ஸ்ரீ பாஷ்யம்–4-3— நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்-மூன்றாம் பாதம் –கதி பாதம் —

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூப

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

———————————————————————————————————————————-

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
— 5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்
———————————————————————————————————————————

அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் -1 ஸூத்ரம்-அனைத்து ப்ரஹ்ம விதியை நிஷ்டர்களும் அர்ச்சிராதி மார்க்கம் என்னும் ஒரே வழி மூலம் மோஷம் அடைகிறார்கள் என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -2-வாய்வதிகரணம்-1 ஸூத்ரம் -சம்வத்சரத்தை அடையும் முக்தன் அதன் பின்னர் ஆதித்யனை அடைவதற்கு முன்னர் வாயுவை அடைகிறான் -என்று நிரூபிக்கப் படுகிறது —
அதிகரணம் -3–வருணாதி கரணம் –1 ஸூத்ரம்– தடித் எனப்படும் மின்னல் பின் வருணனும் இந்த்ரனும் அடையப் படுகிறார்கள் -என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -4-ஆதி வாஹாதிகரணம்-2 ஸூத்ரங்கள் -அர்ச்சிஸ் போன்றவர்கள் ப்ரஹ்ம ஞானியை ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள் என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -5-கார்யாதிகரணம் -10 ஸூத்ரங்கள்-ஆதி வாஹிகர்கள் யாரை ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறார்கள் எனபது நிரூபிக்கப் படுகிறது

———————————————————————————————
அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் -அனைத்து ப்ரஹ்ம விதியை நிஷ்டர்களும் அர்ச்சிராதி மார்க்கம் என்னும் ஒரே வழி மூலம் மோஷம் அடைகிறார்கள் என்று நிரூபிக்கப் படுகிறது –
—————————————————————————————————————-
4-3-1-அர்ச்சிராதி நா தத்ப்ராதிதே –

அர்ச்சிராதி கதி மூலமே -அதற்கே பிரசித்தம் உள்ளது -சாந்தோக்யம் -4-15-5/6-
அத யது ச ஏவ அஸ்மின் சவ்யம் குர்வந்தி யது ச ந அர்ச்சிஷமேவ அஹ-அன்ஹ -அபூர்யமாண பஷம் அபூர்யமாண பஷாத் யான் ஷடுதங்நேதி மாசாம்ஸ்தான்
மாசேப்ய-சம்வத்சரம் சம்வத்சரான் ஆதித்யம் ஆதிதான் சந்த்ரமசம் சந்திர மசோ வித்யுதம் தத்புருஷோ அமாநவ
ச ஏதான் ப்ரஹ்ம கமயதி ஏஷ தேவபதோ ப்ரஹ்ம பத ஏதேந பிரதிபத்யமா நா இமம் மா நவம் ஆவர்த்தம் நா வர்த்தந்தே -என்கிறது
இதே உபநிஷத்தில் எட்டாவது ப்ரபாடகத்தில் -8-6-5-அத ஏதைரேவ ரச்மிபி ஊர்த்வம் ஆக்ரமதே -என்று சூர்யா கிரணங்கள் மூலமாகவே கிளம்புகிறான் என்கிறது –
கௌஷீ தகீ -1-3- ச ஏதம் தேவயாநம் பந்தா நம் ஆபத்ய அக்னி லோகம் ஆகச்சி ச வாயு லோகம் ச வருண லோகம் ச ஆதித்ய லோகம் ச இந்திர லோகம் ச பிரஜாபதி லோகம் ச ப்ரஹ்ம லோகம் -என்கிறது
ப்ருஹதாரண்யகம் -6-2-15-ய ஏவமேவ விது-ஏ ச கிமே அரண்யே ஸ்ரத்தாம் சத்யம் உபாஸ்தே தே அர்ச்சிஷம் அபி சம்பவந்தி அர்ச்சிஷோ அஹ –
அஹ்ந ஆபூர்யமாண பஷம் ஆபூர்யமாண பஷாத் யான் ஷண்மாசான் உதங் ஆதித்ய ஏதி மாசேப்ய தேவலோகம் தேவ லோகாத்
ஆதித்யம் ஆதித்யாத் வைத்யுதம் வைத்யுதாத் புருஷோ மானச ச ஏத்ய ப்ரஹ்ம லோகன் கமயதி -என்றும்
5-10-1-யதா வை புருஷ அஸ்மாத் லோகாத் ப்ரைதி ச வாயுமா கச்சதி தஸ்மை ச விஜிஹீதே யதா ரதசக்ரச்ய கம் தேன ச ஊர்த்வம் ஆக்ரமதே ச ஆதித்யமாகச்சதி
தஸ்மை ச தத்ர விஜிஹீதே யதா ஆடம்பரச்ய கம் தேன ச ஊர்த்வமாக்ரமதே சந்த்ரமசம் ஆகச்சதி தஸ்மை ச தத்த விஜிஹீதே யதா துந்துபே கம் -என்கிறது
இப்படி அனைத்து இடங்களிலும் அர்ச்சிராதி கதி பிரசித்தம் -சில இடங்களில் கூட்டியும் குறித்தும் சொல்லப் பட்டாலும் அர்ச்சிராதி கதி அக்னி சூர்யன் போன்றவை ஓன்று பொஎ படிப்படுகிறது –
————————————————————————————————–
அதிகரணம் -2-வாய்வதிகரணம் -சம்வத்சரத்தை அடையும் முக்தன் அதன் பின்னர் ஆதித்யனை அடைவதற்கு முன்னர் வாயுவை அடைகிறான் -என்று நிரூபிக்கப் படுகிறது
————————————————–
4-3-2-வாயும் அப்தாத் அவிசேஷ விசேஷாப்யாம்

சாந்தோக்யம் -4-15-5-மாசேப்ய சம்வத்சரம் சம்வத்சராத் ஆதித்யம் -என்றும் ப்ருஹத் -6-2-15-மாசேப்யோ தேவ லோகம் தேவ லோகாத் ஆதித்யன் -என்றது
வாஜச நேயகத்தில் -5-10-1-யதா வை புருஷோ அஸ்மாத் லோகாத் ப்ரைதி ச வாயுமாகச்சதி தஸ்மை ச தத்ர விஜிஹீதே யதா ரதசக்ரச்ய கம் தேன ச ஊர்த்வமாக்ரமதே ச ஆதித்யமாகச்சதி -என்றது
சம்வத்சரத்தின் பின்னரே வாயுவை அடைகிறான் -தேவ லோகம் என்பதம் வாய்வக் குறிக்கும்
வாயுச்ச தேவா நாம் ஆவாச பூத -என்றும் யோ அயம் பவதே ஏஷ தேவா நாம் க்ருஹ -வீசுகின்ற காற்று-வாயு தேவர்களின் இருப்பிடம் என்றதே-
—————————————————————————————–
அதிகரணம் 3-வருணாதி கரணம் – தடித் எனப்படும் மின்னல் பின் வருணனும் இந்த்ரனும் அடையப் படுகிறார்கள் -என்று நிரூபிக்கப் படுகிறது –
—————————————————————
4-3-3-தடித- அதி வருண -சம்பந்தாத் —

மின்னலுக்கு பின் வருணன் -தொடர்பு உள்ளதால் -கௌஷீதகீ-1-3- -அக்னி வாயு வருண ஆதித்ய இந்திர பிரஜாபதி ப்ரஹ்ம லோகங்கள் என்று வரிசைப் படுத்தியது
ஆனால் ப்ருஹத் -6-2-15-தேவ லோகம் ஆதித்யன் மின்னல்
வருணன் வாயு வின் பின்னாலா ம்ன்னளின் பின்னாலா
மின்னலுக்கு பின்பே வருணன் -என்கிறது சித்தாந்தம் த்டர்பு உள்ளதால்
அமானவன் வித்யுத் புருஷன் ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறான் -அமானவனுக்கும் ப்ரஹ்மதுக்கும் இடையே வருணன் இந்த்ரன் பிரஜாபதி -என்று கொள்ள வேண்டும் –
—————————————————————————————————————
அதிகரணம் -4-ஆதி வாஹாதி கரணம் -அர்ச்சிஸ் போன்றவர்கள் ப்ரஹ்ம ஞானியை ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள் என்று நிரூபிக்கப் படுகிறது –

———————————
4-3-4-ஆதி வாஹிகா- தல்லிங்காத்-

இவர்கள் ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள்-இப்படியாக ப்ரஹ்மத்தால் நியமிக்கப் பட்டவர்களே அடையாளங்கள் உண்டே -அதி வஹ -அழைத்து செல்பவர்கள்
சாந்தோக்யம் -4-15-5-/5-10-2-தத் புருஷ அமானவன் ச ஏ நான் ப்ரஹ்ம கமயதி -இறுதியில் சொன்னதால் முன்பே கூறப்பட்டவர்களும் ஆதி வாஹர்கள் என்றே கொள்ள வேண்டும்
அர்ச்சிஸ் பதங்கள் அபிமான தேவதைகளையே குறிக்கும் மின்னலுக்கு பின் படிக்கப் பட்ட வருணன் இந்த்ரன் பிரஜாபதிகளை விட்டு
வித்யுத் புருஷன் மட்டும் என்பர் பூர்வ பஷி -சித்தாந்தம் அப்படி அல்ல

—————————————————————-

4-3-5- வைத்யுதேந ஏவ தத் தச்ச்ருதே –

வருணன் உள்ளிட்டவர்கள் அமாநவ புருஷனுக்கு இந்த பணியில் உதவி செய்கிறார்கள் –
———————————————————————————————————————————————————
அதிகரணம் -5-கார்யாதிகரணம் -ஆதி வாஹிகர்கள் யாரை ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறார்கள் எனபது நிரூபிக்கப் படுகிறது –
—————————————————–
4-3-6-கார்யம் பாதரி அஸ்ய கத்யுபபத்தே

ஹிரண்ய கர்ப்பனான நான்முகனை உபாசிப்பவர்களையே -என்பர் பூர்வ பஷி -பரிபூர்ணான ப்ரஹ்ம உபாசகனுக்கு ஒரு இடம் தேடி செல்ல வேண்டியது இல்லையே எங்கும் உளன் ஆதலால்
எனவே கார்ய ப்ரஹ்மமான நான்முகனை உபாசிப்பவர்களையே அமானவன் கூட்டிச் செல்கிறார்கள் என்பர் –
———————————————————————————–
4-3-7- விசேஷி தத்வாத் ச

ப்ருஹத் -6-2-15-புருஷ மானஸ ஏத்ய ப்ரஹ்ம லோகன் கமயதி -ப்ரஹ்ம லோகம் அழைத்து செல்கிறான் என்பர்
சாந்தோக்யம் -8-14-1-ப்ரஜாபதே சபாம் வேச்ம ப்ரபத்யே -பிரஜாபதியின் அரச சபையை அடைகிறேன் -என்பர்
அப்படி ஆகில் -சாந்தோக்யம் 4-15-5/5-10-2-தத்புருஷ அமாநவ ச ஏ நான் ப்ரஹ்ம கமயதி -என்றது பொருந்தாதே
ப்ரஹ்ம சப்தத்தில் நபும்சக லிங்கம் பொருந்தாதே -ப்ரஹ்மாணம் கமயதி என்று அன்றோ இருக்க வேண்டும் –

——————————————————————————–

4-3-8-சாமீப்யாத் து தத்வ்யபதேச –

நெருக்கமாக உள்ளவன் என்பதால் இப்படியே கூறப்படுகிறது
சாந்தோக்யம் -6-18-யோ ப்ரஹ்மாணம் விததாதி -பிரமனை யார் படைக்கின்றானோ
சாந்தோக்யம் -4-15-6-ஏஷ தேவபதோ ப்ரஹ்ம பத ஏதே ந பிரதிபத்யமா நா இமம் மானவமவர்த்ததம் நாவர்த்தந்தே -என்றும்
கட -6-16/சாந்தோக்யம் -8-6-6-/தயோர்த்தவமாயன் அம்ருதத்வமேதி -என்றும் திரும்புதல் இல்லை என்றதே
ஆனால் ஸ்ரீ கீதை8-16- -ஆ ப்ரஹ்ம புவனால்லோகே புனராவர்த்தின அர்ஜுன -என்று நான்முகன் இருப்பிடம் வரை சென்ற அனைத்தும் திரும்புகின்றன என்றதே
இரண்டு பரார்த்தங்களின் முடிவில் நான்முகனுக்கும் முடிவு உண்டே

——————————————————————————–

4-3-9-கார்யாத்யயே ததத்ய ஷேண சஹாத பரம் அவிதா நாத் —

ப்ரஹ்ம லோகம் நான்முகன் அழியும் போது பாசகன் அங்கு இருந்து பர ப்ரஹ்மத்தை அடைகிறான் என்கிறது
மஹா நாராயண உபநிஷத் -12-3-தே ப்ரஹ்மலோகே து பராந்த காலே பராம்ருதாத் பரிமுச்யந்தி சர்வே -என்றதே –

———————————————————————————
4-3-10-சம்ருதேச்ச

ச்ம்ருதியிலும் இவ்வாறே கூறப்படுகிறது -ஸ்ரீ கூர்ம புராணம் -12-269-ப்ரஹ்மணா சஹ தே சர்வே சம்ப்ராப்தே பிரதிசஞ்சரே பரஸ் யாந்தே க்ருதாத்மனா ப்ரவி சந்தி பரம் பதம் -என்கிறது
இப்படியாக பல ஸூத்ரங்களால் நான்முகனை உபாசிப்பவர்களையே அழைத்து செல்வதாக பாதரி என்னும் ஆச்சார்யர் உரைத்தார்
இனி ஜைமினி அடுத்த 3 ஸூத்ரங்களால் தனது கருத்தை உரைக்கிறார் –
————————————————————————————-
4-3-11-பரம் ஜைமினி முக்யத்வாத்

பரம் பொருளை உபாசிப்பவர்களையே அழைத்துக் கொண்டு செல்வதாக ஜைமினி கூறுகிறார் -முக்கியமாக உள்ளதால்
பர ப்ரஹ்மம் எங்கும் இருந்த போதிலும் பரமபதம் சென்ற பின்னரே ப்ரஹ்ம ஞானிக்கு தனது ஸ்வரூபம் மறைக்கும் கர்மங்கள் அழியும்
அவித்யை நீங்கி ப்ரஹ்ம அனுபவம் ஏற்படும் -ப்ருஹத் -ப்ரஹ்ம லோகன் -என்றது ப்ரஹ்மமாக உள்ள லோகம் என்று பர ப்ரஹ்மத்தையே குறிக்கும்
———————————————————————————————————
4-3-12-தர்ச நாத் ச —

ஸ்ருதியிலும் காணலாம் -சாந்தோக்யம் -8-3-4-ஏஷ சம்ப்ரசாத அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரஞ்ஞோதிரூப சம்பந்தய ஸ்வேண ரூபேண அபி நிஷ்பத்யதே
நான்முகனை அடைதல் தள்ளப் பட்டது
————————————————————————————————————————
4-3-13-ந ச கார்யே பிரத்யபி சந்தி —

சாந்தோக்யம் -8-14-1-யசோஹம் பவாமி ப்ரஹ்மணாநாம்-அனைத்துக்கும் ஆத்மாவாக பரமாத்மா உள்ளதாக எண்ணுவதால் அவித்யை நீங்கப் பெற்று இந்த எண்ணம் நிலைக்கப் பெற்று உள்ளான் –
சாந்தோக்யம் -8-13-1-அஸ்வ இவ ரோமாணி விதூயபாபம் சந்திர இவராஹோர் முகாத் ப்ரமுச்ய தூத்வா சரீரம் அக்ருதம் க்ருத்தாத்மா ப்ரஹ்ம லோகம் அபி சம்பவாமி -என்றது
நித்தியமான பர ப்ரஹ்ம லோகத்தையே -நான்முகனின் பிரமலோகம் அல்ல –
——————————————————————————————————————————————————————————
4-3-14-அப்ரதீ காலம்ப நாத் நயதி இதி பாதராயண உபயதா ச தோஷாத் தத்க்ரது ச

ப்ரஹ்மத்தின் அவயவமான சித் மற்றும் அசித்துக்களை பிராப்யமாகக் கொண்டு உபாசிக்காதவர்களை அர்ச்சிராதி மார்க்கமாக அழைத்து செல்கின்றனர் -என்பர் பாதராயணர்
இவ்விதம் கூறாமல் மற்ற இரண்டு வாதங்களிலும் தோஷங்கள் உள்ளன -இதனையே தத்க்ரது நியாயம் கூறும்
பிரதீகம் -ப்ரஹ்மத்தின் அவயவம்சித் அசித் -போன்றவை -ஐஸ்வர்ய கைவல்யார்த்திகளுக்கு அர்ச்சிராதி மார்க்கம் இல்லை என்கிறார்
பர ப்ரஹ்மத்தை உபாசிப்பவர்கள் அனைவருக்கும் மோஷ பிராப்தி இல்லையே -ஐஸ்வர்யம் கைவல்யம் வேண்டுவாரும் அவனையே உபாசிப்பதால்
ஜீவாத்மா ஸ்வரூபத்தை பஞ்சாக்னி வித்யையின் படி -பரமாத்மாவின் ஸ்வரூபமே ஆத்மா என்று உணர்ந்து -உபாசிப்பவர்களும் மோஷம் அடைகிறார்களே
அதாவது ப்ரஹ்மத்தை அந்தராத்மாவாகக் கொண்ட ஆத்மா -என்று உணர்ந்து
உபாசனையின் படியே பலம் என்பதையே தத் க்ரதுச்ச தத்க்ரது -என்கிறது –
——————————————————————————————————————
4-3-15-விசேஷம் ச தர்சயதி

ப்ரதீகங்களை உபாசிப்பவர்களுக்கு அல்ப பலமே கிட்டும் -சாந்தோக்யம் -7-1-5-யாவன் நாம் நோ கதம் தத்ர அஸ்ய காமசாரோ பவதி –
அளவான பலனே கீட்டும் அர்ச்சிராதி மார்க்கம் கிட்டாது
———————————————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading