப்ரஹ்ம ராத்ரம் இந்த்ர ராத்ரம் இத்யாதி ஐந்தும்
கால பஞ்சக கர்தவ்யம் வைதிக கால கர்தவ்யங்கள்
ரிஷிகள் மூலம் வெளியிடாமல் தானாகவே வெளியிட்டு அருளி -ஸ்வயம் -அருளிச் செய்து
ஆத்ய குருவாக வந்தனம் இதில்

வேதங்களைப் ப்ரகாசப்படுத்தி, தன் சரணாரவிந்தங்களை அடைவதற்கான உபாயமான ,
ஆராதனம் செய்யும் க்ரமத்தைத் தானே பாஞ்சராத்ர ஆகமம் மூலமாக உபதேசித்தவன்;
புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரோடு எப்போதும் பிரியாத திருமார்பினன்;
திவ்ய தம்பதிகள் சேஷியாய்,த்யாநத்துக்கு சாக்ஷியாய்,சாக்ஷாத்காரத்துக்கு இலக்காக இருக்கும் லக்ஷ்மிபதி ;
இவனே ஆதிகுரு ; முதல் ஆசார்யன்; பகவத் கீதை மூலமாக, கர்ம,ஞான, பக்தி,ப்ரபத்திகளை உபதேசித்த ஆதிகுருவை வணங்குகிறேன் .

ஸ்வாமி தேசிகன், தன் மாதுலர் ஆத்ரேய இராமாநுஜர் என்கிற அப்புள்ளாரிடம் , வேதங்கள்,வேதாந்தங்கள், சகல சாஸ்த்ரங்கள்
எல்லாவற்றையும் கற்றுத் தெளிந்தவர் .
இவற்றுக்கு அடிப்படை, யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள், ஸ்ரீபாஷ்யம், முதலியன.
இவை யாவும், பகவான் முதலாக, ஸ்ரீபாஷ்யகாரர் வரை ,எண்ணெய் ஒழுக்கு போல,
உபதேச பரம்பரையில் வந்தவை என்பதை மனத்தில் தெளிந்து,
முதல் ஆசார்யனான பகவானைத் துதிக்க நா எழாமல், அவனது கல்யாண குணங்களில் ப்ரமித்து , திளைத்து,
பிரமனுக்கு வேதத்தை உபதேசித்த வெள்ளைப் பரிமுகனாக பகவான் நின்று,
தனக்கு உபதேசித்ததை எண்ணி,நெகிழ்ந்து, முதல் ஸ்லோகத்தில், ஆதி குருவான—ப்ரதம ஆசார்யனான, பகவானை வணங்குகிறார்.

———————————-

2-சஹ தர்ம சரிம் சௌரே சம் மந்த்ரித ஜகத்திதாம்
அனுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞாத நிக்ரஹாம்

இந்த உலகிற்கு எந்த வகையில் நன்மை செய்யலாம் என்று பெரிய பெருமாளுடன் எப்போதும் ஆலோசனை செய்பவள்
அருள் என்பதே வடிவம் கொண்டதோ என்னும்படி உள்ளவள்
அன்பின் மிகுதியால் தண்டனை என்பதையே அறியாதவள்
பெரிய பெருமாளுக்கு ஏற்றவளாக இருப்பவள்
இப்படிப்பட்ட பெரிய பிராட்டியாரை அடியேன் வணங்குகிறேன்-

எப்போதும் எம்பெருமானுடன் சகல லோகங்களுடைய ஷேமத்தையே நோக்கிக் கொண்டு இருப்பவளும் –
நம்மிடம் நிக்ரஹம் என்பதையே அறியாதவளும்
அருளே வடிவு எடுத்தவளாய் -ஜகத் ரக்ஷணத்தில் பகவானுக்கு சக தர்ம சாரிணியுமான பிராட்டியை அடி பணிகிறார் –

உபதேச பரம்பரையில் -புருஷகார பூதை -பிராட்டி விஷயம் லோக ரக்ஷணத்துக்கு
அவனுடன் -மந்த்ர ஆலோசனை செய்பவள்
பூ மன்னு மாது பொருந்திய மார்பன்
மா மகள் மன்னிய -கமலா க்ருஹ
ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே
ஸ்ரீய பதித்வம் -மிதுனம் உத்தேச்யம்

வேதங்கள் -கரண களேபரங்கள் கொடுத்து அருளினாலும் -வேதங்களுக்கு அபார்த்தம் சொல்லி –
தர்ம கதி மீறி அதோ கதியாக விழ
ஹே காந்த ஆழ்வாரைக் கொண்டு வேதார்த்த யதார்த்த ஸ்தாபனம் செய்து அருளுவதற்காக
பிராட்டி விஷ்வக்சேனருக்கும்
விஷ்வக்சேனர் மூலம் ஆழ்வாருக்கும் உபதேசித்து –
பகவத் ஸஹ ஏகி பூய ஜகத் ஹித மந்த்ர ஆலோசனை -பெருமாளும் பிராட்டியும் ஆச்சார்ய பீடத்தை அலங்கரித்து
ஜகத்தை உஜ்ஜீவிப்பித்து அருளுகிறார்கள்
வாத்சல்யம் விஞ்சி பர துக்க அஸஹிஷ்ணுத்வம் அனுக்ரஹம் மட்டுமே -அஞ்ஞாதம் அறியாமல் பிராட்டி-

திவ்ய தம்பதியரை, “கமலா க்ருஹ மேதிநம்” என்று நமஸ்கரித்தவர், இந்த ஸ்லோகத்தில், பிராட்டியை ஸேவிக்கிறார்.
ஆசார்ய பரம்பரையில், பகவானுக்கு அடுத்தது, பிராட்டி. இந்தக் க்ரமத்தில் , பிராட்டியை நமஸ்கரிக்கிறார்.
பிராட்டி, கருணையே வடிவானவள். ஜீவாத்மாக்களுக்கு, நன்மைகளைச் செய்வதிலேயே நாட்டம் கொண்டவள்.
சரணம் என்று வந்தவர்களுக்கு,அபயம் அளித்து, ரக்ஷிக்கும் பகவானுக்கு, ஸஹதர்ம சாரிணியாக,கணமும் பிரியாமல் ,கூடவே இருப்பவள்.

பகவான், பிராட்டியிடம் சொல்கிறாராம்.
உண்டியே, உடையே என்று உலக சுகங்களில் மயங்கி ,
துன்பத்தில் உழலும் ஜீவாத்மாக்களைத் திரும்பவும் நம்முடைய வைகுண்டத்துக்கு ஏற்ற,நீ தூண்டினாய்.
அதனால்,ப்ரஹ்மாவைப் படைத்து,வேதங்களை உபதேசித்து, ப்ரஹ்மா மூலமாக சரீரம்,
பஞ்சேந்த்ரியங்களை , ஜீவன்களுக்குக் கொடுத்து, அவர்கள் வேதங்களை அத்யயனம் செய்து, தர்ம மார்க்கத்தில் இழிந்து
பக்தி, ப்ரபத்தி இவைகளை அநுஷ்டித்து,பாப, புண்யங்களை ஒழித்து, இங்கு வருவார்கள் என்று ஏற்படுத்தினேன்.
ஆனால், வேதங்களுக்குத் தவறான அர்த்தங்களைச் சொல்பவர்கள் வார்த்தைகளில் மயங்கி இருக்கிறார்கள்.
அவர்களைத் திருத்த திருக்குருகூரில் அவதரித்துள்ள சடகோபனுக்கு, நாமே நேரில் சென்று , தத்வங்களை உபதேசித்து ,
அவர் மூலமாக, ஜீவாத்மாக்களைத் திருத்தலாமா —- என்று கேட்டாராம்.

அதற்கு, பிராட்டி,
நாமே நேரில் சென்று, நாங்கள் தான் ஜகத் காரணம்,நாங்களே சேஷிகள் என்று சொன்னால் ஒருவரும் நம்ப மாட்டார்கள்;
யானையின் மூலமாக, இன்னொரு யானையை வசப்படுத்துவது போல
நமது ஸேநாதிபதியான விஷ்வக்ஸேனரை அனுப்பி,
சடகோபனுக்கு உபதேசிக்கச் செய்து, சடகோபன் மூலமாகவே ஜீவாத்மாக்களைத் திருத்தலாம் என்று யோசனை கூறினாளாம்.

உடனே பகவான், பிராட்டியிடம்,
“நீயே விஷ்வக்ஸேனருக்கு உபதேசித்து, அவரைக் குருகூர் சடகோபனிடம் அனுப்பி,
தத்வார்த்தங்களைச் சொல்லுமாறு அறிவுரை கூறுவாயாக “ என்றாராம்.

இப்படி, ஸேநாதிபதியான விஷ்வக்ஸேநருக்கு தத்வங்களை உபதேசித்து,
பெரிய உபகாரம் செய்த பெரிய பிராட்டியை நமஸ்கரிக்கிறேன்

——————————————

3 -வந்தே வைகுண்ட சேநாநயம் தேவம் ஸூத்ரவதி சகம்
யத் வேத்ர சிகரே ஸ்பந்தே விஸ்வம் ஏதத் வ்யவஸ்திதம்

வந்தே வைகுண்ட சேநாநயம் -சேனாபதி ஆழ்வாரை சேவிக்கின்றேன்
தேவம் ஸூ த்ரவதி சகம் -ஸூ த்ரவதி சமேத
யத் வேத்ர சிகரே ஸ்பந்தே -செங்கோலின் அக்ர
விஸ்வம் ஏதத் வ்யவஸ்திதம்-ஸமஸ்த பிரபஞ்சம் வியவஸ்திதம் ஆகுமே
ஸாத்யா சந்தி தேவர் -பூஜ்யர் -நித்ய ஸூ ரிகள் -சேஷாசயனர் -மந்த்ர ஆலோசனை -பிராட்டி இவருக்கு உபதேசம் –

யாருடைய கையில் உள்ள பிரம்பின் நுனி அசைவதைக் கண்டு இந்த உலகம் இயங்குகிறதோ
யாரிடம் இந்த உலகம் கட்டுப்பட்டு உள்ளதோ
யார் ஒருவர் ஸூத்ரவதி என்பவளுக்குக் கணவனோ
பெரிய பெருமாளின் சேனைக்குத் தலைவராக உள்ளவர் யாரோ
அப்படிப்பட்ட விஷ்வக் சேனரை அடியேன் வணங்குகிறேன் –

குரு பரம்பரையில் மூன்றாவது ஸ்தானம் –
இவர் பிரம்பின் கீழே தானே அவனும்
ஸூ த்ர வதி பிரே ரிக்க -ஸ்ரீ நம்மாழ்வாருக்கு உபதேசம்
ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரீ பெருமாள் இடம் செல்லும் பொழுது நான்கு படை தலைவர் மனைவிகள்
அவர்களைப் பிரேரித்தது போலே -என்பர் வியாக்யாதாக்கள் –
வைகுண்ட சேனாபதி என்று சேனாபதி வழக்கமாக சொல்லும் சுப்ரமண்யனை வியாவர்த்திக்கிறது –

ஸூத்ரவதி தேவியின் நாயகனான எந்த விஷ்வக் சேனரின் பிரம்பின் -செங்கோலின் ஆஞ்ஜையில் இந்த உலகம்
நிலை நிற்குமோ அந்த சேனை முதல்வரை அடி பணிகிறேன்

விஷ்வக்ஸேநர் என்கிற சேனைமுதலியார், நித்யஸுரிகளுக்கும் முக்தர்களுக்கும் , பரமபதத்தில் தலைமையேற்று ஒழுங்குபடுத்துபவர்.
நித்யஸுரிகள் ப்ரக்ருதி சம்பந்தமே இல்லாமல்,பரமபதத்தில் எப்போதும் பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டு ,பரம ஆனந்தத்துடன் இருப்பவர்கள்.
முக்தர்களோ பக்தி அல்லது ப்ரபத்தியை அனுஷ்டித்து ப்ரக்ருதியின் தொடர்பை அறுத்து,பரமபதத்தை அடைந்து,
திவ்ய தம்பதிகளுக்கு எப்போதும் கைங்கர்யம் செய்து ஆனந்திப்பவர்கள் .
இந்தப் ப்ரக்ருதி , பகவானுக்கு லீலா விபூதி. இங்கு கோடிக்கணக்கான அண்டங்கள் உள்ளன;
ஒவ்வொரு அண்டத்திலும், 14 உலகங்கள் உண்டு. யாவும், திவ்ய தம்பதியரின் ஆணைக்கு உட்பட்டு, செயலாற்றுகின்றன.
திவ்ய தம்பதியருக்கு அடுத்தபடியாக, கண்காணிப்பவர், விஷ்வக்ஸேநர் .
எனவே, இவை அனைத்தும், இவரது ஆளுகைக்கு உட்பட்டது எனலாம்.
இவர், ஸுத்ரவதியின் நாயகர். ஸுத்ரவதி, கணவரான சேனை முதலியாரை விரைவாகச் சென்று,
குருகூர் சடகோபனுக்கு ,உபதேசிக்குமாறு தூண்டுகிறாளாம்.
அதனாலேயே, ஸுத்ரவதி ஸமேத ஸ்ரீ விஷ்வக்ஸேநர் என்று ஸ்வாமி தேசிகன் ஸேவிப்பதாகச் சொல்வார்கள்.

ஸ்ரீ சடகோபனின் உபதேசத்தால் ஜீவாத்மாக்கள் நற் கதி பெற்று ஸ்ரீ வைகுண்டம் சென்று விட்டால் ,ஹவிர்பாகம் கிடைக்காமல்
போய் விடுமே என்று தேவர்கள் இடையூறு செய்ய நினைத்தாலும்
ஸேனை முதலியாரிடம் உள்ள பயத்தால், அப்படிச் செய்ய நடுங்குவார்களாம்.
அப்படிப்பட்ட ஸுத்ரவதீ ஸமேத ஸ்ரீவிஷ்வக்ஸேனரை நமஸ்கரிக்கிறேன்

—————————-

4-யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுளா மோத வாசிதம்
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் சடாரிம் தமுபாஸ்மஹே

யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுளா மோத வாசிதம் -சரஸ்வதி சம்பந்தம் பெற்ற திருவாய் மொழி
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் -வேதங்கள் இளைப்பாற
சடாரிம் தமுபாஸ்மஹே -வந்தே -ஒருமையில் கீழ் -இங்கு குழாங்களாக உபாசிக்கிறோம் நம்மையும் சேர்த்து

அவருடைய திருமேனி மட்டும் அல்லாது அவரது வாக்கின் மூலம் வெளிவரும் சொற்களிலும் மகிழம் பூ மணம் சூழ்ந்துள்ளது
அத்தகைய அவரது வாக்கானது வெள்ளம் போன்று ஓடி வர அதில் வேதங்கள் தங்கள் களைப்பை ஆற்றிக் கொள்கின்றன
இப்படிப்பட்ட நம்மாழ்வாரை நாம் உபாஸிப்போம்-

எந்த நம்மாழ்வாரின் மகிழ மலர் மணம் கமழ்கின்ற திவ்ய வாக்கின் பிரவாஹம்
வேதங்களுக்கு இளைப்பாற இடமாகுமோ
அந்த சடகோபனை அடி பணிகிறேன் என்று பிரபன்ன ஜன கூடஸ்தரான ஆழ்வாரைப் போற்றுகிறார் –

மகிழ் மலர் மணம் வீசும் திரு வாய் மொழி -திருத் துழாய் மணம் -பரஸ்பர சேர்த்தி
அல்பர் கண்டு பயந்த வேதங்கள் -வேத நெறியை அலங்கோலம் பண்ணுகிறார்கள் -அந்த பயம் நீங்கி இளைப்பாறப் பெற்றன –
உபாஸ் மஹே -இடைவிடாத ஸ்ம்ருதி -நாம் அனைவரும் கால ஷேபம் திருவாய் மொழியிலிலே செய்யக் கடவோம்

ஸ்வாமி தேசிகன் , இந்த ஸ்லோகத்தின் மூலம் ஸ்ரீ சடகோபரை நமஸ்கரிக்கிறார் .
நம்மாழ்வார் என்கிற சடகோபன், திருவவதாரம் கலியுகம் தொடங்கி 46 வது நாள் என்பர்.
இவர் பகவானுடையவும் ஸேனை முதலியாருடையவும் அம்சம் என்றும் சொல்வர்.

அவதரித்து, 12 நாட்கள் வரை பால் கூட அருந்தாது, கண்கள் திறக்காது இருந்ததால் பெற்றோரான காரியாரும் , உடையநங்கையும்
ஆழ்வார்திருநகரியில் நித்ய வாஸம் செய்யும் பொலிந்து நின்ற பிரான் சந்நிதியில் இருத்தி,”மாறன் ” என்று பெயர் சூட்டினர். குழந்தை, சந்நிதியிலிருந்து தவழ்ந்து சென்று அருகில் இருந்த புளியமரத்தின் அடியில் யோகாசனத்தில் அமர்ந்தது.
இப்படியே,16 ஆண்டுகள் கழிந்தன. அப்போது,விஷ்வக்ஸேநர் , பெரிய பிராட்டியின் கட்டளைப்படி
அங்கு எழுந்தருளி மாறனுக்கு “பஞ்ச ஸம்ஸ்காரங்களை”ச்செய்து, மந்த்ரங்கள்,ரஹஸ்யார்த்தங்கள் என்பன எல்லாவற்றையும் உபதேசித்தார்.

மாறன், சிறுவயதிலேயே ,”சடவாயு”வை ஜயித்ததால் ,”சடகோபன் “ என்றும்,
ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்ற பிரான், மகிழம்பூ மாலையை அனுக்ரஹிக்க ,அதை அணிந்துகொண்டதால்,“வகுளாபரணர் ” என்றும்
தன்னுடைய பாசுரங்கள் போன்றவற்றின் மூலமாக ,பிற மதங்களைக் கண்டனம் செய்ததால் “பராங்குசர் “ என்றும் ,
திருக்குருகூரில் அவதரித்ததால் “குருகைப்பிரான் “ என்றும் ,இவருக்குத் திருநாமங்கள் உண்டு.

இவருக்கு முன்பாகவே ,த்வாபர யுகத்தின் முடிவில் ,அவதரித்த மதுரகவிகள் , வடதேச யாத்திரையில் அயோத்தியில் இருந்தார்.
ஒருநாள் இரவில், தெற்கே உள்ள எம்பெருமானை வணங்க,தெற்கு நோக்கிக் கைகூப்பியபோது, தெற்கே ஒரு பேரொளியைக் கண்டார்.
அதிசயித்து, அந்தப் பேரொளியைத் தேடித் தெற்கே வந்தவர் , குருகூர்க் கோயிலில் அந்தப் பேரொளி உட்புக,
இவரும் பின்தொடர்ந்து வந்து, அங்கு புளியமரத்தடியில், யோகத்தில் இருந்த சடகோபரை ஸேவித்தார்.

அவரோ,கண் திறந்து பார்த்தாரில்லை. மதுரகவிகள், கைதட்டி ஓசை எழுப்ப, சடகோபர் ,கண்விழித்து, மதுரகவிகளைப் பார்த்தார்.
மதுரகவி, சடகோபரைக் கேட்டார்:–
“செத்தத்தின் வயிற்றில், சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும் ? “
அதாவது, ப்ரக்ருதிக்கு உயிரில்லை; உயிரில்லாத ப்ரக்ருதியான சரீரத்தில், அணுவான ஜீவாத்மா புகுந்தால்,
எதை அனுபவித்துக் கொண்டு, எங்கு இன்பம் உண்டு என்று எண்ணி இருக்கும் ?

ஸ்ரீ சடகோபன் பதிலிறுத்தார் :–
” அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” அதாவது, சரீரத்தில் உள்ள ஐம்புலன்களால் கிடைக்கிற
இன்ப துன்பங்களை நுகர்ந்து, இன்புற்றேன் என அங்கேயே கிடக்கும்.

ஸ்ரீ மதுரகவிகள் சந்தோஷித்து, ஸ்ரீ சடகோபரையே ஆசார்யராக இருக்குமாறு பிரார்த்தித்தார்
சடகோபரும் அப்படியே அருளி, மதுரகவிகளுக்குத் தத்வங்களை உபதேசித்து, தான் இயற்றுகிற பாசுரங்களைப் பட்டோலை செய்யுமாறு நியமித்து,
திருவிருத்தம் (100),திருவாசிரியம் (7) பெரிய திருவந்தாதி (87),.திருவாய்மொழி (1102) ஆக , 1296 பாசுரங்களைச் சொல்ல,
மதுரகவிகள், இவற்றைப் பட்டோலைப் படுத்தினார்.

பகவான் அளித்த மகிழம்பூ மாலையை அணிந்ததால், திருமேனி மாத்ரமல்ல, ஆழ்வாரின் ஸ்ரீஸுக்திகளிலும் மகிழம்பூ மணம் —
அதாவது, ப்ரஹ்ம கந்தம் —அதாவது பகவானின் லீலைகள்,தத்வங்கள் ஆகிய மணம் வீசுகிறதாம்.

பிற மதஸ்தர்களின் குதர்க்க அர்த்தங்களால் வேத மாதா களைத்துப் போய் ,ஆழ்வாரின் திருவாய்மொழியில் ச்ரம பரிகாரம் செய்து கொள்கிறாளாம் .
ஆழ்வார், சடவாயுவை ஜயித்தது போல,அல்ப அறிவாளிகளின் வீண் வாதங்களையும் ஜயிக்கிறாராம் .
இப்படி, பகவானை இடைவிடாது த்யானித்து, அவனது சேர்க்கையை , ஆழ்வார் பெறுகிறார்.
இதனால்,ஆழ்வாரின் மகிழம்பூ மணம் பகவானுக்கும், பகவானின் திருத் துழாய் மணம் ஆழ்வாருக்கும் பரவி உள்ளது . இப்படிப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வாரை நமஸ்கரிக்கிறேன் .

பகவானை இடைவிடாது த்யானித்து அனுபவிக்கும் ஆழ்வாரை,ஸ்வாமி தேசிகன் விடாமல் த்யானம் செய்வதால் ,
ஸ்வாமி தேசிகனிடமும் ,அவருடைய ஸ்ரீஸுக்திகளிலும் ,மகிழம்பூ வாசனையும் , துளசி வாசனையும் சேர்ந்து வீசுகிறது.
இது ரஸா னுபவம்.

————————————-

5–நாதேந முனிநா தேந பவேயம் நாதவா நஹம்
யஸ்ய நைகமிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் கதாம் –

சர்வ வேதங்களின் உட்ப்பொருளான பகவத் தத்வம் எந்த பெரிய முதலியாருக்கு கையிலங்கு நெல்லிக் கனியாக இருக்குமோ –
அந்த ஸ்ரீ மன் நாத முனிகளே எனக்கு ஸ்வாமியாக இருந்து என்னை ஆட் கொள்ள வேண்டும்
என்று ஸ்ரீ மன் நாத முனியை அடி பணிகிறார் –

வேதங்களில் பொதிந்துள்ள உண்மைகள் அனைத்தும் அவரிட்மன் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாக நிற்கும் நிலை பெற்றது
அப்படிப்பட்ட நாதமுனிகள் மூலம் நான் உயர்ந்த நல்லவரை அடைவேன் ஆவேன்

நாதமுனியை எனது நாதராக (எஜமானர்) நான் வைத்திருக்கிறேன்,
யாருடைய கைகளில் வேதங்களின் அடிப்படையான கருவானது புரிதலின் தெளிவைப் பெற்றதோ –
இதை ஹஸ்தாஅமலகா என்று அழைக்கலாம்,
இந்த நாதத்தைக் கொண்டு ஒருவர் கூறுவது போல், நான் ” அநாத ” (ஸ்வாமி இல்லாமல் )  இருக்க முடியாது.

வீரநாராயணபுரத்தில் ( தற்போதைய காட்டுமன்னார்குடி ) ஆனி அநுஷத்தில் அவதாரம்.பால்யத்திலேயே யோகத்தில் இழிந்தவர்.
திருக்குடந்தை ஸ்ரீ ஆராவமுதன் ஸந்நிதியில்
ஆராவமுதே, அடியேனுடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர் திருக்குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் !கண்டேன் எம்மானே !
என்கிற திருவாய்மொழிப் பாசுரத்தை,பக்தர் சிலர் பாடக்கேட்டு,

அவர்களை , எல்லாப் பாசுரங்களையும் சொல்லுமாறு,
நாதமுனிகள் வேண்ட,

அவர்கள் இதற்குமேல் தெரியாதென்று சொல்ல,

திருவாய்மொழி முழுவதையும் தெரிந்துகொள்வதற்காக ஆழ்வார்திருநகரிக்கு எழுந்தருளினார்.
அங்கும், ஒருவருக்கும் திருவாய்மொழி முழுவதும் தெரியவில்லை.
அச்சமயத்தில் ஒரு பக்தர், ஆலோசனைப்படி, மதுரகவிகளின் “கண்ணிநுண் சிறுத்தாம்பு “–11 பாசுரங்களை உபதேசமாகப் பெற்று,
(முழுவதும் ஸ்ரீ நம்மாழ்வாரைப் போற்றும் பாசுரங்கள் ), அவற்றைப் பன்னீராயிரம் தடவை ஆவ்ருத்தி செய்து (ஜபித்து ),
நித்யஸுரியான ஸ்ரீ நம்மாழ்வாரை ஸாக்ஷாத்கரித்து,
அவரை ஆசார்யராக வரித்து,
அவரிடம்,மறைந்துபோன திருவாய்மொழி ,மற்ற ப்ரபந்தங்கள்
ரஹஸ்யஅர்த்தங்கள்,
ப்ரஹ்ம ஸுத்ரங்கள் எல்லாவற்றையும் உபதேசமாக அடைந்தார்.

ஸ்ரீ நம்மாழ்வார், “பொலிக!பொலிக!பொலிக!” என்கிற திருவாய்மொழியைச் சொல்லிக் கொடுக்கும் போது,
கலியும் கெடும் கண்டுகொண்மின்” என்கிற வாசகத்தால், பின்னாளில் அவதரிக்க இருக்கும் ஸ்ரீ பாஷ்யகாரரான ராமானுஜரின்
அர்ச்சா திருமேனியை”யும் அவருக்கு எழுந்தருளப் பண்ணிக் கொடுத்தார் என்றும் சொல்வர்.

திவ்ய ப்ரபந்தங்களை , மருமான்களாகிய கீழையகத்தாழ்வான் (க்ருஷ்ணன் ), மேலையகத்தாழ்வான்(வரதன் ) இருவருக்கும்,
தாளம் அமைத்துக் கற்பித்தார் .

ஸ்ரீ நம்மாழ்வார் அருள்செய்ய, பகவானுடைய ஸ்வரூபம் , கல்யாண குணங்கள் , நித்ய விபூதி, லீலா விபூதி,
அனைத்தையும் அறிந்து, யோகீச்வரனாக விளங்கினார்.

தன்னுடைய மருமான்கள் மூலமாக, பகவத் விஷயத்தை அனுபவித்து ரஸித்து,பகவானை சரணம் அடைய மிகவும் உதவிய ஸ்ரீமந்நாதமுநிகளை , அவருக்குத் தாஸனாக இருந்து நமஸ்கரிக்கிறேன்.

—————————————-

6-நமஸ்யாம் அரவிந்தாஷம் நாத பாவே வ்யவஸ்த்திதம்
சுத்த சத்த்வ மயம் சௌரே அவதாரம் இவ அபரம்

எப்போதும் பெரிய முதலியாரைச் சிந்தையில் நிலையாகக் கொண்டு இருப்பவரும் –
சுத்த சத்வ மயனான எம்பெருமானின் அபர அவதாரமோ
என்று அதிசயிக்கும் படியான பிரபாவம் யுடையருமான ஸ்ரீ புண்டரீகாக்ஷரை –
திருவெள்ளறையில் சித்திரை மாத கார்த்திகை திருநக்ஷத்ரத்தில் அவதாரம்.
ஸ்ரீ உய்யக் கொண்டாரை -நமஸ்கரிக்கிறேன் -என்கிறார் –

நாதமுனிகளின் சிந்தனைகளில் எப்போதும் தனது மனதை நிலை நிறுத்தியவர்
தூய்மையாக உள்ள ஸத்வ குணம் மட்டுமே கொண்டவர்
கிருஷ்ணனின் மற்ற ஒரு அவதாரம் போன்று உள்ளவர்
இப்படிப்பட்ட உய்யக்கொண்டாரை அடியேன் வணங்குகிறேன்

———————————–

7-அனுஜ்ஜித ஷமா யோகம் அபுண்ய ஜன பாதகம்
அச்ப்ருஷ்ட மத ராகம் தம் ராமம் துர்யம் உபாஸ்மஹே

பொறுமைக்கு கொள்கலமாய் எப்போதும் விளங்குபவரும் -சாது ஜன பிரியரும் –
ராக த்வேஷங்களை வென்றவரும் -உயர்ந்த வைராக்ய சீலருமான
ஸ்ரீ ராம மிஸ்ரரை -ஸ்ரீ மணக்கால் நம்பியை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் –

பொறுமை மன அடக்கம் ஆகியவற்றை எப்போதும் கை விடாதவர்
அடியார்களுக்கு எந்தவிதமான தீங்கையும் எண்ணாதவர்
எவ்வித செருக்கும் ஆசையும் அற்றவர்
இப்படிப்பட்ட நன்மையால் நான்காவது இராமர் என்று போற்றப்படும் மணக்கால் நம்பியை நாம் உபாஸிப்போம்
பரசு ராமர் சக்ரவர்த்தி திருமகன் பலராமர் மற்ற மூவர்-

பரசுராமர்- சகிப்புத் தன்மை இல்லாதவர்–பலராமர்–மது அருந்தும் பழக்கமுடையவர்.)

லால்குடிக்கு அருகே உள்ள மணக்கால் க்ராமத்தில் மாசிமாத மகத்தில் அவதாரம்.
உய்யக் கொண்டாரின் திருவடி பணிந்து,12 வருஷகாலம் அவருக்கு சிச்ருக்ஷை புரிந்து,எல்லாவற்றையும் உபதேசமாகப் பெற்றவர்.
உய்யக் கொண்டாருக்கு அநேககாலம் மடைப்பள்ளி கைங்கர்யம் செய்தவர்.

புராணங்களில் சொல்லப்படுகிற மூன்று ராமர்களினின்றும் வேறுபட்டு சிறந்தவராக ஸ்ரீராமமிச்ரர் இருந்தார்.
ஸ்வாமி தேசிகனுக்கு உய்யக்கொண்டார் பகவான் கண்ணன் என்றால், மணக்கால்நம்பி 4வது ராமர்.

——————————

8-விகாஹே யாமுனம் தீர்த்தம் சாது ப்ருந்தாவனே ஸ்த்திதம்
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்சே யத்ர கிருஷ்ணா க்ருதாதர —

ஸ்ரீ கிருஷ்ணன் அன்பு பூண்ட யமுனா நதி போல அடியார்களை காத்தும் தீயவர்களை விரட்டியும்
காளிய வ்ருத்தாந்தம் -இருக்கும் ஆளவந்தார் இடம் நான் ஆழ்ந்து உள்ளேன் –

தமது சிஷ்ய சமூகமன் ஆகிற சத்துக்களின் ஆத்ம ரக்ஷணத்தில் நிலை நின்றவரும் –
அரங்கனின் -கண்ணனின் -யுடைய பரம ஆதரத்துக்கு பாத்திரம் ஆனவரும்
-விஷய பிராவண்யம் துளியும் இல்லாதவருமான -ஸ்ரீ ஆளவந்தார் -ஸ்ரீ யாமுனாச்சார்யர் -என்கிற
குளிர்ந்த தடாகத்தில் அமிழ்ந்து களிக்கிறேன் -என்கிறார்

உலகத்தில் மிகவும் உயர்ந்த இடமான பிருந்தாவனத்தில் உள்ள யமுனை நதியிடம் மிகவும் அன்புடன் கிருஷ்ணன் இருந்தான்
அந்த நீரில் இருந்து காளியனை அவ்விடத்து விட்டு விலக்கினான்
இந்த யமுனை நதி போன்றே அடியார்களைக் காப்பாற்றவும் தீய புத்தியை விலக்கவும் உறுதியுடையவர் ஆளவந்தார் ஆவார்
அப்படிப்பட்ட அவரிடம் நான் ஆழ்ந்து உள்ளேன்
இந்த ஸ்லோகத்தில் யாமுனம் யமுனை ஆற்றையும் ஆளவந்தாரையும் குறிக்கும் –

யமுனையின் புனித நீரில் ( ஆளவந்தார் ) நீராடுவோம்,
அவர் சராசரி மோகம் மற்றும் பற்றுதல் ஆகியவற்றுடன் அனைத்து தொடர்புகளையும் துண்டித்தவர்,
சாதுக்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்றவர்,
மற்றும் கிருஷ்ணரால் வலியுறுத்தப்பட்ட விஷயங்கள் மிகச் சரியாக இருந்தன .
(இரண்டாவது பொருள்: பிருந்தாவனத்திற்கு அருகில் உள்ள விஷப் பாம்பு அகற்றப்பட்ட யமுனை நதியின்
புனித நீரில் ஸ்நானம் செய்வோம், அதில் கிருஷ்ணர் ஆர்வம் காட்டினார்.)

ஸ்ரீமந்நாதமுநிகள் —இவரது குமாரர் ஈச்வர பட்டர் –இவரது திருக் குமாரர் யாமுனாசார்யர் (யமுனைத் துறைவர் ),
ஆடி மாதம் உத்தராஷாடா நக்ஷத்ரத்தில் அவதாரம். மணக்கால் நம்பியிடம் சாஸ்த்ர அர்த்தங்களைப் பயின்றவர் .
சோழநாட்டு அரச ஆஸ்தான வித்வான் ஆக்கியாழ்வானை ,இவர் ,அவரிடம் மூன்று விஷயங்களைக் கூறி மறுக்கச் சொல்லி,
அவர் மறுக்க இயலாது திகைத்தபோது, யாமுனரே அவற்றுக்கான மறுப்பையும் சொல்ல,
பட்டத்துராணி மகிழ்ந்து, ” என்னை ஆளவந்தீரோ ” என்று சொல்ல அன்றுமுதல் “ஆளவந்தார் ” என்கிற திருநாமமும் சேர்ந்தது.

யமுனையின் தீர்த்தத்தில் கோடைகாலத்தில் கஷ்டப்படுபவன் முழுகித் திளைத்து மகிழ்வது போல ,
யாமுனரின் குணப் ப்ரவாஹத்தில் மூழ்கித் திளைப்பதாயும் ,ஸாதுவான யமுனை நதி, ப்ருந்தாவனத்தில் காடுகளின் ஊடே வரும்போது,
காளியனால் துன்பப்பட்டதால்,அந்த சர்ப்பக் கூட்டத்தையே விரட்டி, கண்ணன் யமுனை நதியிலும், மணல் திட்டுக்களிலும் கோபியரோடு
விளையாடி, இப்படி கண்ணனால் பஹுமாநிக்கப்பட்டதென்றும் யாமுனரும் சாதுக்களான பெரியநம்பி முதலிய சிஷ்யர்களுக்கு
உபதேசங்கள் செய்து காத்தவர் என்றும் , யமுனைக்குக் கருணை செய்ததைப் போல, ஆளவந்தாரிடமும் ,கண்ணன் பரிவு காட்டினான் என்றும் –
யத்ர க்ருஷ்ண க்ருதாதர : ” என்று சொல்லி,ஆளவந்தாரின் குணங்களாகிய வெள்ளச்சுழிப்பில் ஆழ்ந்து
அவரை வணங்குகிறேன் ——–என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

———————————————————–

9-தயா நிக்நம் யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ண மாஸ்ரயே
யேன விஸ்வ ஸ்ருஜோ விஷ்ணோ அபூர்யத மநோ ரத

ஜகத் காரணனான புருஷனின் மநோ ரதம்-எந்த பரம தயாளுவாள் பூர்த்தி செய்யப் பட்டதோ —
ஆளவந்தார் ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷிக்கப் பண்ணி
தர்சன ப்ரவர்த்தராம் படி பஞ்ச ஸம்ஸ்கார முகமாக வாழ்வித்த ஸ்ரீ பூர்ணாச்சார்யார் என்ற
ஸ்ரீ பெரிய நம்பிகளை -ஆஸ்ரயிக்கிறேன் என்கிறார் –

இந்த உலகைப்படைத்த பெரிய பெருமாளின் மநோ ரதம் இவரால் நிறைவேறியது
அன்புக்கு வசப்பட்ட ஆச்சார்யரான பெரிய நம்பியை அடியேன் அடைவேனாக
ஸ்ரீ வைஷ்ணவம் தழைக்க இவர் மூலம் அன்றோ அன்றோ பஞ்ச ஸம்ஸ்காரம் செய்வித்தான் அரங்கன்

அவர் நமக்கு மகா ராமானுஜரைக் கொடுத்தார், அதன் மூலம் பிரதம படைப்பாளியின் நம்பிக்கையை நனவாக்கினார்.

பெரிய நம்பிகளும், ராமாநுஜரும் , மதுராந்தகத்தில் ஏரி காத்த ராமன் ஸந்நிதியில் சந்தித்துக் கொண்டனர்.
பெரிய நம்பிகள் ராமானுஜருக்கு, அங்கேயே மந்த்ரோபதேசங்கள் ,அர்த்த விசேஷங்கள் எல்லாவற்றையும் சொல்லி அருளினார்.
இப்படியாக,பெரிய நம்பிகள் உடையவர் மீது, மிகுந்த கருணையுடன் இருந்து , உடையவர் மூலமாக ஜனங்களையும் திருத்தி,
பெரிய பெருமாளின் திருவுள்ளத்தையும் பூர்த்தி செய்த பகவத் ,ஆசார்ய பூர்ணத்வம் உள்ள
பெரியநம்பிகளை வணங்குகிறேன் —-என்கிறார் , ஸ்வாமி தேசிகன்

——————————

மேல் எம்பெருமானாரை ஸ்துதிக்க புகுகிறார் –

10-ப்ரணமாம் லஷ்மண முனி ப்ரதிருஹ்ணாது மாமகம்
பிரசாதயாதி யத் ஸூக்தி ஸ்வாதீந பதிகாம் ஸ்ருதிம் –

பரம புருஷனை தன்னுள் மறைத்து வைத்துக் கொண்டு இருந்துள்ள
வேத மாதாவுக்கு எந்த ஸ்ரீ பாஷ்யகாரரின் ஸ்ரீ பாஷ்யாதி ஸ்ரீ ஸூக்திகள் அணிகலன்கள் ஆகுமோ –
ஸ்ருதியின் பரமார்த்தம் பிரகாசம் ஆகுமோ -அந்த ஸ்ரீ லஷ்மண முனி
அடியேனுடைய பிராணாமத்தை அங்கீகரித்து அருள வேணும் என்று வேண்டுகிறார் –

இராமானுஜரின் உயர்ந்த கிரந்த நூல்கள் பெரிய பெருமாளையே தன் வசப்படுத்திக் கொண்டவை யாகும்
அவை உபநிஷத்துக்களுக்கு எழில் சேர்ப்பவை யாகும்
அப்படிப்பட்ட ஸ்ரீ ராமானுஜ முனி அடியேனுடைய நமஸ்காரங்களை ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டும்

ஸ்ருதிகளின் ( வேதங்களின் ) அர்த்தங்களை ஒன்றுக்கொன்று விரோதமின்றி அனைவரும் ஏற்றுப் பாராட்டும்படி
ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீஸுக்தி உள்ளது .
இந்த ஸ்ரீஸுக்தி “சைரந்த்ரீ ” மற்றும் “ஸ்வாதீனபதிகா” என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

ராஜாக்களுக்குப் பல மனைவிகள் இருப்பர்.அவர்களுள் “ஸ்வாதீன பதிகா “ என்பவள் ,தன்னுடைய மயக்குப் போகங்களால் ,
அரசனைத் தன் ஸ்வாதீனத்திலேயே வைத்திருப்பாள் .

இவளுக்கு ஒரு தாதி இருப்பாள். “சைரந்த்ரீ ” என்று பெயர்.
இவள் , அரசிக்குப் பலவகையிலும் பணிவிடை செய்து ,ஸ்நானம் செய்வித்து , கூந்தலில் நறுமணத் தைலத்தைத் தடவி
கூந்தலில் ஒரு சிக்கு இல்லாமல் லாகவமாக எடுத்து , வாரி , பின்னி , முடிந்து ,வாசனைப் பூக்களைச் சூட்டி ,
அணிகலன்களையும் சூடி அரசன் பார்த்து ஆனந்தம் அடையும்படி செய்வாள்.

அதைப்போல , ” ஸ்ருதி “—உபநிஷத் நாயகி .
இவளுடைய புருஷன் புருஷோத்தமன் –பகவான்.
வேத வாக்யங்களுக்கு , பிற மதவாதிகள் அர்த்தங்களை மாற்றிச் சொல்லி, பொய் என்றும் சொல்லி ,
அழுக்கை ஏற்றி விட்டார்கள் .
இந்த மாதிரியான அழுக்குகளை , ராமாநுஜரின் ஸ்ரீஸுக்திகள் என்கிற “சைரந்த்ரீ ”
மீமாம்சம் போன்ற வாசனைத் தைலங்களைத் தடவி,
சிக்கலை எடுத்து, அழுக்கைப் போக்கி ,
உண்மையான ரூப கல்யாண குணவிசேஷங்களை உடைய பகவானையும் வேதங்களையும் சேர்த்து
கைங்கர்யம் செய்யும் ஜீவாத்மாக்கள் அனுபவிக்கும்படி மஹோபகாரம் செய்த ராமாநுஜருக்கு
எந்தக் கைம்மாறும் இயலாத நிலையில் ,நமஸ்காரத்தைச் செய்கிறேன் ;
அதை ஏற்று ,ஸ்ரீ உடையவர் ,அடியேனை அனுக்ரஹிப்பாராக என்கிறார் ஸ்வாமி தேசிகன் .

———————————

11-உபவீதிநம் ஊர்த்வ புண்ட்ர வந்தம்
த்ரிஜகத் புண்ய பலம் த்ரிதண்ட ஹஸ்தம்
சரணா கத சார்த்த வாஹம் ஈடே
சிகாயா சேகரிணம் பதிம் யதீ நாம் –

திரு மார்பில் இலங்கிய முந்நூலினாலும் –
அணிந்த ஈராறு திரு நாமங்களினாலும் –
முக்கோல் ஏந்திய திருக் கையினாலும் —
மனசாலும், உடலாலும், வார்த்தைகளாலும் வணங்கும் பகவானை
ஆவாஹநம் செய்திருக்கும் அந்தத் த்ரிதண்ட ஹஸ்தம்–
திரு முடியில் திரு குழல் கற்றையினாலும் எழில் யுற்று விளங்குபவராய் –
எல்லா உலகங்களின் நல் தவப் பயனின் உருவோ என்று
அதிசயிக்கக் கூடியவராக யதி ஸார்வ பவ்மரை ஸ்துதிக்கப் புகுகிறேன் -என்கிறார்

யஜ்ஜோ பவீதம் தரித்தவர்
திரு நெற்றியில் அழகான ஊர்த்வ புண்ட்ரம் தரித்தவர்
இம் மூன்று லோக புண்ய பலன்களே ஹேதுவாக திரு அவதரித்தவர் என்று காட்டவே த்ரி தண்டம் தரித்தவர்
தன்னிடம் சரண் அடைந்தவர்களை சரியான வழியிலே நடத்தி அருள்பவர்
நேர்த்தியாக சிகை அழகு கொண்டவர்
சந்நியாசிகள் தலைவராக உள்ளவர்
இப்படிப்பட்ட ராமானுஜரை அடியேன் வணங்குகிறேன்

பகவத் அநுபவத்தைப்போல, பூர்வாசார்யர்களை அனுபவிப்பதும், சிஷ்யர்களுக்கு மிகவும் தேவையானது .
இதற்கு உதவுவது ஆசார்யனின் திருமேனி ஸ்வரூபத்தை மனத்தில் க்ரஹிப்பது;
பிறகு, அவர் ஆக்ஜாரூபமான கைங்கர்யங்களைச் செய்வது;ஆகமரீதிப்படி பகவானைத் த்யானித்து, ஆராதிப்பது.
ஸ்ரீ அப்புள்ளார் சொல்ல, ஸ்வாமி தேசிகன் ஸ்ரீ உடையவரின் திருமேனி சௌந்தர்யத்தை மனத்தில் தரித்தவர்.
அதனால், த்யாநித்ததை, அப்படியே வருணிக்கிறார்.

யதிராஜரின் சிவந்த திருமேனியில், திருமார்பில் பளிச்சென்று வெண்மையாக விளங்கும் யஜ்ஞோபவீதம்;
பிறகு, திருமுகமண்டலத்தில் பளிச்சிடும் ஊர்த்வபுண்டரம் ( திருமண்ணும் ஸ்ரீசூர்ணமும் );
மனசாலும், உடலாலும், வார்த்தைகளாலும் வணங்கும் பகவானைத் தன்னுடைய த்ரிதண்டத்தில் ஆவாஹநம் செய்திருப்பதால்,
அந்தத் த்ரிதண்ட ஹஸ்தம்; அரசர்களுக்கு,சிரஸ்ஸில் க்ரீடத்தைப் போல,
சிகையாலான க்ரீடத்தை அணிந்திருப்பதால், க்ரீடமான சிகை

ஸ்ரீ நம்மாழ்வாரைப் பின்பற்றி , பெரியபெருமாள் -பிராட்டி–-திவ்யதம்பதியரிடம் ,
பங்குனி உத்ர நந்நாளில் ,சரணாகதியை அனுஷ்டித்தவர்;
இவ்வளவு பெருமைபெற்ற ,எதிராஜரைத் துதிப்போம்.

———————————–

12-பிரதயன் விமதேஷூ தீஷ்ண பாவம்
பிரபு அசமத் பரி ரஷணே யதீந்திர
அப்ருதக் பிரதி பன்ன யன்மயதவை
வவ்ருதே பஞ்சபி ஆயுதை முராரே

பகவானுடைய சங்கு,சக்ரம், கதை,வாள் ,வில் —என்கிற பஞ்சாயுதங்களும்
யதிராஜன் திருவுருவத்தில் அவதரித்துள்ளன.
வேத விருத்தமாகப் பிரசாரம் செய்யும் பாஷாண்டிகளை அழிக்க, பஞ்சாயுதங்களும் இப்படி, யதிராஜராக
அவதரித்துள்ளன .இப்படிப்பட்ட யதிராஜர், நம்மை,முழுவதுமாகக் காப்பாற்ற வல்லவர்.

ஆஸ்ரிதர்கள் ரக்ஷணத்திலும் –ஆஸ்ரித விரோதி நிரசனத்திலும் தீஷித்து இருப்பதில்
பிரகாசமுள்ள எம்பெருமானின் பஞ்ச திவ்ய ஆயுதங்களின்
ஸ்வபாவத்தையே மாறுபடாமல் கொண்ட ஸ்ரீ யதிராஜரானவர்
தம்மைச் சார்ந்த ஜனங்களின் உஜ்ஜீவனத்திலும் –
பாஹ்ய குத்ருஷ்டிகளின் நிரசனத்திலும் சமர்த்தராக விளங்கினார் –

ஸ்ரீ பஞ்சாயுதங்களான சங்கு சக்கரம் கதை வாள் வில் அனைத்துமே ஸ்ரீ ராமானுஜராக உருவம் கொண்டு இங்கே வந்தன
வேத பாஹ்ய குத்ருஷ்டிகளை தனது கொடிய தன்மையைக் காண்பித்து வாதம் செய்து வெற்றி கொள்ளும்
ஸ்ரீ ராமானுஜர் நம்மைக் காத்து அருளுவதில் வல்லவர் ஆவார் –

அடையார் கமலத்து அலர்மகள் கேள்வன்* கையாழியென்னும்-
படையோடு நாந்தகமும் படர் தண்டும்,* ஒண் சார்ங்கவில்லும்-
புடையார் புரிசங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு* என்று-
இடையே* இராமானுச முனியாயின இந்நிலத்தே -33-பாசுரம் அடி ஒற்றி அருளிச் செய்த ஸ்லோகம் –

—————-

ஸ்ரீ கண்ணனே ஸ்ரீ எம்பெருமானார் -சிலேடையில் அமைந்த ஸ்லோகம் –

13-சமித உதய சங்கராதி கர்வ
ஸ்வ பலாத் உத்த்ருத யாதவ பிரகாச
அவரோபி தவான் ஸ்ருதே அபார்த்தான்
நநு ராம அவரஜ ச ஏஷ பூய -13

பாணாசூர யுத்தத்தில் சிவபெருமானைக் கண்ணன் வென்றான்
இதே போல் அத்வைதிகள் வான்தங்களை ராமானுஜர் வென்றார்
யாதவர்களின் பெருமையை கண்ணஅவருக்குப் பெருமை அளித்தார் நம் ஸ்வாமி
அர்ஜுனன் தேர் முன் நின்று அவனது எதிரிகளை கிருஷ்ணன் வென்றான்
வேதத்தின் முன்பாக நின்று வேத பாஹ்ய குத்ருஷ்டிகளை நம் ஸ்வாமி வென்றார்
நம்பி மூத்த பிரானின் தம்பியான கிருஷ்ணனே -பார்த்த சாரத்தியே நம் ஸ்வாமியாக திரு அவதரித்து அருளினார்

தனது சொந்த படைப்புகளால்  -கீதை மற்றும் ப்ரஹ்ம ஸூத்ரங்களுக்கக் கூறப்பட்ட- தவறான அர்த்தங்களை நீக்கினார்.

கார்த்திகையானும் கரி முகத்தானும் -22-படியே முக்கண்ணனான சங்கரன் செருக்கை அடக்கிய கண்ணன் –
யது குலத்தில் உதித்து தன் வல்லமையால் யாதவர்களை பிரகாசப் படுத்தியவன் –
பார்த்தனின் விரோதிகளை பெருமை யுறாமல் அழித்தவன்-

பலராமனின் தம்பியான அந்த ஸ்ரீ ராமானுஜன்-ஸ்ரீ பார்த்த சாரதியே தானே
இந்த நம் ஸ்ரீ ராமானுஜன் என்று அதிசயிக்கும் படி அன்றோ

சங்கராதி வேத குத்ருஷ்டிகளின் செறுக்கை தம் ஸ்ரீ ஸூக்திகளாலும் தர்க்க வாதங்களாலும் அடக்கி –
தம் புத்தி சாமர்த்யத்தாலும் கிருபா அதிசயத்தாலும் யாதவ பிரகாசரை வாழ்வித்து –
பிறர் -கல்பித்து -கூறும் ஸ்ருதிகளும் அபார்த்தங்களை களைந்து ஒழித்தவர்-

நாம்-நான் என்கிற அஹங்காரத்தை ஏற்படுத்துகிற அத்வைதக் கருத்துக்களைப் போக்கியவர்
யாதவப்ரகாசரை , அத்வைதத்திலிருந்து, ஸ்ரீவைஷ்ணவராக்கி,ஆட்கொண்டவர்.
ஸ்ரீபாஷ்யாதிகள் மூலமாக, கீதையின் பொருளை உணர்த்தியவர்.
யாதவர்களின் கீர்த்தியை ஓங்கச் செய்து, த்ரௌபதியின் மாங்கல்யத்துக்குக் கேடு வரா வண்ணம்
காத்த, கண்ணனே ஸ்ரீபாஷ்யகாரராக அவதரித்தார்.

————————–

14- அபஹூஸ்ருத சம்பவம் ஸ்ருதீ நாம்
ஜரதீ நாம் அயதாயத பிரசாரம்
வி நிவர்த்தயிதம் யதி ஈஸ்வர உக்தி
விததே தா ஸ்த்திர நீதி பஞ்ஜர ஸத்தா-14

அநாதியான உபநிஷத் கருத்துக்களுக்கு ஆழ்ந்த அறிவு இல்லாமல் நேர்மையற்ற முறையில் உரை செய்தார்கள்
இப்படிப்பட்ட புற வாதங்களை ஒழித்து வலிமையான எதிர்வாதம் என்னும் கூண்டில் உபநிஷத் என்னும்
கிளியானது ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ பாஷ்யங்களால் பாதுகாக்கப் பட்டது

ராமானுஜர், வேதங்கள் போன்ற பழைய வேதங்களின் பறவைகளுக்கு நிரந்தர சரணாலயமாக
தனது படைப்புகளுக்கு ஒரு கூடு கொடுத்தார், ஏனெனில்
பறவைகள் வேதப் படைப்புகளைத் தவறாகப் புரிந்துகொள்ளும் பாஹ்ய வாதிகளால் சித்திரவதைக்கு ஆளாகின்றன.

ஸ்ரீ எம்பெருமானாருடைய திவ்ய ஸ்ரீ ஸூக்திகள் –
அல்ப ஞானம் படைத்த குத்ருஷ்டிகளால் உண்மைக்கு புறம்பான
அர்த்தங்களை பிரசாரம் பண்ணுவதால்
வேதங்களுக்கு ஏற்பட்ட இளைப்பைப் போக்கி –
அவைகளை மறுக்க ஒண்ணாத நியாயங்களால்
நன்றாக ரக்ஷிக்கப் பட்டவைகளாய் ஆக்கி யுள்ளன
உபநிஷத் ஆகிற கிளியை மீண்டும் ரஷித்து அருளினார் —
வேதாந்த விழுப் பொருளை சித்தாந்தப் படுத்தி அருளினார் என்றபடி –

கிளிகள் —பக்ஷிகள்—இவற்றுக்கு சிறகு முளைத்து தத்தித் தத்திப் பறப்பதைப் பார்க்கும் சிறுவர்கள்,
அவற்றைப் பிடித்து, சிறகுகளை இழுத்தும் துன்புறுத்தியும் மகிழ்வர்.
பெரியவர்கள், அவை துன்புறுவதைப் பார்க்கச் சகிக்காமல் , இரும்புக்கூடு அமைத்து, கிளிகளை உள்ளே
வைத்துப் பழம் முதலியவை கொடுத்துப் பாதுகாத்து, அவற்றின் பேச்சை ரசிப்பர் .
அறிவாளிகள் அவை துன்புறுவதைச் சகிக்காமல், அவற்றின் விருப்பப்படிப் பறக்க விடுவர்.
சிற்றறிவுள்ள மதவாதிகள் , வேதங்களாகிற புராதன காலப் பக்ஷிகளை அலைக்கழித்து,
தவறான அர்த்தங்களைச் சொல்லி, துன்புறுத்துவர்.
ஆனால்,நமது ராமாநுஜரோ இவற்றைக் கண்டித்து, வேத வாக்யங்களுக்கு
உண்மையான அர்த்த விசேஷங்களைச் சொல்லி, வேதங்களைக் காத்தார்.

——————————-

15-அமுநா தபந அதிசாயி பூம் நா
யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ
மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி
விபுதா நாம் ஹ்ருதயங்கமா விபாதி

ஸ்வாமியின் தேஜஸ்ஸு ஸூர்யனை விட ஒளி மிக்கதாகும்
நன்கு கற்று அறிந்த ஞானிகள் தங்கள் மார்பில் எப்போதும் ஆச்சார்ய பரம்பரை என்னும்
இரத்தின மாலையை மானசீகமாக அணிந்து இருப்பார்கள்
அந்த குருபரம்பரை மாலையின் நடுநாயகமாக நம் ஸ்வாமி உள்ளார்

(ராமானுஜம்) மையமானது மற்றும் அணிபவரின் இதயத்திற்கு மிகவும் பிரியமானது மற்றும் அருகில் உள்ளது.

தேஜோவானான ஸூரியனிலும்-விஞ்சிய தேஜஸை யுடைய நம் ஸ்வாமி
நாயக ரத்னமாக அமைந்துள்ளதால்
மிகவும் பெருமை யுற்ற குரு பரம்பரையான ரத்ன ஹாரமானது மிகவும் பெருமை யுடையதாய்
தத்வ வித்துக்களான வித்வான்களுக்கு சிந்தனைக்கு இனியதாக விளங்குகிறது –

பூர்வாசார்ய பரம்பரையில், யதிராஜர் ஸுர்யனை விடப் ப்ரகாசத்துடன் நடுநாயக ரத்னமாக விளங்குகிறார் .
இதனால், குருபரம்பரைக்கே ஏற்றம் .குருபரம்பரை என்கிற மணிகளால் ஆன ஹாரத்தில் ,
பண்டிதர்களுக்கு , ஹ்ருதய அங்கமாக (மனத்துக்கு உகந்ததாக —மார்பில் பொருந்தியதாக)
இந்த நாயகக் கல்லாக, ஸ்ரீ ராமானுஜர் விளங்குகிறார்

———————————

16-அலூந பஷச்ய யதி ஷமாப்ருத
விபாதி வம்சே ஹரி தத்த்வம் அஷதம்
யத் உத்பாவ ஸூ த்த ஸூ வ்ருத்த
சீ தளா பவந்தி முத்தாவளி பூஷணம் புவ

யதிராஜர் என்று போற்றப்படும் இராமானுஜ சித்தாந்தங்கள் அனைத்தும் அவற்றை எதிர்த்து வீண் வாதம் செய்ய இயலாதபடி உள்ளன
அவர் ஏற்படுத்திய பரம்பரையில் ஸ்ரீ ஹரியின் உண்மையான தன்மை சிறிதும் குறைவின்றி உள்ளது
இந்தப் பரம்பரையில் உள்ளவர்கள் தூய்மையானவர்களாக -சிறந்த ஒழுக்கம் உள்ளவர்களாக
தூய எண்ணம் கொண்டவர்களாக -பரமபதம் சென்றாலும் அங்கு உள்ளவர்கள் வரிசையில் முத்துபோன்று ஒளி மிக்கு ஆபரணம் போல் இருப்பார்கள்

ராமானுஜரின் சிறகுகள் இன்னும் வெட்டப்படாத மைனாக மலை!
அவரது குழுவிலும், சீடர்களின் வரிசையில் (மூங்கில் போல) பசுமையான தன்மை நீடிக்கிறது
மற்றும் ஹரியின் கொள்கை உயர்வாக ஆட்சி செய்கிறது!
வரிசையில் உள்ள அனைத்தும் மிக உயர்ந்த தன்மையுடன் தூய்மையாக பிரகாசிக்கின்றன;
குளிர்ந்த மற்றும் இரக்கமுள்ள; பெரிய ஒளிவட்டத்துடன் உலகை முத்து மாலையாக அலங்கரிப்பார்கள்.
(வம்சம் என்றால் பரம்பரை மற்றும் மூங்கில்;
ஹரி என்றால் இறைவன் மற்றும் பச்சை நிறமும் கூட)

புறச் சமயிகளால் கண்டிக்க இயலாத எம்பெருமானார் தர்சனம் -ஆகிய பரதத்வம் —
ஸமஸ்த கல்யாண குணங்களோடும் -திவ்ய மங்கள விக்ரகத்துடன்
வெட்டிக் களையப் படாத இறகுகளை யுடைய பர்வதம் போலே-
(மைனாக பர்வதம் விருத்தாந்தம் -சிறகுகள் உண்டே பர்வதங்களுக்கு )
ஸூ ரஷிதமாக விளங்குகிறது
இந்த சம்பிரதாயஸ் தர்களான மஹான்கள் சத்துக்களையும்
குளிர்ந்த இதயம் படைத்தவர்களாயும்
பூமிக்கே அணிகலன்களாகயும் யுள்ளனர் –

ஸ்ரீ உடையவர், மைநாக மலையை ஒத்தவர்
மைநாக மலையின் சிறகுகள் துண்டிக்கப்படவில்லை.
அதைப் போல, இவருடைய மதமும் ,ஒருவராலும் துண்டிக்கப்படாதது.
இவருடைய சிஷ்ய பரம்பரையில் ( அதாவது ,பச்சை மூங்கிலாக உருவகப்படுத்துகிறார் )
ஹரிதத்வம் —பகவத் தத்வம் –பச்சையாக இருக்கிறது ( செழிப்பாக இருக்கிறது).
இந்த சிஷ்ய பரம்பரையான பச்சை மூங்கிலில் ( கணுக்கள் –மூங்கிலில் இருப்பதைப்போல, சிஷ்ய பரம்பரை ) ,
சிஷ்யர்கள் சுத்தர்கள், நல்ல ஒழுக்க சீலர்கள், ( குளிர்ச்சி–சீதளம் ), கருணை உள்ளவர்கள்–
இப்படி, முத்துவடம்போல, பூமாதேவிக்கு ஆபரணமாக ஆகிறார்கள்

————————

சந்திரன் உடன் ஒப்புமை —

17-அநபாய விஷ்ணு பத சம்ஸ்ரயம் பஜே
கலயா கயா அபி கலயா அபி அனுஜ்ஜிதம்
அகளங்க யோகம் அஜடாசய உதிதம்
யதிராஜ சந்த்ரம் உபராக தூரகம் –

பகவானின் திருவடிகளை எப்போதும் பற்றி உள்ளவர்
அனைத்து ப்ரஹ்ம வித்யைகளின் மூலமும் சிறிதும் கைவிடாதபடி உள்ளவர்
எந்தவித தோஷத்தாலும் தீண்டப்படாதபடி உள்ளவர்
மூடர்கள் மனதில் நிலை பெறாமல் உள்ளவர்
உலக விஷய ஆசைகளுக்கு அப்பால் உள்ளவர்
தன்னை அடியவர்களுக்கு சந்திரன் போல் ஆஹ்லாதகரமாக குளிர்ந்து உள்ளவர்
இப்படிப்பட்ட ஸ்வாமியை அடியேன் சரணமாகப் பற்றுகிறேன் –

ராமானுஜர் ஒரு உண்மையான சந்திரன்.
பௌர்ணமி நிலவு இறைவனின் பாதமாகிய பாதுகாப்பான வானத்தில் நிலை பெற்றுள்ளதால்.
சந்திரன், இலக்கங்கள் நிறைந்தது (அதாவது 16 கலைகள்), பரிபூரணமாக இருப்பது, குறைபாடுகள் இல்லாதது,
இப்போது நீர் ஆதாரங்கள் காரணமாக, கிரகணத்திற்கு உட்பட்டது அல்ல;
எனவே ராமானுஜரும் பாதுகாப்பான விஷ்ணு வாசஸ்தலத்தை நாடியுள்ளார்,
அனைத்து வித்யாக்களிலும் முழு தேர்ச்சி பெற்றவர்,
புலன் இன்பங்களை அனுபவிக்கும் மக்களிடமிருந்து வெகு தொலைவில் உள்ளார். அந்த ராமானுஜரை வணங்குகிறேன்

சந்திரன் களங்கம் உள்ளவன்
உபராகத்துக்கு க்ரஹணத்துக்கு உட் பட்டவன் –
ஸ்வாமி இடத்திலோ தோஷத்துக்கு பிரசக்தியே இல்லையே
சகல வித்யைகளையும் பூர்ணமாக அதிகரித்து –
தோஷம் அற்று –
மகான்கள் மனசில் சதா பிரகாசித்து –
ராக துவேஷாதிகளுக்கு புறம்பாயும்
உபராகத்துக்கு உட் படாத யதிராஜ சந்திரனை உபாசிக்கிறேன் –

யதிராஜர் சந்த்ரனுக்கும் மேம்பட்டவர் .
சந்த்ரன் ,நிலவினால் குளிர்ச்சியைக் கொடுத்து, மகிழ்விப்பதைப்போல,
யதிராஜரும் தன் அடியார்களுக்கு, பகவானிடத்தில் ப்ரபத்தியை அநுஷ்டிக்கச்செய்து,
பாபங்களைப்போக்கி மகிழ்விக்கிறார்.
சந்த்ரனைவிட கம்பீரமான தோற்றம் உடையவர்.
பகவானின் திருவடிகளையே எப்போதும் த்யானிப்பவர்.
எவ்விதக் களங்கமும் இல்லாதவர்.
ராகு, கேதுவால் சந்த்ரன் பீடிக்கப்படுகிறான்;
ஆனால், எம்பெருமானாரோ ,காம புருஷார்த்தங்களை விரும்புவாரோடு ஒருபோதும் சேராதவர்.
எம்பெருமானாரின் திவ்ய குணநலன்களில் ஈடுபட்டு அவருக்கு அடிமை செய்ய விரும்பி , பூஜிக்கிறேன்

————————————

அவதார பிரயோஜனத்தை அருளிச் செய்கிறார் –

18-அபிகம்ய சம்யகநகா ஸூ மேத்ஸ
யதி சக்ரவர்த்தி பத பத்ம பத்த நம்
ஹரி பக்த தாஸ்ய ரசிகா பரஸ்பரம்
க்ரய விக்ரயார்ஹ தசயா சமிந்ததே

ஸ்வாமியின் திருவடிகள் ஒப்பில்லாத நகரம் போன்று உள்ளன
அந்த நகரத்தை அண்டுபவர்கள் சிறந்த ஞானம் கிட்டப் பெறுகின்றனர்
தங்கள் பாபங்கள் அனைத்தும் நீங்கப் பெறுகின்றனர்
அடியார்களுக்குத் தொண்டு செய்வதில் இன்பம் பெரும் நிலை அடைகின்றனர்
உயர்ந்தவற்றை வாங்குவதிலும் விற்பதிலும் –உயர்ந்த கல்வி பெறுவதிலும் அளிப்பதிலும் -தேர்ச்சி பெற்று மேன்மை அடைகின்றனர்

பெரிய மனிதர்களும், களங்கமற்றவர்களும், கற்றறிந்தவர்களும், உண்மையான பெருநகரத்தை நாடுவதன் தகுதியை சரியாகப் பகுத்தறிவார்கள்,
யதி-சக்கரவர்த்தியின் பாதங்கள். அவ்வாறு குடியேறினாலும், அவர்கள் களத்தில் அறிவாளிகள், பக்தர்களுக்கு அடி பணிந்தவர்கள்;
பாகவதங்களால் பொருட்களைப் பண்டம் போல வாங்கவோ அல்லது விற்கவோ,
சரியான மனப்பான்மையுடன், மனதளவில் தயாராக இருக்கிறார்கள்.

முன்பு மந்த மதிகளாயும் நல் நடத்தை இல்லாதவர்களாயும் இருந்தவர்கள்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரும் ஞானம் தலைக் கொண்டு
நாரணற்கு ஆளாயினரே-என்கிறபடியே
நல்ல புத்தி யுடையவர்களாய் குற்றம் அற்றவர்களாய்
எம்பெருமானார் திருவடிகள் ஆகிற திவ்ய நகரத்தை அடைந்து
பாகவத பண்புகளில் நிலை பெற்று
ஒருவருக்கு ஒருவர் விற்கவும் வாங்கவுமாம் படி விளங்குகின்றனர்

குற்றமில்லாத, வித்வான்களான பாகவத கைங்கர்ய அநுபவம் மிகுந்தவர்கள்
யதிராஜரின் திருவடித் தாமரை என்கிற நகரை அடைந்து, ஒருவரை ஒருவர்
விற்கவும் வாங்கவும் இருக்கும் நிலையிலே தங்களைப் பரிமாறிக் கொள்கின்றனர்.
( ஒரு பாகவதருக்கு பகவத் ஆராதனத்துக்குச் சில பொருட்கள் வேண்டியிருக்க பணம் போதாதபோது,
அப்போது அங்கு வந்த பாகவதர், என்னை விற்றுக் கிடைக்கும் பணத்தை, பகவத் ஆராதனத்து செலவுக்கு ,
உபயோகப்படுத்துங்கள் என்றாராம் இப்படி, ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமை
இல்லாமல் , ஒருவருக்கொருவர் உதவுவது )

——————————————–

அப்படி உலகோர் திருந்தியமைக்கு தாமே த்ருவ்ஷ்டாந்தம் –

19-புருஷ அதிவாத பரிவாத பைசு ந
ப்ரப்ருதி ப்ரபூத பத நீய பங்கி லா
ஸ்வ ததே மமாத்ய ஸூ பகா சரஸ்வதீ
யதிராஜ கீர்த்தி கதைக விசோதிதா

என்னுடைய வாக்கு என்னும் நீரானது இதுவரை எப்படி இருந்ததது என்னில்
கடுமையான சொற்கள் நிறைந்ததாகவும்
எதனையும் மிகைப்படுத்திக் கூறுவதாகவும் மற்றவர்கள் குற்றங்களைப் பழிப்பதாகவும்
அவர்களை பற்றித் தகாதது கூறுவதாகவும் இருந்தது
இது போன்று பலவிதமான தோஷங்கள் கூடியதாகக் கலங்கிக் காணப்பட்டது
ஆனால் அதில் இடைப்பட்ட ராமானுஜர் சம்பந்தம் என்னும் தேத்தாங்கொட்டை மூலம்
எனது வாக்கு என்னும் நீர் தூய்மை பெற்று இப்போது பரி சுத்தமாகவும் இனிப்பாகவும் உள்ளது

இதன் விளைவாக, சாதுக்களுக்குப் பிரியமாக இருக்க வேண்டிய சரியான உச்சரிப்பு இப்போது என்னிடம் உள்ளது.

முன்பு அடியேனுடைய வாக்கு கொடுமை நிறைந்து –
பிறரை பழித்தும் கோள் சொல்லியும்
அதிவாதம் பண்ணியும் –
இதனால் தூய்மை அற்றதாய் சேறு போலே கலக்கம் உற்று இருந்தது –
ஸ்வாமியைப் பற்றியபின் -ஸ்வாமியுடைய பிரபாவம்
ஆகிற தேத்தாம் கொட்டை யால் தெரிவிக்கப்பட்டு
அனைவராலும் ருசிக்கும் படி அழகாய் அமைந்ததே –

குளத்தில் அழுக்காக இருக்கும் நீர் , தேத்தாங்கொட்டையினால் தெளிவைப் பெறுவதைப் போல,
அடியேன் பேச்சுக்கள், குத்தல்,மிகைப்படுத்துதல், வம்பு, கோள் சொல்லல், இதுபோன்ற குற்றங்களால்
குழம்பி இருந்தபோது, எம்பெருமானாரின் புகழ் பரவிய அடியேனின் சொற்களால் தெளிவடைந்து
பெரியோர்கள் கொண்டாடும் நிலையில் உள்ளது.

———————————

இப்படி தமக்கு வாழ்ச்சி அளித்த எம்பெருமானார் திருவடிகளில் –
அத்திருவடிகளின் பிரபாவத்தை வாயாறப் பேசி சரணம் புகுகிறார் –

20-அனுகல்ப பூத முரபித் பதம் சதாம்
அஜஹத் த்ரிவர்க்கம் அபவர்க்க வைபவம்
சல சித்த வ்ருத்தி விநிவர்த்தந ஔ ஷதம்
சரணம் யதீந்திர சரணம் வ்ருணீ மஹே –

ஸ்வாமியின் திருவடிகள் எப்படிப்பட்டவை என்னில்
ஞானவான்களுக்கு இவை முன்னாக எம்பெருமானின் திருவடிகளும் முக்யம் அற்றவையாகவே தோன்றும்
ஆறாம் பொருள் இன்பம் இவற்றை எதையும் துறக்காமலேயே மோக்ஷ இன்பத்தை அளிக்க வல்லவை
கலக்கம் நிறைந்த மனநிலையைப் போக்கும் மருந்தாகவே உள்ளன
இப்படிப்பட்ட திருவடிகளை அடியோங்களான நாம் சரணம் என்று நாடுவோம்

இந்த பாதங்கள் சரணடைந்தவர்களுக்கு, (தர்மம், அர்த்தம், காமம்,) மற்றும் மோக்ஷம்
ஆகிய இலக்குகளையும் பாதுகாக்கும்.
அவர்கள் பலவீனமானவர்களின் போக்குகளை சரி செய்வதில் வல்லவர்கள்

சத்துக்களுக்கு இத்திருவடிகள் பகவத் சரணாரவிந்தமும்
இதற்கு அடுத்த படியே என்னும்படி பரம ப்ராப்யமாய் இருக்கும் —
பெரு நிலம் அளிக்கும் –
எல்லாம் தந்திடும் –
நிலையில்லா என் பாவி நெஞ்சத்தை தன்னிடத்தில் நிலை நிறுத்த மருந்தாயும் இருக்கும் –

இப்படிப் பட்ட திவ்ய சரணாரவிந்தங்களை புகலாகப் பெற்றேன் என்று ப்ரீதர் ஆகிறார் –

எம்பெருமானாரின் திருவடிகள் ,பகவானின் திருவடிகளையும்விட மேன்மையானவை.
( பகவானின் திருவடி இரண்டாம் பக்ஷம்)
இம்மை, மறுமை பலனை அளிக்கவல்லவை.
சஞ்சல புத்தியைத் தெளிவித்து, தத்வ அர்த்தங்களை உணர்த்தும் .
இப்படிப்பட்ட ,யதிராஜரின் திருவடிகளில் சரணம் அடைகிறேன்.

சோமாசி ஆண்டான் திருநாராயண பெருமாள் செல்லப் பிள்ளைக்கு பாட –
எம்பெருமான் ஆட –
உடையவர் சேவித்து களிப்பார்-
மோக்ஷ சாம்ராஜ்யம் நம் இராமானுசன் இட்ட வழக்காய் இருக்கும் –
உமது ஸூக்ருத பலம் நீர் பாட நீர் களிப்புறம் படி நான் ஆடிக் காட்டுகிறேன் –
உடையவர் தந்தால் உமக்கு பேறு உண்டு -என்றதும்
அன்று முதல் தேவு மற்று அறியேன் என்று அதி ப்ரவணராய்
கைங்கர்யத்தில் ஈடுபட்டு பாவ பந்தத்துடன் -எம்பெருமானார் -என்பர் –
பட்டர் நம்பெருமாள் என்று சொல்வது போலே –

———————————————

இப்படி பெருமை வாய்ந்த யதிராஜ சரணாரவிந்தத்தை ஆஸ்ரயித்தவர்களுடைய
பெருமையை அருளிச் செய்கிறார் –

21-ஸ்வ சித அவதூத பரவாதி வைபவா
நிகமாந்த நீதி ஜலதே தல ஸ்ப்ருச
பிரதிபாதயந்தி கதிம் ஆபவர்க்கிகீம்
யதி சார்வ பௌம பதசாத் க்ருதாசயா –

ஸ்வாமியின் திருவடிகளை தங்கள் மனத்தில் பதித்தவர்களும்
அவரது திருவடிகளில் தங்கள் மனத்தை வைத்தவர்களும் ஆகிய சான்றோர்களின் வலிமை என்ன
தங்கள் மூச்சுக் காற்று மூலமே தங்கள் வாதங்களை எதிர்ப்பவர்களை வீழ்த்தி விடுவர் .
வேதாந்த நீதி என்னும் ஆழ் கடலின் தரையை அடைபவர்
மோக்ஷத்தைப் பற்றிய உபாயத்தைப் போதிப்பதில் வல்லவர் ஆவார்

ராமானுஜரின் பாதங்களில் அசைக்க முடியாத பக்தியைப் பற்றுபவர்கள், வேதாந்த சாஸ்திரப் பெருங்கடலில் ஆழமாக ஆழ்ந்து
(தேர்ந்த கருத்துகளின் முத்துக்களை எடுக்க), அவர்கள் மற்ற அமைப்புகளிலிருந்து போட்டியாளர்களை
மிகவும் சிரமமின்றி தோற்கடித்து, முக்தியின் பாதையில் நம்மை வழி நடத்துகிறார்கள்.

அன்று ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப-என்றபடி
ஸூஷ்ம அர்த்தங்களை தெரிந்து தெளிவாக உபதேசிப்பார்கள் அன்றோ –
இவர்களுடைய ஹூம் என்ற மூச்சுக் காற்றாலே பிரதிவாதிகள் அனைவரையும் அழிக்கக் கூடியவர்கள் –
எம்பெருமானார் திருவடிகளில் நிலை பெற்ற மனசை உடையவர்களாய்
தாங்களே மோக்ஷ சாம்ராஜ்யம் அளிக்க வல்லவர்கள் –

யதிஸார்வ பௌம —யதீச் சக்ரவர்த்தி ,ஸ்ரீ உடையவர்.
இவருடைய திருவடிகளில் மனத்தையே சமர்ப்பித்தவர்கள் பாகவதோத்தமர்கள்;
வேதாந்த ஞானம் மிக்கவர்கள்; பிறமதப் பிரசாரகர்களை நிரஸிப்பவர்கள்

——————————————-

மீண்டும் உடையவர் சரணம் பற்றுகிறார் —

22-மூலே நிவஸ்ய மஹதாம் நிகம த்ருமாணாம்
முஷ்ணன் பிரதாரக பயம் த்ருத நைக தண்ட
ரங்கேச பக்த ஜன மானஸ ராஜ ஹம்ச
ராமானுஜ சரணமஸ்து முனி ஸ்வயம் ந

ஆழ்ந்த வேர்கள் கொண்ட பரந்த வேதம் என்னும் மரத்தின் கீழ் எப்போதும் அமர்ந்துள்ளவர்
வேதங்களை வஞ்சகம் மூலம் வீழ்த்த வல்லவர்கள் இடம் இருந்து அதனைக் காத்து அதன் அச்சம் போக்குபவர்
திருக்கையில் த்ரிதண்டம் ஏந்தியவர்
ஸ்ரீ அரங்கன் திரு முற்றத்து அடியார்களின் மனம் என்னும் தடாகத்தில் வாழும் பரம ஹம்ஸர்
இப்படிப்பட்ட ஸ்வாமி தாமாகவே வந்து தனது பேறாகவே அடியோங்களை ரக்ஷித்து அருளட்டும்

வேத முறைக்கு எதிராகக் கலகம் செய்யும் மதவெறியர்களை விரட்டியடிப்பவர்;
மற்றும் பக்தர்களின் (ராமானுஜரின்) இதயத்தின்  ” மானசரோவரில் ” அரச அன்னம் போல் நிற்பவர்

பரந்து கிடைக்கும் வேதமாகிய பெரிய மரத்தின் நிழலில்
கையில் முக்கோல் ஏந்தி அமர்ந்து வஞ்சனையுள்ள
குத்ருஷ்டிகளால் உண்டாகும் பயத்தை போக்கி அருளி –
ஸ்ரீ ரெங்கநாதன் அடியார்கள் மணம் ஆகிற தடாகத்தில்
ராஜ ஹம்சம் போலே சஞ்சரிக்கும் எம்பெருமானார் அடியேனுக்கு புகலாக வேண்டும் -என்கிறார் –

ராமாநுஜர் பரமஹம்ஸர். இந்தப் பரமஹம்ஸர்,
ஹம்ஸம் மாநஸரஸ்ஸில், பெரும் பெரும் மரங்களின் அடியே கூடு கட்டி வாழ்வதைப்போல,
திருவரங்கச் செல்வனுக்குத் த்ரிகரண சுத்தியாகத் தொண்டு செய்யும் பக்தர்களின்
மனம் என்கிற மாநஸரஸ்ஸில் சுகமாக வாழ்கிறார்.
அதாவது,
உடையவரை, ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆஸ்ரயித்து, அவரைப் பூஜித்து, இதயத்தில் இருத்தி , த்யாநம் செய்கிறார்கள் .
இந்த ஸ்லோகத்தில், ஸ்வாமி தேசிகன் ,உடையவரை ராஜ ஹம்ஸமாகவும், பரமஹம்ஸராகவும்
நினைத்துச் சரணம் அடைகிறார்.

———————————————–

எம்பெருமானாரைப் புகலாக பற்றி அவர் அனுக்ரஹத்தால் விஷய ப்ராவண்யன் அற்றவன் ஆனேன் –

23-சத் மந்திர வித் ஷிபதி சம்யமி நாம் நரேந்திர –
சம்சார ஜிஹ்மக முகை சமுபஸ்த்திதம் ந
விஷ்வக் ததம் விஷய லோப விஷம்
நிஜாபி காட அநுபாவ கருடத்வஜ பாவ நாபி –

ஸம்ஸாரம் என்ற பெரிய நாகத்தின் வாய் மூலம் வெளிவந்த உலக விஷயங்களில் பற்று என்னும் கொடிய விஷமானது நான்கு திசைகளிலும் பரவி உள்ளது
அந்த விஷத்தைத் தனது மந்த்ரங்கள் மூலம் போக்க வல்ல பாம்பாட்டி போன்று யதிராஜர் உள்ளார்
எப்படி என்றால் -மிகவும் பெருமை யுடையவனும் கருடனைக் கொடியாக உள்ளவனும் ஆகிய பகவானைத் த்யானிப்பதன் மூலமே ஆகும்

ராமானுஜர், ஆற்றல் மிக்க மந்திரங்களில் வல்லவர், மற்றும் உண்மையான பாம்பைக் கவர்ந்திழுப்பவர் –

விசுவாசிகள் அல்லாத விஷ பாம்புகளால் தனது பக்தர்கள் தாக்கப்படாமல் பார்த்துக் கொள்கிறார்.

உடல் முழுவதும் பரவியிருக்கும் (கருடனைப் பற்றித் தியானிப்பதன் மூலம்) உணர்வுப் பூர்வமான மோகம் என்ற விஷத்தையும் நமக்குக் குணப்படுத்துபவர்.

சதாச்சார்ய உபதேச முகமாய் நலம் தரும் சொல்லான திரு மந்த்ரார்த்தங்களை அளித்தும்
யதிகளுக்கு ராஜாவாகவும்-
நிரதிசய ப்ரபாவமும் யுடைய எம்பெருமானார் –
சம்சாரம் ஆகிய விஷ பாம்பு மூலம்
நம்முள் பரவி சூழ்ந்து இருக்கும் விஷய ப்ராவண்யம் என்கிற விஷத்தை
புட் கொடியனான எம்பெருமான் அனுக்ரஹம் கொண்டு போக்கடிக்கிறார் –

மால் பால் மனம் வைக்க மங்கையர் தோள் பற்று விட்டறும் என்றபடி –

நரேந்த்ரன் என்பவன் விஷவைத்யன் (பாம்பாட்டி )
இவன் ,மந்த்ர ஸித்தி உள்ளவர்களிடம் கருடமந்த்ரத்தை உபதேசமாகப் பெற்று,லக்ஷக்கணக்கான தடவை ஜபித்து,
ஸித்தி அடைந்து, எந்த ஸர்ப்பம் கடித்து இருந்தாலும் பல இடங்களில் பலமுறை கடித்து இருந்தாலும்,
கருட மந்த்ரத்தால் , பாம்பின் விஷம் முழுவதையும் இறக்கி, கடிபட்டவனைப் பிழைக்க வைக்கிறார்.

அதைப்போல, ராமானுஜரும், அஷ்டாக்ஷரம், த்வயம் போன்ற மந்த்ரங்களை பெரியநம்பிகளிடம் உபதேசமாகப்
பெற்று, தத்வ,ஹித, புருஷார்த்தங்களை நன்கு அறிந்து, தன் அடியார்கள் ப்ரபத்தியை அனுஷ்டிக்கச் செய்து,
அடியார்களின் ஸம்ஸார வ்ருக்ஷ விஷங்களை நீக்கி,நல்ல வாழ்வை அளிக்கிறார்.

—————————————-

எந்தன் மெய் வினை நோய் களைந்தான் என்றார் கீழ் –
களைந்து நல் ஞானம் அளித்தனன் என்று போற்றுகிறார் இங்கு –

24-நாத ச ஏஷ யமி நாம் நக ரஸ்மி ஜாலை
அந்தர நிலீ நம் அப நீய தம மதீயம்
விஜ்ஞான சித்ரம் அநகம் லிகதி இவ சித்தே
வ்யாக்யாந கேளி ரசி கே ந கர அம்புஜேந –

ஸ்வாமியின் ஞான முத்திரையில் உள்ள திரு நகங்களில் இருந்து தேஜஸ்ஸூ ப்ரவாஹம்
அடியேன் உள்ளத்தில் நிறைந்த அஞ்ஞானம் என்ற அந்தகார இருளை நீக்குகிறது
உபதேசம் செய்ய வேண்டிய வகை அறிந்து தனது தாமரைத் திருக்கைகள் மூலம்
எனது உள்ளத்தில் சிறந்த ஞானம் என்னும் சித்ரத்தைத் தீட்டி அருள்கிறார்

ராமானுஜர் தனது வலது உள்ளங்கையில் அமர்ந்து, சைகையில், அறிவுரை மற்றும் அறிவுறுத்தல்.
பொலிவுடன் கூடிய நகங்கள், நம் இதயங்களில் உள்ள இருளை (அறிவை) அகற்றி,
இரு விரல்களையும் ஒருங்கிணைத்து, நம் இதயங்களில் ஒரு ஞானத்தை – தகவலறிந்த
ஓவியம் வரைவதற்குத் தயாராகிறது.

யோகீந்த்ரரான எம்பெருமானார்
என்னுள்ளே மறைந்து —
என்னைத் தீ மனம் கெடுத்து –
மருவித் தொழும் மனமே தந்து –
தம் திருக் கை தாமரைகளால் வியாக்கியான சைலிகளை
ரசித்துப் போற்றக் கூடிய என் உள்ளத்திலே
நல் ஞானம் ஆகிற சித்தரத்தை எழுதுகிறார் போலும் –

உடையவர்,யோகீச்வரன் . இவர், ஊனக்கண்ணால் பார்க்க இயலாததையும் பார்க்கும் சக்தி பெற்றவர்.
இவர், தமது உபதேச முத்ரை உள்ள வலது திருக்கர நகங்களின் காந்தியால், மனத்தில் மறைந்திருக்கும்
அறியாமை இருளை அகற்றி, ஞானத்தை உபதேசிக்கும் விதமாக , உபதேச முத்ரையோடு கூடிய திருக்கைகளில்,
இரு விரல்களையும் குவித்து, ஒப்பற்ற ஓவியர் போல ஒளிர்கிறார்

—————————————–

இனி திருப்பொடு எழில் ஞான முத்திரை வாழியே -என்கிறபடியே
ஞான பிரதராய் எழுந்து அருளி யுள்ள யதிராஜரை சாஷாத் கரித்து மேலும் அனுபவித்து மகிழ்கிறார்
பாஷ்யகாரரை, பக்தி மூலமாக சாக்ஷாத்கரித்து,உபதேச முத்ரையோடு கூடிய திருமேனியை
ஸ்வாமி தேசிகன் ஸேவித்து அனுபவிக்கும் ஸ்லோகம்.

25-உத்க்ருஹணதீம் உபநிஷத் ஸூ நிகூடமர்த்தம்
சித்தே நிவேசயிதும் அல்ப தியாம் ஸ்வயம் ந
பச்யேம லஷ்மண முனே ப்ரதிபந்த ஹஸ்தாம்
உன்நித்ர பத்ம ஸூ பகாம் உபதேச முத்ராம்

நமது உள்ளத்தில் தகாத அறிவு மட்டுமே உள்ளது
இதனைப் போக்குவதற்காகவே யதிராஜர் தனது திருக்கையில் மலர்ந்த தாமரை மலர் போன்ற ஞான முத்திரை வைத்துள்ளார்
இதனைக் காணும் போது அவர் தானாகவே வலிய வந்து வேதாந்த உண்மைகளை நம் உள்ளத்தில் வைத்து அருளுவதாகவே தோன்றுகிறது
அத்தகைய ஞான முத்திரையை நாம் அண்டி இருப்போமாக

உபநிடதங்களில் மறைந்திருக்கும் அர்த்தத்தை, மந்தமான புத்திசாலிகளின் இதயங்களில் ஆழமாக பதிய வைக்கும்
முயற்சியில் எழுப்பப்பட்ட, மலர்ந்த தாமரை போன்ற அவரது கையில் உள்ள முத்திரையை நாம் உணர்கிறோம்.

உபநிஷத்துக்குள் மறைந்துள்ள பொருள்களை மந்த மதிகளான நம்முடைய மனசில் பதிய வைப்பதற்காக –
உயர்ந்து இருப்பதும் –
அலர்ந்த தாமரை மலர் போல் மனத்துக்கு இனியதாய்
நமக்கு ப்ராப்தமான உபதேச முத்திரை யுடைய திருக் கைகளை சேவித்து களிக்கிறோம்-

என்ன உபதேசம் செய்கிறாராம் ?
ஸ்ரீமந்நாராயணனே பரதத்வம்; ஜீவர்களும் அசேதனங்களும் அவருக்கு சரீரம்; அந்தர்யாமி ப்ராஹ்மணத்தில்
( உபநிஷத் ) உள்ளதை, உபதேச முத்ரையைக் காட்டி,உபதேசிக்கிறாராம் .
நம்வீட்டில், நமக்குத் தெரியாமல்,இருக்கிற புதையலை , கையை உயரத் தூக்கிக் காட்டுவதைப்
போல, உபதேச முத்ரை இருக்கிறதாம்.
இவர், லக்ஷ்மண முநி
அபாத்ரத்தில் ஞாநோபதேசம் கூடாது என்பதை நன்கு அறிந்து, நம்மை நல்ல சத்பாத்ரம் என்று உணர்ந்து ,
உபதேச முத்ரையோடு ப்ரத்யக்ஷமாகி இருக்கிறார் என்கிறார்

————————————————–

ஞான முத்திரையை கீழ் இரண்டு ஸ்லோகங்களில் அனுபவித்து
இனி ஸ்வாமி திருவாய் மலர்ந்து அருளும் ஸ்ரீ வாக்ய சைலிகளை போற்றுகிறார் –
உபதேசிப்பவர், அவரின் உபதேச முத்ரை,இவற்றை வர்ணித்தவர்
இந்த ஸ்லோகத்தில் உபதேசமொழிகளின் சொற்சுவை, பொருட்சுவையைச் சொல்கிறார்.

26-ஆகர்ஷணாநி நிகமாந்த சரஸ்வதீ நாம்
உச்சாட நாதி பஹி அந்த உபப்லவா நாம்
பத்த்யாநி கோர பவ சம்ஜ்வா பீடிதா நாம்
ஹ்ருதயாநி பாந்தி யதிராஜ முனே வசாம்சி –

யதிராஜரின் புண்ணிய கிரந்தங்கள் வேதாந்த வரிகளையும் அவற்றுள் உள்ள மறை பொருள்களையும் நம் அருகே அழைத்து வந்து விடுகின்றன
நமது உள்ளும் புறமும் நம்மைப் பெரும் தொந்தர வுகளுக்கு ஸம்ஸாரம் என்ற பயங்கரம் ஆட்படுத்தியபடியே உள்ளது
இத்தகைய நோயால் பீடிக்கப்பட்ட நமக்கு நன்மை செய்வதாக நமது உள்ளத்தில் பதிந்து நிற்பதாக அவை உள்ளன –

ஸ்ரீ ராமானுஜரின் இலக்கியப் படைப்புகள், உப நிஷத்துக்களில் இருந்து அதிக அளவு வைராக்கியத்துடன் இருக்க “வழி காட்டுகின்றன”.
மந்திரம் உச்சரிப்பதைப் போலவே, உள்ளும் வெளியிலும் நாம் அனுபவிக்கும் சித்திரவதைகள் மற்றும்
சம்சார உலகில் மக்கள் பாதிக்கப்படும் நாள்பட்ட நோய் மற்றும் குறைபாடுகளுக்கு எதிராக
உறுதியான மற்றும் பாதுகாப்பான ஊட்டச் சத்தை இந்த படைப்புகள் அழிக்கின்றன .

எம்பெருமானாருடைய உபதேச பரம்பரைகள் வேதாந்த வாக்யங்களுக்கு மகிழ்ச்சி யுண்டு பண்ணுபவையாயும் –
பாஹ்ய குத்ருஷ்டிகளை மாளப் பண்ணுபவையாயும்
சம்சார பேறு நோய்க்கு சமனம் பண்ணும் பத்யங்களாய் மனதில் கொண்டு போற்றும்படியான
நிதிகளாய் விளங்குகின்றன –

உடையவரின் உபதேசம், அவருக்குத் திருப்தியையும்
சிஷ்யர்களுக்குச் சந்தேகமே இல்லாத தெளிவையும் ஏற்படுத்துகிறதாம்.
பெரியபெருமாளுக்கோ,தன்னுடைய சங்கல்பத்தின்படி, உடையவர், வேதாந்த ஸம்ப்ரதாயப்
ப்ரவர்த்தகர் ஆனதால், மகிழ்ச்சியாம் .
உடையவரின் வாதங்கள், “ஆகர்ஷணானி “–பிறமதவாதிகளைத் தத்வ வாதத்தால், மாற்றி,
அவர்களை ஈர்த்து, வசீகரித்து,விசிஷ்டாத்வைதிகளாக மாற்றுகிறதாம் .
எந்த ஆதாரமும் இல்லாமல், ப்ரமாணம் இல்லாமல், தர்க்கிக்கும் அத்வைதிகளை, ஸ்ரீஉடையவரின்
ஸ்ரீஸுக்திகள் , பேய்பிசாசுகளை விரட்டும் உச்சாடன மந்த்ரங்களைப்போல, விரட்டுகிறதாம். .
ஸ்ரீ ஸுக்திகள் —மணி.
இதில் உள்ள மந்த்ர உச்சாடனங்கள் – —மந்த்ரம்
இவை ஸம்ஸார தாப ஜ்வரத்துக்குப் பத்தியம்–ஔஷதம்
இவ்விதமாக, யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,மணி,மந்த்ரம் , ஔஷதம்.

——————————————————

உபதேச வாக்ய ஸ்ரேணியில் ஈடுபட்டவர்
மேலே ஸ்வாமி திங்களும் ஆதித்யனுக்கும் எழுந்தால் போலே விளங்குவதை கொண்டாடுகிறார்
இந்த ஸ்லோகத்தில், அக்நி ,சந்த்ரன் , ஸுர்யன் மூவரையும்
யதிராஜரோடு ஒப்பிட்டு உடையவரின் மேன்மையைப் பாராட்டுகிறார்.–

27-சீத ஸ்வபாவ ஸூபக அனுபவ சிகாவான்
தோஷ அவமர்த்த நியத உந்நதி ஓஷதி ஈச
தாப அனுபந்த சமன தபன பிரஜா நாம்
ராமானுஜோ ஜயதி சம்வலித த்ரிதாமா –

அருள் என்னும் குளிர்ந்த காரணமாக சந்த்ரன் போலவும்
தன்னை அடியவர்களின் தோஷங்களைப் போக்குவதால் அக்னி போலவும்
இவ்வுலகம் வளம் பெற ஸூர்யன் இன்றியமையாமல் இருப்பது போல் இருந்து
நமது தாபத் த்ரய பிரவாஹங்களைப் போக்கி அருளுவதால் ஸூர்யன் போலவும்
ஆக மூன்று வித தேஜஸ்ஸுக்களும் கலந்து போல் உள்ளார்

அவர் வெற்றியுடன் பிரகாசிக்கட்டும்-

அவர்- அந்த ராமானுஜர், தனது குளிர்ச்சியான மற்றும் கனிவான தாக்கத்தால், அசாதாரண அக்னியாக நடந்து கொள்கிறார்;

அவர்- நம் இருளை (நம் குறைகளை) நீக்கும் விஷயத்தில் நாவல் சந்திரனாக இருப்பவர்;

அவர்- நமக்கு ஏற்படும் மூன்று வகையான துன்பங்களை நீக்குவதில், இரண்டாம் சூரியனாக இருப்பவர்;

இவ்வாறு, நமக்கு இரட்சிப்பை வழங்குவதற்காக அவர் மூன்று பேரின் கூட்டமாக விவரிக்கப்படலாம்.

பாபங்களை எரித்து நம்மை தூய்மை படுத்தும் ப்ரபாவத்தால் அக்னியாய் இருப்பாராயும் –
இனிய குளிர்ந்த ஸ்வ பாவத்தால் -அஞ்ஞானமான இருளை போக்கடிப்பதில்
நியதமான மஹிமையுடைய சந்திரனாக இருப்பவரும் –
ஆத்யாத்மிகாதி தாபங்களின் ஸம்பந்தத்தை ஒழிப்பதில் சூர்யன் போன்றவரும்
இப்படி ஒருங்கே சேர்ந்துள்ள மூன்று தேஜஸ்களை யுடைய எம்பெருமானாருக்கு பல்லாண்டு -என்று
மங்களாசாசனம் செய்து அருளுகிறார் –

அக்நியிடம் , அசுத்தம் நெருங்கினால் சுட்டு, எரித்துவிடும்.
அதனிடம், உஷ்ணம் என்கிற தோஷம் இருக்கிறது.
ஆனால், உடையவரோ,
தானும் பவித்ரம், தன்னை அடைபவர்களையும் குளிர நோக்கி அவர்களையும்
பவித்ரமாக்குகிறார். இது அவரின் மேன்மை.

சந்த்ரன் ,இருளைப் போக்கி, எல்லாரையும் குளிர்வித்து மகிழ்விக்கிறார் .
உடையவர்,
மன இருளைப் போக்கி,வேதாந்தக் கருத்துக்கள் என்கிற சந்த்ர குளிர்ச்சியை—சிஷ்யர்களுக்குக் கொடுக்கிறார்.
மேலும்,அவர்களின் தவறுகளை –கேடுகளை , கோபித்துத் திருத்துகிறார்.
இப்படி ,எல்லாரும் கொண்டாடும் திருமேனியின் பேரழகில் (சந்த்ரனைவிடப் பேரழகு )
அனைவரும் வணங்கும்படி,ப்ரகாசிக்கிறார் .

பல்லாயிரம் ஒளிக் கற்றைகளோடு பிரகாசிக்கும்,ஸுர்யனைப் போல யதிராஜர் ப்ரகாசிக்கிறார் .
ஸுர்யனின் கொடூர வெய்யிலால், பூமி உலர்ந்து வறண்டு விடுகிறது.
ஆனால், உடையவரோ,
ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம் , ஆதிதைவிகம் என்கிற ஸம்ஸாரத் தாபத்ரயங்களைப் போக்கி, ரக்ஷிக்கிறார் .

இப்படி, யதிராஜர்,அக்நி ,சந்த்ரன் ,ஸுர்யன் —-மூன்று பேரின் ஸ்வரூபமாக இருப்பதால்,
(த்ரிதாமா—மூன்று இடங்களை ,திருப்பாற்கடல், ஸுர்ய மண்டலம், ஸ்ரீ வைகுண்டம் –இருப்பிடமாக உடைய பகவான் )
ஸ்ரீமந்நாராயணன் , அவற்றை எல்லாம் விட்டுவிட்டு தன்னையே த்யானித்து, துதித்து,அர்ச்சித்து வரும்
உடையவரின் ஹ்ருதயத்தில் ,நித்ய வாஸம் செய்கிறான்.
ஆதலால் , யதிராஜர் , பகவானால் ஆட்கொள்ளப்பட்டார்
இவர்–குளிர்கிற அக்நி . எப்போதும் வளர்பிறைச் சந்த்ரன் -2வது ஸுர்யன்

———————————-

ஸ்வாமியுடைய தேஜஸை ஸ்துதித்து மகிழ்ந்தார் கீழ் –
மேலே அவருடைய சகல வித்யா வைதுஷ்யத்தையும் –
குத்ருஷ்ட்டி நிரசன சாமர்த்யத்தையும் புகழ்கிறார் –

28-ஜயதி சகல வித்யா வாஹி நீ ஜன்ம சைல
ஜனி பத பரிவ்ருத்தி ஸ்ராந்த விஸ்ராந்தி சாகீ
நிகில குமதி மாயா சர்வரீ பால ஸூர்ய
நிகம ஜலதி வேலா பூர்ண சந்த்ரோ யதீந்திர

அனைத்து வித்யைகளும் நதி போன்று ப்ரவாஹம் எடுப்பதாக உள்ள மலை போன்றும்
ஸம்ஸாரத்தில் உழன்று திரிந்து களைப்பு அடைந்தவர்கள் வந்து இளைப்பாறும் மரம் போன்றும்
புற வாதிகளின் வாதமாகிய அந்தகாரம் இந்த உலகில் சூழ்ந்து விடாதபடி ரஷித்து நிற்கும் பால ஸூர்யன் போன்றும்
வேதம் என்னும் கடல் பொங்கி எழும் படிச் செய்யும் முழு நிலவு போன்றும் ஸ்வாமி உள்ளார்

ராமானுஜம் கிட்டத்தட்ட இப்படி ஜொலிக்கிறார்:

இமயமலையில் இருந்து அனைத்து ஆறுகளும் (கங்கை போன்ற) அனைத்து புராணங்களும் பாய்கின்றன:

அனைத்தையும் வழங்கும் ” கல்பக ” மரம், அதன் நிழலில், மீண்டும் மீண்டும் பிறப்பு மற்றும் இறப்புகளால் சித்திரவதை செய்யப்பட்ட ஜீவர்கள் ஓய்வெடுக்க முடியும்;

பலதரப்பட்ட பள்ளிகளில் இருந்து தகராறு செய்பவர்களின் மாயையான இயங்கியல் ஆதிக்கம் செலுத்தும் இரவு இருளை அகற்றும் விடியல் சூரியன்;

வேதங்களின் பாற்கடலில் இருந்து தோன்றும் முழு நிலவு.

எல்லா வித்யைகள் ஆகிற நதிகளுக்கு தோற்றுவாயான உயர்ந்த மலை போன்றவரும் –
சம்சாரம் ஆகிற நெடு வழியில் தொடர்ந்து நடந்து வந்த களைப்பை போக்கும் நிழல் தரும் மரம் போன்றவரும் –
எல்லா குத்ருஷ்டிகளின் பிரமமாகிற இருளை போக்கடிக்கும் பால சூர்யன் போன்றவரும் –
வேதமாகிய கடல் நீர் களித்து பொங்குவதற்கு முழு நிலவு போல் இருப்பவராக
யதிராஜருக்கு பல்லாண்டு என்று மங்களா சாசனம் பண்ணி அருளுகிறார் –

உடையவர், எல்லா வித்யைகளும், 64 கலைகளும் உற்பத்தியாகும் இடம் போன்ற அசைக்க முடியாத மலை.
பிறமதவாதிகளால், வாதத்தில் இந்த மலையைப் பிளக்க இயலாது;
மலையில் உள்ள நெடிதுயர்ந்த தேவதாரு போன்ற மரங்களின் அடியில் எல்ல ஜீவராசிகளும்,
வெய்யிலுக்கும்,மழைக்கும் பாதுகாப்பாக இருப்பதைப் போல,
உடையவர் என்கிற மலையில் உள்ள தத்வ உபதேசங்கள் என்கிற மரங்களின் அடியில்,
ஸம்ஸார தாபத்தில் அடிபட்ட ஜீவாத்மாக்கள்,இங்கு புகலடைந்து,சந்தோஷிக்கிறார்கள்.

உடையவர், ஸகல கலா வல்லவர்.
வேதங்கள், உடையவரைப் பார்த்து, பௌர்ணமீ சந்த்ரனைப் பார்த்துப் பொங்கி எழும்
கடல்போலக் குதூகலிக்கிறது
இவர் , ஹிமாலய மலை; இவரின் உபதேசங்கள் ,அதில் உள்ள தேவதாரு போன்ற மரங்கள்;
இவர் பால ஸுர்யன் . இவர் பூர்ண சந்த்ரன் ; ஜய , ஜய ,யதிராஜ —-

————————————————

எம்பெருமானாரின் சகல வித்யா பாரங்கத்தைப் பேசினவர்-
மேலே ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் தமக்கு அனுக்ரஹம் பண்ண வேண்டும் என்று வேண்டுகிறார் –

29-முனி பஹூ மத சாரா முக்தி நிஸ்ரேணிகா இயம்
சஹ்ருதய ஹ்ருதயா நாம் சாச்வதீ திஷ்ட ஸித்தி
சமித துரித கந்தா சம்யமி இந்த்ரச்ய ஸூக்தி
பரிசித கஹ நா ந பிரஸ்நுவீத பிரசாதம்

ராமானுஜர் உலகுக்குத் தந்த இலக்கியத் தலைசிறந்த படைப்புகள்,
நமக்குத் திறந்து, உள் அர்த்தத்தையும் உட்பொருளையும் நமக்குத் தெளிவாகப் புரிய வைக்கட்டும்!
இந்தப் படைப்புகள் , பெரிய முனிவர்களால் பாராட்டப்பட்ட, அத்தியாவசியமானவற்றை வலியுறுத்தும்
மோக்ஷத்தின் படிக்கட்டுகளாக செயல்படும் திறன் கொண்டவை . –
மோக்ஷத்தையே எட்டிப்பிடிக்க உதவும் ஏணி
அவர்கள் மகிழ்ச்சிக்கு ஒரு ஆதாரமாக உள்ளனர்,
நல்ல மனம் படைத்த அனைவருக்கும் அவர்கள் மனத்தில் நிலை பெற்றுள்ள தன்மை உடையவை
பாபங்கள் அனைத்தையும் நீக்க வல்லவை .
அவர்கள் ஆழ்ந்த ஆய்வு, ஆழ்ந்த மற்றும் ஆழமான கருத்துக்கள் சிறந்த இன்பத்தை வெளிப்படுத்துகிறார்கள்,
இப்படிப்பட்ட அவர் திவ்ய கிரந்தங்கள் நமக்கு அருள் புரியட்டும்

பராங்குச பரகால நாத யாமுன முனிவர்களால் அருளப்பட்ட சாரமான அர்த்தங்களை உட் கொண்டவைகளும்-
பரமபதத்துக்கு படிக்கட்டு போன்றதும்
சத்துக்களுடைய மனசில் நித்தியமான ஆனந்தம் பொங்கச் செய்பவைகளும்-
ப்ரதிபஷிகளால் உண்டாகும் துக்கத்தை போக்குபவைகளும் –
அனுபவிக்க பரம கம்பீரமாய் இருப்பவைகளுமான ஸ்வாமியுடைய ஸ்ரீ பாஷ்யாதி ஸ்ரீ ஸூக்திகள்
அடியேனுக்கு நன்றாக விளங்க வேண்டும் படி அனுக்ரஹம் பண்ணி அருள வேண்டும் –

உடையவரின் ,ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம், வேதார்த்த ஸங்க்ரஹம் போன்றவைகளில்,
பூர்வாசார்யர்களின் வேதாந்த ரஹஸ்யங்கள் பொதிந்து இருக்கின்றன.
சடகோபமுநி , நாதமுநி, யாமுனமுநி , —முநித்ரய வேதாந்தக் கருத்துக்களும் உள்ளடக்கி இருக்கின்றன.
ஸ்ரீவ்யாஸரின் ப்ரஹ்மஸுத்ரங்களின் வ்யாக்யானமான ,ஸ்ரீபாஷ்யம் ——இது, உடையவரின் ஸ்ரீஸுக்தியான, மடந்தை. உத்தம ஸ்த்ரீ
இதை ஸேவிக்க ஸேவிக்கஉள்ளார்ந்த அர்த்தங்கள் ,ஊற்றுபோலச் சுரந்துகொண்டே இருக்கும் .
இதைப் படித்துப் படித்து, இந்த ஸ்ரீபாஷ்யம் என்கிற க்ரந்தமே( உத்தம ஸ்த்ரீ )
என்னை அநுக்ரஹிக்கவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார்

——————————————————–

ஸ்வாமியின் ஸ்ரீ ஸூக்திகளின் பெருமைகளை மேலும் பேசி ப்ரீதர் ஆகிறார் –

30-பவ மரு பரிகிந்த ஸ்ப்பீத பா நீய சிந்து
துரித ரஹித ஜிஹ்வா துக்க குல்யா சகுல்யா
சுருதி நயன சநாபி சோபதே லஷ்மண
உக்தி நரக மதன சேவ ஆஸ்வாத நாடிந்தமா ந –

ராமானுஜரின் படைப்புகளின் அனைத்துத் திறனையும் பாருங்கள். அவர்கள்-

வறண்ட பாலைவனத்தில் பயணிக்கும் தாகத்தால் துன்புறுத்தப்பட்ட பயணிக்கு குளிர்ந்த நீரை வழங்கும் நதி போல;

ஆன்மிகப் பணிகளைப் படிக்கும் புனிதர்களுக்குப் பால் ஆறு போல

வேதங்களின் கண்களைப் போல, மிகவும் விலையுயர்ந்த மற்றும் விளக்கத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்

இறைவனுக்குச் செய்யும் சேவையின் பேரின்பத்தை எவரும் அனுபவிக்கும் வகையில், முக்கிய நரம்பு நாண் இயக்கியைப் போல.

நரகத்தை அண்ட விடாமல் தடுக்கும் ப்ரஹ்ம ஞானம் உண்டாக்கி அந்தமில் பேரின்பம் கிட்ட வழி செய்யுமே

வேதாந்தங்களை தெளிவாக பார்த்து அறியும் கண்களாக இருப்பவைகள்-
சம்சாரமாகிற பாலைவனத்தில் அலைந்து மிகவும் களைத்தவர்களுக்கு-தாப ஹரமாக –
பருக இனிதான தீர்த்தமுள்ள நதி போன்றவைகளும்
பாபம் அற்ற மஹான்களுக்கு பால் போலே நாவுக்கு இனியவையாயும் –
நரகாசுரனை முடித்த எம்பெருமானுடைய குண அனுபவத்தை ஆனந்தவாஹமாக செய்வதுமாக விளங்குகின்றன –

எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதி பூர்த்தியை ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகளிலே பரக்க
அருளிச் செய்கையாலே –
இவை ஆனந்த ஜனகமான நாடி விஷயத்தை தட்டுமைவாய் இருக்குமே –

யதிராஜரின் ஸ்ரீஸுக்தி, பாலைவனமாகிய ஸம்ஸாரத்தில், தாகம் தாகம் என்று, தவிப்பவர்களுக்கு, வற்றாத நதிநீர் .
புண்ய புருஷர்களுக்கு,அவர்களுடைய நாக்குக்கு பாலாற்று நீர்.
ஸ்ருதிகளுக்குக் கண் . இந்த ஸுக்தி ஸேவிப்பவர்களின் ஆனந்த நாடியைத் தொட்டு, இங்கு மாத்ரமல்ல, ஸ்ரீவைகுண்டத்திலும்
பேரானந்தத்தை அனுபவிக்க உதவுகிறது.

—————————————-

மேலும் ஸ்ரீ ஸூக்திகள் பிரபாவம்

31-ஹரிபத மகரந்த ச்யந்தின சம்ஸ்ரிதா நாம்
அனுகத பஹூ சாகா தாபம் உன்மூல யந்தி
சமித துரித கந்தா சம்யமி இந்த்ர பிரபன்னா
கதக ஜன மநீஷா கல்ப நா கல்ப வ்ருஷா-

ராமானுஜரின் படைப்புகள் நமக்கு எவ்வளவு பெரிய காரியங்களைச் சாதிக்கின்றன!
அவற்றைப் படித்தால், இறைவனின் பாதங்களிலிருந்து வரும் அமிர்தம் போன்ற தேன் பெருகிக் கொண்டே இருக்கும்,
மேலும் மோக்ஷ  ஆனந்தத்திற்குச் சமமாக இருக்கும்.
படைப்புகள் பன்முகத்தன்மை கொண்ட வேதங்களின்
பாதையைத் தழுவி நெருக்கமாகச் செல்கின்றன என்பதை நாம் உணர்கிறோம்.
அவர்கள் கற்பவர்களின் பாவங்களின் குமட்டல் வாசனையை கடைசி வரை அகற்ற முடியும்.
அவை நம் இதயங்களில் ஒரு ” கல்பக ” மரமாக-மாற்றாத ஞானத்தை
அளித்த படி நமது கற்பனை எண்ணங்களின் வளமான வரிசையை உருவாக்குகிறது.
மேலும், படைப்புகள், வாசிப்பின் போது, ​​மூன்று வகையான தானங்களில் இருந்து நம்மை விடுவிக்கின்றன.

மேலும் ஸ்ரீ ஸூக்திகள் பிரபாவம் -தன்னை கிட்டினவர்களை பகவத் சரணாரவிந்தங்கள் –
சர்வ பாபங்களையும் போக்கி
தேனே பாலே கன்னலே அமுதே என்று மிகவும் போக்யங்களாயும் இருக்குமா போலே
சகல வேதங்களையும் அனுசரித்து சமன்வயப்படுத்தி அவதரித்த ஸ்ரீ பாஷ்யகாரருடைய ஸ்ரீ ஸூக்திகளை அப்யசிப்பவர்களை
சகல பாபங்களையும் போக்குபவையுமான அர்த்தங்களைச் சுரப்பதால்
உபபாதனம் பண்ணுகிறவர்களுக்கு கற்பக வ்ருக்ஷத்தை போலே தாபங்களைப் போக்கடிக்கும் –

யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள், தேவலோக கல்பவ்ருக்ஷம் போன்றவை. கற்பகம் என்றும் சொல்வர் .
பல அடர்ந்த கிளைகள், இலைகள் , பழங்கள் உள்ள இம்மரம் இளைப்பாறுபவர்களின்,களைப்பைப் போக்கும்.
பசி, தாகத்தைப் போக்கும்; நறுமணக் காற்றைக் கொடுக்கும்;
மரத்தின் அடியில் அமர்ந்துகொண்டு, மனதில் நினைப்பவை (தர்ம வழியில் நினைப்பவை) நடக்கும்;
யதிராஜரின்ஸ்ரீஸுக்திகள் ,
பச்சைத் தேன் ; பசும்பால்;
ஆசார்ய சிச்ருக்ஷையுடன் ,பக்தியோடு தினமும் ஸ்ரீபாஷ்ய அர்த்தங்களைக் கேட்டால், பாவங்கள் எல்லாம் போகும்.
80 க்ருச்ரங்கள் செய்ததற்குச் சமம். ( ஒரு க்ருச்ரம் என்பது , ரூபாய் 12–50 என்று கணக்கு
ஒரு குறிப்பிட்ட பாவம் கழிய, மந்த்ரத்தைச் சொல்லி, வேதபாராயண ஸ்வாமிக்கு ஒரு க்ருச்ரம் என்பது கொடுப்பது சாஸ்த்ர விதி )
பாஷ்யகாரரின் ஸ்ரீஸுக்திகளைக் கற்றவர், உத்தம புருஷர். கல்பவ்ருக்ஷம்போல் உதாரர். வள்ளல்.
வேத ஸம்பந்நர் . பகவத் கல்யாண குணங்களில் திளைத்து, பிறரையும் அனுபவிக்கும்படி செய்பவர்

—————————————————

எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்திகள் இனியவை -மஹா உபசாரம் செய்பவை என்றார் கீழ் –
எம்பெருமானார் சேனையர் கோன் அவதாரமாக வந்து பிறந்து
மஹா உபகாரத்தை செய்தார் என்கிறார் –

32-நாநா பூதை ஜகதி சமயை நர்ம லீலாம் விதித்சோ
அந்த்யம் வர்ணம் ப்ரதயதி விபோ ஆதிம வ்யூஹ பேதே
விச்வம் த்ராதும் விஷய நியதம் வ்யஞ்ஜிதா அனுக்ரஹ
சந் விஷ்வக் சேன யதிபதி அபூத் வேத்ர சார த்ரிதண்ட

இறைவன் பல மத அமைப்புகளை உருவாக்கி யிருக்கிறான் – அவை ஒன்றுக்கொன்று சண்டையிடுகின்றன –
இவை எல்லாம் இன்புறும் இவ்விளையாட்டு உடையானுடைய லீலையே .
அவரது முதல்- தொடக்கமற்ற- வியூஹ வடிவம், வாசுதேவர். இருண்ட சாயல் கொண்ட கிருஷ்ணராக பிந்தைய நாள் அவதாரத்தை எடுத்தார்.
கலி யுகத்தில், மக்கள் இன்பத்தில் குடி கொண்டிருக்கும் போது, ​​இறைவன் விஷ்வக்சேனரை அனுப்பினார்,
அவர் தனது அருளால் (ராமானுஜராக பிறந்தார் ,
(சேனாபதி விஷ்வக்சேனர் யதிபதி ஸ்ரீ ராமானுஜராக மாறும்போது, ​​மந்திரக்கோல் திரிதண்டம் ஆகிறது )

பல மதங்களை ஸ்ருஷ்டித்து பரிஹாஸமான தொரு விளையாட்டை விளையாடுவதாக வ்யூஹ மூர்த்தியான
வாஸூ தேவன் கள்ள வேடம் கொண்டு ஒருப்பட்ட போது விஷய ப்ரவணராய் இருக்கிற சம்சாரிகள்
இந்த மதங்களைப் பற்றி நாசம் அடையாக கூடாது என்று
கிருபையால் சேனை முதலியாரே எம்பெருமானாராக திருவவதரித்தார் –
அவர் கை பிரம்பு செங்கோல் த்ரிதண்டம் ஆயிற்று –
சாது பரித்ராணத்துக்காகவே ஸ்வாமி அவதாரம் –
திருவனந்த ஆழ்வான் –
எம்பெருமான் –
சேனை முதலியார்
பஞ்ச திவ்ய ஆயுதங்கள் திருவவதாரமாகவே ஸ்வாமி போற்றப்படுகிறார் –

பகவானுக்கு, இவ்வுலகம் லீலாவிபூதி —-அதுவும்,
கலியுகத்தில் இவனே புத்தர் என்று சொல்லி, வேதத்துக்கு எதிராகப் பேசினான்.
பாசுபதமதத்தை வளரச் செய்தான். இப்படி, விளையாடினான்.
விஷ்வக்ஸேநரோ ,ஏன் இப்படி மக்களைப் புத்தி தடுமாறச் செய்கிறீர் என்று பகவானைக் கேட்காமல்,
இவை அவருடைய லீலாவிபூதியின் விளையாட்டு என்று உணர்ந்து ,
எம்பெருமானாராக அவதரித்தார்.
கஜேந்த்ரனைக்காக்க பகவான், அலைகுலைய ஓடிவந்ததைப் போல, போட்டது போட்டபடி வைகுண்டத்தை விட்டு
இவர் , ஓடிவந்தாராம்.
வைகுண்டத்தில், அவரது செங்கோல் பிரம்பு; அதையும் எடுத்துவரவில்லையாம்.
இந்தச்செங்கோல் பிரம்பே தானும் ஓடிவந்து , யதிராஜரின் திருக்கரத்தில், “த்ரிதண்டமா”க அவதரித்ததாம்.

————————————-

இப்படி திருவவதரித்து அருளிய எம்பெருமானாருடைய உபதேசங்கள் பெருமையை உபபாதிக்கிறார் –

33-லஷ்யம் புத்தே ரசிக ரசநா லாஸ்ய லீலா நிதானம்
சுத்த ஆஸ்வதம் கிமபி ஜகதி ச்ரோத்ர திவ்ய ஔஷதம் ந
லஷ்ய அலஷ்யை ஸிதி ஜலதிவத் பாதி தாத்பர்ய ரத்னை
லஷ்மீ காந்த ஸ்படிக முகுர லஷ்மணர்ய உபதேச –

நல்ல மனங்கள் இந்தப் படைப்புகளைப் படிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும்.
ஒரு “ரசிகா” ருசிக்கும் மற்றும் அவற்றை எடுத்துக் கொள்ளும் போது அவனது நாக்கு மிகவும் நல்ல விளையாட்டுடன் இருக்கும்.
பேசுவதற்கும் விவாதத்துக்கும் ஏற்ற பொருள்!
காது மிகவும் அன்புடனும் தூண்டுதலுடனும் அவற்றைக் கேட்கும்,
இது ஒரு தனித்துவமான வகை மெய் நிகர் மருத்துவத்தை நிரூபிக்கிறது, அது எவ்வளவு இனிமையானது;
மேலும் அவை இறைவனின் வடிவத்தையும் இயல்பையும் சரியான முறையில் நமக்கு வெளிப்படுத்தும் படிகக் கண்ணாடி.
ராமானுஜரின் படைப்புகளில் உள்ள மையச் செய்திகள் – சில புரிந்து கொள்ளப்பட்டவை மற்றும் சில இல்லை –
ஞானவான்களுக்குப் புலப்படும் -அல்லாதார்க்கு அதன் அர்த்தம் விளங்காது
ஒரு தெளிவான கடலில் பரந்த மற்றும் அளவிட முடியாத கற்கள் சிதறிக் கிடக்கிறது.

எம்பெருமானாருடைய உபதேசங்கள்
தெளியச் சொல்லப் பட்டவை –
புத்தியில் எளிதாக படியும்படி யுள்ளவை –
அப்படிப் படிந்தவர்க்கு மேலும் மேலும் வாசிக்கவும் சொல்ல நாவு துடிக்கும் படியும் உள்ளவை –
வாசிப்பவனுக்கு ஆனந்தம் உண்டாக்குபவை –
கேட்பவனுக்கு பரம ஒளஷதமாய் இருப்பவை –
இன்பம் விளைவிப்பவை –
சர்வேஸ்வரனை கண்ணாடி போலே காட்டித் தருமவை –
இத்தன்மைகள் சார்ந்த எம்பெருமானாரது உபதேச கிரந்தங்கள் –
கடலில் எளிதில் கண்டு எடுக்கக் கூடியவைகளும்-இப்படி சில – காணக் கூடாதவை –
ஆழ்ந்து நோக்கியே அறியத் தக்கவை –
இப்படி சில தாத்பர்யங்களான ரத்னங்கள் நிரம்பிய கடல் போல் விளங்குகின்றன –

யதிராஜரின், ஸ்ரீபாஷ்யம் போன்ற ஸ்ரீஸுகத்திகளின் பெருமையைச் சொல்கிறார்.
ஒரு நூல் என்றால்
1.படிக்கத் தொடங்கியதும், புத்தியைக் கவரவேண்டும்.
2. மேலும், மேலும் படிக்கத் தூண்டுவதாக இருக்க வேண்டும்.
3. அதன் கருத்து, மேலும் மேலும் அனுபவிக்கத் தக்கதாக இருக்கவேண்டும்.
4. அதைவிளக்கிப் பிறருக்கு,அழகாக எடுத்துச் சொல்வதாக இருக்கவேண்டும்
5. இப்படிச் சொல்லும்போது, கேட்போர், இதைத் தொடர்ந்து கேட்கவேண்டும் என்கிற ஆசையைத் தூண்டுவதாக இருக்கவேண்டும்.
6. கேட்பவர்களுக்கு, நன்மை தருவதாக இருக்கவேண்டும்.
7. சொல்லும் கருத்துக்கள், உயர்ந்ததாக இருக்கவேண்டும்.
8. இவை, எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும்.

இந்த 8 குணங்களும், உடையவரின் ஸ்ரீஸுக்திகளுக்கு உண்டு, என்கிறார்.
லக்ஷ்யம் புத்தே—ஸ்ரீஸுக்தியைப் பிரித்ததுமே ,அது நமது புத்தியைக் கவர்கிறது. பார்த்ததும் படிக்கத் தோன்றுகிறதாம்.
கடந்த காலத்தைப் பற்றிய அறிவு–“ஸ்ம்ருதி “. எதிர்காலத்தைப் பற்றிய அறிவு “மதி “. முக்காலத்தையும் அறியும் அறிவு “ப்ரக்ஞா”.
இது, புத்தே லக்ஷ்யம்—பார்த்ததும் படிக்கத் தோன்றும்.
மீதி ஸுக்திகளில் புத்தி இழிவதில்லையாம்.-

”சுத்தாஸ்வாதம்”
”உடையவரின் ஸ்ரீஸுக்தி “ஔஷதம் ”
காதால் கேட்டவுடன், ஸம்ஸாரவ்யாதி போய்விடும். கேட்பதற்கு, சுகமாக இருக்கும்”,

திவ்யதம்பதிகள், திருப்பாற்கடலில், ரத்னங்கள் இழைத்த மண்டபத்தில், தங்கஸிம்ஹாசனத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள்.
தங்கள் சோபையைக் காண விரும்பினால், அவர்கள் கண்ணாடியைத் தேடவேண்டாம்.
சுற்றி இருக்கும் ரத்னங்களும், திருப்பாற்கடலும், அழகைக் காட்டும்.
இவர்களே, தங்கள் கல்யாண குணங்களை அறிய ஆசைப்பட்டால், ஸ்ரீஉடையவரின் ஸ்ரீபாஷ்யாதி க்ரந்தங்களைப்
பார்த்தால் போதும். இவருடைய ஸ்ரீஸுக்திகள் தெளிந்த கடல்;
கடலின் அடியில், முத்து, ரத்நம், சங்கு, பவளம் முதலிய விலைமதிக்கமுடியாத பொருட்கள் நன்கு தெரியும்;
மறைந்தும் தெரியும்; அதைப்போலவே,
ஸ்ரீபாஷ்யம். படிப்பவர்கள மதிநுட்பத்திற்கு ஏற்ப, விசேஷ அர்த்தங்கள் புலப்படும்—என்கிறார்.

————————————————–

யதிராஜரை அண்டிய ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் சொல்கிறார்.

34-ஸ்திதிம் அவதீர யந்தி அதி மநோ ரத சித்தி
மதீம் யதிபதி சம்ப்ரதாய நிரபாய தநோபசிதா
மதுகர மௌளி தக்ன மத தந்துர தந்தி கடா
கரட கடாஹ வாஹி கந சீகர சீபரிதாம்

” ராமானுஜ சம்பிரதாயம் ” எனப்படும் பெரும் செல்வத்தைப் பெற்ற பின் தொடர்பவர்களின் மகத்துவம் –
உண்மையில் ஒரு செல்வத்தை இழக்கவோ அல்லது திருடவோ முடியாது – சில அம்சங்களைக் கொண்டுள்ளது.
உயர்ந்த வரிசையின் செழுமைக்காக அவர்கள் ஒரு செப்புப் பையைப் பொருட்படுத்த மாட்டார்கள்,
அது எப்போதும் எதிர்பார்த்ததை விட அதிக செல்வம் கிடைத்தாலும், யானைக் கூட்டங்கள் சேர்ந்தாலும்
அவற்றை மதிக்க மாட்டார்கள் –
அவர்கள் ராமானுஜர் அடியார் சம்பந்தமே பிராப்யமாயும் பெரும் செல்வமாயும் கருதி
மற்ற அனைத்தையும் புல்லைப் போலவே திரஸ்கரிப்பார்கள்

இவர்கள், உடையவரின் உபதேசங்களைக் கேட்டும்,ஸ்ரீஸுக்திகளை க்ரஹித்தும்
பகவத் விஷயத்தைத் தவிர மீதி எதிலும் பற்றற்று இருந்தார்கள்.
பகவானின் திருவடிகள்தான் அகண்ட ஐஸ்வர்யம் என்று எண்ணினார்கள்.
மதங்கொண்ட யானைகள் பெருக்கும் மதஜலத்தில், வண்டுகள் வந்து மூழ்கும். யானைக்கூட்டத்தை
உடைய சக்ரவர்த்தியின், சாம்ராஜ்ய ஐஸ்வர்யத்தையே , யதிராஜரின் ஸம்ப்ரதாய ஐஸ்வர்யத்தைப்
பெற்றவர்கள் அலக்ஷியப்படுத்துவர்.

எம்பெருமானார் தர்சனம் என்ற மாசற்ற தனத்தைப் பற்றி அதனால் பெருமை யுற்றவர்கள் –
யானைகள் கட்டி வாழ்தல் -ஆகிற பெரும் ஐஸ்வர்யத்தை பெற நேர்ந்தாலும்
அந்த ஐஸ்வர்யத்தை சிறிது அளவும் மதிக்க மாட்டார்கள் –
த்ருணீக்ருத விரிஞ்சாதி –முக்தகம் ஸ்லோகம் அனுசந்தேயம் –

————————

ப்ரபாவத்தை சமத்காரமாக அருளிச் செய்கிறார் –

35-நிருபதி ரெங்க வ்ருத்தி ரசிகான் அபி தாண்டவயன்
நிகம விமர்ச கேளி ரசிகை நிப்ருதை வித்ருத
குண பரிணத்த ஸூ க்தி த்ருட கோண விகட்ட
நயா ரடதி திசா முகேஷு யதிராஜ யச படஹ-

ஸ்ரீ ரெங்காவாசிகள் நாட்டியக்காரர்கள் என்னும் உவமையில் அன்றாட வாழ்க்கையே நாட்டியம் போலவே தானே
அவர்களுக்கு ஏற்ற பறை ஸ்வாமியின் கீர்த்தி -புகழ் என்பதே
வேதங்களில் உள்ள ஆழ்ந்த பொருள்களை ஆராய்பவர்கள் யாரோ அவர்கள்
அந்தப் பறையை அடித்தபடியே உள்ளார்கள்
அந்தப் பறையானது ஸ்ரீ ரெங்கநாதனின் கல்யாண குணங்கள் என்னும் கயிற்றால் இழுத்துக் கட்டப்பட்டுள்ளது
இந்தப் பறையில் அடிக்க உதவும் கோல்களாக யதிராஜரின் நூல்கள் உள்ளன
ஸ்ரீ ரெங்கத்தில் வாழவைத்தவிர வேறே ஒன்றையும் மனத்தாலும் நினைக்காத அநந்யார்ஹ சேஷ பூதர்கள்
மகிழ்ந்து கொண்டே இருக்கும் படி அந்தப்பறை ஒலித்துக் கொண்டே இருக்கிறது
ராமானுஜரின் படைப்புகளைப் படிப்பதன் மூலம் அறிவுப்பூர்வமாக உற்சாகமடைந்து,
மீண்டும் மீண்டும் தன்னிச்சையாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறார்கள்.
இந்த மேளம் அடிக்க, நடனம் இசைந்துள்ளது.
இது யதிகளின் ராஜாவான யதிராஜாவின் வருகையை உறுதியுடன் பறை சாற்றும்!

ஸ்ரீரங்கம்–ரங்கம் என்றாலே நாடக மேடை.
இங்கு, உடையவரின், ஸித்தாந்த ப்ரசாரம் அதிகமாக நடந்தது.
இங்கு, உடையவரின் புகழைப் பேசுபவர்களின் வார்த்தைகளைக் கேட்டு,
ரஸிகர்கள் ஆனந்தக் கண்ணீருடன் நர்த்தனம் செய்கிறார்கள்.
உடையவரின் கீர்த்தி ஒரு வாத்யம் –.பேரிகை . அதன் பெயர்–படஹம்.
இதில் , உடையவரின் ஸ்ரீஸூக்திகள் என்கிற கோல்களால் (குச்சிகள் ) ரஸிகர்கள் , அடிக்கிறார்கள் .
இந்தக் கோல்கள் , ஸ்ரீஸூக்திகளில் உள்ள இனிமையான அர்த்தமுள்ள சொற்களால் கட்டப்பட்ட கோல்கள்.
இது சப்த சௌடவம் ,அர்த்த சௌடவம் என்பர். இதனால், படஹவாத்யத்தை ரஸிகர்கள் அடிக்கிறார்கள்.
இந்த ஓசையைக் கேட்டு, ஸ்ரீரங்கவாஸிகள் ஆனந்திக்கிறார்கள்.ஆனந்தத்தில் ஆடுகிறார்கள் .—ரங்கம் அல்லவா !
இந்த வாத்ய ஓசை நாடெங்கும் பரவியது. பரமாத்மா ஸத்யமானவன் ;
அவனை வைகுண்டத்தில் அடைவதே மோக்ஷம் ;இதுவே நித்தியமானது. என்கிற ஸித்தாந்தம் பரவியது

யதிராஜர் யசஸ் ஆகிற படஹம்-பறை -போன்ற வாத்ய விசேஷம் –
வேதாந்த விசாரம் ஆகிற விளையாட்டில் ரசிகர்களால் –
பொருள் செறிந்த திவ்ய ஸூ க்திகள் ஆகிற தண்டத்தால் தட்டப்பட்டு
ஸ்ரீ ரெங்க வாசிகளான ரசிகர்களை தாமாகவே களி நடம் புரியச் செய்து ஒலிக்கிறது –
ஸ்ரீ ரெங்க வாசம் விரும்புவர் நாட்டியகாரர் என்று கொண்டு -நாட்டியம் அன்றாட வாழ்வு –
பறை ராமானுஜர் புகழ் –
வேத விற்பன்னர் பறை அடிப்பவர்கள்
ஸ்ரீ ரெங்க நாதனது திருக் கல்யாண குணங்கள் அந்த பறையில் கட்டப் பட்ட கயிறுகள் –
ஸ்வாமி ஸ்ரீ ஸூ க்திகள் பறையை அடிக்கும் குச்சி –
இப்படிப் பட்ட ஸ்ரீ ரெங்க வாழ்வே அநந்ய பிரயோஜனர் மகிழ்ந்து இருக்கும் படி –
அந்த பறை ஓசை திக்கு எட்டும் முழங்கு கின்றதே

—————————————

ராமானுஜரின் கீர்த்தி நாடெங்கும் பரவியதைப் பேசியவர் , ஸ்ரீஸுக்திகளின் கீர்த்தியைச் சொல்கிறார்.

36-இதம் பிரதம சம்பவத் குமதி ஜால கூலங்கஷா
ம்ருஷா மத விஷா நல ஜ்வலித ஜீவ ஜீவாதவ
ஷரந்தி அம்ருதம் அஷரம் யதி புரந்தரச்ய உக்தய
சிரந்தன சரஸ்வதீ சிகுர பந்த சை ரந்த்ரிகா-

இந்தக் கலிகாலத்தில் விதவிதமான பல மாதங்கள் தலையெடுத்து விபரீதமாக புத்தி கொண்டதாக உள்ளனர்
அந்தக் கூட்டங்கள் அனைத்துயமே வேருடன் அறுக்க வல்லது ஸ்வாமியின் கிரந்தங்கள்
பொய் என்பதையே மட்டும் குறிக்கோளாகக் கொண்டு அந்தத்தீ மூலம் ஜீவர்களை
விஷம் போல் அழிக்கும் மாதங்களில் இருந்து ஜீவர்களை ரக்ஷித்து அருளும் –
வேதம் என்ற அரசியின் உபநிஷத் என்ற கூந்தலை அழகாகச் சீவி அலங்கரிக்கும்
பணிப் பெண்கள் போன்றவை ஸ்வாமியுடைய கிரந்தங்கள்
அவை அழிவற்ற மோக்ஷம் பெரும் அருளை நம் மேல் பொழிகின்றன
இவை அனைத்தும் ராமானுஜரின் படைப்புகளால் சாதிக்கப்படுகின்றன.

மிகவும் ப்ராசீனமான வைதிக தரிசனத்தை உபபாதிக்கும் யதீந்திரருடைய திவ்ய ஸூக்திகள் –
வேதத்துக்கு புறம்பான -மிகவும் பிற்பட்ட காலத்தில் உண்டான
குமதிகளுடைய மதங்களை நசிக்கப் பண்ணியும் –
மாயாவாதம் ஆகிற விஷ அக்னியால் தப்பிக்கும் ஆத்மாக்களுக்கு ஜீவாதுவாய் இருந்து கொண்டும் –
வேத மாதின் அளகபாரமான உபநிஷத்துக்களை சிக்கிவிடுத்து அழகாகப் பண்ணும்
சைரந்திரிகை யாகை யாகப் பணி செய்தும்
நித்தியமான மோக்ஷ சாம்ராஜ்யத்தை அளிக்கின்றன –

புதிது புதிதாகத் தோன்றுகிற துர்ப்புத்தி உடைய பிற மதத்தினரின் கூட்டத்தைப் பேர்ப்பனவாய்
பொய்யையே கொண்ட மதமாகிய விஷம் கலந்த தீயினால் எரிந்த , ஜீவாத்மாக்களை பிழைப்பிக்கும் மருந்துகளாய்
வேதவாக்காகிற அரசியின் உபநிஷத் பாகமாகிய கூந்தலை வாரி முடித்து அலங்கரிக்கிற பணிப் பெண்களாயுள்ள
ஸ்ரீ பாஷ்யகாரருடைய ஸ்ரீஸுக்திகள் அழிவற்ற மோக்ஷத்தை மொழிகின்றன என்கிறார் .

குதர்க்கவாதிகளின் கொழுப்பை அடக்குவதாயும் ,
மாயாவாதிகளின் மதமாகிய விஷ அக்னியால் , வெந்துபோன ஜீவராசிகளுக்கு உயிர் ஊட்டுபவையாகவும்
அநாதியான ஸ்ருதி ,
யுவதியின் கலைந்துபோன கேசங்களை (வாக்யங்கள் ) சேர்த்து முடிக்கும் தாதி போன்றவையுமான
யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,குறையாத மோக்ஷமாகிற அமுதத்தைப் பெருக்குகின்றன

4 வது வரியான ” சிரந்தந ஸரஸ்வதீ சிகுர பந்த ஸைரந்த்ரிகா : || “
இது, பழமையான ஐதிஹ்யத்தை உணர்த்துவதாகச் சொல்வர்.
ஸ்ரீபாஷ்யகாரரின் அந்திம காலத்தில்,ப்ரஹ்மவித்துக்களான சில சிஷ்யர்கள்,
தம் ஆசார்யன் பிரிவை எண்ணி வருத்தமும் , பிற்பாடு சித்தாந்தத்தை ஸ்தாபிக்கவல்ல
இத்தகைய ஆசார்யன் இல்லாமல் போவதை எண்ணிக் கவலையும் கொண்டனர்.

இவர்களை நோக்கி, எம்பெருமானார் ,
நீங்கள் என் சிஷ்யையான கொங்குப் பிராட்டியைப் போய்ப் பாருங்கள் உங்கள் கவலை நீங்கும் என்றாராம்.

இவர்களும், அப்படியே சென்று பார்த்து , தங்கள் கவலையைச் சொன்னார்களாம்
இவர்கள் சொன்னதைக் கேட்டுக்கொண்ட கொங்குப்பிராட்டி ,வீட்டுக்குள் சென்று, தலைக்குப் பூசும் தைலம் , சீப்பு , சிவப்பு
மற்றும் வெள்ளைப் பட்டுக்கயிறு இவற்றை எடுத்துவந்து, இவர்கள் எதிரே அமர்ந்து , தலைக்கேசத்துக்குத் தைலம் தடவி,
கேசத்திலுள்ள சிக்கல்களை நீக்கி ,நன்கு வாரி, பின்னி அதைச் சிவப்புக் கயிற்றினால் ,நன்றாகக் கட்டினாளாம் .
பிறகு , சிறிது நேரம் சுகமாக இளைப்பாறினாளாம் .
பிறகு, வெள்ளைப் பட்டுக் கயிற்றால் மறுபடியும் இறுகக் கட்டி இவர்களை வணங்கி , விடைகொடுத்து அனுப்பிவிட்டாளாம்

இவர்கள் நேரே உடையவரிடம் வந்தார்கள் ;நடந்ததைச் சொல்லி , எங்களுக்கு ஒன்றும் புரியவில்லையே என்றார்கள்

எம்பெருமானார் , புன்சிரிப்புடன் விளக்கினாராம்
சிஷ்யர்களே—இந்தப் இந்தப்பெண்ணை ,சாதாரணமாக எண்ணவேண்டாம் ;
வேதங்களே இப்பெண்ணுருவம் பூண்டன
நமது வாக்யார்த்தங்கள் ,உபநிஷத் அர்த்த நிர்ணயம் இவைகளினால் நமக்கு சிஷ்யையாக நடித்தாள் ;
இவளுடைய கூந்தலே உபநிஷத் வாக்யங்கள் ;
இவள் கூந்தலை முதலிலே உதறியது , பிற மதஸ்தர் சொன்ன தவறான அர்த்தங்கள் ;
தைலம் தடவியது ,வேதார்த்த நிர்ணயம் செய்தது;சிக்கலை எடுத்தது , கூந்தலைப் பின்னியது எல்லாம்
விபரீத அர்த்தங்களைக் கண்டித்து உபநிஷத் வாக்யங்களின் ஒற்றுமையை உறுதிப் படுத்தியதைக் காட்டும்.
சிவப்பு பட்டுநூலால் கட்டியது, சிவப்பு நிற காஷாயம் அணிந்த நான்,பிற மதஸ்தர்களால் ,
சித்தாந்தத்துக்குக் கேடு வராதபடி ஸ்ரீபாஷ்யாதி நூல்களை இயற்றி,ப்ரசாரம் செய்தது. சிறிது நேரம் சுகமாக இளைப்பாறியது,
வேதவேத்யனான தன்னுடைய நாயகனோடு, சேர்ந்து இன்பமாக இருந்த நிலையைத் தெரிவிக்கிறது.

உடனே அவர்கள், அப்படிஎன்றால், வெள்ளைப் பட்டுநூலால் கட்டியதற்குப் பொருள்—-? என்று கேட்டார்கள்.
அதற்கு,
எம்பெருமானார், நாமே, சிலகாலம் கழித்து, மீண்டும் காஞ்சியில் தூப்புலில் , வேதாந்த தேசிகனாக அவதரிக்கப் போகிறோம்;
ஆயுள் முழுவதும் க்ருஹஸ்தாஸ்ரமத்திலேயே இருந்து,
க்ரந்தங்கள் உபதேசங்கள் மூலமாக நம் சித்தாந்தத்தை மேலும் வளர்ப்போம்;
பிறமதவாதிகளை வாதப்போரில் வெல்வோம்;

இதனால்தான்
வேங்கடசாவதாரோயம் தத்கண்டாம் சோதவா பவேத் |
யதீந்த்ராம்சோதவேத்யேவம் விதர்க்யாயாஸ்து மங்களம் ||
என்று, ஸ்வாமி தேசிகன் ஸ்ரீநிவாசனின் அவதாரமோ,
அவனுடைய திருமணியின் அவதாரமோ, அல்லது யதிராஜரின் அவதாரமோ என்று ஊஹிக்கப்படுபவருக்கு
மங்களம் என்று சொல்வதாக, பறவாக்கோட்டை ஸ்ரீமதாண்டவன் தனது வ்யாக்யானத்தில் சொல்கிறார்.

————————————————–

ஸ்ரீ ஸூக்தி பிரபாவத்தை -மேலும் அனுபவிக்கிறார் –

37-ஸூதா அசன ஸூ துர்க்ரஹ ஸ்ருதி சமஷ்டி முஷ்டிந்த்ய
கதா ஆஹவம் அசௌ கதான் கபட சௌகதான் கண்டயன்
முனி மனஸி லஷ்மண முதம் உதஞ்ஜயதி அஞ்ஜசா
முகுந்த குண மௌக்திக ப்ரகர ஸூக்திபி ஸூக்திபி

உப்புச்சாற்றைப் பருகும் தேவர்களாலும் எளிதில் அறிந்து கொள்ள இயலாத ஆழ்ந்த பொருள்களை
யுடைய வேதங்களை மிகவும் எளிதாக ஒரு பிடியில் பருக வல்லவர் நம் ஸ்வாமி,
புத்தாதி பாஹ்யர் வாதங்களை எளிதாக நிரஸித்து அருளினார்
அவருடைய கிரந்தங்கள் அனைத்துமே எம்பெருமானின் கல்யாண குணங்கள் என்னும் முத்துக் குவியல்களை
உருவாக்கிப் பாதுகாக்கும் முத்துச் சிப்பி போல் உள்ளன
இதன் மூலம் நம்மை பேர் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்துகின்றார் .
இறைவன் ஒரு கல்யாண குண சாகரம் என்பதை விளக்கி, முத்துக்களை, அதாவது இறைவனின் குணங்களை
வரிசையாகக் கொண்ட சிப்பி ஓடுகளாகச் செயல்பட்டு நம் இதயங்களை மகிழ்விக்கிறார் .

உடையவரின் ஸ்ரீஸுக்திகளுக்கு, பெருமை எப்படி வந்தது ? சொல்கிறார்,ஸ்வாமி தேசிகன்.
ஸ்ரீபாஷ்யம் போன்ற ஸ்ரீஸுக்திகள் ,மேலெழுந்தவாரியாக அர்த்தம் பண்ணினால்,
அத்வைதத்தைக் கண்டிப்பதாகத் தோன்றினாலும்,
பகவானின் கல்யாண குணங்களை,உறுதிப்படுத்திச் சொல்கின்றன என்கிறார் .
2வது வரியில், உடையவரை “அஸௌ ” என்பதற்கு, உடையவரே நேரில் ப்ரத்யக்ஷமாகி,
ஸ்வாமி தேசிகனுக்குப் பிற மத கண்டனங்களை உபதேசிக்கிறார் என்று வியாக்யானம் இடுகிறார்கள்.
உடையவரின் ஸ்ரீஸுக்திகள் ,சிப்பிகளைப்போல ! இவற்றில், பகவானின் கல்யாண குணங்கள் என்கிற முத்துக்கள் உள்ளன.
அதனால், எனது மனத்தில், ஆனந்தம் வெள்ளப் பெருக்கு எடுக்கிறது, என்கிறார் .

ஸமஸ்த கல்யாண குணாத்மகன் பகவான் என்று ஸ்தாபித்து –
பகவத் குணங்களான முத்துக்களுக்கு இவை முத்துச் சிப்பி போல் உள்ளன –
அமுதம் உண்ணும் தேவதைகளுக்கும் நிலம் இல்லாத மறைகளின் உட் பொருளை கையிலங்கு நெல்லிக் கனியாகக் கண்டு
கொண்டுள்ள ஸ்வாமி கபடர்களைத் தம் ஸ்ரீ ஸூக்திகளால் கண்டித்து நம் மனத்தில் ஆனந்தத்தை வளரச் செய்கிறார் –

——————————————————–

உடையவர், ப்ரஹ்மத்தைக் காத்தவர் என்கிறார்.

38-கபர்த்தி மத கர்த்தமம் கபில கல்பநா வாகுராம்
துரத்யயம் அதீத்ய தத் த்ருஹிண தந்திர யந்திர உதரம்
குத்ருஷ்டி குஹ நா முகே நிபதத பரப்ரஹ்மண
கர க்ரஹ விசஷணோ ஜயதி லஷ்மண அயம் முனி

பர ப்ரஹ்மம் சைவம் என்னும் சேற்றிலே சிக்கியது
கபில முனிவரின் சாங்க்ய வலையிலே சிக்குண்டது
நான்முகன் கண்ட யோக ஸாஸ்த்ரம் என்னும் இயந்திரத்தின் நடுப் பகுதியிலே அகப்பட்டது
இவற்றையும் தாண்டி மாயாவாதிகளின் வாதங்களிலே சிக்குண்டது
இவை அனைத்தையும் நீக்கி பர ப்ரஹ்மத்தை மிகவும் எளிதாக உயர்த்த வல்லவராக
உள்ள ஸ்வாமி அனைவரிலும் மேம்பட்டவராக உள்ளார்-

பரப்ரஹ்மம் —
சைவம் என்கிற சேற்றில் விழாமல் அதைத் தாண்டி,
கபிலரின் சாங்க்யமத வலையில் அகப்படாது தப்பித்து,
சிக்கல் உள்ள சார்வாகமத யந்த்ரதந்த்ரங்களில் புகாமல் பிழைத்து, வந்தது.
சங்கரரின் மாயாவாதத்தில் –அதன் வாயில் அகப்பட இருந்த சமயத்தில்,
பரப்ரஹ்மத்தைக் கைகொடுத்துக் காப்பாற்றியவர் , யதிராஜர் .
அதனால், அவர் மேன்மையாக விளங்குகிறார் என்கிறார்
ஜயகோஷம் செய்கிறார்–ஜய ஜய யதிராஜ

பரம் பொருளான புருஷோத்தமனைப் பல பெரிய ஆபத்துக்களின் நின்றும் ரக்ஷித்து அருளினவர் எம்பெருமானார் –
கடக்க அரிதான சைவம் என்ற சேற்றைக் கிடந்து சாங்கியருடைய அப்ரமாணிகமான மதமாகிற வலையில் இருந்து தப்பி –
த்ருஹிண -மதமாகிற -யோக மதம் -சுழலும் யந்திரத்தின்-மத்யத்தையும் தாண்டி
குத்ருஷ்டிகளான குகை வாயிலில் விழுந்து கொண்டு இருந்த பர ப்ரஹ்மம்
எம்பெருமானைக் கை கொடுத்து ஆபத்தின் நின்றும் விடுவிக்கும் சாமர்த்தியம் வாய்ந்த
இந்த லஷ்மண முனி விஜய ஸ்ரீ யுடன் பிரகாசிக்கிறார் –

—————————————–

39-கணாத பரிபாடிபி கபில கல்பநா நாடகை
குமாரில குபாஷிதை குரு நிபந்தன க்ரந்த்திபி
ததாகத கதா சதை தத் அநுசாரி ஜல்பை அபி
பிரதாரிதம் ஜகத் பிரகுணிதம் யதீந்திர உக்திபி –

ராமானுஜரின் உன்னதமான நூல்கள் களத்தில் இறங்கி மக்களின் மனசாட்சியை சரியான நேரத்தில் உருவாக்கியது.

கணாதாரின் -வைசேஷிகரின் பரம அணுவே காரணம் என்பதையும்
கபிலனின் கற்பனை -சாங்க்ய தத்வம்
ஏமாற்றம் முற்றிலும் நாடகம் மற்றும் புரளி
குமாரிலா பட்டரின் மீமாம்ஸா வாதமும்
பிரபாகரர் போதித்த முடிச்சு போன்ற அவிழ்க்க முடியாத புதர்களாலும்
புத்தரின் பல்வேறு புனைகதைகளாலும் சூன்ய வாதங்களாலும் ,
அவர்களை போன்றே மாயாவாதிகளின் வாதங்களாலும் இந்த உலகம் பெரிதாக குழம்பி நின்றது
இந்த நிலையானது ஸ்வாமிகளின் கிரந்தங்களால் சீராக்கப் பட்டது

உலகம் ஏமாந்த தருணம்—-
கணாதர் என்பவரின் பரிபாஷைகள்;
கபிலரின் கற்பனைகள்;
குமாரிலரின் குறையுள்ள பேச்சுகள்;
ப்ரபாகர குருவின்,சிக்கலான நூல் முடிச்சுகள்;
புத்தரின் கட்டுக் கதைகள்;
இவற்றாலெல்லாம் ,பிறந்து பரவிய அர்த்தமில்லாப் பேச்சுகள் ;
இப்படி உலகம் ஏமாந்து இருந்த சமயத்தில், எம்பெருமானார் ஸ்ரீஸுக்திகள் பிறந்து பரவி வளர்ந்தன;
உலகம் தன்னை சுதாரித்துக் கொண்டது.
இப்படி, உண்மையை உலகுக்கு, தன்னுடைய ஸ்ரீஸுக்திகளின் மூலமாக உணர்த்தியவர், யதிராஜர்

தாங்கள் கெட்டது போதாது என்று லோகத்தாரையும் தாங்கள் கல்பித்த அபார்த்தங்களாலே
கெடுத்தவர்கள் கணாதர் கபிலர் குமரில பட்டர் பிரபாகர் புத்தர் இவர்களை
தம் ஸ்ரீ ஸூக்திகளால் நிரசித்து லோகத்தார் க்ஷேமத்தை பெருக்கியவர் நம் ஸ்வாமி –

——————————

ஸ்வாமியுடைய சிஷ்ய அக்ரேஸர்களுடைய பெருமையை பரக்க உபபாதிக்கிறார் –

40-கதா கலஹ கௌதுக க்ரஹ க்ருஹீத கௌதஸ்குத
ப்ரதா ஜலதி சம்ப்லவ க்ரசன கும்ப சம்பூதய
ஜெயந்தி ஸூ திய யதி ஷிதிப்ருத் அந்திக உபாசநா
பிரபாவ பரிபக்த்ரிம ப்ரமிதி பாரதீ சம்பத

ஸ்வாமியின் திருவடி நிழலில் எப்போதும் அண்டி நின்று அதனாலேயே
பெருமை -முழுமையான ஞானம் வாக் வன்மை பெற்றவர்கள்
வாதம் செய்ய வல்ல புற சமயிகள் -உத்ஸாகம் என்னும் பிசாசால் பீடிக்கப்பட்ட புற மதவாதிகள் யுடைய
புகழ் என்னும் கடலை அகஸ்தியர் போன்று உறிஞ்சி விடுவதில் வல்லவராக அல்லவா உள்ளனர் –
ராமானுஜரின் காலடியில் அருகாமையில் படிக்கும் பாக்கியத்தைப் பெற்ற அறிஞர்களுக்கு முதிர்ந்த ஞானம் இருக்கிறது,
அதுவே அவர்களின் செல்வம். அத்தகைய அறிஞர்கள் உலகை மகிழ்விக்கப் போகிறார்கள்.

“சிஷ்யஸ்தேஹம் ” என்று, பணிவு பக்தியுடன் தன்னைவந்து ஆச்ரயிக்கும் சிஷ்யர்களுக்கு, உடையவர்,
மறுபடியும் சந்தேகத்துக்கு இடமில்லாமல், கற்பிப்பார்.
இந்த சிஷ்யர்கள்–குட்டி அகஸ்த்யர்கள் பிறமதவாதிகளின் , புகழ் என்கிற சமுத்ரம் பொங்கிய போது,
இந்த சிஷ்யர்கள், குட்டி அகஸ்த்யர்களாக ஆகி, அந்த சமுத்ரத்தையே பானம் செய்துவிட்டார்கள்,
( திருக்குருகைப் பிரான் பிள்ளான், கிடாம்பி ஆச்சான் ,கூரத்தாழ்வான் போன்ற சிஷ்யர்கள் )
இவர்கள் வித்யா ஸம்பன்னர்கள் ;ஸத்ஸம்ப்ரதாய நிஷ்டர்கள் ;ஸ்ரீவைஷ்ணவ வித்வான்கள் .

இப்படி புறச் சமயிகள் வாதம் பண்ணுபவர்கள் எங்கே எங்கே என்று கடல் போலே பொங்கி வந்தாலும் –
அகஸ்தியருக்கு ஒப்பான சிஷ்யர்கள் -கடல் நீர் வற்றும் படி ஆசமனம் பண்ணினது போலே –
இக்கடலையும் உலர்த்த வல்லவர்கள் –
ஆழ்வான் ஆண்டான் பிள்ளான் போல்வார் அவர்களை அடக்க வல்லவர்கள் –
எம்பெருமானார் திருவடிகளில் கைங்கர்ய ப்ரபாவத்தால் இவர்கள் வித்யா பூர்ணர்களாய் –
தத்வ ஞானிகளாய் –
ஜய சீலர்களாய் -விளங்குகிறார்கள் –

———————————————————————

ஸ்வாமியுடைய திருவடி சம்பந்திகளுடைய திருவடி சம்பந்த பலத்தை துணை கொண்டு
தற்காலம் உள்ள பாஹ்ய குத்ருஷ்டிகளின் தலை மேல் கால் வைத்து நிரசனம் பண்ண வல்லேன் -என்கிறார் –

41-யதீஸ்வர சரஸ்வதீ ஸூரபித ஆசயா நாம் சதாம்
வஹாமி சரணாம் புஜம் பிரணதி சாலிநா மௌளிநா
ததன்ய மத துர்மத ஜ்வலித சேதஸாம் வாதி நாம்
சிரஸ்ஸூ நிஹிதம் மயா பதம் அதஷிணம் லஷ்யதாம்

ராமானுஜரின் படைப்புகளின் ஞான நறுமணத்தைப் பெற்ற மஹான்களின் தாமரை பாதங்களை என் தலையில் சுமக்கிறேன்.
ஆனால் அதே சமயம் உலகமும் பார்க்கட்டும் என்று சொல்கிறேன்.
எரியும் பைத்தியக்கார வெறியுடன், ராமானுஜரின் அமைப்பை எதிர்த்துப் போட்டியிடுபவர்களின்
தலையில் நான் என் இடது காலை வைக்கத் துணிவேன்.

வேதவிரோதமதங்கள் , உடையவராலும், அவரது ஸ்ரீஸுக்திகளாலும் மீண்டும் தலையெடுக்காதபடி செய்யப்பட்டன.
அவரது பெருமைமிகு சிஷ்யர்கள் பிள்ளான் , ஆச்சான் போன்றவர்கள் திருநாடு அலங்கரித்தார்கள்.
அப்புள்ளாரும் ,ஸுதர்சன ஸுரியும் வயோதிகம் அடைந்து விட்டார்கள்.
இதுதான் தக்க தருணம் என்று, பிற மதஸ்தர்கள் , எதிரிகள் ஒன்று சேர்ந்து,வாதப்போருக்கு ஆயத்தமான சமயத்தில்,
ஸ்ரீவைஷ்ணவர்கள் ,என்செய்வது என்று கலங்கி இருந்தபோது,
எதிரிகளின் மாயாவாதங்களை நிரஸித்த யதிராஜரின் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை
மறுபடியும் ஸ்தாபித்தவர்,ஸ்வாமி தேசிகன்.
இந்த ஸ்லோகத்தில், ஸ்வாமி தேசிகன்,
அப்புள்ளார் போன்ற பூர்வாசார்யர்களின் திருவடிகளைத் தலையில் தாங்கினேன் .
அந்த பலத்தினால்,தீய மனம் கொண்ட எதிரிகளின் தலையில் ,
என் இடதுகாலை வைத்து,அவர்கள் தலையை இடறுகிறேன் —என்கிறார்

யதிராஜ திவ்ய ஸூக்திகளின் வாசனை கமழும் மனத்தினரான மஹான்களுடைய திருவடித் தாமரைகளை
சென்னிக்கு அணியாகக் கொண்ட அடியேன் எம்பெருமானார் தரிசனத்துக்குப் புறம்பான மதங்களில்
துர்மானத்தால் மனதை வைத்துள்ள புறச் சமயிகள் தலைகளை
என் இடதுகாலால் மிதிக்கிறேன் -யாவரும் காண்க என்று வீர வாதம் பண்ணுகிறார் –

—————————————————-

எம்பெருமானார் தரிசனத்தில் நிலையாய் இருந்து பாபம் அற்று ஸூ கமாய் இருப்பாயாக –
என்று தம் திரு உள்ளத்தை நோக்கிச் சொல்கிறார் –

42-பஜஸ்வ யதிபூபதே அநிதமாதி துர்வாச நா கதத்வ
பரி வர்த்தன ச்ரம நிவர்த்தநீம் வர்த்தநீம்
லபஸ்வ ஹ்ருதய ஸ்வயம் ரத பத ஆயுத அனுக்ரஹ
த்ருத ப்ரஹ்ருதி நிஸ் த்ருடத் துரித துர்வ்ருதிம் நிர்வ்ருதிம்

ஓ என் மனமே! ராமானுஜரின் ஒரு தெளிவான பாதையைத் தேர்ந்தெடுங்கள்,
அதில் இழியவே பல்வேறு பாதைகளில் அலைந்து திரிவதில் இருந்து விடுபடும்.
அது சக்ராயுதம் ஏந்தும் எம்பெருமானின் கிருபா மழையை உங்கள் மேல் பொழிவிக்கும்
அது உங்கள் பாவங்களைக் கழுவுவதற்கு, உங்கள் மீது வேகமாகப் பெருகும்.
இதன் மூலம் அந்தமில் பேர் இன்பம் உடனே கிட்டி விடும்

இந்த ஸ்லோகத்தில் “மனஸ் “ஸுக்குச் சொல்கிறார்–பாகவதர்களுக்கும் சொல்வதாவது –
பிற மதங்கள்—முள்ளும் கற்களும் நிறைந்த பாதை.
அதில் செல்லாமல் ,
யதிராஜரால் நன்கு அமைக்கப்பட்ட ஸித்தாந்த வழியில் செல்வாயாக !
பகவானின் அனுக்ரஹ வெள்ளத்தால் ,பாபமாகிய தடங்கல் அழிய ,
வைகுந்தம் சென்று பரமானந்தத்தை அனுபவிப்பாய் என்கிறார்

ஓ மனமே அநாதியாக துர்வாசனையால் தடம் கெட்டுத் திரிவதால் உண்டான இன்னல்களைப் போக்கும்படி யுள்ள
செப்பன் இட்ட மார்க்கமாகிற சத் சம்பிரதாயத்தைப் பற்றினால்
கை கழலா நேமியனான எம்பெருமானின் அனுக்ரஹத்தால்
பாபம் அற்ற வாழ்ச்சி பெறுவாய் என்று தம் திரு உள்ளத்துக்கு உபதேசிக்கிறார் –

——————————————-

எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்திகள் சார தமமானவை –
அதனால் மதிக்க முடியாத பெருமை வாய்ந்தவை -என்கிறார் –

43-குமதி விஹித க்ரந்த்த க்ரந்த்தி ப்ரபூத மதாந்திர
க்ரஹிள மனச பஸ்யந்தி அல்பம் யதீஸ்வர பாரதீம்
விகட முரபித் வஷ பீடீ பரிஷ்கரண உசித குலகிரி
துலா ஆரோஹே பாவீ கியான் இவ கௌஸ்துப-

வீணான இயங்கியல்வாதிகளின் தவறான புத்தகங்களில் உள்ள தவறான எண்ணங்களால் உலகம் நிறைந்துள்ளது.
அவர்கள் மீது சாஃப்ட் கார்னர் உள்ள எவரும், வெறி பிடித்த மனம் கொண்டு வலிய முடிச்சுகளால்
கட்டப்பட்டவர்களாய் இருந்து ராமானுஜரின் படைப்புகளை அளவிலும் மதிப்பிலும் அற்பமாகக் கருதுவார்கள்.
இருப்பினும், அத்தகைய மதிப்பீட்டால் நாங்கள் புண்படுத்தப்படவில்லை, ஏனெனில்
இறைவனின் மார்பில் உள்ள ஸ்ரீ கௌஸ்துப ரத்தினம் ஒரு உயர்ந்த மலைச் சங்கிலியுடன் ஒப்பிடும் போது
அளவில் அற்பமானதாகத் தோன்றும் என்றாலும் எல்லாவற்றிற்கும் மேலாக, மதிப்பிடும் அன்றோ

பிற மதங்களில் தர்க்கவாத நூல்கள் நிறைய இருக்கின்றன.
அந்த மதவாதிகளுக்கு, உடையவரின் ஸித்தாந்த நூல்கள், சிறியதாகவே தோன்றும்.
பகவானின் திருமார்பில் அணிகலனாக இருக்கும் “கௌஸ்துப மணி” மிகவும் சிறந்தது;
ஆனால், சிறியது.
குலாசலம் என்கிற மலை மிகப் பெரியது.
தராசில் எடைபோட்டால் மலை இருக்கும் தட்டு அடியிலேயே இருக்கும்;
எடையைக்கொண்டு சிறப்புகளைக் கூற முடியுமா ?
பிற மத நூல்கள் நிறைய இருந்தாலும் குலாசலம் என்பதற்காக உயர்வைப் பெறாது.
கௌஸ்துப மணியைப் போன்ற ஸ்ரீபாஷ்ய ஸுக்திகள் உயர்ந்தவை.
ஸாரமான நூல்களும் ஸம்பிரதாயமும் உள்ளவை–என்கிறார்,

இதர மதஸ்தர்கள் அநேக விஷயங்களை சம்பந்தா சம்பந்தம் இன்றி முடித்து இருப்பதால்
அவர்களுடைய கிரந்தங்கள் விஸ்தாரமாய் இருக்கும் -பொருள் இராது –
எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்திகள் சாரமாய் இருப்பதால் சிறியவை என்று சொல்லி அவமதிப்பார் சிலர் –
பெரிய பாராங்கல்லை தராசின் ஒரு தட்டிலும்
பெரிய பெருமாள் திரு மார்பை அலங்கரிக்கும் ஒப்புயர்வற்ற கௌஸ்துபத்தை ஒரு தட்டிலும் வைத்தால்
எது எடை அதிகமாக இருக்கும் —
அதிக எடை இருப்பதால் பாராங்கல் உயர்ந்ததாகி விடாது என்றபடி –

—————————————-

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகளின் பெருமை மந்த மதிகளுக்கு நிலம் இல்லை என்கிறார் –

44-ஸ்த்தவிர நிகம ச்தோம ஸ்த்தேயாம் யதீஸ்வர பாரதீம்
குமதி பணிதி ஷோப ஷீபா ஷிபந்து பஜந்து வா
ரச பரிமள ச்லாகா கோஷ ஸ்ப்புடத் புட பேதனம்
லவண வணிஜ கர்ப்பூர அர்க்கம் கிம் இதி அபிமன்வதே

ராமானுஜரின் படைப்புகள் பழங்கால வேத வாசகங்களில் முரண்பாடுகள் ஏற்படும் போதெல்லாம் அவற்றைத் தீர்க்க நமக்கு உதவுகின்றன.
தர்க்க வல்லுனர்களின் கேடுகெட்ட வாதங்களால் பாதிக்கப்பட்டு, நல்ல புத்தியை இழந்தவர்கள்,
ராமானுஜரின் படைப்புகளை விட்டுவிடலாம், இல்லையென்றால், அந்தப் படைப்புகளைப் படிக்கட்டும். அது என்ன விஷயம்?
பச்சைக் கற்பூரத்தின் சுவையை புகழ்ந்து பேசும் சத்தம் மிக அதிகமாக இருக்கும் ஒரு நகரத்தில்,
சாதாரண உப்பு வியாபாரிகள் பச்சைக் கற்பூரத்தைப் பற்றி எப்படிப் பதிலளிப்பார்கள்? இது வெளிப்படையானது
(அவர்களுக்குத் தெரியாது அல்லது ரசிக்க முடியாது!-இவர்களால் பச்சைக் கற்பூரம் தனது மஹிமையை இழக்காது அன்றோ )

வேதங்கள் ,உபநிஷத்துக்கள் —இவைகளின் கருத்துக்களை விளக்கும் ,ஸ்ரீ உடையவரின் ஸ்ரீஸுக்திகளை ,
குயுக்தி வாதங்கள் செய்பவர் இகழ்ந்தாலும் , ஏற்றாலும் —இரண்டும் எமக்கு ஒன்றே.
தனது சுவை, வாஸனை இவை பற்றிக் கொண்டாடிப் பேசப்படுபவர்களால் உயர்வாகக் கருதப்படும்
பச்சைக் கற்பூரத்தை, உப்பு விற்பவர்கள் அறியமாட்டார்கள் என்கிறார்

சிக்கல்களை விடுவித்துத் தெளிவாக உண்மைப் பொருளை உபபாதிக்கும் யதீஸ்வருடைய ஸ்ரீ ஸூக்திகளை
புத்தி கேடர்களான புறச் சமயிகளின் பேச்சுக்களால் மனக் கலக்கம் அடைந்து மதி இழந்தோர்
கொண்டால் என்ன -விட்டால் என்ன- ஒரு குறையும் இல்லை –
மிக உயர்ந்த வஸ்து என்று ஊர் அறிந்த கற்பூரத்தின் பெருமையை -விலையை
உப்பு விற்பவன் எப்படி அறிவான்–மூட்டை என்ன விலை – என்று தான் கேட்ப்பான் –

———————————

45-வஹதி மஹி ளாம் ஆத்ய வேதா த்ரயீ முகரை முகை
வர தநுதயா வாம பாக சிவஸ்ய விவர்த்ததே
ததபி பரமம் தத்த்வம் கோபீ ஜனச்ய வசம் வதம்
மதன கதனை ந க்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா-

மும்மூர்த்திகளில் பிரம்மா வேதம் ஓதும் முகங்களில் தன் மனைவியைத் தன் நாக்கில் சுமந்துள்ளார்.
சிவனின் இடது பாதி முழுவதையும் அவன் மனைவி எடுத்துக் கொள்கிறாள்.
உயர்ந்த பரதத்வமான கண்ணனோ , தனது சொந்த வழியில், கோபியர்களுக்கு அடி பணிந்தார்.
அப்போது, ​​பெண் பால் காதலுக்கு அடி பணியாதவர்கள் ராமானுஜரின் சீடர்கள் மட்டுமே!
யதிராஜ அடியவர்கள் காமாதி தோஷங்களில் சிக்கிக் கொள்வதில்லை என்றவாறு

யதிராஜருடைய விசிஷ்டாத்வைத ஸித்தாந்தம் ,கௌஸ்துபமணி பச்சைக் கற்பூரம் போன்றது –
இதற்குக் காரணம் என்ன ? சொல்கிறார்.
விச்வாமித்ரர் போன்ற ரிஷிகள் ,அப்சரஸ் ஸ்த்ரீகளிடம் மயங்கினார்கள்.
ப்ரஹ்மா , தன் மனைவி சரஸ்வதியை எப்போதும் தன்னுடைய நாவிலேயே வைத்துக்கொண்டிருக்கிறார்.
பரமசிவனோ ,தன் சரீரத்தில் பாதியையே பார்வதிக்குக் கொடுத்து, பிரியாமல் இருக்கிறான்.
பகவானோ, மஹாலக்ஷ்மியைத் தன் திருமார்பில் வைத்துக் கொண்டு இருக்கிறான் ;
இது போதாது என்று, ஆயர்பாடியில் இடைச்சிகளுக்கு வசப்பட்டு இருக்கிறான்.
ஆனால், இப்படி காமத்துக்கு வசப்படாதவர் யதிராஜருடைய திருவடியை ஆச்ரயித்தவர்கள்.
மும்மூர்த்திகளையும் ஆட்டிப்படைக்கும் காமம், யதிராஜரின் ஸித்தாந்தத்தில் மூழ்கி,
அவருக்கு சிஷ்யர்களாக இருப்பவர்களிடத்தில் ,நெருங்கவே பயப்படுகிறது.
ஆக , காமத்துக்கு வசப்படாதவர்கள், யதிராஜரின் ஸித்தாந்தத்தில் நிஷ்டை உடைய சிஷ்யர்கள் —என்கிறார்

எம்பெருமானார் தரிசனத்தை அவலம்பித்தவர்கள் விஷய வைராக்யம் உள்ளவர்களாகப் பார்க்கக் படுகிறார்கள் -என்கிறார் –
அனாதையான வேதங்களை சதா உருச் சொல்லிக் கொண்டு இருக்கும் நான்முகனும் நாவிலே மனைவியை கொண்டுள்ளான் –
சிவனுடைய இடது புறமே பெண்ணாய் விட்டது -பரதத்வமான எம்பெருமானும் கோபியர்கள் வசமாய் விட்டான்
ஆனால் எம்பெருமானார் திருவடிகளை பற்றினவர்கள் காமனால் பீடிக்கப் படுவதில்லை –பரம விரக்தர்களாய் இருப்பார்களே –

ஹதி மஹிலாமாத்யோ வேதாஸ்த்ரயீமுகரைர்முகை
வரதனுதயா வாமோ பாக: ஶிவஸ்ய விவர்ததே |
ததபி பரமம் தத்த்வம் கோபிஜனஸ்ய வஶம்வதம்
மதன கதனைர்ன க்லிஶ்யந்தே கதம் ந்விதரே ஜனா: ||– சங்கல்ப ஸூர்யோதய ஸ்லோகம்

வேதம் முழங்கும் தன் திருநாவில்
நான்முகன் தன் மனைவி கலைமகளைத் தாங்கினான்…
சிவனுக்கு ஒரு பாதி உடலே பெண்ணாக ஆனது…
இவர்களை விட கண்ணனென்னும் பெரிய தத்துவமோ
கோபிமார்களின் வசத்தில் ஆட்பட்டு கிடக்கிறான்…
மன்மதனிடம் போரிட்டு இவர்களே தோற்றார்கள் என்றால்
சாமான்ய மக்கள் என்ன ஆவரோ!

வஹதி மஹி ளாம் ஆத்ய வேதா த்ரயீ முகரை முகை
ஆத்ய -சிருஷ்டியில் முதல் -வேதா -நான் முகன்–வேதஸாம் பிதாமக –
தூண் பிதாமகி-ஸ்தம்பம் -பிள்ளை -அவர் பிள்ளை கணக்கற்ற நான் முகன் –
அண்டங்கள் பல பல —
த்ரயீ -வேதங்கள் -எண்ணிக்கை இல்லை -ருக் யஜுவ்ர் சாம -மூன்று வகை –
முன்பு யுகங்களில் ஒரே வேதம் -கலிக்காக நான்காக பிரித்து
அதர்வணம் -ருக்கில் சேரும் -என்பர் -வஸிஷ்டர் ராமர்
பட்டாபிஷேகம் அதர்வண வேதம் கொண்டு –
முகரை-இடை விடாமல் -வாசனையே உபாத்தியாயர் -வாய் வெருவுதல் –

வெருவாதாள் வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
வேதங்களை வாய் விடாமல் சொல்லி —வஹதி மஹி ளாம்-வகிக்கிறாள் -சரஸ்வதி
வர தநுதயா வாம பாக சிவஸ்ய விவர்த்ததே –

அழகிய -ஸ்ரேஷ்டமான -பகுதியில் -இடது பாகத்தில் -மாறு பட்டு விளங்கும் -சிவனுக்கு -உமை ஒரு பாகன் –
விவர்த்த வாதம் -பரிணாமம் -வாதிகள் -உபாதான காரியம் இரண்டும் சத்யம் -ப்ரஹ்மம் மட்டும் சத்யம் விவர்த்தம்
ஸ்வரூப பரிணாமம் -உபாதி பரிணாமம் -நாம் சரீர பரிணாம வாதிகள் –
வியாவர்த்தகன் -வி யா வர்த்தகம் -வேறு பட்டது -முரட்டு ஆன் சரீர பாகத்தி இருந்து வேறு பட்ட அழகிய இடப் பாகம்

வர வர முனி -அழகிய மணவாள முனி –
ததபி பரமம் தத்த்வம் கோபீ ஜனச்ய வசம் வதம்-பர தத்வம் -சர்வ நியாந்தா -அவன் கூட கோபி ஜனங்கள் வசப்பட்டு -நியாமகன்
முன்பு சொன்னவர்கள் அபர தத்வங்கள் -நஹீ நிந்தா நியாயம் -எம்பெருமானார் திருவடி சம்பந்தம் இல்லாத பலனைக் காட்டி அருளுகிறார் –
அமர்யாதா -துர்மானி -அநாத ஸ்தோத்ர ரத்னம் -53 -கூரத் ஆழ்வான் சொல்ல மாட்டார் -ஆளவந்தார் எம்பெருமானார் திருவடி
சம்பந்தம் இல்லை சொன்னார் நான் சொல்ல மாட்டேன் என்பாராம் -அழகர் கேட்டு ஆனந்தம் அடைந்தார் –
மதன கதனை ந க்லிச்யந்தே–மன்மதன் -மூலம் கிலேசம் அடைய முடியாதே
யதீஸ்வர சம்ஸ்ரயா–ஸ்ரீ ஸூ க்திகள் -பயின்று -கடாக்ஷ உபதேசங்களால் –
யத்ர யத்ர யதீஸ்வர ஸம்ஸரய–தத்ர தத்ர இது இல்லை என்றவாறு –

மன்மதனிடம் போரிட்டு யதிகளின் அரசனை அண்டியவர்கள் தோற்பதில்லை…

யதி என்பது துறவியைக் குறிக்கும். யதிகளின் அரசனாக ராமானுஜரைக் குறிப்பிடுகிறார்.
ராமானுஜரை அண்டியவர்கள் காமம் என்னும் சிற்றின்பத்துக்கு அடிமையாவதில்லை என்பது கருத்து.

இதில் சில சொல் விளையாட்டுக்களையும் கவி உள்நுழைத்து இருக்கிறார்.
ஆத்யோ வேதா: என்று பிரமன், ஒன்பது பிரஜாபதிகளில் முதன்மையானவன் என்றும்,
முதன்மையானவனே பெண்ணைத் தன் நாவில் தாங்குகிறான் என்றும் குறிப்பிடுகிறார்.
அடுத்து “சிவ”னென்னும் பெயர் தாங்கியவன், இடம் வலமாக மாறி “வசி” என்று வசப்பட்டவனாகி விட்டான் என்று குறிப்பிடுகிறார்.
அடுத்து கோபிகைகளைக் குறிப்பதற்கு, ஆண்பால் சொல்லான கோபி ஜன: என்று குறிப்பிட்டது,
கோபிகைகள் “இடைப் பேச்சும் முடை நாற்றமுமாக” பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் அழகு என்று சொல்ல முடியாமல் இருந்ததை
சூசகமாக சுட்டிக் காட்டி, அவர்கள் பார்வைக்காகவும் கண்ணன் காத்திருந்தான் என்று குறிப்பிடுகிறார்.

———————————————-

46-நிகம பதிக சாயா சாகீ நிராசா மஹா நிதி
மஹித விவித சாத்ர ஸ்ரேணீ மநோ ரத சாரதி
திரிபுவன தம ப்ரத்யூஷ அயம் த்ரிவித்ய சிகாமணி
ப்ரதயதி யதி ஷமாப்ருத் பாராவரீம் அபிபர்யயாம்

ராமானுஜர்- வேதங்களின் ஆழ்ந்த பொருளை அறியாமல் வழிப்போக்கர்கள் போல் திரிபவர்களுக்கு
அவற்றை அறிவித்து நிழலை வழங்கும் மரத்தைப் போல் நிற்பவர்,
வேத வழியைப் பின்பற்றுபவர்களால் மகிழ்ந்தவர்;
எல்லா ஆசைகளையும் துறந்த மக்களுக்கான
உத்வேகத்தின் மதிப்பு மிக்க புதையல் -களஞ்சியமாகப் போற்றப் படுபவர்;
அவரது வழியைப் பின்பற்றும் பல்வேறு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற உதவுபவர்;
சீடர்களை நல்ல வழியில் இட்டுச் செல்லும் தேர்ப் பாகனாக இருப்பவர்
மூன்று உலகங்களின் அந்தகார அஞ்ஞான இருளுக்கு விடியல் போல் செயல்படுபவர்;
வைதிகர்கள் தலையில் சூடும் இரத்தினக்கல் போன்றவர்
மற்றும் வேத ஞானத்தின் தலை சிறந்த தலைவன் –
பர ப்ரஹ்மனைப் பற்றிய சரியான அறிவை நம்மில் புகுத்துபவர்
அஞ்ஞானம் ஸம்சய ஞானம் விபரீத ஞானம் போன்ற மயர்வுகளை அறுத்து மதி நலம் அருள்பவர்

சரி, இவர்கள், காம வசப்படாதவர்கள்–இவர்களுக்குப் பேரின்பம் கிட்டுமோ ?
இப்படி இருக்கும் முமுக்ஷுக்களுக்கு ( மோக்ஷத்தை விரும்புபவர் ) அழிவற்ற,நித்யமான ,
பகவானின் திருவடிகளைச் சரணம் அடையும் வழியைக் காட்டுகிறார், யதிராஜர் .
இந்த சிஷ்யர்கள், பலவிதம்;
க்ருஹஸ்தர்கள் ; ப்ரஹ்மசாரிகள்; ஸன்யாசிகள் ; பெண்கள்;இப்படிப் பலவிதம்.
இவர்கள், ஆசார்ய பக்தியும், பகவத் பக்தியும் உள்ளவர்கள்.
யதிராஜர், அவரவர் மனநிலைக்கேற்ப உபதேசித்து, மோக்ஷ அனுபவத்தை ஏற்படுத்துகிறார்.
இவர், த்ரிவித்ய சிகாமணி –என்கிறார் -மூன்று வேதங்களே ப்ரமாணம் என்று கர்ஜிக்கும்,
வித்வான்களுக்கு , அலங்காரமான சிரோபூஷணம்

எம்பெருமானார் வேதம் காட்டும் வழியில் சஞ்சரிக்குமவர்களுக்கு குளிர்ந்த நிழல் தரும்
பல கிளைகளையுடைய மரமாய் இருப்பவர்
வைராக்ய சீலர்களுக்கு பெரிய நிதி –
பற்றிலார் பற்ற நின்றானே என்னும் படி –
வர்ணாஸ்ரம ஸ்த்ரீ புருஷ விபாகத்தால் பலவிதமான பூஜிக்கத்தக்க சிஷ்யர்கள் மனம் ஆகிற ரதங்களுக்கு சாரதி
எல்லா உலக இருள் போக்கும் உஷஸ் -வைதிக ஸார்வ பவ்மர் –
நித்தியமான ஜீவாத்மா பரமாத்மா -சம்பந்த -சேஷ சேஷி பாவத்தை விளக்கமுறச் செய்து அருளுகிறார் –

———————————————————

மேலும் ஸ்ரீ ஸூக்திகள் வைபவம் –

47-ஜடமதி முதா தந்தா தந்தி வ்யதா ஔஷத சித்தய
ப்ரமிதி நிதய ப்ரஜ்ஞா சாலி ப்ரபாலன யஷ்டைய
சுருதி ஸூரபய சுத்த ஆனந்த அபி வர்ஷூக வாரிதா
யம கதி கத விச்சேதின்ய யதீஸ்வர ஸூக்தய

ராமானுஜரின் படைப்புகள் பிரகாசிக்கின்றன:

முட்டாள்களுடன் தொடர்ந்து வாதிடுவதன் விளைவாக –தந்தா தந்தி வ்யதா-பல்லின் கடி வேதனை போல் புத்தியைக் கலக்கும்
இதற்கு ஏற்ற மருந்தாக ஸ்வாமியுடைய கிரந்தங்கள் –ப்ரமிதி நிதய-ஞானத்தின் பொக்கிஷமாக உள்ளன
நமது ஞானம் என்னும் பயிரைக் காப்பாற்றும் யஷ்டைய-நான்கு கொம்புகள் போல் நான்கு வேதங்களும் உள்ளன
இத்தகைய சுருதி ஸூரபய-வேதங்களின் நறு மணத்தை அவற்றின் சேர்க்கை மூலம் ஸ்வாமியுடைய கிரந்தங்கள் நம் மேல் வீசும்படி உள்ளன
எங்கும் ஞானம் ஆனந்தம் என்னும் மழை பொழியும் மேகம் போன்றவை இவை
நாம் யம லோகம் செல்வதற்கு எதிராக ஒரு உறுதியான உத்தரவாதம்-
யமலோகம் என்ற பேச்சையே முற்றிலும் நீக்க வல்லவை-

யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் —–
மூடர்களோடு விவாதித்து விவாதித்து பல்வலி வந்தவர்களுக்கு பரம ஔஷதம் .
இவை சூக்ஷ்மங்களின் புதையல்.
விவேகிகளுக்கு வழிகாட்டும் செங்கோல்கள் ;
வேதமணம் வீசும் ஸ்ரீஸுக்திகள் .
பிறமதங்களை விரட்டித் துரத்தும் தடிகள்.
துன்பத்தையே ஏற்படுத்தாமல், இன்பத்தையே கொடுப்பவை.
நரகத்தைத் தடுக்கும் வல்லமை உள்ளவை–முன்னை வினை அகல-தென் புலத்தார்க்கு என்னுக் கடவுடையேன் யான்  -தனியனில் உண்டே

இராமானுசன் என்னும் கார் தனையே –காரேய் கருணை இராமானுசர் -வேதங்கள் பார் மேல் நிலவிடப்பார்த்து அருளும் கொண்டல் அன்றோ நம் ஸ்வாமி

புத்தி கேடர்களான புறச் சமயிகளுடைய பற்களில் கடியுண்டதனால்
உண்டான வ்ரணத்தை ஆற்றுவதற்கு நல்ல மருந்தாயும் –
உண்மை நல் ஞான நிதிகளாயும் –
அந்த ஞானமான பயிரை நன்றாகக் காக்கக் கூடிய முள் வேலியாயும்-
அந்த ஞானப் பயிரை வ்ருத்தி பண்ண -வேத மணம் கமழ்ந்த பரிசுத்த ஆனந்தமான மழையைப் பெய்யும் மேகங்களாயும்-
எம லோகம் என்ற பேச்சையே அழிப்பதாயும் உள்ள
யதிராஜ திவ்ய ஸூ க்திகள் விஜய ஸ்ரீ யுடன் பிரகாசிக்கின்றன –

———————————————————-

மேலும் ஸ்ரீ ஸூக்திகள் வைபவம் -பிரத்யக் தத்தவ –ஜீவாத்மாவும் -முதல் இரண்டு வரிகள் பரமாத்மாவும்-அடுத்த இரண்டு வரிகள்

48-ப்ரதி கலம் இஹ பிரத்யக் தத்தவ அவலோகன தீபிகா
எதி பரிப்ருட க்ராந்தாச் சிந்தாம் நிரந்தர யந்தி ந
அகலுஷ பரஞான ஔத் ஸூக்ய ஷுதா ஆதுர துர்த்தசா
பரிணத பல ப்ரத்யா சீதத் பலேக்ரஹி ஸூக்ரஹா

ப்ரதி கலம் -நிமிஷம் தோறும்
இஹ -இங்கு -சம்சாரத்திலேயே ஞானம் பெற -அங்கும் கேட்டாரார் வானவர் -ரஸம் அனுபவிக்க-அங்கு ஸ்வஸ்மை ப்ரகாசமாகவே இருக்குமே –
பிரத்யக் தத்தவ -ஜீவாத்ம பரமாத்மாவைப் பற்றிய
அவலோகன தீபிகா-பார்க்க உதவும் விளக்கு போன்றவை
எதி பரிப்ருட க்ராந்தாச் சிந்தாம் நிரந்தர யந்தி ந-நிரந்தரமாக நித்தியமாக அனுபவிக்கும் படி
அகலுஷ பரஞான ஔத் ஸூக்ய ஷுதா ஆதுர துர் த்தசா பரிணத பல-குற்றம் அற்ற பர ஞானம் இல்லாத -ஷுதா-பசியினால் -துர்கதி-அபி நிவேசம் மிக்கு அறிய விரும்புவார்க்கு பக்குவமான பழமான பலத்தைக் காட்டும்
ப்ரத்யா சீதத் பலேக்ரஹி ஸூக்ரஹா -பக்குவமான அருகிலுள்ள பழம் போல் -கையாலே பறிக்கும் படி-ஸூகமாக க்ரஹிக்கும் படி

ராமானுஜரின் படைப்புகள் எப்போதும் நம் இதயங்களை நிரப்புகின்றன

ஜீவாத்மாவின் உண்மையான தத்துவத்தைப் பிரகாசிக்கும் விளக்குகள்,
பெரிய இறைவனைப் பற்றிய அறிவிற்காக, மிகுந்த பசியுடன் ஏங்கிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு,
அவர்களுடைய சிரமத்தை நீக்கி அவர்களுக்கு ஏற்ற
பழங்களை அளித்து அவர்கள் அருகில் ஆதரவாக உள்ள மரங்கள் போன்றன
மிகவும் எளிதாக அடைய வல்லவை -ஒவ்வொரு நொடியிலும் நமது எண்ணங்களை சரியான பாதையில் நடத்த வல்லவை

யதிராஜருடைய ஸ்ரீஸுக்திகள் ,உண்மைத் தத்துவத்தை உபதேசிப்பவை.
ஆசார்ய முகேன , காலக்ஷேபம் செய்தவர்கள் அவற்றிலேயே சிந்தையைச் செலுத்தி, ஆழ்ந்து அனுபவிப்பர்
இப்படி, எளிமை , கம்பீரம், நடையழகு உள்ளவை.

எம்பெருமானாருடைய ஸ்ரீ ஸூக்திகள் ஸூக்ரஹம் –
எளிதில் தெளிய அறியக் கூடியவை –
இவ்விருள் தரும் மா ஞாலத்தில் ஜீவ தத்துவத்தை கண்டு அறிவதற்கு சுடர் விளக்காய் இருப்பவர்களும் –
பரதாத்ம தத்துவத்தை பற்றின உண்மை ஞானம் பெறும் அவா என்ற பசியால் வாடுபவர்களுக்கு
தம் கையாலேயே எட்டிப் பறிக்கும் படி பழுத்த பழங்களை-அடிக் கிளைகளையே -தரும் படியான மரம் போல் உள்ளவைகளும்
எளிதில் கிரஹிக்கக் கூடியவையாயுமாய் யுள்ள எதிராஜருடைய கிரந்தங்கள்
எங்களுக்கு சதா சிந்தனைக்கு விஷயமாய் இருக்கின்றன –

கடலள வாய திசையெட்டி னுள்ளும் கலியிருளே
மிடைதரு காலத் திராமா னுசன், மிக்க நான்மறையின்
சுடரொளி யாலவ் விருளைத் துரத்திலனேல்உயிரை
உடையவன், நாரணன் என்றறி வாரில்லை உற்றுணர்ந்தே.

தீபம் இருளைப் போக்கும் -யதீந்த்ர கிரந்தம் அஞ்ஞானம் போக்கி சூஷ்மமான ஆதவா தத்துவத்தையும் விளக்குமே
ஸத் பாத்திரத்தில் ப்ரேம ரூபம் -நெய் போல் ப்ரகாசப்படுத்தும்-தீபம் ஸ்நேஹத்தால் பிரகாசிக்கும்
சாங்க்யர் -கபிலர் -ஜீவஸ்ய கர்த்ருத்வம் நாஸ்தி -குருடன் நொண்டி சேர்ந்து காட்டைக் கடப்பர் என்பர்
ஆத்மா -ஞானம் -செயல்பாடு பிரதானம் -சரீரத்தில் உள்ள கர்த்ருத்வம் பிரதிபலிக்கும் என்பர்
ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் -சாஸ்திரம் பொருளாக வேண்டுமே –
வேறே சிலர் ஸ்வ தந்த்ர கர்த்ருத்வம்
பரார்த்து -ப்ரஹ்மத்துக்கு அடங்கின கர்த்ருத்வம்
வேறே சிலர் ஞாத்ருத்வம் இல்லை ஞான மாத்திரமே
விஞ்ஞானம் யஜ்ஜம் பண்ணுகிறது சுருதி -விஞ்ஞாதா -அவனே ஞானமாயும் ஞானம் உடையவனாயும் இருப்பான்
சிலர் ஆத்மா விபு -ஜைனர் எடுத்துக்கொண்ட சரீரம் அளவு என்பர்
அத்வைதி அபின்னம் என்பர்
பாஸ்கரர் பின்னம் அபின்னம் என்பர்
ஆதார ஆதேய நியாம்ய நியமிக்கும் இல்லை என்பர்
இவை எல்லாம் நிரசித்து பாஷ்யத்தில்
பரதந்த்ர கர்த்தா-ஸ்வயம் பிரகாசம் -அஜடம் -அணு -அப்ருதக் சித்தம் -சம்சயம் விபர்யம் இல்லாமல் காட்டி அருளுகிறார்
இதே போல் பரமாத்ம ஞானம் சுலபமாக-அகலுஷம் பரதத்வ ஞானம் ஸூ லபமாகக் காட்டி அருளும்
நிர்குணம் நிர்விசேஷ ப்ரஹ்மம்-மூவரில் ஒருவர் -நிமித்த காரணம் மாத்திரம் -குழப்பங்களைப் போக்கி –
குண விக்ரஹ விபூதி விசிஷ்டன் -அபின்ன நிமித்த உபாதான காரணம்
த்ரிவித காரணமும் இவனே-ப்ரக்ருதி விஸிஷ்ட ப்ரஹ்மம் -ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம்-ஞானாதி ஸமஸ்த குண விஸிஷ்ட ப்ரஹ்மம்-மூன்றுமே த்ரிவித காரணங்களும் ப்ரஹ்மமே ஸ்ரீயப்பதி- ஸூலபமாகக் காட்டி அருளி -மோக்ஷத்தில் விருப்பம் -அபி நிவேசம் பெருக்கும்படி ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள்-தத்வ ஞானம் பெற்றபின்பு மோக்ஷத்தில் இச்சையும் கொடுக்கும் அன்றோ

————————————————

வைஷ்ணவ வாமநத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் —சூரணை -162-
ருசி விவசர்க்குப் பாதமே சரணம் ஆக்கும் ஒவ்தார்யம் வானமா மலையிலே கொழுந்து விடும் —சூரணை -163-

அதே போல் கீழ் ஸ்லோகத்துக்கும் இதுக்கும் சம்பந்தம்

49-முகுந்த அங்க்ரி ஸ்ரத்தா குமுத வன சந்திர ஆதப
நிபா முமுஷாம் அஷோப்யாம் தததி முனி ப்ருந்தாரக கிர
ஸ்வ சித்தாந்த த்வாந்த ஸ்த்திர குதுக துர்வானி
பரிஷத் திவாபீத ப்ரேஷா திநகர சமுத்தான புருஷா

முகுந்த அங்க்ரி -முகுந்தனுடைய திருவடித் தாமரைகள்
ஸ்ரத்தா குமுத வன சந்திர ஆதப நிபா-ஸ்ரத்தை யாகிய ஆம்பல் காடுகள் சந்த்ரனைக் கண்டு மகிழும் மலரும் -அழகு குளிர்ச்சி சோமவத்
ஸ்வ சித்தாந்த -தங்கள் சித்தாந்தம் -தாங்களே கல்பித்து கொண்டது
த்வாந்த ஸ்த்திர குதுக -தப்பான வாதமாகிய இருளில் மகிழ்ந்து
துர்வானி பரிஷத் திவாபீத ப்ரேஷா -கோட்டான் கூட்டங்களுடைய பார்வைக்கு
திநகர சமுத்தான புருஷா -ராமானுஜ திவாகரன் தேஜஸ்ஸு இவர்களுக்கு குரூரமாக தோற்றும்
அஷோப்யாம் முமுஷாம்-கலக்க முடியாத மோக்ஷ விருப்பம் ஏற்படுத்தி முமுஷுவாக்கவும் வல்லவை

ராமானுஜரின் வார்த்தைகள் செயல்படுகின்றன-
முகுந்தனின் பாதத்தில் பக்தி கொண்ட -ஆம்பல் -அல்லி மலர்களின் அணி வகுப்புக்கு நிலவொளி போலவும் ,
மத வெறியர்களின் ஆந்தைகளுக்குக் கொடூரமான சூரிய ஒளியைப் போல கூடியதாக உள்ளன
மேலும் கலங்காத மோக்ஷ விருப்பம் ஏற்படுத்தி முமுஷுவாக்கவும் வல்லவை

யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,
படிக்கப் படிக்க மோக்ஷத்தில் ருசியை ஏற்படுத்துகின்றன.
பகவானின் திருவடியில் ,பக்தியை வளர்க்கின்றன.
இருளில் இருக்கும் பிறமதப்பிரதிவாதிகளான கோட்டான்களுக்கு, ஸுர்ய உதயம்

ஜீவ பர யாதாத்ம ஞானம் பெற்றவர்க்கு
பகவத் சரணார விந்தங்களில் பக்தியும்
மோக்ஷத்தில் இச்சையும்
ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூ க்திகளே உண்டு பண்ணுகின்றன –

மோக்ஷ பிரதனான எம்பெருமான் திருவடிகளில் பக்தியாகிற குமுத மலர்களுக்கு நில ஒளிக்கு ஒப்பானதும் –
ஆம்பல் சந்திரனை கண்டு வ்ருத்தி யடையுமே –
தங்கள் மதங்கள் ஆகிற நிலையான இருளில் களிக்கும் துர்வாதிகளான ஆந்தைக் கண்களுக்கு சூரியோதயம் போலே வெறுப்புண்டு பண்ணுபவையுமான
ஸ்ரீ யதீந்திரருடைய ஸ்ரீ ஸூக்திகள் மோக்ஷத்தில் நிலையான இச்சையை விளைவிக்கின்றன –

தத்வ ஞானம் -ஸ்ரீ பாஷ்யம் போல்வன
பக்தி வளர்க்க கீதா பாஷ்யம்
உபாயம் -கத்ய த்ரயம்
காலஷேபம் -நித்ய கிரந்தம்

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்
வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன்னியல்வு கண்டே – 54-

பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னிப் பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா வுயிரும் அக்தென்று உயிர்கள் மெய் விட்டு
ஆதிப் பிரானோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58-

—————————————————

50-நிராபாத போதாயன பணித நிஷ்யந்த ஸூபகா
விசுத்த உபன்யாச வ்யதி புதுர சாரீரக நயா
அகுண்ட்டை கல்பந்தே யதிபதி நிபந்தா நிஜ முகை
அநித்ராண ப்ரஜ்ஞா ரச தமனி வேதாய ஸூதியாம்

ராமானுஜரின் படைப்புகள் வேதாந்த சாஸ்திரத்தின் குறைபாடற்ற ஏற்பாடுகளை வெளிப்படுத்துகின்றன,
போதாயனரின் வர்ணனையின் (ப்ரஹ்ம ஸூத்திரம்) மற்றும் அது போன்றவற்றின் தரத்தை வடி கட்டுகின்றன.(சாரீரக நயா-156 அதிகரணங்கள்)
படைப்புகளில் எந்த முரண்பாடும் இல்லை. அவர்களின் கருத்துக்கள் வலுவானவை, தெளிவானவை
மற்றும் வலியுறுத்தல் தொடர்பாக சுட்டிக் காட்டப்படுகின்றன.
அவை –ப்ரஜ்ஞா ரச தமனி-அறிவுசார் நரம்பு நாண்களைத் தாக்குவதில் திறமையானவை.
மேலும் அவை அறிஞர்களின் அறிவுத் திறனை மலரச் செய்ய உதவுகின்றன.
இதன் மூலம் அவர்களுக்கு இன்பம் ஊட்டுகின்றன

யதிராஜருடைய ஸ்ரீஸுக்திகள் —இவற்றில்,
போதாயனரின் கருத்துக்கள் ப்ரவஹிக்கும் .
வ்யாஸரின் ப்ரஹ்மஸுத்ரத்துக்குத் தெளிவான விளக்கம் ,
பிறமதவாதிகளால் அசைக்கமுடியாத ஸித்தாந்த யுக்திகள் –இவை ப்ரகாசிக்கும் .
அறிஞர்களின் அறிவு நாடியைத் தட்டி, பேரின்பத்துக்கு இழுத்துச் செல்லும்

எம்பெருமானாருடைய ஸ்ரீ ஸூக்திகள் வித்வான்களுக்கு ஆனந்தம் விளைவிப்பவை —
முன்னுக்கு பின் முரண்பாடு ஏதும் இன்றி இருப்பவையாயும்
பகவத் போதாயன க்ருதமான வ்ருத்தி கிரந்தத்தை தழுவியபடியால் தெளிவுற்றதாயும் இருப்பதாயும்
குற்றம் குறை கூற முடியாதபடியான உபபாதனங்களால் விளங்குகின்ற –
அதிகரண நிபந்தங்கள் -விஷயங்களை பாகுபடுத்தி உரைத்தல் -உள்ள ஸ்ரீ ஸூக்திகள்
நன்றாக ஸ்தாபிக்கப் பட்ட பிரதான அர்த்தங்கள் உள்ளவையாய்
வித்வான்களுடைய மலர்ந்த ஞானத்துக்கு ரசம் விளைவிக்க வல்லவையாய் அமைந்துள்ளன –

பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||

1-உபநிஷத் ஆகிய சமுத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது
2- ஸம்ஸார அக்னியால் தாக்கப்பட்ட பிரானாகிய பராமாதவிடம் இருந்து பிரிந்து வசிக்கும் ஜீவாத்மாக்களை உஜ்ஜீவிப்பது
3-பலவிதமான அறிவுத் தடுமாற்றங்களால் அகன்று சென்றது
4-பாதாரயனாரின் ஸ்ரீ ஸூக்திகளால் அருகில் கொண்ட வரப்பட்டன
5- இந்த அம்ருதத்தை அறிவுள்ளவர்கள் அன்றாடம் பருகட்டும்

————————————————

ஸ்ரீ ஸூக்திகள் பிரபாவம் மற்று ஒரு படியால் அருளிச் செய்கிறார் –

51-விகல்ப ஆடோபேந சுருதி பதம் அசேஷம் விகடயன்
யத்ருச்சா நிர்த்திஷ்டே யதி ந்ருபதி சப்தே விரமதி
விதண்டா அஹங்குர்வத் பிரதிகதாக வேதண்ட
ப்ருதநா வ்யாத வியாபார வ்யதி மதன சம்ரம்ப கலஹ

தவறான காரணத்தை அடிப்படையாகக் கொண்ட புற மதவாதிகள் தகாத
வழியில் இட்டுச் செல்ல விதண்டா வாதம் செய்தபடியே இருந்தனர்
மிகவும் கர்வம் கொண்ட யானைக் கூட்டங்கள் போல் ஒருவரை ஒருவர் வாதத்தால் வென்று இருந்தார்கள்
இந்த காட்டு யானைகளின் எரிச்சலூட்டும் சத்தம் (விகல்ப ஆடோபேந-படாடோப விகல்பங்கள் -நாநாவித இறைச்சல்கள் )-டம்பப்போர் -ராமானுஜரின் திரு நாம உச்சாரதாலே (யத்ருச்சா நிர்த்திஷ்டே)–அதே ஷணத்தில் அடங்கி விடும்.

ஒன்றைப் ப்ரணாமாக ஏற்று, அதனால் தெளிவு ஏற்படுபவற்றில் சிலவற்றை அங்கீகரித்தும்
சிலவற்றை நிராகரித்தும் செய்வது, நேர்மையல்ல.
காட்டு யானைகள், மதம் பிடித்து அருகிலுள்ள கிராமங்களில் புகுந்து,
பயிர்களை அழித்து, மக்களைத் துன்புறுத்தும் போது ,
அந்த நாட்டு அரசன் ஓடிவந்து வில்லில் நாண் ஏற்றி சப்தத்தை எழுப்பினால்,
யானைகள் பயந்து ,திரும்பவும் காட்டுக்குள் சென்று விடும்.
அதைப் போல,
பிற மதஸ்தர்களின் விதண்டா வாதங்கள் என்கிற பேரிரைச்சல் கேட்டாலும், அங்கு,
எம்பெருமானார் என்கிற திரு நாமத்தைக் கேட்டவுடன் , அவர்கள் நடுங்கி வாய்மூடி மௌனியாவர்

சோபனமான வழியை தம் இஷ்டப்படி சஞ்சரித்து யானைகள் பாழ் படுத்துமா போலே
மனம் போனபடி கூச்சல் இடுவதால் வேத மார்க்கத்தை பாழ் படுத்தும் துர்வாதிகள்
தமது தங்கள் துர்வாதங்களால் பரஸ்பரம் ஜெயிப்பதற்காக விளைவிக்கும் கலகமானது
யதிராஜ ஸ்ரீ ஸூக்திகளின் சப்தங்களை யாதிருச்சிகமாக கேட்டால் கூடத் தானே அடங்கி விடும் —
ஸ்ரீ எதிராஜரின் பெயரைச் சொன்னாலே அடங்கி விடும் என்னவுமாம் –

பிருகு வருணன் -ப்ரஹ்மம் -எதோ வா இமானி –இத்யாதி -எங்கு இருந்து படைத்தார்-அத்தைப் படைத்தவர் யார் -எதற்க்காகப் படைத்தார்-அவாப்த ஸமஸ்த காமத்வம் சேராதே சத்தா அசத்தா –குதர்க்கங்கள்
எது சாதனம் உபாதானம் போன்ற கேள்விகள் -விதண்டா வாதங்கள்
மஞ்சள் வாழைப்பழம் -இரண்டு தன்மை -எது முதலில் -சமவாய சம்பந்தம் -யுகபத் ஒரே சமயத்தில் இரண்டையும் மனதில் கொள்ள முடியாதே
விசேஷயத்துடனும் விசேஷணத்துடன் அடுத்த விசேஷணம் ஏறும்
தத்வமஸி-தத் த்வம் அஸி-வாதங்கள் போல்வன

ந சேத் ராமாநுஜேத் ஈஷா சதுரா சதுர் அக்ஷரீ -காமவஸ்யாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்தமாத்ருஸா–என்று-அறிவுடையார் ஈடுபடும்படி மோக்ஷ ஹேதுவான திரு நாமத்தை உடையவர்
ரா அக்ஷரம் கேட்டாலே மாரீசன் பயந்ததாக ராவணன் இடம்
அது ப்ரமேயம் பற்றி-இங்கு பிரமாணம் பற்றி
மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய வப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே – 41-

—————————————————–

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் தமது ஞானத்துக்கு தெளிவை அளிக்க வேணும் என்று பிரார்த்திக்கிறார் –

52-பிரதிஷ்டா தர்க்காணாம் பிரதிபதம் ருசாம் தாம யஜூஷாம்
பரிஷ்கார சாம்நாம் பரிபணம் அதர்வாங்க ரசயோ
பிரதீபா தத்த்வாநாம் பிரதிக்ருதி ரசௌ தாபச கிராம்
பிரசித்திம் சம்வித்தே பிரதிசதி யதீசான பணிதி

பிரதிஷ்டா தர்க்காணாம் -தர்க்கம் யுக்தி நியாய வாதம் -ஸாஸ்த்ர அநு க்ருஹீதம் -ஸ்வாமியுடைய கிரந்தங்களில் இருப்பிடம் -பர்யவசான பூமி-ஆர்ஷம் தர்ம உபதேசம் வேத வாக்யத்துக்கு அவி ரோதினம் -மநு -வேதம் சொல்வதை ஸ்தாபிக்கவே தர்க்கம்
பிரதிபதம் ருசாம் -ருக் வேதங்களுக்கு சமமான பதங்கள் கொண்டவை -பர்யாய ஸப்தங்கள் கொண்டவை
தாம யஜூஷாம்-யஜுர்வேத இருப்பிடம் தாமம் –
நா ருக்வேத -கிஷ்கிந்தா காண்டத்தில் சொல்லின் செல்வனைக்கொண்டாடி
ருக் வேதம் விநயம் -யஜுர் வேதம் தாரண சக்தி -சாம வேதம் பாண்டித்யம் தரும்
பரிஷ்கார சாம்நாம் -சாமவேதத்துக்கு அலங்கரிக்கும்
பரிபணம் அதர்வாங்க ரசயோ -அதர்வண வேதத்துக்கு மூல தனம்
பிரதீபா தத்த்வாநாம் –24 தத்துவங்களுக்கும் -25-ஆத்மா 26-பரமாத்மா தத்வங்களுக்கும் தீபம் யாதாத்ம்ய ஞானம் அளிக்கும்-ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ கீதா பாஷ்யம் விளக்கிக் காட்டுமே
பிரதிக்ருதி ரசௌ தாபச கிராம்-தபஸ் -வால்மீகி பராசரர் மநு போல்வார் அருளிச் செய்த ஸ்ம்ருதிகளுக்கும் இதிஹாச புராணங்களும் பிரதி ரஸம்-பிம்பம் போல்வன
பிரசித்திம் சம்வித்தே பிரதிசதி யதீசான பணிதி–ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் நமது புத்திக்கு ஆனந்தம் கொடுக்கட்டும் – -சந்தோஷம் தெளிவு –

வார்த்தை தர்க்கம் அங்கேயே முடிந்துவிடும், ராமானுஜரின் படைப்புகளில் இடம் இருக்காது.
அவற்றில், ரிக் வேதம் ஏறக்குறைய முற்றிலும் வேறுபட்ட பதிப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது;
அவற்றில் யஜுர் வேதம் உறுதியாக நிலை நிறுத்தப் பட்டுள்ளது;
அவை சாம வேதத்தை முழுமையாக அலங்கரிக்கும் ஆபரணம்.
அவை தத்துவங்களை விளக்கும் விளக்கு.
வால்மீகி போதாயனர் போன்ற முனிகளின் உயர்ந்த வார்த்தைகளின் பிரதிபலிப்பு அவை.
ராமானுஜரின் இந்தப் படைப்புகள் நமக்குப் பார்வைத் தெளிவைத் தரட்டும்!-யாதாத்ம்ய ஞானம் அறிவிக்கும்

யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,
நான்கு வேதங்களுக்கு விளக்கம் ;
தத்வங்களுக்கு இருப்பிடம்;
ரிஷிகளின் வாக்யங்களுக்குப் ப்ரதிபிம்பம் ;
இப்படிப்பட்ட ஸ்ரீஸுக்திகள் தெளிவான தத்வ ஞானத்தைஅளிக்கின்றன

சகல வேதங்களையும் அனுசரித்துப் பொருள் கண்டவையும் -நாம் அறிய வேண்டிய தத்துவங்களை
பிரகாசிப்பவைகளுமாய் மகரிஷிகளுடைய வாக்கை பிரதிபாலிப்பதுமாயும் உள்ள
ஸ்ரீ ஸூக்திகள் தாம் நமது ஞானத்துக்கு தெளிவை அனுக்ரஹிக்க வேணும் –

ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகள்-புற மதங்கள் அனைத்தையும் எதிர்வாதம் செய்யும் யுக்திகள் நிறைந்தவை –
ருக்வேதப் பொருள் போன்றவை –
யஜூர் வேத இருப்பிடம் –
சாம வேதங்களுக்கு பெருமை சேர்ப்பவை –
அதர்வண வேத மூல தனம்
தத்தவங்களை சரியாக விளக்கிக் காட்டும் தீபம்
வால்மிகியாதி முனிவர்களின் சொற்சாயல்-
ப்ரஹ்ம ஞானம் மலர்ந்து தெளிய வைப்பவை

——————————————

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளில்
ஐகாந்த்ய பக்தியை உண்டு பண்ணுகின்றன —

என் நான் செய்கேன்-உபாயாந்தரம் இல்லை யாரே களை கண்–வேறே ரக்ஷகர் இல்லை – என்னை என் செய்கின்றாய் என்று பேற்றை அளிப்பாய் பரம ஐகாந்தி -ஸ்தோத்ர ரத்ன ஸ்ரீ ஸூக்திகளைக் கேட்டு எம்பார் சம்பிரதாயத்துக்கு திரும்பினார் அன்றோ

யத் பதாம்போருஹ-த்யான வித்வஸ்தாசேஷ-கல்மஷ
வஸ்துதாம்-உபயாதோ-ஹம் யாமுநேயம் நமாமி தம்.-ஸ்ரீ கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தார் பற்றிய தனியன்”-ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷம் பெற்ற பெருமை

53-ஹத அவத்யே ஹ்ருத்யே ஹரி சரண பங்கேருஹ யுகே 
நிபத்தந்தி ஐகாந்த்யம் கிமபி யதி பூப்ருத் பணிதய
சுநா சீர ஸ்கந்த த்ருஹிண ஹர ஹேரம்ப ஹூதபுக்
ப்ரபேசாதி ஷூத்ர பிரணதி பரிஹார பிரதிபுவ

ஹத அவத்யே -ஒழிக்கப்பட்ட தோஷங்களையுடைய ஹ்ருத்யே -மனதுக்கு ஆனந்தம் கொடுக்கும்
ஹரி சரண பங்கேருஹ யுகே -பாபங்களை அபஹரிக்கும் -பரமபோக்யமான -பாவானத்வம் போக்யத்வம் -திருவடித்தாமரைகளில்
யதி பூப்ருத் பணிதய-யதி ராஜர் -பூ பூமி தாங்கும்
சுநா சீர-இந்திரன் -ஸ்கந்த -த்ருஹிண-நான்முகன் ஹர-ருத்ரன் -ஹேரம்ப -விநாயகர் ஹூதபுக் -ஸூர்யன்
ப்ரபேசாதி ஷூத்ர பிரணதபோன்ற ஷூத்ர தேவதைகள் -ஏழு ப்ரஸித்தர்களை சொல்லி -அல்ப அஸ்திர பலன்களையே கொடுப்பவர்கள்
அனந்தமாயும் ஸ்திரமாயுமான மோக்ஷம் -மார்க்கண்டேயனும் கரியே -மோக்ஷ பிரதத்வம் நாராயணன் ஒருவனுக்கே
பரிஹார -ப்ரணாமங்களை பரிஹாரம் செய்ய
பிரதிபுவ-எதிர் ஜாமீன் கொடுத்து உத்தரவாதம்
நிபத்தந்தி ஐகாந்த்யம் கிமபி -பரம ஐகாந்திக்கு -அசைக்க முடியாத ப்ரேமங்களை உண்டு படும்
தேவதாந்தங்கள் நிவர்த்தகம் இதில்
ப்ரயோஜனாந்தரங்கள் மேல்
ஆரோக்யம் பாஸ்கரன் -செல்வம் அக்னி- ஞானம் ருத்ரன் -மோக்ஷம் ஜனார்த்தனன் –

ராமானுஜரின் படைப்புகள் குறையற்றவை, இதயத்திற்கு மகிழ்ச்சியானவை,
முன்பு சிவன், இந்திரன், சுப்ரமணியன், விநாயகர், சூரியன், அக்னி முதலிய சிறு தெய்வங்களின் வழிபாட்டுக்குத்
தங்களைக் கொடுத்த மனங்களைக் கூட மாற்றும் திறன் கொண்டவை.
அவர்கள் பிராயச்சித்தத்திற்காகவும், பரமாத்மாவைப் பற்றி ஒரே மனதுடன் பக்தி ஒழுக்கத்திற்காகவும் சேவை செய்கிறார்கள்.
நமது இதயத்திற்கு இனிமையை அளிக்கும் எம்பெருமான் திருவடித்தாமரைகளில் மனம் ஈடுபடும் படி செய்ய வல்லவை

ஸ்கந்தன், இந்த்ரன் , ப்ரஹ்மா , ருத்ரன் , அக்நி , ஸுர்யன் முதலான பரிவார தேவதைகளை வணங்கியவர்களுக்குப்
ப்ராயச்சித்தமாக , யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் , தன்னைக் கற்றவர்களை, பரமைகாந்திகளாக ஆக்குகின்றன .
இதற்கு, தானே ஜாமீனாக இருப்பதாக உறுதி அளிக்கிறார்.

குற்றம் அற்றவை -இன்பம் விளைவிப்பவை –
சிவன் அயன் இந்திரன் கந்தன் கரிமுகன் அக்னி சூர்யாதி சகல பகவச் சேஷமான தேவதைகள் இடத்தில்
ஸ்வாமித்வ புத்தி கொண்டு வணக்கம் செலுத்துவதை பரிஹரிப்பதில்
மிக சமர்த்தங்களாய் இருந்து
எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளில் ஐகாந்த்ய பக்தியை உண்டுபண்ண வல்லவனாய் யுள்ளன –

வ்ருத்தாசுரன் -இந்திரனிடம் -குவிந்தனையே நமஸ்காரம் பண்ணுவான்
அம்பரீஷன் -பெருமாளே இந்திரனாக வேஷம் போட்டு வந்தாலும் ஒன்றும் கேட்டுப் பெற மாட்டேன் -நீயே நேரில் வந்தாலும் உன்னை வணங்கி ஒன்றும் கேட்க்காமல் இருப்பேன்
நித்ய நைமித்திக்க கர்மங்களில் அக்னி சூரன் வருணன் பித்ருக்கள் வணங்குவது இவர்களுக்கும் அவனே -சர்வ பூத -அந்தர்யாமி என்று எண்ணியே செய்கிறோம்
கவ்யம் ஹவ்யம் -பித்ரு தேவ ஸ்வரூபம் ஏற்றுக்கொண்ட விஷ்ணு
அனைவரும் அவன் சரீரம் தானே-

சாஷாத் அவிரோதம் -ஜைமினி -இந்திரன் சப்தமே நாராயணனைக் குறிக்கும்
வ்ருத்தாசுரனைக் கொன்ற இந்திரனே லிங்கம் அடையாளம் சொல்லும் பொழுது அந்தர்யாமி-அவஸ்திதம் உள்ளுறையும் நாராயணனை குறிக்கும்
ஸ்ரத்தையும் வளர்த்து விடுபவனும் நானே -கீதையில்
அவரவர் விதி வழி அடைய நின்றனரே -அவஸ்த்திதேரிதி

யயாதி இந்திர ஸம்வாதம் -கீழே தள்ள விரகு பாரத்ஹான் அன்றோ -இவனோ திருவடியில் விழுந்து அடியேன் என்பவர்க்கு சாம்யாபத்தி அருளுவானே
விகற்ப தேசம் சுவேதன் -ஸத்யலோகம் சென்று பசி தாகம் -கீழே சோறு தண்ணீர் கொடுக்காததால் -இதற்குப்பரிஹாரம் நான்முகன் செய்ய முடியாமல் -உத்தர காண்ட சரித்திரம்
ராமனே விராமன் -வரம் கொடுத்த தேவதை வரம் எல்லாம் ஒய்வு எடுக்கலாமே இவன் இடம் -ருத்ரனை அண்டிய பாணாசுரன் வ்ருத்தாந்தம் அறிவோமே -வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி -தீர்த்து அருளுபவன் இவன் ஒருவனே -நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையம் முன் படைத்தான் -தேவதாந்த்ர தாஸ்யம் நிவர்த்தி செய்து நாராயணனை அண்டியவர்களுக்கு தேவ ரிஷி பித்ரு கடன்கள் ஒன்றுமே இருக்காவே

சர்வ ஸ்மாத் பரனாயும் மோக்ஷ பிரதனனாயும் உள்ள எம்பெருமான் இருக்க
தேவதாந்த்ர பஜனம் பண்ணிக் கெடாதீர்கள் -என்றபடி –

சங்கல்ப ஸூரியோதயம் -24 ஸ்லோகம் ஸ்வாமியே இத்தை விளக்கி அருள்கிறார்

————————————————

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் வைதிகர்களின் ஸூக்ருத பலன் -என்கிறார் –

54-யதா பூத ஸ்வ அர்த்தா யதி ந்ருபதி ஸூக்திர் விஜயதே
ஸூதா சந்தோஹ அப்தி ஸூ சரித விபக்தி ஸ்ருதிமதாம்
கதா த்ருப்யத் கௌதஸ்குத கலஹ கோலா ஹல
ஹத த்ரிவேதீ நிர்வேத ப்ரசமன விநோத பிரணயிநீ

யதா பூத ஸ்வ அர்த்தா -இயற்கையாக உள்ள எளிய வார்த்தைகள் –ஸத்யமானவை
ஸூதா சந்தோஹ அப்தி -அமுதக்கூட்ட சமுத்திரம்
ஸூ சரித விபக்தி ஸ்ருதிமதாம்-வைதிகர் பூர்வ ஸூ ஹ்ருத பரிணாமம் போன்றதும்
யதி ந்ருபதி ஸூக்திர் விஜயதே

கதா த்ருப்யத் கௌதஸ்குத -வாதத்தால் மதம் கொண்ட தூர்வாதிகளின்
கலஹ கோலா ஹலஹத த்ரிவேதீ நிர்வேத –வாதக் கூட்டங்களால் வருந்திய வேதம் -பேத அபேத கடக சுருதிகள் கொண்ட வேதம்
ப்ரஹ்ம சரீரமாக கொண்டு பேத அபேத ஸ்ருதியை ஸமன்வயப்படுத்தி -உடல் மிசை உயிர் எனக்கரந்து எங்கும் பரந்துளன் -இது கொண்டு ஸூ த்திரங்களை ஓருங்க விட்டார்
ப்ரசமன விநோத பிரணயிநீ–சமனம் பண்ணி -வேத மாதா துன்பம் போக்கி -மகிழ வைத்தார் அன்றோ

ராமானுஜரின் படைப்புகள் வெற்றியைக் கூறுகின்றன

அவை மேற்பரப்பில் தோன்றும் உண்மையான பொருளைக் கொண்டுள்ளன; இதனால் ஒரு நேர்மை பாதுகாக்கப்படுகிறது;
அவை அமிர்தக் கடல் போல் செயல்படுகின்றன;
வேதங்கள் செய்த தவத்தின் பலனாக அவை விவரிக்கப்படுகின்றன;
தவறாக வழிநடத்தப்பட்ட மத அமைப்புகளின் தொழில் முறை போட்டியாளர்-சர்ச்சை வாதிகளால் ஈடுபடும்
செயலற்ற வாதங்களால் கிழித்தெறியப்பட்ட வேதங்களின் துக்கத்தை அவை துடைத்தழிக்கின்றன.
வேதங்களின் வருத்தங்களை போக்கி அருளி இன்பம் உண்டாக்குவதில் ஆர்வம் கொண்ட ராமானுஜரின் இந்தப் படைப்புகள் வெற்றி பெறட்டும்!

யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,அமுதக்கடல்;
நாயகியாக இருக்கும் மூன்று வேதங்களின் உயிர்த்தோழி .
சேதநாசேதநங்களை சரீரமாக உடையவன் பகவான் என்கிற ஐக்யத்தைச் சொல்கிறது.
இப்படி, வேதமாதாவுக்கு, ஏற்பட்ட வருத்தத்தை , யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் போக்குகின்றனவாம்

வேதங்களை பரம பிரமாணமாகக் கொண்ட வைதிகர்களின் ஸூ க்ருதமே வடிவாய் யுள்ளவைகளும் –
உண்மைப் பொருளை உணர்விப்பதால் அமுதமயமான கடல் போல் உள்ளவைகளும் –
செறுக்குற்று துர்வாதம் பண்ணும் புறச் சமயிகளுடைய அட்ட ஹாஸங்களாலே
துயர் உற்ற வேதங்களின் துயரத்தை போக்கடிப்பதிலேயே நோக்குடைய ஸ்வாமி யுடைய
ஸ்ரீ ஸூக்திகள் விஜய ஸ்ரீ யுடன் விளங்குகின்றன –

பேத சுருதிகள் ஸ்வரூபத்தாலும் குணத்தாலும் வேறே வேறே
ஜீவர்களும் ஒருவருக்கு ஒருவர் பேதம்
விஸிஷ்ட ஐக்யம் -சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் ஒன்றே -ஏகமேவ அத்விதீயம்
ஸமஸ்த ஜகத் அந்தர்யாமி -நிரீஸன்- ஸ்ரீ லஷ்மி பதி -சரீரீ பிரகாரம் பிரகார பாவம்

———————————————–

எம்பெருமானார் தரிசனத்தில் குறை சொல்லுபவர் தாமே தமக்கு
இழுக்கைத் தேடிக் கொள்கின்றனர் -என்கிறார் —

55-ஸ்ருதி ஸ்ரோணி சூடாபத பஹூமதே லஷ்மணமதே
ஸ்வ பஷ ஸ்த்தான் தோஷான் விததமதி ஆரோபயதிய
ஸ்வ ஹஸ்தேன உத்ஷிப்தை ச கலு நிஜகாத்ரேஷூ
பஹூளம் களத்பிர் ஜம்பாலைர் ககன தலம் ஆலிம்பதி ஜட

இராமானுஜ சித்தாந்தம் -விசிஷ்டாத்வைதம்  வேதங்களால் ஆதரிக்கப்படுகிறது
(தத்துவம் என்பது வேதங்களின் “சிரஸ் ”
(தலை) உபநிடதங்களின் துல்லியமான பொருள் மற்றும் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டது).
பல்வேறு மதங்களில், சில மனச் சோர்வடைந்த மனங்கள் செயற்கையாக
தவறான மற்றும் ஊகிக்கப்பட்ட குறைபாடுகளைக் கூறுகின்றன. அதனால் என்ன?

கண்ணாடி போன்று அவர்கள் மதங்களில் உள்ள குற்றங்களே பிரதிபலிக்கின்றன
ஒரு சக மனிதர் கைநிறைய சேற்றை வானத்தில் எறிந்துவிட்டு, திரும்பத் திரும்ப அப்படிச் செய்தால்,
நிகர முடிவு மற்றும் ஒரே முடிவு: விஷயம் அவன் தலையில் விழுந்து அசுத்தம் செய்யுமே
இது போன்றே அறிவற்ற புறச்சமயிகள் வாதங்களும் உள்ளன

விசிஷ்டாத்வைதம் எல்லோராலும் போற்றப்படுவதைப் பொறுக்காத பிறமதவாதிகள் ,
தங்கள் மதங்களில் இருக்கிற தோஷங்களை (குற்றங்கள்) எல்லாம் யதிராஜரின் மதத்தில் இருப்பதாகச் சொல்லி,
தங்கள் அறிவின்மையைக் காட்டுகிறார்களாம்.
ஒரு முட்டாள் குளக்கரையில் நின்றுகொண்டு, குளிக்க வந்தவர்களைப் பார்த்து, இதோ மேலே ஆகாயத்தைப் பாருங்கள்,
இந்த வெளுப்பான ஆகாயத்தைக் கருப்பாக ஆக்குகிறேன் பாருங்கள் ,என்று சொல்லி,
குளத்துச் சேற்றை இருகைகளாலும் எடுத்து, உயரே ஆகாயத்தில் வீசி,வீசி எறிந்தால்
மேலேசென்ற சேறு பலவகையாகச் சிதறி, இந்த முட்டாளின் தலை, உடல், கை, கால் இவற்றில் விழுந்து, இவனையே கருப்பாக்கியது .
ஆனால், வானம் அப்படியே வெளுப்பாகவே இருந்தது.
பிற மதஸ்தர்கள் கூறும் அபத்த வாதங்கள் , யதிராஜரின் விசிஷ்டாத்வைதத்துக்குப் பொருந்தாமல் அந்த மதஸ்தர்களுக்கே பொருந்தும்

வேதாந்தம் -உபநிஷத்துக்களுக்கு அபிமதமாய் இருக்கும் எம்பெருமானார் தரிசனத்தில்
புத்தி கெட்டவனாக எவன் தோஷங்களை ஏறிட்டுச் சொல்லுகிறானோ –
அந்த ஜடபிராயனானவன்-ஆகாசத்தில் சேற்றை பூசுவதாக எறிய
அது முழுவதும் தன் மேலேயே விழுவதால் தன்னையே சேற்றால் பூசிக் கொள்கிறான் –

——————————————–

எம்பெருமானார் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் தீபமாய் இருக்கிறார் என்கிறார் –

56-நிராலோகே லோகே நிருபதி பர ஸ்நேக பரித
யதி ஷமாப்ருத் தீப -யதி ந கலி ஜாஜ்வல்யத இஹ
அஹங்கார த்வாந்தம் விஜஹதி கதங்காரம் அநகா-
குதர்க்க வ்யாள ஓகம் குமதி மத பாதாள குஹரம்

இந்த உலகம் அறியாமையின் இருளில் தவிக்கிறது.
(கடவுள் மீதுள்ள அன்பின் எண்ணெயால் எரியும்)
விளக்கு ராமானுஜம் –அவர் இடம் கொண்ட பக்தியே எண்ணெய்
இந்தத் தீபம் மட்டும் இல்லாவிட்டால், மக்கள் எப்படித் தாங்கள் விரும்பினாலும்,
அகங்காரத்தின் இருளையும், அடிப்படையற்ற வாதங்களையும், போக்க முடியும்
போட்டி அமைப்புகளின் கீழ்த்தரமான பேச்சாளர்களால், -பாம்புகளுக்கு ஒப்பிடலாம்.-இவை நிறைந்த
குகையில் அறிவுள்ளவர்கள் தள்ளப்பட்டு கிடப்பார்களே –

கருணை யதிராஜர் அவதரிக்காமல் இருந்தாலோ,
முதலாழ்வார்கள் ஏற்றிய தத்வ ஞான விளக்கு ,எல்லோருடைய இதயத்திலும் ஆத்ம ஞான ஒளியைப்
பிரகாசிக்கும்படி செய்யாதிருந்தாலோ ,
அறிஞர்களும் ,அனுஷ்டானபரர்களும், பிறமத மாயாவாதம் என்கிற படுகுழியில், விழாமல் இருந்திருக்கமுடியாது.
அதாவது,
வித்வான்களும், அனுஷ்டான பரர்களும், கஷ்டப்பட்டு இருப்பர்

இருள் அடைந்த இவ்வுலகில் எம்பெருமான் நிருஹேதுக கிருபை என்ற
எண்ணெயினால் நிரம்பிய எம்பெருமானார் என்ற தீபம்
ஒளிவிட்டு பிரகாசியா விடில்
சத்துக்கள் -குதர்க்கங்களான பாதாள குகையை எப்படி அண்டாமல் விலகுவார்கள் –

—————————————–

57-யதி ஷமாப்ருத் த்ருஷ்டம் மதம் இஹ நவீ நம் ததபி கிம் –
தத் பராக் ஏவ அந்யத் வத ததபி கிம் வர்ண நிகேஷ
நிசாம் யந்தாம் யத்வா நிஜமத திரஸ்கார விகமாத்
நிரா தங்கா டங்க த்ரமிட குஹதேவ பரப்ருதய –

ஓ, ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் சமீபத்தியது என்பதில் நீங்கள் திருப்தி அடைகிறீர்கள்.
எல்லாம் சரி. எந்த பிரச்சினையும் இல்லை. அப்படியே இருக்கட்டும். என்றால் என்ன?
அப்படியானால், அதற்கு முன்னரே ஏதோ ஒரு மதம் இருந்திருக்க வேண்டும் என்று
நீங்கள் சுட்டிக் காட்டலாம். இது எதை நிறுவுகிறது?

ஒரு பொருள் பழமையானது என்பது பழமையானது என்பதற்கான எந்த தகுதியையும் அளிக்காது.
எதுவானாலும் முதலில் நவீனமானது, அதன் பிறகு பழமையாகுமே காலப்போக்கில்.
மாறாக ஒரு தவறான அமைப்பை இப்போது வரை செழிக்க விடுவது மனிதகுலம் செய்த தவறு.
நான் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால், தங்கர், திராவிடர், குஹதேவர், போதாயனார் மற்றும் பலர்
இந்த அமைப்பை ஆரம்ப காலத்திலிருந்தே வளர்த்து வந்தனர்.
அப்போது எதிர்ப்பு இல்லாததால் மட்டும் விரிவாகவும், அதிகமாகவும் எழுதவில்லை.
அந்த அமைப்பு சமீபத்தியது அல்லது அந்த மதிப்பெண்ணில் அது களங்கத்தை அனுபவிக்கிறது என்று அர்த்தமல்ல.
பூர்வர்கள் ஸித்தாந்தம் என்னும் ஸ்வா ரஸ்யம் ராமானுஜ தர்சன ஸித்தாந்தத்தை உரைத்துப் பார்த்தால் அகப்படும் என்றவாறு

யதிராஜரின் விசிஷ்டாத்வைதம் பிற்பாடு தோன்றியது.
சங்கரரின் அத்வைதமோ, முன்னமே தோன்றியது. அதனால், அத்வைதமே சிறந்தது என்றனர், பிறமதத்தினர்.
மதங்களின் சிறப்புக்கும், உயர்வுக்கும் ,பழமையோ புதுமையோ காரணமல்ல.
விசிஷ்டாத்வைதம் பின்னாலே தோன்றியது என்பது, அதன் குறையல்ல !
உயர்ந்த அந்த தத்வத்தை,முன்னமேயே தோற்றுவிக்காதது மனிதனின் குறையே !
டங்கர் ,த்ரமிடர் , குஹதேவர் முதலிய பூர்வாசார்யர்கள் ,
சங்கரரைக் காட்டிலும் பழமையானவர்கள் தாங்கள் சொன்ன விசிஷ்டாத்வைதக் கொள்கைகளை எல்லோரும்
அப்போது பாராட்டியதால் , கவலை அற்றவர்களாக, கண்டனத்துக்கான நூல்களை அப்போது எழுதாது விடுத்தனர்

எம்பெருமானார் வளர்த்த இந்த தர்சனம் நூதனமே என்பாரேல்
அதனால் குறை ஒன்றும் இல்லை என்கிறார் –
இதை விட சங்கராதி மதங்கள் தொன்மை வாய்ந்தவை என்பதனால் என்ன பெருமை –
உறை கல்லில் உரைத்துப் பார்த்தால் தெரியும் –
இந்த விசிஷ்டாத்வைத மதத்தை ப்ராசீன காலத்திலேயே ப்ரவர்த்திப்பத்தது-
டங்கர் -த்ரமிட பாஷ்ய காரர் -குஹ தேவர் போல்வார் தெளிந்த ஞானம் யுடையவர் அன்றோ –

————————————-

மீண்டும் ஸ்ரீ ஸூக்திகள் வைபவம் –

58- ஸூதா ஆசாரம் ஸ்ரீ மத் யதிவர புவ ஸ்ரோத்ர குஹரே
நிஷிஞ்சந்தி நியஞ்சத் நிகம கரிமாணப் பணிதய
யத் ஆஸ்வாத் அப்யாச ப்ரசய மஹிம உல்லாசித தியாம்
சதா ஆச்வாத்யம் காலே தத் அம்ருதம் அநந்தம் ஸூ மநசம்

ராமானுஜரின் படைப்புகள், அவற்றின் மதிப்பில், வேதங்களைக் கூட மீறுகின்றன.
கேட்பவர்களின் காதில் அமிர்தத்தைப் பொழிகின்றன-
அடிக்கடி திரும்பத் திரும்பச் சொல்லப்படும் இந்த அமிர்த இன்பம், அவர்களின் மனதை உயர்ந்த ஞானமாக மலரச் செய்கிறது,
அதனால் இறைவனின் அமிர்தம் அவர்களுக்கு நிரந்தரமாக கிடைக்கச் செய்கிறது.
இவை மோக்ஷம் ஏற்படுத்தி அதன் பின்னர் கிட்டும் அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் பெறுவிக்கும்-

யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,வேதங்களைவிட ,மேன்மையாகக் கேட்பவர் காதுகளில் அமுதமாகப் பொழிகின்றன.
அதனால்தான், இந்த ஸ்ரீஸுக்திகளை நன்கு க்ரஹித்தவர்களுக்கு ,
ஆராத அமுதனாகிய எம்பெருமான் போக்யனாக ஆகிறான்.

ஸ்வாமி தேசிகன், பற்பல – முப்பது -வருஷங்கள், ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் ஸாதித்து ,
அந்தப் பரம ஆனந்தத்தை வெளியிடுகிறார்

செல்வச் சீமானான இளையாழ்வார் இடம் அவதரித்து பரவும் வேதாந்த விழுப் பொருள்கள் -ஸ்ரீ ஸூக்திகள் –
தமது காதுகளில் பெருக்கும் அம்ருத தாரையின் அனுபவங்களால் மலரப் பெற்ற ஞானத்தை யுடைய
வித்வான்களுக்கு அவை நித்தியமாக அனுபவிக்கத் தக்கவை –
அளவிட முடியாத ஆனந்தம் விளைவிப்பவை -மோஷம் அடைவிப்பவை –

————————————————

எம்பெருமானார் திருவடி சம்பந்தமே உத்தாரகம்-

59-யதி ஷோணீ பர்த்து யத் இதம் அநிதம் போக ஜனதா
சிர ஸ்ரேணீ ஜூஷ்டம் தத் இஹ த்ருட பந்தம் ப்ரபவதி
அவித்யா அரண்யாநீ குஹர விஹரன் மாமக மன
பிரமாத்யன் மாதங்க பிரதம நிகளம் பாத யுகளம்

நான் ஸம்ஸாரம் என்னும் அஞ்ஞான பெரிய காட்டில் ஒரு காட்டு யானையைப் போல் சுற்றித் திரிந்தபோது, ​​
நான் வழிதவறிச் செல்வதைத் தடுக்க, ராமானுஜரின் பாதங்கள் (பரமை காந்திகளால் வணங்கப்படும் பாதங்கள்)
இந்த மதம் கொண்ட எனது மணமான யானையை அடக்க வல்ல
விலங்கு போன்று ஸ்வாமியின் திருவடிகள் உள்ளன –

அஞ்ஞானம் என்பது, காடு.
இதில் மதம்பிடித்துத் திரியும் யானை என்பது “மனஸ் “.
இதை முறையாகக் கட்ட, பரமைகாந்திகளும், ஸார்வபௌமர்களும், ஸிரஸ்ஸால் வணங்கும்
எம்பெருமானின் திருவடித் தாமரைகள் தான் தகுந்த இடம். (காலுக்கு விலங்கு ).
இதைப்போல, யதிராஜரின் திருவடி சம்பந்தம் ,
மதம்பிடித்த யானை போன்ற மனஸ் உள்ளவர்களுக்கு, த்ருடமான உறுதியைக் காட்டும்

எந்த யதி ஸார்வ பவ்மருடைய திருவடிகள் ஐஸ்வர்யாதிகளிலே பற்று இல்லாத பெரியோர்களுடைய சிரங்களால்
வணங்கப் பட்டு அநந்ய பிரயோஜனர்கள் சென்னிப் பூவே-
அஞ்ஞானம் ஆகிற பெறும் காட்டில் விளையாடித் திரியும் அடியேன் மனசாகிற மத யானையை
பிடித்துக் கட்டும் சங்கிலியாக ஆகுமோ
அத்திருவடிகள் இவ்வுலகத்தவருக்கு திடமான சம்பந்தம் யுடையதாக விளங்க வேண்டும் –

————————————————–

காரேய் கருணை இராமானுசரின் அருளின் தன்மையைக் கண்டு வியக்கிறார் –
கருணை வெள்ளத்தை சமத்காரமாக வர்ணிக்கிறார் –

60-சவீத்ரி முக்தா நாம் சகல ஜகதேன பிரசம நீ
கரீயோபி தீர்த்தை உபசித ரசா யாமுன முகை
நிருச்சேதா நிம்ன இதரம் அபி சமாப் லாவயதி மாம்
யத்ருச்சா விஷேபாத் யதிபதி தயா திவ்ய தடி நீ –

முத்துக்களை சுமந்து செல்லும் கங்கை ஓட்டம், யமுனை மற்றும் பிறவற்றில் இருந்து வரும்
நீர் வரத்து காரணமாக அதிகரித்து , சில சமயங்களில் உயர்ந்த நிலங்கள் வழியாகவும் பாய்கிறது.
அதுபோலவே, ராமுஜரின் கருணாவின் (தயா) கங்கை, முக்தாக்களை (விமோசனமான ஆன்மாக்களை) உருவாக்கும்,
யமுனாச்சாரியார் மற்றும் பிறரின் கூடுதல் ஆசீர்வாதத்தால் மேம்படுத்தப்பட்டு,
நம்முடைய எல்லா பாவங்களையும் நீக்கி, என்னைப் போன்ற உயர்ந்த கர்வமுள்ள நபரைக் கூட கடந்து,
அதன் தூய்மையான நீரில் என்னையும் மூழ்கடிக்க முடியும்.
நீசர்களில் தலையான அடியேனது பாபங்களையும் போக்கி அருளி முக்தர் ஆக்கியும் அருளும்

பரம ஆசார்யரான யதிராஜரின் கிருபையை, கங்கைக்கு ஒப்பிடுகிறார்.
இத்தோடு, ஆளவந்தார், நாதமுனிகள், நம்மாழ்வார்களின் கருணையும் சேர்ந்திருப்பதால் ,
யதிராஜரின் கருணைவெள்ளம் –த்ரிவேணி சங்கமமாக ஆகிறதாம்.
இந்தக் கருணையை , மழையாக என்மீது பொழிந்து, என்னை ஆட் கொண்டீர் என்கிறார்.
இவை,எனக்குத் தாரகம், போஷகம் , போக்யம் என்கிறார் .
உன் கருணையே கருணை என்று உருகுகிறார்

மோக்ஷ சாம்ராஜ்யம் இவரிட்ட வழக்கு என்பதால் முக்தர்களுக்கு தோற்றுவாய் –
சகல சேதனர்களின் பாபங்களை போக்கி அருளும் –
ஆளவந்தார் போல்வாரின் விசேஷ கடாக்ஷங்களால் விருத்தி பண்ணப் பட்ட பெருமை யுடையது –
தடங்கல் இல்லாமல் பெருகுவது –
யாருக்கும் தாழாமல் அஹங்கரித்து இருக்கும் என்னையும்-
நிர் வியாஜ்யமாக ஏறிப் பாய்ந்து ஆட் கொண்டு விட்டது –
என்னையும் மூழ்கடித்து தனது திருவடிகளில் இட்டுக் கொண்டதே –

———————————————–

61-சிந்தா சேஷ துரர்த்த தந்துர வச கந்தநா சதா கரந்த்திலா-
சித்தாந்தா ந சமிந்ததே யதிபதி கிரந்தத அனுசந்தாயினி
முக்தா சுக்தி விசுத்த சுத்த தடி நீ சூடால சூடாபத கிம்
குல்யாம் கலயேத கண்ட பரசுர் மண்டூக மஞ்ஜூஷிகாம்

ராமானுஜரின் படைப்புகளை ரசிக்கும் பழக்கம் ஒருவருக்கு வந்தபின்பு மற்ற படைப்புகளில் ஆர்வம் காட்ட மாட்டார்; ஏன்?
இந்த (பிந்தைய) படைப்புகள் அற்பங்களை வலியுறுத்துகின்றன;
அவ்வாறு செய்யும் போது, ​​வார்த்தைகள், தர்க்கம் மற்றும் போக்கு அனைத்தும் கடினமானவை
மற்றும் அவை கடினமான பாதைகளில் பயணிக்கின்றன.
முழுப் பயிற்சி இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக முடிச்சுப் போடப்பட்ட பல கிழிந்த துணிக் குவியல்கள் போல் அவை காட்சி யளிக்கும்
அவிழ்க்க முடியாத பல முடிச்சுகள் கொண்ட கந்தல் துணி போல் இவை உள்ளன –
எல்லாவற்றிற்கும் மேலாக, சிவன் தனது தலையின் மேல் , முத்து நிரம்பிய கங்கை நதியைத் தாங்குகிறார்.
ஆனால், தவளைகள் செழித்து வளரும் ஒரு தெரு சாக்கடையைப் பெற்றுத் தாங்க அவர் எப்போதாவது சம்மதிப்பாரா?

தைப்பதற்கே முடியாத நிலையில், வஸ்த்ரங்கள் கிழிந்தால் அதை அங்கங்கு சேர்த்து முடிச்சுப் போட்டு,
உபயோகிக்க முயற்சித்தாலும், எப்படி அந்தக் கந்தல் துணி எதற்கும் பயன்படாதோ
அதைப்போல அடிப்படைப் ப்ரமாணங்கள் எதுவும் இல்லாமல்
சாஸ்த்ர மரியாதையை மீறிய பிற மதங்கள் ஒருவருக்கும் பயன்படாது.
சிவன், கங்கையைத் தலையில் தாங்குகிறான்;
அவனை, நிறையத் தவளைகள் வசிக்கும் வாய்க்காலைத் தலையில் தாங்கு என்று அவன் பக்தர்கள் வேண்டினால்,
சிவன் சரி என்பானா ? மாட்டான்.
அதைப்போல, ஸ்ரீபாஷ்யாதிகளை ஆழ்ந்து கற்றவர்கள் , விபரீதக் கருத்துக்களைச் சொல்லும் பிற மதங்களின்
கருத்துக்களை ஒப்புக்கொள்ளார். அபார்த்தம் என்று ஒதுக்குவர் என்கிறார்

ஸ்ரீ ஸூக்திகளை அனுபவிக்கப் பெற்றவர்கள் மற்ற கிரந்தங்களைக் கண் எடுத்தும் பாரார் –
ஸ்வாமி யுடைய ஸ்ரீ ஸூக்திகளை சதா அனுசந்திப்பார்க்கு
புத்தி கேடு உண்டாக்குவதையே குறிக் கோளாகக் கொண்டு அபார்த்தங்கள் நிறைந்த கந்தல் மூட்டைகளான
இதர மத கிரந்தங்கள் விஷயமாகவே தோன்றாதே
முத்துச் சிப்பிகள் இங்கே நிறைந்து இருப்பதால் –
உயர்ந்த கங்கையை சிரத்தில் அலங்காரமாகக் கொண்ட அரன்-
தவளைகள் நிறைந்த கால்வாயை தலையில் கொள்வானோ –

———————————————

62-வந்தே தம் யமி நாம் துரந்தரம் அஹம் மான அந்தகார த்ருஹா –
பந்த்தா நாம் பரி பந்த்திநாம் நிஜ த்ருசா ருந்தா நாம் இந்தா நயா
தத்தம் யேன தயா ஸூதா அம்பு நிதிநா பீத்வா விசுத்தம் பய –
காலே ந கரிசைல கிருஷ்ண ஜலத காங்ஷாதிகம் வர்ஷதி

வற்றாத கருணைக் கடலான ராமானுஜர், ஹஸ்திகிரி பகவான் வரதராஜருக்கு, சாலைக் கிணற்றில் இருந்து
சுத்தமான தண்ணீரைக் கொண்டு வந்து வழங்கினார்.
இத்தைப் பருகிய – ஒரு கருமேகம்பேர் அருளாளன் நம் மேல் அந்த நீரையே பலனாகப் பொழிகிறான்
இன்றும் அந்த மேகம், அந்த ஸ்ரீ வரதராஜர், நாம் எதிர்பார்த்ததைத் தாண்டி சரியான நேரத்தில் மழையைப் பொழிகிறது.
(இதற்குக் காரணம் ராமானுஜரின் தீர்த்த கைங்கர்யம்  , இப்போது பகவானால் ராமானுஜர்
அடியாக்களான நமக்கு திருப்பிக் கொடுக்கப் பட்டிருக்கிறது,)
அஹங்காராதி அஞ்ஞானங்களை ஸ்வாமி கடாக்ஷ லேசத்தாலே போக்கி அருளுகிறார்
இதனால் மற்ற மதத்தினர் வழிகளால் ஈர்க்கப்படாமல் நம்மைக் காத்து அருளுகிறார்
யதிகளின் தலைவரான இந்த ஸ்வாமியை அடியோங்கள் வணங்குவோம்

யதிராஜர் சாலைக் கிணற்றிலிருந்து கொண்டுவந்து சமர்ப்பித்த சுத்த நீரைப் பருகி,
கரிகிரிமேல் நிற்கும் பேரருளாளன் ,எம்பெருமானாருக்கு அருள் மழை பொழிந்தான்.
பிற மதங்களை நிரஸிக்கும் அத்தகைய கீர்த்தி உள்ள எம்பெருமானாரை நமஸ்கரிக்கிறேன்

பரம தயாளுவான எம்பெருமானாரை அடி பணிகிறேன் –
இந்த அருள் கடலான எம்பெருமானாராலே சமர்ப்பிக்கப் பட்ட தூய்மை படைத்த திருமஞ்சன
நீரைப் பருகி அத்திகிரி உச்சியில் உள்ள கரும் கொண்டல் -தேவ பெருமாள்-பேர் அருளாளன் –
நமக்கு உசித காலத்தில் வேண்டுமவை எல்லாவற்றையும் தாராளமாக பொழியுமோ
அஹங்காரமான இருளைப் போக்குபவரும்
சத்ருக்களுடைய மதங்களை தன் கண் பார்வையாலே –
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப -என்னும் படி
மண் உண்ணும் படி செய்பவராக அந்த யதிகட்க்கு இறைவனான ஸ்வாமியை அடி பணிகிறேன் -என்றவாறு –

——————————————-

63-காஷாயேண க்ருஹீத பீத வசநா தண்டைச் த்ரிபிர் மண்டிதா –
சா மூர்த்தி முரமர்த்த நஸ்ய ஜயதி த்ரயந்த சம்ரஷிணீ
யத் பிரயக்க்யாபித தீர்த்த வர்த்தித தயாம் அப்யச்யதாம் யத் குணாத்
ஆசிந்தோ அநிதம் பிரதேச நியதா கீர்த்தி பிரஜாகர்த்தி ந

முன்பு தத்தாத்ரேயராக வேதங்களை ரஷித்து அருளவே காவி வஸ்திரம் -சந்நியாஸ வேஷம் கொண்டு இருந்தான்
அதே போல் நம் ஸ்வாமியின் திரு அவதாரம் இப்பொழுது மற்றொரு அவதாரம்.
ராமானுஜரின் ஆடையைக் கொடுப்பதற்காக இறைவனின் வெள்ளை வஸ்திரம் பிழிந்து குங்கும நீரில் கழுவப்பட்டது.
மேலும் அவர் துறவி வரிசையின் அடையாளமாக திரி தண்டை எடுத்துக் கொண்டார்.
அவ்வளவு தான். இல்லையெனில், அவர் வெறும் மதுசூதன மூர்த்தி மட்டுமே (வேத தத்துவத்தை விசிஷ்டாத்வைதத்தில் பெற்றதற்காக)
இதற்கும் மேலே அவரது திவ்ய கிரந்தங்கள் மூலம் வேதாந்த சித்தாந்தங்களை வெளியிட்டும் அருளினார்
இவற்றால் நாம் அறிவு ஒங்கப்பெற்று அவரது கருணா குணத்தை புகழ்ந்து கொண்டு உள்ளோம்
இதனால் நமக்கும் மிகுந்த வை லக்ஷண்யம் கிட்டுகிறது
தலை, இதயம் ஆகிய குணங்கள் நம்மீது செலுத்திய வசீகர ஈர்ப்பினால் அவருடைய திவ்ய மங்கள விக்ரஹ
அழகைப் பின் பற்றிக் கொண்டிருக்கும் நமக்கு, ஒரு நேர்மையான வகைப் புகழ் என்பது தானாக வரும் வழக்கமான வரப் பிரசாதம்!
இந்த ஸ்வாமியுடைய கீர்த்திப் புகழானது கடற்பரப்பு எது வரையிலும் உள்ளதோ அது வரையிலும் பரவி நிலைத்து உள்ளது

பகவான் , பட்டடையைக் களைந்து சிவந்த காஷாயத்தைத் தரித்து, த்ரிதண்டத்தை ஏந்தி
சிகை, கமண்டலு இவற்றுடன் தத்தாத்ரேயராக வந்து, வேத, வேதாந்த அர்த்தங்களை நிலை நிறுத்தினார்.
யதிராஜரும் அப்படியே அநுசரித்து விசிஷ்டாத்வைதத்தை நிலை நிறுத்தினார்.
அறிவாளிகள் ஒப்புக்கொண்டு பாராட்டுவார்களாம் .
அதனால், பிள்ளான், கிடாம்பி ஆச்சான் போன்ற சிஷ்யர்களின் (அறிவாளிகளின் ) புகழ் நாடு முழுவதும் பரவியது.

யத்ப்ரக்யாபித தீர்த்த வர்தித தியாம் ” என்பதற்கு,
இதில் “தீர்த்தம்” என்பது , யதிராஜரின் ஸ்ரீபாததீர்த்தம் என்றும் ,
இதை ஸ்வீகரிப்பதால் சிஷ்யர்களுக்கு ,ஞான விருத்தி மிகுதியாகி,
அவர்கள் புகழ் நாடெங்கும் பரவியது என்றும் வ்யாக்யானமிடுவர்

ஸ்ரீ தத்தாத்ரேய மகரிஷியாக திரு அவதரித்து த்ரி தண்டம் ஏந்தி வேதங்களை ரஷித்தான் முன்பு –
அவரைக் காட்டிலும் மேம்பட்ட ஸ்வாமியாக அவரே திருவவதரித்து –
சித்தாங்களை வெளியிட்டு அருளிய கருணையின் புகழ் திக்கெட்டும் என்றும் பரவி உள்ளது –
ஸ்வாமியுடைய கீர்த்தி பிரபாவங்களையும் திவ்ய மங்கள விக்ரக சோபையையும் ஏற்றிப் பேசுகிறார் –

எம்பெருமானாராலே பிரகாசிக்கப் பெற்ற சத் ஸம்ப்ரதாயத்தால்
விளக்கம் உறச் செய்யப் பட்ட புத்தியை யுடையோமான அடியோங்களுக்கு
ஸ்வாமியுடைய குண அனுபவம் பண்ணுவதால் –
அவருடைய சமுத்திர பர்யந்தம் பரவிய கீர்த்தி நெஞ்சுக்கு விஷயம் ஆகிறது –

காஷாயமான பீத வஸ்திரத்தாலும் –
திருக்கையில் ஏந்திய த்ரிதண்டத்தாலும்
எம்பெருமான் யுடைய திவ்ய மங்கள விக்ரஹம் போலே சோபையுடன் விளங்கா நிற்கின்றதே –
பல்லாண்டு பல்லாண்டு –

———————————

எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை தாம் எப்போதும் அணுக்கராக வேண்டும்
என்று பிரார்த்திக்கிறார் –

64-லிப்சே லஷ்மண யோகி ந பதயுகம் ரத்த்யா பராக சடா
ரஷா ஆரோபண தன்ய ஸூரி பரிஷித் சீமந்த சீமா அந்திகம்
பிஷா பர்யடன ஷணேஷூ பிபராஞ்சக்ரே களத் கில்பிஷா –
யத் வின்யாச மிஷேண பத்ர மகரீ முத்ராம் சமுத்ர அம்பரா

ராமானுஜர் சன்யாசியாக வேண்டிய உணவைப் பெறுவதற்காக, ( மது கரம்  ) தனது அன்றாட வழக்கத்தில் நடக்கும்போது , ​​
அவருடைய பாதங்கள் பூமித் தாயின் மீது ஆழமாகவும் தெளிவாகவும் இருக்கும்.
கடலை ஆடையாகக் கொண்ட பூமி இப்போது தன்னை அதிர்ஷ்டசாலியாகவும் புனிதமாகவும் கருதுகிறது.
அவரது திருவடிகளில் உள்ள கொடி மீன் போன்ற சிஹ்னங்கள் மூலம் தூய்மை பெருகிறதே
பலரும் இந்த பாத தூளிகளைத் தலையால் தரித்து தங்களுக்கு ரக்ஷையாக எண்ணி மகிழ்கிறார்கள்
நித்ய ஸூரிகள் கூட இதைப் போற்றுவார்கள்,
அவர்களைத் தங்கள் முன் தலையில் தாங்குவார்கள் என்று நான் கூறுவேன்.
அந்த பாதங்களை என் தலையில் சுமக்க ஏங்குகிறேன்.

இப்படி, சிஷ்யர்களின் புகழ் பரவக் காரணமான , உடையவரின் திருவடிகள்
தனக்கு வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.
யதிராஜர் ,பிக்ஷைக்கு எழுந்தருளும் போது பூமியில் அவரது திருவடிகள் ஆழமாகவும், கோலமாகவும் பதிந்து,
இந்தத் திருவடிகள் எழுப்பிய பாத தூளிகளை , நித்ய ஸூரிகளும் நெற்றியில் தரித்து, தந்யராகிறார்கள்;
அந்தத் திருவடிகளே எனக்குச் சரண் என்கிறார்

கடலை துகிலாகக் கொண்ட இந்த பூமி -மாதுகரத்துக்கு எழுந்து அருளுவது போன்ற சமயங்களில்
திருவடி சம்பந்தத்தால் திரு ரேகைகள் முத்தரிக்கப் பெற்று சகல தோஷங்களும் விலக்கப் பெற்று
தூய்மை அடைகிறது –
திருவடிகளுக்கு ரஷையான பாதுகைகளை தங்கள் சிரசில் தாங்குவதால் புண்ணியர்களான மஹான்களுக்கு
ஸ்வாமி திருவடிகள் அணித்தாய் உள்ளன –
அடியேனுக்கும் அப்படியே ஆக வேண்டும் –

—————————————–

65-நாநா தந்திர விலோபிதேன மநஸா நிர்ணீத துர்நீ தபி –
கஷ்டம் குத்சித த்ருஷ்டிபிர் யதி பதே ஆதேச வைதேசிகை
வியாச ஹாசபதீக்ருத பரிஹ்ருத ப்ராசேதச சேதச-
க்லுப்த கேளி சுக சுக ச ச முதா பாதாய போதாயன

இணை அமைப்புகளை தவறாக இயக்கிய பல ஆதரவாளர்கள் ராமானுஜரால் பரப்பப்பட்ட அமைப்பின்
பரப்பு மற்றும் திசையிலிருந்து வெகு தொலைவில் சென்று விட்டனர்.
பிறகு, அவர்கள் தங்கள் படைப்புகளால், வியாசரை ஏளனப் பொருளாக ஆக்கி விட்டனர் ;
அவர்கள் மனதில் இருந்து வால்மீகியை விரட்டியடித்தனர்
அவர்கள் சுகரை வெறும் கிளியின் நிலைக்குக் கண்டனம் செய்கிறார்கள்;
அவர்கள் போதாயனாரை பயனற்ற விஷயங்களைப் பேசுபவர் என்று கருதுகிறார்கள்.
அதாவது, அடிப்படையாகவும் அதிகாரமாகவும் இருக்க வேண்டிய நமது பண்டைய படைப்புகளை
அவர்கள் முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர்-என்ன கொடுமை இது

குதர்க்கங்களையே நன்கு கற்று ,அதிலேயே மயங்கி, அதையே பேசி,
வ்யாஸ பகவானையே ஹாஸ்யப் பொருளாக்கி,
வால்மீகி மகரிஷியையே மனத்திலிருந்து விரட்டி,
சுகப் ப்ரம்மத்தை விளையாட்டுக் கிளியாக ஆக்கி,
போதாயநரைப் பாதித்து,
யதிராஜரின் ஸித்தாந்தத்தை ஏற்காமல், மாயாவாதம் செய்கிறார்களே என்று வருந்துகிறார்

பாஹ்ய குத்ருஷ்டிகளை பரிகாசப் பேச்சால் ஏளனம் பண்ணுகிறார் –
வேதாந்தங்களை சரியாக கிரஹிக்க யோக்யதை இல்லாமல் கலக்கமுற்று தெளிவற்ற
புத்தி யுடையவர்களால் நிர்ணயிக்கப் பெற்ற தீதுற்ற நெறியுடைய குத்ருஷ்டிகள்
வியாச மகா ரிஷியை பரிகாசத்துக்கு உள்ளாக்குகிறார்கள்
வால்மீகி முநிவரை மூடராக்கி விட்டனர் –
சுக ப்ரஹ்மத்தை விளையாட்டு கிளியாக்கி விட்டனர் –
யசஸ்வியான பகவத் போதாயனருடைய ஞானத்தையும் வியர்த்தமாக்கி விட்டனர் –
அந்தோ பரிதாபம் –

—————————————

66-அர்த்த்யா திஷ்டதி மாமிகா மதி அசௌ ஆசனமா ராஜன்வதீ –
பத்யா சம்யமிநாம் அநேன ஜகதாம் அத்யாஹித சேதி நா
யத் சாரஸ்வத துக்க சாகர ஸூதா சித்த ஔஷதா ஸ்வாதி நாம் –
பிரச்வாபாய ந போபவீதி பகவன் மாயா மஹா யாமி நீ–

வாழ்க்கை என்பது இறைவனின் ” மாயா ” என்பதன் கீழ் நாம் வாழ்ந்து துன்பப்படுகிறோம்.
இது மனித குலம் அனுபவித்த ஒரு நீண்ட, மிக நீண்ட, இருள் நிறைந்த இரவு.
ஆனால் உண்மையான நோய் தீர்க்கும் மருந்தான ராமானுஜரின் படைப்புகளின் அமிர்தக் கடலை –
சித்த மருந்தை -ஆழமாக குடித்த மக்களுக்கு,
இந்த மாயா-இரவு அறியாமையின் ஆழ்ந்த தூக்கத்தைக் குறிக்காது.
இந்த உலகில் பிறந்த ராமானுஜரே, அசுபமான மற்றும் தவறான அறிவை ஒழிப்பதற்காகவே,
என் இதயத்தை அவர் வழியில் செல்லச் செய்தார்,
என் எண்ணங்கள் இப்போது அர்த்தமுள்ளதாக இருக்கின்றன.

காட்டில் உள்ள ரிஷிகள், வியாதி, பசி, தாகம் —இவை தபஸ் செய்ய இடையூறாக இருப்பதால்,
பல மூலிகைகளால், “ஸித்தௌஷதம் “என்கிற ஔஷதத்தைத் தயாரித்து அருந்துவர் .
இதுபோன்ற ஔஷதத்தை , என்(ஸ்வாமி தேசிகன் ) புத்தியான ஸ்திரீயும் அருந்தி இருக்கிறாள்.
இது–இந்த ஔஷதம் பூமியில் உள்ள பாற்கடலான –யதிராஜரின் ஸ்ரீஸுக்திகளைக் கடைந்து எடுக்கப்பட்டது.
ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் ஏற்படும் அஜ்ஞானம் , என்கிற கெட்ட புத்தியானது ,
யதிராஜரின் உபதேசத்தால் ஏற்படும் தத்வ ஞானத்தால் தானாகவே அகன்று போகும்

எம்பெருமானாருடைய பிரசாதம் அடியாக தமது சித்தம் கட்டுப்பாடுடன் உண்மை பொருள் செறிந்து விளங்குகிறது –
பாற் கடலை கடைந்து பெற்ற அமுதம் போன்ற ஸ்வாமி யுடைய ஸ்ரீ ஸூக்திகள் -ஆகிற
சித்த ஒளஷத்தை யுண்டவர்கள் –
மம மாயா துரத்யயா என்னும் படி பகவானுடைய மாயையான நீண்ட இரவு –
அநாதி மாயயா ஸூப் தா என்கிறபடி தூக்கத்துக்கு காரணம் ஆவது இல்லை
பாரோ உபகாரரான எம்பெருமானாரது அருளாலே பிறப்பு முதலே என் புத்தி கட்டு இன்றி திரியாமல்
ராஜாவை அனுசரித்து நடக்கும் பிரஜை போலே கட்டுப்பாடுடன் ருஜுவாக யுள்ளது
நான் பிறந்தது முதல் எனது புத்தியில் ஸ்வாமியே உள்ளார் –
அதனால் சீரான தெளிந்த புத்தி பெற்று பிரக்ருதியான மாயையால் மயங்காமல் உள்ளேன் –

——————————————————

67-ஸூத்தா தேக வசம் வதீக்ருத யதி ஷோணீச வாணீ சதா –
ப்ரத்யாதிஷ்ட பஹிர்கதி சுருதி சிர பிரசாதம் ஆசீததி
துக்த உதன்வத் அபத்ய சந்நிதி சதா சாமோத தாமோதர –
ச்லஷண ஆலோகன தௌர் லலித்ய லலித உன்மேஷா மனீஷா மம

திருப்பாற்கடலில் இருந்து வந்த பெண்ணமுதம் திரு மாரிப்பிலேயே நித்ய வாஸம் செய்வதால்
நித்ய ஆனந்த மயமாகவே எம்பெருமான் உள்ளான்
அவனது குளிர்ந்த கடாக்ஷ மழை நம்மை நித்தியமாக நனைக்கிறது இதனாலேயே நமது புத்தி தூய்மை அடைந்துள்ளது
இதன் மூலமும் ஆச்சார்ய உபதேசங்களாலும் ஸ்வாமியின் திவ்ய கிரந்தங்களில் ஆழ்ந்த பொருள்கள் நமக்கு கிட்டியது
தூய வேத விதிகளைக் கடைப்பிடித்து, நூற்றுக்கணக்கான ராமானுஜரின் பதிவு செய்யப்பட்ட வாசகங்களால் ஈர்க்கப்பட்டு,
அனைத்து அன்னிய தொடர்புகளையும் விலக்கி, அன்பான ரசனையையும் வளர்த்துக் கொண்டு,
வற்றாத அருகாமையில் இருக்கும் இறைவனின் அருள் கடாக்ஷம் மூலம் பிராட்டியாரைப் போலவே நம் உள்ளம் மகிழ்கிறது.

வேத வேதாந்தத்தைச் சொல்லும் யதிராஜரின் ஸ்ரீஸுக்திகளாலே என்னுடைய பெண்ணான புத்தி என்பவள்,
பிறமதவாதிகளையும் அவர்களின் அபத்தக் கருத்துக்களையும் துரத்தி,
எம்பெருமான்
வேதங்கள் என்கிற அரண்மனையில்
உபநிஷத் என்கிற உப்பரிகையில் பேரழகனாய் ,
மிடுக்குடன் வீற்றிருப்பதை அறிந்து,
அவனை அடையப்படிகளில் ஏறி, ஒய்யாரமாக உப்பரிகையை அடைகிறாள்

ஸ்ரீ லஷ்மி சமேத ஷீராப்தி நாதன் குளிர்ந்த கடாஷத்தால் எனது அறிவு மலர்ந்து
சதாச்சார்ய உபதேசத்தினால் பெற்ற யதிராஜர் ஸ்ரீ ஸூக்திகள் ஸ்ரீயபதியின் அருளைப் பெறுவித்து
அடியேன் மனம் அவனையே அனுபவிக்கும் படி பண்ணின -துய்ய மதி பெற்ற சதாச்சார்ய அனுக்ரஹத்தாலே
கையில் கனி என்ன வசப்பட்டவையும்
பாஹ்ய குத்ருஷ்டிகளை மாளப் பண்ணுபவையாயும் உள்ள ஸ்ரீ ஸூக்திகள் என் மனசில் நிறம்பி உள்ளன –
சமுத்திர உத்பாவையான பெரிய பிராட்டி
அகலகில்லேன் இறையும் என்று நித்தியமாய் தன்னிடம் இருப்பதால் ஆனந்திக்கும் எம்பெருமானுடைய
குளிர்ந்த கடாக்ஷத்தால் மலர்ந்த என்னுடைய புத்தியானது –
ஸ்ருதி சிரசி வீதீப்தே -என்றபடி வேதாந்த ப்ரதிபாதனான எம்பெருமானை அடைகிறது –

——————————————————–

68-ஆசதாம் நாம யதீந்திர பத்ததி ஜூஷாம் ஆஜான ஸூத்தா மதி –
தத் அவ்யாஜ விதக்த முக்த மதுரம் சாரஸ்வதம் சாஸ்வதம்
கோ வா சஷூ உதஞ்சயேத் அபி புர சாடோப தர்க்க சடா –
சஸ்த்ரா ச சஸ்த்ரி விஹார சம்ப்ருத ரணா ஆஸ்வா தேஷு வா தேஷு ந

யதிராஜரின் உயர்ந்த மார்க்கத்தை அடைந்தவர்கள் தாங்கள் பிறந்தது முதலாகவே
ஸஹஜமாகவே யதார்த்த ஞானம் பெற்று விளங்குகிறார்கள்
அவர்களிடம் கம்பீரம் அழகு இனிமை ஆகியவற்றுடன் கூடிய நிலையான கல்வி இயற்கையாகவே அமைந்துள்ளது –
தம்பட்டம் கொண்டு எதிர்வாதம் செய்யும் புற சமயத்தார் வாதப்போருக்கு வந்தால்
அவர்கள் முன்பு நாம் சுவையான ஸ்வாமியின் கிரந்தங்கள் உதவியுடன் வாதம் செய்ய நின்றால்
நமக்கு முன் கண்ணைத்திறந்து பார்க்கும் படி யார் தான் நிற்க வல்லவர்கள்

ஸ்வாமி தேசிகன் பெருமைப்படுகிறார், இந்த ஸ்லோகத்தில். உடையவரின் பரிபூர்ணக் க்ருபைக்குப் பாத்ரமானவன்
ஸ்ரீபாஷ்யம் போன்றவைகளை, சதாசார்யன் மூலமாகக் கேட்டும் ,
பலதடவை காலக்ஷேபம் ஸாதித்தும் ,
பிறமதவாதிகளை வாதம் செய்து தோற்கடிப்பதற்குத் தான் ஒருவரே போதும் என்கிறார்

நல்ல ஆயுத பலம் உள்ளவன் எதிர்த்து போராட முடியாதவனாய் எப்படி இருப்பானோ அப்படி
எம்பெருமானார் சித்தாந்தத்தை அவலம்பித்த நான் தர்க்க பலத்தினால் எதையும் சாதிக்க வல்லேன் –
என் எதிரினில் யார் வாதத்துக்கு நிற்க முடியும் –
ராமானுஜ சித்தாந்தத்தைப் பற்றி ஒழுகுபவற்கு பிறப்பு முதலாக தீதற்ற ஞானம் வாழ்ச்சி பெறுமாக-
பொருள் செறிந்ததாகவும் அழகாகவும் ரஸ கனமாகவும் நித்யமாயும் இருப்பவைகளாயும்
அவர்களுடைய வாக்விந்யாஸங்கள் வாழ்ச்சி பெறுமாக –
படாடோபத்துடன் கூடிய யுக்தி வாதங்கள் ஆகிற ஆயுதங்களைக் கொண்டு வாதப்போர் என்ற விளையாட்டில்
மகிழ்ச்சியுறும் என் முன் எதிர் விழி கொடுத்து நிற்க எவன் வல்லவன் –
ஸ்வாமி சம்பந்தம் அடைந்தவர்கள் பிறந்ததுவே முதலாக ஞானம் படைத்தவர்களாக கம்பீரம் அழகு இனிமை நிறைந்து இருந்து
புற மத வாதிகள் இவர்கள் கண்ணைத் திறந்து பார்த்த ஷணத்திலே மாய்ந்து போவார்கள் –

———————————————–

69-பர்யாப்தம் பர்யசைஷம் கண சரண கதாம் ஆஷபாதம் சிசிஷே –
மீமாம்ஸா மாம்சல ஆத்மா சமஜநிஷி முஹூ சாங்க்ய யோகௌ சமாக்க்யம்
இத்தம் தை தை யதீந்திர த்ருடித பஹூ ம்ருஷா தந்திர காந்தார பாந்த்தை –
அந்தர் மோஹ ஷப அந்தை அஹஹ கிம் இஹ ந சிந்த நீயம் தநீய-

கணாதரின் வைஷேஷிகாவை திருப்தியாகப் படித்திருக்கிறோம்.
கௌதமருடைய நியாயம் கற்றோம்.
ஜைமினியின் மீமாமாச மதத்தையும் கற்று அதன் மூலம் கனம் கொண்ட நெஞ்சையும் பெற்றோம்  .
நாங்கள் கபிலரின் சாங்கியம் மற்றும் பதாஞ்சலியின் யோகாவிலும் தேர்ச்சி பெற்றுள்ளோம்.
இவ்வாறு பொய்யான கருத்துக்களை உணர்த்தவல்ல பல மதங்கள் இந்த உலகில் காடு போன்று நிரம்பி உள்ளன –
அந்தக்காட்டில் அஞ்ஞான அந்தகார இருள் பூர்ணமாக உள்ளது-அதில் குருடராகப் பலர் திரிகிறார்கள்
இந்தக்காடுகள் அனைத்துமே ஸ்வாமியுடைய திருப்பாத ஸ்பர்சத்தாலேயே முடியுடன் அழிக்கப் பட்டன
இந்தக் காலத்தில் அந்தப் புற மதங்களின் வாஸனையால் பீடிக்கப் பட்டு சிலர் இன்னமும் உள்ளனர்
அவர்களிடம் கலந்து சிந்திக்க என்ன உள்ளது –
ராமானுஜரால் (ஸ்ரீ பாஷ்யம் போன்ற அவரது படைப்புகளில்) இந்த அமைப்புகளை முற்றிலுமாக
இடித்துத் தள்ளும் போது, ​​தவறான பாதைகளின் அடர்ந்த காடுகளில், அறிவின் இரவில் கண்மூடித்தனமாக
உரத்த குரலில் கர்ஜிக்கும் மக்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? என்றவாறு –

கணாதர் இயற்றிய வைசேஷிக மதத்தை விசேஷமாகப் பயின்றேன்.
ந்யாயசாஸ்த்ரம் , மீமாம்ஸம் படித்தேன். ஸாங்க்ய யோகம் கற்றேன்.
இதனால், எம்பெருமானாராலே கண்டிக்கப்பட்ட அந்தப் பொய்ப் ப்ரசாரங்கள் உள்ள மதங்களை ஆதாரபூர்வமாக மறுக்கப்பட்டது
( ந்யாய பரிஸுத்தி, ந்யாய ஸித்தாஞ்ஜனம், தத்வ முக்தாகலாபம் போன்றவை )

சாக்கியம் கற்றோம் -சமணம் கற்றோம் -சங்கரனார் ஆக்கிய ஆகம நூல் ஆராய்ந்தோம் -என்கிறபடி
கணாத கௌமத மீமாம்சக சாங்க்ய யோக மதங்களை வேண்டிய அளவு அவ்வவற்றில்
உயர்ந்த பாண்டித்யம் பெறும் அளவுக்கு கற்றுள்ளேன் –
ஆயினும் எம்பெருமானாரால் முறியடிக்கப் பெற்ற பல பல பொய்ச் சமயங்கள் என்கிற காட்டில்
அஞ்ஞான இருளால் குருடர்களாக அலைந்து திரியுமவர்கள் இடம் நமக்கு ஆக்க வேண்டியது ஒன்றும் இல்லை –

கணாதகரின் வைஷிக மதம் –
கௌதமரின் மதம் –
ஜைமினி மீமாம்ச மதம் –
கபிலரின் சாங்க்ய மதம்
பதஞ்சலி யோக மதம் -போன்றவை காடு போலே நிரம்பி உள்ளன
அஜ்ஞானம் இருள் சூழ -பலரும் குருடராக உழல–ஸ்வாமி திருவவதாரத்தால் வேரோடு ஒழிக்கப் பட்டாலும்
மீதி -கொஞ்சம் கொஞ்சம் உள்ளாருடன் தொடர்பு கொண்டு சிந்திக்க என்ன உள்ளது –

————————————————–

70-காதா தாதாகதா நாம் களதி கம நிகா காபிலீ க்வாபி லீநா–
ஷீணா காணாத வாணீ த்ருஹிண ஹர கிர சௌரபம் நார பந்தே –
ஷாமா கௌமாரில உக்தி ஜகதி குருமதம் கௌரவாத் தூர வாந்தம் –
கா சங்கா சங்கர ஆதே பஜதி யதி பதௌ பத்ர வேதீம் த்ரிவேதீம் –

மூன்று வேதங்கள் மூலம் அமைக்கப்பட்ட -திரிவேதி பீடத்தில் -ஸிம்ஹாஸனத்தை அடைந்து ஸ்வாமி எழுந்து அருளி உள்ளார்
உடனே நடந்தது என்ன என்னில் –
புத்தரின் அமைப்பு உடனே சாஷ்டாங்கமாக விழுந்தது;
கபிலரின் சாங்கிய தத்துவம் எங்கோ மறைந்தது;
கணாதரின் வைஷேஷிக உபதேசம் மறைந்தது
நான்முகன் சிவன் இவர்கள் மாதங்கள் நறுமணம் இழந்தன
குமாரில பட்டரின் (மீமாம்ஸ வாதம் தோற்றது
பிரபாகரனின் மதம் கற்பனை அதிகமாக உள்ளது என்று விலக்கப் பட்டது .-
இதெல்லாம், ராமானுஜரின் சித்தாந்தத்தை ஏற்றியபோது, ​​நமக்கு வழிகாட்டியாக இருந்தது.
அப்படியானால், சங்கரர் போன்றோர் வாதமும் கண்டிக்கப் பட்டதைக் கூறவும் வேண்டுமோ –

உடையவரின் ஸித்தாந்தம் உறுதி அடைந்ததால்,
பௌத்தம் படுத்தது;
ஸாங்க்யமதம் சிதைந்தது;
வைசேஷிக மதம் மாய்ந்தது;
சார்வாகம் சிதைந்தது;
குமாரிலமீமாம்ஸம் குலைந்தது;
சங்கராதிகளின் சமயமும் நலிந்தது என்கிறார்–

எம்பெருமானார் மூன்று வித ஸ்ருதிகளான சிம்ஹாசனத்தில் வீற்று இருப்பதைக் கண்ட மாத்திரத்திலேயே
இதர மதங்கள் தாமே நசித்துப் போயின –
புத்தர்கள் பாட்டுக்கள் அடங்கின –
கபிலர் காட்டின வழி எங்கேயோ சென்று மறைந்தது –
கணாதனுடைய குரல் ஓய்ந்து விட்டது –
நான்முகன் அரன் பற்றிய பேச்சின் வாசனை கூட தெரியவில்லை –
குமரில பட்டருடைய பேச்சுக்களும் ஒடுங்கின –
பிரபாகர் மதம் மதிப்புள்ள இடத்தில் இருந்து வெகு தூரம் சென்று விட்டது
மற்ற சங்கராதிகளுடைய மதங்களை பற்றி சொல்லவும் வேண்டுமோ -சந்தேகமே வேண்டாம் அதுவும் அழிந்து விட்டது என்றபடி –

அத்வைதிகள் பேத ஸ்ருதிகளுக்கு நிர்வேதத்தை உண்டு பண்ணினார்கள்
த்வைதிகள் அபேத ஸ்ருதிகளுக்கு நிர்வேதத்தை உண்டு பண்ணினார்கள்
இருவரும் சேர்ந்து அந்தர்யாமி ஸ்ருதிகளுக்கு அதிமாத்ரம் நிர்வேதத்தை உண்டு பண்ணினார்கள்
எம்பெருமானார் தான் மூவகை ஸ்ருதிகளையும் சமன்வயப்படுத்தி நிர்வேதம் உண்டாகாதபடி செய்து அருளி
த்ரிவேதீ நிர்வேதத்தை அறவே ஒழித்து அருளினார்

——————————————————

முன் ஸ்லோகத்துடன் எதிராஜ சப்ததி முற்றுப் பெறும் –
இனி இந்த பிரபந்தம் சத்துக்கள் ஆதரிக்கக் கூடியதாய் இருக்கும் என்கிறார் –

71-விஷ்வக் வியாபிநி அகாதே யதி ந்ருபதி யச சம்பத் ஏக அர்ணவே அஸ்மின் –
ஸ்ரத்தா ஸூத்த அவகாஹை சுப மதிபி அசௌ வேங்கடேச அபிஷிக்த –
ப்ரஜ்ஞா தௌர்ஜன்ய கர்ஜத் ப்ரதிகதக வச தூல வாதூல வ்ருத்த்யா –
சப்தத்யா சாரவத்யா சமதநுத சதாம் ப்ரீதிம் ஏதாம் சமேதாம்

யதிராஜரின் புகழ் என்னும் பெரும் கடல் மிகவும் ஆழம் உள்ளதாகவும் எங்கும் பரவியும் உள்ளது
அதில் ஆழ்ந்து ஸ்நானம் செய்தவர்கள் தூய ஞானம் படைத்தவர்கள் ஆகிறார்கள்
இத்தகைய தூய்மையான எண்ணம் கொண்ட அவர்கள் யதிராஜரின் தொண்டுக்காகவே
வேங்கடேசனான அடியேனை முடி சூட்டி மகிழ்கிறார்கள்
இதன் மூலம் நான் பெற்ற மகிழ்ச்சி பயன் பெற வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவே இந்த நூல் இயற்றப் பட்டது

இதில் உள்ள ஆழ்ந்த சாரார்த்தம் காரணமாக வீணான ஆடம்பரம் கலந்த வாத கோஷம் எழுப்பும்
புற மதவாதிகள் யுடைய வாதங்கள் அனைத்துமே பெரும் காற்று முன்னாக நிற்க இயலாத பஞ்சு போல் ஆயின
இப்படியாக யதிராஜ சப்ததி என்ற இந்த நூலுடன் யதிராஜரின் அடியார்கள் மகிழ்ச்சி கலக்கும் படி ஆனது

இந்த யதிராஜ ஸப்ததியை ,பாகவதோத்தமர்களின் நியமனத்தின் பேரில் எழுதினேன் .
யதிராஜரின் ஸித்தாந்த ஸாம்ராஜ்ய கீர்த்தி என்பது கங்கா நதி. இதில் தீர்த்தமாடினேன் .
ப்ரபல பண்டிதர்களாலே ,எனக்குப் பட்டாபிஷேகம் ஆயிற்று.
எதிரிகள் துர்ப்புத்தியாலே பிதற்றப்படும் வாதப்பேச்சு என்கிற பஞ்சு ,
யதிராஜ ஸப்ததி என்கிற பெரிய காற்றாலே ஒதுக்கித் தள்ளப்பட்டது.
இந்த ஸ்தோத்ரத்தினால் பெரியோர்களின் உகப்பை அடைந்தேன்

எங்கும் பரவியுள்ளதும் ஆழம் காண அரியதாயும் யுள்ள யதிராஜ ஸ்ரீ ஸூக்திகள் ஆகிற பெறும் கடலில்
மூழ்கிப் பாவனம் ஆக்கப் பெற்று நல் ஞானம் அடைந்த சத்துக்களால் கொண்டாடப் பெற்ற
வேங்கடேசன் என்று அழைக்கப்படும் அடியேனால் பணிக்கப் பட்டு ஞான சம்பத் இன்றி
கேவலம் சப்தம் மட்டும் செய்கின்ற ப்ரதிபஷிகளின் வாக்குகள் ஆகிற பஞ்சை அடித்துத் தள்ளும்
பெறும் காற்றின் பணியைச் செய்யுமதாயும்
சாரமான பொருள்களை யுடையதுமான இந்த யதிராஜ சப்ததியானது
பாகவதர்களுக்கு இன்பம் தர வல்லதாய் உள்ளது –
என்ன பாக்யம் இது -என்றபடி –

——————————————————–

72-ஆசா மதங்கஜ கணான் அவிஷஹ்ய வேகான் –
பாதே யதி ஷிதி ப்த ப்ரசபம் நிருத்தன்
கார்ய கதா ஆஹவ குதூஹலிபி பரேஷாம் –
கர்ணே ச ஏஷ கவிதார்க்கிக சிம்ஹ நாத –

தாங்கள் கூறியதை ஸ்தாபிக்க வேணும் என்னும் பேராசை கொண்ட மற்ற மதத்தினர் அடக்க இயலாத யானை போன்று அடக்க இயலாமல் உள்ளனர்
அவர்களைக் கட்டி இழுத்து வந்து யதிராஜரின் திருவடிகளில் வலியக் கட்டி வைப்பது ஓன்று உண்டு
எது என்றால் கவி தார்க்கிக ஸிம்ஹத்தின் கர்ஜனை என்னும் அடியேனது முழக்கம்
அவர்களின் செவிகளில் புகுந்து வாதப்போரில் உத்ஸாகம் கொண்ட அவர்களுக்கு இந்த நிலையை ஏற்படுத்தி விடும்

மலைகளில் உள்ள காடுகளில், மதம் பிடித்த யானைகள் மரங்களை முட்டிக் கீழே சாய்த்து, காட்டையே சின்னாபின்னமாக்கி,
அட்டகாசம் செய்து, தண்ணீர் குடிக்க ,மலையடிவாரத்தில் உள்ள நீர்நிலைக்கு வரும்.
யானைகளின் அட்டகாச சப்தத்தினால் கண்விழித்து சோம்பல் முறிக்கும் சிங்கம் கர்ஜிக்கும் .
இந்த கர்ஜனையைக் கேட்கும் யானைகள், மலையில் உள்ள காட்டுக்குள் மறுபடியும் போகாமல்,
சிங்கத்துக்குப் பயந்து, அடிவாரத்திலேயே தங்கிவிடும்.

இதைப்போல, துர்வாதிகள் ரொம்ப வேகத்துடன் சாஸ்த்ரங்களுக்குக் கட்டுப்படாமல் அட்டகாசமாக வாதம் செய்யும்போது,
கவிதார்க்கிக ஸிம்ஹத்தின் யதிராஜ ஸப்ததியை அவர்கள் எதிரில் படித்தால்,
பயந்து, நடுங்கி, விசிஷ்டாத்வைதிகளாக மாறி விடுவர்

கவிதார்க்கிக ஸிம்ஹம் என்ற பட்டாப் பெயரை யுடைய வேதாந்த வாரியன் பணித்த யதிராஜ சப்ததி என்ற
சிம்ம நாதம் ப்ரதிபஷிகளுடைய காதில் பட்டால்
அவர்களும் எம்பெருமானாரை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்பர்கள் என்கிறார்
புற மதத்தார் யானை போலே மதம் கொண்டு பேராசையால் திரிய சிம்ஹம் போலே கர்ஜித்து
யதிராஜர் திருவடிகளில் வலியக் கொண்டு வந்து கட்டினேன்
கவிதார்க்கிக சிம்ஹ கர்ஜனை அவர்கள் செவியில் புகுந்து இந் நிலைமை ஏற்படுத்தி விட்டது –

———————————————–

73-உபசமித குத்ருஷ்டி விபலவா நாம்
உபநிஷதாம் உபசார தீபிகா இயம்
கபளித பகவத் விபூதி யுக்மாம்
திசது மதிம் யதிராஜ சப்ததி ந

மற்ற மதவாதிகள் உபநிஷத் வரிகளுக்கு தங்கள் விருப்பம் போன்ற பொருள்களைக் கூறி அவற்றுக்குப் பெரும் துன்பம் ஏற்படுத்தினார்
இந்தத்துன்பத்தை எதிராஜர் நீக்கி அருளினார்
இப்படிப்பட்ட யதிராஜரின் பெருமைகளை விளக்கும் இந்தக் க்ரந்தம் உபநிஷத்துக்களுக்கு
இரண்டு பக்கமும் ஏற்றி வைக்கப்பட்ட தீபம் போன்றது
இந்த கிரந்தத்தைக் கற்பதன் மூலம் உபய விபூதியையம் விபூதிமானையும் பற்றிய தெளிந்த ஞானத்தை இந்த நூல் அளிக்க வேண்டும்

உபநிஷத்களுக்கு விபரீத அர்த்தங்கள் சொல்வதால் வந்த விபத்துக்கு யதிராஜ ஸப்ததி ,
அந்த விபத்தைப் போக்குகிற தீபஹாரத்தி போன்றதாகும்.
இதை அனுசந்திப்பவர்களுக்கு பகவானிடம் பரம பக்தி ஏற்படும்

பங்கம் அடைந்த குத்ருஷ்டிகளால் ஏற்படக் கூடிய உபத்ரவங்கள் நீங்கிய வேதங்களுக்கு
கை விளக்காய் அமைந்த இந்த யதிராஜ சப்ததியானது நமக்கு மதி நலத்தை அருள வேணும்

புற மத வாதங்களால் துன்பம் அடைந்த உபநிஷத்துக்களை யதிராஜர் நீக்கி அருளினார் –

ஸ்வாமி பெருமைகளை விளக்கும் இப்பிரபந்தம் இரு பக்கம் ஏற்றி வைக்கப் பட்ட தீபம் போன்றதாகும் –

உபய விபூதி யாதாம்ய ஞானமும் இதனால் பெறலாம் –


இந்த நூலைப் பாராயணம் செய்பவர்களுக்கு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய மார்க்கமானது
உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாகப் புலப்பட்டு விடும்
அவர்களின் சொற்கள் அனைத்தும் வேதங்களின் தலைகளில் வைக்கப்படும்
மேலும் அவர்கள் செய்வது-யதிராஜருடைய சித்தாந்தத்தின் மீது பொறாமை கொண்ட
அனைவரையும் பகல் நக்ஷத்ரம் போன்று ஒளி குன்றும்படி செய்வார்கள்

இந்த யதிராஜ ஸப்ததியை அனுசந்தித்தால் பகவத் கல்யா குணங்கள் தெளிவாகத் தெரியும்.
இந்த ஸ்துதியின் பக்தர்கள் , பொறாமை உடைய பிறரை,நக்ஷத்ரங்கள் எப்படிப் பகலில் ப்ரகாசிக்காதோ
அந்த மாதிரி, ப்ரகாசத்தை இழக்கச் செய்வர்

இந்த யதிராஜ சப்ததியைக் கற்பதில் விஷயத்தில் ஆதரம் யுடையவர்கள் சத் ஸம்ப்ரதாயத்தைக் கைக் கொண்டவர்களாய்
நல்ல விஷயங்களையே எப்போதும் கேட்பவர்களாய் மாச்சர்ய லேசமும் இல்லாதவர்களாய் விளங்கட்டும் –

நிகமத்தில் –
இந்நூலைக் கற்றார்க்கு மார்க்கம் உள்ளங்கை நெல்லிக் கனி போலே தெளிவாக புலப்படும் இவர்கள் வார்த்தைகள்
வேதங்களின் தலை மேல் வைக்கப்படும்
புற மதத்தினரையும் ஸ்வாமி மேல் பொறாமை கொள்பவர்களையும் பகல் வேளை நஷத்ரம் போலே
ஒளி குன்றும் படி செய்து விடுவார்கள் –

—————————————–

ஜயதி யதிராஜ ஸூக்தி ஜெயந்தி முகுந்தஸ்ய பாதுகா யுகளீ
ததுபயதன த்ரிவேதீம் அவத்யயந்த ஜெயந்தி புவி சந்த –

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

செல்ல வேண்டிய திசையை சரியாக காட்டுபவனே தேசிகன்.தூப்புல் வேதாந்த மஹாதேசிகன் :

ஆசார்யன் என்பதும் இதை போலவே.
சாரி என்றால் சஞ்சரிப்பவன்.
பாத சாரி காலால் நடந்து செல்பவன்.
கஜாச்சாரி யானைமேல் செல்பவன்.
எனவே சரியான பாதையில் நடந்து சென்று மற்றவர்க்கு வழிகாட்டுபவன் ஆசார்யன்.

இவர் ஒரு மஹா ஆசார்யனாய் இருந்து வைணவ சமயம் காத்த உத்தமர்.

அனந்தசூரியார் – தோத்தாத்ரி அம்மை தம்பதிக்கு திவ்ய குமாரனாய்
தொண்டைமண்டல
காஞ்சி மாநகரில்
பொய்கையாழ்வார் அவதரித்த விளக்கொளி எம்பெருமான் ஆலய பகுதியான
தூப்புல் எனும்
திருவிடத்தே திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாக
கி.பி. 1268ஆம் ஆண்டு,
விபவ வருஷம்,
புரட்டாசி மாஸம்,
சிரவணம் நட்சத்திரம் கூடிய
புதன்கிழமையில்
அவதரித்தார்.

ஒரு வெண்கல மணியை பெருமாள் தனக்கு கொடுத்து அதை தான் விழுங்கியதாக கனவு கண்டாள் அவர் தாய்.

ராமானுஜரைப் போன்று இவரால் கணீரென்று வேத நாதம் எங்கும் ஒலிக்க பிரகாசிப்பார் என்று பெருமாளே அருளினார். அதனால் தான் பெருமாள் சந்நிதியில் மணி கிடையாது. திருவாராதனம் போது வெளியே உள்ள மணி மட்டும்
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன் என்பதாம்.

பின்னாளில் இவர் ‘சுவாமி தேசிகன்’,
‘தூப்புல் நிகமாந்த தேசிகன்’,
‘தூப்புல் பிள்ளை’,
‘உபய வேதாந்தாசாரியர்’
‘சர்வ தந்திர சுதந்திரர்’
மற்றும்
‘தூப்புல் வேதாந்த மஹாதேசிகன்’
என்னும் பெயர்களால் அழைக்கப் பெற்றார்.

இராமனுசரின் உறவினரான நடாதூர் அம்மாளின் நேரடிச் சீடரும் இவரது தாய்மாமனுமான கிடாம்பி அப்புள்ளாரிடம் வடமறையான வேதங்களும்,
தென் மறையான
திவ்ய பிரபந்தமும்,
புராணங்களும் மற்றும்
சாத்திரங்களையும் குறைவறக் கற்றார்.

ஏழாம் வயதில் கிடாம்பி அப்புள்ளாரினால் உபநயனம் செய்விக்கப் பட்டதோடு,
கல்வியும் கற்றவர், தன் இருபத்தோராம் வயதில் திருமங்கை என்றழைக்கப்பட்ட கனகவள்ளி எனும் மங்கையை மணம்புரிந்தார்.
தன்னுடைய இருப்பத்தேழாம் வயதில் வைணவ குரு எனும் நிலையை அடைந்த இவர் தன்னுடைய குருவான கிடாம்பி அப்புள்ளாரின் ஆணைப்படி
கடலூருக்கு அருகில் உள்ள திருவஹீந்தரபுரம் சென்று சில காலம் வாழ்ந்தார்.
திருப்பதி,
மேல்கோட்டை,
காஞ்சிபுரம்,
அயோத்தியா,
பிருந்தாவனம்,
பத்ரிநாத்,
திருவரங்கம்
உள்ளிட்ட எண்ணற்ற தலங்களுக்கு சென்று ஜெகத்குரு இராமனுசரின் தத்துவங்களை பரப்பினார்.
இறுதியில் தன் மகனான குமார வரத தேசிகனோடு திருவரங்கம் வந்தவர் இப்புவியில் 101 வருஷங்கள் வாழ்ந்தார்.

இராமனுசரின் தத்துவங்களை பரப்புவதையே முழுப்பணியாக கருதியவர் சுமார் நூற்றிருப்பத்து நான்கு நூல்களை தமிழ், வடமொழி, பிராகிருதம், மணிப்பிரவாள நடையில் அருளியுள்ளார்.

மாமன் அப்புள்ளார் ஐந்து வயதில் அவரை நடாதூர் அம்மாள் பிரசங்கத்திற்கு அழைத்து சென்றபோது அவர் ஒரு கணம் சிறுவனைப் பார்த்து பிரமித்து
”எங்கே பிரசங்கத்தை நிறுத்தினோம்” என்பதை மறந்து போனார்.
மீண்டு யோசிக்கையில், சரியாக அந்த ஸ்லோகத்தை எடுத்து சொன்னார் தேசிகர்.

20 வயதில் சகல சாஸ்திரங்களும் அறிந்தார். அப்புள்ளாரிடம் கருட மந்திர உபதேசம் பெற்றார்.

திருவஹீந்த்ரபுரம் என்ற பெயர் இப்போது சுருங்கி திருவந்திபுரம் ஆகிவிட்டாலும் தேசிகரின் சரித்திரம் கொஞ்சமும் சுருங்கவில்லை.
இங்கு தான் ஒரு சிறு குன்றில் பலநாள் அன்ன ஆகாரமின்றி
கருட மந்த்ரம் ஜபித்தார்.
ஶ்ரீ ஹயக்ரீவ மந்திரம் ஜபிக்வே எம்பெருமானும்
திவ்ய தரிசனம் தந்துஅவருக்கு ஹயக்ரீவ மந்திராபதேசம் செய்து
ஶ்ரீ தேசிகன் விருப்பப்படி அவரது நாவில் குடிகொண்டார்.
தனது சிலா ரூபத்தையும் கொடுத்தார்.
அந்த ஹயக்ரீவ விக்ரஹத்தை இன்றும் தேவநாத பெருமாள் சந்நிதியில் காணலாம்.

காஞ்சி விஜயம் செய்து பிறகு பல திவ்ய தேச யாத்ரை சென்ற தேசிகன் ”பிரபத்தி’ எனும் சரணாகதி தத்தவத்தை விளக்கி வைஷ்ணவ சமூகம் பயன்பெற செய்தவர்.
நியாச விம்சதி,
நியாச தசகம்,
நியாச திலகம் என்று வடமொழியிலும்,
அடைக்கலப் பத்து,
அர்த்த பஞ்சகம் என்று தமிழிலும் அளித்த பெரிய ஞானி.
சகல கலைகளும் கைதேர்ந்து சர்வ தந்திர ஸ்வதந்திரர் என்று அழைக்கப் பட்டார்..

திருப்பதி சென்று தயா சதகம் இயற்றினார். பெருமாளால் வேதாந்தாச்சார்யா என்று கௌரவிக்கப் பட்டவர்.

ஸ்ரீ ரங்கம் போகும் வழியில் ஸ்ரீ பெரும்புதூர் சென்று ஸ்ரீ ராமானுஜரை வழிபட அங்கே யதிராஜ சப்ததி என்ற ஸ்லோகம் உருவானது.

ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதர் மகிழ்ந்து அளித்த பெயர் தான் வேதாந்த தேசிகர் என்று நாம் இன்றும் அவரை அறிவது..
ரங்கநாயகி தாயார் அளித்த பெருமை தான் சர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்.

1327ல் அலாவுதினின் தளபதி மாலிக் காப்பூர் தெற்கே பல ஆலயங்களை அழித்தபோது ஸ்ரீரங்க பெருமாள் திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டும் ஸ்ரீ பாஷ்ய க்ரந்தங்கள் கர்நாடகத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த பொறுப்பை தேசிகன் ஏற்றார். ஒரு இரவு செத்த பிணங்களோடு பிணமாக கிடந்து மிலேச்சர்களிடம் இருந்து அரிய வைஷ்ணவ செல்வங்களை காப்பாற்றியவர் ஶ்ரீ மஹா தேசிகன்

”ஸ்ரீ ரங்கம் மீண்டும் பழம் பொலிவை பெற நீ அருள்வாய்” என்று பெருமாளை அவர் பாடியதே அபிதி ஸ்தவம் என்ற ஸ்லோகம்.

தேசிகர்
ஸ்ரீ ரங்கத்தில் தான் பெருமாள் திருவரங்கனை பாதாதி கேசம் வரை வர்ணித்த பகவத் த்யான சோபனம் ஸ்தோத்ரம் இயற்றினார்.
இதை படிக்கும் போது திருப்பாணாழ்வாரின் அமலனாதி பிரான் பாசுரங்கள் படிப்பதுபோல் எண்ணம் தோன்றுகிறது.

”நீரென்ன பெரிய ஞானஸ்தர், பண்டிதர் என்ற நினைப்போ?
ஒரே நாளில் 1000 பாக்களை ரங்கநாதர் மேல் இயற்ற முடியுமா உம்மால்?” என்று சில பெரிய கனத்த தலைக்காரர்கள் சவால் விட ”ரங்கநாதனைப் பாட முடியாமலா போகும் என்று தேசிகர் சவாலை ஏற்றாரே தவிர, அன்று முழுதும் சிஷ்யர்களுக்கு பாடம் கற்பித்ததில் போய்விட்டது.
அடடா நாளை காலையில் 1000 பாக்களை இயற்றியதை காட்ட வேண்டுமே, என்று இரவு யோசித்தார். ”தேசிகா, என் பாதுகையிலிருந்து ஆரம்பியேன் ” என்று ஸ்ரீ ரங்கநாதனே எடுத்துக் கொடுக்க, விடிகாலை 4 மணிக்கு எழுத்தாணியை பிடித்தார்.
மூன்றே மணி நேரத்தில் 1008 பாதுகா ஸ்துதி ஸ்லோகம் உருவானது. அதை உச்சரிக்கவே குறைந்தது 7 மணி நேரம் ஆகும் நமக்கு.
மறுநாள் காலை பண்டிதர்கள் அனைவரும் மூக்கில் மேல் விரலை வைக்க மறந்தாலும் தேசிகரை ”கவிதார்க்கிக சிம்ஹம்” என்ற பட்டத்தை அவருக்கு அளித்து கௌரவிக்க மறக்கவில்லை.

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ஆண்டாளை வழிபாட்டு கோதா ஸ்துதி உருவானது. ஆண்டாள் உத்சவத்தின் போது திவ்ய பிரபந்தத்துடன் ஆண்டாளின் விருப்பப் படியே,
கோதாஸ்துதி ஸ்லோகங்கள் சொல்லப்பட்டு வருகிறதே.

காசு, தங்கம், நாணயம் இதெல்லாம் தேசிகர் பார்த்ததில்லை, வாங்கிக்கொள்ள மாட்டார். எனவே உஞ்சவ்ரித்தியில் வாழ்ந்த அவருக்கு அரிசியோடு தங்கமணிகளை கலந்து கொடுத்து, அதை அவர் மனைவியிடம் கொடுத்து சமைக்க சொல்ல, அவளோ இதெல்லாம் என்ன அரிசியோடு என்று கேட்க, ஏதாவது பூச்சி முட்டையாக இருக்கும் என்று கையால் கூட தங்கத்தை தொடாமல் தர்ப்பையால் அவற்றை ஓதுக்கி வெளியே எறிந்து விட்டார்.

தேசிகரின் பால்ய நண்பன் வித்யாரண்யன்
விஜயநகர சாம்ராஜ்யத்தில் பெரிய பதவியில் இருந்ததால்,

”தேசிகா, நீ எதற்காக ஏழ்மையில் வாடுகிறாய்,
வா என்னிடம், இங்கு உனக்கு நிறைய பரிசு வழங்க ஏற்பாடு செய்கிறேன் என்றான் ” வித்யாரண்யனுக்கு அவர் பதிலாக எழுதியதே நமக்கு பொக்கிஷமாக கிடைத்த
”வைராக்ய பஞ்சகம்”.

”வித்யாரண்யர்
நமக்கல்லவோ மிகப்பெரிய பரிசை அளித்துவிட்டார்.”.

ஆதி சங்கரர் ஒரு ஏழைப் பெண்ணுக்கு பொன் மழை பெய்ய வைத்த கனக தாரா ஸ்தோத்ரம் தெரியுமல்லவா. அதே போல் இன்னொன்றும் காஞ்சியில் நடந்திருக்கிறதே.

காஞ்சிபுரத்தில் தேசிகர் வாழ்ந்தபோது, அவரை அவமானப் படுத்த சில விஷமிகள்,

ஒரு ஏழைப்பையன் தனது திருமணத்துக்கு உதவி கேட்டபோது ”தம்பி நீ தேசிகர் என்று ஒருவர் ரெண்டு தெரு தள்ளி வசிக்கிறார். பணக்காரர்.
யார் கேட்டாலும் பணம் தருவாரே, அவரைப் போய் கேள்” என்று அனுப்ப,
அந்த அப்பாவி அவரது எளிய வாழ்க்கை நெறி தெரியாமல் அவரை நிதி உதவி கேட்க, அவனை அழைத்துக்கொண்டு நேராக வரதராஜ பெருமாள் கோவில் சென்று தாயாரின் சந்நிதியில் அவளை உதவி செய் என வேண்டினார் தேசிகர்.

”அவரது மனதைத் தொடும்

”ஸ்ரீ ஸ்துதி” தாயாரை உடனே அங்கே ஒரு பொன்மழை பெய்ய வைக்க காரணமானது..

ஒரு பாம்பாட்டி தேசிகரிடம் ”என்னுடைய விஷ பாம்புகளை உங்களால் சமாளிக்க முடியுமா?” என்று சவால் விட,
அவர் தரையில் ஒரு கோடு போட்டு
” உன் பாம்புகள் இந்த கோட்டைத் தாண்டட்டும்” என்றார்.
சில விஷ பாம்புகள் கோட்டைத் தாண்ட முயன்றபோது தேசிகர் உச்சரித்த கருட மந்திர ஸ்லோகம் கேட்ட கருடன் வந்து அத்தனை பாம்புகளையும் அன்றைய காலை உணவாகத் தூக்கிக் கொண்டு போய் விட்டான்.

பாம்பாட்டி அவர் காலில் விழுந்து ”என் பிழைப்பே இந்த பாம்புகள் தான் ” தயவு செய்து அவற்றை திரும்ப தரவேண்டும் என்று கெஞ்சினதால், மீண்டும் கருட மந்த்ரம் சொல்லி கருடனை அந்த பாம்புகளை திரும்ப தர வைத்தார் .

”உங்களால் எல்லாமே செய்ய முடியும் என்கிறார்களே, என்னைப்போல் கட்ட முடியாவிட்டாலும் ஒரு சாதாரண கிணறு கட்ட முடியுமா உங்களால்?” என்று ஏளனமாக கேட்டானாம் ஒரு மேஸ்திரி.

”சரியப்பா கட்டுகிறேன்”

‘ நான் கொடுக்கும் கற்களை மட்டுமே கொண்டு அதைக் கட்டவேண்டும்”

”ஆஹா அப்படியே.’ என்ற தேசிகர் அவன் கொடுத்த அளவு சரியில்லாத கோணா மாணா கற்களைக் கொண்டே கட்டிய அந்த வினோத கிணறு இன்றும் திருவஹிந்திர புரத்தில் இருக்கிறது.
எங்கே நீர் வற்றினாலும் அந்த கிணற்றில் நீர் வற்றுவதில்லை. சுவையிலும் குன்றவில்லை.

மற்றொரு சிற்பி தனது பங்குக்கு அவரை சவாலுக்கு இழுக்க, அவன் விரும்பியவாறே, அவன் அமைத்த பீடத்தில் தனது உருவத்தையே தத் ரூபமாக சிலையாக வடித்துக் காட்டியபோது அசந்து போனான். அவனமைத்த பீடம் போதாததால் அங்கங்கே அவர் உருவச்சிலையை உளியால் வெட்டும்போது அவன் வெட்டிய பாகங்கள் அவருடைய உடலிலிருந்து ரத்தத்தை சிந்த வைக்க, பயந்தே போய் அவர் காலடியில் விழுந்து மன்னிக்க வேண்டினான் அந்த சிற்பி.

தனது உருவத்தை தானே தேசிகர் வடித்த சிலாரூபம் இன்றும் தேவநாதர் ஆலயத்தில் இருக்கிறதே.
மேலே சொன்ன அவர்
கட்டிய கிணறையும் பார்க்க தவறவேண்டாம். கோவிலுக்கு அருகாமையில் சற்று தள்ளி
ஒரு மண்டபத்தில் உள்ளது.

நமது தூப்புல் குலமணியும் ஸாக்ஷாத் திருமலைமால் கண்டாவதாரமும் ராமானுஜ முனி அபராவதாரமாவார்.
அவர் ஆழ்வார் மீது வைத்திருக்கும் பற்றை அளவிடமுடியாது, வேறு எந்த ஆசார்யனும் தன்னை “சந்தமிகு தமிழ் மறையோன்” என்று பறைசாற்றி கொண்டதில்லை. அவர்காலத்தில் அத்வைத சித்தாந்தம் தலைஓங்கி நிற்க அதை நிஷ்கர்ஷித்து உண்மைபொருளை நிலை நாட்ட இவர்களுக்கு ஆழ்வார் ஸ்ரீஸூத்திகள் துணைபுரிந்தன. அதையும் நம் ஸ்வாமி “தெரியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே” என்றுசாதித்தார். ஆளவந்தார் இராமானுஜ முனிகாலம் தொடங்கி தேசிகறது காலம் ஏன் இன்றைய அளவிலும் ஆங்காங்கே பூர்வபக்ஷம் தலை ஓங்குகிறது அப்பொழுது அவர்கள் வேத வேதாந்தத்தை கொண்டேவாதம் செய்கிறார்கள்.
நமது ஆசார்யர்களோ ஆழ்வார்களோ திவ்ய பிரபந்தங்களைக்கொண்டு உண்மை பொருளை உணர்த்துகின்றனர். இது நமது சித்தாந்துக்கே உரிய சிறப்பு.

தேசிகர் 101 வருஷம் வாழ்ந்தார். தனது அந்திம நேரம் நெருங்கியதை உணர்ந்த தேசிகர் தனது குமாரர் குமார வரதாசாரியாரை அழைத்து அவர் மடியில் தலை வைத்து, அவரை ”திருவாய் மொழி, உபநிஷத் எல்லாம் சொல்லப்பா. கேட்டுக்கொண்டே செல்கிறேன்” என்றார். பரமபதம் அடைந்தார். தாயார் ரங்கநாயகி தன்னருகே ஒரு சந்நிதியில் தேசிகரை இருத்திக் கொண்டாள்.
வேறு யாருக்கும் இங்கு இடமில்லை என்ற அவள் ஆணை இன்றும் நிலுவையில் இருக்கிறது.

வேதாந்த தேசிகரே !

வேதாந்தாசார்யரே !

சீரார் தூப்புல் பிள்ளையே !

இன்னும் ஒரு நூறாண்டிரும் !

இல்லை இல்லை . . .

அது போதாது !

இன்னும் பல ஆயிரமாண்டிரும் .

———–

ஜயதி யதிராஜ ஸூக்தி ஜெயந்தி முகுந்தஸ்ய பாதுகா யுகளீ
ததுபயதன த்ரிவேதீம் அவத்யயந்த ஜெயந்தி புவி சந்த –

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading