சங்கரக தனியன் -விஷ்ணு /பிராட்டி /சேனை முதலியார் அனுபவித்தோம்..சார விஷயம் தெரிந்து கொள்ளனும்..மிதுனம்.பர தத்வம்..ச்வரூபதிலும் ரூபத்திலும் இணைந்து இருக்கிறார்கள்..விபு ஸ்வரூபம் -அணு ஸ்வரூபம் இல்லை ஜீவாத்மா போல ..வல மார்பில் அகல கில்லேன் இறையும் என்று எல்லா நிலையிலும் /பர வியூக விபவ அந்தர்யாமி அர்ச்சை /திரு கண்டேன்..பொன் மேனி கண்டேன்.. இணை பிரியாத தத்வம்..குணங்களிலும் சக தர்ம ..பதித்வ குணம் அவனுக்கு.. அவனுக்கு இவள் சேஷி..பெருமான் எம்பெருமான் ஆவது மால் திரு மால் ஆவது இவளால் தான் வாக்ய குரு பரம்பரை-சேனேசம் சரியம்-பிராட்டி சொன்ன பின்பு- இந்திரா உடன் கூட இருக்கும் சக தர்ம சாரணி உடன் இருக்கும் நாராயணன் என்கிறோம்….
பிராட்டிக்கு பரிவு அதிகம்..பிரதனா பதி சேனை முதலியார்..நித்யர் கோஷ்டிகள் இவர் வரை
வகுள மார்பன்….மகிழம் பூ மார்பினன்..வாக்கின் வெள்ளம் -வேதங்களுக்கு விஸ்ரமாக -இளைப்பு எடுக்கும் இடம் ..அந்த சடாரியை வழி படுவோம் ..கர்ம பிரம்மா காண்டம் இரண்டு பாகம் ..இங்குற்ற பலன் லீலா விபூதியில் மாய மயக்குகள் ..இன்புறும் இவ் விளையாட்டு உடையான்..
குருகை காவல் அப்பன் த்யானம் -சொட்டை குலத்தில் உள்ளவர் இருக்கிறாரா / அடியேன் யோக ரகசியம் தை பவ்ர்ணமி சரம திசையில் உபதேசம் பண்ணுவேன் என்று அருள /திரு அனந்த புரம் இருந்து நினைவு கொண்டார்..
ஈஸ்வர முனி குமாரர் ஆளவந்தார்..
உள்ளங்கை நெல்லிக்கனி போல வேதங்களின் உண்மை பொருளை திரு வாய் மொழி மூலம் வழங்கினார் ..நாத -தலைவனை பெற்றோம்..ஆளவந்தாரால் கிளற பட்டு எதி ராஜரால் வளர்க்க பட்டது ..உபய வேதாந்தம் ஆரம்பம் என்பதால் ஸ்ரீ நாத -நமக்கு யார் நிகர் நான் நிலத்திலே ..
நன் நெறியை அவர்க்கு உரைத்த உய்யக் கொண்டார் -இதனால் நன் நெறி விசேஷணம்..
இரண்டு உபதேசம் நாத முனிகள்… இவரோ நன் நெறி மட்டுமே உபதேசித்தார்..
உய்ய கொண்டார் ஸ்ரீ தனமாக நாத முனிகள் -அரவிந்த பாவை பிறந்தகம் -முற்றம் இருந்து அன்னம் சாப்பிட்டார் ..பழைய அன்னம்-ஆச்சார்யர் பிரசாதம் என்று ..பாகவதர் இட்ட வழக்காக இருந்தார்..
நாதன் உலகுகளுக்கு எல்லாம் நாதன்..நாத முனிகள்.. சுத்த சத்வ மயம்..புண்டரீகாஷர்-உய்யக் கொண்டார் ..சமோகம் சர்வ பூதேஷு ..நாத பாவம் நிலை பெற்றதால் கண்ணனே அவதாரம் என்று அரவிந்தாஷன் திரு நாமம்..குண விசேஷத்தால்..பண்டை நாளாலே நின் திரு அருவருளும் பங்கயத்தாள் திரு அருளும் கொண்டு ..நின் கோவில் சீய்த்து பல் படி கால் குடி குடி ஆள் செய்யும் தொண்டரோர்க்கு அருளி ….தாமரை கண்களால் நோக்காய் ..சென் கண் சிறு சிறிதே எம் மேல் விழியாவோ போல..9-2-.பதிகத்தில் .குடி கிடந்தது ஆக்கம் செய்து உன் பாத பங்கயமே தலைக்கு அணியாய் ..மோஷத்தில் தார தம்யம் இல்லை.. அடுத்து கிடந்த நாள் கிடந்தாய்.. தொடர்ந்துகுற்றேவல் செய்து தொல் அடிமை வழி வரும்…தடம் கொள் ..நித்ய சூரிகள் போல கைங்கர்யம்..ஸ்துதி சுருதி பார்த்து செய்வது தீர்த்த அடிமை/ இவர்கள் எம்பெருமான் குறிப்பு அறிந்து செய்பவர் நித்யர்கள்..
பரிஷை பண்ணாமல் சிஷ்யர் ஆக ஏற்று கொள்வது ..கபடம் ஆக வருகிறான என்று பார்க்காமல்..தொல் அடிமை இது தான்..ஏகாந்திகள். சன்யாசிகள் சஞ்சரத்தில் செய்வது..தம்மையே நாளும் வணங்கி தொழுவார்க்கு தம்மையே ஒக்க அருள் செய்வான் ..சத்ர சாமராதிகளுக்கும் உண்டு ஜீயர் சுவாமிகளுக்கு .. இவர்களுக்கு இடம் கொள் மூ வுலகும் தொழ இருந்து அருளாய் என்கிறார் ..நன் நெறியை இவருக்கும் குருகை காவல் அப்பனுக்கு யோக மார்க்கமும் அருளினார் நாத முனிகள்..உய்யக் கொண்டார் மணக்கால் நம்பிக்கு அருளினார்
ராம மிஸ்ரர் ..ராமம் -தனியாக வணகுகிறேன்..ஆள வந்தாருக்கு உபதேசம் பண்ணினார் ..மணக்கால் உஊரில் அவதாரம்.. மிஸ்ரா வாக்கியம் பூஜ்யம்..
நாலாவது ராமர் என்பார் தேசிகன்.. பரசு ராமன்/ ஸ்ரீ ராமன்/ பாலா ராமன் முன்பு மூவரும்..சாஷாத் நாராயணனே மனுஷ்ய சரீரத்துடன் ..நாதன்/கண்ணன்/ ராமன் போல..ஆள வந்தாருக்கு எட்டு வயசு நாத முனிகள் திரு நாட்டுக்கு எழுந்து அருளும் பொது..உய்யக் கொண்டாருக்கு -தளிகை கைங்கர்யம் பண்ணி கொண்டு..குமாரத்திகள் துணைக்கு போக..வாய்க்காலில் சேறு .தானே குனிந்து தம் முதுகில் நடந்து போக பண்ணினார் ..ஆச்சார்யர் சேர்ந்தவர்களுக்கு கைங்கர்யம்.. அடியார் அடியோங்களே போல..பரசு ராமர் ரோஷ ராமர் பொறுமை இன்றி.கர்த வீர்யனை ..21 தலை முறை ஷத்ரிய பூண்டே இல்லாமல் ஒழித்தார்..சாந்தர் இவர்..ஸ்ரீ ராமர் புண்ய ஜனம் -அரக்கர் ரூடியில் அர்த்தம்..பாதகம் பண்ணினவர்..இவரோ அரக்கர் குணம் உடையவருக்கும்-நம் போல்வாருக்கும் பாதகம் பண்ணாதவர் -கீதை அர்த்தம் ஆள வந்தாருக்கு உபதேசித்ததால்..வேறு பாடு இத்தால்.. பாலா ராமன் மது பானம் பண்ணி வெறி ஆசை உண்டு ..மத ரகம் இல்லை..ரெண்கனாதனை காட்டி கொடுத்தார்.. திரு வடி தேனை பருகினாலும் ..வெறி இல்லாதவர்..வேறு பாடு இதனால்..
யாமுநர்-எம்பார் வரை சேர்த்து அருளுவார்கள்..யமுனை துறைவன்.. கண்ணனின் ஷேத்ரம் சேவித்து தனது பேரனுக்கு பெயர் வைக்க சங்கல்பிதார் நாத முனிகள்..அதி பால்யத்தில் மேதாவி. ஆக்கி ஆள்வான் பண்டிதர்..மகா பாஷ்ய பட்டார் இடம் ஆள வந்தார் கற்று வந்தார். கப்பம் கட்ட ஆக்கி ஆள்வான் வர ..ராஜ சபைக்கு பல்லக்கில் ஆள வந்தார் போக -ராணிக்கு தேஜஸ் பார்த்து மகிழ ..பாதி ராஜ்யம் கொடுத்து யமுனை துறைவனை ஆள வந்தார் ஆக்கினார்கள்..சொல்லு இல்லை என்பேன்.. சோதனை ..உன் உடைய அம்மா மலடி அல்ல / மலடி சொல்லணும்..ராஜ சார்வ பௌமன் / சார்வ பௌமன் / இல்லை என்று சொல்லணும் ராஜ பத்னி பத்தி விரதா-பத்தி விரத்தை இல்லை ச்தாபிக்கணும்..கேள்வி கேட்டதும் ஆகி ஆள்வான் பேச முடிய வில்லை..காதலி ஒரு குலை தள்ளும் மலடி.. ஒரே பிள்ளை என்பதால்..கடலால் சூழ பட்ட இடம் ஆள்பவன் சார்வ பௌமன் / . ஏக தேச அதிபதி ராஜா தான்.. சோம கந்தர்வன் அக்னி அபிமானித்த பின்பு கன்னிகா தானம் செய்வதால்.. பத்தி விரத்தை இல்லை.. ஆள வந்தீரோ என்று ராஜ்ய பரி பாலனம் செய்து வந்தார்..
வேதாந்த விஷயத்தில் கண் வைக்க வில்லை.. மணக்கால் நம்பி தூது வளை கீரை ஆறு மாசம் கொடுத்து /பின்பு நிறுத்தி ..போகத்தில் மூழ்கி இருந்த ராஜா கூப்பிட்டு கேட்க..என்ன வேணும் ..உன் இடம் வாங்கி கொண்டு போக வர வில்லை. தாத்தா தனம் இருக்கிறது கொடுத்து விட்டு போக வந்தேன் ..கீதை உபதேசம் பண்ணி சரம ஸ்லோக அர்த்தம் நிதி அருளி பெரிய பெருமாளை சேவிக்க பண்ணி விரக்தி அடைந்து சம்ப்ராதயதுக்கு வந்தார்
Leave a Reply