ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செயல்களில் -இனி பதப் பிரயோகங்கள் –

மகளை பெற்ற தாயர் இனி தரியார் என்னும்-கொலோ – நாலாயி:301/4
ஐய இனி என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவுஅணை பள்ளியானே – நாலாயி:427/4
புக்கினில் புக்கு உன்னை கண்டுகொண்டேன் இனி போக விடுவதுண்டோ – நாலாயி:453/2
வளைத்து வைத்தேன் இனி போகல் ஒட்டேன் உந்தன் இந்திரஞாலங்களால் – நாலாயி:454/1
உனக்கு பணிசெய்திருக்கும் தவம் உடையேன் இனி போய் ஒருவன் – நாலாயி:455/1
இத்தனை காலமும் போய் கிறிப்பட்டேன் இனி உன்னை போகல் ஒட்டேன் – நாலாயி:460/2
இன்று வந்து இங்கு உன்னை கண்டுகொண்டேன் இனி போகவிடுவதுண்டே – நாலாயி:461/2
நின் அருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே – நாலாயி:463/4
என்னிடைவந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே – நாலாயி:468/4-

——————

தன் மாமன் நந்த கோபாலன் தழீ இக்கொண்டு என் மகள் தன்னை
செம்மாந்திரே என்று சொல்லி செழும் கயல் கண்ணும் செவ்வாயும்
கொம்மை முலையும் இடையும் கொழும் பணைத் தோள்களும் கண்டிட்டு
இம்மகளை பெற்ற தாயார்  இனித் தரியார் என்னும் கொலோ -3 -8-5 –இப் பெண் பிள்ளையை பெற்ற தாயார் ஆனவள் –இவளைப் பிரிந்த பின்பு –பிராணனோடு தரிக்க மாட்டாளோ என்று சொல்லுவாரோ-அன்றிக்கே-அவிகிருதராய் இருப்பாரோ-இவளைப் பிரிந்த பின்பு-இவளைப் பெற்ற தாயார் பிராணனோடு ஜீவித்து இருக்குமோ
அன்றியே-இவளுக்கு இத் தலையில் உண்டான நன்மைகளை நினைத்து ப்ரீதியாய் இருக்குமோ என்று கொலோ என்கிறாள் 

பைய அரவின் அணை பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி
உய்ய உலகு படைக்க வேண்டி யுந்தியில் தோற்றினாய் நான்முகனை
வைய மனிசரை பொய் என்று எண்ணி காலனையும் உடனே படைத்தாய்
ஐய இனி என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10-5-ஐயனே -பரம பந்துவானவனே  –மாதா பிதா பிராதா (ஸூபால உபநிஷத் )-என்கிறபடியே
எனக்கு நிருபாதிக பந்து ஆனவனே–இத்தால்-ரஷிக்கைக்கு ஈடான ப்ராப்தியை சொல்கிறது-இனி என்னைக் காக்க வேண்டும் –நான் உன் அபிமானத்திலே ஒதுங்கின பின்பு கைம்முதல் அற்ற என்னை ரக்ஷித்து அருள வேணும்–அந்த வையத்தில் உள்ளார் படி அன்றிக்கே உன்னுடைய அங்கீகார விசேஷத்தாலே வ்யாவ்ர்த்தனாய் –உனக்கு மங்களா சாசனம் பண்ணி அன்றி தரியாதபடியான பின்பு இப்படி இருக்கிற என்னை – என்னுடைய புருஷார்தத்துக்கு விரோதியான யமபடரால் வரும் நலிவில் அந்வயம் இன்றி ரஷித்து அருள வேணும்-திருப்பாற் கடலிலே வந்து கிட்ட மாட்டாத என் போல்வாருக்காக அன்றோ
நீ கோயிலிலே சாய்ந்து அருளிற்று –

துக்கச் சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை அறப் பறித்து
புக்கினில் புக்கு உன்னை கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில்
சிக்கனே வந்து பிறந்து நின்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 1-புக்க இடம் எல்லாம் புக்கு உன்னைக் கண்டு கொண்டேன் –அந்தர்யாமித்வம்  -பரத்வம் -வியூகம் -விபவம் -அர்ச்சாவதாரம் -அளவாகச் சொல்லுகை எல்லா இடத்தலும் உன்னை ஸாஷாத் கரிக்கப் பெற்றேன்-அறப் பறித்து -என்று அநிஷ்ட நிவ்ருத்தியும் கண்டு கொண்டேன் -என்று இஷ்ட பிராப்தியும் பண்ணித் தந்தோம் ஆகில் -இனி போய் வர அமையாதோ -என்ன –இனிப் போக விடுவது உண்டோ –அறப் பறித்து -என்றும் -கண்டு கொண்டேன் -என்றும் தாம் செய்தாராய் அருளிச் செய்கைக்கு அடி – பிதா தேடின அர்த்தத்தை -தன்னது -என்னும் புத்திரனைப் போலே –இனிப் போய் வர அமையாதோ என்ன –இனி  போக விடுவது உண்டே –1-விரோதியில் சிறிது கிடத்தல் –2-காட்சியிலே சிறிது கிடத்தல் –3-இவை இரண்டுக்கும் மூலமான ஸூஹ்ருதம்  என் கையில் கிடத்தல் –செய்யில் அன்றோ நான் போக விடுவது –(1-அஞ்ஞானாதிகள் இருந்தால்-2-உனது வைலக்ஷண்யத்தில் குறை இருந்தால்-3-சாதனாந்தரம் அன்வயம் இருந்தால் அன்றோ நான் போக விடுவது -)உன்னாலே பெற்ற நான் -என்னாலே இழப்பேனோ – பேறு அவனாலே-இழவு இவனாலே –-அவன் பெறுகைக்கு கிருஷி பண்ணும்-இவனுடைய அனுமதி பேற்றுக்கு ஹேது அல்லாதால் போலே-அவனுடைய அனுமதியும் இழவுக்கு ஹேது அன்று –(கர்மமும் கிருபையும் ஹேதுக்கள் இவற்றுக்கு )போக விடுவது உண்டேஇனி நான் போகல் ஒட்டேன் -என்று போக்கும் உண்டாய் –ஒட்டேன் -என்கை அன்றிக்கே – போக என்று ஒரு பொருள் உண்டோ என்கிறார் –இனிப் போக விடுவது உண்டே-கைப்பட்ட உன்னை நான் போக ஸம்மதிப்பேனோ
போகிலும் கூடப் போகும் அத்தனை-உன்னாலே பெற்ற நான் உன்னைப் போக விடுவேனோ–நான் உன்னைப் போக விடுவேனாய் இருந்தேனோ -என்று
அவனையே கேட்கிறார்-உண்டே –உனக்கு தெரியாதோ போகைக்கு ஹேது உண்டாகில் என்று அவனை கர்மமும் கிருபையும் ஹேதுக்கள் இவற்றுக்கு கேட்கிறார் ஆகவுமாம்-போகாத படி பெற்று -தம் இழவு தீர்ந்தமையை அருளிச் செய்கிறார்-

வளைத்து வைத்தேன் இனி  போகல் ஒட்டேன் உன் தன் இந்திர ஞாலங்களால்
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய்  நீ ஒருவருக்கும் மெய்யன் அல்லை
அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடை தீவினை தீர்க்கலுற்றுத்
தெளித்து வலம் செய்யும் தீர்த்தமுடை திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 2-உதாரர் வாசலிலே -தரித்தருமாய் -அந்தருமாய் இருப்பார் –பெற்று அன்றி போகோம்-என்று கிடக்குமா போலே –வளைத்து கிடக்கிறார் –ஸ்ரீ பரத ஆழ்வான் பர்ண சாலை வாசலிலே வளைத்து கிடந்தான் இறே-தம் செல்லாமை இறே வளைக்கிறது–இனி   போகல் ஒட்டேன் –உன் சுவடு அறிந்த நான் பின்பு போக விடுவேனோ

உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன்  இனிப் போய் ஒருவன்
தனக்கு  பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்

புனத்  தினைக் கிள்ளி புது வவிக் காட்டின் பொன்னடி வாழ்க வென்
றினக் குறவர்  புதியது உண்ணும் எழில் மால் இரும் சோலை எந்தாய் – 5-3-3- –உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன்-1-முதலில் சேஷத்வ ஞானம் பிறந்து -(உனக்கு )-2-பின்பு சேஷ விருத்தியிலே ஆசை பிறந்து -(பணி )-3-கைங்கர்யமே யாத்ரையாய் -(பணி செய்து-வர்த்தமானம் )-4-அது செய்யாத போது சத்தை குலையும் படியாய் இருக்கும் (பணி செய்து இருக்கும்)-இவை நாலும் சம்சாரிகளுக்கு இல்லை-நமக்கு உபாயத்வம் அனுசந்தித்து
உபேயத்தில் ஆசையுமே உள்ளது-ஆழ்வார்களுக்கு இவை நாலும் உண்டு-தவம் உடையேன் –உன் பிரசாதம் உடையேன்-இனிப் போய் – இந்நாலு தசையும் பிறந்த பின்பு –இவற்றை பொகட்டு புறம்பே போய் –போகை யாவது –-இந்திர ஞாலங்கள் காட்டி புறம்பே தள்ளினாய் ஆகிலும்-ஒருவன்  தனக்கு  பணிந்து-பிரம்மா முதலாக பிபீலிக அந்தமாக அதி ஷூத்ரர் இறே –அவர்களிலே ஒருத்தனுக்கு கடைத்தலை நிற்கை –உன் கடைத்தலை இருந்து வாழும் -என்கிற செயலை-அங்கே செய்கை உனக்கு அவத்யம் இறே-நின் சாயை அழிவு கண்டாய் –-உனக்கு தேஜோ ஹானி இறே -எனக்கு இது புதுமை அன்று –உன் ஸ்வரூப ஹானிக்காய்த்து நான் கிலேசிக்கிறது-

எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றோடு நாளை என்றே
யித்தனை காலமும் போய்க் கிறி பட்டேன் இனி உன்னைப் போகல் ஒட்டேன்
மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்
சித்த நின் பாலது அறிதி அன்றே திரு மால் இரும் சோலை எந்தாய் -5- 3-8 –ஒரு நாளாய் -ஒரு பஷமாய் -ஒரு மாசமாய் -ஒரு சம்வத்சரமாய்- இப்படி கல்பம் கல்பமாக-கழிந்ததுக்கு ஒரு முடிவு இல்லை-காலத்துக்கு முடிவு இல்லாதது போல் போன இடங்களுக்கும் முடிவு இல்லை-கிறி பட்டேன்-கிறி ஆவது -விரகு-அதாவது யந்த்ரம் – சர்வ பூதங்களும் பிரமிக்கும்படி ரூடமாய் இருப்பதொரு யந்த்ரம் அஞ்ஞானா வர்த்தமாய் இருப்பது ஓன்று –(ஞான அனுதயம் அனிதா விபரீத ஞானம் – காரணமாயும் கார்ய மாயும் வியாப்தமான கர்ம ஜாலம் )பட்டேன்
அசந்நேவ-என்னும் படி அகப்பட்டேன் – நசித்தேன் -என்னவுமாம்-இனி-1-கரண களேபரங்களை தந்து-2-அஜ்ஞாத ஸூஹ்ருதத்தைப் பிறப்பித்து –3-இதர விஷயத்தில் ருசியைக் குலைப்பித்து –4-உன் பக்கல் ருசியைப் பிறப்பித்து –5-அபிமதமும் நீயே என்னும் இடமும் பிறப்பித்த பின்பு-இனி-நான் ஏதும் உன் மாயம் ஓன்று அறியேன் -(பெரியாழ்வார் – 4-10 ) இனி இது உன் மாயம் என்று அறிந்த பின்பு உன்னை-ரஷகனுமாய் –உபாய பூதனுமாய் –ப்ராப்ய பூதனுமாய் -இருக்கிற உன்னைபோகல் ஒட்டேன் –
பெற்றினி போக்குவேனோ உன்னை -என்கிறபடியே-1-உபாயாந்தரத்தில் அந்வயம் உண்டாதல் –-2-ப்ராப்யாந்தரத்தில் அந்வயம் உண்டாதல் –-3-இரண்டும் நீயானால் பெற்ற போது பெறுகிறோம் -என்று ஆறி இருத்தல் செய்யல் இறே உன்னைப் போக சம்மதிப்பது –

அன்று வயிற்றில் கிடந்தது இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன்
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் திரு சக்கரம் அதனால்
சென்றித் திசை திசை வீழச் செற்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய்
-5 -3-9 –அன்று வயிற்றில் கிடந்தது இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன் அன்று நான் பிரார்த்தித்த படியே திரு மலையிலே வந்து என் விரோதியைப் போக்கி ஞானத்தைப் பிறப்பித்த உன்னை
வந்து கண்டு கொண்டேன் -இனிப் போக விடுவது உண்டே –கர்ப்பத்திலே கிலேசப்படுகிற வன்று -அடிமையிலே உற்று இருந்த நான் அடிமை கொள்ளுகைக்கு சுலபன் ஆன இன்று போக விடுவேனோ-ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தையும் அந்ய சேஷத்வத்தையும் கழித்து கொண்ட படியை மூதலிக்கிறார்-

சென்னியோங்கு தண்  திருவேம்கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையும்  உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1 – உன்னுடைய நிர்ஹேதுக கிருபையை நிரபேஷ உபாயமாக அபேக்ஷித்து நிர்பரனாய் இருந்தேன்-இவர் அடியாகையால் இறே புதைத்து வார்ப்பது அவன் அடியாக வரில் விதி வாய்க்கின்றது காப்பார் யார் -என்னும்படி இறே பெருகுவது –புரிந்து-எத்தனையும் வான் மறந்த காலத்தும் (பெருமாள் திருமொழி )-இத்யாதி-இருந்தேன் –-உபாயாந்தரமும் -உபேயாந்தரமும் குலைகை-அனந்யார்ஹ சேஷத்வ ஞானமும் பிறந்து –விரோதி நிவ்ருத்தியும் பிறந்து –அபேஷிதமும் பெற்றதாகில்  –இனி பதறுகிறது என் –இனி என் திருக் குறிப்பே –என் கொல் அம்மான் திரு அருள்கள்(10-7)-திருக் குறிப்பு -திரு உள்ளத்தில் நினைவு-ஞான லாபத்தையும் பண்ணித் தந்து விரோதி நிவ்ருத்த பூர்வமாக அபேக்ஷிதங்களையும் தந்து அருளிற்றாகில்
இனித் திரு வுள்ளத்தில் நினைவு ஏது –

உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன்
மன்னடங்க மழு வலம் கை கொண்ட  விராம நம்பீ
என்னுடை வந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே -5- 4-6 –என் சேஷத்வத்தையும் –
உன் சேஷித்வத்தையும் உதறிப் படுத்த பின்பு  உனக்கு போக்கு இனி எவ்விடத்தில் –
என் ஸ்வ யத்னத்தாலே வந்ததாகில் இறே உனக்கு போகல் ஆவது –உன் அருளால் புகுந்த நீ போகக் கடவையோ –இராம நம்பீ எங்குப் போகின்றதே
மன்னஞ்ச ஆயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா
எந் நெஞ்சத்து உள் இருத்தி இங்கு இனிப் போய் பிறர் ஒருவர்
வன்னெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்
(பெரிய திருமொழி -7-2 )-என்று
அவரும் ஒருவர் வளைத்தார் இறே-இல்லாத காலத்தில் ஸ்ருஷ்ட்டித்தும் ரஷித்தும் ஆபத்து தசையிலே வயற்றில் வைத்து நோக்கியும் போருமவன் இல்லையோ நீ-எம்பெருமான் –
உன் ஸ்வாமித்வத்துக்கு போருமோ –இனி உன் கிருஷி பலித்து –திருப்பல்லாண்டு தொடங்கி இவ்வளவும் வந்த பின்பு போக்கு வரத்து உண்டாம் படியோ நாம் இருவரும் கலந்த படி –ஆக இப் பாட்டால் அவன் வந்து புகுந்த பிரகாரத்தையும் அவன் போனால் தாம் முடியும்படியான அவஸ்தை பிறந்த படியையும் அவனுக்கு போக்கின்றி நிற்கிற நிலையையும் நிர்ஹேதுகமாக விஷயீகரித்த பிரகாரத்தையும் சொல்லுகிறது —

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading