அருளிச் செயல் அமுதம் -அருளிச் செயலில்-அதிகார பிராபக பிராப்ய ஸ்வரூபம்- பத /சப்த த்ரயம் –

சிந்தனையை தவ நெறியை திருமாலை–பிராப்யம் பிராபகம் திருமால் என்பதால்
இதுவே சம்ப்ரதாயம் ஆழ்வார்கள்–ரகஸ்ய த்ரயம் போலே சப்த த்ரயம் இவை

———————————————————————————————

ஆர் எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்–

கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட

அதிகார பிராபக பிராப்ய ஸ்வரூபம்–நாராயணனே நமக்கே பறை தருவான்

———————————————————————–

திருப்பல்லாண்டு –

மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு –1
இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்கு பல்லாண்டு -3
அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை பந்தனை தீரப் பல்லாண்டு -6
திருவோணத் திரு விழாவில் படுத்த பைன்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு –9

—————————————————————————
பெரியாழ்வார் திருமொழி –

நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயற்காகித் தரணியில் வேந்தர்களுட்க விசயன் மணித் திண் தேர் ஊர்ந்தவன் -1-9-4-
பதக முதலை வாய்ப் பட்ட களிறு கதறிக் கை கூப்பி என் கண்ணா கண்ணா வெண்ண உதவப் புள்ளூர்ந்து அங்குறு துயர் தீர்த்த அதகன் -2-1-9-
பின்னை மணாளனை பேரில் கிடந்தானை முன்னை யமரர் முதல் தனி வித்தினை என்னையும் எங்கள் குடி முழுது ஆட்கொண்ட மன்னனை –2-5-1-
அம்மைத் தடம் கண் மட வாய்ச்சியரும் ஆனாயரும் ஆநிரையும் அலறி
எம்மைச் சரண் என்று கொள் என்று இரப்ப இலங்காழிக்கை எந்தை எடுத்த மலை –3-5-3-
அனைத்துலகும் திரிந்தோடி வித்தகனே இராமா ஒ நின்னபயம் என்று அழைப்ப அத்திரமே யதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம் -3-10-6-
திருக் கோட்டியூர் நரக நாசனை நாவில் கொண்டு அழையாத மானிட சாதியர் பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தன தான் கொலோ -4-4-4-
நாயகன் நாரணன் தம்மன்னை நரகம்புகாள்–சீரணி மால் திரு நாமமே இடத் தேற்றிய வீராணி தோள் புகழ் விட்டு சித்தன் –4-6-
மூன்று எழுத்ததனை மூன்று எழுத்த தனால் மூன்று எழுத்தாக்கி மூன்று எழுத்தை ஏன்று கொண்டு
இருப்பார்க்குக்கு இரக்க நன்குடைய எம் புருடோத்தமன் இருக்கை மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்று உருவானான் –4-8-10-
தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் -சிதகுரைக்குமேல் என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னுடைய விபீடணற்கா மதிள் இலங்கைத் திசை நோக்கி மலர்க்கண் வைத்த என்னுடைய திருவரங்கற்கு
அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவாரே –4-9-2-
நீ என்னைக் காக்க வேண்டும் —மாயவனை மது சூதணனை மாதவனை மறையோர்கள் ஏத்தும் ஆயர்கள் ஏற்றினை யச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே–4-10-
கண்ணனே கரிகோள் விடுத்தானே காரணா களிறட்ட பிரானே எண்ணுவார் இடரைக் களைவானே ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே
நண்ணி நானுன்னை நாடொரு மேத்தும் நன்மையே யருள் செய் எம்பிரானே –5-1-8-
எயிற்றிடை மண் கொண்ட வெந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே -5-2-3-
ஏதங்களாயின வெல்லாம் இறங்கலிடுவித்து என்னுள்ளே பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து போதில் கமல வன்னெஞ்சம் புகுந்தும்
என் சென்னித் திடரில் பாதவிலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே –5-2-8-
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவிதவிரத் திருத்தி உன் கோயில் கடைப் புகப் பெய் திருமால் இரும் சோலை எந்தாய் –5-3-6-
திருமாலிரும் சோலை தன்னுள் நின்ற பிரான் அடிமேல் அடிமைத்திறம் நேர்பட விண்ணப்பம் செய் பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டுசித்தன் -5-3-10-
திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய்
என்று என்று உன் வாசகமே உருப்பொலிந்த நாவினேனை உனக்கு உரித்தாக்கினையே –5-4-7-
————————————————————————————————
திருப்பாவை –

நாராயணனே நமக்கே பறை தருவான் —1-
தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் –5-
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ -8-
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் –21
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய் -22
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் –27
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது –28-
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் -29-
செங்கண் திரு முகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் -30-

—————————————————————————

நாச்சியார் திருமொழி

மருப்பினை ஒசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு என்னை வகுத்திடு என்று -1-1-
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே -3-2
பழகு நான் மறையின் பொருளாய் மதம் ஒழுகு வாரணம் உய்ய வலித்த எம் அழகனார் –4-10-
மண்ணு பெரும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன் தன்னை உகந்தது காரணமாக -5-1-
வேங்கடத்துச் செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் –8-7-
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான் ஆலினைப் பெருமான் -9-8-
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே –10-10-
நான்மறையின் சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப்பொருளும் கொண்டாரே -11-6
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே –11-8-
செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார் -11-10-
மன்னு வடமதுரை தொடக்கமாக வ ண் த்வராபகி தன்னளவும் தன்னைத் தமர் உய்துய்ப் பெய்ய வேண்டி -12-10-
கார்த்தண் கமலக் கண் என்னும் நெடும் கயிறு படுத்து என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் –14-4-
பாரும் தாள் களிற்றுக்குக் கருள் செய்த பரமன் தன்னை -14-10
———————————————————————————————–
பெருமாள் திருமொழி –

கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ களிக்கு நாளே -1-1-
மாயோனை மணத் தூணே பற்றி நின்று என் வாயார வென்று கொலோ வாழ்த்து நாளே -1-2-
அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் அம்மான் தன அடி இணைக் கீழ் மலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று கொலோ அணுகு நாளே –1-3-
கோவினை நாவுற வழுத்தி என் தன கைகள் கொய்ம்மலர் தூ என்று கொலோ கூப்பு நாளே -1-4-
மணி வண்ணன் எம்மானைக் கண்டு கொண்டு என் மலர்ச் சென்னி என்று கொலோ வணங்கு நாளே –1-5-
கண் வளரும் கடல் வண்ணர் கமலக் கண்ணும் ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என் உள்ளம் மிக என்று கொலோ வுருகு நாளே – 1-6-
மாயோனைக் கண்டு என் கண்கள் நீர் மல்க வென்று கொலோ நிற்கு நாளே -1-7-
மாலோனைக் கண்டு இன்பக்கலவி எய்தி வல்வினையேன் என்று கொலோ வாழு நாளே -1-8-
போராழி யம்மானைக் கண்டு துள்ளிப் பூதலத்தில் என்று கொலோ புரளு நாளே -1-9-
அணியரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்து உடனே என்று கொலோ இருக்கு நாளே -1-10-
நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே-1-11
மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது காணும் கண் பயனாவதே -2-1-
ஆடிப் பாடி அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர் அடிப் பொடி யாட -நாம் பேரில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே -1-2-
டர் அரங்கன் கோயில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் சேவடிச் செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -1-3-
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடியார்கள் தம் எல்லையில் அடிமைத் திறத்தினில் என்று மேவு மனத்தானாம் -1-10-
அங்கை ஆழி அரங்கன் அடி இணை தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம் கொங்கர் கோன் குலசேகரன் -2-9-
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை -5-1-
எங்குப் போய் உய்கேன் உன் இணை அடியே அடையல் அல்லால் -5-4-
உன் புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன் காண் புண்ணியனே -5-8-
வித்துவக் கோட்டம்மா நீ வேண்டாயே யாயிடினும் மற்றாரும் பற்றிலேன் என்று அவனைத் தாள் நயந்த கொற்றேவல் தானைக் குலசேகரன் -5-10-
தில்லை நகர்ர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை என்று கொலோ கண் குளிரக் காணு நாளே -10-1-
தில்லை நகர்ர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை இறைஞ்சுவார் இணை யடியே இறைஞ்சி னேனே -10-3-
தில்லை நகர்ர்த் திருச் சித்ர கூடம் தன்னுள்இனிது அமர்ந்த வம்மான் தன்னை ஏத்துவார் இணை அடியே ஏத்தினேனே-10-6-
தில்லை நகர்ர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் அரசமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ணேன் மற்றர சு தானே -10-7-
தில்லை நகர்ர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் எம்பெருமான் தன சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம் அன்றே -10-8-
தில்லை நகர்ர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் உறைவானை மறவாத வுள்ளம் தன்னை யுடையோம் மற்றுறு துயரம் அடியோம் அன்றே -10-9-
—-நலம் திகழ் நாரணன் அடிக் கீழ் நண்னுவாரே –10-10-

——————————————————————————————–
திருச்சந்த விருத்தம் –

விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய் பண் கடந்த தேசமேவு பாவ நாச நாதனே –27
ஆதியாதியாதி நீ ஓரண்டமாதி யாதலால் சோதியாத சோதி நீ அதுண்மையில் விளங்கினாய்
வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய் ஆதியாகி யாயனாய மாயம் என்ன மாயமே –34
ஆயனாகியாயர் மங்கை வேய தோள் விரும்பினாய் அய நின்னை யாவர் வல்லார் அம்பரத்தொடு இம்பராய்
மாய மாய மாயை கொல் அதன்றி நீ வகுத்தலும் மாய மாயமாக்கினாய் -உன் மாயம் முற்றும் மாயமே –41
அற்புதன் அனந்த சயனன் ஆதிபூதன் மாதவன் நிற்பதும் இருப்பதும் கிடப்பதுவும் என்நெஞ்சுள்ளே –65
காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார் பேணிலும் வரம் தர மிடுக்கிலாத தேவரை
ஆணமென்று அடைந்து வாழும் ஆதர்காள் எம்மாதிபால் பேணி நும் பிறப்பு எனும் பிணக்கு அறுக்க கிற்றீரே –69-
மாது தங்கு கூறன் ஏற தூர்திஎன்று வேத நூல் ஓதுகின்றதுண்மையல்ல தில்லை மற்றுரைக்கிலே -72-
அறிந்து அறிந்து வாமனன் அடியினை வணங்கினால் செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் செறிந்திடும் -74-
அவன் பெயர் எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –77
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி வீட்டிலாது வைத்த காதல் இன்பமாகுமே -83-
கண்ணலா லோர் கண்ணிலேன் கலந்த சுற்றம் மற்றிலேன் எண்ணிலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே -91
கடல்கிடந்த நின்னலாலோர் கண்ணிலேன் எம்மண்ணலே -95
வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாழும் எனது சீர்க் கைய செய்ய போதில் மாது சேறு மார்ப நாதனே
ஐஇலா வாக்கை நோய் அறுத்து வந்து நின்னடைந்து உய்வதோர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே -97
மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம் புலன்கள் ஆசையும் துறந்து நின் கண் ஆசையே தொடர்ந்து நின்ற நாயினேன்
பிறந்து இறந்து பேர் இடர்ச் சுழிக் கண் நின்று நீங்குமா மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே -98
மன்னு சீர் பரந்த சிந்தை யொன்றி நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -101-
கருக்கலந்த காளமேக மேனியாய நின் பெயர் உருக்கலந்து ஒழி விலாது உரைக்குமாறு உரை செயே-103-
அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் ஏத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே –115
இயக்கறாதபல் பிறப்பில் என்ன மாற்றி இன்று வந்து உயக்கொள் மேக வண்ணன் என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன மன்னு சோதி ஆதலால் என்னாவி தான் இயக்கெலா மறுத்து அறாத வின்ப வீ டு பெற்றதே -120-
——————————————————————————————-
திருமாலை –

பச்சை மா மலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே –2
இத்தனை அடியரானார்க்கு இரங்கும் நம் அரங்கனே பித்தனைப் பெற்றும் அந்தோ பிறவியுள் பினாங்கு மாறே -4-
தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடியாடி தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர் சோறு உகக்குமாறே –5-
அரங்கனார்க்கு ஆட்செய்யாதே புறம் சுவர் கோலம் செய்து புள் கவ்வக் கிடக்கின்றீரே-6
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான் -7-
அவன் அல்லால் தெய்வம் இல்லை கற்றினம் மேய்த்த வெந்தை கழல் இணை பணிமினீரே-9-
கெருட வாகனும் நிற்க சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே -10-
ஐயப் படு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கம் அன்றே -15-
போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து தன்பால் ஆதாரம் பெருக வைத்த அழகனூர் அரங்கம் அன்றே -16-
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும் எங்கனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே-23
ஆருளர் களைகண் அம்மா அரங்க மா நகருளானே -29-
திருவரங்கா எனக்கு இனிக் கதி என் சொல்லாய் என்னை யாளுடைய கோவே -30-
உன்னை அன்றே அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே -36-
உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை யுகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே -38-
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணறாய் உன்னை என்னோ களை கணாக் கருதுமாறே -44-
—————————————————————————————-
அமலனாதி பிரான் –

அமலனாதி பிரான் அடியார்க்கு என்னை யாட்படுத்த விமலன் -1-
ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய் ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில் நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே -9-
கொண்டால் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணி யரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -10-
—————————————————
கண்ணி நுண் சிறுத் தாம்பு –

தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என்னாவுக்கே -1
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி பாவின்னிசை பாடித் திரிவனே -2
பெரிய வண் குருகூர் நம்பிக்கு ஆள் உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே -3-
அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான் சடகோபன் என் நம்பியே -4
திருக்குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே -5
திருக் குருகூர் நம்பி என்றும் என்னை இகல்விலன் காண்மினே -6
எண் திசையும் அறிய வியம்புகேன் ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே -7
தக்கசீர்ச் சடகோபன் நம்பிக்கு ஆட்புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9
—————————————————————————-
பெரிய திருமொழி —

நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்-நாவினால் நான் உய்ய – -நற்பொருள் காண்மின் பாடி நீர் உய்ம்மின்-
நற்றுணையாகப் பாடினேன் அடியேன்-நலம் தரும் சொல்லை–நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு-நாராயணா வென்னும் நாமம் -1-1-
நாதனே –நம்பனே -நஞ்சனே –நானுடைத்தவத்தால் வந்துன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் -1-6
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம்பெருமான் அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளனிடம் –சிங்க வேள் குன்றமே -1-8-9-
பேசுமின் திரு நாமம் எட்டு எழுத்தும் சொல்லி நின்று பின்னரும் பேசுவார் தம்மை யுய்ய வாங்கிப் பிறப்பு
அறுக்கும் பிரானிடம் –திருவேங்கடம் அடை நெஞ்சே -1-9-9-
கண்ணா ஏழ் உலகுக்கு உயிராய வெம் கார் வண்ணனை விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை – திருவேங்கடவா
-என் ஆனாய் –என் அப்பா -அண்ணா -அரியே -நாயேன் -வந்தடைந்தேன் நல்கி யாள் என்னைக் கொண்டருளே -1-9-
திருவேங்கட மா மலை மேய அண்ணா -அலங்கல் துளப முடியாய் -ஆராவமுதே -அண்டா -கோ நாகணையாய்-என்னானை -என்னப்பன் –
தேனே கோனே ஆயன் -நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பி சிந்தா மணியே மணி வண்ணன் அம்மான் -இடரை களையாயே-அருள் புரியாயே -1-10-
மாண் குறளான வந்தணற்கு -அறவன் ஆயற்கு-வட வேங்கடமலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை அண்டம் ஆண்டு இருப்பார்க்கு –
வானவர் ஆவியாய் இருப்பாற்கு-அமர ஆயர் நாயகற்கு வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு அன்னமாய் திகழ்ந்த
அமரர் பெருமானுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-
பவளத் தூணை -அமுதத்தை -சீரானை -எம்மானை -தீம் கரும்பினை பொற் குன்றினை காரானை இடர் கடிந்த கற்பகத்தை -கருமுகிலை
நித்திலத்தை -கடும் பரிமேல் கற்கியை-குடமாடு கூத்தன் தன்னை -புள்ளூர்தியை -இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை –
பட நாகத்திணைக் கிடந்தது துயில் அமர்ந்த தலைவர் தம்மை தொண்டனேன் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே -2-5-10
கார் வண்ண முது நீர்க் கடல் மல்லைத் தல சயனம் ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை ஆள்வாரே -2-6-2-
நினைவார் என் நாயகரே –2-6-3-
அவர் எங்கள் குல தெய்வமே -2-6-4
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே –2-7-1-
தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர் –தில்லைத் திருச் சித்திர கூடம் சென்று சேர்மின்களே -3-2-7-
நிரை மேய்த்து உலகுண்ட மாயன் குரை மா கழல் கூடும் குறிப்புடையீர்–தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே -3-2-8-
நக்கன் ஊன் முகமார் தலை யோட்டூண் ஒலித்த எந்தை ஒளி மலர்ச் சேவடி அணைவீர் –காழிச்சீராம விண்ணகரே சேர்மின் நீரே -3-4-2-
வந்து உணதடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும் என் சிந்தனைக்கு இனியாய் -திருவே -என்னாருயிரே -3-5-1-
ஓதி ஆயிர நாமமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள் வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் -3-5-9-
ஒ மண்ணளந்த தாளாளா தண் குடந்தை நகராளா வரை எடுத்த தோளாளா என் தனக்கு ஓர் துனையாளான் ஆகாயே -3-6-5-
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே கரு மா முகில் போல் எந்தாய் எமக்கே அருளாய் –3-8-1-
களங்கனி வண்ணா கண்ணனே எந்தன் கார்முகிலே என நினைந்திட்டு உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள்
உள்ளத்துள் ஊறிய தேனை –வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே –4-3-9-
நாங்கை மேய கடவுளே காவளம் தண் பாடியாய் கலை கண் நீயே –4-6-5-
திரு வெள்ளக் குளத்துள் அண்ணா அடியேன் இடரைக் களையாயே –4-7-1-
திரு வெள்ளக் குளத்துள் ஆராவமுதே அடியேற்கு அருளாயே –4-7-8-
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே–4-9-5-
அஞ்சிறைப் புட்பாகனை யான் கண்டது தென்னரங்கத்தே –5-6-6
ஆழி வண்ண நின்னடியிணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே –5-8-1-
தென் திருப்பேர் பையரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே –5-9-1-
ஐம்புலன்கள் இடர் தீர எறிந்து வந்து செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே -6-2-4-
உன்னை என் மனத்தகத்தே திறம்பாமல் கொண்டேன் திரு விண்ணகரானே-6-3-2-
உன்னை எய்தி என் தீ வினைகள் தீர்ந்தேன் நின்னடைந்தேன் திரு விண்ணகரானே –6-3-4-
திருவேங்கடத்தானை நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே –6-8-1-
செங்கமலக் கண்ணானை நாவாயுளானை நறையூரில் கண்டேனே -6-8-3-
மூ வுலகும் இடர் கெடுத்த திருவாளன் இணை யடியே அடை நெஞ்சே –6-9-1-
மெல்லியலை திரு மார்பில் மன்னத்தான் வைத்துகந்தான் மலர் அடியே அடை நெஞ்சே –6-9-6-
எங்கள் அடிகள் இமையோர் தலைவருடைய திரு நாமம் நாங்கள் வினைகள் தவிர உரைமின் நமோ நாராயனமே –6-10-9-
அடியேன் உன்னையே அழைக்கின்றேன் பெற்றேன் அருள் தந்திடு என் எந்தை பிரானே –7-1-2-
இனிய தொண்டரோம் பருகு இன்னமுதாய கனியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-6-
கதியேலில்லை நின்னருள் அல்லது எனக்கு நிதியே திரு நீர் மலை நித்திலத் தொத்தே பதியே பரவித் தொழும்
தொண்டர் தமக்குக் கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே -7-1-6-
மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே யன்று வாய் உரையாதே -7-3-7-
செல்வத் தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே –7-4-1-
தென் அழுந்தையில் மன்னி நின்ற அங்கமலக் கண்ணனை அடியேன் கண்டு கொண்டேனே -7-6-1-
சாம வேதியனே நெடுமாலே அந்தோ நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –7-7-2-
சிறு புலியூர் சல சயனத்து அந்தாமரை அடியாய் உனது அடியேற்கு அருள் புரியே –7-9-5-
திருமா மகள் மருவும் சிறு புலியூர் அருமா கடல் அமுதே உனது அடியே சரணாமே –7-9-9-
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-1-
பின்னை மணாளனாகி முன் கரும் தாள் களிறு ஓன்று ஒசித்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே –8-6-6-
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3
கடிகைத் தடம் குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே -8-9-4-
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை மற்று எல்லாம் பேசிலும் நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் கண்ணபுரத்து உறை யம்மானே –8-10-3-
திருமால் இரும் சோலை நின்ற நலம் திகழ் நாரணனை நணுகும் கொல் என் நன்னுதலே –9-9-3-
முன்னம் சேர் வல்வினைகள் போக முகில் வண்ணன் பொன்னம் சேர் சேவடி மேல் போதணியப் பெற்றோமே -11-3-9
சிலைமலி செஞ்சரங்கள் செல உய்த்த நங்கள் திருமால் நமக்கு ஓர் அரணே –11-4-7-
இணை மறுத்து இற்று வீழ நடை கற்ற தேற்றால் வினை பற்று அறுக்கும் விதியே –11-4-9-
உலகு அளந்த உம்பர் கோமான் பேராளன் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே–11-6-5-
ஆன்விடை ஏழ் அன்று அடர்த்தாற்கு ஆளானார் அல்லாதார் மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே –11-7-9-
நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும் எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா அந்தோ அடியேற்கு அருளாய் உன்னருளே –11-8-9-

——————————————————————————–

திருக் குறும் தாண்டகம் –
மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே –1-
விளக்கினை விதியின் காண்பார் மெய்ம்மையைக் காண்கிற்பாரே –18
உலகமேத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மலை என்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே –19-

—————————————————————

திரு நெடும் தாண்டகம் –

தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே -1
அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே -4-
உலகுண்ட பெரு வாயர் இங்கே வந்து என் பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே –24
தண் குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –29-
———————————————————————————–
முதல் திருவந்தாதி
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை இடர் ஆழி நீங்குகவே என்று -1-
ஓத நீர் வண்ணனை நான் இன்று மறப்பேனோ –அன்று கரு அரங்கத்துள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன் திருவரங்கமே யான் திசை -6
பேய் முலை நஞ்சு ஊணாக யுண்டான் உருவோடு பேரல்லால் காணா கண் கேளா செவி -11
தொழுதேன் கடலோதம் கால் அலைப்பக் கண் வளரும் செங்கண் அடலோத வண்ணர் அடி -16
என்றும் படையாழி புள்ளூர்த்தி பாம்பணையான் பாதம் அடையாழி நெஞ்சே அறி -21-
எரியுருவ வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை யல்லால் மற்று எண்ணத் தான் ஆமோ இமை –31
அழலும் செருவாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல மருவாழி நெஞ்சே மகிழ் –48
அரணாய பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது ஓராழி சூழ்ந்த உலகு –60
திருமாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன் வருமாறு என் நம் மேல் வினை –64
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –67-
பழுது ஒன்றும் வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண் அளந்த சீரான் திரு வேங்கடம் –76
ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என் நெஞ்சே ஓரடியின் தாயவனைக் கேசவனைத் தண் துழாய்
மாலை சேர் மாயவனையே மனத்து வை -100-

————————————————————–

இரண்டாம் திருவந்தாதி –

தழல் எடுத்த போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியை ஓராழி நெஞ்சே உகந்து -7
கோல் தேடி யோடும் கொழுந்தே போன்றதே மால் தேடி யோடும் மனம் -27-
மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு என் பாக்கியத்தால் இனி -34-
நமக்கு என்றும் மாதவனே என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் ஒத்து –38-
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -39-
அறம் தாங்கும் மாதவனே என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் உள்ளு –41-
நாரணன் பேரோதி நரகத்து அருகு அணையா காரணமும் வல்லையேல் காண் –66
அன்று கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன் திருக் கோட்டி எந்தை திறம் -87
பொருந்தாதான் மார்பிடந்து பூம் பாடகத்துள் இருந்தானை ஏத்தும் என் நெஞ்சே –94-
மா கடல் நஞ்சுண்டான் தனக்கும் இறையாவான் எங்கள் பிரான் -96-

—————————————————————————

மூன்றாம் திருவந்தாதி –

மலராள் தனத்துள்ளான் தண் துழாய் மார்பன் சினத்துச் செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன் வரு நரகம் தீர்க்கும் மருந்து –3
எந்தை ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் திரு வல்லிக் கேணியான் சென்று -16-
அரவணையான் சேவடிக்கே நேர் படுவான் தான் முயலும் நெஞ்சு –80
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை உள்ளத்தே வை நெஞ்சே உய்த்து –93
தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான் அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்துக் கோள்
முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்கட்குச் சார்வு –99
சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்த் தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும்
காரார்ந்த வானமரு மின்னிமைக்கும் வண் தாமரை நெடும் கண் தேனமரும் பூ மேல் திரு –100-

————————————————————————————-

நான்முகன் திருவந்தாதி

நன்றாக நானுன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை யன்றி இல்லை –7-
இல்லை துணை மற்று –ஈரைந்தலையான் இலங்கை ஈடழித்த கூரம்பன் அல்லால் குறை
நாராயணன் என்னை யாளி நரகத்துச் சேராமல் காக்கும் திருமால் –14
எற்றைக்கும் கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா யான் உன்னைக் கண்டு கொள்கிற்குமாறு –26-
பொல்லாத் தேவரைத் தேவரல்லாரை திருவில்லாத் தேவரைத் தேறேல் மின் தேவு –53
பொன்பாவை கேள்வா -கிளர் ஒளி என் கேசவா கேடின்றி ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் –59-
கேட்பார்க்கு அரும் பொருளாய் நின்ற அரங்கனே உன்னை விரும்புவதே விள்ளேன் மனம் –60-
நாதானை நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும் சொல்லானை சொல்லுவதே சூது –64
நலமாக நாரணனை நா பதியை ஞானப் பெருமானை சீரணைனை ஏத்தும் திறம் -67-
மா மேனி மாயவனை அல்லாது ஓன்று ஏத்தாது என் நா –74
என்றும் மறந்து அறியேன் என் நெஞ்சத்தே வைத்து நின்றும் இருந்தும் நெடுமாலை ‘
என்றும் திருவிருந்த மார்பன் சிறீதரனுக்கு ஆளாய் கருவிருந்த நாள் முதலாக் காப்பு –92
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை
இனி அறிந்தேன் காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

——————————————————————————-

திரு விருத்தம் –

ஈங்கு இவள் தன நிறையோ இனி உன் திருவருளால் அன்றி காப்பரிதால் முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே –62
புவனி எல்லாம் நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே –69-
தென் பால் இலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே –77
மை வரை போல் பொலியும் உருவில் பிரானார் புனை பூந்துழாய் மலர்க்கே மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே –78
பாற் கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே–79-
உலகளந்த மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரி இல்லா ஆணிப் பொன்னே அடியேன் ஆவி அடைக்கலமே –85
ஆவினை மேய்க்கும் வல்லாயானை அன்று உலகு ஈரடியால் தாவின வெற்றி எம்மானை எஞ்ஞான்று தலைப் பெய்வனே –89
யாதானும் பற்றி நீங்கி விரதத்தை நல்வீடு செய்யும் மாதாவினைப் பிதுவை திருமாலை வணங்குவனே –95

——————————————————————————-
திருவாசிரியம் –

ஒராலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை யல்லது ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே –7

———————————————————-

பெரிய திருவந்தாதி –

வல்வினையைக் கானும் மலையும் புகக் கடிவான் தானோர் இருள் அன்ன மா மேனி எமமிறையார் தந்த அருள் என்னும் தண்டால் அடித்து –26-
தானோர் மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண் அளந்தான் நங்கள் பிணிக்காம் பெரு மருந்து பின் –62
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை சொல் மாலை எப்பொழுதும் சூட்டு –65
கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான் பார் கலந்த வால் வயிற்றான் பாம்பணையான்
சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை என் நினைந்து போக்குவர் இப்போது –86-
இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல் என்நெஞ்சே
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல் –87

————————————————————————————

திரு ஏழு கூற்று இருக்கை –

செல்வம் மல்கு தென் திருக் குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க ஆடரவமளியில் அறி துயில் அமர்ந்த பரம
நின்னடி இணை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையே –

———————————————————————–

சிறிய திருமடல்

தாமரை போல் கண்ணானை எண்ணரும் சீர்ப் பேராயிரமும் பிதற்றி பெரும் தெருவே ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வாரார் பூம் பெண்ணை மடல்

——————————————————————————-

பெரிய திருமடல் –

தன்னிகர் ஒன்றில்லாத் தாடகையை மா முநிக்காத் தன்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்றிவை தான் உன்னி யுலவா
வுலகறிய ஊர்வன் நான் –பூம் பெண்ணை மடல் –

————————————————————————-

திருவாய்மொழி –

எண் பெருக்கு அந் நலத்து ஒன பொருள் ஈறில வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-
நாளும் நம் திருவுடை யடிகள் தம் நலம் கழல் வணங்கி மாளுமோரிடத்திலும் வணக்கொடு மாள்வது வளமே –1-3-8-
செடியார் ஆக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை அடியேன் காண்பான் அலற்றுவன் –1-5-7-
திருமகளார் தனிக் கேள்வன் பெருமையுடைய பிரானார் இருமை வினை கடிவாரே-1-6-9-
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே -1-8-3-
சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான் எங்கும் தானாய நங்கள் நாதனே –1-8-9-
செல்வன் நாரணன் என்ற சொல் கேட்டலும் மல்கும் கண் பனி நாடுவன் மாயமே அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-
நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச் செம்பொனே திகழும் திரு மூர்த்தியை உம்பர் வானவர் ஆதி யம் சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9-
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு –2-1-7-
நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-
பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் நுனியார் கோட்டில் வைத்தாய் உனபாதம் சேர்ந்தேனே -2-3-5-
கன்னலே அமுதே கார்முகிலே என் கண்ணா நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக் கொள்ளே –2-3-7-
விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத் தஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8-
செய்குந்தா வரும் தீமை யுன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே –2-6-1-
என்னுள் புகுந்து தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரைக் கண் குன்றம் கோதவமில் என் கன்னற்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரி விக்கிரமனையே –2-7-6-
நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-
பிறவித் துழதி நீங்க என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கேன் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-
தீ வினை மாலை வின்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை இருடீ கேசனே –2-7-9-
எப்பொருட்கும் வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற கார் முகில் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-
எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என் மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-
கிளர் ஒளி இளமை கேடுவதன் முன்னம் வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளரிளம் பொழில் சூழ் மாலிரும் சோலை தளர்விலராகில் சார்வது சதிரே -2-10-1-
பாவு தொல் சீர்க் கண்ணா என் பரஞ்சுடரே கூவுகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8-
ஓயும் மூப்புப் பிறப்பிறப்பு பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து ஆயன்
நாள் மலராம் அடித்தாமரை வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே –3-3-9-
தேவதேவனைத் தென்னிலங்கை எரி எழச் செற்ற வில்லியை பாவ நாசனைப் பங்கயத் தடம் கண்ணனைப் பரவுமினோ –3-6-2-
குடக் கூத்தனை விழுமிய வமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினை தொழுமின் தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே –3-6-7-
அச்சுதன் தன்னை தயரதற்கும் மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே –3-6-8-
அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே –3-6-10-
வலம் தாங்கு சக்கரத் தண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் அடியார் தம் அடியார் எம்மடிகளே –3-7-9-
ஆவியே ஆரமுதே என்னை யாளுடை தூவி யம் புள்ளுடையாய் சுடர் நேமியாய்
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும் கூவியும் காணப் பெறேன் உன் கோலமே –3-8-7-
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை யாயனைப் பெற்ற சக்கரத் தரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே -3-10-4-
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடிலனே –3-10-10-
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே –4-3-6-
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன் செய்ய கோலத் தடம் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன் வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே –4-5-2-
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொல் மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே –4-5-7-
கண்டவாற்றால் தனதே யுலகு என நின்றான் தன்னை வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே–4-5-10-
மாயத் தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே –4-6-1-
மன்னப்படு மறை வாணனை வண் துவராபதி மன்னனை ஏத்துமின் ஏத்தலும் தொழுது ஆடுமே –4-6-10-
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என் தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே –4-7-10-
பட நாகத்தணைக் கிடந்த பரு வரைத் தோள் பரம் புருடன் நெடு மாயன் கவராத நிறைவினால் குறைவிலமே –4-8-10-
அடியேனை பண்டே போல் கருதாது உன்னடிக்கே கூய்ப் பணி கொள்ளே –4-9-3-
வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழல கூட்டரிய திருவடிகள் கூட்டினை நான் கண்டேனே –4-9-9-
ஒண் தொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே –4-9-10-
திருக் குருகூர் அதனுள் நின்ற வாதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே –4-10-1-
திருக் குருகூர் அதனுள் பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே –4-10-5-
தேவர் கோலத்தோடும் திருச் சக்கரம் சங்கினொடும் ஆவா என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே –5-1-9-
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் தோழி கடியனே -5-3-4-
அகப்பட்டேன் முன்னை யமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே–5-3-6-
கோல நீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும் நீல மேனியும் நான்கு தோளும் என்நெஞ்சம் நிறைந்தனவே –5-5-6-
என் கார்முகில் வண்ணா பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்-5-7-3-
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே உலகுக்கோர் முந்தைத் தாய் தந்தையே முழு வேழ் உலகுமுண்டாய்
செந்தொழில் அவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர் அந்தமில் புகழாய் அடியேனை யகற்றேலே-5-7-7-
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் உனக்கோர் கைம்மாறு நான் ஒன்றிலேன் எனதாவியும் உனதே -5-7-10-
என் நான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –5-8-3-
செந்தாமரைக் கண்ணா தொழுவனேனை உன்தாள் சேரும் வகையே சூழ் கண்டாய் –5-8-5
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -5-8-8-
தீரா வினைகள் தீர என்னை யாண்டாய் திருக் குடந்தை ஊரா உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ –5-8-10-
த்ண் திருவல்ல வாழ நீடுறைகின்ற பிரான் கழல் காண்டும் கொல் நிச்சலுமே –5-9-3-
நின்று நின்று நினைகின்றேன் உன்னை எங்கனம் நினைகிற்பன் பாவியேற்கு ஓன்று நன்கு உரையாய் உலகம் உண்ட ஒண் சுடரே –5-10-6-
மாறில் போரரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே –6-1-10-
இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் -6-2-10-
திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் என் சரண் என் கண்ணன் என்னை யாளுடை என்னப்பனே –6-3-8-
மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன மாயங்களே காணும் நெஞ்சுடையேன் எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே –6-4-8-
அந்நாள் தொடங்கி இந்நாள் தோறும் இருந்து இருந்து அரவிந்த லோசன என்று என்றே நைந்து இரங்குமே –6-5-8-
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர்ச் சடகோபன் –6-5-11-
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள் விரைந்தோடி வந்தே -6-8-2-
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ –6-9-3-
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –6-9-9-
தேவாசுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தாலே பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புனராயே –6-10-4-
செடியார் வினைகள் தீர் மருந்தே திருவேங்கடத்து எம்பெருமானே நொடியார் பொழுதும் உனபாதம் காணா நோலா தாற்றேனே –6-10-7-
புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -6-10-10-
என்னை யுன் சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்து ஏத்திக் கை தொழவே யருள் எனக்கு என்னம்மா என் கண்ணா இமையோர் தம் குல முதலே –7-1-8-
கட்கிலீ உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே –7-2-3-
என் திருமகள் சேர் மார்வனே என்னும் என்னுடை யாவியே என்னும் நின் திரு வெயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே என்னும்
அன்று உரு வேழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே என்னும் தென் திருவரங்கம் கோயில் கொண்டானே தெளிகிலேன் முடிவிவள் தனக்கே –7-2-9-
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழி யானே -7-3-10-
ஓர் ஐவர்க்காய் தேசம் அறிய சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை –7-5-9-
பெரும் துன்பம் வேரற நீக்கித் தன தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணி –7-5-10-
என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன்தமிழ் பாடிய வீசனை ஆதியாய் நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ –7-9-1-
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திருவாறன் விளை யூரை தீர்த்தனுக்கு அற்ற பின்னே –7-10-10-
வானுயர் இன்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே –8-1-9-
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த தேவ பிராற்கு என் நிறைவினோடு நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன் –8-2-9-
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே –8-3-5-
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை கரு மா மேனியன் என்பன் என் காதல் கலக்கவே –8-3-9-
தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே –8-5-1-
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன் நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே –8-7-8-
மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே –8-9-5-
தென்திசை திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே –8-9-10-
குமரன் கோல வைங்கனை வேள் தாதை கோதில் அடியார் -8-10-9-
பொன்னாழிக் கை என்னம்மான் நீக்கமில்லா வடியார் –8-10-10-
வடமதுரை பிறந்தார்க்கு அருள் கொள் ஆளா உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே –9-1-3-
வடமதுரைப் பிறந்த தாதுசேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே –9-1-9-
நீ ஒரு நாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -9-2-2-
திருப் புளிங்குடியாய் காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டு ஏந்தி எம்மிடர் கடிவானே -9-2-6-
திருப் புளிங்குடியாய் வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை கொடுவினையேனும் பிடிக்க
நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே –9-2-10-
நாராயணன் நங்கள் பிரான் அவனே –9-3-1-
உலகம் அளந்த அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே –9-4-10-
என்னின் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான் காரொக்கும் காட்கரை யப்பன் கடியனே -9-6-10-
நாவாய் உறைகின்ற நாரண நம்பி ஆவா அடியான் இவன் என்று அருளாயே –9-8-7-
திருக் கண்ண புரம் உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டரே –9-10-2-
காள மேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே -10-1-1-
திரு மோகூர் ஆத்தன் தாமரை யடி யன்றி மற்றிலம் அரணே -9-1-5-
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமராவார் –10-2-5-
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம் –9-2-8-
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -10-3-1-
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -10-5-1-
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம் சாராவே –10-5-7-
வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று விண்ணுலகம் தருவானே விரைகின்றான் விதி வகையே -10-6-3-
திருமால் இரும் சோலை கோனேயாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே –10-7-2-
திருப்பேர் நகரான் திருமால் இரும் சோலை பொருப்பே யுறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6-
உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் -ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் –
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய் நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ –10-10-7-

——————————————————————

இராமானுச நூற்றந்தாதி –
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகல் மலிந்த பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன்
பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே –1
இராமானுசன் சரணே கதி வேறு எனக்கே -13
இராமானுசன் எம் உரு துணையே –18
இராமானுசன் எனக்கு ஆரமுதே –19-
இராமானுசன் என் தன் மா நிதியே –20
இராமானுசன் என்னைக் காத்தனனே –21
இராமானுசன் என் தன் சேம வைப்பே –22
இராமானுசன் என்னை யாண்டனனே –30-
அண்ணல் இராமானுசன் தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே -41
இராமானுசன் எம் குலக் கொழுந்தே -60
இராமானுசன் என்னும் சீர் முகிலே –82
இராமானுசன் மிக்க புண்ணியனே –91
இராமானுசன் என் செழும் கொண்டாலே –104-
இராமானுசனைத் தொழும் பெரியோர் எழுந்திரைத்தாடும் இடம் அடியேனுக்கு இருப்பிடமே -105
இராமானுசன் மனத்து இன்று அவன் வந்து இருப்பிடம் என் தன் இதயத்து உள்ளே தனக்கு இன்புறவே -105-
அங்கயல் பாய் தென்னரங்கன் அணியாகம் என்னும் பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி எல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப்பு மன்னவே –108-

—————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading