மோஷ யுபாயத்தை அறியாதே
சரீரத்தைப் பசை யறுத்துத் தடித்து இருக்கிற நீங்கள்
எம்பெருமானை உபாய உபேயங்களாகப் பற்றுங்கோள்-என்கிறார் –
வீடாக்கும் பெற்றி யறியாது மெய் வருத்திக்
கூடாக்கி நின்று உண்டு கொண்டு உழல்வீர் -வீடாக்கும்
மெய்ப்பொருள் தான் வேத முதல் பொருள் தான் விண்ண
வர்க்கும் நற்பொருள் தான் நாராயணன்-13-
பதவுரை
வீடு ஆக்கும் பெற்றி அறியாது–மோக்ஷத்தைப் பெறுவிக்கும் வழியைத் தெரிந்து கொள்ளாமல்
மெய்–சரீரத்தை
வருத்தி–(உபவாஸாதிகளாலே) க்லேசப் படுத்தி
கூடு ஆக்கி–எலும்பே மிகுந்த கூடாக அஸாரமாக்கி
நின்று–இப்படி நெடுங்காலம் தவம் புரிந்தும்
உண்டு கொண்டு–(தேஹம் தரிக்க வேண்டுமளவு ஸ்வல்பமாக) புஜித்தும்
உழல்வீர்–திரிகின்றவர்களே!
வீடு ஆக்கும்–மோக்ஷத்தைத் தரக் கூடிய
மெய் பொருள் தான்–மெய்யான உபாயமானயிருப்பவனும்
வேதம் முதல் பொருள் தான்–வேதங்களினால் முழு முதற் கடவுளாகப் பிரதிபாதிக்கப் படுபவனும்
விண்ணவர்க்கு–நித்ய ஸூரிகளுக்கு
நல் பொருள் தான்–போக்யமான வஸ்துவாயிருப்பவனும்
நாராயணன்–ஸ்ரீமந்நாராயணனே யாவன்.
வீடு இத்யாதி –
மோஷத்தை வருவிக்க வல்ல விரகு அறியாதே
உடம்பை வருத்தப் பண்ணி கூடாம்படி முடித்து துக்கப் படுகிற உங்களுக்கு
மோஷத்தை தருவிக்கும் மெய்யான உபாயமும்
வேதை க சமதி கம்யனுமாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்-
பிராப்யனுமாய் இருக்கிறானும் சர்வேஸ்வரன்-
————————————————————————–
இப்படி இராதார் உண்டோ என்னில்-
ஹேயரான சமய வாதிகள் சொல்லுவதைக் கேட்டு
அனர்த்தப் படுவாரும் அநேகர் உண்டு -என்கிறார் –
நாராயணன் என்னை யாளி நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால் -தன் பேரான
பேசப் பெறாத பிணச் சமையர் பேசக் கேட்டு
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்-14-
பதவுரை
நாராயணன்–நாராயணனென்றுந் திருநாம முடையவனும்
என்னை ஆளி–(விசேஷித்து) அடியேனை ஆட் கொள்பவனும்
நரகத்து சேராமல் காக்கும்–(அடியார்களை) நரகம் போக வொட்டாமல் காத்தருள்பவனுமான
திருமால் தன்–திருமாலினது
பேர் ஆன–திருநாமங்களாயுள்ளவற்றை
பேச பெறாத–ஸங்கீர்த்தநம் பண்ணும் பாக்கியமற்றவர்களான
பிணம்–ஜீவச் சவமென்னலாம் படியுள்ள பாஹ்ய குத்தருஷ்டி மதஸ்தர்கள்
பேச–(அபார்த்தங்களைப்) பிதற்ற
கேட்டு-அவற்றைக் கேட்டு
பலர்–பல பேர்கள்
ஆசைப் பட்டு–தாங்களும் அப்படியே பாஹ்ய குத்ருஷ்டிகளாயொழிய விரும்பி
ஆழ்வார்–அகோ கதியை யடைந்தொழிவர்
நாராயணன் -இத்யாதி –
சர்வ சேஷி –
என்னை ஆளுகிறவன்
சம்சாரத்தில் சேராதபடி என்னைக் காக்கும் ஸ்ரீ யபதி யானவன்
தன்-திருநாமங்களை
வாயாலே சொல்லுகைக்கு பாக்ய ஹீனராய்
அசந்நேவ-என்னும்படி
அசத் ப்ராயராய் ஹேயரான சமயாதிகள்
வேறே சிலவற்றைச் சொல்லக் கேட்டு அவற்றை ஆசைப் பட்டு
அத பதித்துப் போவார் அநேகர் –
ஆழ்வார் –
அவற்றைக் கேட்டு-காலாழும் நெஞ்சழியும் என்று
பகவத் விஷயத்தினுள் புக்கவர்கள் ஆழங்கால் படுமாப் போலே -ஈடுபடுவர் -என்றுமாம்
திருமால் தன் பேரான பேசப் பெறாத என்று விசேஷிக்கையாலே
இவ்வர்த்தத்துக்கு இசையாத
ஏகா யனனை நினைத்து அருளுகிறார் என்று -பட்டர் –
பிணச் சமயர் என்கிறது –
தேவதாந்திர பரரையும்-
உபாயாந்தர பரரையும் –
அபூர்வம் பல ப்ரதம் என்கிற குத்ருஷ்டிகள் ஆகவுமாம் –
————————————————————————–
இப்படி அனர்த்தப் படாதே எம்பெருமானை ஆஸ்ரயிப்பார்கள் ஆகில்
ருத்ரன் கொடு போய் காட்டிக் கொடுக்க
மார்க்கண்டேயன் கண்டபடியே
அவ்யவதாநேந காணலாம் -என்கிறார் –
பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம்
மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த -வலர் ஆகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர்
நீர்க்கண்டன் கண்ட நிலை-15-
பதவுரை
பல தேவர்–பல தேவர்கள்
ஏத்த–ஸ் துதிக்கும்படியாக
படி–பூமியை
கடந்தான்–அளந்தவனான ஸர்வேஸ்வரனுடைய
பாதம்–திருவடிகளிலே
மலர்–புஷ்பங்களை
ஏற இட்டு–ஸமர்ப்பித்து
இறைஞ்சி–வணங்கி
வாழ்த்த வலர் ஆகில்–மங்களாசாஸநம் பண்ண வல்லவர்களானால்,
நீர் கண்டன் கண்ட நிலை–நீலகண்டனாகிய ருத்ரனிடத்தில் காணத்தக்க நிலைமை
மார்க்கண்டன் கண்ட வகையே–மார்க்கண்டேயன் ப்ரத்யக்ஷமாகக் கண்டவிதமாகவே
வரும் கண்டீர்–ஸித்திக்குங்கிடீர்
பல தேவர் இத்யாதி –
ப்ரஹ்மாதிகள் ஏத்த லோகத்தை அளந்து கொண்டவனுடைய திருவடிகளை
புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு வணங்கி ஸ்துதிக்க வல்லராகில்
நீலகண்டனை புருஷகாரமாகக் கொண்டு
மார்க்கண்டேயன் கண்ட பிரகாரத்தை அவ்யவதாநேந காணலாம்
நீர்-
விஷ ஜலம் –
நீல கண்டன் -என்றபடி –
————————————————————————–
உமக்குத் தரிப்பு எத்தாலே பிறந்தது என்ன –
நான் எம்பெருமானுடைய ஆஸ்ரித பஷபாதத்தை அனுசந்தித்துத் தரித்தேன் -என்கிறார்-
நிலை மன்னும் என் நெஞ்சம் அந் நான்று தேவர்
தலை மன்னர் தாமே மற்றாக -பல மன்னர்
போர் மாள வெம் கதிரோன் மாய பொழில் மறைய
தேர் ஆழியாள் மறைத்தாரால்-16-
பதவுரை
அந்நான்று–பாரத யுத்தம் நடந்த அக் காலத்து
தேவர் தலை மன்னர் தாமே–தேவாதி தேவனான தானே
மாற்று ஆக–எதிரியாயிருந்து கொண்டு
பல மன்னர்–பல அரசர்கள்
போர்–யுத்தக் களத்தில்
மாள–மடிந்து
வெம் கதிரோன்–ஸூர்யன்
மாய–(அகாலத்தில்) அஸ்தமிக்கும்படி யாகவும்
பொழில் மறைய–பூ மண்டலம் முழுதும் இருள் மூடும்படியாகவும்
தேர் ஆழியால்–சக்கராயுதத்தினால்
மறைத்தாரால் (ஸூர்யனை) மறைத்த பெருமானாலே
என் நெஞ்சம்–எனது (சஞ்சமான) மனமானது
நிலை மன்னும்–சலிப்பற்று நிலை நிற்கப் பெற்றது.
நிலை -இத்யாதி –
தரித்து இருக்கும் என்னுடைய ஹ்ருதயம்
பாரத சமரத்தின் அன்று தேவர்களுக்குத் தலைவனாய்
ராஜாவாய் இருக்கிற தாமே எதிரி யாகவும்
பல ராஜாக்கள் யுத்தத்திலே படும்படி யாகவும்
ஆதித்யன் மறையும் படியாகவும்
பூமியடைய மறையும் படியாகவும்
ரதாங்கத்தாலே மறைத்தவராலே-
————————————————————————–
நம்மளவே அன்று –
எத்தனையேனும் பிரதானரான ருத்ராதிகளும் தம்தாமுடைய சிஷ்யர்களுக்கு உபதேசிப்பது-
எம்பெருமானை ஆச்ரயிக்கும்படியை -என்கிறார்-
ஆல நிழல் கீழ் அற நெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய்த்தவத்தோன் -ஞாலம்
அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல் மேல்
வளர்ந்தானைத தான் வணங்குமாறு -17-
பதவுரை
மெய் தவத்தோன்–மெய்யான தவநெறியை யுடையனான ருத்ரன்,
ஞாலம் அளந்தானை–உலகளந்தவனும்
ஆழிக் கிடந்தானை–க்ஷீராப்தி சாயியும்
ஆல் மேல் வளர்ந்தானை–ஆலிலே மேல் கண் வளர்ந்தவனை
தான் வணங்கும் ஆறு–தான் வழிபடும் மார்க்கமாகிய
அறம் நெறியை–நல் வழியை
மேலை யுகத்து–முன் யுகத்திலே
ஆல நிழல்கீழ்–ஓர் ஆல மரத்தின் நிழலிலே
நால்வர்க்கு–நான்கு மஹர்ஷிகளுக்கு
உரைத்தான் உபதேசித்தான்.
ஆல்-இத்யாதி
ஆகம பிரசித்தமான வட விருஷத்தின் கீழே இருந்து தர்ம மார்க்கத்தை
ஆப்தரான நாலு சிஷ்யர்களுக்குப் போன யுகத்தில் சொன்னான் –
பகவத் ஜ்ஞானம் அறிக்கைக்கு ஈடான தபஸ்சை யுடையவன் –
ஞாலம் -இத்யாதி –
ஆஸ்ரிதர் அபேஷிதங்களை முடித்துக் கொடுப்பதும் செய்து
அவர்கள் அபேஷிதங்களை அறிவிக்க அணித்தாக
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுவதும் செய்து
பூமியைத் திரு வயிற்றிலே வைத்து
ஆலிலையிலே கண் வளர்ந்து அருளுவதும் செய்தவனைத் தான் ஆஸ்ரயிக்கும்படியை –
இத்தாலும் பகவத் பரத்வமே பிரசித்தம் -என்கிறார் –
நாலு சிஷ்யர்களுக்கு என்றது
அகஸ்த்யர் புலஸ்தியர் -தஷ -மார்க்கண்டேயர் களுக்கு -என்றபடி –
மெய்த் தவத்தோன் -ருத்ரன் –
————————————————————————–
பகவத் சமாஸ்ரயணத்திலும்
பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-
மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-
பதவுரை
மாறு ஆய–எதிரிட்டு நின்ற
தானவனை–ஹிரண்யாஸுரனுடைய
மார்வு–மார்வை
வள் உகிரால்–கூர்மையான நகங்களினால்
இரண்டு கூறு ஆக சீறிய–இரு பிளவாகப் பிளந்த
கோள் அரியை–பெரு மிடுக்கனான நரசிங்க மூர்த்தியை
வேறு ஆக–விலக்ஷணமாக
ஏத்தி இருப்பாரை–ஸ்துதித்து பகவத் விஷயத்தில் ஆழ்ந்திருக்குமவர்களை,
மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் வெல்லுமே–அந்த ஸ்ரீவைஷ்ணவர்களை ஆஸ்ரயித்திருக்கும்
சரமாதிகாரிகளின் நிஷ்டைவென்று விடும்
மாறாய -இத்யாதி –
எதிரியான ஹிரன்யனைச் செறிந்த யுகிராலே யவனுடைய மார்வை
இரண்டு கூறாக அநாயாசேன பிளந்த-நரசிம்ஹத்தை
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்
அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –
————————————————————————–
எத்தனையேனும் பிரபல தேவதைகளுடைய வரபலத்தை யுடையவர்கள் ஆனார்களே யாகிலும்-
ஆஸ்ரிதரோடு விரோதிக்கில் அவர்களை நிரசிக்கும் -என்கிறார் –
ஆஸ்ரிதர் பக்கல் இத்தனை பஷபாதியோ நான் என்ன –
அவற்றை அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-
தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம் செய்த வாழியான் அன்றே -உவந்து எம்மை
காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ வைகுந்த
மீப்பாயும் எவ் உயிர்க்கும் நீயே-19-
பதவுரை
தவம் செய்து–தபஸ்ஸை அநுஷ்டித்து
நான்முகனால்–பிரமனிடத்து
பெற்ற–(ஹிரண்யன் முதலானவர்கள்) பெற்றுக் கொண்ட
வரத்தை–வரங்களை
அவம் செய்த–பழுதாக்கின
ஆழியாய்–திருவாழிக் கையனான பெருமானே!
எம்மை–அடியோங்களை
உவந்து–திருவுள்ளமுகந்து
காப்பாய் நீ அன்றே–காத்தருள்பவன் நீயே யன்றோ,
காப்பதனை ஆவாய் நீ அன்றே–காக்க வேணு மென்கிற ஸங்கல்ப முடையவனும் நீ யன்றோ,
எவ் உயிர்க்கும்–(உன்னை ஆஸ்ரயித்த) ஸகலாத்மாக்களுக்கும்
வைகுந்தம்–பரம பதத்தை
ஈப்பாயும்–அளிப்பவனும்
நீ அன்றே–நீ யன்றோ.
ஆஸ்ரிதர் பக்கல் பஷபாதத்தாலே ஹிரண்யன் தபஸ்சைப் பண்ணி
ப்ரஹ்மாவால் பெற்ற வரத்தை வ்யர்த்தம் ஆக்குவதும் செய்து
அவனுடைய ரஷண அர்த்தமாக திரு ஆழியைத் தரித்தவன் அல்லையோ –
ஆன பின்பு ஆஸ்ரிதரான எங்களை யுகந்து சாம்சாரிக துரிதம் தட்டாமல் ரஷிப்பாயும் நீ –
காக்க வேணும் என்று நினைப்பாயும் நீ –
ரஷை தான் என்றுமாம் –
ஆஸ்ரயிப்பார் எல்லாருக்கும் ஸ்ரீ வைகுண்டத்தைக் கொடுப்பாயும் நீ-
————————————————————————–
இப்படி ரஷிக்க வேண்டுகிறது நிருபாதிக சேஷியான சர்வேஸ்வரன் ஆகையாலே -என்கிறார் –
நீ ஆஸ்ரித பஷபாதி என்னும் இடம் சொல்ல வேணுமோ –
ஆஸ்ரித நாஸ்ரித விபாகம் இன்றிக்கே
இருந்ததே குடியாக எல்லாருடைய சத்தாதிகளும்
உன்னாலே உண்டாக்கப் பட்டனவன்றோ -என்கிறார் என்றுமாம் –
நீயே யுலகெல்லாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தவத் தேவ தேவனும் -நீயே
எரி சுடரும் மால்வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை –20-
பதவுரை
உலகு எல்லாம் நீயே–உலகங்கட்கெல்லாம் நிர்வாஹகன் நீயே,
நிற்பனவும்–உலகங்கள் ஸத்தை பெற்று நிற்பதும்
நின் அருளே–உனது கிருபையினாலேயாம்,
தவம் தேர் தேவனும் நீயே–தவத்தினால் தேவர்களான பிரமன் முதலியோருக்குத் தலைவனும் நீயே,
எரி சுடரும்–ஜ்வலிக்கின்ற அக்நியும்
மால் வரையும்–பெரிய குல பர்வதங்களும்
எண் திசையும்–எட்டுத் திசைகளிலுமுள்ள ஸகல பதார்த்தங்களும்
அண்டத்து–ஆகாசத்திலுள்ள
இரு சுடரும்–சந்த்ர ஸூர்யர்களும்
ஆய இவை–ஆகிய இவை யெல்லாம்
நீயே–நீயே காண்.
நீயே இத்யாதி –
சகல லோகங்களும் உன்னாலே உண்டாக்கப் பட்டன –
அவற்றின் யுடைய ஸ்திதி உன்னாலே –
தபஸ்சாலே தேவர்கள் ஆனவர்களுக்கும் தேவனும் நீயே –
அத் யுஜ்ஜ்வலமான அக்னியும் குல பர்வதங்களும் திக்குகளும்
அண்டத்திலும் யுண்டான சந்திர ஸூர்யர்களும் ஆகிற இவையும் நீ இட்ட வழக்கு-
————————————————————————–
ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் அவர்கள் இல்லாதபடி ஆக்கின
எம்பெருமானுடைய சீற்றத்தையும்-
அத்தால் பிறந்த அழகையும் அருளிச் செய்கிறார் –
இவையா பிலவாய் திறந்து எரி கான்ற
இவையா வெரிவட்டக் கண்கள் -இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு--21-
பதவுரை
திறந்து–விரிந்து
எரி கான்ற–நெருப்பை உமிழ்ந்த
பிலம் வாய்–பாழி போன்ற பெரியவாய்
இவையா–இதுவோ!
எரி வட்டம்–கொள்ளி வட்டம் போலே உருண்டு சிவந்து ஜ்வலிக்கிற
கண்கள்–திருக் கண்கள்
இவையா–இவையோ!
எரி–அக்நி போலே
பொங்கி–கிளர்ந்து
காட்டும்–தோன்றின திருமேனியை யுடையனாய்
இமையோர் பெருமான்–நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனான ஸர்வேஸ்வரன்
அரி–நரசிங்க மூர்த்தியாய்
பொங்கி–கிளர்ந்து
காட்டும்–காட்டின
அழகு-அழகு
இவையா–என்ன விஷயம்!
இவை -இத்யாதி –
பெரிய வாயைத் திறந்து புறப்பட விட்ட எரி இவை –
பிலவாய்-பெரிய வாய் -என்றுமாம்
இவையா இத்யாதி –
ஆ வென்றது ஆச்சரியத்திலே
சீற்றத்தாலே எரிவட்டம் போலே இருக்கிற திருக் கண்கள் இவை –
மிகவும் ஜ்வலியா நிற்பதும் செய்து
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நரசிம்ஹத்தின் யுடைய மிக்க வழகியவை –
இவை இவை என்றது
நரசிம்ஹம் வளர்ந்து தோற்றின அழகுகள் பாரீர் -என்றவாறு
சாஷாத் காரமான ஸ்வ அனுபவத்தைப் பிறருக்குச் சொல்லுகிறார் –
நரசிம்ஹத்தின் யுடைய அருமை சொல்லிற்றாகவுமாம் –
————————————————————————–
ஆன பின்பு சர்வ காரணமான நரசிம்ஹத்தை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் –
அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் -குழவியாய்த்
தான் ஏழுலக்குக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிர் அளிக்கும் வித்து-22-
பதவுரை
தான் ஏழ் உலகுக்கும் வித்து–தானே ஏழுலகங்களுக்கும் உபாதாந காரணமாய்
தன்மையவன்–ஆச்சர்ய பூதனாய்
குழவி ஆய்–(பிரளய காலத்தில்) சிறு குழந்தையாய்க் கொண்டும்
மீன் ஆய்–(பின்பொருகால்) மத்ஸ்ய ரூபியாய்க் கொண்டும்
உயிர் அளிக்கும்–ஆத்மாக்களை ரக்ஷிக்கின்றவனான
தானே–எம்பெருமான் தானே
தன்மைக்கும்–(ரூபம் ரஸம் கந்தம் முதலிய) குணங்களுக்கும்
அரி உருவன்–நரசிங்க வுருக் கொண்டவன்
தானே அழகியான்–அழகுக்கு எல்லை நிலமாயிருப்பவனும் அவன்றானே
பழகியான்–புராண புருஷனாகிய அப்பெருமானுடைய
தாளே–திருவடிகளையே
பணிமின்–ஆச்ரயியுங்கோள்
அழகியான் இத்யாதி-
அழகியான் அவனே –
ஆர் என்னில் நரசிம்ஹாம் ஆனவனே
இவ்வாத்மா தன்னிலும் காட்டில் பழையனாய்-
இதுக்கு ரஷண உபாயங்களை அறிந்து வைத்து இருக்கிறவனை ஆஸ்ரயிங்கள்-
குழவியாய் இத்யாதி –
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து –
ஒரு சிறு பிள்ளையாய் ஜகத்தை வயிற்றிலே வைத்து ரஷித்து
எல்லா லோகங்களுக்கும் காரணம் ஆனவனே
பிரளயத்திலே மங்கிப் போகிற ஆத்மாக்களை மத்ஸ்யமாய் ரஷித்து
இதுக்குக் காரணம் ஆனவன் –
வடசய நாத்ய ஆச்சர்யங்களாலே காரணமாய் நின்றவனை
ஆஸ்ரயியுங்கோள்-என்கிறார் ஆகவுமாம்-
குழவி -இத்யாதி –
சர்வேஸ்வரனான தான் வட தள சாயியாய் பிரளயகாலத்திலே
இஜ் ஜகத்தை வயிற்றிலே வைத்து ரஷித்து –
எல்லா லோகங்களுக்கும் காரணமாய் –
அவாந்தர பிரளய காலத்திலே மத்ஸ்யமாய் வந்து திருவவதாரம் பண்ணி அருளி
சகல ஆத்மாக்களையும் ரஷிக்கைக்கு அடியாய்
அழகிய வடிவோடு நரசிம்ஹமமாய் வந்து திருவவதாரம் பண்ணி அருளி –
ஆஸ்ரித விரோதியான ஹிரண்யனைப் பிளந்து அருளி
இப்படி சகல ஆத்மாக்களோடும் பழகி இருக்கிறவன் திருவடிகளிலே
ஆஸ்ரயிங்கோள் என்கிறார் ஆகவுமாம் –
————————————————————————–
அவனை ஆஸ்ரயிக்கைக்கு ஈடான யோக்யதை யுண்டோ என்னில்
அவை எல்லா வற்றையும் எம்பெருமான் தானே யுண்டாக்கும் -என்கிறார்–
வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த
பத்தி யுழவன் பழம் புனத்து -மொய்த்து எழுந்த
கார்மேகம் அன்ன கருமால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து –23-
பதவுரை
விடை அடர்த்த–(நப்பின்னைப் பிராட்டிக்கா) ரிஷபங்களை வலியடக்கினவனும்
பத்தி உழவன்–(தன் விஷயத்தில் சேதநர்கட்கு) பக்தியுண்டாவதற்குத் தானே முயற்சி செய்பவனுமான எம்பெருமானுடைய
பழம் புனத்து–(ஸம்ஸாரமென்கிற) அநாதியான கேஷத்ரத்திலே
வித்தும் இட வேண்டும் கொலோ–(ஸ்வப்ரயத்நமாகிற) விதையை நாம் விதைக்க வேண்டுமோ? (வேண்டா)
(நம் முயற்சியின்றியே தானே பகவத் விஷயத்தில் ருசி விளைந்தால் திருநாட்டுக்குச் செல்லுமாளவும் நாம் எப்படி தரித்திருப்ப தென்றால்)
மொய்த்து எழுந்த–திரண்டு கிளர்ந்த
கார் மேகம் அன்ன–காளமேகம் போன்ற
கரு மால்–கரிய திருமாலினது
திரு மேனி–திருமேனியை
நீர் வானம்–நீர்கொண்டெழுந்த மேகமானது
நிகழ்ந்து–எதிரே நின்று
காட்டும்–காண்பிக்கும்
(போலி கண்டு நாம் தரித்திருக்கலாமென்றபடி.)
வித்தும் இட -இத்யாதி –
பகவத் விஷய பக்திக்கு இவன் செய்ய வேண்டுவது ஓன்று யுண்டோ –
பிரதிபந்தகங்களைத் தானே போக்கி –
ருசியைப் பிறப்பித்து –
பக்தியை விளைப்பானான -எம்பெருமானுமாய்ப்
பழையதான சம்சாரப் பரப்பில்
பழம் புனம் என்கிறது –
விளைந்து வருகிற நிலத்தில் உதிரியே முளைக்குமாபோலே
ஈஸ்வரன் சம்சார பிரவாஹத்தைப் பண்ணி வைத்த படியாலே
யாத்ருச்சிகமாக ஸூஹ்ருதங்கள் பிறக்கும் என்று கருத்து –
மொய்த்து -இத்யாதி –
அவன் வடிவைக் காண வேணும் என்கிற அபேஷை பிறக்கிற பின்னோடே-
திரண்டு எழுந்த கார் காலத்தில் மேகம் போலே
கறுத்து இருக்கிற நிறத்தை யுடைய சர்வேஸ்வரன் திரு மேனியை
நீர் கொண்டு எழுந்த காளமேகமானது காட்டும்
அன்றிக்கே –
சம்சாரம் ஆகிற பழம் புனத்திலே ஈர நெல் வித்தி -என்கிறபடியே
விஷய ருசி யாகிற விதையைத் தான் தேடி இட வேணுமோ
அவன் வடிவோடு போலியான தன் வடிவைக் காட்டி
தத் விஷய ருசியை வர்ஷூ கவலாஹம் தானே
முன்னின்று பிறப்பியா நிற்கும் -என்றுமாம் –
————————————————————————–
ஆஸ்ரிதருடைய கார்யங்களை யாவர்களிலும் காட்டில் தான்
அதுக்கு அபிமானியாய் முடித்துக் கொடுக்கும் படியை யருளிச் செய்கிறார் –
நீர் சொன்னபடியே பக்தியைப் பிறப்பித்து ரஷியா நின்றோமே -என்ன
யுகம் தோறும் சத்வாதி குணங்களுடைய சேதனருடைய ருசிக்கு அநு குணமாகப் பிறந்து-
அவர்கள் கார்யம் தலைக் கட்டிற்று இல்லையோ -என்கிறார் -என்றுமாம்-
நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும்
இகழ்ந்தாய் இருவரையும் வீயப் புகழ்ந்தாய்
சினப் போர் சுவேதனைச் சேனாபதியாய்
மனப் போர் முடிக்கும் வகை-24-
நிகழ்ந்தாய் -இத்யாதி
யுகம் தோறும் அவ்வோ காலங்களிலே சேதனர் உகந்த நாலு நிறத்தை உடையனாய்
இரண்டு பஷத்திலும் யுள்ள சேனையை முடியும்படி உபேஷித்தாய்-
மது கைடபர்களை இகழ்ந்தாய் -என்றுமாம் –
புகழ்ந்தாய்-இத்யாதி –
கொடிதான யுத்தத்திலே அர்ஜூனனை நீ தானே சேனாபதியாய்
உன் திரு உள்ளத்தில் படியே யுத்தத்தைப் பண்ணும்படியாகப் புகழ்ந்தாய் –
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply