ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் 4- அர்த்த பஞ்சக அதிகாரம் —ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

———————————————————————

அதிகாரம் 4- அர்த்த பஞ்சக அதிகாரம்

ஆதௌ ப்ராப்யம் பரமம் அனதம் ப்ராப்த்ரு ரூபம் ச மாதௌ
இஷ்ட உபாயம் து அயனனமசோ ரீர்ப்சிதார்த்தம் சதுர்த்யாம்
தத் வ்யாதாதம் மமக்ருதிகிரி வ்யஜ்ஜயந்தம் மனும் தம்
தத் ப்ராப்யம் ச த்வம் அபி விதன் சம்மத சர்வேதீ –

(1.ப்ரணவத்திலும் ”அ ” உள்ளது; அஷ்டாக்ஷரத்தில் , நாராயண என்பதிலும் ”அ ” உள்ளது. இவற்றின் மூலமாக,
குற்றமே இல்லாததும், மிக மிக உயர்ந்ததும், அடையப்படவேண்டிய பொருளாக உள்ளதும் , இருப்பது ”பகவான் ” என்று கூறப்பட்டது.
நாராயணாய என்பதில் உள்ள நான்காம் வேற்றுமை அடைய ஆசைப்படும் பகவானைச் சொல்லிற்று.
அம்பஸ்ய பாரே புவனஸ்ய மத்யே —-” என்று மஹா நாராயண உபநிஷத்
கம்பநாட்டாழ்வார், தனது ”இராம காதை ” யை”உ” லகம் யாவையும் தாமுளவாக்கலும் என்று தொடங்கி,பெரிய பிராட்டியை முன்னிறுத்துகிறார்
2. நம என்கிற பதத்தில் உள்ள ”ம ” என்கிற அக்ஷரத்தின் மூலமாக ,பகவானை அடையவேண்டிய ஜீவாத்மாவின் ஸ்வரூபம் கூறப்பட்டது.
3.நாராயணாய என்பதில் உள்ள, ”அயநம் ” என்பதன் மூலமாக,பகவானை அடையும், ஸித்தோபாயம் கூறப்பட்டது.
4. நம என்பதன் மூலமாக, இப்படிப்பட்ட உபாயத்துக்கு வேண்டிய முக்கிய அங்கமான சரணாகதி (ஸாத்யோபாயம் )கூறப்பட்டது.
5.”நம ” என்பதில் உள்ள ”ம ” என்கிற எழுத்து, பகவானை அடையத் தடையாக உள்ள ”மமகாரத்தைச் சொல்லிற்று .
மமகாரம் என்றால், நான், என்னுடையது என்கிற எண்ணம்–சிந்தனை–
இங்ஙனம் 5 உன்னத விஷயங்களை விளக்குகின்ற அஷ்டாக்ஷரத்தையும் இதைப்போல , த்வயம் , சரம ச்லோகம்
இவற்றையும் தெளிவாக அறிபவன் எல்லாவற்றையும் அறிந்தவன் ஆகிறான்.)

ஐந்து அர்த்தங்களைக் கூறுவதற்கும் ஆறு அர்த்தங்களைக் கூறுவதற்கும் வேறுபாடு இல்லை –
நாராயணாதி சப்தங்களிலே விவஷிதமான சம்பந்த விசேஷத்தை சித்தாந்தத்துக்கு தளமாக்கி —
இத்தை அனுபந்தித்து இருக்கும் அர்த்த பஞ்சகத்தை சிலர் விசாரித்தார்கள் –
இச் சம்பந்தத்தோடு கூட ஷட் அர்த்தங்கள் என்று சிலர் அனுசந்தித்தார்கள் –
(அர்த்த பஞ்சக ஞானமும் -சரீராத்மா பாவ ஞானத்துடன் சேர்ந்து ஆறு அர்த்தங்கள்-என்றவாறு – )

இச் சம்பந்தம் போலே முமுஷூவுக்கு விசேஷித்து அறிய வேண்டுவதாக சேர்த்த அர்த்த பஞ்சகம் ஏது என்னில்
ப்ராப்யச்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச்ச பிரத்யகாத்மந
ப்ராப்த்யுபாய பலம் சஏவ ததா ப்ராப்தி விரோதி ச
வதந்தி சகலா வேதா ச இதிஹாச புராணக–ஹாரீத ஸம்ஹிதை-

( ஸ்வரூபம் குணம் விக்ரஹம் விபூதிகளோடே விசிஷ்டா பர ப்ரஹ்மத்தை அறிய வேண்டுமே –
அதில் பிரதமத்தில் ஸ்வரூபம் பற்றி பிராமண பூர்வகமாக அருளிச் செய்கிறார் -)

இவற்றில் பிராப்யமான ப்ரஹ்மத்தின் உடைய ஸ்வரூபம்
திரு மந்த்ரத்தில் பிரதம அஷரத்திலும்
நாராயண சப்தத்திலும்
த்வயத்தில் ச விசேஷணங்களான நாராயண சப்தங்களிலும்
சரம ஸ்லோகத்தில் மாம் அஹம் என்கிற பதங்களிலும்
அனுசந்தேயம் –

அவ்விடங்களில் அனுசந்திக்கும் போது –
1-ஸ்ரீரியா ஸார்த்தம் ஜகத்பதி -லைங்க புராணம்-
(உலகங்களுக்குப் பதியான நாராயணன், ஸ்ரீ மஹாலக்ஷ்மியுடன் வைகுண்டத்தில் இருக்கிறான்)
2-ஏஷ நாராயண -ஸ்ரீ மான் – -ஹரிவம்ஸம் (113–62 )
(இந்த ஸ்ரீமந் நாராயணன் எப்போதும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸஹிதமாகவே இருக்கிறான்)
3-பவான் நாராயணோ தேவதா ஸ்ரீ மான் சக்ரதரோ விபு –யுத்த காண்டம் (6– 120–13 )
(நீயே மஹாலக்ஷ்மியின் நாயகனும் சக்ரதாரியும் எல்லா உலகங்களுக்கும் எஜமானனுமான நாராயணன் ஆவாய்)
4-ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ –யுத்த காண்டம் (6– 114–15 )
(ஸ்ரீ வத்ஸம் என்கிற மறுவை தன்னுடைய திருமார்பில் தரித்தவரும், எப்போதும் பெரிய பிராட்டியாருடன் கூடியிருப்பவரும் )
5-விஷ்ணோ ஸ்ரீர அநபாயினி –விஷ்ணு புராணம் ( 1–18–17 )
(மஹாலக்ஷ்மி எம்பெருமானை விட்டுஎப்போதும் பிரியாதவள்)

6-சீதா சமஷம் காகுத்ஸ்தம் இதம் வசனம் அப்ரவீத் -ஸ்ரீமத் ராமாயணம் ( 3–15–6 )
(லக்ஷ்மணன், ஸீதையின் முன்பாக, ராமனிடம் இந்த வார்த்தையைச் சொன்னான்.)
7-சீதாமுவாசாதியசா ராகவம் ச மஹாவ்ரதம் -ஸ்ரீமத் ராமாயணம் ( 2–31–2 )
(தன்னைச் சரணம் என்று அடைந்தவர்களைக் காப்பேன் என்கிற ஸங்கல்பத்தை உடைய
ராமனிடமும், ஸீதையிடமும் ,லக்ஷ்மணன் சொன்னான்)
8-அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராஷசீ கணம் ஸ்ரீமத் ராமாயணம் ( 5–58–87 )
(-ராக்ஷஸிகளின்கூட்டத்தை, ராமனிடமிருந்து காப்பாற்றும் சக்தி ,ஸீதையிடம் உள்ளது.)
9-பவேயம் சரணம் ஹி வ -ஸ்ரீமத் ராமாயணம் ( 5–58–90-)
(ஹே ராக்ஷஸிகளே —உங்களுக்கு நான் சரணம் புகுகின்றவள் ஆவேன் –( சரணம் என்றுஅடைந்த ராக்ஷஸிகளைக் காப்பேன் ))
10-பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா- ஸ்ரீமத் ராமாயணம் (2–31–27 )
(ஹே ராமா, இந்த மலை அடிவாரத்தில் ஸீதையுடன் சுகமாக இருப்பீராக —நீர் விழித்து இருந்தாலும், தூங்கினாலும்
உங்களுக்கு எல்லாக் கைங்கர்யங்களையும் ,நான் செய்வேன்)

11-தயா சஹாசீனம் அநந்த போகினி —
(தயா ஸஹாஸீநமநந்தபோகிநி ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைகதாமநி |
பணாமணி வ்ராதமயூகமண்டல ப்ரகாசமாநோதர திவ்ய தாமநி ||–ஸ்தோத்ர ரத்னம் (39 )–ஸ்ரீ ஆளவந்தார்
தயாஸஹ –பெரிய பிராட்டியுடன் — வீற்றிருக்கிறான் பகவான் எங்கு வீற்றிருக்கிறான்–சிறந்த ஜ்ஞானம் பலம்
என்பனவற்றுக்கு முக்கிய இடமாய்,தன்னுடைய படங்களிலிருக்கும் ரத்னக்கூட்டங்களின் ஒளிவட்டத்தாலே
உள்பிரதேசமெல்லாம், பிரகாசமாக இருப்பதான அப்ராக்ருதமான மணிமண்டபத்தை உடையவனுமான
திருவனந்தாழ்வான் என்கிற நாகணைமேல் வீற்றிருக்கிறான்
பெரிய பிராட்டி ,திவ்யமஹிஷி என்று ஸேவிப்போர் அறியும்வண்ணம் வீற்றிருக்கிறான்.)

12-காந்தஸ்தே புருஷோத்தம -(சதுச்லோகீ –ஸ்ரீ ஆளவந்தார் ( 1 )
(காந்தஸ் தே புருஷோத்தம: பணிபதி : ஸய்யாஸனம் வாஹனம்
வேதாத்மா விஹகேச்வரோ யவநிகா , மாயா ஜகன்மோஹிநீ |
ப்ரஹ்மேசாதி ஸுரவ்ரஜ :ஸதயித : த்வத்தாஸதாஸீகண :
ச்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம : கதம் த்வாம் வயம் ||

ஹே –பகவதீ —புருஷர்களில் உத்தமனாகிய புருஷோத்தமனாகிய பகவான் , உனக்குக் காந்தன்; ப்ரியன் .
கைங்கர்யபதியான ஆதிசேஷன் சயனமும் ,ஆஸனமும் ஆகிறான்.
வேதஸ்வரூபியானகருடனும் , உனக்கு வாஹனம் ;ஆஸனம் .
ஹே –ஜகன்மோஹினீ –உலகில் உள்ள ஜீவாத்மாக்களுக்கு, விபரீத ஜ்ஞானத்தைக் கொடுக்கும் மூலப்ரக்ருதி என்கிற தத்வம்
உனக்கு சேஷம்—-அதாவது அடிமை. இது திரைபோல் இருக்கிறது. ஜீவர்கள் உன்னைத் தரிசிக்கவிட்டாமல் தடுக்கிறது.
ப்ரஹ்மா, ருத்ரன் முதலான தேவர்கள் ,அவர்கள் மனைவியரும் உனக்கு ”தாஸத்வம் ” செய்யும் ஸ்த்ரீகளுடன் சேர்ந்து ,
அடிமைக்கூட்டமாக இருக்கிறார்கள்.
இதில், நீ ”ச்ரீ ” என்று சொல்லப்படுகிறாய்.நாங்கள் யாராக இருந்தாலும்,உன் பெருமைகளைத் தெளிவாகச் சொல்ல இயலாது.
பெரியபிராட்டியார், தானே விரும்பி, எம்பெருமானுக்கு சேஷமானதையும், நித்ய விபூதி, லீலா விபூதி என்கிற மற்ற எல்லாவற்றிலும்
அவள், எம்பெருமானுடன் சேர்ந்து சேஷியாகிறாள்)

13-ஸ்வ பரிசரண போகை-ஸ்ரீ மதி பிரியமாணே -ஆத்ம ஸித்தி ( மங்கள ச்லோகம் ) ஸ்ரீ ஆளவந்தார்
(எம்பெருமானுடைய கைங்கர்யங்களைப் போகமாக எண்ணுகிற நித்யஸூரிகளால் சந்தோஷப்படுத்தப்பட்ட
பெரிய பிராட்டியுடன் கூடிய பகவானிடத்தில் பக்தி உண்டாக வேணும்)

14-ஸ்ரீ மதே நிர்மலானந்தோ தன்வதே விஷ்ணவே நம-வேதாந்த ஸாரம் –மங்கள ச்லோகம் (ஸ்ரீ உடையவர் )
(அசேஷ சிதசித் விஷ்ணு சேஷிநே சேஷஸாயிநே
நிர்மலாநந்த கல்யாண நிதயே விஷ்ணவே நம :
மஹாலக்ஷ்மியுடன் கூடியவனும் கெட்ட குணங்களே இல்லாமல் ஆனந்தக் கடல் போலிருப்பவனும் ஆகிய ஸ்ரீ விஷ்ணுவுக்கு நமஸ்காரம் .
( இது 32 அக்ஷரங்களைக் கொண்டது என்றும் , 32 ப்ருஹ்ம வித்யைகளைக் குறிக்கிறது என்றும்,
எல்ல வேதங்களும் இந்த 32 அக்ஷரங்களில்அடக்கம் என்றும் சொல்வர் ))

15-ஸ்ரீய காந்த அனந்தோ வரகுண கணை காஸ்பத வபு -வேதாந்த தீபம் –மங்கள ச்லோகம்–( ஸ்ரீ உடையவர் )
(மஹாலக்ஷ்மிக்குப் ப்ரியமானவனும் ,எங்கும் நிறைந்தவனும், எல்லையில்லாக் கல்யாண குணங்களுக்கு ஒரே இடமான
திருமேனியை உடையவனுமான எம்பெருமான்—)

16-ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸோ-ஸ்ரீபாஷ்யம் –மங்கள ச்லோகம்—ஸ்ரீ உடையவர்
(மஹாலக்ஷ்மிக்கு இருப்பிடமான பரப்ரஹ்மத்தினிடத்தில்)

17-ஸ்ரீ யபதிர் நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாநானந்த ஞானானந்த ஸ்வரூப -ஸ்ரீ கீதா பாஷ்யம் —ஸ்ரீ உடையவர் —
(ஸ்ரீ லக்ஷ்மிபதியான எம்பெருமான், எல்லாக் கெட்ட குணங்களுக்கும்விரோதியாய், எல்ல நற்குணங்களுக்கும் ஒரே இருப்பிடமாய்,
தேசம், காலம், வஸ்து இவைகளால் அளவில்லா ஜ்ஞானமும் ஆனந்தமுமான ஸ்வரூபத்தை உடையவன்.)

18-நீயும் திருமகளும் நின்றாயால் -( 86 ) பொய்கை ஆழ்வார்
(நீயும் திருமகளும் நின்றாயால், குன்றெடுத்து
பாயும் பனி மறைத்த பண்பாளா —வாசல்
கடைகழியா உள்புகாக் காமர்பூங்கோவல்
இடைகழியே பற்றி இனி .
குன்றெடுத்து மழையைத் தடுத்து, ஆயர்களையும் கோக்களையும் காத்தவனே—நீ திருமகளுடன் இடைகழியில் நின்றாய்– —
என்னிடம் உள்ள அன்பால் அங்கேயே நின்றாய்— இடைகழியை விட்டு வெளியேயும் வரவில்லை; உள்ளேயும் புகவில்லை.
எங்களுடன் கலந்த மகிழ்ச்சியால் இடைகழியிலேயே நின்றாய்.)

19-ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப -திருவாய்மொழி ( 4–9–10 )
(கண்டு கேட்டுற்று மோந்து உண்டுழலு மைங்கருவி
கண்ட வின்பம் தெரிவரிய வளவில்லாச் சிற்றின்பம்
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்
கண்ட சதிர் கண்டொழிந்தேன் அடைந்தே னுன் திருவடியே
அழகிய முன்கைவளைகளை உடைய பெரியபிராட்டியும் , நாராயணனான நீயும் ,
நிலாநிற்ப—கைங்கர்யம் பெறுவதற்குச் சேஷியாய் நிலைத்திருக்க)

20-கோலத் திரு மா மகளோடு உன்னை –திருவாய்மொழி ( 6–9–3 )
(ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப்பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே
கோலத்திருமாமகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ)

21-நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் -திருவாய்மொழி ( 9–2–1 )
(பண்டைநாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு, நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடிகுடி வழிவந்து ஆட்செய்யும்
தொண்டரோர்க்கருளிச் சோதிவாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தென்திரைப் பொருநல் தண்பணை சூழ்ந்த திருப்புளிங்குடிக் கிடந்தானே
தேவரீருடைய கருணையையும் தாமரையில் வஸிக்கும் பிராட்டியின் கருணையையும் கொண்டு,
தேவரீருடைய கோயிலைச் சுத்தப்படுத்தி- கைங்கர்யங்கள் செய்து )

22-உன் தாமரை மங்கையும் நீயும் -திருவாய்மொழி ( 9–2–3 )
(கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி ? உன் திருவுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழிவரும் தொண்டரோர்க்கருளி
தடங்கொள் தாமரை கண்விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடங்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய் திருப்புளிங்குடிக் கிடந்தானே
உனக்குத் தகுந்த திவ்ய மஹிஷியாய் தாமரைப் பூவிலிருக்கும்பிராட்டியும் , நீயும் (மூன்று உலகங்களும் கைங்கர்யம் செய்யுமாறு
இருந்து அருள வேண்டும்)

23-அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா -திருவாய்மொழி ( 6–10–10 )
(அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பா !
நிகரில் புகழாய் ! உலகம் மூன்றுடையாய் ! என்னை ஆள்வானே !
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே !
புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
ஒரு க்ஷண நேரம்கூட உன்னைவிட்டுப் பிரியச் சக்தியில்லையென்று தாமரையில் இருக்கும் பிராட்டி
வஸிக்கின்ற திருமார்பை உடையவனே)

24-உணர் முழு நலம் -திருவாய்மொழி (1–1–2 )
(மனனக மலமற மலர்மிசை யெழுதரும்
மனனுணர் வளவிலன் பொறியுணர்வவையிலன்
இனனுணர் முழுநலம் எதிர் நிகழ் கழிவினும்
இனனிலனெனனுயிர் மிகுநரையிலனே
எம்பெருமான், முழுவதும் ஞான ஸ்வரூபன் மற்றும் ஆனந்த ஸ்வரூபன்)

25-நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் –பெரிய திருமொழி ( 3–8–1 )-
(நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் !
நரநாரணனே ! கருமாமுகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாயென நின்று
இமையோர் பரவும் இடம் , எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசை பாட மாடே
களிவண்டுமிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர்
மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே
நாசமல்லாததாயும் , ஸ்வயம்ப்ரகாசமாயும் , தேசம், காலம், வஸ்து இவைகளின் அளவுகளில் இல்லாததாயும்
ஸ்வரூபத்தை உடையவனே)

என்றும் பிரமாணங்கள் சொல்லுகிறபடியே

சர்வ பிரகாரத்தாலும்
சர்வ அவஸ்தைகளிலும்
சஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியாரோடு பிரிவில்லாத முழு நலமான
அநந்த ஞானானந்த ஸ்வரூபமாக அனுசந்திக்க வேணும் –

(இத்தால் அவன் ஸ்வரூபம் போலே பிராட்டி ஸ்வரூபமும் ஞானாநந்தம் என்றதாயிற்று -)

இப்படி
சமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண்வாக்யம் பரமம் பதம்-ஸ்ரீ விஷ்ணு புராண-( 1–22– 53 ) -என்றும் –
(விஷ்ணு என்கிற திருநாமம் கொண்ட எம்பெருமானின் ஸ்வரூபம் தோஷங்களே இல்லாதது.)
பர பராணாம் சகலா ந யத்ர க்லேசாதயஸ் சந்தி பராவரேச -ஸ்ரீ விஷ்ணு புராண ( 6–5–85 )-என்கிறபடியே
(பகவான் , உயர்ந்தவைகளை விட மிகவும் உயர்ந்தவன்;அவனிடம்,க்லேசங்கள் முதலான தோஷங்களும் கிடையாது.)
ஹேய ப்ரத்ய நீகமாக அனுசந்தேயம் –

—-

ஈச்வரன்,அநந்த கல்யாண குணங்களை உடையவன்-

1-தைர்யுக்த ஸ்ரூயதாம் நர –ஸ்ரீமத் ராமாயணம் ( 1–1–7 )
(இப்படிப்பட்ட குணங்கள் அனைத்தையும் கொண்டவரைச் சொல்கிறேன்—கேட்பீராக)
2-தமேவம் குண சம்பன்னம் –ஸ்ரீமத் ராமாயணம் ( 2–2–48 )
(இப்படி குணங்கள் நிறைந்த அந்த ராமனை–)
3-ஜ்யேஷ்டம் ஸ்ரேஷ்ட குணைர்யுக்தம் -ஸ்ரீமத் ராமாயணம் (1–1–20 )
(மூத்தவனும், இப்படி மிக உயர்ந்த குணங்களை உடைய ராமனை)
4-ஏவம் ஸ்ரேஷ்ட குணைர்யுக்த–ஸ்ரீமத் ராமாயணம்– 2–1–31
(இப்படி , மிகவும் உன்னதமான
குணங்கள் கொண்ட ராமனை)
5-குணைர் விருருசே ராம —
(கல்யாண குணங்கள் மூலமாக ராமன் விளங்கினான்)
6-தமேவம் குண சம்பன்னம் அப்ரத த்ருஷ்டி பராக்கிரம –
(இப்படி, எல்லாக் கல்யாண குணங்களின் இருப்பிடமாகவும், யாராலும் வெல்லப்படாதவனுமான உள்ள ராமன்)
7-பஹவோ ந்ருப கல்யாண குணா –புத்ரஸ்ய சந்தி தே —
(தசரதா , உன் புத்திரனான ராமனுக்குப் பல உயர்ந்த குணங்கள் உள்ளன.)
8-ஆன்ரு சம்சய மனுக்ரோச -ஸ்ருதம் சீலம் தமச்சம-ராகவம் ஸோபயந்த்யேதே ஷட் குணா -புருஷோத்தமம்
(தன்னைச் சரணம் என்று அடைந்தவர்களைக் காப்பாற்றும் தன்மை (குணம் ) அளப்பரிய கருணை,
வேதங்களின் –சாஸ்த்ரங்களின் பொருளை உணர்ந்திருக்கும் தன்மை, தாழ்ந்தவர்களிடமும் சமமாகப் பழகும் தன்மை,
மனத்தை அடக்கும் திறன், இந்த்ரிய நிக்ரஹம்– அதாவது,புலனடக்கம் –ஆகிய ஆறு குணங்களும்
புருஷ ச்ரேஷ்டனான ராமனை அலங்கரிக்கின்றன)
9-விதித – ச ஹி தர்மஜ்ஞ-சரணாகத வத்சல
(எல்லாத் தர்மங்களையும் அறிந்த ராமன், தன்னிடம் சரணம்அடைந்தவர்களிடம் மிகுந்த அன்பு உடையவன்
என்று எல்லோராலும் அறியப்பட்டவன் அல்லவா)
10-சரண்யம் சரண்யம் ச த்வாம் ஆஹூர்திவ்யா மஹர்ஷய–
(ராமா —-நீயே சரணாகத ரக்ஷகன் என்றும், சரணம் என்று அடைபவர்களுக்கு ஏற்றவன் என்றும்,
சரணம் என்று அடைந்தவர்களைக் காப்பவன் என்றும், ஸநகாதி மஹரிஷிகள் கூறுகின்றனர்_)
11-நிவாஸ வ்ருஷ–சாதூனாம் ஆபன்னாம் பரா கதி —
(ஸாதுக்களுக்கு , நிழல் கொடுக்கும் கற்பக மரம் ; ஆபத்தில் உள்ளவர்கள் அடையவேண்டிய உயர்ந்த கதி)
12-தேஜோ பலை ஐஸ்வர்ய மஹாவபோதஸ் வீர்ய சக்த்யாதி குணைகராசி-விஷ்ணு புராணம்
(மிக உயர்ந்த தேஜஸ், பலம், ஐச்வர்யம் , ஜ்ஞானம், வீர்யம், சக்தி,இவை முதலான குணங்கள் யாவும்
ஒன்று சேர்ந்து இருக்கும் இடம்—ஷாட்குண்ய பரிபூர்ணன்)

13-சர்வ பூதாத்மா பூதச்ய விஷ்ணோ –கோ வேதிதும் குணான் -ப்ரஹ்ம புராணம்
(எல்லாவற்றுக்கும் ஆத்மாவாக இருக்கிற விஷ்ணுவின் குணங்களை( ருத்ரனையும் ,பார்வதியையும் காட்டில் ), எவன் அறியவல்லவன் !)

14-யதா ரத்னா நி ஜலதே புத்தராக ததா குணாச்ச தேவஸ்ய த்வசங்க்யேயோ ஹி சக்ரிணா-வாமன புராணம்–
(ஸமுத்ரத்தில் உள்ள ரத்னக் கற்களைக் கணக்கிட இயலாது;அதைப்போல , சக்ரத்தை ஏந்திய எம்பெருமானின் குணங்களைக் கணக்கிட இயலாது.)

15-வர்ணாயு தைர்யச்ய குணா ந சக்யா வக்தும் சமேதைரபி சர்வ தேவை –மஹாபாரதம் —
( எல்லாத் தேவர்களும் ஒன்றுகூடி, இருந்து பலப் பதினாயிரம் வருடங்கள் சொன்னாலும்,அவனது குணங்களை முழுமையாகக் கூறிவிட முடியாது)

16-சதுர்முக யுர்யதி கோடி வக்த்ரோ பவேன் நர -க்வாபி விசுத்த சேதா-ச தே குணா நாமயுதைதை கமம்சம் வதேன்ன வா தேவவர ப்ரசீத -வராஹ புராணம் —
(ப்ரஹ்மாவின் ஆயுஸ்ஸும் – பல ஆயிரக்கணக்கான வாய்களும், மிகவும் சுத்தமான மனமும் உள்ள ஒருவன் எங்கேயாவது இருந்து, அவன்,
உன்னுடைய குணங்களின் பதினாறாயிரத்தின் ஒரு பாகத்தையாவது கூற முடியுமோ ? முடியாதோ ?( முடியாது என்பது தேற்றம் ))

17-தவானந்த குணஸ் யாபி ஷடேவ பரதமே குணா -யைஸ்த்வயேவ ஜகத் குஷௌ அன்யே அப்யந்தர் நிவேசிதா
(நீ ,கணக்கற்ற குணங்களை உடையவன்;ஆனாலும், ஜ்ஞானம் , பலம், ஐச்வர்யம் ,வீர்யம்,சக்தி,தேஜஸ் என்கிற
ஆறு குணங்கள் முக்யமானவை .இவ்வுலகை , நீ, வயிற்றில் வைத்திருப்பதைப்போல , இந்த ஆறு குணங்களும் மற்ற
குணங்களைத் தங்களுக்குள் அடக்கிக் கொண்டிருக்கின்றன.)

18-இஷூஷயான் நிவர்த்தந்தே நாந்தரிஷ ஷிதி ஷயாத் மதி ஷயான் நிவர்த்தந்தே ந கோவிந்த குண ஷ்யாத்-
(ஆகாசம் முழுவதும் பாணங்களால் நிரப்பவேண்டும் என்று அம்புகளைப் போடும் சிலர், தங்களிடம் பாணங்கள்
தீர்ந்து விடுவதால், ஓய்ந்து போகிறார்களேயன்றி ஆகாசம் , நிரம்புவதால் அல்ல. இதைப்போல,முழுவதும்
சொல்ல புத்தியின் ஆற்றல் இல்லாதவர்கள் கோவிந்தனுடைய குணங்களை சொல்லி ஓய்ந்து போகிறார்களேயன்றி ,
குணங்கள் யாவையும் சொல்லி முடிந்துவிட்டதால் அல்ல)

19-வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை யுடையாய் –
(மணந்த பேராயா ! மாயத்தால் முழுதும் வல்வினையேனையீர்கின்ற
குணங்களையுடையாய் ! அசுரர் வன்கையர் கூற்றமே 1கொடியபுள்ளுயர்த்தாய் !
பணங்களாயிரமு (மு )டைய பைந்நாகப் பள்ளியாய் !பாற்கடல் சேர்ப்பா
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீதானே)

20-உயர்வற உயர் நலம் உடையவன் என்கிறபடியே —
(உயர்வற வுயர்நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே)

ப்ராப்யத்வ ப்ராபகத்வ உபய உக்தங்களான குணங்களாலே விசிஷ்டமாக அனுசந்தேயம் —
(ப்ராப்யத்வோபயுக்த குணங்கள் —எல்லாவற்றிற்கும் சேஷியாக இருப்பது , எல்லை இல்லாத ஆனந்த ஸ்வரூபனாக இருப்பது
ப்ராபகத்வோபயுக்த குணங்கள்—- தயை, வாத்ஸல்யம் , ஒளதார்யம்,–முதலிய குணங்களோடு இருப்பது
உபயோபயயுக்த குணங்கள் —ஷாட்குண்யம் — ஜ்ஞானம் , பலம், ஐச்வர்யம் ,வீர்யம்,சக்தி,தேஜஸ் என்கிற ஆறு குணங்கள்
இப்படியாக, எம்பெருமான் ,அளவில்லாக் கல்யாண குணங்களை உடையவனாக இருக்கிறான்.)

திவ்ய மங்கள விக்ரஹம் –
1-சதைகரூப ரூபாய—விஷ்ணு புராணம் —
(எப்போதும் ஒரேவிதமான மாறுதல் இல்லாத திருமேனியை உடையவன்)
2-நித்ய சித்தே ததாகாரே தத் பரத்வே ச பௌஷ்கர யஸ் யாஸ்தி சத்தா ஹ்ருதயே தஸ்யா சௌ சந்நிதம் பிரஜேத்–பௌஷ்கர ஸம்ஹிதை
(ஹே , பௌஷ்கரனே —எப்போதும் இருப்பதுமான திருமேனியை உடையவன் ;அவன் எல்லோருக்கும் மேம்பட்டவன் என்றும் ,
எவனுடைய மனத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறதோ,அவன் அருகில் எம்பெருமான் எப்போதும் உள்ளான் .)
3-சமஸ்தாச் சக்த்யச் சைதா ந ரூப யத்ர ப்ரதிஷ்டிதா தத் விஸ்வரூப வைரூப்யம் ரூபம் அன்யத்தரேர் மஹத்-விஷ்ணு புராணம்-
(எல்லா சரீரங்களைக் காட்டிலும், வேறான திருமேனியை உடையவன்,எம்பெருமான்.அந்தத் திருமேனியில், எல்லா சக்திகளும் நிலையாக உள்ளன.)
4-இச்சா க்ருஹீதா அபிமதோரு தேக-
(பக்தர்களுக்கு இஷ்டமான , அனைவர்க்கும் இன்பம் தருகிற திருமேனியைத் தன் ஸங்கல்பத்தாலே பகவான் எடுத்துக்கொள்கிறான் .)
5-ந பூத சங்க சமஸ்தாநோ தேக அஸ்ய தேஹோ அஸ்ய பரமாத்மன –மஹா பாரதம்—சாந்தி பர்வம்—
(இந்தப் பரமாத்மாவின் திருமேனி பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டானதல்ல)
6-ந தஸ்ய பிரக்ருதா மூர்த்தி –மாம்சமேதோ அஸ்தி சம்பவா -வராஹ புராணம்—
(எம்பெருமானின் திருமேனி, மாம்ஸம், மேதஸ் (மஜ்ஜை ) எலும்பு ஆகியவற்றால் ஆனதல்ல)
7-பூஜைச் சதுர்பி -சமுபேத மேதத்ரூபம் விசிஷ்டம் திவி சம்ஸ்திதம்ச –மஹாபாரதம்—
(பகவானது திருமேனி, நான்கு திருக்கரங்களுடன் உள்ளது;சிறப்பானது; பரமபதத்தில் நிலையாக உள்ளது.)
8-ருக்மாபம் ஸ்வ பன் தீ கம்யம் –மநு ஸ்ம்ருதி—
(தங்கம் போன்று ப்ரகாசிப்பவன்;அவனைக் கனவில் காண்பதைப் போல மனத்தால் மட்டுமே நினைக்க முடியும்)
9-தத்ரைகச்தம் -ஜகத் க்ருத்ச்னம் –ஸ்ரீமத் பகவத் கீதை—
(தத்ரைகஸ்தம் ஜகத் க்ருத்ஸ்நம் ப்ரவிபக்த மநேகதா |
அபஸ்யத் தேவ தேவஸ்ய சரீரே பாண்டவஸ்துதா ||
உலகங்கள் பலவிதமாகப் பிரிந்து இருக்கின்றன.ஆனால், அவையாவும் தேவதேவனான பகவானின்–
ஸ்ரீ க்ருஷ்ணனின் திருமேனியில் ,ஒரு சிறிய பகுதியாக இருப்பதை அர்ஜுனன் பார்த்தான்.)
10-பஸ்யாமி தேவாம் ஸ்தவ தேவ தேக-ஸ்ரீமத் பகவத் கீதை—
(பச்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூத விசேஷ ஸங்காத் |
ப்ரஹ்மாண மீஸம் கமலாசநஸ்தம்ம்ருஷீம்ஸ்ச ஸர்வானுரகாம்ஸ்ச திவ்யாந் ||
ஆச்சர்யப்பட்டு, மெய்சிலிர்க்க அர்ஜுனன் வணங்கிக் கூறுகிறான்.—–ஹே தேவாதி தேவனே, க்ருஷ்ணா —உன்னுடைய திருமேனியில்
அனைத்துத் தேவதைகளையும் நான் காண்கிறேன்.பிராணிகளின் கூட்டங்களைப்பார்க்கிறேன்.கமலாஸனத்தில் வீற்றிருக்கும்
ப்ரஹ்மாவைப் பார்க்கிறேன்.ஸகல ரிஷிகளையும் பார்க்கிறேன்.தெய்வத் தன்மை உள்ள ஸர்ப்பங்களையும் பார்க்கிறேன்.)
11-அஸ்த்ர பூஷண சமஸ்தான ஸ்வரூபம் -விஷ்ணு புராணம்
(ஆயுதங்களும் ஆபரணங்களும் உன் திருமேனியை இருப்பிடமாகக் கொண்டிருக்கின்றன.)
12-பூஷண அஸ்த்ர ஸ்வரூபச்தம் யதேதம் அகிலம் ஜகத் -விஷ்ணு புராணம்
(உலகங்கள் யாவும் அவனது திருமேனியில் ஆயுதங்களாகவும் ஆபரணங்களாகவும் உள்ளன.)
13-தமஸா பரமோ தாதா சங்கம் சக்ர கதா தரா -ஸ்ரீமத் ராமாயணம்—
(ப்ரக்ருதிக்கும் மேலிடத்தில் இருப்பவனாய், சங்க,சக்ர ,கதாதாரியாய் போஷகனாக இருக்கிறான், ஸ்ரீ ராமன்.)
என்கிறபடியே
சர்வ ஜகத் ஆஸ்ரயமான அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டமாக அனுசந்தேயம் –

இவ் விக்ரஹம்
பர வியூஹ விபவ ஹர்த்த அர்ச்ச்சாவதார ரூபேண பஞ்ச பிரகாரமாய் இருக்கும்படியும் –
இவற்றில் உள்ள விசேஷங்களும் பகவச் சாஸ்திர சம்ப்ரதாயத்தாலே அறியப்படும் –

(பரவாஸுதேவனின் குணங்கள் சாந்தமாக இருக்கும். வ்யூஹ வாஸுதேவனின் குணங்கள் ப்ரகாஸிக்கும்
வ்யூஹ வாஸுதேவன் —பத்நி லக்ஷ்மி
ஸங்கர்ஷணன் –பத்நி –கீர்த்தி ( ஜீவன் ) —ஜகத் ஸம்ஹார கர்த்தா.சாஸ்த்ர
ப்ரவர்த்தகன் . ஜ்ஞானம் , பலம் –இரண்டு குணங்களை உடையவன்
ப்ரத்யும்னன் —பத்நி –ஜயா ( புத்தி ) —ஜகத் ஸ்ருஷ்டி கர்த்தா –தர்ம ப்ரவர்த்தகன் –ஐச்வர்யம் ,
வீர்யம்–இரண்டு குணங்களை உடையவன்
அநிருத்தன் –பத்நி –மாயா –(அஹங்காரம் )—ஸ்திதி கர்த்தா–தர்ம பலப்ரதன்–
சக்தி,தேஜஸ் –இரண்டு குணங்களை உடையவன்)

—–

எல்லையற்ற விபூதிகளை உடையவன்
1-விஷ்ணோ ரேதா விபூதய –விஷ்ணு புராணம்-
(இவை எல்லாமும் –அதாவது, மநு முதலானோர்,காலம் , எல்லா ஜந்துக்கள்
இவையாவும், உலகின் ஸ்திதிக்குக் காரணமான மஹாவிஷ்ணுவின் விபூதிகள் –ஐச்வர்யங்கள்)
2-மஹா விபூதி சமஸ்தான –விஷ்ணு புராணம்-
(மஹா விபூதி எனப்படுகிற நித்ய விபூதியைத் தன்னுடைய இருப்பிடமாகக் கொண்டவனே)
3-நாந்த அஸ்தி மம திவ்யானாம் விபூதினாம் பரந்தப –ஸ்ரீமத் பகவத் கீதை–
(நாந்த : அஸ்தி மமதிவ்யானாம் விபூதினாம் பரந்தப |
ஏஷ தூத்தேஸத : ப்ராக்தோவிபூதேர் விஸ்தரோமயா ||
ஸ்ரீ க்ருஷ்ணன் , அர்ஜுனனிடம் சொல்கிறான்—– ஹே—அர்ஜுனா—பகைவரை வாட்டுபவனே ! என்னுடைய திவ்ய விபூதிகளுக்கு
முடிவே கிடையாது. இதுவரை நான் சொன்னவை என்னுடைய விபூதியின் ஓரளவுதான்–சிலவற்றையே சொன்னேன்.)
இத்யாதிகள் உடைய சங்க்ரஹமான
யதண்ட மண்டாந்தர கோசரம் ச யத் -என்கிற ஸ்லோகத்தின் படியே அநந்த விபூதி விசிஷ்டமாக அனுசந்தேயம் —

(யதண்டம் அண்டாந்தர கோசரஞ்ச யத்
தசோத்தராண்யா வரணாநி யாநி ச |
குணா : ப்ரதானம் புருஷ : பரம்பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூதய : ||

தே –விபூதய :–உனது ஐச்வர்யங்கள் எவை என்றால்
யத் அண்டம்—எந்த எந்த அண்டங்களோ ,
அண்டாந்தர கோசரஞ்ச–அவற்றின் உட்புறங்கள் எவையோ,
யத் தசோத்தராண்யா வரணாநி யாநி ச -அந்த அண்டங்களுக்கு மேன்மேல் ,பத்து மடங்கு அதிக விஸ்தீரணங்கள் உள்ள ,
மேலும் மேலும் சூழ்ந்து இருக்கிற பஞ்ச பூதங்கள்–நீர், நெருப்பு, இவை எவையோ,
குணா : —- ஸத்வ ,ரஜோ ,தாமஸ குணங்களும்
ப்ரதானம் —-அவற்றுக்கு ஆதாரமான மூல ப்ரக்ருதியும்
புருஷ :=பக்த ஜீவர்களும்
பரம்பதம் = ஸுத்த ஸத்வ த்ரவ்யமான ஸ்ரீ வைகுண்டமும்,
பராத்பரம் =இவற்றில் பரம் ஆனதற்கும் மேலாக பூர்ண சைதன்ய விகாஸம் உடைய முக்தர்களும், நித்யர்களும், இப்படி எல்லாமும்
தே விபூதய : =உனது ஐச்வர்யங்கள்–என்று , ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னத்தில் ( 17 )

இவ் விபூதிகளில் சேதனங்களாயும் அசேதனங்களாயும் உள்ள இரண்டு வகையும்
லீலார்த்தங்களாயும்-போகார்த்தங்களாயும்-விபக்தங்களாய் இருக்கும் அனுசந்தேயம் பொதுவாய் இருக்க
ரச வைஷம்யத்தாலே லீலா போக விபாகம் யதா லோகம் கண்டு கொள்வது –

அப்படியே
1-ஜன்மாத் யஸ்ய யத–
(கண்ணால் பார்க்கப்படும்-இவ்வுலகின் பிறப்பு முதலானவைகளை, யாரிடமிருந்து உண்டாகிறதோ ,அவனே ”ப்ரஹ்மம் ”)
2-க்ரீடா ஹரேரிதம் சர்வம் –மஹாபாரதம்—சாந்தி பர்வம்–
( இவை யாவும் பகவானுக்கு விளையாட்டு)
3-க்ரீடதோ பாலகச்யேவ பால –விஷ்ணு புராணம்
(விளையாடும் குழந்தையின் சேஷ்டைகள் போலிருக்கிற ,எம்பெருமானின் லீலைகளைப் பார்.)
4-கிரீட நகைரிவ–மஹா பாரதம்–ஸபா பர்வம்
(குழந்தை, விளையாட்டுக் கருவிகளான பொம்மைகளை வைத்து விளையாடுவதைப் போல, பகவான், நம்மை வைத்து விளையாடுகிறான்)
5-ஹரே விகரசி க்ரீடா கந்து கைரிவ ஜந்துபி -விஷ்ணு தர்மம்
(பந்துகளை வைத்து விளையாடுவதைப் போல,ஸ்ரீ ஹரியே—உனது விளையாட்டு இருக்கிறது.)
6-லோகவத்து லீலா கைவல்யம் -ப்ரஹ்ம ஸூத்ரம் –
(இவை எல்லாமே அவனது விளையாட்டுக்காகவே)

என்கிறபடியே
லீலாரூப ஜகத் வியாபார லஷணமாக அனுசந்தேயம் –

—————————————————————-

இப்படி லஷ்மீ சஹாயமாய்-அபரிமித ஞானானந்தமாய் -ஹேய ப்ரத்ய நீகமாய் –
ஞான சக்த்யாதி அநந்த மங்கள குண விசிஷ்டமாய்
திவ்ய மங்கள விக்ரஹ உபேதமாய்-சரீர பூத விபூதி த்வய யுக்தமாய்- ஜகத் ஸ்ருஷ்டியாதி வியாபார லீலமாய்க் கொண்டு
பிராப்யமான ப்ரஹ்மத்தை ப்ராபிக்கும் பிரத்யகாத்மாவினுடைய –
பக்த முக்த நித்ய சாதாரண ரூபமும்
உபாய அதிகாரியான தனக்கு இப்போது அசாதாரணமான ரூபமும் அறிய வேணும் –

இவர்களில் பக்தரானவர் –
அநாதி கர்ம பிரவாஹத்தாலே அனுவ்ருத்த சம்சாரராய் –
ப்ரஹ்மாதி ஸ்தம்ப பரிந்த விபாக பாகிகளான ஷேத்ரஜ்ஞர்
முக்தராவார் —
சாஸ்திர சோதிதங்களான உபாய விசேஷங்களால் உண்டான பகவத் பிரசாதத்தாலே
அத்யந்த நிவ்ருத்த சம்சாரராய் சங்கோச ரஹித பகவத் அனுபவத்தாலே நிரதிசய ஆனந்தராய் இருக்குமவர்கள் —
நித்யராவார் –
ஈஸ்வரனைப் போலே அனாதியாக ஞான சங்கோசம் இல்லாமையாலே –
சவயச இவ யே நித்ய நிர்த்தோஷ கந்தா -என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சாரராய்க் கொண்டு நித்ய கைங்கர்யம் பண்ணுகிற அநந்த கருட விஷ்வக் சேநாதிகள் –
(ஸ்ரீ பராசர பட்டர் குணரத்ன கோசத்தில் சொல்கிறார் (27 )
தே ஸாத்யா : ஸந்திதேவா : ஜனனி ! குண–வபுர் –வேஷ–வ்ருத்த –ஸ்வரூபை :
போகைர்வா நிர்விசேஷா : ஸவயஸ இவயே நித்ய நிர்தோஷ கந்தா : |
ஹே—ஸ்ரீ : ! ஸ்ரீரங்கபர்த்து : தவச பத பரீசார வ்ருத்த்யை ஸதா பி
ப்ரேம ப்ரத்ராண பாவவில ஹ்ருதய ஹடாத்கார கைங்கர்யபோகா : ||

ஹே–ஜனனீ —தாயே— ஹே–ஸ்ரீ —பெரிய பிராட்டியே–எவர்கள்நல்லகுணங்கள் ,வயசுக்கு ஏற்ற நடத்தைகளுடன் , ஆத்ம ஸ்வரூபத்தாலும்
பகவத் அநுபவங்களாலும் ,வேறுபாடு இல்லாமல், ஒரே வயதுள்ளவர்களாய் எப்போதும் எந்தக் குற்றமும் அற்றவர்களாய்,பகவானிடம் ப்ரீதியுடன்
நல்ல மனஸ்ஸுடன் கைங்கர்யங்களில் ஈடுபடுகிறார்களோ அந்த ஸாத்ய தேவர்கள் எனப்படும் நித்ய ஸூரிகள் ,
உனக்கும், பகவானுக்கும் திருவடிகளில் கைங்கர்யம் செய்துகொண்டு எப்போதும் வைகுண்டத்தில் இருக்கிறார்கள்.
இவர்கள், ஆதிசேஷன், கருடன், விஷ்வக்ஸேனர் முதலானவர்கள்.)

இவர்கள் எல்லார்க்கும் சாதாரணமான ரூபம் –
அணுத்வ ஞானானந்த அமலத்வாதிகளும் -பகவத் சேஷத்வ பாரதந்த்ர்யாதிகளும் –
முமுஷுவான தனக்கு அசாதாரணமாக அறிய வேண்டும் ஆகாரங்கள் உபோதாத்திலே சொன்னோம் –
( அதிகாரம் 2 )மேலும் கண்டு கொள்வது —

இப் ப்ராப்தாவினுடைய ஸ்வரூபம்
பிரணவ நமஸ் ஸூக்களில் மகாரங்களிலும் -நார சப்தங்களிலும் –
ப்ரபத்யே என்கிற உத்தமனிலும்
வ்ரஜ என்கிற மத்யமனிலும்
த்வா என்கிற பதத்திலும்
மாஸூச என்கிற வாக்யத்திலும் அனுசந்தேயம்

—————————————————

உபாய ஸ்வரூபம் -பல ஸ்வரூபம்

பிரத்யுபாயமும் இதின் பரிகரங்களும் பல ஸ்வரூபம் இருக்கும் படியும்
மேலே பிராப்த ஸ்தலங்களிலே பரக்கச் சொல்லக் கடவோம்
இவற்றில் உபாயம்
திருமந்த்ரத்தில் நமஸ்ஸிலும் -அயன சப்தத்திலும்
த்வயத்தில் பூர்வ கண்டத்திலும்
சரம ஸ்லோகத்தில் பூர்வார்த்தத்திலும் -அனுசந்தேயம்

பல ஸ்வரூபம்
சதுர்த்யந்த பதங்களிலும்
த்வயத்தில் நமஸ்ஸிலும்
சரம ஸ்லோகத்தில் சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்கிற இடத்திலும் அனுசந்தேயம் —

——————————————————————

விரோதி ஸ்வரூபம் –
ப்ராப்தி விரோதியாவது –
அவித்யா
கர்ம
வாசனாதி ரூபமான மோஷ பிரதிபந்தக வர்க்கம் –
இதில் பிரதானம் அநாதியாக சந்தன்யமானமான ஆஜ்ஞாதி லங்கணம் அடியாக பிறந்த பகவன் நிக்ரஹம் —

(1. அவித்யை—சரீரத்தை ஆத்மாவாக நினைத்தல்மற்றும் ஆத்மாவை ஸ்வதந்த்ரன் என்று நினைத்து
இறுமாந்து, அஹங்காரம் ,மமகாரம் கொள்ளுதல்
2.கர்மா அல்லது கர்மம் —ஜீவன் செய்யும் புண்ய ,பாபச் செயல்கள்
3.வாசனை —முன்னாலே சொன்ன அவித்யை,கர்மா இவைகளாலே உண்டாகும் ஸம்ஸ்காரம் அதாவது தன்மை
4. ருசி—மேற்சொன்ன வாசனைக்கு ஏற்ப உண்டாகிற விருப்பம் /ஆசை
5. ப்ரக்ருதி ஸம்பந்தம் —சரீர சம்பந்தத்தாலே ,ஜீவன் மேற்சொன்ன ருசிக்கு ஏற்ப ,உலக விஷயங்களில் ஈடுபடல்
இந்த ஐந்தும் , சேதனனுக்கு சக்கரச்சூழற்சியைப் போலத் தொடர்ந்து வருகின்றன.)
இதில் முக்கியமான தடை, பகவானின் கட்டளைகளை, எல்லையற்ற காலமாகத் தொடர்ந்து மீறியபடி இருப்பது. அதனால்,
பகவானின் தண்டனைக்கு ஆளாதல்.
ப்ரதிபந்தக வர்க்கம் –அடிக்கடி செய்யப்பட்ட பாபமானது, அறிவை அழிக்கிறது. அறிவை இழந்த ஜீவன்,
மறுபடியும் பாபத்தையே செய்கிறான்.)

இது ஷேத்ரஜ்ஞர்க்கு
ஞான சங்கோச கரமான த்ரிகுணாத்மக பிரகிருதி சம்சர்க்க விசேஷத்தை உண்டாக்கியும்
இப் பிரக்ருதி பரிணாம விசேஷங்களான சரீர இந்த்ரியாதிகளோடு துவக்கி
திண்ணம் அழுந்தக் கட்டி
(கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வல் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே -(திருவாய்மொழியில் (5–1–5 ) )
பல செய்வினை வன் கயிற்றால் புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே என்றும்
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் என்றும்
சொல்லுகிறபடியே தேக இந்த்ரியாதி பரதந்த்ரன் ஆக்கியும்
அவ் வஸ்தையிலும் சாஸ்த்ர வஸ்யத்தை கூடாத திர்யக்காதி தசைகளிலே நிறுத்தியும்
சாஸ்திர யோக்யங்களான-மனுஷ்யாதி ஜன்மங்களில் பாஹ்ய குத்ருஷ்டி மதங்களாலே கலக்கியும்

அவற்றில் இழியாதவர்களையும் உள்பட
பகவஸ் ஸ்வரூப திரோதானகரீம் விபரீத ஞான ஜனனீம் ஸ்வ விஷயா யாச்ச கோயபுத்தேர் ஜனனீம் என்கிறபடி
இம் மூலப் பிரகிருதி முதலான மோஹன பிஞ்சிகை தன்னாலே தத்வ ஞான விபரீத ஞான விஷய ப்ராவண்யங்களை பண்ணியும்

இவை யடியாக ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனை பல நீ காட்டிப் படுப்பாயோ என்கிறபடியே
ஸூக லவார்த்தமான அக்ருத்ய கரணாதி ரூபமான ஆஜ்ஞாதி லங்கனத்தைப் பண்ணுவித்தும் –
பாபம் ப்ராஜ்ஞாம் நாசாயதி க்ரியமாணம் புன புன நஷ்ட பிரஜ்ஞ பாபமேவ புனராரபதே நர –என்கிறபடியே
மேலும் அபராத பரம்பரைகளிலே மூட்டி அதன் பலமாக ஷிபாம் ஜயஸ்ரம்-இத்யாதிகளில் படியே
கர்ப்ப ஜன்ம ஜரா மரண நரகாதி சக்ர பிரவ்ருதியிலே பரிப்ரமிப்பித்தும்

ஷூத்ர ஸூகாதிகளுக்கு சாதனமான ராஜச தாமச சாஸ்த்ரங்களை கொண்டு
யஷ ரஷாம்ஸி ராஷசா ப்றேதான் பூத கணாம்ச்சான்யே யஜந்தே தாமஸா ஜனா -என்கிறபடியே
தன்னோடு ஒக்க ஒழுகு சங்கிலி யிலே கட்டுண்டு உழலுகிற ஷேத்ரஜ்ஞர் காலிலே விழப் பண்ணியும்
அவர்கள் கொடுத்த ஜூகுப்சாவஹ ஷூத்ர புருஷார்த்தங்களிலே கிருமிகளைப் போலே க்ருதார்த்தராக மயக்கியும்
யோக பிரவ்ருத்தரானவர்களையும் ஷூத்ர தேவதா யோகங்களில் யாதல் – நாமாத்ய சேதனா உபாசனங்களிலே ஆதல்
மூளப் பண்ணி சில் வாகனங்களான பலன்களாலே யோகத்தை தலை சாய்ப்பித்தும்

ஆத்ம பிரவணரையும் பிரகிருதி சம்ஸ்ருஷ்டம் பிரகிருதி வியுக்தம் என்கிற இவ்விரண்டு படியிலும்
ப்ரஹ்மாத் யஷ்டயாலே யாதல் -ஸ்வரூப மாத்ரத்தாலே யாதல் உபாசிக்க மூட்டி
அவை நாலு வகைக்கும் பலமாக அல்பாஸ் வாதங்களைக் கொடுத்து புனராவ்ருத்தியைப் பண்ணியும்

ப்ரஹ்மாத்மாக ஸ்வ ஆத்ம சிந்தனை பிரவ்ருத்தர் ஆனவர்களையும்
ஸ்வ ஆத்ம சரீரக பரமாத்ம சிந்தனை பரரையும் அந்தராயமான
ஆத்ம அனுபவத்தாலே யாதல் -அஷ்டௌஸ்வர்ய சித்திகளாலே யாதல்-
வச்வாதி பதப்ராப்தி ப்ரஹ்ம காய நிஷேவணாதிகளாலே யாதல்
அபிஷேகத்துக்கு நாளிட்ட ராஜ குமாரனுக்கு சிறையிலே எடுத்துக் கை நீட்டின சேடிமார் பக்கலிலே கண்ணோட்டம்
உண்டாமாப் போலே பிராரப்த கர்ம பலமான தேக இந்த்ரியங்களிலும் தத் அனுபந்திகளான பரிக்ரஹங்களிலும்
தன் மூல பலங்களிலும் கால் தாழப் பண்ணி யாதல் அந்ய பரராக்கியும்
இப்படி பல முகங்களிலே பகவத் பிராப்திக்கு விலக்காய் இருக்கும் –

முப்பத்து இரண்டு அடியான துரவுதத்துவார் முன்னடியிலே விழுந்ததோடு முப்பதாம் அடியிலே அந்தராயம் உண்டானாலும்
இவன் சம்சாரத்தைக் கடந்தான் ஆகான் –
கர்ம யோகாதிகளில் பிரவர்த்தன் ஆனவனுக்கு -நேஹாபிக்ரம நாசோ அஸ்தி -இத்யாதிகளில் படியே
இட்ட படை கற்படையாய் என்றேனும் ஒரு நாள் பல சித்தி உண்டாம் என்கிற இதுவும் கல்பாந்தர மன்வந்தர யுகாந்தர
ஜன்மாந்த்ராதிகளிலே எதிலே என்று தெரியாது

அனுகூல்யம் மிகவும் உண்டாய் இருக்க வசிஷ்டாதிகளுக்கு விலம்பம் காணா நின்றோம் –
பிரதிகூல்யம் மிகவும் உண்டாய் இருக்க வ்ருத்ர ஷத்ர பந்து ப்ரப்ருதிகளுக்கு கடுக மோஷம் உண்டாகக் காணா நின்றோம் –
ஆகையால் விலம்ப ரஹித மோஷ ஹேதுக்களான ஸூக்ருத விசேஷங்கள் ஆர் பக்கலிலே கிடக்கும் என்று தெரியாது –
விலம்ப ஹேதுவான நிக்ரஹத்துக்கு காரணங்களான துஷ் கர்ம விசேஷங்களும் ஆர் பக்கலிலே கிடக்கும் என்றும் தெரியாது –

இப்படி அநிஷ்ட பரம்பரைக்கு மூலங்களான அஜ்ஞாதி லங்கனங்களாலே வந்த பகவத் நிக்ரஹ விசேஷம் ஆகிற
பிரதான விரோதிக்குச் செய்யும் பரிஹாரத்தை
தஸ்ய ச வசீகரணம் தச் சரணா கதிரேவ-என்று கட வல்லியிலே வசீகார்த்த பரம்பரையை வகுத்த இடத்திலே
ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தார் –

இவ் விரோதி வர்க்கத்தை எல்லாம் ரகஸ்ய த்ரயத்திலே விதிக்கிற அர்த்தங்களுடைய வ்யவச்சேத சக்தியாலும்
நமஸ்ஸூக்களில் மகாரங்களில் சஷ்டிகளாலும்
சர்வ பாப சப்தத்தாலும்
அனுசந்தித்து சம்சாரத்திலே அடிச் சூட்டாலே பேற்றுக்கு உறுப்பான வழிகளிலே த்வரிக்க பிராப்தம் —

பொருள் ஓன்று என நின்ற பூ மகள் நாதன் அவனடி சேர்ந்து
அருள் ஒன்றும் அன்பன் அவன் கொள் உபாயம் அமைந்த பயன்
மருள் ஒன்றிய வினை வல் விலங்கு என்று இவை ஐந்து அறிவார்
இருள் ஓன்று இலா வகை என் மனம் தேற இயம்பினரே —

ப்ராப்யம் ப்ரஹ்ம சமஸ்த சேஷி பரமம் ப்ராப்தா அஹம் அஸ்ய உசித
ப்ராப்தி தாய தன க்ரமாத் இஹ மம ப்ராப்தா ச்வத ஸூ ரிவத்
ஹந்த ஏநாம் அதிவ்ருத்தவான் அஹம் அஹமத்யா விபத்யாஸ்ரய
சேது சம்ப்ரதி சேஷி தம்பதி பரந்யாசஸ்து மே சிஷ்யதே —

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading