ஸ்ரீ திவ்வியப் பிரபந்தங்களிலிருந்து ஸ்ரீ காஞ்சி அண்ணங்கராசாரியர் தொகுத்த நூற்றெட்டுத் திரு நாம மாலை–
1-அமரர்களதிபதியே போற்றி
2 அருளாழியம்மானே போற்றி
3 ஆழ்கடலைக்கடைந்தாய் போற்றி
4 ஆழியங்கையனே போற்றி
5 இமையோர்தலைவா போற்றி
6 இரணியனுடலிடந்தாய் போற்றி
7 ஈரிரண்டுமால் வரைத்தோளா போற்றி
8 ஈசற்கும் நான்முகற்குந்தெய்வமே
9 உலகமுண்ட பெருவாயா போற்றி
10 உள்ளுவாருள்ளத்துறைவாய் போற்றி
11 ஊற்றமுடைய பெரியாய் போற்றி
12 ஊணாகப்பேய்முலை நஞ்சுண்டாய்போற்றி
13 எல்லாவுலகுமுடையாய் போற்றி
14 எம்பிரானே யென்னையாள்வாய் போற்றி
15 ஏரார்ந்தகருநெடுமாலே போற்றி
16 ஏழ்விடைசெற்ற பெருமானே போற்றி
17 ஐம்படையேந்துகையினாய் போற்றி
18 ஐவர்க்கருள்செய்தவம்மா போற்றி
19 ஒண்டாமரையாள்கேள்வா போற்றி
20 ஒன்றியொன்றியுலகம் படைத்தாய்
21 ஓதம்போல்கிளர்வேதனே போற்றி
22ஓதநீர்வண்ண வண்ணலே போற்றி
23கண்ணனென்னுங்கருந்தெய்வமே
24காக்குமியல்வினனானாய் போற்றி
25 கிட்டினாரை மயக்குங்கேசவா போற்றி
26 கீதையமுதமீந்தாய் போற்றி
27 குருந்தொசித்தகோபாலா போற்றி
28 கூனிகூன்நிமிர்ந்தகோவிந்தா பேர்ற்றி
29 கெண்டையுங் குறளும்புள்ளுமானாய்,,
30 கேழல்திருவுருவானாய் போற்றி
31 கையாருஞ்சக்கரத்தண்ணலேபோற்றி
32 கொண்டல்வண்ண குடக்கூத்தாபோற்றி
33 கோவர்த்தனமலையெடுத்தாய்போற்றி
34 கோவலர் தங்கோவே போற்றி
35 சன்மம்பலபல செய்தாய் போறறி
36 சாளக்கிராமமுடையாய்போற்றி
37 சிந்தனைக்கினிய செல்வனேபோற்றி
38 சீதைவாயமுதமுண்டாய் போற்றி
39 சுடர்கொள் சுடராழியாய் போற்றி
40 சூழல்பலபலவல்லாய்போற்றி
41 செங்கண்மாலெங்கள்மாலேபோற்றி
42 சேயனணியன் சிறியன் பெரியாய் .
43 சொன்னவண்ணஞ் செய்வாய் போற்றி
44 சோலை சூழ்குன்றெடுத்தானே போற்றி
45 ஞால மேழுமுண்டாய் போற்றி
46 ஞானங்கனிந்த நலந்தவருவாய்போற்றி
47 தண்டாமரைக்கண்ணனேபோற்றி
48 தாவியன்றுலகளந்தாய்போற்றி
49 திருவுக்குந்திருவாகிய செல்வாபோற்றி
50 தீங்கரும்பின் தெளிவே போற்றி
51 துரங்கம்வாய் பிளந்தாய் போற்றி
52 தூவியம்புள்ளுடையாய்போற்றி
53 தெய்வத்துக்கரசான தெய்வமே அ
54 தேனிலினியபிரானேபோற்றி
55 தைத்திரியா சாமவேதியனே போற்றி
56 தொண்டர்க்கினிய பெருமானே போற்றி
57 தோள்களாயிரத்தானே போற்றி
58 நலந்திகழ் நல்லநாரணாபோற்றி
59 நான்முகனைப் படைத்தாய்போற்றி
60 நிறமுடைநால் தடந்தோளனே போற்று
61 நீண்டதோளுடையானே போற்றி
62 நுடங்கெயிலிலங்கை செற்றாய் போற்றி
63 நூற்றுவரையன்று மங்க நூற்றாய்,
64 நெடுமையாலுலகேழளந்தாய்போற்றி
65 நேமிசேர்தடங்கையா போற்றி
66 நைமிசா ணியத்தெந்தாய் போற்றி
67 நொந்தாராக்காதலைத்தருவாய் போற்றி
68 நோய்கள் தீர்க்கும் நெடியாய் போற்றி
69 பயிலுஞ்சு டரொளி மூர்த்தியே போற்றி
70 பாற்கடல் துயின் ற பரமனே போற்றி
71 பின்னானார் வணங்குஞ் சோதீ போற்றி
72 பீதகவாடையுடையாய் போற்றி
73 புவனியெல்லாம் படைத்தபுனிதா
74 பூவைப் பூவண்ணமேனியாய்போற்றி
75-பெருமக்களுள்ளவர்தம் பெருமானே போற்றி,
76 பேய்ச்சிமுலையுயிருண்டாய் போற்றி
77 பைந்துளவத்தாரணிந்த வெந்தாய்,
78 பொருமாழிசங்குடையபெம்மான் ‘
79 பேரதார் தாமரையாள் கேள்வா போற்றி
80 பௌவங் கொண்ட திருவாளா போற்றி
81 மலர்மேல்மங்கை மணவாளா போற்றி
82 மாயமான்மாயச் செற்றாய் போற்றி
8 மின்னுமழைதவழும்மேகவண்ணா,,
84 மீனாயேனமுமானாய் போற்றி
85 முந்நீர்ஞாலம் படைத்தாய் போற்றி
86மூவரில் முந்திய முதல்வா போற்றி
87 மெய்யமர்பல்கலன் நன்கணிந்தாய்,
88 மேலையார்க்கெல்லாம் மேலையாய் போற்றி
89 மைந்நிறக்கடல் வண்ணனே போற்றி
90 மொய்யநீ குழல்சேர்தோளினாய்,
91 மோரார்குட முருட்டினாய் போதிறி
92 மெளவல்குழலாய்ச்சியன்பனே போற்றி
93 யவையும் யாவருமானாய் போற்றி
94 யானையின் துயரம் தீர்த்தாய் போற்றி
95 வங்கமா கடல்வண்ணா போற்றி)
96 வாசத்தடம்போல் வருவாய் போற்றி
97 விண்ணவர் தங்கள் தெய்வமே போற்றி
98 விட்டுசித்தன் மனத்துறைவாய் போற்றி
99 லீவிலின்பம் மிகத்தருவாய் போற்றி
100 வெற்பெடுத்தா நிரைகாத்தாய் போற்றி
101 வெம்மாவாய் கீண்டகண்ணாபோற்றி
102 வேதியர் தொழுந்தெய்வமே போற்றி
103 வேதங்களேத்தும் விமலா போற்றி
104 வையமெல்லாந்தொழ நின்றாய் போற்றி
105 வைதிகன்பிள்ளைகளீந்தாய்போற்றி
106 வாழிவாழி மாயோய்வாழி
10 நெடியோய்வாழி நீண்ட நாள்வாழி
108நிச்சலும்வாழி நீடுலகம்வாழ
—————————
ஸ்ரீ திவ்வியப் பிரபந்தங்களிலிருந்து ஸ்ரீ காஞ்சி அண்ணங்கராசாரியர் தொகுத்த பன்னிரு திருநாம மாலை
1-பொய்கையார் புகழ்ந்த புனிதா போற்றி
2-பூதத்தாழ்வார் புனைந்த பெருமாள் போற்றி
3-பேயார்பணிந்த பெருமாள்! போற்றி
4-மழிசைப்பிரான் மகிழ்ந்த மாதாவா போற்றி
5-பராங்குச னேத்தும் பரமனே போற்றி
6-மதுரகவி வணங்கும் மாயவன் போற்றி.
7-குலசேகர னேத்துங் கொண்டலே போற்றி
8-பட்டர்பிரா னேத்தும் பவித்திரனே போற்றி
9-கோதைமலர் சூடுங்குழகனே போற்றி
10-துளவத் தொண்டரேத்தும் தூயாய் போற்றி
11-பாண் பெருமா ளேத்தும் பரமனே போற்றி
12-மங்கையர்கோ னேத்தும்மாதவா போற்றி
ஆழ்வார்க ளேத்துமழகா போற்றி
ஆரியர்க ளேத்து மனந்தனே போற்றி.
உலகங்கட் கெல்லா முயிரேபோற்றி
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply