ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ -10 –ஸாம்ய பாதம்–15–பகவத்‌ கீதாஸ்ரீ முக ஸூக்தி ஸாம்யாதி கரணம்‌–(189)ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 284 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-284 (27)

10 –ஸாம்ய பாதம் -ஒரே அதிகரணம்
15–பகவத்‌ கீதாஸ்ரீ முக ஸூக்தி ஸாம்யாதி கரணம்‌–189—ஒரே ஸூரணை

இனி மேல் இப் பிரபந்த பிரதிபாத்ய அர்த்தங்களை விஸ்த்ரேண பிரதி பாதிப்பதாக திரு உள்ளம் பற்றி ,
அதில் பிரதமத்திலே சாஷாத்க்ருத பகவத் தத்வரான இவர் –சம்சாரிகளுக்கு உஜ்ஜீவன அர்த்தம்
உபதேசம் பண்ணின இப் பிரபந்தம் –பிரதி பாத்ய அர்த்த சாம்யத்தாலே -பகவத் ப்ரணீத –
கீதோ உபநிஷத் -சமமாகச் சொல்லப் படும் என்கிறார்
-மேல் –தத்வதர்ஸிகளான இவர் பக்கலிலே இப்படி பகவத் குணாநுபவ ஜநித ப்ரீதி ப்ரகர்ஷ பலாத்காரத்தாலே அவதீர்ணமான இப்ரபந்தத்தில்‌ பரதிபாதி தமான அர்த்தங்கள்‌, தர்மஸம்ஸ்தாபநார்த்தமாக அவதரித்து கிருஷ்ணன்‌ உபய ஸேநைக்கும்‌ நடுவே அர்ஜுந வ்யாஜத்தாலே அருளிச் செய்த ஸ்ரீகீதையிலே ப்ரதிபாதிக்கப்பட்ட தத்த்வ விவேகாதிகளான அர்த்தங்களாகை யாலே இந்த ப்ரபந்தம்‌ ஸ்ரீகீதையோடொக்கும்‌ என்கிறார்‌.

மனம் செய்‌ எல்லையில்‌ ஞான வின்பத்தை நின்மலமாக வைத்தவர்‌ ஞானப் பிரானை ஞானத்து வைம்மினென்றவிது தத்வ விவேக, நித்யத்வாநித்யத்வ, நியந்த்ருத்வ, ஸெளலப்‌ய, ஸாம்ய, அஹங்கார, இந்த்‌ரிய தோஷ பல, மந ப்ராதாந்ய, கரண நியமந ஸுக்ருதி பேத, தேவாஸுர விபாக, விபூதி யோக, , விஸ்வருப தர்ஸந, ஸாங்க பத்தி, ப்ரபத்தி த்‌வை வித்‌யாதிகளாலே அன்றோதிய கீதா ஸமம்‌ என்னும்‌.–சூரணை -189–

அதாவது-மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை —-எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் –முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை–திருவாய் -1-5-2-என்றும் –-எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கர்மங்களும் செய் –திருவாய் -3-10-8- -என்றும் சொல்லுகிறபடி
சர்வ காரணமாய் –அபரிசேத்யமான சங்கல்ப ரூப ஞானத்தை உடையவனாய் – சூழ்ந்த அதனில் பெரிய சுடர் ஞான இன்பம் –திருவாய் -10-10-10-–என்கிறபடியே பிரகிருதி புருஷ தத்வங்கள் இரண்டும் தன்னுள்ளே ஆகும் படி வியாபித்து – தான் அபரிசேத்யமாய் – உஜ்ஜ்வலமாய் -ஞான ஆனந்த லஷணமாய் இருக்கிற – ஸ்வரூபத்தை உடைய சர்வேஸ்வரனை – நின்மலமாக வைத்தவர் –
எனது ஆவி உள்ளே நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து -திருவாய் -4-7-7-என்று
பரிபூர்ண ஞான ஸ்வரூபனான உன்னை என் நெஞ்சுக்குள்ளே விசதமாக அனுபவித்து – என்னும் படி சாஷாத் கரித்த இவ் ஆழ்வார் –

(மனஞ் செய்‌ எல்லையில்‌ ஞான வின்பத்தை நின்மலமாக வைத்தவர்‌) “எல்லாப்பொருள்கட்கும்‌ வித்தாய்‌ முதலில்‌ சிதையாமே மனம்‌ செய்‌ ஞானத்துன்பெருமை” (திருவாய்மொழி 1-5-2) என்று ஸர்வத்துக்கும்‌ காரணமாகா நிற்கச்‌ செய்தே தான்‌ நிர்விகாரமாய்‌ “எல்லையில்‌ ஞானத்தன்‌ ‘ (திருவாய்மொழி 3-10-8 என்று அபரிச்சேத்‌யமாயிருக்கிற அவனுடைய ஸங்கல்ப ரூப ஜ்ஞாநத்தையும்‌ “சூழ்ந்ததனில்‌ பெரிய சுடர் ஞான வின்பமேயோ’ (திருவாய்மொழி 10-10-10) என்று ப்ரக்ருதி புருஷர்களிரண்டும்‌ தனக்குள்ளேயாம்படி வியாப்தமாய்‌, தான்‌ அபரிச்சேத்‌யமாய்‌ விஸத தமமாய்‌ அநந்த ரூப ஜ்ஞாநமாய்‌ இருக்கிறவனுடைய ஸ்வரூபத்தையும்‌ “நிறைந்த ஞானமூர்த்தியாயை நின் மலமாக வைத்து” (திருவாய்மொழி 4-7-7) என்கிறபடியே அந்த ஸ்வரூப ஸ்வபாவங்களிரண்டும்‌ ஜ்ஞாநமாகையாலே பரிபூர்ண ஜ்ஞாந ஸ்வருபனாயிருக்கிறவனை விஸத தமமாக ஸாக்ஷாத்கரிக்கையாலே தத்த்வ தர்ஸிகளா யிருக்கிற இவர்‌,

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை
மாசூணாதோ மாயோனே –1-5-2—ஸ்வ கார்யத்தைப் பிறப்பிக்கும் போது தான் முதல் அழியாத படியான மநோ வியாபார ரூப சங்கல்ப ஞானத்தை யுடைய உன் வைலஷண்யம்-ஆனால் சங்கல்பமோ ஜகத் காரணம் -சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் அன்றோ -என்னில்-ஆனாலும் காரணமாம் போது சங்கல்ப பூர்வகமாக வேணும்-சங்கல்ப விசிஷ்டன் காரணம் ஆனாலும் பஹூச்யாம் என்கிற சங்கல்ப ப்ராதான்யத்தாலே சொல்லுகிறது

அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–3-10-8—மன்ஸவீ என்னுமா போலே ப்ரணய தாரையில் அவளுக்கு ஆனைக்கு குதிரை வைக்க வல்ல ஞானாதிக்யத்தை உடையவன்

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-அவை இரண்டையும் வியாபித்து அவற்றுக்கு நிர்வாஹகமாய் சங்கல்ப ரூபமான ஞானத்தை யுடையவன் என்று சங்கல்ப ரூப ஞானத்தைச் சொல்லுதல் –சுடர் ஞான இன்பம் என்று பகவத் ஸ்வரூபத்தை சொல்லுதல் –

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி
யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந்து ழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-தெளிந்த மனஸிலே பரிபூர்ண ஞானத்தையே ஸ்வரூபகமாக உடைய உன்னை விசதமாக அனுபவித்து-

ஞானப் பிரானை ஞானத்து வைம்மின் என்ற இது —-இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா வர்க்கும் எரி திரை வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த –ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லது -திருவிருத்தம் -99-என்று பிரளய ஆர்ணவ மக்னையான பூமியை -மகா வராஹமாக -உத்தரித்த -ஞான சக்திகளையும் – ஸ்வாமித்வ பிராப்தியும் உடையவனாய் -ஸ்லோக த்வய முகத்தாலே சரமோ உபாயத்தை வெளியிடுகையாலே -ஞான உபகாரனுமாய் இருப்பவனை – ஒழிய -சர்வருக்கும் உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பது ஒன்றும் இல்லை –இது நான் அறுதி இட்ட விலஷணமான அர்த்தம் – என்று பிரதம பிரபந்தத்தில் அருளிச் செய்த விஷயத்தை உபாயகமாகப் பற்றச் சொல்லுகிற அளவில் –திரு குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைமின் உம்மை உய்யக் கொண்டு போகுறில்–திருவாய் -4-10-0-என்று உஜ்ஜீவிக்க வேண்டி இருந்தீர்களாகில் –அவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசத்தை உங்கள் மானஸ ஜ்ஞானத்துக்கு விஷயம் ஆக்குங்கோள் என்று சம்சாரிகளை குறித்து உபதேசித்த இப் பிரபந்தம் –தர்ம சம்ஸ்தாபன அர்த்தமாக அவதரித்து அருளின ஸ்ரீ கிருஷ்ணன் – அஸ்தான ஸ்நேஹ காருண்யா தர்ம அதர்மதியா குலம் பார்த்தம் பிரபன்ன முத்திஸ்ய சாஸ்திர அவதரணம் க்ருதம்–ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –5–என்கிறபடியே – அஸ்தானத்தே உண்டான – பந்து ஸ்நேஹ காருண்யங்களாலும் – ஸ்வ தர்மத்தில் அதர்ம புத்தியாலும் கலங்கி – நயோத்ஸ்யாமி–ஸ்ரீ கீதை -2-6- -என்று யுத்த அநிவ்ருத்தனாய் –
யச்ஸ்ரேயஸ் ஸ்யான் நிச்சிதம ப்ரூஹி தன்மே சிஷ்யத் தேஹம் சாதிமாம் த்வம் பிரபன்னம்–ஸ்ரீ கீதை –2 7-என்ற அர்ஜுனனைத் தெளிவித்து யுத்தே பிரவர்த்தன் ஆக்குகைக்கு வியாஜமாக –-அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய–திருவாய் -4-8-6- -என்கிறபடியே-லோகத்துக்கு உஜ்ஜீவன சாஸ்த்ரமாம் படி எல்லாப் பொருளும் விரித்த ஸ்ரீ கீதையில் –

ஞானப் பிரானை ஞானத்து வைம்மின்‌ என்ற இது) “இருங் கற்பகம்‌ சேர்‌ வானத்தவர்க்கும்‌ அல்லாதவர்க்கும்‌ மற்றெல்லாயவர்க்கும்‌ ஞானப் பிரானை அல்லாலில்லை நான் கண்ட நல்லதுவே” (திருவிருத்தம்‌ 99) என்று உபக்ரமித்து “உளங்கொள்‌ ஞானத்து வைம்மின்‌ உம்மை உய்யக் கொண்டு போகுறிலே” (திருவாய்மொழி 4-10-9) என்று ப்ரளயார்ணவ மக்‌நையான ஸ்ரீபூமிப் பிராட்டியை மஹா வராஹமாய்க்‌ கொண்டு எடுத்தவனுமாய்‌, ஸ்லோக த்‌வய முகத்தாலே சரமோபாயத்தை வெளியிடுகையாலே ஜ்ஞாநோபகாரகனு மாயிருக்கிறவனை யொழிய ஸர்வர்க்கும்‌ உஜ்ஜீவந ஹேதுவாயிருப்பதொன்று இல்லையான பின்பு அவன்‌ நித்ய வாஸம்‌ பண்ணுகிற தேஸத்தை உங்கள்‌ மாநஸ ஜ்ஞாநநத்துக்கு விஷய மாக்குங்கோளென்று இப்படி உபபாதிக்கிற இப் ப்ரபந்த,ம்‌ 

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –
 – 99—இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும்-அபிமத பல பிரதத்வத்தாலே வந்த பெருமையை யுடைத்தான கற்பக வ்ருக்ஷங்களினுடைய–செறிவை யுடைத்தான சுவர்க்கத்தில் வாஸத்தை யுடைய தேவர்களுக்கும்–(எனக்கே தன்னைத் தந்த கற்பகம் இல்லையே இவை)அல்லாதவர்க்கும்–அத் தேவ ஜாதி தானே உத்க்ருஷ்டம் என்னும்படியான மனுஷ்ய ஜாதீயருக்கும்–மற்று எல்லா யவர்க்கும்-இவர்களிலும் அபக்ருஷ்டரான திர்யக் ஸ்தாவர ஜாதி பேதங்களில் உள்ளார் எல்லாருக்கும்-ஞானப் பிரானை யல்லால் இல்லைஸ்திதே மனஸி -வராஹ சரம ஸ்லோகம் இத்யாதியாலே உத்தாரக ஹேதுவான ஞானத்தை உபதேசித்த ஸ்வாமியை ஒழிய இல்லை–நான் கண்ட நல்லதுவே –நான் அறுதியிட்டு நல்ல அர்த்தம் என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்தார் ஆயிற்று-

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9-உளம் கொள் ஞானம் -மானஸ ஞானம் -ஞானம் உதித்து பாஹ்ய இந்த்ரியங்களாலே பாஹ்ய விஷயங்களை க்ரஹிப்பதற்கு முன்பே மானஸ ஞானத்துக்கு இவ் ஊரை விஷயம் ஆக்குங்கோள் -பிரயோஜனம் என் என்னில்
உம்மை உயக்கொண்டு போகுறிலே.-அசன்னேவ என்னும் படி -இருக்கிற உங்களை சந்த மேனம் ததோ விது-என்ன பண்ண வேண்டி இருந்து கோள் ஆகில் –நேய மஸ்தி என்கிறபடி தக்தப்படம் போலே இவற்றின் சத்தை சென்று அற்றது என்று இருக்கிறார் –

அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியாகுலம்
பார்த்தம்ப்ரபந்நமுத்திஶ்ய ஶாஸ்த்ராவதரணம்க்ருதம்
–5-காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

கார்பண்யதோ÷ஷாபஹதஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா:
யச்ச்ரேய: ஸ்யாந்நிஸ்சிதம் ப்ரூஹி தந்மே
ஸிஷ்யஸ்தேஹம் ஸாதி மாம் த்வாம் ப்ரபந்நம்–2-7-
சிறுமையாகிய குறையால் இயல்பு அழிந்தவனாய், அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன், யான் உன்னைக் கேட்கிறேன். எது நன்றென்பதை எனக்கு நிச்சயப்படுத்திக் சொல்லுக. நான் உன் சீடன். உன்னையே சரணமெனப் புகுந்தேன். கட்டளை தருக.

அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6—பகவத் விஷயத்தில் அறிவு கொண்டு ஒரு கார்யம் இன்றிக்கே இருக்கை –-அன்ன பா நாதிகள்-பெறா விடில் செல்லாதாய் இருக்கும் அறிவு ஒன்றிலுமாயிற்று நிரபேஷராய் இறே இருப்பது-அகல் ஞாலத்தவர்-இந்த பூமிப பரப்பில் உள்ளாரில் அறிவில் குறை பட்டு இருப்பார் இல்லை –-அவர் அறிய, கல்லில் துளை யுண்டாக்கினால் போலே சம்சாரிகள் அறியும் படி –-நெறி எல்லாம் எடுத்து உரைத்த சேதன பேதத்தோ பாதி போறும் இ றே உபாய பேதமும் -கர்ம யோகம் முதலாக பிரபத்தி பர்யந்தமாக சகல உபாயங்களையும் வ்யக்தமாக உபதேசித்த படி-கர்ம ஞான பக்திகள் -அவதார ரஹஸ்யம் புருஷோத்தம வித்யை -ஸ்வரூப யாதாம்யம் -விரோதி நிவ்ருத்திக்கு பிரபத்தி -ஆத்மாபிராப்திக்கு பிராப்தி -பகவல்லாபத்துக்கு பிரபத்தி -இவற்றை அடங்க விசத்தமாக அருளிச் செய்த-நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,-நிறைந்த ஞானத்தை உடைய அத்விதீயமான ஸ்வரூபத்தை யுடையவன் – ஞானாதிகன் சொன்னது இறே பிரமாணம் ஆவது -எல்லாருடைய ஞானத்துக்கும் அடியானை ஞான பூர்த்தியை யுடையவன் –

1 ,2 ,3 தத்வ விவேக –-பிரதமத்தில் –தேக ஆத்மா அபிமான கார்யமான பந்து சிநேகத்தையும் –
வத பீதியையும் மாற்றுகைக்காக தத்வ ஞானத்தை உபதேசிக்கத் தொடங்கின அளவிலே –
நத்வே வாஹம் ஜாது நாசம் நத்வம் நேமே ஜநாதிபா – நசைவ நபவிஷ்யாம சர்வே வயமத பரம் –ஸ்ரீ கீதை -2-12–என்று சர்வேஸ்வரனான தன்னோபாதி சகல ஆத்மாக்களும் நித்யர் என்று அருளிச் செய்கிற வழியிலே – ஜீவ பர பேதம்–ஜீவர்களுக்கு பரஸ்பர பேதம் -ஆகிய இவற்றை தர்சிப்பித்து –
தேஹி நோஸ்மின் யதா தேக கௌமாரம் யௌவனம் ஜரா ததா தேஹாந்தர ப்ராப்தி தீரஸ் தத்ர நமுஹ்யதி -2-13-– இத்யாதியாலே – பிரகிருதி ஆத்மா விவேகத்தையும் சொல்லுகையாலே தத்வங்களினுடைய விவேகத்தையும் —

தத்த்வ விவேகம்‌) திருத் தேர்த்தட்டிலே “விஸ்ருஜ்ய ஸமரஞ்சாபம்‌ ஸோகஸம்விக்‌ந மாநஸம்‌” (கீதை 1-47) என்று பந்து ஹத்யாபீதனாய்க்‌ கொண்டு ஸோகிக்கிற அர்ஜுநனைக்‌ குறித்து அவனை “ஸ்திதோஸ்மி’ (கீதை 18-73) என்னப்‌ பண்ணுகைக்காக “நத்வேவாஹம்‌ ஜாது நாஸம்‌ நத்வம்‌ நேமே ஐநாதி பா: ந சைவ ந ப.விஷ்யாம: ஸர்வேவயமத:பரம்‌” (கீதை 2-12) என்று நீயும்‌ நானும்‌ இந்த ராஜாக்களும்‌ முன்பாக இல்லாமலுமில்லை, மேலும்‌ இல்லாமலுமில்லை என்று ஜீவ பரபேதம்‌, ஜீவர்களுக்கு பரஸ்பர பேதம்‌, “தேஹிநோஸ்மிந்‌ யதா, தேஹே கெளமாரம்‌ யெளவநம்‌ ஜரா ததா, தேஹாந்தர ப்ராப்தி: தீரஸ் தத்ர ந முஹ்யதி” (கீதை 2-13) என்றித்யாதிகளாலே ப்ரக்ருதி புருஷர்களுக்குண்டான பேதமாகிற தத்வ விவேகம்‌;

ஏவமுக்த்வார்ஜுந​: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஸத்
விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஸோகஸம்விக்நமாநஸ​:
–1-47-செருக் களத்தில் இவ்வாறு சொல்லி விட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப் பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்.

நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயாச்யுத
ஸ்திதோऽஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ
–18-73-மயக்கமழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்.

நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்-
-2-12-இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமற் போகவும் மாட்டோம்.

தேஹிநோऽஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி
–2-13-ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ அங்ஙனமே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது. தீரன் அதில் கலங்கமாட்டான்.

4 -நித்யத்வ அநித்யத்வ —அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாஸ் சரீரிண அநாசினோ ப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத -2-18-என்றும்-நஜாயதே ம்ரியதேவா கதாசித் நாயம் பூத்வா பவிதா வாநபூயஸ் அஜோ நித்யஸ் சாஸ்வதோயம் புராணோ நஹன்யதே ஹன்யமானே சரீரே –2-20 -என்றும் ,-வாசாம்ஸி ஜீர்ணா நியதா விஹாயா நவாணி க்ருஹணாதி நரோபராணி
ததா சரீராணி விஹாய ஜீர்ணான் யன்யாமி சம்யாதி நவாணி தேஹி –2-22
-இத்யாதிகளாலே
ஆத்மா நித்யத்வ தேகா அநித்யங்களையும்-

நித்யத்வாநித்யத்வ நியந்த்ருத்வ) “அச்சேத்‌யோயமதாஹ்‌ யோயம்‌ அக்லேத்‌யோ ஸோஷ்ய ஏவ ச நித்ய: ஸர்வகதஸ்தாணுரசலோயம்‌ ஸநாதந:” (கீதை 2-24) என்றும்‌, “வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய நவாநி க்‌ருஹ்ணாதி நரோபராணி ததா, ஸரீராணி விஹாய ஜீர்ணாந்யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ’ (கீதை 2-22, “நாஸதோ வித்‌யதே பாவோ நாபாவோ வித்‌யதே ஸத:’ (கீதை 2-16) இத்யாதிகளாலே சேதநாசேதநங்களினுடைய நித்யத்வா நித்யத்வம்

நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:
உபயோரபி த்ருஷ்டோऽந்தஸ்த்வநயோஸ்தத்த்வதர்ஸிபி:
–2-16-இல்லாதது உண்மையாகாது. உள்ளது இல்லாததாகாது. உண்மை யறிவார் இவ்விரண்டுக்குமுள்ள வேற்றுமை யுணர்வார்.

அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஸரீரிண:
அநாஸிநோப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத
–2-18-ஆத்மா நித்தியன்; அழிவற்றான்; அளவிடத்தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ஆதலால் பாரதா, போர் செய்.

ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந் நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
அஜோ நித்ய: ஸாஸ்வதோऽயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே
–2-20-எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை.-இவன் பிறப்பற்றான்; அனவரதன். இவன் சாசுவதன்; பழையோன்;-உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.

வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய நவாநி க்ருஹ்ணாதி நரோऽபராணி
ததா ஸரீராணி விஹாய ஜீர்ணாந் யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ-2-22
-நைந்த துணிகளைக் கழற்றி யெறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல, ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறான்.

அச்சேத்யோऽயமதாஹ்யோऽயமக்லேத்யோऽஸோஷ்ய ஏவ ச
நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோயம் ஸநாதந:
–2-24-பிளத்தற் கரியவன்; எரித்தற்கும், நனைத்தற்கும், உலர்த்துதற்கும் அரியவன்; நித்தியன்; எங்கும் நிறைந்தவன்; உறுதியுடையான்; அசையாதான்; என்றும் இருப்பான்.

5 -நியந்த்ருத்வ – பூமிராபோ நலோ வாயு கம்மனோ புத்தி ரேவச – அஹங்கார இதீயம் மே பின்னா பிரகிருதி ரஷ்டதா அபரே யமித ஸ்த்வன்யாம் பிரகிருதி வித்தி மே பராம் – ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் -7-4-5-என்கிற படியே சேதன அசேதன சரீரியாய் – சர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதி ஜ்ஞாந மபோஹநஞ்ச -15-15-என்றும் – ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹ்ருத்தேசேர் ஜூன திஷ்டதி ப்ராமயன் சர்வ பூதானி யந்த்ராரூடானி மாயயா-18-61- –என்றும் சொல்லுகிறபடி சர்வ ஜன ஹ்ருதிஸ்த்தனாய் -நின்று -சர்வ பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் பண்ணுவிக்கை யாகிற ஈஸ்வரனுடைய நியந்தருத்வத்தையும்

பூமிராபோநலோவாயு: கம்‌ மநோ புத்‌திரேவ அஹங்கார இதீயம்‌ மே பிந்நா ப்ரக்ருதி ரஷ்டதா வைன்‌ வலவன்‌ ப்ரக்ருதிம்‌ வித்‌தி மே பராம்‌ தீவபூதாம்‌ மஹாபாஹோ யயேதம்‌ தார்யதே ஜெகத்‌ (கீதை7-4,5) என்று சேதநா சேதநங்களை ஸாரீரமாக வுடையனாய்க் கொண்டு, “ஸர்வஸ்யசாஹம்‌ ஹ்ருதி, ஸந்நிவிஷ்டோ மத்தஸ்ம்ருதி: ஜ்ஞாநமபோஹநஞ்‌ (கீ தை 15-1) என்றும்‌, “ஈஸ்வரஸ்‌ ஸர்வ பூதாநாம்‌ ஹ்ருத்‌தே ஸோரஜ “ந திஷ்டதி ப்‌ராமயந்‌ ஸர்வபூதாநி யந்த்ராரூடாநி மாயயா (கீதை 18-61 )என்றும்‌ ஸ்வ ஸரீரபூதமான ஸர்வ ஜந்துக்களினுடைய ஹ்ருதய ப்ரதேஸத்திலே நின்று ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும்‌ தானே பண்ணுவிக்கையாகிற அவனுடைய நியந்த்ருத்வம்‌;

பூமிராபோऽநலோ வாயு: கம் மநோ புத்திரேவ ச
அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிரஷ்டதா–
7-4-மண், நீர், தீ, காற்று, வான், மனம், மதி, அகங்காரம், இவ்வெட்டு வகையாக என் இயற்கை பிரிந்து தோன்றுகிறது.-அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம் ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத்--7-5-இது என் கீழியற்கை. இதனின்றும் வேறுபட்டதாகிய என் மேலியற்கையை அறி;-அதுவே உயிராவது; பெருந்தோளாய், அதனால் இவ்வுலகு தரிக்கப்படுகிறது.

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ வேதாந்தக்ருத்வேதவிதேவ சாஹம்
–15-15-எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன். நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும்
என்னிடமிருந்து பிறக்கின்றன. எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் யான்;
வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.

ஈஸ்வர: ஸர்வ பூதாநாம் ஹ்ருத்தேஸேऽர்ஜுந திஷ்டதி
ப்ராமயந் ஸர்வ பூதாநி யந்த்ரா ரூடாநி மாயயா-
-18-61-அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.

6 -சௌலப்ய – தஸ்யாஹம் ஸூலப பார்த்த நித்ய யுக்தஸ்ய யோகின –என்றும்-பரித்ராணாய சாதூனாம் ,விநாசாய துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே-4-8- -என்றும்
பக்திமான்கள் நிமித்தவாகவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான அவன் சௌலப்யத்வத்தையும் ..

(ஸெளலப்‌ய) “தஸ்யாஹம்‌ ஸுலப: பார்த்த நித்ய யுக்தஸ்ய யோகி ந:” (கீதை 8-14) என்றும்‌, “பரித்ராணாய ஸாதூநாம்‌ விநாஸாய ச துஷ்க்ருதாம்‌ தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே (கீதை 19-8) என்றித்யாதியாலும்‌ பக்திமான்கள்‌ நிமித்தமாகவும்‌ அவதார ப்ரயுக்தமாகவும்‌ உண்டான அவனுடைய ஸெளலப்‌யம்‌;

அநந்யசேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஸ:
தஸ்யாஹம் ஸுலப: பார்த நித்யயுக்தஸ்ய யோகிந:
–8-14-நித்திய யோகத் திசைந்து, பிரிது நினைப்பின்றி என்னை எப்பொழுதும் எண்ணும் யோகிக்கு நான் எளிதில் அகப்படுவேன்,
பார்த்தா. ஈசன் அடியார்க்கு எளியவன். நாம் முழுமனதை அவனிடத்துத் திருப்பாமையால் அவனை அடைகிறதில்லை. பொருள் உடையவர்க்கே மேலும் பொருள் சேருவது போன்று அருள் உடையவர்க்கே மேலும் அருள் வளர்கிறது.

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே
-4-8-நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.

7 -சாம்ய – சமோஹம் சர்வ பூதேஷு நமே த்வேஷ் யோஸ்தி நப்ரிய–9 -29-என்று அவனுடைய ஆஸ்ரத்யநீயத்வே சர்வ சாம்யத்தையும்-

(ஸாம்ய) ‘ஸமோஹம்‌ ஸர்வபூதேஷ- ந மேத்‌வேஷ்யோஸ்தி ந ப்ரிய:” (கீதை 9-29 என்று அவனுடைய ஸர்வபூத ஸமத்வம்‌;

ஸமோऽஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோऽஸ்தி ந ப்ரிய:
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம்
–9-29-நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன். எனக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை. -ஆனால் என்னை அன்புடன் தொழுவோர் – அன்னவர் என்னகத்தமர்ந்தார்; அவரகத்து நான் உளேன்.

8 -அஹங்கார தோஷ –அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே-3-27 -என்று அஹங்கார தோஷத்தையும் –9 -இந்திரிய பல–யததோஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித இந்திரியாணி ப்ரமாதீனி ஹரந்தி பிரசபம் மன -2-60-என்று இந்திரிய பிராபல்யத்தையும்-

(அஹங்காரதோஷ) “ப்ரக்ருதே: க்ரியமாணா நிர்குணை: கர்மாணி ஸர்வ: அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே” (கீதை 3-27) என்று அஹங்கார தோஷம்‌; (இந்த்‌ரிய பல) “இந்த்‌ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம்‌ மந:” (கீதை 2-60) என்று இந்த்‌ரிய ப்ராபல்யம்‌ 

ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஸ:
அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே
-3-27–எங்கும் தொழில்கள் இயற்கையின் குணங்களால் செய்யப்படுகின்றன. அகங்காரத்தால் மயங்கியவன், “நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.

யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித:
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந
:–2-50-குந்தியின் மகனே, (தவ) முயற்சியுடைய புருஷனிடத்திலே கூட, இந்திரியங்கள் வரம்பு கடந்து செல்லும் போது தம்முடன் மனத்தையும் வலிய வாரிச் செல்கின்றன.

10 -மன ப்ராதன்ய சஞ்சலம் ஹி மன க்ருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம் தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோ ரிவ ஸூ துஷ்கரம்-6-34-என்றும் – அசம்சயம் மஹாபாஹோ மனோ துர் நிக்ரஹம் சலம்
அப்யாசேனது கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே-6-35-
-என்றும் மற்ற இந்திரியங்களில் வைத்துக் கொண்டு மனசின் உடைய பிரதான்யத்தையும் –

(மந:ப்ராதாநய) “அஸம்ஸயம்‌ மஹாபாஹோ மநோ துர் நிக்‌ரஹம்‌ சலம்‌ அப்‌யாஸேந து கெளந்தேய வைராக்‌யேண ச க்‌ ருஹ்யதே” (கீதை 6-35) இத்யாதிகளிலே சொல்லப்பட்ட மந:ப்ராதா நீயம்‌; 

சஞ்சலம் ஹி மந​: க்ருஷ்ண ப்ரமாதி பலவத்த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்
-6-34-கண்ணா, மனம் சஞ்சலமுடையது; தவறும் இயல்பினது, வலியது; உரனுடையது. அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல் மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் மதிக்கிறேன்.

அஸம்ஸயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம்
அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே-
-6-35-ரீ பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளாய், மனம் கட்டுதற்கரியதுதான். சலனமுடையதுதான்; ஐயமில்லை.-ஆனால் குந்தியின் மகனே, அதைப் பழக்கத்தாலும், விருப்பமின்மையாலும் கட்டி விடலாம்.

11 -கரண நியமன – தானி சர்வாணி சம்யம்ய யுக்த ஆசீத மத்பர வசே ஹி யச்யேந்த்ரியாணி தஸ்ய பிரஜ்ஞா ப்ரதிஷ்டிதா -2-61- -என்றும் – சர்வத்வாராணி சம்யம்ய மனோ ஹ்ருதி நிருத்த்யச – 8-12- என்றும் கரண நியமனத்தையும் —

(கரணநியமந) “தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர: ஸர்வேந்த்‌ரியாணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச (கீதை 2-61 இத்யாதிகளாலே சொல்லப்பட்ட கரண நியமநம்‌;

தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:
வஸே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா
–2-61-அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி, யோகத்தில் அமர்ந்தவனாய், என்னைப் பரமாகக் கொண்டு, புலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன் எவனோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.

ஸர்வத்வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச
மூர்த்ந்யாதாயாத்மந: ப்ராணமாஸ்திதோ யோகதாரணாம்
–8-12-எல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மனத்தை உள்ளத்தில் நிறுத்தி, உயிரைத் தலையின் உச்சியில் நிலை யுறுத்தி யோக தாரணையில் உறுதி பெற்று,

12 -ஸூஹ்ருதி பேத –-சதுர்விதா பஜந்தே மாம் ஜனாஸ் ஸூக்ருதி நோர்ஜுன ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூராரர்தாத்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப-7-16– -என்று ஸூஹ்ருதிகளுடைய பேதத்தையும் –

(ஸூக்ருதி பேத) “சதுர்விதா பஜந்தே மாம்‌ ஜநா: ஸுக்ருதிநோர்ஜுந ஆர்த்தோ ஜிஜ்ஞாஸ ரர்த்தார்த்த ஜ்ஞாநீ ச பரதர்ஷப,” (கீதை 7-16) என்று சொல்லப்பட்ட ஸுக்ருதி பேதம்‌;

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப
–7-16-நற்செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே,துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என.

13 -தேவாசுர விபாக –தவௌ பூத சர்கவ் லோகேஸ்மின் தைவ ஆஸூர ஏவச-16-6-என்றும்
தைவீ சம்பத் விமோஷாய நிபாந்தயா ஸூரி மதா 16-4–
என்று தேவாசுர விபாகத்தையும்

(தேவாஸுரவிபா ௧) “த்‌வெள பூதஸர்கெள, லோகேஸ்மிந்‌ தைவ ஆஸ ஏவ ச தை வீ ஸம்பத்‌ விமோக்ஷாய நிபந்தா யாஸுரீமதா” (கீதை 16-6) இத்யாதிகளாலே சொல்லப்பட்ட தேவாஸுர விபாகம்‌;

தைவீ ஸம்பத்விமோஷோய நிபந்தாயாஸுரீ மதா
மா ஸுச: ஸம்பதம் தைவீமபிஜாதோऽஸி பாண்டவ
–16-5-தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம், அசுர சம்பத்தால் பந்தமேற்படும்; பாண்டவா, தேவ சம்பத்தை எய்தி விட்டாய்; துயரப்படாதே.

த்வௌ பூதஸர்கௌ லோகேऽஸ்மிந்தைவ ஆஸுர ஏவ ச
தைவோ விஸ்தரஸ: ப்ரோக்த ஆஸுரம் பார்த மே ஸ்ருணு
–16-6-இவ்வுலகத்தில் உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும். தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது. தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன் பார்த்தா, அசுர இயல் கொண்டதைச் சொல்லுகிறேன், கேள்.

14 –விபூதி யோக –-ஹந்ததே கத யிஷ்யாமி விபூதி ராத மநஸ் ஸூப பிராதான்யதஸ் குரு ஸ்ரேஷ்ட
நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே –10-9
-என்றும் ஆதித்யா நாமஹம் விஷ்ணு ஜ்யோதிஷாம்
ரவிரம்சுமான்-10-21
– -இத்யாதியால் விபூதி யோகத்தையும் –

(விபூதி யோக,) “ப்ராதாந்யத: குரு ஸ்ரேஷ்ட, நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே” (கீதை 10-10), “ஆதித்யாநாம்‌ அஹம்‌ விஷ்ணு: ஜ்யோதிஷாம்‌ ரவிரம்ஸூமாந்‌’ (கீதை 10-2) இத்யாதிகளாலே சொல்லப்பட்ட விபூதி யோகம்‌;

ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யா ஹ்யாத்மவிபூதய:
ப்ராதாந்யத: குருஸ்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே-
-10-19-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அச்ச! என் ஆத்மப் பெருமைகள் தேவத்தன்மை உடையனவே. அவற்றுள் பிரதானமானவற்றை நினக்குச் சொல்லுகிறேன். எனது விஸ்தாரத்துக்கு முடிவில்லை.

ஆதித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸுமாந்
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸஸீ-
-10-21-ஆதித்யர்களில் நான் விஷ்ணு; ஒளிகளில் நான் கதிர் சான்ற ஞாயிறு; காற்றுகளில் மரீசி; நக்ஷத்திரங்களில் சந்திரன்.

15 -விஸ்வரூப தர்சன –-பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹ சர்வாம் ஸ்ததா பூத விசேஷ சங்கான்
ப்ரஹ்மாணம் ஈசம் கமலா சனஸ்தம் ருஷீம்ஸ் ச சர்வான் உரகாம்ச திவ்யான் 11-15
-இத்யாதியாலே
விஸ்வரூப தர்சனத்தையும் –

(விஸ்வரூபதர்ஸந) “பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூத விஸேஷ ஸங்காந்‌ ப்‌ரஹ்மாண மீஸம்‌ கமலாஸநஸ்த்தம்‌ ருஷீம்ஸ்ச ஸர்வாநுரகாம்ஸ்ச தீப்தாந்‌ (கீதை 11-15) இத்யாதியாலே சொல்லப்பட்ட விஸ்வரூப தர்ஸநம்‌; 

பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவிஸேஷஸங்காந்
ப்ரஹ்மாணமீஸம் கமலாஸநஸ்தம் ருஷீம்ஸ்ச ஸர்வாநுரகாம்ஸ்ச திவ்யாந்
–11-15-அர்ஜுனன் சொல்லுகிறான்: தேவனே, நின் உடலில் எல்லாத் தேவர்களையும் காண்கிறேன், பூத வகைகளின் தொகுதிகளைக் காண்கிறேன். தாமரை மலரில் வீற்றிருக்கும் ஈசனாகிய பிரமனையும், எல்லா ரிஷிகளையும் தேவ சர்ப்பங்களையும் இங்குக் காண்கிறேன்.

16 -சாங்க பக்தி –மன்மனா பவ மத் பக்தோ மத் யாஜி மாம் நமஸ்குரு மாமே வைஷ்யசி யுக்த்வைவ மாத்மானம் மத்பராயணா -9-24–என்று அங்க சஹிதையான பக்தியையும்-

(ஸாங்க பக்தி) மந்மநாபவ மத்பக்தோ மத்‌ யாஜீ மாம்‌ நமஸ்குரு மாமேவைஷ்யஸி ஸத்யம்‌ தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே” (கீதை 18-65) என்று சொல்லப்பட்ட அங்க, ஸஹிதையான பக்தி;

மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண
:–9-34-மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள். இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.

மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே-
-18-65-உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக. என்னை யெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.

17 -18 -பிரபத்தி த்வை இத்யாதி – தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்தயா மாமே வயே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே -7-14-என்றும் தமேவ சரணம் கச்ச சர்வ பாவேன பாரத–18-62- -என்று அங்கத்வேனவும்சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூ ச -18-66– – ஸ்வதந்த்ரவேனும் -இரண்டு படியாகவும் பிரபத்து உபதேசம் பண்ணினால் போலேயும்

(ப்ரபத்தி த்‌வைவித்‌யம்‌) தைவீஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா மாமேவயே ப்ரபத்‌யந்தே மாயாமேதாம்‌ தரந்தி தே” (கீதை 7-10), “தமேவ ஸரணம்‌ ௧ச்ச ஸர்வபாவேந பாரத (கீதை 18-62) இத்யாதியாலே சொல்லப்பட்ட அங்க ப்ரபத்தி, “ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய” (கீதை 18-66) இத்யாதி யாலே சொல்லப்பட்ட ஸ்வதந்த்ர ப்ரபத்தியாகிற இவ்வர்த்த, விஸேஷங்களை ஸ்ரீ கீதா முகத்தாலே உபபாதித்தாப்போலே,

தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே–7
-14-இந்த குணமாகிய எனது தேவமாயை கடத்தற்கரியது. என்னையே யாவர் சரணடைவரோ அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்.

தமேவ ஸரணம் கச்ச ஸர்வபாவேந பாரத
தத்ப்ரஸாதாத்பராம் ஸாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி ஸாஸ்வதம்-
-18-62-அர்ஜுனா, எல்லா வடிவங்களிலும் அவனையே சரணெய்து, அவனருளால் பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை எய்துவாய்.

ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச
:–18-66-எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.

இவரும்-1-2 -3–ஜீவ பர பேதமும்ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் – பிரகிருதி -ஆத்மா விவேகம்-ஆகிற தத்வ விவேகத்தையும் அடியேன் உள்ளான் உடல் உள்ளான் –8-8-2-என்கிற இடத்தில் சப்தமாகவும் -ஆர்த்தமாகவும் ஜீவ பர பேதமும்,ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் , சென்று சென்று பரம் பரமாய்-8-8-5- -என்று ஆத்மாவுக்கு தேக விலஷணத்தைச் சொல்லுகையாலே பிரகிருதி -ஆத்மா விவேகம் ஆகிற தத்வ விவேகத்தையும் —

அடியேனுள்ளான்‌ உடலுள்ளான்‌” (திருவாய்மொழி 8-8-2 என்று ஜீவ பர பேதமும்‌, ஜீவர்களுக்கு பரஸ்பர பேதமும்‌, “சென்று சென்று பரம்பரமாய்‌ யாதுமின்றித்‌ தேய்ந்தற்று நன்று தீதென்றறிவரிதாய்‌ நன்றாய்‌ ஞானங்கடந்ததே” (திருவாய்மொழி 8-8-5) என்று தேஹத்துக்கும்‌ ஜீவனுக்கும்‌ உண்டான பேதமுமாகிற தத்த்வ விவேகத்தையும்‌,

அடியேன்  உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம் படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன் உணர்விலும்பர் ஒருவனே–8-8-2—அடியேன் என்கிறது -அஹம் சப்த பர்யாயம் ஆகையால் -ஞானாநந்தங்களிலும் அந்தரங்கம் பகவத் சேஷத்வம் -என்கை –சேதனனுக்கு -திவ்யாத்ம ஸ்வரூபத்திலும் திவ்ய மங்கள விக்ரஹமே உத்தேச்யமாய் இருக்குமா போலே -ஆஸ்ரிதன் ஸ்வரூபத்தில் காட்டிலும் இவன் தேஹத்தை யாயிற்று ஈஸ்வரன் விரும்பி இருப்பது -செருக்கர் அபிமத விஷயத்தில் அழுக்கு உகக்குமா போலே – இத்தால் ஜீவ பர பேதமும் -ஜீவர்களுக்கு பரஸ்பர பேதமும் -சேஷ சேஷித்வ சம்பந்தமும் -அபரமார்த்தம் -என்றும் -ஒவ் பாதிகம் என்றும் சொல்லுகிற பக்ஷங்கள் அர்த்தாத ப்ரதி ஷிப்தங்கள் -ஆழ்வானுக்கு திருக் கோட்டியூர் நம்பி -அடியேன் உள்ளான் என்னப் பெற்ற படி என் -என்று பணித்தார் –

நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே–8
-8-5—சென்று சென்று பரம்பரம் ஆய்-போய் போய் ஒன்றுக்கு ஓன்று மேலாய் இருக்கிற அன்ன மயாதிகளுக்கும் பரமாய்-யாதும் இன்றித் தேய்ந்து அற்று-அவற்றின் ஸ்வ பாவம் ஒன்றும் தட்டாத படி அவற்றோடு அற தொற்று அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய்-தேகம் -தேஹத்தைக் காட்டிலும் இந்திரியம் -அத்தைக் காட்டிலும் மனஸ் ஸூ -அதில் காட்டிலும் பிராணன் -அதில் காட்டிலும் புத்தி -என்கிறதில் வை லக்ஷண்யம் உண்டாகிறாப் போலே -ப்ராக்ருதங்களில் உண்டான நன்மை தீமைகள் சொல்ல ஒண்ணாது இருக்கை
நன்றாய் -இவற்றில் காட்டில் அதி வி லக்ஷணமாய்-ஞானம் கடந்ததே–இந்திரிய ஞானத்துக்கு எட்டாது இருக்கும் – கீழில் அவை ஒன்றுக்கு ஓன்று நெடு வாசி உண்டாய் இருக்கச் செய் தேயும் ஏக பிராமண கம்யத்வ சாம்யம் உண்டு -அதுவும் இல்லை என்கிறது இப்பாட்டில் –-இப்பாட்டில் –சாங்க்யத்தில்-தத்வ சங்க்யானக்ரமத்தால்-ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லும்படியைச் சொல்லிற்று-

4 — நித்யத்வ -அநித்யத்வங்களையும்-மின்னின் நிலையிலே மன் உயிர் ஆக்கைகள்-1-2-2- -என்றும் –
உள்ளதும் இல்லதும் -1-2-8–என்றும் சித் அசித் தத்வங்களின் நித்யத்வ -அநித்யத்வங்களையும்-

மின்னின்‌ நிலையில மன்னுயிர்‌ ஆக்கைகள்‌” (திருவாய்மொழி 1-1-2), “உள்ளதும்‌ இல்லதும்‌”(திருவாய்மொழி 1-2-8) என்று ஆத்மாவினுடையவும்‌ அசித்தினுடையவும்‌ நித்யத்வாநித்யத்வங்களையும்‌,

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை யுன்னுமின் நீரே –
1-2-2-நெடும் காலம் பழகின விஷயங்களை விட ஒண்ணுமோ -என்னில் அஸ்த்ரத்வாதி தோஷங்களை அனுசந்திக்கவே விடுகை எளிது என்கிறார்–மின்னுக்கு உள்ள நிலையும் இல்லை-சம்பதஸ் ஸ்வப்ன சங்காசா யௌவனம் குஸூமோபமம் தடிச்சஞ்சலமாயுச்ச கஸ்ய ச்யாஜ்ஜா நதோ த்ருதி –-அது தோற்றி நசிக்கும்-இது கர்ப்பத்தில் நசிக்கும்-தோற்றின போதே மாயக் கடவதாய் இருப்பதொரு வ்யவஸ்தை உண்டு அதுக்கு-இது சில நாள் இருக்கிலும் இருக்கும் -அஸ்திரம் என்று ஹிதத்தில் ப்ரவர்த்திக்க ஒட்டாது -ஸ்திரம் என்று விச்வசிக்கப் பண்ணி நசிக்கும் –

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே
 –1-2-4–நச்வரமான அசேதனத்தின் ஸ்வ பாவமும் –
ஏக ரூபனான சேதனன் படியும் இன்றிக்கே இருக்கும் அவன் ஸ்வ ரூபம்-இல்லது என்று துச்சத்வம் இத்யாத்வங்களை சொல்லுகிறது அன்று -நச்வரதையைச் சொல்லுகிறது-உள்ளது என்று அஸ்தித்வ மாத்ரத்தை சொல்லுகிறது அன்று -நித்யதையைச் சொல்லுகிறது

5–நியந்தருத்வத்தையும்-உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து-1-1-7- -என்றும் –
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்து -1-1-19–என்றும்
சேதன அசேதன சரீரியாய் நின்றனர்-1-1-6- -இத்யாதிப் படியே அவற்றின் சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஸ்வ ஆதீனம் ஆகும் படி இருக்கிறவனுடைய நியந்தருத்வத்தையும்-

உடல் மிசை உயிரெனக்‌ கரந்து எங்கும்‌ பரந்துளன்‌’ (திருவாய்மொழி 1-1-7) என்றும்‌, “கரந்தசிலிடந்தொறும்‌ இடந்திகழ்‌ பொருடொறும்‌” (திருவாய்மொழி 1-1-10) என்றும்‌ அந்த சேதநாசேதநங்கள்‌ ஸரீரமாகத்‌ தான்‌ ஸரீரியாய்க்‌ கொண்டு “நின்றனர்‌” (திருவாய்மொழி 1-1-6) இத்யாதி யாலே ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள்‌ ஸ்வாதீநமாம்படி இருக்கிற அவனுடைய நியந்த்ருத்வத்தையும்‌

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7—சரீரத்தில் ஆத்மாவைப் போலே தாரகனுமாய் -நியந்தாவுமாய் -சேஷியுமாய் பூத இந்த்ரிய அந்தகரண புருஷாக்யம்ஹி யஜ்ஜகத் ச ஏவ சர்வ பூதாத்மா விஸ்வ ரூபோ யதோஸ் அவ்யய–கரந்து-வ்யாப்த பதார்த்தங்களுக்குத் தெரியாமே-எங்கும் பரந்து
உள்ளும் புறமும் வியாபித்து-இவை யுண்ட சுரனே-பிரளய தசையில் இவற்றை சம்ஹரித்த சர்வேஸ்வரன்

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே
 –1-1-6-ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் பகவத் சங்கல்ப அதீனைகள் என்று சாமா நாதி கரண்யத்திலே சொல்லுகிறது –

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –
1-1-10—கரந்த சிலிடம் தொறும்- அதி ஷூத்ர சரீரங்களிலும்-இடம் திகழ் பொருள் தொறும்-தத் அந்தர்வர்த்திகளாய் ஸ்வயம் பிரகாசமான ஆத்மாக்கள் தோறும்-கரந்து–அன்யைரத்ருஷ்டனாய் இருக்கை-எங்கும் பரந்துளன்-இப்படி சமஸ்த வஸ்துக்களிலும் வியாபித்து இருக்கும்

6 -அவனுடைய சௌலப்யத்தையும்-பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1–என்றும் –
பல பிறப்பாய் எளிவரும் இயல்வினன் -1-3-2- -என்றும் ஆசா லேசம் உடையாரை பற்றவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான அவனுடைய சௌலப்யத்தையும்-

பத்துடை யடியவர்க்கு எளியவன்‌ (திருவாய்மொழி 1-3-1) என்றும்‌, “பல பிறப்பாய்‌ எளிவருமியல்வினன்‌ ‘ (திருவாய்மொழி 1-3-2) என்றும்‌ ஆஸா லேஸமுடையவர்க்கு ஸுலபன்‌ என்றும்‌, அவதரித்து ஸுலபனாயென்றும்‌ சொல்லுகிற அவனுடைய ஸெளலப்‌ யத்தையும்‌, 

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
 –1-3-1–பத்து -பக்தி -பத்து என்று பக்தியைக் காட்டுமோ -என்னில் எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி -என்னக் கடவது இறே பக்தி சப்தத்தால் இங்கு பர பக்த்யாதிகளைச் சொல்லுகிறது அன்று – பக்த்யுபக்ரமான அத்வேஷ மாத்ரத்தைச் சொல்லுகிறது தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கும் என்கிற குண பிரகரணம் ஆகையாலே
உடை – இம்மாத்ரத்தைக் கனக்க யுடைமையாகச் சொல்லுகிறது –விண்ணுளாரிலும் சீரியர் -என்று இங்கே பகவத் அனுபவம்-பண்ணுவாரை நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகாக நினைத்து இருக்கும் பகவத் அபிப்ராயத்தாலே –

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே 
–1-3-2—பத்துடை அடியவர்க்கு -என்று -சோபாதிகம் அன்று இவன் எளிமை -ஜலத்துக்கு சைத்யம் போலே ஸ்வ பாவ சித்தம் எளிமையை இயல்வாக யுடையவன்-பல பிறப்பாய் – வேதம் சொல்லிலும் –பஹூதா விஜாயதே -என்னும் அத்தனை – தான் சொல்லிலும் –பஹூநிமே -என்னும் அத்தனை – உட்புக்க தம் போல்வார் சொல்லிலும் –என்நின்ற யோநியுமாய் பிறந்தாய் -என்னும் அத்தனை – பிறப்பாய் – பரார்த்தமாக தாழ நின்றோம் என்று தம் பக்கலிலும் புரை இன்றிக்கே இருக்கை –என்னக் கடவது இறே

7 -சாம்யத்தையும்-பற்றிலன் ஈசன் முற்றவும் நின்றனன் –1-2-6–என்று அவனுடைய ஆஸ்ரணியத்வே சாம்யத்தையும்-(போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும் மாற்றே மாற்றல் இலையே நினக்கு
மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும் வேற்றுமை இன்றது போற்றுநர்ப் பெறினே–பரிபாடல் -4-51/54-)

முற்றவும்‌ நின்று” (திருவாய்மொழி 1-2-6) என்று ஆஸ்ரயணீயத்வே ஸர்வஸமனாய்‌ நின்றானென்று சொல்லப்பட்ட அவனுடைய ஸாம்யத்தையும்‌,

பற்றிலன் யீசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –
1-2-6-பற்றிலன் பற்று -உண்டு சங்கம் –-அத்தை வாசஸ் ஸ்தானமாக யுடையவன் –பற்றிலன்-பற்று இலான்-பற்றிலே உள்ளான் -என்னவுமாம் -சங்க ஸ்வ பாவன் -என்றபடி –யீசனும் – ஈஸ்வரனும் ஈஸ்வரத்வத்தை தவிர்க்க ஒண்ணாமை யாலே கிடக்கும் அத்தனை இஸ் சங்கம் குணம் ஆகைக்காகக் கிடக்கிறது பயப்படுகைக்கு உடல் அன்று-பிரசாத பரமௌ நாதௌ முற்றவும் நின்றனன்–சமோஹம் சர்வ பூதேஷு -என்கிறபடியே ஆஸ்ரயணீத்வே சர்வ சமானாய் இருக்கை

8 -அஹங்கார தோஷத்தையும்-நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -1-2-3–என்று
சம்சார ஹேது அதுவே சொல்லுகையாலே –அஹங்கார தோஷத்தையும்-

நீர் நுமதென்றிவை வேர்முதல்‌ மாய்த்து” (திருவாய்மொழி 1-2-3) என்று அஹங்கார தோஷத்தையும்‌,

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே
–1-2-3—நீர் நுமது -என்று அனர்த்த கரமான அஹங்கார மமகாரங்களை-நான் என்னது -என்னும் அர்த்தத்தை பிறர்க்கு உபதேசிக்கப் புக்கால் -நீங்கள் என்றும் உங்களது என்றும் இறே சொல்லுவது-அதாகிறது -அனாத்மயாத்மா புத்தியும் அஸ்வே ஸ்வ த்வய புத்தியும்-நான் என்னது — என்னில் நா வேம் இறே-அனாத்மன்யாத்ம புத்திர்யா அச்வேஸ் வமிதி யாமினி அவித்யாதரு சம்பூதி பீஜமேதத் த்விதாஸ்திதம்-என்று சம்சார பீஜத்தையும்
அச்யுதாஹன் த்வாச்மீதி சைவ சம்சார பேஜஷம் என்று பரிகாரத்தையும் சொல்லிற்று இறே –இவை வேர் முதல் மாய்த்து- இவற்றை சவாசனமாகப் போக்கி-இது அக்னி நா சிஞ்சேத்-போலே துஷ்கரம்
இவை நேராக விடும் போது பகவத் விஷயத்தைப் பற்றி விட வேணும் அவனைப் பற்றும் போது இவற்றை விட்டு அல்லது பற்ற ஒண்ணாது-ஆகையாலே இதரே தராஸ் ராயக்ரச்தம்
ஆனால் இதற்குப் பொருள் என் -என்னில் -ஆச்சார்ய சேவையாலும் சாஸ்திர அப்யாசத்தாலும் இவை அபுருஷார்த்தம் என்று அத்யவசிக்கை இரண்டு வ்ருஷம் சேர நின்றால்-ஒன்றிலே குட்டமிட்டுப் பெருங்காயத்தை வைத்தால் மற்றையது நிற்க இது க்ரமத்தால் உலர்ந்து போமா போலே -இந்த ஜ்ஞானம் பிறந்தால் இவை ஸ்வ கார்யம் செய்ய மாட்டாது-பீஜான் யக் ந்யுபதக்தானி -இத்யாதி
ரஷகன் அவசர ப்ரதீஷனாய் இருக்க இவன் பக்கலிலே விலக்காமை யுண்டானால் விரோதி போகிக்கு தட்டில்லை என்கை –

9 -இந்திரிய பலத்தையும்-விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம் புலன்-7-1-6- -என்று இந்திரிய பலத்தையும்-

விண்ணுளார்‌ பெருமாற்கு அடிமை செய்வாரையும்‌ செறும்‌ ஐம்புலன்‌” (திருவாய்மொழி 7-1-6) என்று இந்த்‌ரிய பலத்தையும்‌,

விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.–7-1-6—அயர்வறும் அமரர்கள் அதிபதிக்கு அவர்களோடே கூட அடிமை செய்ய ருசி உடையாரையும் விஷயங்களில் மூட்டி நலியும் இந்திரியங்கள் இவை -விரக்தனான விச்வாமித்ரனையும் கைங்கர்ய ருசி உடைய மஹாராஜரையும் கூட நலிந்து இ றே -விண்ணுளாராய்-சர்வ ஸ்வாமி யாய் இருக்கிறவனுக்கு அடிமை செய்ய வேணும் என்று இங்கே வரிலும் -எனக்கு என்னப் பண்ணும் இந்திரியங்கள் -பெரிய திருவடி பிராட்டிமாரையும் தேவரையும் நான் வஹித்தேன்-என்றான் இறே 

10 -மனோ பிரதான்யத்தையும்-மனத்தை வலித்து -5-1-4-என்று மனோ நியமத்தின் சொல்லுகையாலே மனோ பிரதான்யத்தையும்-

என்றும்‌ ஏத்துதல்‌ மனம்‌ வைம்மினோ” (திருவாய்மொழி 3-6-3) என்று மந: ப்ராதாந்யத்தையும்‌

என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –5-1-4—மனத்தை வலித்து-
விஷயங்களின் நின்றும் மனசை நிவர்ப்பித்து -நான் இந்திரிய ஜெயம் பண்ண நினைக்கை யாவது -அவன் என்னை மேலிடுகை -இந்திரியாணி பிரமாதீ நீ ஹரந்தி பிரசபம் மன-

பரவி வானவர் ஏத்த நின்ற பரமனைப் பரஞ்சோதியைக்
குரவை கோத்த குழகனை மணி வண்ணனைக் குடக்கூத்தனை
அரவம் ஏறி அலைகடல் அமருந் துயில் கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ.–3-6-3-எப்போதும் ஏத்துகையிலே மனசை வைக்க அமையும் -தானே கொண்டு முழுகும் -பின்னை உபதேசிக்க வேண்டா –

11 -கரண நியமனத்தையும்-உள்ளம் உரை செயல் உள்ள விம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து -1-2-8–என்று கரண நியமனத்தையும்-

உள்ள முரை செயல்‌ உள்ள விம்‌ மூன்றையும்‌ உள்ளிக் கெடுத்து” (திருவாய்மொழி 1-2-8) என்று கரண நியமநத்தையும்‌,

உள்ளம் உரை செயல் உள்ள விம்மூன்றையும்
உள்ளிக் கெடுத்து
இறை உள்ளில் ஒடுங்கே –1-2-8—மநோ வாக் காயங்கள் உரை செயல் அன்று -தத் ஆஸ்ரயமான கரணங்களை நினைக்கிறது – உள்ள இன்று தேட வேண்டா -சம்பன்னமாய் இருக்கை
விம்மூன்றையும் சந்நிஹதங்களும் விதேயங்களுமான இம்மூன்றையும் இவற்றுக்கு அவ்வருகே ஓன்று தேட வேண்டா -இவையே அமையும் –ஈச்வராய நிவேதிதும் -என்று நிரூபித்தால் பகவத் விஷயத்தில் சமர்ப்பிக்கைக்காக வாய் இருக்கும்-கெடுத்து-அவற்றுக்கு உண்டான பாஹ்ய விஷய ப்ராவண்யத்தைத் தவிர்த்து

12 -ஸூஹ்ருதி பேதத்தையும் –பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்-4-1-1– -என்கையாலே ஆர்த்தனான பிரஷ்டை ஐஸ்வர்ய காமன் இறுகல் இறப்பு-4-1-10– என்னும் -என்கையாலே ஜிஜ்ஞாசுவான கேவலன் –-குணம் கோள் நிறை புகழ் மன்னர் -4-1-8–இத்யாதியாலே
அர்த்தார்த்தியான அபூர்வ ஐஸ்வர்ய காமன்-திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மின்-4-1-1- -என்கையாலே ஜ்ஞாநியாகிற பகவத் சரணார்த்தி -என்கிற ஸூஹ்ருதி பேதத்தையும் –

பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம்‌ கொள்வர்‌” (திருவாய்மொழி 4-1-1) என்கையாலே ஆர்த்தனாகிற ப்‌,ரஷ்டைஸ்வர்ய காமன்‌, இறுகலிறப்பென்கையாலே ஜிஜ்ஞாஸுவான கேவலன்‌, ‘குணங்கொள்‌ நிறைபுகழ்மன்னர்‌’ (திருவாய்மொழி 4-1-8) இத்யாதியாலே அர்த்தார்த்தியான அபூர்வைஸ்வர்ய காமன்‌ “திரு நாரணன்‌ தாள்‌ காலம் பெறச்‌ சிந்தித்துய்ம்மினோ” (திருவாய்மொழி 4-1-1) இத்யாதியாலே சொல்லப்பட்ட ஜ்ஞாநியாகிற பகவச் சரணார்த்தி என்கிற ஸுக்ருதி பேதத்தையும்‌,

பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம்‌ கொள்வர்‌” (திருவாய்மொழி 4-1-1) என்கையாலே ஆர்த்தனாகிற ப்‌,ரஷ்டைஸ்வர்ய காமன்‌, இறுகலிறப்பென்கையாலே ஜிஜ்ஞாஸுவான கேவலன்‌, ‘குணங்கொள்‌ நிறைபுகழ்மன்னர்‌’ (திருவாய்மொழி 4-1-8) இத்யாதியாலே அர்த்தார்த்தியான அபூர்வைஸ்வர்ய காமன்‌ “திரு நாரணன்‌ தாள்‌ காலம் பெறச்‌ சிந்தித்துய்ம்மினோ” (திருவாய்மொழி 4-1-1) இத்யாதியாலே சொல்லப்பட்ட ஜ்ஞாநியாகிற பகவச் சரணார்த்தி என்கிற ஸுக்ருதி பேதத்தையும்‌,

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-முன்பு ராஜாக்கள் தங்களைக் காண அவசரம் பெறாதே நிற்கும் படி இருந்தவர்கள் இருந்ததே குடியாக திரண்டு காணும் படி–தாங்கள் சம்ருத்தராய் வாழ்ந்த தேசத்தில் உள்ளார் எல்லாரும் காணும் படி இம்மையிலே தாங்கள் ஜீவித்த ஜென்மத்திலே பிச்சை தாம் கொள்வர்-முன்பு ராஜாக்களுக்கு ராஜ்யம் வழங்கும் – இன்று பிக்ஷை தனக்குத் தேட்டமாய் இருக்கும் – முன்பு ராஜாக்கள் ரத்நாதிகளை பச்சையாகக் கொண்டு வந்தால் அநாதரித்து இருக்குமவனுக்கு பிக்ஷை திட்டமான படி முன்பு ராஜாக்கள் கொண்டு வந்த பச்சையை ஆள் இட்டு இறே வாங்குவது இப்போது இவன் அபேக்ஷையே போக்கி இடுவார் இல்லை-

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10—இந்த சங்கோசத்தையும் மோக்ஷமாக நினைத்து இருக்கும் ஞான நிஷ்டனுக்கும்-இறுகல்-பகவத் அனுபவத்தைப் பற்ற தமக்கு சங்குசிதமாய் இருக்கை-இறப்பு -மோக்ஷம்-அப்பயன் இல்லையேல்,– எம்பெருமானை சுபாஸ்ரயமாக பற்றா விடில் ஆத்ம அனுசந்தானம் பண்ண ஒண்ணாது-இவர் தாம் பிரயோஜனமாக நினைத்து இருக்கிறதை யாயிற்று அவன் ஆத்ம ப்ராப்திக்கு சாதனமாகப் பற்றுகிறது

குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும்,
ஆங்கு அவனை இல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.–4-1-8—குணவான்களாய் குண வத்தா பிரதையையும் உடையராய் இருக்கை-குணவான் ஆகிலும் அப்ராப்தான் ஆகில் உபேக்ஷிப்பார்கள்
மன்னர் -அபிஷிக்த ஷத்ரிய புத்ரராகை-பிறப்பித்தார் ஆகிலும் கிட்டுவார் இல்லையே லுப்தனாகில்
கொடைக்கடன் பூண்டிருந்து–கொடுக்கையே ஸ்வ பாவமாய் இருப்பது -உதாரமாய் கொடை வழங்கினாலும் மேன்மை பாவித்து இருக்குமாகில் பொருத்தம் இன்றிக்கே இருக்கும் இறே
இணங்கி-எல்லோரோடும் பொருந்தி வர்த்திக்கை-உலகு உடன் ஆக்கிலும்,-லோகத்தை தங்களோடு சேர்த்துக் கொண்டார்களே யாகிலும் –ராமோ ராஜ்யம் உபாசித்தவா -என்னக் கடவது இறே-ஆங்கு அவனை இல்லார் அவன் பிரசாதம் அடியாக பெறாதார்க்கு ராஜ்யம் தான் கிடையாது

13 -தேவ அசுர விபாகத்தையும்-அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் –5-2-5–என்றும் , நண்ணா அசுரர் –நல்ல அமரர் -10-7-5–என்று தேவ அசுர விபாகத்தையும்-

“தேவர்கள்‌ தாமும்‌ புகுந்து அரக்கரசுரர்‌ பிறந்தீருள்ளீரேல்‌” (திருவாய்மொழி 5-2-5) என்று தேவாஸூர விபாகத்தையும்‌,

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5-அஸூர ராக்ஷஸரான நீங்கள் மனுஷ்ய வேஷத்தை கொண்டு பிறந்து கலந்து திரிகிறீர் உள்ளீர் ஆகில் -சுக சாரணர்களை போலே கடல் கரையில் ஒற்றுப் பார்க்க வந்தவர் குரங்கு வடிவைக் கொண்டு –

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-விபரீதஸ்ததா அஸூர -என்கிறபடியே விபரீதரான அஸூரர்கள் இஸ் ஸம்ருத்தி பொறுக்க மாட்டாமையாலே முடியவும் –கிட்டக் கடவோம் அல்லோம் -என்று இருக்கும் அஸூர வர்க்கம் —-நல்ல அமரர் பொலிவு எய்தவிஷ்ணு பக்தி பரோ தேவ -என்கிறபடியே அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்கள் -இதுவே ஜீவனமாக சம்ருத்தமாகவும் –தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்றார் இறே

14 -விபூதி யோகத்தையும்-புகழு நல் ஒருவன் -3-4-1–என்றும் –-நல் குரவும்-6-3-1- -என்றும் – மாயா வாமனன்-7-8-1- -என்றும் – இவைகளில் விபூதி யோகத்தையும்

புகழு நல்லொருவனென்கோ திருவாய்மொழி 3-4-1) என்று தொடங்கி ‘நல்குரவும்‌ செல்வும்‌” (திருவாய்மொழி 6-3-1 “மாயா வாமனனே” (திருவாய்மொழி 7-8-1 என்கிற திருவாய்மொழிகளிலே சொல்லப்பட்ட விபூதி யோகத்தையும்‌,

புகழு நல் ஒருவன் -3-4-தாம் முன்பு பிரார்த்தித்த அடிமை கொள்ளுகைக்காக எம்பெருமான் தன்னுடைய சர்வாத்ம பாவத்தை காட்டி அருளக் கண்டு பகவத் குணங்களோ பாதி விபூதியும் ததீயத்வ ஆகாரேண உத்தேச்யம் ஆகையால் பூதங்களையும் பவ்திகங்களையும்அசாதாரண விக்ரகத்தையும் மாணிக்யாதி ஸ் ப்ருஹணீய பதார்த்தங்களையும் -போக்யமான ரஸ்யமான பதார்த்தங்களையும் செவிக்கு இனிய காநாதி சப்த ராசிகளையும் மோஷாதி புருஷார்த்தங்களையும் ஜகத்துக்கு பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளையும் ஜகத்துக்கு எல்லாம் காரணமான ப்ரக்ருதி புருஷர்களை விபூதியாக உடையனாய் அந்த சரீர பூதமான விபூதியில் ஆத்ம தயா வியாபித்து ததகத தோஷை ரசம்ஸ்ப்ருஷ்டனான மாத்திரம் அன்றிக்கே ஸ்ரீ யபதியாய் இருந்துள்ள எம்பெருமானை -இவனுக்கு தகுதியாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து பகவத் குண அனுசந்தானம் பண்ணினால்- கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் என்னும் கணக்கால் காயிகமான அடிமையில் ஷமர் இல்லாமையாலும் -கோவை வாயாளில் படியே எம்பெருமான் இவர் தாம் பேசின பேச்சை எல்லா அடிமையுமாக கொள்ளுவான் ஒருவன் ஆகையாலும்
விபூதி வாசகமான சப்தம் விபூதி முகத்தால் அவனுக்கு பிரதிபாதகம் ஆகையாலும் விபூதி விஷயமான சப்தத்தோடு நாராயணாதி நாமங்களோடு வாசி அற்று இருக்கிற படியால் அவற்றைச் சொல்லும் சொல்லாலே சர்வ சப்தங்களாலும் அவனைச் சொல்லி –வாசகமான அடிமையில் பிரவ்ருத்தர் ஆகிறார்

நல் குரவும்-6-3--நாம் சேராத வற்றை எல்லாம் சேர்த்து ஆள வல்லோம் காணும் -என்று தன் விருத்த விபூதி கத்வத்தைக் காட்டக் கண்டு -முன்பு பிரிவாலே வந்த அவசாதத்துக்கு உதவிற்றிலன் -என்று வெறுத்தவர் -சர்வ கதனாய்-தத்கத தோஷ ரசம் ஸ்ப்ருஷ்டனாய் ஸமஸ்த கல்யாண குணாத்மகனான இவனே நமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் மற்றும் உள்ள சர்வ வித பந்துவும் என்று அவன் பெருமையை அனுபவித்து ப்ரீதராய் கொண்டு பேசுகிறார்

மாயா வாமனன்-7-8–-எனக்கு இத்தோடு பொருந்தாமை யுண்டாய் உன்னை ஒழியச் செல்லாமை யுண்டாய் இருக்க -முடியும் விரகு இன்றியிலே உன்னைப் பெற்று தரிக்கவும் பெறாதே இங்கே வைத்த ஆச்சர்யம் இருந்த படி என் என்ன -அவனும் ஒன்றைக் கேட்க ஒன்றை பரிஹரிப்பாரை போலே
-இவ்வளவோ என் படி -என்று தன் விசித்திர விபூதி த்வத்தை காட்டி அருளக் கண்டு -இது விஸ்மயமாய் இருந்ததீ -இது இருந்த படி என்

15 -விஸ்வரூப தர்சனத்தையும் –-நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் –6-9-1–என்று விஸ்வரூப தர்சனத்தையும் –

“நீராய்‌ நிலனாய்த்‌ தீயாய்க்‌ காலாய்‌ நெடுவானாய்‌ சீரார்‌ சுடர்களிரண்டாய்ச்‌ சிவனாய்‌ அயனானாய்‌” (திருவாய்மொழி 6-9-1) என்று விஸ்வரூப தர்ஸனத்தையும்‌

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய்! ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.
–6-9-1-நீராய் நிலனாய் என்கிற அசித் பதார்த்தத்தோடு -சிவனாய் அயனாய் -என்கிற ஈஸ்வர அபிமானிகளோடு வாசி அற்று இருக்கிற தாயிற்று ஈஸ்வர பாரதந்தர்யம் –இப்படி ஜகதா காரதையைக் காட்டி தன்தோமேயென்ன-அது போராது -அசாதாரண விக்ரஹத்தை காட்ட வேணும் என்கிறார்

16 -சாங்க பக்தியையும்-வணக்குடை தவ நெறி வழி நின்று புற நெறிகளை கட்டு உணக்குமின் பசையற-1-3-5-என்றும் – மேவித் தொழுது உய்மினீர்கள் வேதப் புனித விருக்கை நாவில் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமை-5-2-9-என்றும் – மாலை நண்ணி –காலை மாலை –கமல மலர் இட்டு-தொழுது எழுமினோ -9-10-1–என்றும் –சாங்க பக்தியையும் –

வணக்குடைத்‌ தவநெறி வழிநின்று புறநெறிகளைகட்டு உணக்குமின்‌ பசையற அவனுடை உணர்வுகொண்டுணர்ந்தே” (திருவாய்மொழி 1-3-5) என்றும்‌, “நன்றெனநலம்‌ செய்வது அவனிடை” (திருவாய்மொழி 1-3-7) என்றும்‌ “மேவித் தொழுதுய்ம்மினீர்கள்‌ வேதப் புனிதவிருக்கை நாவில்‌ கொண்டச்சுதன் தன்னை ஞானவிதி பிழையாமே” (திருவாய்மொழி 5-2-9) என்று அங்க ஸஹிதமான பக்தி யோகத்தையும்‌,

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
–1-3-5—வணக்கத்தை யுடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நிலை நின்று -பக்தி சரீரத்திலே மாம் நமஸ் குரு என்கையாலே–வணக்குடை – என்கிறது தபஸ் சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று – பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –யஸ்ய ஜ்ஞான மயந்தப -என்கிற ந்யாயத்தாலே என்னுதல் இவனுடைய பிரேம மாத்ரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் அவன் அபிப்ராயாத்தாலே யாதல் –புற நெறிகளை கட்டு
இதுக்கு விரோதியான சப்தாதி விஷயங்களில் போகிற வழி யாகிற களையைக் கடிந்து பறித்து
இத்தை நெறி என்பான் என் என்னில் இருந்ததே குடியாகப் போகிற மஹாதபம் ஆகையாலே -துர்மார்க்கம் என்னக் கடவது இறே –

ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே 
–-1-3-7-அவன் பக்கலிலே அநந்ய பிரயோஜன பக்தியைப் பண்ணப் பாருங்கோள்-நம்முடை நாளே-க்ரமத்திலே செய்கிறோம் என்று இராதே சரீரத்தின் உடைய நிலை இல்லாமையைப் புத்தி பண்ணி சடக்கென ஆஸ்ரயியுங்கோள்

மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே

பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-அநந்ய பிரயோஜனராய் தொழுது உஜ்ஜீவியுங்கோள் -வேதத்தில் விபூதி விஷயமாக சொன்னவை அன்றிக்கே -பகவத் குணங்களையும் வடிவு அழகையும் ப்ரதிபாதியா நின்றுள்ள ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளை நாக்கிலே கொண்டு –-அச்சுதன் தன்னை – அஹ்ருதயமாக சொன்னதை ஹ்ருதயமாக நினைத்து -நத்யஜேயம் -என்னுமவன் -அகவாய் பாராதே யுக்தி மாத்ரத்தைக் கொண்டு நழுவ விடாதவனை-ஞான விதி பிழையாமே--வேதங்களில் பிரதிபாதிக்கிற பக்தி மார்க்கம் தப்பாமே –ஞானம் என்று ஞான விசேஷமான பக்தியைச் சொல்லுகிறது 

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு
நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டி ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள்-ஆஸ்ரயணீயத்துக்கு கால நியதி இல்லை -என்கிறது -ஆதி நடுவந்திவாய் -என்கிறபடியே சர்வ காலத்துக்கும் உப லக்ஷணம் –சர்வ புஷ்ப்பங்களுக்கும் உப லக்ஷணம் -நீங்கள் விரும்பின பிராகிருத த்ரவ்யமே அமையும் என்கை –நீர்-அதிகாரிகளும் முன்புத்தை நீங்களே யமையும்

17 –18 –இரண்டு வகையான பிரபத்தியும் உபதேசிக்கையாலே-அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து -1-3-5–என்று அவன் அருளி செய்த பிரபத்தி ரூப ஞானத்தை சகாயமாக கொண்டு அத்தை அறிந்து என்கையாலே – பக்தி அங்கத் வேனவும் – மற்று ஓன்று இல்லை-9-1-7–என்றும் – சரணமாகும் -9-10-5-என்கிற வற்றால் ஸ்வதந்திர வேனேவும் – இரண்டு வகையான பிரபத்தியும் உபதேசிக்கையாலே

“சரணமாகும்‌ தனதாளடைந்தார்க்‌ கெல்லாம்‌” (திருவாய்மொழி 8-10-5) என்றும்‌ “மற்றொன்றில்லை” (திருவாய்மொழி 9-1-7) என்கிற பாட்டிலும்‌ சொல்லப்பட்ட ப்ரபத்தி த்‌வைவித்‌யத்தையும்‌

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
–1-3-5-தத் உக்த ஜ்ஞானம் -தத் விஷய ஜ்ஞானம் என்னுதல் – அவனை விஷயீ கரித்த ஜ்ஞானத்தைக் கொண்டு -விலஷண விஷயத்திலே நெஞ்சை வைத்து -இவற்றின் தோஷத்தை தர்சித்து விடுங்கோள்–அவனை சரணம் புக்கு இவற்றை சவாசனமாக விடுங்கோள் எனவுமாம்

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ

குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7—மற்று ஓன்று இல்லை -இத்தோடு ஓக்க வேறு எண்ணலாவது இல்லை -என்னுதல் -இப்போது இத்தைச் சொல்லி வேறு ஒரு போது வேறு ஒன்றை சொல்லுகிறான் என்று இருக்க வேண்டா என்னுதல் –-சுருங்கச் சொன்னோம்-இது தன்னையும் பரப்பு அறச் சொன்னோம் -பிரதிபத்திக்கு அவிஷயமாம் படி அன்றியே ஸூ க்ரஹமாகச் சொன்னோம்
மா நிலத்து -இதுக்கு அதிகாரிகள் சம்சாரத்திலே -இவ்வர்த்தத்துக்கு அண்ணியார் பரமபதத்தில் உள்ளார்கள் ஆகிலும் உபதேசத்துக்கு அதிகாரிகள் சம்சாரிகள் என்கை –-எவ் உயிர் க்கும்-இது அதிக்ருதா அதிகாரம் அன்று -சர்வாதிகாரம் – சிற்ற வேண்டா -ஆயாசிக்க வேண்டா -சிற்றுதல் -சிதறுதலாய் -பரக்க வேண்டா என்கை – சிந்திப்பே அமையும்கண்டீர்கள் அந்தோ-யுக்தி நிரபேஷமாக சிந்தா மாத்திரமே அமையும் கிடி கோள் – அந்தோ-இவ்விலக்ஷண விஷயத்தை இழப்பதே -என்னுதல் -இது ஸூ லபம் என்றால் காற்கடைக் கொள்ளுகைக்கு உறுப்பாவதே என்னுதல் –

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-ஜென்மத்தாலும் வ்ருத்தத்தாலும் ஞானத்தாலும் குறைய நின்றாரே யாகிலும் -தன் திருவடிகளை உபாயமாகப் பற்றினார்க்கு எல்லாம் ரக்ஷகனாம் -கீழ் மூன்று பாட்டாலும் சொன்ன பக்தி யோகம் அதிக்ருதாதிகாரம்-இதில் சொன்ன பிரபத்தி -சர்வாதிகாரம் -என்கிறது –

ஏதத் பிரதி பாத்யர்த்த சாம்யத்தைக் கொண்டு-மாயோன் அன்று ஓதிய வாக்கு–நான்முகன் –71 -என்கிற
ஸ்ரீ கீதை உடன் ஒக்க சொல்லப் படும் என்கை ..

ஆக இவ்வர்த்த விஸேஷங்களை ப்ரபந்தத்திலே ப்ரதிபாதிக்கக்‌ காண்கையாலே “மாயன்‌ அன்றோதிய வாக்கை” (நான்முகன்‌ திருவந்தாதி 71) என்கிற ஸ்ரீ கீதையோடொக்கும்‌ என்கிறார்‌

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-—எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு – ஆஸ்ரிதர்க்கு பவ்யனாய் அணியனாயும்- அநாஸ்ரிதர் எட்ட ஒண்ணாத படி மிகவும் பெரியனாய்க் கொண்டு
சேயனாய் -அதி தூரஸ்தனாயும் இருக்கும்-கிருஷ்ணனுமாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு அதிபதியுமாய் நிற்கும் பெருமையை யுடையானவன் –அன்று அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அப்யசியார்-உலகத்திலேதிலராய்-லோகத்தில் அந்யராய் ஒரு நன்மைகளை யுடையார் அன்றிக்கே என்றுமாம்
மெய் ஞானமில் – மெய்யான ஞானம் இல்லை –

பிரபத்தி த்வை இத்யாதிகளாலே -என்கிற இடத்தில்-ஆதி -சப்தத்தாலே ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாமேதி சோர்ஜுனா–4-9-என்றார் போலே
இவை பத்தும் வல்லார் அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறை-1-3-11- -என்று
சொன்ன அவதார ரஹச்ய வைபவம் – பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி –
ததஹம் பக்த்வுபஹ்ருத மஸ்நாமி பிரயதாத்மன
-9-26– என்றார் போலே – பிரிவகை இன்றி நன்னீர் தூயப் புரிவதுவும் புகை பூ-1-6-1–என்று சொன்ன அவன் ஸ்வ ஆராதத்தை முதலாக கீழ் அனுக்தங்களையும் – தேக ஆத்மா அபிமானிகளை க்ரமத்திலே பிராப்ய சாதனங்களின் எல்லையில் மூட்டுகையும் – சாத்யோ உபாயங்களில் பரந்து சித்தோ உபாயத்தை மறைத்து உபதேசிக்கும் இடத்தில்
வைபவம் தோற்ற வெளி இடுகையுமான வற்றையும் நினைக்கிறது .

ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந
–4-9-எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்-உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே
–1-3-11-சிறையில் இருந்த ராஜகுமாரன் தலையிலே அபிஷேகத்தை வைத்து பின்னை சிறையை வெட்டி விடுவாரைப் போலே நித்ய ஸூரிகள் வரிசையைக் கொடுத்து பின்னை சம்சார அஞ்சிறையை கழிக்கும் ஈஸ்வரன் ஆதி வாஹிகரோடு விரஜையில் சென்று ஸூஷ்ம சரீர விதூ நனம் பெறுவார்-

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதமஸ்நாமி ப்ரயதாத்மந-
9-26-இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே
–1-6-1-பரிவதில் ஈசனைப்-ஹேய ப்ரத்ய நீகனான சர்வேஸ்வரனை-பரிவு என்று துக்கமாதல் -பஷபாதம் ஆதல் –-உபாசகனுக்கு துக்கேன ஆஸ்ரயிக்க வேண்டியிருக்குமதுவும் -ஆஸ்ரயணீயனுக்கு ஹேயம்- குருவாக ஆஸ்ரயித்தன் பக்கலிலே பஷபதித்து -லகுவாக ஆஸ்ரயித்தன் பக்கலிலே நெகிழ்ந்து இருத்தல் செய்யுமதுவும் ஆஸ்ரயணீய வஸ்துவுக்கு ஹேயம்–இவை இல்லாமையாலே ஹேய ப்ரத்ய நீகன்-என்கை–ஹேய ப்ரத்ய நீகதை புக்க விடத்தே கல்யாண குணங்களும் புகக் கடவதாகையாலே இது அதுக்கும் உப லஷணம்
ஈசனை – இவன் இடுவதில் குறையுள்ளது தன் குறையாம் படி இருக்கிற சம்பந்தத்தைச் சொல்லுகிறது –இழவு பேறு தன்னதாம் படி இருக்கும் சம்பந்தத்தை யுடையவனை-ஆஸ்ரயணீயனும் ப்ராப்யனும் ஆகையிறே-உபய வாக்யத்திலும் நாராயண சப்த பிரயோகம் பண்ணிற்று-அல்லாதார் துராராதர் ஆகையாலே அநாஸ்ரயணீயர் –

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading