ஸ்ரீ இராமாயண ரஹஸ்ய அர்த்தங்கள்-ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள்-

வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத் மஜே
வேத ப்ராசேதஸாத் ஆஸீத் ஸாஷாத் ராமாயணாத்மநா

ஸ்ரீ வைகுண்ட நாதனே பரம் பொருள்
வேதங்களால் ப்ரதிபாதிக்கப் படுகிறவன்
அவனே ஸ்ரீ ராமனாக திரு அவதரிக்கும் பொழுது வேதமே ஸ்ரீ ராமாயணமாக திருவவதரித்தது

வேதங்கள் சொல்லுகின்ற பரம புருஷன் ஸ்ரீராமனே ஆவான் -அந்தப் பரம புருஷனே தசரத புத்திரன் ஆன ஸ்ரீராமனாக ஆவிர்ப்பவித்தான், அவதாரம் செய்தான். வேதத்தின் சரீரமே ஸ்ரீராமன். அந்த சரீரம் ஸ்ரீராமனாய் அவதாரம் செய்தபின்னர் வேதங்கள் அனைத்தும், வால்மீகிக்கு வசப்பட்டு அவர் திருவாக்கால் ராமாயணமாக மாறிவிட்டன . அப்படி என்னதான் அந்த ராமாயணத்தில் சொல்லி இருக்கின்றது? தர்மத்தின் பாதையில் வாழச் சொல்லிக் கொடுக்கின்றது. அந்த தர்மமே மானுட உருவெடுத்து வந்த ஸ்ரீராமன் என்றும் சொல்லுகின்றது.
அவன் திரு நாமத்தை சொல்வதும், கேட்பதும், நமது பிறவியின் தோஷத்தை போக்க வல்லது

இந்தப் பெருமையால் தான் ஸ்ரீ ராமாயணத்துக்கு வ்யங்க்ய காவ்யம் என்று புகழ் பெற்று பல வேதாந்த ரஹஸ்யமான உட்ப் பொருள்களைக் கொண்டது என்று போற்றப்படுகிறது –

த்வா ஸூபர்ணா ஸயுஜா ஸகாயா ஸமா நம் வ்ருஷம் பரி க்ஷஸ்வஜாதே
தயோரந்யஸ் பிப்பலம் ஸ்வாத் வத்தி அநஸ்நன் அந்யஸ் அபிசாகவீதி
-முண்டக

ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் -ஒரு பறவை மரத்தில் பழுத்த பழங்களை உண்டு ஒளி குன்றியது
மற்றொரு பறவை பலத்தை உண்ணாமல் ஒளி விஞ்சியது
நம் உடல் என்னும் மரத்தில் ஜீவாத்மா -பரமாத்மா என்னும் இரண்டு பறவைகள் வாழ்கின்றன
உடலால் செய்த புண்யம் பாபம் ஆகிய கர்மங்களால் ஏற்படும் ஸூ கமும் துக்கமும் மரத்தில் ப்ளுத்ஹ பழங்கள்
ஜீவாத்மா கர்ம பலனை அனுபவித்து ஒளி குன்றுகிறார் –
பரமாத்மா கர்மத்தின் தொடர்பே இல்லாமல் ஒளி விஞ்சுகிறார்
இப்பொருள் மனத்தை ஈர்க்கிறது அன்றோ

இதே போல்
யாவத் ஸ்தாஸ் யந்தி கிரயஸ் ஸரிதஸ் ச மஹீ தலே
தாவத் ராமாயண கதா லோகேஷு ப்ரசரிஷ்யதி —

எதுவரை மலைகள் நிற்குமோ -நதிகள் ஓடுமோ -அதுவரை ஸ்ரீ ராமாயணம் உலகில் புகழோடு விளங்கும் என்று பிரமன் வால்மீகியிடம் அருளினார்

மநந சீல முநி –மனனம் செய்பவர் முனி -அறிந்தத்தை விடாமல் சிந்தித்து உறுதிப் படுத்துபவரே முனி
ஸநா தனமான தர்மத்தை உண்மையாக உணர்ந்து -இக்காவியத்தை இயற்றியபடியால் இது காலம் கடந்து நிற்குமே –

இதில் குறிப்பிட்ட அனைத்து இடங்களும் -அயோத்யா தொடங்கி ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கை வரை இன்றும் சாக்ஷியாக உள்ளனவே-

——

நால்வரின் திருவவதாரப் பலன்கள்

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ் க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாப நார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே

ஸ்ரீ பெருமாளும்
குகன் ஜடாயு விபீஷணன் போன்ற சாதுக்களை ரஷித்து அருளினார் –
ராவணன் கும்பகர்ணன் போன்ற துஷ்டர்களை அழித்தார்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல் -தாய் தந்தை சொல்லுக்குக் கீழ்ப்படிதல் -உண்மை பேசுதல் -நேர்மை தவறாது நடத்தல் போன்ற ஸாமான்ய தர்மங்களை நிலை நாட்டினார்
அத்துடன் நிற்காமல் தானும் தம்பிகளுமாகச் சேர்ந்து சிறப்பான விசேஷ தர்மங்களையும் நிலை நாட்டினார்

பெருமாள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய உண்மை -நேர்மை ஆகியவற்றுக்கு முன் உதாரணமாக வாழ்ந்தார்
வீரம் நீதி தவறாமை சரணம் என்று தஞ்சம் அடைந்தவர்களைக் காத்தல் போன்ற அரச தர்மங்களைக் காத்தார்
இறுதியாக அனைத்து ஜீவா ராசிகளிடமும் கருணை -பறவைக்கும் முக்தி அளித்தல் போன்ற திருமாளுக்கே உரிய சிறப்பான தர்மங்களையும் கடைப்பிடித்தார்

ஆந்ரு ஸம்ஸயம் பரோ தர்ம த்வத்த ஏவ மயா ஸ்ருத -என்று பிராட்டி ராவணனுக்கு உபதேசிக்கும் பொழுது இரக்கமே பெருமாளுடைய சிறப்பான தர்மம் -என்று அருளிச் செய்து
இதுவே பெருமாளின் அவதாரப்பலன் என்று காட்டி அருளினாள்

ஆசார ப்ரபவோ தர்மஸ் தர்மஸ்ய ப்ரபுரச்யுத -என்று சொல்லும்படி நன்னடத்தை ஒழுக்கம் ஆகியவற்றால் தர்மம் காக்கப்படும்
உலகில் தர்மத்தை நிலை நாட்டி அதைக் கடைப் பிடிப்பவர்களுக்குப் பலன் அளிப்பவன் அச்யுதனான பெருமாள்

இரண்டாவதாக லஷ்மணன் –
தம்பிகள் வரிசையில் பரதன் இரண்டாவதாக இருப்பினும் -பெருமாளை க்ஷண நேரமும் விட்டுப்பிரியாமல் தொண்டு செய்த படியால் லஷ்மணனே பெருமாளுக்குப் பின் எண்ணப்படுகிறார்
ஒரு ஜீவாத்மாவுக்கு இன்றியமையாத அடையாளமான சேஷத்வமாகிய தர்மத்துக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் இலக்குவன்

சேஷத்வம் என்றால்
பர கத அதிசய ஆதாநேச்சயா உபாதேயத்வம் ஏவ யஸ்ய ஸ்வரூபம் ஸ சேஷ பர சேஷீ —ஸ்வாமி ராமானுஜருடைய விளக்க ஸ்ரீ ஸூக்திகள்

அதாவது -பெருமானுக்கு அடிமையாய் -இடைவிடாமல் தொண்டு பட்டிருத்தல் -பகவானுக்கு எது பெருமை சேர்க்குமோ அவருக்கு எது பிடிக்குமோ அதையே செய்தல்
இஷ்ட விநியோக அர்ஹத்வம் சேஷத்வம் -என்றும் சொல்வர்
பெருமாள் தனது இஷ்டப்படி நம்மைப் பயன்படுத்திக்கொள்வது தகுதி யுடையவனாய் இருத்தல்
ஜீவன் பரமனுக்கு அடிமை என்று காட்டியதே இவரது அவதாரப் பலன் –

பரதன் -சேஷத்வத்தை விட பாரதந்தர்யம் என்ற சிறப்பான பண்பின் படி வாழ்ந்து காட்டினார்
தொண்டு செய்யும் நம் விருப்பத்தை விட பெருமானின் திரு உள்ளபடியே நடக்க வேண்டும்
தந்த்ரம் -என்றால் ப்ரதானம் -முக்யம் -என்று பொருள்-பேரனின் விருப்பமே முக்கியம் -சித்ரா கூடத்தில் பெருமாள் ஆணையை மறுக்காமல் திரும்பினார் அன்றோ
மீண்டும் இளவரசு பட்டம் பெருமாள் சூட ஏற்றுக் கொண்டார் அன்றோ
இஷ்ட விநியுஜ்வ மாநத்வம் பாரதந்தர்யம்
பெருமானின் இஷ்டப்படி பயன்படும் தகுதி இருத்தல் சேஷத்வம் -பயன்படுத்தல் பாரதந்தர்யம் -இதை வெளிப்படுத்தியதே பரதனின் அவதாரப் பலன் –

சத்ருக்னன் சேஷத்வம் பாரதந்தர்யம் ஆகிய இரண்டுக்கும் இலக்கணமாகத் திகழ்ந்து
அதிலும் பெருமாளுக்கு இருப்பதை விட பாரதனுக்கே என்று வாழ்ந்து காட்டியவர் –
அடியார் அடியார் தம் அடியார் அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே
மூவரைக் காட்டிலும் இவருக்கே ஏற்றம் –

புத்ர காமேஷ்டி யாகம் செய்து பெற்று பாயாசம் மிகச்சிறந்த பகுதி சுமத்தரை தேவி உண்டு லஷ்மணன் சத்ருக்கனன் இருவரையும் பெற்றாள்
த்ருஷ்டத்வ வன வாஸம் -என்று தொண்டு செய்யவே இலக்குவனைப் பெற்றாள்
பெருமாளைத் தவிர மற்ற ஒருவரை அறியாத பரதனைத் தவிர மற்று ஒருவரையும் அறியாமல் வாழ்ந்து காட்டினார்-

லஷ்மணோ லஷ்மி ஸம்பந்ந –ஸ்ரீ ராம கைங்கர்யமே இங்கு நிலை நிற்கும் செல்வம் –
தொட்டிலில் இருக்கும் பொழுதே -ஸஹஜ பக்தி -காட்டி அருளியவர்
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்த –கூடவே பிறந்து கூடவே விருத்தி –
திருத்துழாய் அங்குரிக்கும் போதே பரிமளத்துடன் கூடியே அங்குரிக்குமா போலே –
பெருமாளுக்கு ஜடாயுவுக்கு மோக்ஷம் அருளி ஸ்வா பாவிகமான சேஷித்வம் ஸ்புடமானால் போல்
இலக்குவனும் குடில் கட்டுவது மரக்கட்டைகளால் மிதவை செய்து பிராட்டியும் பெருமாளும் நதிகளைக் கடிக்கச் செய்வது போன்றவற்றை
குருகுலத்தில் கற்காமலேயே அறிந்து வைத்தவர்
சுற்றம் எல்லாம் பின் தொடர என்று கொண்டாடும்படி பின் தொடர்ந்தார் அன்றோ

அனுஷ்டானத்தை எல்லாம் விட்டு விட்டு கண்ணனையே அண்டியிருந்த இடையன் ஒருவனை குறிப்பிட்டு சொல்கிறாள் ஆண்டாள். இந்த கோபாலன் கண்ணனுக்கு தொண்டு செய்வதில் – கைங்கர்யம் செய்வதில் மிகவும் ஆவல் கொண்டு அதிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறான். இவன் தன்னுடைய சொத்தான பசுக்களை மேய்ப்பது, பால் கறப்பது போன்ற காரியங்களை சரிவர செய்வதில்லை. ஸ்வதர்மத்தை சாமான்யமாக கொண்டு அதை விட்டு, கிருஷ்ணனுக்கு தொண்டு செய்வதை விசேஷ தர்மமாக பிடித்துக்கொண்டிருக்கிறான். கைங்கர்யஸ்ரீ எனும் செல்வத்தைப்பெற்ற நற்செல்வன் தங்காய்! என்று அவனுடைய தங்கையை எழுப்புகிறாள் ஆண்டாள்.

நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் றன்னையே தான் வேண்டுஞ் செல்வம் ” என்ற பெருமாள் திருமொழி-

———-

விஸ்வாமித்திரர் 12 திரு நக்ஷத்திரத்தில் பெருமாளையும் இலக்குவனையும் கால் நடையாகக் கூட்டிச் சென்று கங்கை சோணா நதியைக் கடந்து ஸித்தாஸ்ரமம் என்னும் புண்ய பூமியை அடைந்தார்
இவ்விடம் இன்றும் பீஹாரில் கங்கைக் கரையில் பக்ஸர் என்னும் இடத்தில் உள்ளது
விஸ்வாமித்ரர் ஆறு நாட்கள் யாகம் செய்தார் -இறுதி நாள் யாகத்தை அளிக்க மாரீசன் ஸூபாஹு என்ற இரண்டு அரக்கர்கள் வர -அம்பு எய்து ஸூபாஹு வை அழித்தார் -மாரீசனைக் கொள்ளாமல் அவ்விடத்தில் நின்றும் ஓட்டினார்
பூர்வ ஆகம் -முன் செய்த குற்றங்களைத் தீயில் இட்ட பஞ்சு போல் அழித்து விடுவதையும்
உத்தர ஆகத்தை தாமரை இலைத்தண்ணீர் போல் ஓட்டே இல்லாமல் சுவடு தெரியாமல் விலக்கி விடுகிறார்

தத் யதா இஷீக தூலம் அஃனவ் பிரேதம் ப்ரதூயதே ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந ப்ரதூயந்தே -என்றும்
தத் யதா புஷ்கர பலாஸே ஆப ந ஸ்லிஷ் யந்தே ஏவமேவம் விதி பாபம் கர்ம ந ஸ்லிஷ்யதே -என்றும் உபநிஷத்தில்
தததிகமே உத்தர பூர்வாகயோ -அஸ்லேக்ஷ விநாசவ்–என்று ப்ரஹ்ம ஸூத்ரம்

ப்ராக்ருதங்கள் ஸத்வம் ரஜஸ் தமஸ் ஆகிய -முக்குண மயம் -ரஜோ குணத்தில் இருந்து பிறப்பது காமமும் க்ரோதமும்
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ குண ஸமுத்பவ
தாடகை -ரஜோ குணத்தின் அடையாளம்
காமத்தை ஒழித்தால் தானே கோபம் விலகி விடும்
ரஜோ குணமாகிய தாடகையை அழித்து
காமம் என்னும் ஸூ பாஹுவையும் அழிக்கவே
க்ரோதம் என்னும் மாரீசன் தானே ஓடிப்போனதே
பின்பு அந்த மாரீசனையும் அழித்தார்
ஸ்ரீ ராம நாமத்தைச் சொல்லவே ரஜோ குணம் தமோ குணம் காமம் க்ரோதம் அனைத்து தீமைகளும் விலகும்-

———

ஸேவா ஸ்வ வ்ருத்தி ராக்யாதா தஸ்மாத் தாம் பரி வர்ஜயேத் -மனு
தாஸ பூதா ஸ்வத ஸர்வே ஹ்யாத்மாந பரமாத்மந -என்கிறபடியே அனைத்து ஆத்மாக்களும் இயற்கையிலேயே பரமாத்வாவுக்கு தாஸர்கள்
ஸ்வரூப க்ருத தாஸ்யம் என்றும்
குண க்ருத தாஸ்யம் என்றும் இருவகை
இவற்றில் ஸ்வரூப க்ருத தாஸ்யமே உயர்ந்தது
அநஸூயை -ஸீதாப்பிராட்டி ஸம்வாதம் இத்தை உணர்த்தும் –
யத் யப்யேக்ஷ பவேத் பர்த்தா மமார்யே வ்ருத்த வர்ஜித -என்று ஒரு நிமிடம் கூட குணங்கள் பெருமாளை விட்டுப் பிரிவதில்லையே என்று நொந்து கொண்டாள்

அதே போல் லஷ்மணனும் –அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத-

ஆகவே அவன் ஸ்வாமி என்று கொண்டே தாஸ்யம் புரிவோம்
நம் பாக்யத்தால் அவன் ஸமஸ்த கல்யாண குண பூர்ணனாகவும் உள்ளான்

————

ப்ரணவம் -முன்பும் -பின்பு நான்காம் வேற்றுமை உருபுடன் நாமமும் -பின்பு நம-சேர்ந்து மந்த்ரமாகும்
ணு -என்னும் தாது -ஸ்தோத்ரம் செய்தல் என்னும் பொருளில் வரும்
ப்ரகர்ஷேண ஸ்தூயதே பகவான் அநேந இதி ப்ரணவ –இந்தச்சொல்லால் பகவான் நன்கு ஸ்தோத்ரம் செய்யப்படுகிறார் என்ற பொருளில் வரும்
ஓம் இதி ஏக அக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரன் மாம் அநுஸ்மரன்
ஆத்மாநம் யுஞ்ஜீத
-ஓம் சொல்லி ஆத்மாவை ஸமர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறது
அகாரார்த்தோ விஷ்ணு
மந ஞாநே
உத்த்ருதா விஷ்ணுநா லஷ்மீ –உகாரேண உச்யதே ஸதா
அக்ரத பிரயயவ் ராம ஸீதா மத்யே ஸூ மத்யமா ப்ருஷ்டதஸ்து தனுஷ் பாணி லஷ்மண அநு ஜகாம
நேரிழையும் இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனை எம்மிராமா ஓ
பொய்யோ எனும் இடையாளுடன் இளையானுடன் போனான்

அகார வாஸ்யனான பெருமாள் முன்பு போக
உக்கார வாஸ்யளான ஸீதாப்பிராட்டி நடுவில் நடுக்க
மகார வாஸ்யனான இலக்குவன் அவர்களுக்குத் தொண்டு செய்யவே பின் தொடர்ந்து
மூவரும் சென்றதை பார்த்தால்
அகார உகார மகார எழுத்துக்கள் கால் கொண்டு நடந்தால் போலே இருந்ததே
பிராட்டியாரும் கூடிப்பிடிக்கும் மெல்லடிகள் கொண்டு -நடந்த கால்கள் நொந்தவோ -என்று உருகும் படி அன்றோ நடந்தார்
நல்ல நடத்தையுடன் முன் உதாரணமாக வாழ்ந்து காட்டினார் அன்றோ

அற வழி நடந்து காட்டிய பெருமாள் திருவடிகள் வாழி

——–

ராம-அயனம்-சேர்ந்து ராமாயணம்
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஸீதாயா சரிதம் மஹத்
முதலில் இருந்து முடிவு வரை ஸீதா பிராட்டி சரிதமே
ராமாயணம் என்று சொல்லும் பொழுது அடைமொழி ஒன்றுமே இடாமல் ஸீதா சரித்ரத்துக்கு முழுமையாக சொல்லப்பட்டது என்ற அடைமொழியுடன் அருளிச் செய்கிறார்
வேதம் -கர்ம காண்டம் -ப்ரஹ்ம காண்டம் –
உப ப்ரும்ஹணங்கள் -ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்கள்
இதிஹாஸ ஸ்ரேஷ்டமான ஸ்ரீ ராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றமே சொல்லிற்று
லங்கையில் சிறைப்பட்ட தேவப்பெண்களை விடுவிக்கவே தானே வலிய சிறை புகுந்தாள்

வ்யாஸர் ஒன்றேகால் லக்ஷம் ஸ்லோகங்கள் கொண்ட மஹா பாரதம் எழுதியும் திருப்தி பெறாமல் நாரதரின் உபதேசம் கேட்டு ஸ்ரீ மத் பாகவதம் அருளிச் செய்தார்
வால்மீகியோ நாரதருக்கும் தந்தையான நான்முகனின் அருளால் நேரே ஸ்ரீ ராமாயணம் அருளிச் செய்து திருப்தி அடைந்தார்
ந தே வாக ந்ருதா காவ்யே காசி தத்ர பவிஷ்யதி –என்று உன் காவ்யத்தில் ஒரு சொல்லும் பொய்யாக இருக்காது என்றும் நான்முகன் அருளிச் செய்தார்

மச்சந்தாதேவ தே ப்ரஹ்மந் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ|
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குருத்வம் ரிஷிஸத்தம ||
ந தே வாகந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி||

(இதன் பொருள் நான்முகக் கடவுள் வான்மீகரை நோக்கி “நம்முடைய சங்கல்பத்தினாலேயே
இந்த ஸரஸ்வதி உம்முடைய வாக்கிலிருந்து தோன்றினாள். நீர் ராம சரிதத்தை ஒரு பிரபந்தமாகச் செய்யக்கடவீர்.


மேலும் –யாவத் ஸ்தாஸ் யந்தி கிரய ஸரிதஸ் மஹீ தலே தாவத் ராமாயண கதா லோகேஷு ப்ரஸரிஷ்யதி –என்று
உலகில் மலைகளும் நதிகளும் இருக்கும் வரை ஸ்ரீ ராமாயணம் எல்லா உலகங்களிலும் பெருமையோடு விளங்கும் -என்றும் அருளினார்
பெருமாள் தானே அமர்ந்து லவ குசர்கள் பாட தன் சரிதை கேட்டு அருளினார்

ராமோ பஹூன்யஹான்யேவ தத்கீதம் பர‌மம் சுபம் |
சுச்ராவமுனிபி: ஸார்த்தம் பார்த்திவை: ஸஹவானரை|”

(இ-ள்) ஸ்ரீராகவன் நாள்தோறும் பல முனிவர்களும், அரசர்களும் புடைசூழச் சபையினடுவே
முனிகுமாரர்களை வரவழைத்து மிகச் சிறந்ததும், சுபமுமான அவர்களது சங்கீதத்தைச் செவிசார்த்திக் களி கூர்ந்தனர்.

ஸூந்தரி ரகு நாதஸ்ய ஸூர ஸ்த்ரீ துக்க ஸாந்தயே தசாநதஸ்ய பவநே தசமாஸாந் உவாஸ ஹ -என்றபடி தேவ ஸ்திரீகளை விடுவிக்கவே வலிய சிறை புகுந்தாள்
தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள் -நம்மாழ்வார்

ராமஸ்ய அயனம் எனப் பிரிந்து இராம சரிதமெனவும்,
ராம: அய்யதே அனேன இதி = ராமாயணம் எனப்பிரிந்து
இதனால் இராமன் அடையப் படுகிறான் எனவும் பொருள் படும்.
இன்னும் ரமாய இதம் சரிதம் = ராமம், தஸ்யாயன மிதி, ராமாயணம் எனப்பிரித்து,
சீதாப்பிராட்டியின் சரிதமெனச் சாற்றலுமுண்டு.
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸநம் ஸீதாயாச் சரிதம் மஹத்
மேன்மையான ஸீதாசரித்திரமாயும், மஹாகாவ்யமுமான ராமாயணத்தை என்பது இதை வலியுறுத்தும்.
தருமம் உலகத்தைத் தரிப்பதால், போஷிப்பதால், தருமமென்று சொல்லுகிறார்கள்.

வேதமு மற்றுஞ் சொல்லு மெய்யற மூர்த்தி வில்லோன் (கம்பர்)
கைவிலேந்தி இலங்கையிற் பொருதாரன்றே மறைகளுக் கிறுதியாவார். (கம்பர்)
என்றபடி, வேதத்தினால் அறியும்படியான பரமபுருஷன், ஸ்ரீராமனாக அவதரித்தபோது,
1. வேத:ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா
அவரை அறிவிக்கிற வேதமும், வான்மீக முனிவரினின்றும் நேராய் ஸ்ரீமத் ராமாயண ஸ்வரூபத்தினாலே அவதரித்தது.
2. இதம்பவித்ரம் பாபக்னம், புண்ணியம் வேதைச்சசம்மிதம்
இந்த ஸ்ரீராமசரிதமானது, பரிசுத்தம் செய்யத்தக்கதும், பாபங்களை நாசஞ்செய்ய வல்லதும்,
நன்மைகளை விளைவிக்கத் தக்கதும், வேதங்களோடு சமானமானதுமா யிருக்கின்றது.

————-

தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை நன் கொள்ளுமீதே
பிரபல தர விரோதி -களை அற்ற கைங்கர்யம்
ரமதே யத்ர பைதேஹீ த்வம் அஹம் சைவ லஷ்மண
–என்று பெருமாள் அருளிச் செய்ய
நான் எங்கு ஆனந்தம் அடைவேனோ என்று தனித்துச் சொல்லி -என்னை அஹங்காரத்தில் சிக்க வைப்பீரோ
நான் என்று அஹங்காரப்பட்டால் தானே எனக்கு என்று ஒரு ஆனந்தம் உண்டு
அடியேன் என்று தொண்டனான தன்மை புரிந்தால் எனக்கு என்று தனியாக ஒரு ஆனந்தம் இல்லையே
அறிவும் ஆனந்தமும்-ஞாத்ருத்வமும் சேஷத்வமும் ஆத்மாவுக்கு அடையாளமாக இருந்தாலும் சேஷமாக இருப்பதே இன்றியமையாத முதல் அடையாளம் –
நான் போக்தா -அனுபவிப்பவன் என்ற எண்ணம் தவறு
அடியேன் போக்யம் -பகவானால் அனுபவிக்கப்படும் வஸ்து என்பதே -சரி
சேஷி உகந்த கைங்கர்யமே புருஷார்த்தம்
படியாய்க் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே
மற்றை நம் காமங்கள் மாற்று
அவன் நம்மை அனுபவித்து ஆனந்தப்பட அது கண்டு நாமும் ஆனந்தப்படுவதே கர்தவ்யம்

———

ஸ்வாமி தானே சொத்துக்களைக் காத்து அருள வேண்டும்
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -யேந ஜாதாநி ஜீவந்தி யத் பரயந்தி ப்ரபி ஸம் விசந்தி
அனைத்துப் பொருள்களும் யாரிடமிருந்து உருவாகுமோ -படைக்கப்பட்டவை எல்லாம் யாரால் காக்கப்படுமோ -அனைத்தும் யாரிடத்தில் லயிக்குமோ அவரே ப்ரஹ்மம் -என்றதாயிற்று

கௌஸல்யா லோக பர்தாரம் ஸூஷு வேயம் மனஸ்விநீ தம் மமார்த்தே ஸூகம் ப்ருச்ச சிரஸா ச அபிவாதய –-ஸீதாப்பிராட்டி திருவடியிடம்

உலகத்தைக் காக்கும் பிள்ளை பெர்ஸ் வேண்டும் என்று கௌஸல்யா தேவி விருப்பப்பட்டுப் பெருமாளைப் பெற்றார் -காக்கும் பொறுத்து ராமனதே என்பதை வலியுறுத்தி பேசினாள்

நல்கித்தான் காதலிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
–என்று இதே கருத்தை ஆழ்வாரும் அருளிச் செய்கிறார்

சரைஸ்து சங்குலாம் க்ருத்வா பர பலார்தந
மாம் நயத்வேதி காகுத்ஸ்த தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் –

சொல்லினால் சுடுவேன் அது தூயவன்
வில்லின் ஆற்றுக்கு மாசு என்று அஞ்சி வீசினேன்

ஆகவே நம்மை ஸ்வாமியிடம் ஒப்படைத்து நிர்ப்பரோ நிர்பயோ மாக இருப்போம் –

———–

கொள் கொம்பு மூலம் கொடி படர்தல் -படித்துறையில் இறங்கி நீராடுதல் -போல் அடியார்கள் மூலமாகவே நாமும் அவனைப் பற்ற வேண்டும் -அவனும் பாகவர் மூலமாகவே தான் ஏற்றுக் கொண்டு அருளுவான்

வாலி ஸூக்ரீவன் யுத்தம் -கஜ புஷ்பிகா மாலையை இலக்குவன் சூட வாலி வாதம் -ஸூக்ரீவ மஹாராஜருக்குப் பட்டாபிஷேகம் செய்யும் போதும் இலக்குவன் மூலமே முடி சூட்டி அருளினார்
நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம்
ஸர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மநே
-என்று வானர முதலிகள் மூலமே பற்றி
ஆநய ஏனம் ஹரி ஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா -என்று சுக்ரீவ மஹாராஜர் மூலமாகவே ஏற்றார்

இவன் முன்னிடுமவர்களை அவன் முன்னிட்டும் –இருவர் முன்னிடுகிறதும் தம் தாம் குற்றங்களை சாமிப்பிக்கைக்காக -ஸ்ரீ வசன பூஷணம்

இங்கு பக்தனுக்கு குற்றம் -வெகு காலமாக பெருமாளிடம் பாராமுகமாய் உலக இன்பங்களில் ஈடுபட்டு -பகவானது ஆணைகளை மீறு -பாபங்களையே சேர்த்து வைத்தது
இக்குற்றம் பகவானுடைய திரு உள்ளத்தில் பட்டு சீற்றம் வராதபடி குளிர்விக்கிறார்கள் கடகர்

பகவானுக்குக் குற்றமாவது -விட்டுப் பிரிக்க முடியாத உறவு இருந்த போதிலும் -அவனைக் காத்து ஆட்க்கொள்ளாமல் கர்மவசப்படி மாறி மாறி பல பிறவிகளில் பிறந்து உழலும் படி உதாசீனனாய் இருக்கை-

——————

ஸ ச பூஜ்ய யதாஹ் யஹம் -ஸ்ரீ கருட புராணத்தில் -என்னை விட உயர்வாக எனது அடியார்களை பூஜிக்க வேண்டும் என்கிறான்
பூஜிக்காததுக்கு மேல் பாகவத அபசாரப்படுவது பெரும் குற்றம்

ஹிரண்யன் -பிரகலாதன் இடம் அபசாரப்பட்டதால் நரசிம்ஹன் கொண்ட சீற்றம் ப்ரஸித்தம்
அர்ஜுனன் பேரில் அம்பு பட்டதும் தானே திருமுகத்தில் ஏற்று பார்த்தசாரதியாக இன்றும் நாம் ஸேவிக்கும் படி அருள்கிறான்
ராவணன் -திருவடியிடம் அஸ்திரம் விட பெருமாள் கொண்ட சீற்றம் பிரசித்தம்

க்யாத -பிராஜ்ஞா -க்ருதஜ்ஞஸ் ச -ஸ அநு க்ரோஸஸ் ச ராகவ
ஸத் வ்ருத்த நிர் அநு க்ரோஸ சங்கே மத் பாக்ய சங்க்ஷ யாத்
–ஸூ ந்தர -26-11-என்று
புத்திமானும் -செய் நன்றி மறவாதவரும் –நன்னடத்தை உள்ளவரும் -கருணையும் உள்ளவருமான பெருமாள்
எனது விஷயத்தில் இரக்கமற்று மீட்க வராமல் இருப்பது எனது துர்பாக்யமே -என்று அவர் இடம் குற்றம் இல்லை -தன்னிடத்திலேயே குற்றங்கள் உள்ளன என்றும்
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹத் அஸ்தி ந ஸம்சய –ஸூந்தர -38-6-என்று
அம்மான் அருகில் இருக்க அம் மானை வேண்டியது சிறிய குற்றம்
மஹாத்மாவான இலக்குமன் இடம் அபசாரப்பட்டது மஹத் குற்றம் –
ஆகவே பாகவத அபசாரம் இல்லாமல் வாழ்வோம்

—————

நாரீணாம் உத்தம வதா
லஷ்மீ புருஷகாரத்வே நிர் திஷ்டா பரமர்ஷிபி
-ரிஷிகள் கொண்டாடுகிறார்கள்
அவனது கல்யாண குணங்கள் நீறு பூத்த நெருப்புப் போலே நிரங்குச ஸ்வா தந்தயத்தாலே மூடி இருக்க புருஷனை புருஷனாக நடக்க வைப்பதே புருஷகாரம்
நம்மையும் அருளால் திருத்தி தைரியமாக முன் வரும்படி ஆக்கி அருள்கிறாள்

அவோசத் யதி தம் தத்யம் பவேயம் சரணம் ஹி வ –என்று கொடுமைகளையே செய்து கொண்டு இருக்கும் சரண் அடையாத ராக்ஷஸிகளைத் தானே காப்பாற்றுவேன் முன் வந்து வாக்களித்து
லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி -என்று ஆக்கி அருளினாள்

பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம
கார்யம் தருணம் ஆர்யேண ந கஸ்சித் ந அபராத்யதி
–பிராட்டியுடைய சரம ஸ்லோகம்

———–

கை கூப்பி வணங்கி ஆகிஞ்சன்யம் காட்டி
கால்களை சேர வைத்து அநந்ய கதித்வம் காட்டி
உத்ப பாத கதா பாணி சதுர்ப்பிஸ் ஸஹ ராக்ஷசை -என்று வந்ததும்
ஏஷ ஸர்வ ஆயுதோ பேதஸ் சதுர்பிஸ் ஸஹ ராக்ஷஸை ராக்ஷஸோப் யேதி பஸ்யத்வம் அஸ்மாந்

ஹந்தும் ந ஸம்சய
கைகளைக் கூப்பிய அஞ்சலியைப் பார்த்தே இவ்வாறு சொன்னான்
அஞ்சலி பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவ ப்ரஸாதி நீ
விபீஷணனுக்கு கிட்டிய பேறு கூட வந்த தொண்டர்களுக்கும் கிட்டியதே
அடியார்களின் நிழல் போல் இருந்தால் பெருமானுடைய அருள் தன்னடையே நமக்கும் கிட்டும் –
ஏழு ஏழு தலைமுறைகளுக்கும் பேறு கிட்டும் அன்றோ –

———————-

முதலும் முடிவும்
அஹம் வேத்மி மஹாத்மாநம் ராமம் ஸத்ய பராக்ரமம் வஸிஷ்டோபி மஹா தேஜா –யே சேமே தபஸிஸ்திதா —

புலஸ்த்ய வம்சத்தில் பிறந்து கடுமையான தவம் புரிந்து நான்முகனிடம் வரங்களைப் பெற்றான்
விபீஷணன் -ஸத்வ குணம் உடையவன்
சூர்ப்பணகை -ரஜோ குணம் நிரம்பியவள்
கும்பகர்ணன் தமோ குணம் நிரம்பியவன்
ராவணன் ஸத்வ குணத்தை வெளிய தள்ளி ரஜோ குண தமோ குணங்களை அருகே வைத்துக் கொண்டான்

தச இந்த்ரியா நநம் கோரம் யோ மநோ ரஜநீ சரம் விவேக ஸர ஜாலேந சமம் நயதி யோகிராட்

ஜீவனுக்குக் கட்டுக்கு அடங்காத மனமே ராவணன்
பத்து இந்திரியங்கள் அவன் தலைகள்
விவேகம் என்னும் அம்பால் மனம் என்னும் அரக்கனை அழிக்கிறான்
மனதில் இருக்கும் தீங்குகளை போக்கி பெருமானிடம் சேர்க்க வேண்டும்

யாந்தி நியாய ப்ரவ்ருத்தஸ்யதிர்யஞ்சோபி சஹா யதாம் அபந்தாநம் து கச்சந்தம் ஸோதரோபி விமுஞ்சதி-என்று

ஸாஸ்த்ரம் படி நடந்தால் விலங்குகளும் துணை புரியும்
தவறான வழியில் நடப்பவனுக்கு உடன் பிறந்தவனும் விட்டு விலகுவான்

இவ்வாறு ஸ்லோகங்கள் தோறும் வேதாந்த உள்ளுறைப்பொருள்கள் நிறைந்தே இருக்கும் ஸ்ரீ ராமாயணம்

————-

வித்யா சர்வாபீ
வாக்ய விரோதம்
அகில ஸத் தர்மங்கள்
ஆத்யாத்மீக யாதாத்ம்ய ஞானம்
அர்த்தானாம் பஞ்சகம்
ஸ்ரீ ரகுபதி பரத்வம்

——–

வித்யா சர்வாபீ
வேதவடிவே ஸ்ரீ ராமாயணம் –சக்ரவர்த்தி திருமகன் -வால்மீகி குழந்தை -ஆறு அங்கங்களின் பெருமை சொல்லும்

சிஷா -உச்சரிப்பு -வியாகரணம்- சந்தஸ் -நிருக்தம் அகர முதலி -ஜ்யோதிஷம் –கல்பம் செயல்முறைகள்
அயோத்யா 91-22-சிஷா பெருமை -பரத்வாஜர் பாரத ஸேனைக்கு உணவு –

ஷீக்ஷாஸ்வரஸமாயுக்தஂ தபஸா சாப்ரவீந்முநிஃ৷৷2.91.22৷৷

ஸமாதிநா in profound meditation, அப்ரதிமேந incomparable, தேஜஸா ச with radiance, தபஸா ச with the power of penance, யுக்தஂ filled with, முநிஃ ascetic, ஷீக்ஷாஸ்வரஸமாயுக்தம் with accent in conformity with Vedic instruction, ஏவம் in this way, அப்ரவீத் said.

The valiant ascetic of incomparable lustre and power of penance in profound meditation said this in an accent in conformity with Vedic instruction.
மநஸா த்யாயதஸ்தஸ்ய ப்ராங்முகஸ்ய கரிதாஞ்ஜலேஃ.

ஆஜக்முஸ்தாநி ஸர்வாணி தைவதாநி பரிதக்பரிதக்৷৷2.91.23৷৷

தஸ்ய his, ப்ராங்முகஸ்ய facing east, கரிதாஞ்ஜலேஃ with folded palms, மநஸா in mind, த்யாயதஃ while meditating, ஸர்வாணி all, தாநி தைவதாநி those deities, பரிதக்பரிதக் one by one, ஆஜக்முஃ arrived.

ஆயாதாஷா –ஸர்வ பூஷண -நான்கு தோள்கள் கண்டு வியாகரணம் படி திருவடி -புகழ்ந்து பெருமாள் -கிஷ்கிந்தா 3-15-dual சொல்லாமல் pulural -சொல்லின் செல்வன் வாக்ய விரோதம்

மண்டோதரிக்கும் சங்கசக்ர கதாதரனாக காட்சி

அனுஷ்டுப் பெரும்பாலும் -பாதம் தோறும் எட்டு எழுத்துக்கள் –
வில்லைத் தள்ள 500 பேர்-வால்மீகி தூக்கி போக 60000 பேர் கம்பர்
உடைத்து பிரித்து -வத்ஸ ராம தனுஸ் பஸ்ய -ஸ்லோகம் –
நாண் ஏற்றினால் மட்டும் போதாதே -வார்த்தையை உடைத்தது போல் நீ உடைத்து வா -என்றாராம்

நிருக்தம்–dictionary-ரம்யதே ராம -மனதுக்கு இணையான -லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -நற் செல்வன் -பரதன் -பழி என்னும்-பரிக்கும் சக்தன் -சத்ருக்கனன் -நித்ய சத்ரு –

காய்கறி திருத்துவது -பரிடம் திருத்துவது -வேறே வேறே
மஹா வ்ருக்ஷம் கள்ளிச்ச்செடி -விபரீத லக்ஷனை
அஸ்ய ராமஸ்ய -பஸ்யதி -ராமனுக்கும் இருக்கும் ராமனை ராவணா நீ பார்ப்பாய் -மனதுக்கு இனியானின் கோபத்தைப் பார்ப்பான்

ஜ்யோதிஷம்
ஜடாயு -ஆயுஷ்மன் -பெரிய உடையார் -சீதையுடன் சேர்த்து உய்ரிரையும் கொண்டுபோனான் -13 ஸ்லோகம் -விந்தோ முஹூர்த்தம் -காணாமல் போன பொருள் போனபடியே மாறுதல் இல்லாமல் திரும்பிக் கிடைக்கும்

கல்பம்
சந்த்யா காலத்தில் ஆரண்ய காண்டம் 7-24 -உண்ணக் கூடாது -சுஷீஷ்ணர் -ஸாஸ்த்ரம் படி நடந்து விருந்து பரிமாறினார் –

———–

வாக்ய விரோதம்
பாஹ்ய த்யஜனம்
விலகி நிற்க வேண்டும்
தசரதனை நிந்திக்காமல் -பெருமாள் –
ஒரே இடத்தில் -ஜாபாலி -அயோத்யா 109-சர்க்கம்-39-define பண்ணவே தெரியாத நாஸ்திகன் பகவான் இல்லை என்பது போல்

——–

அகில ஸத் தர்மங்கள்
சாதாரண தர்மங்கள் நிறைந்தவை
பாலகாண்டம் 77-33-பிரியா சீதை ராமஸ்ய -தாரா பித்ருகிருத -அப்பா ஐயர் பார்த்து திருமணம்
அத்ரி அநஸூயா -சீதா வார்த்தை –

அயோத்யா 72-48-பரதன் கைகேயி சம்வாதம் -ராமன் செய்த தப்புக்கள் என்ன –

ராமோ த்விர் ந பாஷயே
சத்யம் மீது சத்யம் செய்து சுக்ரீவன் இடம்

பொய் சொன்னால் அத்தை நாம் காப்பாற்ற வேண்டும்
மெய் சொன்னால் அது நம்மைக் காக்கும்-ஜடாயு மோக்ஷம் -சத்யான் லோகான் ஜயதி

ஆத்யாத்மீக யாதாத்ம்ய ஞானம்
திருவடியே ஆச்சார்யர் -கடக க்ருத்யம் -ராவணன் மனஸ் -10 இந்திரியங்கள் -இலங்கை -ஸம்ஸாரம்-முக்குணங்கள் விபீஷணன் கும்பகர்ணன் சூர்ப்பணகை-அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவவில்லையே

அர்த்தானாம் பஞ்சகம்
மிக்க இறை நிலையும் இத்யாதிகளை நன்கு காட்டும்-காண்டம் தோறும் அர்த்தபஞ்சகம்
வில் வில்லனாக -பராக்ரமத்தால் -உடைத்து -சேர்த்துக் கொள்கிறான்-அயோத்யாகாண்டம் -பரதனின் கைங்கர்யத்துக்கு விரோதி கைகேயி வரன்கள் -சரணாகதி -பாதுகையே பெற்று -ஆரண்யகாண்டம் -ரிஷிகளை ரக்ஷித்து -கரதூஷணாதிகளை அழித்து -கிஷ்கிந்தா ஸுக்ரீவன் தனக்கு ராஜ்ஜியம் வாலி தடை -போக்கி -ஸூந்தர -அஞ்சிலே ஓன்று பெற்றான் -யுத்த காண்டம் -ராவணனை அழித்து -ஆச்சார்யர் பரிந்துரை –

ஸ்ரீ ரகுபதி பரத்வம்
ஸூந்தர 38-33-காகாஸுரன் -வ்ருத்தாந்தம் ஓடினால் பாணமுமோடி நின்றால் நின்று திரு உள்ளபடி –

51-45 ஸ்லோகம் திருவடி உபதேசம் ராவணனுக்கு -சர பலம் வர பலத்தை விட -நான்முகன் முக்கண்ணன் இந்த்ர மஹேந்த்ரனை விட உயர்ந்தவன்
தோலாத தனிவீரன் –
பிறக்க பிறக்க தேஜஸ்ஸூ விஞ்சி –

வேத பெருமை -பாஹ்ய விலகி -ஸத் தர்மம்-செய்து -ஆத்யாத்மீக ஞானம் பெற்று -அர்த்த பஞ்சகம் உணர்ந்து பரத்வம் இவனே என்று -புரிந்து செய்வதை மேல் பார்ப்போம்

சரணாகதிக்கு முன்பு வேண்டிய யாரையும் கீழே சொல்லி
மேல் பிரபத்தி -ஸ்ரீ ராமாயணம் சரணாகதி சாஸ்திரம் தானே
காண்டம் தோறும் உண்டே
லஷ்மண சரணாகதியை விட ராமானுஜ சரணாகதிக்கு ஏற்றம் அனைத்து உலகும் வாழப்பிறந்த யாத்திராசர் அன்றோ
பரத சரணாகதி மும்மடங்கு பலித்ததே -பாதுகா பட்டாபிஷேகம் -பின்பு ராம ஆலிங்கனம் -மடியில் வைக்கப்பெற்றான் -அயோத்யா புல் எறும்பு முதலாக வைகுந்தம் ஏற்றியதும் பரதன் அனைவரையும் கூட்டிச் சென்று சரணாகதி செய்த பலன்

7 ரஹஸ்யம் சரணாகதி
8- வாழ்வின் லக்ஷணம் -கைங்கர்ய பிரார்த்தனை -புமர்த்த-அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -ஆரண்யம் 15-29- பிதா மம -பெருமாளே கொண்டாடும் படி-சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே-

9-சேஷத்வம்–அவனது உகப்புக்காகவே -களை அற்ற கைங்கர்யம்
10-பாரதந்தர்யம்–ஸ்ரீ பாதுகா தேவி பூர்ண த்ருஷ்டாந்தம்
11-தத் அவதி-ததீய பர்யந்தம் சேஷத்வம்-ததீய பர்யந்தம் பாரதந்தர்யம்-12- அகதித்வம்

13-விரக்தி–உறங்கா வில்லி -கைங்கர்ய பிரதிபந்தகங்கள் போக வேண்டுமே
14-ஆச்சார்ய கடாக்ஷம் அறிதல் -குரோர் க்ருத்யம்–சபரி மோக்ஷ சாக்ஷி பூதராகப் பெருமாள்
15-ஸ்ரீ பார்ஸ்யம்
16-நிர்பரத்வம் நிர்பயோஸ்மு
17- ஸூ வஸதி -இருப்பிடம்
18-எதிர்பார்த்து வாழ வேண்டியது

வாழ்க்கை நடைமுறை விளக்குவதே ஸ்ரீ ராமாயணம் -முதல் அடியில் இழியவே மேல் மேலே கூட்டிப்போகுமே

———-

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே –
37-

ஸ்ரீ ராமாயணத்தை பக்தி சாகரம் என்றது நிரவதிக பக்தி ஜனகத்வத்தாலே-ஸ்ரீ வால்மீகி மலை -ஸ்ரீ ராமர் குணங்கள் கடல் -தேக்கி வைப்பது ஸ்ரீ ஸ்வாமி உள்ளத்தில் –
பக்தி ரசம் அறிந்து -தானே சுற்றம் எல்லாம் பின் தொடர்வது போலே சுயமாகவே அனுபவித்தார் –

சத்ய லோகத்தில் நின்றும் பிரம்மாவும் தாதர்சரான நாரத பகவானும் பூலோகத்தில் வந்து- வால்மிகியைக் குறித்து நியமித்தும்
உபதேசித்தும் போருகையாலே -இதனுடைய கீரத்தி ஊர்த்த லோகங்களிலும் இறே பிரசித்தமாய் இருப்பது

ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் –
காவ்யம் ராமாயணம் க்ரிச்னம் ஸீதாயாஸ் சரிதம் மஹத் – என்று இருந்தாலும்
யச்யைதே தஸ்ய தத்தனம் -என்கிற கட்டளையாலே அவளுடைய சம்பத் எல்லாம் சேஷியானவனது-ஆகையாலே
ராம விஷயமாய் இருக்கும் என்று சொல்லத் தட்டில்லை -இறே
தாசர்தமான ராமாயணம்-என்கிற கரை புரண்ட பக்தி ரசத்தை -இதில் பிரதிபாத்யமாய் இருந்துள்ள அர்த்தத்தை
பக்தி ரசம் என்று சொல்ல வேண்டி இருக்க-இது தன்னையே பக்தி வெள்ளம் என்றது –
தத் குண சாரச்யாத்து தத் வ்யபதேச -என்றால் போலே அதுக்கு உத்பாதகம் ஆகையாலே –
ஏகைகம ஷரம் ப்ரோக்தம் மகா பாதக நாசகம் -என்ற பிரகாரத்திலே
அர்த்த பர்யந்தம் போக வேண்டி இராதே-சப்த ராசி தானே ரசித்து இருக்கும் என்னுதல்
இப்படி பட்ட பக்தி தான் அங்கே ஆஸ்ரயித்து இருக்கும் நாங்கள் அத்தை பெருகைக்கு என் என்றால்

படி கொண்ட கீர்த்தி –
படி-
ஏனைய உலகங்களுக்கும் உப லஷணம்
பிரமனால் நூறு கோடிப் பிரபந்தமாக இராமாயணம் இயற்றப் பெற்று உம்பர் உலகில் பரவி இருப்பதாகவும் –
அதுவே நாரதர் வாயிலாக வால்மீகிக்கு வந்ததாகவும் சொல்லப் படுவது காண்க –
இனி
படியிலே கீர்த்தி கொண்ட இராமாயணம் என்று கூட்டி –
மற்ற முனிவர்கள் இயற்றிய-இராமாயணங்களை விட பிரசித்தி பெற்ற ஸ்ரீ வால்மீகி இராமாயணத்தை கூறிற்றாகவுமாம் –

இராமாயணம்-என்னும் பக்தி வெள்ளம் –
அளவற்ற பக்திப் பெருக்கிற்கு காரணமாகிய ஸ்ரீ இராமாயணத்தை -பக்தி வெள்ளம்-என்கிறார் –
இனி ஸ்ரீ வால்மீகி முனிவருடைய ஸ்ரீ ராம பக்தி உள் அடங்காது வெளிப்பட்டமை பற்றி -பக்தி வெள்ளம் –என்றார் ஆகவுமாம்-
வெள்ளம்-பிரவாஹம்
வால்மீகி கிரி சம்பூதா ராம சாகரகாமி நீ
புனாதி புவனம் புண்யா இராமாயண மகா நதீ–என்று
ஸ்ரீ வால்மீகி என்னும் மலையில் தோன்றி ஸ்ரீ இராமாபிரான் என்னும் கடலை நோக்கி செல்லும்
ஸ்ரீ இராமாயணம் என்னும் புண்ணிய நதி உலகத்தை சுத்தம் ஆக்குகிறது -என்று வெள்ளமாக-
ஸ்ரீ இராமயணத்தை முன்னோர் உருவகம் செய்து உள்ளமை காண்க –
இனி
வெள்ளம் -கடலுமாம் –
வெள்ளத்தின் உள்ளானும் – 99- என்று பொய்கை ஆழ்வாரால் கடல்-வெள்ளமாக சொல்லப்பட்டமை காண்க –
ஸ்லோக சார சமாகீர்ணம் சர்வ கல்லோல சங்குலம்-காண்டாக்ராஹா மகாமீனம் வந்தே இராமாயண ஆர்ணவம் -என்று
ஸ்லோகங்களின் சாரத்தினால் நிறைந்ததும்
சர்க்கம் என்கிற அலைகள் நெருங்கினதும்
காண்டம் ஆகிற முதலையாம் பெரு மீன்கள் உடையதுமான
ஸ்ரீ இராமயணமாம் கடலினை வந்திக்கிறேன் -என்று ஸ்ரீ இராமாயணம் கடலாக உருவகம் செய்யப்பட்டு உள்ளமையும் காண்க –

வெள்ள நீர் சடையன் -வெள்ளம் தண்ணீர் பக்தி வெள்ளம் -உருகி நைந்து ஈரமான நெஞ்சம் -என்றுமாம்

குடி கொண்ட-கோயில் இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானாரே ஒரு கோயிலாக அவர் திரு உள்ளத்தை ஒரு ஷணம் பிரியாதே இவ்விடமே-குடியாக நித்ய வாசம் பண்ணி இருந்தது-
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மா இரும் சோலை என்னும் பொருப்பிடம்-மாயனுக்கு என்பர் நல்லோர் –
ஏதத் பிரதி பாத்யனான பரமபுருஷனுக்கு அவை எல்லாம் கோயில்கள் ஆமாப் போலே
தத் பிரதிபாதகமான ஸ்ரீ ராமாயணம் என்னும் பக்தி பிரவாஹத்துக்கு இவரும் ஒரு கோயிலாக காணும் இருப்பது –

இராமானுசன் –
அந்த ஸ்ரீ ராம அவதாரத்தில் திவ்ய தம்பதிகள் விஷயமாக சர்வவித கைங்கர்யங்களையும் பண்ணி-
வயிற்றைப் பெருக்கி பக்தியினுடைய ரசம் அறிந்தவர் இறே எம்பெருமானாராய் அவதரித்தது

குடி கொண்ட கோயில் இராமானுசன் –
பள்ளத்தாக்கான இடங்களில் வெள்ளம் கோத்து நிற்பது போலே எம்பெருமானாரது ஆழமான நெஞ்சத்தில்
ஸ்ரீ இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் புகுந்து புகுந்து தேங்கிக் குடி கொண்டது –
ப்ரேமேயத்துக்கு கல் அரணாய் அமைந்த கோயிலே போதும் –
பிரமாணத்துக்கோ அறிவார்ந்த ஸ்ரீ எம்பெருமானாரே அரணாக அமைய வேண்டி இருக்கிறது –
பிரமாணம் அல்லது பிரமேயம் சித்தி யாமையாலே பிரபல பிரமாணமான ஸ்ரீ இராமாயணத்துக்கு
கல் அரணாம் கோயிலாக ஸ்ரீ எம்பெருமானாரே அமைகிறார் –
ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தம் இராமாயணத்தில் பொதிந்து கிடக்கையாலே அந்த சித்தாந்தத்தை ஸ்ரீ எம்பெருமானாரே-பாதுகாக்கின்றார் -என்க –

ஸ்ரீ இராமாயணமும் ஸ்ரீ திருவாய் மொழியும் ஆகிற வலியன இரண்டு மகா பிரபந்தங்கள் உண்டாய் இருக்க –
ஒரு மதிளை இடித்து விட்டால் அந்த வைஷ்ணவ சித்தாந்தம் குலைந்து விடுமா –
என்று ஸ்ரீ வைணவ கோயில்களை இடித்த குலோத்துங்க சோழனின் மகன் கூறியதாக -10 7-5 – – ஈட்டில்-காணப்படுகிறது –
உகவாதாரும் நெஞ்சு உளுக்கும்படி ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தமான பக்தியை புகட்டும் ஸ்ரீ இராமாயணத்தை-
சித்தாந்த ஸ்த்தாபகராகிய ஸ்ரீ எம்பெருமானார் கோயிலாக பாதுகாப்பது பொருத்தமாக இருக்கிறது அன்றோ –
மற்று ஒரு சித்தாந்த சாஸ்திரம் ஆகிய ஸ்ரீ திரு வாய் மொழியை பேணி வளர்த்து காப்பது போலே-
ஸ்ரீ இராமயணத்தையும் அவர் பேணி வளர்த்து காக்கின்றார் -என்க

ஸ்ரீ திருவாய் மொழியில் –கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ – 7-5 1- -என்று நம் ஆழ்வார்-அருளி செய்ததை
பின்பற்றி ஸ்ரீ எம்பெருமானார் இராமாயணத்தை எப்போதும் நெஞ்சில் வைத்து-அனுசந்திப்பார் ஆயினர் –
மற்றைய அவதார சரித்ரங்களை ஸ்ரீ இராம சரித்ரித்தற்கு போலியாகவே நினைத்து அருளுவர் –
ஸ்ரீ கண்ணன் இடம் காதல் கொண்டவள் ஆயினும் ஸ்ரீ ஆண்டாள்-மனதிற்கு இனியான் –என்று ஸ்ரீ இராமனைக்-குறிப்பிடுகிறாள் அன்றோ –
ஸ்ரீ பெரும்புதூர் மா முனிக்கும் அவர்க்கு பின்னானாளுக்கும் ஸ்ரீ இராமன் திறத்து-ஒரே மனப்பான்மை தான்-
ஸ்ரீ இராமாயணத்தை இடைவிடாது அனுசந்திப்பதனால் இவரிடம் பக்தி கரை-புரண்டமை பற்றி –
ஸ்ரீ இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் -குடி கொண்ட கோயில்

ஸ்ரீ இராமானுசன் பக்தி வெள்ளம்-குடி கொண்ட கோயில் இராமானுசன் என்றதாகவும் கொள்ளலாம் –
பக்தி வெள்ளத்தை சுவை மிகுதி பற்றி –அமுத வெள்ளமாக -குறிப்பிடுகிறார் –
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவாசிரியத்திலே -இராம சரித்ரத்தை இடைவிடாது-அனுபவித்து பக்தி யாகிற அமுத வெள்ளத்தானாம்
சிறப்பு விட்டு நல் வீடு பெறினும் கொள்வது எண்ணாது அதனைப் புறக்கணித்தார் சிறிய திருவடி –

பக்தி வெள்ளம் எனப்படும் இராமாயணமாம் கடல் -சுவை மிக்கு இருத்தலின் ஸ்ரீ இராமானுச முனிவரின்-உள்ளத்திலேயே குடி கொண்டது –
அகஸ்த்ய முனிவரது உட் புகுந்த உப்பு வெள்ளம் அங்கே குடி கொள்ள-முடிய வில்லை -அகஸ்தியர் அதனை உமிழ்ந்து விட்டார் –
ய பிபன் சததம் ராம சரிதாம்ருத சாகரம் அத்ருப்தச்தம் முனிம் வந்தே ப்ராசேதச மகல்மஷம் -என்று
எவர் எப்பொழுதும் ராம சரித்ரம் ஆகிய அமுதக்கடலை குடித்தும் -போதும் என்று திருப்தி அடையாது இருக்கிறாரோ –
குற்றம் அற்ற அந்த வால்மீகியை வணங்குகிறேன் -என்றபடி வால்மீகி போலே
ஸ்ரீ எம்பெருமானாரும் பக்தி அமுதக் கடலை குடித்து தெவிட்டாதவர்-என்க –

இனி கோயில் இராமானுசன்
என்பதற்கு கோயிலில் -ஸ்ரீ ரங்கத்தில் -வாழும் இராமானுசன் என்று-பொருள் ஆகவுமாம் –
இதனால் ஸ்ரீ அயோத்தியில் வாழ்ந்த ஸ்ரீ இராமானுசனை -ஸ்ரீ இளைய பெருமாளை -விலக்குகிறது
ஸ்ரீ கோயில் அண்ணன் -என்று ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்ததற்கு இது பொருந்தி இருப்பது காண்க –

கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ-ஸ்ரீ ஆழ்வார் -ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம்-
சகல கல்யாண குணங்களை கொண்டவர் ஸ்ரீ ராமனும் ஸ்ரீ சுவாமியும்.
ஏசல் உத்சவம் பக்தி உலா நடை – ஸ்ரீ ராமன் சந்நிதி முன் நடந்து கற்றவர் இடம் நடந்து காட்டுவார்-ஸ்ரீ ஸ்வாமி இன்றும்
ஸ்ரீ பெரும் தூரில் -காண கண் கோடி வேண்டும்
ஸ்ரீ பெரிய திரு மலை நம்பி மூலமும் ஸ்ரீ ராமாயணம் மூலம் கண்டு ஸ்ரீ ராமனைக் கற்றார் .
காட்டிக் கொடுத்த ஸ்ரீ ராமாயணத்தையே நெஞ்சில் கொண்டார்.
நாயகனாய்-ஸ்ரீ ராமனுஜரையே ஸ்ரீ ஆண்டாள் அருளுவதாக சொல்வர்
அடியவர் துன்பம் துடைக்கும் நாயகன்-10 லஷண்யங்களை ஸ்ரீ வால்மீகி அருளுகிறார் ஸ்ரீ ராமனுக்கு –
அனைத்தும் ஸ்ரீ சுவாமி -பக்கல் காணலாமே
முதல்-உயர்குடி பிறப்பு ..ஷத்ரிய குல கொழுந்து சூரிய குல திவாகரன் –விவஸ்வான் மனு.28 சதுர் யுகம் முன்-
கேசவ சோமயாஜுலு பிராமணர்-/பிர பன்ன குலம்-ஸ்வாமி
2-சாமுத்ரா லஷணம்- திரு மேனி அழகு .மூன்று பதக்கம் கோவில் பெருமாள் திருமலை செல்ல பிள்ளை
3-ராஜா சார்வ பௌமன்- மகா பாக்யசாலி- கருவிலே திரு உடன்
4-யதி சார்வ பௌமன் /வாரி வழங்கும் தன்மை–
கோ தானம் கதை -கொடுக்கும் பொழுது பிராமணர் கேட்க தடி எறிய சொல்லி-ராமன் சிரிக்க-அது பசு மாடு கொடுத்தது போல
இவரோ காப்பேன் சொன்னார் -இவரோ பின் படரும் குணன் பார்த்தோம்
5-தேஜஸ்வீ -வனம் சோபை அடைந்தது. பெருமாள் தண்ட காரண்யம் வந்ததும்
ஸ்வாமி -உள் இருட்டே போக்கினாரே -ராமானுஷ திவாகரன்
6 வைதப்யம் -எதை எப்பொழுது செய்யணும் அதை அவர் மூலம் நடத்தும் தன்மை-விரோதி நண்பன் என்றதால் வாலி இடம் வர வில்லை என்று
பிள்ளை உறங்கா வல்லி தாசரை அழகிய கண்களை பெரிய பெருமாளையே காட்ட சொல்லி திருத்தினார் சுவாமி-அப்பொழுது ஒரு சிந்தை செய்தே –
7-தார்மிகத்வம் -நேர்மை கிருபை-விருத்தி கிரந்தம் பார்த்தே எழுத –பிரமாண்யத்தில் உள்ள ஊற்றம்
8-தெய்வ தன்மை– பவான் நாரயனோ தேவ -ஸ்வாமியும் .அடையார் கமல கேள்வன் -ராமானுஜ முனி ஆயின
9 –பாண்டித்வம் -ஐந்து ஆச்சார்யர் –ஜைனர்களை வென்ற பாண்டித்தியம்-யாதவ பிரகாசர் போன்றோரை வென்ற
10- விநயம் உடையவர் -விச்வமித்ரர் இடம் இருவரையும் ஏவி பண்ணி கொள்ள சொல்லி–
ஸ்வாமி யும் கோஷ்டி கடைசியில் தீர்த்தம் வாங்கி கொண்ட வினயத்வம்

————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading