ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -95 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

என் நா அவனை ஒழிய ஷண காலமும் ஏத்தாது என்றாரே
பாவியேன் இப்படிப் பட்ட கரணங்களைக் கொண்டு
சேதனர் சம்சாரத்துக்குப்
பரிகரம் ஆக்கிக் கொண்டபடி என் என்று
விஸ்மிதர் ஆகிறார் –

————————–

நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என்னொருவர்
தீக்கண் செல்லும் திறம் -95-

பதவுரை

நா–(ஸ்தோத்ரம் பண்ணுவதற்குக் கருவியான) நாக்கானது
(ஸ்ரமப்படுத் தேட வேண்டாதபடி )
வாயில் உண்டே–ஒவ்வொருவருடைய வாயிலும் படைக்கப் பட்டிருக்கின்றதே;
ஓவாது–(ஸஹஸ்ராக்ஷரீமாலா மந்த்ரம் போலே இடையிடையே) விட்டு விட்டுச் சொல்லாமல்
உரைக்கும்–( எளிதாக ஒரு மூச்சிலே) சொல்லக் கூடிய
நமோ நாரணாய என்று உரை–திருவஷ்டாக்ஷர மந்த்ரம்
உண்டே–ஸித்தமாயிருக்கின்றதே;
மூவாத–கிழத்தன்மை யற்ற [திரும்பி வருதலில்லாத]
மா கதிக்கண்–பரம ப்ராப்யமான மோக்ஷத்திலே
செல்லும் வகை யுண்டே–சென்று சேர்வதற்கேற்ற உபாயம் உண்டே;
(இப்படி யிருக்கவும் உஜ்ஜீவிக்காமல்)
தீக்கதிக் கண்–விநாசத்துக்குக் காரணமான கெட்ட வழிகளிலே சிலர்
செல்லும் திறம் என்–போய் விழுகிறபடி என்னோ!.

———————————

வியாக்யானம் –

நா வாயில் உண்டே –
இது முன்னம் புறம்பு போய்த் தேட வேண்டாவே
இத்தை ஈஸ்வரன் பண்டே தந்து வைத்தானே
நாவாகில் அவனை ஏத்தக் கண்டது இறே
ஸ்ருஷ்டத்வம் வன வாசாய -அயோத்யா -40-5-என்னுமா போலே –

நமோ நாரணா வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே –
சகஸ்ராஷரீ மாலா மந்த்ரம் என்கிறவை போலே
நீள  நீள ஒரு நாள் எல்லாம் சொல்லா நின்றாலும் முடிவு கொண்டு வர
ஒண்ணாத படி இருக்கை அன்றிக்கே
பத்து உருச் சொல்லி ஒரு கால் இளைப்பாறும் படியான
திருமந்த்ரத்தைத் தந்து வைத்தானே

அந் நாக்குக் கண்டவோபாதி திரு நாமும் இவனுக்கு -அவனே அருளி தந்ததே
கிம் தாத்ரா பஹூபிர் மந்த்ரை-
மற்றை பகவத் மந்த்ரங்களைச் சொல்லுகிறது  –

மூவாத மாக்கதிக் கண் செல்லும் வகை  உண்டே –
சில நாள் இருந்து
பின்னை த்வம்ஸ என்று முகம் கீழ்ப் படத் தள்ளுகை அன்றிக்கே
அபுநரா வ்ருத்தி லஷணமான மோஷத்தை
ப்ராபிக்கும் மரியாதையை உண்டாக்கி வைத்தானே –

என்னொருவர் தீக்கண் செல்லும் திறம் –
இவை இங்கனே குறைவற்று இருக்க
சம்சாரத்தைச் சென்று
ப்ராபிக்கிற பிரகாரம் இருந்தபடி என்

உஜ்ஜீவிக்கைக்கு நேர் வழி கிடக்க
விநாசத்துக்கு ஈடான விலக்கடி தேடி
அனர்த்தப் படுவதே

அநாத்மன் யாத்மா புத்திர்யா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-11 –

ஸ்ரீ ஈட்டில்(-1-2-8) ஸ்ரீ ஸூக்திகள்
நா வாயில் உண்டே -இது முன்னம் புறம்பு தேடித் போக வேண்டாவே –
நமோ நாரணா வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -சஹஸ்ர அக்ஷரமாலா மந்த்ரம் போல் இருக்கை அன்றிக்கே
எட்டு எழுத்தாய் நடுவே விச்சியாதே சொல்லலாம் திரு நாமம் உண்டாக்கி வைத்தானே
மூவாத மாக்கதி கண் செல்லும் வகை உண்டே -புநரா வ்ருத்தி இல்லாத ப்ராப்யத்தை யுண்டாக்கி வைத்தானே
என் ஒருவர் தீக்கதி கண் செல்லும் திறம் -இங்கனே இருந்த பின்பு இவர் தண்ணிய வழி தேடித் போகிறது எங்கனேயோ –

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading