திவ்ய பிரபந்தங்களில் பிராட்டி சம்பந்தம்-பேய் ஆழ்வார் ..

திரு கண்டேன் பொன் மேனி கண்டேன்  திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக்கிளரும் பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கை கண்டேன் என் ஆழி வண்ணன் பால் இன்று-1

இன்றே கழல் கண்டேன்   ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் பொன் தோய் வரை மார்பில் பூம் துழாய்  இன்று அன்று திரு கண்டு கொண்ட திருமாலே உன்னை மருக்கண்டு கொண்டு என் மனம் -2

மலராள் தனத்துள்ளான் -3

தேசும் திறலும் திருவும் உருவமும் -10

எந்தை ஒரு வல்லி தாமரையாள் ஒன்றிய சீர்மார்வன்  திருவல்லிகேணியான் சென்று  -16

முன் உலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ் உலகம் ஈர் அடியால் பின் அளந்து கோடல் பெரிது ஒன்றே ?என்னே ! திருமாலே ! செம் கண் நெடியானே ! எங்கள் பெருமானே ! நீ இதனைபேசு -20

பாரத வெம் போர் உடைந்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனேவாழ் எயிற்று பேய்ச்சி பால் உண்ட பிரான் -28

பேய்ச்சி பால் உண்ட பெருமானை பேர்ந்தெடுத்து ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே -29

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம் நேர்ந்த வென் சிந்தை -30

அவர்க்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான் உவர்க்கும் கரும் கடல் நீர் உள்ளான் துவர்க்கும் பவள வாய் பூ மகளும் பன் மணி பூண் ஆரம் திகழும் திரு மார்பன் தான் -37

அங்கு ஓர் மாது உகந்த மார்வதற்க்கு பெண்ணகலங் காதல் பெரிது  -54

நிறையுடைய நாமங்கை தானும் நலம் புகழ வல்லளே பூ மங்கை கேள்வன் பொலிவு-56

பொலிந்து இருண்ட கார்வானில் மின்னே போல் தோன்றி மலிந்து திரு இருந்த மார்வன் -57

திரு மா மணி வண்ணன் செம் கண் மால் எங்கள் பெருமான் அடி சேர பெற்று -59

வெம் கொங்கை உண்டானை மீட்டாய்ச்சி ஊட்டுவான் தன கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து -74

மண் உண்டும் பேய்ச்சி முலை உண்டு மாற்றா தாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணி கயிற்றினால் கட்ட தான் கட்டுண்டு இருந்தான் வயிற்றினோடு ஆற்றாமகன் -91

நீண்ட திருமால் அனைத்து உலகும் உள் ஒடுக்கி -93

புகுந்து இலங்கும் அந்தி பொழுதத்து அரியாய் இகழ்ந்த இரணியன தாகம் சுகிர்ந்து எங்கும் சிந்த பிளந்த திருமால் திருவடியே வந்தித்து ஏன் நெஞ்சமே !வாழ்த்து -95

தாமரை  மலர் மேல் மங்கை மணாளன் அடி தாமரையாம் அலர் -96

சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய் தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் கார் ஆர்ந்த வானமரும் மின் இமைக்கும் வண் தாமரை நெடும் கண் தேனமரும் பூ மேல்திரு-100

திரு கண்டேன் பொன் மேனி கண்டேன்  திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக்கிளரும் பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கை கண்டேன் என் ஆழி வண்ணன் பால் இன்று-1

பேய் ஆழ்வார் திரு வடிகளே சரணம்..

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading