ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -51-60– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

இப்படித் தாம் அடைவு கெட்ட படியை அனுசந்தித்து –
நெஞ்சே -நீ முன்னம் என்னைப் போலே கலங்காதே
அவனுடைய சௌந்தர்யாதிகளைத் தனித் தனியே தரித்து நின்று அனுபவிக்கப் பார் -என்கிறார் –
பேச்சே அன்று நினைப்பன்-என்கிறார் –

மதிக்கண்டாய் நெஞ்சே மணி வண்ணன் பாதம்
மதிக்கண்டாய் மற்றவன் பேர் தன்னை -மதிக்கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல் கடைந்த
நீராழி வண்ணன் நிறம்———51-

பதவுரை

நெஞ்சே–மனமே!
மணி வண்ணன் பாதம்–நீல மணி வண்ணனான எம்பெருமானது திருவடிகளே
மதி கண்டாய்–அநுஸந்திக்கக் கடவாய்
பேர் ஆழி நின்று பெயர்ந்து–பெரிய திருப் பாற் கடலில் நின்றும் துயில் விட்டெழுந்து
கடல் கடைந்த–தேவர்களுக்கு அமுதங்கொடுக்க அக் கடலைக் கடைந்த
மதிக் கண்டாய்–சிந்திக்கக் கடவாய்
மற்று–இன்னமும்
அவன் பேர் தன்னை–அப்பெருமானது திருநாமங்களை
நீராழி வண்ணன் நிறம்–கடல் வண்ணனான அப்பெருமானுடைய திருமேனி நிறத்தை
மதிக் கண்டாய்–நினைக்கக் கடவாய்-

மதிக்கண்டாய் நெஞ்சே மணி வண்ணன் பாதம்-
நெஞ்சே -நீல மணி போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையவனுடைய திருவடிகளைப் புத்தி பண்ணு கிடாய் –

மணி வண்ணன் பாதம் –
மறக்கலாய் இருக்கிறதோ -தோற்று அடியிலே விழு –

மதிக் கண்டாய் மற்றவன் பேர் தன்னை –
இன்னம் அங்கனம் அன்றிக்கே அவ் வடிவு அழகுக்கு வாசகமான மற்ற திரு நாமங்களைப் புத்தி பண்ணு கிடாய் –

மதிக் கண்டாய்-
நினைத்து உஜ்ஜீவி –

பேராழி நின்று பெயர்ந்து கடல் கடைந்த-
ஆஸ்ரித அபேஷிதம் ஒரு தலையானால்  தன் படுக்கை என்றும் பாராதே அங்கு நின்றும் எழுந்து நின்று கார்யம் செய்த படி
பிரயோஜனாந்த பரருக்கு கடல் கடைந்து கொடுத்த படி
அர்த்திப்பாரைப் பெற்றவாறே படுக்கையைக் கடைந்து கொடுத்தான் –

நீராழி வண்ணர் நிறம் –
ஒரு கருங்கடல் வெண் கடலை நின்று கலக்கினாப் போலே -கடலைக் கடைந்த அழகு யுடையவனை புத்தி பண்ணு  கிடாய் –
கிடந்த கடலை நின்ற கடல் கடைந்தாப் போலே -சமுத்ரத்தில் நீர் நிறம் போலே இருந்துள்ள நிறத்தை யுடையவன் –

நிறம் மதிக் கண்டாய் –
தேவர்களுடைய புன்மையில் போகாது ஒழிகை -அவனையே நினை –

————————————————————————–

திரு உள்ளத்துக்கும் கூட உபதேசிக்க வல்ல தம்மைக் கலங்கப் பண்ணின ஸ்ரீ யபதியுடைய அழகையும்
பிராட்டி சம்பந்தத்தால் வந்த மிக்க கிருபையையும் சொல்ல இது ஒருவர்க்கும் நிலமல்ல கிடீர் -என்கிறார்-

நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியனார் அது அறிவார் -மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி —52-

பதவுரை

நிறம் கரியன்–(காளமேகம் போல்) கருநிறமுள்ளவனும்
செய்ய நெடு மலராள் மார்வன்–சிவந்த நிறத்தை யுடையளாய்ப் பெரிய தாமரைப் பூவை யிருப்பிடமாக வுடையளான
பெரிய பிராட்டியாரைத் திரு மார்விலே யுடையனுமான எம்பெருமான்
அறம் பெரியன்–அருளில் பெருத்தவன்
மறம் புரிந்த வாள்–பகை பாராட்டின
அரக்கன் போல்வானை–வாட்கையனான இராவணன் போன்ற மஹாபலியை
(இராவனைப் போலவே தலையறுக்க வேண்டியிருந்தும் அது செய்யாமல்)
வானவர் கோன் தானத்து–தேவேந்திரனுடைய லோகமான ஸ்வர்க்கம் போலே விலக்ஷணமான பாதாள லோகத்தில்
நீள் இருக்கைக்கு–நீண்ட காலம் வாழும்படியாக
உய்த்தான்–செலுத்தின அப்பெருமானுடைய
நெறி அது–அவ் வருள் வகையை
ஆர் அறிவார்–யார் தெரிந்து கொள்ள வல்லர்?-

நிறம் கரியன்-
ஆஸ்ரிதருடைய சகல தாபங்களையும் போக்கும்படியான வடிவு அழகை யுடையவன் –

செய்ய நெடு மலராள் மார்வன்-
மேகத்தில் மின்னினாப் போலே அவ்வடிவுக்கு பரபாகமான சிவந்த நிறத்தை யுடைய பெரிய பிராட்டியார்
நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள திரு மார்பை யுடையவன் –

அறம் பெரியன்-
அவளோட்டைக் கலவியாலே ஆன்ரு சம்ச்யத்தால்  சாலவதிகன் –

செய்ய நெடு மலராள் மார்வன்–அறம் பெரியன்–
அவன் கிருபைக்கு ஊற்று இவள் -இவள் ஐஸ்வர் யத்துக்கு ஊற்று அவன் –

ஆர் அது அறிவார் –
அந்த  ரஹச்யம் பத்தொன்பதாம் பாஷை -ஒருவருக்கும் தெரியாது –
ஆழ்வார்கள் அறிதல் -அவர்களை அடி ஒற்றின நம் முதலிகளில் சிலர் அறிதல் செய்யும் அத்தனை –

ஆரது அறிவார் –
அவன் அகவாய் அறிவார் யார் –புறவாய் அறிவார் யார்–
எம்பெருமான் தன்னைக் கூடு பூரித்து வைக்க அறிவாராய் பெறு கிறிலோம்-

மறம் புரிந்த வாள் அரக்கன் போல்வானை –
க்ரௌர்யமான தொழிலை யுடைய ராவணனோடு ஒத்துள்ள மஹா பலியை –
இருவருக்கும் ஒக்குமாய்த்து அவனுடைமையை என்னது என்று இருக்குமது –
அவன் பிராட்டியை அபஹரித்தான் -இவன் பூமியை அபஹரித்தான் –
ராவணனைப் போலே தலை யறுப்புண்ண ப்ராப்தனாய்த்து மஹா பலியும் –
இப்படி இருந்த பின்பு அவனைப் போலே தலை அறுத்துப் பொகடாதே வைத்தமைக்கு அடி ஔ தார்யம் என்று ஒரு குணலேசம் கிடக்கையாலே –

வானவர் கோன் தானத்து நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி –
இப்படி ராஜ்யத்தில் ஸ்ரத்தை பண்ணினவன் இழந்தது ஆகிறது என் என்று தன்னுடைய
ஆன்ரு சம்ச்யத்தாலே இவன் அப்ராப்தமாகப் பெற்றான் என்கிறது என் –
ப்ராப்தமான முறையிலே பெறுகிறான் என்று பார்த்து  இந்திர லோகத்திலும் நன்றான பாதள லோகத்திலே வைத்தான் ஆய்த்து-
இந்திர பதத்திலே அவனைப் போலே பறி கொடுத்துக் கண் பிசிய வேண்டாத படி சிரகாலம் இருக்கைக்காக
அவனை வைத்தவனுடைய பிரகாரம் ஆர் தான் அறிவார் –

நெறியால் உய்த்தான் -என்றுமாம் –
நெறி என்று ஸ்வ பாவம்
ஒருவராலே அறியலாய் இருந்ததோ –
ததாமரத்வம் த்ரித சாதிபத்யம் மன்வந்தரம் பூர்ணமபேத சத்ரு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-30-என்னா நின்றது இறே –
மேல் இந்திர பதம் செலுத்துவானாக வைத்தவனுடைய ஆன்ரு சம்ச்யத்தை அறிவார் யார் –

————————————————————————–

இப்படி மஹா பலி பக்கலும் கூட அனுக்ரஹத்தைப் பண்ணும் ஸ்வ பாவனானவன் கண்ணுக்கு இலக்காம்படி
தன்னை சர்வஸ்வதானமாக பண்ணி வந்து வர்த்திக்கிற திருமலை கிடீர் -நான் ஆதரிக்குமது என்கிறார் –

நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–

பதவுரை

நெறியார்–திருமலை வழியிலேயே ஊன்றி யிருப்பவர்களுடைய
சூழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து அறியாது–கேச பாச மானது முன்னே முளைத்துப் பின்னே
தொங்கிக் கொண்டிருக்கவும் இது மநுஷ்ய வ்யக்தி யென்று தெரிந்து கொள்ளாமல்
இள கிரி என்று எண்ணி–இது ஒரு சிறு மலை யென்று எண்ணிக் கொண்டு
பூங்கொடிகள்–பூங்கொடிகளானவை
பிரியாது–அவ்விடம் விட்டு நீங்காமல்
வைகும்–நித்யவாஸம் பண்ணப் பெற்றதாய்
பொரு புனல் குன்று என்னும்–அலை யெறிகின்ற ஜல ஸம்ருத்தியை யுடைத்தான திருமலை யென்று ப்ரஸித்தமான
வேங்கடமே–திருவேங்கடமே
யாம் விரும்பும்–நாம் ஆசைப்பட வுரிய
வெற்பு–திருமலையாகும்.

நெறியார் குழல் கற்றை –
புறம்புத்தை அந்ய பரத்தையடைய அற்றுத் திருமலை   யாழ்வார்  பக்கலிலே அனுசந்தானத்தை யுடையராய்க் கொண்டு –
வழி பட ஆஸ்ரயிக்கிற வர்களுடைய குழல் கற்றையிலே –

முன்னின்று பின் தாழ்ந்து அறியாது இளங்கரி என்று எண்ணிப் –
அங்குத்தைப் பூங்கொடிகள் ஆனவை -இவர்கள் சலியாதே மூச்சு விடுதல் –
உடம்பு ஆடுதல் செய்யாதே இருக்கிற இருப்பைக் கொண்டு
சில சேதனர் என்று புத்தி பண்ணாதே —
இவை சில சிறு மலைகள் என்று பார்த்து முன்னின்று பின்னே வந்து படர்ந்து –
முன்னின்று பின்னே தாழ்ந்த குழல் கற்றை யுடைய நெறியார் பக்கலிலே என்னவுமாம் –
அதாகிறது-
தங்கள் பெருமையாலே தன்னிலே ஒன்றாக முன்னும் தாழ்ந்த குழல் கற்றையை யுடையர் என்றுமாம் –

பிரியாது பூங்கொடிக்கள் வைகும்-
அவ்விடத்தை விடாதே நின்று தன கார்யத்தையும் பிறப்பியா நிற்கும் –
இதுக்கடி சர்வதா சைதன்யம் யுண்டாகில் இவர்கள் ஒரு வியாபாரம் பண்ணார்களோ
என்று கொண்டு எண்ணி யாய்த்து பூங்கொடிகள் வைகும்–அவர்கள் தங்கள் கொள் கொம்பைப் பற்றி –

பொரு புனல் குன்று என்னும் வேங்கடமே –
பொரா நின்றுள்ள புனலை யுடைத்தான திருமலையை –அருவிகளும் சுனைகளும் பொருகிறபடி-

பூங்கொடிகள் வைகும் –
பூக்களை யுடைத்தான கொடிகள் தங்குகிற –

யாம் விரும்பும் வெற்பு-
நான் விரும்பும் இடம் என்கிறார் -அவர்கள் அங்கே இருந்தே இவ் வுடம்பைப் பொகட்டு
லோகாந்தரத்தே வேறு ஒரு யுடம்பு கொண்டு  அனுபவிக்க நினைக்க –
நான் இவ் யுடம்பால் யுள்ள பிரயோஜனம் இங்கே கொள்ளப் பெற்றேன் –

நெறியார் முன்னிற்று பின் தாழ்ந்து குழல் கற்றை அறியாது இளங்கிரி என்று எண்ணிப்
பிரியாது பூங்கொடிகள் வைகும் -என்று அந்வயம்-

————————————————————————–

இவனுக்கு எல்லை நிலமான திருமலை அளவும் அவர் விரும்பின வாறே
அவனும் தனக்கு வாஸ ஸ்தானமாக நினைத்து இருக்கும் திருமலைகள் இரண்டிலும் பண்ணக் கடவ
ஆதாரத்தை இவர் திரு உள்ளம் ஒன்றிலுமே பண்ணினானாய் இருக்கிறது –

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54-

பதவுரை

வெற்பு என்ற–(தெற்கு) திருமலை யென்னப்படுகிற
இருஞ்சோலை–திருமாலிருஞ் சோலை யென்ன
வேங்கடம்–திருவேங்கடமென்ன
என்ன இவ் இரண்டும்–ஆகிய இத் திருமலைகளிரண்டும்
நிற்பு என்று–நாம் உகந்து வாழுமிடமென்று
நீ மதிக்கும் நீர்மை போல்–நீ திருவுள்ளம் பற்றி யிருக்குந் தன்மையை உடைத்தாயிருப்பது போலவே
உளம் கோயில்–(என்னுடைய) ஹ்ருதயமாகிற கோயிலும்
நிற்பு என்று–நீ உகந்து வாழுமிடமென்று
உள்ளம் வைத்து–பிரதிபத்தி பண்ணி
வெள்ளத்து இள கோவில்–திருப்பாற்கடலாகிற பாலாலயத்தை
கைவிடேல் என்று–கைவிட வேண்டா என்ற
உள்ளினேன்–பிரார்த்திக்கின்றேன்.

வெற்பு என்று இரும் சோலை –
இரும் சோலை வெற்பு என்று –
அதாகிறது -தெற்கில் திருமலை -திருமால் இரும் சோலை மலை என்றும்
வேங்கடம் என்று இவ்விரண்டும்-
வேங்கட வெற்பு -திருவேங்கடம் -என்று சொல்லுகிற இவ்விரண்டு ஸ்தானமும் –

நிற்பென்று –
நமக்கு வாஸ ஸ்தானம் என்று –

நீ மதிக்கும் நீர்மை போல் –
நீ புத்தி பண்ணும் ஸ்வ பாவம் போல்

நிற்பென்று உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் –
என்னுடைய ஹ்ருதயம் ஆகிற கோயிலும் தேவர்க்கு வாஸ ஸ்தானம் என்று புத்தி பண்ணி –

வெள்ளத்து இளம் கோயில் கை விடேல் என்று உள்ளினேன் –
திருமலையைக் காட்டில் என் ஹ்ருதயத்தில் பண்ணின அபி நிவேசம் கண்டு எனக்காக
அவ்வோ திருமலைகளிலும் வந்து நிற்கைக்கும் அடியான திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின   படி
புல் எழுந்து போய்த்ததோ என்று இரா நின்றேன் –
ஆன பின்பு என்பாடு வருகைக்கு பாலாலயமான திருப் பாற் கடல் உண்டு –
அவ்விடத்தை விட்டதாகாது ஒழிய வேணும் என்று பிரார்த்திக்கிறேன் -வேண்டிக் கொண்டேன் -என்கிறார்
கல்லும் கனைகடலும்  வைகுண்ட வானாடும் புல்லென்று ஒழிந்தன கொல்-பெரிய திரு -68–என்னக் கடவது இறே-

இளம் கோயில் கை விடேல் –
க்ருதஜ்ஞனாக வேணும் காண்-உபகரித்த இடத்தை மறக்கலாமோ –
சௌ பரிக்கு ஐம்பது ஸ்திரீகளை மாந்தாதா கொடுத்து ஒரு நாள் வந்து  –
பெண்காள் உங்களுக்கு ஒரு குறை இல்லையே -என்ன
ஒரு குறை யுண்டு -என்னை அல்லது புறம்பு அறி கிறிலேன்-என்றாப் போலே
இவரும் புறம்பு இல்லை -என்று அஞ்சுகிறார் –

————————————————————————–

இப்படி தேவர் என் பக்கலில் விருப்பத்தைப் பண்ணுகையாலே ஞான லாபத்தால் குறை யற்றேன் –
அதனுடைய பலமான ப்ராப்தியால் வரும் அனுபவத்தையும்  தேவரே பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார்
உன்னை நினைக்காக அரிதான சம்சாரத்திலே உன்னை நினைக்கும் படி பண்ணினாய் –
இனி ப்ராப்தி யளவும் பண்ணாய் -என்கிறார்-

என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்–55-

பதவுரை

வென்றி–ஜய சீலமாய்
அடல்–தீக்ஷணமான
ஆழி–சக்கரத்தை
அறிவனே–ஸர்வஜ்ஞனான பெருமானே!
ஏழ் பிறப்பும்–இப்படி யிருக்கிற நீ எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும்–எல்லா அவஸ்தைகளிலும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால்–ஒரு படிப்பட நின்று என்னைப் பற்றின நினைவு தப்பாமலிருந்ததனால்
என்றும் மறந்தறியேன்–உன்னை ஒருநாளும் மறப் பனல்லேன்
இன்பம் கடல் ஆழி–ஆநந்த ஸாகரத்தையும்
அருளிக் காண்–எனக்கு அருள வேணும்.

என்றும் மறந்து அறியேன் –
தேவரை ஒரு காலமும் மறந்து அறியேன் -கண்டால் இழவு மறக்கும் படி இருக்கை-
அதுக்கடி
ஸ்ரவண மநந  நிதித்யாசன அநந்தரம் பிறக்கும் உபாசன த்ருவாநு ஸ்ம்ருதியாலேயோ  
மறவாது ஒழிகிறது -என்னில் –

ஏழ் பிறப்பும் எப்பொழுதும் நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் –
எல்லா ஜன்மங்களிலும் -எல்லா அவஸ்தைகளிலும்-தேவர் எதிர் சூழல் புக்கு நின்று
இவன் நம்மை மறவாதே பெற்றிடுவானுக்கு என்று அனுசந்திக்கிற இவ் வனுசந்தானம்
ஒரு நாளும் மறவாத ஸ்வ பாவத்தாலே இப்பொழுது நினைத்த படியாலே எல்லாக் காலமும் மறந்து அறியேன் -என்கிறார் –

எம்பெருமான் விடாதே இருக்கையாலே மறக்க விரகு இல்லை –
என்னுடைய ஞானம் குறைவற்று இருக்கை அல்ல -உன் நினைவாலே –

மத்த ஸ்ம்ருதிர்ஞானம் அபோஹநஞ்ச -ஸ்ரீ கீதை -15-15-என்றும்

வேதாஹம் சமதீதாநி வர்த்தமாநாநி ச அர்ஜுன பவிஷ்யாணி  ச பூதானி மாம் து வேத ந கச்சன -ஸ்ரீ கீதை -7-26-என்றும்
அவனே அருளிச் செய்கிறான் இறே

போதோயம் விஷ்ணுரியம் புத்தி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-28- என்று
அவனே ஞானம் பிராட்டியே புத்தி என்றது இறே

நின் பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -திருச்சந்த விருத்தம் -101-

மறப்பற என்னுள்ளே மன்னினான் -திருவாய் -1-10-10-

இவனுடைய ஞானமும் பண்டாரத்து நின்றும் புறப்பட வேண்டி இருக்கிறபடி –
தர்ம பரதந்த்ரமான மாத்ரமே யல்ல -ஆத்மாவினுடைய தர்மபூத ஞானமும் பரதந்த்ரம் –
சத்தை பராதீனமான போது ஞானமும் பராதீனமாய் இருக்கை-

இத்தால்
ஞான கர்ம அனுக்ருஹீதையான பக்தியாலே யன்று -நீ யாகிற சித்த உபாயத்தாலே என்றபடி –

வென்றி அடலாழி கொண்ட அறிவனே –
நாம் செய்த அம்சம் செய்தோம் இறே -எல்லாம் செய்ய வேணும் என்று நிர்பந்திக்கக் கடவதோ என்ன
பிரபல பிரதி பந்தங்களைப் போக்குகைக்கு ஈடான பரிகரத்தை யுடையாய்
அதுக்கு மேலே உன்னை அறிவுதி -என்னை அறிவுதி-என்னாலே உன்னைப் பெற ஒண்ணாது –
உன்னாலே உன்னைப் பெற வேணும் என்னும் இடம் நீயே அறிவுதி –
சர்வஜ்ஞன் சர்வ சக்தி அல்லையோ –
நைவ கிஞ்சித் பரோஷந்தே ப்ரத்ய ஷோசி ந கஸ்யசித் -நைவ கிஞ்சித் அசித்தந்தே ந ச சித்தோசி கஸ்யசித் -ஜிதந்தே -6-
என்றும் சொல்லக் கடவது இறே அவனை
இத் தலைக்கு அஜ்ஞ்ஞான அசக்திகள் போலே அத்தலைக்கும் ஞான சக்திகள் ஸ்வரூபமாகை-
உன் பக்கல் ஒரு ஞான சக்திகளுக்கு வைகல்யம் காண்கிறிலேன் -ஆன பின்பு

இன்பக் கடலாழி நீ யருளிக் காண் –
பேற்றுக்கு உறுப்பான ஞானத்தில் கண் அழிவு அறுத்துத் தந்த நீயே
பெற்றால் அனுபவிக்கக்   கடவதான நிரதிசய ஆனந்தத்தையும் பண்ணித் தந்தருள வேணும்
ஞான சங்கோசம் அறுத்தாப் போலே -யேஷஹ்யேவா நந்தயாதி -தைத் ஆன -7-எண்ணப் பண்ணி அருளவும்  வேணும் –
கண்டால் பிறக்கும் ஸூ கத்தையும் பண்ணித் தந்து அருள வேணும்
அரியது செய்தால் எளியது செய்ய ஒண்ணாதோ
கடல் என்றும் ஆழி என்றும் சொல்லுகிற இது
மீமிசையாய் நிரதிசய ஆனந்தத்தைச் சொன்னபடி -ஆனந்த சமுத்ரம் -என்றபடி –

————————————————————————–

இப்படிப் பேறு அவனாலே என்று கொண்டு நிச்சயித்தாராகில் -அவன் செய்தபடி கண்டு இருக்கும் அத்தனை போக்கி
நெடும் காலம் சம்சரித்துப் போந்த நீர் அருள் என்று வடிம்பிடக் கடவதோ என்ன –
அப்படியே அது செய்யலாவது -ஸ்வரூப ஞானம் யுடையாருக்கு அன்றோ –
முன்னடி தோற்றாத படியான ப்ரேமம் அடியாக வந்த இருட்சி யுடையாருக்கும் பற்றாசும் அங்கே யுண்டாகையாலே
அத்தனை கார்யப் பாடு பார்த்துத் தானே தன்னைத் தருகிறான் என்று ஆறி இருக்க வேணுமோ என்கிறார் –
நீர் சேஷ பூதர் ஆனாலும் உம்முடைய ஸ்வரூப அனுரூபமாக இருக்க வேண்டாவோ –
சேஷியை இப்படி நிர்பந்திக்கக் கடவதோ என்னில் –
அது வைதமான படி இறே -ஆசை மிக்கால் செய்யலாவது உண்டோ என்கிறார் –

காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56-

திருமாலை காண கழி காதல்–எம்பெருமானை ஸேவிக்க வேணுமென்று மிகுந்த விருப்பம்
கை மிக்கு காட்டினால் நாணப் படும் என்றால்–மேன்மேலும் அதிகரித்தால் அடங்கியிருக்க வேணுமென்றால் அடங்கி யிருக்க முடியுமோ?
கருமாலை–கரிய திருமாலாகிய அப்பெருமானை
பொன் மேனி காட்டா முன்–அவனது அழகிய திருமேனி தானே காட்டிக் கொடுப்பதற்கு முன்னே
நாங்கள் திரு–நமக்குப் புருஷகார பூதையான் பிராட்டி
பேணி–விரும்பி
காட்டும்–காட்டிக் கொடுப்பன்

காணக் கழி காதல் –
காணா விடில்  கழியாத காதல் -என்னுதல் –
அன்றிக்கே –
காணக் காணக் கழிந்து வருகிற காதல் உண்டு -மிகைத்து வருகிற காதல் -அது –

கை மிக்குக் காட்டினால்-
கை கழிந்து காட்டினால் கரை புரண்டால் -எனக்கு அபி நிவேசம் யுன்டானால் -என்றபடி

நாணப் படும் என்றால் நாணுமே —
அவன் தானே வந்து மேல் விழும் தனையும் லஜ்ஜித்து  ஒடுங்கி ஓரிடத்திலே இருக்க வேணும் –
நாம் மேல் விழக் கடவோம் அல்லோம் என்றால் அப்படி இருக்கப் போமோ
நீ சேஷீ-நான் சேஷபூதன் என்னும் முறையிலே நிற்கப் போமோ

நாணுமே-
வசனம் கொண்டு இருக்க ஒட்டுமோ -அதுக்கு மேலே –

கருமாலைப் –
கறுத்து ஸ்ரமஹரமான நிறைத்தை யுடையனான சர்வேஸ்வரன் –

பொன் மேனி காட்டா முன்-
ஸ்ப்ருஹணீயமான வடிவு காட்டுவதற்கு முன்னே

திருமாலை நாங்கள் திரு பேணிக் காட்டும்-
ஸ்ரீ யப்பதியை நமக்கு ஸ்வாமிநியான பெரிய பிராட்டியார் பேணிக் காட்டும் -ஆதரித்துக் கொடு வந்து காட்டும்
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் -மூன்றாம் -1-என்கிறபடியே
அவளைக் கண்டால் இறே அவ்வடிவு தோற்றுவது-

பொன்மேனி –
இருவருடைய ஒளியாலும் இத்தனை தோஷம் பாராமல் மேல் விழுந்தால் அத்தால் வந்த அபராதத்தைப் பொறுப்பித்து
ந கச்சின் ந அபராத்யதி -யுத்த -166-4-என்று
சேர்க்கைக்கு ஈடான பரிவரம் குறைவற்று இருந்த பின்பு

நாணப் படும் என்றால் நாணுமே –
இத்தலைக்கு அபி நிவேசத்தால் குறைவற்று இருந்தது –
அத்தலை தோஷாதோஷா  நிரூபணம் பண்ணும் விஷயம் அன்றிக்கே இருந்தது
ஆன பின்பு இனி ஏதடியாக லஜ்ஜிப்பது –

நங்கள் திரு –
புருஷகாரமாகைக்கு ப்ராப்தி –
பிராட்டி சந்நிதி யுண்டாக அயோக்யன் என்று அகலவும் விரகு இல்லை –
சாபராதன் என்று மீளவும் போகாது –
முறையில் நிற்கவும் ஒண்ணாது –

————————————————————————–

இப்படிப்பட்ட பெரிய பிராட்டியாரோடு கூடி யுள்ளவன் கிடிகோள் -சர்வ சமாஸ்ரயணீயன் -என்கிறார்-

திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்படிமின் கண்டீர் -உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்–57-

திருமங்கை நின்றருளும் தெய்வம் –
பெரிய பிராட்டியார் -இறையும் அகலகில்லேன் -என்று கொண்டு
நித்ய கடாஷத்தைப் பண்ணி நித்ய வாசம் பண்ணுகிற சர்வேஸ்வரனை –அவ்யபிசாரியான லஷணம்-

லஷ்மீ பத லாஷைக லஷணம் -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -1-9-
திருவடிகளிலே செம்பஞ்சு மார்விலே காணில் அவனே பரதேவதை -ஜகத் காரணத்வாதி அப்ரயோஜகம்

திருவில்லாத் தேவர் -நான்முகன் -53-
ஸ்ரீ யபதி நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதா ந-என்று  கீதா பாஷ்யம் –
கல்யாண குணங்களுக்கு முன்னே எடுக்கையாலே நிரூபக தர்மம் –

நா வாழ்த்தும் கருமம் –
நாவாலே ஸ்தோத்ரம் பண்ணுகை யாகிற காரியத்தில் –

கடைப் பிடிமின் கண்டீர் –
இதுவும் ஒரு வார்த்தை சொல்லுகிறேன் என்று இராதே –
இத்தை புத்தி பண்ணுங்கள் கிடி கோள்-

கடைப்படிமின் கண்டீர் –
இதிலர் ஒருப்படுங்கோள்-எத்தனையேனும் செல்ல அயோக்யரான எங்களுக்கு
ஏத்தின போதாக ஏத்தப் போயிருக்குமோ என்ன –

உரிமையால் ஏத்தினோம் –
நான் ஏத்திற்று வேறு ஒரு ஆகாரம் கொண்டோ -சேஷித்வ ப்ராப்தியால் வந்த முறை கொண்டு அன்றோ –
ஆன பின்பு உங்களுக்கும் அவன் திருவடிகளை ஏத்தக் குறையில்லை –

எந்தை பேர் நாம் உரிமையால் ஏத்தினோம் –
நாங்கள் அவனுடைய பேரை சேஷபூதர் என்னும் ப்ராப்தியாலே ஏத்தினோம் –
முறை யறிந்த நாம் முறை தப்பாமே ஏத்தினோம் –
விபீஷண லஷ்மணாதிகளைப் போலே —
சூர்பணகை போலே முறை கெட அல்ல –

இருந்தடக் கை எந்தை பேர் –
பெருத்து பணைத்து வளர்ந்த தோள்களை யுடைய ஸ்வாமி யுடைய திருவடிகளை
திரு நாமங்களாலே ஏத்தினோம் –

நாற்றிசையும் கேட்டீரே –
இவ்வர்த்தத்தை நாலு வகைப் பட்ட திக்கில் உள்ளார் எல்லாம் கேட்டி கோளோ என்கிறார்
எந்தை பேர் நாற்றிசையும் என்று கீழோடு கூட்டி
ஸ்வாமி யுடைய பேர் அன்றோ -எல்லா திக்கிலும் இது கேட்டி கோளே-என்றுமாம் –

————————————————————————–

நமக்கு இந்த நன்மை எல்லாம் உண்டாயிற்று சர்வேஸ்வரனுடைய கடாஷத்தால் -என்கிறார்-

நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து -வேம்பின்
பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
அருள் நீர்மை தந்த வருள்–58-

பதவுரை

வேம்பு பொருளின் நீர்மை ஆயினும்–(எம்பெருமானைப் பாடுவதானது) வேம்பு என்னும்
வஸ்துவின் ஸ்வபாவம் போலே கைப்பதாகத் தோன்றினாலும்
பொன் ஆழி–அழகிய திருவாழியை (கையுந்திருவாழியுமான சோத்தி யழகை)
பாடு என்று–பாடக் கடவாய் என்று
நா மங்கை–ஸரஸ்வதி யானவள்
நெஞ்சத்து–(நமது) நல்ல நெஞ்சிலே
ஒம்பி இருந்து–ஆதரித்து இருந்து
எம்மை–நீர்மைக் கொண்டு
ஓது வித்து–பகவத் விஷயத்தைப் பாடச் செய்ததனால்
நாம் பெற்று நன்மையும்–தாம் அடைந்த ஸுஹ்ருதமும் (எதனாலே வந்ததென்னில்)
அருள் நீர்மை தந்த அருள்–அருளையே இயல்வாகவுடைய ஸர்வேச்வரன் அருளிய க்ருபையினாலே வந்தது.

நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து
நமக்கு யுண்டான இந்த லாபம் சரஸ்வதியானவள் இவ்விடம் இருந்து ஏத்திச் செல்லுகைக்கு
பாங்கான ஸ்தலம் என்று புத்தி பண்ணி –

ஓம்பி இருந்து –
நான் விதேயனான போது சொல்லுவித்து –
அவிதேயனான போது விட்டுப் படித்தும் சொல்லுவிக்கையாலே –

ஓதுவித்து –
இவர்களுடைய சந்த அனுவர்த்தனம் பண்ணி -ராஜபுத்ரரைப் பள்ளி ஒதுவிப்பாரைப் போலே –

ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு பிரம்மா பிரசாதித்தான் –
இவர்க்கு எம்பெருமான் பிரசாதித்தான் –
அவன் தான் சொல்லுவித்த பிரகாரம் ஏது என்னில் –

வேம்பின் பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
கையும் திரு ஆழியுமான சேர்த்தி இருந்தபடி கண்டாயே
இது வேம்பாகிற பதார்த்தத்தின் யுடைய ஸ்வ பாவத்தை யுடைத்தே யாகிலும் இத்தைப் பாடு என்று –
இனிது என்று இருந்தில்லை யாகிலும் இத்தைச் செய்யப் பார் –

பொன்னாழி பாடு என்று –
வேப்பங்குடி நீர் இருக்கிறபடி –
இப்படி அவன் தான் பஷபதித்து இங்கனே செய்கைக்கு அடி என் என்றால்

அருள் நீர்மை தந்த வருள்-
அருளுகையே ஸ்வா பாவமாக உடையவனானவன் பண்ணின பிரசாதம் நாம் பெற்ற நன்மைக்கு அடி என்கிறார் –

நாமங்கை ஓதுவித்து –
சரஸ்வதி குட நீராட்டுகையாலே -சொற்பணி செய் ஆயிரம் -திரு -1-10-1-
லோகே வனஸ்பதி -ஸ்ரீ ஸ்தவம் -11-

————————————————————————–

இந்த லாபத்துக்கு அடியான பிரதம தர்சனம் இருந்தபடியைச் சொல்கிறார்-

அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண் குற்ற வப்போது –இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் தொண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59-

பதவுரை

அருள் புரிந்த சிந்தை–அருளோடு கூடின திருவுள்ளத்தை
அடியார் மேல் வைத்து–அடியவராகிய எங்கள் மேலே வைத்து
பொருள் தெரிந்து–அபதார்த்தமாகத் திருவுள்ளம் பற்றி
காண் குற்ற அப்போது–கடாக்ஷித்தருளுகிற காலத்திலே
இருள் இரிந்து–அஜ்ஞான விருள் நீங்கப் பெற்று
நோக்கினேன்–ஸ்வரூபத்தை ஆராய்ந்தேன்
நோக்கி–அப்படி ஆராய்ந்து
ஒண் கமலம் அது–அழகிய தாமரை மலர்களை என்னலாம் படியுள்ள அத் திருவடிகளை
நினைந்தேன்–(ப்ராப்யமாக அநுஸ்ந்தித்தேன்
ஓர்ந்து–(இத் திருவடிகள் தவிர நமக்கு வேறு புகலில்லை யென்று நிரூபித்து
என்னையும்–ஆத்மாவையும்
அங்கு–அத் திருவடிகளிலே
ஒக்கினேன்–ஸமர்ப்பித்தேன்.

அருள் புரிந்த சிந்தை —
தா நஹம் த்விஷத க்ரூரான் சம்சாறேஷூ நராதமான் ஷிபாமி -ஸ்ரீ கீதை -16-19-
ஏற்று பார்க்கை அன்றிக்கே
ததாமி புத்தி யோகம் தம் -ஸ்ரீ கீதை -10-10-என்கிறபடியே
அருளைப் பண்ணா நின்றுள்ள திரு உள்ளத்தை –

அருள் புரிந்த சிந்தை –
அருளி அல்லது
நிற்க ஒண்ணாத படியான கிருபையை யுடைய சிந்தையை –

அதாவது –
இத்தலையில் தோஷம் தொடராத படி அளிவருள் மிக்க படி –

அடியார் மேல் வைத்து-
அடியோமான எங்கள் மேலே வைத்து –
தன்னுடையார் என்கிறதுக்கு மேலேபட்ட ஆகாரத்தைப் பாராதே பக்கலிலே வைத்து –
அடியார் என்கிறதுக்குப் பொதுவான நிலையிலே சொல்லிற்று ஆகவுமாம் –
அன்றிக்கே –
திருவிடை கழியிலே தாமும் மற்றை ஆழ்வார்களுமாக இருக்கிற இருப்பிலே
தானும்  பிராட்டியுமாக வந்து நெருக்கின படியைச் சொல்லிற்று ஆகவுமாம்

அடியார் மேல் வைத்து –
தன்னைத் தான் இழக்க மாட்டாமை -நிர்ஹேதுகம் என்றபடி –

பொருள் தெரிந்து காண்குற்ற வப்போது —
அத்தாலே நாங்கள் பதார்த்த விவேகம் பண்ணி தர்சிக்கிற போது-அன்றிக்கே
அருள் புரிந்துள்ள உன்னுடைய திரு  உள்ளத்தை எங்கள் மேல் வைத்து –
எங்களை ஒரு பதார்த்தமாக புத்தி பண்ணின போது என்றுமாம்

பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டே -திருவாய் -5-7-3-
அந்த அருளுக்கு தாம் பாத்ரபூதர் ஆகையாலே –

இருள் திரிந்து நோக்கினேன் –
ஞானத்துக்கு விரோதியான அஜ்ஞான அந்தகாரங்களைப் போக்கிக் கண்டேன் –
இப்படிக் கண்ட அநந்தரம்-

நோக்கி –
அவன் சேஷி -நான் சேஷபூதன்-என்கிற ஸ்வரூப ஞானம் யுண்டாயிற்று –
அத்தாலே –

நினைந்தேன் தொண் கமலம்-
உன்னுடைய கமலம் போன்றுள்ள திருவடிகளை நினைத்தேன் –
உன் திருவடிகளை நமக்கு பரம ப்ராப்யம் என்று அனுசந்தித்தேன் –
ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணினேன் -அநந்தரம் –

ஓர்ந்து –
நிரூபித்துப் பரதந்த்ரமாய் என்னோடு எனக்கு அடைவில்லாமையையும்
அவனுக்கேயாய் இருக்கிறபடியையும் ஆராய்ந்து
ஆருடையத்தை ஆருடையதாகத் தான் நாம் பிரதிபத்தி பண்ணி இருந்தோம் என்று அனுதபித்து –
என்னையும் அங்கு ஓக்கினேன் –
அத்திருவடிகளிலே என்னையும் நிஷேபித்தேன் –
உபாயமும் அவனே யாக அத்யவசித்தேன் –

————————————————————————–

இப்படி அனுசந்தித்த இவர் ஐஸ்வர் யத்திலும்
ஆஸ்ரித பார தந்திரியமே அவனுக்கு ஸ்வரூபம் என்று அறிவர் கிடீர் –
தனக்கான ஜகத்தை என்றும் ரஷிப்பன் என்று
சர்வேஸ்வரன் தன திறத்து ஸூலபனான படியைச் சொல்லுகிறார் –

ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் -ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று–60

ஓர் உருவன் அல்லை –
ஸ்வ தந்த்ரமாய் இருப்பதொரு ஸ்வரூபத்தை உடையை அல்லை –
நித்யோநித்யா நாம் -கட உப -5-13-என்னுமபடியேயும் –
ஏகமேவாத்விதீயம்-சாந்தோ -6-2-1-என்னும்படியேயும்-
சர்வ விசஜாதீயனாய் சர்வ நியாமகனாய் இருக்கும் இருப்பு அல்ல உன் வடிவு –

ஒளி உருவம் நின் உருவம்-
ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் இதுவே உனக்கு நிறமாக நினைத்து இருப்பதீ-
பக்தா நாம் த்வம் பிரகாசசே -ஜிதந்தே-5-என்கிற இது உனக்கு ஸ்வரூபம்
உயர்வற உயர்நலம் உடையவனாய் இருக்கை யல்ல ஸ்வரூபம் –
எளிவரும் இயல்வினனாகை-இங்கனே இருக்கிற உன்னை  –

ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் –
அபரிச்சேத்ய ஸ்வரூபன் என்னா நிற்பார்கள் அவிசேஷஜ்ஞர்-பெரிய ஈஸ்வரன் என்பர்கள்-
அங்கன் அன்றிக்கே
ஒருபடிப்பட்டு இருப்பதொரு விக்ரஹத்தை உடையை அல்லை

இத்தால்
பஹூ நி மீ வ்யதீதா நி -ஜன்மா நி –ஸ்ரீ கீதை -4-5-என்றும்
பிறப்பில் பலபிறவி பெருமான் -திருவாய் -2-9-5- என்றும்
அநேகம் திரு நாமங்களை உடையவன் என்றபடி –

ஒளி யுருவம் நின்னுருவம் –
இங்கனே இருக்கச் செய்தே பிறக்கப் பிறக்க ஸூத்த சத்வ மயமாகக் கொண்டு
நிரவதிக தேஜோ ரூபமாய் இருக்கும் உன் திருமேனி
ஸ்ரேயான் பவதி ஜாயமான -யஜூர் அஷ்டகம் -3-6/9-என்கிறபடியே –

ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் —
அசாதாரணமாய் இருப்பது ஒன்றும் அவதரிப்பது ஒன்றுமாக இரண்டு என்று
சொல்லா நிற்பார்கள் நாட்டார் -என்றுமாம் –

ஓர் உருவம்-
அந்த ஆஸ்ரித அர்த்தமாக அவதரித்ததால் உண்டான ஒளி உருவமான ஸ்வரூபம் ஒன்றுமே –

ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்-
ஜகத் காரணாமாய் இருப்பது என்னும் இடத்தை அறிந்தவர்கள் கிடீர் –

ஆதியாம் வண்ணம் அறிந்தார் –
எல்லார்க்கும் சத்தை அவன் என்று அறிந்த வைஷ்ணவர்கள்

ஆதி –
ஆஸ்ரிதர்க்கு உஜ்ஜீவன ஹேது
முறை தப்பாமல் நின்று ஜகத் ரஷணம் பண்ணுகிறார் ஆகிறார்

நீதியால் –
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து –பெருமாள் திரு -3-3-என்றும்
தீர்த்த கரராமின் திரிந்து -இரண்டாம் திரு -14-என்னும்படியே
ஸ்வ தந்த்ரன் என்னா ஜகத்து கை விட்டுப் போம் –
எளியன் என்னப் பிழைத்துப் போம் –
அருமை சொல்லுகிறவர்கள் ஜகத்தை வெளிப்படுத்துகிறார் –
அஜ்ஞானத்தாலே முன்பு கை விட்டாப் போலே இப்போது ஜ்ஞானத்தாலே கைவிடப் பார்க்கிறார் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading