ஸ்ரீ எம்பெருமானாருடைய திருமேனி சம்பந்தம் பெற்ற ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள்-

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருகம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ ராமானுஜஸ்ய சரெணௌ சரணம் ப்ரபத்யே
-கூரத்தாழ்வான்-அருளிச் செய்த தனியன்
யார் எப்போதும் அச்சுதனின் தாமரை பாதங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு, அவற்றை தவிர மற்ற எல்லாவற்றையும் புல்லைப் போல கருதுகிறாரோ-அந்த எங்கள் குருவும், கருணைக்கடலுமான பகவான் ஸ்ரீ ராமானுஜரின் திருவடிகளில் நான் சரணடைகிறேன்.

லஷ்மீ நாதாக்க்ய சிந்தவ்-சடரிபூஜலத -ப்ராப்ய காருண்ய நீரம்
நாத அத்ரவ் அப்யஷிஞ்சத் -தத் அநு ரகுவராம்போஜ சஷுர்ஜ்ஜராப்யாம்
கத்வா தாம் யாமுனாக்க்யாம் சரிதம் அத யதீந்த்ராக்க்ய பத்மகரேந்த்ரம்
சம்பூர்ய பிராணிச சயே ப்ரவஹதி சததம் தேசிகேந்த்ர ப்ரமவ்கை

மாறன் அடி பணிந்து உய்ந்தவன் ராமானுஜர் நாயக்க ரத்னம்-லஷ்மீ நாத சிந்தவ் இத்யாதி – –கருணைக்கடல் -நம்மாழ்வார் மேகம் -நாதமுனி மலையில் பொழிந்து இரண்டு அருவிகள் -உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி -காட்டாறு ஆளவந்தார் -ஐந்து ஆச்சார்யர் முகமாக-ராமானுஜர் ஏரி -74 சிம்ஹாசனபதிகள் -மூலம் நம்மை அடையும்படி அருளி –

சடரிபு கலிஜித் சரோ பூத வேதாள கோதா குரூன் முனி வஹ குலசேகரௌ பக்த பத்ரேணு பக்த்யர்ணவௌ
மதுரகவி மாதோ யதீந்த்ரம் ததா அன்யான சேஷான் குரூன் ஸ்ரீ யம்பி வஸூ தாஞ்ச நீளாஞ்ச வைகுண்ட நாதம் ஸ்ரேயே-
என்று இறே ஆழ்வார்களை தொடங்கி சேவிக்கும் க்ரமம் இருப்பது –

(1. பூதம் (பூதத்தாழ்வார்) -ஆழ்வார் திருமுடி
2. ஸரஸ்யர் (பொய்கையாழ்வார்) 3. மஹதாஹ்வயர் (பேயாழ்வார்) -ஆழ்வாருடைய திருக்கண்கள்
4. பட்டநாதர் (பெரியாழ்வார்) -ஆழ்வாருடைய திரு வாய்
5. பக்திசாரர் (திருமழிசையாழ்வார் -ஆழ்வாருடைய திருக்கழுத்து
6. குலசேகரர் (குலசேகராழ்வார்) 7. யோகிவாஹர் (திருப்பாணாழ்வார்) –ஆழ்வாருடைய திருக்கரங்கள்
8. பக்தாங்க்ரி ரேணு (தொண்டரடிப்பொடியாழ்வார்) -ஆழ்வாருடைய திருவயிறு
9. பரகாலர் (திருமங்கையாழ்வார்) – 10. யதீந்த்ரமிச்ரர் (எதிராசர்) -ஆழ்வாருடைய திருவடி இணைகள்
11. ஶ்ரீமத் பராங்குசமுநி (நம்மாழ்வார்).

பக்தி பாரவச்ய பிரபன்னரான ஆழ்வார்களும் அவர்களோடு விகல்ப்பிக்கும் படியான ஸ்ரீ பாஷ்ய காரரும் சர்வதா பஜ நீயர்

—————-

மாதுலர் மாமா – பெரிய திருமலை நம்பி -இவர் பத்னி கிடாம்பி ஆச்சானின் அத்தை -இவர்க்கு மூன்று சகோதரிகள் -மூன்று குமாரர்கள் -இரண்டு மகள்கள் -நான்கு – மருமகன்கள் -ஒரு பேரன்-
மூத்த சகோதரி -பூதேவி என்னும் காந்திமதி –அவர் கணவர் -கேசவ சோமயாஜியார்-இவர் திருக்குமாரர் ராமானுஜர்

இரண்டாம் சகோதரி –ஸ்ரீ தேவி என்னும் த்யுதிமதி -இவர் கணவர் மதுரமங்கலம் கமல நயன பட்டர் –குமாரர்கள் -மூத்தவர் கோவிந்தர் எனப்படும் எம்பார்-ராமானுஜ பதச் சாயா எனப்படுபவர் -இவர் விஞ்ஞான ஸ்துதி என்னும் கிரந்தம் அருளிச் செய்தார் – இளையவர் –சிறிய கோவிந்த பட்டர் –
சிறிய கோவிந்த பட்டரின் குமாரர் பராங்குச நம்பி -ஆளவந்தாருடைய மூன்றாவது குறையை அடியோடு நிறைவேற்ற உடையவர் நியமனப்படி எம்பார் சாத்தி அருளிய திருநாமம் -கூரத்தாழ்வான் தமிழில் வல்லவரான இவரையே பாலேய் தமிழர் என்பாராம்

மூன்றாவது சகோதரியின் பெயர் தெரியவில்லை -இவர் குமாரர் பால தந்வி என்னும் இளைய வில்லி ஆச்சான் -இளைய பெருமாளைப்போல் உடையவருக்கு கைங்கர்யங்கள் செய்தமையால் சாத்தப்பட்ட திரு நாமம் எம்பெருமானார் திருநாடு அலங்கரிப்பதாக கனவில் கண்ட அளவிலே எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்றும் சொல்லி மூச்சடங்கப் பெற்றவர் –

பெரிய திருமலை நம்பிக்கை மூன்று திருக்குமாரர்கள்
மூத்தவர் -பிள்ளைத் திருமலை நம்பி-அவரது தனியன்
வ்ருஷே விசாக ஸம்பூதம் ராமானுஜ பதாச்ரிதம்
ஸ்ரீசைலபூர்ண சத்புத்ரம் ஸ்ரீசைலார்யமஹம் பஜே
அடுத்தவர் -ராமானுஜன்
மூன்றாமவர் -பிள்ளான் -திருக்குருகைப்பிரான் பிள்ளான்
-என்று பின்னர் திருநாம சாற்றப் பெற்றவர் -கோவிந்தரை யாசித்துப் பெற்ற உடையவருக்கு இவரையே அபிமான புத்திரராகக் கொள்ளும்படி கொடுத்து அருளினார்-தனியன்
“ஸிம்ஹே ம்ருகலிரோத்பூதம் ராமானுஜபதாச்ரிதம் |
த்ராவிடாம்நாய தத்வக்ஞம் குருகாதிப மாஸ்ரயே I
த்ராவிடஸாரக்ஞ்ம் ராமானுஜ பதாச்ரிதம் 1
ஸுதியம் குருகேஸார்யம் நமாமி ஸ்மிரஸாந்வஹம் |

இவர் ஆவணி மாதம் மிருக சீர்ஷ நட்சத்ரத்தில் அவதரித்தார். இவர் பெரிய திருமலை நம்பியின் மூன்றாவது குமாரர். (பிள்ளை திருமலை நம்பி -ராமானுஜன் -முதல் இருவர்)பெரிய திருமலை நம்பி இவரை ராமானுஜருக்கு அபிமாந புத்ரராக கொடுத்தார். இவர் ராமானுஜர் திக்விஜய யாத்ரையாக திருக்குருகூர் சென்றிருந்த பொழுது இவரும் அவர் கூடவே சென்றிருந்தார். நம்மாழ்வார் செய்தருளின பேருபகாரத்துக்காக அவர் திருநாமம் சாத்துகைக்கு அர்ஹமாக ஒருவரைத் தேடிய பொழுது “பிள்ளான்” என்ற பெயர் கொண்ட இவரை தேர்ந்தெடுத்தார். இவருக்கு ‘திருக்குருகைப் பிரான் பிள்ளான்’ என்று திருநாமம் சாத்தியருளினார்.

பெரிய திருமலை நம்பிக்கை இரண்டு திருக்குமாரத்திகள்
மூத்தவர் -அலர்மேல் மங்கை நாச்சியார்-
இவர் கணவர் -எம்பெருமானாருடைய சிஷ்யரான அலங்கார வேங்கடவர் என்னும் திருவேங்கட மூர்த்தி -இவர் அருளாளப்பெருமாள் எம்பெருமானாருடைய பூர்வாஸ்ரம –யஜ்ஞமூர்த்தியுடைய திருக்குமார்
இந்த தம்பதிகளுக்கு திருக்குமாரார் தாத்தாச்சாரியார் -இவரே விஞ்சிமூர் தாத்தாச்சாரியார் என்னும் பிரசித்தி பெற்றவர் –

இரண்டாம் திருக்குமாரத்தி திருநாமம் தெரியவில்லை -இவர் கணவர் சுந்தர தேசிகன் என்னும் அழகப்பிரான் -இவர் ஆளவந்தாருடைய சிஷ்யர் -அவரது நியமனப்படியே திருமலையில் கைங்கர்யம் செய்து வந்தார் -இவருடைய திருக்குமாரர்கள் ஈச்சம்பாடி ஆச்சான் -ஈச்சம்பாடி ஜீயர் -எம்பெருமானார் திருமலைக்கு எழுந்த அருளின சமயத்தில் பெரிய திருமலை நம்பியுடைய நியமநப்படி-தாபனீய உபநிஷத் ந்ருஸிம்ஹ மந்த்ரம் உபதேசித்து அருளினவர்

பெரிய திருமலையின் பத்னி -கிடாம்பி ஆச்சானுடைய அத்தை -பெயர் தெரியவில்லை -கிடாம்பி ஆச்சானுடைய இயல் பெயர் ப்ரணதார்த்தி ஹரர் -இவர் நம்பியின் மைத்துனன் திருகுமாரர் -கட அம்பு -கடாம்பு -கிடாம்பு மருவு -தீர்த்த கைங்கர்யம் பண்ணிய வம்சத்தில் அவதரித்தவர் –பெரிய திருமலை நம்பிக்கு தீர்த்த கைங்கர்யத்தில் உதவி செய்தவர் -இவர் தமையனார் பெயர் விஷ்ணவாச்சார்யர் –கிடாம்பி ஆச்சார்யன் எம்பெருமானாருக்கும் திருமடப்பள்ளி கைங்கர்யம் பண்ணியவர் -ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்து முடித்த பின்பு இவற்றையும் கிடாம்பிப்பெருமாளையும் காஷ்மீர் தேசம் அனுப்பி சாரதா பீட அங்கீகாரம் பெறச்செய்தவர் –கிடாம்பி ஆச்சான் வழி வந்த கிடாம்பி அப்புள்ளார் மா முனிகளின் அஷ்டதிக் கஜங்களில் ஒருவரே

எம்பெருமானாருக்கு மூன்று சகோதரிகள்
முதல்வர் -நாச்சியார் அம்மன்
-இவர் கணவர் ஆனந்த தீக்ஷிதர் -இவர்கள் திருக்குமாரர் தாசாரதி எனப்படும் முதலியாண்டான் -எம்பெருமானார் சிஷ்யர்கள் அனைவருக்கும் நிர்வாஹகராய் இருந்ததால் இந்தத்திருநாமம் -த்ரிதண்ட அம்சம் –
இரண்டாம் சகோதரியின் பெயர் தெரியவில்லை -இவர் கணவர் முடும்பை நம்பி என்னும் ஸ்ரீ வரதாச்சார்யர் –இவர் திருக்குமாரர் ஸ்ரீ ராமானுஜ நம்பி -இவர் திருக்குமாரர் முடும்பை ஆண்டான் –இவர் ஸ்ரீ ரெங்கத்துக்குக் குடி பெயர்ந்தார் –வடக்குத்திருவீதிப்பிள்ளை -பிள்ளை லோகாச்சார்யார் நாயனார் பிரதிவாதி பயங்கரம் அண்ணா எறும்பி அப்பா ராமானுஜம் பிள்ளை ஆத்தான் ஸ்வாமி போல்வாரும் முடம்பை வம்சத்தவர்களே

மூன்றாவது சகோதரியின் பெயரும் அவர் கணவர் பெயரும் தெரியவில்லை -இவர்கள் திருக்குமாரர் வரதவிஷ்ணு எனப்படும் நடாதூர் ஆழ்வான் -ஸ்ரீ வத்ஸ கோத்ரம் -இவரது திருப்பேரானார் வாத்ஸ வரதாச்சார்யர் எனப்படும் நடாதூர் அம்மாள் -இவரே எங்கள் ஆழ்வானுடைய பிரதான சிஷ்யர் -ஆகவே எங்கள் ஆழ்வான் -அம்மாள் ஆச்சார்யர் என்றே அழைக்கப்பட்டார்

எம்பெருமானாருடைய பத்னி தஞ்சமாம்பாள் -இவர்களுக்கு இரண்டு திருக்குமாரர்கள் –எம்மான் -பெம்மான் -இரட்டையர்கள் -பெம்மானே ஆஸூரிப்பெருமாள் என்பவர் -இவர் வம்சத்தில் ஆயி ஜநன்யார்ச்சார்யார் திருஅவதாரம்

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading