ஸ்ரீ முதல் திருவந்தாதி-தனியன் / அவதாரிகை / பாசுரம் -1- -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

கோயில் திருமலை பெருமாள் கோயில்
போக மண்டபம் புஷ்ப்ப மண்டபம் தியாக மண்டபம்
போல் முதல் ஆழ்வார்கள்
ஜென்ம வைபவத்தால் முதன்மை பெற்ற –
செம் பொன் கழலடி செல்வா பலதேவா போல் பொற் கால் இட்ட ஆழ்வார்கள்
நல் தமிழால் நூல் செய் உய்வித்த பெற்றிமையோர் -இரண்டாம் பெருமை
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் -பொய்கையார் பூதத்தார் பெயர் தேசுடனே தோன்றும் சிறப்பு
திருக்கோவலூர் -த்வாபர யுக முடிவில் -திரு அவதாரம் –

மூவரும் சேர்ந்தே புறப்பாடு திருவரங்கத்தில் சதயம் அன்று –
ஸ்ரவணம் -விஷ்ணு நக்ஷத்ரம் –
ஒண் சங்கு கதை வாள் ஆழி -பொய்கையார் பூதத்தார் பேயர் திருமழிசை நால்வரும் –
பாஞ்ச ஜன்யம் கோஷிக்கும் அன்றோ –
கனைத்து இளம் கற்று எருமை-

வேத வேதாந்த -பாஹ்யர் கலங்க –
திக்கு எட்டும் பரவ

துலாயாம் ஸ்ராவணே ஜாதம் காஞ்ச்யாம் காஞ்சன வாரி ஜாத்
த்வாபரே பாஞ்ச ஜன்ய அம்சம் ஸரோ யோகி நமாஸ்ரயே

துலாயாம் ஸ்ரவணே ஜாதாம்
காஞ்யாம் -முத்தி தரும் க்ஷேத்ரம்
ஐப்பசி தொடங்கியே எண்ணுவோம்
நக்ஷத்ரமும் திருவோணம் தொடங்கி
காஞ்சன வாரி -பொற்றாமைக் குளத்தில் -அயோனிஜ வாஸம் -அத்தையே பேராக சர யோகி -என்று கொண்டார்
த்வாபர யுக சந்தியில் -கலியுக பூர்வ ஸந்த்யை
சூரியனை தீபமாக ஏற்றி
ஸ்ரீ யபதி -குறித்து -காணவே விளக்கு ஏற்றினார் அவரை -வணங்குவோம்

செய்ய துலா ஓணத்தில் செகத்து உதித்தான் வாழியே
திருக்கச்சி மா நகரம் செழிக்க வந்தோம் வாழியே
வையம் தகளி நூறும் வகுத்து உரைத்தான் வாழியே
வநச மலர்க் கருவதனில் வந்த மைந்தன் வாழியே
வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
பொய்கை முனி வடிவழகும் பொற் பதமும் வாழியே
பொன் முடியும் திரு முகமும் பூதலத்தில் வாழியே

கலவ் -நாராயண பாராயண -ஸ்ரீ மத் பாகவதம்
தாமிரபரணி க்ருதமாலா பயஸ்வினி பாலாறு-கரையில் இவர்கள் ஆவிர்பாவம் ஸூ சிதம்
பர பக்தி பர ஞான பரம மூன்று அவஸ்தைகள்-ராஜவித்யா- ஞாதும் த்ரஷ்டும் பிரவேஷ்டும் -ஞான தர்சன பிராப்தி

முதல் ஆழ்வார்கள் மூவரும் பரத்வத்தில் ஊன்றி இருப்பர் -ஊற்றம் பற்றியே சொல்வர்-த்ரிவிக்ரமம் -திருவேங்கடம் மூன்றும் பாடுவார்

இவையே பரத்வத்துக்கு விபவத்திலும் அர்ச்சையிலும் பிரதிநிதி

ஸம்ஸ்லேஷத்தில் ஆனந்தம் விஸ்லேஷத்தில் துக்கம் -பர பக்தி
வழி அல்லா வழியில் அடையும் த்வரை பர ஞானம்-ஞானம் ப்ரேமம் சாஷாத்காரம் -மூன்றும் இந்த மூன்று அவஸ்தைகள்

உபய விபூதி நாதன் -ஸர்வேஸ்வரன் -நேராக நாராயணன் சொல்லாமல்
நாரணற்கு ஞானத்தமிழ் புரிந்த நான்
திருக்கண்டேன் -ஸ்ரீ யபதி -திரு ஆழி திரு பாஞ்ச ஜன்யம் சம்பந்தம் சொல்லியே -காட்டி
உயர்வற உயர்நலம் -உடையவன் -அயர்வறும் அமரர்கள் நாதன் -வண் புகழ் நாரணன் -நம் திருவுடை அடிகள் -மூன்று திருவாய் மொழியில்
திருவில்லா தேவரை தேறேன் மின்
நம் கண்ணன் அல்லது களை கண் மற்றிலேன்
சங்கு -பால் போன்ற வெண்மை -ஞானம்=ஓங்கார வடிவம் –
வருத்தும் –புற விருள் மாற்ற -எம் பொய்கைப் பிரான்–திருவோண திருவிளக்கு முதலில் ஏற்றி -அருளி

ஸ்ரீ யதோத்தகாரி சந்நிதியில் -பொற்றாமரை பொய்கையில்-பத்ம மலரில் —
படை போர் புக்கு முழங்கும் -ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் அம்சம்
துலா ஐப்பசி மாச திருவோணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவவதாரம் –
யோ ப்ராஹ்மாணம் விததாதி பூர்வம் –யோ வை வேதாம்ஸஸ ப்ரஹினோதி தஸ்மை -போலே
தமிழ் மறைகளை வெளிப்படுத்தி அருள பத்மத்தில் அவதரிப்பித்தான் போலும் –
செந்தமிழ் பாடுவார் -செஞ்சொற் கவிகாள் –இன்கவி பாடும் பரம கவிகள் -திருவோணத்தான் உலகாளும் என்பார்களே –

————————————————–

ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யானாம் ஸூ லபஸ் ஸ்ரீ தரஸ் சதா

கலிவைரி க்ருபா பாத்ரம் காருண்யைக மஹா ததிம்
ஸ்ரீ கிருஷ்ண பிரவணம் வந்தே க்ருஷ்ண ஸூரி மஹா குரும்-

கலி வைரி தாஸர் -நம்பிள்ளை கருணைக்குப் பாத்ரபூதர்
காருண்யத்துக்கு ஒரே கடல்
ஸ்ரீ கிருஷ்ணனிடம் ஈடுபட்ட ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகளை வணங்குகிறேன் –

தன்மை சிங்கம் ரோகிணி நாள் தழைக்க வந்தோம் வாழியே
தாரணியில் சங்க நல்லூர் தானுடையோன் வாழியே
புன்மை தவிர் திருவரங்கர் புகழ் உரைப்பான் வாழியே
பூதூர் எதிராசர் தாள் புகழுமவன் வாழியே
மன் புகழ் சேர் சடகோபர் வளம் உரைப்பான் வாழியே
மறை நாலின் பொருள் தன்னைப் பகுத்து உரைத்தான் வாழியே
அன்புடன் உலகாரியர் தம் அடி யிணையோன் வாழியே
அபய பிரத ராசர் தாள் அனவரதம் வாழியே –

————————————————————–

கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்துதித்த
பொய்கைப் பிரான் கவிஞர் போரேறு –வையத்
தடியவர்கள் வாழ அரும் தமிழ் நூற்றந்தாதி
படி விளங்கச் செய்தான் பரிந்து —-ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்த தனியன் –

கைதை சேர் –தாழைகள் நெருங்கிச் சேர்ந்து இருக்கிற
படி விளங்கச் செய்தான் பரிந்து –படி -பூமியிலே -அன்புடன் கூடியவராய் -பிரகாசிக்கும் படி செய்து அருளினார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த தனியன் – வியாக்யானம்

க இதி ப்ரஹ்மணோ நாம தேன தத்ராஞ்சிதோ ஹரி –தஸ்மாத் காஞ்சீ தி விக்யாதா புரீ புண்ய விவர்த்த நீ –என்னும் படியான
புண்ய கோடி விமானம் அன்றோ -ஸ்ரீ காஞ்சீ புரத்திலே-புஷ்கரணீயிலே புஸ்கரத்திலே-விஷ்ணு நஷத்த்ரத்திலே ஆவிர்பவித்து
திவ்ய பிரபந்த தீப முகேன லோகத்தில் அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கி வாழ்வித்த படியைச் சொல்கிறது இதில் –

கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்துதித்த-பொய்கைப் பிரான்
இத்தால் இவர் ஜென்ம வைபவம் சொல்கிறது

கைதை-கேதகை –தாழை-கைதை வேலி மங்கை —என்றும்
கண்டல் வேலி மங்கை பெரிய திருமொழி -1-3-10–(கண்டல் -தாழை )என்றும்
கொக்கலர் தடந்தாழை வேலி –திருவாய் -4-10-8—என்றும் சொல்லுமா போலே —
அது தானே நீர் நிலங்களிலே யாயிற்று நிற்பது –

தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கை வாய் –பெரியாழ்வார் -2-10-8–என்னும் படி -(நீர் நிலைகளில் அன்றோ தாழை செழிக்கும் )
அம் பூம் தேன் இளஞ்சோலை —திருவிருத்தம் -26–

சூழ்ந்த கச்சி வெஃகாவில் -பொய்கையிலே
எம் பெருமான் பொன் வயிற்றிலே பூவே போன்ற பொற் றாமரைப் பூவிலே ஐப்பசியில் திருவோணம் நாளாயிற்று இவர் அவதரித்தது
பத்ம ஜனான பூவனைப் போலே யாயிற்று பொய்கையரான இவர் பிறப்பும் –

வந்து உதித்த என்கையாலே
ஆதித்ய உதயம் போலே யாயிற்று இவர் உதயமும் –

வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் -(இராமானுச நூற்றந்தாதி -8-)என்னக் கடவது இறே –
பொய்கையிலே அவதரிக்கையாலே அதுவே நிரூபகமாய் இருக்கை –
அது தான் ஸரஸ்வதீ பயஸ்விநியாய் ப்ரவஹித்த ஸ்தலம் யாயிற்று
தத்தீரமான பொய்கை என்கை –

பொய்கைப் பிரான் -மரு பூமியில் பொய்கை போலே எல்லார்க்கும் உபகாரகராய் இருக்கை
தீர்த்த கரராய்த் திரியுமவர் (இரண்டாம் திருவந்தாதி-14- )இறே(தீர்த்தங்களுக்கும் தீர்த்தமாகித் திரியுமவர் )

கவிஞர் போரேறு -ஆகையாவது
கவி ஸ்ரேஷ்டர் -என்றபடி -முதல் ஆழ்வார்களில் முதல்வரான -ஆதி கவி என்னும்படி அதிசயித்தவர்-

உலகம் படைத்தான் கவியாலும்–திருவாய் -3-9-10- -பரகால கவியாலும் –
செஞ்சொற் கவிகாள் என்றும்
செந்தமிழ் பாடுவார் (பெரிய திருமொழி -2-8-2 )என்றும் கொண்டாடப் படுமவராய் -(பாலேய் தமிழர் இசைக்காரர் )
நாட்டில் கவிகளுக்கும் விலக்ஷண கவியாய் இருப்பர்
இது பொய்கையார் வாக்கினிலே கண்டு கொள்க -என்று இறே தமிழர் கூறுவது –
அந்த ஏற்றம் எல்லாம் பற்ற கவிஞர் போரேறு -என்கிறது –

ஏவம் வித வை லக்ஷண்யத்தை யுடையவர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழும் படி ஸ்நேஹத்தால்
விலக்ஷண பிரமாண நிர்மாணம் பண்ணின படி சொல்கிறது –

வையத்-தடியவர்கள் வாழ அரும் தமிழ் நூற்றந்தாதி-படி விளங்கச் செய்தான் பரிந்து -என்று
வையத் தடியவர்கள் -ஆகிறார் -பூஸூரரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அவர்கட்கே இறே வாழ வேண்டுவது
வானத்து அணி அமரர்க்கு -இரண்டாம் திரு -2–வாழ்வு நித்தியமாய் இறே இருப்பது –

இத்தால் இவர்கள் வாழுகையாவது —
சேஷத்வ வைபவத்தை ஸ்வ அனுசந்தானத்தாலே உண்டாக்குமதான பிரபந்தம் -என்கை
நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி (திருவாய்-3-2-4 )-என்னக் கடவது இறே –
இவ்வநுஸந்தானமே வாழ்வு -என்னவுமாம் –

(இராமானுச நூற்றந்தாதி எட்டு கூடி இருக்கும் ஏற்றம் கொண்டு இருக்கும்)

அரும் தமிழ் நூற்றந்தாதி-ஆவது –
அர்த்த நிர்ணயத்தில் வந்தால் -வெளிறாய் இருக்கை அன்றிக்கே அரிதாய்
தமிழான பிரகாரத்தாலே ஸூலபமாய் -அது தான் நூறு பாட்டாய் -அந்தாதியாய் இருக்கை-

அன்றிக்கே –
வையத்-தடியவர்கள் வாழ அரும் தமிழ் நூற்றந்தாதி–என்று
வையத்து அடியவர்வர்கள் வாழ வருமதான தமிழ் நூற்றந்தாதி என்றுமாம் –

நூற்றந்தாதி படி விளங்கச் செய்கையாவது —
வையம் தகளியாய் -என்று தொடங்கி -ஓர் அடியும் சாடுதைத்த முடிவாக அருளிச் செய்த
திவ்ய பிரபந்த தீபத்தாலே பூதலம் எங்கும் நிர்மலமாம் படி நிர்மித்தார் என்கை –

வருத்தும் புற விருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி
ஒன்றத் திரித்து அன்று எரித்த திரு விளக்கு யாகையாலே –
படியில் -பூமியிலே பிரகாசிக்கும் படி செய்து அருளினார் என்றாகவுமாம்

அன்றிக்கே –
படி -என்று உபமானமாய் –
திராவிட வேதத்துக்கு படிச்சந்தமாய் இருக்கும் படி செய்து அருளினார் என்றுமாம் –

விளக்கம் -பிரகாசம்
படி என்று விக்ரஹமாய் -திவ்ய மங்கள விக்ரஹம் -திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் -என்றபடி
கண்டு அறியும் படி செய்து அருளினார் என்றுமாம் –

(படி -பூமியிலே –
உபமானம் -படி என்று உரைத்து காட்டும் படித்து அன்றோ அவன் படிவம் –
திராவிட சாகரம் -திருவாய் மொழிக்கு உப மானம்
படி விக்ரஹம் -மூன்று நிர்வாஹங்கள்)

செய்தான் பரிந்து –
பரிவுடன் செய்கை யாவது –
சேர்ந்த விஷய (பாகவத விஷய -மற்ற ஆழ்வார்கள் உடன் சேர்ந்த என்றுமாம் )ஸ்நேஹத்தாலே -என்னுதல் –
பர விஷய ஸ்நேஹத்தாலே -என்னுதல்
செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை என்றார் இறே –
ஸ்நேஹத்தாலே (எண்ணெய்- அன்பு )இறே விளக்கு எரிவது

இத்தால்
அவர் திவ்ய பிரபந்த உபகாரகத்வத்தாலே வந்த உபகார கௌரவம் சொல்லி ஈடுபட்டதாயிற்று –

———————————————————–

அவதாரிகை –

ஆழ்வார்களில் காட்டில் பகவத் விஷயத்தில் உண்டான அவகாஹ நத்தாலே முதல் ஆழ்வார்கள் மூவரையும்
நித்ய ஸூரிகளோ பாதியாக நினைத்து இருப்பார்கள் –

அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடமே -திரு விருத்தம் -75
இன் கவி பாடும் பரம கவிகள் -செந்தமிழ் பாடுவார் -என்னும் இவர்கள் அவதரித்தது -ஒரோ தேசங்களில் யாகிலும்
( கச்சி நகர் வந்துதித்த /கடல் மல்லை பூதத்தார் / தோன்றியவூர் வன்மை மிகு கச்சை மல்லை மா மயிலை )
ஞானப் பெருமையால் -( காலப் பழமையால் ) இன்ன விபூதி ( விடம் )என்று நிச்சயிக்கப் போகாது –

பேயரே எனக்கு யாவரும் யானுமோர் பேயனே எவர்க்கும்–( பெருமாள் திருமொழி-3-8- )
பகவத் விஷயத்தில் அவகாஹியாதார் எல்லாரும் தமக்குப் பேயராய் இருப்பர்
அவர்கள் நிலையிலே தாம் நில்லாத படியால் அவர்களுக்குத் தாம் பேயராய் இருப்பர் –
இப்படியாலே பகவத் விஷயத்திலே அவகாஹியாதார் இருக்கும் இடத்தில்
ஸ்தாவரங்கள் உள்ள காடே அமையும் என்று இருப்பார்கள் –

ஆன் விடை ஏழு அன்று அடர்த்தற்கு ஆளானார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே
சர்வேஸ்வரன் திரு உள்ளம் ஊற்றம் அறுத்த அளவிலும் கிருபையைப் பண்ணும்
தம்முடைய மனசிலும் கொடுமையை வைத்தேன் என்கிறார்
இனி அவர்கள் மனுஷ்யர் அல்லர் என்று செம்பிலும் கல்லிலும் வெட்டிக் கொள்ள அமையும் –

சிறந்தற்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன்-(இரண்டாம் திருவந்தாதி -46)என்னும் படியே
அறிவு நடையாடாதவர்கள் இருக்கும் இடத்தில் வசிக்குமதில்
காட்டிலே வர்த்திக்க அமையும் என்று காடுகளில் வர்த்திப்பார்கள்-

இங்கனே செல்லுகிற காலத்திலே ஒரு மழையையும் காற்றையும் கண்டு
திருக் கோவலூரிலே ஒரு (மிருகண்டு மஹ ரிஷியின் )இடை கழியிலே ஒருத்தர் புக்குக் கிடக்க-(சயனித்து இருக்க )

இருவராவார் சென்று -ஒருவர் கிடக்கும் இடம் இருவர் இருக்கப் போரும் -என்று இருக்க(அமர)

மூவராவார் சென்று -இருவர் இருக்கும் இடம் மூவருக்கு நிற்கப் போரும் என்று மூவரும் நிற்க –

இருவர் வந்து நெருக்க —
நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்துக் பாயும் பனி மறைத்த பண்பாளா –
வாசல் கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல் இடை கழியே பற்றி இனி – முதல் திரு -86–என்றும்
தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்கு மேல் என்னடியார் அது செய்யார் -பெரியாழ்வார் -என்னும் நீயும்
உன் பரிகரம் -திருவடி சென்று -நலிய புக —
ந கச்சின் நாபராத்யதி -என்று ஏறிட்டுக் கொண்டு நோக்கும் திருமகளும் –

குன்று எடுத்துப் பாயும் பனி மறைத்த பண்பாளா -(முதல் திருவந்தாதி )
மலை எடுத்து உடம்பிலே விழுகிற மழையைக் காத்த நீர்மையை யுடையவனே-
உடம்பிலே விழுந்த மழையை மலை எடுத்துக் பரிஹரித்த போது பிறந்த ஹர்ஷம் போலே யாயிற்று
இவர்கள் நெருக்குப் பெற்ற போது இவனுக்கு இருந்த படி -(புலவர் நெருக்கு உகந்த பெருமாள் )

வாசல் கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல் இடை கழியே பற்றி —
காமுகரானவர்கள் உகந்த விஷயங்களில் போகச் சொன்னாலும் தூணைக் கட்டிக் கொண்டு நிற்குமா போலே –
இவ் வாசலுக்கு புறம்பு போக மாட்டிற்றிலன் -உள்ளுப் புக மாட்டிற்றிலன் –

இனி-இப்போது

இப்படி இருவருமாக தங்களை நெருக்கப் புக்கவாறே-தம்மை ஒழிய வேறே சிலர் நெருக்குகிறார் உண்டு என்று
ஞானம் ஆகிற விளக்கை ஏற்றினார் -(முதல் ஆழ்வார் )
ஞான தீபேன பாஸ்வதா -(ஸ்ரீ கீதை -10-11)
விளக்கு யுண்டானாலும் ஞானம் இல்லையாகில் பதார்த்தங்களை விவேகிக்கப் போகாதே –

முதல் ஆழ்வாருக்கு ஞானம் பிறந்த படி சொல்லிற்று –
( சேமுஷீ பக்தி ரூபா )-

இருவராவாருக்கு ஞானம் முற்றி பக்தியானபடி சொல்லிற்று

மூவராவார்க்கு பக்தியை யுடையராய் அவனை ஒழிய செல்லாதவர்களுடைய சாஷாத் காரம் பிறந்த படி சொல்லிற்று

இம் மூவருக்கும் அர்த்தம் ஒன்றே –
மூன்று ரிஷிகள் கூடி ஒரு வியாகரணத்துக்கு கர்த்தாக்கள் ஆனால் போலே
கர்த்ரு பேதம் யுண்டே யாகிலும் –
அர்த்த சரீரம் ஒன்றே –
த்ரி முனி வியாகரணம் -என்னுமா போலே

——————————————————————–

அவதாரிகை –
ஸ்ரீ அப்புள்ளை ஸ்வாமி —
ஸ்ரீ யபதியாய்-அவாப்த ஸமஸ்த காமனாய்-ஸமஸ்த கல்யாண குணாதி மகனான -சர்வேஸ்வரன்
நித்ய விபூதியில் -நித்ய அசங்குசித ஞானரான நித்ய ஸூரிகளை நித்ய கைங்கர்யம் கொண்டு
நித்ய ஆனந்தியாய் இருக்கச் செய்தேயும் (ந ஏகாகி ந ரமேத )

அவர்களைப் போலே கைங்கர்ய நிரதராய்-வாழுகைக்கு இட்டுப் பிறந்து வைத்து -அதுக்கு அசலாய் –
அவித்யா கர்ம வாசனா ருசி ப்ரக்ருதி பரவஸ்யராய் பரபிரமிக்கிற சம்சாரி சேதனரைத் திருத்திப் பணி கொள்ளுகைக்காக –
இவர்கள் அழிந்து கிடக்கிற தசையில் ஸ்வ ஆஸ்ரய உபகரணமாக கரண களேபரங்களைத் தன் கருணையால் கொடுத்து அருளி
அவற்றைக் கொண்டு விபசரியாதே நல் வழி நடக்கைக்கு உடலாக ஸ்ருதியாதி சாஸ்திரங்களை ப்ரவர்த்திப்பிக்க

அவற்றைத் திரஸ்கரித்து -ஸ்வைரம் சஞ்சரிக்கிற தசையிலே ராம கிருஷ்ணாதி ரூபேண வந்து அவதரித்து அருளி
உபதேச அனுஷ்டானங்களாலும் ரூப உதார குண சேஷ்டிதங்களாலும் வசீ கரித்து இவர்களைத் திருத்தப் பார்த்த இடத்தில்
அவற்றுக்கும் அகப்படாத படி இதர விஷயங்களில் மண்டி இவர்கள் நஷ்ட கல்பராய் போகக் கண்ட படியால்
ஆழ்வார்களைக் கொண்டு இவர்களைச் சேர்த்துக் கொள்வானாக –
ஆ முதல்வரான (திருவாய்-7-9-3 )-முதல் ஆழ்வார்களை அனந்தரம் அவதரிப்பித்து அருளினான் –

இவர்கள் ஆகிறார் –
பகவதாகஸ்மிக கடாக்ஷ விசேஷ லப்தமான ஞான ப்ரேமங்களை குறைவற யுடையராய்
நித்ய ஸூரிகளைப் போலே பிறப்பே பிடித்து -பகவத் அனுபவத்தில் பழுத்து -சம்சார யாத்திரையில் கண்ணற்று
இன் கவி பாடும் பரம கவிகள் (திருவாய்-7-9-6 )- என்றும் –
செந் தமிழ் பாடுவார் (பெரிய திருமொழி -2-8-2-)-என்றும் நாவீறுடைய பெருமாளும் -நாலு கவிப் பெருமாளும்
கொண்டாடும்படியான வேண்டப்பாடு யுடையராய் –

பரத்வாதிகள் ஐந்தையும் ஒரு காலே கண்டு மண்டி அனுபவிக்கும்
சதிரை யுடையராய் இருக்கச் செய்தே-ஆறு பெருக்கு எடுத்து எங்கும் ஒத்துப் போகா நிற்கச் செய்தே
நீருக்கு நோக்கு ஓர் இடத்திலேயாய் இருக்குமா போலே
திரு வுலகு அளந்து அருளின இடத்திலும் –
திருமலையிலும் கால் தாழ்ந்து (ஈடுபட்டு )
அனுபவித்துப் போருமவர்களாய்-

அறிவுண்டாய் இருக்க பகவத் விஷயத்தை கால் கடைக் கொண்டு இதர விஷயங்களில்
மண்டித் திரிகிற சம்சாரிகளோட்டை ஸஹவாசம் துஸ் சஹமாய் -அவர்கள் வர்த்திக்கிற நாட்டை விட்டு
அறிவுக்கு அடைவில்லாத ஸ்தாவரங்கள் வர்த்திக்கிற காட்டை விரும்பி -அவ்விடத்தில் யத்ர சாயங்க்ருஹராய்
ஒருவரை ஒருவர் அறியாத படி மறைந்து வர்த்தித்தார் சில மஹா புருஷர்கள் ஆயிற்று –

இப்படி வர்த்திக்கிற இவர்கள் மூவரும் யாதிருச்சிகமாக ஒரு நாள் திருக் கோவலூர் பிரதேசத்தில் வந்து சங்கதராக
அவ்வளவில் பெரும் மழையும் பெரும் காற்றும் பிரவர்த்தமாக –
அத்தைக் கண்டு மழைக்கு ஒதுங்க ஓர் இடை கழியிலே
ஒருவர் புக்கு கிடக்க மற்றையவர் வந்து -திறக்க வேணும் என்ன –

ஒருவர் கிடக்க இடம் போரும் அத்தனை -என்ன

ஒருவர் கிடந்த இடம் இருவருக்கு இருக்கலாம் காணும் என்ன —
ஒருவர் மூச்சு ஒருவர் பொறாத சம்சாரத்திலே
இப்படிச் சொன்ன இவர் கேவலர் அல்லர் -என்று திறக்க –
அவரும் புகுந்து இவ்விருவருமாக இருக்கிற அளவிலே

மற்றையவரும் வந்து திறக்கச் சொல்ல -எங்கள் இருவருக்கும் இருக்க இடம் போரும் அத்தனை -என்ன –

இருவர் இருந்த இடம் மூவருக்கு நிற்கலாம்
இவர்கள் மூவரும் கூடி நிற்கச் செய்தே –

ஈஸ்வரன் தானும் பிராட்டியுமாக வந்து தனித்தனியே இவர்களைப் பின் பற்றி
திரிந்த நெஞ்சாறல் தீர இவர்கள் மூவருக்கும் நடுவே புக்கு நெருக்க –
நம் மூவரையும் ஒழிய வேறு புக்கு நெருக்குகிறவர்கள் யார் என்று
விளக்கு ஏற்றிப் பார்க்க வேணும் என்ன –

அவர்களில் ஒருவரான பொய்கையார் -லீலா விபூதியில்
கார்ய காரண ரூபேண ஸமஸ்த வஸ்துக்களும் பகவத் அதீனமாய் இருக்கிறபடியை –
பர பக்தி ரூப ஞானத்தால் தரிசித்து
அத்தை ஒரு விளக்காக ரூபித்துக் கொண்டு அனுபவ பரிவாஹ ரூபமான -வையம் தகளி -அருளிச் செய்தார் –

அநந்தரம்
ஸ்ரீ பூதத்தார் வையம் தகளி -கேட்க்கையாலே
அந்தப் பர பக்தி ரூபா பன்ன ஞானம் முற்றி பகவத் தத்துவத்தை விசதமாக
தர்சிக்கைக்கு உபகரணமான பர ஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை ஏற்றுகிற வழி யாலே-
அன்பே தகளி -அருளிச் செய்தார் –

அநந்தரம்
மூன்றாம் ஆழ்வார் அவனை அனுபவிக்கப் பெறில் தரித்து -பெறா விடில் மூச்சடங்கும் படியான
பரம பக்தியை யுடையராய்க் கொண்டு -அவன் படிகளைக் கட்டடங்கக் கண்டு மண்டி அனுபவிக்கிற வழியாலே-
திருக் கண்டேன் அருளிச் செய்தார் –

ஞான பக்தி சாஷாத்காரங்கள் -மூன்றும் பிரபந்த த்ரயத்துக்கும் தாத்பர்யமாக ஆச்சார்யர்கள் அருளிச் செய்து
இருக்க -விருத்தமாக
இங்கனே சொல்லலாமோ என்னில்-அதுக்கு குறை இல்லை –

அங்கு ஞானம் என்கிறது -பர பக்தி ரூபா பன்ன ஞானத்தை –
பக்தி என்கிறது -பர ஞான தசா பன்னமான ப்ரேமத்தை-

சாஷாத்காரம் என்கிறது -பர ஞான விபாக ருபாயான பரம பக்தியை -கர்மா அனுஷ்டானகாந்தமாக ஞானம் உதித்து –
அது த்யான உபாஸனாத் யவஸ்தா பன்னமாய் முற்றி –
அநந்தரம் –
த்ரஷ்டவ்ய -என்னும் படி சாஷாத்கார ரூபமாய்
அநந்தரம்
விஷய வை லக்ஷண்யத்தை அவகாஹித்து பக்தி ரூபாபன்னமாய்-பின்னை பர பக்தியாதிகளாக பரிபக்வமாம்
பிராமாணிகர் படியில் இவர்களுக்கு முதலிலே அன்வயம் இல்லை இறே –

கர்ம ஞான அநு க்ருஹீதை யான பக்தியினுடைய ஸ்தானத்தில் பகவத் பிரசாதம் நின்று
அநந்தரம் விளைந்த பர பக்தி யாய்த்து இவரது என்று இறே பிரதம ஆச்சார்யரான ஆழ்வாருக்கு
நம் பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்வது -(-ஈட்டில் -வீடுமின் முற்றவும் -)
அது அல்லாத ஆழ்வார்களும் ஒக்கும் இறே –
அல்லாத போது ஆழ்வார்கள் எல்லாரும் ஏக ப்ரப்ருதிகள் என்னப் போகாதே
ஆகையால் விரோதம் இல்லை –

பர பக்த்யாதிகள் மூன்றும் ஓர் ஒருவருக்கே குறைவற யுண்டாய் இருக்கச் செய்தேயும்
ஓர் ஒருத்தருக்கு ஒவ் ஒன்றிலே ஊற்றமாய் இருக்கும்-
பகவத் ஸ்வரூபாதிகள் எல்லாம் எல்லார்க்கும் அனுபாவ்யமாகா நிற்கச் செய்தே
ஓர் ஒன்றிலே ஒவ் ஒருத்தருக்கு ஊற்றம் சொல்லுகிறாப் போலே
அனுபவ அபி நிவேச ரூபை யான பரபக்த்யாதி அவஸ்தைகளிலும் தனித் தனியே ஊற்றம் சொல்லக் குறை இல்லை –

கர்த்ரு பேதம் யுண்டாய் இருந்ததே யாகிலும் ஒருவனுக்கே க்ரமத்திலே பிறக்கக் கடவ
பரபக்த்யாதி அவஸ்த்ய த்ரயமும்
தளமாக பிரபந்த த்ரயமும் அவதரிக்கையாலே
அர்த்த க்ரமம் பார்த்தால் ஏக பிரபந்தமாய்த் தலைக் கட்டக் கடவது –

பூர்வ உத்தர மீமாம்சைகளுக்கு கர்த்ரு பேதம் –ஜைமினி வியாசர் –உண்டாய் இருக்கச் செய்தே
வேத ஐக்கிய பிரபந்த வியாக்கியான ரூபம் ஆகையால் பிரபந்த ஐக்கியம் கொள்ளுகிறாப் போலேவும்
பாணினி வரருசி பதஞ்சலி மூவரும் கூடி
ஷூத்ர வ்ருத்தி பாஷ்யங்களும் ஒரே சாஸ்திரமாகக் கொள்ளுமா போலேயும் –
இங்கும் பிரபந்த ஐக்கியம் கொள்ளத் தட்டில்லை –

———————————————————————

விசித்திர கார்யமான ஜகத்துக்கு காரணமாம் போது —
விசித்திர ஞான சக்தி உக்தனாய் –
சங்க சக்ராதி திவ்யாயுத தரனான ஸர்வேஸ்வரனே காரணம் ஆக வேணும் என்னும் அநு மானத்தாலே-
ஜகத் காரண வஸ்துவை நிர்ணயியா நின்று கொண்டு
சர்வ சேஷியான சர்வேஸ்வரன் திருவடிகளிலே ஸ்வரூப அனுரூபமாக
வாசிக கைங்கர்யம் செய்யப் பெற்றேன் என்று க்ருதார்த்தர் ஆகிறார் –

வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக -செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொன் மாலை
இடர் ஆழி நீங்குகவே யென்று -1-

பதவுரை

வையம் தகளி ஆ–பூமி அகலாகவும்
வார் கடலே நெய் ஆக–அந்தப் பூமியைச் சுற்றி யிருக்கிற கடலே நெய்யாகவும்.
வெய்ய கதிரோன் விளக்கு ஆக–உஷ்ண கிரணனான ஸூர்யன் விளக்காகவும்,
செய்ய சுடர் ஆழியான் அடிக்கே–செஞ்சுடர்ச் சக்கரைக் கையனான எம்பெருமானது திருவடிகளில்.
சொல் மாலை–இப் பாமாலை யாகிற பூ மாலையை
சூட்டினேன்–சாத்தினேன்;
(ஏதுக்காக வென்னில்;)
இடர் ஆழி நீங்குக என்று–(பகவத் கைங்கரியத்திற்கு இடையூறாகவுள்ள) துன்பக் கடல் நீங்குகைக்காக.

தகளி – என்றும் –
விளக்கு -என்றும் –
நெய்-என்றும் வர்ணிக்கிற படி எங்கனே என்னில் –
ஜகத்தானது –ச அவயத்வாத்-கார்யம் என்னக் கடவது –

கார்யமாவது கர்த்ருமத்தாகக் கடவது –
அந்த கர்த்தா சங்க சக்ர கதாதரன் என்கிறது –

சாஸ்திர யோநித்வாத்-என்று
ஆநுமாநிகரை சாஸ்திர காரர் தூஷிக்கச் செய்தே –
இங்கு ஆநுமாநிகமாக கொள்ளும் படி எங்கனே -என்னில்

(ஆர்ஷம் தர்ம உபதேசஞ்ச )வேத சாஸ்த்ரா அவிரோதி நா -யஸ் தர்க்கேண அநு சந்தேத்தே ச தர்மம் வேத நேதர -என்று
வேத சாஸ்த்ரங்களோடு விருத்தமான தர்க்கம்(அனுமானம்) நிஷேதிக்கப் படுகிறது –
அவிருத்தமானது ஸ்வீகரிக்கப் படும் என்று சொல்லுகையாலே
அது தர்க்கமாகக் கொள்ளுகிறது –
நியாயா அநு க்ருஹீ தஸ்ய வாக்யஸ்ய அர்த்த நிஸ் சாய கத்வாத்-(ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்தி )என்கிறபடியே –

வையம் தகளியா —
ச அவயவுமாய் -காரியமும் ஆகையால் -வையம் தகளி-என்கிறது –

வார் கடலே நெய்யாக-
1-வார் கடல்-சூழ்ந்த கடல்-
2-பூரணமான கடல் என்னவுமாம் –

நதியினாலே ஜலம் புகுந்தது என்று பூர்ணமாகாது இருக்கையாலும் –
இல்லை என்று குறையாது இருக்கையாலும் -பூமிக்கு உயர்ந்து இருக்கச் செய்தே
பூமியை அழிக்க மாட்டாமையாலும் –
கார்யம் -என்று தோற்றுகையாலே -நெய்யாகக் கொள்ளுகிறது –

வெய்ய கதிரோன் விளக்காக –
முப்பது நாழிகையில் ஒரு நாழிகை குறையவும் ஏறவும் நிற்கப் போகாமையாலே-
பீ ஷோ தேதி ஸூர்ய -என்று
ஈஸ்வர கார்ய பூதன் என்று தோற்றுகையாலே விளக்கு -என்று சொல்லிற்று –

தன்னையும் காட்டி –
ஈஸ்வரனையும் பிரகாசிப்பிக்கையாலே –
வெய்ய கதிரோன் என்று விளக்கினுடைய ஸ்தானத்தில் சொல்லுகையாலே –
இப்படி சகலத்துக்கும் அவன் சேஷி -சகலமும் அவனுக்கு கார்யதயா சேஷம் என்று அறிந்தால்
செய்ய அங்குத்தைக்கு அசாதாரண பரிசர்யை பண்ணும் படி சொல்கிறது மேல்

செய்ய சுடர் ஆழியான் –
செய்ய சுடர் என்றது ஸ்யாமமான திருமேனிக்கு பகைத் தொடையாய் இருக்கை –

இத்தால் –
நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்ம-என்கிற பக்ஷத்தைத் தவிர்க்கிறது –
இதர ஆயுதங்களை யுடைய தேவதாந்த்ரங்களையும் தவிர்க்கிறது

அடிக்கே -என்று
விக்ரஹ வத்தையைச் சொல்லுகிறது –

அடி என்றதால்
தம்முடைய சேஷத்வம் சொல்லுகிறது

அடிக்கே சூட்டினேன் சொன் மாலை–
பரிமளம் மாறாத மாலையைச் சூட்டினேன் –
சொல் தொடை -என்னுமா போலே

இடர் ஆழி நீங்குகவே யென்று –
இடர்க் கடலானது வற்ற வேணும் என்று -தாப த்ரயத்தாலே தப்தரானவர்கள் இதைக் கற்று
தம் வழியே போந்து இடர்க் கடலை பிழைப்பார்கள் என்று –
அன்றிக்கே
அவனைப் பேசப் பெறாத தம்முடைய இடர் போக என்றுமாம் –

மற்றை ஆழ்வார்களில் இவர்கள் ஞான பிரதாநராய் –
பர தசையோடு –
உகந்து அருளின நிலங்களோடு வாசி அற கடல் கோத்தால் போலே
இவர்களுடைய பக்தி எங்கும் ஓக்க வியாபித்து இருந்ததே யாகிலும் –
கிண்ணகத்தில் ஆறு எங்கும் ஓக்க பரந்து வாரா நிற்க
நீருக்கு ஓர் இடத்திலே நோக்கமாப் போலே -திரு வுலகு அளந்து அருளின இடத்திலும் -திருமலையிலும் ஊன்றி இருக்கும் –

இவர்கள் பேயரே எனக்கு யாவரும் -என்னுமா போலே
சம்சாரிகளோடு பொருந்தாமையாலும் –
ஸ்தாவரங்களுக்கு விபரீத ஞானம் இல்லாமையாலும் அவற்றோடு பொருந்தி காடுகளில் வர்த்திப்பார்கள் –
யத்ர சாயங்க்ருஹராய் அஸ்தமித்த இடத்தே உறங்கி ஒருவரை ஒருவர் அறியாமல் திரியா நிற்பார்கள் –

இவர்களைக் கூட்டி இவர்கள் தன்னை அனுபவித்து
ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு –வழிந்த சொல்லாலே
தானும் ஜகத்தும் வாழ வேணும் என்னா நின்றான் எம்பெருமான் (கரும்பு ரசம் -மூன்று திருவந்தாதிகள் தேசிகன் )

யாதிருச்சிகமாக ஒரு இடை கழியிலே பெரும் காற்றும் மழையும் கண்டு புக்கு ஒருவர் கிடக்க மற்று ஒருவர்
ஒருவர் கிடக்கிற இடம் இருவருக்கு இருக்கலாம் -என்றார் –

மற்றையவர் -இருவர் இருக்கும் இடம் மூவருக்கு நிற்கலாம் -என்றார்

இவர்களை எம்பெருமானும் பிராட்டியும் புகுந்து நெருக்குகிறார்கள் –

வாசல் கடை கழியா யுட் புகா –
இவர்கள் சம்பந்தம் இல்லாத புறம்பும் உள்ளும் காட்டுத் தீயோடு ஒக்கும்
நம்மை ஒழிய நெருக்கினாரை அறிய ஒரு பிரகாசம் வேணும் என்ன உண்டாக்குகிறார் இவர்களில் ஒருவர் –

பதிம் விஸ்வஸ்ய -என்கிறபடியே ஸ்ரீ யபதியே ஜகத்துக்கு நிர்வாஹகர் என்கிறார் ஒருவர் –
விஷயத்திலே ஈடுபட்டு பக்தி ரூபமான விளக்கு ஏற்றினார் ஒருவர் —
அது உடையோருக்கு அவன் காட்டக் காணும் வடிவை சாஷாத் கரித்தார் ஒருவர்

ஞான பக்தி சாஷாத் காரங்கள் மூன்றும் அடைவே ஒருவருக்கு பிறந்தானாலோ என்னில் -ஒண்ணாது
வ்யாகரணத்துக்கு மூன்று கர்த்தாக்கள் யுண்டானால் போலே மூவரும் கூடி இவ்வர்த்தத்தை நிலையிட்டார்கள்
அநுமான முகத்தாலே இழிகை தரிசனத்துக்கு விருத்தம் அன்றோ என்னில்
வேத சாஸ்திர விருத்தமான அநு மானம் இங்கே தவிருகிறது-
ஆர்ஷம் தர்ம உபதேசஞ்ச வேத சாஸ்திர அவிரோதி நா யஸ் தர்க்கேண அநு சந்தத்தே ச தர்மம் வேத நே தர -என்று
சாஸ்திரத்தோடே சேரும் அநு மானம் இறே இது

ச அவயத்வாத் கார்யம் -கார்யம் விசித்திரம் ஆகையால் கர்த்தாவும் ஆச்சர்ய சக்தி உக்தனாக வேணும் –

வையம் தகளியா -பூமி கடினை யாகையாலே தகளி யாக்கிற்று
வார் கடலே நெய்யாக-திரவ த்ரவ்யமாகையாலே நெய்யாகக் கொண்டது
வெய்ய கதிரோன் விளக்காக -தேஜோ பதார்த்தம் ஆகையால் விளக்காகக் கொண்டது –
இம் மூன்றும் பஞ்ச பூதங்களுக்கும் உப லக்ஷணம்

வையம் தகளியா-
பெரிய வெள்ளத்திலே ஒரு கழல் மிதக்குமா போலே பூமி ஜலத்திலே நிற்கும் போது இதுக்கு ஓர் அடி வேண்டாவோ

வார் கடலே நெய்யாக-
பூமியை அபி பவியாதே நிற்கும் போது ஓர் அடி வேண்டாவோ –

வெய்ய கதிரோன் விளக்காக —
முப்பதில் ஓன்று ஏறுதல் குறைதல் செய்யாத போதே -பீ ஷோ தேதி ஸூ ர்ய -ஆக வேண்டாவோ
யஸ் சர்வஞ்ஞ  சர்வவித்-இத்யாதிகளில் சொல்லுகிறவனாக வேண்டாவோ –
இதுக்கு ஒரு நாதன் உளன் என்று இருந்தால் அடிமை செய்ய வேண்டும் –

செய்ய-சுடர் ஆழியான் —
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் ஜகத்தில் ஏக தேச சம்பந்தம் உண்டே என்னில் -அத்தை வ்யாவர்த்திக்கிறது
ரூபாதிகள் இல்லை என்னும் வாதிகளை நிரஸ்தராக்குகிறது

அடிக்கே -பிராட்டி அல்லீரே -முறை தப்பாத படி வேணுமே(அடி விடாத சம்ப்ரதாயம் )

சூட்டினேன் சொன் மாலை–யதோ வாசோ நிவர்த்தந்தே-என்கிற விஷயத்தை மாறுபாடுருவப் பேசி
பண்டு அல்லாத அழகும் உண்டாக்கினேன்

இடர் ஆழி நீங்குகவே யென்று —
என்னை உளன் ஆக்குகைக்காக சொல்லாது இருக்கை இடர் -இடரார் படுவார் -இத்யாதி வத்

குணத்தை அனுசந்திக்கிலும் பிரகாரி பர்யந்தமாய் இருக்கும் இவர்களுக்கு -(குணத்துடன் நிற்காமல் குணி அளவும் பாட வேண்டுமே )

மாறனேர் நம்பி -எம்பெருமானை மறக்க விரகு இல்லையோ -என்றாராம் –
ஜகத்தின் இடர் தீருகை அர்த்தாத் சித்தம் –

(காடின்யவான் யோ பிபர்த்தி ஜகதே தத சேஷத
ஸப் தாதி ஸம்ஸ்ரயோ வ்யாபீ தஸ்மை பூம் யாத்மநே நம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-14-28-
பூமி ஸ்வரூபமாய் இருக்கும் பரம் பொருளுக்கு நமஸ்காரம் என்றபடி
பீஷோதேதி ஸூர்ய–தைத்ரியம் – -பரமபுருஷனின் பயத்தால் ஸூர்யன் உதிக்கிறான் –
இருள் அன்ன மா மேனி எம்மிறையார் -பெரிய திரு -26–ஆழியானை இட்டே நிரூபகம் அவனுக்கு
யதோ வாஸோ நிவர்த்தக்கே என்று வேதம் திரும்பிய விஷயத்தையே பரிபூர்ணமாகப் பேசி முன்பு இல்லாத அழகையும் உண்டாக்கினேன் என்கிறார் –
வேதத்துக்கு அனுரூபமான அனுமானமும் உத்தேச்யம் தானே
ஆர்ஷம் தர்ம உபதேசஞ்ச வேத ஸாஸ்த்ர அவிரோதி நா
யஸ் தர்க்கேண அநு சந்தத்தே ச தர்மம் வேத ந இதர -மனு 12-106-
ந்யாய அநு க்ருஹீ தஸ்ய வாக்யஸ் யார்த்த நிஸ் சாய கத்வாத் -ஸ்ரீ பாஷ்ய ஆரம்பம் –
வையம் வார் கடல் கதிரோன் -லக்ஷண முறையால் லீலா விபூதியையும்
ஆழியான் -லக்ஷண முறையால் நித்ய விபூதியையும்
அடிக்கே -லக்ஷண முறையால் திவ்ய மங்கள விக்ரஹம்
காட்டி ஸ்வ மத ஸ்தாபனம் பண்ணி அருள்கிறார்
ஸர்வம் ஸூந்யம் -புத்த மத நிரஸனம்
நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்ம ஏவ ஸத்யம் அந்நியத் ஸர்வம் மித்யா -ஸ்ரீ பாஷ்யம் -மஹா பூர்வ பக்ஷம் -அத்வைத மத நிரஸனம்
சுடர் ஆழியான் -என்பதால் சூல தாரி யாதிகளைப் பரம் பொருளாகச் சொல்லும் சைவ மத நிரஸனமும் செய்து அருளினார் ஆயிற்று – )

————————————————————

(பூ நிலாய ஐந்துமாய் போல் )காடின்யவான் யோ பிபர்த்தி-ஜெகதே தத சேஷத -சப் தாதி ஸம்ஸரயோ வ்யாபீ தஸ்மை
பூம்யாத்மனே நம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-14-28–என்கிறபடியே(பூமி ஸ்வரூபமான ப்ரஹ்மத்தை ஆஸ்ரயிப்போம் )
பகவத் சங்கல்பாயத்தமான காடின்யத்தை யுடைத்தான பிருத்வியானது —
மேல் நெய்யும் திரியுமாக ரூபிக்கப் படுகிற வஸ்துக்களுக்கு ஆதாரமான தகளியாகவும் –

அந்த பிருத்வியை சுற்றும் சூழ்ந்து -த்ரவ்ய ஸ்வபாவமாய்
தேன ச க்ருத சீமா நோ ஜலாசயா -என்கிறபடியே
பகவத் ஆஜ்ஜையாலே கரையை அதிக்ரமியாமல் அதுக்குள்ளே அடங்கிக் கிடக்கிற
கடலின் நீரான அம்சமானது -மேல் யேற்றப் போகிற விளக்கை உத்தர உத்தர ஒளி வீட்டுக் கிளரப் பண்ணும் நெய்யாகவும் –

கிரண முகேன கிரசிக்கப் பட்ட ஜலத்தாலே அபிவ்ருத்தமாய் -பிரதாப உத்தரமான கிரணங்களை யுடையனாய் –
பீ ஷோ தேதி ஸூ ர்ய-என்கிறபடியே
ஈஸ்வர ஆஜ்ஜைக்கு நடுங்கி வட்டம் உதிப்பதும் அஸ்தமிப்பதுமாகத் திரியக் கடவ
ஆதித்யன் அர்த்த பிரகாசகமான விளக்காகவும்

இருளன்ன மா மேனிக்கு எம் இறையோர் -பெரிய திரு -26-
விளக்கு ஏற்றினால் போலே பகைத் தொடையாக சிவந்த ஒளியை யுடைய
திரு வாழி யாழ்வானை நிரூபகமாக யுடைய சர்வேஸ்வரனுடைய திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணப் பெறாத
என்னுடைய துக்க சாரமானது விட்டு நீங்கும் படியாக –
தத் குண சேஷ்டிதங்களை உள்ளீடாக வைத்துத் தொடுத்த
நிரதிசய போக்யமான சப்த சந்தர்ப்பங்களை அவற்றுக்கு அலங்காரமாம் படி சாதரமாக சமர்ப்பித்தேன் –

இவ் விஷயத்தை அறியப் பெறாமல் அஸத் கல்பராய் நோவு படுகிற சம்சாரிகளுக்கு பர வஸ்து வாஸ்தவ ப்ரகாசகமான
இப் பிரபந்த அப்யாஸ முகத்தாலே-அனந்த கிலேச பாஜகமான சம்சார சாகரம் வற்ற வேணும்
என்று சொன் மாலை சூட்டினேன் -என்றுமாம் –

இப்படி விசித்திர பிரபஞ்ச நிர்மாண அநு குணமான ஞான சக்த்யாதி குண வைச்சித்ராதி யுக்தனான-சங்க சக்ர கதா திவ்யாயுத தரனான -ஸர்வேஸ்வரனே
ஜகத் காரணம் என்னும் அனுமானத்தாலே காரண வஸ்துவை நிர்ணயித்தார் யாய்த்து –

ஆர்ஷம் தர்ம உபதேசஞ்ச வேத சாஸ்திர அவிரோதி நா யஸ் தர்க்கேண அநு சந்தத்தே ச தர்மம் வேத நே தர -என்று
வேத சாஸ்திரத்தோடே விருத்தமான தர்க்கத்தை அழித்தது-

அவிருத்தமான தர்க்கத்தை ஸ்வீகரிக்கையாலே இங்கும் அப்படி விரோத பிரசங்கம் சொல்ல இடம் இல்லை –
ந்யாயான் அநு க்ருஹீ தஸ்ய வாக்யஸ் யார்த்த நிஸ் சாய கத்வாத் -என்று இறே
ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –

பிருதிவ்யாதி களாலே லீலா விபூதியை உப லஷிக்கிறது –
சுடர் ஆழி -என்று நித்ய விபூதிக்கு உப லக்ஷணம்
அடிக்கே என்று திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு உப லக்ஷணம் –

இப்படி ஸ்வ பக்ஷத்தை சிஷிக்கவே
ஸூ ந்யமே தத்வம் -என்றும் –
நிர் விசேஷ வஸ்துவே தத்வம் என்றும் –
விசேஷணாந்தர விசிஷ்டமே தத்வம் என்று சொல்லப் படுகிற பர பக்ஷங்கள் அர்த்தாத் ப்ரதிஷிப்தங்கள் –

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading