ஸ்ரீ ராமானுஜ ரகஸ்ய த்ரயம் –சரம பர்வ முமுஷுப்படி -ஸ்ரீ அழகப்ப ஐயங்கார் அருளிச் செய்த வியாக்யானம் –

ஸ்ரீ ராமானுஜ ரகஸ்ய த்ரயம் –சரம பர்வ முமுஷுப்படி –

1-ஓம் நமோ ராமாநுஜாய

2-ஸ்ரீ மத் ராமானுஜ சரணவ் சரணம் பிரபத்யே ஸ்ரீ மதே ராமாநுஜாய நம

3-சர்வ கர்மாணி ஸந்த்யஜ்ய ராமானுஜ இதி ஸ்மர -விபூதிம் சர்வ பூதேப்யோ ததாமி ஏதத் விரதம் மம –

———

ஸ்ரீ திருமந்திர பிரகரணம்

ஓம் நமோ ராமாநுஜாய

இந்த மந்த்ரம் தியாக மண்டபமான பெருமாள் கோயில் –திரு அநந்த சரஸின் கரையிலே அநாதிகாரிகளுக்கு
சொல்ல வேண்டாம் என்று ஆணை இட்டு-எம்பெருமானார் ஆழ்வானுக்கு பிரசாதிக்க-
அது தன்னையே தாரகமாக விஸ்வசித்து-தம்மை விஸ்வசித்து இருப்பார்களுக்கு
இந்த மந்த்ரம் தன்னையே பிரசாதித்து அருளினார்-

திரு மந்த்ரமும் இந்த ராமானுஜ மந்த்ரத்தை கர்ப்பத்துக்குள்-வைத்துக் கொண்டு இருக்குமே
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொது அது-எம்பெருமானாருக்கு உண்டான பூர்த்தி ஈஸ்வரனுக்கு இல்லை
ஈஸ்வரன் பூர்த்தியும்-பிராட்டிமார் பூர்த்தியும்-நித்ய ஸூரிகள் ஆழ்வார் பூர்த்தியும்-ஆச்சார்யர்கள் உடைய
சகல பூர்திகளும் எம்பெருமானார்க்கே உண்டு –

———

ஸ்ரீ த்வய பிரகரணம்

ஸ்ரீ மத் ராமானுஜ சரணவ் சரணம் பிரபத்யே ஸ்ரீ மதே ராமாநுஜாய நம –

இந்த த்வய மந்த்ரம்-–மிதிலா சாலக்ராமத்தில் -எம்பெருமானார் வடுக நம்பிக்கு பிரசாதித்து–
ஸ்ரீ பாத தீர்த்தமும் திருவடிகளையும்-பிரசாதித்து அருளினார்

———

ஸ்ரீ சரம ஸ்லோக பிரகரணம்

சர்வ கர்மாணி ஸந்த்யஜ்ய ராமானுஜ இதி ஸ்மர -விபூதிம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் விரதம் மம –

இவ்வர்த்தம் ஞான மண்டபத்தில் -திரு நாராயண புரத்தில்-இரவு காலத்தில்
முதலியாண்டான்-எம்பார்-திரு நாராயண புரத்து அரையர்-மாருதி யாண்டான்-உக்கலம்மாள்
இவர்கள் ஐவருக்கும் அருள-மகா மதிகள் இவர்கள் விஸ்வசித்து-மகா ரகசியம் என்று அருளிச் செய்து போந்தனர் –

————–————-

நசேத் ராமானுஜேத் யேஷா சதுரா சதுரக்ஷரீ –காம வஸ்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸ

ஸ்ரீ மத் ராமானுஜ குரவே நம

வரதார்ய குரோ புத்ரம் தத் பாதாப்ஜ ஏக தாரகம்
ஞான பக்த்யாதி ஜலதிம் வந்தே ஸூந்தர தேசிகம்

பாதுகே யதி ராஜஸ்ய கத யந்தி யாதாக்யயா
தஸ்ய தாசரதே பாதவ் சிரஸா தாரயாம் யஹம்

மகரே ஹஸ்த நக்ஷத்ரே சர்ப்ப நேத்ராம்ச சம்பவம்
ஸ்ரீமத் கூர குலாதீசம் ஸ்ரீ வத் ஸாங்கம் உபாசமஹே

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம உக்திம் அதீமஹீ
யதுக்தயஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்

——————————-————————————————————————————————————————

மந்த்ர ரஹஸ்யம் -திருமந்திரம் -மந்த்ர ராஜா-ஸாஸ்த்ர ருசி பரிக்ருஹீதம்
விதி ரஹஸ்யம்-ஈஸ்வர ருசி பரிக்ருஹீதம்–சரம ஸ்லோகம்
அனுசந்தான-ரஹஸ்யம் -த்வயம் -மந்த்ர ரத்னம்-ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம்

மந்த்ரத்திலும் மந்திரத்தில் உள்ளீடான வஸ்துவிலும் மந்த்ர ப்ரதானனான ஆச்சார்யன் பக்கலிலும் ப்ரேமம் கனக்க இருக்க வேண்டும்

ஆத்ம குணங்கள் கை புகுந்தால் ஆச்சார்யன் கை புகுரும்-அதனால் -மந்த்ரம் -உள்ளீடான நாராயணன் கை புகுவான் – அதனால் வைகுந்தம் மற்றது கை புகுருமே

விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ-பஞ்சம அந்திம உபாயம் –ஆச்சார்யார் அபிமானமே உத்தாரகம்

——–

சைத்ரீ ஸ்ரவண நக்ஷத்ரே ஸ்ரீ மத் வத்ஸ குலோத்பவம்
வரதார்ய குரோர் சிஷ்யன் ஸூந்தராயம் சமாஸ்ரயே

ஆத்தான் வரதாசார்யர் திருக்குமாரர் சிஷ்யன்-தெய்வ நாயகப் பெருமாளே அவதாரம் என்பர்

வரதார்ய குரோர் புத்ரம் ஸத் பதாபி தாரகம்
ஞான பக்த்யாதி ஜலதிம் வந்தே ஸூந்தர தேசிகம்

பெரிய சடகோப ஐயங்கார் இவருடைய திருக்குமாரர்
ஞான த்ருஷ்ட்டி -இவர் கடாக்ஷத்தாலே ஞானம் பெறுகிறோம்
வான மா மலை ஜீயருடைய அஷ்டதிக் கஜங்களில் ஒருவர்

சாரார்த்த மாலை
ஈ ட்டுக்குப் பாட்டுத்தொறும் -பிராமண உரை
திருப்பாவை தாத்பர்யம்
ப்ராமணத் திரட்டுக்கள்-திருமந்திர யோஜனை

எம்பெருமானார் நேராக எம்பாருக்கு அருளி -குரு பரம்பரை மூலம் நமக்கு வந்தவை

———-

ஞான த்ருஷ்டி ஸ்ரீ அழகப்ப ஐயங்கார் அருளிச் செய்த வியாக்யானம் –

அநாதி காலம் அவித்யாதி சஞ்சித புண்ய பாப ரூப கர்ம வஸ்யனாய்
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூப சதுர் வித சரீரங்களைப் பரிக்ரஹித்து
பத்த சம்சாரியாய்
துக்க சாகர மக்னனாய்
தத் நிச் தரண உபாயம் அறியாத சேதனனுக்கு

நிர்ஹேதுக பகவத் கடாஷத்தாலே
அத்வேஷ அபிமுக்ய சத் சங்கதிகள் உண்டாய்
சதாச்சார்ய சமாஸ்ரயணம் பண்ணின சரம அதிகாரிக்கு
மோஷ ஏக ஹேதுவாய்
பரம ரகஸ்யமான
ஸ்ரீ ராமானுஜ ரஹஸ்ய த்ரயம் அறிய வேணும்

(ஈஸ்வரஸ்ய ச ஸௌஹார்த்தம் யத்ருச்சா ஸுக்ருதம் ததா. விஷ்ணோ: கடாக்ஷம்
அத்வேஷம் ஆபிமுக்யம் ஸத் சங்கம் ச ஸாது ஸ்மோஹம் ஸதாசாரசம் ஸமாஸ்ரயம் –
ஆறு படிகள் -இவற்றையே காட்டும்)

——–

திருமந்திர பிரகரணம்

ஓம் நமோ ராமாநுஜாய —

-இந்த மந்த்ரம் தியாக மண்டபமான பெருமாள் கோயில் –திரு அநந்த சரஸின் கரையிலே அநாதிகாரிகளுக்கு சொல்ல வேண்டாம் என்று ஆணை இட்டு-எம்பெருமானார் ஆழ்வானுக்கு பிரசாதிக்க-
அது தன்னையே தாரகமாக விஸ்வசித்து-தம்மை விஸ்வசித்து இருப்பார்களுக்கு இந்த மந்த்ரம் தன்னையே பிரசாதித்து அருளினார்-

நசேத் ராமானுஜேத் யேஷா சதுரா சதுராஷரீ–காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருசா -ஆழ்வான் பணித்த படி

ஆச்சார்யஸ் ச ஹரி சாஷாத் சரரூபி ந சம்சய -என்றும் –
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து –பெரியாழ்வார் திருமொழி -5-2-8-என்றும்
சகல பிரமாணங்களாலே ஸ்ரீ மன் நாராயணனே ஆச்சார்யன் ஆகையாலே
தஸ்மின் ராமானுஜார்யே குரு ரிதி சபதம் பாதி -பெரியவாச்சான் பிள்ளை அருளிய ஸ்லோஹம்
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் எதிராஜோ ஜகத் குரு -என்றும்
ச ஏவ சர்வ லோகாநாம் உத்தர்த்தா நாத்ர சம்சய -என்றும்
ஆச்சார்ய பதம் என்று தனியே ஒரு பதம் -அது உள்ளது எம்பெருமானார்க்கே -என்று சொல்லுகிறபடியே
ஆச்சார்யா பூர்த்தி எம்பெருமானாருக்கே உண்டாகையாலே
அகார வாச்யர் எம்பெருமானார் ஆகை சித்தம் –

ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களாலே நிரசித்து
ஈஸ்வர சத்பாவத்தை அங்கீ கரிப்பித்து
சகல ஜகத் காரண பூதனான ஈஸ்வரனை உண்டாக்கின படியாலும்
ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம் -ஸ்ரீ கீதை -7-18- என்கிற ஈஸ்வர வாக்யத்தாலே
ஈஸ்வரன் சரீரமும் எம்பெருமானார் சரீரியுமாகையாலே
சரீரத்துக்கு உண்டான காரணத்வம்
சரீரிக்கே ஆகையாலும் –ஆதி காரணத்வம் எம்பெருமானாருக்கே -என்று சொல்லலாம் –

————–

திருமந்திர பிரகரணம்

ஓம் நமோ ராமாநுஜாய —

-இந்த மந்த்ரம் தியாக மண்டபமான பெருமாள் கோயில் –திரு அநந்த சரஸின் கரையிலே அநாதிகாரிகளுக்கு சொல்ல வேண்டாம் என்று ஆணை இட்டு-எம்பெருமானார் ஆழ்வானுக்கு பிரசாதிக்க-
அது தன்னையே தாரகமாக விஸ்வசித்து-தம்மை விஸ்வசித்து இருப்பார்களுக்கு இந்த மந்த்ரம் தன்னையே பிரசாதித்து அருளினார்-

நசேத் ராமானுஜேத் யேஷா சதுரா சதுராஷரீ–காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருசா -ஆழ்வான் பணித்த படி

ஆச்சார்யஸ் ச ஹரி சாஷாத் சரரூபி ந சம்சய -என்றும் –
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து –பெரியாழ்வார் திருமொழி -5-2-8-என்றும்
சகல பிரமாணங்களாலே ஸ்ரீ மன் நாராயணனே ஆச்சார்யன் ஆகையாலே
தஸ்மின் ராமானுஜார்யே குரு ரிதி சபதம் பாதி -பெரியவாச்சான் பிள்ளை அருளிய ஸ்லோஹம்
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் எதிராஜோ ஜகத் குரு -என்றும்
ச ஏவ சர்வ லோகாநாம் உத்தர்த்தா நாத்ர சம்சய -என்றும்
ஆச்சார்ய பதம் என்று தனியே ஒரு பதம் -அது உள்ளது எம்பெருமானார்க்கே -என்று சொல்லுகிறபடியே
ஆச்சார்யா பூர்த்தி எம்பெருமானாருக்கே உண்டாகையாலே
அகார வாச்யர் எம்பெருமானார் ஆகை சித்தம் –

அதில்
மந்த்ரம் இருக்கும்படி எங்கனே என்னில் –
எட்டு திரு அஷரமாய்-ஓம் என்றும்- நம என்றும்- ராமாநுஜாய என்றும்
மூன்று பதமாய் இருக்கும் –

இதில் முதல் பதமாய் –ஏகாஷரமான பிரணவம்
அகாரம் என்றும் உகாரம் என்றும் மகாரம் என்றும்
மூன்று திரு அஷரமாய் மூன்று பதமாய் இருக்கும் –

இரண்டாம் பதமான நமஸ்-ந- என்றும் -ம- என்றும் இரண்டு திரு அஷரமாய் இரண்டு பதமாய் இருக்கும்

மூன்றாம் பதமான ராமாநுஜாய பதம் அஞ்சு அஷரமாய்
ராம –என்றும் -அனுஜ -என்றும் இரண்டு பதமாய்
மேலே ஆய -என்று சதுர்தியாயும் இருக்கும் –

—————————————————————————————————————————————–

அகாரார்தம் –

இதுக்கு அர்த்தம் –
முதல் பதமான அகாரத்தாலே -எம்பெருமானாரைச் சொல்லுகிறது –
அகாரோ விஷ்ணு வாசக -என்றும்
அஷராணாம் அகரோஸ்மி–ஸ்ரீ கீதை -10-33-என்றும் –
அகாரத்தோ விஷ்ணு -அஷ்டஸ்லோகி -1
நாராயண வாசகமான அகாரம் எம்பெருமானாரைச் சொல்லுகிறபடி எங்கனே என்னில் –

சாஷான் நாராயணோ தேவ -க்ருத்வா மர்த்ய மயீம் தநும்
மக் நானுத்தரதே லோகன் காருண்யஸ் ச சாஸ்திர பாணினா –ஐயாக்ய சம்ஹிதை -என்றும்
ஆச்சார்யஸ் ச ஹரி சாஷாத் சரரூபி ந சம்சய -(சரரூபி-உலாவும் பெருமாள் இவரே)என்றும் –
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து –பெரியாழ்வார் திருமொழி -5-2-8-என்றும்
சகல பிரமாணங்களாலே ஸ்ரீ மன் நாராயணனே ஆச்சார்யன் ஆகையாலே

தஸ்மின் ராமானுஜார்யே குரு ரிதி ச பதம் பாதி -பெரியவாச்சான் பிள்ளை அருளிய ஸ்லோஹம்
ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் எதிராஜோ ஜகத் குரு -என்றும்
ச ஏவ சர்வ லோகாநாம் உத்தர்த்தா நாத்ர சம்சய -என்றும்
ஆச்சார்ய பதம் என்று தனியே ஒரு பதம் -அது உள்ளது எம்பெருமானார்க்கே -என்று சொல்லுகிறபடியே
ஆச்சார்ய பூர்த்தி எம்பெருமானாருக்கே உண்டாகையாலே
அகார வாஸ்யர் எம்பெருமானார் ஆகை சித்தம் –

————-

ஆனால் 1-ஜகத் காரணத்வமும்
2-ஸர்வ ரஷகத்வமும்
3-ஸர்வ சேஷித்வமும்
4-ஸ்ரீய பதித்வமும்
அகாரத்திலே பிரதிபாதிக்கையாலே
எம்பெருமானார் இடத்தில் இவை உண்டாக வேண்டாவோ -என்னில் –
உண்டு -எங்கனே என்னில் –

ஈஸ்வரனே இல்லை என்றும்
உண்டானாலும் நிமித்த மாத்ரமே என்றும்
கர்மம் காரணம் என்றும்
சேதனன் காரணம் என்றும்
பிரதானம் காரணம் என்றும்
சொல்லுகிறவர்களுடைய மதங்களை
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களாலே நிரசித்து
ஈஸ்வர ஸத்பாவத்தை அங்கீ கரிப்பித்து
ஸகல ஜகத் காரண பூதனான ஈஸ்வரனை உண்டாக்கின படியாலும்

ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம் -ஸ்ரீ கீதை -7-18-(அறிவார் உயிரானாய்)
என்கிற ஈஸ்வர வாக்யத்தாலே
ஈஸ்வரன் சரீரமும் எம்பெருமானார் சரீரியுமாகையாலே

சரீரத்துக்கு உண்டான காரணத்வம் சரீரிக்கே ஆகையாலும் –
ஆதி காரணத்வம் எம்பெருமானாருக்கே -என்று சொல்லலாம் –
காரணம் ஆகிறது உண்டாகப் பண்ணின வஸ்து இறே

கபர்த்தி மத கர்த்தமம் கபில கல்பந வாகுராம்
துரத்யய மதீத்ய தத் த்ருஹிண தந்தர யந்த்ரோதரம்
குத்ருஷ்டி குஹநா முகே நிபதத பர ப்ரஹ்மண
கர க்ரஹ விசஷணோ ஜயதி லஷ்மணோசயம் முநி-யதிராஜ சப்ததி -38-என்றும் பிரமாணம் உண்டாகையாலே- சகல ஜகத் காரணத்வம் எம்பெருமானாருக்கே உள்ளது –

பர ப்ரஹ்மம் —
சைவம் என்கிற சேற்றில் விழாமல் அதைத் தாண்டி,
கபிலரின் சாங்க்யமத வலையில் அகப்படாது தப்பித்து,
சிக்கல் உள்ள சார்வாகமத யந்த்ர தந்த்ரங்களில் புகாமல் பிழைத்து, வந்தது.
சங்கரரின் மாயாவாதத்தில் –அதன் வாயில் அகப்பட இருந்த சமயத்தில்,
பர ப்ரஹ்மத்தைக் கைகொடுத்துக் காப்பாற்றியவர் , யதிராஜர் .
அதனால், அவர் மேன்மையாக விளங்குகிறார் என்கிறார்
ஜயகோஷம் செய்கிறார்–ஜய ஜய யதிராஜ

பரம் பொருளான புருஷோத்தமனைப் பல பெரிய ஆபத்துக்களின் நின்றும் ரக்ஷித்து அருளினவர் எம்பெருமானார் –
கடக்க அரிதான சைவம் என்ற சேற்றைக் கிடந்து சாங்கியருடைய அப்ரமாணிகமான மதமாகிற வலையில் இருந்து தப்பி –
த்ருஹிண -மதமாகிற -யோக மதம் -சுழலும் யந்திரத்தின்-மத்யத்தையும் தாண்டி
குத்ருஷ்டிகளான குகை வாயிலில் விழுந்து கொண்டு இருந்த பர ப்ரஹ்மம்
எம்பெருமானைக் கை கொடுத்து ஆபத்தின் நின்றும் விடுவிக்கும் சாமர்த்தியம் வாய்ந்த
இந்த லஷ்மண முனி விஜய ஸ்ரீ யுடன் பிரகாசிக்கிறார் –

————————————

சர்வ ரஷகத்வம் -எங்கனே என்னில் –
அதிகாரி நியமம் இன்றிக்கே
ப்ரஹ்ம ஷத்ரிய வைஸ்ய ஸூத்ராதிகளையும்
ஸ்திரீ பால வ்ருத்த முக
ஜட-அந்த -பதிர -பங்கு -பசு பஷி மிருகாதிகளையும்
ரஷிக்கையாலே சர்வ ரஷகத்வமும் உண்டு என்க-

(அநிஷ்ட நிவ்ருத்தி காமாதி தோஷங்களைப் போக்கி அருளி-இஷ்ட பிராப்தி -விஷ்ணு லோக மணி மண்டப மார்க்கதாயீ)

——

சர்வ சேஷித்வம் எங்கனே என்னில்
நம்பெருமாள்
திருவேங்கடமுடையான்
தேவப் பெருமாள்
அழகர்
திருக் குறுங்குடி நம்பி
திரு நாராயணரான யாதவாத்ரி நாதன்
முதலியவர்கள்
உபய விபூதியைக் கொடுத்தும்
ஜாமாதாவாயும்
சிஷ்யனாயும்
குமாரனாயும்-சேஷப் படுகையாலும்

நம் ஆழ்வார் இவருடைய பவிஷ்ய வவதாரத்தைக் கடாஷித்து திருவாய் மொழியிலே
கலியும் கெடும் கண்டு கொண்மின் -5-2-1- என்றும்
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் -5-2-2-
இவருடைய சம்பந்தத்தாலே எல்லாரும் வீடு பெறுவார்கள் என்றும்
நமக்கு இவர் சம்பந்தத்தாலே உஜ்ஜீவனம் என்றும்
பொலிக பொலிக பொலிக -5-2-2-என்றும்
மங்களாசாசனம் பண்ணி

ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு மேல் உள்ள அவதார ரகஸ்யத்தையும் அறிவித்து
பவிஷ்யதாச்சார்யா விக்ரகத்தையும் பிரசாதித்து அருள

அவர் உய்யக் கொண்டாருக்கும்
மணக்கால் நம்பிக்கும்
ஆளவந்தாருக்கும்
அவர் திருக் கோட்டியூர் நம்பிக்கும் பிரசாதிக்கையாலே முன்புள்ள முதலிகளும்

சமகாலத்திலே
கூரேச குருகேச கோவிந்த தாசரதிகள் முதலான எழுபத்து நாலு
சிம்ஹாசன ஸ்தானச்தரும்
700 த்ரிதண்ட சன்யாசிகளும்
பன்னீராயிரம் ஏகாங்கிகளும்
எண்ணிறந்த ஸ்ரீ வைஷ்ணவர்களும்
ராஜாக்களும்
ஸ்ரீ நாம தாரிகளும்
பட்டர் நஞ்சீயர் நம்பிள்ளை வடக்குத் திரு வீதிப் பிள்ளை
பெரியவாச்சான் பிள்ளை பிள்ளை லோகாச்சார்யர்
முதலான பின்புள்ள முதலிகளும்
அவர்க்கே சேஷப் படுகையாலே -சர்வ சேஷித்வமும் உண்டு என்க

——–

இவை இத்தனையும் உண்டு என்னாலும் ஸ்ரீய பதித்வம் சொல்லலாமோ என்னில் -சொல்லலாம்
ஸ்ரீ –சப்தத்தாலே கூரத் ஆழ்வானை சொல்லி
பதி என்று எம்பெருமானாரை சொல்லலாமே

ஆனால் ஸ்ரீ சப்தத்தாலே கூரத் ஆழ்வானை சொல்லுதல் எங்கனே என்னில்
1-கந்தல் கழிந்தால் சர்வர்க்கும் நாரீணாம் உத்தமை உடைய அவஸ்தை வரக் கடவதாய் இருக்கும்
ஆறு பிரகாரத்தாலே பரி சுத்த ஆத்ம ஸ்வரூபத்துக்கு தத் சாம்யம் உண்டாய் இருக்கும்(அநந்யார்ஹ சேஷத்வம்-அநந்ய சரண்யத்வம்-அநந்ய போக்யத்வம்
விஸ்லேஷத்தில் தரியாமை-ஸம்ஸ்லேஷத்தில் தரிப்பது ததேக நிர்வாஹகத்வம்) -என்பதால் ( மொழியைக் கடக்கும் பெரும் புகழான் )ஆழ்வானுக்கும் உண்டாகையாலும்

2-ஈஸ்வரனுக்கு அநேக நாய்ச்சிமார் உண்டானாலும்
அக்ர மகிஷி பெரிய பிராட்டியாரைப் போலே
அக்ர்யம் யதீந்திர சிஷ்யாநாம் ஆத்யம் வேதாந்த வேதிநாம்-என்கிறபடியே
எம்பெருமானாருக்கு பிரதான சிஷ்யர் ஆகையாலும்

3-ஸ்ரீ வஸ்த சிஹ்ன சரணம் யதிராஜ மீடே -யதிராஜ விம்சதி -2 -என்றும்
கூராதி நாத குருகேச முகாத்ய பும்ஸாம் பாத அனு சிந்தந பர சத்தம் பவேயம் –யதிராஜ விம்சதி -3-
மொழியைக் கடக்கும் பெரும் புகழான் —-நம் கூரத் ஆழ்வான் சரண் கூடிய பின் –எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே -7-
இப்படி மணவாள மாமுனிகள் -அமுதனார் -ஆழ்வானை புருஷகாரமாக ஆஸ்ரயிக்கை யாலும்
எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயித்ததால் தமக்கு ஸ்வரூப லாபமும்
மற்றையவர்களுக்கு தம்மை ஆஸ்ரயித்தே ஸ்வரூப லாபமும் பெற வேண்டுகையாலே
ஸ்ரீ சப்தத்தாலே ஸ்ரீ யதே ஸ்ரேயதே என்கிற வ்யுத்புத்தி த்வயார்த்தமும்
இவர் இடத்திலே உண்டாகையாலே ஸ்ரீ சப்தத்தாலே ஆழ்வானைச் சொல்லலாம்

——–

இன்னமுத மூட்டுகேன் இங்கே வா பைங்கிளியே
தென்னரங்கம் பாட வல்ல சீர்ப் பெருமாள் –பொன்னஞ்
சிலை சேர் நுதலியர் வேள் சேரலர் கோன் எங்கள்
குலசேகரன் என்றே கூறு –ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த தனியன் –

கிளியும் கற்ப்பித்ததே சொல்லும் –
இவரும்-கற்பியா வைத்த மாற்றம் இறே சொல்லுவது –
மேல் சொல்லுமவர் அன்றே -சொன்னதைச் சொல்லுமவர் இறே
ஆகையால் ஸ்ரீ கூரத் தாழ்வான் போல்வாரைக் கொண்டு ஸ்ரீ குலசேகர ஆழ்வார் வைபவத்தை கூறுவிக்கிறார்– இன்னமுத மூட்டுகேன் -கூறு என்கிறார்-

———-

ஆனால் புருஷகாரம் ஆம் போது
1-கிருபையும் 2-பாரதந்த்ர்யமும் அனந்யார்ஹ சேஷத்வமும் வேணும் -என்றபடியே
ஆழ்வானுக்கும் இம் மூன்றும் உண்டே –

1-கிருபையாவது -பர துக்க துக்கித்வமும் -பர துக்க அசஹிஷ்ணுத்வமும் ஆகையாலே
வாழை இலை அறுத்து மூர்ச்சையாய் விழுந்ததினாலும்-
குழந்தை பிறந்ததும் நம்பெருமாள் முன் இந்த ஜீவன் சம்சாரத்தில் பிறந்து அவஸ்தை படுகிறதே என்று முறை இட்டதாலும்-
சர்பாஸ்கதமான மண்டூகத்தின் உடைய ஆர்த்த நாதத்தைக் கேட்டு ஆழ்வான் மோஹித்து விழுந்தாரே –
பர துக்க துக்கித்வம்
இது தானே
நான் பெறுகிற லோகம் நாலூரானும் பெற வேணும் என்பதினாலே –பர துக்க அசஹிஷ்ணுத்வமும் பிரகாசித்ததே-
இத்தால் கிருபை வெளிப்பட்டது –

——–

2-சரம ஸ்லோகார்த்தம் பெற்றுக் கொள்ள மாச உபவாசம் இருக்கச் சொல்லி நியமித்தபடி செய்திருக்கையாலே
பாரதந்த்ர்யம் வெளிப்பட்டது-

பாரதந்தர்யமாவது –
ஆச்சார்யர் நியமித்த படியே செய்கை -எங்கனே என்னில்-
ஸ்ரீ எம்பெருமானார் திருக் கோட்டியூர் சந்நிதிக்கு பதினெட்டு தரம் எழுந்து அருளி -அவர் பக்கலிலே லபித்த சரமார்த்தத்தை
ஸ்ரீ ஆழ்வான் -அடியேனுக்கு பிரசாதித்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய –
அப்படியே –சம்வத்சரம் ததர்த்தம் வா மாச த்ரய மதாபி வா பரீஷ்ய விவித உபாயை-க்ருபயா நிஸ்ப்ருஹோ வதேத் -என்கிறபடியே –
ஒரு சம்வத்ஸரமாவது -ஆறு மாசமாவது -மூன்று மாஸமாவது -விவித உபாயங்களினாலே பரீக்ஷித்து -நிஷ் காமனாய்-
அர்த்தங்களை பிரசாதித்து அருள வேணும் என்று சாஸ்திர ப்ரதிபாதனங்கள் உண்டாகையாலே –
அப்படியே பரீக்ஷித்து ஸ்ருதமான அர்த்தங்களை ப்ரசாதித்து அருளத் திரு உள்ளமாய் ஸ்ரீ ஆழ்வானுக்கு மாஸ உபவாசம் நியமிக்க –
நியமித்த படியே இருந்தாராகையாலே பாரதந்தர்யம் பிரகாசித்தது –

———-

3-அநந்யார்ஹத்வம் ஆவது –
கிருமி கண்ட வியாஜ்யத்தாலே ஸ்ரீ உடையவர் வெள்ளை சாற்றி மேல் நாட்டுக்கு
எழுந்து அருளின போது கிருமி கண்டன் ஸ்ரீ பெருமாள் பரிகரத்தை நெருக்கிக் கொண்டு போருகையாலே-
இந்த கலகம் உடையவரால் அன்றோ என்று அவர் திருவடி சம்பந்தம் உள்ளவர்கள் ஒருவரும் ஸ்ரீ கோயிலுக்குள் புகுந்து
ஸ்ரீ பெருமாளை சேவிக்க விட வேண்டாம் என்று ஆஞ்ஜை இட்டு வைக்க
ஸ்ரீ கூரத் தாழ்வான் தரிசனத்தை நிர்வகிக்கைக்காக கிருமி கண்டன் இடத்தில் புக்கு அவனாலே திரு நயனங்களுக்கு உபத்திரவம் வந்து –
மீண்டு ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளி -அங்குற்றை செய்தி அறியாமல் பெருமாளை சேவிக்க எழுந்து அருளினை அளவிலே –
ஒருவன் ஆழ்வானை உள்ளே புகுராதே என்று என்று தகைய -ஒருவன் தகையாதே கோயிலுக்குள் புகுரும் என்ன –
அவ்வளவில் ஸ்ரீ ஆழ்வான் திகைத்து நின்று இங்குற்றை விசேஷம் எது என்று திருவாசல் காக்குமவர்களைக் கேட்க –
அவர்களும் எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தம் உள்ளவர்கள் ஒருவரையும் பெருமாளை சேவிக்க விட வேண்டாம்
என்று ஆஞ்ஜை இட்டு தகைத்து கிடக்கிறது என்ன –
ஆகில் நீங்கள் என்னை புகுரச் சொல்லுவான் என் என்ன –
ஆனாலும் நீர் எல்லாரையும் போல் அன்றிக்கே நல்ல குணங்கள் உடையவர் ஆகையால் புகுரச் சொன்னோம் என்ன –
ஆழ்வான் அத்தைக் கேட்டு -ஜல சந்த்ரனை போலே நடுங்கி -நாலடி பின் வர-
ஆத்ம குணங்கள் உண்டானால் ஆச்சார்ய சம்பந்தம் உண்டாகும் என்று சாஸ்திரம் சொல்ல-
எனக்கு உள்ள இவை எம்பெருமானார் சம்பந்தத்தை அறுத்துக் கொள்ள ஹேதுவாய் விட்டதோ-என்று வியாகுலப் பட்டு
தம்மையும் மிகவும் நொந்து கொண்டு-எனக்கு  
பேற்றுக்கு எம்பெருமானார் திருவடி சம்பந்தமே அமையும்
இந்த சம்பந்தம் ஒழிந்த பகவத் சேவையும் வேண்டாம் என்று திரு மாளிகைக்கு எழுந்து அருளினார் அன்றோ -என்றதாலும்

ஒரு காலத்தில் ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளத்தில் தம்மை சீறி அருளினார் என்று கேட்டு-அவருக்கே சேஷமாய் இருந்ததாகில்
அவருடைய விநியோக பிரகாரம் கொண்டு கார்யம் என் -என்று அருளிச் செய்ததாலும்
அனந்யார்ஹத்வம் வெளிப்பட்டது

என்று இவ் வர்த்தங்கள்
மாணிக்க மாலை
வார்த்தா மாலை
அந்திம உபாய நிஷ்டை போன்ற கிரந்தங்களில் அருளிச் செய்கையாலும்

இத்தால் ஸ்ரீ சப்தத்தாலே ஸ்ரீ கூரத் தாழ்வானைச் சொல்லி அவருக்கு பதி என்கையாலே –
ஸ்ரீ யபதித்வமும் எம்பெருமானாருக்கு உண்டு என்றது ஆயிற்று-

ஸ்ரீ திருவரங்கம் கோயில் சாவியை உடையவர் இடம் கொடுத்தல்
ஸ்ரீ பெரிய நம்பி பின்னே திரு வீதி பிரதஷிணம் சென்றது
ஸ்ரீ உடையவர்க்கு முன்பே ஸ்ரீ பரமபதம் சென்ற விருத்தாந்தம்-மூலமும் இவ்வர்த்தம் ஸித்தம்

——————————-

உகாரார்தம்

அந்ய சேஷத்வ நிவ்ருத்தியும்
அனந்யார்ஹ சேஷத்வமும்
இவ்விடத்தில் அந்ய சேஷத்வ நிவ்ருத்தி ஈஸ்வர சேஷத்வத்தை சொல்லுகிறது
ஸ்ரீ வடுக நம்பி -அடியேன் –உங்கள் பெருமாளை சேவிக்க வந்தால்
எங்கள் பெருமாள் பால் பொங்கிப் போகாதோ -என்ற வார்த்தையை நினைப்பது
நித்ய சத்ருவாய் இறே இது இருக்கும்

(மன ஜ்ஞானே–மகாரோ ஜீவா வாசக–ஜாத்யேகவசனம்-அனைவரையும் குறித்தாலும்
மகராஸ்து தயோர் தாச -என்று யதீந்திர பிரவணர் -மணவாள மா முனியையே சொல்லும் என்பர் ஞானாதிகர்கள்

நமஸ் -அர்த்தம்–ததீய பாரதந்த்ர்யமே சொல்லும்
த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ யத் தத் தாஸ தைகரசதா விரதா மமாஸ்து -எதி ராஜ விம்சதி -16-
ஈஸ்வர பாரதந்த்ர்யம் சர்வாத்ம சாதாரணம்-எம்பெருமானார் பாரதந்த்ர்யம் -கதிபய சாதாரணம்-ததீய பாரதந்த்ர்யம் -அசாதாரணம்
எம்பெருமானாருக்கு சேஷம் ஆவதே ஸ்வரூபம்–அவர் திருவடிகளில் கைங்கர்யமே புருஷார்த்தம் –
இவை இரண்டுக்கும் சேர்ந்த உபாயம் எம்பெருமானார் திருவடிகளே-ஸ்வரூபத்துக்கும் பிராப்யத்துக்கும் சேர்ந்து இருக்க வேணுமே பிராபகம்
பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி-அப் பேறு அளித்ததற்கு ஆறு ஒன்றும் இல்லை மற்று அச் சரண் அன்றி -45
ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமனத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்யா அபிமானம் ஒழிய வேறு கதி இல்லையே
இதுவே நமஸ் பதார்த்தம்)

———————————————-
மகாரார்தம் –

மன ஜ்ஞானே
மகாரோ ஜீவ வாசக
ஜாத்யேகவசனம்
அனைவரையும் குறித்தாலும்-(எம்பெருமானாருடைய தாஸ்யமாய் இருப்பவரே மகார வாஸ்யன்)மகராஸ்து தயோர் தாச -என்று ஸ்ரீ யதீந்திர பிரவணர் –
ஸ்ரீ மணவாள மா முனியையே சொல்லும் என்பர் ஞானாதிகர்கள்

————————————————————-
ஆக
பிரணவத்தால்
சகல ஆத்மாக்களும் ஸ்ரீ எம்பெருமானாருக்கே சேஷம் என்று சொல்லியதாயிற்று

—————————————————————————————————————————————–

(நமஸ் -அர்த்தம்–ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்வய நிவ்ருத்தி
அகண்ட நமஸ்-ஒரே சொல் – -வணக்கம்
சகண்ட நமஸ்-பிரித்து –ந மம -நான் எனக்கு உரியன் அல்லன் -ஸ்வாதந்த்ர நிவ்ருத்தி ஆகவே பரனே தந்திரம் -பிரதானம் -பரதந்த்ரன்-பராகாஷ்டை ததீய பாரதந்தர்யம்
ஓம் நம -ஸ்வரூப சிஷை
நமோ நம -உபாய சிஷை
ராமானுஜாய நம -பிராப்தி சிஷை

எம்பெருமானாருக்கு சேஷம் ஆவதே ஸ்வரூபம்–அவர் திருவடிகளில் கைங்கர்யமே புருஷார்த்தம் –
இவை இரண்டுக்கும் சேர்ந்த உபாயம் எம்பெருமானார் திருவடிகளே-ஸ்வரூபத்துக்கும் பிராப்யத்துக்கும் சேர்ந்து இருக்க வேணுமே பிராபகம்
பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி-அப் பேறு அளித்ததற்கு ஆறு ஒன்றும் இல்லை மற்று அச் சரண் அன்றி -45
ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமனத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானம் ஒழிய வேறு கதி இல்லையே-இதுவே நமஸ் பதார்த்தம்)

நமஸ் -அர்த்தம்
ததீய பாரதந்த்ர்யமே சொல்லும்
த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ யத் தத் தாஸதைக ரசதா விரதா மமாஸ்து -எதி ராஜ விம்சதி -16-
ஈஸ்வர பாரதந்த்ர்யம் சர்வாத்ம சாதாரணம்
எம்பெருமானார் பாரதந்த்ர்யம் -கதிபய சாதாரணம்
ததீய பாரதந்த்ர்யம் -அசாதாரணம்

இவ் வர்த்தம்
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப் போது -12
திக்குற்ற கீர்த்தி என் செய்வினையாம் -26
நல்லார் பரவும் இராமானுசனை -80
எம்பெருமானார்க்கு சேஷ பூதரானார் ஒழிய மற்று ஒருவருக்கு அடிமை செய்யாது
இடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே என்று
எம்பெருமானார் தாசர்கள்-என்றும்
எந்த குற்றம் எந்த ஜன்மம் எந்த ஆசாரம் உண்டானவர்கள் ஆனாலும்
அக் குற்றம் அப் பிறப்பு அந்த ஆசாரம் தானே தம்மை ஆட் கொள்ளும் என்றும்
எம்பெருமானார் திரு நாமம் நம்பினவர்களை மறவாதவர்கள் எவரோ அவர்களுக்கே
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளும் சர்வ கைங்கர்யங்களையும்
த்ரிவித கரணங்களாலும் செய்கிறேன்-அமுதனார்

(இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப் போது
அடங்கும் இதயத்து இராமானுசன் அம் பொன் பாதம் என்னும்
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல் செய்யாத்
திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே —12-)

(திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர்
அக் குற்றம் அப் பிறப்பு அவ் வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே –26- )

(நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர் அவர்க்கே
எல்லா விடத்திலும் என்றும் எப்போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே – -80 –)

வாசா யதீந்திர மனஸா வபுஷா ச யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம்
கூராதி நாத குருகேஸ முகாத்ய பும்ஸாம் பாதா அநுசிந்தன பரஸ் ஸததம் பவேயம் -யதிராஜ விம்சதி —
த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ தத் தாஸ தைகர சதாவிரத மமாம்ஸ்து -எதிராஜ விம்சதி -16
இப்படி ததீய பாரதந்த்ர்யம் வெளி இடப் பட்டதே –

என்றும் சொல்லுகிறபடியே
மநோ வாக் காயங்களாலே உம்முடைய திருவடியையே
பஜித்துக் கொண்டு போருகிற கூரத்தாழ்வான் -திருக் குருகைப் பிரான் பிள்ளான் முதலானவர்களுடைய திருவடிகளை எப்போதும் த்யானம் பண்ணுகிறேன் என்றும்
உம்முடைய தாஸ அநு தாஸ கணையிலே சரமாவதி தாஸர்கள் எவரோ அவருடைய தாஸ்ய நிஷ்டையே எனக்கு வேணும் என்றும் மணவாள மா முனிகளும் எம்பெருமானாரை நோக்கி இப்படி விண்ணப்பம் அருளிச் செய்கையாலும்
இந்த உபயரிடத்திலும் ததீய பாரதந்தர்யம் வெளிப்பட்டது இறே –

நன்றும் திருவுடையோம் நானிலத்தில் எவ்வுயிர்க்கும்
ஒன்றும் குறையில்லை ஓதினோம் -குன்றம்
எடுத்தான் அடி சேர் ராமானுஜன் தாள்
பிடித்தார் பிடித்தாரைப் பற்றி —இயல் சாத்து-1-ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் அருளிச் செய்த தனியன்

(அகங்கார நிவ்ருத்தியும்
நிவ்ருத்தமான ஆத்ம ஸ்வரூபத்துடைய அத்யந்த பாரதந்தர்யமும்
பாரதந்தர்ய பரா காஷ்டையான ததீய சேஷத்வமும் பிரதிபாதித்தாலும்
கீழ் ப்ரணவத்தால் ஆத்ம ஸ்வரூபத்தை ப்ரதிபாதிக்கையாலும்
மேல் புருஷார்த்தத்தை ப்ரதிபாதிக்கையாலும்
பிரதான ப்ரதிபாத்யம் உபாயம் ஆகையாலும்
சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூபத்துக்கு அனுரூபமான புருஷார்த்தமும் –ப்ராப்யத்துக்குத் தகுந்த உபாயமும் –
ஆக -இவற்றுக்குத் தக்க -சத்ருஸமான -உபாயம் -இத்தால் ப்ரதிபாதிக்கப்படுகிறது -)

ஸ்வரூபத்துக்கும் ப்ராப்யத்துக்கும் சேர்ந்து இருக்க வேணும் இறே ப்ராபகம் –ஸ்ரீ வசன பூஷணம் –410-என்கிறபடியே

எம்பெருமானாருக்கு சேஷம் ஆவதே ஸ்வரூபம்
அவர் திருவடிகளில் கைங்கர்யமே புருஷார்த்தம் –
இவை இரண்டுக்கும் சேர்ந்த உபாயம் எம்பெருமானார் திருவடிகளே
ஸ்வரூபத்துக்கும் பிராப்யத்துக்கும் சேர்ந்து இருக்க வேணுமே பிராபகம்

பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி
அப் பேறு அளித்ததற்கு ஆறு ஒன்றும் இல்லை மற்று அச் சரண் அன்றி -45-

(பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்ததற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி என்று இப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற்
கூறும் பரம் அன்று இராமானுச மெய்ம்மை கூறிடிலே – 45-)-என்று உபாய உபேயங்கள் இரண்டுமே தேவரீர் திருவடிகளே என்று அமுதனார் அருளிச் செய்கையாலே
ஸ்வரூப அநு ரூபமான உபாயம் எம்பெருமானார் திருவடிகளே என்றும் சொல்லுகிறது

(எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-)
ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமனத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு
ஆச்சார்ய அபிமானம் ஒழிய வேறு கதி இல்லையே-என்று பிள்ளை பலகாலும் அருளிச் செய்யக் கேட்டு இருக்கையாய் இருக்கும் -ஸ்ரீ வசன பூஷணம்–237-என்று அருளிச் செய்த படியே-அநாதி காலத்தில் நின்றும் -எனக்கு நான் -என்கிற ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமனத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு
எம்பெருமானார் அபிமானம் ஒழிய வேறு கதி இல்லையே

இதுவே நமஸ் பதார்த்தம்

—————

ராமானுஜ -பதார்த்தம் –
அகார விவரணம் என்பதால்
பர ப்ரஹ்மத்தையே குறிக்கும்

(த்வாபர ராமன் -பலராமனுக்குட் தம்பி -கிருஷ்ணன் தர்மம் ஸநாதனம் என்றும்-ராமனுக்குப் பின் பிறந்தவன் என்றும் -ராமன் குணத்தைக் கொண்டவன்
ராமன் யாருக்குத் தம்பியோ -என்றுமாம் –
தனது காலத்தில் மோக்ஷம் கொடுத்தவர் -இவர் அனைவருக்கும் எப்பொழுதும் கொடுத்தவர் -ஆகவேஇவரே அண்ணன்
காரேய் கருணை -பிராட்டுக்குத் தம்பி என்றுமாம் -அவள் குணங்களில் ஆறில் ஸாம்யம்
புருஷகாரமாகவும் உபாயமாகவும் இருப்பதால் இவர் அண்ணன் -அவளும் அவனும் பின் தொடர்ந்து
கோதை நாச்சியார் யாருக்குத் தங்கையோ -கோயில் அண்ணன்)

ராமஸ்ய அனுஜ ராமானுஜ-என்று நம்பி மூத்த பிரானுக்குத் திருத்தம்பியான கிருஷ்ணனுக்கு வாசகம்
வாஸூதேவாயா தீமஹி-என்றும்
ப்ரஹ்மண்யோ தேவகீ புத்ரோ ப்ரஹ்மண்யோ மதுசூதன-என்றும்
கிருஷ்ணம் தர்மம் சனாதனம்-என்றும்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாகபர்யங்கம்
உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம்புரீம் -ஹரிவம்சம் -113-62-என்றும்
ராம கிருஷ்ண நரசிம்ஹாஸ்து பூர்ண ஷாட்குண்ய மூர்த்தய
என்றும் சொல்லப் பட்ட கிருஷ்ணன்-என்றும் சொல்லப்பட்ட்டவாறே
வாஸூ தேவனே பர ப்ரஹ்மம் என்றும்
தேவகீ புத்ரனே பர ப்ரஹ்மம் என்றும்
ஸ்ரீ கிருஷ்ணனே பர ப்ரஹ்மம் என்றும்
ஸ்ரீ கிருஷ்ணனே ஸநாதந தர்மம் என்றும்
ஷீராப்தி சாயியான ஸ்ரீ மன் நாராயணனே வடமதுரையில் திருவவதரித்தான் என்றும்
ராம கிருஷ்ண நரஸிம்ம திரு அவதாரங்கள் பூர்ண அவதாரங்கள் என்றும்
இப்படிச் சொல்லப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணன்

பரித்ராணாயா சாதூனாம் – ஸ்ரீ கீதை -4-8
தா யதாஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி -ஸ்ரீ கீதை -4-7
அர்ஜுனன் ஒருவனுக்கே உபதேசித்து
நாஸ்திகாய ந வக்தவ்யம் நா பக்தாயா கதாசன ந ஸூஸ்ரூஷவே
வாஸ்யம் ந ச மாம் யோப்யஸூயதே -18-67(துஷ்ட நிக்ரஹத்துக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் யுகம் தோறும் அவதரித்து-ஒருத்தனுக்கே பரமார்த்தத்தை உபதேசித்து-அநந்த பிரதமம் ரூபம் லஷ்மணஸ்ச தத பரம் பலபத்ரஸ் த்ருதீ யஸ்து கலௌ கஸ்சித் பவிஷ்யதி –
சதுர்த்த பதத்துக்கு பொருள் நாமே -என்று தாமே அருளிச் செய்தார் இறே-)
என்று அருளிய குறைகள் தீர
அவனே ராமானுஜராக வந்து அவதரித்து(பஹு பிரஸாயம் -18 தடவை நடந்து-பஹு உபாயமான சரம ஸ்லோக அர்த்தங்களை லபித்து)
பூரிதானமாக எல்லாருக்கும் பிரசாதித்து அருளினார்

அன்றிக்கே
ராமானுஜ
ராமா பதம் ஸ்திரீ வாசகம் ஆகையாலே சூடிக் கொடுத்த நாச்சியாரைச் சொல்லி
அனுஜ -பதத்தாலே அவளுக்கு தம்பி -சந்த அனுவர்த்தித்வம் நினைவு அறிந்து நடந்ததால்
நாறு நறும் பொழில் –
வந்தாரோ நம் கோயில் அண்ணர் –
கோதை தங்கை யானாள் எவருக்கோ அவர் என்னவுமாம் –

(ஓன்று நூறாயிரமாக சமர்ப்பித்து பின்னையும் ஆளவும் -அடிமை செய்யவும் -வாய் நேர்ந்த படி-இவரும் சமர்ப்பித்து -கைங்கர்யங்களைப் பண்ணி -அங்கு மங்களா சாசனம் தாமும் செய்து -மேலும் பிற்காலத்திலும் பண்ண அடியார்களையும் நியமித்து செய்து அருளினார் அன்றோ-ஆகவே நாச்சியார் நினைவைப் பின் தொடர்ந்து திருப்பாவை ஜீயர் என்ற விருதும் பெற்றது ப்ரஸித்தம்)

ராமானுஜ பதத்தை -வேற்றுமைத் தொகையாக -தத் புருஷ ஸமாசமாகக் கொண்டு -ராமாய அநுஜ என்றும் வ்யுத்பத்தியாய் சந்த அநு வர்த்தித்தவம் என்றும்
பெரும்பூதூர் மா முனிக்குப் பின்னானாள் வாழியே என்றபடி
அன்மொழித்தொகை -பஹு வ்ரீஹீ ஸமாசமாகக் கொண்டு ராமா அநுஜா யஸ்ய ஸா- கோதை தங்கை எவருக்கோ அவர் -என்றும் பொருள் கொள்ளலாம் -என்றவாறு

அன்றிக்கே
இளைய பெருமாள் தானே அவதரித்து
(அன்று இளைய பெருமாள் சக்ரவர்திக்குத் திருமகனுக்குக் கைங்கர்யம் பண்ணினது ஒழிய
அவனுக்குத் திருவராதனமான நம்பெருமாளை கைங்கர்யம் செய்தது இல்லை
நம் பெருமாளுக்குக் கைங்கரியம் பண்ணுவது பெருமாளுக்கு மிகவும் திரு உள்ளம் உகக்குமாகையாலே) முன்னர் பெருமாளுக்கு செய்த கைங்கர்யத்தை
நம் பெருமாளுக்கு
நித்யோஸ்வ பஷோத்ஸவ மாசோத்ஸவ சம்வஸ்த்ர உத்சவங்கள்
திருப்பணி
திருவாராதனங்கள்
அமுதுபடி சாத்துப்படி
முதலான சகல வித கைங்கர்யங்கள் பண்ணுவித்து
மங்களாசாசனம் பண்ணிக் கொண்டு
அத்ரைவ ஸ்ரீ ரெங்கே ஸூகமாஸ்வ-என்று ஸ்வாமி நியமிக்க
அப்படியே –இளையாழ்வார் தாமே என்னவுமாம்

அன்றிக்கே
அனுஜ -பதத்தால் சந்த அனுவர்த்தித்வம் சொல்லுகையாலே
சேஷோ வா சைன்ய நாதோ வா ஸ்ரீ பதிர் வேதி சாத்விகை
விதர்க்காய மகா ப்ராஞ்ஞை எதிராஜாயா மங்களம்–பாஷ்யகார மங்கள ஸ்லோகம்-20-
நித்ய கைங்கர்யரான நித்ய ஸூரிகளை உடையவர் என்பதாலுமாம் –
அடையார் கமலத்து -33-திவ்ய பஞ்சாயுதங்களும் இவரே -என்பதாலுமாம் –
காவேரீ விரஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்த்ரம்
ஸ வாஸூதேவோ ரங்கேச பிரத்யஷம் பரமம் பதம்
சர்வேஸ்வரனே -நம் பெருமாள்
திரு அநந்த ஆழ்வான் எம்பெருமானார்
அநந்த பிரதமம் ரூபம் லஷ்மணஸ்ச தத பரம் பலபத்ரஸ் த்ருதீ யஸ்து கலௌ கஸ்சித் பவிஷ்யதி
சதுர்த்த பதத்துக்கு பொருள் நாமே -என்று தாமே அருளிச் செய்தார் இறே-

நசேத் ராமானுஜேத் யேஷா சதுரா சதுராஷரீ
காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருசா -ஆழ்வான் பணித்த படி

இந்த பூர்த்தி வேறு எதிலும் இல்லை
ஜ்ஞாநீ த்வாத் மைவ மே மதம் -எம்பெருமானாரை தன் ஹிருதயத்தில் வைத்துக் கொண்டு இருப்பது போல்
திரு மந்த்ரமும் இந்த ராமானுஜ மந்த்ரத்தை கர்ப்பத்துக்குள்
வைத்துக் கொண்டு இருக்குமே

பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொது அது
எம்பெருமானாருக்கு உண்டான பூர்த்தி ஈஸ்வரனுக்கு இல்லை
ஈஸ்வரன் பூர்த்தியும்
பிராட்டிமார் பூர்த்தியும்
நித்ய ஸூரிகள் ஆழ்வார் பூர்த்தியும்
ஆச்சார்யர்கள் உடைய சகல பூர்திகளும் எம்பெருமானார்க்கே உண்டு -என்கை

ஆனால் இவை மூன்றிலும் வைத்துக் கொண்டு பெரிய திருமந்திரம் பிரதானம் -முமுஷுப்படி -1-11-என்று ரஹஸ்ய த்ரய விஷயமாக பிள்ளை லோகாச்சார்யாரும்
ந மந்த்ர அஷ்டாஷராத் பர-என்றும்
பூத்வோர்த்வ பாஹு ரத்யாதய ஸத்ய பூர்வம் ப்ரவீமி வா ஹே புத்ர சிஷ்யா ஸ்ருணுத ந மந்த்ர அஷ்டாஷராத் பரம -என்றும்
ஏக கண்டமாக வ்யாஸ பராசராதி மஹ ரிஷிகளும் நாராயண அஷ்டாக்ஷரீ தன்னையே ஸர்வ மந்த்ர உத்க்ருஷ்ட தமமாக ப்ரதிபாதிக்க
ராமானுஜ மந்த்ரத்துக்கு உள்ள பூர்த்தி இல்லை என்று சொல்லுகிறதுக்குப் பொருள் இல்லை என்று சொல்லுகிறதுக்குப் பொருள் எங்கனே என்னில்
ஞாநீத் ஆத்மைவ மே மதம் –ஸ்ரீ கீதை -7-18-என்று எம்பெருமானாரை ஈஸ்வரன் தனது ஹ்ருதயத்திலே வைத்துக் கொண்டு இருந்தால் போலே
நாராயண மந்த்ரமும் ராமானுஜ மந்த்ரத்தைத் தனது கர்ப்பத்துக்குள் வைத்துக் கொண்டு இருந்த அதிசயத்தாலே நாராயண மந்த்ரமே ஸர்வ உத்க்ருஷ்டம் என்று சொல்லலாம்

ஆனாலும் மோக்ஷ ஏக ஹேதுவான ராமானுஜ மந்திரத்துக்கு உள்ள பூர்த்தி
பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் பொதுவான நாராயண மந்திரத்துக்கு இல்லை
எம்பெருமானாருக்கு உண்டான பூர்த்தி ஈஸ்வரனுக்கு இல்லை

ஆகையால்
ஈஸ்வரன் பூர்த்தியும்
பிராட்டிமார் பூர்த்தியும்
நித்ய ஸூரிகள் ஆழ்வார்கள் பூர்த்தியும்
ஆச்சார்யர்களுடைய ஸகல பூர்த்திகளும்
எம்பெருமானாருக்கே உண்டு என்கை

மோக்ஷ பிரதத்வமுமும் புருஷகாரத்வமும் -நித்ய கைங்கர்யங்கள் செய்வதும் -அதுக்குப் பூர்வ பாவியான பக்தியும் – பிரபத்தியும் இவர் இடமே உண்டு என்றபடி 

—————————————————————————————————————————————–

ஆய பதார்த்தம் –
அவன் திருவடிகளிலே கைங்கர்யத்தை பிரார்த்தித்தே பெற வேண்டும்–முமுஷுப்படி -2-63- என்கிறபடியே
கைங்கர்யத்தை யாஸித்தே பெற வேண்டும்
பரவா நஸ்மி காகுஸ்த்த த்வயி வர்ஷ சதம் ஸ்திதே -ஸ்வயம் து ருசிரே தேஸே க்ரியதாம் இவ மாம் வத –ஆரண்ய -15-7-என்கிறபடியே
நியமித்த படியே செய்ய வேண்டும் -என்கை

மந்த்ரத்திலும்
மந்த்ரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும்
மந்திர பிரதனான ஆச்சார்யன் பக்கலிலும்
பிரேமம் கனக்க உண்டானால் கார்ய கரமாவது-முமுஷுப்படி -1-4- என்றும்
மந்த்ரே தத் தேவதாயாம் ச ததா மந்த்ர ப்ரதே குரவ் த்ரிஷு பக்திஸ் ஸதா கார்யா ஸா ஹி ப்ரதம ஸாதனம் -என்றும் சொல்லுகிறபடியே
இந்த மந்த்ரத்திலும்
மந்த்ர ப்ரதானரான எம்பெருமானார் இடத்திலும்
மந்த்ரம் ப்ரஸாதித்த ஆச்சார்யர் இடத்திலும்
ப்ரேமம் அதிசயநே யுண்டானால் கார்யகரமாவது என்று இருக்கையாலே
இந்த மந்த்ர ப்ரதானனான எம்பெருமானார் இடத்திலே உத்தாரகத்வ பிரதிபத்தியும்
மற்றவர் இடத்திலே உபகாரத்வ பிரதிபத்தியும் உண்டாய்

இவர் இடம் உத்தாரகத்வ பிரதிபத்தியும்
மற்றவர்கள் இடம் உபகாரத்வ பிரதிபத்தியும் உண்டாய்
தீர்க்க தண்ட நமஸ்கார பிரத்யுத்தான மனந்தரம்-சரீரம் அர்த்தம் பிராணஞ்ச சத் குருப்யோ நிவேதயத் –
ஆச்சார்ய அதீனமாக வர்த்திக்கும் அதிகாரிக்கு –கை இலங்கு நெல்லிக் கனி -(உபதேச ரத்ன மாலை -62-)வைகுந்த மா நகர் மற்றது கையதுவே –தானே வைகுந்தம் தரும் (உபதேச ரத்ன மாலை -61)-இத்யாதிகள் படியே ப்ராப்யம் சம்சயம் இல்லாமல்  இருக்குமே –

ஆகையால் இந்த மந்த்ரத்தை யதா பிரதிபத்தி யுக்தனாய் அனுசந்தித்துக் கொண்டு -விபரீத ப்ரவ்ருத்தி நிவ்ருத்தனாய் –
ஈஸ்வரனுக்கும் -பிராட்டிமார்க்கும் -நம்மாழ்வாருக்கும் –எம்பெருமானாருக்கும் -மணவாள மா முனிக்கும்-ஸ்வ ஆச்சார்யனுக்கும் -உண்டான ஐக்கியத்தை அனுசந்தித்து
ஈஸ்வரனுடைய-பர வ்யூஹாதி பஞ்ச ஸ்தல பூர்த்திகளும்  –
ஆழ்வாருடைய பூர்த்தியும் -மணவாள மா முனியுடைய பூர்த்தியும் -ஸ்வாச்சார்ய பூர்த்தியும் எம்பெருமானாருக்கே உண்டாகையாலே
எம்பெருமானாருக்கே சகலவித கைங்கர்யங்களும் பண்ண வேண்டும்-

(பாட்டுக் கேட்க்கும் இடமும் இத்யாதிகள் எல்லாமே வகுத்த இடத்திலே உண்டே)

(ஈஸ்வரனுக்கும் -பிராட்டிமார்க்கும் -நம்மாழ்வாருக்கும் –எம்பெருமானாருக்கும் -மணவாள மா முனிக்கும்-ஸ்வ ஆச்சார்யனுக்கும் -உண்டான ஐக்கியத்தை அனுசந்தித்து
குணத்தால் வந்த ஐக்யம்
ஈஸ்வரனுக்கும் ஸ்வ ஆச்சார்யனுக்கும்
பிராட்டிக்கும் ஸ்வ ஆச்சார்யனுக்கும் –என்றும் பிரித்தும் அந்வயம்
சேஷி தம்பதி ப்ராப்யம்
பிராட்டிக்கும் ஆழ்வாருக்கும் சேஷி ப்ராப்யம் புருஷகாரம்
மோக்ஷ பிரதம் ராமானுஜருக்கு அதிகம்
ராமானுஜருக்கும் மா முனிகளுக்கும் -ஸ்வாமி தாஸர் -உத்தாரகர் உபசாரகர் -யதீந்த்ரரும் யதீந்த்ர ப்ரவணரும்-உண்டான ஐக்கியத்தை அனுசந்தித்து)

எம்பெருமானாருக்கு கைங்கர்யம் பண்ணும் பொழுது திருவடிக்கே பண்ண வேண்டுகையாலும் –
சேஷி பக்கல் சேஷ பூதன் இழியும் துறை திருவடிகள் ஆகையாலும் –
திருவடிகள் ஸ்தானமான ஸ்வாச்சார்யா பாரதந்தர்ய பர காஷ்டையான அனுஷ்டானத்திலே

திருட அத்யவசாய பரனாய் நிற்கை அன்றிக்கே ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் வேறு ஓன்று இல்லை –

தன் ஆரியனுக்குத் தான் அடிமை செய்வது அவன் இந்நாடு தன்னில் இருக்கும் நாள் அந்நேர்
அறிந்தும் அதில் ஆசை இன்றி ஆசாரியனை பிரிந்து இருப்பார் ஆர் மனமே பேசு -என்றும்
ஆஸீனா ஸா சயனா வா திஷ்டந்தோ யத்ர குத்ர வா நமோ நாராயணாயேதி மந்த்ரர் ஏக சரணாலயம் -என்றும்

சொல்லுகிறபடியே த்ரிவித கரணங்களினாலும் –
அஸ்மத் குருப்யோ நம-என்கிற மந்த்ரம் தன்னையே கால ஷேபம் பண்ணுகிற அதிகாரிகள் இங்கு இருக்கும் போதே முக்தி அடைந்தவர்கள் ஆவார்கள் அன்றோ –

இந்த மந்த்ரம் தியாக மண்டபமான பெருமாள் கோயில்
திரு அநந்த சரஸின் கரையிலே அநாதிகாரிகளுக்கு சொல்ல வேண்டாம் என்று ஆணை இட்டு
எம்பெருமானார் ஆழ்வானுக்கு பிரசாதிக்க
அது தன்னையே தாரகமாக விஸ்வசித்து
தம்மை விஸ்வசித்து இருப்பார்களுக்கு இந்த மந்த்ரம் தன்னையே பிரசாதித்து அருளினார்

திருமந்திர ப்ரகரணம் முற்றிற்று-

—————————————————————————————————————————————–

த்வய பிரகரணம் 

ஸ்ரீ மத் ராமானுஜ சரணவ் சரணம் பிரபத்யே ஸ்ரீ மதே ராமாநுஜாய நம –

இந்த த்வய மந்த்ரம்-மிதிலா சாலக்ராமத்தில் -எம்பெருமானார் வடுக நம்பிக்கு பிரசாதித்து–ஸ்ரீ பாத தீர்த்தமும் திருவடிகளையும்-பிரசாதித்து அருளினார்
திருவடிகளும் ஸ்ரீ பாத தீர்த்த கிணறும் இன்றும் சேவிக்கலாம்
எம்பெருமானார் திருவடிகள் ஸ்வாச்சார்யர் ஆகையாலே-ஸ்வா ச்சார்ய பரதந்திர பரகாஷ்டைதையை-உடையவராய் இருக்கையே-
எம்பெருமானாருக்கு மிகவும் உகந்த திரு உள்ளம் ஆகையாலே-இந்த அனுஷ்டானத்தில் நிற்கையே த்வயார்த்துக்கு தாத்பர்யம்—

நேத்ருத்வம் நித்யயோகம் ஸமுசித குண ஜாதம் தநுக்யாபநம் ச உபாயம்
கர்த்தவ்ய பாகம் து அத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரஸித்தம் |
ஸ்வாமித்வம் ப்ரார்த்தநாஞ்ச ப்ரபலதர விரோதிப்ரஹாணம்
தசைதான் மந்தாரம் த்ராயதே சேத்யதிகத நிகம: ஷட்பதோயம் த்விகண்ட: ||
-5-

இந்த ச்லோகம் மந்த்ர ரத்னமான த்வயத்தை விவரிக்கிறது. த்வயம் என்பது இரு கண்டங்களும் ஆறு பதங்களும் கொண்டு அமைந்தது. பத்துப் பொருளை உட்கொண்டிருக்கிறது: (1) சேதனனைத் தன் வயமாக நடத்தும் திறமை (2) பிராட்டியோடு பிரிக்க முடியாத நிலை (3) ஈச்வரத் தன்மைக்கேற்ற இனிய குண ஸமூஹம் (4) அழகிய திருமேனி (5) உபாயம் (6) சேதனன் செய்ய வேண்டிய கடமை (7) இருவருமான சேர்த்தியில் கைங்கர்யம் என்னும் பலன் (8) உரிமை என்னும் ஸம்பந்தம் (9) கைங்கர்ய ப்ரார்த்தனை (10) கைங்கர்யத்துக்கு இடையூறாக உள்ளவைகளிலிருந்து விடுதலை – ஆகிய இந்தப் பத்துப் பொருள்களையும் இடைவிடாது நினைப்பவனை ரக்ஷிக்கிறது என்னும் இதை வேதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

நேத்ருத்வம் நித்யயோகம் சமுசித குணஜாதம் தநுக்யாப நம் ச
நேத்ருத்வம் –
புருஷகாரத்வத்தையும்
நித்யயோகம்-
ஒரு நொடிப் பொழுதும் விட்டுப் பிரியாத நித்ய சம்ச்லேஷத்தையும்
சமுசித குணஜாதம் –
இன்றியமையாத  திருக் குணங்களின் திரளையும்
தநுக்யாப நம் ச-
திரு மேனியைக் காட்டுதலையும் –
உபாயம் கர்த்தவ்யபாகம் த்வத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரசித்தம்-
உபாயம் –
உபாயத்தையும் –
கர்த்தவ்யபாகம் –
சேதனன் செய்ய வேண்டிய தான அத்யாவசாயத்தையும்
த்வத மிதுநபரம் ப்ராப்யம் –
இருவருமான சேர்த்தியை விஷயீ கரித்ததான கைங்கர்யத்தையும்
மேவம் ப்ரசித்தம்-
இங்கனம் பிரசித்தமாய் இரா நின்றது-

ஸ்வாமித்வம் ப்ரார்த்த நாஞ்ச பிரபலதர விரோதி ப்ரஹாணம் தசைதான்
ஸ்வாமித்வம் –
சர்வ சேஷித்வத்தையும்
ப்ரார்த்த நாஞ்ச –
கைங்கர்ய பிரார்த்தனையையும் –
பிரபலதர விரோதி ப்ரஹாணம் –
மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்
தசைதான்

மந்தாரம் த்ராயதே சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட-
மந்தாரம் –
மனனம் செய்கிற உத்தம அதிகாரியை
த்ராயதே இதி
காப்பாற்றுகின்றது என்று
சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட
அயம்
அந்த த்வயம் மந்த்ரமானது
ஏதான் தச
இந்த பத்து அர்த்தங்களையும்
அதிகத நிகம
வேத ப்ரதீதமாயும்
த்வீ கண்ட
இரண்டு கண்டங்களை யுடையதாயும்
ஷட்பத
ஆறு பதங்களை யுடையதாயும்-

த்ராயதே இதி
காப்பாற்றுகின்றது என்று
ஏவம் ப்ரசித்தம்-
இங்கனம் பிரசித்தமாய் இரா நின்றது-
1-ஸ்ரீ –நேத்ருத்வம் -ஸ்ரீயதே -ஸ்ரேயதே -ச்ருணோதி -ச்ராவயதி -ஸ்ருணாதி -ச்ரீணாதி
2- மத்-நித்ய யோகத்வம்
3- நாராயண -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌசீல்யம் ஜ்ஞானம் சக்தி-சமுசித குணஜாதம்
4- சரனௌ-திவ்ய மங்கள விக்ரஹம் -த நுக்யாபனம் –
5-சரணம் -உபாயம் இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும்
6-பிரபத்யே -கர்த்தவ்யபாகம் -வாசிக காயிக மானசீகங்கள் -கர்த்தவ்யம் புத்யர்த்தம்
7-ஸ்ரீ மதே-மிதுன பரம் பிராப்யம் -கைங்கர்ய பிரதி சம்பந்த தத்வேன அன்வயம்
8-நாராயண -ஸ்வாமித்வம்
9-ஆய -ப்ரார்த்த நாஞ்ச -கைங்கர்ய பிரார்த்தனையையும் –
10-நம-பிரபலதர விரோதி ப்ரஹாணம் -மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்-
கடகவல்லி நிகமத்தில் வேதபாகத்தில் உள்ளதே -அதிகத நிகம-

————–

த்வய பிரகரணம் –

த்வயம் இரண்டு வாக்யமாய் –ஆறு பதமாய் –பத்து அர்த்தமாய்25-திரு அக்ஷரமாய் இருக்கும்
அதில் பூர்வ வாக்கியம் -15-அக்ஷரமாய் / உத்தர வாக்கியம் -10-அக்ஷரமாய் இருக்கும் -எங்கனே என்னில் –
ஸ்ரீ மத் ராமானுஜ சரணவ் சரணம் பிரபத்யே
என்றும் –
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
-என்றும் –இரண்டு வாக்யமாய்

ஸ்ரீ மத் ராமானுஜ சரணவ் -என்றும் –
சரணம்-என்றும் –
பிரபத்யே-என்றும்

ஸ்ரீ மதே-என்றும்
ராமாநுஜாய-என்றும்
நம -என்றும் –ஆறு பதமாய்

ஸ்ரீ -என்றும் –
மத் -என்றும் –
ராமானுஜ-என்றும் –
சரணவ் -என்றும் –
சரணம்-என்றும் –
பிரபத்யே -என்றும் –
ஸ்ரீ மதே-என்றும் –
ராமாநுஜ-என்றும் –
ஆய-என்றும் –
நம -என்றும் –பத்து அர்த்தமாய் இருக்கும் –

பிரதம பதம் ஸ்ரீ மத் -சம்பத் வாசகம் –உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் சொல்லுகிறது
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை சொல்லுகிறது ஆகவுமாம் –
கைங்கர்ய  ஸ்ரீ யை சொல்லுகிறது ஆகவுமாம்
இத்தனை சொன்னாலும் பிரதம அஷர வாச்யர் –
ஸ்ரீ வத்சாங்க ஆச்சார்யர் -கூரத் ஆழ்வான் ஒருவரையே குறிக்கும் என்று -நஞ்சீயர் அருளிச் செய்வர் –

நித்ய யோகமாவது -பிரிந்து இராத இருப்பு
ஆழ்வான் எம்பெருமானாரை பிரியாதே இருந்தாரோ என்னில்
அர்ஜுநஸ் கேசவஸ்ய ஆத்மா கிருஷ்ணஸ் யாத்மா –க்ரீடிண -என்கிறபடியே ஆழ்வான் திரு உள்ளத்தில் எம்பெருமானாரும் -எம்பெருமானார் திரு உள்ளத்தில் ஆழ்வானும் பிரியாமல் இருக்கையாலும்

நித்ய யோகோ மதுப் –ஆழ்வான் எம்பெருமானாரை விட்டு பிரிந்ததே இல்லையோ என்னில்-
அர்ஜுன கேசவஸ்யாத்மா கிருஷ்ணஸ் யாத்மா கிரீடின -என்றபடி
இருவரும் அவர் அவர் திரு உள்ளத்தில் பிரியாமை உண்டே
அன்றிக்கே
ஆழ்வான் யஞ்ஞோபவீத ஸ்தானம்
-என்பது பிரசித்தம் இறே –

சரண பதம் -திரு மேனியை குறிக்கும்
இங்கே மணவாள மா முனியை குறிக்கும்
சரணம் -ஈஸ்வரனும் உபாயம் அன்று -என்கை

பிரபத்யே
வர்த்தமானம்
வேறு ஓன்று உபாயம் என்ற புத்தி புகுராமல் இருக்க
நித்யமும் இதுவே கால ஷேபமாக இருக்கை-

ஸ்ரீ மதே -மிதுனமே பிராப்யம்-
எம்பெருமானாரும் கூரேசாதிகளையும் கூட்டிக் கொள்கிறது –

ராமானுஜ பதத்தாலே-சேஷித்வத்தைச் சொல்கிறது -அது எங்கனே என்னில் –
மேல் சதுர்த்தியில் சேஷ பூதன் பண்ணுகிற விருத்தியைச் சொல்லுகிறது ஆகையால்
சேஷ விருத்தியை கொண்டு அருளுகிறவன் சேஷி யாகையாலே சேஷித்வத்திலே தாத்பர்யம் –
பர்த்தாவுக்கு உபசாரம் செய்கிறது பார்யைக்கு ஸ்வரூபமும் ஸூக ரூபமாகவும் இருக்குமா போலே
தனக்கு சேஷியானவனுக்கு தாஸ்யம் செய்கிறது சேஷ பூதனுக்கு ஸ்வரூபமும் ஸூக ரூபமும் ஆகையால்
சேதனனுக்கு சரம சேஷி எம்பெருமானார்
என்கை –

ஆய
சகலவித கைங்கர்ய பிரார்த்தனையை
சொல்லுகிறது-
கைங்கர்யம் தான் -மானஸ -வாசிக -காயிக -ரூபத்தால் மூன்று விதமாய் –
இது தான் ஒன்றுக்கு ஓன்று நாநா விதமாய் இருக்கையாலே -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும்
சர்வவித கைங்கர்யங்களும் நித்யம் என்கிறது –

நம
கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியை
சொல்லுகிறது
தனக்கு இஷ்டமாக பண்ணும் கைங்கர்யம் நரகத்தோடு ஒக்கும்
தனக்கும் அவனுக்கும் இஷ்டமாக பண்ணுகை ச்வர்க்கத்தோடு ஒக்கும் –
அவனுக்கே இஷ்டமாக பண்ணுகை மோஷத்தோடு ஒக்கும்-
உனக்கே நாம் ஆட் செய்வோம்-மற்றை நம் காமங்கள் மாற்று -போலே-
எம்பெருமானார் திருவடிகளே சரணம் –
என்று நம் பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்கையாலே
பூர்வ வாக்கியத்தில் எம்பெருமானார் திருவடிகளே உபாயம் என்று சொல்கிறது –
உத்தர வாக்கியத்தில்  மோக்ஷமும் அவர் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே என்று சொல்கிறது –
த்வயத்தில் உபாய உபேயங்கள் இரண்டும் திருவடிகளே என்று சொல்லுகை –சரணவ்-என்கிற த்வி வசனத்துக்கு தாத்பர்யம்
என்று சம்பிரதாய ஞானரான நம் பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்வர்கள்

—————————————————————————————————————————————–

பிரதம பதம் ஸ்ரீ மத் -சம்பத் வாசகம் –உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் சொல்லுகிறது
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை சொல்லுகிறது ஆகவுமாம் -கைங்கர்ய ஸ்ரீ யை சொல்லுகிறது ஆகவுமாம்-
இத்தனை சொன்னாலும் பிரதம அஷர வாச்யர் –ஸ்ரீ வத்சாங்க ஆச்சார்யர் -கூரத் ஆழ்வான் ஒருவரையே குறிக்கும் என்று -நஞ்சீயர் அருளிச் செய்வர் –
ஆழ்வான் யஞ்ஞோபவீத ஸ்தானம் -என்பது பிரசித்தம் இ றே –
சரண பதம் -திரு மேனியை குறிக்கும்–இங்கே மணவாள மா முனியை குறிக்கும்-

ராமானுஜ பத்தாலே குண பூர்த்தியைச் சொல்லுகிறது
குண பூர்த்தி யாவது ஸமஸ்த திருக் கல்யாண குணங்கள் ஆவன
வாத்சல்யம்
ஸ்வாமித்வம்
ஸுசீல்யம்
ஸுலப்யம்
ஞாநம்
சக்தி
பிராப்தி-பூர்த்தி
பரம காருணிகத்வம்
பரம உதாரத்வம்
அசரண்ய சரண்யத்வாதிகள்

இந்த ஆஸ்ரிதர் எளிதில் ஆஸ்ரயிக்கவும் -ஆஸ்ரிதர் கார்யங்கள் செய்து தலைக் கட்டுகைக்கும் வேண்டிய குணங்கள் இவர் இடத்தில் உண்டாகைக்கு அடையாளம் எங்கனே என்னில்
இந்த குணங்கள் இல்லாவிடில் சேதனர் ஆஸ்ரயிக்கவும் அவர்களை ரஷிக்கையும் கூடாமையாலே
ரக்ஷண த்யான ஸம் ஸ்பர்ஸங்களாலே அவ் வர்களை ரஷித்த இடங்களிலே காணலாம்

சரண பதத்தாலே திருவடிகளைச் சொல்லுகிறது –திருவடிகளைச் சொல்லவே-திவ்ய மங்கள விக்ரஹத்தையும் சொன்னவாறு என்றாலும்
மணவாள மா முனிகளையே சொல்லுகை முக்ய அர்த்தம் என்று ஸம்ப்ரதாய ஞானிகளான நம் ஆச்சார்யர்கள் அருளிச் செய்வர்
மணவாள மா முனிகளைச் சொல்லவே ஸ்வ ஆச்சார்ய பர்யந்தம் விவஷிதம்

சரண பதத்தாலே உபாயத்தைச் சொல்லுகிறது
ராமானுஜ சரணவ் சரணம் ப்ரபத்யே என்கையாலே ஈஸ்வரனும் உபாயம் அன்று என்கை

ப்ரபத்யே -பதத்தாலே பற்றுகிறேன் என்று சொல்லுகிறது
ஸக்ருதேவ –ராம சரம ஸ்லோகம் பற்றுவது ஒருக்iகாலே இருக்க
பற்றுகிறேன் என்ற வர்த்தமானத்தாலே மற்ற ஓன்று உபாயம் என்கிற புத்தி புகுராமல் நித்யமும் இதுவே கால ஷேபமாக அனுசந்திக்க வேணும் என்கிறது

இந்த பூர்வ வாக்யத்தில் ப்ரதிபாதித்த உபாய வரணம் உபேய அர்த்தமாகையாலே உத்தர வாக்யத்தில் ப்ராப்யத்தைச் சொல்லுகிறது
ப்ராப்யமும் உபேயமும் பர்யாயம்

ஸ்ரீ மதே என்கிற பதத்தாலே மிதுனமே ப்ராப்யம் என்று சொல்லுகிறது
மிதுனமாவது -மேல் எம்பெருமானாரையும் அவருக்கு சாயா பரதந்த்ரருமான கூராதிகளையும் கூட்டிக் கொள்கிறது

ராமானுஜ பதத்தாலே சேஷித்வத்தைச் சொல்லுகிறது -அது எங்கனே என்னில்
மேல் சதுர்த்தியில் சேஷ பூதன் பண்ணுகிற வ்ருத்தியைச் சொல்லுகிறதாகையாலே
சேஷ வ்ருத்தியைக் கொண்டு அருளுகிறவன் சேஷியாகையாலே சேஷித்வத்திலே தாத்பர்யம்-(பட்டர் ஸ்வாமித்வம் என்பதையே இங்கு ஸேஷித்வம் என்கிறார்)
பார்த்தாவுக்கு உபசாரம் செய்கிறது பார்யைக்கு ஸ்வரூபமும் ஸூக ரூபமுமாய் இருக்குமாப் போலே தனக்கு சேஷியானவனுக்கு தாஸ்யம் செய்கிறது சேஷ பூதனுக்கு ஸ்வரூபமும் ஸூக ரூபமுமாய் இருக்கையாலே
சேதனனுக்கு சரம சேஷி எம்பெருமானார் என்கை

ஆய என்கிற சதுர்த்தியாலே-கைங்கர்ய ப்ரார்த்தனையைச் சொல்லுகிறது –
கைங்கர்யம் தான் மானஸ -வாசிக -காயிக ரூபத்தாலே -மூன்று விதமாய்-
இது தான் ஒன்றுக்கு ஓன்று நாநாவிதமாய் இருக்கையாலே
ஸர்வ தேச -ஸர்வ அவஸ்தைகளிலும் -ஸர்வ வித கைங்கர்யங்களும் நித்யம் என்று சொல்லுகிறது

நம என்கிற பதத்தாலே கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியைச் சொல்லுகிறது -அதாவது
கைங்கர்யம் தான் தனக்கு இஷ்டமாகப் பண்ணுகை நரகத்தோடு ஒக்கும்
தனக்கும் அவனுக்குமாகப் பண்ணுகை ஸ்வர்க்கத்தோடு ஒக்கும்
அவனுக்கே இஷ்டமாகப் பண்ணுகை மோஷத்தோடு ஒக்கும் என்று வார்த்தா மாலையிலே அருளிச் செய்கையாலே
உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்னும் படியே அவனுக்கே இஷ்டமாம் படியே பண்ண வேண்டும் என்கை

எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று நம் பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்கையாலே
பூர்வ வாக்யத்தாலே எம்பெருமானார் திருவடிகளே உபாயம் என்று சொல்லுகிறது
உத்தர வாக்யத்தாலே மோக்ஷமும் அவர் திருவடிகளிலே பண்ணும் கைங்கர்யமே என்று சொல்கிறது
த்வயத்தில் உபாய உபேயங்கள் இரண்டுமே திரு வடிகளே என்று சொல்லுகை சரணவ் என்கிற த்வி வசனத்துக்குத் தாத்பர்யம் என்று நம் பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்வார்கள்

இந்த த்வய மந்த்ரம்
மிதிலா சாலக்ராமத்தில் -எம்பெருமானார் வடுக நம்பிக்கு ப்ரசாதிக்க —
அவரும் அந்த மந்த்ர ப்ரதிபாத்யமான திருவடிகளை மேல் உள்ளவர்களும் சேவித்து கைங்கர்யம் பண்ணி
உஜ்ஜீவிக்கும் படியாக திருவடிகளை பிரசாதிக்க வேணும் என்று விண்ணப்பம் செய்ய
அப்படியே  -ஸ்ரீ பாத தீர்த்தமும் திருவடிகளையும்

பிரசாதித்து அருளினார்-என்று பிரசித்தம் –
திருவடிகளும் ஸ்ரீ பாத தீர்த்த கிணறும் இன்றும் சேவிக்கலாம்-
எம்பெருமானார் திருவடிகள் ஸ்வாச்சார்யர் ஆகையாலே
ஸ்வாச்சார்ய பரதந்திர பரகாஷ்டைதையை
உடையவராய் இருக்கையே-
எம்பெருமானாருக்கு மிகவும் உகந்த திரு உள்ளம் ஆகையாலே
இந்த அனுஷ்டானத்தில் நிற்கையே த்வயார்த்துக்கு தாத்பர்யம்

த்வய ப்ரகரணம் முற்றிற்று

 —

சரம ஸ்லோகார்த்தம் –

சரம ஸ்லோகம் இரண்டு அர்த்தமாய் -11- பதமாய் -32-திரு அக்ஷரமாய் இருக்கும் –அது எங்கனே என்னில் –
சர்வ கர்மாணி ஸந்த்யஜ்ய ராமானுஜ இதி ஸ்மர -என்றும் –
விபூதிம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் விரதம் மம -என்றும் -இரண்டு அர்த்தமாய் –
சர்வ கர்மாணி –என்றும்
ஸந்த்யஜ்ய –என்றும்
ராமானுஜ-என்றும்
இதி-என்றும்
ஸ்மர –என்றும்
விபூதிம்-என்றும்
சர்வ பூதேப்யோ-என்றும்
ததாமி –என்றும்
ஏதத் –என்றும்
விரதம்-என்றும்
மம -என்றும் -11-பதமாய் இருக்கும்

(மாஸூச -சொல்ல வேண்டாமே சோகம் வர ப்ரஸக்தியே இல்லையே ராமன் இடத்திலும் ராமானுஜர் இடத்திலும்)

(ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ–
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச–৷৷18.66৷৷
பூர்வார்த்தத்தில் ஆறும் உத்தரார்த்தத்தில் ஐந்துமாக இங்கும் ஐந்தும் ஆறுமாக11 பதங்கள்-32 எழுத்துக்கள் அனுஷ்டுப் சந்தஸ்)

(ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ ததாம்  யேதத் வ்ரதம் மம –யுத்த -18-33-)

பூர்வார்த்தம் அதிகாரி க்ருத்யத்தையும்–
உத்தரார்த்தில் உபாய க்ருத்யத்தையும்
சொல்லுகிறது

சர்வ கர்மாணி –
அனைத்து செயல்களும் -கர்ம ஞான பக்தி பிரபத்தி இவைகளைச் சொல்லும்

ப்ரபத்தியையும் கர்மம் சொல்லலாமோ என்னில்
செய்யப்படுகிற அனைத்தையுமே கர்மம் என்று சொல்லப்படுகிறதாகையாலே ப்ரபத்தியையும் அப்படியே சொல்லமாம் அன்றோ

சந்த்யஜ்ய-
ருசி வாசனைகள் உடன் -லஜ்ஜையுடனும்- -மறுவலிடாத படி-விட வேண்டும்
கலங்கி உபாய புத்யா பண்ணும் பிரபத்தியும் பாதகத்தோடு ஒக்கும்-என்றும்
நெடு நாள் அந்ய பரராய் போந்த பார்யை
லஜ்ஜா பயங்கள் இன்றியே பர்த்ரு சகாசத்திலே நின்று
என்னை அங்கீ கரிக்க வேண்டும் -என்று
அபேஷிக்குமா போலே இருப்பது ஓன்று இறே இவன் பண்ணும் பிரபத்தி-என்றும்

(என் உணர்வில் உள்ளே இருத்தினேன் -அதுவும் அவனுடைய இன்னருளே
உயிரை அறவிலை செய்தனன் தோழீ -அதுவா கின்னு ஸமர்ப்பயாமி -கலக்கமும் தெளிவும் மாறி மாறி வருமே)

இவன் அவனை பெற நினைக்கும் போது பிரபத்தியும் உபாயம் அன்று-என்றும்-ஸ்ரீ வசன பூஷணத்தில் அருளிச் செய்கையாலே-(ஸ்வ தந்ரனான அவனைப் பற்றும் ப்ரபத்தியும் த்யாஜ்யம்)

ஸூ லபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் உபாஸதே -லப்தம் த்யக்த்வா தனம் மூடோ குப்த மன்வேஷதி ஷீதவ்-என்றும்

சஷூர் கம்யம் குரும் த்யக்த்வா சாஸ்திர கம்யந்து யஸ் ஸ்மரேத்-கரஸ்த முதகம் த்யக்த்வா கநஸ்த மபி வாஞ்சதி -என்றும் சொல்லுகிறபடியே
பிரத்யக்ஷ சாஷாத்காரமான ஆசார்யனை விட்டு ஞான சாஷாத்காரமான ஈஸ்வரனைப் பற்றுகை அஞ்ஞனாய் அசக்தனாய் அப்ராப்தனான சேதனனுக்கு கூடாமையாலும்
இவை ஒன்றுக்கும் சக்தன் இன்றிக்கே இருப்பான் ஒருவனைக் குறித்து இவனுடைய இழவையும்-இவனைப் பெற்றால் ஈஸ்வரனுக்கு உண்டான ப்ரீதியையும் அனுசந்தித்து
ஸ்தநந்த்ய பிரஜைக்கு வியாதி யுண்டானால் அது தன் குறையாக நினைத்து தான் ஒளஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே தான் இவனுக்காக உபாய அனுஷ்டானம் பண்ணி ரஷிக்க வல்ல பரம தயாளுவான மஹா பாகவதன் அபிமனாத்திலே ஒதுங்கி –வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டும்-
போலே சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவன் இட்ட வழக்காக்குகை -என்றும் அர்த்த பஞ்சகத்திலே ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்த படியே 
ஆசார்ய அபிமான நிஷ்டனுக்கு பிரபத்தியும் த்யாஜ்யம் என்றது ஆயிற்று-

ராமானுஜ இதி ஸ்மர -என்கிற பதத்தாலே
பிதரம் மாதரம் —லோக விக்ராந்த சரனௌ சரணம் தே வ்ரஜம் விபோ – (பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் சகீன் குரூன்
ரத்நாதி தான தான்யானி ஷேத்ராணி ஸ் க்ருஹாணி ச
சர்வ தர்மாம்ச்ச சந்த்யஜ்ய சர்வ காமாம்ச்ச சாஷரான் –
லோக விக்ராந்த சரனௌ தேவ்ரஜம் விபோ)என்றும்
த்வமேத மாதா –சர்வம் மம தேவ தேவ -(த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்துச்ச குருஸ் த்வமேவ
த்வமேவ வித்யா தரவினம் த்வமேவ
த்வமேவ சர்வம் மம தேவ தேவ)என்றும் (சேதனர் திட அத்யாவசாயத்துடன் பண்ண மாட்டாமையாலே-இவர்களுக்குத் தானே விண்ணப்பம் செய்து)
மநோ வாக் காயை –சர்வான் அசேஷத ஷமஸ்வ -(மநோவாக் காயைர் அநாதி கால ப்ரவ்ருத்த
அநந்த அக்ருத்ய கரண
கருத்ய அகாரண
பகவத் அபசார
பாகவத அபசார
அசஹ்ய அபசார ரூப
நாநாவித அநந்த அபசாரான்
ஆரப்த கார்யான்
அநாரப்த கார்யான்
கருதான் க்ரியமாணான் கரிஷ்ய மாணாம்ச்ச
சர்வான்
அசேஷத ஷமஸ்வ-ஸ்ரீ சரணாகதி கத்யம்-சூரணை -10)என்று தானே விண்ணப்பம் செய்து)-பிரபத்தி பண்ணின வாத்சல்ய ஸ்வாமித்வ ஸுசீல்ய ஸுலப்ய ஞான சக்திகளாதி யுண்டாய் இருக்கிற என்னை
ராமானுஜ ஸ்மரண மாத்ரமே அமையும்

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் -வேண்டாவோ என்னில்
மன கரணம் பிரதானம்
மற்ற இரண்டும் இதுக்கு சேஷம்

ஜ்ஞானான் மோஷம்(ஆகையால்-பகவத் விஷயத்தில் விட்டே பற்ற வேண்டும் என்று இல்லாமல் ராமானுஜ நினைக்கவே -அஹம் ஸ்மராமி போலவே-அவர் நமக்காக பண்ணுவதால் -இதுவே போதுமே)
ராமானுஜ -என்று மனசிலே நினைவு உண்டாகவே அமையும் –

விபூதிம்
நித்ய விபூதியை சொல்லுகிறது

சர்வ பூதேப்ய
எல்லாருக்கும்(பூ சத்தாயாம் இருக்கும் அனைவருக்கும்)

ததாமி
பிரசாதிக்கிறோம்

ஸ்மர -ஒருவன் சொல்லி அனைவருக்கும் கிட்டுமோ என்னில்
விபீஷணனை -சரணம் அடைந்ததால் அங்கீ கரிக்க கூட வந்த நால்வரும் சரணாகதி பண்ணாமலே பேறு பெற்றால் போலே
ராஜ சேவை ஒருவன் பண்ணிக் கொண்டு வந்த அர்த்தத்தில்
ராஜாவை அறியாத புத்ர மித்ர களத்ர பௌத்ராதிகள் அனுபவிப்பது போலேயும்
எம்பெருமானார் சம்பந்தம் ஒருவனுக்கு உண்டானால்
அவன் சம்பந்த சம்பந்திகளுக்கும் பரம பதம் சித்தம் -என்று தாத்பர்யம்

(பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து ஆள்வாரே)

ஏதத் விரதம் மம –
ரஷிக்கையே ஸ்வபாவம் உள்ள எம்பெருமானார் அருளிய வார்த்தை
நீங்கள் நிர் பரராய் இருக்க வேண்டும் -என்று அருளிச் செய்து அருளினார்-

சத்ய வாக்யோ திருட வ்ரத -என்றும் —
ப்ரியவாதீ ச பூதானாம் சத்யவாதீ ச ராகவா -என்றும் –
ராமோ த்விர் நாபி பாஷதே -என்றும் சக்கரவர்த்தி திருமகனுடைய வாக்கியம் சத்தியமானால் போலே –
இங்கு ஏதத் விரதம் மம -என்ற எம்பெருமானாருடைய வாக்கியமும் –
எம்பெருமானார் சேதனரை ரக்ஷிக்கிறது-சேதனருக்காக அன்று -தம்முடைய விரதம் சித்திக்கைக்காக என்றவாறு

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றிய சக்கரவர்த்தி திருமகன் திரு உள்ளக்  கருத்தை அறிந்து அருளி
நம்முடைய அபிமான அந்தர் பூதரையும் நாமே ரக்ஷிக்கிறோம் -நீங்கள் நிர் பரராய் இருமின் -என்று அருளிச் செய்கிறார்

(பெருமாள் அன்று செய்து அருளியதையே
நம் ஸ்வாமி என்றுமே செய்து அருளவே இந்த சரம ஸ்லோகம் அருளுகிறார்)

இவ் வர்த்தம் ஞான மண்டபத்தில் -திரு நாராயண புரத்தில்
இரவு காலத்தில்
முதலியாண்டான்
எம்பார்
திரு நாராயண புரத்து அரையர்
மாருதி யாண்டான்
உக்கலம்மாள்
இவர்கள் ஐவருக்கும் அருள
மகா மதிகள் இவர்கள் விஸ்வசித்து
மகா ரகசியம் என்று அருளிச் செய்து போந்தனர் –

இதில் பிரபத்தி பிறப்பது துர்லபமாய் இருக்கும் -நாம் சர்வ உத்தாரகர் -நம்மைப் பற்றி நிர்ப்பரராய் இருந்தால்
ஒரு குறைகளும் இல்லாமல் ஈடேறலாம் -என்று அருளிச் செய்தார்

ஸ்ரீ கிருஷ்ணன் -மாம் -என்று தொட்டுக் காட்டி அருளினால் போலே இவரும் இந்த ஐவருக்கும்
தொட்டுக் காட்டி அருளின படியால்
மஹா மதிகளான இவர்கள் கண்டுஇனி நமக்கு எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று விஸ்வஸித்து
நிர்ப் பரராய் இருக்கையாலே நமக்கும் இதுவே தஞ்சம்

இவ் வர்த்தம் பரம ரகஸ்யம் என்று அஸ்மாத் ஆச்சார்யர் யுக்தம்

பெரிய திருமலை நம்பி தாரா பூர்வகமாக எம்பாரை சமர்ப்பித்த பின்பு மாட்டுக்கு புல் இடுவார் உண்டோ என்று முகம் காட்டாமல் இருக்க
எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்ற பின்பு
எம்பெருமானாரும் இவருடைய அத்யாவசாயத்தைத் திரு உள்ளம் பற்றி
இந்த மந்த்ர த்வயத்தையும் எம்பாருக்கு அனுக்ரஹித்து அருளினார்

அவர் பட்டருக்கு
அவர் நஞ்சீயருக்கு
அவர் நம்பிள்ளைக்கு
அவர் வடக்குத் திரு வீதிப் பிள்ளைக்கு
அவர் பிள்ளை லோகாச்சார்யருக்கு
அவர் கூர குலோத்தம தாசருக்கு
அவர் திருவாய் மொழிப் பிள்ளைக்கு
அவர் மணவாள மா முனிக்கு
அவர் வானமா மலை ஜீயர்- கோயில் கந்தாடை அண்ணன் –
பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் -அப் பிள்ளை –
பிரதிவாதி பயங்கரம் அண்ணன் -எறும்பி அப்பா –
போரேற்று நைனாராச்சாரியர் -அத்தங்கி சிங்கராச்சார்யர்
முதலான அஷ்ட திக் கஜங்களுக்கும் பிரசாதிக்க
அஸ்மத் ஆச்சார்யர் கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் மூலம் நம்மளவும் வரப் பெற்றோமே –

சரம ஸ்லோக ப்ரகரணம் முற்றிற்று

————————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகள் சரணம் –
ஸ்ரீ அழகப்ப ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடுக நம்பி திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத் தாழ்வான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading