ஸ்ரீ வைகுண்டம் விட திவ்ய தேச அனுபவமே உசந்தது-முதல் கருத்து சொல்லி- /தர்ம அர்த்த காம மோட்ஷம் நான்கில் வீடு விட தக்கது என்கிறார் முதலில் /தரிசனம் கிட்டாத வருத்தத்தில் பாடுகிறார்//காமமே சிறந்த புருஷார்த்தம் அறமும் பொருளும் தன் அடியே கிட்டும் /மடல் எடுக்க காமமே தான் காரணம் -அதை வெளி படுத்துகிறார்/வைதிக காமம் பகவத் பக்தி -ஆண் சரீரத்தில் பெண் வார்த்தையால் பேசுகிறார்-
காரார் வரை கொங்கை கண்ணார் கடல் உடுக்கை
சீரார் சுடர் சுட்டி செங்கல் உழி பேர் ஆற்று
பேரார மார்பின் பெரு மா மழை கூந்தல்
நீரார வேலி நில மங்கை என்னும் இப்
பாரோர் சொல பட்ட மூன்று அன்றே —
அம் மூன்றும்
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆரார் இவற்றின் இடை அதனை எய்துவார்
சீரார் இரு கலையும் எய்துவர் சிக்கனே மற்று
ஆரானும் உண்டு என்பார் எனபது தான் அதுவும்
ஓராமாய் அன்றே? உலகத்தார் சொல்லும் சொல்
ஒராமையாறு அது உரைக்கேன் கேளாமே
காமம் சொல்ல வந்தவர் -புருஷார்த்தம் சொல்ல வந்தவர்- புருஷர் சொல்ல -பூமி- பூமி பிராட்டி -மேகம் -வரை-மலை-திரு வேம்கடம் மதி தவழ -புயல் மழை வண்ணர் மால் இரும் சோலை மேகம் நிறம் வீசி-திரு மால் இரும் சோலை /இரண்டும் கொங்கை போல/ கடலே உடுக்கை/தாயார் தோழிமார் அனைவரும் விலக்க -விலக்காமல் இருக்கும் பூமி பிராட்டியை கொண்டாட ஆரம்பிக்கிறார் -முதல் காரணம் இது/புருஷார்த்தங்கள் சொல்ல -பரிகிரகிகிற சேதனர்களை சொல்ல வேண்டு வர்த்திக்கும் பூமியை சொல்ல வந்து அவ் வழியாலே அபிமாநினி தேவதை ஸ்ரீ பூமி பிராட்டியை சொல்ல ஆரம்பிக்கிறார் //புற்று தான் காது= வால்மீகம் பெயர் /பூமி பிராட்டியே ஆண்டாள் /மலைக்கு உயரம்-மேகம் படிந்த சொல்லி-கருத்து இருக்கும் -முலை காம்பு/எந்த மலைகள்-திரு மலைகள் இரண்டையும்/வடக்கு திரு மலை தெற்கு திரு மலை கீழ வீடு மேலை வீடு –தென்னன் உயர் பொற்பு தெய்வ வட மலை -பெருய திரு மடல்- மேரு ஹிமாலயம் சொல்லாமல் இதை சொல்ல காரணம் –யாதவ குலம்-பட்டாபிஷேகம் இழந்த குலம் தூக்கி விட வம்ச பூமிகளை உத்தரிக்க கீழ் குலம் புக்க வராக கோபாலர்களை போல /
ஹிரண்ய கசிபு -சிம்ஹம் யானையை கொள்வது போல உன்னை கொல்வேன் என்ற சொல் கேட்டு சிம்ஹம் தலை கொள்ள முடிவு இஷ்வாகு குலத்தில் பெரிய பெருமாளுக்கு திரு ஆராதனம் பண்ண ராமர் அவதரித்தார்–அது போல் இங்கும்-முலை காந்தன் படு காடு கிடக்கும் இடம்-பகவத் சந்நிதானம் ஆசை உடன் வர்த்திக்கும் இடங்கள் -நப்பின்னை கொங்கை மேல் வைத்து கிடந்த -மலரால் தனத்து உள்ளான் மா கடல் நீர் உள்ளான் /சங்கு தங்கு முன்கை கொங்கை தங்குபவன்/வரை-மலை-கடினம்-மார்பகமும் கடினமாக இருக்கும் /ச்வாபதேச அர்த்தம்-கண்-ஞானம் – முலை-பக்தி- இடை-வைராக்கியம் –
திரு வாய் மொழி 6-2 மின் இடை மடவார்கள் அங்கும் ஆழ்வார் ஊடல் பதிகத்தில் சொன்னார் /மார்பால் அவளுக்கு உபயோகம் இல்லை கணவனுக்கும் குழந்தைகளுக்கும் அது போல பக்தி- அவனுக்கே -தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே
சேஷத்வ காஷ்டை-அவனுக்கு மட்டுமே இருப்பது /கிடந்தது இருந்து உண்டு உமிழ்ந்து ..பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் /ஆடை-தர்சநீயமான கடல்-/கண் -இடம் கண்ணார் -பரந்து விரிந்த /ஸ்ரீ பூமிக்கு கொடுக்கும் கொய்சகமும் வைத்து உடுக்கலாம் படி இருக்கும் –அம்பரமும் பெரு நிலனும் -உண்ட கண்டம் வச்தரதுடன் பூமி பிராட்டியை கொண்டான் /குளிர்ச்சி-தாராளன் தண் அரங்கம் ஆளன்-வண்டுகள் உழுது வைக்கிறதாம் பிராட்டி அனைய -கண்ணார் கடல் உடுக்கை-மிருது , வர்ண கலவையும் கொண்டு /திரு மேனி அழகு ஆடை சொல்லி அடுத்து -ஆபரணம் -சீரார் சுடர் சுட்டி-கிரணங்கள் நிறைந்த சூர்யனை திலகமாக கொண்டு –அணிமிகு சூர்ய சந்திர -/வீடு விடை திரு மஞ்சனம் ஆழ்வார் மாதுளம் பல மாலை-மதுர கவி ஆழ்வார் வம்சம் கவி பாடுவார் திரு முடி சேர்ந்து பின் ஆழ்வார் கிடைத்ததும்/ராக் குடி போல தலைக்கு ஆபரணம் /பெருமாள் கை படும் இடத்தில் இருக்கும் சீர்மை/அணி மிசை தாமரை கையை அன்றோ ஆபரணமாக கேட்டார் பராங்குச நாயகி//ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பூமி பிராட்டி/
செம் கலுழி-கலுஷ -கலங்கிய கல்மஷம்-தோஷம்-ஆரிய சிதைவு/பேர் ஆரு-காவேரி-சக்ய மலை புறப் பட்டு வந்த கலக்கம்-பொன் ரத்னம் முத்து கொண்டு வந்து -ஹாரம் சொல்ல -மார்பில் இருந்து வந்து ஒளி விட்டு கொண்டு/ஹாரம் கலங்கி இருக்கும்-திரு மஞ்சனம் பொழுது -சந்தனம் கும்கும பூ குழம்பால்/ சிவந்து இருக்கும் /மலைத்தலை பிறந்து இழிந்து .சந்தனம் எறிந்த கும்கும குழம்பினோடு-தெளிவிலா கலங்கல்–தெள்ளீர் பொன்னி-கலக்கம் வந்தேறி-திருவடி வருட-வந்து பெண் மாப்பிள்ளை பார்க்க -போகும் பொழுது பிரிந்த கலக்கம்–சீர் கொண்டு வருகிறாள் வரும் பொழுது ரத்னம் மாணிக்கம் வைடூர்யம் முத்து //பெரிய திரு மொழி -/3-8-புலி நகம் யானை முடி வலை த்ருஷ்ட்டிக்கு -பொன்னி கொண்டு வருகிறாள்/ பொன் முத்தும் ..முன் உந்த திரை /புனல் காவேரி/அலைகள் திரு கை/திரு மேனி முழுவதும் பரவு தல் போல பூமி பரப்பு அளவும் பரந்து -இரண்டு காவேரி நடுவில் பெரிய பெருமாள் போல ஹாரம் அவனை சுற்றி /தாயார் பதக்கத்தில் பெருமாள் இருப்பாரே/அடுத்து குத்தல் பெரு மா மழை மேகம் போல நீர் கொண்டு எழுந்த கார் மேகமே திரு குழல்– கருத்து அடர்ந்து பார்க்க குளிர நீர் உண்ட காள மேகம் போல –செறிந்து நீண்டு நெய்த்து சுருண்டு இருண்டு அடர்ந்து நெடு நீலம் பூண்டு –இந்திர தனுசும்மின்னும் -கதம்ப மாலை- வானவில் மின்னல்-மல்லி மாலை/கந்தனுக்கு தர்சநீயமாக இருக்கையும் -ஒரு கால் குலைத்து நுழைந்த விடாய் தீர -கை விரல வைத்து அலைய –
கொள்கின்ற கோள் இருளை …அன்று மாயன் குழல் /இதற்கும் கருப்பு ஏற்ற வல்ல கூந்தல் /நீர் ஆர வேலி- ஆரம் போல ஆவரண ஜலம் எல்ல்லையாய் பெற்றவள் பூமி பிராட்டி /பூமி நீர் அக்னி வாயு ஆகாசம் அகங்காரம் மகான் பிரகிருதி-சப்தாவரண புறப்பட்டு சித்ர வீதி திரு சுற்று/அன்று தான் ராமானுஜ நூற்று அந்தாதி கேட்டு –சந்தி மட்டும் வாத்தியம் கேட்பார்-ஸ்வாமி இருக்கும் காலத்திலேயே நடந்தது இது -நில மங்கைக்கு காப்பு-ரட்ஷை இது –பூமி பிராட்டிக்கு ஆறு விசேஷனங்கள் /ஆரம்-சந்தனமே உருகி நீர்மை-கற்பை தனக்கு வேலியாக உடையவள்-பூமியை சொல்ல புக்கு வாமனன் மண் -இது என்னும் மண்ணை துளாவி-அவனுக்கு என்றே இருக்கும் / இதுவே ஸ்வரூப தர்மம் /நீர்மையான கற்பு குளிர்ந்து இருக்கும்/கொதிக்கிற கற்பு-எடுத்து கை நீட்டும் படி ஸ்ரீ தேவி உடன் மிதுனத்தில் நிழல் போல கைங்கர்யம்-எடுத்து கை நீட்டியாய் இருப்பாள் /பசு மேய்க்க போகல் –உன் தன்இன்பம் தரும் மாதர் உடன் இங்கே இரு -பரகால நாயகி /உன் திருவடியை கேட்டு அத் திரு அவனையே பற்றும் இத் திரு இருவரை பற்றும் –பூமி பிராட்டி தான் முதல் ஸ்ரீ வைஷ்ணவி/நில மங்கை என்னும் இப் பார்-பூமியை பிரகாரமாக கொண்ட இவளை சொன்னார்..
சொல பட்ட மூன்று அன்றே —
அம் மூன்றும்
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆரார் இவற்றின் இடை அதனை எய்துவார்
சீரார் இரு கலையும் எய்துவர் சிக்கனே மற்று
ஆரானும் உண்டு என்பார் எனபது தான் அதுவும்
ஓராமாய் அன்றே? உலகத்தார் சொல்லும் சொல்
ஒராமையாறு அது உரைக்கேன் கேளாமே
சொல்ல பட்ட புருஷார்த்தங்கள் மூன்று தானே-தர்மம் அர்த்தம் வீடு என்று அர்த்தம் கொள்ள கூடாது என்று அறம் பொருள் இன்பம்-என்று-இதற்குள் /தம் உள்ளத்தில் உள்ள காமமே புருஷார்த்தம் என்று சொல்ல வருகிறார்/ஏவ காரம்-அன்றே-ஏ சொன்னது-இவரே வித்வான் இவர் வித்வானே-அவயோக விவேச்சேதம் அந்ய யோக விவேச்சேதம்//து ஹி-சமஸ்க்ருதம்-வேறு பட்ட கருத்து சொல்ல -ஆழ்வார் கோஷ்டியில் மூன்று என்பதே என்கிறார் //நெஞ்சே சொல்லும் நாமங்களே-குறையால் பிரான் அடி கீழ் விள்ளாத அன்பன்–சேம நல் வீடும் -நான்கினும் கண்ணனுக்கே ஆம் இது காமம் -வாமனன் சீலன் ராமானுஜரும் பகருகிறார்/வைசம்பாயனர் ஜைமேனி இந்த கதையை கேட்டு கொண்டு இருப்பதே புருஷார்த்தம்/வைதிக காமம் தெய்வ தேவகி புலம்ப 10 வயசு குழந்தை பால் குடித்தானே நஞ்சீயர் பட்டர்–
பக்திச்த ஞான விசேஷம் /ஞானம் தான் கீழ் படி உயர்ந்து உயர்ந்து பக்தியாக மாறும் ஞானம் கனிந்து பக்தி /வேதார்தம் அர்த்தம் புரிந்த பின்பு தான் திரு மடல் கேட்க வரணும் /உத்பவர்-
கோபிகள் பண்ணும் எல்லா வற்றிலும் கண்ணன் கண்டு அவர் வழியில் போனார்/பக்தி ரூபா மன்ன ஞானம் –ராமானுஜர் இதற்க்கு பிரதானம் கொடுத்தது அருளி செயல்களை கொண்டே–முதல் திருவாய் மொழி வேதார்த்த அர்த்தம் பொழிந்தார் /அடுத்து உபதேசம்/ மூன்றாம் திரு வாய் மொழியில் -எத்திறம் உரலினோடு ஏங்கி இருந்த எளிவே ஆரு மாசம் மோகித்தாரே–அடுத்து 1-3-2-எளிவரும் இயல்வினன் சொல்ல ஆறு மாசம் ஆனதே –மதி நலம் அருள பெற்றவர் தீ மனம் கெடுத்து மருவி தொழும் மனமும் கொடுத்து /ஆராயில் தானே ஆராயில்தான் ஏ -ஆராய புக்கில்-ஏ வகாரம் பாத பூர்த்தி/மூன்று எழுத்துடைய பேரால் கத்திர பந்து பராங்கதி பெற்றான்-எந்த மூன்று சொல்ல வில்லை/மறைத்து சொன்னால் எந்த மூன்று கேட்க்க வருவார்கள் கோவிந்த மாதவ ஸ்ரீதர மாதவ /இங்கு குழம்ப வாய்ப்பு என்று தெளிவு படுத்து கிறார் மோட்ஷம் இதில்-இந்த மூன்றில்- ஓன்று என்பர் உண்டே -அவர்களுக்கு இடம் அற சொல்கிறார்–ஆரார் -யார் யார்-தர்மம் அர்த்தம் மோஷம் யார் சொன்னால் போதும் ஆர் ஆர் சொல்லி தான் காமம்-துர் லபம்-யார் இவற்றை எய்துவார் /யார் யார் இவற்றின் இடையை-சீரார் சீமான்கள் -தர்மமும் அர்த்தமும் பெற்றவர் ஆவார் இதை பெற்றால்/
நடுவனது எய்த இரு தலையும் எய்தும் -நால் அடியார் -பொருள் எய்த தர்மம் காமம் எய்துவர் பழம் தமிழ் வார்த்தை /அது போல இல்லை /அதனை எய்துவார்-இடை -நடு அர்த்தம் இல்லை /இவற்றினிடை-அதனை இவற்றுக்குள் அதனை-என்று கொள்ள வேண்டும் /அதனை-பெயர் சொல்லாமல்-உயர்ந்தது என்று-ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர் மட்டுமே/போல –பேதை பாலகன் அதாகும் பிணி பசி மூப்பு -யௌவனம் -பயந்து சொல்ல வில்லை -இங்கு உயர்ந்த-ஆழ்வார் கோஷ்டியில் அது என்றால் காமம் பிரசித்தம்/திவளும் வெண் மதி அமுதினில் பிறந்த ..அவளும் நின் ஆகத்து இருப்பது அறிந்தும் -..ஆகிலும் ஆசை விடாளால் குவலயம் கண்ணி கொல்லி அம் பாவை -..இவள்/அவளுக்கும் இவளுக்கும் பெயர் இல்லை அடையாளமுண்டு-அவள் – ஸ்ரீ தேவி பிரசித்தம் –அவள் அவள் தான் மதிப்பு தோற்ற–இவள்-அவனால் நலிய பட்ட பர கால நாயகி–அவனுக்கு பிரசித்தம் -வார்த்தையே போதும் பெயர் சொல்லி புரிய வைக்க வேண்டாம் மலையிலே பிறந்தவள் இவள் கடலில் பிறந்தவள் அவள் –எழிதின எழுத்து போகும் –மலையில் ஸ்திரம்–அவளை காட்டிலும் இவளுக்கு ஏற்றம்-யார்யார் — யார் வேண்டும் என்றாலும் அர்த்தம்–சர்வருக்கும் -யாரும் பக்தி பண்ணலாம்—பயிலும் திரு உடையார் எவரேலும்-
பக்திக்கு அனைவரும் -இருந்தாலும் வாசுதேவம் சர்வம் துர் லபம்-உண்ணும் சோறு பருகும் தண்ணீர் எல்லாம் கண்ணன் /பயிலும் சுடர் ..எவரேலும் அவர் கண்டீர் –என்னை ஆளும் பரமரே/எப் பிறப்பு எக் குற்றம் எவ் இயல்வு –அப்படி பெற்றால்-சீரார் இரு கலையும் எய்துவர்-சீர்மை-இருகலைக்கும் விசேஷணம்/ காமம் புருஷார்த்தம் அடைந்தவர்களுக்கு சீரார் /கலா மாத்ரம் போல இவை-பூர்ண சந்திரன் போல இது அம்சம் இவை/சாத்தியம் இது சாதனம் அவை–இவற்றுக்கு சீர்மை இதற்க்கு சாதனம் என்பதால்–சிக்கு என மற்று யாரானும் -மோட்ஷம் வார்த்தை கொண்டு சொல்லாமல் தாழ்ச்சி-தோன்ற-உதாசீனம் / கற்ப்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ-எத்தை கழிக்கிறார்– கண்ணனை-கிருஷ்ண த்ருஷ்ண தத்வம் பாடுகிறார்-எடுத்து கழிக்க இந்த பெருமை வேண்டுமே-சிந்தை தன்னில் நீங்காது இருந்த திருவே சிந்தைனைக்கு இனியாய்-வாழ்ந்தே போம் -/ உன் அடியார் எல்லோர் உடன் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை-இங்கு நம் ஆழ்வாரை கழிக்கிறார் –விட்டு பிரிந்து நிறைய அழவும் முடியும் சேர்ந்து மகிழ்ந்தும் நிறைய பாடுவார் அவர்-மலையாள ஊட்டு போல /அமரர் கோன் அர்ச்சிகின்று-போல பாடுவார் அவர் பாஷை தொனிக்க /நிதானமாக பண்ணுவார் இவரோ நான்கு பாசுரம்தான் தூது விட்டார் அனுகாரமும் ஒரே பாசுரம்/பரம சுகுமாரர் இவர்-அல்பாச்த்ரம் இவை என்று நிலை நின்ற அந்தமில் பேர் இன்பம் என்பர் இதை-
நலம் அந்தமில் நாடு– மாக வைகுந்தம் –ஆனால் காட்ட முடியாதே வாசஸ் சமுத்ரம் தான் பேச்சு கடல் தான் கடல் நீர் கானல் நீர் போல/கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் –சிக்கனே -யாரோ சிலர்-சொல்வார் மற்று-அவ்யபதேச்யர் அவ் யுத்பன்னர் அறிவு இன்றி பெயர் சொல்ல தகுதி இல்லாதவர்-அறிவிலி-நாஸ்திக எல்லை இல்லை ஆஸ்திக புத்தி வளர்ந்து பேசுகிறார்–ஆர் சீர் வசன பூஷணம் ஓர் இருவர் உண்டாகில் அத்தனை காண் உள்ளமே எல்லார்க்கும் அண்டாதது அது –இந்த பகவத் பக்தி தாண்டி ஆச்சர்ய அபிமானமே உத்தேசம் என்று காட்டும்–ஓர்தல்-ஆராய்தல் –ஆராயாமல் சொல்கிறார்கள்
அது ஓன்று இல்லை-என்கை–என் உக்தி மாத்ரத்தாலே பிரமாணம் பிரமேயம் -வேதம் கொண்டு மோட்ஷம் -இரண்டையும் அழிக்க போகிறேன் -வாய் வார்த்தையால் –நீங்கள் செய்ய வேண்டியது -காது கொடுத்தல் போதும் சொன்னால் விரோதம் இது -வேண்டுவனே கேட்டியேல் செய்யும் கிரிசைகள் கேளீரோ–உண்மையான அபிபிராயத்தால் கேளுங்கோ /பறை கேட்க்க -அவன் ஆண்டாளை பார்த்து கொண்டே இருக்க அழகில் மயங்கி –பராக்கு பார்த்து கொண்டு இருக்க -கேட்டியேல்-தொடை தட்டி சொல்கிறாள்–சொன்னால் விரோதம் இது –ஆகிலும் சொல்வன்-பிறப்பித்த காரணம் இது தான்–கேண்மினோ-காது கொடுத்தால் போதும்–அது போல பிரமாண பிரமேயம் இல்லை கேண்மினோ-என்கிறார் இங்கு-செவி தாழ்த்து -கேட்டு தான் பாருங்கோ-கேட்டால் உம் கட்ஷி மாறி எம் கட்ஷி வந்து விடுவேள்–எடு படும்–சம்பாவனை வேண்டாம் —
———————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply