திருவாய்மொழி-9-8- அறுக்கும் வினையாயின ஆகத்தவனை -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

அறுக்கும் வினையாயின ஆகத்தவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தை யினார்க்கு
வெறித் தன் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை யுண்டு கொலோ ? கொடியேற்கே–9-8-1
தூது விட்டாள்
ஆறுதலுக்கு திரு நாவாய் பெருமாள் சேவை
வினைகள்- அனைத்தும் நீக்கி
அவனையே மனசில் தியானம் செய்து —
திரு நாவாய் ஷேத்ரம் -கிட்டுமா -சேவை
நைச்ய அனுசந்தானம் -கொடியேற்கு
கிட்டும் வகை கிட்டுமா -திவ்ய தேசம் அருகில் போக
குறுக்கும் -எம்பெருமானார் எத்தனை தூரம் திரு நாவாய்  -எதிரில் வருவாரை கேட்டதும் குறுக்கும்
இப் பாஷையாலே அருளி செய்தாரே ஆனந்தம்- கிட்டே உள்ளது என்ற அர்த்தம்
ஐதீகம்-
கொடியர் இடைக் கோகனத்தவள் கேள்வன்
வடிவேல் தடம் கண் மடப் பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திரு நாவாய்
அடியேன் அணுகப் பெறு நாள் எவை கொலோ ?–9-8-2
கொடி போன்ற இடை
கோககனத்வம் –அபூர்வ சொல் பங்கஜம் போல் –
நெடியான்-மிக பெரியவன்
எவை கொல் அணுகப் பெறு நாள் ? என்று எப்போதும்
கவையில் மனம் இன்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்
நவையில் திரு நாரணன் சேர் திரு நாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே –9-8-3
என்று கிட்டும் இந்த பாக்கியம்
கவையில் மனம்-திடமான மனஸ்
உறுதி உடன் இருந்தால் அவனும் அனுகூலமாக வருவான்
அவன் அழைத்து போக -கண்ணீர் விட்டு கொண்டு-கூவுமாறு
நவை-குற்றம் -அகில ஹேய பிரத்யநீகன்
அவன் திரு வோலக்கம்-அவை
கோப்புடைய சீரிய சிங்காசனம்
நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா வடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய்  தடம் கண் மடப் பின்னை மணாளா !–9-8-4
குறித்த நாளும் அறியேன்
இருப்பதே ஆச்சர்யம்-
நீ தான் அறிவாய்
கைங்கர்யமே செய்யும் படி சரண் அடைந்தேன்
வாள் போல் அலையும் விசாலமான திரு கண் கள் கொண்ட நப்பின்னை

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உலகத்து உயிர் தேவர்க்கு எல்லாம்
வின்ணாளன் விரும்பி யுறையும் திரு நாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே ?–9-8-5
மணாளன் -நப்பின்னைக்கு முதலில் சொல்லி பிரேமையால் பிராதானம்
ஆயர் மட மகள் பிராதானம்- நிலம்- அதை அனுபவிக்கும் தலை  மகள்-மண் மகள் மலர் மகள்
கண்ணாளன்-வழி காட்டி லஷ்மி நாதன் -குரு பரம்பரை முதல் ஸ்தானம்
ஸ்ரீ வைகுண்ட வாசி விரும்பி -விரக்தாய -இங்கு உறைகின்றான்
கண்டே  களிக்கின்றது இங்கு என்று கொல் ? கண்கள்
தொண்டே யுனக்காய் ஒழிந்தேன் துரிசின்றி
வண்டார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே !–9-8-6
ராஜ கோபாலா ! கோவலர் கோவே !
தொண்டர்-இங்கு உள்ள பெருமாள் போக சொல்லி அங்கு உள்ளவன் கூப்பிடணுமே
எல்லா திவ்ய தேசமும் திரு மலை தான் கைங்கர்ய பரர
அனுபவ பரர்களுக்கு வேற
எம்பெருமானார் பெரிய பெருமாள் கூப்பிட
தீர்த்த கைங்கர்யம் செய்வதை வீட்டு போக பேர் அருளாளன் உத்தரவு-
 தொண்டை விடுவதே தோஷம்-துரிசில்
கொண்டே -கோவில் கொண்டு
கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் !
தேவாசுரம் செற்றவனே ! திரு மாலே!
நாவாய் யுறைகின்ற நாரண நம்பி !
ஆவா ! அடியான் இவன் என்று அருளாயே –9-8-7
லோகானாம் ஏக ஈஸ்வராம் – மார்பு தட்டி கொண்டானே மா வலி
சத்ய சந்தன் பாகவத  அபிமானம் கொண்டவன்  அள்ளி கொடுப்பவன்  –
கர்வம் பிடித்தவன்-ஐஸ்வர்யம் மீட்டு கிருபை கொடுத்து உணர்ந்தான்
தெயவாசுரம்-தேவர் அசுரர் -வேற்றுமை கலக்கம்- விரோதம் நீக்கி
ஆ ஆ  சொல்லி அடியேனை மகிழ்ந்து அருள வேண்டும்
அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ்ப் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை எந்நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே !–9-8-8
அருளா விடிலும்-உன்னையே என் நெஞ்சத்தில் இருத்தும் –
கிருபை என்றும் உண்டே /சோதிக்கிறான்-உலகத்தோர் வார்த்தை
நம் உடைய லாப நஷ்டம் கொண்டு அளக்க முடியாத கிருபை
குசேலர்-வழி செலவு கூட கொடுக்காமல் அனுப்ப
தாபம் இன்றி -கொடுத்தால் அதை எண்ணி தன்னை எண்ண மாட்டான் அதுவும் கிருபை என்று நினைத்தாரே
ஆராய்ந்து அருளுவான் –சுகமா நாசமா என்று எல்லாம் ஆராய்ந்து அனுக்ரகம் செய்வான் –இவன் இடம்
வரம் வாங்கி திமிர் பிடித்தவன் இல்லை -இவர் தான் தீர்த்து வைத்தார் மற்றவர் வர பலநாள் வந்த விளைவுகளை
மண்ணை வாங்கி தானே வீட்டு வாசலில் நின்றானே மகா பலிக்கு
சரண்யனை நம்ப வேண்டும்-பிராண நாதன்-உனக்கு ஆள் படுத்தி கொண்டு சம்பந்தம் ஒன்றே வேண்டும்
கல்யாண குணத்துக்கு அடிமை-
பொருள் ஆக்கி -அவஸ்து ஆக இருந்தேன்-திரு அடியில் சேர்த்து கொண்டானே
சங்கை இன்றி-திட விசுவாச ஞானம் தர வேண்டும் -இது ஒன்றே வேண்டும்
தேவர் முனிவர்க்கு என்றும் காண்டதற்க்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ வுலகாளி
தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்
யாவர் அணுகப் பெறுவார் ? இனி யந்தோ !–9-8-9
தேவர் முனிவர் அனைவருக்கும் காண அரியதாய்
ந்தே மனுஷ்ய – தேவ சுப குண்டலம் தசரதன் -மனுஷ்யர்களுக்கு
14 நிமிஷம் கூட பிரிய முடியாது –14 வருஷம் காத்து மீண்டும் பெருமாளை தரிசிப்பவர் தெய்வ பிறவி
அவர்கள் திரு அடி தலை மேல் தரிப்பேன் -சக்கரவர்த்தி வார்த்தை போல்
அது போல் திரு நாவாய் அணுக பெரும் அடியவர்கள் என் தெய்வம்
அந்தோ ! அணுகப் பெறுநாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன்
கொந்தார் மலர் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே யுறைகின்ற எம் மா மணி வண்ணா !–9-8-10
உன் திரு அடி அணுக பெறுவது என்றோ
திரு மால்-ஜகன் மோகனா கூப்பிடுகிறார்
ஏங்கி கூக்குரல்
வண்ணம் மணி மாட நல நாவாய் உள்ளானை
திண்ணம் மதிள் தென் குருகூர் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
மண்ணாண்டு மணம் கமழ்வர் மல்லிகையே  –9-8-11
மாடம் நிறைந்த திவ்ய தேசம்
அதற்க்கு ஏற்ற திரு குருகூர்
பத்தையும் பாட வல்லவர் பூ மண்டலம் ஆண்டு -சமர்த்தி மனம் நிறைவு
இக லோகத்தில் வைவச்ய ஸ்ரியால் சம்பனராய் இருப்பார்
அறுக்கும் இடர் என்று அவன் பால் அங்கு விட்ட தூதர்
மறித்து வரப் பற்றா மனத்தால் –அறப் பதறி
செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன்
மையலினால் செய்வது அறியாமல் -திருவாய் மொழி நூற்று அந்தாதி –88
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading