ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமாநுசன்.-

ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்தஇதத்தாய் இராமாநுசன். * திருவாய்மொழித் தனியன்களில் ஒன்றான* வான் திகழுஞ்சோலைப்பாசுரத்தின் பிற்பகுதி இது. இது பட்டரருளிச்செய்தவெண்பா. ‘திருவாய்மொழியைப் பெற்ற தாய்நம்மாழ்வார் ; வளர்த்த தாய்எம்பெருமானார்” என்கிறது இதில். மணவாள மாமுனிகளருளிச் செய்தஉடையவரது வாழிதிருநாமத்திலும் * மாறனுரை செய்த தமிழ்மறை வளர்த்தோன்வழியே * என்றருளிச் செய்யப்பட்டுள்ளது. திவ்யப்ரபந்தங்களைஎம்பெருமானார் வளர்த்தவிதம் யாது? என்று பலர் கேட்பதுண்டு. விளங்கச்சொல்லுகிறேன் கேண்மின். *சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள்நான்கும் எல்லையில்லாவறநெறி யாவுந் தெரிந்தவன் * என்று இராமானுசநூற்றந்தாதியில் (44) போற்றப் பெற்ற எம்பெருமானார்க்குத் தமிழறிவில்சங்கிப்பார் ஆருமில்லை. திவ்யப்ரபந்தங்களிலுள்ள அர்த்த விசேஷங்களைஸ்ரீபாஷ்யத்திலும் கீதாபாஷ்யத்திலும் கத்யத்ரயத்திலும் ஆச்சரியமாகப் பதியவைத்தருளியிருப்பதை அடியேன் த்ரமிடோபநிஷத் ப்ரபா வஸர்வஸ்வ நூலில்விரியவுரைத்திருப்பது தவிர உபந்யாஸங்கள் தோறும் விளக்கி வருவதைஉலகமுணரும். முக்கியமாக நிரூபிக்க வேண்டிய விஷயங்களைப் புறச்சான்றுகொண்டும் அகச்சான்று கொண்டும் மூதலிப்பது முறை. இவ்விஷயத்தில்ஏய்ந்தபெருங்கீர்த்தி யிராமானுச முனிதன், வாய்ந்த மலர்பாதம் வணங்குகின்றேன் -ஆய்ந்த பெருஞ், சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,பேரா தவுள்ளம் பெற என்பது முதலான தனியன்களும், மாறனடிபணிந்துய்ந்தவிராமானுசன் என்பது முதலான இராமானுச நூற்றந்தாதிப் பாசுரங்ககள் பலபலவும் புறச்சான்றுகளாம். அவற்றைவிட அகச்சான்றுகளையேஅடியேன் அதிகமாகக் காட்டுபவன். எம்பெருமானாருடைய திவ்யஸூக்திகளில் அருளிச் செயல் விசேஷார்த்தங்களே அதிகமாக கமழ்கின்றனவென்பதைச் சில பாக்கியசாலிகளே அறிந்து அநுபவிக்கவல்லவர்கள். ஆளவந்தார் ஸ்ரீஸூக்திகளில் இது பரிமிதம். உடையவர் ஸ்ரீஸூக்திகளில் கொள்ளை கொள்ளையானவை. நிதிபோல் புதைந்து கிடப்பவை. திருவராதனத்தில் அருளிச் செயல் ஸேவித்துச் சாத்துமுறை செய்யவேணுமென்பதை ஸ்வாமி தமது நித்ய க்ரந்தத்தின் முடிவில் ‘ச்ருதிஸுகை: ஸ்தோத்ரை: அபிஷ்டூயஎன்பதனால் காட்டியருளினர். *செவிக்கினிய செஞ்சொற்களாலே * என்றபடி.இவ்வண்ணமாகவே நுட்பமாகக் காட்டியருள்வது எம்பெருமானாரியல்பு.சிகரமானவொரு விஷயத்தை இங்குப் பொறித்திடுகின்றேன். ஸ்ரீ பாஷ்யத்தில் கடைசியாக முடிக்கும் ஸ்ரீஸூக்தி என்ன வென்று பார்ப்போம்.ய ஏவமாஹ என்றாரம்பித்து ‘வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ. மஹாத்மாஸுதுர்ல : * இதி. என்பது ஸ்ரீ பாஷ்யத்தின் முடிவான ஸ்ரீஸூக்தி ஸூத்ரம் என்னவென்றால் * அநாவ்ருத்திச் சப்தாத் * என்பது. ‘முக்தாத்மாதிருநாட்டிலிருந்து திரும்பி வருவதில்லை, சாஸ்த்ரம் அங்ஙனே சொல்லியிருக்கையாலே” என்பது ஸூத்ரத்தின் பொருள்; சாஸ்த்ரம் இன்னதென்பதைக் காட்டவேண்டும்; அது காட்டியாயிற்று. *ஸ கல்வேவம் வர்த்தயந் இத்யாதியான உபநிஷத் வாக்யமும் * மாமுபேத்ய து கெளந்தேய! புநர்ந்ம ந வித்யதே * என்கிற கீதா வசனமும் காட்டியாயிற்று. ஸூத்ர வியாக்கியானம் செவ்வனே முடிவு பெற்றதாயிற்று. பின்னை ப்ரியோ ஹி ஜ்ஞாநிந்:என்று தொடங்கி ஸ மஹாத்மா ஸு துர்லப:என்னுமளவாக விஸ்தரம் செய்திருப்பது எதற்காக ? என்று விமர்சிக்க வேண்டுவது மிக அவசியமாகும்.விஜ்ஞாபிக்கிறேன், குறிக்கொண்மின். ஸூத்ரகாரர் கூறியபடி [சப்தாத் என்றுசொன்னபடி] சாஸ்த்ரத்தைக் காட்டி மீட்சியில்லை யென்று நிரூபித்தாயிற்று.அதன் மேலும் பூர்வபம் தோன்றும்; ஈச்வரனோ கேட்பாரற்ற சுதந்திரன்;நிரங்குச ஸ்வதந்த்ரனெனப்படுகிறான். *நாஸௌ புருஷகாரேண × சாபிஅந்யேந ஹேதுநா, கேவலம் ஸ்வேச்சயைவாஹம் ப்ரேக்ஷே கஞ்சித்கதாசந என்று பேசுபவன். அவன் சாஸ்த்ரத்தையும் மீறி முக்தாத்மாவைநோக்கி மீண்டொழிந்து போ ‘ என்று சொல்லித் தள்ளிவிட்டால் தடுப்பாருண்டா? யாரே தடுக்கவல்லார்? என்று சோத்யம் விளைந்தே தீரும். இந்த சோத்யம் சங்கராசார்யாதிகளான இதர பாஷ்யகாரர்களுக்குத் தோன்றவில்லை. நமது பாஷ்யகாரருக்குத் தோன்றிற்று. அருளிச்செயற் கடலில் அமுதமானவொரு பொருளை யெடுத்து வெளியிடுவதற்காகத் தோன்றிற்று அதைப் பூர்வபமாக வைத்துக் காட்டாமல் ஸமாதானத்தை மட்டும் மிகவழகாகக்காட்டியருளினர்- க ந ச பரம புருஷஸ் ஸத்யஸங்கல்ப: அத்யர்த்தப்ரியம் ஜ்ஞாநிநம் கதாசித் ஆவர்த்தயிஷ்யதி” என்கிற ஸ்ரீ பாஷ்ய ஸூக்தியாலே,இதன் பொருளாவது – எம்பெருமான் தன்னுடைய பரமப்ரீ திக்கு இலக்கான ஞானியை ஒருநாளும் திருப்பியனுப்பமாட்டானென்பதாம். இவ்விஷயத்திற்கு ப்ரமாணமாக ய ஏவமா ? என்று தொடங்கி * ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்த்தம் அஹம் ஸ ச மம ப்ரிய:* என்கிற கீதா ச்லோகத்தை [பகவத் வசனத்தை] எடுத்துக் காட்டினார். அவ்வளவே போதுமானது. அதற்கு மேலும் வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்ல : * என்னுமளவும் எதற்காக எடுத்துக் காட்டினாரென்று ஆராய வேண்டும். கேண்மின்; கீழேகாட்டிய ஸ்ரீ பாஷ்ய பங்க்தியில் ‘அத்யர்த்தப்ரியம் ஜ்ஞாநிநம் நகதாசித்ஆவர்த்தயிஷ்யதி” என்றிவ்வளவே ஸாதித்திருக்கவில்லை. இடையில் லப்த்வா என்றொரு விலையுயர்ந்த பதத்தை ப்ரயோகித்தருளியுளளார். அந்தப் பதம் இல்லாமலே வாக்கியம் ஆந்வயிக்காமற் போகாது. எளிதாக அந்வயிக்கும்.அத்யர்த்தப்ரியம் ஜ்ஞாநிநம் ந கதாசித் ஆவர்த்தயிஷ்யதி’ என்றால் இதில்அநவயம் ஒன்றுமில்லையே. இடையில் லப்த்வா என்றொரு பதத்தை இட்டருளினது த்ராவிட வேதாந்த ஸாரார்த்த பரமார்த்தத்தை விளக்குவதற்கேயாம்.சேதநலாபம் ஈச்வரனுக்கே யொழிய ஈச்வரலாபம் சேதனனுக்கன்று’ என்கிற ஸத்ஸம்ப்ரதாயார்த்த நிதியன்றே இங்கு வாரியளிக்கப்பட்டது. ஆழ்வார் யானொட்டி யென்னுள் இருத்துவமென்றிலன், தானொட்டி வந்தென் தனிநெஞ்சை வஞ்சித்து, ஊனொட்டி நின்றென்னுயிருள் கலந்து, இயல்வானொட்டுமோ இனியென்னை நெகிழ்க்கவே. (திருவாய்மொழி 1-7-7) என்றருளிய பாசுரத்தை அக்ஷரச: அடியொற்றியன்றோ ஸ்ரீபாஷ்யஸூக்தி அவதரித்துள்ளது. ஜ்ஞாநியான வொருவனைப் பெறுவதற்கு எம்பெருமான் எவ்வளவோபாடுபட்டவனாயிருந்து, அப்படிப்பட்ட ஞானியைப் பெற்றபின்பும் போய்விடுஎன்று தள்ளுவனோ? என்கிற பொருள் தோன்றவே லப்த்வா என்கிற பதத்தைச் சேர்த்தருளினர்; எம்பெருமான் ஞானியான சேதனனைத் தேடுகிறான், தேடிப் பெற்றால் களிக்கிறான், பெறாவிட்டால் வருந்துகிறான் என்பதைக் காட்டவே,[லப்த்வா என்ற தமது ஸூக்திக்கு ப்ரமாணமாகவே ஸ மஹாத்மாஸு துர்லப :என்னுமளவும் உதாகரித்தது. இத்தகைய பல நூறு அருளிச்செயலர்த்த விசேஷங்களை அமைத்தருளினதுபற்றி மொய்ம்பால் வளர்த்தஇதத்தாய் இராமானுசன் * என்று பணித்தது . முக்கியமாக ஒரு வார்த்தை;“ ஸர்வதேச தசாகாலேஷ அவ்யாஹத பராக்ரமா, ராமாநுஜார்யதிவ்யாஜ்ஞா வர்த்ததாம் அபிவர்த்ததாம்.‘ என்கிற சலோக ரத்னத்தை ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபாதிகளில் ஸேவிக்கின்றிலோம். பகவத் விஷய ரஹஸ்யாதி காலக்ஷேபங்களிலும் ஸேவிக்கின்றிலோம். அருளிச்செயல் கோஷ்டிகளில் மட்டுமே ஸேவித்து வருகிறோம். இதனாலும் * மொய்ம்பால் வளர்த்த இதத்தாயான இராமாநுசருடைய பெருமையை யுணரலாம்.

இப்படிப் பெரிய பெருமாள் விஷயமாகவே ப்ரதிபாதித்த திருவாய் மொழியை
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன்
நெடும் காலம் நோற்றுப் பெற்ற முந்தின மாதா ஆழ்வார்
வண் தமிழ் நூற்க நோற்றேன் —4-5-10–என்றார் இறே

வருந்திப் பெற்ற பிள்ளையை வளர்த்து எடுக்கும் மாதாவைப் போலே திருவாய் மொழியை வளர்த்த இதத்தாய் –
வர்த்திப்பித்த மாதா -எம்பெருமானார் ஆயிற்று
ஞானக் கலையான -1-9-8- திரு வாய் மொழிக்கு ஜென்ம பூமி ஆழ்வார் -தத் வர்த்தகர் எம்பெருமானார் –
இப்படி யாயிற்று ஞான சந்தானம் வளர்த்தியோடே நடந்து செல்வது –

பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து –பெரிய –8-9-7-என்னுமா போலே

மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் ஆவது –
ஈன்ற தாய் பெற்றுப் பொகட்டுப் போனால் வளர்க்கும் தாய் தன் மிடுக்காலே காத்து நோக்குமா போலே ஆயிற்று –
இவரும் அத்தைக் காத்து வளர்த்த படியும் –
தேவகி பெற்ற யுருவு கரிய ஒளி மணி வண்ணனை –பெரிய –1-3-17–
வளர்க்கும் தாயான யசோதை தன் மிடுக்காலே எடுத்து –
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன் –பெரியாழ்வார் –2-9-6-என்றும்
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தே நின்று –2-9-8-
போதர் கண்டாய் –2-9-6-
தாய் சொல் கொள்வது தன்மம் கண்டாய் –2-9-8-என்று
குற்றம் சொல்லுமவர்களையும் தன் சொல்லாலே வாய்ப் புடை புடைத்து தன் வசமாக்கி
தீய புஞ்சிக் கஞ்சன் –2-2-5-என்று கருத்தைக் குலைத்து
காப்பாரும் இல்லை -2-3-1—என்று இரந்து
அசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீல நிறத்துச் சிறு பிள்ளை –1-3-12-என்னும்படி
நிறம் பெற வளர்த்து ப்ரமேய சாரத்தை வர்த்திப்பால் போலே
பிரமாண ஸாரத்தை வர்த்திப்பித்த பிரகாரமும் –

அது எங்கனே என்னில் —
இங்கும் ஆழ்வார் அவதரித்து
அவா அற்று வீடு பெற்று எழுந்து அருளின –10-10-11- பின்பு
பாஹ்ய குத்ருஷ்டிகளால்
பாஷா கானமான திருவாய் மொழி அபி பூதமாய் வருகிற படியைக் கண்டு
ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூ க்திகளாலே அத்தை நிரோதித்து-அத்தை இதுக்குக் காவலான வேலியாகக் கற்பித்துத்
திருவாய் மொழியைத் தன் கை வசம் ஆக்கி
திருக் குருகைப் பிரான் பிள்ளானைக் கொண்டு இதன் அர்த்தத்தை வெளியிடுவித்து வர்த்திப்பித்துக் கொண்டு போந்தார் இறே –
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்னும்படியான அடியார் ஆகையால் –
ஆண்டவன் இட்ட பயிரை வர்த்திப்பிக்க வேணும் இறே அடியானுக்கு —

————-

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை
யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணரும் சீர்
நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே
– -44 –

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே
-1 –

மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்பதை
மணவாள மா முனிகள்-பராங்குச பாத பக்தம் –என்று வட மொழியில் மொழி பெயர்த்தார்
பக்தம் -உணவு

ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமாநுச முனி தன் வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன்
ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத வுள்ளம் பெற
–ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்தது –

இவர் தான் –
மாறன் அடி பணிந்து உய்ந்தவராய்
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை
–இராமா -46- என்றும்
தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னைத் தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த ராமானுஜன்
-இராமா –29-என்றும்
பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாக யுடையராய் –இராமா –64-
திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் இருக்குமவராய் –இரா –60-
உறு பெரும் செல்வமும் மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் என்று அறிதர நிற்குமவர் ஆகையாலும் –இராமா -19-
அவர் திருவடிகள் ராமானுஜர் ஆகையால் –
இவரை அர்த்திக்கிறது –

த்வாதஸ அக்ஷரேண -விஷ்ணு ஷட் அக்ஷரேண-விஷ்ணு காயத்ர்யா -பஞ்ச உபநிஷதை -புருஷ ஸூக்தர்க்பி
அந்யைஸ் ச பகவன் மந்த்ரை சக்தஸ் சேத் -புஷ்பம் ப்ரதாய தேவ்யாதி திவ்ய பரிஷாதாந்தம் தத் தத் மந்த்ரேண புஷ்பம் தத்வா ப்ரணம்ய
ப்ரதி திஸம் ப்ரதக்ஷிண ப்ரணாம பூர்வகம் பகவதே புஷ்பாஞ்சலிம் தத்வா புரத ப்ரணம்ய
ஸ்ருதி ஸூகை ஸ்தோத்ரை ஸ்துத்வா ஆத்மாநம் நித்ய கிங்கர தயா நிவேத்ய ததைவ த்யாத்வா யதா ஸக்தி மூல மந்த்ரம் ஜபித்வா
ஸர்வ போக ப்ரபூர்ணம் மாத்ரம் தத்வா முகா வாஸ தாம்பூலே ப்ரதாய அர்க்யம் தத்வா போஜ்யாசனம் அப்யர்ச்ச ப்ரணம்ய
அநுஜ் ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பாத்ய ஆசமநீய அர்ஹாணி தத்வா

ஓம் நமோ பகவதே வாஸூ தேவாய -என்ற 12 எழுத்து மந்திரத்தாலும்
ஓம் விஷ்ணவே நம -என்ற ஆறு எழுத்து மந்திரத்தாலும்
ஓம் நாராயணாய வித்மஹே வாஸூ தேவாய தீ மஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் -என்கிற விஷ்ணு காயத்ரியாலும்
பஞ்ச உபநிஷத்துக்களாலும்
புருஷ ஸூக்த ருக்குகளினாலும்
பிற பகவன் மந்த்ரங்களாலும்
சக்தியுள்ளவரை புஷ்ப்பங்களை சமர்ப்பித்து
பிராட்டி முதலிய அடியவர்கள் அனைவருக்கும் அவரவருக்கு உரிய மந்திரங்களுடன் புஷ்பம் ஸமர்ப்பித்து வணங்கி
எல்லா திசைகளிலும் ப்ரதக்ஷிணம் பிரணாமம் இவற்றுடன் எம்பெருமானுக்கு புஷ்பாஞ்சாலி ஸமர்ப்பித்து முன்னால் வணங்கி
செவிக்கு இனிய ஸ்தோத்ரங்களால் -திருப்பாவை முதலிய அருளிச் செயல்களால் -ஸ்துதித்து
தன்னை நித்ய கைங்கர்ய பரனாக ஸமர்ப்பித்து -அப்படியே தியானித்து -சக்தி யுள்ளவரை மூல திரு மந்த்ரத்தை ஜபித்து
எல்லா போகங்களையும் பூர்த்தி செய்யும் மாத்திரையை ஸமர்ப்பித்து வாயுக்கு வாஸனை அளிக்கும் தாம்பூலம் சமர்ப்பித்து
அர்க்கியம் சமர்ப்பித்து போஜ்யசாநத்தைப் பூஜித்து வணங்கி
பகவான் அனுமதி கொண்டு -பாதுகை ஸமர்ப்பித்து அங்கே எழுந்து அருளி இருக்கும் பகவானுக்கு பாத்ய ஆசமனீயங்களை ஸமர்ப்பித்து

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading