ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -36-துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தார்-ஆடி ஆடி அகம் கரைந்து -2-4-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

சீதாப்பிராட்டிக்காக செய்ததா-ஆண்மையை நிரூபிக்கச் செய்ததா-இலங்கை அழகுடன் இருக்கக்கூடாது என்று பொறாமையால் செய்ததா-தாயார் பாசுரம் என்றும் தோழி பாசுரம் என்றும்
ராத்திரி படுத்தும் பாடு தலைமகன் கொடுமையைக் கூறுதல்-ஆடி ஆடி -2-4- விவரணம் இதுக்கு
அரக்கர் இலங்கை செற்றீர் அங்கும் உண்டே-மனத்துக்கு இனியனான ராமன் போய் கொடுமை செய்வாரோ – ஏலாப் பொய்கள் உரைப்பான் -பெண்ணின் வருததம் அறியா கண்ணன் செய்தால் ஆறி இருக்கலாம்-
பிரளயம் -வேஷம் மாற்றி இருள் என்று பேர் கொண்டு வந்து நலிய உதவாமல் உள்ளானே
குளிர்ந்த திருத்துழாய் ஆசைப்பட்டாள் என்ற காரணத்துக்காக -இக்காலத்திலும் இரங்காமல் -என்ன கொடுமை –சீதாபிராட்டி காகவும் உதவாமல் கொடுமைகள் செய்வதிலே பிரவர்த்தினான் போலும்
அம்மனோ -விஷாத சோதகம்

நன்மைகள் உள்ளது தத் தலையாலே என்று இருக்கையும் – தீமைகள் உள்ளது நம் தலையாலே என்று இருக்கையும்- ஸ்ரீ ஜனகராஜன் திரு மகளுக்கும் நம்மாழ்வாருக்கு ஸ்வரூபம் –இப்படி அத்தலை அல்லது அறியா இருக்கச் செய்தேயும் இவனுடைய ரக்ஷகத்வத்திலே அதி சங்கை பண்ணும் படிக்கு ஈடாகப் பிறந்த தசா விபாகத்தைச் சொல்லுகிறது –ஏஷை வாசம் சதே லங்காம் ஸ்வேநா நீகே நமர்திதும் -என்று (வானர )முதலிகள் –நான் அழிக்க நான் அழிக்க-என்று சொல்லுமா போலே – வாடையும் ராத்ரியும்-
நான் நான் என்று நலிகிற படி –

இப்படி கால சந்நிதியிலும் போக ஸந்நிதி இல்லாமையாலே மோஹ ஜனகமான விளம்ப அஷமத்வத்தால் உண்டான இவருடைய ஆர்த்தி அதிசயத்தைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள்
ஈஸ்வரனுடைய நைர் க்ருண்ய சங்கையைப் பண்ணி வெறுத்த பிரகாரத்தை-இருளுக்கு ஈடுபட்ட தலைமகள் ஆற்றாமை கண்ட தோழி தலைமகனான ஈஸ்வரனுடைய கொடுமை கூறின பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
கீழ் ஸந்த்யா காலமும் வாடையும் நெளிந்தபடி சொல்லிற்று அதுக்கும் மேலே இருளும் வந்து தோற்றிற்று

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி அவதாரிகை
இப்படியுள்ள இவளுடைய ஆர்த்தி அதிசயத்துக்கு மேல் இருளும் ராத்திரியும் இவளை நலியுமது கண்டும் இவர் இரங்கிற்றிலர்-இவர் கொடுமைகளுக்கு நான் எத்தைச் செய்வேன் என்று திருத்தாயார் வெறுப்பால் இன்னாதாகிறாள்

துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தாரது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே
–36–துறையடைவு-தோழி தலைவனின் கொடுமையைக் கூறல் –

ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன்
கூடி இன்பம் எய்தாக் குறையதனால் -வாடி மிக
அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க மோகித்து
துன்புற்றான் மாறன் அந்தோ —14-எம்பெருமானைப் பிரிந்த அளவன்றிக்கே அவனுக்கு பிராண பூதரான நித்ய ஸூரிகளையும் கூடப் பிரிகையாலே தம் தசையை அறியாதபடி மோஹிதராய் கிடக்கிற தம் படியை பார்ஸ்வச்தரான பரிவர் அவனுக்கு விண்ணப்பம் செய்கிற பிரகாரத்தை கலந்து பிரிந்து மோஹங்கதையான பிராட்டி உடைய விரஹ பரவச வியாபார உக்திகளை அனுகரித்து அவனுக்கு அறிவிக்கிற திருத் தாயார் பேச்சாலே அருளிச் செய்கிற -ஆடி யாடியில் அர்த்தத்தை – ஆடி மகிழ் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –இப்படி தம் தசை தமக்கும் வாசோ மகோசரமாய்
கண்டார் எல்லாரும் இரங்க வேண்டும்படியாய் இருக்கும் ஆயிற்று –

துழா நெடும் சூழ் இருள் என்று –இருள் துழாவிப் கொண்டு வருகிறபடி சத்தையை அழித்துக் கொண்டு வருகிற படி –பதார்த்தங்களைத் துழாவிக் கொண்டு வருகிறபடி என்றுமாம் –பற்றுகிற இடம் விடாதே மேல் விழுந்து பற்றுகிற படி –சூழ் இருள்-ஓர் அருகே ஒதுங்க என்றாலும் ஒண்ணாத படி சூழுத்துக் கொண்டு வாரா நின்றது –-தீர்க்கயாமா த்ரியாமா-என்று இறே பிரிந்தார் எல்லார்க்கும் வார்த்தை –மூன்று ஜாமம் கொண்டது இரவு –சந்தியை -கழித்து 22 அரை நாழிகை தான்-சேர்ந்து உள்ளாருக்கு சட்டு என்று போகும் -பிரிந்தால் ஊழி போல் தானே இருக்கும்–இருள் என்று –வருகிற போது சன்யாசியாய்
கிட்டினவாறே ராவணன் ஆனால் போலே-தம் தண் தாரது பெயரா – தன் தோளில் இட்ட திருத் துழாய் மாலையை யாசைப்பட்ட இத்தைக் கொண்டு –எழா நெடு வூழி–பேராத (அசையாத _ கல்பம் –மலையாளர் வளைப்பு போலே வைத்த கால் வாங்காதே இருக்கிறபடி-எழுந்த-தோற்றின –சம்வர்த்த
பிரளய கல்ப என்னும் படியே (பர்யாய சப்தங்கள் ) பிரளயமாய்க் கொண்டு பெருகா நின்றது-தயமாந மநா -என்று சர்வேஸ்வரன் தயை பண்ணின வாறே –அந்த பிரளயத்துக்கு முடிவு உண்டு-அவன் பக்கல் கிருபை இல்லாமையால்-இப் பிரளயத்துக்கு முடிவு இல்லை-

விக் காலத்தும்–ஸீதாதா வேண் யுத் க்ரதநம் க்ருஹீத்வா -என்று பிராட்டி தன் திருக் குழலை சிம்சுபா வ்ருக்ஷத்திலே பிணைக்கப் புக்க தசையாய் இறே இருக்கிறது–ஈங்கு இவளோ – இப்படிப் பட்ட இவள் –
அவர்களையும் அவர்கள் தசையும் போலேயோ-இவளும் இவள் தசையும்-சம்சாரிகள் போலவும் சம்சாரிகள் தசை போல் அல்லவே இவளும் இவள் தசையும் ஐந்து வாசிகள் சாதிக்கிறார்–1-அவர்கள் அங்கு கரண களேபர விதுரராய் இறே இருப்பது –இங்கு இவள் சத்தையைப் பற்றி நலிகிற படி -2-அங்கு பிரகிருதி அளவிலே – இங்கு ஆத்மா அளவிலே –3-அங்கு நீர் பிரளயம் – இங்கு ராத்திரி பிரளயம்–4-மூர்த்தமான ஜலம் மூர்த்தமான உடம்பை அழிக்கிறது அங்கு – இங்கு அமூர்த்தமான ராத்திரி அமூர்த்தமான ஆத்மாவை அழியா நின்றது-5-அங்கு அவற்றினுடைய ஆபத்து தான் அறிந்ததுவே –
இங்கு ஆபத்தையும் அறிந்து ரக்ஷக அபேக்ஷையும் உண்டாய் இரா நின்றது–

வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் – வழுவாத நெடும் துன்பத்தவள் என்று இரங்குகிறிலர்-துக்கேந புபுதே ஸீதாம்--திருவடி இவள் தாபம் கண்டு பிராட்டி என்று அறிந்தால் போலே அறிதல்
ஒழிதல் செய்யும் அத்தனை இறே –கர்மம் அனுபவ விநாஸ்யமாய் இருக்கும் –இது அனுபவிக்க அனுபவிக்க வர்த்தியா நிற்கும் பகவத் ருசி அடியாக வருகிற துக்கமாகையாலே –பகவத் ருசி மாறுவது
1-சைதன்யம் இல்லையாதல் –2-விலக்ஷணம் அன்றியிலே ஒழிதல் செய்யில் இறே-ஹேய ப்ரத்ய நீகரான தமக்கு தம்மை உகந்தாருடைய ஹேயத்தையும் போக்கிக் கொண்டு அருள வேண்டாவோ-பிரணயித்வம் வேண்டாவாகில் ஸ்வரூபமும் வேண்டாவோ –(ரக்ஷணம் கிருபை தானே ஸ்வரூபம் )ஆபத்து நிமித்தமாக ரக்ஷித்தான் ஆகில் -பிரளய ஆபத்தில் இங்கு உண்டான சாதன சம்பத்தி -ஆழ்வாருடைய ஆற்றாமை -பொய்யானதோ-கிருபை கருணையும் சாதன சம்பத்தி -இங்கு இல்லாமல் போனதோ–ஆபத்து நிமித்தமாக தாம் இரங்காது ஒழிகைக்கு பரதந்த்ரரோ–எங்களுக்குப் புறப்படில் குற்றம் – தங்களுக்கு புறப்படாது ஒழியில் குற்றம் –வரில் எங்கள் சேஷத்வம் அழியும்-வராது ஒழியில் தம்முடைய சேஷித்வம் அழியும் –

(பரகத அதிசய ஆதேய )சேஷியைக் குறித்து சேஷ பூதன் அதிசயத்தை விளைக்கக் கடவன் இறே-பூர்ண விஷயத்துக்கு அதிசயத்தை நினைக்கையாவது –ஸ்வ ரக்ஷணத்துக்கு புறப்படாது ஒழியுமது –(அவனைக் குறைவாளனாக ஆக்காமல் இருப்பதற்காக –நாமே ரக்ஷணத்தில் இழியக்கூடாதே )வைதர்ம்யன் நேஹ வித்யதே -என்னும் படியே பெருமாள் தோள் வலியை நினைத்த படியால் சர்ப்பத்தின் வாயிலே புக்கால் போலே-ராவண சந்நிதியில் இருந்து –த்வன் நீச சசவத் ஸ்ம்ருத-என்று
சசத்தோடு உன்னோடு வாசி என் என்று சொல்லக் கடவள்(ஆனை போல் பெருமாள் நீ முயல் போல் )
இப்போது(பராங்குச நாயகி ) சர்வேஸ்வரனுடைய ரக்ஷையை அதி சங்கை பண்ண வேண்டும் படி காணும் ஸ்வரூப விபரியாஸம் இருந்த படி –ரக்ஷகத்வம் பிரணயித்தவம் போன்ற ஸ்வரூபம்
தத் தஸ்ய சத்ருசம் பவத் -என்று இல்லாமல்-உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -மறந்து இருந்தாள் –இவளுக்கு அவன் பக்கல் குண ஞானமே காணும் உள்ளது-ஸ்வரூப ஞானம் இல்லை –
ஸ்வரூப ஞானம் உண்டாகில் அத்தலை பட்டதும் அறியாளோ –அத்தலை – நைவ தம் சாந்ந மஸகான்ன-ஆயிறே கிடக்கிறது-த்வத் கதே நாந்தராத்மனா -என்னும்படியே குளப்படி கலக்கினால் போலே அன்று இறே-கடல் கலங்கும் படி(கொசு பூச்சி கடித்தாலும் அறியாமல் உன்னையே நினைந்து இருந்தார்
சமுத்திர இவ கம்பீரமான பெருமாளே கலங்கி )அத்தலை-ஊர்த்வம் மாசான்ன ஜீவிஷ்யே -என்று இருந்தால் – இத்தலை –ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்று இறே இருப்பது-இரண்டு தலையும் அந்யோன்யம் அபேக்ஷிதமாய் இறே இருப்பது-

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை
–நான்முகன் -7-நாரணனே நீ என்னை அன்றி இலை –-பூர்ணனான உனக்கு
அபூர்ணனான என்னை ஒழிய-அபாஸ்ரயம் இல்லை –(ஏழை ஏதலன் கீழ் மகன் இருப்பாரே அன்றோ நீர் தேடுவது-இத்தனை நாளும் நான் உன்னை விட்டு சம்பந்தம் அறியாமல் உழன்றேன் அப்பொழுதும் நீர் என்னையே கைக்கொள்ள அவகாசம் பார்த்து இருந்தீரே –உன்னுடைய சேஷித்வ ஸ்வரூபத்தாலும்-
என்னுடைய சேஷத்வ ஸ்வரூபத்தாலும் விடப் போகாது –(நான் விட முடியாது என்பதிலும் இரண்டாலும் நீர் விட முடியாதே என்பதே நிச்சயம் )

இப்பாசுரம் ஒட்டியே அமுதனார்
நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே
– ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-48 — நின் அருள் என்பாலதே- உன் கிருபை என் பக்கல் அதே -அதில் சந்தேகம் இல்லை –நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே–சேஷ பூதனாய் உன்னை ஒழிய ஸ்திதி இல்லாமையால் – உனக்கு சேஷ பூதனை ஒழிய சேஷித்வம் இல்லாமையால் இரண்டுக்கும் அடி இது தான் என்கிறது –நாரங்களை ஒழிந்த நாராயணன் இல்லாமையால் – நாராயணன் என்று ஸ்வரூபத்தையும் குணத்தையும் சொல்லுகிறது–நமக்கு ஸ்வரூப நாசம் மட்டும் அவனுக்கு ஸ்வரூபமும் குணங்களும் நாசம் ஆகுமே -குறைவாளனை ஒழிய நிறைவாளனாக மாட்டான் – சேஷ பூதனை ஒழிய சேஷியாக மாட்டான் –

இரங்கார் –வாராது ஒழிந்தால் –பூசுவனவும் புலர்த்துவனவும் இரட்டிக்க வேணுமோ(பூசும் சந்தனம் இரண்டு மடங்கு பூசிக் கொள்கிறானே )அம்மனோ – புலி என்னுமா போலே – ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் -என்கிற தத்துவத்தை அம்மே என்று அஞ்ச வேண்டும்படி இவளுக்குப் பிறந்த ஸ்வரூப அந்யதா பாவம்-ஆனந்தோ ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதத்ஸ்ஸன-என்று புத்தி பூர்வம் பண்ணின பாபத்துக்கு அஞ்ச வேண்டாத படி இருக்க –ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தத்தை அறிந்தவனுக்கு ப்ரஹ்மம் தன்னையே அறியச் செய்தேயும்- அஞ்ச வேண்டும்படி இறே இவள் தசை –ஓ என்று–க்ரூர்யத்தைச் சொல்லுகிறது –-அசை என்றுமாம் –இலங்கைக் -குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –
ஒருத்திக்காக கடலை யடைத்து- இலங்கையை ராமன் என்றும் லஷ்மணன் என்றும் எழுத்து வெட்டின அம்புகளை புக விட்டு குட்டிச் சுவரும் மட்டைத் தெங்குமாக்கி மூலையடி போகப் பண்ணின இந்த உபகாரகனுடைய இந்த நீர்மை எல்லாம் எங்கே குடி போயிற்றோ -என்று எம்பார் அருளிச் செய்தார் –இதுவும் அழகியது-ஒன்றாய் உண்டாய் இருக்கலாகாது என்று அஸூ யையாலே அழித்தான் அத்தனை காண் –ஒருத்திக்காக உதவினன் அல்லன் காண் -என்பர் திருமலை நம்பி –

சந்த்யா காலமும் வாடையும் கீழே சொல்லி மேலே இருளும் வந்து தோன்ற – நான் முன்னே நான் முன்னே என்று நலியும் படி – கொடுமைகள் -பன்மை –அம்மனோ –ஐயோ என்பது போலே

கடல் வழி விட நிசிசரர் பொடி பட விரு கண் சீறி
வட கயிலையில் எழு விடை தழுவியது மறந்தாரோ
அடல் அரவம் அமளியில் அறி துயில் அமரும் அரங்கேசர்
இடர் கெட வருகிலர் முருகலர் துளவும் இரங்காரே-
திருவரங்கக் கலம்பகம்

இவை செய்தது தம் பிரபுத்வம் நிலை பெற பிராட்டியை ரஷிக்க அன்று–துழா-பிரிந்த நாயகியின் உயிரை கை விட்டுத் துழா கின்ற–சூழ் இருள் –தப்ப ஒண்ணாத இருள்–தம் தண் தராது பெயரா–வழா நெடும் துன்பத்தள்--திருத் துழாய் மாலை நிமித்தமாக துன்பப்படுகிறாள்–தம் தண் தராது பெயரா–வூழி எழுந்த-இவளை வருத்தவே இருள் என்னும் கல்பம் என்றவாறு-இருள் என்ற வூழி எழுந்த விக்காலத்தும்--வருகிற பொழுது சந்நியாசி எழும் பொழுது ராவணன் போலே இருளாக வந்து கல்பமாக ஆனதே–இரங்கார் –பிரணயித்தவம் இல்லா விடிலும் ஐயோ என்னவாவது வேண்டாவோ-நெடு ஊழி--கல்பத்துக்கும் எல்லை உண்டே –இக்காலத்திலும் – பிரளய காலத்தில் உதவினவன் இக்காலத்தில் முகம் காட்டாது இருக்கலாமோ –

துழா நெடும் சூழ் இருள் என்று–துழாவும்படி கண்ணிட்டுப் பதார்த்தம் காண ஒண்ணாத படியான
முடிவின்றியே சூழ்ந்த இருள் என்று சொல்லப்படுவதாய்-தம் தண் தாரது பெயரா-தன்னுடைய குளிர்ந்த மாலையைப் பேரிட்டுக் கொண்டு வியாஜமாக்கி-எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும்-இதுக்கு முன்பு தோற்றி அறியாத கல்பம் தோற்றின இவ்வளவிலும்–ஈங்கு இவள்-இவ்விடத்துத் தனிமை பொறுக்க மாட்டாத இவள்--ஐயோ–வழா நெடும் துன்பத்தள் என்று வழுவாத பெரிய துன்பத்தை உடையவள் என்று-இரங்கார்–பர துக்கம் பொறுக்க மாட்டாத இரக்கத்தைப் பண்ணுகிறிலர்–அம்மனோ-என்று கொடுமைக்கு அஞ்சி உரைத்தல்–இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே-அரணை யுடைத்தான லங்கையில் திரண்ட நெடிய மாடங்களை இடித்தலாலே பெண் பிறந்த ஜாதிக்காக உபகாரகராய் இருக்க இவை சில கொடுமைகள் இருந்தபடி என் என்கிறது–நெடிய இருள் இறே என்றும் இருள் பொறுக்க மாட்டாள் என்றும் துக்கம் கனவிது என்றும் இரங்குகைக்கு ஹேது பஹுளமாய் இருக்க இவை கண்டு இரங்காமை தனித்தனியே கொடுமை என்றபடி –இத்தால்
ப்ராப்ய விஷயத்தில் போக்யதையை வ்யாஜமாகக் கொண்டு மோஹ அந்தகாரமாய் முழுக்க நடக்கும்படியான விளம்ப அஷமத் வத்தால் வந்த கால தைர்க்யம் விஞ்சின அளவிலும் இப்படி இருள் தரும் மா ஞாலத்திலே ஸ்வ துக்க நிவர்த்தனத்தில் அஸக்தரான இவர் அலாப நிபந்தனை துக்கத்தாலே ஈடுபடுவர் என்று கிருபை பண்ணு கிறிலர்தேவ்யா காருண்ய ரூபயா லஷ்ம்யா சஹா -ஸ்ரீ லஷ்மி தந்திரம் –28-14-என்று கிருபை தனக்கு வருகிற துக்கமும் போக்கக் கடவ அவர் இரங்காக் கொடுமைகள் இருந்தபடி என் என்று வெறுத்து உரைத்தார் ஆயிற்று –கிருபை என்னும் பெயர் கொண்ட சீதாப் பிராட்டிக்கு –காருண்யமே ரூபமாக வந்த பிராட்டி – அவன் கிருபையையையே தூண்டுமவள் அன்றோ )

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்
துழா இதுக்குத் தேடிப் பிடித்து நலிகைக்கு ஒரு ஸம்பந்தம் இல்லையீ -ப்ராணன்களோடே ஒரு ஸம்பந்தம் உண்டு இறே வாடைக்கு-நெடும் சூழ் இருள் என்று எல்லை காண ஒண்ணாத படி இருப்பதாய்ப் பரந்து வருகிற இருள் என்று ஒரு பேரையிட்டு தார்மிக வேஷத்தைக் கொண்டு நலிவாரைப் போலே-ராத்ரியினுடைய வேஷம் தார்மிக வேஷமோ என்னில் அதுக்கானால் ஒரு அவதி உண்டு இறே-வேறு ஒன்றினுடைய வடிவைக் கொண்டு நம்மை நலிகைக்கு நாம் செய்வது என் என்னில்-தன் தண் தாரது பெயரா வழி போவாரை யடைய நீ காண் குதிரை கொண்டு போந்தாய் -என்று
சகர புத்திரர்கள் நலியத் தொடங்கினால் போலே ஸ்வபாவமான படி என் -என்கிறாள்
இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –அபிமத விஷயத்துக்காக அவ்வரணை அழித்து உள்ளே புக்கு உபகரித்தவர் இப்போது பிறர் நோவு தமக்குப் போது போக்காகப் புத்தி பண்ணி இருந்தாராகாதே -என்று ஸ்ரீ எம்பார் அருளிச் செய்யும் படி-அங்கன் அன்றிக்கே வர பலத்தாலே ஒருவரால் அழிக்க ஒண்ணாத அரணை யுடைத்தான லங்கையை அழித்தது ஒருத்திக்காக என்று இருந்தோம்-அது அங்கன் அன்றிக்கே இங்கனே கட்டளைப்பட்டு தர்ச நீயமாய் இருக்கிறது என் என்னும் பொறாமையாலே அழித்தார் இத்தனை அப்படி நம்முடைய ஸ்த்ரீத்வத்தால் வந்த அரணை அழிக்கைக்காக வல்லது நம்மோடே ஸ்நேஹம் யுண்டாய் அல்ல -என்று ஸ்ரீ திருமலை நம்பி வார்த்தை

ஸ்வாபதேசம்
இத்தால் போக்ய யோக்கியமான காலமும் ஸம்ஸ்லேஷ சமயத்தில் அனுகூலமாமவை அப்போது அனுகூல ஆகாரத்தாலே இப்போது பிரதிகூலமாய் நலிய நலிவு பட்டு ஏதேனும் திசையிலும் குலையாத பகவத் பக்தியில் யுண்டான ரக்ஷகத்வ விஸ்ரம்பமும் குலைந்து ஆற்றாமை கரை புரண்ட படியைச் சொல்லுகிறது –

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி வியாக்யானம்
துழா நெடும் சூழ் இருள் என்று
துழாவிப் கொண்டும் முடிவும் இல்லாததாய்ச் சூழ்த்துக் கொண்டு வந்த இருள் என்று சொல்லப்படுமதாய்-தம் தண் தாரது பெயரா-தன் தோளில் இட்ட திருத்துழாய் மாலையை ஆசைப்பட்டதே வ்யாஜமாக்கி–எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும்-என்றும் இங்கனே எழுச்சியும் வளர்ச்சியும் இல்லாமலும் இன்று உள்ளதான கல்பமாய் இக்காலம் தோற்றின வளவிலும்–ஈங்கு இவள்
இங்கனே தனிமை பொறாமல் அத்யா பன்னை யானவள்-–ஐயோ–வழா நெடும் துன்பத்தள் என்று
வழுவாத பெரிய துக்கத்தை யுடையவன் என்று-இரங்கார்-இரக்கத்தைப் பண்ணுகிறிலர்-அம்மனோ-புலியைக் கண்டு அஞ்சினால் போல் இது இந்தக் கொடுமை யுண்டோ இன்று என்கிறாள்–இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே-இலங்கையில் திரண்ட நெடிய மாடங்களை இடித்து உபகரித்தாருடைய கொடுமைகள் இருந்தபடி என்-ஏக தாரா வ்ரதர் படி இங்கனே யாகாதே என்பதான வெறுப்பு இதில் –

ஸ்வாபதேசம் –
துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா-எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் கால விளம்பம் சஹியாத மோஹ அந்தகாரம் உண்டு பண்ணும் காலம் நீடிக்க-ஈங்கு இவளோ-வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார்--இருள் தரும் மா ஞாலத்தில் சக்தி அற்ற ஆழ்வார் தம் போக்யத்தையே
கூறிக் கொண்டே அது பெறாமல் துடிக்க இரக்கமும் காட்ட வில்லையே-திருவவதரித்து அநிஷ்டங்களை போக்கி இஷ்டங்களை அருளும் நீர் இவர் பக்கல் இரங்காது இருப்பது என்னே

தாத்பர்யம்
பகவத் அனுபவ யோக்கியமான தசா விபாகம் பிறந்த அளவிலும் அவன் வந்து உதவாமல் இருப்பதால்
ஆழ்வாருடைய தளர்த்தியைக் கண்டு சர்வேஸ்வரனை நிர்த் தயையானவன் என்று பாகவதர் பாசுரத்தை நாயகனை வெறுக்கும் திருத்தாயார் பாசுரமாக அருளிச் செய்கிறார்
தாம் ஆசைப்பட்ட சர்வேஸ்வரன் அணிந்து திருத்துழாய் பெறாமல் மேலே இரவும் வந்து ஒன்றையும் பார்க்கவும் விடாமல் நாலு பக்கம் சூழ்ந்து கல்பம் போல் நலிய ஆற்றாமை மிக்கு இருந்த ஆழ்வாரை
முன்பு ஒரு பிராட்டிக்காக உதவினவன் இந்த தசையிலும் இவளுக்கு உதவாமல் நிர்த்தயன் ஆனான் இனி நாம் செய்வோம் என்கிறார்கள்

2-4-ஆடியாடி -பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் –பருகிக் களித்தேனே -என்று ஹ்ருஷ்டராய் –
அது தன்னை பாகவதர்களோடே உசாவி தரிக்க வேணும் என்று பாரித்து
அதுக்கு இவ்விபூதியில் ஆள் இல்லாமையாலே
நித்ய விபூதியிலே நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணி அனுபவிக்கக் கோலி-
நினைத்த போதே அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே மிகவும் அவசன்னராய்
தம்முடைய தசையை ஸ்வகீயரான
ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானுக்கு அறிவிக்கிறபடியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –

தாயாராகிறவள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று ஸ்வாபதேசம்
ஆச்சார்ய ஹ்ருதயத்தில்
மாதா அஞ்சி முறைப்பட்டு முறையிடுகிற ஏழில் அத்யாவசாயமும் -என்று திருத்தாயார்
பாசுரமாகச் சொன்ன இடங்கள் எல்லாம் உபாய அத்யவசாய தசையிலே நின்று
சொன்னவைகள் என்றே நாயனாரும் நிர்வஹித்தது
இவரும் கடல் ஞாலத்திலே இப்படி அருளிச் செய்தாராகையாலும் அதுவும் ஒரு நிர்வாஹம் கிடக்கச் செய்தே
ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானுக்கு அறிவிக்கிற படி என்று இங்கனே இப்படி
அருளிச் செய்கையாலே இந்த ஸ்வாபதேசமும் யோஜனாந்தர அபிப்ராயம் – )

முன் அஞ்சிறைய மட நாரையில்-தூது விட ஷமரானார்
வாயும் திரையுகளில் கண்ணால் கண்ட பதார்த்தங்கள் அடைய பகவத் அலாபத்தாலே நோவு படுகிறவாகக் கொண்டு
அவற்றுக்குமாக நோவு பட ஷமரானார்
அவ்வளவு அன்றிக்கே –
ஆற்றாமை கரை புரண்டு –தாமான தன்மை இழந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய்
அது தன்னிலும் தன் தசை தான் வாய் விட்டுப் பேச மாட்டாதே பார்ச்வஸ்தர் அறிவிக்க வேண்டும்படியாய்-
ஸ்திதி கமன சயநாதிகளிலே ஒரு நியதி இன்றியிலே அரதியாய் –
விச்லேஷத்தில் துக்கத்தில் நோவு பட –இப்பெண் பிள்ளை தசையை அனுசந்தித்த தாயார்

ராம கிருஷ்ண்யாத் யவதாரங்களைப் பண்ணி –
(அரக்கன் இலங்கை செற்றீருக்கே -3-பாசுரம்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் -2-பாசுரம்
ஆதி ஸப்தத்தால் -நரஸிம்ஹ ஷீராப்தி நாதாதி அவதாரங்கள் )
ஆர்த்தரானார் ஆர்த்தி எல்லாம் பரிஹரிக்கக் கடவ ஸ்வபாவரான நீர்
(கிளர் வாழ்வை வேவ-10-பாசுரம் )
உம்மை ஆசைப்பட்ட இவள் நோவு படப் பார்த்து இருப்பதே -என்று
எல்லா அளவிலும் அவனையிட்டு பரிஹரித்து கொள்ளும் குடி யாகையாலே
அவன் திருவடிகளிலே பொகட்டு-இவளிடை யாட்டத்தில் நீர் செய்ய இருக்கிறது என் என்று
கேட்கிற பாசுரத்தாலே தம்முடைய தசையை அருளிச் செய்கிறார்

(எல்லா அளவிலும் என்றது
ஆடியாடி -வாடி வாடும் -1-
உம்மைக்காணும் ஆசையில் நைகின்றாள் –2-
எரி யணை யரக்கும் மெழுகும் ஒக்கும் இவள் -3 –
உள்ளம் மலங்க வெவ்வுர்க்கும் கலங்கிக் கை தொழும் -4-
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் –5–
இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே -10-
போன்ற தஸா விசேஷங்களுக்கு பரிஹாரம் நுமது இட்டம் என் கொல் -9-என்பதைப்பற்ற )

(நீர் செய்ய நினைத்து இருக்கிறது என் என்று கேட்கிற
இரக்கம் எழீர் –3-
உம்மைக்காணும் ஆசை –2-
தண்ணம் துழாய் கொடீர் –5-
உம்மைக்காண -2- என்பதை பற்ற )

காசை இழந்தவனுக்கும் -பொன்னை இழந்தவனுக்கும் -ரத்னத்தை இழந்தவனுக்கும் ஒத்து இராது இறே கிலேசம் –
காசு -விபவம் —காசினை மணியைச் சென்று நாடி -பெரிய திருமொழி –7-10-4-
தங்கம் -அர்ச்சாவதாரம் –செம்பொனே திகழும் -நம்பியை -1-10-7-
இரத்தினம் – அடியவர்கள் குழாம் —செழு மா மணிகள் சேரும் -5-8-9-
1-அவதாரத்திலே பெரு நிலம் நல்லடிப்போதை -1-3-10-அனுபவிக்க ஆசைப்பட்டு கிடையாமையாலே
வந்த ஆற்றாமை –அஞ்சிறைய மடநாரையிலே-
2-நம்பியத் தென் குறுங்குடி நின்ற –1-10-9-என்று அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப்பட்டு
கிடையாமையாலே வந்த ஆற்றாமை –வாயும் திரைகளில்-2-1-
3-இதில் -2-4–அவன் தனக்கும் பிராண பூதரான-அறிவார் உயிரான – நித்ய ஸூரிகளை -அனுபவிக்க
ஆசைப்பட்டு கிடையாமையாலே வந்த ஆற்றாமையாலே-அவற்றிலும் அதுக்கு ஆற்றாமை விஞ்சி இருக்கும் –
அறிவார் ஆத்மாவில் அவன் மதம் தோற்றும் -ஞானி து ஆத்மைவ மே மதம்

நந்தன் தோல் காசு வழங்கினால் போலே -பிரசித்தம் –அத்யல்ப காலீயத்வம் -காசு –காசானாம் கால பேதாநாம்-சாமான்யம் –
அந்ய கால உபாதேய யோக்யதை அர்ஹம் இல்லையே -திருவிக்கிரம அவதாரம் -காலாந்தரம்
சர்வ கால அனுபவத்யம் -ஸ்வர்ண ஸ்தானம் – திருக்குறுங்குடி நம்பி அச் செம்பொன்னே திகழும்
செழு மா மணிகள்- ஸ்ரீ வைஷ்ணவர்கள் ரத்னங்கள் -திரு மழிசை ஆழ்வார் போல்வார் -சக்ராம்சம் -நித்ய சூரி தானே

நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே நோவு படுகிறதாகில்-
பின்னை அவர்களைச் சொல்லிக் கூப்பிடாதே
அவனைச் சொல்லிக் கூப்பிடுவான் என் என்னில் –
எங்கேனும் ஒரு காட்டில் ரத்னங்கள் பறி யுண்டாலும் நாட்டில் ராஜாவின் வாசலில்
அவன் பேர் சொல்லி இறே கூப்பிடுவது –
அவர்களோட்டை சம்ச்லேஷத்துக்கும் கடவன் அவனாகையாலே அவனைச் சொல்லிக் கூப்பிடுகிறது
பகவத் விச்லேஷத்தில் உட்புக நின்றால் இறே பாகவத விச்லேஷம் தான் தெரிவது

பாகவத விஸ்லேஷ அதிசயம் -தெரிவது பெற்ற பகவத் சம்ச்லேஷம் –பூமா -வேறு ஒன்றும் கண்ணில் காட்டாதே –
மற்று ஒன்றை காணா நிலை அன்றோ –
அது இழந்து பிரார்த்திக்கும் பொழுது தானே கண்ணில் படும் –
பகவத் சம்ச்லேஷம் இருக்கும் வரை பாகவத விச்லேஷத்தில் நெஞ்சு போகாதே –
பாகவத விச்லேஷத்தில் உள்ளே நின்றால் பகவத் விச்லேஷம் தெரிய வரும் –
அவர்கள் இருந்தால் தான் புருஷகாரம் பெறுவோம் –

(உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ
வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும்
தண்ணம் துழாய் கொடீர்
சுவர் வட்டவாய் நுதி நேமியீர்
அந்தாமத்து அன்பு செய்து
இவர் பாகவத விஸ்லேஷத்தில் உட்ப்புக நின்றவர் ஆகையாலே
அது இவருக்குப் பகவத் விஸ்லேஷ பர்யந்தமாய் அவன் தன்னையே அடிபிடித்துக் கூப்பிடுகிறார் என்றபடி )

கதான்வஹம் சமேஷ்யாமி பரதேன மஹாத்மநா சத்ருநேன ச வீரேண த்வயா ச ரகு நந்தன –
ஸ்ரீ பரத ஆழ்வானோடும் -ஸ்ரீ சத்ருகன ஆழ்வானோடும் கூடப் பெறாத கிழிக் குறையாலே-மனக்குறையாலே –
கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய் தோற்றிற்று இல்லை இறே பெருமாளுக்கு
பணப்பை -கிழி-

குஹேன சஹிதோ ராம லஷ்மணேந ச சீதயா -கூடப் போன இளைய பெருமாளோடும் பிராட்டியோடும் கூடிற்றாய் தோற்றிற்று
ஸ்ரீ குஹப் பெருமாள் உடன் கூடின பின்பு இறே

இப்படி இறே அவன் தனக்கும் அந்வய வ்யதிரேகங்கள் இருக்கும் படி
ததீய சம்ச்லேஷத்தை ஆசைப்பட்டு பெறாமையாலே வந்த இழவு-
பெற்ற பகவத் சம்ச்லேஷம் இழந்து அடியே பிடித்து பிரார்த்திக்க வேண்டும்படியாய் வந்து விழுந்தது
வாயும் திரையுகளில் ஆர்த்தி தீர வந்து சம்ச்லேஷித்த சம்ச்லேஷம் முற்றுவதற்கு முன்னே
வந்த பிரிவாகையாலும் ஆற்ற ஒண்ணாது இறே –

நாலாம் திருவாய் மொழியில் -இப்படி தாம் ஆசைப்பட்ட படியை அனுபவிக்கப் பெறாமையால் அவசன்னராய் –
தமக்குப் பிறந்த ஆர்த்தி அதிசயத்தை சமிப்பிக்கைக்கு -சர்வ ரக்ஷகனாய் போக்ய பூதனான அவனை ஒழிய இல்லை -என்று அறுதியிட்டு —
1-அவன் ஆஸ்ரிதனான ப்ரஹ்லாதனுக்கு உதவினைப்படியையும்—2-அநிருத்னனுக்கு உதவினபடியையும்–
-3-அபிமதையான பிராட்டிக்கு உதவினபடியையும்–4 – -நாட்டுக்கு உதவின படியையும் –5 –ஸூத்த பாவத்தையும் –6-நிரதிசய போக்யதையும்-
7- ரக்ஷண அர்த்தமான ஆசத்தியையும் –8-ஆஸன்ன ஜனங்களுக்கு அனுபவ விரோதிகளை போக்கினை படியையும்-
9- ரக்ஷண உபகரணவத்தையும் —-10-விரோதி மிகுந்தால் வெந்து விழப் பண்ணும் வீரப் பாட்டையும் –
அனுசந்தித்து -தம்முடைய ஆர்த்தியைப் பரிவர் முகத்தால் அவனுக்கு அறிவித்த படியை –
பிரிந்த தலைமகள் ஆற்றாமைக்கு நல் தாய் இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

முதற்பாட்டில், ‘அடியார்களுடைய ஆபத்தே செப்பேடாக உதவும் தன்மையினை உடையவன், இவளுடைய ஆபத்துக்கு வந்து உதவுகின்றிலன்,’ என்றாள்;
இரண்டாம் பாட்டில், ‘‘விரோதி உண்டே’ என்பது இறைவனுக்கு நினைவாக, ‘வாணனுடைய பாஹு தோள் வனத்திலும் வலிதோ இவளுடைய விரோதி?’ என்றாள்;
மூன்றாம் பாட்டில், ‘இப்படிச் செய்ய நினைத்த நீர், முன்பு அச் செயலை எதற்காகச் செய்தீர்?’ என்றாள்;
நான்காம் பாட்டில், ‘அது பொறுக்க மாட்டாமல் அது தன்னையே உபகாரமாகச் சொல்லா நின்றாள்,’ என்றாள்;
ஐந்தாம் பாட்டில், ‘அவ்வளவிலும் வாராமையாலே, -நிர்த்தயன் -அருள் இல்லாதவன்’ என்றாள் திருத்தாய்;
ஆறாம் பாட்டில், அது பொறுக்கமாட்டாமல், ‘கெடுவாய்! ஆகரத்தில் தகவு மறுக்குமோ? அது நம் குறைகாண் என்கிறாள்,’ என்றாள்;
ஏழாம் பாட்டில், ‘அவன் குணம் ஹானியை -இன்மை தன்னையே குணமாகக் கொள்ளும்படி இவளை வஞ்சித்தான்,’ என்றாள்;
எட்டாம் பாட்டில், ‘உம்மைத் தஞ்சமாகப் பற்றின-அபாஸ்ரயமாகப் பற்றின – இவள் படும் பாடே இது?’ என்றாள்;
ஒன்பதாம் பாட்டில், ‘இவள் பேற்றில் நீர் செய்தருள நினைத்திருக்கிறது என்?’ என்றாள்;
பத்தாம் பாட்டில்,சேஷித்தது -‘எஞ்சி நிற்பது நோக்கு ஒன்றுமேயாயிற்று; இஃது ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர்,’ என்றாள்;
நிகமத்தில் , இத் திருவாய் மொழியைக் கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே 
–2-4-1-

ஆடியாடி –ஸ்திதி கமன சய நாதிகளில் ஒரு நியதி இன்றிக்கே அரதியாலே படுகிற பாடு தான் திருத் தாயாருக்கு ஆகர்ஷகமாய் இரா நின்றதாயிற்று-ஹர்ஷ கார்யமான ந்ருத்தம் -துக்க தசையில் -நம் பெண்ணுக்கு அன்றோ இத்தசை என்று ஆகர்ஷமாக இருக்குமே –முதல் ஆடி -என்கிறதில் காட்டில் இருகால் மட்டு ஆடி என்றதில் அவசாதத்தின் மிகுதி –
தாளம் கொண்டு அறியும் அத்தனை -வெங்கலத் தொனி போலே —கண்ணீர் மல்கி
உருகின மனஸ் தத்வம் -இசையாய் ப்ரவஹித்து – மிக்கது கண்ணீராய் பிரவஹிக்கிற படி -நெஞ்சு ஒழியப் பாய்கிற கண்ண நீர் இறே-

கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரிஸ்ரவதி சோகஜம் -சுந்தர -33-4-
ஆனந்த ஸ்ருவுக்கு யோக்யமான கண்களாலே சோகஸ்ரு பிரவஹிக்கிறது–
ஆர் குடி வேர் அற –என்று பட்டர் அருளிச் செய்யும் படி-இராவணனுடைய குலம் என்றவாறு
அன்றிக்கே –பிள்ளான் -ஆரைச் சேதனராகக் கொண்டு -என்று பணிக்கும் –
இந்த எழிலை அனுபவிக்க பெருமாள் இல்லாத போது இத்தால் என்ன பயன் -என்றவாறே –
பாவியேன் இந்த வரவை பரம சேதனன் அன்றோ பார்க்க வேணும் –
கண்ணீர் மல்கி –அதி ஆகர்ஷகமாக இருக்கிறதே பிராப்த சேஷி அன்றோ பார்க்க வேண்டும்-இவ்வரவு உடையவனான-இந்த கண்ணநீர் இவள் ஸ்வாமியான அவன் – பெருமாள் பார்க்காமல் யாரோ பார்ப்பதா–இத்தையே விவரிக்கும் ஸ்லோகம் —புண்டரீக பலாசாப்யாம் விபர கீர்ண மிவோதகம் –-பாவியேன் இவ்வரவு உடைய பெருமாள் வரவாய்க் காணப் பெற்றது இல்லை – என்றார் இறே திருவடியும்

பத்துடை அடியவர்க்கு பின்பு அவதாரத்துக்கு அவ்வருகு இவர் போக மாட்டார் –-பரத்வத்தை விட்டு அவதாரத்திலே இழிகிறார் –-கஜேந்திர ஆழ்வானுக்கு உதவியவனைத் தேடாமல் நரசிம்ஹனை தேடுகிறாள்-எங்கும் நாடி நாடி – தன் கொய்சகம் உட்பட பாரா நின்றாள் என்று பட்டர் அருளிச் செய்யும் படி -அதுக்குக் கருத்து – கண்ணன் என் ஒக்கலையானே-என்று அவன் இருந்த பிரதேசம் ஆகையாலே

நரசிங்கா வென்று
பிரகலாதனைப் போலே ஒரு தம்பம்-ஆலம்பனம் -(பற்றுக் கொம்பு /ஸ்தம்பம் )- இல்லாதபடி இருக்கையாலே வாடும்
1-மத்தஸ் சர்வமஹம் சத்யம் -என்னும் தெளிவு உடையவனுக்கு தோற்றினவன்-கலங்கின அபலைக்குத் தோற்றானோ என்னுமத்தாலே
2-தமப்பன் பகையானாலோ உதவலாவது -நீர் பகையானாலும் உதவலாகாதோ
3-ஜ்ஞான நிஷ்டர்க்கோ உதவலாவது -பக்தி நிஷ்டர்க்கு உதவலாகாதோ
4-ஆண்களுக்கோ உதவலாவது பெண்களுக்கு உதவலாகாதோ
5-சேராத வடிவு சேர்த்து உதவிலோ உதவலாவது இருந்தபடி உதவலாவார்க்கு உதவலாகாதோ
6-ஒரு அதிகாரி நியதி கால நியதி ஒரு அங்க நியதி என்கிற நிர்பந்தம் வேணுமோ இவளுக்கு
7-இவளுடைய ரஷணத்துக்கும் ஏதேனும் முகம் பண்ண வேணுமோ

வாடிவாடும்-கொம்பை இழந்த தளிர் போலே வாடும்-முதல் வாட்டம் தளிர் என்னும் படி இறே அனந்தரத்தில் வாட்டம்

இவ்வாணுதலே-ஒளியுடன் கூடிய நுதலை உடைய இவள் -இவ் வழகுக்கு இலக்கானார் படுமத்தை இவள் படுவதே-இவள் முடிந்தால் உம்முடைய மேன்மையாலே இன்னம் இப்படி ஒரு வ்யக்தியை உண்டாக்கலாம் என்று இருக்கிறீரோ-தாதா யதா பூர்வம் கல்பயத் -என்கிறபடி சிருஷ்டிக்கலாம் என்று இருக்கிறீரோ
ஊனில் வாழ் உயிரிலே கல்வியால் உண்டான புகர் இன்னமும் அழிந்தது இல்லை காணும்
அம்பு பட்டு முடிந்தாரையும் நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே தெரியும் இறே
குணாதிக விஷய விரஹத்தாலே வந்த இழவு என்னும் இடம் முகத்தின் எழிலிலே தெரியாது நின்றது காணும்

—————-

வாணுதல் இம்மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கமிலீரே
–2-4-2-

வாணனுடைய -பாஹு வனத்திலும் -தோள்கள் ஆயிரத்திலும், இவள் விரோதி பிரபலமோ?’ என்கிறாள்.பேரனுமாய் ஆணுமாகிலோ உதவலாவது?-உம்மோடு கலந்த அபலைக்கு உதவல் ஆகாதோ?’

ஐனக மஹாராஜன் பிராட்டியினுடைய பேரழிகினை நினைந்து, இயம் சீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீதவ ப்ரதீச்ச சைனாம் பத்ரந்தே பாணிம் க்ரஹ்ணீஷ்வ பாணிநா – ‘இச்சீதை’ என்று சுட்டிக் கூறியது போன்று,-பெற்ற தாயாகிய இவளும் பெண்ணின் பேரழகினை நினைந்து ‘இம்மடவரல்’ என்கிறாள்.-‘பெற்ற எனக்கு ஆகர்ஷகத்திற்குக் காரணமான இது, கைப்பிடித்த உமக்கு உபேஷைக்குக் காரணம் ஆவதே!’ என்பாள், ‘நீர் இரக்கம் இலீர்’என்கிறாள்.

உம்மை நீர் அறியாமை இல்லையே;-நம்மைப் பிரிந்தார்கள் பிழையார்கள்’ என்று இருக்க வேண்டாவோ?’

இவள் நைவு பேற்றுக்கு உபாயமன்று; அவன் இரக்கம் பேற்றுக்குச் சாதனம்,’ என்று காணும் திருத்தாயார் இருக்கிறது.
‘ஆயின், இவள் நைவிற்குப் பலன் தான் யாதோ?’ எனின்,
‘இவள் நைவு அவன் இரக்கத்துக்ப் பரிகரம்,-அவன் இரக்கம் பேற்றுக்குச் சாதனம்;-தானே காட்டக் காணும் இத்தனையே.

——————

இரக்க மனத்தோடு எரியணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே
 –2-4-3–

இன்று இச்செயல் செய்யக்கடவதாக நினைத்த நீர், அன்று,-‘உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடு அறுத்த’ லாகிய அச்செயலை எதற்காகச் செய்தீர்?’ என்கிறாள்-அரக்கன் இலங்கை செற்றீருக்கு –-‘ஒரு காதலிக்கு உதவினவன் நமக்கு உதவானோ?’ என்று ஈடுபடாநின்றான்.

எரி அணை அரக்கும் மெழுகும் ஒக்கும் – எரியை அணைந்த அரக்கும் மெழுகும் போலே உருகா நின்றாள்.
அரக்கும் மெழுகும் என்னும் இவற்றை நெஞ்சுக்கு ஒன்றும், இவள்தனக்கு ஒன்றுமாகக் கொண்டு பொருள் கூறுவர் பிள்ளை திருநறையூர் அரையர்.
நெஞ்சும் இவள் தனக்குக் கையடைப்பு ஆகையாலே இவள் தனக்கே இரண்டையும் அடை ஆக்கி அருளிச் செய்வர் பட்டர்.

உம்மை இரங்கும்படி செய்யவோ?-அன்றி, இவளை இரங்காமற் செய்யவோ? யாது செய்வேன்?’

———

இலங்கை செற்றவனே யென்னும் பின்னும்
வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்றிவளே
 –2-4-4-

இலங்கை செற்றவனே என்னும் – எனக்குப் பண்டே உதவி உபகரித்தவனே!’ என்னா நின்றான்.-முன்பு தனக்கு உதவினவன் இப்பொழுது தனக்கு உதவாது ஒழித்தாற்போலே கூப்பிடுகிறாள்.-கலங்கிக் கைதொழும் – தெளிந்திருந்து தொழுமது இல்லை அன்றே பிரணயிநி- தன்னுடைய நோவு வாயால் சொல்ல மாட்டாமையாலே தன் கருத்தை
கை தொழுகையாலே ஆவிஷ்கரியா நின்றாள் –-இவளே – அவன் தொழும்படியான வேண்டற்பாடுடைய தான் தொழா நின்றாள்.

———-

இவள் இராப்பகல் வாய் வெரீஇத்தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என
தவள வண்ணர் தகவுகளே
 –2-4-5-

‘வாய் வெருவுவான் அவனாக இருக்க, இவள் வாய் வெருவுகின்றாளே!’ என்கிறாள்.இவள் இராப்பகல் வாய் வெரீஇ’ என்றதனால் ‘பொய்ந்நின்ற ஞானம்’ தொடங்கி இத்திருப்பாசுரம் முடிய இவர் பாடிக்கொண்டு வந்தன எல்லாம் வாய் வெருவின இத்தனையே என்பதும், அவதானம் பண்ணி அருளிச் செய்கின்றார் அல்லர் என்பதும் போதரும்.
வாய் வெரீ இ-வாய் வெருவி – ‘அவதானம் பண்ணாமல் அருளிச்செய்தல் கூடுமோ?’ எனின்,
வாசனையே உபாத்தியாயராகச் சொல்லிக் கொண்டுவரச் சொல்லுகிறார் இத்தனை.இக்கண்ணுக்கு இலக்கானார் கண்ணிலே காணக்கூடிய கண்ணீரைத் தன் கண்ணிலே கொண்டாள்’ என்பாள், ‘தன் கண் நீர் கொண்டாள்’ என்றும் கூறுகின்றாள்.

தவள வண்ணர் தகவுகளே-தகவுகளே -தயநீய விஷயங்கள் பல வாகையாலே தயையும் பலவாய் இருக்கை – ‘சுத்த ஸ்வபாவரான உம்முடைய தகவுகள் எங்கே போயின?’ என்று எம்பார் அருளிச் செய்வர்.-‘உம்மைப் போலே நாலு சிஷ்டர்கள் அமையும் அபலைகள் குடிகெட’ என்று பட்டர் அருளிச் செய்வர்.

———–

தகவுடையவனே யென்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் என
தகவுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே
–2-4-6-

தகவுடையவனே என்னும் – கெடுவாய் ! ‘ஆகரத்தில் தகவு மறுக்குமோ? நம் குற்றங்காண்,’ என்கிறாள்-முன்பு பண்ணின உபகாரத்தை நினைத்து சொல்லுகிறாள்-என்னுடைய பிரத்யாகாத்மாவுக்கு நிரதிசய போக்யன் ஆனவனே -என்னும் -போக தசையில் சொல்லுமவை எல்லாம் சொல்லா நின்றாள்-.-உள்ளம் உக உருகி நின்று –அமூர்த்தமான -வடிவம் இல்லாத மனமானது-மூர்த்தீ பவித்து – வடிவினை அடைந்து உருகி நீர்ப்பண்டமாய் மங்கிப் போகா நின்றது.

———–

உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே
 –2-4-7-

தன் நெஞ்சில் ஓடுகின்றவற்றைப் பிறர் அறியாதபடி அடக்கும் இயல்புடைய இவள்,உடல் உலர்ந்த பின்பு அன்றோ ஆவி உலர்தல் வேண்டும்?’ எனின், பாவபந்தம் அடியாக வருகிற நோயாகையாலே அகவாயே பிடித்து வெந்துகொண்டு வருமாயிற்று.-என் வள்ளலே கண்ணனே என்னும் – விடாயர் கற்பூரத்திரள் வாயில் இடுமாறு போன்று, இவ்வளவான ஆர்த்திகளிலே – துன்பத்திற்கு இடையில் வந்து உன்னை எனக்குக் கையாளாகத் தருமவனே என்னாநின்றாள்.-வெள்ளம் நீர்க் கிடந்தாய் என்னும் தாபார்த்தோ ஜல சாயிநம் –‘என்விடாய்க்கு உதவத் திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்தருளிற்றே’ என்னும்.-இக்கிடை, இவளுக்கு ஒரு படுக்கையிலே சாய்ந்தாற்போலே இருக்கிறது காணும்.–தான் பட்ட -தான், வேறுபாடு இல்லாதவனாய் இருக்க, இவள் வேறுபடுவதே!-அத்தலை இத்தலையாய் -அவன் அவிக்ருதனாய்-இவளை தோற்பிக்கும் படி யாவதே-வஞ்சனையே –-பெரும்படை உடையாரை அளவு படை உடையார் வெல்லுவது வஞ்சனையால் இறே
நேர் கொடு நேரே ஜெயம் அன்று என்கிறாள் –

—————–

வஞ்சனே என்னும் கை தொழும் தன்
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே
 –2-4-8-

உம்மை அனுபவித்துச் ஸூகித்திருக்க வைத்தீர் அல்லீர்;-கம்ஸனைப் போலே முடித்துவிட்டீர் அல்லீர்;-உம்மை ‘ரக்ஷகர்’ என்ற இருந்த இவள் படும் பாடே இது,’ என்கிறாள்.உம்மைத் தோற்பிக்க நினைத்தாரை நீர் தோற்பிக்குமவராய் இருந்தீர்.-ஆஸ்ரித அடைந்தவர்கள்-நாஸ்ரித – பகைவர்கள் என்னும்-விபாகம் அற – வேற்றுமை இன்றி உமக்கு இரண்டு இடத்திலும் காரியம் ஒன்றேயோ?’ என்கிறாள்.

வஞ்சனே என்னும் –தாயார், ‘வஞ்சித்தான்’ என்னப் பொறுத்திலள்;
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து ஊன் ஒட்டி நின்று என் உயிரிற்கலந்து’,
‘நான் அல்லேன் என்றாலும் தவிர ஒண்ணாதபடி என்னையும் அறியாதே வஞ்சித்து,
உன் திருவடிகளிலே சேர்த்த உபகாரகனே!’ என்கிறாள்.

இவள் பட்டனவே –
‘சம்சாரிகளைப் போன்று உண்டு உடுத்துத் திரிய வைத்தீர் அல்லீர்;
நித்திய ஸூரிகளைப் போன்று அனுபவிக்க உம்மைக் கொடுத்தீர் அல்லீர்;
தத் தஸ்ய சத்ருசம் பவேத் ‘இலங்கையை அழித்து என்னை அழைத்துக்கொண்டு போவராகில் போகும் அச் செயல் அவர்க்குத் தக்கதாம்’ என்னும் எங்களைப்போன்று இருக்கப் பெற்றிலள்;
கம்ஸனைப் போன்று முடித்தீர் அல்லீர்;
என் வழி வாராதே உம்மைத் தஞ்சமாகப் பற்றின இவளை எத்தனை படுத்த வேண்டும்?
இனி, நீர் படுத்துவமவற்றைச் சொல்லில், ஒரு மஹாபாரதத்துக்குப் போரும் போலே’ என்கிறாள் –

————

பட்டபோது எழுபோது அறியாள் விரை
மட்டலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நும்
திட்டமென் கொல் இவ்வேழைக்கே–
2-4-9-

இவள் பட்டது தான் ஏது-என்ன அத்தை சொல்லுகிறாள் –உம்முடைய கையும் திரு வாழியும் காண ஆசைப் பட்டு உதித்ததும் அஸ்தமித்ததும் அறியாதே சபலையுமாய் இப்படி நோவு படுகிற இவள் திறத்து செய்ய நினைத்தது என்-‘படுவன எல்லாம் பட்டாள் ஆகில் இனி, என் படுவாள் என்கிறாள்.

விரை மட்டு அலர் தண் துழாய் என்னும்
-‘இது ஒரு பரிமளமே; இது ஒரு தேனே; இது ஒரு பூவே; இது ஒரு குளிர்ததியே’ என்று,
திருத்துழாய் விஷயமாக ஒரு கோடியைச் சொல்லும்.
ஆக, ‘உம்முடைய பேரும் தாரும் ஒழிய அறியாள்’ என்கிறாள். என்றவாறே,
நம்மை ஆசைப்பட்டு இப்படிப் படப்பெற்றோமே!’ என்று அலப்ய லாபத்தால் கையில் திரு ஆழியை விதிர்த்தான்

சுடர் வட்டம் வாய் நுதி நேமியீர்’ என்கிறாள்.
அதாவது, ‘சுடரையும் வட்டமான வாயையும் கூர்மையையுமுடைய திரு வாழியைக் கையிலே உடையீர்’ என்பதாம்
இப்போது, பெண் பிள்ளையைக் காட்டிலும் திருத்தாய் கையும் திருவாழியுமான அழகுக்கு ஈடுபட்டு விசேஷணங்கள் இட்டு அனுபவிக்கிறாள் -‘சுடர் வட்டம் வாய் நுதி’ என்று.
ஆக, ‘அடைந்தவர் பகைவர் என்னும் வேற்றுமை இன்றி அழிக்கைக்குப் பரிகரம் உமக்கு ஒன்றேயோ?’ என்கிறாள் என்றபடி.
‘ஆழிப்படை அந்தணனை, மறவியை இன்றி மனத்து வைப்பாரே’ என்பதன்றோ இவர் தம்முடைய வார்த்தையும்?
கையும் திருவாயுமான அழகைக் கண்டால் நெஞ்சு அழியுமவர்கள் இவர்கள்.

இவ்வேழைக்கே– அபலைகள் பலரும் உண்டு -என்று இ றே நீர் இருப்பது -இப்படி இருபத்தொரு வ்யக்தி புறம்பு இல்லை என்கிறாள்-அத்யந்தம் சபலையான இவள் திறத்தில் நீர் நினைத்து இருக்கிறது என் –

————–

ஏழை பேதை இராப்பகல் தன்
கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே
 –2-4-10-

இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே -இவள், நோக்கு ஒன்றும் ஒழிய, அல்லாதவை எல்லாம் இழந்தாள்;-இந்நோக்கு ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர்’ என்கிறாள்-தாமரையிலே முத்துப் பட்டாற் போன்று, இக்கண்ணும் கண்ணீருமாய் இருக்கிற இருப்பை, காட்டில் எறித்த நிலவு ஆக்குவதே!–இவ்விருப்புக்குக் கிருஷி பண்ணிப் பல வேளையிலே இழப்பதே!–பொன்னும் முத்தும் விளையும்படி அன்றோ கிருஷி பண்ணிற்று?’ என்று
இப்போது இவள் இழவுக்கு அன்றியே, அவன் இழவுக்காக இவள் கரைகின்றாள்‘
(ஒண்முத்தும் பைம்பொன்னும் ஏந்தி’ (திருவிருத். 11) என்றதனை உட்கொண்டு
ரசோக்தியாக அருளிச்செய்கிறார். பொன் –பசலை நிறம். முத்து – கண்ணீர்த்துளி-ஏழை – ‘கிடைக்காது’ என்று பிரமாணங்களால் பிரசித்தமாகக் கூறப்பட்டுள்ள பொருளில்,-கிடைக்கக்கூடிய பொருளில் செய்யும் விருப்பத்தினைச் செய்பவள்.-பேதை –
‘கிடைக்காது’ என்று அறிந்து மீளும் பருவம் அன்று; நான் ஹிதம் சொன்னாலும் கேளாத பருவம்.‘இராவணனைக்காட்டிலும் வலிதோ இவளுடைய விரோதிகளின் கூட்டம்?’இவள் தானே முடிந்து போகிறாள்?-நாங்கள் தாமே இழக்கிறோம்? ஜீவிக்க இருக்கிற நீர் வேண்டுமாகில், உம்முடைய ஜீவனத்தை நோக்கிக் கொள்ளப் பாரும், என்பாள்,
வாட்டேன்மின்’ என்று அவன் தொழிலாகக் கூறுகிறாள்.

இவள் நோக்குக் கிடீர் எல்லார்க்கும் உஜ்ஜீவன ஹேது என்று கருத்து –

——–

வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே 
–2-4-11-

நோக்கு ஒன்றும் வாட்டேன் மினே’ என்றவாறே, ‘புறப்பட்டோம்’ என்று நாணத்தோடே வந்து தோன்றினான்;-இவள் வாட, அவன் புகழாயிற்று வாடுவது.-இத் துன்ப நிலையிலே வந்து முகம் காட்டுகையாலே பூர்ணமான கல்யாண குணங்ளையுடையவன் ஆனான் என்கிறாள்.
தன் உடைமை பெறுகைக்கு இரப்பாளனாமவன் ஆகையாலே ‘வாமனன்’ என்கிறாள்.இவ் வாற்றாமையால் வந்த கிலேசம் இது கற்றவர்களுக்கு அனுபவிக்க வேண்டாமல்,
‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைப்பட்டபடியே
அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப்பெறுவர்.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading