ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரங்கேச புரோஹித
ஸ்ரீ வத்சாங்க ஸூத ஸ்ரீ மான் ஸ்ரேயசே மேஸ்து பூயசே-
த்வம் மே அஹம் மே குதஸ் தத் ததபி குத இதம் வேத மூல ப்ரமாணாத்
ஏதச்சா நாதி சித்த அனுபவ விபவாத்தர்ஹி சாக்ரோச ஏவ
க்வாக்ரோச கஸ்ய கீதாதிஷூ மம விதித கோத்ர சாஷி ஸூ தீஸ்ஸ் யாத்
ஹந்த த்வத் பஷ பாதீச இதி ந்ருகலஹே ம்ருக்யமத் யஸ்த்த்வ தத்வம் –ஸ்லோகம் -25-
நாயந்தே
ஹ்ரீச்ச தி லஷ்மீச்ச பத்ன்யௌ-என்றும்
வைகுண்டே து பரே லோகே ஸ்ரீ சஹாயோ ஜனார்த்தன உபாப்யாம் பூமி நீளாப்யாம் சேவித பரமேஸ்வர -என்றும்
வடிவினை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்றும்
திருமடந்தை மண் மடந்தை இருபாலும் திகழ -என்றும் சொல்லுகிறபடியே ஸ்ரீ லஷ்மி பூமி நீளா நாயகனாய்
யதோ வ இமானி பூதானி ஜாயந்தே -என்றும் -சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் -என்றும்
ச காரணம் கரணாதிபாதிப -என்றும்
ஸ்திதி சம்யாய கர்த்தா சௌ ஜகதோ அஸ்ய ஜகச்ச ச -என்றும்
தானோர் உருவாய் தனி வித்தாய் -என்றும் -சொல்லுகிறபடியே சகல ஜகத் காரண பூதனாய்
அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோகா விஜிகத்சோ அபிபாச சத்யகாம சத்யசங்கல்ப -என்றும்
பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே ஸ்வா பாவிகீ ஜ்ஞான பல க்ரியாச -என்றும்
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் பிரம்மா -என்றும் –
சமஸ்த கல்யாண குணாத்மக -என்றும்
குணா நாம் ஆகரோ மஹான் -என்றும்
பகவோ ந்ரூப கல்யாண குணா புத்ரச்ய சந்திதே -என்றும்
வசீவ தான்யோ குணவான் ருஜூச் சுசி என்றும் -உபக்ரமித்து
சமஸ்த கல்யாண குணா ம்ருதோததி -என்றும்
தயா ஷாந்தி ஔதார்ய -என்று உபக்ரமித்து
ஸூ ள பதத்யா வரகுணா -என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி என்றும்
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே -என்றும் சொல்லுகிறபடியே
நித்ய ஸூ ரிகளாலே அநவரத பரிசர்யமான சரண நளின யுகளராய் இருக்கச் செய்தேயும் –
ச ஏகாகீ நரமேத -என்கிறபடியே உண்டது உருக்காட்டாதே தேவாந்தர கதனான புத்திரன் பக்கலிலே
பித்ரு ஹிருதயம் கிடக்குமா போலே சம்சாரி செத்தனர் பக்கலிலே திரு உள்ளம் குடி போந்து
அனுக்ரஹாய புண்யா நாமாஸ்திதோ சூண்ட மகாம் பிரபோ
ஷீரோதம் மண்டலம் பாநோ ஔபேந்த்ரம் சததாதிவி -என்றும்
அவதார சஹாஸ்ராணி கல்பே கல்பே கரோம்யஹம் -என்றும்
பிரஜாநா மநுகம்பார்த்தம் புனர் அர்ச்சாத்மாநாபுவி -என்றும் பின்னானார் வணங்கும் சோதி என்றும் –
சகல சேதன உஜ்ஜீ விஷையாலே பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாதிகளிலே அத்யந்த ஸூ லாபமாய் அபராத சஹமாய்
ஆபிரூப்ய மூல கந்தமான அர்ச்சாவதாரமாய் சதுர்முக இஷ்வாகு ப்ரப்ருதி தசரத நந்தன விபீஷண தர்மவர்ம தப பலபூத
ஸ்ரீ ரங்கே சய ரூபேண அவதரித்து அருளி
ஆத்யம் ப்ரோக்தம் ஸ்வயம் வ்யக்தம் விமானம் ரங்க சம்ஜ்ஞகம் -என்றும்
செங்கயல் பாய் நீர் திருவரங்கம் -என்றும்
குயில் கூவும் குளிர் பொழில் சூழ் திருவரங்கம் -என்றும்
அற்ற பற்றர் சுற்றி வாழும் அந்தண் நீர் அரங்கம் -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் அபிமத அஷ்டோத்தர சதா ஸ்தான ஸ்ரேஷ்ட தமமாய் அதி ஹ்ருத்யமான கோயிலிலே எழுந்து அருளி இருக்கிற தேவரீர்
இந்த விசேஷ உத்சவத்திலே திரு மஞ்சனம் கண்டு அருளி எழுந்து அருளி இருக்கிற நிலை இங்கனே விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது
அது எங்கனே என்னில் –
த்வம் மே
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -என்றும் -ஏக ஏவா பவத் தத்ர தேவோ நாராயண ப்ரபு -என்றும் சொல்லுகிறபடியே
சகல ஜகத் காரண பூதனான உமக்கு
மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து என்று சொல்லுகிறபடியே ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறி
நித்ய சம்சாரியாய்ப் போந்த நீ சேஷ பூதன் என்று ஜீவனைக் குறித்து அருளிச் செய்ய –
அஹம் மே –
தேஹாத்மா அபிமானியான நான் ஈச்வரோஹம் அஹம் போகீ-என்றும்
யானே என்தனதே என்று இருந்தேன் -என்றும் -ஸ்வ தந்திர அபிமானியான யுக்தனான எனக்கே நான் சேஷ பூதன் என்று ஜீவன் செல்ல –
குதஸ் தத்-
அது எதனாலே -என்ன –
ததபி குத-
அது எதனாலே என்ன
இதம் வேத மூல ப்ரமாணாத் –
வாசா விரூப நித்யயா -என்றும்
அநாதி நிதநாஹ் யேஷா வாக்குத் ஸ்ருஷ்டா ஸ்வயம் புவா -என்றும்
சுடர் மிகு சுருதியுள் -என்றும்
நித்ய அபௌ ருஷேயமான தேவ ரூபமான லிகிதம் உண்டாய் இருக்கையால் என்ன –
அதில் சொல்லுகிறது என் என்ன
பதிம் விஸ்வஸ் யாத்மேச்வரம் -என்றும்
தமீஅச்வரானாம் பரமம் மகேஸ்வரம் தம் தைவதா நாம் பரமம் ச தைவதம் -என்றும்
ஷராத்மா நௌ ஈசதே தேவ ஏக -என்றும்
ப்ரதான ஷேத்ரஜ்ஞே பதிர் குணே ச -என்றும்
போக்தா போக்யம் ப்றேரிதாரம் ச மத்வா -என்றும்
நித்யோ நித்யா நாம் சேதனச் சேதனா நாம் -என்றும்
அந்த ப்ரவிஷ்ட சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா -என்றும்
யஸ்ய ஆத்மா சரீரம் -என்றும்
யஸ்ய ப்ருதிவீ சரீரம் -என்றும்
இந்தப்படி உன்னை சேஷ பூதனாகச் சொல்லுகையாலே என்ன –
ஏதச்சா நாதி சித்த அனுபவ விபவாத் –
அநாதி அனுபவம் தான் என்னதன்றோ -என்ன
தர்ஹி சாக்ரோச ஏவ –
அனால் அதற்கு ஆஷேபணை உண்டு காண் என்ன
க்வாக்ரோச கஸ்ய –
யார் எங்கே ஆஷேபணை பண்ணினார் என்ன
கீதாதிஷூ மம விதித –
கீதாதிகளில் நாம் ஆஷேபணை பண்ணினோம் என்ன
ஆஷேபணை பண்ணின பிரகாரம் எது என்ன
தவாவிமௌ புருஷௌ லோகே ஷரச் சாஷார ஏவச
ஷர சர்வாணி பூதானி கூடஸ் தோ அஷர உச்யதே -என்றும்
உத்தம புருஷஸ் த்வன்ய பரமோத்மேத்யுதாஹ்ருத
யோ லோகத்ர்ய மாவிச்ய பிபர்யத்யவ்யய ஈஸ்வர -என்றும் -என்று காண் என்ன –
கோத்ர சாஷி –
அதற்கு சாஷி யார் என்ன
ஸூ தீஸ்ஸ் யாத்
ஜ்ஞானியே சாஷி என்ன
ஹந்த த்வத் பஷ பாதீச
அவ்வளவேயோ
ப்ரியோஹி ஜ்ஞாதிநோஸ் அத்யர்த்தம் அஹம் ச சம ப்ரிய -என்று அவன்
தேவரீருக்கு பஷபாதி யாகையாலே கூட சாஷி என்ன
இதி ந்ருகலஹே
இப்படி தேவரீரோடு சேதனன் ஆனவன் விவாதம் பண்ணின அளவிலே
ம்ருக்யமத் யஸ்த்த்வ தத்வம் –
பிரமாணம் கர்த்து முத்யுக்த ம்ருக்யமத் யஸ்த ஈரித -அவனாலே
அசித்தி பண்ணிப் போகாத படி பிரமாணம் பண்ண யத்னம் பண்ணி அருளுகிறாப் போலே இரா நின்றது –
————
த்வம் மே அஹம் மே குதஸ் தத் தத பி குத இதம் வேதமூலப்ரமாணாத்,
ஏதச்சாநாதி ஸித்தாதநுபவவிபவாத்ஸோபி ஸாக்ரோச ஏவ.
வாக்ரோச: கஸ்ய கீதாதிஷு மம விதித: சோத்ர ஸா ஸதீஸ் ஸ்யாத்
ஹந்த த்வத்பக்ஷபாதீ ஸ இதி ந்ருகலஹே ம்ருக்யமத்யஸ்தவத்த்வம்.
த்வம் மே-இது எம்பெருமான் ஸம்ஸாரி சேதநனை நோக்கிச் சொல்லும் வார்த்தை. சேதநா! நீ என்னுடைய சரக்கு என்றானெம்பெருமான். அதாவது-நீ எனக்கு அடிமைப்பட்டவனென்றபடி சேதநன் ஸ்வாதந்திரியம் பாராட்டி வணங்கா முடிமன்னனாய்க் கிடந்தபடியாலே எம்பெருமான் இந்த வார்த்தை சொல்ல வேண்டியதாயிற்று.
அஹம் மே-அதற்கு ஸம்ஸாரி பதில் சொல்லுகிற வார்த்தை இது நான்-உனக்கு அடிமைப் பட்டவனல்லேன், எனக்கு நானே அரசன் என்றான் ஸம்ஸாரி .
எம்பெருமான் “த்வம் மே” என்றது போலே ஸம்ஸாரியும் பதிலுக்கு ‘த்வம் மே’ என்னலாமே ;அப்படி ஏன்சொல்லவில்லை? .நானா உனக்கு அடிமைப்பட்டவன்
நீதான் எனக்கு அடிமைப்பட்டவன்’ என்று ஸம்ஸாரி சொல்லியிருக்கலாமே ; ஏன்
அங்ஙனம் சொல்லவில்லை என்னில், இப்படிப்பட்ட பதில் ஸம்ஸாரி சொல்லியிருந்தானாகில் எம்பெருமான் பெறாப்பேறு பெற்றானாவனே; தான் சேஷியா யிருப்பதி லுங்காட்டில் சேஷபூதனா யிருக்குமிருப்பிலே மிகவும்குதூஹலமுடையானன்றோ
அவன்.ஏதேனுமொருபடியாலேசேதநனோடு தனக்கு ஸமபந்தம் ஏற்பட்டால்
போதும் என்று பாரிப்பவனன்றோ அவன்; சேஷியாகவே தானிருக்கவேணுமென்கிற எண்ணம் இல்லையே அவனுக்கு! ஸம்ஸாரிகள் தன்னோடு உறவை அறுத்துகொண்டு போகாமல் தன்னை அடியவனாகக்கொண்டு பரிமாறினாலும் பரமதிபதிபெறுபவனன்றோ அவன். அதுதோன்றவன்றோ ‘த்வம் மே‘ என்று ஸாவசேஷமாய்க்கிடக்கிறது. த்வம் மே தாஸ: என்றோ த்வம்மே ப்ரபு: என்றோவிவக்ஷித்துச் சொன்னபடி. ஏதேனுமொருபடிக்கு ஸம்ஸாரி இசைந்திடுவனோ என்று பார்த்தான் எம்பெருமான். ஸம்ஸாரி மஹா சதுரனாகையாலே இவனோடு நமக்கு எவ்விதமானஉறவும் தேவையில்லை; அவன நமக்கு அடியவனாக இருக்க இசைந்தாலும் அதற்கும் நாம் இசையவே கூடாது; அடியவன் போலே இருந்து காலக்ரமத்தில் நம்மையே அடிமைப்படுத்திக்கொள்ளவல்ல கிறியான் அவன்; ஆதலால் அவனுடைய எல்லையிலும் நாம் செல்லாமல் இருந்து விடுவதே நமக்குத் தகுதி’ என்று ஸம்ஸாரி நினைத்தானாகையாலே அஹம் மே என்று, எம்பெருமானுக்குப் பிடிகொடாமலே விடையளித்து விட்டான். இவனும் த்வம் மே என்று பதில் சொல்லி யிருந்தானாகில் அவளவோடு விவாதம் சாந்தமாகியிருக்குமே; எம்பெருமானே வெற்றி பெற்றானாய்விடுவனே; அதற்கு ஸம்ஸாரி இடம் தரவில்லை.
தத் அபி குத?-நீ த்வம்மே என்று சொன்னாயே, அது எதைக்கொண்டு சொன்’னாய்? எனறு ஸம்ஸாரியின் பதில்கேள்வி இது.-இதம் வேதமூலப்ரமாணத்-சேதநா! வேதமாகிற மூலப் பிரமாணத்தைக்கொண்டு நான் த்வம்மே என்று சொன்னேன் என்கிறவிது எம்பெருமானுடைய பதில் – பதிம்விச்வஸ்யாத்மேச்வரம் இத்யாதிப்ரமாணங்கள் இங்குக்கொள்ளத் தக்கன.
ஏதச்ச அநாதிஸித்தாத் அநுபவவிபவாத் (இது ஸம்ஸாரியின் பதில் வார்த்தை.)நீசொல்லுகிற ப்ரமாணம் ஓலைப்படா ப்ரமாணமாகையாலே வெளிக்கு வரமாடாதது ; அஹம்மே என்று சொன்ன எனக்குஸாதகமான ப்ரமாணம் அப்படிப்பட்டதன்று.அநாதிகாலமாக ஸ்வாதந்திரியத்தை நான் அனுபவித்துக்கொண்டு வருவதால், அநுபவமே ப்ரபல ப்ரமாணமாகையால் இதனால் உன்னுடைய வேதம் அடிபட்டொழிந்தது என்றான். உலகத்திலும் ஒரு கருஹம் ஒருவனுடையதென்று சாஸனபத்திரங்கள் இருந்தாலும் நெடுநாளாக அந்த க்ருஹத்தை வேறொருவன் அநுபவித்து வந்தால் அவனே அதற்குச் சொந்தக்காரனாக ஆய்விடுவன் என்றும்.உண்மையான உடையவன் இழந்துபோய்விடுவான் என்றும் காண்கிறோம். அது போல், எம்பெருமானே உடையவனென்று சாஸநமிருப்பினும் அநாதியான அறுபவம் ஸம்ஸாரியினுடையதாகையாலே அந்த சாஸநம் துர்பலமாக இவனால் நிரூபிக்கப்பட்டது. ஸம்ஸாரியும் கிரமமான வழியிலேயே வழக்காடுகிறான் போலும்.
ஸோபி ஸாக்ரோச ஏவ -(அதற்குஎம்பெருமானுடைய பதில் இது.) சேதநா நெடுங்காலமாக உனக்கு ஸ்வாதந்த்ரிய அநுபவம் உண்டென்பது உண்மையே-அதை நான் அபலபிக்கவில்லை. ஆனால் அந்த அநுபவம் நிராக்ஷேபமாக இருந்தாலன்றோ செல்லும். அப்படியில்லையே. உனது அநுபவம் ஆக்ஷேபத்தோடு கூடிய தாயிற்றே! அதனை நீ சொல்லிக்கொள்வதனால் உனக்கு லாபமில்லையே என்றானெம்பெருமான். உலசுத்திலும் ஒரு க்ருஹத்தைப் பிறன் ஒருவன் நெடுநாளைய அநுபவத்தில் வைத்துக் கொண்டிருந்காலும அந்த அநுபலத்தை அடிக்கடி சொந்தக்
காரன் ஆ க்ஷபித்துக் ெண்டிருந்ததா ப் புலப்பட்டுவிட்டால் அவ்வநுபலம்
செலலமாட்டா தென ப்ரஸி த
ஆக்ரோச: க்வ ? கஸ்ய ஆக்ரோச: ?-(இது ஸம்ஸாரியின் வினா) என்னுடைய
ஸ்வாதந்திரியா நுபவ ஆர்க்ஷ க்கோடு கூடியகென்று நீ சொன்னாய்: அப்படிச்
சொல்லிவிட்டால் போதுமா? ஆக்ஷேபம் செய்திருப்பது யார்? ஆக்ஷேபம் எவ்
விடத்தில் செய்யப்பட்டிருக்கிறது? அதையெல்லாம் விசதமாகச் சொன்னாலல்
லவோ உன்னுடைய வாதம் ஏறும்.
கீதாதிஷு மம விதித:- (இது எம்பெருமானுடைய மறுமொழி.) க்வ என்று
கேட்டதற்கு‘கீதாதிஷ என்பது பதில் கஸ்ய என்று கேட்டதற்கு ‘மம’ என் பது
பதில். சேதநா ! பகவத்கீதை முதலானவற்றிலே (உன் ஸமூஹத்தில் கலைவனான
அர்ஜூனனென்கிற வொருவனை வைத்துக்கொண்டு) சேதந ஸ்வாதந்திரியத்தை
நான் ஆக்ஷேபித்திருக்கிறேனென்பதை நாடு நகரழப் நன்கறியும். என்றைக்கோ
ஒருநாள் ஏதோவொரு மூலையிலே நீ ஆக்ஷேபித்திருகால்அது செல்லுமோவென்று ஸம்ஸாரி சொல்லுவதற்கு இடமில்லாகபடி ‘விநித:” எனப்பட்டது. கீதை
நடையாடாத இடமில்லை; கீதைக்கு ப்ரசாரமில்லாத காலமுமில்லை; கீதையைத்
தெரிந்து கொள்ளாத வ்யக்தியுமில்லை என்ற அபிப்ராயங்கள் இச்சொல்லில் பொதிந்துள. எ அத்ர சு: ஸா – (இது ஸம்ஸாரியின் கேள்வி ) வ்யவஹாரம் என்று வந்துவிட்டால் ஸாக்ஷி விசாரணை இருந்தே தீர வேண்டும். எத்தனை சாஸந பத்திரங்கள் இருந்தாலும் ஸாக்ஷிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டியது முறைமை. உனக்கு ப்ரமாணமான வேதங்களும் கீதை முதலியனவும் கிடக்கட்டு . பெட்டியினுமீது ஏறிச்சொல்லுவதற்க ஒரு ஸாக்ஷி வேணுமே. யார் ஸாக்ஷி ? என்கிறான ஸமஸாரி. எம்பெருமான்தவிர மற்ற எல்லாச் சேதநர்களும் ஸம்ஸாரிகளே யா தலால் அவர்களும் அஹம் மே என்றிருப்பவர்களே யாதலால் இவனுக்கு ஸாக்ஷிகள் எங்ஙனம கிடைககுப்போகிறார்களென்பது சேதநனுடைய எண்ணம். எம்பெருமானுடைய பாக்யத்தாலே ஸம்ஸாரிகளினிடையே முமுக்ஷக்களும் சிலர் இருப்பதால் அவர்கள் தனக்கு ஸாக்ஷிகளாக இருக்கத் தகுதியுடையார் என்றெண்ணின எமபெருமான் ஸு :ஸ்யாத் என்றான். ஞானிகளெல்லாரும் என் பக்ஷத்தில் ஸாக்ஷிகளாக நிற்கக்கூடும்என்றபடி. (ஸதீ: என்பதை ஜாத்யேகவசநமாகக் கொள்க.) அஸ்தி என்று உறுதியாகச் சொல்லாமல் ஸ்யாத் என்று சொன்து ஏனெனில், இவ்விருளதருமாஞாலமானது ப்ர ஹ்லாதாழ்வானையு முட்பட எதிராபு கோக்கப் பண்ணினதாகையாலே ஞானிகளும் ஸமயத்திலே நம்மைக் கைவிடும்படி நேர்ந்து விடுமோ என்னவோ என்கிற அதிசங்கைதோன்றி அதை ஸ்யாத் எபைதனால காட்டின
னென்க. விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும செறும் ஐ புல்னிவை” ஆதலால் யாரையும் நம்புவதற்கில்லையே என்றெண்ணின போலும்.ஹந்த -த்வத் பாதீ ஸ:- (இது ஸம்ஸாரியின் பதில்.) ஸாக்ஷிகள் மத்யஸ்தர்கள் க. இருக்கவேண்டும். உறவினர்களையே கொண்டு சொல்லுவிக்கப்படுகிற ஸக்ஷியம் உபயோகப்படாது. ஞானிைைள சாக்ஷியாகச் சொன்னது பொருந்துமோ??;
‘ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம்” என்று கீதையில் நீயே சொல்லியிருக்கிறாயே; உனது
உயிர் நிலையாகவன்றே ஞானிகள் இருப்பது. வாதியே ஸாக்ஷி என்று சொன்னாகத் தேறிற்நேயல்லது பிறனொருவன் ஸாக்ஷியாகக் கூறப்பட்டானில்லையே என்றான் ஸம்ஸாரி இதற்குமேல் எம்பெருமான் என்னசெய்வான்!ஸம்ஸாரிகள் யாவரும் பிரதிலாதிகளாக் ஆய்விட்டபடியால் அவர்களில் ஒருவரும் ஸாக்ஷிகளாக நில்லார்.முக்ஷக்களோ தன வகுப்பில் சோந்துவிட்ட படியாலே அவர்களுடைய சாக்ஷ்யம் அப்ரயோஐமெறுை கண்ணழிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஸம்ஸாரிகளையும் வீடமட்டிாற்றில யல்ஹார லோ தான தோல்வி யடையவேண்டியவனாக முடிந்துவிட்டது. ‘நம்முடைய நல்ல ொ ததை நாம் அநியாயமாய் இழந்துவிடுவதா! என்று பரிதபிக்கில ன. இந்த நிலைமையில் தைவா தீனமாய் ஒரு உபாயும்.ஸ்புரித்ததாம்;. அதாவது, ஸமஸாரியினுடைய வாயாடிததனத்தினால் நமக்,கு,வயவஹாரத்தில் பழுது ஏற்பட்டாலும் ஸொதது நம்முடையதே யென்பது ஸத்யமாதலால், கடைசியாக பரமாணம பண்ணிக்கொடுத்து ஸொத்தைப் பெற்றுக் கொள்வதான முறைமையும் அரசாங்கத்தில் இருப்பதால் அந்த வகையில் நாம்.வெற்றி பெறக்கூடவே ம் என்று தோன்றிற்றாம்.[இதி ந்ருகலஹே மருக்யமத்யஸ்தவத் த்வம்]இதீ – இவ்விதமாக, நருகலஹே – சேதனனோடு விவா தமுண்டாகித் தனக்குத் தோல்வி விளைந்த வளவில், த்வம் ம்ருத்யமத்யஸ்தவத் (ப்ரகாசஸே )= தேவரீா பரமாணம் செய்ய ஸந்நதர்போலே விளஙகா நின்றீர் .ஆ ப்ரமாணம் கர்த்துமுத்யுக்தோ“மருகய பத்ய த உச்யதே” என்பது நிகண்டு. துளசி மாலையணிந்து முழுக்கிடுபலன் தானே பிரமாணமசெய்பன். இந்த உத்ப்ரேக்ஷையினாவ் நமக்குக் கிடைக்கும் பொருள் யாதெனில்; எம்பெருமாமனாடு நாம விவாதப்படாமல் இருக்குமளவே போதுமென்பதும், எவ்வதையினாலேனும் நமமை அடிமைப்படுத்திக்கொள்ள அவன் வழிதேடுகிறவன்”என்பதும், நாமெல்லாம அவனுடைய உடைமை யாதலால் நம்மை ஆட்படுத்திக்கொள்வலேயே நோக்குடையனான அவனை நினைத்து நாம் மார்பிலே கைவைத்துறங்கலாமெனபதுமாம்.
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம் –
————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply