பிரவேசம் –
தையொரு திங்களும் என்று தொடங்கி
கீழ்த் திரு மொழி அளவும்
ஆண்டாள் பட்ட கிலேசம் எல்லாம் தீரும்படி
கண்ண பிரான் வந்து சேவை தந்து அருளின படியை
கூறுவது ஆய்த்து ‘இந்த திருமொழி –
நம் ஆழ்வார் –என் அவா அறச் சூழ்ந்தாயே -என்னும்படியாக பெற்ற பேற்றை
ஆண்டாளும் பெற்றாளாய்
அப்பேற்றை நேராகப் பேசாதே
கண்ண பிரானைக் கண்டதுண்டோ -என்று கேட்பாரும்
ஒ நன்றாக கண்டது உண்டு -என்று விடை அளிப்பாருமாக
இத்தகைய அந்யோபதேச பிரக்ரியையிலே
அமைத்து அருளிச் செய்கிறாள் –
இத் திரு மொழியிலே-
ஈற்றுப் பாட்டு ஒழிந்த ஒன்பது பாட்டிலும்
முன்னடிகள் -கண்டீரே -என்ற முடிவினால் வந்த வினாவாகவும்
பின்னடிகள்
விருந்தாவனத்தே கண்டோமே -என்ற முடிவினால் வந்த விடையாகவும் நிகழும் –
ஒரு வ்யக்தியாகிய ஆண்டாள் தானே
அநேக வ்யக்திகளின் அவஸ்தையை ஏக காலத்திலே
அடையுமாறு பொருந்துமோ என்ன
எம்பெருமானது அருளின் மிகுதியாலே
ஞானத்தில் தடையற்றால் பொருந்தாதது ஒன்றும் இல்லை –
இவளுடைய திருத் தகப்பனார் பெரியாழ்வார் தமது திவ்ய பிரபந்தத்தில்
என்னாதான் தேவிக்கு -திருமொழியில்
இரண்டு ஆயர் மங்கையின் அவஸ்தையை அடைந்து
ஒருத்தி கிருஷ்ணாவதார வ்ருத்தாந்தத்தை பாடுவதாகவும்
ஒருத்தி ராமாவதார வ்ருத்தாந்தத்தை பாடுவதாகவும்
கொண்டு பரஸ்பரம் எதிரியாய் நின்று சொல்லி
உபய அவதார குண சேஷ்டிதங்களையும் பேசி அனுபவித்தால் போலேயும்
திரு மங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில்
மானமரும் மென்னோக்கி -இரண்டு பிராட்டிமார் தசையிலே
ஏக காலத்திலே பெற்று பேசினால் போலேயும்
இவளும் பேசுகிறாள் -என்கை
பரமபதத்தில் நித்ய முக்தர்கள் ஏக காலத்தில் பல சரீரங்களை
பர்ஹரிப்பதாக உபநிஷத்கள் கூறுமே
அது பொருந்துவது எம்பெருமான் அருளால் இறே
அப்படியே இங்கும் கொள்ளலாம் என்று பட்டர் அருளிச் செய்யும் படி –
————————————————————————————————
பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-1-
பதவுரை
ஓர் கார் ஏறு–(கண்ண பிரானென்கிற) கறுத்த காளை யொன்று
பட்டி மேய்ந்து–காவலில்லாமல் யதேச்சமாய்த் திரிந்து கொண்டும்
பல தேவற்கு–பல ராமனுக்கு
ஓர் கீழ் கன்று ஆய்–ஒப்பற்ற தம்பியாய்
இட்டீறிட்டு–ஸந்தோஷத்துக்குப் போக்கு வீடாகப் பலவகையான கோலா ஹலங்களைப் பண்ணி
விளையாடி–விளையாடிக் கொண்டு
இங்கே போத–இப்படி வர
கண்டீரே–பார்த்தீர்களோ?
இட்டம் ஆன–(தனக்கு) இஷ்டமான
பசுக்களை–பசுக்களை
இனிது–த்ருப்தியாக
மறித்து–மடக்கி மேயத்து
நீர் ஊட்டி–தண்ணீர் குடிப்பித்து
விட்டுக் கொண்டு–(இப்படியாக) அவற்றை மேய விட்டுக் கொண்டு
விளையாட–(அப் பெருமான்) விளையாட நிற்க
விருந்தாவனத்தே–ப்ருந்தாவனத்திலே
கண்டோம்–ஸேவித்தோம்.
சிறைக்கூடத்தில் கட்டுண்டு கிடப்பாரைப்போலே
பரமபதத்தில் திருவனந்தாழ்வான் மடியிலும்
ஸேனை முதலியார் பிரமபின் கீழிலும்
பெரிய திருவடி சிறகின் கீழிலும் ஒடுங்கி வர்த்தித்த பெருமான்
இந் நிலத்தே போந்து யதேச்சமாகத் திரிந்து விளையாடா நிற்கக் கண்டதுண்டோ? என்று
கேட்பவர்களின் பாசுரம் முன்னடிகள்.
தனக்கு மிகவும் ப்ரீதி பாத்ரமான பசுக்களைப் புல்லும் தண்ணீருமுள்ள விடங்களிலே கொண்டு போய்
மேய்த்துப் பரமானந்தத்துடனே விளையாடா நிற்குங்கால்
ஸ்ரீப்ருந்தாவனத்திலே காணப் பெற்றோம் என்று விடையளிப்பார் பாசுரம் பின்னடிகள்.
பட்டி மேய்கையாவது –
தடை செய்வாரில்லாதபடி கண்டவிடஙகளிலும் சுற்றுச் சுழன்று மேய்கை.
இப்படி ஸ்வச் சந்த விஹாரம் செய்வதற்காகவே யிறே எம்பெருமான் திருநாட்டை விட்டுத் திருவாய்ப்பாடியில் பிறந்தது.
திருநாட்டிலே இவனுக்குப் பட்டிமேய வொண்ணாதே.
* வானின் வரசாயிருக்க வேணுமே.
அந்தச் சிறையிருப்புக் குறைதீர இங்கே வந்து பட்டி மேய்கிறபடி.
“ஆனை கருப்பந்தோட்டத்தே புக்கால் திரியுமாப் போலே யாய்த்து இவனும் ஊரை முலையடியே திரியும்படி,
பரமபதத்தில் நூல் பிடித்துப் பரிமாறு மதுபோலன்றிக்கே
“வெண்ணெய் களவு போய்த்து, பெண்கள் களவு போய்த்து என்னும்படியாக வாய்த்து
மரியாதைகளை யழித்துக் கொண்டு திரியும் படி“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் இங்கே அநுஸந்திக்கத்தக்கன.
இவ்விடத்தில் காரேறு என்கையாலே,
பரமபதத்திலே உடம்பு வெளுத்திருக்கும் போலும்.
இஷ்டப்படி பரிமாறலாம்படியான இடத்திலிறே உடம்பு தன்னிறம் பெற்றிருக்கும்.
அது உள்ளது இங்கே யாய்த்து.
பலதேவற்கு ஓர் கீழ்க் கன்றாய் –
பட்டி மேயும் கண்ண பிரான் பலராமனுக்கோர் கீழ்க்கன்றாப் இருப்பனோ வென்னில்,
பெண்கள் திறத்திலே நிச்சலும் தீமைகள் செய்து திரியுமவன் பலராமனளவிலே பவ்யனாயிருப்பனாம்,
அபிமத விஷயங்களிலே தன்னைச் சேர விடுகைக்கு அவன் துணைவனாகையாலே
அவன் நினைவின்படியே அவனளவில் அடங்கி வர்த்திருப்பனென்க.
இட்டீறிட்டு என்பதற்கு த்ருப்தி கரமான பொருள் விளங்கவில்லை
பெயரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் உள்ளதாவது –
“இட்டீறிட்டு -இச்சேதனன் னுக்தனானால் பகவதனுபவத்தால் வந்த ஹர்ஷத்துக்குப் போக்குவிட்டு “***“
(ஏதத் ஸாம காயந்நாஸதே) என்று ஸாம கானம் பண்ணுமா போலே
அவன்றான் இங்கே வந்து அவதரித்து
இப் பரிமாற்றத்தைப் பெறுகையாலே வந்த ஹர்ஷத்துக்குப் போக்கு விட்டுப் பண்ணும் வியாபாரமிருக்கிறபடி.“
என்றிவ்வளவே உள்ளது.
இவ்விடத்திற்கு அரும்பதவுரையிட்டாரொருவர் – “இட்டீறு – செருக்கால் வந்த வியாபாரம்“ என்றெழுதிவைத்து.
“இட்டீறிடுகை – ஸப்த மிடுகை“ என்றும் எழுதியுள்ளார்
இனி, தெளிவுடையார் பக்கல் தினவடங்கக் கேட்டறிக.
விருந்தாவனம் என்பது –
கண்ணன் அவதரித்த வட மதுரைக்குச் சிறிது தூரத்தில் யமுநா நதிக்கரையிலுள்ள இடம்.
கண்ணன் வளர்ந்த இடமான கோகுலமெனப்படுகிற திருவாய்ப்பாடியிலுள்ள
நந்தகோபர் முதலான ஆயர்கள் அங்குப் பூதனை வந்து இறந்தது, சகடுமாறி வீழ்ந்தது, இரட்டை மருதமரம் முறிந்தது
முதலியவற்றை உற்பாதங்களெனக் கொண்டு அஞ்சி மஹா வனமெனப் படுகிற அவ்விடத்தை விட்டு,
கன்று காலி முதலிய எல்லாப் பொருள்களோடும் ப்ருந்தாவனத்திற் சென்று குடியேறினார்.
நெரிஞ்சிக் காடாய்க் கிடந்த அந்த ப்ருந்தாவனம் ஸ்ரீ கிருஷ்ண பகவான குளிர்ந்த திருவுள்ளத்தோடு அநுக்ரஹிதத்தனால்,
பசுக்கள் முதலானவை வ்ருத்தியடைதற்கு ஏற்ப மிகச்செழிப்புற்றது.
பின்பு அங்கு நெடு நாள் கண்ணன் கன்றுகளையும் பசுக்களையும் மேய்த்துக் கொண்டு
பல திருவிளையாடல்கள் செய்து கொண்டு வளர்ந்தருளினன்.
ப்ருந்தாவனம் என்ற வடசொல் விருந்தாவனமென விகாரப்பட்டது. நெரிஞசிக்காடென்பது பொருள்.
——————————————————————————————-
அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போலே வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே–14-2-
பதவுரை
அனுங்க–நான் வருந்தும்படியாக
என்னை பிரிவு செய்து–என்னைப் பிரிய விட்டுப் போய்
ஆயர்பாடி–திருவாய்ப் பாடியை
கவர்ந்து–ஆக்ரமித்து
உண்ணும்– அநுபவிக்கின்றவனாய்
மின் மேகம்–மின்னலும் மேகமும்
கலந்தால் போல்–ஒன்றோடொன்று சேர்ந்தாற்போலே
வனமாலை மினுங்க நின்று–(கறுத்த திருமேனியிலே மின்னல் போன்ற) வனமாலை திகழப் பெற்று
குணுங்கு நாளி–வெண்ணெய் மொச்ச நாள்ளம் நாறுமவனாய்
குட்டேற்றை–இளைய ரிஷபம் போன்றவனான
கோவர்த்தனனை–கண்ண பிரானை கண்டீரே?
கணங்களோடு–(தோழன்மாருடைய) கூட்டங்களோடு கூட
விளையாட–விளையாடா நிற்க (விருந்தாவனத்தே கண்டோம்)
நான் மிகவும் தளர்ச்சி யடையும்படி என்னைப் பிரிந்து போய்த்
திருவாய்ப்பாடி முழுதையுங் கொள்ளை கொண்டு திரியுமவனாய்,
* வெண்ணெ யளைந்த குணுங்கு நாற்றம் கமழுமவனான கோபாலகிருஷ்ணனைக் கண்டதுண்டோ? என்று
கேட்பார் பாசுரம் -முன்னடிகள்.
மின்னலும் மேகமும் சேர்ந்தாற்போலே, ஸ்யாம்மான திருமேனிக்குப் பரபாகமாய் உஜ்ஜவலமான வனமாலை
அசையை அசையத் * தன்னோராயிரம் பிள்ளைகளோடு விளையாட நிற்க
விருந்தாவனத்தே கண்டோமென்று விடையளிப்பார் பாசுரம் பின்னடிகள்.
ஆயர்பாடி கவர்ந்துண்ணும் –
ஆயர்பாடி யென்றது இடவாகு பெயராய்,
திருவாய்ப்பாடியிலுள்ள பெண்களையும் தயிர் நெய்பால் முதலிய போக்ய பதார்த்தங்களையும் குறிக்கும்
குணுங்கு நாற்றமாவது – மொச்ச நாள்ளம். இடைச் சாதியர்க்கு இளயல்வான நாற்றம்.
குட்டேறு – இளைய வ்ருஷபம்
கோவர்த்தனன் – பசுக்களை ஒன்று நூறாக வளர்க்குமவன்.
கணங்களோடு – வடசொல் – கூட்டமென்று பொருள்படும்.
இங்கே, தோழன்மார் கூட்டமெனக் கொள்க.
* தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடையிட்டு வருவானிறே கண்ணபிரான்.
மின் மேகம் – உம்மைத் தொகை
மின்னலும் மேகமும் என்றவாறு.
வனமாலை மினுங்க நின்று
கறுத்த -ச்யாமமான- திருமேனியிலே -பரபாகமாய்
உஜ்ஜ்வலமான
மின்னல் போன்ற வனமாலை திகழ -அசைய அசைய –
விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –
விளையாடா நிற்க விருந்தாவனத்தே கண்டோமே-
—————————————————————————————————
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே–14-3-
பதவுரை
மால் ஆய் பிறந்த நம்பியை–பெண்கள் பக்கலுண்டான) வ்யாமோஹமே ஒரு வடிவாய்க் கொண்டு பிறந்ததென்ன லாம்படியான பெருமானாய்
மாலே செய்யும் மணாளனை–வ்யாமோஹத்தையே செய்கிற மணவாளப் பிள்ளையாய்
ஏலா பொய்கள் உரைப்பானை–பொருந்தாத பொய்களைச் சொல்லுமவனான கண்ண பிரானை
இங்கே போதக் கண்டீரே?
மேலால்–மேலே
பரந்த–பரவின
வெயில்–வெய்யிலே
காப்பான்–(திருமேனியில் படாமல்) தடுப்பதற்காக
வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின்கீழ் வருவானை–கருடனுடைய சிறகாகிற விதானத்தின் கீழ்
எழுந்தருளா நின்ற அப் பெருமானை (விருந்தாவனத்தே கண்டோம்.)
பெண்கள் திறந்திலேயுள்ள வ்யாமோஹமே ஒரு வடிவுகொண்டது என்னலாம்படி.
வ்யாமோஹபிண்டமாயிருப்பவனும், ஸகலகுணங்களாலும் பரிபூர்ணனும், எல்லார்க்கும் ஆசைப்படத் தகுந்தவனும்,
அஸம்பத்தங்களான பொய்களைக் கூசாது கூறுமவனுமான கண்ணபிரான்
இங்கே எழுந்தருளக் கண்ட துண்டோ? என்று கேட்பார் பாசுரம் – முன்னடிகள்.
மேலே வெய்யில்படாதபடி பெரிய திருவடி தன் சிறகைவிரித்து நிழல்செய்ய, அதாகிற மேற்கட்டியின் கீழ்
விருந்தாவனத்திலே எழுந்தருளக் கண்டோமென்று விடையளிப்பார் பாசுரம் – பின்னடிகள்.
ஏலாப் பொய்களுரைப்பானை – “ஒற்று மஞ்சளும் மாளிகைச் சாந்துமாய் வந்தால் ‘இதெல்லாம் எங்கு நின்றும் பெற்றாய்?‘
என்று கேட்டால் மற்றொன்றுண்டோ? நான் புறம்பு அறிவேனோ? என்னும்.“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் அழகை நோக்குமின்.
(கஸ் த்வம் பால! நுஜ கமிஹ தே மந்மந்திராசங்கயா, யுக்தம் தத் நவநீதபாண்டவிவரே ஹஸ்தம் கிமர்த்தம் ந்யதா?
மாத கஞ்சந வத்ஸகம் ம்ருகயிதும், மகா விஷாதம் க்ஷணாதியேவம் வநவல்லவீநிகித க்ருஷணஸ் ஸ புஷ்ணாதுனந)
என்கிற ச்லோகத்தை இங்கே பரக்க உபந்யஸித்தருள்வர் அழகிய மணவாளச்சீயர்.
இதன் கருத்து – ஒருநாள் கண்ணபிரான் பிறர்மனையில் புகுந்து வெண்ணெய்த்தாழியில் கையிட்டவளவில்
அம்மனையுடையாள் சடக்கெனவந்து பிடித்துக்கொண்டு “பயலே! நீ ஆர்? என்ன, ‘நான் பலராமன் தம்பி‘ என்ன,
‘இங்கு எதுக்கு வந்தாய்‘? என்ன, “ என் அகம் என்று மயங்கிவந்துவிட்டேன்“ என்ன?
“அது சரிதான், வெண்ணெய்தாழியில் கையிட்டாயே அஃது ஏன்? என்ன ‘அம்மா! ஒரு கன்றுக்குட்டி கை கழிந்து போயிற்கு,
அதைத் தேடுவதற்காக வெண்ணெய்க்குடத்திற் கையிட்டுத் துழாவிப் பார்த்தேன்“ என்ன,
இதுகேட்ட அவ்விடைச்சி ‘தென்னைமரத்திலே புல் பிடுங்க ஏறினேன்“ என்பாரைப் போல இவன்
உத்தரமுரைக்கும் ஸாஹஸமென்னென்று சினந்து தாம்பால்கட்டி அடிக்கப்புக, கண்ணபிரான் அழத்தொடங்க,
அதுகண்ட அவ்விடைச்சி, “இச்செய்தி யசோதையின் காதில் எட்டுமாகில்
“என்றுமென்பிள்ளைக்குத் தீமைகள் செய்வார் அங்ஙனமாவர்களே“ என்று சபிப்பளே“ என்றஞ்சி,
‘கண்ணா! அழேல் அழேல்‘ என்று ஸமாதானப் படுத்திப் போக விட்டாளென்க. இப்படிப்பட்ட ஏலாப் பொயகளுரைத்தல் பல்லாயிரம்.
மேலால் என்றது -மேலே என்றபடி. கண்ணபிரான் வீதியிலே எழுந்தருளும்போது மேலே வெய்யில் படாமைக்காகப்
பெரிய திருவடி தன் சிறகைக் குடையாக விரித்து நிழ்ல் செய்வேன், அது கண்ணபிரானுக்கு மேற்கட்டி பிடித்தாற் போலிக்கும்,
அதன் கீழே அழகாக எழுந்தருள்வனென்க. கருடனுடைய தாய்க்கு விந்தா என்று பெயர்.
மாலாய்ப் பிறந்த நம்பியை –
பெண்கள் பக்கம் உண்டான வ்யாமோஹமே
ஒரு வடிவாய்க் கொண்டு பிறந்த என்னலாம் படியான
பெருமானாய்-
சகல குணங்களாலும் பரி பூர்ணனும்
மாலே செய்யும் மணாளனை –
வ்யாமோஹத்தையே செய்யும் மணவாள பிள்ளையாய் –
ஏலாப் பொய்கள் உரைப்பானை –
பொருந்தாத பொய்கைளைச் சொல்லுமவனான கண்ணபிரானை –
ஒற்று மஞ்சளும் மாளிகைச் சாந்துமாய் வந்தால்
இது எல்லாம் எங்கு நின்றும் பெற்றாய் என்று கேட்டால்
மற்று ஓன்று உண்டோ -என்றும்
நான் புறம்பு அறிவேனோ என்றும் –
கஸ் த்வம் பால பலாநுஜ
கிமிஹ தே மன்மந்திரர் சங்கயா யுக்தம் தத்
நவநீத பாண்ட விவரே ஹஸ்தம் கிமர்த்தம் நயதா
மாதா கஞ்சன வத்சகம் ம்ருகயிதும் மாகா விஷாதம்
ஷணா தித்யேவம் வனவல்லவீ நிகதித கிருஷ்ணஸ் ஸ புஷ்ணாதுந -என்ற-ச்லோஹத்தை
பரக்க உபன்யாசித்து அருளுவர் இங்கே அழகிய மணவாள சீயர்
இங்கே போதக் கண்டீரே –மேலால் பரந்த வெயில் காப்பான் –
மேலே பரவின வெய்யிலை
திரு மேனியிலே படாமல் தடுப்பதற்காக
வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவானை
பெரிய திருவடியின் சிறகாகிற விதானத்தின் கீழே
எழுந்து அருளா நின்ற அப் பெருமானை –
மேலாப்பு -மேல் கட்டி விதானம்
விருந்தாவனத்தே கண்டோமே-
—————————————————————————————
காரத்தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-4-
பதவுரை
கார்–காளமேகத்திலே
தண்–குளிர்ந்த
கமலம்–தாமரை பூத்தாற் போன்றுள்ள
கண் என்றும்–திருக் கண்கள் என்கிற
நெடு கயிறு–பெரிய பாசத்திலே
என்னை படுத்தி–என்னை அசப்படுத்தி
ஈர்த்துக் கொண்டு–(தான் போமிடமெங்கும் என்னெஞ்சையும் கூடவே) இழுத்துக் கொண்டு போய்
விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே?
போர்த்த முத்தின் குப்பாயம–போர்வையாகப் போர்த்த முத்துச் சட்டையை யுடையதாய்
புகர்–தேஜஸ்ஸை யுடையதாய்
மால்–பெரிதான
யானை கன்று போல்–யானைக் குட்டி போலே
வேர்த்து நின்று விளையாட–வேர்வையுற்று நின்று விளையாட (விருந்தாவனத்தே கண்டோம்)
மேகத்திலே அழகிய இரண்டு தாமரைப்பூக்கள் பூத்தனவோ? என்னும்படி யமைந்த திருக்கண்களாகிற வலையிலே
என்னை அகப்படுத்தித் தான் போகுமிடமெங்கும் என்னையும் (அதாவது -என் நெஞ்சையும்) இழுத்துக்கொண்டு முன்னடிகள்.
முத்துச் சட்டையிட்டாற்போலே குரு வெயர்ப்பு அரும்பிய புகரை யுடைத்தான யானைக் கன்று போலே
வேர்த்து நின்று விளையாடும்போது விருந்தாவனத்திலே கண்டோமென்பார் பாசுரம் – பின்னடிகள்.
கார் – முகம்போலே, தண் -குளிர்ந்த, என்றும் உரைக்கலாம்.
“குப்பாயமென நின்று காட்சி தருங்கோவர்த்தனமென்னுங் கொற்றக்குடையே“ என்றார் பெரியாழ்வாரும்.
“மெய்ப்பை கஞ்சுளி கஞ்சுகம் வாரணம் குப்பாய மங்கி சட்டையாகும்“ என்பது திவாகரம்.
கண்ணபிரான் யானைக்குட்டி போலவும், அவன் வேர்வை யரும்புகளை அணிந்து நிற்கும் நிலைமை
முத்துச் சட்டை யணிந்திருக்கை போலவும் உவமிக்கப்பட்டுள்ளமை காண்க.
காரத்தண் கமலக் கண் என்னும் –
காளமேகத்திலே
குளிர்ந்த தாமரை பூத்தால் போன்ற திருக்கண்கள் என்கிற
மேகத்திலே அழகிய இரண்டு தாமரைப் பூக்கள் பூத்தனவோ
என்னும் படி அமைத்த
நெடுங்கயிறு படுத்து என்னை-
பெரிய பாசத்தாலே –
என்னை அகப்படுத்தி –
திருக்கண்கள் ஆகிற வலையிலே என்னை அகப்படுத்தி
மேகம் போலே குளிர்ந்த என்றுமாம்
ஈர்த்துக் கொண்டு-
தாம் போம் இடம் எங்கும்
என் நெஞ்சையும் கூடவே இழுத்துக் கொண்டு போய்-
விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே-
போர்த்த முத்தின் குப்பாயப் –
போர்வையாகப் போர்த்த
முத்துச்சட்டையை யுடையதாய் –
குப்பாயம் என நின்று காட்சி தரும் கோவர்த்தனம் எனும் கொற்றக் குடையே –பெரியாழ்வார்
மெய்ப்பை கஞ்சுளி கஞ்சுகம் வாரணம் குப்பாய மங்கி சட்டையாகும் -எனபது திவாகரம் –
புகர் மால் யானைக் கன்றே போல்-
தேஜஸ் சை யுடைத்தான
பெரிதான யானைக் குட்டி போலே –
வேர்த்து நின்று விளையாட-
வேர்வை யுற்று நின்று விளையாட –
குரு வெயர்ப்பு அரும்பி –
வியர்வை அரும்புகள் அணிந்து நிற்கும் நிலைமை
முத்துச் சட்டை அணிந்து இருக்கும் நிலைமை போலே என்றது ஆய்த்து
விருந்தாவனத்தே கண்டோமே-
—————————————————————————————————
மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல்
ஏதுமொன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரோ
பீதக வாடை யுடை தாழப் பெருங்கார் மேகக் கன்றே போல்
வீதியார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே —14-5-
பதவுரை
மாதவன்–ஸ்ரீய பதியாய்
என் மணியினை–எனக்கு நீல ரத்னம் போலே பரம போக்யனாய்
வலையில் பிழைத்த பன்றி போல்–வலையில் நின்றும் தப்பிப் பிழைதத்தொரு பன்றி போலே (செருக்குற்று)
ஏதும் ஒன்றும்–(தன் பக்கலுள்ள) யாதொன்றையும்
கொள தாரா–பிறர் கொள்ளும்படி தாராதவனான (ஒருவர் கைக்கும் எட்டாதவனான) ஈசன் தன்னை கண்டீரே?
பீதகம் ஆடை–திருப் பீதாம்பரமாகிற
உடை–திருப் பரிவட்டமானது
தாழ–தொங்கத் தொங்க விளங்க
பெரு கார் மேகம் கன்று போல் வீதி ஆர வருவானை–பெருத்துக் கறுத்துதொரு மேகக் குட்டி போலே
வீதி ஆர வருவானை–திரு வீதி நிறைய எழுந்தருளும் பெருமானை (விருந்தாவனத்தே கண்டோம்)
திருமகள் கொழுநனாய், எனக்கு நீலமணிபோலே அனுபாவ்யனாய், வலையிலே அகப்பட்டிருந்து தப்பின பன்றி போல்
செருக்கி ஒருவர் கைக்கும் பிடிகொடாதவனான பெருமானைக் கண்டதுண்டோ? உண்டு, திருவரையில்
பீதாம்பரத்தைத் தொங்கத் தொங்க அணிந்துகொண்டு காளமேகக்குட்டியிபோல் திருவீதி நிறைய
எழுந்தருளும்போது விருந்தாவனத்திலே கண்டோம்.
“மாதவனென் மணியினை” என்று ப்ரதீகமெடுத்து -“தன்னுடைய ரஸிசுத்வம் எனக்கு முடிந்தாளலாம்படி பவ்யனாயிருக்கிறவனை” என்று
தாத்பர்ய மருளிச்செய்த பெரியவாச்சான் பிள்ளையின் திருவுள்ளத்தின் ஆழத்தை என் சொல்வோம்!.
“சுவையன் திருவின் மணாளன்“ என்ற திருவாய்மொழியை அடியொற்றி மாதவனென்பதற்கு ரஸிகனென்றே பொருள் கொண்டார்,
ஒரு சிறந்த மணியானது பெருவிலையுடைத்தாயிருப்பினும் துணியின் தலைப்பில் முடிந்தாளலாம்படி கைச் சரக்காயிருக்குமென்பது
திரு வுற்றம்பற்றி என்மணியினை என்பதற்கு “எனக்கு முடிந்தாளலாம்படி பவ்யன்“ எனப்பொருள் கொண்டார்.
இனி ஸமபிவ்யாஹார ஸித்தமான தாத்பர்ய விசேஷத்தைப் பரமபோய்கமாக அருளிச்செய்தார்.
வலையிலன் – ஐந்தாம் வேற்றுமை. என்றைக்கும் வலையில் அகப்படாத தொன்றை வருந்தி வலைப்படுத்தலாம்.
வலைப்பட்டிருந்து தப்பினதை வருந்தியும் வலைப்படுத்தமுடியாது, அப்படித் தப்பின பின்பு அதற்குள்ள செருக்கும்
வாசாமாகோசரமாயிருக்கும். அப்படிப்பட்ட செருக்கு கண்ணபிரானுக்குள்ள தென்பதைக் காட்டுதற்பொருட்டு
“வலையிற் பிழைத்த பன்றிபோல்“ எனப்பட்டதென்க ஏதும் ஒன்றும் – அணுமாத்திரமும்,
கௌ -பிறர் கொள்ளும்படி தாரா – தன்னிடத்திலிருந்து கொடாத -செருக்கு மிக மிக துர்லபத்வம் (கைக்கு எட்டாமை) மிகுகின்றதென்றபடி.
கொள்ள என்பது கொள என்று தொக்கிக் கிடக்கிறது.
வீதியார வருவானை – மேகமானது ஆகாசப் பரப்படங்கலும் தனக்கு இடமாக்கிக்கொண்டு வருமாபோலே கண்ணபிரான்
வீதிப்பரப்பையெல்லாம் தனக்கு இடமாக்கிக்கொண் எழுந்தருள்வனென்க.
“பஸ்சாத் கவாம் கோபஸுதை பரீதோ வேணுஸ்வாநாந்ந்தித விச்வ சேதா, ஸம்பூர்ய வீதீம் ஸவிலாஸமாயந்
கோபலபால குலதைவதம் ந“ என்று ப்ரதிவாதி பயங்கரம் அண்ணரப்பா அருளிச்செய்த ச்லோகம் இங்கே அநுஸந்திக்கத்தக்கது.
மாதவன் –
ஸ்ரீ யபதியாய் –
திருமகள் கொழுநனாய்
என் மணியினை –
எனக்கு நீல ரத்னம் போல் பரம போக்ய்னாய் –
அனுபாவ்யனுமாய் –
மாதவனை -என் மணியினை –
தன்னுடைய ரசிகத்வம்
எனக்கு முடிந்து ஆளலாம் படி
பவ்யனாய் இருக்கிறவனை –
சுவையன் திருவின் மணாளன் –
சமபீவ்யாஹார சித்தமான தாத்பர்ய விசேஷத்தை
பரம போக்யமாக அருளிச் செய்கிறார்
வலையில் பிழைத்த பன்றி போல் –
வலையின் நின்றும் தப்பிப் பிழைத்த தொரு
பன்றி போலே செருக்குற்று –
வலையில் நின்றும் மீண்ட ஒன்றை மீண்டும் எளிதில் வழிப்படுத்த முடியாதே
அதனால் செருக்குற்றுக் கிடக்குமே –
ஏதுமொன்றும் –
தன பக்கல் உள்ள எது ஒன்றையும்
அணு மாதரமும் -ஏதும் -கூட தாரா
கொளத்தாரா –
பிறர் கொள்ளும்படி தாராதவனாக –
ஒருவர் கைக்கும் எட்டாதவனான –
கொள்ள -சுருங்கி- கொள -ஆயிற்று
ஈசன் தன்னைக் கண்டீரோ –
பீதக வாடை யுடை –
திருப் பீதாம்பரம் ஆகிற திருப் பரிவட்டமானது –
தாழப்-
தொங்கத் தொங்க விளங்க
பெருங்கார் மேகக் கன்றே போல் –
பெருத்த கறுத்த தொரு
மேகக் குட்டி போலே
காளமேகக் குட்டி போலே
வீதியார வருவானை –
திரு வீதி நிறைய எழுந்து அருளும் பெருமானை —
மேகமானது ஆகாசப் பரப்பு அடங்கலும் தனக்கு இடமாக்கிக் கொண்டு வருமா போலே
விருந்தா வனத்தே கண்டோமே –
பஸ்சாத் கவாம் கோப ஸூதை பரீதோ வேணு ஸ்வ நாந்தித
விஸ்வ சேதா சம்பூர்ய வீதீம் சவிலா சமாயான் கோபாலபால குலதைவதம் ந-
ஸ்ரீ .உ. வே .பிரதி வாதி பயங்கரம் அண்ணரப்பா அருளிச் செய்த கிருஷ்ண கர்ணாம்ருதம் ஸ்லோகம் –
————————————————————————————————-
தருமம் அறியா குறும்பனைத் தன கைச் சார்ங்கமதுவே போல்
புருவம் வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே
வுருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே –14-6-
பதவுரை
தருமம் அறியா–இரக்கமென்பது அறியாதவனாய்
குறும்பனை–குறும்புகளையே செய்யுமவனாய்
தன் கை சார்ங்கம் அதுவே போல்–தனது திருக்கையிலுள்ள சார்ங்க வில்லைப் போன்ற
புருவ வட்டம்–திருப் புருவ வட்டங்களாலே
அழகிய–அழகு பெற்றவனாய்
பொருத்தம் இலியை–(அவ்விழகை அன்பர்கட்டு அநுபவிக்கக் கொடுத்து) பொருந்தி வாழப் பெறாதவனான பெருமானை
உருது கரிது ஆய்–திருமேனியில் கருமை பெற்றும்
முகம் செய்து ஆய்–திரு முகத்தில் செம்மை பெற்றும் இருப்பதாலே
உதயம் பருப்பதத்தின் மேல் விரியும் கதிர் போல்வானை–உதய பர்வதத்தின் மேலே விரிகின்ற
சூரியன் போல் விளங்கும் அப்பெருமானை (விருந்தாவனத்தே கண்டோமே)
தயையென்கிற தர்மத்தை ஈஷத்தும் அறியாதவனாய், குறும்பு செய்வதையே தொழிலாகக்கொண்டவனாய்,
தன்கையிலுள்ள சார்ங்க வில்போன்று வட்டமாய் அழகியதான திருப்புருவங்களை யுடையவனாய், உதந்தாரோடே
பொருந்தி வாழப் பெறாதவனான பெருமானைக கண்டதுண்டோ? உண்டு, கண்டாருடைய கண்களெல்லாம் குளிரும்படி
இருண்ட வவையுடையனாய், செந்தாமரைபோற் சிவநத திருமுகமண்டலத்தை யுடையவனாய், உதய பர்வதத்தின்மேலே
ஆதித்யன் உதிக்கும் போதுள்ள ப்ரபா விசேஷத்தை யுடையனான கண்ணபிரானை விருந்தாவனத்திலே கண்டோம்.
(தர்மம்) என்றும் வடசொல் தரும்மெனத் திரிந்தது. “ஆந்ரு சம்ஸ்யம் பரோ தரம்“ என்று பிறர் பக்கல் இரக்கமே
பரம தர்மமாகச் சொல்லுகையாலே அப்படிப்பட்ட இரக்கமில்லாதவனென்று ஊடல் தலையெடுத்துச் சொல்லுகிறபடி.
(தன்கைச் சார்ங்கமித்யாதி) கண்ணபிரானுடைய திருப்புருவங்களுக்கு வேறொன்றும் ஒப்பாகமாட்டாது,
அவன் கையிலே வில்லைப் பார்த்தால் “முகத்திலிருக்க வேண்டியது கையிலிருக்கிறதே! இஃது என்ன? என்று
வியக்கும்படி யாகவும், முகத்திலே புருவத்தைக் கண்டால் “கையிலேயன்றோ வில் இருக்க வேண்டுவது,
இஃதென்ன முசத்திலிருக்கிறதே! முகத்திலேயும்வில் இருக்கக் கடவதோ? என்று வியக்கும்படியாகவும் இருக்குமாம்.
இத்தால் – சாரங்கத்துக்கும் புருவத்துக்கும் தார்ரூப்யமல்ல, தாதாத்யம் என்று சொன்னபடி வேறொன்று ஒப்பில்லாதிருக்கும்
உறைப்பைத் தெரிவித்தபடி. வட்டம் (வருத்கம்) என்ற வடசொல் விகாரம்.
(பொருத்தமிலியை) “இவ்வழகுண்டானால் பிரயோஜனம் ஏன்? உகந்தார் பக்கல் ரஸந்தொங்கிலும் தொங்கான்“ என்ற
வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் போக்யத்தையை அநுபவிக்க.
(உருவு கரிதாய் இத்யாதி) திருவுருவம் உதய பர்வதமாகவும், முகம் ஸூர்யமண்டலமாகவும் ரூபிக்கப்பட்டது.
பர்வதமென்னும் வடசொல் பருப்பதமென்று கிடக்கிறது. “பருப்பதத்துக் கயல் பொறித்த“ என்றாரிறே பெரியாழ்வாரும்.
தருமம் அறியா
இரக்கம் எனபது அறியாதவனாய் –
தயை என்கிற தர்மத்தை
ஈஷத்தும் அறியாதவனாய் –
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம -இரக்கமே பரம தர்மம் –
குறும்பனைத்-
குறும்புகளையே செய்யுமவனாய் –
குறும்பு செய்வதையே தொழிலாகக் கொண்டவனாய்
தன கைச் சார்ங்கமதுவே போல்-
தனது திருக்கையில் உள்ள
திருச் சார்ங்கம் வில்லை போன்ற
புருவம் வட்ட மழகிய-
திருப் புருவ வட்டங்களாலே
அழகு பெற்றவனாய் –
திருப் புருவங்களுக்கு வேறு ஒன்றும் ஒப்பாக மாட்டாது –
கையில் வில்லைப் பார்த்தால் இது என்ன முகத்தில் இருக்க வேண்டியது கையில் உள்ளதே என்றும்
முகத்திலே புருவத்தைக் கண்டால்
கையில் அன்றோ வில் இருக்க வேண்டுவது
முகத்திலே வில் இருக்கக் கடவதோ -என்று வியக்கும் படி இருக்கும்
இத்தால் –
சார்ங்கத்துக்கும் புருவத்துக்கும் தாத்ரூப்யம் அல்ல-தாதாசாம்யம் -என்று சொன்னபடி
வேறு ஒன்றும் ஒப்பு இல்லா உறைப்பைத் தெரிவித்தபடி
பொருத்த மிலியைக் –
அந்த அழகை அன்பர்களுக்கு அனுபவிக்கக் கொடுத்து
பொருந்தி வாழப் பெறாதவனான-
உகந்தார் உடன் பொருந்தி வாழப் பெறாதவனான
பெருமானை –
இவ் வழகு உண்டானால் பிரயோஜனம் என்
உகந்தார் பக்கல் ரசம் தொங்கிலும் தொங்கான் –
கண்டீரே –
வுருவு கரிதாய் –
கண்டார் உடைய கண்கள் எல்லாம் குளிரும்படி இருண்ட வடிவை –
திரு மேனியிலே கருமை பெற்றும்-
முகம் செய்தாய் –
செந்தாமரை போன்று திரு முகத்திலே செம்மை பெற்றும் இருப்பதாலே –
உதய பருப் பதத்தின் மேல் விரியும் கதிரே போல்வானை –
உதய பர்வத்தின் மேலே விரிகின்ற
சூர்யன் போலே விளங்கும்
அப்பெருமானை –
திரு உருவம் உதய பர்வதமாகவும்
திருமுகம் சூர்ய மண்டலமாகவும்
ரூபிக்கப் பட்டது –
பருப்பதத்து கயல் பொறித்த -என்றார் இறே -பெரியாழ்வாரும்
விருந்தாவனத்தே கண்டோமே-
——————————————————————————————–
பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக்கரு மா முகிலைக் கண்டீரே
அருத்தி தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே–14-7-
பதவுரை
பொருத்தம் உடைய நம்பியை–பொருத்தமுடைய ஸ்வாமியாய்
புறம் போல் உள்ளும் கரியானை–உடம்பு போலே உள்ளமும் கறுத்திரா நின்றவனாய்
கருத்தை பிழைத்து நின்ற–நான் எண்ணும் எண்ணத்தைத் தப்பி நிற்பவனாய்
அக் கரு மா முகிலே–கறுத்துப் பெருத்த முகில் போன்றவனான அக் கண்ணபிரானை கண்டீரே?
அருத்தி–விரும்பப் பெறுகின்ற
தாரா கணங்களால்–நக்ஷத்ர ஸமூஹங்களாலே
ஆர பெருகு–மிகவும் நிறைந்திருந்துள்ள
வானம் போல்–ஆகாசம் போல்
விருத்தம் பெரிது ஆய்–பெருங்கூட்டமாய்
வருவானை–எழுந்தருளா நின்ற அப் பெருமானை
கீழ்ப்பாட்டில் பொருத்தமிலியைக் கண்டீரே என்றுவைத்து இப்பாட்டில் “பொருத்தமுடைய நம்பியை“ என்றது ஏன்? என்னில்,
பத்துடையடியவர்க்கு எளியவனான பெருமானையோ நாம் பொருத்தமிலி என்பது, அப்படிச் சொல்வது தகுதியல்ல.
அவன பொருத்தமுடையவனேயாவன் என்று திருவுள்ளம் பற்றிச் சொல்லுகிறாள். என்பர் சிலர்.
அங்ஙன்ன்றியே “இந்தப்பிள்ளை பரமஸாது“ என்றால்அஃது எதிர்மறை இலக்கணையாய் துஷ்டன் என்று காட்டுமா போலே
இங்கும் பொருத்தமுடைய நம்பியென்றது பொருத்தமில்லாமையே சொல்லிற்றாகக் கொள்க
இதுவே பெரியவாச்சான் பிள்ளை திருவுள்ளம்பற்றின கருத்தாம்.
பொருத்தமிலியென்பது நாட்டில் பொருந்தாரளவில் நிற்கு மன்றன்றோ“ என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி –
பொருத்தமில்லாதவர்கள் உலகிலும் பலபேருண்டு, அவர்களைப் பொருத்தமிலிகள் என்று சொல்லுகிறாப் போலவே
எம்பெருமானையும் பொருத்தமிலி என்று சொல்லிவிட்டால் நாட்டாருடைய பொருத்தமின்மைக்கும் எம்பெருமானுடைய
பொருத்தமின்மைக்கும் வாசி ஏற்படாமல் போகுமென்று அதற்காக விலக்ஷண ப்ரக்ரியையிலே சொல்லுகிறபடி. அதாவது விபரீத லக்ஷணை.
புறம் போலுள்ளும் கரியான் – திருமேனி கறுத்திருந்தாலும் திருவுள்ளம் சுத்தமாயிருக்கலாமே,
அதுவும் அசுத்தமாகவே யிருக்கிற தென்று நர்மோக்தி
அதவா – இதுவும் விபரீதலக்ஷணை, உள்ளும் புறமும் ஒத்திருப்பவன்,
மநஸ்யந்யத் வசஸ்யந்யத் கர்மண்யந்யத்துராத்மநாம் என்கிற கோடியில் சேர்ந்தவனல்லன்,
“மநஸ்யேகம் வசஸ்யேகம் சர்மண்யேகம் மஹாத்மநாம்“ என்கிற கோடியிலு சேர்ந்தவன் என்று மேலெழ் சொல்லுகிறபடியாய்,
விபரீத லக்ஷணையால், உள்ளேயொன்றும் வெளியே ஒன்றுமாயிருப்பவனென்று காட்டுகிறது.
கருத்தைப் பிழைத்து நின்ற – ஸம்ஸ்லேஷித்திருக்குங் காலத்திலே “மாதே! உன்னை நான் விட்டுப்பிரியென், பிரிந்தால்தரியேன்“ என்று
அவன் சொல்ல அதைமெய்தானென்று நம்பியிருக்கிற நம்பிக்கையைப் போக்கடித்தவன் என்றவாறு.
இப்படிச் சொல்லுகிறவன் ஒருகாலும் நம்மைவிட்டுப் பிரியமாட்டான் என்று கொண்ட கருத்தைத் தப்பி, பிரிந்திருப்பவனென்றபடி.
(அருந்த்தித்தாராகணங்களால் இத்யாதி) அருத்தி என்று விருப்பத்திற்கும் விருபபப்படும் பொருளுக்கும் பெயர்.
ரமணீயங்களான தாராகணங்களால் என்றப்படி. இங்ஙனே தமிழர்கள் நிர்வஹிக்கும்படி. பூருவர்களின் வியாக்கியானரீதியோவென்னில்,
வடசொல் அருத்தியெனத்திரிந்து, ப்ராத்திக்கப்படுகின்ற“ என்று பொரு பெற்றுக்கிடக்கிறதாய்,
சேதநர் பிரயோஜநார்த்தமாக நவக்ரஹங்களையும் உபாஸனை பண்ணுகையாலே அதைப் பற்றி அருத்தி என்ற அடைமொழி கொடுக்கப்பட்டதாக.
விருத்தம் – (ப்ருந்தம்) என்னும் வடசொல் விருத்தமெனத்திரிந்து கிடக்கிறது.
பொருத்த முடைய நம்பியைப் –
பொருத்தம் உடைய ஸ்வாமியாய் –
எதிர்மறை இலக்கணையாய் அருளுகிறார் –
பத்துடை அடியவர்க்கு எளியன் பிறர்க்கு அறிய வித்தகன்
அவனா பொருத்தமிலி எனபது -என்று அருள வில்லை
பொருத்தமிலி எனபது நாட்டில் பொருந்தார் அளவில் நிற்கும் அன்று அன்றோ –
புறம் போல் உள்ளும் கரியானை –
உடம்பு போலே உள்ளமும்
கறுத்து இரா நின்றுள்ள –
உள்ளமும் அசுத்தம் என்றது நர்மோக்தி
உள்ளும் ஒருவிதமாகவும் புறமும் வேறு விதமாகவும் இருப்பவன் அல்லன் –
மனச்யேகம் வசச்யேகம் கர்மண் ஏகம் மகாத்மா நாம் -கோடியிலே சேர்ந்தவன் விபரீத லஷணை-
கருத்தைப் பிழைத்து நின்ற-
நான் என்னும் எண்ணத்தை தப்பி நிற்பவனாய் –
சம்ச்லேஷித்து இருக்கும் காலத்தில்
மாதே நான் உன்னை விட்டுப் பிரியேன் -பிரியில் தரியேன் -என்று அவன் சொல்ல
அத்தை நம்பி இருக்கிற நம்பிக்கைப் போக்கடித்தவன் –
பிரிந்து இருக்கிறவன் -என்றபடி
அக்கரு மா முகிலைக் –
கறுத்து பெருத்து
முகில் போன்றவனான
அக் கண்ணபிரானை –
கண்டீரே –
அருத்தி தாரா கணங்களால் –
விரும்பப் பெறுகின்ற
நஷாத்ர சமூஹங்களாலே –
அருத்தி -விருப்பத்துக்கும்
விருப்ப படும் பொருளுக்கும் பெயர்
ரமணீயங்களான தாரா கணங்கள்
பிரார்த்திக்கப் படுகின்ற -என்றுமாம்
சேதனர் பிரயோஜனார்த்தமாக நவகிரஹங்களை உபாசனை
பண்ணுவதால் அருத்தி -அடை மொழி
ஆரப் பெருகு வானம் போல் –
மிகவும் நிறைந்து இருந்துள்ள
ஆகாசம் போலே
விருத்தம் பெரிதாய் வருவானை –
பெரும் கூட்டமாய்
எழுந்து அருளா நின்ற அப்பெருமானை –
விருந்தாவனத்தே கண்டோமே-
————————————————————————————————
வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதவாடை யுடையானை
அளி நன்குடை திருமாலை ஆழியானைக் கண்டீரே
களி வண்டும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே ––14-8-
பதவுரை
வெளிய சங்கு ஒன்று உடையானை–வெளுத்த ஸ்ரீபாஞசயன மொன்றை வுடையனாய்
பீதகம் ஆடை உடையானை–பீதாம்பரத்தை உடையாகக் கொண்டவனாய்
நன்கு அளி உடைய–நன்றாகக் கிருபை யுடையவனாய்
ஆழியானை–திருவாழியாழ்வானை யுடையவனாய்
திருமாலை–ஸ்ரீய, பதியான கண்ணனை
களி வண்டு–(மதுபானத்தாலே) களித்துள்ள வண்டுகளானவை.
எங்கும்–எப் புறத்திலும்
கலந்தால்–பரம்பினாற்போலே
கமழ் பூங்குழல்கள்–பரிமளிக்கின்ற அழகிய திருக் குழல்களானவை
தடதோள்மேல்-பெரிய திருத் தோள்களின் மேலே
மிளிர நின்று விளையாட–(தாழ்ந்து) விளங்க நின்று விளையாட
கடல்போலே கறுத்த திருமேனிக்குப் பரபாகமான வெண்மையையுடைய விலக்ஷணமான ஸ்ரீபாஞ்சந்யத்தை கையிலேயுடையனும்,
பீதாம்பரதரனும், பிராட்டியோட்டைச் சேர்த்யடியாக கருணையுடையனும் திருவாழியாழ்வானை யுடையனுமான
பெருமானைக கண்டதுண்டோ? மதுபானத்தாலே மதித்தவண்டுகள் பரம்பினாற்போல, பரிமளப்ரசுரமாய் அழகான
திருக்குழல்களானவை திருத்தோள்களிலே நிறலைய விளையாடா நிற்க விருந்தாவத்திலே கண்டோம்.
வெளிய – வெள்ளிப் என்பதன் தொகுத்தல். இப்பாட்டுக்கு அழகிய மணவாளச்சீயர் மூலத்தின் மேல் பொருள் அருளிச் செய்யும் போது
‘வெளியசங்கொன்றுடையானை, என்றதன் பக்கத்திலே ஆழியானை என்பதைக்கொண்டு சேர்த்து
(பாடக்ரமாத் அர்த்தக்ரமோ பலீயாந்) என்கிற ந்யாயத்தாலே “வெளிசங்கொன்றுடையானை ஆழியானை” என்று
அந்வயித்துப் பொருள் கொள்ளுதல் நான்று என்றருளிச்செய்து, மேலே வியாக்கியானம் ஸேவிக்குமிடத்து.
“ஆழியானை – ஸ்ரீபாச ஜந்யத்தோடே சொல்லில் கண்ணெச்சிலாமென்று பிரித்து அநுபவிக்கிறாள்“ என்ற ஸ்ரீஸூக்தியைத்
திருச்செவிசாத்தி. “ஐயோ! இந்த ஸ்வாரஸ்யத்தை அறியப்பெற்றிலேனே!
இப்படி அர்த்தமருளிச்செய்ய ஆர்க்குத் தெரியும் என்று நெடும்போது கண்ணுங் கண்ணீருமாயிருந்தருளினார்.
எம்பெருமானுடைய திருக்குழல்கள் “மைவண்ணநறுங்கிகுஞ்சி குழல் பின்தாழ” என்றபடி தோள்களில் அலையா நிற்பதைக்
களி வண்டுகள் பரம்பினதாக உத்ப்ரேக்ஷிக்கிறபடி. “செங்கமலப்பூவில் தேனுண்ணும் வண்டேபோல் திருமேனியாகையாலே வண்டுகள் மொய்க்குமிறே.
வெளிய சங்கு ஓன்று உடையானைப் –
வெளுத்த ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை யுடையனாய் –
கடல் போலே கறுத்த திரு மேனிக்கி பரபாகமாய்
பீதவாடை யுடையானை –
பீதாம்பரத்தை யுடையனாய்க் கொண்டவனாய்
அளி நன்குடை –
நன்றாக கிருபை யுடையானாய் –
திருமாலை ஆழியானைக் –
திரு வாழி ஆழ்வானை உடையனாய்
ஸ்ரீ யபதியான
கண்ணனை –
பாடக் க்ரமாத் அர்த்த க்ரமோ பலீயான்-என்கிற நியாயத்தில்
வெளிய சங்கு ஓன்று உடையானை ஆழியானை -என்று அந்வயித்து-
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடே சொல்லில் கண் எச்சிலாம் என்று பிரித்து அனுபவிக்கிறார்
ஐயோ இந்த ஸ்வா ரச்யத்தை அறியப் பெற்றிலேனே
இப்படி அருளிச் செய்ய ஆர்க்குத் தெரியும்
என்று நெடும் போது கண்ணும் கண்ணநீருமாய்
இருந்து அருளினார் அழகிய மணவாள சீயர்-
கண்டீரே –
களி வண்டு எங்கும் –
மது பானத்தாலே களித்துள்ள
வண்டுகளானவை –
எப்புறத்திலும்
கலந்தால் போல்-
பரம்பினால் போலே –
கமழ் பூங்குழல்கள் -தடந்தோள் மேல்
பரிமளிக்கின்ற அழகிய
திருக் குழல்களானவை-பெரிய
திருத் தோள்களின் மேலே
மை வண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழ-என்றபடி
தோள்களில் அலையா நிற்பதை
களி வண்டுகள் பரம்பினதாக உத்ப்ரேஷிக்கிற படி –
செங்கமலப் பூவில் தேனுண்ணும் வண்டே போல் பங்கிகள் -பெரியாழ்வார்
சர்வ கந்த -திரு மேனி யாகையாலே வண்டுகள் மொய்க்கும் இ றே
மிளிர நின்று விளையாட –
தாழ்ந்து விளங்க நின்று
விளையாட –
மிளிர்த்தல் -விளங்குதல் –
விருந்தாவனத்தே கண்டோமே –
———————————————————————————————-
நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே —14-9-
பதவுரை
நாட்டை படை என்று–உலகங்களை ஸ்ருஷ்டி என்று
அயன் முதலா–பிரமன் முதலான பிரஜாபதிகளை
தந்த–உண்டாக்கின
நளிர் மா மலர் உந்தி வீட்டை பண்ணி–குளிர்ந்த பெரிய மலரை யுடைத்தான திருநாபி யாகிற வீட்டை யுண்டாக்கி
விளையாடும்–இப்படியாக லீலா ரஸம் அநுபவிக்கிற
விமலன் தன்னை–பரம பாவனனான பெருமானை
தேனுகனும்–தேநுகாஸுரனும்
களிறும்–குவலயாபீட யானையும்
புரளும்–பகாஸுரனும்
உடன் மடிய–உடனே மாளும்படியாக
காட்டை நாடி வேட்டை ஆடி வருவானை–காட்டிற் சென்று வேட்டையாடி வரும் அப் பெருமானை.
சிறிது இடத்தைத்தானே கைதொட்டு ஸ்ருஷ்டித்து மேலுள்ளதையெல்லாம் ஸ்ருஷ்டிங்களென்று சதுர்முன் முதலான
ப்ரஜாபதிகளையுண்டாக்கினவனும், அந்த நான் முகனுக்கிருப்பிமாகத் திருநாபிக் கமலத்தை புண்டாக்கித் தந்து
இதுவே லீலையாக இருப்பணுமான பரமபுருஷனைக் கண்டதுண்டோ? கம்ஸன் ஏவின அஸுராவேம் பெற்ற
ஐந்துக்களை யெல்லாம் முடித்துக்கொண்டு வேட்டையாடி வந்த அப்பெருமானை விருந்தாவனத்திலே கண்டோம்
“அயன் முதலானவர்களை“ என்றதநிணங்க “நாட்டைப்படைமின்“ என்று பன்மையாகவன்றோ இருக்கவேணும்,
படை என்று ஒருமையாக இருத்தல் கூடுமோ? எனின், அயன் முதலானவர்களைத் தனித்தனியே விளித்து
“நீநாட்டைப்படை“ என்று விதிதத்தாகக்கொள்க. “அயன் முதலாத்தந்த“ என்பதைவிட “அயன்றன்னைத்தந்த“ என்று
படமாகில் அழகாயிருக்குமென்று நம்பிள்ளை அருளிச்செய்வாராம்.
அயன்-பிரானை, முதலா-முதன்மையாக தந்த-, என்றும் பொருள் கொள்ள இடமுகடு.
அயன் -அஜ என்ற வடசொல்விகாரம். அ-எம்பெருமான் பக்கலில், ஜா-தோன்றினவன்.
விமலன் -லீலாரஸந்தவிர வேறொருபலனை விரும்பாமையாகிற தூய்மையுடையவன் என்கை.
தேனுகனை மடித்தவரலாறு -கண்ணபிரான் பலராமனோடும் ஆயர் சிறுவர்களோடும் மாடு மேய்த்துக் கொண்டு பழங்க
அழகாக மிகுதியாய்ப் பழுத்து வாஸனை வீசிக்கொண்டிருந்த ஒரு பங்காட்டையடைந்து அப்பனம்பழங்களை விரும்பி
உதிர்த்துக்கொண்டு வருகையில் அவ்வாத்துக்குத் தலைவனும் கம்ஸன் பரிவாரத்தில் ஒருவனுமாகிய கழுதை வடிவங்கொண்ட
தேனுகாஸுரன் கோபகொண்டு ஓடிவந்து எதிர்த்துப் போர்செய்ய உடனே கண்ணன் அதிலாக்யமாய்ப்
பின்னங்காலிரண்டையும் பற்றி அவ்வாரக்கழுதையைச் சுழற்றி உயிரிழக்கும்படி பனைமரத்தின் மேலெறிந்து அழித்தனன் என்பதாம்.
தேனுகனைத் தொலைத்ததும் களிற்றைக் கொன்றதும் புள்ளின் வாய் கீண்டதும் வெவ்வேறு ஸமயங்களிலாகிலும்
கண்ணபிரானுடைய ஏகப்ரயோகத்தாலேயே இவை மூன்றும் தொலைந்தன என்று ஆண்டாள் கருதுகின்றனள் போலும்-உடன்மடிய-என்கையாலே.
நாட்டைப் படை என்று
உலகங்களை சிருஷ்டி என்று –
சிறிது இடத்தை தானே கை தொட்டு சிருஷ்டித்து
மேல் உள்ளதை எல்லாம் நீங்களே ஸ்ருஷ்டியுங்கோள் என்று
அயன் முதலா தந்த –
பிரமன் முதலான
பிரஜாபதிகளை ‘
உண்டாக்கின –
அயன் முதலா -ஏற்ப நாட்டை படை -பன்மையாக இருக்க வேண்டாமோ என்னில்
தனித் தனியாக விளித்து நீ படை -என்று நியமித்து அருளினான் –
அயன் தன்னைத் தந்த -பாடம் அழகாய் இருக்கும் என்று நம்பிள்ளை அருளிச் செய்வாராம்
அயன் முதலா -ப்ரஹ்மன் முதன்மையாக என்றும் கொள்ளலாம்
அயன் -அஜ -அ-பெருமாள் இடம் இருந்து ஜ -ஜனித்தவன்
நளிர் மா மலருந்தி வீட்டைப் பண்ணி –
குளிர்ந்த பெரிய மலரை யுடைத்தான
திரு நாபி யாகிற வீட்டை
யுண்டாக்கி –
விளையாடும் –
இப்படியாக லீலா ரசம்
அனுபவிக்கிற –
விமலன் தன்னைக் –
பரம பாவனனான பெருமானைக்
விமலன் -லீலா ரசம் தவிர வேறு ஒன்றை விரும்பாத பரிசுத்தம்
கண்டீரே –
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
தேனுகாசுரனும் -கழுதை வடிவம் கொண்ட அசுரனை –
குவலயா பீட யானையும்
பகாசுரனும்
உடனே மாளும் படி
கட்டில் சென்று
வேட்டை யாடி வருவானை-
வேட்டை யாடி வரும் அப் பெருமானை –
ஏக காலத்திலேயே போலே தோன்றும் கண்ணபிரான் பலம் அனுசந்திக்க
விருந்தாவனத்தே கண்டோமே –
——————————————————————————————-
பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-
பதவுரை
பரு தாள் களிற்றுக்கு–பருத்த கால்களை யுடைய கஜேந்திராழ்வானுக்கு
அருள் செய்த–க்ருபை பண்ணின
பரமன் தன்னை–திருமாலை
பாரின் மேல்–இந் நிலத்திலே
விருந்தாவனத்தே கண்டமை–ஸ்ரீ ப்ருந்தாவனத்திலே ஸேவிக்கப் பெற்றமையைப் பற்றி
விட்டு சித்தன் கோதை சொல்–பெரியாழ்வார் திருமகளான ஆண்டாளருளிச் செய்த இப் பாசுரங்களை
மருந்து ஆம் என்று–(பிறவி நோய்க்கு) மருந்தாகக் கொண்டு
தம் மனத்தே–தங்கள் சிந்தையிலே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள்–அநுஸந்தித்துக் கொண்டு வாழுமவர்கள்
பெரு தாள் உடைய பிரான் அடி கீழ்–பெருமை பொருந்திய திருவடிகளை யுடைய எம்பெருமானுடைய திருவடிகளின் கீழே
என்றும்–எந்நாளும்
பிரியாது இருப்பார்–பிரியாமலிருந்து நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்கள்
நிகமத்தில் –
இத் திரு மொழி கற்றார்க்கு பலன் சொல்லி
தலைக் கட்டி அருளுகிறார் –
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் முதலையின் வாயில் அகப்பட்டு நெடுநாள் துடித்து
பிறகு எம்பெருமானுடைய சேவையைப் பெற்று
துயர் தீர்ந்து
பரமானந்தத்தை அடைந்தது போலே
ஆண்டாளும் நெடுநாள் பட்ட விஸ்லேஷ வ்யசனம் தீர்ந்து
மகிழப் பெற்றாள் –
பருந்தாள் களிற்றுக்கு
பருத்த கால்களை யுடைய
கஜேந்திர ஆழ்வானுக்கு
அருள் செய்த பரமன் தன்னைப் –
கிருபை பண்ணி அருளிய
திருமாலை –
பாரின் மேல் –
இந்நிலத்திலே –
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவம் தான் என்-என்று
பரமானந்தத்தை வெறுத்து இருந்த இவளுக்கு ‘இந்நிலத்திலேயே பேறு கைபுகுந்தது என்கை –
விருந்தா வனத்தே கண்டமை –
ஸ்ரீ பிருந்தா வனத்திலே சேவிக்கப் பெற்றமை யைப் பற்றி –
விட்டு சித்தன் கோதை சொல் –
பெரியாழ்வார் திரு மகளான ஆண்டாள்
அருளிச் செய்த இப்பாசுரங்களை
மருந்தாம் என்று –
பிறவி நோய்க்கு
மருந்தாகக் கொண்டு –
சம்சார பேஷஜமாககொண்டு –
சம்சாரிகளுக்கு மருந்து –
சம்சாரம் ஆகிய நோய்க்கு மருந்து –
ஆர் மருந்து இனி யாகுவர் -என்றும்
மருந்தும் பொருளும் அமுதமும் தானே என்று சொல்லுகிறபடி
எம்பெருமான் தானே அன்றோ மருந்து என்னில்
அந்த மருந்துக்கு கார்யகரத்வ சக்தி அதிசயத்தை விளைக்க வல்ல மருந்து இதுவே
தம் மனத்தே-
தங்கள் சிந்தையிலே –
வைத்துக் கொண்டு வாழ்வார்கள் –
அனுசந்தித்துக் கொண்டு
வாழுமவர்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் –
பெருமை பொருந்திய திருவடிகளை
யுடைய எம்பெருமான் யுடைய
திருவடிகளின் கீழே –
பிரியாது என்றும் இருப்பரே –
எந்நாளும்
பிரியாமல் இருந்து
நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்
எஞ்ஞான்றும் எம்பெருமான் அடிக்கீழ் இணை பிரியாது இருப்பார்கள் –
என்று சொல்லி தலைக் கட்டி அருளுகிறார் –
———————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே -அண்ணங்கராச்சார்யர் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply