அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா
பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–
———————————————————————————————————————————-
முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் -உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் -பக்தியும் -ஆராயப்படுகின்றன –
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது
கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது
———————————————————————————————————————————-
அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் -3 ஸூத்ரங்கள் -முக்தாத்மா ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் -1 ஸூத்ரம்-முக்தன் பர ப்ரஹ்மத்தை விட்டு பிரியாதவன் என்று எண்ணிய படியே அனுபவிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்—3 ஸூத்ரங்கள் -ஸ்வேன ரூபேண ஸ்வரூபம் பெறுவது அல்லாமல் -அபஹதபாப்மா போன்ற எட்டு வித தன்மைகளையும் முக்தாத்மா அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் – 2 ஸூத்ரங்கள்-தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன விருப்பங்களை அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
அதிகரணம் -5-அபாவாதி கரணம் –7 ஸூத்ரங்கள்-முக்தன் சில கட்டங்களில் சரீரம் உள்ளவனாயும் சில கட்டங்களில் சரீரம் அற்றவானாகவும் உள்ளான் என்று கூறப்படுகிறது –
அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் -6 ஸூத்ரங்கள்-ஸ்ருஷ்டியாதி செயல்பாடுகள் முக்தனுக்கு இல்லை -போகத்திலே மட்டுமே சாம்யம் –சம்சாரத்துக்கு முக்தன் திரும்புவது இல்லை -எனபது போன்றவை நிரூபிக்கப் படுகின்றன
———————————————————————————————————————————–
அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் -முக்தாத்மா ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபிக்கப் படுகிறது-
——————————
4-4-1-சம்பத்ய ஆவிர்பாவ -ஸ்வேந சப்தாத் —
சாந்தோக்யம் -8-112-3-ஏவ மே விஷ சம்ப்ரசாத அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரஞ்சோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே -இயல்பான நிலை
பூர்வ பஷி புதிதான ரூபம் என்பர் -துக்கத்தின் நீக்கம் என்பதே புருஷார்த்தம் ஆகாது என்பர் -முக்தி பெரும் ஜீவனுக்கு அதிக சுக அனுபவம் உண்டு என்பதை சாந்தோக்யம் -2-8–ச ஏகோ ப்ராஹ்மண ஆனந்த ச்ரோத்ரி யஸ்ய ச அகா மஹதச்ய-
அது மட்டுமே ப்ரஹ்மத்தின் ஆனந்தம் -வேதங்களில் வல்ல அந்தணன் போகங்களுக்கு ஏங்குவது இல்லை என்றும்
தைத்ரியம் -2-7-ரசம் ஹி ஏவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி -என்றும் சொல்லிற்றே
சித்தாந்தம் -ஸ்வரூபத்தின் விளக்கமே -ஸ்வேன ரூபேண –ரூப பதத்துக்கு ஸ்வ விசேஷணம்-ஞானம் விரிவு பெற்ற நிலையே -ஸ்வரூப விளக்கம் என்றது –
———————————————————
4-4-2-முக்த பிரதிஜ்ஞா நாத் —
விடு பட்ட ஸ்வரூபமே -இப்படியே உறுதியாகிறது -ஸ்வேன ரூபேண அபிநிஷ்பத்யதே என்று
கர்மத்தின் தொடர்புண் காரணமாக மறைவாக இருந்த ஸ்வரூபம் வெளிப்பட்டது என்று உறுதி படக் கூறியது –
யதா -நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதான ஜென்மாதி காரணம் ஸமஸ்த வஸ்து விலக்ஷண -சர்வஞ்ஞா -ஸத்ய சங்கல்ப
-ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதி -பரம காருணிக -நிரஸ்த சமாப்யதிக சம்பாவன பர ப்ரஹ்மா பிதாவ பரம புருஷோஸ் தீதி சப்தாத் வகம்யதே
——————————————————————————-
4-4-3-ஆத்மா ப்ரகரணாத்
சாந்தோக்யம் -8-7-1-ய ஆத்மா அபஹதபாப்மா -விஜர-விம்ருத்யு விசோக விஜிகத்ச அபிபாச சத்யகாம சத்ய சங்கல்ப -என்றது
பரமாத்மாவை குறித்து அல்ல ஜீவாத்மாவைக் குறித்தே -என்று ப்ரஹ்ம ஸூ த்ரம் -1-3-18-உத்தராச் சேத் ஆவிர்பூத ஸ்வரூப வஸ்து -விளக்கத்திலே பார்த்தோம்
இதனையே சௌநக பகவான் –யதா ந க்ரியதே ஜ்யோத்ஸ்நா மலப்ரஷாள நாத்மணே
தோஷப்ரஹாணான் ந ஜ்ஞான மாத்மந க்ரியதா ததா
யதோதபா ந காணாத் க்ரியதே ந ஜலாம்பராம்
ஸ்வேத நீயதே வ்யக்திம் அசத சம்பவ குத
ததா ஹேய குணத் வம்சாத் அவ போத தயோ குணா
பிரகாச்யந்தே ந ஜ்ஞாயந்தே நித்யா ஏவ ஆத்மா நோ ஹி தே -என்று
வைரம் அழுக்கு நீக்கி புதிதான ஒளி வராதே
கிணறு வெட்டி நீரை விட வேண்டாமே
தாழ்வான குணங்கள் நீங்க இயல்பான ஆத்மா ஸ்வரூபம் வெளிப்படும்
எனவே பரமாத்மாவை அடைந்து புதிதான ஸ்வரூபம் அடையாமல் தன்னுடைய ஸ்வரூபம் விளங்கப் பெறுகிறான் –
———————————————————————————————————————
அதிகரணம் -2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் –முக்தன் பர ப்ரஹ்மத்தை விட்டு பிரியாதவன் என்று எண்ணிய படியே அனுபவிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது
———————————————————————————–
4-4-4-அபிபாகே ந த்ருஷ்டத்வாத் –
வேறுபடாமல் உள்ளதாகவே காணப் படுகிறது -அவனுக்கு பிரகாரமாக உள்ளதால் தன்னைத் தனிப்படாமல் உள்ளதாகவே அனுபவிக்கிறான்
தைத்ரியம் -ஸோ அஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா -முக்தன் சர்வஜ்ஞனான ப்ரஹ்மத்துடன் இருந்து அனைத்து குணங்களையும் அனுபவிக்கிறான் –
முண்டக -3-1-3-யதா பச்ய பச்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரேசம் புருஷம் ப்ரஹ்ம யோ நிம் ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்று
பொன் போன்ற அழகிய திருமேனி கொண்டவனும் இந்த உலகின் காரணமானவனும் -அனைத்தையும் நியமிப்பவனும் -புருஷன் என்று அழைக்கப் படுபவனும்
எப்போதும் அனைத்துக்கும் காரணமாக உள்ளவனும் ஆகிய பரமாத்மாவை முக்தாத்மா எப்பொழுது காண்கிறானோ அப்போதே தனது புண்ய பாபங்களை விடுகிறான்
தோஷம் அற்றவனாக பாபங்கள் இல்லாத உள்ளிட்ட எட்டு குணங்கள் நிறையப் பெற்றவனாக மாறுகிறான் -ப்ரஹ்மத்துடன் ஒற்றுமை அடைகிறான் –
ஸ்ரீ கீதை -14-2- இதம் ஜ்ஞானம் அபாஸ்ரித்ய மம சாதர்ம்யம் ஆகதா-சர்க்கே அபி நோபஜாயந்தே பிரளயே ந வ்யதந்தி ச -என்று
இப்படிப்பட்ட அறிவைப் பெற்றவர்கள் என்னை ஒத்த குணங்களை அடைகின்றார்கள் -அவர்கள் சிருஷ்டியின் போது தோன்றுவதும் இல்லை -பிரளயத்தின் போது துன்பம் அடைவதும் இல்லை
இதனால் முக்தன் தன்னைத் தனிப் பட்டவ்வனாகவே அனுபவிக்கிறான் என்பர் பூர்வ பஷி
அப்படி அல்ல -முக்தன் தன்னைத் தனிப் படாதனாகவே அனுபவிக்கிறான் -தனது ஆத்மாவை உள்ளபடி காண்கிறான் -ப்ரஹ்மத்துடன் ஜீவனுக்கு உள்ள ஒற்றுமை
சாந்தோக்யம் -6-8-7-தத் த்வம் அஸி–அந்த பரம் பொருள் நீயே -என்றும் –
ப்ருஹத் -2-5-19-அயம் ஆத்மா ப்ரஹ்ம -இந்த ஆத்மா ப்ரஹ்மம் -என்றும்
-சாந்தோக்யம் -6-8-7-ஜகத் ஆத்ம்யமிதம் சர்வம் -அனைத்தும் ஆத்மாவை பிராமமாகக் கொண்டது -என்றும் –
சாந்தோக்யம் -3-14-1-சர்வம் கல்மிதம் ப்ரஹ்ம -இவை அனைத்தும் ப்ரஹ்மம் -என்றும்
அவனது பிரகாரமாகவே -அவனை ஆத்மா என்றும் தன்னை சரீரமாகவும் உணர்கிறான் –
சதபத ப்ரஹ்மணம்-ய ஆத்மநி திஷ்டன் ஆத்மநி அந்தரோ யமாத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம் ய ஆத்மா நமந்தரோ யமயதி ச த ஆத்மா அந்தர்யாம்ருத -என்று
எந்த பரம் பொருள் ஜீவனின் உள்ளும் புறமும் பரவி உள்ளானோ -யார் இப்படி உள்ளதை ஜீவன் அறியாமல் உள்ளானோ
யாருக்கு இந்த ஜீவன் சரீரமோ -யார் ஜீவனின் உள்ளேபுகுந்து நியமிக்கிறானோ-அழிவு இல்லாத அந்தப் பரம் பொருளே உனக்கு அந்தர்யாமி -என்றது
தைத்ரிய ஆனந்த வல்லி-அந்த ப்ரவிஷ்ட சாஸ்தா ஜநா நாம் சர்வாத்மா -என்று அனைவருக்கும் ஆத்மாவாக உள்ள பரம் பொருள் ஜீவனின் உள்ளே புகுந்து நியமிக்கிறான் -என்றும்
இதையே ப்ரஹ்ம ஸூ த்ரம் -1-4-22-அவஸ்தி தேரிதி காசக்ருதஸ்ந -என்று முன்பே பார்த்தோம் –
ஆகவே முக்தி பெற்றவன் -அஹம் பிரஹ்மாஸ்மி–நான் ப்ரஹ்மமாகவே உள்ளேன் என்ற எண்ணத்துடன்
ப்ரஹ்மத்தை விட்டு அகலாமல் அனுபவிக்கிறான்
ப்ரஹ்ம ஸூ த்ரம் -4-4-8-சங்கல்பா தேவதத் ஸ்ருதே -என்றும்
2-1-2-அதிகம் து பேத நிர்த்தேசாத் -என்றும் -3-4-8-அதிகோப தேசாத்-என்றும் ஜிவனைக் காட்டிலும் ப்ரஹ்மம் வேறு பட்டவனே -என்று பார்த்தோம் –
—————————————————————————————————-
அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்-ஸ்வேன ரூபேண ஸ்வரூபம் பெறுவது அல்லாமல் -அபஹதபாப்மா போன்ற எட்டு வித தன்மைகளையும் முக்தாத்மா அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
——————————————————————————————————————————
4-4-5-ப்ராஹ்மேண ஜைமினி உபன்யாசாதிப்ய-
ப்ரஹ்மத்தின் குணங்களால் என்று உபன்யாசம் காணப் படுவதால் -இப்படியே ஜைமினி கருதுகிறார்
பாவங்கள் அற்ற தன்மை போன்றவை உண்டு என்று தஹர வித்யை சொல்லும்
சாந்தோக்யம் -8-7-1-ய ஆத்மா அபஹதபாப்மா –சத்ய சங்கல்ப -என்று சொல்லிற்று
உபன்யாசாதிப்ய -ஆதி சப்தம் -உண்ணுதல் போன்ற செயல்களை சொல்லும்
இத்தையே சாந்தோக்யம் -2-12-3-ஜஷன் கிரீடன் ரமமாண -உண்ணுதல் விளையாடுதல் மகிழ்தல் -என்றது
இதனால் அறிவு மாத்ரம் உள்ள ஸ்வரூபம் அல்ல -இதுவே ஜைமினி கருத்தாகும் –
—————————————————————————————————————
4-4-6-சிதி தந்மாத்ரேன ததாத்மகத்வாத் இதி ஔடுலொமி —
குணங்கள் இல்லாத ஞான மயமாக -மட்டுமே ஓதப்படுதளால் -ஔடுலொமி இப்படியே கருதுகிறார் -பிரத்யகாத்மா ஜ்ஞான மாத்திர ஸ்வரூபம்
ப்ருஹத் -4-5-13-ச யதா சைந்தவகதந அனந்தர அபாஹ்ய க்ருத்சன ரசகன ஏவ ஏவம் வா அரே அயம் ஆத்மா அந்தர -அபாஹ்ய க்ருத்சன ப்ரஜ்ஞாநகந ஏவ -என்று
உப்புக்கட்டி எவ்ப்படி உள்ளும் புறமும் நடுவிலும் உப்பாகவே உள்ளது போன்றே ஆத்மாவும் ஞான மயமாகவே உள்ளும் புறமும் நடுவிலும் -என்றும்
ப்ருஹத் -2-4-12-விஜ்ஞான கந ஏவ -என்று ஆத்மா முழுவதும் ஞான மயமாகவே உள்ளது என்றும் சொல்லிற்றே
அபஹதபாப்மா மூலம் மாற்றம் மூப்பு வருத்தம் பசி தாகம் போன்றவை இல்லை என்றே சொல்லப்பட்டது ஒழிய எட்டு தன்மைகள் உண்டு என்று கூறப்பட வில்லை –
எனவே ஞான மாத்ரமே என்பர் ஔடுலோமி-
—————————————————————————
4-4-7-ஏவம் அபி உபன்யாசாத் பூர்வபாவாத் அவிரோதம் பாதாராயண –
ஞான மாத்ரம் என்பதை ஏற்றாலும் மற்ற தன்மைகள் உள்ளதாகக் கொள்வதில் முரண்பாடு இல்லை -இப்படியே பாதராயணர் எண்ணுகிறார் -இதுவே வாக்யத்தில் கூறப்பட்டதாலும் முன்னரே உள்ளதாலும் –
இரண்டு பிரமாணாங்களும் சமம் -ஞான மாத்ரமே வேறு ஏதும் இல்லை என்பதை உபநிஷத் வாக்கியம் ஏற்க வில்லை
விஜ்ஞான கந ஏவ என்பதில் -ஏவ எனபது ஆத்மாவின் முழு பாகமும் ஜட தொடர்பு இல்லாமல் தானாகவே பிரகாசிக்க வல்லது என்றும்
இந்த பிரகாசத்தின் சிறிய பாகம் கூட மற்றவற்றை சார்ந்தது இல்லை என்பதையே காட்டும் -ச யதா என்று ப்ருஹத் -4-5-13- இத்தையே காட்டுகிறது –
—————————————————————-
அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் -தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன விருப்பங்களை அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
————————————————————————————————-
4-4-8-சங்கல்பாத் ஏவ தத்ஸ்ருதே –
சங்கல்பத்தால் மட்டுமே -என்கிறது
சாந்தோக்யம் -8-2-1-ச யதி பித்ருலோகே காமோபவதி சங்கல்பாதேவ பிதர -அஸ்ய சமுத்திஷ்டந்தி -என்று
முக்தன் பித்ருக்களை காண வேண்டும் என்று விரும்பினால் அவனது சங்கல்பத்தால் பித்ருக்கள் காட்சி அளிப்பார்கள் என்றது
சங்கல்பாத் ஏவ -சங்கல்பத்தினால் மட்டுமே என்றபடி –
————————————————————————————–
4-4-9-அத ஏவ ச அநந்ய அதிபதி
சர்வேஸ்வரனைத் தவிர முக்தன் யாருக்கும் வசப் பட்டவன் அல்லன் -மற்றவருக்கு வசப்பட்டால் சத்ய சங்கல்பத்வம் தடைப்படும்
கர்ம வசப்பட்டவன் அல்லன் என்பதை சாந்தோக்யம் -7-25-2-ச ஸ்வராட் பவதி -கட்டுப் படாதவன் -என்றது –
———————————————————————————–
அதிகரணம் -5-அபாவாதி கரணம் -முக்தன் சில கட்டங்களில் சரீரம் உள்ளவனாயும் சில கட்டங்களில் சரீரம் அற்றவானாகவும் உள்ளான் என்று கூறப்படுகிறது —
——————————————————————————————-
4-4-10-அபாவம் பாதரி -ஆஹா ஹி ஏவம் –
சரீரம் போன்றவை முக்தாத்மாவுக்கு இல்லை என்று பாதரி கூறுகிறார் -வேதங்களும் இப்படியே ஒதுகின்றன –
சாந்தோக்யம் -8-12-1-ந ஹ வை ஸ சரீரச்ய சத் ப்ரியாப்ரியயோ அபஹதிரஸ்தி அசரீரம் வாவ சந்தம் ந ப்ரியாப்ரியே ச்ப்ருசத -என்று
ஒருவன் சரீரத்துடன் இருந்தால் இவ்வுலக இன்ப துன்பங்கள் அவனை விட்டு விலகவில்லை -சரீரம் இல்லாமல் உள்ளவனை மட்டுமே இவை அண்டுவதில்லை -என்றது
மேலும் சாந்தோக்யம் -8-12-3-அஸ்மாத் சரீராத் சமுத்தாயா பரஞ்சோதி ரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே –என்று
இந்த சரீரத்தை விட்டு வெளியேறி பரஞ்சோதி யான பரமாத்வை முக்தன் அடைந்து தனது ஸ்வரூபம் விளங்கப் பெறுகிறான் -என்றதால் சரீரம் முக்தனுக்கு இல்லை என்பர் பூர்வ பஷி
———————————————————————————–
4-4-11-பாவம் ஜைமினி விகல்பாமந நாத் –
முக்தாத்மாவுக்கு சரீரம் மற்றும் இந்த்ரியங்கள் உண்டு என்று ஜைமினி கருதுகிறார் -அவன் பலவிதமாக உள்ளதால்
சாந்தோக்யம் -7-26-2- ஸ ஏகதா பவதி த்ரிதா பவதி பஞ்சதா சப்ததா -என்பதால் –
கர்மம் அடியாக இல்லை -கர்மம் தொடர்பற்ற சரீரத்தை முக்தாத்மா எடுத்துக் கொள்கிறான் என்கிறார்
———————————————————————————-
4-4-12-த்வா தசா ஹவத் உபயவிதம் பாதராயண அத –
முன்பு இரண்டு பூர்வ பஷ ஸூ த்ரங்களுக்கு சித்தாந்த ஸூ த்ரம் இது
அத -என்றது சங்கல்பாத் ஏவ -சங்கல்பம் காரணமாக மட்டும் என்கிறது
இரண்டு வாக்யங்களும் பொருந்த இருவிதமாகவும் உள்ளான் என்கிறார்
த்வா தசாஹம் -என்ற யாகத்தில் உள்ள விதி வாக்கியம் போலே
த்வாதசாஹம் ருத்திகாமா உபேயு-என்று செழிப்பை விரும்புவர்கள் த்வா தசாஹம் யாகத்தை இயற்ற வேண்டும் என்றும்
த்வா தசா ஹே ந பிரஜாகாமம் யாஜயேத்-குழந்தையை விரும்பும் ஒருவனுக்கு த்வா தசாஹம் யாகம் செய்விக்க வேண்டும் என்று
முதல் வாக்கியம் மூலம்பல எஜமானர்கள் செய்யும் யாக ரூபமும் -இரண்டாம் வாக்கியம் மூலம் ஒரு யஜமான் செய்யும் யாக ரூபமும் கூறப் பட்டது போலே –
———————————————————————————————————————————————–
4-4-13-தன்வ பாவே சந்த்யவத் உபபத்தே —
முக்தன் எப்போது சர்வேஸ்வரனை அனுபவிக்கத் தக்க சரீரம் தேவை என்று எண்ணுகிறானோ அப்போது அந்த சரீரம் முக்தனால் படைக்கப் படுகிறது என்ற விதி முறை இல்லை என்கிறார்
சரீரம் இல்லை என்றால் கனவு போன்று பொருந்தும் -பரமாத்மா மூலமாகப் படைக்கப் பட்ட சரீரம் போன்றவை மூலமாக பகவத் அனுபவம் கிட்டும்
ப்ருஹத் -4-3-10-அத ரதான் ரத யோகன் பத ஸ்ருஜதே -என்று கனவு நிலையில் தேர்கள் மற்றும் அவற்றில் பூட்டப் பட்ட குதிரைகள் அந்த தேர்கள் செல்லும் வழிகள் ஆகியவற்றை பரமாத்மா படைக்கிறான் என்று தொடங்கி
அத வேசாந்தான் புஷ்கரிண்ய ஸ்ரவந்த்ய ஸ்ருஜதே ஸ ஹி கர்த்தா -என்று
குளங்கள் நதிகள் ஆகியவற்றை பரமாத்மா படைக்கிறான் -காரணம் அவனே படைக்கிறான் என்றது
மேலும் கட உபநிஷத் -2-2-8-ய ஏஷ ஸூ ப்தேஷூ ஜாகர்த்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண ததேவ சுக்ரம் தத் ப்ரஹ்ம ததேவாம்ருத முச்யதே தஸ்மின் லோகா ச்ரிதா சர்வே தது நாத்யேதி கச்சன -என்று
யார் ஒருத்தன் அனைத்தும் உறங்கிய நிலையில் உள்ள போது தான் விழித்த படி இருந்து சங்கல்பித்து சங்கல்பித்துப் படிக்கிறானோ அவனை அமிர்தம் என்றே கூறுகின்றனர் -அவனையே அனைவரும் அண்டி உள்ளனர் -என்றது
அது போன்று தனது விளையாட்டுக்காகப் படைக்கப் பட்ட பித்ரு லோகம் போன்றவை மூலம் முக்டாத்மா அனுபவித்த படி உள்ளான் என்கிறது –
——————————————————————————————————————————–
4-4-14-பாவே ஜாக்ரவத் –
சரீரம் உள்ள போது விழித்து இருக்கும் ஜீவன் போன்றே – பித்ரு லோகம் போன்றவற்றை அனுபவிப்பது விழித்து இருக்கும் ஜீவன் போலே என்றும் –
தனது சங்கல்பத்தாலும் லீலைகள் அடங்கிய பித்ரு லோகத்தை தாங்களே சிருஷ்டித்து அனுபவிப்பார்கள்
ஆகவே இரண்டும் பொருந்தும்
————————————————————————–
4-4-15-ப்ரதீபவத் ஆவேச ததா ஹி தர்சயதி
ஆத்மா அணு அளவே என்பதால் பல சாரீரங்கள் உள்ளதாக எண்ணுவது எப்படி -பூர்வ பஷி
விளக்கு போன்று ஆத்மா பரவி இருப்பதால் -வேதம் இப்படியே கூறுவதால்
தர்ம பூத ஞானம் மூலம் பல சரீரங்களிலும் பரவலாமே
முக்தி பெறாத நிலையில் கர்ம வசத்தால் பல சரீரங்களில் பரவ முடியாது -முக்தனுக்கு தடை இல்லையே
ச்வேதாச்வதர -5-9- வாலாக்ர சதபாகச்ய சததா கல்பி தஸ்ய ச பாகோ ஜீவ ச விஜ்ஞேய ச சா நந்த்யாய கல்பதே-என்றது ஜீவனின் அணுத்வம் பற்றி நெல்லின் நுனியை நோர்ராக வெட்டி அதில் ஒரு பாகத்தை நூறாக்கி -அந்த அளவு என்றது –
பூர்வ பஷி -பர ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் உள்ளும் புறமும் உள்ள விஷயங்களை அறியாத ஞான ஸூன்யனாக உள்ளான் என்பர்
ப்ருஹத் -4-3-21-ப்ராஜ்ஞேந ஆத்மநா ஸம்பரிஷ் வக்தோ ந பாஹ்யம் கிஞ்சஞ வேதநாந்தரம் -என்று ஸ்ருதி உள்ளதால்
முக்தன் பல சரீரங்களில் வியாபித்து எங்கனம் செயல் படுவான் என்பர் –
———————————————————————————–
4-4-16-ஸ்வாப்யய சம்பத்யோ ரன்யதராபேஷம் ஆவிஷ்க்ருதம் ஹி
அந்த ஸ்ருதி வாக்கியம் உறக்க நிலை அல்லது மரண நிலை இரண்டில் ஒன்றை மட்டும் கூறுகிறது
ஸ்வாப்யய -என்றது ஆழ்ந்த உறக்கம் –சம்பத்தி -மரணம் -சாந்தோக்யம் -6-8-6-வாங்க மனஸூ சம்பத்த்யதே –என்று தொடங்கி –தேஜ பரஸ்யாம் தேவதா யாம் -என்று மரணகாலத்தில் ஜீவன் பரமாத்மா உடன் சேர்ந்து உள்ளான் -என்று முடித்தது –இந்த நிலைகளில் ஞானம் என்பதே கூறப்பட்டது
முக்தனுக்கு இரண்டு நிலைகளிலும் அறிவும் முக்தி அற்றவனுக்கு இரண்டு நிலைகளிலும் அறிவு அற்று போவதும் உண்டே
சாந்தோக்யம் -8-11-1-நாஹ கல்வயம் சம்ப்ரத்யாத்மானம் ஜா நாதி அயமஹமச்மீதி நோ ஏவேமா நி பூதா நி வி நாசமே வாபீதோ பவதி நாஹம் அத்ர போக்யம் பஸ்யாமி-என்றும்
முக்தாத்மாவைக் குறித்து -8-12-5-6- ஸ வா ஏஷ திவ்யேந சஷூஷா மனசைதான் காமான் பஸ்யன் ரமதே ய ஏதே ப்ரஹ்ம லோகே -என்று மோஷ நிலையில் அனைத்தும் அறிந்த தன்மை சொல்லப் பட்டது –
சாந்தோக்யம் -7-26-2-சர்வம் ஹ பச்ய பச்யதி சர்வம் ஆப் நோதி சர்வச -என்று முக்தன் அறியும் நிலையம்
ப்ருஹத் -2-4-12- ஏதேப்ய பூதேப்ய சமுத்தாய தான்யேவா நுவி நச்யதி-ஞானச் சுருக்கம் அடைந்து எதனையும் காண்பதில்லை -என்றது –
———————————————————————————————————————————————————–
அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் -ஸ்ருஷ்டியாதி செயல்பாடுகள் முக்தனுக்கு இல்லை -போகத்திலே மட்டுமே சாம்யம் –சம்சாரத்துக்கு முக்தன் திரும்புவது இல்லை -எனபது போன்றவை நிரூபிக்கப் படுகின்றன –
———————————————————————————————————————
2-4-17-ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத் அசந்நிஹிதத்வாத் ச —
நிரஞ்சன பரமம் சாம்யமுபைதி -முண்டகம் -3-1-3- என்றதாலும் சத்ய சங்கல்பத்வம் உள்ளவன் என்றதாலும் சர்வேஸ்வரத்வம் முக்தனுக்கும் உண்டு என்பர் பூர்வ பஷி
எனவே உலகை படைத்தல் என்னும் ஐஸ்வர் யமும் உண்டு என்பர்-அப்படி அல்ல
தைத்ரியம்–3-1–யதோ வா இமானி ஜீவந்தி யத் பிரயந்த்யபி சம்விசசந்தி தத் விஜிஜாஞஸஸ்வ தத் ப்ரஹ்ம -என்று ப்ரஹ்மத்துக்கே உரிய சர்வேஸ்வரத்வ லஷணம் பொருந்த வேண்டுமே
இன்னும் அநேக ஸ்ருதி வாக்யங்கள் -சாந்தோக்யம் -6-2-2/3-சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் தத் ஐஷத பஹூச்யாம் பிரஜா யேயேதி தத் தேஜ அஸ்ருஜத-என்றும்
ப்ருஹத் -1-4-11-ப்ரஹ்ம வா இதம் ஏவம் ஏவ அக்ர ஆஸீத் தத் ஏகம் சன்ன வ்யபவத் தச்ச்ரேயோ ரூபமத்ய ஸ்ருஜத ஷத்ரம் யான்யேதானி தேவத்ரா ஷத்ராணீந்த்ரோ வருண சோமோ ருத்ர பர்ஜன்யோ யமோ ம்ருத்யு ரிசாந–என்றும்
ஐ தரேயம் -1-1/2–ஆத்ம வா இதம் ஏக ஏவ அத்ர ஆஸீத் நாந்யத் கிஞ்சன மிஷத் ச ஈஷத லோகாந்து ஸ்ருஜ இதி ச இமான் லோகா நஸ்ருஜத -என்றும்
மஹா நாராயண உபநிஷத் ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈசாந நேமே த்யாவா ப்ருதிவீ ந நஷத்ராணீ ந ஆப ந அக்னீ ந சோம ந ஸூ ர்ய ச ஏகாகீ ந ரமதே தஸ்ய த்யாநாந்தஸ் தஸ்ய ஏகா கன்யா தசேந்த்ரியாணி -என்றும்
சதபத ப்ராஹ்மணம் -14-6-7-7-ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தர -என்றும் -14-7-7-30-ய ஆத்மநி திஷ்டன் -என்றும் பரம் பொருளுக்கே என்றது –
——————————————————————————————————————————————————————-
2-4-18-பிரத்யஷோ பதேசாத் இதி சேத் ந அதிகாரிக மண்டல ஸ்தோக்தே
முக்தனுக்கு நான்முகன் போன்றவர்களின் உலக போகங்களும் கூறப்பட்டதே என்பதால் ஸ்ருஷ்டியாதி வியாபாரங்கள் உண்டு எனப்பார் பூர்வ பஷி
அப்படி அல்ல –
சாந்தோக்யம் -7-25-2-ஸ ஸ்வராட் பவதி தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி -என்று எங்கும் சஞ்சரிக்கலாம் என்றும்
தைத்ரியம் -3-10-5-இமான் லோகன் காமான்நீ காமரூப்ய நுசஞ்சரன் -என்று விரும்பிய லோகங்களில் விரும்பிய உருவம் எடுக்கலாம் என்றதே என்பர்
அப்படி அல்ல கர்ம தொடர்பு நீங்கியதால் தடைபடாத ஞானம் கொண்ட முக்தனுக்கு அனைத்து செல்வங்களும் அனுபவிக்கக் கிட்டும் என்பதே கருத்து
ஜகத் வியாபாரம் போன்றவை இல்லாமல் இருத்தலே இவனது ஐஸ்வர்யம் என்றும் ஜகத் வியாபாரம் இல்லை என்றும் தெளிவாகிறது –
———————————————————————————————————————–
2-4-19-விகாராவர்த்தி ஸ ததா ஹி சிததிமாஹ-
மாற்றங்கள் உள்ள அல்ப இன்பம் அனுபவிக்கிறான் என்றால் முக்தனின் செல்வமும் அல்பம் என்றது ஆகுமோ என்னில் மாற்றம் இல்லாத பர ப்ரஹ்மத்தையும் அனுபவிக்கிறான் என்கிறது
தைத்ரியம் -2-7-யதா ஹி ஏவ ஏஷ ஏதஸ்மின் அத்ருச்யே அநாத்ம்யே அநிக்ருதே அநிலயநே அபயம் பிரதிஷ்டாம் விந்ததே அத ச அபயம் கதோ பவதி -என்றும்
ரசோவை வை ச ரசம் ரசம் ஹி ஏவ அயம் லப்த்வா ஆனந்தி பவதி என்றும்
கட தஸ்மின் லோகா ச்ரிதா சர்வே தது நாத்யேதி கச்சந-என்றும்
சாந்தோக்யம் -7-25-2- சர்வேஷூ லோகேஷூ காமசார -என்றும்
அனைத்து செல்வங்களுடன் கூடிய பர ப்ரஹ்மத்தை அனுபவிக்கும் பொழுது அனைத்தையும் அனுபவிப்பதாகவே கூறப்பட்டது
இதனை விடுத்து ஜகத் வியாபாரம் போன்ற எதுவும் அங்கெ கூறப் பட வில்லையே
—————————————————————————————-
4-4-20-தர்சயத ச ஏவம் ப்ரத்யஷாநுமாநே-
ஜகத் வியாபாரம் பரம புருஷனுக்கே உரியவை என்று ஸ்ருதிகள் கூறுமே
தைத்ரியம் -2-8- பீஷாச்மாத்வாத பவதே பீஷோதேதி ஸூ ர்ய பீஷாஹ்மாத் அக்னிச்ச இந்த்ரச்ச ம்ருத்யுர்தாவதி பஞ்சமா இதி -என்றும்
ப்ருஹத் -3-8-9-ஏதஸ்ய வா அஷரச்ய பிரசாசநே கார்க்கி ஸூர்யா சந்திர மசௌ வித்ருதௌ திஷ்டத -என்றும்
ப்ருஹத் -2-4-22-ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி ஏஷ பூதபால ஏஷ சேதுர்விதரண ஏஷாம் லோகா நாம் அசம்பேதாய -என்றும்
ஸ்ரீ கீதை -9-10-மாயத்யஷேண பிரகிருதி ஸூ யதே ச சராசரம் ஹேது நாகேன கௌந்தேய ஜகத்தி பரிவர்த்ததே -என்றும்
10-42-விஷ்டாப்யாஹமிதம் க்ருத்ச்னம் ஏகாம் சேன ஸ்திதோ ஜகத் -என்றும்
இது போலே முக்தனின் சங்கல்பம் ஆனந்தம் அனைத்துக்கும் பர ப்ரஹ்மமே காரணம் என்று ஸ்ருதிகள் முழங்கும்
தைத்ரியம் -2-7-ஏஷ ஹி ஏவ ஆனந்தயாதி -என்றும்
ஸ்ரீ கீதை -14-26-மாம் ச யோ அவ்யபிசாரேண பக்தி யோகேன சேவதே ச குணான் சமதீத்ய ஏதான் ப்ரஹ்ம பூபாய கல்பதே -என்றும்
14-27-ப்ரஹ்மணோஹி பிரதிஷ்டாஹம் அம்ருதச்ய அவ்யயச்ய ச சாச்வதச்ய ச தர்மஸ்ய ஸூ கஸ்ய ஏகாந்தி கஸ்ய ச -என்றும்
அனைத்தும் அவன் இச்சை சங்கல்பம் அடியாகவே என்றதாயிற்று
—————————————————————————————
4-4-21-போக மாத்ர சாம்ய லிங்காச்ச
ப்ரஹ்ம அனுபவம் என்னும் போகம் மூலமாகவே முக்தனுக்கு ப்ரஹ்மத்துடன் சாம்யம் கூறுவதால் ஜகத் வியாபாரம் இல்லாமல் உள்ளதே முக்தனின் ஐஸ்வர்யம் என்றதாயிற்று
ப்ரஹ்மத்துடன் கூடி இருந்தே முக்தன் அனுபவிக்கிறான் என்கிறது தைத்ரியம் -2-1- சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா -என்கிறது –
———————————————————————————-
4-4-22-அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத் —
பரமாத்மாவாலே முக்தனின் ஐஸ்வர்யம் என்றால் அவன் ஸ்வ தந்த்ரன் அன்றோ -சம்சாரத்துக்கு தனது சங்கல்பத்தினால் அனுப்புவானோ என்னில்
அகில ஹேய ப்ரத்ய நீகன்
சமஸ்த கல்யாண குணகன்
ஆதி ஸ்வாமி எங்கும் வியாபித்து உள்ளவன் சத்ய சங்கல்பன்
சர்வஜ்ஞன் வாத்சல்யம் மிக்கவன் பரம காருணிகன்
ஒப்பார் மிக்கார் இல்லாதவன்
தானே கர்ம பலன்களை நீக்கி தன்னை அனுபவிக்கப் பண்ணுபவன்
இவற்றை எல்லாம் ஸ்ருதி மூலமே அறிகிறோம்
அதே ஸ்ருதி மீண்டும் அனுப்புவது இல்லை என்கிறதே
சாந்தோக்யம் -8-12-1-ச கல்வேவம் வரத்தயன் யாவதாயுஷம் ப்ரஹ்ம லோகம் அபி சம்பத்யதே ந புனராவர்த்ததே -என்றும்
ஸ்ரீ கீதை -8-15-மாமுபேத்ய புனர்ஜன்ம துக்காலய சாஸ்வதம் நாப் நுவந்தி மஹாத்மன சம்சித்திம் பரமாம் கதா -என்றும்
8-16-ஆ ப்ரஹ்ம புவனால்லோகே புனராவர்த்தின அர்ஜுன மாமுபேத்ய து கௌந்தேய புனர் ஜன்ம ந வித்யதே -என்றும்
சொல்வதால் அவன் அனுப்ப மாட்டான்
பர ப்ரஹ்மத்தையே அனுபவிக்கும் சுருக்கம் இல்லாத ஞானம் கொண்ட முக்தன் வேறு ஒன்றிலும் விருப்பம் இல்லாமல் இருக்க மீண்டும் பிறப்பான் என்ற அச்சம் தேவை இல்லை
தனக்கு மிகவும் பிரியமான ஞானி ஸ்ரீ கீதை -7-17-ப்ரியோ ஹி ஜ்ஞாநின அத்யர்த்தம் அஹம் ச ச மம்ப்ரிய -என்றும்
‘7-18-உதாராஸ் சர்வே ஏதைவி ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் ஆஸ்தி தஸ் சஹி யுக்தாத்மா மாமேவா நுத்தமாம் கதிம் -என்றும்
7-19- பஹூ நாம் ஜன்மந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே வாஸூதேவஸ் சர்வம் இதி ச மஹாத்மா ஸூ துர்லப
இப்படி கிடைப்பதற்கு மிகவும் அரியவன் நான் விடுவேனோ
ஸ்ரீ பாஷ்யம் நியமிக்கப் படுவதால் இரண்டு தடவை -அநாவ்ருத்தி சப்தாத் –அநாவ்ருத்தி சப்தாத் —
——————————————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply