திருச்சந்த விருத்தம் -11-20-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

பதினோராம் பாட்டு -அவதாரிகை –
நசந்ந சாஸ் சிவ ஏவ கேவல -ஹிரண்ய கர்பஸ் சமவர்த்த தாக்ரே -என்று ப்ரஹ்மாதிகளுக்கும் காரணத்வம் சொல்லுகிறது இல்லையோ என்ன –
உன்னால் ஸ்ருஷ்டரான உன் பெருமையை ஓரோ பிரயோஜனங்களிலே பேச
ஷமரும் அன்றிக்கே இருக்கிற இவர்கள் ஆஸ்ரயணீயராக ப்ரசங்கம் என்
கீழ்ச் சொன்ன காரண வாக்யமும் அவ் வஸ்துவைப் பற்ற அந்ய பரம் என்கிறார் –

சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே –-11-

பதவுரை

சொல்லினால்

வேதாந்த சாஸ்த்ர முகத்தாலே
தொடர்ச்சி நீ

(ஏகாந்திகளுக்கு) உறவை உண்டு பண்ணுமவன் நீ;
சொலப்படும் பொருளும் நீ

(சில புராணாதிகளில் ஆச்ரயணீயராகச்) சொல்லப்படுகிற தேவாதி பதார்த்தங்களுக்கு அந்ராத்மா நீ;
சொல்லரினால் சொல்லப்படாது தோன்றுகின்ற சோதி நீ சொல்லினால்

நீ காட்டிக்கொடுத்த வேதத்திற் சொல்லியபடி
படைக்க

(உலகங்களை) உண்டாக்குவதற்காக
நீ படைக்க வந்து தோன்றினார்

உன்னாலே ஸ்ருஷ்டிக்கப்பட்டு வந்து பிறந்தவர்களான ப்ரஹ்மாதிகன்
சொல்லினால்

சப்தங்களைக் கொண்டு
சுருங்க

சுருக்கமாவாவது
நின் குணங்கள்

உனது கல்யாண குணங்களை
சொல்லவல்லரே.

வர்ணிக்க சக்தர்களோ? (அல்லர்.)

வியாக்யானம் –

சொல்லினால் தொடர்ச்சி நீ –
சப்தத்தாலே சித்தமான புருஷார்த்தத்திலே இழிந்தாருக்கு அதிலே உறவு பிறப்பிப்பாயும் நீ –
தொடர் -உறவு -அதாவது ப்ரத்யட்ஷ விஷயமான சப்தாதிகளே புருஷார்த்தம் என்று இருக்கும் சம்சாரிகளை
ஒழிய வேதாந்த முகத்தாலே வேதைக ஸமதி கம்யமான வஸ்துவை அறிந்து அவ்வஸ்துவைப்
பெற ஆசைப்பட்டவர்களுக்கும் உபக்ர்ம தசையிலே ருசி ஜநகன் -ப்ரஹ்மாதிகள் ப்ரப்த்ரான
ஜநகர் அல்லாமையாலே  ருசி ஜநகரும் அல்லர்

சொலப்படும் பொருளும் நீ –
ஸ்ருதி ச்ம்ர்தியாதிகளிலே ஆஸ்ரயணீயாராகத் தோற்றுகிற தேவதைகளுக்கு ஆத்மாவும் நீ –
ஏநமேகேவ தந்த்யக்நிம் -என்றும் -சதுர்  ஹோதா ரோ யத்ர சம்பதம் கச்சந்தி -என்றும் –
யேய ஜந்தி -என்றும் –

சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ –
வேதாதந்தத்தால் பரிச்சேதிகப் படாது என்று தோன்றுகிற தேஜஸ் சப்த வாச்யன் நீ
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்றும் –
அவிஜ்ஞா தம் விஜாந தாம -என்றும் –
யஸ்யாமதம் தஸ்யமதம் -என்றும் –
பரஞ்சோதி ரூப சம்பத்ய -என்றும் –
நாராயண பரஞ்சோதி
இத்யாதிகளிலே உன் ஸ்வரூபாதிகள் அபரிச்சிந்நங்கள் என்றும் –
பரஞ்சோதி சப்த வாச்யன் நீ என்றும் சொல்லப்படா நின்றது இறே

சொல்லினால் படைக்க-
யோவை வேதாம்ச்ச ப்ரஹிணோ தி தஸ்மை -நீ கொடுத்த வேதத்தை த்ர்ஷ்டியாகக் கொண்டு-
ஜகத் சிருஷ்டி பண்ணுவாராக -ஸ பூரி திவ்யாஹரத்

நீ படைக்க வந்து தோன்றினார் –
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் -என்கிறபடியே நீ ஸ்ருஷ்டிக்க உன் திரு நாபீ
கமலத்திலே வந்து தோன்றின ப்ரஹ்மா முதலான தேவர்கள் –

சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே —
உன் குணங்களை அறிந்து -பரக்க பேச மாட்டாமை அன்றியே ஒரோ பிரயோஜனங்களிலே
சங்ஷேபேண உன் குணங்களைப் பேசவும் மாட்டார்
பரத்வ சாதகமான குணங்கள் -ஜகத் காரணத்வ சாதகமான குணங்கள் -ஆஸ்ரித அர்த்தமான குணங்கள்
இவற்றிலே ஒரோ கோடியைக்  கரை காண மாட்டார்கள் –

—————————————————————————————–

பன்னிரண்டாம் பாட்டு -அவதாரிகை –
ஜகத் காரண பூதனாய் -ஸ்ருஷ்டியாதி முகத்தால் ரஷிக்கும் அளவே அன்றி
அசாதாராண விக்ரஹ உக்தனாய் அவதரித்து ரஷிக்கும் உன் படியை லோகத்திலே ஆர்
நினைக்க வல்லார் என்கிறார் –

உலகு தன்னை நீ படைத்தி யுள் ஒடுக்கி வைத்தி மீண்டு
உலகு தன்னுளே பிறத்தி ஓர் இடத்தை அல்லை ஆல்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகு நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே –12-

பதவுரை

உலகு தன்னை

லோகங்களை
நீ படைத்தி

நீ ஸ்ருஷ்டியாகின்றாய்;
உள் ஒடுக்கி வைத்தி

(நித்யஸநமித்திகாதி ப்ரளயாபத்துக்களிலே அவ்வுலகங்களைத்) திருவயிற்றினுள்ளே ஒடுங்கவைத்து நீயே நோக்கா நின்றாய்.
மீண்டு

அதுமன்றியில்
உலகு தன்னே

இவ்வுலகத்தினுள்ளே
பிறத்தி

வந்து அவதரியா நின்றாய்;
ஓர் இடத்தை அல்லை

ஓரிடத்தை இருப்பிடமாகவுடையை என்று நிர்ணயிக்க முடியாதவனாயிரா நின்றாய்;
உலகு

ப்ரபஞ்சம் முழுதும்
நின்னொடு ஒன்றி நிற்க

(சரீரியான) உன்னோடு (சரீரமாய்) அணைந்து நிற்க
வேறு நிற்றி

அஸாதாரண விக்ரஹகத்தோடு கூடி வ்யாவ்ருத்தனாயிரா நின்றாய்;

ஆதலால்:

உலகில்

லோகத்திலே
குழல் உள்ள நின்னை

ஆச்சரியமான படிகளையுடைய உன்னை
யாவலர் உள்ள வல்லவர்

அறியவல்லாரார்?

 

வியாக்யானம்

உலகு தன்னை நீ படைத்தி
அசித்தை உபகரணமாக கொண்டு ப்ராக்ர்த சிருஷ்டியைப் பண்ணின நீ ப்ரஹ்மாதி
சகல தேவதா அந்தர்யமியாய்க் கொண்டு சகல பதார்த்தங்களையும் சிருஷ்டியா நிற்றி

உள் ஒடுக்கி வைத்தி –

நித்ய நைமித்திகாதி பிரளய ஆபத்துக்களிலே நாம ரூபங்களை இழந்த பதார்த்தங்களை
உன் திரு வயிற்றில் வைத்து ரஷியா நிற்றி –

இத்தால் -சகல பதார்த்த சிருஷ்டிக்கும் கர்த்தாவாய் -சகல சம்ஹாரங்களிலும் ரஷகனாய் இருக்கிறான் –
அடியிலே பஹூஸ்யாம் -என்கிற ஜகத் உபாதான காரண பூதன் என்றது ஆய்த்து

மீண்டு உலகு தன்னுளே பிறத்தி
ஜகத் ஏக காரணத்வத்தால் வந்த வைபவத்தின் நின்றும் மீட்டு உன்னாலே ஸ்ருஷ்டமான
உலகத்திலே சில ஷேத்ரஞ்ஞருக்கு புத்ரனே வந்து அவதரியா நிற்றி –

மீண்டு –
அது போராமே திரியட்டும் என்றுமாம் -சகல பதார்த்தங்களுக்கும் ஜனகனான நீ
உன்னாலே ஸ்ர்ஜயனாய் இருப்பான் ஒரு ஷேத்ரஞ்ஞனை ஜனகனாகக் கொண்டு ஜனிப்பதே –
பிரளய ஆபத்திலே சகல பதார்த்தங்களையும் உன் திரு வயிற்றில் வைத்து ரஷித்த நீ
ஒரு ஸ்த்ரி வயிற்றில் கர்ப பூதன் ஆவதே

ப்ரீத்யாத்வம் தாரயே சாநம் தாத்மயே நாகிலம் ஜகத் -என்னக் கடவது இறே

ஓர் இடத்தை அல்லையால் –
ஓர் ஸ்தலத்தாய் என்று நிர்ணயிக்க ஒண்ணாத வனாகையாலெ ஒரு கோடியிலே
சேர்த்து அறியப் போகிறது இல்லை -அதாகிறது உபாதான காரணத் வத்தாலே புரை
இல்லாமையாலே கார்யம் என்ன ஒண்ணாது –

அவதாரத்தில் சஜாதீய பாவத்தில் புரை இல்லாமையாலே கார்யம் என்ன ஒண்ணாது –
இது என்னபடி என்கிறார் –

உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி
ஜகத்து உனக்கு சரீரம் ஆகையாலே உன்னை பிரியாதே நிற்க -அசாதாராண விக்ரஹ
உக்தனாய் கொண்டு வ்யாவர்த்தனாய் இருத்தி -அதாகிறது -விமுகரான காலத்திலே
ஆத்மாவே நின்று சத்தியை நோக்கியும் -அபிமுகீ கரித்த வன்று சுபாஸ்ரயன் ஆகைக்கு
அசாதாராண விக்ரஹ உக்தனாய் இருக்கும் என்கை -ஆகையால் ஒரு வகையாலும் பரிச்சேதிக்க
ஒண்ணாமையாலே

உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே –
ஆச்சர்யமான படிகளை உடைய உன்னை லௌகிக புருஷர்களில் அறிய வல்லார் ஆர் –

சூழல் -சூழ்ச்சி –

—————————————————————————————

பதிமூன்றாம் பாட்டு -அவதாரிகை –
இவ் வவதார ரஹஸ்யம் ஒருவருக்கும் அறிய ஒண்ணாதோ என்னில் –
கோப சஜாதீயனாய் வந்து அவதரித்த நீ காட்டித்தர -உன் வைலஷண்யம் காணும்
அது ஒழிய ஸ்வ சாமர்த்யத்தாலே காண முடியாது என்கிறார் –

இன்னை என்று சொல்லலாவது இல்லை யாதும் இட்டிடைப்
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்
பின்னையாய கோலமோடு பேருமூரும் ஆதியும்
நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே –13-

பதவுரை

இன்னை என்று

‘நீ இப்படிப்பட்டவன்’ என்று
சொல்லலாவது

சொல்லக்கூடியது
யாதும் இல்லை

ஒரு படியுமில்லை;
உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்

உன்னுடைய அவதாராதி விஷயங்களில் ஆச்ரிதர்க்கும் அநாச்சரிதர்க்கு முள்ள விவாதத்தை அறிந்திருக்கும் மஹான்கள் (உன்னை)
ஆதியும்

(விக்ரக்ஷபரிக்ரக்ஷம் பண்ணினதற்குக்கு) காரணத்தையும்
நீர்மையால் நினைக்கில் (அல்லது)

உன்னுடைய கிருபையினாலே நீ அறிவிக்க இறியுமதெழிய
இட்டிடை பின்னை கேள்வன் என்பர் நின்னை

நுண்ணிய இடையை யுடையளான நப்பின்னைப்பிராட்டிக்கு வல்லபனானகக் கூறுவர்கள்; உன்னுடைய
பின்னை ஆய கோல மோடு

ஸர்வவிலக்ஷணமான திவ்விய மங்கள விக்ரக்ஷத்தையும்
பேரும் ஊரும்

திருநாமங்களையும் திவ்யஸ்தானங்களையும்
ஆர் நினைக்க வல்லர்

(மற்றைப்படி) அறிய வல்லாரார்?

 

வியாக்யானம் –

இன்னை என்று சொல்லலாவது இல்லை யாதும் –
அவதரித்து நிற்கிற நிலையில் -அஜஹத் ஸ்வபாவங்கள் என்ன -சௌலப்யாதிகள் என்ன –
இவற்றிலே ஒரு கோடியிலே உன்னை பரிச்சேதிக்க புக்கால் ஏவம்விதன் என்று சொல்லல் ஆவது இல்லை –

ஆதி அம் ஜோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த
இட்டிடைப் பின்னை கேள்வன் என்பர் –

அஜாயமானோ பஹுதா விஜாயதே தச்ய தீரா பரிஜாநந்தி யோனீம் (புருஷ ஸூக்தம் )

தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம் -என்கிறபடியே

அவதார ரஹச்ய ஞானம் உடையவர்களும்
மிதுனமே ஆஸ்ரயணீயம் -என்று சஜாதீயரில் வ்யாவர்தனான உன்னை உபதேசிப்பார்கள் –
நேரிதான இடையை உடைய நப்பின்னை பிராட்டிக்கு வல்லபன் என்று சொல்லுவார்கள்

யாதுமிட்டு –என்று கீழோடு கூட்டின போது சுபாஸ்ரயத்தை ஓதுகிற பிரகரணங்களில்
அங்குஷ்டமாத்ரேபுருஷோமத்யாஆத்ம நிதிஷ்டதி (கட உபநிஷத் -2-1-12) –

அங்குஷ்ட மாத் ரம் என்றும் –

அக் நிர் மூர்த்தோ சக்ஷுசி சந்ரே சூர்யோ திஷ ஸ்ரோத்ரோ வாக் விவ்ருதாக்ஷ வேதா
வாயுப் ப்ராணோ ஹ்ருதயம் விஸ்வமச்ய பத்ப்யாம் ப்ருதுவீ ஹ்யேஷ சர்வபூதாந்தராத்மா (முண்டக உபநிஷத் -2-1-4)
அக்நிர் மூர்த்தா சஷு ஷீ சந்த்ர சூர்யௌ -என்கிறபடியே

த்ரைலோக்ய சரீரன் என்றும் -இத்யாதிகளில் சொல்லுகிற ஸூபாஸ்ரயங்களை அடங்க விட்டு –

தேவேத்யே தேவதேஹேயம் மனுஷ்வத்யே ச மானுஷீ
விஷ்னோ தேவேனரூபாம் வை கரோத் யேஷாத் மனஸ் தனும் (ஸ்ரீ விஷ்ணு புராணம் 1-9-145)

மனுஷ்யத்வே சமாநுஷீ -என்று கோப சஜாதீயனாய் வந்து அவதரித்த நீளா வல்லபனே –
ஸூபாஸ்ரயமம் என்பார்கள் –

உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர் –
உன் நிமித்தமாக ஆஸ்ரிதருக்கும் அநாஸ்ரிதருக்கும் உண்டான விவாதத்தை

அனுசந்திக்கும் பண்டிதர்கள் -அதாகிறது –
பேருமோர் ஆயிரம் பிற பல உடைய வெம்பெருமான் -என்றாய்த்து ஆஸ்ரிதர் உடைய அறிவு
பேருமோர் உருவம் உளதில்லை -என்றாய்த்து அநாஸ்ரிதர் உடைய அறிவு –
இந்த விவாதத்துக்கு அடி நீ என்று அறியுமவர்கள்

பின்னையாய கோலமோடு பேருமூரும் ஆதியும் நின்னை –
இதர சஜாதீயனாய் வந்து அவதரித்து நிற்கச் செய்தே -சர்வ விஸ ஜாதீயமான வைலஷ்ண்யத்தை உடைய
விக்ரஹம் என்ன -அவதாரத்தில் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான
திருநாமங்கள் என்ன -அவதரித்த தேசப் பிரபாவம் என்ன -அவதார விக்ரஹத்துக்கு
நிதானம் என்ன -இவற்றை உடையனான உன்னை –

அதவா –
அவதார சமாப்தியில் விச்ரம ஸ்தலமான வ்யூஹ விக்ரஹங்கள் என்ன -தத் தத் குண
சேஷ்டித வாசகங்கள் ஆன திருநாமங்கள் என்ன -ஆமோதாதி வ்யூஹ நிதானங்கள் என்ன –
இவற்றுகடியான பரத்வம் என்ன -இவற்றை உடைய உன்னை என்றுமாம்-

யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே —
நீர்மையால் நினைக்கில் அல்லது ஆர் நினைக்க வல்லர் -உன்னுடைய
நீர்மையினால் நீ அறிவிக்க அறியும் அத்தனை  ஒழிய வேறு அறிய வல்லார் ஆர் -அதாகிறது –
பஹூ நி மேவ்ய தீதாநி -என்று தொடங்கி –ஜன்ம கர்ம ச மே திவ்யம் -என்று நீ
அறிவித்தாப் போலே அறிவிக்க அறியும் அத்தனை –

பஹூனீமே வ்யதீதாநி ஜன்மாநி தவ சார்ஜுன –

ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத்த:
த்யக்த்வா தேஹம் புனர்ஜன்ம நைனி மாமேதி சோர்ஜுன-(ஸ்ரீ கீதா -4-9-)

———————————————————————————————

பதினான்காம் பாடு -அவதாரிகை –
நம் அவதார ரஹச்யம் நீர் அறிந்த படி என் என்னில் –
பிரயோஜனாந்த பரர்க்காக திர்யக் சஜாதீயனாய் வந்து அவதரித்த உன் குணங்களை
பரிச்சேதித்து  அறிய மாட்டேன் ஆகிலும் -அவ் வடிவு வேதைக சமதி கம்யம் என்று
அறிந்தேன் என்கிறார் –

தூய்மை யோகமாயினாய் துழாய் அலங்கல் மலையாய்
ஆமையாகி ஆழ் கடல் துயின்ற வாதிதேவ நின்
நாமதேயமின்னதென்ன வல்லமல்ல வாகிலும்
சாமவேத கீதனாய சக்ர பாணி அல்லையே –14-

பதவுரை

தூய்மை யோகம் ஆயினாய்

ஸம்ஸாரிகள் அழுக்குடம்பு நீங்கிப் பரிசுத்தமான அப்ராக்ருத சரீரம் பெறும்படி அருள் செய்யுமவனே!
துழாய் அலங்கல் மழையாய்

திருத்துழாய்மாலை யணிந்துள்ளவனே!
ஆமை! ஆகி! ஆழ்! கடல்! துயின்ற! ஆதிதேவ!

கூர்மருபியாய் ஆழ்ந்த கடலிலே திருக்கண் வளர்ந்தருளின ஆதி தேவனே!
நின் நாமதேயம்

உனது திருநாமங்களுக்கு வாச்யமான குசேஷ்டிதங்கள்
இன்னது என்ன

இன்னின்னவை யென்று சொல்ல
வல்லம் அல்ல ஆகிலும்

யாம் ஸமர்த்தர்களல்லோ மாயிலும்
சாம வேத கீதன் ஆய

ஸாமவேதத்திலே ப்ரதிபாதிக்கப்பட்டவனான
சக்ர பாணி அல்லையே

கையிலே திருவாழி யணிந்த பரமபுருஷன் நீயேயிறே (என்று சொல்லவல்லோம்)

வியாக்யானம்

தூய்மை யோகமாயினாய் –
அசித் சம்சர்க்கத்தாலே அசுதனான சம்சாரிக்கு உன் கிருபையாலே அசித் சம்சர்க்கத்தை
அறுத்து -நித்ய ஸூரிகளோடு சேர்த்து உன்னை அனுபவிக்க வல்ல சுத்தி யோகத்தை
உடையவனே -சம்சாரி சுத்தி யோகத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே –

இத்தால் –
சம்சார உத்தரணத்துக்கு உபாயமும் நீயே என்கை –
ஹேய ப்ரத்ய நீகன் ஆனவனே இறே -சேதனருக்கு சம்சாரம் ஆகிற அசுதியைப் போக்க வல்லான்

துழாய் அலங்கல் மலையாய் –
சர்வேஸ்வர சிஹ்னமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ர்தன் ஆனவனே
திருத் துழாய் -நாதத்வ சிஹ்னம் ஆகையாலும் -போஹ்யத்வ சிஹ்னம் ஆகையாலும்
ப்ராப்ய பூதனும் நீயே என்கை
ஆமையாகி –
பிரயோஜநாந்தர பரரான தேவர்களுக்கு அமர்த மதனதுக்கு அனுகூலமான கூர்ம வேஷத்தை கொண்டு

ஆழ் கடல் துயின்ற –
அகாதமான கடலிலே மந்த்ரம் அமிழ்ந்தாத படி உன் முதுகிலே அது நின்ற சுழலக் கண் வளர்ந்து அருளினவனே –
ஷீரோத மத்யே த்வபவத் கூர்ம ரூபீ ஸ்வயம் ஹரி -என்னக்  கடவது இறே

ஷீரோத மத்யே பகவான் கூர்ம ரூபீ ஸ்வயம் ஹரி
மந்தராத்ரேரதிஷ்டானம் ப்ரமதோபூன்மஹாமனே (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-88)

வாதிதேவ –
ஜகத்துக்கு நீயே காரண பூதன் என்னும் இடத்தை பிரகாசிப்பித்தவனே
பிரயோஜநாந்த பரர் என்று பாராதே அவர்கள் ஆபத்துக்கு உன்னை அழிய மாறி
உதவுகை யாகிற இது உத்பாதகர்க்கு அல்லது கூடுமோ என்கை

நின் நாமதேயமின்னதென்ன வல்லமல்ல வாகிலும் –
கூர்ம ரூபியான தேவரீர் உடைய குண சேஷ்டிதங்களை  ஏவம் விதம் என்று
பரிச்சேதித்து சொல்ல மாட்டேன் ஆகிலும் –

நின்னாமதேயம் -என்று
வாச்யமான குண சேஷ்டிதங்களை தத் வாசகமான சப்தத்தாலே லஷிக்கிறது –

சாமவேத கீதனாய சக்ர பாணி அல்லையே —
நீ அழிவுக்கு இட்ட கூர்ம விக்ரஹம் சாந்தோக்ய சித்தமாய் -கையும் திரு வாழியுமான
அதி ரமணீய விக்ரஹம் என்று அறிந்தேன் –

யஷோந்தராதித்யே ஹிரண்மயம் புருஷோ தர்ச்யதே -என்றும்

சவித்ர் மண்டலமத்யே வரதீ நாராயணா -த்ர்த சங்கசக்ர -என்றும் சொல்லக் கடவது இறே

ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மயம் புருஷோ தர்ச்யதே ஹிரண்மய ஸ்மஸ்ருர்
ஹிரண்யகேஸ ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸுவர்ண: தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவ மக்ஷிணி (சாந்தோக்யம் 1-6 and 7)

த்யேயஸ் ஸதா சவித்ர் மண்டலமத்யே வரதீ
நாராயணாயஸ் சஸரஸிஜாஸன ஸன்னிவிஷ்ட
கேயூரவான் மகரகுண்டலவான் கிரீடி
ஹரீ ஹிரண்மயவபுர் -த்ர்த சங்கசக்ர (ஸ்ரீ நரஸிம்ஹ புராணம் )

——————————————————————————————-

பதினைந்தாம் பாட்டு -அவதாரிகை –
வேதைக சமதிகம்யமான ஸ்வ பாவத்தை உடைய நீ ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக
அவதார கந்தமான திருப்பாற்கடலிலே கண் வளர்ந்து அருளுகிறது பர தசை என்னலாம்படி
அங்கு நின்றும் ஆஸ்ரிதர் உகந்த ரூபத்தையே உனக்கு ரூபமாகக் கொண்டு வந்து அவதரித்த
உன்னுடைய நீர்மையை ஒருத்தரால் பரிச்சேதிக்க போமோ என்கிறார் –

அங்கமாறு வேத நான்கு மாகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணைத் தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வா மல்கு சீரினாய்
சங்க வண்ண மன்ன மேனி சாரங்க பாணி யல்லையே –15-

பதவுரை

அங்கம் ஆறும்

சீக்ஷை முதலிய ஆறு அங்கங்களென்ன
வேதம் நான்கும்

(அங்கியான) நான்கு வேதங்களென்ன (இவற்றுக்கு)
ஆகி நின்று

ப்ரவர்த்தகனாய் வேதங்களினுள்ளே
தங்குகின்ற தன்மையாய்

ஸுப்ரதிஷ்டிதமாயுள்ள ஸ்வரு பஸ்வாபங்களையுடையவனே!
தடம் கடல்

மஹா ஸமுத்திரத்திலே
பணம் தலை செம் கண் நாக அணை

படங்களின் தலையிலே சிவந்த கண்களை யுடையனான தீருவனந்தாழ்வானாகிற அணையிலே
கிடந்த

கண்வளர்ந்தருளுகிற
மல்குசெல்வம் சீரினாய்

நிறைந்த செல்வத்தையும் குணங்களையுடையவனே!
சஙக வண்ணம் அன்னமேனி

சங்கினுடைய வர்ணம் போன்ற திருமேனியை யுடையனாய் (கிருத யுகத்தில் திருவவதரித்து)
சாரங்கபாணி அல்லையே

(த்ரேதா யுகத்தில் இக்ஷ்வாகு குலத்திலே) கையும் வில்லுமாய் வந்து பிறந்தவன் நீயே யன்றோ?

 

வியாக்யானம் –

அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று –
சீஷாத் யங்கங்கள் யாறும் –

சீஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்பம்

அஷரங்களை உச்சரிக்க வேண்டியதை சீஷை சொல்லும்
பிரகிருதி பிரத்யாயங்களை பாகுபடுத்தி வியாகரணம் சொல்லும்
அர்த்த விவேகம் நிருக்தம் சொல்லும்
காலங்களை ஜ்யோதிஷமும்
வைதிக கர்மங்களை அனுஷ்டிக்க வேண்டிய முறைகளை கல்பமும் சொல்லும்

அங்கியான வேதங்கள் நாலும் -ஆகிற இவற்றுக்கு பிரவர்தகனாய் நின்று
அவற்றுளே தங்குகின்ற தன்மையாய் –
சாங்கமான வேதங்களினுள்ளே ப்ரமேயமாய் வர்த்திக்கிற ஸ்வபாவங்களை உடையவனே –

ஆகி நின்று அவற்றுளே –
நிர்தோஷ பிரமாணமாய் நின்றவற்றுள் என்னவுமாம்

சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம்
ஸோஅஸ்னுதே ஸர்வான் காமாந்சஹ ப்ரஹ்மணோ விபஸ்ஸிதேதி
(தைத்ரியம் ஆனந்த வல்லி -1-2)

வேத ப்ரதிபாத்யமான ஸ்வபாவங்கள் ஆவன -சத்யம் ஞானம் -இத்யாதிகளில் சொன்ன சர்வாதிகத்வம் என்ன –

யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித் யஸ்ய ஜ்ஞாநமயம் தப:
(முண்டக உபநிஷத் -1-1-10)

யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -இத்யாதிகளில் சொன்ன கல்யாண குணங்கள் என்ன –

யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ருயதே அபிவா
அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித
(தைத்ரியம் நாராயண ஸூக்தம் -11)

வ்யாப்ய நாராயணஸ்  ஸ்திதி -இத்யாதிகளில் சொன்ன உபய விபூதி நாதத்வம் என்ன –

மகாரஜதம்வாஸ -இத்யாதிகளில் சொன்ன விக்ரஹ யோகம் என்ன –
யாஷோந்தராதித்ய ஹிரண்மய புருஷ -இத்யாதிகளில் சொன்ன அவதாரங்கள் என்ன –

தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய
திவீவ சக்ஷூராததம்
தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாம்ஸஸ் ஸமிந்ததே
விஷ்ணோர்யத் பரமம் பதம் (ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் )

தத் விஷ்ணோ பரமம் பதம் -இத்யாதிகளில் சொன்ன நித்ய விபூதி யோகம் என்ன –இவை

தடம் கடல் இத்யாதி –
வேதைக சமதிகம்யமாய் -ஸ்வபாவங்களைக் கேட்டே போகாதபடி திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளி இக் குணங்களை பிரகாசிப்பித்தவனே –

இடமுடைதான கடலிலே -உன்னுடைய ஸ்ப்ர்சத்தாலே விகசிதமான பணத்தின்
தலையிலே மதுபாநமத்தரைப் போலே சிவந்த திருக் கண்களை உடையவனான
திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே கண் வளர்ந்து அருளி -நிரவதிகமான
ஐஸ்வர்யத்தையும் கல்யாண குணங்களையும் உடையவனே

சங்க வண்ணம் அன்ன மேனி இத்யாதி –
ஷீரார்ணவசாயித்வம் பரத்தாசை என்னும்படி அங்கு நின்றும் க்ருத யுகத்திலே
சேதனர் விரும்புகைகாக சங்கம் போலே இருக்கிற திரு மேனியை உடையாய் அவதரித்து –
அதுக்கு மேலே த்ரேதா யுகத்தில் ஆஸ்ரித விரோதிகளான ராவணாதி கண்டகரை
நிரசிக்கைகாக ஷத்ரிய குலத்தில் வந்து அவதரித்து ஸ்ரீ சார்ங்கத்தை திருக் கையில் தரித்தவன் அல்லையோ –
இப்படி காளமேக நிபாஸ்யாமமான திரு நிறத்தை அழிய மாறியும் –

அப்ரவீத் த்ரிதஸ ஸ்ரேஷ்டாந் ராமோ தர்மப்ருதாம் வர
ஆத்மாநம் மானுஷம் மந்யே ராமம் தாசரதாத்மஜம்-(யுத்த -117-11)

ஆத்மாநாம் மாநுஷம் மநயே -என்று பரத்வத்தை அழிய மாறியும் ரஷித்த உன்னுடைய
நீர்மையை பரிச்சேதித்து அறியலாவார் ஆர் என்று வாக்ய சேஷம் –

—————————————————————————————————-

பதினாறாம் பாட்டு -அவதாரிகை –
திருப் பாற் கடலிலும் நின்று இப்படி தேவ மனுஷ்யாதிகளிலே அவதரித்து ரஷிக்கும்
அளவு அன்றிக்கே -ஸ்தாவர பர்யந்தமாக சதுர்வித ஸ்ருஷ்டியிலும் அவதரித்து உன்னை
சர்வ அனுபவ யோக்யன் ஆக்கினாலும் -பிரமாண கணங்கள் பரிச்சேதிக்க மாட்டாத படி
இறே உன்னுடைய அவதார வைலஷண்யம் இருப்பது என்கிறார் –

தலைக்கணத் துகள் குழம்பு சாதி சோதி தோற்றமாய் –
நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடிரும்
கலைக் கணங்கள் சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின் தன்  மாட்சியே —-16-

பதவுரை

தலைக்கணம்

முதன்மை பெற்ற தேவ கணமென்ன
துகள்

க்ஷுத்ரமான ஸதாவர கணமென்ன
குழம்பு சாதி

மிச்ர யோனிகளான மநுஷ்ய திர்யக் ஜாதிகளென்ன இவற்றிலே
சோதி

அப்ராக்ருதமான தேஜஸ்ஸோடே கூட
தோற்றம் ஆய்

திருவவதரித்து
நிலைக் கணங்கள் காண

(தேவாதிகள் மாத்திரமே யன்றியே) ஸ்தாவரங்களும் (உன்னை) அனுபவிக்கும்படி
வந்து நிற்றி

வந்து நிற்கிறாயாகிலும்
ஏலும் நீடு  இரும் கலை கணங்கள்

நித்தியமாய் விரிந்தவையான வேத சாஸ்திர ஸமூஹங்கள்
சொல் பொருளினால்

அபிதாந வ்ருத்தியாலும்
கருத்தினால்

தாம்பர்ய வ்ருத்தியாலும்
நினைக்க ஒணா

(உன் பெருமைகளை) நினைக்கவும் மாட்டாமல்
மலை கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி

பர்வத ஸமூஹஙகள் போல் அபரிச்சேத்யமாக அறிவிக்கும் வைலக்ஷண்யமானது
நின் தன் மாட்சியே

உன்னுடைய வைலக்ஷண்ய மென்னுமித்தனை

வியாக்யானம் –

தலைக்கணத் துகள் குழம்பு சாதி –
தேவ கணம் என்ன -சூத்ர கணம் என்ன -நடு உண்டான மனுஷ்ய திர்யக்க்குகள் என்ன –
சதுர்வித சரீரங்களிலே –

குழம்பு சாதி –
தேவ கணம் புண்ய யோநியாய் -ஸ்தாவரங்கள் பாப யோநியாய் -மனுஷ்ய திர்யக்க்குகள்
இரண்டும் புண்ய பாப மிஸ்ர யோநிகள் யாகையாலே –குழம்பு சாதி என்கிறது –
திர்யக்குகளுக்கு மிஸ்ர யோநித்வம் ஆஹார நித்ராதிகளாலே மனுஷ்ய சாம்யம் உண்டாகையாலே
ஷூத்ர கணம் என்று -ஸ்தாவரத்துக்கு உப லஷணம்

துகள் –

குற்றமும் புழுதியும்

சோதி தோற்றமாய் –
பரஞ்சோதி ரூப சம்பத்ய -என்கிற திவ்ய சமஸ்தானத்தை சதுர்வித ஜாதிகளிலும்
சஜாதீயமாக்கி அவதரித்து
ஸ்தாவர ஜாதியிலும் குப்ஜம்ரமாய் அவதரித்தான் இறே

நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும்
தேவாதிகளே யன்றியே ஸ்தாவரங்களும் உன்னை அனுபவிக்கும்படி வந்து -நின்றாலும் -அதாவது

உன்னை ஸ்பர்சித்த வாயு அவற்றை ஸ்பர்சிக்க ஸ்தாவரத்வ ஹேதுவான
பாபம் போகும் என்கை

நீடு இரும் கலை-இத்யாதி
நீ இப்படி தாழ நின்றாலும் பிரமாணங்கள் உன்னுடைய அவதார வைபவத்தை நெஞ்சாலும்
பரிச்சேதிக்க மாட்டாது –

நீடிரும் கலைக் கணங்கள் –
ஸ்வரூபேணவும் -ப்ரவாஹ ரூபேணவும் -நித்தியமான பரப்பை உடைத்தாய் இருந்துள்ள
சதுர்தச வித்யா ஸ்தானங்களும்

கலை -என்று வேதமும் அங்கமும் –
அங்காநி சதுரோ வேத -இத்யாதியிலே சதுர்தச ஸ்தானங்கள் சொல்லப் பட்டது இறே

அங்காநி சதுரோ வேதா மீமாம்ஸா நியாய விஸ்தர:
புராணம் தர்ம ஸாஸ்த்ரஞ்ச வித்யோ ஹேதாஸ் சதுர்தஸ (ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-6-28)

சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா
அபிதாந வ்ர்த்தியாலும் தாத்பர்ய வ்ர்த்தியாலும் ஒரோ அவதாரத்தை நெஞ்சாலும்
பரிச்சேதிக்க மாட்டாமையாலே

மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின் தன்  மாட்சியே —
பர்வத சமூஹங்கள் போலே அபேத்யமாய் அபரிச்சினமான உன்னுடைய அவதார
குண சரித்ரங்கள் என்ற வற்றாலே அறிவிக்கப்படும் வை லஷண்யம் உன் வை லஷண்யம்

மாட்சி -அழகு –

————————————————————————————————

பதினேழாம் பாட்டு-அவதாரிகை –
பரமபத நிலயனாய் இருந்து -நித்ய விபூதியை நிர்வஹித்து
வ்யூஹம் முதலாக ஸ்தாவர பர்யந்தமாக அவதரித்து லீலா விபூதியை நிர்வஹித்தும் –
போகிற இவை ஒரொன்றே பிரமாணங்களால் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்க-
அதுக்கே மேலே அர்ச்சாவதார ஸூலபனாய் -ஆஸ்ரிதருடைய இச்சாதீநனாய்
தன்னை நியமித்த இஸ் ஸ்வபாவம் என்னாய் இருக்கிறதோ என்று அதிலே வித்தராகிறார் –

ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது மேல்
ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் ஆதி தேவனே –17-

பதவுரை

ஆதி தேவனே

ஸர்வகாரண பூதனான பெருமாளே!
ஏக மூர்த்தி ஆய்

(பரமபத நிலயனான) பரவாஸு தேவ மூர்த்தியாய்
மூன்று மூர்த்தி ஆய்

ஸங்கர்ஷண, ப்ரத்யம்ந, அநிருத்தர்களாகிற மூன்று மூர்த்தியாய்
முதலாயிரம்

திருச்சந்த விருத்தம்
நாலு மூர்த்தி ஆய்

ப்ரதாநம், புருஷன், அவ்யக்தம், காலம் என்னுமிவற்றை சரீரமாகக்கொண்ட நாலு மூர்த்தியாய்
நன்மை சேர் போகம் மூர்த்தி ஆய்

விலக்ஷணமாய்ப் போகத்தக்கு அர்ஹமான மூர்த்தியாய்
புண்ணியத்தின் மூர்த்தி ஆய்

புண்யமே வடிவுகொண்டதொரு மூர்த்தியாய்
எண் இல் மூர்த்தி ஆய்

(இப்படி) எண்ணிறந்த (பல பல) மூர்த்தியாய்
நலம் கடல்

நல்ல திருப்பாற்கடலில்
நாகம் மூர்த்தி சயனம் ஆய் கிடந்து

திருவனந்தாழ்வானுடைய திருமேனியைப் படுக்கையாக வுடையவனாய்க் கண் வளர்ந்தருளி
மேல்

அதுக்குமேலே
ஆக மூர்த்தி ஆய வண்ணம்

அடியார்கள் உகந்த உருவமாகிய அர்ச்சரவதாரமாய் அவதரித்த தன்மை
என் கொல்

என்னாயிருந்தது.

வியாக்யானம் –

ஏக மூர்த்தி
வாசுதேவோசி பூர்ண -என்கிறபடி ஞாநாதி ஷட் குண பூர்ணனாய் -நிஸ்தரங்க ஜலதி
போலே பரமபத நிலயத்திலே எழுந்து அருளி இருந்து -நித்ய சித்தரும் முக்தரும் அனுபவிக்க
இருக்கிற அத்விதீயமான மூர்த்தியை உடையாய் –

மூன்று மூர்த்தி –
அந்த ஷட் குணங்களில் இவ்விரண்டு குணங்களை பிரகாசிப்பித்துக் கொண்டு

ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணுகைக்காக சங்கர்ஷணாதி ரூபத்தாலே மூன்று மூர்த்தியாய்

நாலு மூர்த்தி –
பர அவஸ்தையும் வ்யூஹங்களோடு எண்ணலாம் படி பரார்தமாய் இருக்கையாலே
அத்தையும் கூட்டி நாலு மூர்த்தி -என்கிறது –

அதவா –
வ்யூஹ கார்யமான ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு உபயோகமாய் இருக்கிற பிரதான புருஷ
அவ்யக்த காலங்களைசரீரமாக உடையனாய் இருக்கறபடியை  சொல்லுகிறது என்னவுமாம் –

நன்மை சேர் போக மூர்த்தி –
அனுக்ரஹ ப்ராசுர்யமாகிற நன்மையை உடைத்தாய் -சம்சாரிகளுக்கு போக யோக்யமான மூர்த்தி –

அனுக்ரஹ ப்ராசுர்யமாவது -ஸ்வ அசாதாரணமாய் அப்ராப்ரக்ருதமான விக்ரஹத்தை –

தேவாதி சஜாதீயமாக்கிக் கொண்டு சம்சாரிகளுக்கு சஷூர் விஷயமாம் படி பண்ணுகை –

அதவா –
ஆமுஷ்மிகத்தில் நித்ய அனுபவத்தோடு சேர்ந்த நன்மையை உடைத்தாய் -ஐஹிகத்தில்
போக ரூபமாய் இருக்கும் மூர்த்தி என்னவுமாம் –

புண்ணியத்தின் மூர்த்தி –
அது தான் பாக்யாதிகருடைய புண்ய விபாகத்தில் பலிப்பதாய் இருக்கை –
பரித்ராணாயா ஸாதூநாம் -என்று பரம பக்தி உக்தருக்கு ஸ்வயம் பிரயோஜனமாய் –

சித்த சாதன பரிக்ரஹ உக்தருக்கு சரணமாயும் -உபாசகருக்கு சுபாஸ்ரயமாயும் இறே இருப்பது –

மாநுஷீம் ததுமாச்ரிதம் பரம்பாவமஜா நந்த -என்று பாஹ்ய ஹீநராய் -அவதாரத்துக்கு இழவாளராக சொல்லா நின்றது இறே –

எண்ணில் மூர்த்தியாய் –
இப்படி அசங்யாதமான விபவ ஜாதீயமான விக்ரஹத்தை உடையையாய் –
பஹுதா விஜாயதே -என்று ஸ்ருதி –

பஹூநி -என்று ஸ்வ வாக்யம் –

சன்மம் பல பல -என்று அபி உக்தர் வாக்யம் –

நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது மேல் –
இப்படி அசங்யாதமான அவதாரங்களை பண்ணின இடத்திலும் தன் திரு உள்ளத்துக்கு ஏற
சம்சாரிகள் தன்னை வந்து கிட்டாமையாலே உபேஷித்து பரம பதத்தில் போக பிராப்த்மாய்
இருக்க   -ரஷணத்தில் ஆசையாலே திருப் பாற் கடலிலே சேர்ந்த நீர்மையை சொல்லுகிறது

நலம் கடலிலே நாக மூர்த்தி சயனமாய் கிடந்தது அவதார ஸ்தலங்கள் போலே சிரகாலாவதி
இன்றிக்கே பிரளய அவதியாக விரும்பி கண் வளர்ந்து அருளுகையாலே –நலம் கடல் -என்கிறது –

திருவனந்தாழ்வான் திருமேனி யாகிற படுக்கையிலே கண் வளர்ந்து அருளி –

மேலாக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் –
அதுக்கு மேலே ஆஸ்ரிதர் தேவரீருக்கு விக்ரஹமாக நினைத்த த்ரவ்யத்திலே ஸ்வ அசாதாராண
விக்ரஹத்தில் பண்ணும் விருப்பத்தை பண்ணுகிற இஸ் ஸ்வபாவம் என்னாய் இருக்கிறது –

ச்ம்ர்த்தம் சங்கல்ப நா மயம் -என்றும் –

யேய தாமம் ப்ரபத்யந்தே -என்றும் சொல்லுகிறபடி
ஆஸ்ரிதர் உனக்கு விக்ரஹமாக நினைத்த த்ரவ்யத்தை இ றே ஸ்வ அசாதாராண
விக்ரஹத்தோபாதி விரும்புவது -தமர் உகந்த எவ்வுருவம் அவ்வுருவம் ஆனாய்

ஆதி தேவனே —
ஜகத்துக்கு எல்லாம் காரண பூதனான நீ கார்ய பூதனாய் இருப்பான் ஒரு சேதனனுடைய
இச்ச அதீநமாக உன்னைப் பண்ணுவதே -என்று கருத்து –
இவ்விருப்பத்துக்கடி -உடையவன் ஆகையாலே என்று ஹேதுவுமாம் –

————————————————————————————————–

பதினெட்டாம் பாட்டு -அவதாரிகை –
நாக மூர்த்தி சயனம் -என்றும் -தடம் கடல் பணைத் தலை செங்கண் நாகணைக் கிடந்த –
என்றும் அவதார கந்தமான ஷீராப்தி சயனம் ப்ரஸ்துதமானவாறே -திரு உள்ளம் அங்கே
தாழ்ந்து -அர்த்திதோ மாநுஷே லோகே -என்கிறபடியே அவதாரங்களில் உண்டான
அர்த்தித்வம் அன்றிகே இருக்க விசத்ர்ச தேசத்தில் வந்து கண் வளர்ந்து அருளிகிற தேவரீர் உடைய
வாசியை ஆரறிந்து ஆச்ரயித்து கார்யம் கொள்ள -என்கிறார் –

விடத்த வயோராயிரம் ஈராயிரம் கண் வெந்தழல்
விடுத்து விள்விலாத போக மிக்க சோதி தொக்க சீர்
தொடுத்து மேல் விதாநமாய பௌவ நீர் அராவணைப்
படுத்த பாயில் பள்ளி கொள்வது என் கொல் வேலை வண்ணனே –18-

பதவுரை

வேலை வண்ணனே

கருங்கடல் வண்ணனான எம்பெருமானே!
விடத்த

விஷத்தையுடைத்தான
ஒரு ஆயிரம் வாய்

ஓராயிரம் வாய்களினின்றும்
இரு ஆயிரம் கண்

ஈராயிரம் கண்களினின்றும்
வெம் தழல்

வெவ்விய தழலை
விடுத்து

புறப்படவிட்டுக்கொண்டு,
வீழ்வு இலாத போகம்

ஒரு காலும் விச்சேதமில்லாத பகவநறுபவத்தையுடையனாய்
மிக்க சோதி

மிகுந்த ஜ்யோதிஸ்ஸையுடையனாய்
விதானம் ஆய்

மேற்கட்டிபோன்ற படங்களினுடைய
மேல்

மேற்புறத்திலே
தொக்க

திரள்திரளாயிருக்கிற
சீர்

அழகை
தொடுத்து

தொடுத்து
பௌவம் நீர்

ஸமுத்ரஜலத்திலே
படுத்த

படுக்கையாக அமைந்த
அரா அணை பாயல் பள்ளி கொள்ளது

திருவனந்தாழ்வானாகிய சயகத்திலே பள்ளிகொண்டருளும் தன்னை
என் சொல்

எத்திறம்!

வியாக்யானம்-

விடத்த வயோராயிரம்
விஷத்தை உமிழா நின்றுள்ள ஆயிரம் வாயை உடையனாய்

ஈராயிரம் கண் வெந்தழல் விடுத்து –
இரண்டாயிரம் கண்ணாலும் வெவ்விய தழலைப் புறப்பட விட்டு
பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்கிற திருவநந்த ஆழ்வானுக்கு ரோஷ கார்யமான
இந்த க்ரௌர்யம் உண்டாவான் என் என்னில் -துஷ்ப்ரக்ர்திகள் சஞ்சரிக்கிற தேசத்திலே
கண் வளர்ந்து அருளுகிற இவனுக்கு ஆராலே என்ன வருகிறதோ என்று அதி சங்கையாலே வந்தது-
அனுபவம் ராக கார்யமானவோபாதி பிரதிகூல ஸ்தலத்திலே த்வேஷமும் ராககார்யம் இறே

இத்தால் துஷ்ப்ர்க்ருதிகளுக்கு கணிசிக்க ஒண்ணாதபடி திருவநந்த ஆழ்வானால் ஸூ ரஷிதனாய்
கண் வளர்ந்தருள பெற்றோம் என்று த்ர்ப்தர் ஆகிறார்

விள்விலாத போகம் –
ஈஸ்வரன் அணைத்தால் ஒருவகையாலும் பிரிய ஒண்ணாத திரு உடம்பை உடையவனாய் –
அநந்த போகிநி -என்று திருவநந்த ஆழ்வானுடைய திருமேனியை போகம் என்னக் கடவது இ றே

இத்தால் ஆத்ம குணங்களால் ரஷகன் ஆனால் போலே ரூப குணங்களாலே போக
பூதனான படியைச் சொல்லுகிறது –

மிக்க சோதி –
இப்படி கிஞ்சித் கார பூதனாய் கொண்டு -உன்னை அனுபவிக்கையாலே வந்த நிரவதிக
தேஜசை உடையவனாய்

தொக்க சீர் தொடுத்து மேல் விதாநமாய
விதாநமான பணங்கள் பலவற்றிலே உண்டான மிக்க அழகை தொடுத்து

தொக்கு -திரட்சி

சீர் -அழகு –

இத்தால் ஸ்பர்சத்தால் வந்த அனுபவமே  அன்றிக்கே -தர்சநீயமாய் நாநா வர்ணமான
பணங்களின் அழகைச் சேர்த்து அனுபவித்துக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறபடியைச் சொல்லுகிறது

பௌவ நீர் அராவணைப் படுத்த பாயில் –
கடல் நீரில் அது உறுத்தாமைக்கு படுத்த திருவநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே –

பள்ளி கொள்வது என் கொல் –
கண் வளர்ந்து அருளுகிறது இது என்னோ
தங்கள் ஆபத்துக்கு உதவுகைக்கு ப்ரஹ்மாதிகள் அர்த்திக்க தான் செய்து அருளிற்றோ –

வேலை வண்ணனே —
வெள்ளைக் கடலிலே ஒரு நீலக் கடல் சாய்ந்தாப் போலே தேவரீருடைய பரபாக
ரசத்தை சிலர் அறிந்து அனுபவிகைகாக செய்து அருளிற்றோ
இப்பாட்டில் திருவநந்த ஆழ்வான் ஓட்டை அனுபவத்தை சொல்லிற்று

அடிமை செய்வார் இல்லாமை அன்று -சம்சாரிகள் இழவைப் பார்த்து பரார்தமாக
கண் வளர்ந்து அருளுகிறது என்று தோன்றுகைக்காக –

அங்கு ஆராவாரம் அது கேட்டு அழல் உமிழும் பொங்கார் அரவு –

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்-.நின்றால் மரவடியாம் நீள் கடலுள்

என்றும் புணையா அணி விளக்காம்-பூம் பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு –

பகவத் அனுபவம் மாறாமல் இருப்பதால் மிக்க சோதி என்கிறார்-

———————————————————————————————–

19 th  பாட்டு -அவதாரிகை –
அர்த்தித்வ நிரபேஷமாக கண் வளர்ந்து அருளுகிற இது என்ன நீர்மை என்றார் கீழ் -இங்கு
பண்ணின ஜகத் ரஷணங்களைக் கண்டு -நஹி பாலான சாமர்த்யம்ர்தே சர்வேச்வரம் ஹரிம் –
பாலன தர்மத்துக்கு வேறு சக்தர் இல்லாமையாலும் -ஜகத்துக்கு தேவரீர் அனந்யார்ஹ சேஷம்
ஆகையாலே ரஷிக்கும் இடத்தில் அர்தித்வம் மிகை யாகையாலும் -வந்து கண் வளர்ந்து அருளுகிற
இத்தனை என்று -அந்த ரஷணங்களைப் பேசி சாமான்ய த்ர்ஷ்டியால் சஹஜ சத்ருகளாய்
தோற்றுகிற பெரிய திருவடியும் திருவநந்த ஆழ்வானும் ஏக கண்டராய் தேவரீருக்கு பரியும்படியாகக்
கண் வளர்ந்து அருளுகிற இது என்ன ஆச்சர்யம் என்கிறார் –

புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் அதன்றியும்
புள்ளின் வாய் பிளந்து புட் கொடி பிடித்த பின்னரும்
புள்ளை ஊர்தி யாதலால் என் கொல் மின் கொள் நேமியாய்
புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தாழ் காதலித்ததே –19-

பதவுரை

மின்கொள்  நேதமியாய்

தேஜஸ்வியாய் விளங்காநின்றுள்ள திருவாழியையுடைய பெருமானே!
புள் அது ஆகி

ஹம்ஸரூபியாய் அவதரித்து
வேதம் நான்கும்

நான்கு வேதங்களையும்
ஓதினாய்

உபதேசித்தருளினாய்,
அது அன்றியும்

அதுவுமல்லாமல்,
புள்ளின் வாய் பிளந்து

(உன்னை விழுங்குவதாக வாயைத் திறந்துகொண்டு வந்த) பகாஸுரனுடைய வாயைக் கிழித்து (அவனை முடித்து விட்டு)
புள்கொடி பிடித்த பின்னரும்

பெரிய திருவடியை த்வஜமாகப் பிடித்ததுமல்லாமல்
புள்ளை

அப்பெரிய திருவடியை
ஊர்தி

வரஹநமாகக்கொண்டு செல்லா நின்றாய்
ஆதலால்

இப்படி பலவகையான ரக்ஷணோபாயங்களைச் செய்தருளா நிற்கச் செய்தேயும்
கடல்

திருப்பாற்கடலிலே
புள்ளின் பகை மெய்

கருடஜாதிக்குப் பகையென்று தோற்றும்படியான திருவளர் தாழ்வானுடைய திருமேனியிலே
கிடத்தல்

பள்ளிகொள்வதை
காதலித்தது

விரும்பிப்போவதாகிய
என்கொல்

என்ன திருவுள்ளத்தாலே?

வியாக்யானம்-

புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் –
வேதத்தின் உடைய அபௌருஷேயத்வ சித்திக்காக ஸ்வ அசாதாராண விக்ரஹத்தை
திர்யக் சஜாதீயமாக்கிக் கொண்டு -ஹம்சாவதாரத்தைப் பண்ணி -தத்வ ஹிதங்களுக்கு
ஜ்ஞாபகமான நாலு வேதங்களையும் ஜகத்தில் அஞ்ஞான அந்தகாரம் நீங்கும்படி அருளிச் செய்தாய் –

மாநம் ப்ரதீப மிவ காருணி கோததாதி -என்னக் கடவது இறே

அதன்றியும் –
சஹஜ சத்ருவான அஞ்ஞானத்தை போக்கினதுக்கு போலே

புள்ளின் வாய் பிளந்து –
பஹாசுரன் வாயைக் கிழித்து -இத்தால்
பிரமாண ஞானத்தால் அஞ்ஞான  அந்தகாரம் போக்கினாப் போலே பஹாசூரனை நிரசித்து
ப்ரமேய பூதனான தன்னை தந்து ஆஸ்ரிதருக்கு பிராண பிரதிஷ்டை பண்ணின படியைச் சொல்லிற்று

புட் கொடி பிடித்த பின்னரும் புள்ளை ஊர்தி –
தன் பக்கலிலே ஆர்த்தர் அடங்க வந்து கார்யம் கொள்ளும்படி பெரிய திருவடியை
ரஷண தர்மத்துக்கு த்வஜமாகப் பிடித்து -அவ்வளவும் அன்றிக்கே -ஆஸ்ரிதர் இருந்த இடங்களிலே
வந்து உதவுகைக்கு அவனை வாகனமாகக் கொண்டு நடவா நின்று

மின் கொள் நேமியாய் –
திரு நிறத்துக்கு பகைத்தொடையாய் மின்னா நின்ற திரு வாழியை உடையவனே

இத்தால்
ரஷகத்வமே நிரூபகம் என்று தோற்றும் படி –

கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -இருக்கிறபடியைச் சொல்லிற்று –

ஆதலால் –
நிருபாதிக ரஷகனாய்க் கொண்டு -புள்ளதாகி வேதம் நான்கும் ஓதினாய் -என்று கீழோடு அந்வயம்

அது என் கொல் –
என்கிற இது பாட்டின் முடிவில் அந்வயம்

புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தல்  காதலித்தது அது என் கொல் –
சாமான்ய த்ர்ஷ்டியால் பார்த்தால் திருவடிக்கு சஹஜ சத்ரு என்னலாம் படி இருக்கிற
திருவநந்த ஆழ்வான் மேலே திருப் பாற் கடலிலே இருவரும் கூடி விரும்பி அடிமை செய்யும்படி
கண் வளர்ந்து அருளுகிற இது என் கொலோ

சஹஜ சத்ரு என்று புத்தி பண்ணி இருக்கும் சம்சாரத்தில் இருவரையும் ஏக கண்டராக்கி
அடிமை கொண்ட இது தேவரீர் உடைய சர்வ சக்தித்வத்தை பிரகாசிப்பிக்கைக்காக அன்றோ என்று கருது –

அநாதியாய் அஹங்காரத்தை விரும்பிப் போந்த சேதனனை சேஷதைகரசரான
நித்ய ஸூரிகளோடு ஒரு கோவை யாக்குவது இச் சக்தி இறே –

———————————————————————————————–

20-பாட்டு -அவதாரிகை –
பிரயோஜநாந்த பரரான ப்ரஹ்மாதிகள் ஏத்த திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற
இம் மேன்மை தானே நீர்மைக்கு எல்லை நிலமாய் இரா நின்றது –
…அமிர்த மதன வேளையிலே மந்தர தாரண அர்த்தமாக ஆமையான நீர்மை தானே மேன்மைக்கு
எல்லை நிலமாய் இரா நின்றது -இவைகளைப் பிரித்து என்னெஞ்சிலே பட வருளிச்
செய்ய வேணும் என்கிறார் –

கூசமொன்றுமின்றி மாசுணம் படுத்து வேலை நீர்
பேச நின்று தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏசவன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே –-20-

பதவுரை

முன்

அநாதிகாலமாக.
வேலைநீர்

ஸமுத்ரஜலத்திலே
கூசம் ஒன்றும் இன்றி

சிறிதும் கூசாதே
மாகணம்

திருவனந்தாழ்வானை
படுத்து

படுக்கையாக விரித்து
பேச நின்று தேவர் வந்து பாடக் கிடந்ததும்

ஸ்தோத்தரம் பண்ணுவதற்கென்று அமைந்த ப்ரஹ்மாதி தேவர்கள் வந்து பாடும்படி சமநித்தருளினபடியையும்
அன்று

தேவர்களுக்காகக் கடல் கடைந்த அக்காலத்தில்
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா (என்று) ஏச நீ கிடந்த ஆறும்

“வருண பாசங்கள் கிடக்கிற கடலிலேவாழ்கின்ற ஆமையென்னும் க்ஷுத்ர ஜந்துவாகப் பிறந்த கேசவனே!” என்று (அவிவேகிகள்) ஏசும்படி கிடந்தபடியையும்
தேற

அடியேன் நன்குதெரிந்து கொள்ளும்படி
கூறு

(எனக்கு) அருளிச் செய்யவேணும்.

 

வியாக்யானம் –

கூசம் ஒன்றும் இன்றி –
மாயா குசலரான அஸூர ராஷசர் சஞ்சரிக்கும் தேசம் -ஆராலோ என் வருகிறதோ
என்று ஒரு கூச்சம் இன்றியே என்னுதல் -பிராட்டிமாருக்கும் அடுத்துப் பார்க்கப் பெறாத
ஸூகுமாரமான வடிவு துஷ் பிரக்ர்திகள் விஷ த்ர்ஷ்டிக்கு விஷயம்ஆகிறதோ என்று கூசாதே என்னுதல் –

அதவா –
கூசம் ஒன்றும் இன்றி கூறு தேற -என்று அந்வயித்து தன் படிகளைச் சொல்லுகைக்கு
அதிகாரிகள் இல்லை என்று அதிகாரி விரஹத்தால் கூசாதே என்றுமாம் –

அதாவது
மேன்மையைச் சொல்லி துஷ்ப்ராப்யம் என்று அகலுதல்
நீர்மையைச் சொல்லி காற்கடைக் கொண்டு அகலுதல் என்கை

மா சுணம் படுத்து
நீர் உறுத்தாமே திரு வநந்த ஆழ்வானை விரித்து

வேலை நீர் பேச –
ஸ்வ சந்நிதானத்தாலே வந்த ப்ரீதியாலே கடல் கோஷியா நிற்க

நின்ற தேவர் –
ஜகத் ரஷண தர்மத்திலே வ்யவஸ்திதராய் நின்ற ப்ர்ஹ்மாதிகள் -பேச நின்ற சிவன் -என்னக் கடவது இறே

வந்து பாட –
ஊர்த்வ லோகங்களிலும் நின்றும்  வந்து தம் தாமுடைய அபிமத சித்திக்காக ப்ரீதி ப்ரேரிதராய் ஏத்த

முன் கிடந்ததும் –
சிருஷ்டி காலமே தொடங்கி கண் வளர்ந்து அருளுகிற இதுவும்
சமுத்திர கோஷத்தோடு பிரயோஜநாந்த பரரான ப்ரஹ்மாதிகள் ஸ்தோத்ரத்தோடு
அநந்ய பிரயோஜனரான ஸ்வேத தீப வாசிகள் உடைய ஸ்தோத்ரத்தோடு வாசியற
முகம் கொடுத்து நிற்கிற இது என்ன சீலம் என்று கருத்து –

பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா –
சமுத்திர மதன வேளையில் வருண பாசங்களை உடைத்தான கடலிலே முதுகிலே
மந்த்ரம் சுழலுகிற இது ஸ்வயம் பிரயோஜனமாக நினைத்து கூர்ம சஜாதீயன் ஆனவனே –

பாச நின்ற நீர் -என்று
பரம பதத்தில் காட்டில் பிரேம ஸ்தலமான கடலிலே என்னவுமாம்

கேசவா
ப்ரஹ்மாதிகள் சரணம் புகுர தத் ரஷண அர்த்தமாக கூர்ம சஜாதீயன் ஆகையாலே
அவ்வளவாலும் ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு உத்பாதகனான மேன்மை அழியாது இருக்கிறபடி

ஏச வன்று நீ கிடந்தவாறு –
தேவதைகள் அடங்க சாபேஷராய் நின்ற வன்று -சர்வாதிகனான நீ –
உன் படி அறியாதார் -ஆமையானான் -என்று உன்னுடையாரை ஏசும்படி -மந்த்ரம்
முதுகிலே நின்று சுழலக் கண் வளர்ந்து அருளின பிரகாரம்

கூறு தேற வவேறிதே –
தெரியும்படி எனக்கு அருளிச் செய்ய வேணும் –
ஆமையானே நீர்மையிலே சர்வாதிகத்வமும் பிரகாசியா நின்றது
ப்ரஹ்மாதிகள் ஏத்த கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே நீர்மை பிரகாசியா நின்றது
இவற்றை பிரித்து தெரிய அருளிச் செய்ய வேணும் -என்று கருத்து –

கூசம் ஒன்றும் இன்றி -சிறிதும் கூசாதே
மா கணம் படுத்து -திருவநந்த ஆழ்வானை படுக்கையாக விரித்து
வேலை நீர் -சமுத்திர ஜலத்தில்
பேச நின்ற தேவர் வந்து பாட முன் கிடந்ததும் -ஸ்தோத்ரம் பண்ணுவதற்கு அமைந்த ப்ரஹ்மாதி தேவர்களும்
வந்து பாடும் படி அநாதி காலமாக சயனித்து இருந்து அருளியதும் –

நின்ற -ஊர்த்வ லோகங்களிலே வர்த்திக்கிற –

முன் கிடந்ததும் -ஸ்ருஷ்டி காலம் தொடங்கி கண் வளர்ந்து அருளினதும்
அன்று -தேவர்களுக்கு கடல் கடைந்த அன்று –

அன்று -தேவர்கள் சாபேஷராய் நின்ற அன்று
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா –

வாழும் -மந்த்ரத்தை சுமந்து நிற்பவனாய்

கேசவா -ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு உத்பாதகன் ஆனவனே

நீ -சர்வாதிகனான நீ

வருண பாசங்கள் கிடக்கிற கடலில் வாழுகின்ற ஆமை என்னும் ஷூத்ர ஜந்துவாக அவதரித்து அருளிய கேசவனே
என்று ஏச நீ -கிடந்தவாறும் -அறிவிலிகள் ஏசும்படி கிடந்த படியும்

தேற கூறு -அடியேன் நன்கு தெரிந்து கோலும் படி அருளிச் செய்ய வேணும்
நீர்மைக்கு எல்லை பாற் கடல் சயனம் –
மேன்மைக்கு எல்லை கடல் கடைந்தது –
இவற்றை பிரித்து எனக்கு அருளிச் செய வேணும் –
எல்லா அவதாரங்களிலும் இரண்டும் கலந்து இருக்குமே

பாசம் நின்ற நீர் -இதற்க்கு பரம பதத்தை விட இந்த கடலே பரம போக்யம் என்று இருக்கை
எம்பெருமான் ஆசைப்படத் தக்க நீர்

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading