ஒரு விலக்ஷணமான திவ்ய தேசானுபவம்

ஒரு விலக்ஷணமான திவ்ய தேசானுபவம்

‘ஆழ்வார்பாடின ஊர்கள் எத்தனை?–உலகேத்துமாரியானத்தியூர் (ஹஸ்திகிரி ) திருவெவ்வுளூர் . திருநின்றவூர்,-திருக்கோவலூர் (கூந்தல் கமழுங்) கூடலூர், திருக்கண்டியூர், திருவிந்தளுர். திருநாங்கூர்-திருநறையூர், உறையூர், கரம்பனூர்.சிறுபு யூர். தேரழுந்தூர், ஆதனூர்,திருக்கோட்டியூர்,திருமோகூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருக்குருகூர்,திருக்கோளுர்.குட்டநாட்டுத் திருப்புலியூர், திருவண்வண்டூர் ஆக இருபத்தோர் ஊர்கள் தான் ஆழ்வார் பாடியவை யென்றுஉள்ளபடி சொல்லுகிறேன்.

ஆழ்வார்கள் பாடிய நகரங்கள் எத்தனை?-பரமேச்சுரவிண்ணகரம். காழிச்சீராம் விண்ணகரம், வைகுந்த விண்ணகரம் அரிமேயவிண்ணகரம்,நந்திபுரவிண்ணகரம் விண்ணகரம்(திருவிண்ணகர்)

ஆழ்வார்கள்பாடிய நகர்கள் எத்தனை?-தீருப்பேர்கர். திருவல்லவாழ் நகர், கண்டமென்னும் கடிநகர் . சிரிவரமங்கலநகர். அனந்தபுரநகர் .கண்ணபுரநகர்.(திருவின்ணகர் நன்னகரே )

ஆழ்வார்கள் பாடிய குடிகள் எத்தனை?-திருவெள்ளியங்குடி, புள்ளம்பூதங்குடி, திருக்கண்ணங்குடி, திருப்புளிங்குடி, திருக்குறுங்குடி.

கழ்வார்கள் பாடிய ‘கா எத்தனை? ‘கால் ‘எத்தனை?-கா இரண்டு.கால் ஒன்று. திருவெஃகா, திருத்தண்க ா – திருத்தண்கால்

ஆழ்வார்கள் பாடிய மலை எத்தனை?-திருவேங்கடமலை. திருநீர்மலை, திருமெய்யமலை. வானமாமலை, திருமாலிருஞ்சோலை மலை

ஆழ்வார்பாடிய மங்கையும். மங்கலமும் எத்தனை?-திருக்கண்ணமங்கை, வரகுணமங்கை. துலைவில்லி மங்கலம். ச்ரீவரமங்கை மங்கலம்.

ஆறு எத்தனை? கரை எத்தனை அறை எத்தனை? ஆணிஎத்தனை?-திருச்சிற்றாறு. திருவாட்டாறு. – திருக்காட்கரை, ஆற்றங்கரை, (கபிஸ்தலம்) திருவெள்ளறை-திருப்புல்லாணி

உத்தமம் எத்தனை? –உத்தமம் ஒன்றுதான், வண்புருடோத்தமம். அப்படியே உத்தமனும் ஒருத்தன்தான்.கரம்பனூர் உத்தமன்,

கூடம் எத்தனை-திருமணிக்கூடம். சிருச்சித்ரகூடம்

ஐகார வீற்றதான ஊர்கள் எத்தனை?-தஞ்சை குடந்தை. சேறை. நாகை. திருக்கடன்மல்லை. திருவிடவெந்தை, வேளுக்கை. குருகை (குருகூர்) அழுந்தை.

அகம் எத்தனை?-ஊரகம்,நீரகம்.காரகம்.பேரகம் (திருப்பேர்நகர்)

புரம் எத்தனை?-திருவயிந்திரபுரம்,திருவனந்தபுரம். கணபுரம்.

கோயில் எத்தனை?திருவரங்கம் பெரிய கோயில், செம்பொன்செய்கோயில், நாச்சியார் கோயில்-மணிமாடக் கோயில்.

பாடிஎத்தனை?-காவளம்பாடி, திருவாய்ப்பாடி

கிராமம்எத்தனை?-சாளக்கிராமம்

ஆச்ரமம் எத்தனை ?பதரிகாஸ்ரமம்

அரணியம் எத்தனை,-கைமிசாரணியம்,

குன்றம்(குன்று)எத்தனை?-ிங்கவேள் குன்றம்(அஹோபிலம்)

குளம் எத்தனை?-திருவெள்ளக்குளம். பெருங்குளம்.

இல் எத்தனை?-அன்பில்.

தானம் எத்தனை?-திருக்கடித்தானம்.

கால்எத்தனை? கை எத்தனை? வாய்எத்தனை? மூக்கு எத்தனை? முலைஎத்தனை?-கால் ஒன்றே- திருத் தண்கால் கைகள்- ெருநாகை. நாங்கை கண்ணமங்கை. ரீவரமங்கை வாய்ஒன்றே- திருநாவாய் மூக்கு ஒன்றே சூடமூக்கு (குடமூக்ல் கோயிலாக்கொண்டு). முலை இரண்டு தென்னனுயர் பொருப்பும் தெய்வ வட மலையும் என்னுமிவையே முலை’

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை*
மேற்சென்று செய்யப் படும்’
*என்று வள்ளுவர் கூறுவது அறச்செயல்களுக்கு மட்டுமல்ல. .‘நல்வினை’-திருத்தலங்களை தரிசிப்பதற்கும் தான்-வைஷ்ணவ திவ்ய தேசங்களை தரிசிக்க முதலில் செல்லவேண்டிய கோவில் காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில்.காரணம் இந்த ஒரு தலத்தை தரிசித்தாலே 108 வைணவ திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் உங்களுக்கு கிடைக்கும்-இந்த ஊரின் பெயர் வீரநாரயணபுர சதுர்வேதிமங்கலம் என்று கல்வெட்டுகளில் உள்ளது. வீரநாராயணன் என்ற பேர் பெற்ற முதலாம் பராந்தகன், இவ்வூரை அமைத்தார். இவ்வூர் சிதம்பரத்திலிருந்து 26கி. மீ தூரத்தில் இருக்கிறது. இதன் அருகில் தான் தமிழகத்திலேயே மிகப் பெரிய ஏரியான
வீராணம் ஏரி இருக்கிறது.-‘வீரநாராயண ஏரி’ என்பதே நாளடைவில் ‘வீராணம் ஏரி’ என்று மருவிட்டது. பெருமாளுக்கும் பிராட்டியாருக்கும் திருமணம் நடைபெற்ற போது இது பெருமாளுக்கு சீராக கொடுக்கப்பட்டதாம்.-காட்டுமன்னார் கோவில் ஊரின் நடுவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் ஆலயம். மூலவர் ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கரம் ஏந்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். மரத்தினாலான நெடிய வீரநாராயணப் பெருமாளின் சிலை கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய மன்னனால் சுதை உருவாக அமைக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது.-இறைவனை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் நம்மை நோக்கி பல அடி எடுத்து வைப்பான்.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading