திவ்ய பிரபந்தங்களில் பிராட்டி சம்பந்தம்-திருமங்கை ஆழ்வார்-பெரிய திருமொழி ..

அமரர்கள் தொழுது ஏத்த அரை செய் மேகலை அலர் மகள் அவளோடும் அமர்ந்த நல இமயத்து …பிருதி சென்று அடை நெஞ்சே ! 1-2-5

தேன் உடை கமல திருவினுக்கு அரசே ! ….நைமிசாரணியத்துள் எந்தாய! 1-6-9

வானவர் தங்கள் சிந்தை போல என் நெஞ்சமே ! இனிது வந்து மாதவமானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை 2-1-1

பந்து அணைந்த மெல் விரலாள் பாவை தன காரணத்தால் வெம்  திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் ..எவ் வுள் கிடந்தானே -2-2-4

பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள் வந்து இருக்கும் மார்வன் ..எவ் வுள் கிடந்தானே -2-2-9

இன் துணை பதுமத்து அலர் மகள் தனக்கும் இன்பன் நல புவி தனக்கு இறைவன் தன துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை .. எந்தை தந்தை தம்மானை திருவல்லி கேணி கண்டேனே 2-3-5

பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும் இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற ..எம்மானை ..திருவல்லி கேணி கண்டேனே 2-3-7

அன்று ஆயர் குல கொடியோடு அணி மா மலர் மங்கையொடு அன்பளவி ..நறையூர் திருவாலி குடந்தை தடம் திகழ் கோவல் நகர் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தார்க்கு இடம் மா மழையாவது நீர்மலையே 2-4-1

கொங்கையினாள் பொறை தீர முன நாள் அடு வாள் அமரில் பல மன்னர் பட சுடர் ஆழியினை பகலோன் மறைய பணி கொண்டு அணி சேர் நிலா மன்னனுமாய் உலகு ஆண்டவனுக்கு இடம் மா மழையாவது நீர் மலையே 2-3-3

பார்வண்ண மடமங்கை பணி நன் மலர்ககிழத்தி  நீர் வண்ணன் மார்வத்தில் இருக்கையை நினைந்து  அவனூர் கார்வண்ண முது முந் நீர்க்கடல் மலை தல சயனம் ஆர் எண்ணும் நெஞ்சு உடையார் அவர் நம்மை ஆள்வாரே 2-6-2

ஏனத்தின் உருவாகி நில மங்கை எழில் கொண்டான் வானத்தில் அவர் முறையால் மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள  கானத்தின் கடல் மலை தல சயனத்து உறைகின்ற  ஜானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகரே  2-6-3

திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால் குவளை அம் கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்து இருந்த இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் ? இடவெந்தை எந்தை பிரானே ! 2-7-1

மா மணியும் மலர் மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலை கடல் போன்று இவரார் கொல் ? என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே 2-8-5

சீர் மன்னு செம் தமிழ் மாலை வல்லார் திரு மா மகள் தன அருளால் உலகில் தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் செழு நீர் உலகாண்டு திகழ்வர்களே 2-9-10

சந்தணி மென் முலை மலராள் தரணி மங்கை தாம் இருவர் அடி வருடம் தன்மையானை  வந்தனை செய்து …..செல்வ திருகோவலூர் அதனுள் கண்டேன் நானே 2-10-2

தூவடிவின் பார்மகள் பூ மங்கையோடு சுடர் ஆழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற ….திரு வுருவம் ஆனான் தன்னை …திருகோவலூர் அதனுள் கண்டேன் 2-10-9

மின்னும் ஆழி அம் கையவன் செய்யவள் உறை தரு திருமார்பன் 3-1-2

ஆயர் பூம் கொடிக்கு இன விடை பொருதவன் இடம் பொன் மலர் திகழ்….திருவயிந்திரபுரமே 3-1-5

கூன் உலாவிய மடந்தை தன கொடும் சொலின் திறத்து இளம் கொடியோடும் கான் உலாவிய கருமுகில் திரு நிறத்தவன் இடம் திருவயிந்திரபுரமே 3-1-6

மின் இன் நுண் இடை மட க்கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை மன்னன் நீள் முடி போடி செய்த மைந்தன் இடம் திருவயிந்திரபுரமே 3-1-7

விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில் இருத்து அடல் மழைக்கு நிரை கலங்கிட வரை  குடை எடுத்தவன் நிலவிய இடம் திருவயிந்திரபுரமே 3-1-8

திருமார்பனை சிந்தையுள் வைத்து 3-2-2

கடலுள் கிடந்தான் உவந்து கவைநா அரவின் அணை பள்ளியின் மேல் திருமால் திருமங்கையோடோடு தில்லை திரு சித்ரா கூடம் சென்று சேர்மின்களே 3-2-4

பூ மங்கை தங்கி புல மங்கை மன்னி புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர் சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லை திரு சித்ரா கூடம் சென்று சேர்மின்களே 3-2-5

மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து மகரம் சுழல சுழல் நீர் பயந்த தெய்வ திருமா மலர் மங்கை தங்கு திரு மார்பனை சிந்தையுள் வைத்தும் ….தில்லை திரு சித்ரா கூடம் சென்று சேர்மின்களே 3-2-7

மா நிலா மா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டு உண் பூ மகள் நாயகன் என்றும் புலம் கெழு கோவியர் பாடி தேமலர் தூவ வருவான் சித்ரா கூடதுள்ளானே 3-3-2

உருவ கரும் குழல் ஆய்ச்சி திறத்து இனமால் விடை செற்று தெருவில் திளைத்து வருவான் சித்ரா கூடதுள்ளானே 3-3-5

ஒருமகள் ஆயர்மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றை திருமகளோடும் வருவான் சித்ரா கூடதுள்ளானே 3-3-9

பஞ்சிய மெலடி பின்னை திறத்து முன் நாள் பாய் விடைகள் யேழ்அடர்த்து ..3-4-4

மட்டவிழும் குழலிக்கா வானோர் காவில் மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் ! 3-4-8

கறை தங்கு  வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் 3-4-9

வந்து உனதடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும் என் சிந்தனைக்கு இனியாய் ! திருவே !என் ஆர் உயிரே ! 3-5-1

வயலாலி மணவாளன் ..நீ சென்று என் பயலை நோய் உரையாயே 3-6-2

வளை இழந்தேர்க்கு இது நடுவே வயலாலி மணவாளா! கொள்வாயோ மணி நிறமே ! 3-6-8

கள்வன் கொல் ? யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து வள்ளி மருங்குல் என் தன் மட மானினை போத வென்று வெள்ளி வளைக்கை பற்ற பெற்ற தாயரை விட்டகன்று அள்ளலம் பூங்கழனி அணி ஆலி புகுவர் கொலோ ? 3-7-1

மாதவன் தன் துணையா நடந்தாள்….அணி ஆலி புகுவர் கொலோ ? 3-7-4

மாயனை மாதவனை மதித்து என்னை அகன்ற இவள் ….ஆலி புகுவர் கொலோ ? 3-7-5

பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினாள் 3-7-7

காவி அம் கண்ணி எண்ணில் கடி மா மலர் பாவை ஒப்பாள் 3-7-9

புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மான் இடம் …. நாங்கூர் மணி மாட கோயில் வணங்கு என் மனனே ! 3-8-3

துளையார் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியம் சிற்றில் சிதைத்தும் முற்றா இளையார் விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மான்இடம் நாங்கூர் மணி மாட கோயில் வணங்கு என் மனனே ! 3-8-8

மின் அனைய நுண் மருங்குல் மெல் இயற்கா இலங்கை வேந்தன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர….வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே ! 3-9-5

அலர் மகட்க்கும் அரற்க்கும் கூறாக கொடுத்தருளும் திரு உடம்பன்….வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே ! 3-9-8

திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ தீ வினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும் அருள் நடந்து ….எழில் திகழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே ! 3-10-1

வாள் நெடும் கண் மலர் கூந்தல் மைதிலிக்கா இலங்கை மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர தாள் நெடும் திண சிலை வளர்த்த தயரதன் சேய் என் தன தனி  சரண்  வானவர்க்கு அரசு கருதும் இடம் ….மணி நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே ! 3-10-6

சென்று சின விடை ஏழும் பட அடர்த்து பின்னை செவ்வி தோள் புணர்ந்து உகந்த திருமால் தன கோயில் 3-10-10

தட மண்ணி தென் கரை மேல் மாதவன் தான் உறையும் இடம்  வயல் நாங்கை ….திரு தேவனார் தொகையே 4-1-1

வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான் காரார் திண சிலை இறுத்த தனி காளை கருதும் இடம் நாங்கை தன்னுள்….திரு தேவனார் தொகையே 4-1-8

பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம்பிரானை வார் அணி முலையாள் மலர்மகளோடு மண் மகளும்  உடன் நிற்ப  சீரணி மாட நாங்கை நன் நடுவுள் செம் பொன் சேய் கோயிலினுள்ளே  காரணி மேகம் நின்றது ஒப்பானை கண்டு கொண்டு உய்ந்துஒழிந்தேனே 4-3-1

வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடும் சினத்துவன் தாளார்ந்த காரார் திண விடை அடர்த்து வதுவை ஆண்ட கருமுகில் போல் திரு நிறத்து என் கண்ணன் கண்டீர் 4-4-4

சிலம்பின் இடை சிறு பரல் போல் பெரிய மேரு திரு குழம்பில் கணகணப்ப திரு வாகாரம் குலுங்க நில மடந்தை தனை இடந்து புல்கி கோட்டிடை வைத்து அருளிய எம் கோமான் கண்டீர் 4-4-8

செவ்வி தோள் புணர்ந்த எந்தை 4-5-3

பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவிலாத திருமகள் மருவும் நாங்கூர் திருமணி கூடத்தானே 4-5-5

படவ்ரவுச்சி தன மேல் பாய்ந்து பல் நடங்கள் செய்து மடவரல் மங்கை தன்னை மார்வகத்து இருத்தினானே ! 4-6-5

பூவார் திருமாமகள் புல்கிய மார்பா ! நாவார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர் தேவா ! திரு வெள்ளக் குளத்து உறைவானே ! ஆவா ! அடியான் இவன் என்றுஅருளாயே 4-7-9

தவள மாட நாங்கை தாமரையாள் கேள்வன் என்றும் பவளவாயாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே 4-8-1

பஞ்சி அன்ன மெல் அடியாள்பார்த்தன் பள்ளி பாடுவாளே 4-8-2

ஆயர் மாதர் கொங்கை புல்கு செண்டன் 4-8-3

பல்வளையால் என் மடந்தை  பார்த்தன் பள்ளி பாடுவாளே 4-8-4

பாலின் நல்ல மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே 4-8-6

பாடகம் சேர் மெல் அடியாள்பார்த்தன் பள்ளி பாடுவாளே 4-8-7

பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே 4-8-9

சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே ! மருவினிய மைந்தா ! அம் தண் ஆலி மாலே ! சோலை மழ களிறே !நந்தா விளக்கின் சுடரே !நறையூர் நின்ற நம்பி !என் எந்தாய் ! இந்தளூராய் ! அடியேற்கு இறையும் இரங்காயே .4-9-2

மின்னினன்ன நுண் மருங்குல் வேயேய் தடம் தோள் மெல்லியற்கா மன்னு சினத்த மழ விடைகள் ஏழ் அன்று அடர்த்த மாலதிடம் ….புள்ளம் பூதங்குடி தானே 5-1-6

கற்றா மறித்து காளியன் தன சென்னி நடுங்க நடம் பயின்ற பொற்றாமரையாள் தன கேள்வன் புள்ளம் பூதங்குடிதன மேல 5-1-10

செறும் திண திமில் ஏறுடைய பின்னை பெரும் தண் கோலம் பெற்றாரூர் போல்  நறும் தண் தீம் தேன் உண்ட வண்டு குறிஞ்சி பாடும் கூடலூரே 5-2-2

மான வேல் ஒண் கண் மடவரல் மணமகள் அழுங்க முந்நீர் பரப்பில் ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவானே ! எனக்கு அருள் புரியே ….திரு வெள்ளறை நின்றானே 5-3-5

..திரு வெள்ளறை  அதன் மேய அஞ்சனம்  புரையும்  திருவுருவனை ஆதியை அமுதத்தை 5-3-10

அல்லி மாதர் அமரும் திருமார்வன் அரங்கத்தை  கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலிகன்றி சொல் 5-4-10

பூ மேல மாதாளன் குடமாடி மதுசூதனன் மன்னர்க்காய் முன்னம் சென்ற தூதாளன் என் மகளை செய்தனகள் எங்கனம் நான் சொல்லுகேனே ? 5-5-6

மறவாதே எப்பொழுதும் மாயவனே ! மாதவனே ! என்கின்றாளால் பிறவாத பேராளன் என் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள் அறவாளன் என் மகளை செய்தனகள் அம்மனைமீர் !அறிகிலேனே 5-5-8

திருவரங்க  தம்மானை சிந்தை செய்த நீல மலர் கண் மடவாள் நிறை அழிவை தாய் மொழிந்த அதனை 5-9-10

கைம்மான மழ  களிற்றை கடல் கிடந்த கருமணியை மைமான மரகதத்தை மறை உரைத்த திருமாலை எம்மானை  எனக்கு என்றும் இனியானை பனி காத்த அம்மானை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே 5-6-1

சிந்தனையை தவநெறியை திருமாலை பிரியாது வந்து எனது மனத்து இருந்த வடமலையை…..யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே 5-6-7

சுரி குழல் கனிவாய் திருவினை பிரித்த கொடுமையில் கடுவிசை அரக்கன் எரி விழித்து இலங்கு  மணி முடி பொடி   செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி வரிசிலை வளைய அடுசரம் துரந்து  5-7-7

மாழைமான் மடநோக்கி யுன்  தோழி உம்பி எம்பி என்று ஒழிந்திலை 5-8-1

தம்பியோடு தாம் ஒருவர் தன துணைவி காதல் துணையாக முந நாள்  வெம்பி எரி கானகம்  உலாவுமவர் தாம் இனிது மேவுநகர் ..நந்தி புர விண்ணகரம் 5-10-6

விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண் அமுதுண்ட எம்பெருமானே ! 6-1-2

பெருமான் ! திருமார்பா ! சிறந்தேன் நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே ! 6-2-2

போதார் தாமரையாள் புலவி குல வானவர் தம் கோதா ! ..நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே ! 6-2-9

சிறந்தேன் நின் அடிக்கே அடிமை திருமாலே ! திரு விண்ணகரானே! 6-3-2

சொல்லாய் திருமார்வா ! உனக்காகி தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ மல்லா !குடமாடி ! மதுசூதனே ! உலகில் செல்லா நல்லிசையாய் !திரு விண்ணகரானே! 6-3-9

பின்னை கேள்வன் ..சேர்ந்த கோயில் திருநறையூர் மணி மாடம் சேர்மின்களே 6-6-8

பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர்….திருநறையூர் மணி மாடம் சேர்மின்களே 6-6-9

மாதர்க்காய் வண் துவரை நட்டானை நாடி நறையூரில் கண்டேனே 6-8-7

மின் ஒத்த நுண் மருங்குல் மெல் இயலை திரு மார்பில் மன்ன தான் வைத்து உகந்தான் மலர் அடியே அடை நெஞ்சே ! 6-9-6

அமுதம் கொண்ட பெருமான் திருமார்வன் 6-10-3

எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திருநாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோநமோ நாராயணமே 6-10-6

நில மா மகள் மலர் மா மங்கை ….நாயகராய எங்கள் அடிகள் இமையோர் தலைவருடைய திருநாமம் நங்கள் வினைகள் தவிர உரைமின் நமோ நமோ நாராயணமே 6-10-9

வில்லேர் நுதல் வேல் நெடுங்கண்ணியும் நீயும் கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே ! 7-1-5

அம்புருவ வரி நெடும் கண் அலர்மகளை வரை அகலத்தமர்ந்து …வண் சேரை வான் உந்து கோயில் மேய எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே 7-4-2

திருவாழ் மார்வன் தன்னை ..தென் அழுந்தையில் மன்னி நின்ற கருவார் கற்பகத்தை கண்டு கொண்டு களித்தேனே 7-6-7

நில மகள் தன முலையாள் வித்தகனை….தென் அழுந்தையில் மன்னி நின்ற கலையார் சொல்பொருளை கண்டு கொண்டு களித்தேனே 7-6-8

இலங்கு ஒளி சேர் வாரார் வன முலையாள்  மலர் மங்கை நாயகனை ஆரா வின்னமுதை தென் அழுந்தையில் மன்னி நின்ற காரார் கருமுகிலை கண்டு கொண்டு களித்தேனே 7-6-9

திருவுக்கும் திருவாகிய செல்வா !…திருமார்பா !…அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே ! 7-7-1

பந்தார் மெல் விரல் நல  வளை  தோளி பாவை பூ மகள் தன்னொடும் உடனே வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால் வண்ணா !….நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர்மேல் திசை நின்ற அம்மானே ! 7-7-2

வரனே ! மாதவனே ! மது சூதா !…..அழுந்தூர்மேல் திசை நின்ற அம்மானே ! 7-7-4

தீவாய் நாகணை யில் துயில்வானே !திருமாலே ! இனி செய்வது ஓன்று அறியேன் ஆ !ஆ ! என்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர்மேல் திசை நின்ற அம்மானே ! 7-7-9

செங்கமல திருமகளும் புவியும் செம்பொன் திருவடி இன் இணை வருட ….அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே  7-8-1

இலங்கு புவி மடந்தை தனை இடந்து புல்கி எயிற்று இடை வைத்து அருளிய எம் ஈசன் காண்மின்….அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே  7-8-4

பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகி பகலவன் மீதியங்காத இலங்கை வேந்தன் …. அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே  7-8-7

திருமாமகள் மருவும் சிறுபுலியூர் சலசயனத்து அருமா கடல் அமுதே ! உனது அடியே சரணாமே 7-9-9

வாசவார் குழலாள் மலை மங்கை தன பங்கனை பங்கில் வைத்து உகந்தான் தன்னை ….சென்று நாடி கண்ணா மங்கையுள் கண்டு கொண்டேனே 7-10-3

திருமங்கை மணாளனை தேவனை….கண்ணா மங்கையுள் கண்டு கொண்டேனே 7-10-6

வடி தடங்கண்  மலர் அவளோ வரையாகத்து உள்ளிருப்பாள் என்கின்றாளால்  கடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள் கொலோ ? 8-1-5

மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனை கண்டாள் என்று  காவளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத்தம்மானை  கலியன் சொன்ன 8-1-10

வாராளும் இளம் கொங்கை நெடும் பணை தோள் மட பாவை சீராளும் வரை மார்பன் திருக் கண்ண புரத்து உறையும் பேராளன் 8-3-9

விண்ணவர் தங்கள் பெருமான் திருமார்வன் 8-4-1

மார்வில் திருவன் வலன் எனது சக்கரத்தன் 8-4-6

நந்தன் முதலை நில மங்கை நல் துணைவன் அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான் 8-4-9

வார்கொள் மென் முளை மடந்தையர் தடங்கடல் வண்ணனை தாள் நயந்து ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை அறிந்து முன் உரை செய்த  கார்கொள் பைம்பொழில் மங்கையர்காவலன் 8-5-10

திருமார்பன் வண்டார் கூந்தல் மலர்மங்கை வடி கண் மடந்தை மான் நோக்கம் கண்டான் கண்டு கொண்டு உகந்த கண்ண புரம் நாம் தொழுதுமே 8-6-1

வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுந்த ஆற்றலான் 8-6-3

ஒருநாள் பெரும்தோள் vaanar கு அருள் புரிந்து பின்னை மணாளனாகி 8-6-6

கொடியேர் இடையாள் பொருட்டாக வன் தாள் விடை யேழ் அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன் 8-6-9

வியமுடை விடை இனம் உடை தர மடமகள் குயமிடை தடவரை அகலமது உடையவர்….கண புரம் அடிகள் தம் இடமே 8-7-1

துணை மலி முலையவள் மண மிகு கலவியுள் மண மலி விழ வினொடு அடியவர் அளவிய….கண புரம் அடிகள் தம் இடமே  8-7-2

கோதிய மதுகரம் குலவிய மலர்மகள் காதல் செய் கண புரம் அடிகள் தம் இடமே 8-7-4

திருமகள் மருவிய ….கண புரம் அடிகள் தம் இடமே 8-7-6

புலமனு மலர்மிசை மலர்மகள் புணரிய நிலமகள் என இனமகளிர்கள் இவரொடும்….கண புரம் அடிகள் தம் இடமே 8-7-9

துவரி கனிவாய் நில மங்கை துயர் தீர்ந்து உய்ய ..பிறந்த அம்மானை…கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே 8-8-9

வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம் உண்டானே ! உன்னை உகந்து உகந்து உன் தனக்கே தொண்டானேற்கு ஏன் செய்கின்றாய்  ? சொல்லு நால் வேதம் கண்டானே !கண்ண புரத்து உறை அம்மானே ! 8-10-1

மண்ணாளா ! வாள் நெடுங்கண்ணி மது மலராள் கண்ணாளா ! கண்ண புரத்து உறை அம்மானே ! 8-10-4

என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி ஏந்து இளம் கொங்கையும் நோக்குகின்றார் அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ !ஒருவர் அழகியவா ! 9-2-1

கோதை நறுமலர் மங்கை மார்வன் குருங்குடிக்கே என்னை உய்த்திடுமின் 9-5-2

திரு மா மகளை பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட பேர் அருளாளன் பெருமை பேச கற்றவன் காமரு சீர் கலியன் 9-5-10

சந்து சேர் மென் முலை பொன் மலர் பாவையும் தாமும் நாளும் வந்து சேர் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சு ! 9-7-8

நிலமகள் செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான் ….திரு கோட்டியூரானே 9-10-2

குல மா மகட்கு இனியான்….திரு கோட்டியூரானே 9-10-4

நில  மா மகட்கு இனியான் ….திரு கோட்டியூரானே 9-10-7

கூந்தலார் மகிழ் கோவலனாய்  10-1-7

ஓர் கொம்பு கொண்ட குரை கழல் கூத்தனை 10-1-9

பேரில் மணாளனை 10-1-10

நானில மங்கை மணாளா ! 10-4-7

உகிரால் பிளந்திட்டு அமரர்க்கு அருள் செய்து உகந்த பெருமான் திருமால் 10-6-4

சந்த மலர் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி பந்து பறித்து துகில் பற்றி கீறி படிற் அன்படிரு செய்யும் நந்தன் மதலைக்கு 10-7-5

மண் மகள்  கேள்வன் மலர் மங்கை நாயகன்  நந்தன் பெற்ற முதலை அண்ணல் இல்லை குழல் ஊதி நம் சேரிக்கே அல்லில் வந்த பின்னை 10-7-6

திருமார்பன் கிடந்து திருவடியால் மலை போல் ஓடும் சகடத்தை சாடிய பின்னை 10-7-9

தக்கார் பலர் தேவிமார் சால வுடையீர் 10-8-8

ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய் கூடி குரவை பிணை கோமள பிள்ளாய் ! தேடி திரு மா மகள் மண் மகள் நிற்ப ஏடி இது என் ? இது என் ? இது என்னோ ? 10-8-9

அல்லி கமல கண்ணனை அங்கு ஓர் ஆய்ச்சி எல்லி பொழுது ஊடிய  ஊடல் திறத்தை 10-8-10

கள் அவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும் பிள்ளை தன கையில் கிண்ணமே ஒக்க 10-9-1

நேரிழை மாதை நித்தில தொத்தை 10-9-3

திருத்தாய் செம்போத்தே !திருமாமகள் தன கணவன்  மருத்தார் தொல் புகழ் மாதவனை வர திருத்தாய் செம்போத்தே !10-10-1

மட்டார் பூங்குழல் மாதவனை வர கொட்டாய் பள்ளி குட்டி ! 10-10-4

குன்றம் எடுத்து மழை தடுத்து இளையாரோடும் மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான் 11-2-1

அன்னை முனிவதும் அன்றிலின் குரல்  ஈர்வதும் …பின்னை மணாளர் திறத்தமாயின பின்னையே 11-2-5

கடல் வண்ணனார் மா மணவாளர் 11-2-7

மஞ்சுறு மால் இரும் சோலை நின்ற மணாளனார் நெஞ்சம் நிறை கொண்டு போயினர்11-2-8

ருவரை அன்ன தன்மை அடல் ஆமையான திருமால் நமக்கு ஓர் அரணே 11-4-2

பெரு நில மங்கை மன்னர் மலர் மங்கை நாதர் புல மங்கை கேள்வர் புகழ் சேர் பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயராகி அவர் நம்மை ஆழ்வார் பெரிதே 11-4-6

சிலைமலி வெஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் நமக்கு ஓர் அரணே 11-4-7

சிலைமலி வெஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமாலை வேலை புடை சூழ் ….பனுவல் 11-4-10

மானமரு மென்னோக்கி வைதேவி இன் துணையா கானமரும் கல்லதர் போய் காடுரைந்தான் காணேடி ! 11-5-1

பூ வளரும் திரு மகளால் அருள் பெற்று பொன் உலகில் பொலிவர் தாமே 11-6-10

தேனொடு வண்டாலும் திருமால் இரும் சோலை தான் இடமாக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய் ஆன் விடைஏழ் அன்று அடர்த்தாற்கு ஆளானார் அல்லாதார் மானிடவர் அல்லர் என்றுஎன் மனத்தே வைத்தேனே 11-7-9

மெய் நின்ற பாவம் அகல திருமாலை கை நின்ற ஆழியான் சூழும் கழல் சூடி கை நின்ற வேல் கை கலியன் ஒலி மாலை ஐ ஒன்றும் ஐந்தும் இவை பாடி ஆடுமினே 11-7-10

படை நின்ற பைந்தாமரையோடு அணி நீலம் மடை நின்று அலறும் வயலாலி மணாளா ! இடையன் எறிந்த மரமே ஒத்திராமே அடைய அருளாய் எனக்கு உனது அருளே 11-8-6

திருமங்கை ஆழ்வார் திரு வடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்  திரு வடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading