ஸ்ரீ“ஆசார்யர்கள் அருளிச்செய்த பட்டோலை” என்னும் நூல் திருநாங்கூர்
பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீவைகுந்த விண்ணகரம் திருமாளிகையிலுள்ள ரஹஸ்ய
க்ரந்த ஓலைச்சுவடியில் உள்ளது. பெரியபெருமாள் தொடங்கி சமீபகாலம் 200,300
வருஷங்களுக்கு முன் வரையுள்ள ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்கள் அருளிச்செய்துள்ள
கிரந்தங்களின் அட்டவணை வடிவில் இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலில் சேராத
மற்றும் சில பல நூல்களும் இருக்கவேசெய்யும். சிறப்பாகச் சில இதில் குறிக்கப்
பட்டுள்ளன. உதாஹரணமாகப் “பெரியபெருமாள் ஸ்ரீஸைலேசதயாபாத்ரம் அருளிச்
செய்தார்” “நம்மாழ்வார் அண்டகோளம் என்ற அகவல் அருளிச்செய்தார்” என்பதை
எடுத்துக்கொள்ளலாம். நம்மாழ்வார் அண்டகோளம் என்ற அகவல் அருளிச்செய்தார்
என்பதில் அபிப்ராயபேதம் உள்ளது. அது மற்றொரு விஷயம். தனியாக
விமர்சிக்கவேண்டியது. அனேகமாகப் பெரும்பாலும் ஆசார்யர்களின் பௌர்வாபர்ய
க்ரமத்திலேயே (முன்பின் வரிசைக் கிரமப்படியே) நூல் அமைந்துள்ளது.
தற்செயலாக இந்த ஓலைச்சுவடியைப் பார்க்க
நேரிட்டது. இந்த நூல் பூர்த்தியாக இல்லை. மேலும் இப்போது வரை வெளிவந்துள்ள
நூல்களையும் சேர்த்துக்கொள்ளலாம். ஸ்ரீவைஷ்ணவ உலகில் இன்றுவரை
வெளிவராத பல நூல்களின் பெயர்களும் இதில் வந்துள்ளன. அவைகளை ஆராய்ந்து
கண்டுபிடித்து வெளியிடவும் ஒரு தூண்டுகோலாக இந்நூல் உபயோகப்படும் – இந்த
நோக்கத்திலேயே இது வெளியிட உத்தேசிக்கப் பட்டது. ஒருவர் அருளிச்செய்ததை
மற்றொருவர் அருளிச்செய்ததாகவும் இதில் சில பகுதிகள் உள்ளன. அவைகளை
ஆராய வேண்டும். குறிப்புக்கள் ப்ராக்கெட்டுக்குள் உள்ளன. குற்றம் களைந்து
நல்லதைக் கொள்ள வேணுமாகக் கேட்டுக்கொள்கிறேன்.
பெரியபெருமாள் ஸ்ரீசைலேசதயாபாத்ரம் அருளிச்செய்தார். (வேதாதி
ஸகல சாஸ்திர பிரவர்த்தகனான எம்பெருமான் பெரிய பெருமாளாகிய
அர்ச்சாரூபியானபோது இதை அருளினார் என்கை.)
பேரருளாளன் ஆறு வார்த்தை அருளிச்செய்தார்.
திருமழிசையாழ்வார் ஷண்மதத்துக்கும் க்ரந்தம் பண்ணினார். (இவர்
பல சமயங்களிலும் புக்குக் கடைசியில் பேயாழ்வாரால் திருத்திப்
பணிகொள்ளப்பட்டார். அவ்வப்போது அந்தந்த மதங்களில் கிரந்தங்கள்
பண்ணியிருக்கலாம். ஸ்ரீவைஷ்ணவத்தில் நான்முகன் திருவந்தாதி,
திருச்சந்தவிருத்தம் அருளிச்செய்தார்.)
பெரியாழ்வார் கல்பஸூத்ர வ்யாக்யானம் பண்ணினார்.
(திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழிஅருளிச்செய்தார்.)
குலசேகரப்பெருமாள் முகுந்தமாலை அருளிச்செய்தார். (பெருமாள்
திருமொழி அருளிச்செய்தார். முகுந்தமாலை அருளிச்செய்த விஷயத்தில்
அபிப்ராயபேதம் இருக்கிறது.)
திருமங்கையாழ்வார் பரசமயகண்டனம் பண்ணினார். (பெரிய
திருமொழி திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய
திருமடல், பெரியதிருமடல், திருநெடுந்தாண்டகம் அருளிச்செய்தார்.)
நம்மாழ்வார் அண்டகோளம் என்ற அகவல் அருளிச்செய்தார்.
(திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திருவாய்மொழி
அருளிச்செய்தார். இவர் ப்ரபந்நஜனகூடஸ்தர்.)
மதுரகவி கண்ணிநுண்சிறுத்தாம்பு அருளிச்செய்தார். (இங்கு மற்ற
ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தங்களையும் குறித்துக் கொள்ளவேணும்.
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி, பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி, பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி, ஆண்டாள் திருப்பாவை
நாச்சியார் திருமொழி; தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலை,
திருப்பள்ளியெழுச்சி; திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான் அருளிச்
செய்துள்ளனர்.)
நாதமுனிகள் ந்யாஸதத்த்வம் என்கிற த்ரமும், யோக ரஹஸ்யமும்
அருளிச்செய்தார். (ந்யாயதத்வம் என்கிற நூலும் நாதமுனிகள் அருளிச்
செய்தது. அதன் பல பகுதிகள் ஸ்ரீவேதாந்த தேசிகரால் மேற்கோளாகக்
காட்டப்பட்டுள்ளன. ஸ்ரீபாஷ்யத்திலும் சில ந்யாயதத்த்வ லோகங்கள்
மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. ந்யாஸதத்த்வம் ஸூத்ரரூபமான க்ரந்தம்
என்று இந்நூலால் தெரியவருகிறது. நம்மாழ்வார் மூலமாக ப்ரபத்தி
மார்க்கத்தைப்பெற்றுப் பிரவர்த்தித்தவரானபடியால் ந்யாஸதத்வம் என்ற
நூல் அருளிச்செய்திருக்கலாமென்பதில் ஒளசித்யமுள்ளது. நாதமுனிகள்
கிரந்தமொன்றும் இன்றுவரை பூர்ணமாகக் கிடைக்கவில்லை.)
ஆளவந்தார் ஆகமப்ராமாண்யம், மஹாபுருஷ நிர்ணயம்,
ஸித்தித்ரயம், கீதார்த்த ஸங்க்ரஹம், சது:ச்லோகீ, ஸ்தோத்ரரத்னம்
அருளிச்செய்தார்.
திருக்கச்சிநம்பி வரதராஜாஷ்டகம் அருளிச்செய்தார்.
திருக்கோட்டியூர் நம்பி ப்ரமேயஸாரம், பத்துவார்த்தை அருளிச்
செய்தார்.
பெரியநம்பி ஸ்ரீவைஷ்ணவ தினசரிதம் அருளிச்செய்தார்.
(நூற்றெட்டுத் திருப்பதி விஷயமாகவும் நூல் அருளிச்செய்ததாக செவிவழிச்
செய்தி. பெரியதிருமலைநம்பிகள் எம்பெருமானாரது மாதுலர் (அம்மான்)
ஸ்வாசார்ய நியமனத்தால் எம்பெருமானாருக்கு ஸ்ரீராமாயணார்த்தம்
உபதேசித்தார். அவர் அருளிச்செய்ததாகப் “பெரியதிருமலை நம்பிகள்
அருளிச்செய்தஸ்ரீராமாயண ஸ்வாபதே, வ்யாக்,யாநம்” என்ற நூல்திருநாங்கூர் பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீவைகுந்த விண்ணகரம் திருமாளிகை
யிலுள்ள பழைய கையெழுத்து பிரதியொன்றை அடியேன் சென்னை தங்க
சாலையிலுள்ள ஸ்ரீராமர் கோவில் ஜீர்ணோத்தாரணக் கமிட்டியார்
வெளியிட்ட மலரில் அச்சிட்டு வெளியிட்டுள்ளேன்.)
எம்பெருமானார் வேதாந்ததீபம், வேதாந்தஸாரம், வேதார்த்த
ஸங்க்ரஹம், ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம், கத்யத்ரயம், நித்யம்,
பத்மாஸனோபவிஷ்டம் இத்யாதி ஸ்லோகத்வயமும் அருளிச்
செய்தார். (பெரியதிருமொழிக்கு வாழிபரகாலன் என்ற தனியனும்,
பெரியதிருவந்தாதிக்கு முந்துற்ற நெஞ்சே, என்ற தனியனும் அருளிச்
செய்தார்.)
திருக்குருகைப்பிரான் பிள்ளான், நயப்ரகாசிகை (ந்யாயப்ராகாபரிகை?)
ஆறாயிரப்படி முதல் அருளிச்செய்துள்ளார்.
கூரத்தாழ்வான் ஸ்ரீவைகுண்டஸ்தவம்,அதிமாநுஷ ஸ்தவம்,
ஸுந்தரபா ஸ்தவம், வரதராஜஸ்தவம், ஸ்ரீஸ்தவம்
யமகரத்னாகரம், தத்,வ்யாக்,யானம், நித்யம், லக்ஷ்மீநாத, யோநித்ய
மச்யுத, குருபரம்பரையும் அருளிச்செய்தார்.-(வாக்ய குருபரம்பரை, யமகரத்னாகரம் ஆழ்வான் அருளிச்செய்தார் என்ற விஷயத்தில் அபிப்ராயபேதம் உள்ளது.)
அருளாளப்பெருமாள் எம்பெருமானார் ஞானஸாரம் ப்ரமேயஸாரம்
அருளிச்செய்தார்.
கோவிந்த ஜீயர் யதித ர்மஸமுச்சயம் அருளிச்செய்தார். (இவர் முன்பு
யாத,வப்ரகாமன் என்கிற பெயருள்ளவராய் அத்,வைத ஸந்யாஸியா
யிருந்தார். இவரிடந்தான் எம்பெருமானார் பூர்வாரமத்தில் அத்வைதம்
பயின்றார். பிறகு, எம்பெருமானாரிடம் இந்த யாதவப்ரகா ன் ஆ ரயித்து
கோவிந்தஜீயர் எனப் பெயர்பெற்றார்.)
எம்பார் – சரமகு.ருவிஷயம். ஸ்ரீ விஷ்ஞாபனஸப்ததி ரஹஸ்யம்
முதலானவை அருளிச்செய்தார்.
வங்கிபுரத்துநம்பி – நித்யம், திருப்பதிக்கோர்வை முதல் அருளிச்
செய்தார்.
பட்டர் அஷ்டம்லோ, ஸ்ரீரங்கராஜஸ்தவம், ஸ்ரீகுணரத்னகோசம்,
க்ரியாதீ,பம், ஸ்லோகத்ரயம், ஸஹஸ்ரநாமபாஷ்யம், குருப்ரபாவ
தீபிகை, சரமப்ரமாணம் முதல் அருளிச்செய்தார். (இவரால் பல
திருமஞ்சனக்கட்டியங்களும் அருளிச்செய்யப்பட்டிருக்கின்றன. அவைகளை
ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் திருமஞ்சனத்தின்போது பட்டர் ஸந்ததியார்
ஸேவிக்கக் கேட்கலாம்.)
ஸ்ரீராமப்பிள்ளை ஆர்த்தி முதலானவை அருளிச்செய்தார்.
அவர் குமாரர் பரா ரபட்டர் -க்ஷமாஷோட, சீ அருளிச்செய்தார்.
அவர் குமாரர் வேதவ்யாஸபட்டர் ஸ்ருதப்ரகாரிகை, ஸ்ருத
ப்ரதீ,பிகை, வேதார்த்த ஸங்க்ரஹ வ்யாக்யாநம், ஸுபாலோப
நிஷத், வ்யாக்,யாநம்,கபக்ஷயம், கத் யவ்யாக்யாதமும் அருளிச்செய்தார்.
அவர் குமாரரான நடுவில்திருவீதிபட்டர் பிஷ்டப நிர்ணயம்,
அஷ்டாக்ஷரதீ,பிகை, ரஹஸ்யத்ரயம், த்,வயபீடக்கட்டு, தத்த்வ
விவரணம், ஸ்ரீவத்ஸவிம்பதி முதலானவை அருளிச்செய்தார்.
முதலியாண்டான் ரஹஸ்யத்ரயமும், அஸ்மத்குரு தனியன் முதல்
அருளிச்செய்தார்.
அவர் குமாரர் கந்தாடையாண்டான் விஜ்ஞாபநஸ்துதி முதலானவை
அருளிச்செய்தார்.
பட்டர் திருவடிகளிலே ஆஸ்ரயித்த ஸ்ரீரங்கநாராயணஜீயர், உபநிஷத்,
வ்யாக் யாநம், ஸ்தோத்ர வ்யாக், யாநம் அருளிச்செய்தார். (இவர்
அருளிய உபநிஷத் வ்யாக்,யாநப் பகுதிகள் ஈட்டின் ப்ரமாணத்திரட்டில்
எடுக்கப்பட்டுள்ளன. ரஹஸ்யத்ரய ஸாரத்தில் ஸ்ரீஸுக்தபாஷ்ய
கர்த்தாவாக எடுக்கப்பட்ட பெரிய ஜீயர் இவரே. ஸூத ர் ந பாதகம் அருளிய
கூரநாராயணஜீயர் இவரே.)
நஞ்ஜீயர் திருவாய்மொழி வ்யாக்,யானம் ஒன்பதினாயிரப்படி,
திருமொழி வ்யாக் யாநம் ஒன்பதினாயிரப்படி, திருப்பாவை வ்யாக்,
யாநம் ஈராயிரப்படி, திருவந்தாதிகளுக்கு வ்யாக்யாநாந்தரம், கண்ணி
வ்யாக்யா, திருப்பல்லாண்டுரை, ரஹஸ்யத்ரயம், ஸ்ரணாக தி
கத்,ய வ்யாக்யா, நித்யம், வேதார்த்த,ஸாரம், பரமார்த்த,விவேகம்,
சரமகு. ருரஹஸ்யமும் அருளிச்செய்தார். (இக் கிரந்தங்களில் சிலவே
கிடைக்கின்றன. கிடைக்காதவைகளை கிடைக்குமா என மேலும்
ஆராயவேண்டும்.)
ஸ்ரீஸேநாபதிஜீயர் சுத்தஸம்ப்ரதாயரத்னம், எழில்புதுவைமாலை
முதல் அருளிச்செய்தார். (முமுக்ஷப்படி மூலம் 41, அதன் வ்யாக், யாநங்
களில் இவருடைய வார்த்தை எடுக்கப்பட்டுள்ளது.-ந்யாயகலாபஸங்க்ரஹம் இவர் அருளியது அச்சில் வந்துள்ளது.)
திருவரங்கத்தமுதனார் இராமாநுசநூற்றந்தாதி, திருப்பாவை
ஈராயிரப்படி, திருப்பதிக்கோர்வை, எம்பெருமானார் தாலாட்டு முதல்
அருளிச்செய்தார். (இராமாநுசநூற்றந்தாதியே கிடைக்கிறது. மற்றவை
கிடைக்கவில்லை. அமுதனார் திருமாளிகையில் ஓலைச்சுவடிகளில்
கிடைத்தாலும் கிடைக்கலாம். முயற்சி செய்யவேண்டும். அமுதனாரால்
திருமஞ்சனக் கட்டியங்களும் தமிழில் சில பாக்களும் அருளப்பட்டிருக்
கின்றன. அமுதனார் வம்சத்தவர்களிடம் இவைகள் உள்ளன.)
ஸோமாசியாண்டான் சரமோபாய விவரணம், கு,ருகு,ணாவலி,
கு,ருகு,ண விவரணம், ஷடர்த்த,ஸங்க்ஷேபம், நயத்,யுமணி b,பிகை
அருளிச்செய்தார். (எம்பெருமானாரின் சிஷ்ராய் ஸ்ரீபாஷ்யத்திற்கு
ஸ்ரீபாஷ்யவிவரணம்’ என்னும் முதல் வ்யாக்,யாநமருளியவர் இவரே. இந்த
ஸோமயாஜியாண்டானின் திருநாமம் ‘ராமமிஸ்ரர்’ என்பது.)
எங்களாழ்வான் ஸாரார்த்த,சதுஷ்டய விவரணமும் ஸ்ரீவிஷ்ணு
சித்தீயமும் அருளிச்செய்தார். (ஸ்ரீலிஷ்ணுசித்தீயம் – ஸ்ரீவிஷ்ணு
புராண வ்யாக்,யாநம், ஸாரார்த்த சதுஷ்டயம் வார்த்தாமாலையில்
உள்ளது.)
நம்பிள்ளை தனிப்ரணவம், திருவிருத்தஈடு, கண்ணிஈடு, க.த்யத்ரய
வ்யாக்,யா, ரஹஸ்யத்ரம், திருப்பல்லாண்டுஈடு முதல் அருளிச்
செய்தார்.
அம்மாள் சரமோபாயஸங்க்,ரஹம், ஸ்ரீபாஷ்யோபந்யாஸம்,
உபோத்,க தம், ப்ரமேயமாலை, தத்த்வஸாரம், யதிராஜவிஜய
ப ணம், தாடீபஞ்சகம், ஸாரார்த்தஸங்க்ரஹம், லோகத்,வயம்,
பரத்வாதி பஞ்சகமும் ரஹஸ்யமும் அருளிச்செய்தார். (அம்மாள்
நடாதூரம்மாள்,த டிபஞ்சகம் கூரத்தாழ்வான் அருளியது எனவும் கூறுவர்.)
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவாய்மொழி ஈடுமுப்பத்தாறாயிரம்,
ஆசார்யஸம்மதி முதல் அருளிச்செய்தார்.
பெரியவாச்சான்பிள்ளை திருவாய்மொழிக்கு இருபத்து நாலாயிரப்படி,
முவாயிரத்துக்கு வ்யாக்,யா, பரந்தரஹஸ்யம், ஸ்தோத்ர வ்யாக்,யா,
கத்,ய வ்யாக்,யா, பெருமாள் அபயப்ரதான வ்யாக்,யா, பிராட்டி
அப, யப்ரத,ான வ்யாக்,யா, மாணிக்கமாலை, நிக,மநப்படி, தி,வ்ய
பிரபந்த நுஸந்த நரஹஸ்யம், உபகாரரத்நம், ரஹஸ்யத்ரயம்,
தத்த்வத்ரயம், ஸகலப்ரமாணதாத்பர்யம், உப, யவிவரணம், நவரத்னமாலை, ப்ரமேயஸாரம், தத், யாக்,யானம், சது:ஸ்லோகீ வ்யாக் யா,
லோகத்,வயம்,ஏகஸ்லோ, தனிஸ்லோகீ, ஸங்க்ரஹப்படி,
ரீரோத்பத்யநுஸந்தாநம், விவேகம், ஜிதந்தா வ்யாக்,யாநம், திருக்
குருகூர்ரத்னம், ‘ராமம்மே க்கு ஸம்ஸ்க்ருதடீகை, இருபத்து
நாலாயிரப்படிக்கு உபந்யாஸம், ஸாமக் ரீபரம்பராநாசம், பலாரீரகை
கண்ட்,யம், ஸ்ரீரங்க ராஜஸ்தவ உரை, தத்த்வவிவேகம் முதலானவை
அருளிச்செய்தார். (சது: லோகீ வ்யாக்யானம் பெரியவாச்சான்
பிள்ளை சிறியதாகவும் அவர் குமாரர் நாயனாராச்சான்பிள்ளை
விரிவாகவும் அருளிச்செய்தனர்.)
அவருக்கு தத்தகுமாரரான நாயனாராச்சான்பிள்ளை, ரஹஸ்யத்ரயம்,
தத்த்வவிவரணம், முக்தபோக,ாவலீ, அணுத்வ புருஷகாரத்வ
ஸமர்த்த.னமான தத்த்வஸங்க்,ரஹம், அஷ்டாத, ஸம்வாத,ம்,
கைவல்ய நிர்ணயம், ஜ்ஞாநார்ணவம், சரமோபாய நிர்ணயம், பிஷ்ட
ப நிர்ணயம் முதலானவை அருளிச்செய்தார்.
அவர் சிஷ்யரான வாதிகேஸரி அழகியமணவாள ஜீயர் திருவாய்
மொழிக்குப் பன்னீராயிரப்படி, திருவிருத்தஸ்வாபதே, ம், திருவாய்
மொழிக்கு–ஸ்லோக ரூப சங்கதி தத்துவ தீபம் தீப பிரகாசிகை தத்வ தீப ஸங்க்ரஹம் தத்த்வநிரூபணம், ரஹஸ்யாம்ருதம்,
ரஹஸ்யத்ரயவிவரணம், அத்யாத்மசிந்தை, விவரணமாலை,
தத்த்வஸங்க்,ரஹ ஸாரார்த்தம், ரஹஸ்யத்ரயத்துக்கு ஸ்லோகரூப
விவரணம், தத்த்வபூஷணம், ப்ரதிஸ்லோகம் மணிப்ரவாள
வ்யாக், யாநமான கீதாஸாரம், இருபத்துநாலாயிரப்படிக்குப்
ப்ரமாணத்திரட்டு, ரஹஸ்யத்ரயார்த்த,சிந்தனம், ட கோபத், வயம்
ராமாநுஜ த்வயங்களுக்கு வ்யாக்,யாமம்,உபதே. மாலை,
முஸலகிஸலயம், சரமகுருசரிதை முதலானவை அருளிச்செய்தார்.
அவர் சிஷ்யர் உத்,பாஹு ரமணீயர், உபதேஸ, மாலை வ்யாக்,யா
அருளிச்செய்தார்.
அவர் குமாரரான பரகாலநல்லான் பரகாலநல்லான் ரஹஸ்யத்ரயம்,
மைவண்ணநறுங்குஞ்சி வ்யாக்,யா அருளிச்செய்தார். (பட்டர்
அருளியதாக வழங்கும் மைவண்ண நறுங்குஞ்சி வ்யாக்,யா இவர்
அருளியதே என ஷோட,மாத் யாயியில் ஸுதபூர்ந ஸ்த,ாபக ஸ்வாமி
நிர்ணயித்தது இதனால் வலியுறுத்தப்படுகிறது.)
வாதிகேஸரி சிஷ்யரான திருமாலையாண்டான் ரஹஸ்யத்ரயஸாரம்,
ப்ரமேயரத்னம் அருளிச்செய்தார்.
நம்பிள்ளை சிஷ்யரான பின்பழகிய பெருமாள் ஜீயர், குருபரம்பரா
ப்ரபாவம் மூவாயிரப்படி அருளிச்செய்தார். (ஆறாயிரப்படி என ப்ரஸித்தி.)
பிள்ளைலோகாசார்யர், அஷ்டாதச ரஹஸ்யம் அருளிச்செய்தார்.
இன்னமும் ஸம்ஸ்க்ருத தத்த்வவிவேகம், கத்யவ்யாக்யான சிறுபடி,
பெரியபடி, நாலுவார்த்தை, அவஸ்தாத்ரயமும் அருளிச்செய்தார்.
அஷ்டாதச ரஹஸ்யத்துக்கும் அடிவரவு – முமுக்ஷ்வாதி, தந்யாதி,
தத்வாதி ஸாதீந் சதுஸ்த்ரித் விஸங்க்,யாஸமேதாந்க்ரமேண | ப்ராதீ,ந்
நவாதீந் பரியாதீந் ததாதீந் ஜகு,: க்ருஷ்ண புத்ரப்ரணீதாந்
ப்ரபந்தாங் II(ஸம்ஸ்க்ருத தத்த்வவிவேகம் முதலியவை கிடைக்கவில்லை. ஆராயவேண்டும்.)
அவர் திருத்தம்பியார் அழகியமணவாளப்பெருமாள் நாயனார்,
திருப்பாவை ஆறாயிரப்படி, திருப்பல்லாண்டு வ்யாக்,யாநம்
திருவிருத்தம் ஆறாயிரப்படி, ஆசார்யஹ்ருதயம், அருளிச்செயல்
ரஹஸ்யத்ரயம், சரணாகதிமாலை, ஆசார்ய ஹ்ருதயப் பட்டோலையும்அருளிச்செய்தார். (ஆசார்யஹ்ருதய பட்டோலை என்பது எது என்பதை
ஆராயவேண்டும். ஆசார்யஹ்ருதயத்தில் தான் உதாஹரித்த மேற்கோள்கள்
இன்னார் இன்னார் அருளிச்செய்த இன்ன இன்னக்ரந்தங்களிலுள்ளவை
என்பதைக் குறித்திருக்கலாம்.)
கூரகுலோத்தமதாஸர் ஸ்ரீவசநபூஷணஸங்கதி முதலானவை
அருளிச்செய்தார்.
நாலூராச்சான்பிள்ளை திருமொழிக்கும் பெரியாழ்வார்
திருமொழிக்கும் உரை அருளிச்செய்தார்.
திருப்புட்குழி ஜீயர் உபதேசமாலை அருளிச்செய்தார்.
திருவாய்மொழிப்பிள்ளை பெரியாழ்வார் திருமொழி ஸ்வாபதே,ம்,
வ்யாப்திரஹஸ்யம், சரணப்ரமாண ஸாரஸங்க்ரஹம் அருளிச்
செய்தார். (சரமப்ரமாண ஸாரஸங்க்,ரஹம் என்றிருக்கலாம்.)
பெரியஜீயர் பெரியாழ்வார் திருமொழி வ்யாக்,யாநம், நூற்றந்தாதி
வ்யாக்யாநம், ரஹஸ்யத்ரய வ்யாக் யாநம், தத்த்வத்ரய வ்யாக்யாநம்,
ஸ்ரீவசநபூஷண வ்யாக்,யாநம், ஆசார்யஹ்ருத,ய வ்யாக்,யாநம்,
யதிராஜ விம்சதி உபதேசரத்னமாலை திருவாய்மொழி நூற்றந்தாதி ஆர்த்தி பிரபந்தம்–ஈட்டுப்ரமாணத்திரட்டு, தத்வத்ரயப்ரமாணத்திரட்டு, பல
திருநாமங்கள், திருவாராதனக்ரமம், ‘நாதம் பங்கஜ…’ ‘திருவருள்
மால்… என்கிற தனியன் “லோக கு,ரும் கு,ருபி: ‘ இவை
முதலானவை அருளிச்செய்தார். (பெரியஜீயர் – மணவாள மாமுனிகள்)
மேல்நாட்டாயி தத்த்வத்ரய வ்யாக்,யா, ரஹஸ்யத்ரய வ்யாக்யா,
ஸ்ரீவசநபூஷண வ்யாக் யா, ஆசார்யஹ்ருத,ய வ்யாக்யா முதலானவை
அருளிச்செய்தார். (ஆயி- நந்யாசார்யர், நாலூராச்சான்பிள்ளையிடம்
இவரும், திருவாய்மொழிப்பிள்ளையும் ஈடுமுப்பத்தாறாயிரப்படி காலக்ஷேபம்
கேட்டனர்.)
பெரியபட்டர்பிரான் ஜீயர், அந்திமோபாய நிஷ்டை, முதலானவை
அருளிச்செய்தார்.
திருநாராயணபுரத்தில் ஸ்ரீக்ருஷ்ணகுமாரர்ஆசார்யர்கள் வார்த்தாமாலை
அருளிச்செய்தார். (இந்த ஸ்ரீக்ருஷ்ணகுமாரர் என்பவர் யார் என
விமர்சிக்கவேண்டும்.)
அப்புள்ளார் காலப்ரகாரிகை முதலானவை அருளிச்செய்தார்.
நாலூராச்சான்பிள்ளை திருமொழி வ்யாக் யாநம் அருளிச்செய்தார்.
(47ம் எண்ணில் குறிக்கப்பட்டவரும் இவரும் ஒருவரா? வேறா? என
விமர்சிக்கவேணும்)
அழகியமணவாளப்பெருமாள் நாயனார் குமாரர் க்ருஷ்ணாசார்யர்
விரோதி பரிஹாரம், கு.ருபரம்பராப்ரபாவம் முதலானவை அருளிச்
செய்தார். அவருக்குத் திருவாய்மொழி ஆசார்யர் என்றும் திருநாமம்.
(இந்த அழகியமணவாளப்பெருமாள் நாயனார் பிள்ளைலோகாசார்யர் திருத்
தம்பியாரிலும் வேறானவர்.அவர் பரமவிரக்தராய் நைஷ்டி,கப்,ரஹ்ம
சாரியாகவே எழுந்தருளியிருந்தார் எனப் பிரஸித்தி.–நாயனாராச்சான் பிள்ளையின் திருநாமம் அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் என்பதே.
ஆகையால் அவர் குமாரர் பாட்டனாரான பெரியவாச்சான்பிள்ளையின்
திருநாமமான க்ருஷ்ணாசார்யர் என்னும் பெயரைப் பெற்றிருக்கலாம்.)
பின்பழகியநயினார்நாயன், விஸ்தாரமாக கு.ருபரம்பராப்ரப ாவம்
அருளிச்செய்தார்.
பெரியபட்டர்பிரான் ஜீயர்திருவடிகளில் ஆஸ்ரயித்த அழகியமணவாள
தாஸர் நாயன், கு.ருபரம்பராப்ரப ாவம் மூவாயிரப்படி அருளிச்
செய்தார்.
ஆத்தான் எம்பெருமானார், உபதே,ர மாலை வ்யாக்,யா அருளிச்
செய்தார்.
எறும்பியப்பா ஜீயர் விஷயமாக பூர்வோத்தர தி,நசரி, திருப்பள்ளி
யுணர்த்தல், வரவரமுநி ப தகம், வரவரமுநிகாவ்யம், சரமோபாய
தாத்பர்யம், சரமகு,ருநிர்ணயம், ஸந்மார்க்கதர்ப்பணம், விலக்ஷண
மோக்ஷாதிகாரம் முதலானவை அருளிச்செய்தார்.
அப்பிள்ளை ஐந்து திருவந்தாதிக்கும் உரை, யதிராஜவிம்ஸதி
வ்யாக்,யாநம், பெரியாழ்வார் திருமொழி உரை, பெரியபெருமாள்
முதல் வாழித்திருநாமமும் அருளிச்செய்தார்.
ப்ரதிவாதி, ப யங்கரம் அண்ணா பெரிய பெருமாள் முதல் நம்மாழ்வார்
அளவாக ப்ரபத்தி மங்களாபாஸநம் அருளிச்செய்தார். (இவர்,
மேலும் வரவரமுநி தகம், அஷ்டம்லோகிக்கு ஸம்ஸ்க்ருத வ்யாக்,யாநம்,
108 திவ்யதேய எம்பெருமான்களுக்கும் ஸுப்ரபாதம் ப்ரபத்தி மங்களா
மாஸநம் முதலானவை அருளிச்செய்துள்ளார் என்பதாக பூர்வர்கள் அருளிய
இவரது வைப வநூல்களில் காணப்படுகிறது. வரவரமுனி ஸதகம்
அஷ்டம்லோகி வ்யாக் யா, ஸ்ரீவேங்கடே ப்ரபாதம், ப்ரபத்தி மங்களா
மாஸநங்கள் அச்சில் வந்துள்ளன.)
ஜீயர் திருப்பேரனாரான ஜீயர் நாயனார் உபதே,ர ரத்னமாலை
ல்லோகம், நக்ஷத்ரமாலை அருளிச்செய்தார்.
கந்தாடையண்ணன் திருப்பேரனார், ஸ்ரீபராங்குச பஞ்சவிம்பதி முதல்
அருளிச்செய்தார்.
அனந்தாண்பிள்ளை அநந்தாசார்யர் ஸ்ரீவசநபூ,ஷண மீமாம்ஸை
அருளிச்செய்தார்.
ானமாமலை ஜீயர் திருவாராதனக்ரமம் அருளிச்செய்தார்.
(மணலாளமாமுனிகள் ஏற்படுத்திய அஷ்டதி,க்க,ஜங்கள் திருநாமம்.
1.வானமாலை ஜீயர், 2. திருவேங்கட ஜீயர், 3.பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர்,4கோயில் கந்தாடையண்ணன், 5. எறும்பியப்பா, 6. அப்பிள்ளை,அப்புள்ளார், 8. ப்ரதிவாதி,பயங்கரம் அண்ணா என்பது.)
ஞானத்,ருஷ்டிஅழகப்பங்கார், ஸாரார்த்த ரத்னமாலை, ஈட்டுக்குப்
பாட்டுத்தோறும் உபந்யாஸம், நூறு திருவாய்மொழிக்கும்
உபந்யாஸம், பத்துப்பத்துக்கும் உபந்யாஸம், உபோத்,க தோபந்யாஸம்,
நிக,மந உபந்யாஸம், ஈட்டுப்ரமாணத்திரட்டுக்கு உரை, திருப்பாவை
தாத்பர்யம், திருப்பாவைக்கருத்து, திருமந்த்ரயோஜனை, த்வய
யோஜனை உபந்யாஸம், மூவாயிரத்துக்கும் பரமாணத்திரட்டு,
ரஹஸ்யத்ரய ஸ்ரீவசநபூ ஷண ஆசார்யஹ்ருத,ய ப்ரமாணத்திரட்டு
அருளிச்செய்தார். (நம்பிள்ளை ஈடு அருளிச்செய்தாப்போலே) இவர்
அருளிச்செய்யக்கேட்டு கேட்டபடியே அப்பு முதலானோர்
அரும்பதம் அருளிச்செய்தனர். 68 அப்புவரும்பதம், 69 பிள்ளை
யரும்பதம், 70 அய்யங்கார் அரும்பதம், 71 ராமாநுஜய்யங்கார்
அரும்பதம். இவ்வளவு முடியவும் (பூர்ணமாகவும்) 72 தொட்டை
யரும்பதம் 3 பத்துக்கும், 73 அழகர் அரும்பதம் 3 பத்துக்கும் “சக்கரத்
தண்ணலே” என்கிற பாட்டளவும். (இக்காலம் அரும்பதகாலம்
என்னலாம்.)
அப்புவும், பிள்ளையும் மூவாயிரத்துக்கும் அரும்பதங்களும்,
தத்த- த்ரய ரஹஸ்யத்ரய ஸ்ரீ வசனபூஷண ஆச்சார்ய ஹ்ருதயஅரும்பதங்களும், அதுகளுக்கு உபந்யாஸங்களும் பரந்தபடிக்குக
கடி னவாக்யார்த்தம் தீ,பப்ரகாபிகையரும்பதமும் அருளிச்செய்தனர்.
அவர் திருத்தமையனார் (திருத்தமப்பனார்?) ஆத்தான், குன்றத்தூர்|
அப்பனுக்கு ஸாதிக்க அவரும் அரும்பதம் அருளிச்செய்தார்.
அவர் திருத்தமப்பனார் பெரியராமாநுஜம்பிள்ளை கந்தாடை
நாயனுக்கு ஸாதிக்க அவரும் ஸம்ஸ்க்ருத அரும்பதம் அருளிச்
செய்தார்.
அழகப்பங்கார் குமாரர் பெரிய சடகோபாசாரியர் ஈடுப்ராஸங்கி,க
ப்ரமாணத்திரட்டு, திருக்கச்சி நம்பிசரிதம் முதல் அருளிச்செய்தார்.
ஆத்தான் திருவடிகளிலே ஆஸ்ரயித்த வேதரந்தி ராமாநுஜ ஜீயர்
திவ்ய ரி ப்ரபாவதி, பிகை முதல் அருளிச்செய்தார்.
திருக்குடந்தையண்ணா கடி னப்ரதீ,பிகை அருளிச்செய்தார்.
அவர்குமாரர்கூட,கோபாசார்யர்அருஞ்சொல்விளக்கமும், மூவாயிரம்
அருஞ்சொல் விளக்கமும் அருளிச்செய்தார்.
அரும்பதம் அப்பு குமாரர்அழகப்பங்கார், ப்ரதிபதம் உபந்யாஸங்கள்
அருளிச்செய்தார்.
77-பிள்ளைலோகார்ய ஜீயர், உபதோ ரத்தமாலை வ்யாக்,யா
ஸ்ரீபைலேமேத்யாதி, தனியன்களுக்கு வ்யாக்,யா, செய்யதாமரைத்
தாளிணைவ்யாக்,யா, ஏகல்லோவ்யாக்யா, பராங்கு திவ்யசரிதம்,
பரகால தி, யசரிதம்,ராமாநுஜ தி யசரிதம், யதீந்த்ரப்ரவண
ப்ரபராவம், தி,யப்பந்தாநுஸந்தனம்,ஸத்ஸம்ப்ரத,ாயமாலை
ஸகலப்ரமாண ஸங்க்ரஹம் 10000 ராமாநுஜரஹஸ்யத்ரயம், வாக்ய
கு. ருபரம்பரைக்கு வ்யாக்,யாநம் அருளிச்செய்தார். (இவர் ராமாநுஜ
நூற்றந்தாதி வ்யாக்,யாநமும் அருளிச்செய்தார். ஸ்ரீவைஷ்ணவ
ஸமாயாசார நிஷ்கர்ஷமும் இவர் அருளிச்செய்ய இவரது சிஷ்யரால்ஏடுபடுத்தப்பட்டது
சோளங்கிபுரம் தொட்டயாசார்யர் சண்ட,மாருதம், பாரா ர்ய
விஜயம், பஞ்ச விஜயமும் அருளிச்செய்தார்.
ஸ்ரீநிவாஸ கூ டகோப ஜீயர் வேத,ாந்த பரிபாஷை முதல் அருளிச்
செய்தார்.
தொட்டயாசார்யரிருவரும், தூப்பில் பிள்ளை க்ருதிகளுக்கு
ஸம்ஸ்க்ருதமாயும் மணிப்ரவாளமாயும் வ்யாக்,யாநங்கள், பாஷ்ய
தீபிகை, யதீந்த்,ரமததீ,பிகை, ஸ்ரீபாஷ்ய உபந்யாஸம் முதல்அருளிச்செய்தார் (ஸ்ரீவேதாந்த தே,பிகர் வைப வபரமான ஆசார்யவிஜய
சம்பூ தொட்டயாசார்யர் அருளிச்செய்தது. இவ்விடத்தில் தூப்பில் பிள்ளை
என்று ப்ரஸித்,த ரான வேத,ாந்த தே.பலிகர் நூற்றுக்கணக்கான க் ரந்தங்கள்
ஸம்க்ருதம் தமிழ் இருமொழிகளிலும் அருளிச்செய்துள்ளார். ஸ்ரீ.உ.வே.
ஜகதாசார்யஸிம்பாஸநாதிபதி மகாவித்வான் காஞ்சிப்ர.ப.அண்ணங்கராசார்ய
ஸ்வாமி தே மிக க்,ரந்த,மாலா என்ற பெயரில் தே கர் க்ருதிகளையெல்லாம்
ஒருசேர அச்சிட்டு வெளியிட்டுள்ளார். வேதாந்த தே கர் திருக்குமாரர்
நயினாராசார்யர் அதி,கரண ஸாராவலீ வ்யாக்,யாநம் முதல் அருளிச்
செய்தார்.)
81-ஷஷ்டி ப்ரப,ந்த நிர்மாதாவான ஸ்ரீமந்நாராயண வண்சடகோபஜீயர்,
புருஷகார மீமாம்ஸை, ஸந்த்யாவந்த ன பாஷ்யம், ரஹஸ்யத்ரய
ஜீவாது முதல் அருளிச்செய்தார். (இவர்ஸ்ரீஅஹோபில மட,ஸ்தாப
கரான ஆதிவண் சடகோப ஜீயாது சிஷ்யர், மடத்தின் இரண்டாவது
பட்டத்தை அலங்கரித்தவர்.)
கோயிலண்ணன் வரத நாராயணர் ஜீயர் ஸத்,கு,ரு தீ,பிகாவலி
முதலானவை அருளிச்செய்தார்.
எறும்பியப்பா திருவம்சயரான அப்பாவிப்பிள்ளை ரஹஸ்யம் அஷ்டாதச ஸம்வாதம் அருளிச் செய்தார்
84-பட்டம் தாதய்யங்கார் வம்யரான நம்பாக்கம் ஐயன் புருஷஸுக்த
பாஷ்யம், ஸம்ப்ரதராய சந்த்,ரிகையும் அருளிச்செய்தார்.
தத்,வம்யரான பாலஸரஸ்வதி ரஹஸ்யத்ரய பிகை முதல்
அருளிச்செத்யார்.
86-அவர் குமாரர் ராமாநுஜ தே.கன் ஸ்ரீபாஷ்யாதி கரணோபந்யாஸம்,
ஸ்ரீபராங்கு பாது,காபஞ்சாமத், கே,ாதரஸ்துதி, வரவரமுநிபாது கா
வைப,வம், ஆசார்யாள் த்யானங்கள், ஜாக்,ருஹி, ஆழ்வார் அந்தாதி,மண்டப சதுஷ்டயஸ்தோத்ரம் முதல் அருளிச்செய்தார். (மண்டப
சதுஷ்டயமாவது – புஷ்ப, த்யாக,. பேரக,,ஜ்ஞான மண்டபம்; புஷ்ப
மண்டபம் திருமலை, த்யாக, மண்டபம் பெருமாள் கோவில், போக, மண்டபம்
திருவரங்கம் பெரியகோவில், ஜ்ஞானமண்டபம் (மேலக்கோட்டை)
திருநாராயணபுரம்).
87-அவர் திருத்தம்பியார் ஸ்ரீகிருஷ்ண தேரிகன், ரஹஸ்யத்ரயார்த்தா
ஸந்தரநஸ்லோகங்கள் ரஹஸ்யத்ரயஸித்தாந்தம், ரஹஸ்யத்ரய
ஸங்க்,ரஹவிவரணம் ரஹஸ்யத்ரயதீபிகை, ஒருநாயகோபந்யாஸம்
திருவாய்மொழி ஸங்க்ரஹம் முதல் அருளிச்செய்தார்.
88-ஸ்ரீபைல மூன்று ஜீயர்களும் எறும்பியிலப்பாவும்…. .
இத்துடன் இந்நூல் பூர்த்தியாகாமல் முடிவடைகிறது. இதன் மூல ஓலைப்
பிரதியிலும் இவ்வளவேயிருக்கவேணும். அல்லது பூர்த்தியாய் பிரதி எழுதுவதற்குமுன்
அந்த ப்ரதி திருப்பிக் கொடுக்கப்பட்டிக்கும். பாலஸரஸ்வதி என்பவர் இன்றைக்கு
சுமார் 200 வருஷங்களுக்கு முற்பட்டவராகலாம். ஸுப்ரஸித்,த,ரான திருமழிசை
அண்ணாவப்பங்கார் ஸ்வாமி இவரது புநரவதாரம் என்பர். இந்த நூலில் பலரின் திருநாமங்களும், பல க்,ரந்த,ங்களின் பெயர்களும் விடுபட்டிருக்கிறது.
இன்றுவரை க், ரந்த,நிர்மாணம் செய்துவருமவர்களின் திருநாமங்களும்
க்,ரந்த,ங்களின் பெயர்களும் இதன் தொடர்ச்சியாகத் தெரிந்தவளவு சேர்த்துக்
கொள்ளவேணும். இந்நூலின் முயற்சி ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில்
ஆசார்யர்கள் ஸம்ஸ்க்ருதமொழியிலும் தமிழ்மொழியிலும் எவ்வளவு க்,ரந்தங்கள்
எவ்வளவு பிரிவுகளில் செய்துள்ளனர். இன்றுவரை எவ்வளவு செய்துவருகின்றனர்.
ஸ்ரீவைஷ்ணவ வளர்ச்சி எவ்வளவுவரை ஏற்றமாயுள்ளது இவைபோன்றவைகளை
ஆராய்ந்தின்புறுவதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறது. இந்த க்,ரந்த,ங்களை
யெல்லாம் தேடி ஆராய்ந்து கிடைக்குமவைகளை அச்சிட்டு வெளியிடுவது
லோகோபகாரமானவொரு தொண்டாகும்.
குறிப்புகளுடன் கூடிய ஆசார்யர்கள் அருளிச்செய்த பட்டோலை முற்றிற்று.
————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply