வழி காட்டும் திருப்பாவை- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

பக்தி வளர்க்க ஞானம் வூட்ட ஆழ்வார்கள்

..கண்ணன் கதைகளே பாலும் தேனுமாக கொடுத்து வளர்த்தார் ஆண்டாளை பெரிய ஆழ்வார் .

வாழ்க்கையில் வளம் பெற ஆண்டாள் அருளியவை ..உடல் மனம் ஆத்மா வளம் பெற ..வுயர்ந்த  சிந்தனை ..வுயர்ந்த குறிகோள்கள் தேவை செயல்கள் தேவை நல்ல காலம் தேவை பெருமானை தெரிந்து கொள்ளும்நேரம் பகிர்ந்து கொண்டு அனுபவிக்க –வீடு தெரு ஊர் நாடு வுலகம் வுயரணும்

பக்தி சிந்தனம் வேணும் ..முயற்சி நாம் செய்யணும்.. பலத்தில் பற்று இன்றி நாராயணனே நமக்கே பறை தருவான் அவன் தான் ஏவுகிறான் நம்மை நாம் அவன் வுடல் தடங்கல்  வந்தாலும் நிறை வேற்றுவது அவன் பொறுப்பு மனம் கலங்க கூடாது

பறை -அவனுக்கும் அடியார்களுக்கும் செய்யும் தொண்டு

விதிகள் நெய் உண்ணோம் பால் உண்ணோம் விரதம் நோன்பு நம்மை நாமே வரை அறுத்து கொள்ளணும் கர்ப்ப பெண் குழந்தைக்கு என்று வாழ்க்கை மாற்றி கொள்வது போல

.முன்னோர் இருந்த படி வாழ வேணும் சத்யம் ஆன்மிக சிந்தனை வளர பண்பாடுகள் மாறாமல் இருக்க இரண்டாம் பாசுரத்தால் அருளுகிறாள்

.ஓங்கி வுலகளந்த வுத்தமன் பேர் பாடசொல்கிறாள்  பொருந்திய தேசும் செல்வமும் சேரும் நான் கண்டு கொண்டேன் நாராயணா என்ற நாமம்.. குலம் தரும் செல்வமும் தரும்.. வேதம் அனைத்துக்கும் வித்து

முக் கரணங்கள் அழுக்கு இன்றி ஒருங்கி இருக்கணும் வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து தூ மலர் தூவி தொழுது .இனிய வுளவாக இன்னாது கூறுதல் கனி இருக்க காய் கவர்ந்தது போல சத்யம் வத -உண்மை பிரியமாக இருக்கணும் ஏற்று கொள்ளும் படி சொல்ல வேணும்.மனசில் பெருமாள் இருந்து வாயினால் பேசுகிறோம் என்ற நினைவுடன் பேசணும் சிந்தனை நமது சிறந்த செல்வம்..

மத்து ஓன்று இல்லை சுருங்க  சொன்னோம் சித்த வேண்டாம் சிந்திப்பே அமையும் நினைவில் நெடியான் தொண்டு புரிய தான் வுடல் வுருப்புகள் நாவில் இன் கவி நான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்

அடிகடி பார்ப்பதே மனசில் பதியும் .நல்லதை கண்டு நல்லதை பார்த்து நல்லதை தொட்டு .ஒன்றாக -சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் தேவ பிரானையே தந்தை .

அடியார்க்கு அடியார் .சேர்ந்து அனுபவம் ..பிள்ளாய் பேய்  பெண்ணே..அருள் தருவான் அமைகின்றான் .அடியார்க்கு அடியார் என்றதும் திரு வாட்டாறு எம்பெருமான் -ஆழ்வார் மாம் போல் இருக்கிறார் அவருக்கு அடியவராக இருக்கனுமா அகங்காரம் தடுக்கும் சாஷ்டாங்க நமாஸ் காரம் தலை இரண்டு கால்கள் இரண்டு கைகள் /மனசு புத்தி அகங்காரம் மூன்றும் அடங்கணும் .வெள்ளத்தில் அரச மரம் விழும் நாணல் விழவில்லை -வளைந்து கொடுத்து ..தலை குனிந்து .தொழுதால் எழலாம்.அடியார் அடியார் தம் அடியார் -ஏழு தடவை அருளுகிறார் ஆழ்வார் -பேய் பெண்ணே ..கோது குலம்  உடைய பாவாய் -.மக்கள் சேவை மகேசன் சேவை திரு எட்டு எழுத்து கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -திரு மங்கை ஆழ்வார்– பயிலும் திரு வுடையார் எவர் யேலும் எம் பரமரே -நம் ஆழ்வார்..யாதவ சிம்ஹம் அர்ஜுனன் அடிக்க கோபம்/ ராகவ சிம்ஹம் ஹனுமானை  .நர சிம்ஹம் பிரகலாதனை ஹிம்சிக்க –ஈஸ்வரன் செய்யும் ஆனை தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையால் தான் ..

 எது புண்யம்-வாசிகள் பல ….காரணமே -கர்ம வினை பயன்கள்.. சேமித்து -/தர்ம சாஸ்திரம் விதிக்கும் பலன்கள்..அனுபவித்து தீர்ப்பது ஒருவழி…ஷன பாபம் விலகபல கல்ப காலம் அனுபவிக்கணும்.. சுழல் போல பிறந்து அனுபவித்து இறந்து மீண்டும் பிறந்து -புதை குழி  போல தூரா குழி .. .அவன் திருவடி பற்றி விலக்கணும்..அபராத சகஸ்ர பாஜனம்– கிருபையால் மீட்டி விடுவாய் /நோற்று ஸ்வர்கம் பாசுரம் -போற்ற பறை தரும் புண்ணியன் அவன்..உன் தன்னை பிறவி பெயற்ற புண்ணியம் யாம் பெற்றோம் என்கிறாள் பின்னால்..கிருஷ்ணன் தர்ம சனாதனம்.. அவனுக்கு பிடித்த செயல் செய்தால் புண்யம்..திரு உள்ளத்துக்கு வருத்தம் ஏற்படும் செயல் செய்தால் பாபம்..புண்யம் பாவம் புணர்ச்சி இவையாய்-திரு விண்ணகர பாசுரம் –தொண்டு /பிரகளுக்கு உதவி பண்ண பண்ண மனசும் உடம்பும் சுத்தம் ஆகும்..5

ஆண்டாள்  திருவடிகளே சரணம் .

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading