குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்
இன்று முதலாக என்னெஞ்சே -என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித்து இரு –41-
—————————————————————————–
எம்பெருமான் உடைய வாத்சல்ய குணத்தில் ஈடுபட்டு பேசுகிறார்
என்னெஞ்சே -என்றும்
எனது மனமே எப்போதும்
புறனுரையே யாயினும் –
மேலுக்கு சொல்லுகிற வார்த்தையாய் இருந்தாலும்
மித்ர பாவேனசம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன –
நமது ஆபி முக்யத்தை மாத்ரமே பார்த்து
உறங்குகிற குழந்தையை அனைத்துக் கொண்டு கிடக்கும் தாயை போலே
தான் அறிந்த சம்பந்தமே காரணமாக
நம்மை விடாமல்
சத்தையை நோக்கிக் கொண்டு துணையாக போருமவன்
நன்மை என்று பேரிடலாவது தீமை உண்டா என்று பார்த்து
ஸூ க்ருதங்களை ஏறிட்டு
மடிமாங்காய் இட்டு கார்யம் செய்பவன்
பொன்னாழிக் கையான் திறனுரையே சிந்தித்து இரு
சக்கரபாணி எம்பெருமான் விஷயமாக
பேசும் பேச்சையே
அனுசந்தித்துக் கொண்டு இரு
அப்படி இருந்தால்
இன்று முதலாக
இன்று தொடங்கி
குன்றனைய குற்றம் செய்யினும்
மலை போன்ற பெருத்த குற்றங்களைச் செய்தாலும்
குணம் கொள்ளும்
அவற்றை எல்லாம் எம்பெருமான் குணமாகவே
திரு உள்ளம் பற்றுவன்
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார்
அக்ருத ஸூ க்ருதகஸ் ஸூ துஷ்க்ருதா சுபகுண லவலேச தேசாதிக
அசுபகுண பரஸ் சஹஸ்ரா வ்ருத வரதமுருதயம் கதிம் த்வாம் வ்ருனே -ஸ்ரீ வராத ராஜ சத்வம் -92-
குற்றங்களை குணமாக கொண்டால் பிராந்தன்
பிரேமத்தின் கனத்தால் வரும் பிரமை எல்லாம் அடிக் கழஞ்சு பெருமே
ஜ்ஞானி து ஆத்மைவ மே மதம் -என்றானே
நோன்பு நோற்கை
காமன் காலில் விழுதல்
மடலூர்கை
ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும் பூங்காரரவு
அன்பு கடந்த பிரேமம்
தோஷம் காணாது இருப்பதே அஞ்ஞானம்
கண்டு குணமாக கொள்வது வாத்சல்யம்
பக்த வத்சலன் -பட்டர் பாஷ்யம் -ஓர் அடியான் கிடைக்கப் பெற்ற பெருமையினால்
மற்றது ஒன்றிலும் ஆசை கொள்ளாது எல்லாவற்றையும் மறந்து இருக்கை –
சஹாஸ்ராம்சு -சர்வதோமுகமான ஞானம் உடையவன்
அவிஞ்ஞாதா -அடியார்கள் குற்றங்களை அறியாதவன்
தோஷ அதர்சித்வம் -ப்ரீதியின் பிரதம பர்வம்
தோஷ போக்யத்வம் -ப்ரீதியின் சரம பர்வம்
தோஷங்களை காணா விடில் ஷமிக்க பிரசக்தி தானும் இல்லை இ றே
எம்பெருமான் உடைய பிரணய ரசம் இருகரையையும் அழியப் புக்கால்
அணையிட்டும்
ஆணையிட்டும்
தடுக்க வல்லார் இல்லை கிடீர்
சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு தட்டும்
அவனுடைய கல்யாண குணபிரசரம் ஒரு தட்டுமாய் இருக்கும் -என்று பிள்ளான் அருளிச் செய்யும்
தோஷ போக்யத்வத்தை மங்க ஒட்டு உன் மா மாயை
தன் கன்றின் உடம்பில் வழு வன்றோ காதலிப்பது அன்று அதனை ஈன்று உகந்த ஆ –
எம்பெருமான் உடைய தோஷ போக்யத்வ குணத்தை சாக்ரஹமாக இல்லை செய்யுமவர்கள்
நிர்க்குண ப்ரஹ்மவாதி கோடியிலே அந்தர்பவிக்கை அழகிது
என்று எண்ணுவார் இடரைக் களைவான் -பிள்ளை பணிக்கும் –
————————————————————————————————————————————————————————————-
திருமகளும் மணமகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திரு மகட்கே தீர்ந்தவாறு என்கொல் -திருமகள் மேல்
பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
மாலோத வண்ணர் மனம் –42-
————————————————————————————
திருமகளும் மணமகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
மூவருடன் கலந்து பரிமாறும் போது
குற்றங்களை குணமாக கொள்ளுவதற்கு அடி சொல்லிற்று இத்தால் –
பாலோதம் சிந்தப்
திருப்பாற் கடலிலே
சிறு திவலைகள் ஆனவை சிதறி
விழுந்து ஸூ கப்படுத்த
பட நாகணைக் கிடந்த
படம் எடுத்த பாம்பணையில் பள்ளி கொண்ட
மாலோத வண்ணர் மனம்
பெரிய கடல் போன்ற வடிவை உடையனான
எம்பெருமானது
திருமகள் மேல்
பெரிய பிராட்டியார் மேல்
காதல் கொண்ட திரு உள்ளமானது
திரு மகட்கே தீர்ந்தவாறு என்கொல் –
பெரிய பிராட்டி ஒருத்தியின் மேலே
அற்றுத் தீர்ந்து இருக்கிற விதம் என்னோ
தீர்ந்தவாறு என் கொல் -மூவரிடம் அன்வயித்து
திரு மகட்கே தீர்ந்தவாறு என்கொல் –
மண் மகட்கே தீர்ந்தவாறு என்கொல்
ஆய மகட்கே தீர்ந்தவாறு என்கொல்
திருமலை அனந்தாழ்வான் நிர்வஹிப்பாராம்
சௌபரி-மாந்தாதா உடைய 50 பெண்கள் உடன் பரிமாரினது போலே
பட்டர் நிர்வாஹம்
திருமகள் உடன் கலந்து பரிமாறும் பொழுது
மற்ற பிராட்டிமார்கள் போகத்துக்கு உபகரணமாய் இருப்பார்கள்
பெரிய பிராட்டியார் அவர்களை தம்முடைய அவயவங்களாகக் கொண்டு -தோள்கள் முலைகள் போலே -ரமிப்பிபார்
அற்றுத் தீருகை ஒன்றிலே ஆழம் கால் பட்டு இருக்கை
தாமரைக் கண்களுக்கே அற்றுத் தீர்ந்தும் -திருவாய்மொழி-
————————————————————————————————————————————————————————————————————-
மனமாசு தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கைகூடும் -புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி
தாந்தொழா நிற்பார் தமர்–43-
————————————————————–
பிராட்டிமார்கள் புருஷகார பலத்தால்
குற்றங்களை குணமாக கொள்வான்
ஸ்வரூபத்துக்கு சேர கிஞ்சித்கார கைங்கர்யங்களில் அன்வயிக்கலாம்
அப்படி அன்வயிக்கவே
மனமாசு தீரும் அருவினையும் சாரா
தீமைகள் தொலைந்து
மனஸை பற்றிய அஜ்ஞ்ஞானம் விஷய ராகம்
தோஷங்கள் அடங்கலும் தன்னடையே விட்டுப் போம்
இவற்றுக்கு மூல காரணமான துஷ் கருமங்களும் கிட்டாதபடி தொலைந்து போம்
தனமாய தானே கைகூடும்
நன்மைகள் கைகூடும்
ஸ்வரூப அனுரூபமான செல்வம் ஆகிய
பரமபக்தி போல்வன தனக்குத் தானே வந்து கைபுகுரும்
நின்னையே தாள் வேண்டி நீள் செல்வம் வேண்டாத அடியவர்கள் –
புனமேய பூந்துழாயான்-
சர்வ ரஷகன் -தனிமாலை இட்டு
அடிக்கே போதொடு நீரேந்தி தாந்தொழா நிற்பார் தமர்
திருவடிகளிலே
திருவாராதன உபகரணங்கள் கொண்டு பணிமாற-
—————————————————————————————————————————————————————————
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எப்பேர் மற்றப்பேர் -தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம்–44-
—————————————————————————————
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே தமருகந்தது எப்பேர் மற்றப்பேர் –
ஆஸ்ரிதர் உகந்த ரூப
நாமங்களையே கொண்டு தன்னை அமைத்து
அர்ச்சாவதார ரூபியாய் அடிமை கொள்வான்
தமருகந்து எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே அவ்வண்ணம் ஆழியானாம
தமருகந்தது எவ்வண்ணம் தப்பான பாடம்
எந்த குணங்களையோ -சேஷ்டிதங்களையோ
அனுசந்தித்து அநவரத பாவனை பண்ணுகிறார்களோ
அவற்றையே கொண்டு இருப்பான்
அர்ச்சாவதார சௌலப்யம் காட்டி அருளுகிறார் –
எம்பெருமானார் மாதுகரத்துக்கு எழுந்தி அருளா நிற்க
சில பிள்ளைகள் காலாலே மணலிலே கீறி உம்முடைய பெருமாள் என்று காட்ட
பாத்தரத்தை வைத்து தண்டனிட்டு அருளினார்
கோயிலிலே சில பிள்ளைகள் விளையாடுகிறவர்கள்
திருவீதியில் இருந்து
பெருமாளும் நாய்ச்சிமாரும் பெரிய திரு மண்டபமும் கற்பித்து
பெரிய திருப் பாவாடையும் அமுது செய்வித்து
எம்பெருமானார் பிரசாதப்படும் -என்று மணலைக் கையாலே முகந்து எடுக்க
தத்காலத்திலே மாதுகரத்துக்கு எழுந்து அருளிய உடையவர்
அவ்விடத்திலே அது கேட்டருளி
தெண்டனிட்டு
அவர்களுடைய பிரசாதத்தை பாத்ரத்தில் ஏற்றார் -என்று ஜீயர் அருளிச் செய்தார்
எங்கள் ஆழ்வான் – திருக் குருகைப் பிரான் பிள்ளான் சிஷ்யர் –
அவர் பாடே ஆயர் தேவு சென்று நாவற் பழம் வேண்ட
நீ யார் என்று அவர் கேட்க
ஜீயர் மகனான ஆயர் தேவு என்ன
ஜீயரைக் கண்டு உம்முடைய பிள்ளை எங்களை குடி இருக்க ஓட்டுகிறிலன் என்றார்
நஞ்சீயர் திரு வாராதன பெருமாள்- ஆயர் தேவு-சலங்கை அழகியார்
——————————————————————————————————————————————————————————-
ஆமே யமரர்க்கு அறிய அது நிற்க
நாமே அறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு –45-
——————————————————————————————–
பூமேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை பாதமத்தால் எண்ணினான்
அந்த எம்பெருமான் உடைய குணங்களை
தேவர்களால் அறிய முடியாது
எம்பெருமான் திருவருளால் தெளியக் காண வல்ல
நாமே அறிய வல்லோம்
அன்றிக்கே
தேவர்களாலும் அறிய மாட்டாத பொழுது
நாமோ அறியக் கடவோம்
என்று நைச்யம் பாராட்டி அருளிச் செய்கிறார் என்றுமாம்-
ஆய்ந்த வருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில்
வாய்த்த குழவியாய் வாளரக்கன் ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் –மூன்றாம் திருவந்தாதி -77-
கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்டவரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போம் குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போம் குமரருள்ளீர் புரிந்து -நான்முகன் திருவந்தாதி -44-
இக்கதை இதிஹாச புராணங்களில் இருப்பதாக தெரியவில்லை
சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமாறு அவனை நீ எண்ணி
சக்கரத்தால் தலை கொண்டாய் -என்றும்
எல்லியம் போது இனிது இருத்தல் இருந்ததோர் இட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் –
இவையும் ஆழ்வார்களால் மாத்ரம் அருளிச் செய்யப் படுபவை-
———————————————————————————————————————————————————————–
பண் புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர -புண் புரிந்த
வாகத்தான் தாள் பணிவர் கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி யாள்வார் –46
————————————————————————————————
பிரமனுக்கு அருள் புரிந்தமை கீழே சொல்லி
இதில் ருத்ரனுக்கு அருள் புரிந்து அருளியதை காட்டி அருளுகிறார்
பண் புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர
-புண் புரிந்த வாகத்தான்
தனது நகத்தால் கீறி புண் படுத்திக் கொண்டவன்
தாள் பணிவர் கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி யாள்வார்
தாள் பணிபவர் உபய விபூதியையும் ஆள்வார்
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆழ்வார் மண்ணூடே -திருவாய்மொழி பாசுரம் போலே
————————————————————————————————————————————————————————————–
வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள்
கைந்நாகம் காத்தான் கழல் –47-
——————————————————————————————–
எம்பெருமான் தாள் பணிதல்
யாருக்கு கைகூடும் என்ன
இந்த்ரியங்களை அடக்கி ஆள்பவர்களுக்கே என்கிறார்
வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
அடக்கி ஆளுதல் அறிய விஷயம் காட்ட
மதக் களிறு என்கிறார்
யானை நீர் நிலைகளில் புக்கு முதலை வாயில் அகப்படுமே
விஷயாந்தரங்கள் -நீர் நிலைகள்
வாரி –நீர்
நீர் விடாயை பிறப்பிப்பது போலே
விஷயாந்தரங்களும் விடாயை பிறப்பிக்கும்
மீண்டும் சேரி திரியாமல் செந்நிறீஇ -என்றது
பலாத் காரம் செய்தாகிலும் அடக்கி ஆள வேணும்
கூரியமெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள் கைந்நாகம் காத்தான் கழல்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் போல்வாரே
திருவடிகளை காண்பர்-
———————————————————————————————————————————————————–
கழல் ஓன்று எடுத்து ஒரு கை சுற்றி ஓர் கை மேல்
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச -அழலும்
செருவாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல
மருவாழி நெஞ்சே மகிழ்–48-
————————————————————————–
கழல் ஓன்று எடுத்து
ஒரு சேவடியை மேல் உலகங்களிலே
செல்ல நீட்டி
ஒரு கை சுற்றி
ஒரு திருக்கையாலே நமுசி பிரக்ருதிகளை
சுழற்றி எரிந்து
என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியானே –
ஓர் கை மேல் சுழலும் சுராசுரர்கள் அஞ்ச -அழலும் செருவாழி ஏந்தினான்
மற்றொரு திருக்கையிலே
இவனுக்கு என்ன நேரிடுமோ என்று தவிக்கிற தேவர்களும்
பிரதிகூலரான அசுரர்களும் அஞ்சும்படியாக
எதிரிகள் மேலே அழலை உமிழ்கின்ற யுத்த
சாதனமான சக்கரத்தை ஏந்தின எம்பெருமான் உடைய
சேவடிக்கே செல்ல மருவாழி நெஞ்சே மகிழ்
திருவடிகளில் சென்று கிட்டும்படியாக
பொருந்துவாயாக
இதை ஆனந்த ரூபமாக ஏற்றுக் கொள்-
—————————————————————————————————————————————————————————————–
மகிழ் அலகு ஒன்றே போல் மாறும் பல் யாக்கை
நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால் -முகிழ் விரிந்த
சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்
ஆதி காண்பார்க்கும் அரிது –49-
——————————————————————————————
மகிழ் அலகு ஒன்றே போல்
மகிழம் விதையே
காணி ஸ்தானத்திலும்
கோடி ஸ்தானத்திலும்
மாறி மாறி நிற்பது போலே
மாறும் பல் யாக்கை
மாறி மாறி பல வகையான சரீரங்கள்
நெகிழ
தன்னடையே விட்டு நீங்கும்படி
முயல்கிற்பார்க்கு அல்லால் –
முகிழ் விரிந்த சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம் ஆதி காண்பார்க்கும் அரிது –
கூடாத கார்யம்
————————————————————————————————————————————————————-
அரிய புலன் ஐந்து அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் -பெரியனாய்
மாற்றாது வீற்று இருந்த மாவலிபால் வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது –50-
—————————————————————————————–
விஷயாந்தரங்களில் பற்று அற்று
அன்புடன் அவனை ஆஸ்ரயிக்கும் அவர்களுக்கு
அவனை காண்பதில் அருமை இல்லை என்கிறார்
ஞான இந்த்ரியங்கள் ஐந்தையும்
விஷயாந்தரங்களில் போக ஒண்ணாத படி அடக்கி
பகவத் ஆராதனைக்கு உரிய நல்ல மலர்களை சேகரித்து கொண்டு
மெய்யன்பு நன்கு விளங்கும்படி சென்று பணிந்தால்
மாவலியின் மதம் ஒழித்த பெருமானை
கண்டு அனுபவிப்பது எளிதாகும்
———————————————————————————————————————————————————————————————————————
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply