திரு குறுந் தாண்டகம்
தேன் இடை கரும்பின் சாற்றை திருவினை மருவி வாழார் மானிட பிறவி அந்தோ ! -8
திருநெடும் தாண்டகம்
இமையவர் தம் திரு உருவே-2
குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான் பங்கத்தாய் ! -9
வில் இருத்து மெல் இயல் தோள் தோய்ந்த்தாய் என்றும் …சொல் எடுத்து தன கிளியை சொல்லே என்று துணை முலை மெல் துளி சோர சோர்கின்றாளே -13
திருமாலை பாட கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மட கிளியை கை கூப்பி வணங்கினாளே -14
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மெல் தாங்கி தூ முறுவல் நகை இறையே தோன்றநக்கு மெல் விரல்கள் சிவப்பு எய்த்த தடவி ஆங்கே மென் கிளி போல் மிக மிழற்றும்என் பேதையே 15
துன்று குழல் கருநிறத்து என் துணையே ! என்றும் துணை முலை மெல் துளி சோர சோர்கின்றாளே -16
பார்வண்ண மடமங்கை பத்தர் பித்தர் பனிமலர் மெல் பாவைக்கு பாவம் செய்தேன் ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள் 18
முற்றா வனமுலையாள் பாவை மாயன் மொய் யகலத்துள் இருப்பாள் அஹ்தும் கண்டு அற்றாள் தன நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள் -19
அன்று ஆயர் குல மகளுக்கு அரையன் தன்னை அலைகடலை கடைந்து அடைத்த அம்மான் தன்னை -29
திரு எழு கூற்று இருக்கை
ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அங்கையின் முப்பொழுதும் வருட அறி துயில் அமர்ந்தனை
சிறிய திரு மடல்
ஏரார் தடம் தோள் இராவணனை ஈர் ஐந்து சீரார் சிரம் அறுத்து செற்று உகந்த செம் கண் மால் -42
குடல்மாலை சீரார் திரு மார்பின் மேல் கட்டி செங்குருதி சோரா கிடந்தானை -44
பெரிய திரு மடல்
நில மங்கை தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல் மன்னிய சேவடியை -4
கொடும் கதிரோன் துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சடியால் மன்னன் ராமன் பின் வைதேவி என்று உரைக்கும் அன்ன நடைய அணங்கு நடந்திலளே ?பின்னும் கரு நெடும் கண் செவ்வாய் பிணை நோக்கின் மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும் கன்னி தன இன் உயிர் ஆம் காதலனை காணாது -50
தன நிகர் ஒன்றில்லாத வென்றி தனஞ்சயனை பன்னகராயன் மடப்பாவை பாவை தன மன்னிய நாணஅச்சம் மடம் என்று இவை அகல தன் உடைய கொங்கை முகம் நெரிய தானவன் தன் பொன் வரை ஆகம் தழீக் கொண்டு போய் தனது நல நகரம் புக்கு நயந்து இனிதுவாழ்ந்ததவும் 56
என் உடைய பெண்மையும் என் நலனும் என் முலையும் மன்னு மலர் மங்கை மைந்தன் கண புரத்து பொன் மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல் என் இவை தான் ? 90
தாமரை போல் மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை 113
வல்லவாழ் பின்னை மணாளனை -118
இட எந்தை ஈசனை -119
மால் இரும் சோலை மணாளனை .மன்னிய பாடகத்து என் மைந்தனை -127
தென் நறையூர் மன்னு மணி மாட கோயில் மணாளனை 133
திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply