திரு நறையூர் அனுபவம்-பெரிய திரு மொழி-6-4- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

71 திவ்ய தேசங்களுக்கு பதிகம் உண்டு–37 திவ்ய தேசங்கள்-தனி பாடல்கள் பெற்றவை
54 ஒரு பதிகம் பெற்ற திவ்ய தேசங்கள்  -18 நம் ஆழ்வாரால் 36 திரு மங்கை ஆழ்வார்
7  திவ்ய தேசங்கள் இரண்டு பதிகம் பெற்றவை ..
ஏழு திவ்ய தேசம் மூன்று பதிகம் -தில்லை நகர் திரு சித்ர கூடம் திரு குரும் குடி திரு ஆலி வயலாலி மணவாளன்  -மூன்றும்
நான்கு  பதிகம் தேர் அழுந்தூரும்-ஆ மருவி அப்பன்  திரு விண்ணகருக்கும்/ஒப்பிலா அப்பன் -30௦ திருமங்கை 10 நம் ஆழ்வார்
எட்டு பதிகம் வட திருவேம்கடம் திரு மால் இரும் சோலை இரண்டும்
10 பதிகம் திரு நறையூர்
12 பதிகம் திரு கண்ண புரம்-10 திருமங்கை ஆழ்வார் மற்றைய ஆழ்வார்களால் இரண்டும்
13 பதிகம் திரு அரங்கம் –
ஆக 71 திவ்ய தேசம்–
35 தனி பாடல் இன்றி–36 தனி பாடல்களும் உண்டு..
67 திவ்ய தேசம் ஒரே ஆழ்வாரால்- மங்களா சாசனம் பண்ணப்பட்டவை -47 திரு மங்கை ஆழ்வாரால் மட்டும்..
17  திவ்ய தேசம் -நம் ஆழ்வாரால் மட்டும் அதில் – 8 நவ திருப்பதியும்/8 மலையாள திவ்ய தேசங்கள் /வான மாமலையும் -ஆக-17
2திரு மழிசை அன்பில் கபிஸ்தலம்
1 திரு வித்துவக் கோடு -குலசேகர ஆழ்வார்
ஆக மொத்தம் 67 திவ்ய தேசங்கள் ஒரே ஆழ்வாரால் மங்களா  சாசனம் பண்ண பட்டவை
பெரிய  திரு மொழி யில் 100 தனியாக 6 பாசுரம்-திரு நெடும் தாண்டகம் 2 திரு மடல் 2 –
பெரிய திரு மடலில் 2 இடம் என்று /110 /111பாசுரம் என்பர் திரு நறை யூருக்கு அருளி இருக்கிறார்..
திரு மங்கை ஆழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் பண்ண அருளியவர்-
கோவில் பொறியாலே ஒற்றி கொண்டு -கலியனோ-மிடுக்கு -வயலாலி மணவாளன் அருளிய திரு நாமம்..-
ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் ஆகிறார்– ஆத்மாவை வெய்யில் வைத்து தேகத்தை நிழலில் வைத்தவர் –
இனி -வாசுதேவ திரு தோள்களின் கீழ் வைக்க –ரகஸ்ய த்ரயம் -திரு மந்த்ரம் கொடுபவரே ஆசார்யர்–அருளி செயல் ரகசியம்–
கடல் ஓசை போல் மற்றவை-அதை விட சிறந்தது–பட்சிகள் ஓசை-அடுத்து –நாட்டார் சொல்–இஷ்ட தெய்வம் பற்றி சொல்-
வேதம்   வேதாந்தம்- -நாராயண அனுவாகம்-விஷ்ணு காயத்ரி- நாராயண திரு நாமம் ஏற்றம் —
வாசுதேவ/விஷ்ணு-மூன்றும் வியாபக மந்த்ரம்–நாமம் -மந்த்ரம்-பிரணவம் நம சேர்ந்து-
மந்த்ரம்-மனனம் பண்ணுபவனை ரஷிக்கும்-எட்டு எழுத்தாய் மூன்று சரடாய் இருக்கும்-திரு மந்த்ரம்–
சம்சாரி அடி அறுத்து கொடுக்கும்-பிள்ளை உறங்கா வல்லி தாசர்-கடி மணம் புருஷோத்தமன் உடன் —
பிரணவம் திரு கல்யாணம் -சம்பந்தம் காட்டும்–மஞ்சள் நீராடுமா போலே –
நாராயண சம்பந்தம் உணருமா போலே –ஞானம் பிறக்கும் பிரணவத்தால்-சம்பந்தம் –
நம சப்தம் வைராக்கியம் பிறக்க -நாராயண சப்தம் பக்தி பிறக்க வைக்கும் நாத முனிகள் அருளுவார்–
அபிஜனம் உயர்ந்த குடி பிறப்பு அவனுக்கு சொத்து -வித்யா ஞானம்-அவனே புகழ்-விருத்தி-கைங்கர்யம் ஆள வந்தார் அருளுவார்–
பிள்ளை லோகாசார்யர்-கோவிந்தா நாமம் -புடவை சுரந்தது இறே-இதற்கே பிரபாவம் என்றால் நாராயண வைபவம்- குச்சி வடை கதை
தாமோதரனை ஆமோ தரம் அறிய –தேக விலஷனம்-போன்ற ஆறும் சொல்லும் –
குக்ய தமம் திரு மந்த்ரம் –அநந்யார்ஹ சேஷ பூதன்-அநந்யார்ஹ சரணத்வம் அநந்ய போக்யத்வம் –
கைங்கர்யம் -மந்திரத்திலும் மந்திரத்தில் உள் ஈடான வஸ்து மந்த்ரம் பிரதானம் கொடுத்த ஆசார்யர் பக்கலிலும் பிரேமம் கனத்து இருக்க –
காரிய கரம் ஆகும்–நறையூர் நம்பி பேரிலே திரு மடல் அருளினார் திரு மங்கை ஆழ்வார் —
மன்னு வட நெறியே  வேண்டி -புருஷோத்தமன் என்பதால் -பெரிய திரு மொழி 6-4 –
அவதாரிகை-சேஷி சேஷ பூதன்-கொடுக்கும் பொழுது கொடுப்பேன்-
தண்ணீர் பந்தலில் ஒதுங்குவோம் என்று -திரு நறை யூரில் ஒதுங்கினார் –
விஷயாந்தரங்களில் ஒதுங்கினால் -என்ன ஆகும் என்று உபதேசிக்கிறார்-
நண்ணு நறையூர் /நாங்கள் நறையூர் /நம் கோன் நறையூர் /நம்பன் நறையூர் /நலம் கொள் நறையூர் /
நன்னீர் நறையூர் /நல்லார் நறையூர் /நாளும் நறையூர் /நளிசேர் நறையூர் /
நாம் தொழுதும் எழு நெஞ்சமே !என்று அருளுகிறார்..

—————————————————-

கண்ணும் சுழன்று பீளை யோடு ஈளை வந்து ஏங்கினால்
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்
விண்ணும் மழையும் வேதமும் வேள்வியும் ஆயினான்
நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே !–6-4-1–

பண் -ராகம் இனிய மொழியார்–பைய நடமின்-நண்ணாதார் முறுவலிப்ப –
இது என்ன உலகு இயற்க்கை–வேண்டும் வேண்டாதவர்–வயசு ஆனதும் போக சொல்வார்–
பணம் காசு இருக்கும் வரை கொண்டாடுவார்–வண்டார் பூம் குழலார்–வாள்களாகி நாள்கள் செல்ல —
பகவானை பிடிக்காமல் போன நாள்–வண்டு தான் அனுபவிக்கும் குழல்களை–
விண்ணும் -மறையும்-ஆகாசம்-பிரதிவி- அனைத்தையும்-முதலும் முடிவும்-மழையும் -கூடினவன் சொல்லும் வேதமும் –
அவனே வேள்வி- நறையூரில் நண்ணி ஆசை பட்டு வர்த்திக்கும் -போகு நம்பி என்னுமா போல் —
என் உடைய பந்தும் வளையும் தந்து போகு நம்பு–கதவை திறந்து -போ சொன்னால் வா சொல்வதற்கு சமம் கிட்டே வந்தான்–
நம் ஆழ்வார் போ சொன்னதும் வந்தது போல் இவனும் வந்தானாம் – அடுத்த பாசுரத்துக்கு சங்கதி-

——————————————-

கொங்கு உண் குழலார் கூடி இருந்து சிரித்து நீர்
இங்கே ஏன் ? இருமி எம்பால் வந்தது என்று இகழாத முன்
திங்கள் எரி கால் செம் சுடர் ஆயவன் தேசுடை
நாங்கள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே !–6-4-2–

ஏளனம் -பண்ணி சிரிக்க -இருமி கொண்டு–சந்தரன் அக்னி-சூர்யன்-ஈஸ்வரன் தேசு உடை-நாங்கள்-
நமக்கு என்று சேவை சாதிக்கிறான்–திரு இந்தளூர் பதிகம்-சேவிக்க மனோ ரதித்து கொண்டு போக –
ஊன் அத்யாயம் படித்தது போல் மனோ ரதித்து -உம்மை தொழுதோம் -வாழ்ந்தே போம்-தானான தன்மையில் ஊடல்–
பரிமள ரெங்கனை–நடந்து காட்டினால் நாங்கள் உய்ந்து போவோம்–
மனத்துக்குள் இருந்தோமே–சிந்தை தன்னில் நீங்காது இருந்த எந்தாய்–நறையூர் இருந்த நம்பி அடியேற்கு இரங்காயே —
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்–உம அடியார் எல்லோரும் ஒக்க எண்ணி இருந்தீரோ
அடியோர்க்கே எம்பெருமான் அல்லீரோ இந்தளூர் இறே —

————————————————

கொங்கு ஆர் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை
எம் கோலம் ஐயா ! என் ? இனி காண்பது என்னாத முன்
செம் கோல் வலவன் தான் பணிந்து ஏத்தி திகழுமூர்
நம் கோன் நறையூர் நாம்தொழுதும் எழு நெஞ்சமே !-6-4-3–

கண்ணை திறந்து பார்க்க -எம்மையும் எம் கோலமும் –காண்பது முடியாது–
மன்னன் பணிந்து ஏத்தி -நம் கோன்- நமக்கு என்று –கேட்டதையும் கொடுப்பவன்–
துர் அபிமானம்- அம கண் மா ஞாலத்து அரசர் அபிமான  பங்கமாய் -தொலைந்து வந்து ஏத்துகிறார்கள்-

————————————-

கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண்ணேர் இடை
வம்புண் குழலார் வாசல் அடைத்து இகழாத முன்
செம் பொன் கமுகினம் தான் கனியும் செழும் சோலை சூழ்
நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே !-6-4-4–

இடையிலே துவக்கு உண்டு கிடக்க கதவை அடைத்தார்கள்—
வஞ்சி கொம்பு-போன்ற இடை நுண் நேர் இடை ஊகித்து தெரிந்து கொள்ள வேண்டும் படியான இடை–
வாசல் அடைத்து இகழா முன் –நம்பன்-நம்பி நமது கார்யம் தலைக் கட்டுவான்–
முக்த பிராப்ய பூமி போல் இருக்கும் -சர்வ அவச்தைகளிலும் விச்வசித்து இருக்கும் படி–
இறுதி நினைவாக பிறந்த -ஜடபரதர் மான் பிறவி -சரணா கதி மகா விசுவாசம்
அப் பொழுதைக்கு இப் பொழுதே சொல்லி வைத்தேன்
அஹம் ஸ்மராமி -பரமாம் கதி கூட்டி போவான் –நம்பன் நறையூர்–சர்வ சக்தன்-

——————————————–

விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும் வென்ற கண்
சலம் கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்து இகழாத முன்
மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல்சூழ் தரு
நலம் கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நஞ்சமே !-6-4-5–

ஸ்தோத்ரம் பண்ணி நிற்க -வாசல் அடைத்தாலும்–நலம் கொடுக்க வல்ல நம்பி-
விலங்கு-மான் போதரி கண்ணினாய்-போது சஞ்சரிக்க கூடிய அரி மான்-வெல்ல கூடிய கண் அழகு–மூன்றும்-
துடிப்பு மான் போலே-கயல்–அழகு- கூர்மை வேல் -மூன்றும் காவி -புஷ்பம்-ராகம் காமம் வர்ணம்-
அசலம்-அசையாதது மலை-சலம் கொண்ட சொல்லார்-இவர்கள்–அக்காரக்கனி –கடிகை-
சலம்-கழிக்க கூடிய தேகம்-மாறுதல் ஒரு படி இருக்காது-கையில் பணம் இருக்க கொண்டாடினார்கள்-/
மீன்கள் வகை- மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ்-கண்ணை திறந்து பார்க்க வேண்டும்–
திர்யக் ஸ்தாவர ஜன்மங்கள் தங்கள் அபிமதம் பெற்ற திவ்ய தேசம் -நலம் கொள் நறையூர்

—————————————————-

மின்னேர் இடையார் வேட்க்கையை மாற்றி இருந்து
என் நீர் இருமி எம்பால் வந்தது ? என்று இகழாத முன்
தொன்னீர் இலங்கை மலங்க விலங்கு எரி ஊட்டினான்
நன்னீர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே ! 6-4-6–

எண்ணம் மாறும் -சலம் கொண்டவர் -புறத்தே இருக்க -வேட்க்கையை மாற்றி இருந்து–
பொருள்கள் முன்பு கொடுக்க இப் பொழுது இருமல் மட்டுமே –வழங்கு-ஹனுமான்-மாருதியால் சுடு வித்தான் –
இலங்கு எரி -கொழுந்து விட்டு எறியும் படி–முன்பு அக்நி ராவண அனுமதி பெற்றே எரியுமாம்–
ஜல சமிர்த்தி கொண்ட நறையூர் விரோதி நிரசன சீலன்–

———————————————

வில்லேர் நுதலார் வேட்க்கையை மாற்றி சிரித்து இவன்
பொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்ப்பதன் முன்
சொல்லார் மறை நான்கோதி உலகில் நிலாயவர்
நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே ! 6-4-7–

தனுசை ஒத்த புருவம்–புறன் உரை செவி சுடும் சொல்–சொல்லார் மறை–ஓதி-
முன் சொல்ல சிஷ்யன் கேட்டு மீண்டும் சொல்ல சுருதி-எழுதாத மறை-ஓதி மட்டும் இல்லை -நிலாயவர்-
அனுஷ்டானம் யாக யக்ஜம் பண்ணி-விஷ்ணு சித்தர் கேட்டு -இருப்பார் -அதன் படி இருப்பார் -அப்படி நல்லார் இருக்கும் நறையூர்

————————————————

வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதன் என்றார் தம்மை
கேண்மின்கள் ஈளை யோடு ஏங்கும் கிழவன் என்னாத முன்
வேள்வியும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர்
நாளும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே !6-4-8–

போட்டி போட்டு கொண்டு முன் பார்ப்பார்கள் –தங்களுக்கு சொல்லி கொண்டார்கள்-கிழவன்–
வேள்வி -விழவு உத்சவம்–என்றோ பரம பதம் சென்று அனுபவிப்பதை நாளும்-இங்கேயே -அனுபவிக்கலாம்–
அங்கு ஹாவு ஹாவு ஹவு தான் இங்கோ உத்சவம்–தெள்ளியீர் அனுபவம் இங்கு தானே —
அறம் பொருள் இன்பம் இவற்றின் இடை அதனை எய்துவார் -பொருள் இல்லை-
இவற்றுக்குள் காமம் எய்துவாரே சீரார் இரு கரையும் எய்துவார்கள் —
என்றோ மண்டலம் புக்கு அனுபவிப்பதை இங்கே கிட்டி அனுபவிக்க வாருங்கோ-ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே —-
நறையூர் நம்பி அனுபவமே உசந்தது என்கிறார் இங்கும்-

—————————————————–

கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட
குனி சேர்ந்து உடலம் கோலில் தளர்ந்து இளையாத முன்
பனி சேர் விசும்பில் பான் மதி கோள் விடுத்தான் இடம்
நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே ! 6-4-9–

பரிகாச சிரிப்பை பார்த்து -சிரிக்கிறார் என்று-கொவ்வை பழம் போல் சிவந்த வாய்-குனிந்து -கோலில் தளர்ந்து-
இளையா முன்-மதி -சந்திரனின் சாயம் போக்கிய -துண்ட வெண் பிறையின் துயர் தீர்த்தவன்-
பெருமை உடன் கூடிய -நனி சேர்-பிராட்டி காக பரிகிரகம்-இருக்கும் ஏக தார விரதன்-நறையூர் தொழுதும்–

——————————————-

பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை இலாத முன்
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே ! என்று
கறையார் நெடு வேல் மங்கையர் கோன் கலி கன்றி சொல்
மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன் னரசு ஆவரே 6-4-10–

பிறை ஒத்த நெற்றி-ஆசை படும் முன் -நறை-தேன்-கறை ஆர் நெடு வேல்–பர மாதர் –
அழித்த கறை அழிக்க முடியாமல்-திரு நாக்கு வாக்கால் அழித்ததால்–மறவாது உரைப்பவர்-
ஸ்திரிகளின் கண்ணின் அழகை மறந்து இந்த பாசுரங்களை மறவாமல் —
அறிவரிய சிற்று இன்பம்-ஐவர் திசை திசை வலித்து ஏத்தும் –வானவர்க்கு இன் அரசு ஆவார் —

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading