அவதாரிகை –
இப்படி இவர்கள் பண்ணின ஆஸ்ரயணத்தை அனுசந்தித்து –
தங்களைப் பெறுகைக்கு நாம் வருந்த வேண்டும்படி இருக்குமவர்களை
நம்மைப் பெறுகைக்கு தாங்கள் வருந்துகை யாவது என் –
அது தன்னிலும் நம் காலில் விழுகை அன்றிக்கே
நம்மைப் பெறுகைக்கு ஒரு தேவதாந்தரத்தின் காலிலே துவளும் படி நாம் பிற்பாடர் ஆனோமே –
அழகியதாகக் கார்யம் பார்த்தோமே -என்று தன் பிற்பாட்டை அநு சந்தித்து –
திரு உள்ளம் நொந்து –
திருவாய்ப்பாடியிலே பொதுவானார் வருஷார்த்தமாக இந்தரனுக்கு கொடு போய் இடுகிற சோற்றைக் கண்டு
நாம் பிறந்து வளருகிற ஊரிலே சிலர் ஒன்றை தேவதாந்தரத்துக்கு ஆக்குகை யாவது என் -என்று
அதுவும் பொறுக்க மாட்டாதே
மலையின் முன்னே கொடு போய் குவியுங்கோள் -என்று சொல்லி
தான் மலையாய் இருந்து ஜீவிக்குமவன் –
தனக்கு அசாதாரணைகளான இவர்கள் -தன்னைப் பெறுகைக்கு காம சமாஸ்ரயணம்
பண்ணும் போது பொறுக்க மாட்டான் இறே –
ஒரு சாதன அனுஷ்டானத்தாலே யாதல் -அன்றிக்கே –
இதர சமாஸ்ரயண முகத்தாலே யாதல் –
தன்னைப் பெற வருந்தும் அதுவும் பொறுக்க மாட்டாதவன் –
நேர் கொடு நேர் காமன் காலிலே விழுந்தால் பொறுக்க மாட்டான் இறே –
அத்தாலே திரு உள்ளம் தளும்பி ஆனைக்கு உதவினால் போலே கடுக வந்து முகம் காட்ட
அவர்களும் இருந்து -அந்ய பரத்தை பாவித்து சிற்றில் இழைக்க-
அது தான் ஆகிறது -காம சமாஸ்ரயணத்தில் ஒரு வகை இறே –
அத்தை அழிப்பதாக உத்யோகிக்க –
இவர்களும் பல வகையாலும் -வேண்டா -என்ன –
நடுவே இவனும் வேணும் -என்ன
இப்படிகளாலே நடுவே ஒரு மஹா பாரதம் பிரவ்ருத்தமாய் –
அநந்தரம் –
சம்ச்லேஷம் பிரவ்ருத்தமாய்-
எம்மைப் பற்றி மெய்ப்பிணக்கு இட்டக்கால் -2-9–
—விஸ்லேஷ அந்தமான படியைச –
கோழி அழைப்பதன் முன்னம் -மேலில் திருவாய் மொழி -சொல்லிற்று ஆயிற்று –
—————————————————————————–
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை
மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே
காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–2-1-
பதவுரை
நாமம் ஆயிரம்–ஸஹஸ்ர நாமத்தினால்
ஏத்த நின்ற–(நித்ய ஸூரிகள்) துதிக்கும்படி நின்ற
நாராயணா–நாராயணனே!
நரனே–(சக்கரவர்த்தித் திருமகனாய்ப் பிறந்து) மானிட வுடல் கொண்டவனே!
உன்னை–(ஏற்கனவே தீம்பனான) உன்னை
மாமி தன் மகன் ஆக பெற்றால்–பர்த்தாவாகவும் பெற்றால்
எமக்கு வாதை தவிருமே–நாங்கள் நலிவுபடா திருக்க முடியுமோ?’
காமன் போதரு காலம் என்று–மன்மதன் வருங்கால மென்று
பங்குனி நாள்–பங்குனி மாதத்தில்-
கடை–(அவன் வரும்) வழியை
பாரித்தோம்–கோடித்தோம்’
தீமை செய்யும்–தீம்புகளைச் செய்கின்ற
சிரிதிரா–ச்ரிய:பதியான கண்ண பிரானே!
எங்கள் சிற்றில்–நாங்களிழைக்கின்ற மணற் கொட்டகங்களை
வந்து–(நாங்கள் விளையாடுமிடத்தில்) வந்து
சிதையேல்–நீ அழிக்க வேண்டா.
கடை பாரித்தோம் -அவன் வரும் வழியை கோடித்தோம்-
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை-
ஸ்தனனன்ய பிரஜை நோவு கொண்டால் அதுக்காக தான் குடிநீர் குடிக்கும் தாயைப் போலே
நர நாராயண ரூபத்தாலே வந்து
இச் சேதனருககாக தான் தபஸ்ஸூ பண்ணின இத்தை அனுசந்தித்த தேவ ஜாதி-
தேவரீர் என்ன கார்யம் செய்து தலைக் கட்டுகைக்காக இப்படி தபஸ் ஸூ பண்ணி அருளுகிறது -என்று ஸ்தோத்ரம்
பண்ணும் படியாக நின்ற நிலையைச் சொல்லிற்று ஆகவுமாம்
அன்றிக்கே –
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா –என்று பிரித்து
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூ ரய-திவீவ சஷூராரததம் –
தத் விப்ராசோ விபன்யவோ ஜாக்ருவாம்சஸ் சமிந்ததே விஷ்ணோர்யத் பரமம் பதம் -என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகள் ஸ்தோத்ரம் பண்ண
உபய விபூதி உக்தனாய்க் கொண்டு
நித்ய விபூதியிலே இருக்கும் இருப்பைச் சொல்லிற்று ஆகவுமாம் –
நரனே –
ஏதத் இச்சாம்யஹம் ஸ்ரோதும் பரம் குதூஹலம் ஹி மே-மஹர்ஷே தவம் ஸ்மர்த்தோஸ் அஸி
ஜ்ஞாது-மேவம் விதம் நரம் -பால -1-5-என்கிறபடியே –
அங்கு நின்றும் போந்து சக்கரவர்த்தி திரு மகனாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது –
உன்னை மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே-
அளவுடையரான நித்ய ஸூரிகள் தன்னை உள்ளபடி எல்லாம் அறிந்து ஸ்தோத்ரம் பண்ண –
தன் ஐஸ்வர்யம் எல்லாம் தோற்றும்படி
பரம பதத்திலே இருக்கும் இருப்பைச் சொல்லிற்று –
அங்கு நின்றும் போந்து –
அறிவுடையார் அறிவில்லாதார் -என்ற வாசி இன்றிக்கே
இருந்ததே குடியாக எல்லாரும் ஒக்கத்
தன்னுடைய சீலாதி குணங்களுக்கு தோற்று நெஞ்சு உளுக்கி
ராமோ ராமோ ராம பிரஜா நாம பவன்கதா -ராமபூதம் ஜகத்பூத் ராமே ராஜ்யம்பிரசாசதி –யுத்த -131-102-என்றும்
பால அபி க்ரீடா மாநா க்ருஹத் வாரேஷூ சங்கச -ராமாபிஷ்டவ சம்யுக்தா சக்ருரேவ மித கதா -அயோத் -6-16-என்றும்
சொல்லுகிறபடியே ஏத்தும் படியாக வந்து
திரு வவதரித்து நிற்கும் படியைச் சொல்லிற்று —
அவை போலே அன்றிக்கே —
அவற்றின் கார்யமான தீம்பாலே பெண்களை ஓடி எறிந்து–
தான் செய்தது விலக்காத படியாகப் பண்ணி
செய்தது அடையப் பொறுக்கும் படியான பிராப்தியையும் முன்னிட்டுக் கொண்டு வர்த்திக்கிற படியை சொல்லுகிறது –
முன்பே தீம்பனாய் இருக்கிற நீ –
அதுக்கு மேலே ஒரு மைத்துனமை ஏறிட்டுக் கொண்டு
நலியப் புக்கால் எங்களால் நலிவு படாது இருக்கப் போமோ —
நாங்கள் இங்கனே நலிவு பட்டு போம் இத்தனை யன்றோ முடிய –
எமக்கு –
ரூப ஔதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-என்கிறபடியே
வன் நெஞ்சைரையும் கூட அழிக்குமது
பிறப்பே அபலைகளாய் இருக்கிற வர்களால் பொறுக்கப் போமோ -என்று
அவன் தீம்புகளுக்கு பொறுக்க ஒண்ணாமை தோற்ற சொன்னார்கள் இவர்கள் –
நானோ நீங்கள் அன்றோ முன் தீம்பு செய்திகொள்-
நான் நினைவு அற்று இருக்க என் வரவைக் கடாஷித்து சிற்றில் இளைத்து வைத்தி கோள்-என்றான்
அதுவோ –
அது வாகில் உன்னுடைய வரவை உத்தேசித்துச் செய்தோம் அல்லோம் காண்-
காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்-சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே––
காமன் வரும் காலம் என்று —
அவன் வரும் மாசத்திலே எங்கள் வாசல்களை அலங்கரித்தோம்
நாங்கள் உன் வரவைக் கடாஷித்து செய்யுமவர்கள் அல்லோம் –
உன்னைச் சேர்ப்பார் வரவைக் கடாஷித்து செய்யுமவர்கள் காண் நாங்கள்
ஆன பின்பு அது அன்யார்த்தம் -என்றார்கள் -ஆகிலும்
என்னதும் அன்யார்த்தம் என்னா- சிற்றிலை அழிக்கப் புக்கான் –
எங்களை ஆராக நினைத்து இருந்தாய் –
பிராட்டி பரிகரமான எங்கள் பக்கல் அவை செய்யப் போமோ -என்றார்கள்
அவள் புருஷகாரம் ஆனால் தங்களை நலிய ஒண்ணாது என்னுமத்தை பற்றச் சொன்னார்கள் –
அத்தனையோ –அவளோடு ஒரு சம்பந்தம் நீங்களே சொன்னி கோளே-நான் ஸ்ரீ யபதி அல்லேனோ-
நான் செய்ததுக்கு நிவாரகர் உண்டோ -என்று
அது தன்னையே- வழியாகக் கொண்டு அழிக்கப் புக்கான் –
தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே-
பிராட்டியோட்டை சம்பந்தம் எங்கள் பேற்றுக்கு உடல் என்று நினைத்து இருந்தோம் நாங்கள் –
அது அங்கன் அன்றிக்கே எங்கள் இழவுக்கு உடலாம்படி சிஷித்து விட்டாள் ஆகில்
எங்கள் சிற்றிலை அழியாதே –
அவள் தன்னுடைய சிற்றிலைப் போய் அழி-என்கிறார்கள்
————————————————————————————-
இன்று முற்றும் முதுகு நோவ இருந்து இளைத்த விச் சிற்றிலை
நன்றும் கண்ணுற நோக்கி நாம் கொளும் ஆர்வம் தன்னைத் தணி கிடாய்
அன்று பாலகனாகி ஆலிலை மேல் துயின்ற வெம்மாதியாய்
என்றும் உன் தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே–2-2-
பதவுரை
இன்று முற்றும்–இன்றைய தினம் முழுவதும்
முதுகு நோவ–முதுகு நோம்படி
இருந்து–உட்கார்ந்து கொண்டு
இழைத்த–ஸ்ருஷ்டித்த
இச் சிற்றிலை–இந்தச் சிற்றிலை
நன்றும்–நன்றாக
கண் உற நோக்கி–(நீ) கண் பொருந்தும்படி பார்த்து,
நாம் கொள்ளும் ஆர்வம் தன்னை தணிகிடாய்–நாங்கள் கொண்டிருக்கிற அபிநிவேசத்தைத் தணியச் செய் கிடாய்’
அன்று–மஹா ப்ரளயம் வந்த காலத்தில்
பாலகன் ஆகி–சிசு வடிவு கொண்டு
ஆல் இலை மேல்–ஆலந்தளிரின் மேல்
துயின்ற–கண் வளர்ந்தருளினவனும்
எம் ஆதியாய்–எமக்குத் தலைவனுமான கண்ண பிரானே!
என்றும்–எக் காலத்திலும்
உன் தனக்கு–உனக்கு
எங்கள் மேல்–எம்மிடத்தில்
இரக்கம் எழாதது–தயவு பிறவாமலிருப்பது
எம் பாவமே–நாங்கள் பண்ணின பாவத்தின் பயனேயாம்.
இருந்து –
ஸ்தாவர பிரதிஷ்டை போலே இருந்து
இன்று முற்றும் –
ஒரு பகலாய் இருக்கச் செய்தேயும் அது தான் ஆயிரம் ஊழியாய் நெடுகித் தோற்றின படி
–ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ -திருவாய் மொழி -10-3-1-
முதுகு நோவ இருந்து இளைத்த விச் சிற்றிலை-
உன்னைப் போலே —ததைஷத பஹூச்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோஸ் ஸ்ருஜாதா –சாந்தோக்யம் -6-2-3-என்று
ஒரு வருத்தம் அற சிருஷ்டித்து –
இது தனக்கு நாம் நேர்ந்ததோ பெருத்துக் கிடக்கிறது -என்று தரித்து இருக்கலாவது
ஓன்று அல்ல காண் –
மெய்யே நொந்து சிருஷ்டித்தது காண் –
மெய்யாகவே -உண்மையாகவே –சரீரம் கொண்டு என்றுமாம் –
முதுகு நோவ –
சிற்றிலை அழிக்கை தவிர்ந்து முதுகைப் பிடிக்கும் என்று பார்த்து
முதுகு நோவ -என்கிறார்கள் ஆயத்து –
கடக்க நின்று காலாலே சிற்றிலை அழியாதே –
கிட்டி நின்று கையாலே தீண்டுமாகில் ஆகாதோ -என்று இருக்கிறார்கள் –
முதல் தன்னிலே அபலைகள் –
அதுக்கு மேலே விரஹ துர்பலைகள் –
கிருஷ்ணன் திருக் கண்களால் நெஞ்சூடுருவ ஏவுண்டு நிலையம் தளர்ந்து-13-3- இருப்பார்கள் –
இனி வெண்ணெய் விழுங்கி வளர்ந்தவர்கள் ஆகையாலே பொறுக்க மாட்டார்கள் இறே
இருந்து –
காற்றைப் பிடித்து ஓர் இடத்திலே இருத்தினால் போலே இருப்பது ஓன்று இறே
இவர்களை ஓர் இடத்திலே இருத்துகை யாவது –
இழைத்த-
நெஞ்சு ஒழியப் பண்ணுகிற வியாபாரம் சால அரிது இறே –
நெஞ்சு கண்ணன் இடத்தில் இருக்கும் போது –இழைத்தது -செயற்கரிய செயல் அன்றோ-
இச் சிற்றிலை –
இது தான் இருந்தபடி கண்டாயே –
நீ அழிப்பது இத்தைப் பார்த்து அன்றோ –
இது இருந்தபடியால் சேதனராய் இருப்பார் இத்தை அழியார்கள் இறே
முதலிலே பரம சேதனனான நீ தானே அழியாயே –
நான் இத்தை அழித்தால் உங்களுக்கு வருவது என் என்ன –
நாங்கள் இதில் பட்ட வருத்தம் கண்டாயே –
நாங்கள் இத்தை -ஒருகால் கண்ணால் பார்த்துக் கொள்ள கிடையாது -என்கிறார்கள் –
அது என் -நீங்கள் இழைக்கிற போதே பார்த்து அன்றோ இழைத்தது என்ன –
அவயவங்கள் தோறும் பார்த்தோம் இத்தனை அல்லது
அவயவியாகப் பார்க்கப் பெற்றிலோமே
நாங்கள் அழகிதாக கண்கள் தைக்கப் பார்த்திடுக –
நான் கண்டு த்ருப்தன் ஆனேனே என்ன
நன்றும் கண்ணுற நோக்கி நாம் கொளும் ஆர்வம் தன்னைத் தணி கிடாய்
நாங்களும் ஒரு கால் கண்டு எங்கள் அபிநிவேசம் கெடும் கிடாய் –
எனக்கு இத்தனை கருத்து உண்டோ –
பரம பிரயோஜனம் வேணும் என்று இருக்கைக்கு ஈடான அறிவு எனக்கு உண்டோ –
நான் பாலன் அல்லேனோ -என்றான்
அன்று பாலகனாகி ஆலிலை மேல் துயின்ற வெம்மாதியாய் என்றும் உன் தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே–
உனக்கு பருவம் நிரம்புவதற்கு முன்னே பிடித்து பணி யாய்த்து இறே எங்களை முடிக்கை –
அன்று பாலகனாகி ஆலிலை மேல் துயின்ற-
ஆலம் தளிருக்கு உள்ளே அடங்குவதொரு வடிவைக் கொண்டு அதிலே சகல லோகங்களையும் வைத்து
பவனான ஆலம் தளிரிலே கண் வளர்ந்து அருளி
யசோதை பிராட்டி தொட்டிலிலே பண்ணும் வியாபாரம் அடைய அதிலே பண்ணி
அங்கன் உணர்ந்து நோக்குகைக்கு ஒரு தாயும் இன்றிக்கே
துள்ளி விழில் ஒரு வெள்ளம் ஆபத்தாய் இருக்கிறதோர் இடத்தில்
சப்ரமாதமான செயலைச் செய்து அன்று எங்களை முடித்தாய் –
ஆதியாய் –
எங்கள் சத்தா ஹேதுவை அன்றோ நீ அழிக்கப் புக்கது
என்றும் –
உம்மைத் தொகை கொண்டு இந்த வியாக்யான ஸ்ரீ ஸூ க்திகள்
சிறுவனாய் இருக்கும் இப் பொழுது
சிற்றிலை அழித்து முடிக்கப் பார்ப்பது வியப்பு அன்று –
என்றும் உன் தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே-
அன்று அங்கனே முடிக்கப் பார்த்தாய்
இன்று இங்கனே எங்கள் சிற்றிலை அழியா நின்றாய் –
ஆக –
நாங்கள் விஷயமானால் என்றும் ஒக்க இறே உனக்கு எங்கள் பக்கல் கிருபை பிறவாமைக்கு –
ஜகத் ரஷணத்திலே தீஷித்து இருக்கிற உனக்கு கிருபை இல்லை என்ன ஒண்ணாது இறே –
அதுக்கடி -எங்கள் பாபம் இ றே –
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித்-சுந்தர -38-48-என்னும் பிராட்டி வசனம் போலேயும்
மத பாபமேவாத்ர நிமித்தம் ஆஸீத் –அயோத்யா – என்னும் ஸ்ரீ பரத ஆழ்வான் வசனம் போலேயும் –
இவர்களும் சொல்கிறார்கள் –
——————————————————————–
குண்டு நீர் உறை கோளரி மத யானை கோள் விடுத்தாய் உன்னைக்
கண்டு மாலுறு வோங்களைக் கடைக்கண்களால் இட்டு வாதியேல்
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம்
தெண் திரைக் கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே-–2-3-
பதவுரை
குண்டு–மிக்க ஆழத்தை யுடைத்தான
நீர்–கடலிலே
உறை–சாய்ந்தருள்பவனும்
கோள் அரி!–மிடுக்கை யுடைய சிங்கம் போன்றவனும்
மதம் யானை கோள் விடுத்தாய்–மதம் மிக்க கஜேந்திராழ்வானுக்கு (முதலையால் நேர்ந்த)
துன்பத்தைத் தொலைத்தருளி னவனுமான கண்ண பிரானே!
உன்னை–(அடியார் துயரைத் தீர்க்க வல்ல) உன்னை
கண்டு–பார்த்து
மால் உறுவோங்களை–ஆசைப் படுகின்ற எங்களை
கடைக் கண்களால் இட்டு–கடைக் கண்களால் பார்த்து
வாதியேல்–ஹிம்ஸிக்க வேண்டா’
யாம்–நாங்கள்
வண்டல்–வண்டலிலுள்ள
நுண் மணல்–சிறிய மணல்களை
வளை கைகளால்–வளையல்கள் அணிந்த கைகளினால்
தெள்ளி–புடைத்து
சிரமப்பட்டோம்–மிகவும் கஷ்டப் பட்டோம்’
தெண் திரை–தெளிந்த அலைகளை யுடைய
கடல்–திருப்பாற்கடலை
பள்ளியாய்–படுக்கையாக வுடையவனே!
எங்கள் சிற்றில் வந்து சிதையேல்
உறை-கண் வளர்ந்து அருள்பவனாய்-
குண்டு நீர் உறை கோளரி
ஆழத்துக்கு எல்லை இல்லாத ஏகார்ணவத்தில் –
சிருஷ்டி உன்முகனாய்க் கொண்டு சாய்ந்து அருளி
ஸ்ருஷ்ய பதார்த்தங்களுக்கு ஒரு நலிவு வாராதபடி அநபிபவ நீயானாய் இருக்கிறவனே –
மத யானை கோள் விடுத்தாய் –
சிருஷ்டித்து விட்டால் வரும் பிரதிபந்தங்களைப் போக்கும் படி சொல்கிறது –
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு முதலையால் வந்த நலிவைப் போக்கினவனே-
உன்னைக்- கண்டு மாலுறு வோங்களைக் கடைக் கண்களால் இட்டு வாதியேல்-
என்றும் ஒக்க துக்க நிவர்த்தகனாய் போரும் நீ –
உன்னைக் கண்டு பிச்சேறி இருக்கும் எங்களை –
உன்னைக் காண வேண்டி இராதாருடைய துக்கத்தைப் போக்கினாய் –
ஸூஷ்ம நிலையில் இருந்து ஸ்தூல நிலைக்கு ஆக்கி அருளினாய்
உன்னைக் கண்ணாலே கண்டு பிச்சேறி இருக்கிற எங்களுக்கு கிலேசத்தை விளையா நின்றாய்
தங்களுக்கு அவன் பக்கல் உண்டான ப்ரேமம் தோற்ற தாங்களே சொன்னவாறே அவனும் தங்கள் பக்கல்
தனக்கு உண்டான ஸ்நேஹம் தோற்றும் படி கடைக் கண்ணால் பார்த்தான்
நீ உன்னுடைய அபாங்க வீஷணத்தாலே எங்களை நலியாதே —
முழுக்கப் பார்க்க வல்லையே -என்றார்கள்
வந்த அநர்த்தம் என் உங்களுக்கு -என்ன –
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம்-
நாங்கள் பட்ட பிரயாசத்தைப் பாராய் –
வண்டல் உள்ள இடம் தேடி —
அதிலே நுண்ணிய மணல் தேடி —
அது தன்னை தெள்ளி –
துர்ப்பலைகளாய் இருக்கிற நாங்கள்-
வளை கொண்டு பாடாற்றுகையே தொடங்கி அரிதாய் இருக்கிற கைகளைக் கொண்டு கிலேசப் பட்டோம் –
அவன் ஸ்பர்சித்த வளையாதலால் சிரமப் பட்டோம் –
இவர்கள் இப்படி சொல்லச் செய்தேயும் -இத்தை அழிக்க ஒருப்பட்டான் –
தெண் திரைக் கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–
திருப் பாற் கடலிலே வந்து சாய்ந்தது உன்னுடைய சிற்றில் அழியாமைக்கே –
எங்கள் சிற்றிலை அழிக்கிறது என்
உன் சிற்றில் போலே நெருப்பும் காற்றுமாகக் கொண்டு இட்ட சிற்றில் அன்று காண்-
வாயோர் அக்னி –அக்னேராப -தைத்ரியம் -1-2-
இது உபாதேயம் காண் –
எங்கள் சிற்றிலை அழியாதே –
இன்னம் அங்கே போய் உன் சிற்றிலை நோக்கு கிடாய்
அந்த கடல் கரை அழியாத படி நோக்கிடுதல் –
அத்தைக் கரை கட்டுதல் –சேது கட்டுகை -போலே -செய்யப் பாராய் -என்கிறார்கள் –
—————————————————————–
பெய்யு மா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன்முகம் மாய மந்திரம் தான் கொலோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே--2-4-
பதவுரை
பெய்யும்–வர்ஷியா நின்றுள்ள
மா முகில் போல் வண்ணா–காள மேகம் போன்ற திரு நிறத்தை யுடையவனே!
உன் தன்–உன்னுடைய
பேச்சும் செய்கையும்–(தாழ்ந்த) வார்த்தைகளும், (தாழ்ந்த) வியாபாரங்களும்
எங்களை–எங்களை
மையல் ஏற்றி –பிச்சேறப் பண்ணி
மயக்க–அறிவு கெடுக்கைக்கு
உன் முகம்–உன்னுடைய முகமானது
மாயம் மந்திரம் தான் கொலொ–சுக்குப் பொடியோ?
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு–‘அற்பத்தனமுடைய சிறுமியர் இவர்கள்’ என்று நீ சொல்லுவாய் என்று பயப்பட்டு
நாங்கள்–நாங்கள்
உன்னை–உன்னைக் குறித்து
நோவ உரைக்கிலோம்–நெஞ்சு புண்படும்படி (ஒன்றும்) சொல்லுகிறோமில்லை;’
செய்ய தாமரை கண்ணினாய்–புண்டாரிகாக்ஷனே!
எங்கள் சிற்றில் வந்து சிதையேல்.
பெய்யு மா முகில் போல் வண்ணா
ஒரு வர்ஷூக வலாஹகம் மின்னி முழங்கி வில்லிட்டு சஞ்சரிக்குமா போலே யாய்த்து
பெண்கள் முன்னே ஸ்ரமஹரமான வடிவோடு சஞ்சரிக்கிற போது இருக்கிறது
இவர்கள் தன் வடிவிலே தோற்று ஈடுபட்டமை தோற்ற வார்த்தை சொன்னவாறே
அதுவே அவகாசமாக
அடியேன் குடியேன் என்றால் போலே சில தாழ்வுகள் சொல்வது
விரல் கவ்வுவதாய்க் கொண்டு சிலவற்றைச் செய்யப் புக்கான்-
அதிலே துவக்குண்டு அறிவு கெட்டு
உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை- மையல் ஏற்றி மயக்க உன்முகம் மாய மந்திரம் தான் கொலோ-
உன் தாழ்ந்த பேச்சுக்களும் வியாபாரங்களும் எங்களைப் பிச்சேற்றி அறிவு கெடுக்க
உன் முகம் அம்மான் பொடியோ -என்கிறார்கள்
அது எதாகில் என் -இனிச் செய்யலாவது உண்டோ என்றான் –
என் இனி செயல் அற்றுப் போக வேணுமோ –
நீ நெடுநாள் கூடி வ்யாபரித்து பண்ணினத்தை அடைய நாங்கள் ஒரு உக்தியாலே அழித்து
உன்னை மறுமுட்டு பெறாதபடி பண்ணலாய்த்து இறே அது செய்கிறிலோம்-
அது செய்தால் என் என்னில் –
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்
பாலனான இவன் தங்களை ஒழியச் செல்லாமை உடையனாய் தங்கள் திரளிலே வந்து புகுரப் புக்கால்
இவன் புகுந்திடுவானுக்கு -என்று இருந்தால் இவர்களுக்கு என்ன சேதமுண்டு
இவன் புகுர வேண்டா என்று இங்கனே விலக்குவதே-
இவர்கள் சாலப் புல்லியராய் இருந்தார்கள் -பாலராய் இருந்தார்கள் –
என்று நீ உள்ளே புகுந்து பண்ணும் மர்மம் அறியாதார் சொல்லா நிற்பர்கள்
நோவ உரைக்கிலோம்-
எங்களுக்கு ஒரு உக்தி மாதரம் –
உன்னை மறுமுட்டு பெறாதபடி பண்ணலாம்
அது செய்கிறிலோம்
உன்னை நோவ உரைத்தால் எங்களை –பிள்ளைகள் நொய்யர் புல்லியர் என்பர் –
அதுக்காக நோவச் சொல்ல மாட்டோம் -என்று வாக்யார்த்தம்
பின்னையும் அழிப்பதாக ஒருப்பட்டது மாறாதே இருக்கச் செய்தேயும் சாதரமாகப் பார்த்தான் –
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே-
கண்ணாலே எங்கள் அபிசந்தியைக் குலையாதே கொள் –
அபிசந்தி -அந்ய பரதை காலாலே எங்கள் சிற்றிலை அழியாதே கொள் -என்கிறார்கள்
—————————————————————————–
வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –-2-5-
பதவுரை
கள்ளம்–கபடச் செய்கைகளை யுடைய
மாதவா–கண்ண பிரானே!
கேசவா–கேசவனே!
நாங்கள்–
வெள்ளை நுண் மணல் கொண்டு–வெளுத்துத் சிறுத்த மணல்களைக் கொண்டு
வீதியாய்–தெருவிலே
விசித்திரப்பட==(அனைவரும் கண்டு) ஆச்சாரியப்படும்படி
தெள்ளி இழைத்த–தெளிந்து கட்டின
சிற்றில்–சிற்றிலாகிற
கோலம்–கோலத்தை
அழித்தி ஆகிலும்–நீ அழித்தாயாகிலும், (அதற்காக)
உள்ளம்–(எங்களுடைய) நெஞ்சானது
ஓடி–உடைந்து
உருகல் அல்லால்–உருகுமத்தனை யொழிய
உன்தன்மேல்–உன்மேலே
உரோடம் ஒன்றும் இலோம்–துளியும் கோபமுடையோமல்லோம்’
உன்முகத்தன–உன்முகத்திலுள்ளவை
கண்கள் அல்லவே–கண்களன்றோ!
உரோடம் ஓன்று இலோம் -சிறிதும் கோபம் -ரோஷம்-உடையோம் அல்லோம்-
வெள்ளை நுண் மணல் கொண்டு –
நிலவைப் பரப்பினால் போலே வெளுத்து
அது தன்னிலும் பருக்கைப் படில் பொகட்டுப்போம் துச் சீல தேவதையாகையாலே –
அச்சமான மணலைக் கொண்டு –
அது –தன்னை தெள்ளி –
சிற்றில் விசித்திரப்பட –
விசித்திர சிருஷ்டி பண்ண வல்லேன் நான் என்று இராதே கொள் –
நாங்களும் வல்லோம் காண்-
வீதி வாய்த் தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் -அழித்தி யாகிலும்
தெருவிலே நாங்கள் இழைத்த அழகிய சிற்றிலை அழித்தாய் ஆகில் –
இது இருந்தபடி கண்டாயே –
இத்தைக் கண்டால் அழிப்பார் இல்லை இறே-
நீ தான் அழியாய் -என்கிறார்கள் –
நான் அழித்தால் தான் நீங்கள் செய்வது என் என்றான் –
உன்தன் மேல் உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்
நீ அழித்தாய் ஆகிலும் -ஒருவன் சிற்றிலை அழித்தபடி என் -என்று
அதற்கு ஹிருதயம் அழிந்து உடை குலைப்படுமது போக்கி
ரோஷம் என்று பேரிடலாவது ஒன்றும் இல்லை
நெஞ்சு வேவா நிற்கச் சொல்லும் வார்த்தை இறே இது
இவர்கள் தங்கள் அகவாயில் இழவு தோற்றச் சொல்லச் செய்தேயும் –
பின்னையும் தான் கொண்ட கோட்பாடு விடாது இருக்க –
அது தன்னையும் மறைத்து
ஸ்ரீ யபதியான செருக்குத் தோற்ற அங்கே இங்கே சஞ்சரிப்பது —
புறம்பே அந்ய பரதை பாவிப்பது —
குழலைப் பேணுவதாகப் புக்கான் –
அத்தை அறிந்து –
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –
நீயும் இத்தைக் கண்டு அன்றோ அழிக்கிறாய்
உன் முகத்தன கண்கள் அல்லவே
இவை தண்ணளிக்கு உறுப்பு என்று இருந்தோம் -அது அங்கன் அன்றிக்கே
பீலிக்கண் மாலைக் கண்ணோ பாதியாய்த்தோ
கண் என்று பேராய் –
கண்டாரை முன்னடியிலே விழ விட்டுக் கொள்வதொரு வலை இறே
கண் என்னும் நெடும் கயிறு -14-4-என்னக் கடவது இறே
—————————————————————————-
முற்றிலாத பிள்ளைகளோம் முலைபோந்திலாதோமை நாடொறும்
சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிதுண்டு திண்ணென நாமது
கற்றிலோம் கடலை யடைத்தரக்கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசலாக்கிய சேவகா எம்மை வாதியேல்—-2-6-
பதவுரை
கடலை அடைத்து–ஸேது பந்தம் பண்ணி
அரக்கர் குலங்களை முற்றவும்–ராக்ஷஸருடைய குலங்களை முழுதும்
செற்று–களைந்தொழித்து
இலங்கையை–லங்கையை
பூசல் ஆக்கிய–அமர்க்களப் படுத்தின
சேவகா–வீரப்பாடு உடையவனே!
முற்றிலாத பிள்ளைகளோம்–முற்றாத இளம் பிள்ளைகளாய்
முலை போந்திலாதோமை–முலையும் கிளரப் பெறாத வெங்களை
நாள் தோறும்–நாள் தோறும்
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு–சிற்றில் விஷயமாக ஒரு வியாஜத்தை வைத்துக் கொண்டு
நீ சிறிது உண்டு–நீ செய்யுஞ் செய்திகள் சில உள’
அது திண்ணன நாம் கற்றிலோம்–அவற்றை நாங்கள் அழகிதாக அப்யஸித்தோமல்லோம்;’
எம்மை வாதியேல்–எங்களை (நீ) துன்பப்படுத்த வேண்டா.
முற்றிலாத பிள்ளைகளோம் முலைபோந்திலாதோமை நாடொறும்
இன்னது செய்தான் -என்று பிறருக்கு சொல்ல ஒண்ணாத படி சிலவற்றைச் செய்யத் தொடங்கினான்
அத்தைக் கண்டு சில செய்தோம் இத்தனையோ வேண்டுவது –
அதுக்கு எதிர் தலையில் பருவம் அறிந்து கொள்ள வேண்டாவோ
உன் நினைவு அறிகைக்கு ஈடான பருவம் அல்ல
உள்ள பருவத்துக்கு தக்க அறிவும் அல்ல
ஆனாலும் போக யோக்யதை யுண்டாகப் பெறிலுமாம் இறே
சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிதுண்டு திண்ணென நாமது கற்றிலோம்
அதுவும் இல்லை இறே –
ப்ராமாதிகமாகவும் ஒரு செயலைச் செய்து விடுகை யன்றிக்கே -என்றும் ஒக்க –
சிற்றில் என்ற ஒரு வியாஜத்தை இட்டுக் கொண்டு நீ செய்கிறதுக்கு ஒரு கருத்து உண்டு
ஒரு ஸ்வாபதேசம் –சம்ச்லேஷம் -உண்டு –அது வாகாதே நாங்கள் அழகிதாக அப்யசித்திலோம்-
அறிந்த வற்றே இவர்கள் அறியாது இருந்த படி
நீ நினைக்கிறவை நாங்கள் அறிக்கைக்கு குருகுல வாஸம் பண்ணிற்று இலோம் –
நீங்கள் கற்றிலி கோள் ஆகிலும் நான் கற்றேன் இறே என்று மேலிட்டு நலியத் தொடங்கினான் –
அணைப்பது போன்ற சேஷ்டிதங்களை செய்யத் தொடங்கினான்
கடலை யடைத்தரக்கர் குலங்களை முற்றவும்-செற்று இலங்கையைப் பூசலாக்கிய சேவகா
இதுக்கு முன்பு ஒருவர் தலை அழித்து அறியாக் கடலை அடைத்து
இதுக்கு முன்பு ஒருவர் மேலிட்டு அறியாத ராஷச ஜாதியாரை பக்க வேரோடு கிழங்கு எடுத்து
சிலர் எடுத்து விட்டு வந்து பொரக் கணிசியாத ஊரை பூசலாம்படி பண்ணி
அத்தால் வந்த ஆண் பிள்ளைத் தனத்தை உடையையாய் இருக்கிறவனே
எம்மை வாதியேல்-—
எங்கள் பக்கல் பூசலை விளையாதே கொள்
பிரதிகூலர் திரண்ட இடத்தே செய்யுமவற்றை
அனுகூலர் திரண்ட இடத்தும் செய்யாதே கொள்
அது ஒருத்திக்காக செய்த செயல் அன்றோ —
அது இப்போது அவள் தன்னோடு ஆய்த்தோ –
——————————————————————————-
பேத நன்கறிவார்களோடு இவை பேசினால் பெரிதின் சுவை
யாதும் ஓன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன்
ஒதமா கடல் வண்ணா உன் மணவாட்டிமாரோடு சூழறும்
சேதுபந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே——2-7-
பதவுரை
பேதம்–(உன் பேச்சின்) வாசியை
நன்கு அறிவார்களோடு–நன்றாக அறிய வல்லவரோடு
இவை–இப் பேச்சுக்களை
பேசினால்–பேசினால்
பெரிது இன் சுவை–மிகவும் போக்யமாயிருக்கும்’
யாது ஒன்றும் அறியாத–எவ்வகையான பாவத்தை யுமறிய மாட்டாத
பிள்ளைகளோமை–சிறுப் பெண்களான எங்களை
நீ நலிந்து என் பயன்–நீ வருத்த முறுத்துவதனால் என்ன பயன்?
ஓதம்–திரைக் கிளப்பத்தை யுடைய
மா கடல்–பெரிய கடலை யொத்த
வண்ண–திரு நிறத்தை யுடைய கண்ண பிரானே!
சேது பந்தம் திருந்தினாய்–திருவணை கட்டினவனே!
உன் மணவாட்டிமாரொடு சூழறும்–உன்னுடைய பத்தினிகளின் மேல் ஆணை’
எங்கள் சிற்றில் வந்து சிதையேல்-
பேத நன்கறிவார்களோடு இவை பேசினால் பெரிதின் சுவை யாதும் ஓன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன்
சில வார்த்தைகளைச் சொல்லுகிறான் –
சொல்லப் புக்க வார்த்தையினுடைய பலன் -வேறு ஒன்றினுடைய பலத்தைப் பலிப்பதாக
சொல்லத் தொடங்கினான் -இரு பொருள் பட –
நீ சொல்லுகிற வற்றினுடைய கருத்து அறிவாரோடே சொன்னால் அன்றோ உனக்கு இத்தால் பிரயோஜனம் உள்ளது
எங்களோடு சொன்னால் என்ன பிரயோஜனம் உண்டு –
வார்த்தை வாசி அறிவாரோடே சொன்னால் அன்றோ உனக்கு பிரயோஜனம் உள்ளது –
அவர்கள் ஒன்றுக்கு பத்தாக மர்மத்தில் சொல்லுவார்களே –
அது உனக்கு மிகவும் இனிதாய் இருக்கும் இறே
தண்ணீர் -என்றால் தண்ணீரே கொண்டு வரும்படி பாலைகளாய் இருக்கிற எங்களை
நெருக்கினால் உனக்கு என்ன பலம் உண்டு –
இவர்கள் இப்படி தங்கள் ஈடுபாடு தோற்ற-நலிவு பட்டு தோற்ற –
வார்த்தை சொன்னவாறே வடிவு இட்டு மாறினால் போலே இரட்டித்தது
ஒதமா கடல் வண்ணா —
நம் வடிவிலே துவக்குண்டார்கள் -நாம் செய்தது விலக்க மாட்டார்கள் என்னாச் சிற்றிலை அழிக்கப் புக்கான் –
உன் மணவாட்டிமாரோடு சூழறும்-
உனக்கு நல்லாரோடு சூழறும் கிடாய் இத்தை அழிப்பாய் ஆகில் –
உனக்கு இது அழிக்க வேணுமோ –
புறம்பே எத்தனை இடம் கிடக்கிறது -இவர்களும் அவனுக்கு மர்மம் சொல்லுகிறார்கள் ஆயத்து
ஏக தார வ்ரதனாய் இருக்கிறவனை -உனக்கு எத்தனை பேர் கிடக்கிறது எங்களை ஒழிய -என்கை சால மர்மம் இறே
இப்படி இவர்கள் ஆணை இடச் செய்தேயும் அழிக்கப் புக்கான்
சேதுபந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே—
மிடுக்குக்கு ஈடான பிறப்பை யுடையையுமாய் -பருவம் நிரம்பின பின்பு –
கான வெண்கும் குரங்கும் பரிகரமாகக் -பெரிய திரு மொழி -6-10-6-கொண்டு கடலிலே
இத்தனை மணல் ஒழுக்குப் பட்ட பாடு எல்லாம் அறிதியே
அவ்வோபாதி போராதோ அபலைகளான நாங்கள் இதில் பட்ட வருத்தம்
அவசியம் உனக்கு அழிக்க வேணுமாகில் உன்னுடைய சிற்றிலை போய் அழி என்கிறார்கள்-
—————————————————–
வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்ட மாவிளையோடு வோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்
தொட்டுதைத்து நலியேல் கண்டாய் சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்
கட்டியும் கைத்தாலின்னாமை அறிதியே கடல் வண்ணனே–2-8-
பதவுரை
சுடர் சுக்கரம்–உன்னுடைய பத்தினிகளின் மேல் ஆணை’
கையில் ஏந்தினாய்–திருக் கையில் தரித்திரா நின்றுள்ள கண்ண பிரானே!
கடல் வண்ணனே! -’
வட்டம் வாய்–வட்ட வடிவமான வாயை யுடைய
சிறு தூரிதையோடு–சிறிய பானையோடு
சிறு சுளகும்–சிறிய முச்சிலையும்
மணலும் கொண்டு–மணலையும் கொண்டு வந்து
இட்டமா–இஷ்டப்படி
விளையாடுவோங்களை–விளையாடுகிற எங்களுடைய
சிற்றில்–சிற்றிலை
ஈடழித்து–மறுபடியும் உபயோகப் படாதபடி அழிப்பதனால்
என் பயன்? -’
தொட்டு–கையால் தொட்டும்
உதைத்து–காலால் உதைத்தும்
நலியேல் கண்டாய்–ஹிம்ஸியாதொழி கிடாய்’
கைத்தால்–நெஞ்சு கசத்துப் போனால்
கட்டியும்–கருப்புக் கட்டியும்
இன்னாமை–ருசியாது என்பதை
அறிதியே–அறிவா யன்றோ?
தூதை -பானை
வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு இட்ட மாவிளையோடு வோங்களைச்-
இவற்றினுடைய விசித்திர சந்நிவேசம் இருந்தபடி கண்டாயே
இவற்றைக் கொண்டு எங்களுடைய இச்சைக்கு ஒருவரால் பிரதிஹதி பண்ண ஒண்ணாத படி
விளையாடுகிற எங்களை
சிற்றில் ஈடழித்து என் பயன்-
ஓர் அவயவி ஆக்கிக் காண ஒண்ணாத படி –
மறுமுட்டுப் பெறாதபடி அழிக்கிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு –
இது தானே யன்றோ பிரயோஜனம் என்று வாராத் தொட்டான் –
தொட்டுதைத்து நலியேல் கண்டாய் –
வாராய் -எத்தனை பேரைத் தொட்டு வந்தாய் என்று தெரியாது
நீங்கள் என்னைத் தீண்டுவதே என்னா-சிவிட்கு என்றார்கள் –
ஆகில் சவியுங்கோள் என்னாக் காலாலே உதைத்தான்
அந்த ஸ்பர்சத்தாலே துவளா –நலியேல் -கண்டாய் -என்கிறார்கள் –
என்னுடைய ஸ்பர்சம் உங்களுக்கு நலிவாய் விட்டதோ –
நான் ஈஸ்வரன் அல்லேனோ-என்னா –
சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்-
வைச்வரூப்யம் காட்டினால் போலே திவ்ய ஆயுதங்களைத் தரித்துக் காட்டி
கூராராழி வெண் சங்கு ஏந்தி வாராய் –திருவாய் மொழி -6-9-1–என்று
எல்லாரும் ஆசைப் பட்டு இருக்கிற இது உங்களுக்குப் பொல்லாதோ -என்றான் –
அழகிது -ஆனாலும்
சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்-கட்டியும் கைத்தாலின்னாமை அறிதியே கடல் வண்ணனே-–
கருப்புக் கட்டியே யானாலும் நெஞ்சு கைத்தால் இன்னது என்னும் இடம் அறிதியே –கடல் வண்ணனே –
கடல் வண்ணன் -என்கிற இவ் விசேஷணம் இட்டதுக்கு கருத்து –
கண்டு விடுமதுக்கு மேற்பட செய்யலாவது இல்லை
ஒரு கை அள்ளி முகத்தைக் கழுவுதல் -குடித்தல் -செய்ய ஒண்ணாதே கடலில் நீர் –
அப்படியே யன்றோ நீ -என்கை –
——————————————————–
முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன் முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மைப்
பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் –2-9-
பதவுரை
கோவிந்தா கண்ணபிரானே!
முற்ற மண் இடம் தாவி–(ஒரு திருவடியினால்) பூ மண்டலம் முழுவதையும் தாவி யளந்து
விண் உற நீண்டு–பரமபதத்தளவு ஓங்கி
அளந்து கொண்டாய்–(மற்றொரு திருவடியினால் மேலுலகங்களை) அளந்து கொண்டவனே!
முற்றத்தூடு–(நாங்கள் ஏகாந்தமாக விளையாடுகிற) முற்றத்திலே
புகுந்து–நுழைந்து
நின் முகம் காட்டி–உனது திரு முகத்தை (எங்களுக்குக்) காண்பித்து
புன் முறுவல் செய்து–புன் சிரிப்புச் சிரித்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும்–எங்கள் சிற்றிலையும் நெஞ்சையும்
சிதைக்கக் கடவையோ–அழிக்கக் கடவாயோ?
(அவ்வளவோடும் நில்லாமல்)-
எம்மைப் பற்றி–எங்களோடே
மெய் பிணக்கு இட்டக்கால்–கலவியும் ப்ரவருத்தமானால்
இந்த பக்கம் நின்றவர்–அருகில் நிற்பவர்கள்
என் சொல்லார்–என்ன சொல்ல மாட்டார்கள்?
மெய்ப் பிணக்கிட்டக்கால்-அணைத்துக் கொண்டால்
முற்றத்தூடு புகுந்து
இவன் கோலுகிறபடி சாலப் பொல்லாதாய் இருந்தது –
இவன் கண் வட்டத்தில் நிற்கில் தீம்பு செய்கை தவிரான் –
அதில் காட்டில் மறைய நிற்கை நன்று -என்று எல்லாரும் திரண்டு
சமேத்ய மந்த்ரயித்வா து சர்வே சங்கத புத்தய–ஊசுஸ்ச மநஸா ஜ்ஞாத்வா வ்ருத்தம்
தசரதம் ந்ருபம் -அயோத்யா -2-20-என்கிறபடியே
சமயம் பண்ணி –
அது செய்யும் இடத்து எல்லாரும் திரளப் போவோமாகில் இவன் அடி ஒற்றிக் கொண்டு வரும் -என்று பார்த்து
ஒருவர் ஒருவராகப் போய்
பஞ்ச லஷம் குடியில் உள்ளார் எல்லாரையும் கொள்வதொரு முற்றத்திலே புக்கு
கதவுகளையும் -தலை வாசல் தொடங்கி அடைத்து கணையங்களையும் ஏறிட்டு
இவனுக்கு புகுர வழி இல்லாத படி பண்ணிக் கொண்டு இருந்தார்கள் –
இவனுக்கு புகுருகைக்கு வழி தேட வேண்டா இறே
இட்ட இலச்சினை அழியாது இருக்க வெண்ணெய் குடி போமா போலே
நினைவு இன்றிக்கே இருக்க தாங்கள் அவன் கையிலே அபஹ்ருதைகள் ஆனார்கள்
இம் முற்றத்திலே தங்கள் திரளின் நடுவில் வந்து நிற்கக் கண்டார்கள்
நாம் இவனை மறைத்துப் போந்தோம் என்று இருந்தோம் -அழகிதாய் இருந்தது
இவன் நமக்கு முற்பட்டுக் கொடு நின்றான் -என் செய்தோம் ஆனோம்
இவன் கையிலே அகப்பட்டோம் –
இனி இவனுக்கு தென்பட்டோம் ஆகாமல் கழியும் விரகு ஏதோ என்று பார்த்து
ஒரு போக்குக் காணாமல் லஜ்ஜித்து கவிழ் தலையிட்டார்கள்
நின் முகம் காட்டிப் –
எல்லாரையும் தனித் தனியே முகத்தை எடுத்து –
ஏன் வந்தோம் இறே பிற்பட்டோமே -கூட வரப் பெற்றிலோமே –
எவ்வழியே வந்தி கோள்-கால்கள் நொந்தது இறே -என்றால் போலே சிலவற்றைச் சொன்னான்
நம் நினைவு தப்புவதே -என்று தங்கள் தோல்வியை அனுசந்தித்து லஜ்ஜித்தார்கள்
புன் முறுவல் செய்து-
அத்தை அறிந்து -ஸ்மிதம் பண்ணினான் –
நாம் இவனுக்குத் தோற்று லஜ்ஜித்தோம் ஆனமை அவன் அறியல் ஆகாது –
புறம்பே அந்ய பரர ஆனோம் ஆவோம்
என்று அங்கேயே இருந்து சிற்றில் இழைக்கப் புக்கார்கள் –
இங்கேயே நம் சந்நிதியிலே இருந்து அந்ய பரதை பண்ணுவதே -என்று சிவிட்கு என்னா
நினைக்கைக்கு நெஞ்சும் கூடாதே –
வ்யாபரிக்கைக்கு கையும் கூடாத படியாகச் சிலவற்றைச் செய்தான் –
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா
உனக்குத் தான் பசு மேய்க்கை அன்றோ பணி-
பெண்களை நலிகையும் பணியோ
சவாசனமாக அழிக்கக் கடவையோ –
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய்
ஒன்றை வாங்கப் புக்கால் கொடுத்தவர்களை குழியிலே தள்ளுமவன் அன்றோ ஷணத்திலே –
இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுக்குமவன்-பெரியாழ்வார் திருமொழி -4-9-7- இறே –
இனி என் பழி கேட்பது -கெட்டோம் -இதுக்கு மேல் கேட்பது இல்லை இறே -என்ன
பரியட்டங்களையும் கழித்து -பெண்களுக்கு உடம்பு கொண்டு -தாய்மார் முன்பு நிற்க ஒண்ணாத படி பண்ணினான் –
எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் —
உங்களுக்கு இது சால அசஹ்யமாய் இருந்ததோ –
நம்மோடு அணைகை பொல்லாததோ –
எத்தனையேனும் யோகிகளும் நம் உடம்புடன் அணைய அன்றோ ஆசைப் படுவது –
உங்களுக்குப் பொல்லாததோ -என்ன –
எங்களுக்கும் அழகிது -ஆனாலும்
இந்தப் பக்கம் நின்றவர் -என் சொல்லார் –
அவர்கள் தோற்றிற்றுச் சொல்லார்களோ –
இத்தால் சம்ஸ்லேஷம் பிரவ்ருத்தமான படி சொல்கிறது –
ஆண் பெண்ணாய் வார்த்தை-ஒரு நான்று தடி பிணக்கே -திருவாய் மொழி -6-2-7- என்றும்
பந்தும் கழலும் தந்து போகு நம்பி -திருவாய்மொழி -6-2-1–என்றும் –
என் சினம் தீர்வன் நானே -பெருமாள் திருமொழி -6-8- என்றும்
வன்மையுடன் சொல்வது போல்வன சொல்லிற்றாகை அன்றிக்கே
-பெண் தனக்கே -அதுக்கு மேலே -ஒரு மென்மை பிறந்து
வார்த்தை சொல்லுகிறது என்னும் இடம் தோற்றி இருக்கிறபடி காணும் -என்று
நம் பிள்ளை தாமும் வித்தராய் அருளிச் செய்து அருளின வார்த்தை –
இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் -என்று தனக்கு சம்ஸ்லேஷத்தில் உண்டான இசைவை
மார்த்தவம் தோற்றச் சொல்லுவதே -என்றபடி –
————————————————————
சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே–2-10-
சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று-
கதா நு சாறு பிம்போஷ்டம் தஸ்யா பத்ம மிவாநனம்-
ஈஷதுன் நம்ய பாஸ்யாமி ரசாய நமிவோத்தமம் -யுத்த -5-13-என்கிறபடியே
பருவம் நிரம்பினவளோடே இத் தீம்புகள் செய்தால் அன்றோ உனக்கு பிரயோஜனம் உள்ளது –
உன் நினைவு அறிந்து பரிமாறுகைக்கு அளவில்லாத
எங்கள் சிற்றிலை வந்து சிதையாதே கொள -என்று
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை-
எல்லாரும் திரளும் இடத்தில்
மறைக்க வேண்டுமவை மறைக்கை அறியாதே பரியட்டங்களை இட்டு வைத்து –
ஸ்வைரமாக விளையாடுகிற பருவம் நிரம்பாத இடைப் பெண்கள் உடைய நிரம்பா மென் சொல்லை –
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன்
வாயால் உச்சரிப்பது அடங்கலும் வேத சப்தம் ஆகையாலே
செய்வது அடங்கலும் வைதிக கிரியையாய் இருக்கிற
பிராமணர் வர்த்திக்கிற ஸ்ரீ வில்லி புத்தூருக்கு பிரதானரான பெரியாழ்வார் –
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே-
திரு மகளுடைய -பகவத் அனுபவம் -வாச க்ரம வர்த்தித்வாத் –
வழிந்து புறப்பட்ட சொல்லை அப்யசிக்க வல்லவர்கள் –
அணைத்த அநந்தரம்-
இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் –என்னுதல் –
அன்றிக்கே –
காமன் காலிலே விழுதல் -செய்ய வேண்டாதே –
அணைத்த அநந்தரம் –
அருகு நிற்பாரும் எல்லாம்
பணியா அமரரான-திருவாய்மொழி -8-3-6-
நித்ய சித்தராய் யாம்படியான தேசத்திலே போய்ப் புகப் பெறுவார்கள் –
———————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply