ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம ஸூ லப ஸ்ரீ தரஸ் சதா-
பால காண்டம் 19-14
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்ரமம்
வசிஷ்டோபி மகா தேஜோ யே சேமே தபஸி ஸ்திதா தே அபி விதந்தி-
நானே ஸ்ரீ ராமனை மகாத்மாவாகவும் சத்ய பராக்ரமனாகவும் அறிவேன்
மிகுந்த தேஜஸ்சை உடைய வசிஷ்ட மஹ ரிஷியும் அறிவார்
இங்கே இருக்கிறவர்களாய் -இமே
தபஸ் சிலே நிலை நிற்கிறவர்களான யாவர் சில மக ரிஷிகள் உண்டோ அவர்களும் அறிவார்கள்-
ந யுத்த யோக்யதாம் அஸ்ய பச்சாமி -அவர் அயோக்யதையை சொல்லுகைக்கு நீ ஒருவனுமே உள்ளாய்
இவர் யோக்யதையை அறிக்கைக்கு நாங்கள் இத்தனை பேரும் உண்டு என்கிறான்-
1-அஹம் வேத்மி –
ந சஷூஷா க்ருஹ்யதே -முண்டோக்யம் 3-1-8-
மனஸா து விசுத்தே ந -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -273-2-
என்றேனும் கட் கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால் காணும் உணர்ந்து -பெரிய திருவந்தாதி -28
நான் அறியும் அத்தனை போக்கி
பாஹ்ய சஷூஸ்சாலே காண்கிற உனக்குத் தெரியாது காண்-
2-அஹம் வேத்மி
ஜ்ஞான வ்ருத்தாமா ராஜன் பகவ பர்யுபாசிதா –
பல ஆச்சார்யர்களை சேவித்த நான் அறியும் அத்தனை போக்கி
நாட்டாராலே சேவிக்கப் படுகிற உனக்குத் தெரியுமோ –
3-அஹம் வேத்மி –
குச தர்ப்ப தரா -புல்லும் கையுமான நான் அறியும் அத்தனை போக்கி
வில்லும் கையுமான நீ அறியாய்-
4-அஹம் வேத்மி –
தலையும் சடையுமான நான் அறியும் அத்தனை போக்கி
தலையும் முடியுமான நீ அறியாய்-
5-அஹம் வேத்மி –
சாத்விக பிரக்ருதியான நான் அறியும் அத்தனை போக்கி
ராஜச பிரக்ருதியான நீ அறியாய்-
6-அஹம் வேத்மி
நீச சய்யா ஆசனம் சாஸ்ய நிதயம் ச்யாத குரு சன்னிதௌ-என்று
ஆசனத்தின் கீழே இருந்த எனக்குத் தெரியும் அத்தனை போக்கி
சிம்ஹாசனே பிரபு -ஆசனத்தின் மேலே இருக்கிற உனக்குத் தெரியுமோ-
7-அஹம் வேத்மி
யோக க்ரமம் அறியும் நான் அறியுமத்தை போக
க்ரமம் அறியும் நீ அறிவுதியோ-
8-அஹம் வேத்மி
மோஷ காமேஷ்டி பண்ணின நான் அறியும் அத்தனை போக்கி
புத்திர காமேஷ்டி பன்னன நீ அறிவுதியோ-
9–அஹம் வேத்மி
தர்ம மோஷ பரனான நான் அறியுமத்தை
அர்த்த காம பரனான உன்னால் அறியப் போமோ –
நானேயோ அறியாதேன் –
நேதி நேதி-என்றும்
க இத்தா வேட யத்ரச-என்றும்
பிரமாணங்களான வேதங்கள் தான் அறிந்ததோ –
ப்ரஹ்ம ருத்ர இந்திர பூதானாம் மநாம்ப்ய கோசரம் -என்றும்
நான் முகனும் செஞ்சடையான் என்று இவர்கள் எம்பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் -திருவாய் -8-3-9-என்றும்
பிரமாதாக்களான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தான் நிலமோ
பிரமாதக்கள் அளவேயோ –
சோ அங்க வேதி யதி வா ந வேத -என்றும்
தனக்கும் தன் தன்மை அறிவரியானை -திருவாய் -8-4-6-என்றும்
பிரமேய பூதனானவன் தனக்கும் தெரியுமோ
இத்தனை பேர் அறியார்களே காண் என்ன
10-அஹம் வேத்மி
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித
ஸ்வா பாவிகீ ஜ்ஞான பலக்ரியா ச -என்கிற பிரமாணங்களை விச்வசித்து சர்வஜ்ஞம் கொண்டாடி
ஓர் ஆச்சார்யன் பக்கல் குனிந்து கேளாமையாலே அவனுக்கும் தெரியாதே-
ததாமி புத்தியோகம் -ஸ்ரீ கீதை -10-10-என்றும்
மயர்வற மதிநலம் அருளினான் -என்றும்
சம்ப்ரதாய சித்த ஜ்ஞானம் உடையவனுக்கு தெரியும் இறே.
ஆச்சார்யன் இடத்தில் கேளாத அக்குறை -அவ்விழவு தீருகைக்கு இறே
பஹூ ஸ்ருதானாம் வ்ருத்தானாம் ப்ராஹ்மணா நாமுபாசிதா -அயோத்யா -2-33-என்று
அறிவுடையார் கால் கடையிலே துவண்டு திரிந்தது
11-அஹம் வேத்மி-
தமேதம் வேத அநுவசநேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி யஜ்ஞேந தானேந தபஸா அநாசகேந -ப்ரு -6-4-22-என்றும்
ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசிதவ்ய -ப்ரு-6-5-6-என்றும்
அவனை அறிக்கைக்கு நான் பட்ட வருத்தம் சொல்லப் போமோ –
நீ அறிந்த பிரகாரம் என் என்னில்-
1-மஹாத்மானம் -அறப் பெரியவன் -என்று அறிவேன்
தேஜசாம ஹி ந வய சமீஷ்யதே -ரகுவம்சம் -11-1-என்கிறபடியே
வடிவு சிறுத்து இருந்ததே யாகிலும் பரத்வம் உறைத்து இருக்கும் காண்
2-மஹாத்மானாம் -ஆத்மா ஜீவே -தருதௌ (தைர்யத்திலும் )-
தே ஹே -ஸ்வபாவே-பரமாத்மிநி -யத்னே-ஆகாசக்னௌ-சூர்யன் அக்னி -மநோ-புத்தி -வாதே -காற்று -என்று
அநேகார்த்த வாசி இறே ஆத்ம சப்தம்
அதில் முற்பட ஜீவ வாசியான போது
மஹாத்மானம் -என்று -யஸ் யாத்மா சரீரம் -ப்ரு -5-7-26-என்றும்
ய ஆத்ம நி திஷ்டன் நாத மநோ அந்தர -ப்ரு -5-7-26-என்றும்
சர்வ ஜீவாத்மாக்களும் சரீரமாம் படி சர்வாத்ம சரீரியாய் இருப்பான் என்னும் இடம் அறிவன்
அன்றியிலே
3- மஹாத்மானம் -என்று திருதியிலே யாய் -தைர்யத்தில் –
ஆபதயபி ஸ்வ கார்யேஷூ கர்த்த வ்யத்வஸ்திதிர் தருதி-என்று
தாடகா தாடகேய பரமுகரான பிரபல விரோதி பரம்பரைகள் உண்டே யாகிலும்
யஜ்ஞ விக்ன கரம் ஹந்யாம்-என்று நாம் ஏறிட்டுக் கொண்ட கார்யம் தலைக் கட்டலாம் படியான
நிலையை யுடையராய்க் காண் இருப்பது என்றுமாம்
அன்றியிலே
4-மகாத்மானம் -தேக வாசியாய்
நித்யம் நித்யாக்ருதிதரம் -என்றும்
ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர் மாமஸ மேதோ அஸ்தி சாம்பவா -என்றும்
மாசூணாச் சுடருடம்பாய் -திருவாய் -3-1-8-என்றும் சொல்லுகிறபடியே
சத்ருக்களால் அழிக்க ஒண்ணாத படி
நித்ய நிரவதய நிரதிசய ஔஜ்வல்ய விக்ரஹராய் காண் இருப்பது -என்றுமாம்
அன்றியே
5- மஹாத்மானாம் -ஸ்வபாப வாசியாய்
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் யேதத் வ்ரதம் மம-யுத்த-18-34-என்றும்
பாஸூ பால்யம் ஹி வ்ருத்தி-என்றும்
ஆபன்ன ஜன ரஷணத்தை ஸ்வபாவமாக உடையராய்க் காண் இருப்பது -என்றுமாம் –
அன்றியிலே
6- மஹாத்மானம் -என்று பரமாத்மா வாசியாய்
பரோமா அஸ்மாதிதி பரம -என்றாய்
யஸ்மாத் பரம நா பரமஸ்தி கிஞ்சித் -என்றும்
ந தத்சமச்சாப் யதி கச்ச த்ருச்யதே -என்றும்
ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா -திருவாய் -2-3-2-என்றும் சொல்லுகிறபடியே
தம்மை ஒழிந்த சகல தேவதைகளுக்கும் மேலாய்
அவை தனக்கும் அந்தர்யாமியாய் இருக்கும் படி அறிவன் -என்றுமாம்
அன்றியிலே
7- மஹாத்மானம் -என்று யத்ன வாசியாய் –
அதாவது பரயத்னமாய்
பிரயத்ன ஸ்வாத்ம தர்ம ச்யாதுத்சாஹோ பாவநா ச ஸ-என்றும்
விநாசாய ஸ துஷ்க்ருதாம் சம்பவாமி -கீதை -4-8-என்றும்
சொல்லுகிறபடியே
துஷ்க்ருத விநாசத்துககாக அவர் உத்சாஹித்துப் போந்த படி அறிவேன் -என்றுமாம்
அன்றியிலே
8- மஹாத்மானாம் -என்று
அர்க்க வாசியாய் -சூர்யன் –
ராம திவாகர சத்ருர ஷோமயம் தோயமுப சோஷம் ந்யிஷ்யதி -என்றபடி
ஆயுத நிரபேஷமாய் தம்முடைய பிரதாபத்தாலே சத்ரு ரஷஸ்ஸூக்களாகிற நீரை ஊற்றகப் படச் சுவரும்படி
பண்ண வல்லர்-என்னும் இடம் அறிவன் என்றுமாம்
அன்றியிலே
9-மஹாத்மானம் -என்று அக்னியாய்
அபித பாவ கோபமம-அயோத்-99-26-என்றும்
நிர்தஹே தபி காகுத்ச்த க்ருததஸ் தீவ்ரேண சஷூஷா-என்றும்
அனலுருவில் திகழும் சோதி தன்னுருவாய் -திரு நெடும் -1-என்றும் சொல்லுகிறபடியே
சத்ரு சரீரங்களை யடையச் சுட்டுக் கூறாய் நீறாய்ப் போம்படி பண்ண வல்லர் என்னும் இடம் அறிவன் என்றாகவுமாம் –
அன்றியிலே
10-மஹாத்மானம் -என்று மதி வாசியாய் –
சர்வ சாஸ்த்ரார்த்த தத்வஜ்ஞ-பால -1-15-
புத்த்யாஹயஷ்டாங்கயா யுக்த-சுந்த -116-27-என்றும் சொல்லுகிறபடியே
இருந்த இடத்தில் இருந்து சத்ருக்கள் முடியும்படியான விரகுகள் வகுக்க வல்லர் என்னும் இடம் அறிவன் என்றுமாம்
அன்றியிலே
11-மஹாத்மானம் என்று வாத வாசியாய்
தஸ்மை வாதாத்மனே நம-என்றும்
காலாய் தீயாய் -என்றும் சொல்லுகிறபடியே
மகா வாதஹதமான தூல ராசி போலே சத்ருக்களைப் புக்கவிடம் அறியாமல் ஓட்டுபவர் என்று அறிவன் என்றுமாம் –
அன்றியிலே
12-மஹாத்மானம் -ம்ருத சஞ்சீவனம் ஹி ராம வ்ருத்தாந்தம் -என்று
சர்வ பிராணி பிராணன் ஹேதுவான காற்று போலே உஜ்ஜீவனகாரராக வல்லர் என்னும் இடம் அறிவன் என்றுமாம்-
வேத்தி வேதயதீதி வேத -என்று
தானும் அறிந்து பிறரை யும் அறிவிக்கக் கடவதான வேதம் அகப்பட
வேதாஹா மேதம் புருஷம் -என்று நான் அறிவேன் என்று சொல்லி -அறிந்தபடி என் என்ன
அறிந்தன வேத வரும் பொருள் நூல்கள் அறிந்தன கொள்க அரும் பொருளாதல் -திருவாய் -9-3-3-என்கிறபடியே
மஹாந்தம் -என்று அபரிச்சின்னன் என்று சொல்லி விட்டத்து இத்தனை இறே
யஸ்யா மதம் தஸ்ய மதம் யஸ்ய ந வேத ஸ -என்று அவ்வஸ்துவை அறிக்கையாவது
அது அபரிச்சின்னம் என்று உள்ளபடி அறிகை இறே
வேதாஹ மேதம் -என்ற வேத வாக்கியம் தன்னை இறே
அஹம் வேத்மி -என்று உப ப்ரும்ஹிக்கிறது –
அங்குற்றை வேத -என்கிறத்தை இறே
இங்கு வேத்மி -என்கிறது
ஏதம் -என்று சௌலப்ய ஸூ சகமான ஏதச் சப்தார்த்தை இறே
இங்கு ராமம் என்று அவதார நிர்த்தேசம் பண்ணுகிறது
அங்குற்றை புருஷ சப்தத்தாலே நிர்த்திஷ்டமான சௌர்ய வீர்யாதிகளை இறே
இங்கு சத்ய பராக்கிரமம் -என்கிறது –
அங்கு மஹாந்தம் -என்கிறத்தை இறே
இங்கு மஹாத்மானம் -என்கிறது
ஆக
வேத புருஷனோடு
வைதிக புருஷர்களோடு வாசி யற
இவ்விஷயத்தில் பாசுரம் ஒன்றாய் இறே இருப்பது
இப்படி மஹாத்மானம் என்று பேசுகிற வஸ்து தான்
தேசாந்தரத்த்லேயாய் எட்ட ஒண்ணாதோ என்னில்
ராமம் –
பிதரம் ரோசயாமாச -பால -16-8-என்று உன்னை இசைவித்து ராம ரூபேண வந்து
பிறந்த இவர் அப்பர வஸ்து காண் -என்கிறார்
ராமம் –
பர வஸ்து என்று நீயும் நானும் உட்கூசுதல் நம்மை அருவருத்து அவர் தாம் அகல நிற்றல் செய்யாதே
எனக்கு கையாளாக அழைக்கலாம் படியாய் தம்மை அமைத்து
தாழ நிற்கையாலே தெரிகிறது இல்லை காண் –
ராமம் மஹாத்மானம் –
ஸ ஸ்ரேயான் பவது ஜாயமான -என்று
அவர் தம்மைத் தாழ விட்டு பிறந்த பின்பு காண் மஹத்வம் ஒப்பமிட்டது –
நீ தானே ராமம் -என்று சொன்னாய் இன்னம் வடிவில் சுணை அழிந்தது இல்லை –
ஸ்ரமத்தால் உடல் இறுகிற்றில்லை
இவர் பராக்ரமத்துக்கு சக்தரோ -என்ன
1-சத்ய பராக்ரமம் –
இவர் வடிவு போலே வேண்டின போது கொள்ளவும் தவிரவும் படி அல்ல காண் இவர் குணங்கள் இருப்பது
அவை நித்யமாய்க் காண் இருப்பது –
2- சத்ய பராக்கிரமம் –
சதைக ரூப ரூபாயா -என்றும்
த இமே சத்ய காமா -என்றும்
ஏதாமச்ச சத்யான் காமான் -என்றும் சொல்லுகிறபடியே
விக்ரஹம் இச்சமாய் குணங்கள் நித்தியமாய் காண் இருப்பது
இது தன்னை பராசர மகரிஷியும் –
இச்சாக்ருஹீதாபி மதோரு தேக -என்று விக்ரஹ பரிக்ரகம் இச்சம் என்னும் இடத்தைச் சொல்லி
தேஜோ பலைச்வர்ய மகாவபோத ஸூ வீர்ய சக்த்யாதி குணைக ராசி -என்று
குணங்கள் ஸ்வாபாவிகங்கள் என்னும் இடத்தைச் சொன்னான் இறே
3- சத்ய பராக்கிரமம் –
அவ்யவஸ்தௌ ஹி த்ருச்யதே யுத்தே ஜய பராஜ யௌ-என்று நாட்டாரைப் போலே
இவருடைய ஆண் பிள்ளைத் தனம் அவ்யச்தம்-அயோத் -2-37-என்றும்
அபி யாதா ப்ரஹர்த்தா ஸ -அயோத்யா -1-29-என்றும்
சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே -திருச்சந்த -56-என்றும் சொல்லுகிறபடியே
இவர் எழுந்து இருந்தால் சத்ருக்களை ஆக்கிரமித்துத் தலை அழித்து அல்லது மீளார் காண்
தஸ்மின் த்ருஷ்டே பராவரே -என்றும்
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வக் குழாங்கள் கை தொழக் கிடந்த -திருவாசிரியம் -1- என்றும்
தம் தாமைப் பரராக நினைத்து இருக்கிற ப்ரஹ்ம ருத்ராதிகளை அகப்படக் கீழ்ப்படுத்தி
அவ் வருகாய் இருக்கிற வஸ்து ஷூத்ரரான சத்ருக்களை விடுமோ
4-சத்ய பராக்கிரமம்
சத்யரான பரரை ஆக்கிரமிப்பார் என்றாகவுமாம்
அதாவது
பிரகிருதி சம்பந்த நிபந்தனமாக ப்ராதி கூல்யம் பண்ணினால் அவர்கள் மீண்டும் அநு கூலிப்பார்களோ என்று
யதி வா ராவண ஸ்வயம் -யுத்த -18-34-என்றும்
கச்சா நுஜா நாமி -என்றும் யுத்த -59-143- என்றும்
வாளுகிர்ச் சிங்க வுருவாய் உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வகலம் பிளந்திட்ட -பெரியாழ்வார் -1-6-9- என்றும்
ஒரு நிலை நின்று முட்ட ப்ராதி கூல்யத்திலே நிலை நின்றார்கள் ஆகில் அவர்களை முடிப்பார் என்கிறது –
5-ராமம் சத்ய பராக்கிரமம்
ஆக்ரமிக்கும் இடத்தில் த்ரிவிக்ரமனைப் போலே சொல்லுவது ஓன்று செய்வது ஓன்று அன்றியிலே
ஏக ரூபமாய்க் காண் இருப்பது
6-ராமம் சத்ய பராக்கிரமம்
பிறரை அழிக்கும் இடத்தில் ஆயுதம் எடுத்தல் பராக்ரமித்தல் செய்ய வேணுமோ
ஹதான் யே கேன ராமேண்-ஆரன் -26-36-என்றும்
ராம பாணாபி ஹதோ ப்ருசார்த்தச்சால சாபஞ்ச முமோச வீர -யுத்த-59-139-என்றும்
ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தப -சுந்த -38-25-என்றும் சொல்லுகிறபடியே
அழகும் எழிலுமே பரிகரமாக இழியாரோ –
ஏதேனுமாகக் கொடு போகத் தேடுகிற படியாலே போரப் பொலியச் சொல்லுகிற
இந்த வாக்கியம் விஸ்வநீயமோ-என்ன
1-வசிஷ்டோபி –
சர்வஜ்ஞனாய் பரம ரிஷியான ஸ்ரீ வசிஷ்ட பகவானும் அறியும்
2-வசிஷ்ட –
என் கார்யத்துக்கு வந்த நான் ஒழிய
ச தேஹம் பிதுராசார்யா -அயோத் -111-4-என்று
உன் கார்யத்துக்குக் கடவனாய் உனக்கு ஆப்தனான வசிஷ்ட பகவானைப் கேட்க மாட்டாயோ –
3-வசிஷ்ட –
வஸ் நஸ்ஸிலே சப்தமியாய் -குல குருர் பகவான் வசிஷ்ட -என்கிறபடியே
எங்கள் பக்கலிலே சந்நிஹிதனாய் உங்கள் ஹிதத்திலே நிலை நின்றவன் அன்றோ –
4-வசிஷ்ட –
இதம் வோ யாஜ்யா நாமுதிதம் யத் குலமபூத்
யதிஷ்டம் வா குர்வன்ன க்ருத சகர பூர்த்தமுததிம்
அசௌ தி பூர்வேஷாம் ஸூ சரிதா பதாகா யதமர
ஸ்ரவந்தீ க்ருத்ஸ் நோய்ம த்ரிபுவன குரோஸ் தஸ்ய விபவ -என்று முராரியும் சொன்னான் இறே
நீ தானும் இஷ்வாகு குல சாத்தான் ஆகையாலே உனக்கும் ஒவ்வாதோ அவற்றில் அந்தர்பாவம் என்ன
5-வசிஷ்டோபி வேத்தி
அவரும் அறிவார் –
அம்மர்யாதை குலைந்து இவன் புத்ராதிகளைக் கொள்ளுவது இவன் ஸூரபியைப் பறிப்பது -இவனோடு யுத்தம் பண்ணுவது
இவனாலே பரிபூதனாவதாய் -இப்படிக்கு விரோதம் பிறந்த படியால் எனக்காகப் பொய் சொல்லான்
அப்படிக்கொத்த இவனையும் கேட்டுக் கொள்
6-அபி சப்தம் -நானே அல்ல -இவனும் அறியும் என்று சமுச்சயமாக்கவுமாம்
7-அன்றியிலே -அபி -சப்தம் விரோதம் த்யோதயாதி
எனக்கு விருத்தனான இவனும் அறியும் என்றாகவுமாம்-
இவனுக்கு ஏற்றம் ஏது என்னில்
1-மகா தேஜா
சரஸ்வதி வல்லபனான ப்ரஹ்ம புத்ரனுமாய்
ஸ்வ யோக சித்த ஜ்ஞானனுமாகையால் வந்த மதிப்பை யுடையவன்
2- மகா தேஜா –
லோக நாதனான புருஷோத்தமன் அகப்படத் தன் காலிலே குனியும்படியான ஏற்றம் யுடையவன்
3-மகா தேஜோ –
கௌசிகோ யச சாம நிதி -என்று நாட்டில் புகழுக்கு எல்லையான நான் அகப்பட
வசிஷ்டோ மாமேவம் வதது-என்றும்
சத்யம் சகாரா ப்ரஹ்ம ரிஷி ரேவ மஸ்த்விதி சாப்ரவீத் -பால -65-25-என்றும்
அவன் வாயாலே ப்ரஹ்ம ரிஷி பட்டமும் பரியட்டமும் பெற வேண்டும்படி பெரு மதிப்பனானவன்
இப்படி உமக்கு ஏறப் பெரியராகில்
தேஷாம தேஜோ விசேஷேண் பிரத்யவாயோ ந வித்யதே -ஆபஸ்தம்பதர்-2-13-8-என்று
உமக்குப் பொய் சொன்னாலும் பொறுக்கும் படியாய் இருந்ததே என்ன
4-மகா தேஜோ
சத்ய தர்ம பராயண -அயோத் -2-29-என்றும்
சத்யம் வத தர்மம் சர-தை- சீஷா -11- என்றும்
தானும் சத்தியத்தை ஹிதமாக அனுஷ்டித்து பிறரையும் அகப்பட அனுஷ்டிப்பித்து இப்படி மகா தேஜச்வியாய்
பெரும் தவத்தனாய் இருக்குமவன் தேஜோ ஹானி பிறக்கும் படி அசத்தியம் சொல்லுமோ
5- மகா தேஜா
திக்பலம் ஷத்ரிய பலம் ப்ரஹ்ம தேஜோ பலம் பலம் -பால -56-23–என்னும்படி
நிரவதிக ப்ரஹ்ம தேஜச்வியாய் இருக்கிறவன் –
அப்படிப் பெரியவராய் இருந்தாலும்
யத் பிராமணச் சாப்ராஹ்மணச்ச பிரஸ்நமே யாதாம் பிராமணா யாதி ப்ரூயாத் -என்றும்
ப்ராஹ்மானார்த்தே கவார்த்தே வா சத்ய பிராணான் பரித்யஜேத்-மனு -11-79- என்றும்
நானும் நீயுமானால் தன்னை அழிய மாறியும் ப்ரஹ்ம ரிஷியான உனக்காக வார்த்தை சொல்லும்
அத்தனை போக்கி ஷத்ரியனான எனக்காகச் சொல்லுமோ என்ன
1-யே சேமே தபஸி ஸ்திதா -தவத்தில் நிலை நிற்கும் இவர்களும் அறிவார்கள் –
படை வீட்டார் தம் பலம் மதித்து முகத்துக்குத் தக்க வார்த்தை சொல்லுகிற எங்களை விட்டுச்
சருகிலை தின்னிகளான இவர்களைக் கேட்க மாட்டாயோ -என்றுமாம்
2- இமே தபஸி ஸ்திதா
ஊன ஷோடச வர்ஷ -பா -20-2- என்று அவர் பருவம் நிரம்பாமையை இட்டு அவர் யோக்யதைக்கு நீ தட்டுளப்பட வேண்டா
தஸ்ய தீரா பரிஜா நந்தி யோ நிம –புருஷ ஸூக்தம் -என்று அவனுடைய ஜன்ம ரஹச்ய ஜ்ஞானமுடைய இவர்களைக் கேளாய்
3-இமே -இவர்கள் -புலச்த்யன் அகஸ்த்யன் -பராசரன் -பராசர புத்ரனான வியாசன் -என்றால் போலே
நான் இவர்களுக்கு சில வைலஷண்யம் ஆபாதிக்க இருந்து கேட்க வேணுமோ
நரை தலையும் -முசியும் மோவாயும் -ஒட்டின கதுப்பும் -திரங்கின தோலும் -உலர்ந்த வடிவும் -எண்ணுகிற விரலும் –
சபிக்கிற வாயும் -வடிகிற கண்ணீரும்-ஆறாத பகவத் அனுசந்தானமும்
மயிர் எறிந்த உடம்புமாயிருக்கிற இருப்பிலே தெரியாதோ
ஆஹ்லாத சீத நேத்ராம்பு புல கீக்ருத காத்ரவான் சதா பர குணாவிஷ்டோ த்ரஷ்டவ்யஸ் சர்வ தேஹிபி -ஸ்ரீ விஷ்ணு தத்வம் –
என்னும்படி இருக்கிறவர்கள் அன்றோ –
4- இமே -இவர்கள் இப்படி இதம் ச்ப்தத்தாலே சொல்லி விரலிட்டுக் காட்டும் அத்தனை ஒழிய
வேறு பாசுரம் இட்டு வாங் மனஸ்ஸூக்களுக்கு விஷயமோ –
5-இமே -சிறியன் என்று என் இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய் சிறுமையின் வார்த்தையை
மாவலி யிடைச் சென்று கேள் -பெரியாழ்வார் -1-4-8-என்று
தூரச்தனாய் இருப்பான் ஒருவன் பக்கலிலே கேட்க வேண்டாத படி இங்கே சந்நிஹிதராகப் பெற்றோம் இறே
6-இமே -மகா பலியைப் போலே ஆசூர பிரக்ருதியாகை அன்றிக்கே பரம சத்வ நிஷ்டரான ரிஷிகளாகப் பெற்றோம் இறே
7-இமே -என்னைப் போலே ஸ்ரீ வசிஷ்ட பகவானைப் போலே ஒருவராகை அன்றிக்கே
பூயாசாம் ஸ்யாத் பலீயஸ்த்வம்-என்று இவர்கள் பலரானதுவும் உனக்கு விஸ்வாச ஹேது விறே-
இவர்கள் பலரானால் பிரயோஜனம் என்
பொய் சொல்லாத படியான தார்மிகராக வேணுமே என்னில்
1-தபஸி ஸ்திதா –
தபோ தானம் தபஸ் சத்யம் தபோ தர்ம ப்ரதிஷ்டித -என்கிறபடியே
சர்வ காலமும் தப பரர ஆகையாலே பரம தார்மிகர் என்கிறது –
2- தபஸி ஸ்திதா
பகவதீயமாய் நித்தியமான ஆத்ம வஸ்துவுக்கு ஹிதம் தேடி அல்ப அஸ்திரமான சரீரத்தை ஒருத்துப் போருமவர்கள்
3- தபஸி ஸ்திதா
ஹூத மிஷ்டஞ்ச தப்தஞ்ச தர்மச்சாயம் குலச்ய தே
க்ருஹாத் பிரதி நிவர்த்தந்தே பூர்ண காமா யதர்த்தின -என்று
அதிதிகளாயும் அப்யாகதராயும் யுள்ளவர்களை உகப்பிக்கையே பரம தர்மம் என்று இருக்குமவர்கள்
4- தபஸி ஸ்திதா –
தப சப்த வாச்யமான அர்த்த த்ரயத்திலும் நிலையுடையவர்கள்
அதாவது தப சந்தாபே -என்கிற தாதுவிலேயாய்
யஜ்ஞ்ஞேன தானென தபஸா -ப்ரு-6-4-22- என்றும்
கர்ம யோகஸ் தபஸ் தீர்த்த தான யஜ்ஞாதி சேவனம் -ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -22-என்றும் சொல்லுகிறபடியே
ஆத்ம ஜ்ஞான ரூபமான ஜ்ஞான யோகத்திலே நிஷ்டர் ஆனவர்கள் என்றாகவுமாம்
அன்றியிலே
5-தபஸி ஸ்திதா –
தப ஐஸ்வர்ய-என்கிற தாதுவிலேயாய்
பிரசாசி தாரம் சர்வேஷாம் -மனு -12-122-என்றும்
யே சேமே ஆரண்யே ஸ்ரத்தா தப இத்யுபாசதே -சாத் -5-10-1-என்றும்
பரமம யோ மகாத்தப -சஹஸ்ரநாமம் -என்றும் சொல்லுகிறபடியே
சர்வ பிரசாசிதாவாய் தபஸ் சப்த வாச்யனான பரமாத்மா விஷயத்திலே ஜ்ஞான பக்தி யோக நிஷ்டர் என்றாகவுமாம்
அன்றியிலே
6-தபஸி ஸ்திதா -என்று வாசிக தபசான ஸ்வ அத்யாயத்திலே உளர் என்றாகவுமாம் –
தத்தி தபஸ் தத்தி தப -தை சிஸா -9-வேதாத்யயனமே தவமாகும் –
அன்றியிலே
7-தபஸி ஸ்திதா
பரபக்தி பரஜ்ஞான பரம பக்திகளை உடையவர் என்றாகவுமாம்
அன்றியிலே
8-தபஸி ஸ்திதா
என்று -தஸ்மான் ந்யாச மேஷாம் தபஸா மதிரிக்தமா ஹூ -என்றும்
தேஷாம் து தபஸாம் ந்யாசமதிரிக்தம் தப ஸ்ருதம -என்றும் சொல்லுகிறபடியே
சர்வாதிசாயி தபசான பிரபத்தியிலே நிஷ்டர் ஆனவர்கள் -என்றுமாம் –
இஸ் ஸ்லோஹம் தன்னால் -ஊன ஷோடச வர்ஷ -பால -20-2-என்கிற ஸ்லோஹத்துக்கு உத்தரம் சொல்லுகிறது
பச்யாமி -என்று மேல் எழுந்த கண்ணாலே நீ காண்கிறது காட்சி அன்று காண்
யோக பரிசுத்தமான உட் கண்ணாலே நான் காண்கிறது காட்சி -என்கிறது-
அஹம் வேதமி -என்கையாலே -ஊன ஷோடச வர்ஷ-என்று பருவத்தை இட்டு எளியன் என்று இருக்க வேண்டா காண் –
விரோதி நிரசன ஷமராம்படி பெரியார் காண் -என்கிறது-
மஹாத்மானம் -என்கையாலே –
மே ராம -என்று நீ உன்னுடைய மமகாரத்திலே ஒதுக்க ஒண்ணாது காண் –
லோகாபி ராமோயம்-அயோத்-2-44-என்று சர்வ லோக சரண்யராய்க் காண் இருப்பார் என்கிறது
வெறும் -ராமம் -என்கிறத்தாலே-
ராஜீவ லோசன -என்று பொழுது புகுவதற்கு முன்னே உறங்குவார்
நிசாசரோடு பொருகைக்கு ஆள் அல்லர் என்று நினைத்து இருக்க வேண்டா
ஸூக ஸூ ப்த பரந்தப -சுந்தர -38-25-என்று அவ்வுறக்கம் தான் எதிரிகளை அழிக்கும்படி
நித்ய பராக்ராமர் காண் என்கிறது -சத்ய பராக்கிரமம் -என்கிறத்தாலே –
அஸ்ய ராஷசை -என்று இவரோ ஒருவர் அவர்கள் பலர்
இவர் மனுஷ்யர் அவர்கள் ராஷசர் என்று நினைத்து இருக்க வேண்டா
உட்குடையசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவன் -திருவாய் -7-2-3- என்றும்
திண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான் -பெரியாழ்வார் -1-2-16-என்றும்
ஒரு கோடி பேருக்கு ஒருவனே அமைந்து காண் இருப்பது என்கிறது .
இவற்றில் ஏக வசனத்தாலும் –
மஹாத்மானம் -என்று தர்மி நிர்த்தேசத்தாலும் —
ராமம் -என்று -பச்யாமி -என்கிற ஏவ வசன சித்தனான நீ ஒருவனுமே இறே இவர்
அயோக்யதையைச் சொல்லுகைக்கு உள்ளது
அவருடைய யோக்யதையைச் சொல்லுகைக்கு கிடக்கிற பேர் ஒரு வெள்ளம் காண் என்கிறது
வசிஷ்டோபி யே சேமே தபஸி ஸ்திதா -என்கிறத்தால்
ஆக
இப்படி இந்த ஸ்லோஹத்துக்கு உத்தரமாய் இருக்கிறது இஸ் ஸ்லோஹம் –
ஸ்ரீ சீதா ராம ஜெயம் –
————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply