ஸ்ரீ சார ஸங்க்ரஹம்-வார்த்தை -456-

வார்த்தை -456-

(ஸ்ரீ சார ஸங்க்ரஹம் பிரபந்தம் இந்த வார்த்தை அடியாகவே அருளிச் செய்யப்பட்டு உள்ளது
அஷ்ட ஸ்லோஹியும் இவற்றை விவரிக்கும் )

அகில ஜகத்திதாநு சாசனமான வேதத்திலும் –
வேத உப ப்ரும்ஹணங்களாக பிரவ்ருத்தங்களான ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களிலும்
அவிகீதமாக பிரசித்தமாய் –
சர்வேஸ்வரனுடைய ஸ்வம்மாய் –
சர்வ ஆத்மாக்களுக்கும் ஆபத் தனமாய் இருந்துள்ள த்வயம் -என்னும் திரு நாமத்தை உடைத்தாய் இருந்துள்ள வாக்ய த்வயம்
பத்து அர்த்தத்தை பிரதிபாதிக்கிறது –

1-ஸ்ரீய பதித்வமும்
2-ஸ்ரீ நாராயணத்வமும்
3-ஸ்ரீ நாராயணன் உடைய சர்வ லோக சரண்யமான சரணார விந்த யுகளமும்
4-அதினுடைய ப்ராபகத்வமும்
5-தத் கோசரமாய் சேதன கதமாய் இருந்துள்ள பிரார்த்தனா கர்ப்ப விஸ்ரம்பமும்
6-ஸ்ரீ லஷ்மீ தத் வல்லபர்களுடைய நிகில ஆத்ம நித்ய கைங்கர்ய ப்ரதான அர்த்தமான நித்ய சம்பந்தமும்
7-கைங்கர்ய ப்ரதி சம்பந்தியான ஈஸ்வரனுடைய நிரதிசய போக்யதையும்-8-சர்வ ஸ்வாமித்வமும்(இவை இரண்டுமே நாராயணார்த்தம்)
9-நித்ய கைங்கர்யமும் –
10-கைங்கர்ய பிரதிபந்தக நிச்சேஷ நிபர்ஹணமுமாகிற அர்த்த விசேஷங்கள்

ஈத்ரு சார்த்த விசேஷ ப்ரகாசகமான மந்திர விசேஷணத்தின் உடைய விவரண ரூபமாய்
அபௌருஷேயமாய் -இருந்துள்ள திருவாய்மொழியில் பத்துப் பத்தாலும்
இப் பத்து அர்த்தத்தையும் பூர்வாச்சார்யர்கள் அடைவே சேர்த்து அனுசந்தித்து கொண்டு போருவார்கள்

(த்வயார்தம் தீர்க்க சரணாகதி என்றது சார சங்கரஹத்திலே–சூரணை -210—திருவாய்மொழி பத்து பத்தாலும் ஸ்ரீயபதித்வம் முதலாக — கைங்கர்ய விரோதி நிவ்ருத்தி பர்யந்தமாக த்வயத்தில் பிரதிபாதிதமான பத்து அர்த்தத்தையும் பிரதிபாதிக்கையாலே , த்வய அர்த்தமாய்க் கொண்டு தீர்க்க சரணாகதியாய் இருக்கும் என்று சொல்லப் பட்டது –
பிள்ளை அருளி செய்த சார சங்கரகமாகிற பிரபந்தத்தில்-அந்த பிரபந்தம் ஆவது தான் என் என்னில்- அகில ஜதத்தி தானுசாசன பரமான வேதத்திலும் –வேத உப ப்ரும்ஹமான அர்த்தமாக –பிரவ்ருத்தங்களான-ஸ்ம்ருதி இதிகாச புராணாதி சமஸ்த சாஸ்திரங்களிலும் பிரசித்தமாய் –சர்வேஸ்வர- சர்வ ஸ்வமாய் –நம் ஆச்சர்யர்களுக்கு ஆபத் தனமாய் -இருந்துள்ள அர்த்த த்வ்யத்தை – பிரதி பாதிக்கையாலே -த்வயம் -என்று திரு நாமத்தை உடைத்தாய் உள்ள வாக்ய த்வயம் – பத்து அர்த்தத்தை பிரதி பாதிக்கிறது -இப்படி திருவாய்மொழியின் த்வய அர்த்த பிரதிபாதாக த்வத்தை விசதமாக ஆச்சார்யர்கள் அருளிச் செய்து வைக்கையாலே – ஸ்வ பிரபந்தத்தில் வக்தவ்ய அம்சத்தை தத் பிர பந்தத்தில் தர்சிப்பித்தார் ஆய்த்து .. )

இதில் முதல் பத்தால் –
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் -1-3-1-என்றும் –
மலராள் மைந்தன் -1-5-9-என்றும் –
திருமகளார் தனிக் கேள்வன் -1-6-9-என்றும் –
திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே -1-9-1-என்றும் –
பூ மகளார் தனிக் கேள்வன் -1-9-3-என்றும் –
மைந்தனை மலராள் மணவாளனை -1-10-4-என்றும் –
ஸ்ரீ ய பதித்வம் ப்ரதிபாதிதம் ஆய்த்து

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-தாமரைப் பூவை பிறப்பிடமாக யுடைய ஸ்ரீ மஹா லஷ்மியானவள் விரும்பும்படியான பெறுவதற்கு அறிய நம் ஸ்வாமியானவன்-ஈஸ்வரீம் சர்வ பூதானாம் -என்கிற மேன்மையை யுடையளாய்-பரிமளம் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற போக்யதையை யுடையளான பிராட்டி  அகலகில்லேன் இறையும் என்று விரும்பும் தத்துவம் பெறற்கு அரிய ஸ்வாமிகள்
ஸ்ரீ யபதி என்கை இறே சர்வாதிகத்வத்துக்கு லஷணம்-நம் -என்று இந்த மேன்மையும் நீர்மையும் தமக்கு பிரகாசித்து இருக்கிற படி –

மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே –1-5-9-நித்ய ஸூரிகள் ஜீவனம் இருக்கிற படி–‘தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார்,’ என்கிறபடியே, அவர்கள் விரும்பித் தொண்டுகளைச் செய்யப் பெரிய பிராட்டியாரும் தானுமாக இருக்குமவன்.-மைந்தன் -நித்ய யௌவன ஸ்வ பாவன்-அவளுக்கு மிடுக்கானவன்.-இனி, இதற்கு, ‘அவளுடைய சேர்த்தியினாலே நித்தியமான புதிய யௌவனத்தை யுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.-

தரும வரும பயனாய –திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9-உபநிஷத்துக்களிலே பரம பிரயோஜனமாக பிரசித்தமானவற்றை தரும் திருமகளார் –தர்மத்தினுடைய பரம பிரயோஜனமான திருமகளார்-தருமத்தினுடைய-பரம – மேலான பிரயோஜனந்தான் ஒரு வடிவு கொண்டாற் போன்று இருக்கின்ற ஸ்ரீ பெரிய பிராட்டியார்  -அத்விதீயனான வல்லபன்-ஸ்ரீ யபதித்வ நிபந்தனமான பெருமையை யுடையவர்-இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி -நாயகனாய் இருக்கிறவன். அப்ரமேயம் ஹி தத் தேஜ -ஜனக குலத்தில் அவதரித்த பிராட்டியானவள் எவனுக்கு மனைவியாக இருக்கின்றாள்?-அவனுடைய திறல் வலி முதலாயின அளவிட முடியாதனவாக இருக்கின்றன,’ என்கிறபடியே.
ஸ்ரீயப்பதி- திருமகள் கேள்வன் ஆகையாலே வரும் ஏற்றம் உள்ளது இவன் ஒருவனுக்குமே ஆதலின், ‘தனிக் கேள்வன்

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-என்னமுதம் –
தேவர்கள் அதிகாரிகளான அம்ருதத்தில் காட்டில் வியாவ்ருத்தி-சுவையன் –-ரசிகன் -அவ்வமுதத்தில் காட்டில் வியாவ்ருத்தி -அதுக்கு போக்த்ருத்வம் இல்லையே-திருவின் மணாளன் –இவருடைய அமிர்தம் ஒரு மிதுனம் ஆயிற்று

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-பரிமளம் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கும் படியான பாக்யத்தை யுடையவள்-அத்விதீய நாயகன் -என்னும் வை லக்ஷண்யத்தை யுடையவன்-புஷ்பத்தில் பரிமளம் வடிவு கொண்டால் போலே இருப்பவளாய் -போக்யத ஏக வேஷையான ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் என்றால் -இப்படிப்பட்ட ஐஸ்வர்யத்துக்கு இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி இருக்கிறவன்

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4-நித்ய யவ் வன ஸ்வ பாவனை—மைந்து -மிடுக்கு இனிமை அழகு கெடுவாய், இவ் விஷயத்தைச் சிலரால் விடப் போமோ?–நிரதிசய போக்யையாய் இருக்கிற பிராட்டி செவ்வி கொள்ள இட்டுப் பிறந்தவனை-ஸ்ரீ பெரிய பிராட்டியார் ‘அகலகில்லேன் இறையும்’ என்னும் விஷயத்தை யன்றோ நான் உன்னை ‘விடாதே கொள்’ என்கிறேன்?

—————

இரண்டாம் பத்தால் –
எம்பெருமான் நாரணற்கு -2-1-7-என்றும் –
எம்பிரான் எம்மான் நாரயணனாலே -2-7-1-என்றும்
நாராணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -2-7-2-என்றும் நாரயணத்வம் பிரதிபாதிதம் ஆய்த்து

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-அப்ராப்த விஷயத்துக்கு தோற்றோமோ -அல்லோம் என்றாரையும் விட மாட்டாத வத்சலனுக்கு –ஸூலபனுக்கு என்னவுமாம்-ப்ராப்த விஷயத்தில் வாத்சல்யாதிகளால் இழந்தோம் என்கை –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-நித்ய ஸூரிகளை அனுபவிக்குமா போலே என்னை அனுபவிப்பித்தவன்-அவர்களை போலே என்னை அநந்யார்ஹன் ஆக்கியவன் –தன் மேன்மை பாராதே -சர்வ அந்தர்யாமியாய்க் கொண்டு இவற்றின் சத்தையை நோக்கி நிற்கும் வத்சலன் ஆனவனாலே –எமர் கீழ் மேல் ஏழு பிறப்பும்-கேசவன் தமர் ஆனார்கள் -மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வாநாராயணனாலே என்கிற இடம் மா சதிரினுடைய உபபாதனம்

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-அர்த்தத்தை சொல்லுகைக்காக சப் தத்தை உபாதானம் பண்ணுகிறார் -அர்த்தம் சொல்லி –ஸூ விஷய பக்ஷபாதத்தை  அருளிச் செய்கிறார் –நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன்–நாரணன் -திரு நாமம் சொல்லி –எண் பெருக்கு அந்நலத்து ஒண் புகழ் ஈறிலா -வண் புகழ் நாரணன் -திண் கழல் சேரே -கீழே-வேத மயன்-அந்த நாரணன் சப்தத்தையே வேதங்கள் பிரதானமாக பிரதிபாதிக்கப்படும் —ப்ரஹ்மம் ஆத்மா சத் பொதுவான சொற்கள் நாராயணனையே குறிக்கும் –

—————-

மூன்றாம் பத்தால் –
நாண் மலராம் அடித் தாமரை -3-3-9-(ப்ராப்யம் சொல்ல வந்த பதிகம் -ஒழிவில் காலம் -இருந்தாலும் பூர்வ வாக்ய ப்ரமாணமாகக் இங்கு எடுத்து ஆள்கிறார்)என்றும் –
அங்கதிர் அடியன் -3-4-3-என்றும் –
அவன் பாத பங்கயம் -3-6-4-என்றும் –
அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் -3-6-10-என்றும் –
மூ உலகும் தொழுது ஏத்தும் சீரடியான் -3-8-1-என்றும்
நாராயணன் உடைய சர்வ லோக சரண்யமான சரணார விந்த யுகளம் பிரதிபாதிதம் ஆய்த்து

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9-நிரதிசய போக்யமான திருவடிகளை—செவ்விப்பூவைத் தலையிலே வைத்தலைப் போன்றிருப்பது ஒன்றாதலின், ‘நாண்மலராம் அடித்தாமரை’ என்கிறார்.மநோ வாக் காயங்களால் அனுபவிக்கப் பார்ப்பார்க்கு-இது இறே துக்க நிவ்ருத்திக்கு குடிக்கிற வேப்பங்குடி நீர்-அவன் கால் காண, ‘மூப்புப் பிறப்பு இறப்பு’ என்கிற இவையெல்லாம் அழியும்’ என்றபடி.-திருமேனியில் கால் பகுதியைக் காண -நாலு பகுதியும் போகும் -மூப்பு -இறப்பு -பிறப்பு -பிணி இவை எல்லாம் போகுமே-நான்கு வர்ணர் நான்கு பகுதிகளில் இருந்து பிறந்தார்கள் என்பதால் திருவடியை கால் பகுதி என்கிறார்-இவை இரண்டும் உடலுக்கும் உபலக்ஷணமாய், ‘திருவடிகளை மனம் வாக்குக் காயங்களாலே அநுசந்திப்பார்கட்கு’ என்றபடி.-வாயுள் வைக்கையாவது, ‘ஓவாது உரைக்கு முரை’-முதல் திருவந்தாதி -95- என்கிறபடியே உரைத்தல்.-மனத்துள் வைக்கையாவது, மறவாதிருத்தல். இப்படி -கரணங்களுக்கு-உறுப்புகட்கு –அடைத்த காரியங்களைக் கொள்ளவே,-சொரூபத்திற்கு விரோதியாய் வந்தேறியானவை தாமாகவே போம்.

பங்கயக் கண்ணன் என்கோ! பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ! அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ! திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ சாதி மாணிக்கத்தையே!–3-4-3-நோக்குக்கும் முறுவலுக்கும் தோற்றார் விழும் திருவடிகள் –நிலத்தைச் சொல்லுகிறது.-

வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க; நாடொறும் வானவர்
தம்மை ஆளுமவனும் நான்முகனும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவரே.–3-6-4-அநந்ய பிரயோஜநரோபாதி தடை இன்றிக்கே புக்கு நிரதிசய போக்யமான திருவடிகளை நினைத்தும் அது உள்ளடங்காமே புகழ்ந்தும் அது தானே யாத்ரையாய் சஞ்சரிப்பர்கள்-நாடொறும் செம்மையால் என்னவுமாம் –வேறு பலன்களைக் கருதும் தன்மையும் நெஞ்சிலே கிடக்கச்செய்தே வேறு பலனைக் கருதாதவர்களைப் போல வந்து பற்றாநிற்பர்கள் ஆதலின், ‘செம்மையால் திரிவர்’ என்கிறது; ‘வேறொரு பயனை விரும்புகிற விருப்பமும் உள்ளே கிடக்கச்செய்தே அது இன்றித் தன்னையே பற்றினாரைப் போலே இருக்க, புகுவது புறப்படுவதாய்த் திரியும்படி அன்றோ அவன்படி இருக்கிறது?’ என்றபடி.-செம்மை – செவ்வை; அதாவது, வேறொரு பயனையும் கருதாமை.
தூயோமாய் வந்தோம் –என்று இல்லாமல் -இவர்கள் மித்ர பாவேன -பாவ தோஷமும் கிடக்கச் செய்தே -அநந்ய பிரயோஜனர் போலே புகுந்து புறப்பட்டு –

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-
யுத்தத்திலே அன்று தேரிலே ரதியாய் அன்றிக்கே கையாளாய் சாரத்யம் பண்ணினவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை-காண்பது எஞ்ஞான்று கொலோ என்கிறபடியே பட்டினியாய்க் கிடக்கிற கண்கள் காண்பது-சேனா தூளியும் உழவு கோலும் சிறு வாய்க் கயிறுமான வடிவைக் காண்பது என்றோ –கனைக்கை-த்வநிக்கை-என்னுதல் – செறிகை-என்னுதல் –சேநா தூளியும் உழவுகோலும் சிறுவாய்க் கயிறும் தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளும் அத்திருவடிகளிலே சார்த்தின சிறுச் சதங்கையுமாய்ச் சாரதி வேஷத்தோடே நின்ற போதைத் திருவடிகளில் ஆபரணத்தின் ஒலி செவிப்படவும் அவ்வடிவைக் காணவும் காணும் ஆசை.-இக்கண்கள் அடிப்படுவது –திருவடிப் படுவது -எப்போதோ? இவை முடியப் பட்டினி விட்டே போந்தவை இப்பட்டினி விடக்கடவது என்றோ?‘அவ்வடிவைக் காண வேண்டும்,’ என்று விடாய்த்த கண்கள் ‘காணப் பெறுவது என்றோ?’ என்றபடி. இவர் மனஸ் சஹகாரியம் இல்லாமலே கண்கள் காண ஆசைப் படுகின்றனவே

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே.–3-8-1-அவனுடைய சேஷித்வத்தை அனுசந்தித்தால் தம்முடைய அனுரூபமாக திருவடிகளில் இறே விழுவது-திருமுடியின் அழகை நினைந்து தோற்றுத் திருவடிகளிலே விழுகிறார். ஒருகாலும் அடி விடாரே.-மேல் திருவாய்மொழியில் ‘தன் தாள் இணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை’ என்றது, வடிம்பு இடுகிறபடி.-‘எல்லார்க்கும் பொதுவான திருவடிகளை என் தலையிலே வையாய்,’ என்பது கருத்து.-குணாகுண நிரூபணம் அசேஷ லோக சரண்யமான திருவடிகளை உடையவனே-மதீய மூர்த்தானாம் அலங்கரிஷ்யதி -என்று வகுத்த திருவடிகளை என் தலையிலே வைக்கப் பெறுவது எப்போது காண் என்று கருத்து

———————

நாலாம் பத்தால் –
இலங்கை நகர் அம்பெரி உய்த்த உய்த்தவர் -4-2-8-என்றும் –
வல் வினை தீர்க்கும் கண்ணனை -4-4-11-என்றும் –
தொல் வினை தீர -4-4-11-என்றும் –
வெய்ய நோய்கள் முழுவதும் வியன் ஞாலத்து வீய -4-5-2-என்றும் –
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் -4-5-4-என்றும் –
பிறந்தும் செத்தும் நின்று இடரும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன் -4-9-7-என்றும் –
நோயே மூப்பு பிறப்பு இறப்பு பிணியே என்று இவை ஒழிய -4-9-9-என்றும் –
வேட்கை எல்லாம் விடுத்து –கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை -4-9-9-என்றும் –
அக்தே உய்யப் புகுமாறு -4-1-11-என்றும் –
உய்வுபாயம் மற்று இன்மை தேறி -4-3-11-என்றும் –
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் ஹேதுவான ப்ராபகத்வம் பிரதிபாதிதம் ஆய்த்து

கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர்
தாள் இணை மேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால்; நான் இதற்கு என்செய்கேன் நங்கைமீர்?–4-2-8-சந்த்ர ஆதித்யர்களும் புகப் பயப்படுமூர்-சர அக்னியை புக பிறப்பித்தவர் -கேவல அக்னி சோற்றை வேவிக்குமது ஒழிய பிரவேசிக்க கூசுமூர்-கையாலே சர அக்னியை பிரவேசிப்பித்தான்–அம்பாகிய நெருப்பைப் புகச் செய்தவர்.-சக்கரவர்த்தி திருமகன் இதனைக் கை தொட்டு சிக்ஷித்துக் குணவான் ஆக்கிப் பின்பே அன்றோ போகவிட்டது?-பலவான் ஆக்கி என்றபடி -நாணுக்கும் குணவான் -நாணை ஏற்றி அனுப்பினார் என்றபடி –ஆகையாலே, கேவலாக்நி புகுதற்குக் கூசும் ஊரிலே தன் வாய் வலியாலே புக்கதாயிற்று.-சரத்தின் பலம் -வாய் வலி –யதா ராகவா நிர்முக்த சர -என்று திருவடி புகிலும் சரஸ்த நீயானாக இறே புகுந்தது-இப்படி, தான், முதுகிட்டாரையுங்கூட, குணவான்கள் ஆக்கும்படி ஏக்கற்றவருடைய திருவடிகளில் சார்த்தப்பட்ட.-ஏ- வரும் வெஞ்சிலை -ஏ – க்கற்றவர் -சக்தி கொடுத்து போக்க வைத்தவர்
ஏ -அம்பு -கை தொடுகை -பிடிக்கையும் அடிக்கையும்-சிஷை -அர்ஜவம் நியமிக்கி -நாணில் ஏத்தி-முதுகிடவை முதுகிலே அம்புறா தூணி வைப்பதும் -சொன்ன வார்த்தை கேட்கால் முது காட்டி ஓடினார் –

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–4-4-11–அடியார்களுடைய பிரிவிற்குக் காரணமான மஹா பாவத்தைப் போக்கும் தன்மையனான கிருஷ்ணனை. பெற்றவர்கள் கை விட்டால் கைப்பிடித்தார் விடாரே–என் செய்கேன் என்று கை விட்டதும் -இவன் கைக் கொண்டான் -கை பிடித்தவர் -இதம் சீதா -பிரியம் உடன் -பிடித்தவர்-ஆஸ்ரிதர் உடைய விஸ்லேஷ ஹேதுவான மஹா பாபத்தை போக்கும் ஸ்வ பாவனான கிருஷ்ணனை—தொல் வினை தீர -அநாதி யான அவித்யாதிகள் நீங்கி-இவர் பாடின திருவாய்மொழியைக் கற்றவர்களைத் தொழுது நித்திய ஸூரிகள் உய்வு பெறும்படி.-வீற்றிருப்பாரே –-அவன் இறைவனாம் தன்மைக்கு முடி சூடி இருக்கப் பெறுவர்கள்.-‘அந்த முத்தன் சுதந்தரன் ஆகிறான்,’ என்னக் கடவதன்றோ? என்றது,-‘கர்மம் அற்றவன் ஆகின்றான்’ என்றபடி. வீற்று -வேறுபாடு. ஸ்வராட் பவதி -ஸ்ருதி-சாம்யாபத்தி அடைந்து -கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு முடி சூடி என்றபடி –

மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-குரூரமான சாம்சாரிக சகல துக்கங்களும் பூமியிலே இருக்கப் போம் படி ‘ வியன் ஞாலத்திலே இருக்கையால் உண்டான வெய்ய நோய்கள் என்னுதல்-லோகத்தில் துரிதங்கள் எல்லாம் நசிக்கும் படி என்னுதல்
பாவனா பிரகர்ஷத்தாலே-தாம் பரம பதத்தில் இருக்கிறாராய் பூமியில் உள்ள துக்கங்கள் எல்லாம் போம்படி என்னுதல்-க்கஸ்தா பஸ்யந்தி பூகதான்-என்று சீயர் அருளிச் செய்தார் –‘அவசியம் அனுபவித்தே தீரவேண்டும்’ என்கிறபடியே, அனுபவித்தால் அல்லது நசிக்கக் கடவன அல்லாத கர்மங்கள் முழுதும் நசிக்க. இவ்வுலகத்திலே இருக்கச் செய்தே, இவை முழுதும் அழிந்தன என்று சொல்லலாம்படி யாயிற்று, பகவானுடைய அனுபவத்தாலே பிறந்த தெளிவு; ஆதலால், ‘வியன் ஞாலத்து வீய’ என்கிறது.-‘பனை நிழல் போலே தம்மை ஒருவரையும் நோக்கிக் கொள்ளுகை யன்றிக்கே, ஊரும் நாடும் உலகமும்
தம்மைப் போலே யாம்படி தாம் இருந்த உலகத்தில் உண்டான கர்மங்களும் முழுதும் அழிந்தன,’ என்னுதல்.
அங்ஙனம் அன்றிக்கே,‘வியன் ஞாலம்’ என்று வேறு ஒரு தேசம் போலே இருக்கச் சொல்லுகையாலே,தாம் ‘வீற்றிருந்து ஏழுலகு’ என்னும் இத் திருவாய்மொழியை அருளிச் செய்கிறது-பரமபதத்திலே இருந்து போலே காணும்,’ என்று அருளிச் செய்வர்.
பாவனையின் மிகுதியாலே திருவுள்ளம் பரமபதத்திலேயாய் அங்குற்றாராய்த் தோன்றுகிறபடி.-வியன் ஞாலம் – ‘ஆச்சரியப்படத் தக்க உலகம்’ என்னுதல்; ‘பரப்பையுடைத்தான உலகம்’ என்னுதல்.

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-அகல நின்று ப்ரயோஜனங்களைக் கொண்டு போகாதே அநந்ய பிரயோஜனராய் ஆஸ்ரயித்து இருப்பார் -கிட்டக்கொண்டு –தேஹி மே ததாமி தே -‘நான் உனக்குத் தருகிறேன்; நீ எனக்கு ஒன்று கொடு,’ என்று வேறு பிரயோஜனங்களுக்கு மடியேற்றுக்கொண்டு போகை அன்றிக்கே
,எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை வழுவா வகைநினைந்து வைகல் தொழுவார்’-முதல் திருவந்-26-என்கிறபடியே,-அவன் றன்னையே பிரயோஜனமாகக் கொண்டு தொழுமவர்கள். என்றது,-இன்று வந்தித்தனையும் அமுது செய்திடப்பெறில் நான் ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்’- நாய்ச்சியார் திருமொழி, 9 : 7.என்கிறபடியே தொழுமவர்கள் என்றபடி.-கொடுத்துக் கொள்கை அன்றிக்கே கொண்டதுக்குக் கைக் கூலி கொடுக்க வேண்டும் –-பகவத் அலாபம் ஆகிற துக்கம் போம்படி-அநந்ய பிரயோஜனரை குறித்து அநந்ய பிரயோஜனனாயக் கலக்கும் உபகாரகன் -அவர்களுக்குப் பின்னை வினை உண்டோ?’ என்னில், வேறு பிரயோஜனங்களிலே
நெஞ்சு செல்லுகைக்கு அடியான பாவங்கள் போகும்படியாக.
‘ஆஸ்ரயண விரோதி கழிந்ததேயாகிலும், பாப ஹேதுவான சரீரம் இருக்கையாலே வேறு பிரயோஜனங்களிலே மனம் செல்லுகைக்கு அடியான பாபம் உண்டாகைக்குக் காரணம் உண்டே யன்றோ? அத்தகைய பாபங்கள் போம்படி’ என்பது கருத்து.

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-இறப்பு பிறப்பு பிணி வியாதி இவற்றாலேநோவுபடுகிற சம்சாரிகள் நடுவில் நின்றும்–சரீரத்துக்கு வந்தவற்றுக்குச் சரீரியான ஆத்துமா இன்புறுதல் துன்புறுதல் செய்யுமதனைப் போன்று, எனக்கு வந்தவற்றுக்கு இன்புறல் துன்புறல் செய்வாய் நீ ஆம் படி சம்பந்தம் உண்டாய் இருந்த பின்பு, பிறவி காரணமாக வருகின்ற இந்தத் துன்பங்களைக் கழித்து-அழைத்துக் கொள் -ஆதி -மநோ வியாதி என்றவாறு -வியாதி தேக வியாதி–கொடிதான லோகம் -சப் தாதி விஷய ப்ரவணமாய் த்வத் விமுகமான லோகம் -த்ருஷ்ட்டி விஷம் போலே காணவே முடிவன் என்கிறார்-இவன் தானே வருகிறான்,’ என்று இராமல், நீயே அழைத்துக் கொண்டருள வேண்டும்.

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகைசெய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-
உன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களிலும் உண்டான சங்கத்தை விடுவித்து -நான் எனக்கு என்று இராத படி பண்ணி—எனக்கு உன்னை ஒழிந்தவை ஆமத்தனை அன்றோ ஆசைப் படுகைக்கு?
உன் உலகத்தில் நான் ‘எனக்கு, எனக்கு’ என்னாதது உண்டோ?-யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்திலையோ?ருசியுடைய என்னை உன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ணி வர்த்திக்கும் படி –புறம்பான விஷயங்களிலே உண்டான ஆசை எல்லாம் உன் பக்கலிலே யாய், உன் திருவடி களையே நான் ஆதரித்து, அதுவே வாழ்க்கையாய்ச் செல்லும்படிக்காக.-அந்நிய சாத்தியமான திருவடிகளிலே கூட்டினாய் —யாவர் சிலர்க்கும் தந்தாமால் சேர்த்துக் கொள்ள அரிய திருவடிகளை நான் சேரும்படி என்னைச் சேர்த்துக் கொண்டாய்.கேட்டார் வாய் கேட்க்கை யன்றிக்கே நான் அனுபவிக்கப் பெற்றேன் ஆகையால் அறிந்தேன்-

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11-நான் சொன்னதுவே ஆத்மாவுக்கு உஜ்ஜீவன உபாயம் என்று—திருநாரணன்தாள்’ என்று நான் சொன்ன அதுவே உய்வதற்கு உரிய வழியும் பலமும் என்று. உபாயாந்தரம் வேறே இல்லை -பிரயோஜ நாந்தரம் இல்லை –அதுவே உய்வு -அதுவே ஆறு -அதுவே உய்யப் புகும் ஆறு –-அது ஏது என்னில்-ஸூ லபனான கிருஷ்ணனை யாயிற்று கவி பாடிற்று –கண்ணனைத் தாள் பற்றி’ என்று தாமும் சொல்லி, கண்ணன் கழல்கள் நினைமினோ’ என்று பிறர்க்கும் உபதேசித்து நின்றாரே?-அது தன்னையே அருளிச்செய்கிறார். ‘இப்படி அடியுடையார் புறம்பு இல்லை’ என்றே அன்றோ இவ்வடிகளைத் தாம் பற்றியது?-‘துயர் அறு சுடர்அடி தொழுது எழு’ என்று தம் திருவுள்ளத்திற்கு அருளிச்செய்தார்;‘வண் புகழ் நாரணன் திண்கழல் சேரே’ என்று பரோபதேசம் செய்தார் அங்கு.-இங்கு, ‘கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே,’ என்றார்;‘கண்ணன் கழல்கள் நினைமினோ,’ என்று பரோபதேசம் செய்தார்.
இது என்ன அடிப்பாடுதான்! ‘கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்,’ என்றே அன்றோ பரோபதேசம் முடிக்கிறதும்?-திருவடியில் என்ன ப்ராவண்யம் –-

உய்வு பாயம் மற்றின்மை தேறிக் கண்ணன் ஒண்கழல்கள் மேல்
செய்ய தாம ரைப்பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன்,
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.-–4-3-11-அவன் பிரணயித்வ குணத்தை பேசா விடில் உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று தெளிந்து ––இவர் சர்வேசுவரனுடைய காதல் குணத்தைப் பேசத் தொடங்கியது, பேசித் தலைக்கட்ட வல்லவராய் அன்று; இஃது ஒழியத் தரிக்கைக்கு உபாயம் இல்லை என்று தெளிந்து.-தான் பரம காதலன் என்பதனை அவதரித்துப் பிரகாசிப்பித்த கண்ணபிரானுடைய திருவடிகளிலே.-அவதரித்து தன் பிரணயித்வ குணத்தை ஆவிஷ் கரித்த கிருஷ்ணன் திருவடிகளில்-

—————–

ஐஞ்சாம் பத்தால் –
தமியேனுக்கு அருளாய் -5-7-2-என்றும்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -5-7-10-என்றும் –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –5-8-3-என்றும் –
அவளை உயிர் உண்டான் கழல்கள் அவையே சரணாக கொண்ட 5-8-11–என்றும் –
நாமங்கள் ஆயிரம் உடைய நம்பெருமான் அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் –5-9-11-என்றும் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -5-10-11-என்றும் –
நாள் தோரும் ஏக சிந்தையனாய் -5-10-11-என்றும் –
பிரார்த்தனா கர்ப்ப விஸ்ரம்பம் பிரதிபாதிதம் ஆய்த்து(பிரார்த்தனையை உள்ளடிக்கிய மஹா விஸ்வாஸம்ப்ரபத்யே கத்யர்த்தம் புத்த்யர்த்தம்)

அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-என் பக்கல் ஸத்தாத்திரேகி இருப்பது ஒன்றும் இல்லை-ஆற்றாமையோடே ஒரு துணை இன்றிக்கே இருக்கிற எனக்கு—தமியேனுக்கு –1- இத்தலையும் குறைவற்றது என்கிறார். ருசி உள்ளதே –அங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன், -அங்கே சதா பஸ்யந்தி அன்றோ-இங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன். -இங்குள்ளார்க்கு இவ்விஷயத்தை அறியாமையாலே பிரிவு இல்லையே.-தமியேனுக்கு–2-உன்னை ஒழியத் துணை இல்லாத எனக்கு. ஸ்வரூபத்தைச்‘சாதனம்’ என்று செலவு எழுதிக் கழிக்கில் கழிக்குமித்தனை. -சாதநாந்தர ஸூன்யன்-அவாவில் வீழ்ந்து -பக்தி -சிநேக பூர்வம் உபாயம் ஆகாதோ -என்னில் இது ஸ்வரூபம் தானே –சாதனம் என்று இத்தை எழுத ஒண்ணாதே-நீ உபாயம் ஆனாலும் உபாயத்தைப் பிரதிபத்தி பண்ணுவார் வேண்டாவோ.–பிரபன்ன ஜன கூடஸ்தர் என்னை அன்றோ சொல்கிறார்கள் –தமியேன்-3-பிராட்டியில் வேறுபாடு அங்காகில் ஒரு திரிசடையாகிலும் உண்டே அன்றோ,-இங்கு “ஆவார் ஆர் துணை” என்னும்படி அன்றோ தனிமை செய்ய வேண்டுவது என் என்ன-ருசிக்குப் பண்ணின க்ருஷியை விரோதி நிவ்ருத்திக்கும் ப்ராப்திக்கும் பண்ணும் இத்தனை என்கிறார் –என் வெறுமையும் உன் நிறைவும் அறிகைக்கு, நீ அடியில் தந்த அருள் இன்று குடி போயிற்றோ, அன்று நான் விரும்பாதிருக்க அருளின நீ, விரும்புவதற்குத் தகுதியைப் பிறப்பித்துப் பொகடவோ.
ருசியை உண்டாக்குவார் ஒருவரும், உபாயத்தை அநுஷ்டிக்கிறவர் ஒருவருமாயோ இருப்பது.-நின்னருளே புரிந்திருக்கிற எனக்கு அருளாயாகில் பின்னை யார்க்கு வேறு அருள இருக்கிறாய்.

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-ஆறு -என்று உபாயம் -சரண் என்று உபேயம் -உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம் படி பண்ணினாய் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்–இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்-எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி பண்ணித் தந்தாய் –ஆறு -உபாயம் -உபாக்யார்த்தைக வாசக -என்கையாலே சரண் என்று உபாயம் -எனக்கு என்று -உபாயாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தமக்கு உள்ள வேறுபாடு சொல்லுகிறார் –நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி-உபாயாந்தர ஸூன்யத்தையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திரு வாய் மொழி யாகையாலே அத்தையே நிகமிக்கிறது -அவதாரணத்தாலே ஏக பதத்தை நினைக்கிறது -ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே உபாயாந்தரங்களை நெகிழ்கை ஒழிய -நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாம் -ஒளஷத சேவை பண்ணினான் ஒருவன் சர்ப்பத்தின் வாயிலே கை கொடுத்தால் நிர்ப்பாதம் -ஒளஷத ஸ்பர்சம் இல்லாதவன் அத்தைச் செய்தால் மரண ஹேதுவாம் –

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை –த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ –“மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”– ஸ்ரீகீதை. 9. 34.“என்னை நமஸ்காரம் செய்வாய், என்னை அடைவாய்” என்றால் எனக்குச் சோகம் போகாது கண்டாய்.-ஓதி நாம் குளித்து -நமக்கே நலம் ஆதலால் -திருப் புல்லாணி-நமக்கு நலம் தேடும் –-உபாயாந்தரம் வேண்டாம் -என் நலம் நீ தேடுவதே உக்தம் –உபாயம் தன்னைப் பொறுக்கும் -உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் -பிரபத்தி எதையும் பொறாதே –யாவையாலும்’ என்னாமல், ‘யாவராலும்’ என்கிறது உபாய பாவம் ஒரு சேதனனாலே என்றிருக்கையாலே.-அன்றிக்கே, பெறுவது உன்னையே யாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன்,-என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன்.-மற்றையவற்றிற்கும் அபிமத சித்தி உண்டேயாகிலும் காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே ஸ்வரூப விரோதியானது எனக்கு வேண்டாம்.
கடல் கடத்தப் பெற இருத்தல், சபித்துப் பெற இருத்தல் செய்யாத பிராட்டியைப் போலே. என்றது, இரண்டு தலைகளையும் அழிக்கையே அன்றோ. ஒருவராலும் ஒருகுறை நிரம்புவதாக வேண்டி இரேன்.-அன்றிக்கே, ‘உன்னால் அல்லால்’ என்கிற இதனை, உபேய விஷயமாக்கி, ‘உன்னை ஒழியமற்றென்றால் எனக்கு ஒருகுறை இல்லை’ என்று சொல்லுவாருமுளர்.-இப்பொருள் அத்துணைச் சிறப்புடைத்தன்று என்பது போதரும்.

உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்

குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11-ஊழலை கோத்தால் போலே இருக்கிற எலும்புகளையுடைய பேய்ச்சி முலையிலே உகப்பாலே அவளை ப்ராணாபஹாரம் பண்ணின விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணனுடையவையாய்-தமக்கு உபாயமாக முன்பு பிரகாசிப்பித்த திருவடிகளையே-அபிமத சித்திக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாரானவர்-விருப்பமில்லாதவைகள் நீங்குவதற்கும் விருப்பமுள்ளவைகளை அடைவதற்கும் உபாயம் என்று அறுதியிட்ட ஆழ்வார்.-விரோதிகளைப் போக்குவதும் அவனைத் தருவதும் திருவடிகளேயாம் என்பார் ‘அவையே’ என ஏகாரம் கொடுத்து ஓதுகிறார் பலியாவிட்டாலும் தம்மடி விடாதவரே அன்றோ இவர்; ஆதலின், ‘கொண்ட’ என்கிறார்

நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த

நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11—ஸ்வயம் பிரகாசகனான சர்வேச்வரன் ஆயிரம் திருப் பெயர்களை யுடையவனாயிருக்கிறான்” என்கிறபடியே, குணங்களுக்கும் செயல்களுக்கும் வாசகமான திருப் பெயர்களை யுடையவனாகையாலே சர்வேச்வரனாகப் பிரசித்தனானவன்.தேவோ நாம சஹஸ்ரவான் ஸஹஸ்ர பாஹு: ஸர்வஜ்ஞோ தேவோ நாம ஸஹஸ்ரவாந்”-பாரதம். என்கிறபடியே குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களை யுடையவன் ஆகையாலே சர்வேஸ்வரனாக பிரசித்தனானவன்—-‘நம்’ என்பது, பிரசித்தியைக் காட்டும். பெருமான்-சர்வேஸ்வரன்.-அவனைப் பெறாதே நோவு பட நோவு பட–புறம்புள்ள காற் கட்டுக்களை விட்டு, அவன் திருவடிகளே ரக்ஷகமாகப் பற்றும் ஆழ்வார் பிராட்டி ஆற்றாமை மிக்க இடத்திலும் ராவணனை சபிய்யாதே பெருமாள் வரவை பார்த்து இருந்தால் போலே அவனுக்கு திரு நாமங்கள் போலே குண சேஷ்டிதங்களுக்கு ப்ரதிபாதகமான ஆயிரத்திலும்-ஆராய்ந்து உரைத்த இப்பத்தையும்

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்
க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-அனந்த சாயித்தவம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே -சர்வாதிகனே சரண்யன் என்கிறது -திரு வனந்த ஆழ்வானுடைய புருஷகார பாவம் சொல்லுகிறது என்றுமாம் –படுக்கையைச் சொல்ல படுக்கை யுடையாரைச் சொல்லிற்றாம் இறே-ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன் –நமக்கு திருவடிகளே உபாயம் என்று –அவதாரணத்தாலே உபாய நைரபேஷ்யம் சொல்லுகிறது -சம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது தவிர வேறு ஒன்றில் கால் தாழாது ஒழி கை -மஹா விச்வாஸம் ஆகிறது –நாள் தோறும் இதுவே மநோ ரதமான ஆழ்வார் -பகவத் குண பிரேரிதராய் தாம் உள்ராகைக்காக-ஈஸ்வர நைரபேஷ்யம் -பல பிரபத்தி என்றும் சொல்வார்கள் –-உபாய எதிர்பார்க்க மாட்டார் -அதிகாரி ஸ்வரூபம் வேண்டுமே – ஆகிஞ்சன்யம் அனந்யகதி மகா விஸ்வாசாதிகள் எல்லாம் இதுவே –சம்சார சம்பந்தப்பட்ட ஸ்வபாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும்
அப்படி அடிக்கழிவு செய்வார் ஒருவரல்லரே இவர். மஹா விஸ்வாசமாகிறது, இஃது ஒழிய வேறொன்றில் கால் தாழாதொழிகை ஆம்.-புறம்பு உண்டான சிந்தனை போய், இவ் விஷயத்திலே ஒரே தன்மையான எண்ணத்தை யுடையராய், பொருள் ஈட்டுதற்குச் செல்வார் ஒருவர் ஒரு சிராயை -மரக்கலம் -நம்பி நாலாண்டு பதிற்றாண்டு இழியா நின்றார்களன்றோ,
பேற்றின் சீர்மையைப் பார்த்தால் அவ்வளவாகிலும் வேண்டாவோ இவ் விஷயத்தில்.
சம்சாரத்தின் இயல்பால் வியசனங்கள் தொடர்ந்து வந்தாலும் உறுதி குலையாமே போருமதன்றோ ஸ்வரூபமாவது.-மித்ர பாவேனே –ஸூசகம் –தொழுது எழு மிகை என்பான் என் என்னில் -மகா விஸ்வாசம் இதில் வைப்பது சுலபம் தானே –

————–

ஆறாம் பத்தால் –
திரு மா மகள் இருந்தாம் மலிந்து இருந்து -6-5-8-என்றும் –
அடிமை செய்தார் திருமாலுக்கே -6-5-11-என்றும் –
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் -6-7-8-என்றும்
என் திரு மார்வற்கு (மூவரையும் சொன்னபடி)-6-8-10-என்றும் –
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே(உயிர்கள் காப்பார் கைங்கர்யம் இல்லாமல் ஆத்மநாசமாகுமே -ஆகவே ரக்ஷணத்தைச் சொன்னபடி) -6-9-3-என்றும்
கைங்கர்ய பிரார்த்தனா கர்ப்பமான நித்ய சம்பந்தம் பிரதிபாதிதம் ஆய்த்து –

(கீழ் பூர்வ வாக்யத்திலும் நித்ய யோகம் -எப்பொழுதும் புருஷகாரமாவதற்காக -இங்கு ஒன்றைப் பத்தாக்கி கைங்கர்ய வர்த்தகையாய் இருப்பதற்கு -கைங்கர்ய பிரதிசம்பந்தி சேஷி மிதுனத்துக்கே தான்)

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம்மலிந்து
இருந்து வாழ்பொருநல் வடகரை வண்தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள்தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8-ஆராத்யரான பெரிய பிராட்டியாரும் தானும் சம்ருத்தமாய் இருந்து வாழுகிற வூர் -வேதமும் வைதிக சமாராதானமும் அதன் பலமான சம்பத்துமானவை மிக்கு இருந்து வர்த்திக்கிற வூர் -என்றுமாம் –தாம் என்றது கீழ் சொன்னவை தாம் என்கை -ஆராதிக்கின்றவர்களுடைய நிறைவு இருக்கிறபடி.-திருமாமகள் – செல்வம்.

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-இப்பத்தை அப்யஸிக்க வல்லார் ஸ்ரீ யபதிக்கு அடிமை செய்வார்-பெருமாளும் பிராட்டியும் சேர இருக்க இளைய பெருமாள் அடிமை செய்தாற்போலே, சேர்த்தியிலே அடிமை செய்யப் பெறுவர்

ஒசிந்த நுண்ணிடைமேல் கையை வைத்து நொந்துநொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ணநீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்தஎம் காரிகையே.–6-7-8–வண்டாலே ஆத்தசாரமான புஷபம் போலே நித்ய சம்ச்லேஷத்தாலே துவண்டு இருக்கிற பிராட்டிக்கு நாயகன் -இவருடைய சேர்த்தி யாயிற்று இவளைக் கொண்டு போயிற்று -அவனுடைய பிரணயித்தவம் இறே இவளை இருக்க ஒட்டாது ஒழிந்தது-ஒசிந்த நுண்ணிடை-இவள் நடவாதே இருந்தாலும், நினைத்தால் வயிறு எரிய வேண்டும்படி காண் இடை இருப்பது!-நடு ஒன்று இல்லை என்று அறிகின்றிலள். தன் கையை வைக்கவும் பொறாதே அன்றோ தன் இடை தான்;“மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள்” – பெரிய திருமொழி, 3. 7 : 7.-என்று,அவன் கூடப் போகச் செய்தேயும் அஞ்ச வேண்டும் படியான இடை அன்றோ.-ஒசிதல் – துவளுதல். நுண்ணியதாய் தேரிதான இடை.-பல சொல்லி என்? இடை ஒன்று இல்லை என்கை. அதாவது, இற்றது முறிந்தது இப்போது, பின்னை’ என்று பயப்பட வேண்டும்படியாய் இருக்கை.-அவனுடைய காதல் குணத்திலே அகப்பட்டவள் இனி மீளப் புகுகிறாளோ? என்னுதல்.-ஒண் மலராள் கொழுநன் என்று அவனுக்கு ஏற்றம் இருக்கிறபடி என்னுதல்.-திருமகளார் தனிக் கேள்வன்-திருவாய். 1. 6 : 9.- என்னும் பெருமை யுடைய பிரானாரே அன்றோ.

வந்திருந்து உம்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்!
என்திரு மார்வற்கு என்னை இன்னவாறிவள் காண்மின்என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர்மறு மாற்றங்களே.–6-8-10-என் ஸ்வாமிநி யான பெரிய பிராட்டியாரை திரு மார்விலே உடையவர்க்கு-எனக்கு அங்கு ஓர் அடி இல்லாமை மிறுக்குப் படுகிறேனோ?“பிராட்டி சந்நிதியில் ஸ்ரீராமபிரானைப் பார்த்து இந்த வார்த்தையைச் சொன்னார்”“ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தம் இதம் வசனம் அப்ரவீத்”என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 6.-என்கிறபடியே, சொன்ன வார்த்தை விலை போமவள் முன்னால் சொல்லுங்கோள்;
நான் பற்றின அடைவே பற்றுங்கோள் என்கிறாள்.

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-பிராட்டியோடே கூட இருக்கிற யுன்னைக் கிட்டி அடிமை செய்யப் பெறாதே -மாதா பிதாக்களை சேர க் காணுமா போலே ஒரு மிதுனம் இ றே ப்ராப்யம் -மாதா பிதாக்களை அகன்று ஸ்தநனயப் பிரஜை ஜீவிக்க வற்றோ -தாயும் தமப்பனும் கூட இருக்கக் கிட்டப் பெறாதே, பால் குடிக்கும் குழந்தை நாக்கு ஒட்டிக் கிடந்து துடிக்குமாறு போலே இருக்கிறது காணும்.“வேறாகாதவள்” என்கிறபடியே, அவனும் அவளுமான சேர்த்தி யன்றோ இவர்க்குப் பேறு.-இருவரும் சேர்ந்த சேர்த்தி பேற்றுக்கு உறுப்பாய் அன்றோ இருப்பது –ஸஹ தர்ம ஸரீதவ -என்ன கடவது இறே

————————–

ஏழாம் பத்தால் -(இனிமைக்கு ஏழாம் பத்து ஸ்வாமித்வத்துக்கு எட்டாம் பத்து -இரண்டுமே உத்தரவாக்கிய நாராயண பதார்த்தம்-பூர்வ வாக்கியத்தில் ஆஸ்ரய ஸுகர்ய கல்யாண குண விஸிஷ்ட நாராயணன் -இங்கு ஆஸ்ரிய கார்ய ஆபாதக கல்யாண குண விஸிஷ்ட நாராயணன்)
கன்னலே அமுதே -7-1-2-என்றும் –
திருமாலின் சீர் இறப்பு எதிர்காலம் பருகிலும் ஆர்வனோ -7-9-9-என்றும்
ஏழுலகை இன்பம் பயக்க -7-10-1- என்றும்
கைங்கர்ய பிரதி சம்பந்தியான ஈஸ்வரனுடைய நிரதிசய போக்யதை பிரதிபாதிதம் ஆய்த்து

என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப்பகல் மோது வித்திட்
டுன்னை நான் அணு காவகை செய்து போதி கண்டாய்
கன்னலே! அமுதே! கார்முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!–7-1-2-அகலப் போனால் ஆற்ற ஒண்ணாத படி போக்யத்தை இருக்கிற படி –ஒரு வகையால் வந்த இனிமையாகில் நான் ஆறி இரேனோ? ‘ர்வ கந்த: ஸர்வ ரச’ என்கிறபடியே, எல்லா விதமான இனிய பொருள்களுமாய், அளவு இறந்து, கொள்ள மாளா இன்ப வெள்ளமாய் இராநின்றதே.
‘அமுது’ என்பது, இனிய பொருளுமாய், சாவாமல் காக்குமதுவுமாய் இருப்பது.

திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?

மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9-ஏதேனும் ஒன்றிலே புக்கால் அத்தை தலைக் கட்ட வல்ல சாமர்த்தியத்தை யுடையவன் -த்ருணத்தைக் கொண்டு ஒரு கார்யம் கொள்ளப் புக்கால் -அத்தைக் கொண்டே நினைத்த கார்யம் கொள்ளும் சாமர்த்தியத்தை யுடையவன் –திறம் -கூறுபாடு –துப்புரவு -சாமர்த்தியம்-திரு மாலின் சீர்-இந்த சாமர்த்யரத்துக்கு அடியாய் இருக்கிறது ஸ்ரீ யபதித்தவம் ஆயிற்று -ஸ்ரீ யபதியினுடைய கல்யாண குணங்களை –‘அவன் குப்பைக்காலன் காண், ஸ்ரீமான் செய்தன எல்லாம் நன்றாய் வருங்காண்’ என்னக்கடவது அன்றோ?(குப்பைக்காலன்-நல்லவன் விபரீத லக்ஷணை)இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?-போன காலமும் வரும் காலமும் நான் அனுபவித்தால் தான் ஆர்வேனோ -போன காலம் அனுபவிப்பாராய்ச் சொல்லுகிறார் அல்லர் -எல்லா காலமும் அனுபவித்தாலும் ஆரார் என்கை -கீழ்ச சொன்ன ஸமஸ்த சேதனருடைய போக்த்ருத்வ சக்தியையும் கூட்டிக் கொண்டு அனுபவித்தாலும் ஆராது-எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ என்கிறதில் காட்டிலும் ஏற்றம் இல்லையாம் இறே சேதனரைக் கூட்டிக் கொள்ளாத போது -நான் உடையேனாய் அனுபவிக்கப் புக்காலும் உயிர் வாழ்வதற்கு அடியான ஆயுள் அற்பமாகையாலே உபகாரத்தை நினைப்பதற்குக் காலம் போருகிறது இல்லை.

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்

அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-நிரதிசய ஆனந்தம் பிறக்கும் படியாக-நித்ய துக்கியான சம்சாரியானவன் -ஆனந்த மயனான தன்னோட்டை சேர்த்தியாலே ஆனந்திக்குமா போலே யாயிற்று -பிராட்டியோட்டை சேர்த்தியாலே தான் ஆனந்திக்கிற படி –அல்லி மலர் மக்கள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் -என்ன கடவது இறே –ராமஸ்து ஸீதயாசார்த்தம்ராகவோ அர்ஹதி வைதேஹீம் -என்று இறே இவளுக்கு ஏற்றம் –யஸ்ய ஜனகாத்மஜா -என்று இறே தனக்கு ஏற்றம் -எழிலை யுடைய பெரிய பிராட்டியார் –இருவரும் கூடின சேர்த்தியாலே சகல லோகங்களும் ஆனந்தம் உண்டாம் படி -இருவருக்கும் அந்யோன்யம் பிறந்த ஆனந்தம் இறே லோகத்தில் ஆனந்தத்துக்கு அடி –ராம்ஸ ஸீதாம் அநு ப்ராப்ய ராஜ்யம் புனர வாப்தவான் ப்ரஹ்ருஷ்டம் உதிதோ லோக -என்கிற படியே -மாதா பிதாக்கள் சேர இருந்தால் பிரஜைகளுக்கு மிகவும் ஏற்றம் உண்டாம் இறே –இந்த லோகங்களுக்கு ஸூகம் பிறக்கையாலே தனக்கு இனிமை பிறக்கும் படியாகவும் -இவற்றை ஆளுகைக்கு வந்து இருக்கிறார்கள் இருவரும் கூட என்று வேறுபாடு தோற்ற இருந்து இவற்றை ரஷியா நிற்கிற-எங்கள் பிரான்-என்னை இட்டு திருவாய்மொழி பாடுவித்துக் கொண்ட மஹா உபகாரகன் –கேசவன் தமருக்கு பின்பு இவர் தனி அல்லர் இறே

——————

எட்டாம் பத்தால் –
அடியனேன் பெரிய வம்மான் (நந்தகோபருக்கு சொத்து யசோதைக்கு அன்பு அடியேனுக்கு அம்மான்)-8-1-3-என்றும் –
விண்ணோர் கோன்  நங்கள் கோனை (ஸ்வாமித்வம்)-8-2-2-என்றும் –
அமர்ந்த நாதனை (ஸ்வாமித்வம் இவனிடம் அமர்ந்து இருக்கும் மற்றவர்கள் இடத்தில் இல்லை)-8-4-10-என்றும் –
மூவுலகாளி (க்ருதக -அக்ருதக -க்ருதாக்ருதக -ஸமஸ்த லோகங்களும் ஸ்வாமி)-8-9-5-என்றும் –
நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் -8-9-11-என்றும் –
சர்வ ஸ்வாமித்வம் பிரதிபாதிதம் ஆய்த்து

எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3-விபரீத ஞானம் உடையார்க்கோ வந்து கிட்டலாவது-ஸ்வரூப ஞானம் உடையோருக்கு வந்து கிட்டலாகாதோ -அடியேன் என்று இருப்பார்க்கோ உன் பெருமை எல்லாம் காட்டுவது –உன்னை மகன் என்று இருப்பார்கோ உதவல் ஆவது –முறை உணர்ந்து இருப்பார்க்கு உதவல் ஆகாதோ –தேவ தேவோ ஹரி பிதா -பிதாச் ச ரக்ஷக சேஷி -நவ வித சம்பந்தம் –நான் முறையில் நின்றவாறே நீயும் முறையிலே நில்லா நின்றாய் -என்றது-அடியேன் என்று நான் சொல்ல நீ ஈஸ்வரனாய் இரா நின்றாய் என்றபடி-

வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-நித்ய ஸூரிகளைப் போலே என்னை அநன்யார்ஹை யாக்கினவன் -ஒரு விபூதியாகப் படுத்தின பாட்டை கிடீர் என்னை ஒருத்தியையும் படுத்திற்று –

அமர்ந்த நாதனை யவரவராகி அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-ஆனைப் பிணங்களை குதிரை சுமக்க வற்றோ -என்னாத படி -உபய விபூதிக்கும் நாதன் என்றால் தாக்கு இருக்குமவனை –த்ரை லோக்யம் அபி நாதேந யேன ஸ்யன்னாதவத்தரம்-என்று ரஷ்யத்தில் காட்டில் ரக்ஷகத்வம் விஞ்சி இருக்கை –உபய விபூதிகட்கும் காரணம் பற்றாத சேஷி என்றால் போரும்படி இருக்கிறவனை-எந்த நாதனால் மூன்று உலகங்கட்கும் நல்ல நாதனை உடையன ஆகுமோ -என்ற பிரமாணம் படி-மூன்று உலகங்களையும் பெருமாளுக்கு கை யடைப்பு ஆக்கினாலும்-பின்னையும் காக்கப் படும் பொருள்கள் சுருங்கி காப்பாற்றுகின்ற துடிப்பே விஞ்சி இருக்கும் –

புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மையதன்று இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-ஸமஸ்த லோகங்களுக்கும் நிர்வாஹகன்-அப்பன் -ஐஸ்வர்யத்தாலும் குறைவறப் பெற்றேன் -என் தன் ப்ரீதியால் சொல்லுகிறாள் -அவனுடைய-திருவருள் மூழ்கினளே––கடல் கொண்ட வஸ்துவை யன்றோ நீங்கள் மீட்கப் பார்க்கிறது

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்ய நேர் பட்டார் -இவர் பாசுரத்தை சொன்னவர்கள் -இவருடைய வ்ருத்தியிலே அந்வயிக்கப் பெறுவார்கள் -என்கை -சர்வேஸ்வர ஸ்வரூபத்தையும் –ஸ்வ ஸ்வரூபத்தையும் -ப்ரதிபாதகமான பிரபந்த வை லக்ஷண்யத்தையும் -இத்தை அப்யசித்தாருடைய ப்ராப்ய வை லக்ஷண்யத்தையும் சொல்லிற்று ஆயிற்று –இவர் பாசுரத்தை சொன்னவர்-இவர் செய்ய விரும்பிய கைங்கர்யத்திலே சேரப் பெறுவர் –-நேர் படுகை -சொல்லப் படுகை -சொல்லப் பட்டார் -என்றபடி –-ஆக-இப் பாட்டால் சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபத்தையும்-
ஆத்ம ஸ்வரூபத்தையும்- இவற்றைச் சொல்லுகிற பிரபந்தத்தின் சிறப்பினையும்-
இதனைக் கற்றவர்கள் பெரும் பேற்றின் சிறப்பினையும்- சொல்லிற்று ஆயிற்று —

——————–

ஒன்பதாம் பத்தால் -(ஆய பதார்த்தம்)
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு உன் கோயில் சீய்த்து -9-2-1-என்றும் –
நின் தீர்த்த அடிமைக் குற்றேவல் -9-2-2-என்றும் –
தொடர்ந்து குற்றேவல் செய்து -9-2-3-என்றும் –
கொடுவினையேனும் பிடிக்க (முன்னில் மூன்றிலும் ப்ரகடம்)-9-2-10-என்றும் –
உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு -9-4-4-என்றும் –
ஆட் கொள்வான் ஒத்து -9-6-7-என்றும் –
நானும் மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன் -9-8-4–என்றும் –
நித்ய கைங்கர்யம் பிரதிபாதித்யம் ஆய்த்து

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப்
பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-நெடுநாள் கூடவே பண்ணிப் போந்த கடாக்ஷத்தையும் –எதிர் சூழல் புக்கு நெடுநாள் பட்ட கிலேசத்தின் பலம் அன்றோ இது -நெடு நாள் கிருஷி பண்ணி பல வேளையில் கை விடவோ –அதுக்கு அடியாக பெரிய பிராட்டியார் கடாக்ஷத்தையும் கொண்டு –அவனுடைய அருளின் ஸ்வாதந்தர்யத்தை கெடுக்கும் அவள் அருள் -பிரணயித்தவத்தால் வந்த பாரதந்தர்யம் இறே -என்னடியார் யது செய்யார் –என்னும் உன் கடாக்ஷமும் –நகச்சின் நபராத்யதி –என்னும் அவள் கடாக்ஷத்தையும் பெற்று –க்ருபயா பர்யபாலயத் -என்று கிருபா பரதந்த்ரமான உன் கடாக்ஷமும் -அந்த பாரதந்தர்யத்துக்கு அடியான அவள் கடாக்ஷமும் -என்றுமாம் –உகந்து அருளின நிலங்களிலே அசாதாரண பரிசர்யை பண்ணி -தேஹாத்ம அபிமானிகள் தம் தாமுடைய க்ருஹங்களைப் பேணுமவர்கள் –பிராட்டி யடியாக பகவத் பிரசாதம் பெற்றவர்கள் உகந்து அருளின தேசங்களை பேணுவர்கள் –இன்று புதிதாய் வந்ததோ -நீ விசேஷ கடாக்ஷம் பண்ண தொடங்கின அன்றே தொடங்கி வந்தது அன்றோ –

குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-தன்னுடைய ரஸ்யத்தை யாலே இதர புருஷார்த்தங்களிலே நசை அறுக்க வல்ல அடிமைகளில் அந்தரங்கமான அடிமைகளை செய்து-உன் பொன்-அடிக் கடவாதே-உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை அல்லது அறியாதே -என்னுதல் – உன் திருவடிகளை தப்பாதே என்னுதல் -அல்லது அறியாமை யாவது -அநந்ய பிரயோஜனகை -தப்பாது ஒழிகை யாவது -ஆஞ்ஞஜையை அதி லங்கியாது ஒழிகை –ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -என்று இருக்கையும் -பெருமாளை மீடகைக்கு சென்று திருவடிகளிலே விழ -பித்ரு வசனத்தை அனுஷ்டித்தோமானா நிறம் நமக்கு யுண்டாவது நீ ராஜ்யத்திலே இருக்கிறது காண் -என்ன ஆரூரோஹ ரதம் ஹ்ருஷ்ட -என்று மீளுகையும்

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-இத்தசையில் செய்யப்படுவது இது -என்று உணர்த்தி அந்தரங்க வ்ருத்தியைப் பண்ணி -பெருமாள் தமக்கு அபிமதங்களில் அவஹிதர் அன்றிக்கே இருந்த போதும்-இவ் வடிமையைக் கொண்டு அருள வேணும் -என்று வடிம்பிட்டு இளைய பெருமாள் அடிமை செய்தால் போலே –தொல்லடிமை-ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகமான வடிமை -மம சஹஜ கைங்கர்ய விதய -என்கிறபடியே–அகாரார்த்தா யைவ ஸ்வம் அஹம் அத மஹ்யம் ந நிவஹா நராணாம் நித்யாநாம் அயநம் இதி நாராயண பதம் யம் ஆஹ அஸ்மி காலம் சகலம் அபி சர்வத்ர சகலாஸூ அவஸ்தாஸூ ஆவிஸ்யு மம சஹஜ கைங்கர்ய விதய -அஷ்ட ஸ்லோகி –எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளுளும்-
தானாகவே உண்டாகும் கைங்கர்யங்கள் வெளிப்பட வேண்டும் -என்னக் கடவது அன்றோ –வழி வரும் தொண்டரோர்க்கு அருளி-நெறி தப்பாதே வருகிற அடியோங்களுக்கு கிருபை பண்ணி –அடிமை முறை தப்பாமே போருகிற-வேறு கதி இல்லாத-எங்களுக்கு-திருவருள் செய்து –இம் மூன்று பாசுரங்களிலும் தம்முடைய வம்ச பரம்பரையின் பெருமையை சொன்னால் போலே அன்றோ இருக்கிறது –அது அன்று இங்குச் சொல்லுகிறது-
ஒருவருக்கேயாய் இருப்பாரை முகம் பார்ப்பார் வேறு ஒருவர் இலர் -என்று-தம்முடைய அநந்ய கதித்வத்தைச் சொல்லுகிறார் –கைங்கர்ய கிரியைச் சொல்லி -யோக்யதை இருப்பதாகச் சொல்லிக் கொள்ள வில்லை -உனக்கே அற்றுத் தீர்ந்தோம் -நீ கை விட்டால்
வேறு யாரும் கொள்ள மாட்டார்கள் –மறந்தும் தொழா மாந்தர் -அன்றோ -அநந்ய கதித்வம் அன்றோ வெளியிட்டுக் கொள்கிறார் –-

கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-
இவ்வடிவில் வந்தால் ஒப்பு இல்லை -பகவத் தத்துவமும் ஒப்பன்று —துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்யாபி ஜன லஷணாம்-ராகவ அர்ஹதி வைதேஹீம் தம் ச இயம் அஸி தேஷணா-சுந்தர -16-5-பெருமாளுக்கு கருத்த கண்களை உடைய வளான இந்தப் பிராட்டியும் தகுந்தவள்-என்கிறபடியே-எற்றமாயே நின்றது அன்றோ –-அப்படிப்பட்ட நில மகள் -ஏவம் பூதை -என்னும் அத்தனை-அவர்கள் கூசித் தொட வேண்டும் படி ஸூ குமாரமான திருவடிகளை-அவர்கள் சந்நிதியும் யுண்டாய் இருக்க நான் இழப்பதே -என்னும் இன்னாப்பாலே சொல்லுகிறார் -கண்கள் சிவந்த -திருவாய் மொழிக்கு பின் நிகர்ஷ அனுசந்தானம் இல்லை இறே-நிரதிசய போக்யனாய் ஸந்நிஹிதனான நீ சத்தையை நோக்குகைக்காக ஒரு நாள் அங்கே அழைத்தல் -இங்கே வருதல் செய்து அருள வேணும் -வருதல் என்கிற இத்தை முந்துற சொல்லாது ஒழிந்தது அந்த சமுதாயத்தை காண வேணும் என்னும் நசையாலே –எல்லை இல்லாத இனியனாய்-அண்மையில் இருப்பவனான நீ-ஸ்வரூபத்தை நோக்குகைக்கு-ஒரு நாள் அங்கே அழைத்தல் -இங்கே வருதல்-செய்து அருள வேண்டும்-முற்பட வருதல் என்று இலர் ஆயிற்று-அச் சேர்க்கையை குலைக்க ஒண்ணாது என்னுமதனாலே-விருப்பம் உடையார் பக்கல் அவனைத் தனியே விட்டு இரார்கள் அன்றோ –அதனால் கூடக் கொடு வருவார்கள் என்னும் அதனை பற்றச் சொல்லுகிறார்-

உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4-சீரியது அடிமை செய்யுமது என்று–உனக்கு அடிமை புகுந்து -ஸ்வரூபம் பகவத் பரதந்த்ரம் என்று உணர்ந்தால் சீரிய பிரயோஜனம் கைங்கர்யம் இறே-உன் பக்கல் பெறுவது ஏதோ என்று -ஸ்வரூபத்தையும் உணர்ந்து -கைங்கர்யமே சீரியது -என்று அறிந்து -ஈஸ்வரன் அநந்ய பிரயோஜனர்க்கு வேறு ஒன்றைக் கொடுத்து விடுவான் அல்லன் -என்று அறியும் இவர் -உன் பக்கல் பெறுவது ஏதோ என்கைக்கு ஹேது என் என்னில் -க்ரமத்திலே வந்து முகம் காட்டுகிறோம் -என்று சம்சாரத்தில் இருப்பே சேஷித்து விடப் புகுகிறதோ -என் த்வரை அறிந்து முகம் காட்டுகிறாயோ-என்கைக்காக சொல்லுகிறார் என்பது –ஆர்த்த பிரபன்னர் அன்றோ ஆழ்வார் –கஜேந்திரன் அநாதி காலம் இழந்து காணப் பெற்றான் -பரதன் கண்டு இழந்து 14 சம்வத்சரம் பொறுத்து பெறப் பெற்றான் -எனக்கு என்ன ஆகுமோ-

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-அடிமை கொள்வாரைப் போலே புகுந்து –என்னை வெறும் தரை யாக்கின ஆச்சர்ய பூதனாலே –கீழே திருவருள் என்று மறைத்துச் சொன்ன வார்த்தையை வெளியிடுகிறார் –கிட்டின போது தாழ நின்று மின்மினி பரக்க பரிமாறும் ஆச்சர்யம்-

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்

நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-நித்ய ஸூரிகள் பண்ணும் ஆத்மாந்த தாஸ்யத்தில் அன்றோ நானும் அதிகரித்தது -ஒரு பிரயோஜனத்தை கொள்ளக் கிட்டினவனாய் ஆறி இருக்கிறேனோ -தாஸ்ய பரிமளத்தில் சுவடு அறியாதவனாய் ஆறி இருக்கிறேனோ

————-

பத்தாம் பத்தால் -(நமஸ் பதார்த்தம் ப்ராப்யத்தில் களை இருக்கிறது -மற்றை நம் காமங்கள் மாற்று)
துயர் கெடும் கடிது -10-1-7-என்றும் –
கெடும் இடர் ஆய வெல்லாம் -10-2-1-என்றும் –
எழுமையும் ஏதம் சாரா -10-2-2-என்றும் –
இப் பிறப்பு அறுக்கும் -10-2-5-என்றும் –
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க  இன்புறுதும் எம் பெண்மை யாற்றோம் -10-3-9-என்றும்
பிணி ஒன்றும் சாரா -10-4-7-என்றும்
பிறவித் துயர் கடிந்தோம் -10-4-3-என்றும் –
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம் -10-5-9-என்றும் –
அமரா வினைகளே -10-5-9–என்றும் –
கடு நரகம் புகழ் ஒழித்த -10-6-11-என்றும் –
தடுமாற்ற வினைகள் தீர்த்தான் -10-8-5-என்றும் –
பிறவி கெடுத்தேன் (அவனே செய்தாலும் இப்படி சொல்லும்படி வைத்து உகக்கிறான்)-10-8-3-என்றும் –
அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் -10-8-7-என்றும் –
அவா வற்று வீடு பெற்ற (ஞாதும் த்ரஷ்டும் ப்ராப்தி-பரபக்தி கீழ் எல்லாம் -பரஞானம் சூழ் விசும்பு -பரமபக்தி முனியே நான்முகன்)-10-10-11-என்றும் –
கைங்கர்ய பிரதிபந்தக நிஸ் சேஷ நிபர்ஹணம் பிரதிபாதிதம் ஆய்த்து –

மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே
-10-1-7-எல்லா தேவ ஜாதியோடும் கூட எல்லா லோகங்களையும் உண்டாக்குமவன் வர்த்திக்கிற திரு மோகூர்-நாம் சென்று -விடாதே ப்ரதக்ஷிணாதிகளைப் பண்ண-வழித் துணை இல்லை -என்று நாம் படும் துக்கங்கள் சடக்கென போகும் -அதஸோ அபயங்கதோ பவதி -என்னக் கடவது இறே -ஆனபின்பு மற்றிலம் அரண் –

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-இடர் என்று பேர் பெற்றவை அடங்க போம் –பாபே குருணி குருணி –என்று பாப அனுரூபமாக பிராய்ச சித்தம் பேதித்து இருக்கும் -திரு நாமத்துக்கு அங்கனம் ஒரு நியதி இல்லை –மேரு மந்த்ர மாத்ரோ அபி –நஸ்யதி –என்றபடி சகல பாபங்களும் போம் -திரு நாமங்கள் தான் பலவும் வேணுமோ என்னில் –ஒரு விரோதியைப் போக்கின படியைச் சொல்ல விரோதி வர்க்கமாக போம் என்னுதல் –ப்ரசஸ்த கேசன் என்றால் –கேசவ கிலேச நாசன – என்கிறபடியே சாம்சாரிக சகல துரிதங்களும் போம் என்னுதல் –பாபேந்தனாக்னி சசதைவ நிர்மல மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி –விஷ்ணு தர்மம் –பாவங்கள் ஆகிற விறகுக்கு நெருப்பு போன்றவர் -என்கிறபடியே
எல்லா துன்பங்களும் ஒரு முறையிலேயே அழியும் – –என்னக் கடவது இறே-நரகே பஸ்யமா நஸ்து யமேன பரி பாஷித-கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -பாரதம் -என்கிறபடியே -நீண்ட மயிர் முடியை உடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்ல-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும்-க இதி ப்ரஹ்மனொ நாம ஈசோஹம்சர்வ தேஹிநாம்-ஆவாம் தவ அங்கே சம்பூதௌ தாஸ்மான் கேசவ நாமவான் -என்கிறபடியே-பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவனே என்ன-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் –போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -என்கிறபடியே-அனுபவிக்க கடவனவும்-முன்பே தொடங்கி அனுபவிக்கிறவையும்-எல்லாம் நசிக்கும் ஆதலால் -எல்லாம் -என்கிறார் –என்ன -அர்த்த அனுசந்தானம் வேண்டா -யுக்தி மாத்திரமே அமையும் பாப விமோசனத்துக்கு என்கிறது –

இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2-போவோம் என்று இச்சை பிறந்த இன்றே போய்த் திருவனந்த புரத்தே சென்று புகுவீராகில் -இதர விஷய விரக்தி வேண்டாவோ -இச்சா மாத்திரமே அமையுமோ என்னில் –யதஹரேவ விரஜேத் ததஹரேவ பிரவ்ரஜேத்-ஜாபாலி ஸ்ம்ருதி –எவன் வைராக்யம் உள்ளவன் ஆகிறானோ அன்றே துறவறத்தை மேற்கொள்ள வேண்டும் -என்கிறபடியே- -அதிக்ருதாதிகாரமானவற்றுக்கு–சர்வாதிகாரமுமாய் பிராப்தமுமாய் முன்பே இவனை இச்சித்து இவன் இச்சை பார்த்து இருக்கும் விஷயத்துக்கு -இச்சா மாத்திரமே வேண்டுவது –அப்ராப்த விஷயத்துக்கு இறே அதிகாரி சம்பத்து வேண்டுவது –கால தத்வம் உள்ளதனையும் ஒரு வ்யஸனம் வாராது -சாரா -அவன் திரு முகம் கொண்டு தவிர்க்க வேண்டா -இவ்வ்வாஸ்ரயம் நமக்கு இருப்பு அன்று என்று சர்வ துக்கமும் கழலும்–சும்மெனாதே கை விட்டு ஓடி தூறுகள் பாய்ந்தனவே -பெரியாழ்வார் திருமொழி -5-4-3-என்கிறபடியே-நாம் இவ்விடத்தில் இருப்பதற்கு உரியோம் அல்லோம் -என்று தன்னடையே வந்து கிட்டாது –இராஜ குல சம்பந்தத்தாலே விட்டு ஓடிப் போம் –
வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -ஆன் ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வான் துயரை ஆ ஆ மருங்கி –
பெரிய திருவந்தாதி -54-–

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-என் ஸ்வாமி யுடைய திரு நாமத்தை அநுஸந்தியுங்கோள்–இடறினவன் அம்மே என்னுமா போலே-வகுத்தவனுடைய திரு நாமத்தை அநுஸந்தியுங்கோள் –சததம் கீர்த்தயந்தோ மாம் யதன் தச்த த்ருடவ்ரத-நமச்யந்தச்ய மாம் பக்த்யா நித்ய யுக்தஉபாசதே -ஸ்ரீ கீதை -9-14-எப்பொழுதும் என்னை கீர்த்தனம் செய்கின்ற வர்களாயும் -என்னா நின்றதே அன்றோ –அதனைச் சொல்லுகிறது –நஞ்சீயர் பட்டரை-திரு நாமம் சொல்லும் பொழுது பக்தி உடையனாய் சொல்ல வேண்டுமோ -என்று கேட்க-கங்கையில் முழுகப் போமவனுக்கு-வேறு உவர்க் குழியிலே முழுகி போக வேண்டுமோ-மேல் உண்டான நன்மையைத் தருகிற இது-அதிகாரி சம்பத் ஆகிய -தகுதியையும் தர மாட்டாதோ -என்று அருளிச் செய்தாரம் –-திரு நாமம் சொல்லுகைக்கு ருசியே ஆயிற்று வேண்டுவது-அவர்களே அதிகாரிகள் ––பிறவியினுடைய தோஷ பிராஸுர்யம் ப்ரத்யக்ஷ சித்தம் இறே–இ -சுட்டு எழுத்து-கண்டதே அன்றோ இதனுடைய இழையீடு -நூலாலே தைத்தல்-இழை இட்டால் போலே இருக்கிற அவயவங்களுடைய சேர்த்தி-கவிழ்ந்து பார்க்கவே அமையுமே இதனுடைய அகவாயை-தன்னைடையே வைராக்கியம் பிறக்குமே –-இப்படி கண் கூடாக கண்டு இருக்கச் செய்தேயும் வைராக்கியம் பிறவாது இருக்கிறதே அன்றோ வாசனையின் கனம் –-ஒரு செட்டியை -இவன் தமிழில் சிறந்த புலமை படைத்தவன் -என்று பட்டருக்கு காட்டினார்களாக-பட்டர் அவனைப் பார்த்து -உனக்கு யாதேனும் கேட்க விருப்பம் இருப்பின் கேட்கலாகாதோ -என்ன-சிலர் -காண்கிற இத் தேகத்துக்கு அவ்வருகு ஆத்மாவும் இல்லை –புண்ணிய பாபங்களும் இல்லை-ஈஸ்வரனும் இல்லை -என்று இரா நின்றார்கள்–சிலர் -இச் சரீரம் தான் நிலை அற்றது -என்று இதனுடைய தாழ்வினைக் கண்டு-அவ்வருகே நிலைத்து இருக்குமது ஒன்றனை பற்ற வேண்டும் -என்று இரா நின்றார்கள்-விஷயம் ஒன்றாக இருக்க வேறுபட்ட இவ்விரண்டு கொள்கைகளும் நடக்கிற படி எங்கனே -என்ன--தைவீ ஹி ஏஷ குணமயீ மம மாயா துரத்தயா-மாமேவ யே ப்ரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே -ஸ்ரீ கீதை -7-14-
என்கிறபடியே-நல்லவர்கள் இதனுடைய தாழ்வினைக் கண்டு இதனைக் கழித்து கோடற்க்கும்-மற்றையோர்கள் இதிலே இனிமை உண்டு என்று நினைத்து கேடு உறுகைக்கும்- உடலாம்படி கர்மங்களுக்கு தகுதியாக இதனை எடை எடுத்து காணும் -நிறுத்து -அறுதி இட்டு -காணும் –ஈஸ்வரன் பண்ணிற்று என்று அருளிச் செய்தார்-
இது கண்டாய் நன்னெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தரு கணையா
காரணமும் வல்லையேல் காண்
–இரண்டாம் திரு -66-என்னும்படியாய் இருக்கும் அன்றோ-
நாம் நன்றாக நினைத்து இருக்குமது அன்று இதன் தன்மை –அல்பம் அஸ்திரம் -ஆகாரம் பிரத்யஷிக்கலாமே –-ஈஸ்வரன் வெளிச் சிறப்பினை பிறப்பிக்க-இது சிறிது -நிலை அற்றது -என்று அறிந்த இதுவே காண்–இதுக்கு நிலை நின்ற தன்மை –இப் பிறப்பு அறுக்கும் –
இப்படி தாழ்வு உள்ளதாக அறியப் படுகின்ற இச் சரீர சம்பந்தத்தை அறுக்கும் –செறிந்த பொழிலை யுடைய திருவனந்த  புரத்திலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை ஆஸ்ரயிக்குமவர்கள் -இப் பிறப்பு அறுக்க வேணும் -என்ன வேண்டாத நித்ய ஸூரிகளானவர்கள் –இத்தால் விரோதியை போக்கும் அளவன்றியே-உத்தேச்யத்தை பெறுகைக்கும் திருவனந்த புரமே ஆஸ்ரயணீய ஸ்தலம் என்கிறது –வியக்தமாக -மதிநலம் அருளப் பெற்ற நாம் -தேஹாத்ம அபிமானிகளான -நீங்கள் அறியும் படி உங்கள் அநர்த்தத்தைப் பார்த்துச் சொன்னோம் –

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-எங்களை போல் அன்றிக்கே -நீ உகக்கும்படியான விலக்ஷணைகளோடு சஞ்சரித்து -அவர்களோடே பரிமாறப் பெற்றிலோம் என்று திரு உள்ளத்தில் யுண்டான விடாயால் வந்த துக்கம் கெடும் தோறும் –புறம்புள்ளாரைப் போல் அன்றியே -உன் உகப்பே பிரயோஜனமாக நாங்கள் -மிகவும் உகப்புதோம்-மிகுதி எதில் காட்டில் என்னில்-எங்களோடு கலக்குமதில் காட்டில் -என்னுதல்–உன்னில் காட்டில் நீ உகந்தவர்களை உகப்புதோம் -என்னுதல் –உன் உகப்புக்கு புறம்பாய் வரும் ஸ்த்ரீத்வம் எங்களுக்கு அஸஹ்யம் -அது வேண்டா –-நீ உகந்தாரை ஒழிய உன்னை உகக்குமவர்கள் அல்லோம் காண் நாங்கள் -உன்னைத் தனித்து உகப்பாள் மூக்கறைச்சி அன்றோ -சூர்பணகை அன்றோ –
ததீயர் சேஷத்வம் ஞானம் உடையவர்கள் அன்றோ -அவனும் ததீயாரும் சேர்ந்ததே புருஷார்த்தம் –

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7-சகல துக்கங்களும் நம்மை ஸ்பர்ஸியா -அந்த துக்கங்களுக்கு அடியான ஜன்மத்தைப் போக்கி அடிமை கொள்ளும்

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே10-4-3-துக்க ஹேதுவான ப்ரக்ருதி சம்சர்க்கத்தையும் ஒட்டினோம் -பரம பதத்தில் புகச் செய்தேயும் ருசி முன்னாக போகாத வைதிக புத்ரர்களுக்கு மீள வேண்டிற்று இறே –மயர்வற மதி நலம் அருளினன் -என்று ருசி ஜனகனும் அவனேயாய் -பேறும் அவனாலேயாய் இருக்கிற எனக்கு புநாவ்ருத்தி பிரசங்கம் இல்லை-

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9–கண்ட போதே வினை என்று பேர் பெற்றவை எல்லாம் விட்டுப் போய்த்து -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னுமவன் அடியாக வந்ததாகையாலே தட்டில்லை இறே-இவர் கேவலர் அல்லர் –அடி வுடையராய் இருந்தார் -என்று விட்டுப் போயிற்றின –சாடு- மூலம் உண்டு -திருவடி கண்டார்-
த்ருஷ்டே பராவரே-கண்டால் போகும் -ஸ்ருதி -ஆழ்வார் சங்கை இல்லாமல் கண்டேன் –
பரன் அவரன்-மேன்மைக்கும் எளிமைக்கும் எல்லை இவனே –பரர்கள் என்று லோகத்தில் உள்ளார் அவரர்கள் போல் –உயர்வற உயர் நலம் -உயர்வு அறும் படி அன்றோ இவனது உயர்வு –

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9-அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயிக்க இழியவே பிரயோஜனாந்தர ப்ராவண்யத்துக்கு அடியானை கர்மங்களானவை தானே போம் —

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-தன் கனை கழல்கள்-காட்டி -கடு நரகம் புகல் ஒழித்த–ஸ்வரூப குணங்களை பிரகாசிப்பிக்கிற வடிவைக் காட்டி சம்சார சம்பந்தத்தைத் தவிர்த்த -என்னுதல் -தன்னைக் காணப் பெறாத துக்கத்தைப் போக்கினவன் என்னுதல் -கழல் -திரு மேனிக்கு உப லஷணம்-இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை –என்று விரும்பியவாறே-செய்தான் ஆயிற்று–அறிவுடையாருக்கு பொறுக்க முடியாத நரகம்-இவ் உலக வாழ்க்கை அன்றோ 

வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-புகுந்த பின்பு தான் அனுகூலித்தேனோ-தன்னைப் பிரிந்து தடுமாறுகைக்கு அடியான புண்ய பாப ரூபமான கர்மங்களை தானே தவிர்த்தான் –கர்மங்களுக்கு கட்டுப் படாதவனான தானே –இவர் பல காலம் தேகத்தினை விரும்பி விட மாட்டாதே போந்தார்-இப்போது இவருக்கு தன் பக்கலில் ருசி பிறந்தவாறே–இதனோடு தொற்று அல்லாத தானே-இதிலே வந்து புகுரா நின்றான் –
அவனைப் போலே முன்னடி தோற்றாது ஒழியில் அன்றோ இவர்-இச் சரீரத்தின் தண்மையைக் காணாது ஒழிவது-இதன் தண்மையை நினைந்து -இதனுள் -என்கிறார் –காதல் கண்ணை மறைத்தது அவனுக்கு- இவர் மயர்வற மதி நலம் அருள பெற்றவர் அன்றோ-தானே--புகுகிற போது தானே யாய்-பின்னர் நானும் அவன் செய்யும் கார்யத்துக்கு அனுகூலமாக இருந்தேனோ –தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் – தன் பக்கல் நின்றும் என்னை பிரித்து தடுமாறும்படி-செய்ய வல்ல பாபங்களைப் போக்கினான் –அவை யாவன-பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்-இங்கு இவ் உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்கள் –

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3—தலை மேலே தாள் இணைகள் -10-6-6-என்று-அவன் திருவடிகளை தலை மேல் கொண்டு வந்து வைக்கையாலே அவற்றை உரக்கப் பிடித்துக் -கெட்டியாக பிடித்துக்-கொண்டேன் –தலை மேலே தாள் இணைகள் -என்கிறபடியே -அவன் திருவடிகளைக் கொண்டு வந்து என் தலையிலே வைக்க -அத்தை ஒரு நாளும் பிரியாத படி பற்றினேன் -ஜன்மத்தைப் போக்கினேன் –ஜென்ம சம்பந்தத்தால் வந்த துக்கங்களை அடியேன் -சம்சாரத்திலே நிற்கைக்கு அடியான மூல பிரக்ருதியை நிவர்த்திப்பித்தேன்-பிறவியை மறுவல் இடாதபடி போக்கினேன் –ஸ்தூல சரீர விமோசனம்-
கானோ ஒருங்கிற்றும் கண்டிலோம் -பெரிய திருவந்தாதி -54-என்கிறபடியே-எங்கே போயிற்று -கண்டிலேன் –அவன் தம்மோடு-நிர்ஹேதுகமாக வந்து கலந்த படியை நினைந்து இவன் திருவடிகள் எனக்கு இங்கனே எளிது ஆவதே –என்கிறார்-

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-மேலான தாஸ்ய ரசம் அதிசயித்து -யேந யேந தாதா கச்சதி -என்கிற ரசத்தை அனுபவித்து -சேவாச்ச்வ வ்ருத்தி -என்கிற இது இறே கீழான தாஸ்யம் –முடிவிலே -தொழும் சொல்லுப் பெற்றேன் -அனுபவ ப்ரீதி தலை மண்டையிட்டால் -அதன் மேலே நம என்று புத்தி பூர்வகமாக சொல்லும் சொல்லைப் பெற்றேன் –நம இத்யேவ வாதின -இறே -அதாவது ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய் மொழி பாடி அடிமை செய்யப் பெறுகை –அந்தி தொழும் -என்கையாலே பலம் சொல்லிற்று
கைங்கர்ய ஏக ரச இன்பம் மிகுந்தால் -அதனுடைய முடிவிலே நம -என்று சொல்லுகின்றவர்கள் -என்று மனம் அறியச் சொல்லுவது ஓன்று உண்டு-அப் பாசுரத்தைச் சொல்லப் பெற்றேன் –முக்தாநாம் லஷணம் ஹி ஏதத் ஸ்வேத த்வீப வாஸிநாம்-பத்தாஞ்சலி புட ஹ்ருஷ்டா நம இதி ஏவ வாதின –பாரதம் மோஷம் -என்கிறபடியே –-அந்தி தொழும் -சரம நிலை -நம -பிராப்ய-விரோதி -ஸூ போக்துத்வ புத்தி -தவிர -கைங்கர்யம் செய்யும் பொழுது
எப்போதாவது வரலாம் என்பதால் எப்பொழுதும் ஸ்வேத தீப வாசிகள் சொல்லிக் கொண்டே இருப்பார்-யவாதாத்மபாபி -மற்றை நம் காமங்கள் மாற்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமே மேலைத் தொண்டு –-அதாவது-ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய்மொழி பாடி-அடிமை செய்யப் பெறுகையைத் தெரிவித்த படி –

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11- அவனைப் பெற்று நிரஸ்தித ஸமஸ்த பிரதிபன்னராகையாலே நிர் துக்கரான ஆழ்வார் அருளிச் செய்த –

———————–

இப்படி ஸ்ரீயபதித்ய பிரமுகங்களாய் (தொடங்கி)
கைங்கர்ய பிரதிபந்தக நிஸ் சேஷ நிபர்ஹண பர்யந்தங்களாய் இருந்துள்ள
உபாதேய அர்த்தங்களை பிரதிபாதிக்கக் கடவதாய் இருந்துள்ள
வாக்யத் த்வயமும்  -திருவாய்மொழியும் –
பகவத் சரணார்த்திகளாய் -பிரபத்தி உபாய பரராய் இருக்கும் அதிகாரிகளுக்கு
கால ஷேப ஹேதுவாகவும்
ஈஸ்வர ப்ரீணந அர்த்தமாகவும்
யாவச் சரீர பாதம் அனுசந்தேயம் -(த்வய அர்த்த அனுசந்தாநேந ஸஹ உடன் யாவத் சரீர பாதம் -அரங்கன் எம்பெருமானுக்கு இட்ட கட்டளை -த்வய அர்த்தமே திருவாய்மொழி)

———

நேத்ருத்வம் நித்யயோகம் ஸமுசித குண ஜாதம் தநுக்யாபநம் ச உபாயம்
கர்த்தவ்ய பாகம் து அத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரஸித்தம் |
ஸ்வாமித்வம் ப்ரார்த்தநாஞ்ச ப்ரபலதர விரோதிப்ரஹாணம்
தசைதான் மந்தாரம் த்ராயதே சேத்யதிகத நிகம: ஷட்பதோயம் த்விகண்ட: ||
-5-

இந்த ஸ்லோகம் மந்த்ர ரத்னமான த்வயத்தை விவரிக்கிறது. த்வயம் என்பது இரு கண்டங்களும் ஆறு பதங்களும் கொண்டு அமைந்தது. பத்துப் பொருளை உட்கொண்டிருக்கிறது: (1) சேதனனைத் தன் வயமாக நடத்தும் திறமை (2) பிராட்டியோடு பிரிக்க முடியாத நிலை (3) ஈச்வரத் தன்மைக்கேற்ற இனிய குண ஸமூஹம் (4) அழகிய திருமேனி (5) உபாயம் (6) சேதனன் செய்ய வேண்டிய கடமை (7) இருவருமான சேர்த்தியில் கைங்கர்யம் என்னும் பலன் (8) உரிமை என்னும் ஸம்பந்தம் (9) கைங்கர்ய ப்ரார்த்தனை (10) கைங்கர்யத்துக்கு இடையூறாக உள்ளவைகளிலிருந்து விடுதலை – ஆகிய இந்தப் பத்துப் பொருள்களையும் இடைவிடாது நினைப்பவனை ரக்ஷிக்கிறது என்னும் இதை வேதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

—————————————————-———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading