ஸ்ரீ காரப்பங்காடு ஸ்வாமிகள்–

ஸ்ரீ காரப்பங்காடு ஸ்வாமிகள் திருநட்சத்திரம் –பங்குனி புனர்பூசம்
–இன்று(19/03/24).🙏💐🌷🌺🌻🌼🥀🌹🙏

ஸ்ரீ உ.வே.காரப்பங்காடு வேங்கடாசார்யர் ஸ்வாமிகளின்
118 ஆவது திருநட்சத்திரம் பங்குனி புனர்பூசம்.அண்மைக் காலத்தில் எழுந்தருளியிருந்த ஸ்ரீவைஷ்ணவ
சம்பிரதாய மஹான்களில் சிறந்து விளங்கிய “நியாய வேதாந்த மஹா வித்வான் ஸ்ரீ காரப்பங்காடு வேங்கடாசார்யர் ஸ்வாமிகள்”,
1906 ஆம் ஆண்டு பஞ்ச கிராமங்களில் ஒன்றான காரப்பங்காடு கிராமத்தில்(ராஜ மன்னார்குடிக்குப் பக்கத்தில்), ஸ்ரீ திருவேங்கடம் அய்யங்காருக்கும்,லக்ஷ்மி அம்மங்காருக்கும் திருக்குமாரராகத் தோன்றினார்.ஸ்வாமியின் மாதாமகரும்,சிறந்த சாஸ்திர வல்லுநருமான,
ஸ்ரீ சிங்கப்பெருமாள் ஸ்வாமி வேங்கடாசார்யரைத் தமது ஸ்வீகார புத்திரராக ஏற்றுக் கொண்டு, அவருக்கு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய விஷ்யங்களையும்,சாஸ்த்ர அர்த்தங்
களையும் கற்றுக் கொடுத்தார்.
ஸ்வாமி திருவையாறு சம்ஸ்கிருதக்கல்லூரியில் சேர்ந்தும் பயின்றார்.
திருமலை அனந்தாண் பிள்ளை வம்சத்தைச் சேர்ந்த ஸ்ரீ கோவிந்தப்பங்கார் ஸ்வாமி காரப்பங்காடு ஸ்வாமியின் சமாஸ்ரயண ஆசார்யர்
ஆவார்.

ஸ்வாமியின் தனியன்:
🔔🥁🎻🎺🎷🎸🥁🔔
“ஆத்ரேயாந்வய பூஷணாச்ச ஜநகாத்லப்த்வா நரசிம்ஹார்யத:
சாஸ்த்ராணி ப்ரதிதாத்ததைவ வரதாச்சார்யாத் பரஸ்தாதபி :
கோவிந்தார்ய பதாச்ரிதம் நிருபம ப்ரக்யாத வாக்வைபவம்
தாந்த்யாத் யாத்மகுணாகரம் குருவரம் ஸ்ரீ வேங்கடாசார்யம் பஜே !!”

“சீர்மிகுந்த ஆத்திரேயன் தெளிசிங்கப் பெருமாள் சேய்,
கூர்மதியன் வரதார்யன் கொடுத்த அருங்கலைச் செல்வன்,
பார்புகழும் கோவிந்தன் பதம் பணியும் வேங்கட நம்
பேர் பெற்றான் திருவடியே பெரும் பேறாம் நமக்கே !”

ஸ்ரீரங்கநாராயண ஜீயரிடம் காலட்சேபம் !
🙏👌👍🙏👌👍🙏
ஸ்ரீரங்க நாராயண ஜீயராக எழுந்தருளியிருந்த தேசிக வரதாசார்யர் ஸ்வாமிகளிடம், நம் காரப்பங்காடு
ஸ்வாமி ஸ்ரீபாஷ்யம்(ஸ்ருதிப் பிரகாசிகை),ஸ்ரீ வசனபூஷணம்,
ஆசார்ய ஹ்ருதயம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார்.

பின்னர் ஸ்ரீபெரும்புதூர் சென்று,
ஆசூரி ராமாநுஜாசார்யர் ஸ்வாமியிடம் நியாய பாஸ்கரம் (தர்க்க சாஸ்த்ரம்) பயின்றார்.
அதன்பின் தில்லைத் திருச்சித்திர கூடம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தர்க்க சாஸ்த்ரத் துறை யில் மூன்றாண்டுகள் பேராசிரியராகப்பணியாற்றினார்.

சென்னையில் காலட்சேப கைங்கர்யம் !
💐💐💐💐💐💐💐💐💐
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய விஷ்யங்களை, ஆசையுடையோருக்கு எல்லாம்
உரைத்துப் பரப்பும் வகையில், நம் ஸ்வாமி 1937 ஆம் ஆண்டு தலைநகர் சென்னைக்கு எழுந்தருளி காலட்சேபம் செய்ய ஆரம்பித்தார்.
ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளின் பேரருளால் கீர்த்தி மிகுந்த வித்வானாக விளங்கினார்.

ஸ்வாமி காலட்சேபம் செய்த சம்பிரதாய விஷ்யங்கள்:

1.ஸ்ரீமத் பகவத் கீதை(பல முறை)
2.பகவத்விஷ்யம்–ஈடு(3 முறை)
3.ஸ்ரீ பாஷ்யம்
4.ஸ்ரீ ராமாயணம்
5.ஸ்ரீமத் பாகவதம்.
6.ஸ்ரீ விஷ்ணு புராணம்
7.ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம்.
8.மஹாபாரதம்.
9.ரஹஸ்யகிரந்தங்கள்(முமூக்ஷுப்படி,
ஸ்ரீவசனபூஷணம்,தத்வத்ரயம்,
ஆசார்ய ஹ்ருதயம்)
10.திருப்பாவை(50 முறைக்கு மேல்)
11.மற்ற பிரபந்தங்கள்

காரப்பங்காடு ஸ்வாமியின் காலட்சேப கோஷ்டியை அலங்கரித்த
சீலமிகு சிஷ்யர்கள்:
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
1.ஸ்ரீ உ.வே.வேளுக்குடி வரதாசார்யர்
2.ஸ்ரீ உ.வே.பிள்ளைலோகம் பாஷ்யகாரர்
3.ஸ்ரீ.உ.வே.சதாபிஷேகம் கோவிந்த நரசிம்மாசார்யர்.
4.ஸ்ரீ உ.வே.காரப்பங்காடு ரங்கராமாநுஜாசார்யர்.
5ஸ்ரீ உ.வே.பிருந்தாவனம் கோவர்த்தன ரங்காசார்யர்.
6ஸ்ரீ உ.வே.அப்பன் ஸ்ரீநிவாசாசார்யர்.
7.ஸ்ரீ உ.வே.குமார வேங்கடாசார்யர்
8.ஸ்ரீஉ.வே. அப்பன் ராமாநுஜாசார்யர்.
9.ஸ்ரீ உ.வே.பிள்ளைலோகம் ஸ்தலசயனத் துறைவர்.
10.ஸ்ரீ.உ.வே.லக்ஷ்மி தாதாசார்யர்
(மேல்கோட்டை)
11.அரையர் ஸ்ரீ.உ.வே.ஸ்ரீராம ஐயங்கார்.
12.ஸ்ரீ உ.வே.வங்கிபுரம் பட்டங்கி ராமாநுஜாசார்யர்
13 ஸ்ரீ உ.வே.ஸ்ரீநிவாசாசார்யர்
(ஸ்ரீவில்லிபுத்தூர்)

ஸ்வாமியின் கிரந்தங்கள்:
📔📕📗📘📙📒
1.திரெளபதியும் திருநாமமும்.
2.ஸ்ரீ ராமாயண ஸாரம்.
3.கீதா ஸாரம்.
4 ஸ்ரீ வைஷ்ணவ கோட்பாடுகள்.

மேலும் ஸ்வாமி சாதித்த காலட்சேபங்களின் தொகுப்பாகவும் சில கிரந்தங்கள் வெளிவந்துள்ளன.

ஸ்ரீ காரப்பங்காடு ஸ்வாமிகள் 07/08/1971 அன்று தமது 65 ஆவது திருநட்சத்திர ஆண்டில் ஆசார்ய திருவடி அடைந்தார்.-

ஸ்ரீ ரெங்க மங்கள மணிம் கருணா நிவாஸம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம்
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகர உஜ்ஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீ சம் நமாமி சிரஸா யது சைல தீபம்

பாஞ்ச ராத்ர ஸம்ஹிதையில்
மம தாம சதுஷ்டயம் -ஸ்ரீ ரெங்கம் -வேங்கடாத்ரி -ஹஸ்திகிரி -யாதவாத்ரி

வைகுண்டவர் தனம் நாம க்ஷேத்ரம் தத் ஸத்யம் உச்யதே
பிரமாணம் தஸ்ய விஜ்ஜேயம் பரிதோ யோஜந த்வயம்
நரஸிம்ஹ கிரீம் த்ருஷ்ட்வா தூரேநமத பக்தித
யஸ்ய தர்சன மாத்ரேண தூரம் கச்சதி துஷ் க்ருதம்

அஷ்டோத்தர சத ஸ்தான சாரே யாதவ பூதரே

1614 ஆண்டு -சாலி வாஹன சகாப்தம் ஆனந்த வருஷம் ஆஷாட மாதம் சுக்ல பக்ஷம் பஞ்சமி வெள்ளிக்கிழமை
மைசூர் ராஜ உடையார் செல்லப்பிள்ளை இணைத் தாமரை அடிகளுக்கு
உயர் ரகக் கற்களைக் கொண்டு 144 வராகன் எடை கொண்ட ராஜ முடி சமர்ப்பிக்கப் பட்டது –

பெரிய திருமலை நம்பி வம்ச லஷ்மி குமர தாத்தாச்சாரியார் திருவடி சம்பந்தம் இந்த ராஜ வம்சம் –
உடையார் வம்சத்தில் வந்த தேவ ராஜர் பேரனும் தொட்ட தேவராஜரின் புதல்வர் சிக்க தேவ ராஜர்
20 ஆண்டுகள் ஆட்சி பீடத்தில் இருந்தால்
ஸ்ரீ வைஷ்ண கோட்ப்பாடுகள் அடங்கிய 30 விண்ணப்பங்களை திரு நாரணன் திரு முன்பே வைத்தார்
அவற்றுள் 11-விண்ணப்பங்கள் விவரித்து -1952-வருஷம் கார்ப்பங்காடு ஸ்வாமிகள் மேலக்கோட்டையில் உபந்நியசித்தார் –
ரஹஸ்ய கிரந்தம் இது -கன்னட மொழியில் அஷ்ட ஸ்லோஹி -ஸப்த காதை போன்றவை
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் போல் ஆத்ம ஷேமமே உத்க்ருஷ்டமாகக் கொண்ட ஷத்ரிய அரசர் இவர் –
பகவத் பக்தியே இவரது குல தனம் –

முதல் விண்ணப்பம்
பரார்த்தமான திவ்ய மங்கள விக்ரஹம் –
ந தே ரூபம் ந ச ஆகாரோ ந ஆயதாநி ந ச ஆஸ்பதம்
ததாபி புருஷகாரோ பக்தானாம் த்வம் ப்ரகாஸசே
இரண்டாம் விண்ணப்பம்
இவனே ஸமஸ்த வஸ்துக்களும் த்ரிவித காரணன்
மூன்றாம் விண்ணப்பம்
இவனே வேத ஸாஸ்த்ர ப்ரமேயம்
நான்காம் விண்ணப்பம்
இவனை தெரிவிக்கும் ஒரே பிரமாணம் வேதமே –வேதார்த்தம் அறுதியிடுவது ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களாலே
ஐந்தாம் விண்ணப்பம்
வேதமும் வேத அங்கங்களும் உப அங்கங்களும் பரம் பொருளை எவ்வாறு ப்ரதிபாதிக்கிறது என்று விவரிக்கும்
ஆறாம் விண்ணப்பம்
சமன்வயப்படுத்தி எல்லாமே ஸ்ரீ மன் நாராயணனையே காட்டும் என்கிறது
ஏழாம் விண்ணப்பம்
ஜகத் மித்யா வாத கண்டனம்
எட்டாம் விண்ணப்பம்
கனவில் தோன்றுமாவையும் மெய்யே என்று நிரூபணம்
ஒன்பதாம் விண்ணப்பம்
அவன் ஸர்வ சமன் என்று நிரூபணம்
பத்தாம் விண்ணப்பம்
பகவத் ஸ்வரூப நிரூபணம் நிகமனம்
அடுத்த பத்து விண்ணப்பங்கள் ஜீவாத்மா பரமானவை
அடுத்த பத்தும் அசித் பரமானவை –

யதா யதா ஹி தர்ம ஸய க்லாநிர் பவதி பாரத அப் யுத்தாநம தர்மஸ்ய தத் ஆத்மநாம் ஸம்ருஜாம் அஹம் –
அஹம் ஸம்பவாமி -என்று அருளிச் செய்யாமல் ஆத்மநாம் ஸம்ருஜாம் அஹம் -ஞானிகளைப் பிறப்பிக்கிறேன்

திருப்பாவாடை உத்சவம் திருவல்லிக்கேணியில் கார்ப்பங்காடு ஸ்வாமிகள் ஆரம்பித்து வைத்து
கீதை உபதேசம் பண்ணும் திருக்கோலம் சாத்தச் சொல்லி -இன்றும் நடைபெறுகிறது
பார்த்தன் தன் தேர் முன் நின்றானை –பார்த்த சாரதி அன்றோ முன் நின்று
பீஷ்மர் சரவர்ஷம் தங்கி -ரஷித்து அருளினான் –

வரதன் கண்ட வேங்கடவன் –
கர்த்தரி கர்மணி -வரதன் வேங்கடவனைக் கண்டதாகவும் -வரதனை வேங்கடவன் கண்டதாகவும் கொள்ளலாம்
வேதாந்தக்காட்டிலே ஸிம்ஹம் நம் கார்ப்பங்காட்டு ஸிம்ஹம் -ஸ்ரீ உ வே சிங்கப்பெருமாள் திருக்குமாரர் இவர் –
பேர் அருளாளன் -கார்ப்பங்காடு ஸ்வாமி -வேளுக்குடி வரதாச்சார்யரை மூவரையும் சொன்னவாறு –
இவருக்கு ஆச்சார்யர் ஒரு வரதன் -ஸ்ரீ தேசிக வரதாச்சார்யர்
இவருக்கு பெருமாள் ஒரு வரதன் -பேர் அருளாளன்
சிஷ்யனும் ஒரு வரதன் -ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யார் –

உபதேசத்தில் ஸ்ரீ கீதாச்சார்யனை ஒப்பார்
உபதேச முறையிலே ஸ்ரீ நம்பிள்ளையை ஒப்பார்
வைராக்யத்திலும் கருணையிலும் எம்பெருமானாரை ஒப்பார்
உபதேச தெளிவாலும் சாந்தியிலும் திரு மேனி காந்தியிலும் மா முனிகளை ஒப்பார் –
லோக ஹிதை ஷித்வத்திலே சர்வேஸ்வரனையே ஒப்பார் –

———–

ஸ்ரீ ராமானுஜ சித்தாந்தம் மற்றும் திருவேங்கடமுடையான்

ஸ்ரீ காரப்பங்காடு வெங்கடாச்சாரியார் செய்த உபன்யாசம்-1940களில் நம்மாழ்வார் சந்நிதியில் சுவாமி-திருப்பதி-

விசிஷ்டாத்வைதம் வேதங்களில் கூறப்பட்டுள்ளபடி,--இது காலமற்றதாக கருதப்படுகிறது.
வித்தியாசமாக சமயங்களில் அது மறைக்கப்பட்டுக் கொண்டு வரப்பட்டது
ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்கள் மூலம். சுவாமி நம்மாழ்வார் மற்றும் சுவாமி ராமானுஜர் தலைவர்களாகக் கருதப்படுகிறார்கள்
ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்கள் மத்தியில் இருவரும் கொண்டு வந்துள்ளனர்-இந்த விசிஷ்டாத்வைத சம்பிரதாயம் உலகத்திற்காக பிரகாசிக்கச் செய்தனர் -.

ஆழ்வார்கள் மங்களா ஸாஸனம் செய்து அருளிய 108 திவ்யதேசங்களில், கோயில் (ஸ்ரீரங்கம்), திருமலை மற்றும் பெருமாள் கோயில்(திருக்கச்சி வரதராஜப் பெருமாள் கோயில்) மூன்றும் பிரதானமாகக் கருதப்படுகிறது. ஸ்ரீரங்கம் அனைத்து ஆழ்வார்களாலும்,மங்களா ஸாஸனம் செய்யப்பட்டது
தொண்டரடிப்பொடி ஆழ்வார். தவிர மற்றவர்களால் திருமலை மங்களா ஸாஸனம் செய்யப்பட்ட திவ்ய தேசம்
இதனாலேயே கோயிலை முதலாவதாகக் கருதுகிறார்கள் திவ்யதேசங்களில் திருமலை இரண்டாவது இடமாக இருப்பினும், நம்மாழ்வாரால் முதலில் மங்களா ஸாஸனம்
செய்யப்பட்டதால் திருமலைக்கு ப்ராதான்யம் உண்டே
திருப்பாணாழ்வார் அமலனாதி பிரானில் அரங்கனைப் பார்த்த கண்கள் மற்று வேறு ஒன்றையும் காணாது என்று அருளிச் செய்து இருந்தாலும் முதல் மற்றும் மூன்றாவது பாசுரங்களில். -விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவனே அரங்கன் என்று ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்த திருக்கோலத்துடன் இருந்து இங்கு திருமலையில் முதலில் நின்றது பின்னர் ஸ்ரீரங்கத்தில் கண் வளர்ந்து அருள்கிறான் என்றும் -மந்தி பாய் வட வேங்கடம் என்று மூன்றாம் பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்
திருமலையில் நின்றதால் -அமலனாதி பிரான் அடிப்படையில் திருவேங்கடமுடையானே அரங்கன் என்றதாயிற்று -.
எல்லாவற்றுக்கும் மேலாக ஆழ்வார்கள் ஒரே குரலில் பேசுபவர்கள் -ஏக கண்டர்கள் .-

ஸ்வாமி நம்மாழ்வார் மற்றும் ஸ்வாமி எம்பெருமானார்
இருவரும் திருமலையில் ஆழ்ந்த பற்று கொண்டிருந்தனர்.
த்வய மந்திரத்தின் இரண்டும் - மிதுனத்தில் சரணாகதியும் சரணடைந்ததைத் தொடர்ந்து நித்திய கைங்கர்யமும்.மிதுனத்தில் பிரார்திக்கிறது
நம்மாழ்வார் "ஒழிவில்காலம்"-உலகமுண்ட பெரு வாயா திருவாய்மொழிகளில் இவற்றை திருவேங்கடமுடையான் விஷயமாகவே அருளிச் செய்துள்ளார்
ஸ்ரீ ராமானுஜரும் ஸ்ரீபாஷ்யம் மங்கள ஸ்லோகத்தில் பரஸ்மை ஸ்ரீநிவாஸன் -ப்ரஹ்மம் திருவேங்கடமுடையானே -என்றும் -வேதார்த்த சங்கிரஹத்தையும் திருமலையிலே அருளிச் செய்தார்
இவ்வாறு, ஸ்ரீ நம்மாழ்வார் மற்றும் ஸ்ரீராமானுஜர் திருமலை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்கள் என்பதால் இதுவே முதல் திவ்யதேசம் என்று கருதலாம். (நஹி நிந்த நியாயம்).

முமுக்ஷஸ் ("முமுக்ஷுர்வை சரணம் அஹம் பிரபத்யே").
ஸ்ரீ நம்மாழ்வார் பக்தி மார்க்கத்தையும் பிரபத்தி மார்க்கத்தையும் உபதேசித்துள்ளார்
ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ பாஷ்யத்தில் பக்தியையும் கத்ய த்ரயங்களில் பிரபத்தியையும் அருளிச் செய்துள்ளார்

இனி ஆழ்வாரின் பிரபத்தியைப் பார்ப்போம்.
("அஹம் சர்வம் கரிஷ்யாமி") கிரியதாம் மாம் குருஷ்வ என்ற இளைய பெருமாளைப் போல் ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளிலும் ஸர்வ வித கைங்கர்யங்களையும் நம்மாழ்வார் பிரார்திக்கிறார்
அகலகில்லேன் இறையும் என்று அவளுடைய இருப்பால், முன்னுக்கு வரும் கல்யாண குணங்கள்வாத்சல்யம், ஸ்வாமித்வம், சௌசீல்யம் மற்றும்
சௌலப்யம். நான்கையும்
நிகரில் புகழாய் -உலகம் மூன்று யுடையாய் -என்னை ஆள்வானே திருவேங்கடத்தானே -என்று அருளிச் செய்து திருவேங்கடமுடையானிடம் பூரண சரணாகதி செய்து அவனிடம் கைங்கர்ய பிரார்த்தனையை ஒழிவில் காலம் எல்லாம் திருவாய் மொழியில் அருளிச் செய்துள்ளார்

—————————————————————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காரப்பங்காடு ஸ்வாமிகள்திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading