ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -35-பால் வாய் பிறைப் பிள்ளை –வாயும் திரையுகளும் -2-1-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இப்பாசுரத்தில் மட்டும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவாய் மொழி விவரணம் காட்டி அருளுகிறார்
ஏக தேச உருவகம்-மேற்கு திசைப் பெண் புலம்பல்-பகலாகிற சூரியனை -ஆகுபெயர் -நிர்வாஹகன் -இழந்து-பிள்ளை -சந்திரன் அழுகிற பெண் மேற்குத் திக்கு பிள்ளையை ஓக்கலையில் கொண்டு புலம்புகிறாள்-பறவை ஒலியும் கடல் கோஷமும் புலம்பல்-மாலைக்காலம் உயிரை-சத்தையை – மட்டும் நலியாமல் போக வாடை அத்தையும் -ஸஜாதீயம் அன்றோ -துழாவி கவர முயலுகின்றதே
நானும் புலம்புகிறேன்-நீட்டும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –வாயும் திரையுகளும் -2-1-
வாயும் – எம்மை போல் கோட்பட்டாயே -அங்கு தலைமகள் இது தாய் பாசுரம்
காற்றும் கழியும் கட்டி அழ கொண்ட காதல் பத்திமைக்கு வரம்பு இல்லையே –

கீழ் வந்த வியசன தசைகள் எல்லாம் பிரகிருதி என்னும் படிக்கு ஈடாக மேல் வருகின்ற தசை இருக்கிற படியை கண்டு – இது என்னவாய் தலைக் கட்டக் கடவது–என்று திருத் தாயார் பயப் படுகிறாள்-இவளுக்கு முன்பு சம்ஸ்லேஷ தசையில் ,அனுபவித்ததை எல்லாம் பாதகமாய் தான் ஈடு பட்ட பின்பு-
தன் இழவைப் பாராதே –இத் தலைக்கு நலிவாயிரா நின்றது -என்று அவற்றையும் கொண்டு நோவு படுகிறாள்–வாயும் திரை யுகளில் பிராட்டியைப் போலே வழிப் பகையாய் இருக்கிறது
தன் மகள் துன்பத்தில் ஈடு பட்டு மேற்கு திசை பெண் தன் கணவன் பகல் போனதைக் கண்டு
வருந்துவதைக் கண்டு வருந்துகிறாள் –இத் தலை-மேற்கு திசைப் பெண்  –வழிப் பகை -காணும் இடம் எங்கும் பகையாக இருகிறதே  –

இப்படி அனுபவ த்வரையாலே ஆர்த்தரான இவருக்கு அனுபவ யோக்ய காலம் ஆர்த்தி அதிசய ஜனகமாய்க் கொண்டு ஸந்நிஹிதமான அளவிலே ஸ்மாரகமான லௌகிக பதார்த்தம் பாதகத்வேந ஸஞ்சரிக்கிற படியைக் கண்டு ஈடுபட்டு அனுசந்தித்த பிரகாரத்தை மாலைக்கு ஆற்றாமையின் மேலே
வாடைக்கு இரங்கின தலைமகள் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி அவதாரிகை-மாலையும் வந்தது மாயன் வாரான் -திருவாய் -9-9-9-என்று
மாலைக்கு ஆற்றாமைப்படும் மகளைப் பரிதபிக்கிற வாடையால் நலிவு படுகிற இவளைக் கண்ட
திருத்தாயார் பயப்படுகிறான்

பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த
மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு  நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே
 –35-மாலைக்கு ஆற்றாமையின் மேல் தலைவி வாடைக்கு இரங்குதல் –

வாயும் திரு மால் மறைய நிற்க ஆற்றாமை
போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் -ஆய
அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து —11–லௌகிக பதார்த்தங்களுக்கும் தம்மைப் போலே
பகவத் விரஹத்தாலே நோவு படுகிறனவாகக் கொண்டு அவற்றுக்குமாக தாம் நோவு பட்டு செல்லுகிற படியை அன்யாபதேசத்தாலே பேசிச் சொல்லுகிற-வாயும் திரை யுகளில் அர்த்தத்தை-வாயும் திருமாலால் -இத்யாதி யாலே அருளிச் செய்கிறார் –அநந்ய பிரயோஜனராய் அந்தரங்கமாக
ஆஸ்ரயிக்கும் அவர்களை த்ருடமாக கடாஷிப்பர் – தம்மைப் போலே அசேதனங்களைக் கட்டிக் கொண்டு அழாமல் பகவத் சம்ச்லேஷம் யுண்டாய் ஆநந்திக்கும் படி கடாஷித்து அருளுவர் –

பால் வாய் பிறை பிள்ளை இத்யாதி– பால சந்த்ரனை ஓர் அருகே கொண்டு -பகலை இழந்த மேலை திக்காகிற பெண்ணானவள்-சந்த்யா சமயத்திலே ,பிரபலியா நின்றாள் –புதிசாக பர்தாவை இழந்தாள் ஒரு ஸ்திரி தன்னுடைய ஸ்ததந்தய பிரஜையும் எடுத்து கொண்டு கூப்பிடுமா போல கூப்பிடா நின்றாள்-பால் வாய்-வாயில் முலையை வாங்கில் வாடும்-பகல் இழந்த —இழந்த பர்தாவின் கனத்தைச் (லோக உபகாரத்வத்தைத் ) சொல்கிறது-ஒரு மனு மாந்தாத்ரு ப்ரப்ருதிகளை இழந்தால் போலே தான் இழவுக்கும் போலியாகி தானும் உத்தேச்யம் பெற்றேன் என்னும் போது ,-பகல் கண்டேன் –என்று இறே சொல்வது-பகல் கண்டேன் நாரணனை கண்டேன் -ஸூரியனாக நாராயணனைக் கண்டேன் இரண்டாம் திரு அந்தாதி -81–மேல் பால் திசை பெண் —நாயகி உடைய கனம் சொல்கிறது –(மேலைத் திக்கு என்றாலே உத்க்ருஷ்டம் தானே )திக்குகளை விவேகிக்கும் பொழுது-மேல் திக்கை உத்க்ருஷ்டம் என்று சொல்லும்படியாலே —மேலை கடல் கோஷிகிறவற்றை-புலம்புகிறது என்கிறது-(திசா பெண்பால்-சந்திரா ஆண் பால் -பிள்ளை )

உலகு அளந்த இத்யாதி –-சர்வேஸ்வரன் பக்கல் உண்டான திரு துழாய் மாலையிலே பிரவணமான
மனசை உடைய இவளுக்கு-மாலை நல்கிற்று எல்லாம்-மாலை நல்குகை-சத்த்தையை வைக்கை —
சந்தான சாபம் வைத்த படி–மாலை சோல்வான் இத்யாதி–சிலரை ஹிம்சிக்கப் புக்கவர்களை ஹிம்சிக்கப் புகுவாரைப் போலே-சத்தையைத்  துளாவிக் கொண்டு வரா நின்றது–பனி வாடை-
நஞ்சூட்டின வாடை –பிராண அவஸ்தமாய் இருக்கையாலே –பிராணன் நின்ற நிலை எல்லாம் அறிந்து துழாவா நின்றது —நாங்கள் பிரக்ருதியை அழித்தோமோ ?-எங்கள் உடன் சஜாதீயமானத்தை கொண்டு போகிறோம் இத்தனை அன்றோ ?-என்று அழியா நின்றது-

இது வோர் பனி வாடை--வாடையின் கொடுமையை வாய் கொண்டு கூற முடியாமல் -இது -சுட்டிக் காட்டுகிறார்-ஓர் –-வேறு துணை இன்றி தானே அஸஹாய ஸூரனாய் நலியும் படி
பனி வாடை--முன்பு குளிர்ந்த நிலை இன்றோ வெவ்வியதாய் இருக்கும் –-ஸ்திரீகளை நடுங்கவைக்கும் வாடை என்றுமாம் –துழா கின்றதே--மர்ம ஸ்தானத்தில் கை வைத்து வாட்டும்
ஓர் வாடை –-நிலா மாலைப் பொழுது கடலோசை சேர்ந்து நெளிவதை தானே பண்ண வற்றாய் இருக்கை-பகல் இழந்த-மேல் பால் இசை பெண் புலம்புறு மாலை –-மாலைப் பொழுதும் தம்மைப் போலே வருந்தும் சந்திரன் ஆகிய பால் மாறாத வாயை யுடைய இளம் குழந்தையை இடுப்பில் வைத்து
கணவனை இழந்ததை சொல்லி கதறி அழுவது போலே அன்றோ மாலைப் பொழுது –உலகு அளந்த-மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்-சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே –மாலை இவளை முடிக்காமல் உயிரை விட்டுப் போக அத்தையும் கொண்டு போக வந்ததே இவ்வாடை–மனம் உடையார்க்கு –தம்மைப் போலே உள்ளார்க்கு–மனம் உடையார்க்கு என்று படர்க்கை-தோழி வார்த்தையாகவும் தாயார் வார்த்தையாகவுமாகக் கொண்டு ஆழ்வார் நிலையைக் கண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அஞ்சிச் சொல்லும் பாசுரம்-

பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை
பிறையாகிய பால்வாய்ப் பிள்ளையைப் பக்கத்திலே கொண்டு-பகலாகிற நிர்வாஹகனை இழந்த மேலை இடத்து யுண்டான திக்காகிற பெண் தாத் காலிக பக்ஷி கோஷ முகத்தாலே புலம்புதலை உற்றது
என்னலாம் படியான மாலைக் காலமானது–பால்வாய்ப் பிறைப்பிள்ளை என்று-தன்னிடத்து வாய்ந்த பிறைப் பிள்ளை என்றுமாம்–பிள்ளை ஓக்கலைக் கொண்டு என்று பிள்ளையாகிய சுற்றத்தைக் கொண்டு என்றும் சொல்வர்–ஓக்கலாவது –-சுற்றம்–பகல் என்று-ஆதித்யனைச் சொல்லிற்றாகவுமாம்–இத்தால் மாலைக் காலமானது நாயகனைப் பிரிந்த பெண் பிறந்தாரை வருத்தும் என்று தோற்றுவித்ததாயிற்று–உலகு அளந்த மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
தன்னதான லோகத்தை பராபிமான கிலேசம் புகுராமல் எல்லை நடந்து தன் கால் கீழே இட்டுக் காய்ந்த பெரியவனிடத்து சேஷித்வ ஸூசகமான திருத் துழாய்க்கு ஆசைப்பட்ட நெஞ்சை யுடையவருக்கு
மாலை யுபகரித்த சத்தா மாத்ரத்தை ஒன்றும் சோராத படி-சோல்வான் புகுந்து-கொள்ளுவதாகப் புகுந்து-இது வோர் பனி வாடை–முன்பு வந்த வாடைகள் போல் அன்றியே பெண் பிறந்தாரை நடுங்குவிக்கைக்கு அத்விதீயமாய் இருபத்தொரு வாடை –துழா கின்றதே–துழாகின்றது–சத்தை கிடந்த இடம் தேடித் தடவா நின்றது என்று இரங்கி உரைத்தாள் யாயிற்று –

இத்தால்–பால்வாய் -என்று தொடங்கி மாலை -என்று காலத்தைச் சொல்லுகையாலே-அனுபவ யோக்ய காலம் ஸந்நிஹிதமானால் தன் பக்கல் தோற்றின ஞான ஏக தேசமே அவசேஷிக்கும் படி மஹா ப்ரகாசகமான விவேகமும் குலைந்து மேலான திக்காய் இருக்கிற பாரதந்தர்யம் யுடையாருக்கும் ஆர்த்தி அதிசயிக்கும் என்னும் இடம் தோற்றுகிறது-(பிள்ளை கையில் -கொஞ்சம் ஞானம் இவளுக்கு மிச்சம்-மேலைத்திக்கு -பாரதந்தர்யம் அறிந்த விவேக ஞானம் குலைந்து புலம்புகிறாள் )உலகளந்த என்று மேலுக்கு -அசாதாரண சர்வ சேஷியானவனுடைய போக்யதையிலே ஈடுபட்டார்க்கு போக யோக்ய கால ஸந்நிதியால் வந்த ஆர்த்திக்கு மேலே ஸ்மா ரகமான பாதக ஸந்நிதி சத்தையையும் குலைக்கப் ப்ரவர்த்தியா நிற்கும் என்றதாயிற்று –

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி-வியாக்யானம்-பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை-பிறையாகிற பிள்ளை பால்வாய்ப் பிள்ளை யாயிற்று
மேற்புறமான திக்கானது பகலாகிற பர்த்தாவை இழந்த ஸ்திரீயானாள்-இவள் தனது முலைப்பால் உண்கிற பிறப்பிள்ளையைத் தன் ஒக்கலிலே வைத்துக் கொண்டவளாய்-தாத் காலிக பக்ஷி ஸமுத்ர கோஷத்தாலே புலம்பா நின்றாள் என்னாலான மாலை -ஸந்த்யா காலம் நல்கிற்றை எல்லாம் என்று அந்வயம்–ஆர்க்கு என்னஉலகு அளந்த மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு என்று அந்வயம்
உலகு எல்லாம் எனக்கே சேஷம் என்கிற வ்யாமோஹத்தாலே அத்தைத் தன் கால் கீழே இட்டுக் கொண்டவன் இடத்தில் யுள்ள துழாய் வேணும் என்கிற மனஸ்ஸூ யுள்ளாருக்கு என்றபடி–இவர்கட்க்கு
நல்கிற்றை எல்லாம் சோல்வான் உபகரித்தது களை எல்லாம் அபஹரிக்குமதாய்-மாலை வந்த போதே மாயனும் வருவான் என்று பிராணங்களை தரிக்கவும் கண் விழிக்கவும் பெற்றாள் இத்தை அபஹரிக்குமதாய் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே-முன்பு வந்த வாடை போல் அன்றிக்கே பனி யாகிற நஞ்சோடே கலந்த வாடை இவள் பிராணங்களை அபஹரிக்க வேணும் என்றே அதுகளுக்கு இருப்பிடத்தை எல்லாம் தேடித்தடவா நின்றது என்று அத்தைத் தான் பொறாமல் பயப்படுகிறாள் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-நல்கிற்றை எல்லாம் சோல்வான்-இங்கே சேஷித்துக் கிடந்ததாகத் தான் இது இப்படிப் படுகிறது தவிர்ப்பதற்காக வந்து புகுந்தது–இதுவோர் பனிவாடை-இதுவோர் சந்த்ர உதயமும் ஒரு ஸந்த்யையும் ஒரு சமுத்திர கோஷமும் இத்தனை சமுதாயம் வேணுமோ-இது அடையச் செய்தது என் என்று வந்து புகுந்தது–துழா கின்றதே-இங்கு ஏதேனும் தொங்கிற்று யுண்டோ என்று துழாவிக் கொண்டு வாரா நின்றது

ஸ்வா பதேசம்-இத்தால்-சந்த்ர உதயம்-அத்தால் வந்த பரிச்சேதம்-இவற்றை யுடைத்தான இந்நிலத்திலே பொருந்தாதே இது இல்லாத அகால கால்யமான தேசத்தில் அல்லது பொருந்தாத படியைச் சொல்லுகிறது –

ஸ்வாபதேசம் –
பால் வாய் பிறைப் பிள்ளை–
ஞானத்தின் சிறு பகுதி பகல் இழந்த-விவேகம் குலைந்த நிலை –
மேல் பால் திசை பெண்-மற்றையோர்க்கு மேன்மை வழி காட்டும் பர தந்த்ரர்-புலம்புறு-ஆற்றாமை மிக்கு
மாலை
-உரிய காலம்-ஆற்றாமைக்கு மேலே சம்சார பதார்த்தங்களும் நலிய –
உலகு அளந்த மால் –தானே தீண்டியவன் வேண்டுகின்ற என்னை ஆள் கொள்ளாமல் ஒழிவதே

ஸ்வா பதேசம்
பகவத் விஸ்லேஷத்திலும் , அனுகூல பதார்த்தங்களும் , பாதகம் ஆகிற படியை கண்ட
ஸ்ரீ வைஷ்ணவர்கள்-இவருடைய சத்தை எங்கனே தரிக்கக் கடவதோ -என்று அஞ்சுகிற படி-

தாத்பர்யம்
நாயகி மோகித்து-ஸந்த்யையும் வாடையும் நலிய ‘ தாயார் இவளையும் சமானமான மேற்குத் திக்கும் கணவனான பகல் ஆகிற ‘ஆதித்யன் மறைந்து போக சந்த்ரனாகிற முக்த சிசுவை ஓக்கலையிலே கொண்டு சமுத்திர கோஷம் ஆகிய பெரும் குரலுடன் அழுது புலம்ப வைத்தது
துளி ஞானம் பாக்கி போல் அங்கும் பிள்ளை கையிலே உண்டே -உயிர் மட்டும் பாக்கி வைத்து சத்தை மட்டும் இருக்க-வாடை அத்தையும் சஜாதீயமான ப்ராணனைப் பறிக்கத் துழாவ-திருவிக்ரமன் சாத்தி அருளிய திருத்துழாயில் ஆசைப்பட்டு சவுந்தர்யாதிகளை இழந்து அதுக்கும் மேலே வாடை மர்மத்தில் புக்கு மிகவும் பாதிக்கிறதே என்று இருவருக்குமாகத் திருத்தியார் துக்கப்பட்டாள் –

2-1-வாயும் திரையுகளும்-பிரவேசம் –

முதற்பத்தால் பகவத் கைங்கர்யமே புருஷார்த்தம் என்று அறுதியிட்டார் –சுடர் அடி தொழுது எழு என் மனனே ;
இரண்டாம் பத்தால் அந்த கைங்கர்யத்தில் களைகள் அறுக்கிறார் -தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே .
மூன்றாம் பத்தால் விரோதி கழிந்த கைங்கர்ய வேஷம் பாகவத சேஷ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்-பயிலும் சுடர் ஒளி
நாலாம் பத்தால் இப்படிப்பட்ட கைங்கர்யத்துக்கு விரோதி ஐஸ்வர்ய கைவல்யம் என்றார்-ஒரு நாயகம் இத்யாதி
அஞ்சாம் பத்தால் அந்த விரோதியைப் போக்குவானும் அவனே என்றார்-களைவாய் -துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் –
ஆறாம் பத்தால் விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளில் சரணம் புக்கார்-அகலகில்லேன் இறையும்–மிதுனத்தில் சரண்-
ஏழாம் பத்தால் இப்படிப் பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும் தக்த்த பட நியாயம் போலே
சம்சாரம் அனுவர்த்திக்கிற படியைக் கண்டு விஷண்ணரானார்-நண்ணிலா வகையே நலிவான் –
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தேயும் தக்த்த பட நியாயம் போலே நம்மை விடாதே அனுவர்த்திக்கிறது
நம்முடைய ஆத்மாத்மீயங்களில் நசை அறாத படியால் என்று பார்த்து அவற்றில் ஒரு நசை இல்லை என்கிறார்-
உங்களோடு எங்கள் இடை இல்லை பந்துக்களும் த்யாஜ்யம்
ஒன்பதாம் பத்தால் இப்படி நசை அற்ற பின்பும் ரஷியாது ஒழிவான் என் என்று அதிசங்கை பண்ண
நான் நாராயணன் -சர்வ சக்தி உக்தன் -உம்முடைய சர்வ அபேக்ஷிதங்களையும் செய்து முடிக்கிறோம் என்று அருளிச் செய்ய
அவனுடைய சீல குணத்திலே ஆழம் கால் படுகிறார்– ஓர் ஆயிரமாய் -பேராயிரம் கொண்ட பீடு உடையான்-சீலத்தில் கால் தாழ்ந்த மாறன்
பத்தாம் பத்தில் ஆழ்வாருடைய பதற்றத்தைக் கண்டு -திரு மோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி –
இவருக்கு அர்ச்சிராதி கதியையும் காட்டி இவருடைய அபேக்ஷித சம்விதானம் பண்ணின படியை அருளிச் செய்தார் –

கீழில் திருவாய்மொழியில் ‘மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை’ என்று அவனுடைய ஸுலப்யத்தையும் மேன்மையினையும் வடிவழகினையும் அருளிச் செய்தார்.
மேல் விழப் பண்ணுகைக்கு இம் மூன்று குணங்களுள் ஓரொன்றே போதியதாம்.
இங்ஙனம் இருக்க, இறைவனிடத்தில் இம் மூன்று குணங்களும் நிறைந்து குறைவற்று இருக்குமேயாயின், அவனை அநுபவியாதிருக்கப் போகாதன்றே?
ஆதலால், ‘அவனை இப்பொழுதே அணைதல் வேண்டும்,’ என்னும் பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷை பிறந்தது –
நினைத்தவாறு அப்பொழுதே அணையப் பெறாமையாலே பிறந்த பெருந்துன்பத்தை ஸ்ரீ எம்பெருமானோடே கலந்து பிரிந்த ஆற்றாமையாலே நோவுபடுகிறாளாகிய ஒரு ஸ்ரீ பிராட்டி, ஆற்றாமை கை கொடுக்க, விளையாடும் பூஞ்சோலைக்குப் புறப்பட்டு,
அங்கே வாழ்கின்ற பொருள்களைக் கண்டு அவையுமெல்லாம் பகவானைப் பெறாத காரணத்தால் நோவுபடுகின்றனவாகக் கொண்டு,
அவற்றுக்குமாகத் தாம் நோவுபடுகிற பாசுரத்தால் பேசுகிறார்.

‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியைக் காட்டிலும் இத் திருவாய்மொழியில் ஆற்றாமை கரை புரண்டிருக்கும். ‘அதற்குக் காரணம் என்னை?’ எனில்,
‘பெருநிலம் கடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன் அலற்றுவன்’ என்று அவதாரத்திலே அநுபவிக்கக் கோலிப் பெறாதது ஆகையாலே
‘அது ஒரு காலத்திலே நிகழ்ந்தது நாம் பிற்பாடரானோம்’ என்று ஆறலாம்;
இது அவ்வாறு அன்றி, ‘நம்பியைத் தென்குறுங்குடி நின்ற’ என்று உகந்தருளின நிலத்திலே அநுபவிக்க ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த ஆற்றாமையாகையாலே இது கனத்திருக்கும்.
அவதாரத்தில், பிற்பட்டார்க்கும் இழக்க வேண்டாதபடி முகங்கொடுக்கைக்கு நிற்கின்ற இடங்கள் அன்றோ உகந்தருளின நிலங்கள்?
மற்றும், ‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியில் தூது விடுகைக்குத் தரிப்பு உண்டாயிற்று:-இத் திருவாய்மொழியில் அங்குத் தூது விட்ட பொருள்களும் நோவு படுகின்றனவாக அவற்றுக்குமாகத் தாம் நோவு படுகிறார்.
மேலும், அனுபவிக்கிற இவ் வாழ்வாருடைய தன்மையாலும் இத் திருவாய்மொழியில் ஆற்றாமை கனத்திருக்கும்;
-யாங்ஙனம்?’ எனின், திருவாய்மொழியிலுள்ள ஆற்றாமை ‘பத்துடையடியவர்’ என்ற அத் திருவாய்மொழிக்கு முன்பு இறைவனை அநுபவித்துப் பிரிந்த அளவாலுள்ள ஆற்றாமையே;
‘அஞ்சிறைய மடநாரை’க்குப் பின்பு இத் திருவாய்மொழியளவும் அவனுடைய குணங்களை அநுபவித்துப் பிரிந்த பிரிவு ஆகையாலே இத் திரூவாய் மொழியில் ஆற்றாமை கனத்திருக்கும்; இறைவன்  பயிலப் பயில இனியவனாய் இருப்பவன் அன்றோ?

நாரையாகில் வெளுத்திருக்கியும், அன்றிலாகில் வாயலகு நெகிழ்த்தவாறே கதறுகையும்,
கடலாகில் எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி கூப்பிடுகையும், காற்றாகில் வேறுபாடின்றி எப்பொழுதும் திரிகையும்,
மேகமாகில் நீராய் இற்று இற்று விழுகையும், சந்திரனாகில் தேய்வது வளர்வதாகையும்,
தமஸ்ஸாகில் -இருளாகில்-பதார்த்த தர்சனம் – பொருள்களைக் காண ஒண்ணாது தடுக்கையும்,
கழியாகில் அலைவாய் முகமாய் ஏறுவதும் வடிவதுமாகையும், விளக்காகில் இற்று இற்று எரிகையும்,
இங்ஙனம் இவற்றிற்கு-நியத ஸ்வபாவம் – இத் தன்மைகள் எப்பொழுதும் உள்ளவை என்று அறியாமல்,
இவை யெல்லாம் தம்மைப் போன்று -பகவத் விஸ்லேஷத்தில் -இறைவனைப் பிரிந்த பிரிவால் நோவு படுகின்றனவாகக் கொண்டு,
அவற்றுக்குமாகத் தாம்-அநு சோகிக்கிறார்-

இத் திருவாய்மொழியில், இளைய பெருமாளைக் காட்டிலும் இவர்க்கு உண்டான வேறுபாடு சொல்லப்படுகிறது. ‘யாங்ஙனம்?’ என்னில், ‘மீனுக்குத் தண்ணீரைத் தாரகமாக அறுதியிட்டார் அவர்;
இவர், அந்த மீனோடு மீனுக்குத் தாரகமான தண்ணீரோடு தம்மோடு வேற்றுமை யற,
பகவானுடைய குணங்களே தாரகம் என்றிருக்கிறார் ஆதலால்
துக்கத்தை யுடையவர்கள் தங்களோடு ஒத்த துக்கத்தை யுடையவர்களைக் கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்து கூப்பிட்டு  ஆற்றாமைக்குப் போக்கு விட்டுத் தரிக்குமாறு போன்று,
இவளும் கண்ணுக்கு இலக்கான பொருள்கள் எல்லா வற்றோடும் கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்து,
‘நீ பட்டதோ, நான் பட்டதோ? என்று கூப்பிடுகிறாள்.

‘ஆயின், பறவை கடல் முதலான பொருள்கள் இறைவனைப் பிரியின், அப்பிரிவால் அவற்றிற்குத் துன்பம் உளதாமோ?’ எனில்,
அபி வ்ருஷ பரிம்லானா (‘வாரீர் சக்கரவர்த்தியே! உம்முடைய தேசத்தில் கழுத்தளவு தண்ணீரிலிருக்கிற மரங்களும் ஸ்ரீராம பிரானைப் பிரிந்த பிரிவால் உளதாய சோகத்தால் பீடிக்கப் பட்டனவாகி, அரும்பு போது மலர் இவைகளோடு வாடி உலர்ந்தன,’ )என்றும்,
உப தப்தோதகா நதியா பல்வலா நி சராம்சி ச (ஸ்ரீ ராம பிரானைப் பிரிந்த பிரிவின் வெம்மையால், ஆறுகள் கரையருகும் சென்று கிட்ட ஒண்ணாதபடி வெப்பங்கொண்டு கொதித்தன; வனத்திலுள்ள மரங்களும், சோலையிலுள்ள மரம் செடி கொடிகளும் உலர்ந்த இலைகளை யுடையன ஆயின்,’ என்றும்- )–ஸ்ரீ ராமாயணத்தில் பேசப்படுவது போன்று,
சேதன அசேதன விபாகம் அற – எல்லாப் பொருள்களையும் நோவு படுத்தக் கூடியவன், இவள் பிரிந்த இறைவன் என்க.
ஆக, ஸ்ரீ ராமபிரான் தந்தை இறந்த துக்கத்தால் மிக வருந்தி,-
சீதே ம்ருதஸ்தே ஸ்வசுர–பித்ரா ஹீநோ அஸி லஷ்மண ( முழுமதியினைப் போன்ற திரு முகத்தை யுடைய பிராட்டியருகிற்சென்று
அவளைப் பார்த்துச் ‘சீதாய்! உன்னுடைய மாமனார் இறந்தார்,’ என்றும், ‘இலக்குமணா! நீ தந்தை இல்லாதவன் ஆனாய்,’ )என்றும்,
கூறி, ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு கிடந்து கூப்பிட்டாற் போன்று கூப்பிடுகிறார் இங்கு-

இரண்டாம் பத்தில் -இப்படி பரத்வாதி குணங்களால் பரம சேஷியான சர்வேஸ்வரனுடைய சர்வ ரக்ஷகத்வ ப்ரயுக்தமான உபாயத்வத்தை ப்ரதிபாதித்து –
அநந்தரம் -இப்பத்தாலே உபேயத்வ உபயுக்தமான அவனுடைய நிரதிசய போக்யதையை அருளிச் செய்வதாக 1-அந்த போக்யத அதிசய ஸூசகமான –
அல்ப கால விஸ்லேஷத்திலும் அதி கிலேச அவஹத்வத்தையும் –
2–ஆச்சர்ய ரூபமான -உத்துங்க லலிதத்வத்தையும் –
3–சர்வ சாரஸ்ய சமவாய ரூப திவ்ய போக்யத்தையும் –
4–போக அலாபத்தில் வந்த ஆர்த்தியைப் போக்கி ரஷிப்பான் அவனே -என்னும் இடத்தையும் –
5–ஆர்த்தி தீரும்படி கிட்டினவனுடைய ஹர்ஷ காரிதமான ஸுந்தர்ய அதிசயத்தையும் –
6–ஆஸ்ரித சம்ச்லேஷ ப்ரீதனுடைய தத் விஸ்லேஷ பீருத்வத்தையும் –
7–சமஸ்ரித சம்பந்தி குல சந்தான பயந்த சம்ரக்ஷணத்தையும் –
8–ரக்ஷண காஷ்டையான மோக்ஷ பிரதத்வத்தையும் –
9–மோக்ஷ தாத்பர்யமான பாரதந்தர்யத்தையும் –
10–போக பிரதிசம்பந்திதயா சாந்நித்யத்தையும் –
அருளிச் செய்து போக்யதையை உபபாதித்து அருளுகிறார் –
அதில் முதல் திருவாய் மொழியில் -க்ஷண விளம்பத்திலும் கிலேச அதிசய ஜனகமான ஈஸ்வரனுடைய போக்யதையை அருளிச் செய்வதாக –
1–தத் உபபாதகமான அவனுடைய ஸ்ரீ யபதித்வத்தையும் –
2–சேஷ சாயித்வத்தையும் –
3–அநிஷ்ட நிவர்த்த கத்வத்தையும்-
4–நிவர்த்தக பரிகர வத்தையும் –
5–சக்தி யோகத்தையும்
6–சத்யவாதித் வத்தையும்
7–சம்பந்த விசேஷத்வத்த்வத்தையும்
8–காருணிகத்வத்தையும்-
9–கமநீய விக்ரஹ யோகத்தையும் –
10–காரணத்வத்தையும் —
அனுசந்தித்து -ஏவம் வித போக்ய பூதனுடைய அல்ப கால விளம்பத்தில் ஆற்றாமையாலே அசேஷ பதார்த்தங்களும் தம்மைப் போலே அவனைப் பிரிந்து
நோவு படுகிறனவாக -அபிசந்தி பண்ணும்படி கலங்கின பிரகாரத்தை -நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்தாள் ஒரு நாயகி சகல பதார்த்தங்களும் தன்னைப் போலே
தத் விரஹ துக்கத்தாலே ஈடுபடுகின்றனவாக நினைத்துப் போலிமைக்கு இரங்கி யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

இத்திருவாய்மொழியில், முதற்பாட்டிலே தொடங்கி,
நாரை தொடக்கமாக, அன்றில், கடல், காற்று, மேகம், சந்திரன், இருள், கழி, விளக்கு ஆகிய
இப்பொருள்களைக் குறித்துச் சோகித்து
மிகவும் தளர்ந்த அளவிலே அவன் வந்து முகங்காட்ட,
‘இனி என்னை விடா தொழிய வேண்டும்’ என்று கூறி,
இத்திருவாய் மொழி கற்றார்க்குப் பலத்தைச் சொல்லித் தலைக் கட்டினார்.

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே
 –2-1-1-

நோயும் பயலைமையும் – மனத்தின் துன்பமும் அத்தாலே வந்த -வைவர்ண்யமும் -பசலை நிறமும். தன் பக்கலிலே காண்கையாலே அவ் விரண்டும் நாரைக்கும் உண்டு என்றிருக்கிறாள்.-துக்க பரிபவங்களைப் பொறுத்திருக்கையாலும் பற்றிற்று விடாதிருக்கிறபடியாலும் பசலை நிறத்தாலும், என்னைப் போன்று இரா நின்றாய்,’ தத் தஸ்ய சத்ருசம் பவேத்-என்று கூறி இருந்த ஸ்ரீ பிராட்டியைப் போன்று இருக்க மாட்டாமைக்கு ‘இருவரும் ஒத்தோமோ?’ என்பாள் ‘எம்மே போல் நீயும்’ என்கிறாள்.-மைந்தனை மலராள் மணவாளனையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்பாள். ‘திருமாலால்’ என்கிறாள்.
நெஞ்சம் கோட்பட்டாயே ‘தோற்புரை அன்றியே, மறுபாடுருவ  வேர்ப் பற்றிலே நோவு பட்டாய் ஆகாதே! என்பாள்,  நெஞ்சம் கோட்பட்டாயே’  என்கிறாள்.

இத்தால் -சாம்சாரிக கல்லோலத்தை மதியாது இருப்பார்க்கு உறங்காமையும் ரூப விபர்யாஸமும் பகவத் விஸ்லேஷ ஜெனிதம் என்று இருக்கை –

——————

கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே 
–2-1-2-

ஆள்பட்ட எம்மே போல் நீயும் – ‘நெஞ்சு பறி யுண்டு படுக்கையிலுஞ்சேராதே நோவு படுகைக்கு என்னைப் போலே நீயும் அவன் திருவடிகளில்  தாஸ்ய பரிமளத்திலே அன்றோ அகப்பட்டது?’ நாட்டாரில் வேறு பாட்டை யுடையதாகப் போந்திருக்கிற நீ’ என்பாள் ‘நீயும்’ என்கிறாள்-மயர்வற மதிநலம் அருளப் பெற்றாய் இல்லை; ஆதலால் என்றனை உட்புகாத நீயும் இப்படி ஆவதே!’ என்பாள், ‘நீயும்’ என்றாள் எனலுமாம்.-ஸாஸ்த்ர ஜன்ய ஞானமும் இல்லை -பகவத் பிரசாத லப்த ஞானமும் இல்லை -என்றபடி

மேல் திருமாலால்’ என்றாள்; இருவருமானால் இருப்பது படுக்கையிலே யாய் இருக்குமே?
ஆதலின், ஈண்டு ‘அரவணையான்’ என்கிறாள்.-ஆக, ‘அவனும் அவளுமாய்த் துகைத்த திருத்துழாய் மாலை பெறவேண்டும்’ என்று ‘அத்தையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்கிறாள்-அவர்கள் இருவரும் கூடத் துகைத்த துழாய்’ என்பாள், ‘தாள்பட்ட துழாய்’ என்கிறாள்.-‘தாளிணை மேல் அணி தண் அம் துழாய்’ என்று அன்றோ தான் கிடப்பது? சங்கத்தளவிலே நில்லாது ‘பெறில் பிழைத்தல்; பெறா விடில் முடிதலான நிலையை அடைந்தாயே! என்பாள், காமுற்றாயே’ என்கிறாள். தாமம் – ஒலியும் மாலையும்.-சங்கம் -காமம் -அநுராகம் -ஸ்நேஹம் -இத்யாதி அவஸ்தைகளில் பிரதமம் சங்கம் -என்றபடி –

இத்தால் -ஆர்த்த த்வனி யுடையார் அவனைப் பிரிந்து கூப்பிடுகிறார்கள் -என்று இருக்கை —

————-

காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே
 –2-1-3-

அன்றிலுடைய ஒலிக்கு வருந்தி இருக்கமளவில் கடல் என்று ஒரு மஹாதத்வமாய், அது தன் காம்பீர்யம் எல்லாம் இழந்து-கரையிலே வருவது கரையேற மாட்டாதே உள்ளே விழுவதாய், எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி-ஊமைக் கூறனாகக் கூப்பிடுவதாகிறபடியைக் கண்டு, பாவியேன் இராம குணத்தில் அகப்பட்டு, நான் பட்டது நீயும் பட்டாய் ஆகாதே?’ என்கிறாள்.‘உறக்கம் இன்றியே ஒழியினும் நெஞ்சாயினும் அழியாதிருக்கப் பெற்றனையோ?-அதுவும் இன்றே!’ என்பாள், ‘உருகு ஏங்குதியால்’ என்கிறாள்.-பாவியேன், பரத்துவத்திலே ஆசைப்பட்டாய் இல்லையே-
பிரணயிநி -காதலியின் விரஹம் பொறுக்கமாட்டாத சக்கரவர்த்தி திருமகனை யன்றோ நீயும் ஆசைப்பட்டாய?’-தோள் நயந்த யாம் என்னாதே தாள் நயந்த யாம் என்றது ப்ராஹ்மணர் பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லுமா போலே அடி விடாத வாசனையால்
தேரியும் தேறாமலும் ஸ்வரூபம் குலையாதே அடியோம் தொடர்ந்து குற்றேவல் -அடிச்சியாம் அடிக்கீழ் குற்றேவல்

இத்தால் -மஹத்தையை யுடையார் வாய்விட்டு அலறுவது அவனை பிரிந்தால் என்று இருக்கை –

—————-

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –
2-1-4-

காற்று என்று ஒரு வியாபக தத்வமாய், அது தான் அபிமத காதலனைப் பிரிந்த விரஹத்தால் உண்டான வியசனத்தால்,  இருந்த இடத்தில் இருக்க மாட்டாமல், மடல் ஊருவாரைப் போன்று உடலிலே புழுதியை ஏறிட்டுக் கொண்டு வடிவு தெரியாத படியாய், சன்னிசுரம் வந்தவர்களைப் போன்று குளிர்ந்திருந்தது; அதனைப் பார்த்து, ‘நீயும் நான் பட்டது பட்டாய் ஆகாதே?’ என்கிறாள்

துழாய் எம்போல்’ என்பதற்கு, இவள் துழாவினாளோ?’ எனின்,  காரார் திருமேனி காணு மளவும் போய்ச், சீரார் திருவேங்கடமே திருக்கோவலூரே- ஊராய எல்லாம் ஒழியாமே நான் அவனை’ என்று வருதலால் தேடினாள் -ஆஸ்ரித அர்த்தமாக அசத்திய ப்ரதிஜ்ஜை ஆனவன் ஓரத்து அளவும் -அதாவது- செய்த சூளுறவை அடியார்கட்காகத் தப்பியவனுடைய பக்ஷ பாதத்திலே அகப்பட்டாய் ஆகாதே’ என்பாள்,  ‘அடல் கொள் படையாழி அம்மான்’ என்கிறாள்.
(ஓரம் -திரு ஆழியின் முனை கூர்மை என்றும் ஸஹஜார்த்தம் -ஆஸ்ரித பக்ஷபாதம் )

உபகார சீலர்க்கும் உடம்பில் வரும் விகாரங்கள் அவனைக் காணப் பெறாமல் -என்று கருத்து –

—————-

ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே
 –2-1-5-

அவ்வளவிலே ஒரு மேகமானது கரைந்து நீராய் விழப்புக்கது; ‘நீயும் அவனுடைய பகைவர்களைக் கொல்லுகின்ற பண்பிலே அகப்பட்டாய் ஆகாதே?’என்கிறாள்

இத்தால் -உதார ஸ்வபாவர்க்கு ஸைதில்யம் பகவத் விரஹ ஜெனிதம் -என்கிறாள் –

——–

நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே
 –-2-1-6-

மேகத்தின் அருகே கலா மாத்ரமான ஒரு கலையோடு கூடியிருக்கின்ற-சந்திரன் தோன்ற –
சந்திரனே!-உன் வடிவில் எழில் இழந்தாய் ஆகாதே -ஏதத் விரதம் மம என்றும் –
மா ஸூச -என்றும் -எம்பெருமான் அருளிச் செய்த வார்த்தையைக் கேட்டு- பெரும் பொய்யாய் மெய்யாகக் கருதி உன்னுடைய உடம்பில் அழகிய ஒளியை இழந்தாயே–என்கிறாள் –நைவு வாய -இடம் -நைவுக்கு இடமாய் நைவை யுடைத்தான என்றும் நைவே தானே வடிவு கொண்டு இருக்கிற என்றபடி –எம்மே -எங்களை என்றது நாரை அன்றில் கடல் வாடை வானம் இவைகளைச் சொன்னவாறு -அவருடைய பெரும் பொய்யிலே அகப்பட்டாய் ஆகாதே நீ’ என்கிறாள். 
தம் பாம்பு போல் நாவும் இரண்டு உளவாயிற்று’ என்கிறபடியே, தமக்குப் பொய் சொல்ல ஒரு வாய் உண்டாகில், தம்மைச் சேர்ந்த படைக்கு ஐந்து வாய் உண்டு என்பாள்,  ‘ஐ வாய் அரவணை’ என்கிறாள்.-இதனால், அவனுக்குப் பள்ளித்தோழமை பலித்தமை தெரிவித்தபடி,-இராமாவதாரத்தில் மெய்யும் கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் அன்றோ அடியார்க்கட்குத் தஞ்சம்? ஆகையாலே தோற்றாள்.

இத்தால் -உஜ்ஜ்வல ஸ்வபாவடைய ஓளி மழுக்கம் அவனுடைய யுக்தி வையர்த்ய சங்கா வஹமான விளம்பம் -என்று கருத்து –

———

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே
 –2-1-7-

மதி கெட்டவாறே அந்தகாரம் வந்து மேலிட்டது,’ என்கிறாள். -இப்பாசுரத்திற்கு, முன்னும் பின்னும் போருகிறபடி ஒழிய,  சொற்களின் நயத்தைத் திருவுள்ளம் பற்றி எம்பெருமானார்  அருளிச் செய்து போருவது ஒன்று உண்டு: 
அம்மங்கியம்மாளும்  அதனையே நிர்ப்பந்தித்துப் போரும். அதாகிறது, தான், பிரிவாற்றாதார் பலர் கூடக் கட்டிக்கொண்டு கூப்பிடாநிற்க, இருள் வந்து முகத்தை மறைக்க,
அத்தைப் பார்த்து, ‘ஆற்றாமைக்குப் போக்குவிட்டுத் தரிக்க ஒட்டாதே நீ வந்து நலியக் கடவையோ?’ என்கிறாள் என்பதாம்

எம்பெருமாற்கு –கெடுவாய், வகுத்த விஷயத்திலே அன்றோ நாங்கள் நெஞ்சை இழந்தது?நாரணற்கு –தன்னுடைமை’ என்றால் வாத்சல்ய குணமுடையவனுக்கு அன்றோ இழந்தது?அவனைப் பெறவோ-போன நெஞ்சைப்பெறவோ?-எங்கள் ஆற்றாமையாலே அழப் பெறோமோ?’ என்பாள், ‘சொல்லி அழுவோம்’ என்கிறாள்.‘உன் இழவு கனத்திருந்ததே! வகுத்த எம்பெருமானிடத்தில் யாமெல்லாம் நெஞ்சிழந்து கூப்பிடாநிற்க
நீ உன் ஆற்றாமையைக் காட்டி நலிகின்றாயே! உன் அவசாதம் – நலிவு நீங்கி -ஜீவித்திடுக -வாழ்ந்திடுக,’ என்கிறாள்-

————-

இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –
2-1-8-

இருள் செறிந்தாற்போலே இருப்பதொரு கழியிலே சென்று இழிந்தாள்;-அது மடல் எடுப்பாரைப் போன்று கெட்டு ஓடா நிற்றலைக் கண்டு,‘பாவியேன், சகடாசுரனை -நிரசித்த -அழித்த அச் செயலிலே நீயும் அகப்பட்டாயே?’ என்கிறாள்.-காலத்துக்கு ஓர் எல்லை காணிலும் உன் ஆற்றாமைக்கு ஓர் எல்லை காண்கின்றிலோம். காலமாகில் திவா ராத்ரி விபாக விபக்தமாகவே இருக்கும் என்று இருக்கையாலும் காலம் நசித்தது என்று இருக்கிறாள்-

இத்தால் -ஜல-ஜட -ப்ரப்ருதிகளும் -அவன் கிருபா குணத்திலே அகப்பட்டால் கால் தாழ்வர்-என்று கருத்து –

———–

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –
2-1-9-

அக்கழிக்கு ஒரு கரை காணமாட்டாமல் மீண்டு வந்து படுக்கையிலே விழுந்தாள்;
( சாடு -தத் துக்கஸ்ய பாரம் த்ரஷ்டும் அசமர்த்தா ஸதீ இதி த்வனி ) அங்கு எரிகிற விளக்கைக் கண்டாள்;-அது ‘உடம்பில் கை வைக்க ஒண்ணாதபடி விரஹசுரம் பற்றி எரியாநின்றது’ என்று அதனைப் பார்த்து, ‘நீயும் நோவுபட்டாய் ஆகாதே?’ என்கிறாள்

அம் தாமம் தண் துழாய் ஆசையால் –‘அழகிய திருத்துழாய் மாலை பெற வேண்டும்’ என்னும் ஆசையாலே.-பதி சம்மானிதா சீதா பார்த்தாராம் அஸி தேஷணா (  ‘கருமை நிறைந்த கண்களையுடைய பிராட்டி,-கணவனாகிய ஸ்ரீராமபிரானால் மாலை அணிந்து  கௌரவிக்கப் பட்டாள்,’) என்ற பேறு பெறவேண்டும் என்று அதனையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்றபடி. ( தன் திருக்கழுத்தில் மாலையைச் சாத்தினார் என்று இறே ஆழ்வான் பணிக்கும் படி அஸி தேஷணா என்கையாலே தானும் ஒரு மாலை இட்டால் போலே காணும் -என்னும் ஆழ்வான் )வேவாயே- ‘உக்கக்காலுக்கு உளையக் கூடிய உன் உடம்பே நெருப்பாக வேகிறாயே!’ என்கிறாள். –உக்கம் விசிறி –கால் -காற்று  

இத்தால் -அவன் வடிவழகில் ஆசை தேஜஸ்விகளையும் பரிதபிக்கும் -என்கை –

———–

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே
 –2-1-10-

இவள் அவசாதம் – துன்பமெல்லாம் தீர வந்து கூடின எம்பெருமானைக் குறித்து,
‘இனி ஒருநாளும் என்னை விடாதொழிய வேண்டும்’ என்கிறார்-

வேவ ஆரா வேட்கை நோய் – ‘வேவ’ என்று தொடங்கினால், ஒருகால் வெந்து முடிவு பெறாது மேலும் மேலும் வெந்துகொண்டே இருத்தலின்  ‘ஆரா வேட்கை நோய்’ என்கிறாள்.
‘ஆயின்,  உலகத்தில் வெந்து முடிவு பெறவில்லையோ?’ எனின்,   அல்லாது நெருப்பைப் போல அன்று;-வெந்த இடமே விரகாக எரிக்கிற வேட்கை நோய்’ என்றபடி.உன்பாலே வீழ்த்தொழிந்தாய் – அகப்பட்டார்க்கு மீள ஒண்ணாத உன் பக்கலிலே விழ விட்டுக்கொண்டாய்.-இனி, இதற்கு ‘உன் பக்கலிலே விழ விட்டுக்கொண்டு. முகங்காட்டாமல் கடக்க நின்றாய்’ என்று பொருள் கூறலுமாம்.-இப்பொருளுக்கு வீழ்த்தொழிந்தாய்’ என்பன-உன்பாலே வீழ்த்து –ஒழிந்தாய் இரண்டு சொற்கள். 

மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த மூவா முதல்வா –கேசி வாயை வருத்தம் இன்றிக் கிழித்து, இரட்டை மருத மரங்களின் நடுவே போய்,-மஹாபலி கவர்ந்துகொண்ட பூமியை எல்லை நடந்து மீட்டுக்கொண்டு, இப்படி உபகாரங்களை – உதவிகளைச்செய்து,
பின்னையும் ஒன்றும் செய்யாதானாய்க் குறைப்பட்டு, இவற்றின் ரக்ஷணத்திலே உக்தனாய் -முயற்சி உள்ளவனாய் இருக்கின்றவனே!
இனி, ‘மூவா முதல்வா’ என்பதற்கு,-‘இப்படி எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதாரைப் போன்று உலகைப் படைத்தல் முதலியவற்றைச் செய்தவனே!’

அச்சேத்யம் என்னும் அது-ஈரும் வேம்-ஈரியாய் உலர்த்த வென்னப் பட-சித்தம் சித்தாய் அல்லேன் என்று நீங்க-கரணங்கள் முடியானேயில் அவையாக-உடலம் ஆத்ம தர்மம் கொள்ள-காற்றும் கழியும் கட்டி அழக்-கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பில்லையே–ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்-—சூரணை –132-

உலர்த்த – வேட்கை நோய் மெல்லாவி உள் உலர்த்த -2-1-10–என்று பிரேம வியாதி யானது மிருது ஸ்வாபமான ஆத்மாவை குருத்து வற்றாக உலர்த்த என்றும் – இப்படி சேதன ஆத்யர்ஹம் ஆயிற்று என்று ஸ்வயமேவ சொல்லும்படியாக –

இத்தால் -தம்முடைய அநிஷ்டங்களைப் போக்கி சத்தியை உண்டாக்கின படியை அனுசந்தித்தாறாயிற்று –

——————–

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே
 –2-1-11-

இத்திருவாய்மொழி கற்றார், கண்ணாற்காணப்பட்டன எல்லாம் பகவானைப் பெறாமையாலே -அலாபத்தாலே – நோவுபடுகிற சம்சாரத்திலே இருந்து நோவுபடாமல்,
கண்டார் எல்லாம் பகவானைப் பெற்று -லாபத்தாலே-களித்து வாழும் நாட்டிலே புகப்பெறுவர்’ இது நிச்சிதம் -என்கிறார்–ஆழ்வாருடைய பாவ வ்ருத்தி உண்டாகும் என்று தாத்பர்யம் 

பேறு இழவுகள் இவரது அன்றி, ‘தன்னது’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற நின்றானாதலின் ‘சோதிக்கு’ என்கிறார்.-இதனால்,க்ருதக்ருத்யனானான் -‘செய்ய வேண்டியனவற்றைச் செய்து முடித்தவனாய் இரா நின்றான்’ என்பதனைத் தெரிவித்தபடி.காதலைக் கொண்டே இவரை நிரூபிக்க வேண்டி இருத்தலின், ‘காதல் சடகோபன்’ என்கிறார்.இது, தற்புகழ்ச்சி அன்றோ?’ எனின்,  தம் படி சொல்லும் போதும் தாமே சொல்ல வேண்டுமே. (அவரது பக்தியின் ஸ்வ பாவம் அவருக்கே தெரியுமது ஒழிய பிறருக்குத் தெரியாது இறே –இவருடைய ஆகாரங்கள் வேறே ஓர் இடத்திலே காணாமையாலே -)

இத்திருவாய்மொழியில், முதற்பாட்டிலே தொடங்கி,
நாரை தொடக்கமாக, அன்றில், கடல், காற்று, மேகம், சந்திரன், இருள், கழி, விளக்கு ஆகிய
இப்பொருள்களைக் குறித்துச் சோகித்து
மிகவும் தளர்ந்த அளவிலே அவன் வந்து முகங்காட்ட,
‘இனி என்னை விடா தொழிய வேண்டும்’ என்று கூறி,
இத்திருவாய் மொழி கற்றார்க்குப் பலத்தைச் சொல்லித் தலைக் கட்டினார். 

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading