ஸ்ரீ ரஹச்ய விவேகம் – ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிச் செய்தது

ஸ்ரீ தேவ ராஜ குரு திரு நாமம் உடைய எறும்பி அப்பா –
திருக் குமாரார் -யஞ்ஞ நாராயண குரு –
அவர் யுடைய திருக் குமாரர் –தேவ ராஜ குருவர் –
திருக் குமாரர் -வரவர குருவரர்
இவரை – ஆச்சார்ய ரத்னம் -என்பர் -அந்த திரு நாமம் யுடைய கிரந்தம் அருளிச் செய்கையாலே

இந்த பிரபந்தத்துக்கு அஷ்டா தச பேத விசாரம் என்ற பெயரும் உண்டு

உபாய உபேய பரமான ஸ்ரீமத் சப்தார்த்தை
வேரி மாறாத பூ    மேல் இருப்பாள் வினை தீர்க்குமே
நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து-என்றார் நம் ஆழ்வார்
ஆளவந்தாரும் –
ஜகத் சமஸ்தம் யத் பாங்க சம்ஸ்ரயம்-என்றும்
ஸ்ரேயோ ந ஹ்யரவிந்த லோசந மந காந்தா பிரசாதாத்ருதே
சம்ஸ்ருத்ய ஷார வைஷ்ணவாத் வ ஸூ ந்ரூனாம் சம்பாவ்யதே கர்ஹிசித் -என்று அருளிச் செய்தார்-

லஷ்ம்யா சஹ ஹ்ருஷீகேச தேவா காருண்யா ரூப்யா ரசாக சர்வ சித்தாந்தே வேதாந்தேஷூ ச கீயதே –
ஸ்ரீ பாஷ்ய காரரும் -ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலே கைங்கர்ய ரூபமான பரம புருஷார்த்தம் இவன் நியோகத்தின் படியே நடத்த வேணும் என்று அருளிச் செய்கிறார் –
நாராயணன் சரண்யன் ஆகும் பொழுது லஷ்மி விசிஷ்டனாய் இருக்கும் என்கைக்காக பூர்வ கண்டத்தில் ஸ்ரீமத் சப்தம் –
உபாயத்வம் -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் –
புருஷகார சாபேஷம் என்னில் உபாயத்தினுடைய நைரபேஷ்ய ஹாநி வாராதோ என்னில் –
சஹாயாந்தர சம்சர்க்க அசஹமான சித்த உபாயம் சரண வரண ஸ்வரூப ச்வீகாரத்தில்
ச்வீகர்த்தா வான புருஷனையும் -சவீ கரிப்பிக்கும் புருஷகாரத்வத்தையும் அபேஷித்து இருக்கும் –
ச்வீக்ருதனான தான் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வாக இஷ்ட பிராப்தி பண்ணுகை ஆகிற கார்ய காலத்தில்
புருஷனும் புருஷகாரமும் ஆகிற உபாயத்தையும் அபேஷியாதே தானே செய்து தலைக் கட்டும் என்கை-
அவன் உபாயமாகும் இடத்தில் சஹாயாந்தரங்களை சஹியாமையாலே தான் உபாய பாவத்தில் அந்வயம் இன்றிக்கே புருஷகாரமாய் இருக்கும் என்று பெரிய ஜீயர் அருளிச் செய்வர் –
ததச்ய சத்ருசம் பவேத் –
வாலப்ப்யம்-புருஷகார பாவத்துக்கும் பிராப்யதைக்கும் உறுப்பாய் இருக்கும்
பூர்வ வ்ருத்தம் பாராதே விஷயீ கரிக்கும் படி அருகே இருந்து சேர்ப்பார் உண்டே -தனித்து இருவரும் உபாயமாக சொல்லுகிற இடங்கள் –பகவானுக்கு அபிமதையாய் அநு ரூபாயாய் இருக்கிற பிரதான்யத்தாலே
இவள் சொல்லிற்றை அவன் செய்யும் என்கிற நிச்சய நிபந்தனமாகக் கடவது-

——————————————————————————————————————————————–

ஸ்ரீக்கு விபுத்வம் கிடையாது –
அவையவை தோறும் -தனித் தனியே வியாபித்து நிற்கும் –
எங்கும் பரந்து -அந்தர் பஹிஸ்ஸ வியாபித்து -உளன் சுடர் மிகு சுருதியுள்
பரந்த தண் பரவையுள் –இடம் திகழ் பொருள் தோறும் –எங்கும் பரந்துளன் –
இவையுண்ட கரனே -தயிர் உண்ட பொன் வயிறு இவ் வேழ் உலகும் உண்டு இடமுடைத்தால் –
அணோர் அணீயான் மஹதோ மஹீயான் – –அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் -வ்யாப்ய –
பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே-அகடிதகட நா சாமர்த்தியம் –
ஈஸ்வரி -ஈஸ்வரன் இருக்கும் இடம் எல்லாம் இருக்கத் தட்டில்லை பர்த்தாவின் படுக்கையும் பிரஜையுடைய தொட்டிலையும் விடாதே இருக்கும் மாதாவைப் போலே
நாரங்கள் -பெரிய பிராட்டியார் தொடக்கமான -நாய்ச்சிமாராவார்
வ்யக்திக்கும் ஜாதிக்கும் உண்டான சம்பந்தம் போலே ஈஸ்வரனுக்கும் பிராட்டிக்கும் உண்டான சம்பந்தம் –
அனந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபாயதா -என்றும்
அனந்யா ஹி மயா சீதா பாஸ்கரேண ப்ரபாயதா -என்றும்
நித்யைவைஷா ஜகன் மாதா விஷ்ணோ ஸ்ரீர அநபாயினி-என்றும்
பகவச் சேஷபூதையாய் இருக்கும்
அர்த்தோ விஷ்ணுரியம் வாணி -என்று அர்த்தாம்சம் அவனதாய் சப்தாம்சம் இவளதாய் இருக்கும்
தன்னடியார் -தம்மடியார் என்ன வேண்டாவோ என்னில் அடியார் என்கிறதுக்கு உள்ளே அடிமையில் அந்தர்பாவம் தனக்கு உண்டாகையாலே

———————————————————————————————————————————————————————-

ஈஸ்வரனுக்கு சஹஜங்கள்-ஸ்வாதந்த்ர்ய காருண்யங்கள்
பண்டு என்னை பராங்முகனாக்கு கைக்கும்
இன்று என்னைப் பொருளாக்கி தன்னுள் வைக்கைக்கும்-அபிமுகன் ஆக்குகைக்கும்
லீலா உபகரணம் ஆக்க பிரதான காரணம் ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யம் -சஹகாரி பிரவாஹ அநாதியான ஸ்வ அஜ்ஞாதி லங்கனம்
போக உபகர்ரணம் ஆக்க பிரதான காரணம் ஈச்வரனின் ஸ்வா பாவிக காருண்யம் –
பகவத் பிரசாதத்தாலே அத்யந்த சம்சார நிவ்ருத்தராய்
தஸ்ய ச வசீகரணம் தச் சரணாகதிரேவா-கடவல்லி -சித்த உபாயம் அவனே
மாமேகம் சரணம் வ்ரஜ -அதிகாரி விசேஷணம்
தன்னை ஈஸ்வரன் ரஷிக்கும் போது சம்பந்தத்தோடு கூட விலக்காமையே வேண்டுவது என்னில் அதுவும் அனுபபந்தம்
அகிஞ்சனான அதிகாரிக்கு யதா விதி ரஷாபேஷா பூர்வாக பரந்யாசத்தை ஒழிய வேறு ஒன்றால் அபேஷை இல்லாத சித்த உபாயத்தை மாமேகம் என்று காட்டி
அதினாலே வசீகரணார்த்தமான சாத்ய உபாயத்தை -சரணம் வ்ரஜ -என்று விதியாலே காட்டுகிறது-

என் உணர்வினுள்ளே இருத்தினான் -அதுவும் அவனது இன்னருளே –
இசைவித்து என்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே –
சம்பந்த ஞானம் மாத்ரம்
சித்தோ உபாய பிரதிபத்தி மாத்ரம்
அநிவாரண மாத்ரம்
அனுமதி மாத்ரம்
அசித் வ்யாவ்ருத்தி மாத்ரம்
சைதன்ய க்ருத்யம்
சித்த சாதனம்
அதிகாரி விசேஷணம்
விதி விஷயம் ஆக மாட்டாது
தன்னால் வரும் நன்மை விலைப்பால் போலே ஈஸ்வரனால் வரும் நன்மை முலைப்பால் போலே
ஆர்த்தோவா யதிவா திருப்தா
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜெயம் கதஞ்சன தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்
எதி வா ராவணஸ் ஸ்வயம்
ரிபூணாம்அபி வத்சலன் -அனலோசித விசேஷ அசேஷ லோக சரண்யன் -அன்றோ-

இன்று என்னைப் பொருளாக்கி –முன் செய்த முழு வினையால் –யானே என்னை அறியகில்லாதே –
விதி வாய்க்கின்று காப்பாரார்-செய்தாரேல் நன்று செய்தார் என்னுமவன் –
என்னுள் புகுந்து இருந்து -திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
கஞ்சித் -அதிகாரி நியமம் இல்லை
கதாசன -கால நியமம் இல்லை
பேற்றுக்கு அடி கிருபையே -வசீகரண உபாயமும் சாதனம் அன்று
ராஜபுத்ரர்கள் சம்பந்த ஞானம் அநந்தரம் சங்கதர் ஆவார்களே
ஸ்வ ரஷண ஸ்வ அந்வய நிவ்ருத்தியை சொல்லுகிற நமஸ் சிலே ஸ்வ ரஷணா ர்த்தமான சாத்திய உபாயத்தை ஆர்த்தமாகச் சொல்லுகை அசங்கதம்
சித்த உபாயத்தை மாமேகம் -என்று காட்டி -அவனுடைய வசீகரண அர்த்தமான சாத்திய உபாயத்தை சரணம் வ்ரஜ என்று விதிக்கையாலே காட்டுகிறது யென்கையும்
ஏக சப்த ஸ்வா ரஸ்ய விருத்தம்
என் உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே -இருத்துகையும்
இசைவித்து என்னை -இசைவுமே அவனுடைய அருளின் கார்யம்
ஆறு எனக்கு நின் பாதமே –நின் கழல்கலையே சரணாக –நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் –அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே —

பிரபத்யே -வர்த்தமான நிர்தேசம் சதா அனுசந்தேயமான ஞானம் -இது உபாயம் அன்று ஈச்வரனே உபாயம்
மாமேகம் சரணம் வ்ரஜ -பிரார்த்தனா மதி சரணாகதி -ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பிரபத்தி -சரனௌ சரணம் பிரபத்யே -அதிகாரி விசேஷண வாக்யங்கள் –
அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத சந்தமேனம் -அசித் வ்யாவர்த்தியே ரஷணீயதைக்குப் போரும் –
அத்வேஷம் தொடங்கி-கைங்கர்ய பர்யந்தம் -பலபரம்பரை யாகையாலும் அனன்யார்ஹ சேஷத்வ ஞானமும் பலம் ஆகையாலும்
பகவத் காமானா கார்யம் ஆகையாலும் அதிகாரி விசேஷணம் என்னலாம்
பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்ளும் ஆச்சார்யன் -அதுவும் அவனது இன்னருளே –
அஹம் அஸ்ய அபராதானாம் ஆலய அகிஞ்சனோ அகதி தவமே உபாயபூதோ மே பவதி பிரார்த்தனா மதி சரணாகதி ரித்யுக்தா சா தேவேச்மின் பிரயுஜ்யதாம்
அஹங்கார கர்ப்பம் என்றே ஆரோபித்தார்கள்
அருளினான் -1-1-1- பகவத் விஷயீ காரத்துக்கு மும்ன்பு தம்மை அசத் கல்பமாக எண்ணி தன்னைச் சொல்லிக் கொள்ள வில்லை
முலைக்கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப் போலே –
உடையானிடை -1-2-1-
அஹங்கார மமகாரங்கள் கிடக்க புண்ய ஷேத்திர தீர்த்தம் தேடித் போவது நிஷித்த த்ரவ்யத்தை உள்ளே வைத்து மெழுகூட்டினால் போலே
உடையவன் பக்கலிலே வீடு செய்மின் -வீடு செய்கை சமர்ப்பிக்கை இசைகை-வெறிதே அருள் செய்வர்
யாருக்கு யமேவைஷா வ்ருணுதே -என்று தாம் விஷயீ கரிக்க நினைத்தார்க்கு –
உகப்பாயிற்று அருளுக்கு ஹேது -ப்ரியதம ஏவ ஹி வரணியோ பவதி
மதி -அனுமதி -என்றாக்கி அனுமதி மாத்ரத்திலே -பட்டர் அருளிச் செய்வர்
வைத்தேன் மதியால் என் உள்ளத்தகத்தே –
எய்த்தே ஒழிவன் அல்லேன் –
திருமால் இரும் சோலை மலை என்றேன் -என்ன -மனஸ் சஹகாரியும் இல்லாமல் -உக்தி மாத்ரமே
மித்ரா பாவமே அமையும் என்று இருப்பவன் அன்றோ
திருமால் -அஹ்ருதமாகச் சொன்னதை ஹ்ருதமாக்கிக் கொடுப்பவள் அருகே உண்டே
வந்து -அவன் வருவதே என்று இவர் விஸ்மயப் படா நிற்க
பிபாசை வர்த்தித்தவன் தண்ணீர் இருந்த இடத்தே வரும் அத்தனை அன்றோ -அவன் வார்த்தை
க்ருபணாய் இருப்பார்-ஸ்லாக்யர் இருந்த இடத்தே வரும் இத்தனை அன்றோ
எல்லாருக்கும் அதிகம்யனானவனுக்கு நான் அபிகம்யன் ஆனேன் சோப்ய கச்சத் சபரீம் போலே
என் நெஞ்சம் -அந்த உக்தி சஹ்ருதமான என் நெஞ்சிலே
நிறையப் புகுந்தான் -விஷயாந்தரங்களுக்கு அவகாசம் இல்லாத படி புகுந்தான்
பால் தீரப் புகுந்தான் -அத்ரி பகவான் ஆஸ்ரமத்திலே சீதா சமேதராய் லஷ்மணன் உடன் புகுந்தால் போலே
இன்று என்னைப் பொருளாக்கி -பொருள் அல்லாத என்னை -என்னுள் வைத்தான் –
தன்னைப் பிறருக்கு அவகாசம் இல்லாதபடி முற்றூட்டாக தன்னை என்னுள் கொடு வந்து வைத்தான்
அன்று -விஷயா கரிக்கும் முன்பு உள்ள எல்லா காலங்களையும்
இன்று =மயர்வற மதி நலம் அருளப் பெற்ற பின்பு
என்னைப் புறம் போக புணர்த்தது என் செய்வான் -உபேஷிக்கை
பரதந்திர வஸ்து செல்ல நிற்க வற்றோ வர நிற்க வற்றோ
குன்று இத்யாதி மலைகளை சேர வைத்தால் போலே மாடங்கள் சூழ்ந்த திருப்பேர்
ஓன்று எனக்கு அருள் செய்ய -முன்பு கை விட்டதுக்கு ஹேது சொல்லவுமாம் -இன்று விஷயீ கரித்ததுக்கு ஹேது சொல்லவுமாம் –
உணர்த்தல் உற்றேனே
யானொட்டி என்னுள் இருத்துவம்
மருவித் தொழும் மனமே தந்தாய்
என்னைத் தீ மனம் கெடுத்தாய்
காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி
அத்வேஷமும் இச்சையும் அடியிலே பிறக்கைக்கு தான் கிருஷி பண்ணி
சார்வே தவ நெறிக்கு -கண்டேன் கமலப்பாதம் -காண்டலுமே விண்டே ஒழிந்தேன்
அவனது அருளால் -உறல் பொருட்டு -என் உணர்வின் உள்ளே இருத்தினேன் -வைத்தேன் மதியால் –
ப்ராப்யச்ய பரம புருஷஸ்ய ஸ்வ ப்ராப்தௌ ஸ்வச்யைவ உபாயத்வ உபபத்தே –
நாயமாத்மா ப்ரவசநேன லப்ய ந மேதயா ந பஹூநா ஸ்ருதேந
யமேவைஷ வ்ருணுதே தேன லப்ய தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்-இதயன் அநந்ய உபாயத்வ ஸ்ரவணாத்
பிரமேய சாரத்தில் கருமத்தால் ஞானத்தால் காணும் வகையுண்டே அநந்ய சரண்யத்வத்தை நாலு பாட்டாலே அருளிச் செய்து
நாலாம் பாட்டில் சேஷி தானே திருவடிகளை தருவது ஒழிய உபாயாந்தரன்களால் காண முடியாது
அஞ்சாம் பாட்டில் தன்னுடைய ச்வீகாரத்தில் உபாய புத்தி தவிர்ந்து சர்வேஸ்வரன் கிருபா பலமே சாதனம்
ஏழாம்பாட்டில் குறையேதும் இல்லாதார்க்கு என்றும் இறை ஏதும் இல்லாதயாம் –
எம்பெருமானாலே எம்பெருமானை பெரும் இத்தனை போக்கி தாம்தாம் நன்மை கொண்டு பேரா நினையார் ஸ்வரூப ஞானம் யுடையார்
கத்யத்திலும் சரணம் புக்கு அநந்தரம் ஷாமணம் பண்ணுகிறார் -பதிவ்ரதை நெடுநாள் வ்யபசரித்து
முன்னே நின்று வருகையே அபராதம் மேலே ரசிக்க வேண்டும் என்பதற்கு ஷாபணம் பண்ண வேண்டுமே
ஸ்வ அனுவ்ருத்தி பிரசன்னாசார்யாராலே மோஷமா
கிருபா மாத்திர ப்ரசன்னாச்சார்யராலே மோஷமா
ஆண்டான் -குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய் -ஸ்வ அனுவ்ருத்தி பிரசன்னாச்சார்யர்
ஆழ்வான்-பயன் நன்றாகிலும் பாகு அலறாகிலும் -கிருபா மாத்ர பிரசன்னாச்சார்யராலே என்ன
ஆண்டானும் அப்படியே ஆக வேணும் ப்ரீதராய் போனார்
ஞானப் பிரானை அல்லால் -அவனை ஒழிந்த தானும் உபாயாந்தரங்களும் கழுத்துக் கட்டிகள்
பல போக்தாவான தன ஸ்வரூபமும் பரிக்ரஹித்த உபாயமும் தவிர்ந்து
நான் கண்ட நல்லதுவே -பகவத் பிரசாத லாபத ஞானம் -ஹர்ஷத்துக்கு போக்குவீடாக சொன்ன வார்த்தை –

—————————————————————————————————————————————————————

ஞான சாரம்
குடியும் குலமும் எல்லாம் கோக நகை கேள்வன் அடியார்க்கு
குடி -க்ராமம் /குலம் -கோத்ரம் /எல்லாம் -சரண ஸூ த்ராதிகள்
சேஷியானவன் திருவடிகளையே -சம்பந்தமே நிரூபகமாய்
படியின் மேல் நதிகள் கடலை சேருமா போலே திருஷ்டாந்தம்
ம்லேச்சனும் பக்தனானால் –ஆசார்ய ஹிருதயம் -88-ஜன்ம உத்கர்ஷ அபகர்ஷங்கள் தெரிவது

—————————————————————————————————————————————-

கைவல்யமும் முக்தி நித்யம்
உற்றது வீடுயிர் –இருகல் இறப்பு –குறுகா நீளா –பெரும் துன்பம் வேரற நீங்கி –அற்றது பற்றெனில் உற்றது வீடு –
கேவலனானவன் -தனி இடத்திலே –ஆத்மா அனுபவ மாதரத்தையே புருஷார்த்தமாக அனுபவித்து
பின்பு சம்சார சம்பந்தமும் பகவத் பிராப்தியும் அற்று
யாவதாத்மபாவி அசரீரியாய்க் கொண்டு திரிவான் ஒருவன் -பிள்ளை லோகாச்சார்யர் –

————————————————————————————————————————————————–

அறிந்தனர் எல்லாம் -பராசர வியாச வால்மீகி பரப்ருதி ரிஷிகளும்
அரியை வணங்கி -சர்வ துக்க நிவர்தகரை ஆஸ்ரயித்து
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே –சம்சார சர்ப்ப சந்தஷ்ட நஷ்ட சேஷ்டைக பேஷஜம் –
அவனுடைய போக்யதையில் இழிந்து
நிரபேஷ உபாயதையில் இழிந்தவர்கள்
த்ரைகுண்ய விஷயா வேதா -வேத மரியாதையில் நின்றார்கள் ரிஷிகள்
ஆழ்வார்களுக்கு இவர்களைக் காட்டில் நெடு வாசி உண்டே
முனிவரை இடுக்கியும் முந்நீர் வண்ணனாயும் வெளியிட்ட சாஸ்திர தாத்பர்யங்களுக்கு விசிஷ்ட நிஷ்க்ருஷ்ட வேஷங்கள் விஷயம் –
சாஸ்திரிகள் தெப்பக் கையரைப் போலே -பிறவிக் கடல் நீந்துவார்க்கே
ஓடம் ஏறினவர்கள் விஷ்ணு போதம் -கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ -ஆக்கை விடும் பொழுது எண்ணே
ஆழ்வார்கள் பகவத் பிரசாதத்தாலே பெற்ற பாரதந்த்ர்யா போக்யதைகள்
ரிஷிகள் சாஸ்த்ரத்தாலே பெற்ற சேஷத்வ போக்த்ருத்வங்கள் -விகக்கினை விதியில் காணும் –
மண்டினாரும் மற்றையாரும்
கல்லெடுத்து கல்மாரி -அச்க்தாதி அதிகாரம் சக்தாதிகாரம் சாதனாந்தரங்கள்
ஆப்தனான வேத புருஷன் உபாயாந்தரங்களை விதித்து பட்டி தின்று திரிகிற பசுவுக்கு வசப்படுகைக்கு
கொண்டிப் பசுவுக்கு தடி கட்டி விடுவாரைப் போலே
அஹங்கார மமகாரங்க ளால் வந்த களிப்பு அற்று ஸ்வரூப ஞானம் பிறக்கைக்காக
ஔஷத சேவை பண்ணாதவர்களுக்கு அபிமத வஸ்துக்களிலே அத்தை கலசி இடுவாரைப் போலே
சாஸ்திர விசுவாசம்
ஸ்வரூப விசுவாசம்
அது தோல் புரையே போம் இது மர்ம ஸ்பர்சி

—————————————————————————————————————————————————————–

மற்று ஓன்று கண்ணன் அல்லால் என்கிற வைகல் வாழ்தல் ஆன சித்த உபாயம் –
யாதும் இல்லை மிக்கு அதனில் –
செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப் பந்தனையார் வாழ்வேல் பழுது -நான்முகன் திரு
ரத்னத்துக்கு பலகறையைப் போலேயும்
ராஜ்யத்துக்கு எலுமிச்சம் பழம் போலேயும்
பலத்துக்கு சத்ருசம் அன்று
பக்தி மாத்ரமே பற்றாசாக பரம புருஷார்த்த மோஷத்தைக் கொடுத்தாலும் சத்ருசம் இல்லையே
அக்தே உய்யப் புகுமாறு –
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்மினோ
உபாயமும் உபேயமும் அவன் திருவடிகளே

—————————————————————————————————————————————————————–

அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
.பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading