ஸ்ரீ பாஷ்யம்—அதாதோ ப்ரஹ்ம விஜ்ஞ்ஞாச –1-1-1- -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

அதாதோ ப்ரஹ்ம விஜ்ஞ்ஞாச –

முதல் நான்கு அதிகரணங்கள்-நான்கு சூத்ரங்கள் –
விஜ்ஞ்ஞாச அதிகரணம்
ஜென்மாதி அதிகரணம்
சாஸ்திர யோநித்வாத் அதிகரணம்
சமன்வய அதிகரணம்

சாஸ்திரம் ஆரம்பிக்க –
அனுபந்த சதுஷ்டயம்
விஷயம்–பிரயோஜனம் –அதிகாரி –சம்பந்தம் –நான்கும் சொல்லி
மங்கள ஸ்லோகங்கள் இரண்டும் -இவற்றை சொல்லி
போதாயனர் -ஆபஸ்தம்பர் -சிஷ்யர் –
ஜகத் காரணனான பகவான் -இரண்டு அத்யாயம்
அவனை பற்றி  மோஷம் -சாதனா -பல அத்யாயம்

அதிகரணம் ஆறு உண்டே பார்த்தோம்
விஷயம் –
சங்கை –
பூர்வ பஷம்
உத்தர பஷம் –
அதில் ஆட்சேபம்
சமாதானம் –
அதிகரண ஸ்வரூபம் இவை ஆறும் –

சங்கர பகவத் பாதருக்குப் பின்பு அத்வைதம் இருவேறு கிளையாக பிரிந்தது.
ஒன்று வாசஸ்பதி மிஸ்ரருடைய ஜீவ அஜ்ஞான வாதம் . மற்றோன்று பிரகாசாத்மா வினுடைய பிரஹ்ம அஜ்ஞான வாதம்.
உத்தமாதிகாரிக்கு ”சதுஸ் சூத்ரி ” எனப்படும் வியாஸ பிரஹ்ம சூத்திரத்தில் உள்ள
அதாதோ பிரஹ்ம ஜிக்ஞாஸா
பிரஹ்மாயக்ஷ யத :
ஸாத்திர யோநித்வாத்
தத்து ஸமன்வயாத்
என்கிற இந்த நான்கு சூத்திர விவரண ஞானமே போதுமானது.
அதிகப் படியாக ”பஞ்ச பாதிகா ” எனப்படும் முதல் அத்யாயத்தின் முதல் 4 பாதங்கள் + இரண்டாவது அத்தியாயத்தின் 1 வது பாதம் சேர
இந்த ஐந்து பாதங்களின் விவரண ஞானமே போதுமானது என்று நம்பினர்.
”பஞ்ச பாதிகா ” விவரணத்தை எழுதியவர் பிரகாசாத்ம யதி. இவருடையது பிரஹ்ம அஜ்ஞான வாதம்.
வாசஸ்பதி மிஸ்ரருடைய ”பாமதி ” சூதிர பாஷ்யம் , அதற்கு ஏற்பட்ட ”பாமதி கல்பதரு ”, பாமதி கல்பதரு பரிமளம் ”
இத்யாதி கிரந்தங்கள் ஜீவ அஜ்ஞான வாதத்தை முன்வைத்தனர்.

ஜிக்ஞாசாதிகரணம் :

முதல் அத்யாயம் முதல் பாதம் முதல் நான்கு சூத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு அதிகரணம்.
நாலுமாக சேர்ந்து சாஸ்திர ஆரம்ப சமர்த்தன அதிகரணம் என்று பெயர்.
இந்த அனுபந்த சதுஷ்டயம் சாஸ்திரத்தைப் படிப்பதற்கான காரணத்தை சொல்ல வந்தது.
அதிகரணம் என்றால் 1. விஷயம்; 2. சம்ஸயம் ; 3. பூர்வபக்ஷம்; 4. சித்தாந்தம்; 5. ஆக்ஷேபம்; 6. சமாதானம்
என்ற ஆறு விஷயங்களைக் கொண்டது.
1. சொல்ல வந்த விஷயம்; 2. சொல்வதற்கான நோக்கம்; 3. அதிகாரி நியமம்;
4. கிரந்த கர்த்தாவுக்கும் சாஸ்திரத்துக்குமான சம்பந்தம் இவைகளை விளக்குவது அனுபந்தமாகும்.

அதிகார: பலே ஸ்வாம்யம் . பாலாபிஸந்தியை வைத்து அதிகாரியினுடைய நிர்த்தாரணம்.
பிரஹ்ம சூத்திரங்களை எழுதியவர். பாதராயண மஹரிஷி . இவருக்கு வியாசர் என்று இன்னொரு பெயரும் உண்டு.
கர்மா மீமாம்ஸா சூத்திரங்களை எழுதிய ஜைமினி இவருடைய சீடர். அஷ்டாதச புராணங்களையும், பாகவதம் எழுதிய வியாசரும்
இவரும் ஒன்றா என்பதில் விசம்வாதம் உண்டு.

பகவத் ராமானுஜர் எடுத்தாள்கிற அத்வைத சித்தாந்த பூ.ப. உல்லேகனங்கள் பெரும்பாலும் பஞ்ச பாதிகா விவரணகாரர்,
மற்றும் பாமதி கிரந்தங்களில் இருந்து எடுக்கப் பட்டவை என்பதை ” கூடார்த்த சங்கிரகம் ” என்கிற ஸ்ருதப் பிரகாசிகா டீகையில்
அபிநவ ரங்கநாத பரகால ஸ்வாமி காட்டியுள்ளார்.
மேற்படி விவரண காரர்களுடைய கிரந்தங்களில் சொல்லப் பட்ட விஷயங்களின் சுருக்கமாவது ,
அவித்யா என்பது ஜீவாத்மாவிடம் இருப்பது, மாயை என்பது பரமாத்மாவிடம் இருப்பது என்பதாகும்.

பிரபாகர மீமாம்சை
கிரியா பதம் இல்லாத வாக்கியம் -ஆகாங்ஷை-பூர்வ பஷம்-

வேத வாக்கியம்
1-அஜ்ஞ்ஞாப விதி -ஜ்யோதிஷ்ட ஹோமம்  ஸ்வர்க்கம் விதி வாக்கியம் -பிரதானம் -அப்ரவர்த்த பிரவர்த்தகம் தூண்டும்
2-ந்த்ரதேயம் -பிரயோகம் விநியோகம்
3-நாமதேயம்
4-விஷேத வாக்கியம்  -நிஷேத அன்னம் கார்யம்
5-அர்த்த வாதம் -கதைகள் உதாரணம் சொல்லி
பஞ்ச விபக்தி

விதி சேஷ அர்த்தவாதம்
சத்ரு -சேனை யாகம் -அதிகார கருத்தியம்
பூதம் பவ்யாத-நடந்ததை கொண்டு நடக்க வேண்டியவை சொல்ல
சித்தம் சாத்யாய-
கார்ய புத்தி ரேவ ப்ரவ்ருத்தி -வேத வேத்ய தாத்பர்யம்
விதி -இஷ்ட சித்திக்கு -சாத்யத்வம் –பகவத் அனுமதி -தோஷம் இல்லாமல் பிரவ்ருத்தி செய்ய மூன்றும் வேண்டும்

அத -கர்ம விசாரம் அனந்தரம்
அஷயம் -கர்ம பலம் அல்பம் அஸ்திரம்
ப்ரஹ்ம ஞானம் அநந்தம் -ஸ்திரம்-

லஷ்மண சூரி மேக நாத ஹரி சாஸ்தராம்ப அதிகரணங்கள் நான்கு இல்லை முதல் மட்டும் என்பர்
சோமாசி ஆண்டான் வம்சம்
அதிகரண சாராவளி தேசிகன் -இப்படியும் சொல்வார் உண்டு அப்படியும் சொல்வார் உண்டு
அஹம் ஆத்மா ப்ரஹ்ம-விதி நிஷேதம் இல்லாமல் சித்த ப்ரஹ்ம பத வாக்யங்கள் இவை போல்வன
பிராமாண்யம் கிடையாது என்பர் பூர்வ பஷிகள்-கிரியா பதம் இல்லாததால்
வேதத்தில் 3000 கதைகள் உண்டு
மாடுகள் தபஸ் செய்து கொம்பு பெற்றன
அக்னி கண்ணீர் ஸ்வர்ணம் தங்கம் ஆனது -பிரமாண்யம் கிடையாது
அக்னி தேவதையாக இருக்கும் யாகம் முக்கியம் சொல்ல வந்தவை
கர்மத்தால் சாஸ்வத பதம் கிட்டாது அல்ப அஸ்திரம் பலம் தான் கிட்டும்
அஷயம் என்றதே வேதம் இதுவும் பூர்வ பஷ வாதம்
அத்ர  அதிதீயதே -சித்தாந்தம் -மேலே
சர்வ சப்தானாம் -பிரபாகர மீமாம்ச -பிரமாணிகர் ஸ்தானம் கொடுக்காமல் -துச்சம் மந்தம் அசத்-சப்தம் சொல்லாமல்
பிரமாணிகர் மதக்க மாட்டார்கள் –
ஆத்மா யாதாம்ய ஞானம் உள்ளவர் அநாதரிப்பார் முன்பே சொன்னதுபோலே

சர்வ சப்தம் -சக்தி க்ரஹம் -சப்தம் பொருள் -சம்பந்தம்
எட்டு வழிகளில்  அறிகிறோம்
1-வியாகரணம் -பூ தாது சத்தியை குறிக்கும் -தாசரதி -பெருமாள் –
2- உபமானம் -கவயம் -கோ சத்ருசம் -இந்த்ர்யாணி-இந்த்ரன் மனைவி சாத்ருசம்
3-கோசகம்-பர்யாய சப்தங்கள் -அமரகோசம்
4-ஆப்த வாக்கியம்
5-வ்யவஹாரம் -அஸ்வம் -குதிரை ஆனயா -மாடு கொண்டு வா சொல்லி கண்டு அறிதல் -வ்ருத்த வ்யவஹாரம்
6-வாக்யச்ய -context கொண்டு அறிதல் -கோகுல பஷி -இனிமையாக பாடும் -மா மரத்தில் இருக்கும்
7- விவரணம் -சமாரார்த்த -சப்தம் கொண்டு
8-பிரசித்தம் -வார்த்தை கொண்டு அறிதல் -யானை –
எட்டு வித பிரமாணம்

மீமாம்சகாரர்   வ்யவஹாரம் கொண்டே அறிய முடியும் என்பர்
nice  book  read  it  சொன்னதும் அறிகிறோம்
ப்ரஹ்மம் அர்த்தம் புரியாமல் ப்ரஹ்ம விசார சாஸ்திரம் வேண்டாமே என்பர்
அம்மா சொல்ல குழந்தை அறிகிறதே –

வேத வாக்யங்கள் பொதுவாக விதி / நிஷேத வாக்கியங்களாக அமையும். இதை செய் / இதை செய்யாதே – சத்யம் வத / தர்மம் சர /
ஸ்நாத்வா புஞ்சீத இத்யாதி படியாக இருக்கும். ஆக வேத வாக்கியங்களை 5 வகையாகப் பிரிக்கலாம் என்பது மீமாம்ஸகர் பக்ஷம்.

1. விதி – அஜ்ஞாதார்த்த ஜ்ஞாபக, அபிரவர்த்த பிரவர்த்தகஹா விதிஹி .
உ.ம். ஜ்யோதிஷ்ட்ட ஹோமேன ஸ்வர்க காமோ யஜேதா . சித்ர யாக: பசு காமேந . யஜேதா = என்பது விதி .
இதிலுள்ள ஆகியாத +”லிங் ” லகார பிரத்யயம் பிரவிருத்தி ஆதேசத்தோடு ஆணை இடுவதாகவும் உள்ளது.

2. மந்திரம் – பிரயோக சமவேத அர்த்த ஸ்மாரகஹ . விநியோக விதி. எந்த சமயத்தில் எப்படிப் பிரயோகிக்க வேண்டும்,
எந்த ஸாமக்ரி கொண்டு யஜிக்க வேண்டும் என்பனவற்றை க்ஞாபகப் படுத்துவது மந்திரம்.

3. நாமதேயம் – யாகத்தின் பெயரைக் குறிக்க வந்த வாக்கியங்கள். உ.ம். உத்பித் யாகம் .

4. நிஷேத வாக்கியம் – Prohibition. உ.ம். மா ஹிம்சா ஸர்வா பூதாநி . ந கலஞ்சம் பக்ஷயேத் .

5. அர்த்த வாதம். – கதா பாகம். Story aspect to stress a point. அது விதி சேஷ அர்த்த வாதமாக அல்லது
நிஷேத சேஷ அர்த்த வாதமாக இருக்கும்.
உ.ம். அக்நிதேவதா யாத யாகம் ; சேனேந அபிசரந் யாஜேத – சத்ரு வத காம: சேனேந யாகம் குர்யாத் என்பன சில.

வேத வாக்கியங்களின் முக்கியார்த்த பயன் விதியாகும்.
அப்படிப்பட்ட வாக்கியங்களில் லக்ஷணையால் குறிக்கப் பட்ட அர்த்தமே (implied meaning) பிரதானம். Literal meaning should not be taken.
உ.ம். பரான்னம் – விரோதி வீட்டில் பூஜிக்கை நிஷேதம். த்விஷதன்னம் ந போக்த்வயம் த்விஷதம் நைவ போஜயேத் என்று இருக்கிற படியால்.
அப்படி ஒருவன் பூஜித்தால் ‘விக்ஷம் புங்ச்வா ‘ தின்றதோடு ஒக்கும் என்றால்
‘சத்ரு கிருகம் ந கச்சா ‘ என்பதே அர்த்தமாகும். விஷத்தை சாப்பிட்டான் என்பது அர்த்தம் அல்ல.

இதனால் வ்யவாஹர்ரம் மட்டும் பிரமாணம் இல்லை
சந்தரன் பசு போல்வன பாலர்கள் அறிந்து கொள்வது போலே
நாம ரூபேண வியாகரணம் செய்தவனும் அவனே
ஆகாரம் இப்படி தான் இருக்க வேண்டும் -நிர்ணயித்து அருளினவனும் அவனே
அனுமானத்தால் சாதிக்கிறோம்
ப்ரஹ்ம சப்தம் -ப்ருஹி விருத்தோ -விஸ்தாரமாக ஆக்கிக் கொள்ளும் வ்யாக்ராணம் ஜகத் ரூபமாக தன்னை ஆக்கிக் கொள்ளும் புரிகிறோம்
சைகையாலே காட்டியும் தெரிவிக்கிறோம் சிலவற்றை –
அத வேதாந்த -சித்த உபாயம் அபரிமித பதம் கிடைக்க உபாசனம் செய்ய சொல்லும்
ப்ரஹ்ம விசார ரூபம் மூலம் கிடைக்கும் என்று சொல்லி நியமிக்கிறார் சித்தாந்தம்

-விதி நிஷேதம் -பிரதாந்யம்-என்பதை நிரசித்து
கார்யார்த்த -ஞான ஸ்வரூபம் ஞான ஆஸ்ரய -குணா குணி பாவம் -விளக்கு போலே ச்வத ஸூ பிரகாசக
வேதம் பரம பிரமாணிகம் -சாஸ்த்ரைகக-சித்தம்
த்ரஷ்டவ்ய -மந்தவ்ய –  நிதித்யாசத்வ்ய -அந்தர்யாமி ப்ரஹ்மம் -பார்க்க -கேட்டு -நினைத்து ஆலோசித்து
சரவணம் மனனம் –
உபாசனம் சாஷாத்காரம்
கேட்டு -சுருதி வாக்யங்களை -திராவிட வேதம் இதிகாச புராணங்கள் ஆச்சார்யா வசனங்கள்
மந்தவ்ய -ஆலோசனை
விச்சேதம் இல்லாமல் -சரீர அவசானம் வரை –
ப்ரஹ்ம ஸ்வரூபம் அறிய  -விதிக்கும் சுருதி வாக்கியம் உண்டே -பூர்வ பஷம் படியே -பார்த்தாலும் –

தகராசாகம் –
ஆசூர பிரக்ருதிகளுக்கு முடியாது
பரமாத்மாவை அடைய உபாசானம் விதித்து -கார்ய விதி

கேவல கர்ம -சாதன அனுகுணம் பலம் –
கர்மானுஷ்டானங்கள் -அஸ்திரம் அல்ப பலம்
ப்ரஹ்ம உபாசனம் இல்லாத கர்மாநுஷ்டானம் அஷயம் அமிருத பலம் கிட்டாதே
கர்மங்கள் தானே பலம் கொடுக்காதே
சித்திர குப்தன் -எழுதி –
பகவத் ப்ரீதியும் அப்ரீதியும் புண்யமும் பாபமும்

குப்த சித்திரம் -embedded  in  us
அநாதி கால கர்ம பலன்கள் –
யஞ்ஞம் தேவதா த்ரவ்யம் -சோம ரசம் -இந்திர அக்னி சோம அஸ்வினி தேவதா
பரஸ்பரம் பாவயந்த –
வேத வித் ஹிருதயத்தில் உள்ளான்
அந்தரிஷா  லோகம் -பாதாள லோகம் -வட்டவடிவான பூமி –
துக்காவஹா -ஸூ கம் -அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்
ஸ்திதி ஸ்வர்க்கம் -சரீர அவசானே பலம் -கார்ய காரண பாவம்
ஷிண புண்யேன
அதிசயம் -abstract -மீமாம்சை -அத்ர்ஷ்டம் -அபூர்வம் –
அங்கா பூர்வம்
மகா பூர்வம் –

வேதவித் என்று பிரபாகரர் மதம் கொண்டாடுவார் –
இருந்தும் இந்த பூர்வ பஷம் நிரசித்து அருளுகிறார்

அசேதன வஸ்து பலம் கொடுக்காதே -நம் சித்தாந்தம் -பரமாத்மா ஏவ பல ப்ரதா
சாப்பாடு அந்தர்யாமி திருப்தி அடைவது போல
ஜீவாத்மா
விஹித கர்ம அனுஷ்டானம் -சுருதி ஸ்ம்ருதி -பகவத் ஆஞ்ஞை
தர்மம் -அதர்மம் -பர்யாய சப்தங்கள் புண்ணியம் பாபம்
ஆராதனை தேவதை அந்தர்யாமியைக்   குறிக்கும் -சப்தைதா தேவதா இல்லை
பகவத் கைங்கர்ய ரூபம் ப்ரீத்யார்த்தம் –
அதாக –பாரமாத்வாலே கர்ம பலம் -அகார வாச்யன் என்னவுமாம் –

”அதாதோ ” என்பதன் பொருள்
கர்ம மீமாம்ஸாவில் சொல்லப் பட்ட கர்ம ஸ்வரூபம் தெரியாமல் ஞான ஸ்வரூபம் தெரிய வழி இல்லை என்பதும்,
கர்ம விசாரம் முடித்தே பிரஹ்ம விசாரத்துக்கு வர வேண்டும் என்பதையுமே இது காட்டுகிறது.

கர்ம விசாரம் என்பது அவசியம் செய்யப் படவேண்டியது.
ஆகில் கேவல கர்மத்தால் கிடைக்கிற பலன் அல்பம் அஸ்திரம் என்பதும்
பிரஹ்ம உபாசனா ரூபமான கர்மத்தால் கிடைக்கிற பலன் அனந்த ஸ்திர பலம் என்பதான ஆபாத பிரதீதி ஏற்பட்டு
பிரஹ்ம ஞான – விசாரத்துக்கு வரவேண்டும்.

அதா = கர்ம விசாரானந்தரம்
அத: = தஸ்மாதேவ காரணாத்
பிரஹ்ம ஜிக்ஞாஸ = பிரஹ்ம விசாரம் பண்ண வேண்டும்.
இதி மஹா சித்தாந்த :

——————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading