உபதேச ரத்னமாலை –பாசுரம் -62/63/64/65- ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் -வேதமே பரம சாஸ்திரம் -கேசவன் பரம தத்வம்
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜா ஜகத் குரு –நாத்ர சம்சயம் -கூரத்தாழ்வான் -சம்ஸ்க்ருதம் விசேஷத்தில்
இங்கு மா முனிகள் தமிழில் பொதுவாக மா நிலத்தீர் உம் குருக்கள் தம் பதத்தே வையும் அன்பு

ஆக
கீழே இரண்டு பாட்டிலும்-
ஆச்சார்ய சம்பந்தத்தாலும்
அசம்பந்தத்தாலும்
பலிக்குமதான லாப அலாபங்களை தர்சிப்பித்து அருளி
அர்த்த ஸ்திதி இதுவான பின்பு
உங்களுக்கு உஜ்ஜீவன இச்சை யுண்டாகில்
கீழ்ச் சொன்ன படியே த்வய (ஸ்ரீ வசன பூஷண ஸாஸ்த்ர தாத்பர்ய ) நிஷ்டராய்
ஸ்த நந்த்ய பிரஜைக்கு வியாதி யுண்டானால்
அது தன் குறைவாக நினைத்து
தான் ஔஷத சேவை பண்ணி
பிரஜையினுடைய நோயைப் போக்கும் வத்சலையான தாயைப் போலே
தன்னை அழிய மாறி ரஷிக்கும் சதாசார்யா பரதந்த்ரரான
தம்தாம் ஸ்ரீ ஆச்சார்யர்கள் திருவடிகளில் நிரதிசய பிரேமத்தை பண்ணுங்கோள்
முக்த போக்யனானவன் யுடைய தேசம் உங்களுக்கு அதி ஸூலபமாகக் கிட்டும் – என்கிறார் –
(அன்னை குடிநீர் அருந்தி அழும் குழவி -இதே அர்த்தம் ஆர்த்தி பிரபந்த பாசுரம் )

உய்ய நினைவு யுண்டாகில் உம் குருக்கள் தம் பதத்தே
வையும் அன்பு தன்னை இந்த மா நிலத்தீர் -மெய் யுரைக்கேன்
பையரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம்
கையிலங்கு நெல்லிக் கனி —62-

மாயன் பரம பதம்-அவனே பரமபதம் -அதுவாகவே –
பையரவில்-அறி துயில் அமர்ந்த –
கையிலங்கு நெல்லிக் கனி -ப்ரத்யக்ஷமாக அனுபவிக்கலாம் – மாயன் பரமபதம் உங்களுக்காகும்
பொன்னடியாம் செங்கமல போதுகளை -உன்னி சிரத்தாலே தீண்டில் -யதீந்த்ர பிரவணர் திருவடி பலத்தாலே பெறுவோம்

உஜ்ஜீவநாய யதி
நிஷ்டீயதாம்
நிஜ குரோவ் சரணார விந்த
சத்யம் ப்ரவீணீ
மனுஷா
பணி சாயிநா
தத் திவ்யம் பரம்
கர தல ஆமல தலகம்
பவேத் வஹ

உய்ய நினைவு யுண்டாகில் –
ஸ்வ உஜ்ஜீவ நேச்சா யாதிதே-விஷ்ணு தத்வம் -என்கிறபடியே
(ஸ்வ சத்தாயாம் ஸ்ப்ருஹா யதி -ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வாபஞ்ச சதா ஸ்மர
விருப்பம் இருந்தாலே போதும் )
உஜ்ஜீவிக்க வேணும் என்கிற இச்சா மாத்ரம் யுண்டாகில்
மனஸ் சஹகாரமான சம்பத்து சம்பன்னம் ஆய்த்தாகில்
இனி அவர்களுக்கும் அருமை பெருமை என்கிற திருஷ்ட தாரித்ரிய பிரசங்கம் இல்லை-( இம்மையில் வறுமை இல்லை )
இவர்களைப் பார்த்தால் இது தான் பரம பக்தியோபாதி அரிதாய் இறே இருப்பது-
(விலக்காமை வருவது பரம பதம் பெறுவது போல் அருமை அன்றோ )

இப்படி பெறுதற்கு அரிதான இச்சையை யுடைய நாங்கள்
செய்ய வேண்டுவது என் என்ன –

உம் குருக்கள் தம் பதத்தே வையும் -அன்பு தன்னை
உம் தம் ஆச்சார்யர் திருவடிகளில்
உன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும் கூர்ந்து என்கிறபடி அதி ஸ்நேஹம் வைக்கும் படி பாருங்கோள்

உம் குருக்கள் தம் பதத்தே
சார்ந்தது என் சிந்தை -உன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும் கூர்ந்து -ராமானுஜ -71-
மனம் மொழி செய்கை மூன்றுமே -மிகவும் கூர்ந்து -அமுதனார்
வையும் அன்பு தன்னை -மிகவும் விட்டு –அன்பு லேசமும் வைத்து
அதி ஸ்நேஹம் –வையும் அன்பு தன்னை ( இவ்வளவு இறங்கி வந்து நம்மைக் கைக்கொள்ளுகிறார் )
நிதியை அடியிலே இட்டு வைக்குமா போலே -அன்பையையும் அடியிலே வைத்து
பாத மூலம் பற்றி இருப்பதே பிராப்தம் (வேர் பாத மூலம் )

உம் குருக்கள்
என் குருக்கள் அடியிலோ அன்பை வைக்கச் சொல்கிறது
உங்களுடைய அஞ்ஞானத்தை போக்கி -ஞான தீபம்–ப்ரதோ குரு
விஞ்ஞானம் ப்ரதானாதிகளை கொடுக்கும் -மஹா உதாரர் -மஹா உபகாரகர்
ஆதி சப்தம் -அறிவு கொடுத்து -வைராக்யம் விளைவித்து -தட்டித் திருத்தி -ஆனந்தம் வளர்த்து -ரக்ஷித்து -உசாத்துணையாக இருந்து
விமல சரம விக்ரஹ ஏக தேசமாய் -திருவடி –
கு அந்தகாரம் -ரு அத்தைப்போக்கி -மங்க ஒட்டு உன் மா மாயை என்று ஆழ்வார் காலைக் கட்டி
விட வைக்கும் படி அன்றோ அவனது வியாமோஹம் -இருந்தான் கண்டு கொண்டே –
பாவானத்வம் போக்யத்வம் இரண்டும் உள்ள
திருவடிகளில் பரிவராக -பதத்தே -என்பதன் அர்த்தம்
திருப்பாதம் கமலபாதம் போல்

குருகூர் நம்பி முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –
அன்பன் தன்னை அடைந்தவர்க்கு எல்லாம் அன்பன் அடிக்கு அன்பர் –
அன்புக்கு அடியில் அன்பு வையும் –
அன்பு அவர் கண்ணே வைத்து -( திருக்குறும் தாண்டகம் -18-) என்கிறபடி – பகவத் பஜனம் அரிது
‘இந்த எளிய வழியைப் பற்றுங்கோள்
(அடி -மூலம் -ஆச்சார்யர் திருவடிகளே மூலம் )

(அலகை முலை சுவைத்தாற்கு அன்பர் அடிக்கு அன்பர்
திலதம் எனத் திரிவார் தம்மை -உலகர் பழி
தூற்றில் துதியாகும் தூற்றாதவர் இவரைப்
போற்றிலது புன்மையே யாம்-ஞான சாரம் –39-)

(அல்லி மலர்ப்பாவைக்கு அன்பர் அடிக்கு அன்பர்
சொல்லும் அவிடு சுருதியாம் -நல்ல
படியாம் மனு நூற்கு அவர் சரிதை பார்வை
செடியார் வினைத் தொகைக்குத் தீ-ஞான சாரம் –40-)

(இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–திருக்குறும் தாண்டகம் -18-)

இந்த மா நிலத்தீர்
உங்கள் ஆச்சார்யர் உங்களுக்காக இங்கு வந்து அவதரித்து எதிர் சூழல் புக்கு
இந்த மஹா பிருத்வியிலே ஜனித்து -அதில் வசிக்கப் பெற்ற பாக்யம் உடையவர்களே
இருந்த ஊரில் இருக்க எத்தவம் செய்தீர்கள் -4-4-7–என்றும்
பாத தூளி படிதலால் பாக்யம் செய்ததே-4-4-6- -என்றும்
ஊரும் நாடும் உலகமும் தங்களை போலே ஆக்குமவர்கள் அன்றோ

(பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால்
ஏதம் ஒன்றும் இலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின்று எத்துவாரகள் உழக்கிய
பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 4-4 6-)

(குருந்தம் ஓன்று ஒசித்தானோடும் சென்று கூடி யாடி விழா செய்து
திருந்து நான் மறையோர் இராப் பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்
கரும் தட முகில் வண்ணனை கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள்
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 4-4-7-)

மானிடர்க்காய் -அவன் தாளிணை -என்கிறபடியே
உங்களை ரஷிக்கவே சர ரூபியாய் நடமாடும்
சசார வஸுதா தல
சஞ்சரிக்கும் -கோயில் ஆழ்வார் ஸ்தாவர விமானம் -இது ஜங்கம விமானம்
மாதவன் என்னும் கோயில் அமைத்து
இது எல்லாம் மத்தர்த்தம் என்று விசாரித்து
அச் சரண யுகங்களில் சங்கத்தைப் பண்ணுங்கோள் அன்பு வையுங்கோள்
எங்கும் திரிந்து அரங்கன் அம்மானுக்கே சங்கம் உண்டாக்க அன்றோ தீர்த்தகரராய் திரிந்து உள்ளார்கள் –

(தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே குருவாகித் தன்னருளால் -மானிடர்க்காய்
இந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
உன்னுவதே சால வுறும் -ஞான சாரம்–38-)

(ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே-பெருமாள் திருமொழி –2-6-)

இந்த மா நிலத்தீர்-
அன்பு வையுங்கோள் –
எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே காதல் செய் தொண்டர் -என்னும்படி
சங்கத்தை யுண்டாக்கும் படி இறே அவர்கள் இருப்பது –

அன்றிக்கே
மா நிலத்தீர் –
என்று இருந்ததே குடியாக எல்லார்க்கும் உபதேசத்தால்
எதி கச்சின் முமுஷூஸ்யாத் -என்று ஓர் ஒருத்தர் தான் யுண்டாகாதோ
என்று சர்வாதிகாரமாக சம்போதித்து அருளுகிறார் ஆகவுமாம்-

(முதலிகள் அனைவருக்கும் விபீஷணன் கை கூப்பியது போல் இவர் அனைவருக்கும் உபதேசம் –
ஆசை வைப்பார் யாவராவது கிடைப்பாரா என்னும் நப்பாசையால் )

நீர் இப்படி உபதேசியா நின்றீர்-எங்களுக்கு அல்பமான ஆனுகூல்யத்துக்கு
அதிகமான பலம் சித்திக்கப் புகுகிறதோ -என்ன

மெய்யுரைக்கேன்-
இவ்வர்த்தத்தில் சம்சயம் இல்லை -என்னும் இடத்துக்கு நான் சத்ய பூர்வகமாகச் சொல்லுகிறேன்
சர்வ பூர்வமிதம் வச என்னுமா போலே –
இப்படி ஆப்தனான நான் சொல்லுகையாலே பல சித்தியில் கண் அழிவு இல்லை –

பொய்யிலாத ஸ்ரீ மணவாள மா முனியான இவர் இப்படி மெய்யுரைக்கேன் -என்கையாலே
அமோகமாய் இருக்கிற இவர் ப்ரத்யயம் அடியாக
எல்லாருக்கும் பேறு தப்பாது என்று துணிந்து இருக்கலாம் இறே –
(உண்மை விளம்பி -நன்மை விரும்பி -ஆப்த வாக்கியம் )

மா நிலத்தீர் மெய்யுரைக்கேன் -என்கையாலே –
ராமேணாபிப்திஜ்ஞாதம் ஹர்யஷ கண சன்னிதௌ–(ஸூ ந்தர 51) -என்று
(கரடி குரங்கு கூட்டத்தில்-மஹா பக்தர்கள் சமூகம் – பெருமாள் ப்ரதிஜ்ஜை )
அந்த மகா பரிஷத்திலே சத்ய வாக்யரான ஸ்ரீ பெருமாள் சபதம் கூறினால் போலே யாய்த்து
இவரும் இவர்கள் நடுவில் சபதம் கூறினபடி –

இனி இவர்கள் பெறப் புகுகிற பல வேஷம் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –
அது தான் பல பர்யந்தமாய் இறே இருப்பது –
பையரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம் கையிலங்கு நெல்லிக் கனி –
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம் -என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகளுக்கு அனுபாவ்யனாய் இருக்கிறவனுடைய ஸ்ரீ வைகுண்டம்
நித்ய சம்சாரிகளாய் இருக்கிற உங்களுக்கு-
அடியிலே அன்பு யுண்டாகையாலே-
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிரவாய் நாகத் தணையான் நகர் (முதல் திருவந்தாதி -32-)-என்றது
அதி ஸூலபமாய் அமோகமாக சித்திக்கும் –

(இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிர வாய்
நாகத் தணையான் நகர் -ஸ்ரீ முதல் திருவந்தாதி-32–
அணைவரே -தேற்ற ஏகாரமும் எதிர்மறை ஏகாரமுமாம் -தன்னேற்றமும் -இரண்டு அர்த்தமும் -உண்டே
இமையாத கண் -ஞானக்கண் -இந்திரிய வசம் இல்லாதார்-நமையாமல்- வைகுந்த நகர் அணைய மாட்டார்கள்
இப்படிப்பட்டவர்களும் -பெருமாள் வர விலக்காமல் இருந்தால்-ஆகத் தணைப்பார் அணைவரே- பெறுவார்கள் -)

மா நிலத்தீர் பையரவில் மாயன் பரமபதம் உங்களுக்காம்-
அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது -( 2-8-1)-என்றும் –
தயா சஹா ஸீநமனந்த போகி நீ–(ஸ்தோத்ர ரத்னம் )என்றும் –
சேஷ போகே ஸ்ரீ யாஸ ஹா ஸீநம் -( கத்ய த்ரயம் )-என்றும்
அனந்தன் பணா மணிகள் தன்னில் ஒளி மண்டலத்தின் இடையில் (ஞான சாரம் )
வடிவாரும் மா மலராள் வலவருகும் மற்றை நில மகளும் ஆய்மகளும் இடவருகே நிற்க
நடுவாக வீற்று இருக்கும் நாரணனை (ஆர்த்தி பிரபந்தம் )-என்றும் சொல்லுகிறபடியே
பத்னீ பரிஜனாதி பரிவ்ருதனாய் இருக்கிறவனுடைய நித்ய விபூதி யானது
இருள் தருமா ஞாலத்திலே பத்தராய் இருக்கிற உங்களுக்கு
ப்ரஹ்மணஸ் சாயுஜ்யம் ச லோகதாம் ஆப்நோதி-(உபநிஷத் )என்கிறபடியே சித்திக்கும் –

(ஸ்ரீ விசிஷ்டன் குண விசிஷ்டன் விக்ரஹ விசிஷ்டனை ப்ராப்யமாக இருக்கும் அவனை அனுபவிக்காமல் –
விதியால் ப்ராபகமாக பற்றுகிறோம் சரணம் ப்ரபத்யே )

இது தான்
ஏவம் வித் பாதேன அத்யாரோஹதி (கௌஷீக உபநிஷத் )-என்கிறபடியே
பாத பீடத்திலே அடி இட்டு–ஏறி–மடியிலே இருக்கும் படியாக கல்பிக்கும்
பரம போகிகளோடே சமான போகிகளாம் படி இறே இருப்பது –
(சகல கைங்கர்யங்களையும் சென்றால் குடையாம் போலே சித்திக்கும்
பரம போகி-ஆதி சேஷன் -அனந்த போக்யம் அனுபவிக்கும் நித்யர் -சாடு )

பையரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம் –
ஸ்வ சம் ஸ்பர்சத்தாலே விகசித பணத்தை யுடையனாய்
சைத்ய மார்த்த்வ சௌரப்யாதிகளை பிரகிருதியாக யுடையனான
திரு வநந்த ஆழ்வானை திவ்ய சிம்ஹாசனமாக யுடையனாய்
திவ்ய மகிஷி பரிவ்ருதனாய்
அபரிச்சின்ன ஸ்வரூப ரூப குண விபூதிகளால்
ஆச்சர்ய பூதனானவனுடைய
தன்னுடைச் சோதி -என்னும்படியான பரந்தாமம் ஆனது
உஜ்ஜீவன அபேஷை யுடைய உங்களுக்கு அயத்னமாகக் கை கூடும்-
ஏவம் வித மகா பலமானது லபிக்குமதுக்கு ஒரு பலத்தை திருஷ்டாந்தமாகச் சொல்லுகிறது மேல் –
கையிலங்கு நெல்லிக் கனி -என்று
(பலம் -பிரயோஜனம் -பலம் -நெல்லிக்கனி திருஷ்டாந்தம் )

அதாவது
கையில் கனி என்னும் கண்ணனைக் காட்டித் தரிலும்-(ராமானுஜ -104) -என்றும்
(சேஷ ராமானுஜ திருமேனியில் ஈடுபட்ட நான் சேஷி ராமானுஜ -கண்ணனைக் காட்டித் தரிலும் வேண்டேன் )
வைகுந்த மா நகர் மற்றது கை யதுவே -( 4-10-11-)-என்றும்
இவர்களுக்கு கரதல ஆமலகம் போலே- (நெல்லிக் கனிக்கு வடமொழி -கரதல ஆமலகம்)
கை வசமாக சித்திருக்கும் -என்கை –
கையுறு நெல்லிக் கனியைக் காட்டி -என்னக் கடவது இறே –

கையிலங்கு நெல்லிக் கனி –
உள்ளங்கையிலே விளங்கா நிற்கிற கரு நெல்லிப் பழம் போலே கை வசமாம் –
அது கார்ய சித்தியைப் பண்ணிக் கொடுக்கும்
இது ஸ்வரூப சித்தியைப் பண்ணிக் ஒடுக்கும்

பரம பதம் –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரய-என்கிறபடியே
நித்ய ஸூரிகளால் நித்ய அனுபாவ்யமாய் இருக்கும்படி
உங்களுக்கு சர்வ காலமும் கண்ணாரக் கண்டு அனுபவிக்கும் படியாய் இருக்கும் படி
கண்டறிதியே -(ஸ்ரீ முதல் திருவந்தாதி-85)-என்னக் கடவது இறே
அது தான் நீலாஞ்சநாத்ரி நிபம் -(வைகுண்ட ஸ்தவம் )-என்னும் படியான மைப்படி மேனி இறே –

(படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி யைந்து முள்ளடக்கிப் போதொடு நீரேந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ -ஸ்ரீ முதல் திருவந்தாதி–85-)

பையரவில் மாயன் பரம பதம் –
தன்னை ஆஸ்ரயித்தவர்களை
அசேஷ சேஷ வ்ருத்தியிலும் அந்விதராக்கி
அடிமை கொள்ளுமவனுடையதாய்
அவ் வடிமைக்கு வர்த்தகமாய் இருப்பதான பரமபதமானது –
(சென்றால் குடையாம் –நிவாஸ இத்யாதி )

உங்களுக்காம் –
உய்ய நினைவுடைய உங்களுக்காம் –
நீங்கள் இச்சிக்கவும் வேண்டா –
அவன் தானே தரவும் வேண்டா –
(ஆம் -மோக்ஷயிஷ்யாமி போல் -நானும் வேண்டா நீயும் வேண்டா தன்னடையே விட்டுப்போம் போல் இங்கும் )
நீங்கள் உங்களுக்கு வகுத்த பதத்திலே பற்று யுண்டாய் இருக்க –
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் -என்று அவர்களுக்கு கை யடைப்பாக்கிக் கொடுத்த
அந்தப் பதம் கோல் விழுக்காட்டாலே உங்களேதாயே இருக்கும் –
புங்க்தே போகாந் அந்விதித நிருபஸ் சேவைகச்ய அர்ப்பகாதி-( ந்யாஸ திலகம் ) -என்றும்
நற்றாதை சொம் புதல்வர் தம்ம தன்றோ தாய முறை தான் -( ஆர்த்தி பிரபந்தம் -)-என்றும் சொல்லக் கடவது இறே –

உங்களுக்காம் –
ஏதேனும் ஜன்ம வ்ருத்த ஞானத்தை யுடையராய் இருந்தி கோளே யாகிலும்
உஜ்ஜீவன இச்சிகளாய்-
ஆச்சார்ய விக்ரஹத்திலே விருப்பத்தை யுடையராய் இருக்கிற உங்களுக்கு
உயரத்திலே இருக்கிற மகா பலமானது அடியிலே இருக்க –
மடியிலே விழும்படி கை கண்ட பலமாய் இருக்கும் –

பரம பதம் உங்களுக்காம் –
அதில் ஒரு சந்தேஹம் இல்லை –
சித்திர்பவதி –
நிஸ் சம்சயஸ்து தத் பக்த பரிசர்யா ரதாத்மநாம் -என்றும்
வேறாக வேத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி இருப்பார் தவம் -என்றும்
மதுர கவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் -என்றும் சொல்லக் கடவது இறே —

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–-(ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி-18)-

உய்ய நினைவு -உஜ்ஜீவனம் -உத்தாரணம் -இதுக்கு த்வரிக்கையே –
அடியார் குழாங்களைக் கூடி நித்ய கைங்கர்யம் செய்யவே த்வரிப்பது –
உய்விப்பதற்கு ஆற்றல் நம் குருக்கள் இடம்-அவர்கள் உபகாரம் செய்து –
உத்தார ஆச்சார்யர் உடையவர் இடம் சேர்த்து அருளுவார் – –
ஆகவே அன்பு வைக்க வேண்டும் இவர் இடம்
பாலர் -ஜடர் -மூடவன் -அந்தகன் -சதாசார்யரை அடைந்து நல் கதி அடைவோமே –
திருக்கையால் தீண்டப்பற்றி மரங்களும் நாள் கதி அடைந்ததை அறிவோம் –
ஸாஸ்த்ர கண்ணால் தான் பகவானைக் காண முடியும்
ஊனக் கண்ணாலே நாம் ஆச்சார்யரைக் காணலாம்
கையில் ராமானுஜனில் நீர் இருக்க அத்தைப் பருகாமல் வானை எதிர்பார்ப்பது போலே ஆகுமே
சித்தர் பவதி வா ந இதி சம்சயவா அச்யுத -நிஸ் சம்சயம் -பக்தர் கைங்கர்யம் செய்தால் –
குருவால் யார் அபிமானம் செய்யப்பட்டாலும் குருவை அபிமானித்தாலும் நியமமாக பரம புருஷார்த்தம் கிட்டும்
இரண்டிலும் ஆச்சார்ய அபிமானம் ஸ்ரேஷ்டம் –

——————————————————————————-

கீழ்
மூன்று பாட்டாலும் ஆச்சார்யன் யுடைய உத்தாரகத்வத்தை அருளிச் செய்தார் –
(தரதி -தாண்டுவித்து )
இப்பாட்டில்
அவன் பண்ணின உபகாரத்தை அருளிச் செய்கிறார் –
ஞானப் ப்ரதாநாதி உபகாரங்களாலே ரஷித்துப் போந்த அந்த ஆச்சார்யன் செய்த மகா உபகாரம் ஆனது
(சம்சார நிவர்த்தகமான திருமந்திரம் உபதேசிப்பவரே நேரே ஆச்சார்யர் )
தம் தாம் மனசிலே விசதமாகப் பிரகாசித்தது ஆகில்
இப்படி கிருதஞ்ஞனான சிஷ்யனுடைய மனஸ் தான்-
(க்ருதம் -செயல் -ஞா -ஞானம் அறிவு-கிருதஞ்ஞனான-செய் நன்றி உடையவனான )
அவன் சந்நிதிக்கு அசலான தேசாந்தரத்தில் சக்தமாய் வர்த்திக்க ஷமம் ஆகாது என்கிறார் –

ஆசார்யன் செய் உபகாரமானவது
தூயதாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் -தேசாந்
தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது
இருத்தல் இனி ஏது அறியோம் யாம் —63-

உபகாரமானவது-உபகாரமான-அது -பெருமையை நினைத்து வித்தராகிறார்
தேசாந்தரத்தில்–ஆச்சார்ய கைங்கர்யத்துக்கு-சேவைக்கு – அசலாக உள்ள தேசமே தேசாந்தரம்
இனி-வஸ்து ஸ்திதி -உண்மை இப்படி இருக்க
அறியோம் யாம்-ஆதிசேஷனான இவரே அறியார் -இத்தால் யாருமே அறியார் –
மனசில் தூயதாகப் பட்ட பின்பு யாரும் பிரிந்து இருக்க மாட்டார்கள் என்றவாறு –

உஜ்ஜீவநாயா விஹிதா
குரூனோ உபகார
சிஷ்டே சித்தே –
விமலா யதி சேதாநானாம்
தேசாந்தரே நிவசனம் ந மநோபி வ்ருஷயேத்
வாஸம் கதம் பவதேதி
வயம் ந வித்மே

ஆசார்யன் செய் உபகாரமானவது –
இவன் உஜ்ஜீவனதுக்கு உடலாக சதாச்சார்யன் செய்த சத்ருச பிரத்யுபகார ரஹிதமான
அந்த மகா உபகாரமானது –
அது
அது தான் வாசா மகோசரம் ஆகையாலே
அது -என்னும் அத்தனை –

(கல் தச்சன் -கரடு முரடு மாத்துபவன் -ஆசாரி -ஆச்சார்யன் -அவஸ்து வாக உள்ளவனை வஸ்துவாக்கி –
பிரதியுபகாரம் -ஈஸ்வர த்வயமும் சதுஷ்ட்ய விபூதிகளும் வேண்டுமே
அது -ஸப்த பிரயோகம் ஸ்ரேஷ்டம்- பயம் –
பேதை பாலகன் அது ஆகும்
அப்பாஞ்ச சன்யமும் பல்லாண்டு
தம் பேறாக -நம் குற்றம் பாராமல்-மங்களா சாசன பரராக்கிய -கடக க்ருத்யம்
திவளும் -அமுத்தினாள் பிறந்த அவள் -நின் தாள் நயந்து இருந்த -இவள் –
இரண்டாலும் பெருமையை சொன்னது போல் இங்கும் )

தூயதாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் –
ஞானப் பிரதானம் தொடங்கி மோஷ லாப பர்யந்தம் நடத்திப் போரும் உபகார பரம்பரைகளை –

உபகாரமானது –
ஆத்ம நோஹ் யதி நீசஸ்ய யோகித்யேய பதார்ஹதாம்
கிருபையை வோப கர்த்தாரம் ஆசார்யம் சமஸ்மரேத் சதா -என்றும்
(நீசரான நமக்கும் யோகிகள் பெரும் பேற்றை பரம கிருபையால் )
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே -என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும்
மருவித் தொழும் மனமே தந்தாய் -என்றும்
உனக்கென் செய்கேன் -என்றும்
இப்படி ஈடுபடும்படி
பெரு நல் உதவியான அந்த மகா உபகாரம் ஆனது மனசிலே நிர்மலமாக

பிரகாசித்ததாகில்
சங்கோசம் அற விசாலமாக பிரகாசித்ததாகில் –

ஆகில் –
என்கிற இத்தால் -க்ருதஞ்ஞதையில் யுண்டான அருமை தோற்றுகிறது-
கருதக்நராய் இருப்பார் ஒழிந்து
க்ருதஞ்ஞராய் இருக்குமவர்கள் தேட்டமாய் இறே இருப்பது –
(தேடிப் பிடிக்கும் படி அன்றோ இருப்பது )

இப்படி இருக்கிற இஸ் சம்சாரத்தில்
குர்வர்த்தஸ் ஸ்வாத் மன பும்ஸ க்ருதக்ஞச்ய மகாத்மான -என்கிறபடியே
கிருதஞ்ஞராய் இருப்பார் இவர் ஒருவரும் இறே உள்ளது –

தேசம் திகழும் திருவாய் மொழிப் பிள்ளை வாச மலர்த் தாள் அடைந்து வைத்து (அடைந்த வஸ்து -ஆர்த்தி பிரபந்தம்-57- )-என்றும்
(ஆ முதல்வன் என்று கடாக்ஷிக்கவே வஸ்துவானேன் -ஜெகதாசார்யர் )
திரு வாய் மொழிப் பிள்ளை தீ வினையோம் தம்மை குருவாகி வந்து உய்யக் கொண்டு -(46)-என்றும்
திருமலை யாழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை சீரருளால்
தருமதி கொண்டவர் தம்மை யுத்தாரகராக எண்ணி இரு மனமே-(21) -என்றும்
சீராரும் ஆச்சார்யனால் அன்றோ நாம் உய்ந்தது -என்றும்
கூசாமல் எப்பொழுதும் கூறு -என்றும்
இப்படி பஹூஞ்ஞராய் இருக்கிற இவருடைய கிருதஞ்ஞை இருக்கிற படி இது வாய்த்து –

இனி
இப்படி தேசிக உபகார தரிசியாய் இருக்கிற இவர்கள் யுடைய மனஸ் தான்
வஸ்தவ்ய ஸ்தலத்தை விட்டு
தேசாந்தரத்தில் சங்கத்தை யுடையது ஆகமாட்டாது -என்கிறார் –

தேசாந்தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது –
அதாவது
ஆச்சார்ய சேவைக்கு அசலான தேசாந்தரத்தில் அர்த்தாதிகளில் அபேஷையாலே யாதல் –
தேச வாசாதிகளாலே யாதல்
க்ருதஞதா பல பிரத்யுபகார சாபேஷமான மனஸ்ஸூ தான் பொருத்தம் யுடையது ஆக மாட்டாது-
(ஆச்சார்ய திரு உள்ளம் உகப்புக்காக அன்றோ அனந்தாழ்வான் திருமலைக்கு உடையவராய் விட்டுப் பிரிந்தது )

இவர்கள் இருக்க இச்சித்தாலும் இவர்கள் யுடைய மனஸ்சானது
நின்னிடையேன் அல்லேன் -என்று நீங்கி -என்கிறபடி இவர்களை விட்டு
முந்துற்ற நெஞ்சு -ஆகி
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு -(ராமானுஜ –100-)-என்னும்படி
பொருத்த முடையதாய் இருக்கிற இது
ஓர் இடத்திலும் பொருத்தம் யுடையது ஆக மாட்டாது –
( ராமம் மே அனுகதா த்ருஷ்ட்டி -தசரதன் )

ஆகையால்-
உபகார ஸ்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் -(ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்திகள்-310 )-என்கிறபடி
சஹ வசிதராய் – அவன் கண் வட்டம் விடாதே வர்த்தித்துப் போருமவர்கள் யுடைய நெஞ்சு
விஸ்லேஷித்துத் தரித்து இருக்க மாட்டாது இறே-

(தன்னை மாறாடி நினைக்கையாவது – தன்னை ஆசார்யன் என்று நினைக்கை –
சிஷ்யனை மாறாடி நினைக்கை யாவது – தனக்கு சிஷ்யன் என்று நினைக்கை –
பலத்தை மாறாடி நினைகை யாவது –த்ருஷ்ட பிரயோஜனத்தையும் –சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்தையும் –
பகவத் கைங்கர்யத்தையும் –ஸஹ வாசத்தையும் –பலமாக நினைக்கை —ஸ்ரீ வசன பூஷண-சூரணை-309-)

(நினையாது இருக்க -இந் நாலு பலமும் சித்திக்கிறபடி என் என்னில் –
சேஷ பூதனான சிஷ்யன் நினைவாலே த்ருஷ்ட பலம் சித்திக்கும் —
ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் சித்திக்கும் –
(உன் மனசால் என் நினைந்து இருந்தாய் -பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு தானே )
ஆசார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் சித்திக்கும் –
உபகார ஸ்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் –சூரணை -310-

அநாதி காலம் அஹங்கார மமகாரங்களாலே நஷ்ட ப்ராயனாய் கிடந்த தன்னை –
நிர்ஹேதுகமாக அங்கீகரித்து -அஞ்ஞாத ஞாபன முகத்தாலே -அவற்றில் ருசியை மாற்றி –
மங்களா சாசனத்துக்கு ஆளாம்படி பண்ணின மகானுபாவன் அன்றோ -என்கிற
உபகார ஸ்ம்ருதியாலே -சிஷ்யனானவன் ஷண காலமும் பிரிய ஷமன் அன்றிக்கே
கூடி நடக்கையால் அவனோடு உண்டான சஹவாசம் தன்னடையே சித்திக்கும் -என்றபடி)

அப்படிப் பட்ட திரு உள்ளக் கருத்தை யுடையவர்கள்
ஸ்ரீ தெய்வ வாரி யாண்டான் –
ஸ்ரீ நஞ்சீயர்–போல்வார்-
(ஸ்ரீ ஆளவந்தாரை பிரிந்து நோய் வாட-என்னுடைய திருவனந்த புரம் எதிரே வந்ததே -ஸ்ரீ தெய்வ வாரி யாண்டான்)

இனி
விஸ்லேஷித்து இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது என்பான் என் –
விஸ்லேஷித்து இருக்கிறவர்கள் யுண்டாய்த்து இருக்கிறதே என்ன
இருத்தல் இனி ஏது அறியோம் யாம் –
ஆச்சார்யன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து இலன் ஆகில்
ஞானாம்சம் அடைய மறைந்து அஞ்ஞானாம்சமே மேலிடும் -என்கிறபடியே
நிஷ்கிருதி இல்லாத ( பிராயச்சித்தம் இல்லாத ) பாபம்-என்னும் படியான
க்ருதக்நதையாலே அத்தை அறிய மாட்டாமல் விஸ்லேஷித்து
வீடாடி வீற்று இருக்கிற இதுக்கு ஹேது ஏதோ அறியோம்
பிரிந்து இருக்கிறவர்கள் மனசே அறியும் இத்தனை –
(என் செய் கேன் உலகத்தீரே -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் போல் இங்கு இவரும் )

இனி ஏது அறியோம் –
அர்த்த ஸ்திதி இதுவான பின்பு இதுக்கு நிதானம் இன்னது என்று
அறிந்து சொல்லுவார் ஆர் –
பர தோஷங்களில் அஜ்ஞராய் இருக்குமவர் (மா முனிகள் )ஆகையால்
இதுக்கு ஹேத்வாந்தரங்களை தாம் அருளிச் செய்ய கூசி இனி ஏது அறியோம் –என்கிறார் –

நித்யம் குரும் உபாசீத -என்கிற
சாஸ்திர வசனத்துக்கு அனுகுணமும் இன்றிக்கே
சதாச்சார்யன் கண் வட்டம் விட்டால் நித்ய சம்சாரியாயே போம் இத்தனை -என்கிற
ஆச்சார்ய வசனத்துக்கு அனுகுணமும் இன்றிக்கே
இருக்கிற இவர்கள் அனுஷ்டானம்
அறிவுடையாருக்கும் அறியப் போகாதாய் இறே இருப்பது –

அன்றிக்கே
யாம் ஏது அறியோம் –
ஆச்சார்ய பதச் சாயையிலே இருந்து-
பல்லவிதாதிகளாம் படியான ஸ்வரூப விகாசத்தை யுடையனாய் ( பல்லவம் துளிர் )
(ஆத்ம புஷ்பத்தை நிழலில் வைத்து சரீரத்தை வெய்யில் இட வேண்டுமே
மொட்டு துளிர்த்து பூத்து பழுத்து -நிலைகளை அடைய வேண்டுமே )
தத் விபரீத அனுஷ்டான யுக்தர் யுடைய ஹிருதய ஸ்திதிக்கு ஹேது இன்னது என்று அறிந்து
அத்தைச் சொல்லுவது ஓன்று தெரிகிறதில்லை -என்றபடி
நாம் அத்தை அறியோம் -என்றபடி –
ஆகையால்
இது சர்வஞ்ஞருக்கும் துர்ஞ்ஞேயமாய் இருக்கிறது ஆய்த்து –

இவ்விடத்திலே –
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளிலே ஆஸ்ரயித்து
தேசாந்தரத்திலே அகன்று போக உத்யோகித்த ஸ்ரீ வைஷ்ணவனைக் குறித்து
ஞாநாதிகராய் இருப்பார் ஒருவர்
உமக்கு ஸ்ரீ ஜீயர் திருவடிகளை அகன்று போக வேண்டிற்றே என்று வெறுக்க
எங்கே இருந்தாலும் ஸ்ரீ ஜீயர் அபிமானம் உண்டே என்று தேறி வார்த்தை சொல்ல
(முதல் திருவந்தாதி -91 -வியாக்யானத்தில் இந்த ஐதிக்யம் )
இத்தை ஸ்ரீ ஜீயர் திருவடிகளுக்கு அந்தரங்கதையாய் இருப்பாள் ஒரு சாத்விகையான அம்மையார் கேட்டு
ஸ்ரீ ஆச்சார்யர் விச்லேஷத்தில் நெஞ்சு இளையாமல் போகிறவரைப் பார்த்து
என் சொன்னாய் பிள்ளாய்
ஏனத் துருவாய் யுலகிடந்த ஊழியான் பாதம் நாளும் மருவாதார்க்கு உண்டாமோ வான் -என்கிற
பாட்டின் வ்யாக்யானத்தில் அருளிச் செய்த கதையை இவிடத்திலே அனுசந்திப்பது -என்றார் -என்று
அஸ்மத் ஆச்சார்யர் அந்திம உபாய நிஷ்டையிலே அருளிச் செய்தார் இறே –

(ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —முதல் திருவந்தாதி-91-
ஜீயர் திருவடிகளை ஆஸ்ரயித்து
இருப்பான் ஒரு வைஷ்ணவன் வர -நீ பல நாள் வரத் தவிர்ந்தாயே என்று அருளிச் செய்ய
நீர் ஒருகால் அருளிச் செய்த படியை நினைத்து இருக்க அமையாதோ என்ன –
நம்பிக்கை நிலையில் வர்த்திக்கிறதும் மாண்டு
நாடோறும் ஏனத்-துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்-நாடோறும்-மருவதார்க்கு உண்டாமோ வான் -என்கிற இப்பாட்டும்
கெடுவாய் கேட்டு அறியாயோ -என்றார் -ருசி இல்லாதார்க்கும் ஸ்ரீ வைகுண்டம் கிடைக்குமோ )

(ஆழ்வான் திருவாய் மொழி நிர்வஹிக்க புக்கால் -பிள்ளை உறங்கா வல்லி தாசர்
கண்ணும் கண்ணீருமாய் அத்தை இத்தை பிரசங்கித்து சித்தராவார் -அத்தைக் கண்டு –
கூரத் ஆழ்வானாய்-மகா பாஷ்யம் கற்று -சதுர் ஆஸ்ரமாக ஒன்றை நிர்வஹிக்கிற எங்களைப் போல் அன்றிக்கே –
பகவத் குண பிரசங்கத்திலே சிதிலராகும்படி பிறந்த உம்முடைய ஜன்மம் ஒரு ஜன்மமே -என்றானாம் –

ஆழ்வான் தான் வீராணத்திலே ஒரு பெண் பிள்ளை புக்காளாய்-மடியிலே வைத்துக் கொண்டு-இருந்து –
கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து -என்று சந்தை சொல்லுவியா-நிற்க –
அந்த பெண் பிள்ளையில் பார்த்தா அவளை அழைத்துக் கொண்டு போக -மேற் சந்தை இட மாட்டாதே மோஹித்து விழுந்தான் –
இப்படி இருக்கிறவன் இறே தன்னை-வன் நெஞ்சனாக்கி வார்த்தை சொன்னான் –

ஸ்வாமிகள் திரு மழிசை தாசராய் – நஞ்சீயரை பட்டர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரியப்பித்தராய் -அர்த்தாத் -யாத்ருசிகமாக –
அவரும் தாமாக பகலிருக்கையில் போயிருந்து – அவரும் தாமுமாக திருவாய் மொழி ஓதா நிற்க –
ஆண்டான் பின்னிட்டு சென்றானாய் -அவனைக் கண்டு-ஜீயர் எழுந்து இருக்க புக -வேண்டா -என்று
கை கவித்து கொடு வந்து -நீங்கள் கோயில் கூழைத் தனம்-அடிக்கிற படி இதுவோ -தான் -என்ன –
லௌகிகர் அன்ன பாநாதி நிமித்தமாக வ்யாபாரித்தது போலே –
உங்களுடைய யாத்ரை இதுவே யென்று வித்தரானாராம் ஆண்டான் –
திரு வாய் மொழி ஓதிற்று ஸ்ரீ பாதத்திலே யாயிற்று -என்றாராம் –
பகல் எல்லாம் பாஷ்யத்திலே அந்ய பரராய் இருப்பார் -இரவு அமுது செய்து பள்ளிக்கட்டில் எறி-அருளினால் –
சந்தை சொல்ல வாராயோ -என்று அழைப்பர் -முந்துற சந்தை சொன்னால்-புளகிதகாத்ரர் ஆவார் –
இரண்டாம் சந்தைக்கு சிதிலர் ஆவார் என்று-எங்கேனும் ஒரு கால் புக்கார் ஆகில்
நாலிரண்டு ஒவியல் கொண்டு பரிமாற்ற-வேண்டுபடியாய் ஆயிற்று கண்ணா நீர் வெள்ளமிட்ட படி –

பெருமாள் அமுது செய்யும் போது இன்னதனை கறியமுதும் நெய்யமுதும் என்று
கடக்கிட்டு அவை தன்னை அமுது செய்வதற்கு முன்னேயும் எனக்கு காட்டி அமுது
செய்தாலும் எனக்கு காட்டிக் கொடு போம் கோள்-என்றாரே –
அவர்களும் திரு உள்ளத்தில் ஓடுவது-அறியாதாராய் – அப்படியே செய்து கொடு போந்தார்களாய் –
இப்படி ஆறு மாசம் சென்ற பின் -ஒரு நாள் பார்த்து –
இத்தை ஒரு நாள் குறி அழித்திட்டு வைத்தால் ஆகாதோ -என்று அருளிச் செய்தாராம் –

கிடாம்பி ஆச்சான் ஆழ்வான் உடன் திருவாய் மொழி கேட்கிற நாளிலே ஒருநாள் ஸ்ரீ பாதத்திலே-புகும் போதிலே தாழ்த்து புக –
ஏன் நீ வேகினாயீ -என்ன -ஆழ்வான் பாடே திருவாய் மொழி கேளா நின்றேன் -என்றானே –
இன்று என்ன திருவாய்மொழி நிர்வஹித்தான் -என்று கேட்டருள -பிறந்தவாறு -என்றானாய் –
அதில் சொன்ன வார்த்தைகள் என் -என்ன -ஒரு வார்த்தையும் இல்லை -என்றானாய் -நீ கேட்ட படி என்
அவன் சொன்ன படி என்-என்ன -நிர்வஹிப்பதாக ஆரம்பித்து இயல் சொல்லி -அநந்தரம்-
ஆழ்வாருடைய-பாரவச்யத்தை அனுசந்தித்து -நெடும் போது கண்ணும் கண்ண நீருமாய் இருந்தது – இவ் ஆழ்வாரும் ஒருவரே –
இவர்க்கு ஓடுகிற பாவ வ்ருத்தி நாம் இருந்து பாசுரம் இடுகையாவது என் -இற்றைக்கு விடலாகாதோ -என்று விட்டான் -என்ன –
என்ன பரம சே தனனோ-என்று அருளிச் செய்தாராம் –
நீர் தெளிந்து இருக்கிறபோதே -உம்முடைய சித்தாந்தத்தை எங்களுக்கு அருளிச் செய்ய வேணும்-என்ன –
ஆகில் அத்தை கேட்கலாகாதோ -என்று தம்முடைய சித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –
மித்ர பாவேன -என்கிற ஸ்லோகம் ராம சித்தாந்தமாய் இருக்கிறாப் போலே –
இப்பாட்டு ஆழ்வாருடைய-சித்தாந்த்தமாய் இருக்கிறது –)

————————————————

கீழ்
ஆச்சார்யன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்தால்
அவனைப் பிரிய பிரசங்கம் இல்லை என்றார்
இதில்
பிராப்யமான அவன் விஷயத்தில் கைங்கர்யத்தை யுணர்ந்தாலும் பிரிய
பிரசங்கம் இல்லை என்கிறார் –

தன்னாரியனுக்குத் தானடிமை செய்தவன்
இந்நாடு தன்னில் இருக்கும் நாள் -அந்நேர்
அறிந்தும் அதில் ஆசை இன்றி யாசாரியனைப்
பிரிந்து இருப்பார் ஆர் மனமே பேசு —64-

சிஸ்ரூஷணம் நிஜ குரு
உபதேதி வாம்
ஏனாம் ப்ரமேய தரணீம்
பிரதிபத்ய மான
ஹே வாத் யஜந்தி
நிஜ தேசிக பாத மூலம்

தன்னாரியனுக்குத் தானடிமை செய்வது –
அதாவது
தாய்க்கு சோறு இடுமா போலே தனக்கு அசாதாராண சேஷியான ஆச்சார்யனுக்கு
தத் ஏக சேஷ பூதனாய்
தத் கைங்கர்யாதிகளே தனக்கு தாரகாதிகளாய் இருக்கிற
தன்னுடைய ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யங்களை செய்து உஜ்ஜீவிப்பது –

அவன் இந்நாடு தன்னில் இருக்கும் நாள் –
அவன் இந்த விபூதியிலே எடுத்த திரு மேனியோடு
ஸ்ரீ ஈஸ்வர இச்சையாலே எழுந்து அருளி இருக்கும் நாள் ஆய்த்து இவன் அடிமை செய்யலாவது

(ப்ரக்ருதிம் அதிஷ்டாயா -சாஷாத் நாராயண தேவனே சஸ்த்ர பாணியாய் –
அவனே -ஈஸ்வர இச்சை என்பதால் கர்மாதீனம் இல்லை –
அவதாரமும் அவனைப் போல் -இருப்பதும் நம்மைத் திருத்திப் பணி கொள்ளவே )

அந்நாட்டிலே போனால்
எல்லாரும் அயர்வறும் அமரரர்கள் அதிபதி யானவனுடைய
அனுபவ கைங்கர்யங்களிலே ஆழம் கால் பட்டு குமிழ் நீருண்டு போம் இத்தனை இறே
(அம்ருத சாகரான் நிமக்னன் -ஸ்ரீ வைகுண்ட கத்யம் )
ஆகையால் இவன் பதார்த்தங்களைக் கொண்டு உபஜீவிக்க இருக்கிற
இந்நாட்டிலே எழுந்து அருளி இருக்கும் போதாய்த்து
ப்ராக்ருத பதார்த்தங்களில் கிஞ்சித்கார முகத்தாலும்
இவன் கரணங்கள் அடியாக யுண்டான சிஷ்ருதாதிகளிலும்
ஆய்த்து அவன் அடிமை கொண்டு அருளுவது –
(திவ்ய மங்கள விக்ரஹம் அங்கு வியர்க்காதே -திருவடி பிடித்து விட முடியாதே )

நெய்யமர் இன்னடிசில் நிச்சலும் பாலோடு மேவீரோ -(6-8-2 )-என்றும்
குருக்களுக்கு அனுகூலராய்-(பெரியாழ்வார் 4-4-2) -என்றும் சொல்லக் கடவது இறே –
(பிராகிருத பதார்த்தம் சமர்ப்பிக்கவும் கைங்கர்யம் செய்வதற்கும் இரண்டு பிரமாணங்கள் )
அவன் அந்நாட்டிலே எழுந்து அருளினால் இவன் இந்நாட்டிலே யாருக்கு அடிமை செய்யப் புகுகிறான்
என்னைப் போலே வாய் புகும் சோற்றைப் பறி கொடாதே -என்றார் இறே ஸ்ரீ நஞ்சீயர்-

(திருவாய் மொழி –4-3-11-ஈட்டில்
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வரே மண்ணூடேயே -ஸ்ரீ ராமானுஜர் போல் –120-ஸம்வத்சரம் இல்லாமல் –
பராசர பட்டரை பால்யத்திலே இழந்ததால் -நஞ்சீயர் -வருந்தி இருக்க
நம் பெருமாள் கவலைப்படாதீர் பிள்ளை ஒருவரைத் தருவோம் -என்று
நம்பிள்ளையைக் கொண்டு இவர் திருவடிகளில் சேர்த்து அருளினார் அன்றோ )

(பட்டர் –60-68 திரு நக்ஷத்ரம் இருந்து இருப்பதாக சொல்வர் )

(யதன்ன புருஷ பவதி பெருமாளுக்கு சாஸ்திரம் அனுபவித்த தனக்குப் பிடித்த ஓன்றை பெருமாளுக்கு
பூதங்கள் -சிந்தப்புடைத்து -செங்குருதி கொண்டு பூதங்கள் அந்தப்பலி கொடுத்து திருமாலிருஞ்சோலை –
வர்ணாஸ்ரமம் படி வாழ்ந்து ஸாஸ்த்ரம் அனுமதித்த ஒன்றை பெருமாளுக்கு சமர்ப்பிக்கலாம் –
ஆச்சார்ய பிரிய தனம் -அவருக்கு பிடித்த ஒன்றையே சமர்ப்பிக்க வேண்டுமே )

அந் நேர் அறிந்தும் அதில் ஆசை இன்றி –
அந்த நேர் பாட்டை சாஸ்திர வசனங்களாலும்
சதாச்சார்யா உபதேசங்களாலும் அறிந்து வைத்து
இப்படி அடிமைக்கு பாங்கான தேச காலங்களையும் தேசிகரையும் பெற்று இருக்கிற
நேர் பாட்டை அறிந்து வைத்து
அதிலே நேர் படலாய் இருக்க –

அதில் ஆசை இன்றி –
இப்படி வாய்த்து இருக்கிற வகுத்த விஷயமான ஆச்சார்ய கைங்கர்யத்தில்
அபி நிவேசமும் இன்றிக்கே
அதடியாக அவனைப் பிரிந்து பிழைத்து இருப்பார் ஆர் –

ப்ராவண்ய காரணமான அனுபவம் இல்லாத போது குலையும்படியான
சத்தை யுடையராய் இருக்கிற ஆச்சார்ய பர தந்த்ரரில்–
அவரை விஸ்லேஷித்து சத்தை பெற்று இருப்பார் ஆர் –

அந்நேர் அறியாமல் பிரிந்து இருப்பார் யுண்டாகில் அத்தனை போக்கி —
அத்தை அறிந்து இருப்பாரில் பிரிந்து இருப்பார் இல்லை இறே
ஈஸ்வரனைப் பிரிந்து இருப்பார் யுண்டாகிலும்
ஆச்சார்யரைப் பிரிந்து இருப்பார் அரிதாய் இறே இருப்பது

அநாதி காலம் ஈஸ்வரனையும்-ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து இருந்த இவனை
தத் சம்பந்தத்தையும்-
தத் கைங்கர்ய ருசியையும் யுண்டாக்கி
கிட்டே இருந்து எல்லா அடிமைகளும் கொண்டு அருளுமவனாய் இருக்கிற
இவனை விட்டுத் தரித்து இருப்பார் ஆர் –
அவர்களை எங்கே தேடுவது –
சைதன்யம் யுடையாரில் இப்படிப் பட்டவர்கள் இல்லை இறே –

(அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தம் காட்டித் தடை காட்டி -உம்பர்
திவம் என்னும் வாழ்வுக்குச் சேர்ந்த நெறி காட்டும்
அவன் அன்றோ வாசாரியன்–ஸப்த காதை–1-)

மனமே பேசு –
ஆச்சார்ய கைங்கர்யாதிகளால் அல்லது தரியாத மனசே–
யுண்டாகில் இத்தை ஆராய்ந்து சொல்லிக் காண்-
எதிராசா எந்நாளும் உன் தனக்கே யாட்கொள்ளு உகந்து (ஆர்த்தி பிரபந்தம்-11- )-என்று ஆதரித்து
(எந்நாளும் -யாவதாத்ம பாவி -அத்ர பரத்ர சாபி தமிழ் படுத்துகிறார் )
போருமவருடைய திரு உள்ளம் இறே –
ஆகையால் தம் திரு உள்ளம் அறிய இல்லை என்கிறார் –

இது தான்–பாத ரேகா சமர் பிரிகையாலே அவர் இடத்திலே பரிவாலே–
தம் திரு உள்ளத்திலே பரிவு – தோற்ற அருளிச் செய்து அருளினது -என்று அருளிச் செய்வர் –

(மா முனிகள் -திருவாய் மொழிப்பிள்ளை -இவர்களைச் சொன்னவாறு
பொன்னடிக்கால் ஜீயர் -வான மா மலை ஜீயர் வடநாட்டு யாத்திரை மா முனிகள் நியமனம் அடியாக சென்று பின்பு
வெகு காலம் கழித்து தான் திரும்பினாராம் -வடக்கே நிறைய சிஷ்யர்கள் இன்றும் இவராலேயே –
கூட இருந்து சரம கைங்கர்யம் செய்தவர் கோயில் அண்ணன் -கந்தாடை ஆண்டான் தான் என்பர்
இது சிஷ்யர் ஆச்சார்யர் பிரிவுக்கு த்ருஷ்டாந்தம்
பாதுகை ஸ்தானீயம் -அண்ணன் ஸ்வாமி மா முனிகளுக்கு – முதலியாண்டான் ராமானுஜர் போல்
எம்பார்-ராமானுஜர் போல் -பதச்சாயை -பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்
பாத ரேகை -பொன்னடிக்கால் ஜீயர் -சாயை கூட நிழலில் பிரியலாம் -ஆகவே ரேகையே பிரியாது )

அந்த அனந்தரத்திலே–
எந்தை எதிராசா இந்தத் தனி இருப்பில் எந்தாயம் -(எம் காயம் )தன்னை இனி நீக்கிக்
கந்தாடை அண்ணனைப் போல் கண் கரிச்சல் யுண்டாக்கி வந்தார் எனை நோக்குவாய் –
என்றும் அருளிச் செய்தாராம் –

ஆக இத்தால்
தத் பாத சேவை ஏக தாரகராய் இருக்கும் ஆச்சார்ய பரதந்தரில் தங்களுக்கு
எல்லாமாய் இருக்கிற ஆச்சார்யனை விஸ்லேஷித்து இருக்க மாட்டார்கள் என்று கருத்து-

————————————————————–

(கீழ் இரண்டும் ப்ராசங்கிகம் –
ஆச்சார்யர் சிஷ்யர் விஸ்லேஷ வியசனம் அடியாக வரும் அனர்த்தங்கள் )

கீழ் இரண்டு பாட்டாலும்
உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலும்
கைங்கர்ய அபி நிவேசத்தாலும் யுண்டான
சிஷ்யனுடைய விஸ்லேஷ ராஹித்யத்தை அருளிச் செய்து–

அதடியாக யுண்டான சஹவாசத்தை யுடையரான இருவரும்
ஸ்வ ஸ்வ கர்த்தவ்யங்களான
ஸ்வரூப
தேக
சம்ரஷணங்களை பண்ணிப் போரும்படியையும்
இவ்வர்த்தம் ஸ்ருதமானாலும்
அனுஷ்டானத்திலே அரிதாய் இருக்கும் என்னுமத்தையும்
அருளிச் செய்கிறார் இதில் –

ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன்
நோக்குமவன் என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம் —-65-

தேசாரும் சிச்சனவன்-ஆச்சார்யர் திருமேனியை ப்ரீத்தி உடன் நோக்கும் தேஜஸ் உடைய சிஷ்யன்
ஆருயிரை-எம்பெருமானும் விரும்பும் படியான கௌஸ்துப ஸ்தானீயம் -ஆத்மவஸ்து –

அந்தே சதக குரு
ஆத்ம ரஷாம் சிஷ்ய
ப்ரக்ருஷ்ய குரு தாம்
குரு தேக ரஷாம்
அர்த்தம் ஸூ ஸூஷ்மம் இமாம் ஆகலயந்தி சிந்தே
துர்லபாத் அபி வர்த்தனி தத்ர நிஷ்டா

ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்-
ஆச்சார்யன் ஆகிறான்–
சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்துக்கு உடலாக ஞான பிரதானாதி முகத்தாலே
நல் வழியே நடத்திப் போருமவன் ஆகையாலே
ஸ்வாசாச்யனான சிஷ்யன் யுடைய ஸ்வரூபத்தை
ஸ்வ உபதேசாதிகளாலே சர்வ காலத்திலும் ‘அவஹிதனாய்க் கொண்டு
நிரபாயமாக ரஷித்துக் கொண்டு போருமவன் -என்கை –

தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன் நோக்குமவன் –
சிஷ்யன் ஆகிறான் –
அவனாலே ஸூ சிஷிதமான ஸ்வரூப ஔஜ்வல்ய பூர்த்தியை யுடையனாய்
ஸ்ரீ ஆச்சார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டால் போலே-
தனக்கு தாரகாதிகள் எல்லாமாய்
சரம சரீரம் ஆகையாலே ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அத்யந்த அபிமதமாய்
சர்வ மங்களாவஹமாய் இருக்கிற ஸ்ரீ ஆச்சார்யன் யுடைய திவ்ய விக்ரஹத்தை
தத் உசித கைங்கர்யங்களாலே சர்வ காலத்திலும் அவஹிதனாய்
அபி நிவேசத்துடனே இப்படியே நோக்கிக் கொண்டு போருமவன் -என்கை –

(ஞானியை விக்ரஹத்துடன் ஆராதிக்கும் -சரம விமல திரு மேனி –
திரு நாராயண புரத்தில் வீற்று இருந்த கோலத்துடன் எழுந்த அருளப் பண்ணி
வாழை மரம் தோரணம் கட்டி கோயில் பிரசாதம் -அபய ஹஸ்த பிரசாதம் சாதிப்பார்களாம்
இங்கு ஸந்யாஸ ஜீயர் அப்படி
திருமஞ்சனம் செய்து தீர்த்த பிரசாதம் சாதிப்பார்களாம்
ஸந்நிதி கதவு திறந்து மாலை -அருளப்பாடு அப்பொழுதும் உண்டாம்
உபநிஷத் சேவை உடன் தந்த பல்லக்கு
வீதியில் தட்டு அமுது செய்து
பின்னால் அடுத்த ஸ்வாமி
அவரை குழியில் எழுந்து அருளப் பண்ணி
திருமேனி பரிவட்டம் வஸ்திரம் கணையாழி உபதண்டம் இவருக்கு சாத்தி அப்பொழுது தான் இவர் ஜீயர் ஆவார்
திருவரஸில் அதே பல்லக்கில் எழுந்து அருள பண்ணி வருவார்களாம்
திருமண் ஸ்ரீ சூர்ணம் பிரிக்காமல் தீட்டு நாள்களிலும் உண்டாம் திரு நாராயண புரத்தில் )

ஆச்சார்யர் சிஷ்யன் யுடைய உயிரை நோக்குமவன்
சிஷ்யன் ஆச்சார்யன் யுடைய யுடம்பை நோக்குமவன் -என்றும்
ஆசார்யன் சிஷ்யன் யுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன்
சிஷ்யன் ஆச்சார்யன் யுடைய தேஹத்தைப் பேணக் கடவன்- (ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -333-)என்றும்
இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய் பகவத் கைங்கர்யமுமாயும் இருக்கும் -(சூரணை -334-)-என்றும்
இப்படி இது இருவருக்கும் வ்யவஸ்திதமாய் இருக்கும் -என்றும்
இத்தை ஸ்ரீ ஆச்சார்யர்கள் இருவரும் அருளிச் செய்தார்கள் –

(இருவரும்-பிள்ளை லோகாச்சார்யார் -மா முனிகள் சொன்னதாக பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் இருவரும்
நாயனாரும் பெரியவாச்சான்பிள்ளையும் அருளிச் செய்தார்கள் – )

(ஆசார்யனுக்கு தேக ரஷணம் ஸ்வரூப ஹானி –
சிஷ்யனுக்கு ஆத்ம ரஷணம் ஸ்வரூப ஹானி –(ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -335)
ஆசார்யன் ஆத்ம ரஷணம் பண்ணும் இடத்தில் -அஹங்காரம் விரோதி –
சிஷ்யன் தேக ரஷணம் பண்ணும் இடத்தில் மமகாரம் விரோதி –சூரணை -336-)

ஆசையுடன் நோக்குகை யாவது –
ஆத்ருதோ பயர்ச்ச யேத் குரும் -என்றும்
குர்வீத பரமாம் பக்திம் -என்றும்
சாந்த அநஸூயா ஸ்ரத்தாவான் -என்றும் சொல்லுகிற படி
ராக பிரேரிதனாய் அவர் திரு மேனியிலே புரையற ஸ்நேஹத்துடன்
தத் தத் கால உசித கைங்கர்யங்களாலே
தத் விக்ரஹத்தை சர்வ காலங்களிலும் நோக்கிக் கொண்டு போருகை -என்றபடி
அவனும்–
ஸ்நிக்தோ ஹித பரஸ் சதா -என்னும் படி இறே இவன் இடத்தில் இருப்பது –

(சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி -திவ்ய மங்கள விக்ரஹ மங்களா சாசனம் தானே உண்டே எங்கும் )

ஆர் உயிர் –
என்கையாலே ஞான ஆனந்தங்களை வடிவாய் யுடைத்தாய் இருக்கிற ஸ்வரூபம் ஆனது
ஈஸ்வரனுக்கு ஸ்ரீ கௌஸ்துபத்தோபாதி ஸ்ப்ருஹணீயமாய்
அங்கண்ணன் யுண்ட என்னாருயிர் -(திருவாய் -9-6-6 )-என்னும்படி
அஹம் அன்னம் -ஆகையாலே நிரதிசய போக்யமாய்
இப்படி
ஊணும் பூணுமாய் (அன்னமும் கௌஸ்துபமும் )இருக்கும் என்னுமது தோற்றுகிறது

சீர் வடிவு –
என்கையாலே
நன்கு என் உடலம் கை விடான் -( திருவாய் 10-7-4-த்யாஜ்ய தேக வ்யாமோஹம் )-என்றும்
ஷணேபி தே யத் விரஹ அதி துஸ் சஹ -என்னும் ‘
ஈஸ்வரனுக்கு ஷண கால விஸ்லேஷமும் அசஹ்யமாம் படியான
அபிமத விஷயத்தில் யுண்டான அத்யந்த வ்யாமோஹம் தோற்றுகிறது –

என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும் –
இப்படி ஈஸ்வர ப்ரீதி ஹேதுவான தேகாத்ம ரஷண தத் பரராய் போருவர்கள்
சச் சிஷ்ய சதாச்சார்யர்கள் என்று சொல்லப் படுகிற
இந்த ஸூஷ்ம ஞானத்தை
சாஸ்திர முகத்தாலும்
சதாச்சார்ய வசனத்தாலும் ஸ்ரவித்து வைத்தும் –

ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம் –
எத்தனை அதிசய ஜ்ஞானராய் இருக்குமவர்களுக்கும் அந்த அரிதான அனுஷ்டானத்த்லே
நிஷ்டை யுடையராகை துர்லபம் இறே
அது சால அருமை யுண்டு -என்றபடி –

கேட்டு வைத்தும் -ஆர்க்கும் அந் நேர் நிற்கை யரிதாம் –
செவிக்கு இனிதாய் இருக்குமவற்றைக் கேட்கலாம் அத்தனை போக்கி
அதிசயித ஞாதாக்களுக்கும் அதன் உக்த க்ரமத்தின் அனுஷ்டானத்தில்
நிஷ்டை யுடையராகை துர்லபம் இறே –

ஆகையால்
ஆச்சார்ய பிரசாதத்தாலே அயத்னமாக லபிக்குமத்தை
ஸ்வ யத்னத்தாலே லபிக்க அரிதாய் இறே இருப்பது –

(கொள்ளில் மிடியனாம் – கொடுக்கில் கள்ளனாம் –சூரணை-339-
அப்படி கொள்ளுதல் கொடுத்தல் வருவது என் என்ன –அருளிச் செய்கிறார் –
அதாவது –
சிஷ்யன் என்னது என்று இருக்கும் வஸ்துவை -சாபலத்தாலே ஸ்வீகரிக்கில் –
ஈஸ்வரன் அகில பர நிர்வாஹனாய் போருகையாலே -நமக்கு என்ன குறை உண்டு என்று இருக்கும் பூர்ணனான தான் –
தேக யாத்ரைக்கும் கூட முதலற்ற தரித்ரனாய் விடும் –
என்னது என்று புத்தி பண்ணி -ஒன்றை ஆசார்யனுக்குக் கொடுத்தால் -சரீரம் அர்த்தம் -இத்யாதிப் படியே
அடியிலே சமர்ப்பிதம் ஆகையாலே -ததீயமாய் இருக்கிற அதிலே மதீயத்வ புத்தி
பண்ணுகையாலே ஆச்சார்ய ஸ்வ அபஹாரியாய் விடும் -என்கை-

கொள் கொடை உண்டானால் சம்பந்தம் குலையும் –சூரணை -340-
இவ்வளவே அன்றி சம்பந்த ஹானியும் வரும் என்கிறார் –
அதாவது
சிஷ்ய ஆசார்யத்வம் ஆகிற சம்பந்தம் உண்டானால்-சேஷ பூதனான சிஷ்யன் -சரீரம் அர்த்தம் -இத்யாதிப் படியே
சர்வமும் அங்குற்றையது என்னும் நினைவாலே சமர்ப்பிக்கையும் –
அப்படி சமர்ப்பித்தவற்றை சேஷியான ஆசார்யன் அங்கீகரிகையும் முறையாய் இருக்க –
இவன் தன்னது என்று அபிமானித்த ஒன்றை ஆசார்யன் ஸ்வீ கரிக்கையும் –
இவன் என்னது என்று அபிமானித்த ஒன்றை ஆசார்யனுக்கு சமர்ப்பிக்கையும்-ஆகிற முறை கேடான –
கொள் கொடை -உண்டான போது-சிஷ்ய ஆசார்யத்வ ரூப சம்பந்தம் குலைந்து விடும் -என்கை-

இவன் மிடியன் ஆகையாலே கொடான்
அவன் பூரணன் ஆகையால் கொள்ளான் –சூரணை -341-
இப்படி தாரித்ர்ய -(த்ரவ்ய )அபஹாரங்கள் வருவதும் – சம்பந்தம் குலைவதும் -கொள் கொடை தான் உண்டாகில் இறே-
அது தான் அவர்கள் செய்யார்கள் என்னும் இடத்தை ச ஹேதுகமாக
அருளிச் செய்கிறார் –
அதாவது –
சிஷ்யனான இவன் சகலமும் ஆச்சார்ய ஸ்வம் -நம்மது என்று சமர்ப்பிக்கலாவது ஒன்றும் இல்லை –
என்று இருக்கும் மிடியன் ஆகையாலே –நாம் அங்குற்றைக்கு ஒன்றைக் கொடுக்கிறோம் என்று கொடான் –
ஆசார்யன் ஆனவன்- ஈஸ்வரன் -சகல பர நிர்வாஹனாய் நடத்திக் கொண்டு போருகையாலே
நமக்கு இனி என்ன குறை உண்டு என்று இருக்கும் பரி பூர்ணனாய் இருக்கையாலே -இவன்
அபிமான துஷ்டமான ஒன்றையும் அங்கீ கரியான் -என்கை-

அவனுக்கு பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –
இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –சூரணை -342-
இந்த பூர்த்தி தாரித்யங்களால் இருவருக்கும் பலித்தவற்றை அருளிச் செய்கிறார் –
அதாவது –
ஆசார்யனுக்கு இவன் அபிமான துஷ்டமானவை ஒன்றையும் கொள்ளாமைக்கு உடலான
பூர்த்தி யாலே ஆச்சார்யத்வம் ஆகிற ஸ்வரூபம் ஜீவித்தது –
சிஷ்யனான இவனுக்கு ஸ்வ கீயத்வ புத்த்யா ஒன்றையும் சமர்ப்பிக்கைக்கு
யோக்யதை இல்லாத சகலமும் -ததீயத்வ பிரதிபத்தி சித்த தாரித்யத்தாலே சிஷ்யத்வம் ஆகிய ஸ்வரூபம் ஜீவித்தது -என்கை –

ஆனால் சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் –சூரணை -343-
இனி சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் இன்னது என்று
அருளிச் செய்வதாக தத் விஷய பிரச்னத்தை அனுவதிக்கிறார் –
அதாவது –
இப்படி கொள் கொடைகளுக்கு யோக்யதை இல்லை ஆகிலும் –
உபகார ஸ்ம்ருதி உடைய சிஷ்யன் -மகோ உபகாரனான ஆசார்யனுக்கு
பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் -என்கை –

ஆசார்யன் நினைவாலே உண்டு –சூரணை -344-
அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –
அதாவது
ஸ்வரூப ஜ்ஞனான சிஷ்யன் நினைவால் ஒருக்காலும் ஒன்றும் இல்லை –
ஸ்வ கிருஷி பல சந்துஷ்டனான ஆசார்யன் நினைவாலே உண்டு -என்கை –

அதாவது- ஜ்ஞான -வ்யவசாய- ப்ரேம- சமாசாரங்கள் –சூரணை -345-
அது என்ன அருளிச் செய்கிறார் –
ஜ்ஞான வ்யவசாய ப்ரேம சமாசாரங்கள்-ஆவன –
ஸ்வரூப யாதாத்ம்ய ஞானமும்-
தத் அநு ரூபங்களான உபாய அத்யவசாயமும் –
உபேய ப்ரேமமும்-
இவை மூன்றுக்கும் அநு ரூபமான சம்யக் அனுஷ்டானமும் –(சம்யக் ஆச்சாரம் சமாசாரம் )
இத்தால் திருமந்த்ரத்தில் பத த்ரயத்தாலும் பிரதிபாதிக்க படுகிற ஸ்வரூப -உபாய -புருஷார்தங்களில் –
ஜ்ஞான வ்யவசாய பிரேமங்களையும் -தத் அநு ரூப அனுஷ்டானங்களையும் சொல்லுகிறது –)

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading