மூலவர்: ஸ்ரீநீலமேகப்பெருமாள்
உற்சவர்: ஸ்ரீசவுரிராஜப்பெருமாள்
தாயார்: ஸ்ரீகண்ணபுரநாயகி
தீர்த்தம்: நித்யபுஷ்கரிணி
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் போன்ற
ஆழ்வார்களால் மங்களாசாஸனம் பண்ணப்பட்ட பெருமாள்.
இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன்
கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே.-ஸ்ரீநம்மாழ்வார்
இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் உத்பலாவதக விமானம் எனப்படுகிறது.
முன்னொரு காலத்தில் சில முனிவர்கள் இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தனர்.
சாப்பாடு, தூக்கம் என எதனையும் பொருட்படுத்தாமல் பெருமாளை மட்டும் எப்போதும் தியானித்து வணங்கி வந்ததால்
அவர்கள் நெற்கதிர்கள் போன்று மிகவும் மெலிந்த தேகம் உடையவர்களாக இருந்தனர்.
மகாவிஷ்ணுவிடம் “அஷ்டாட்ஷர மந்திரம்’ கற்றிருந்த உபரிசிரவசு எனும் மன்னன் ஒருசமயம் தன் படையுடன்
இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வீரர்களுக்கு பசியெடுத்தது.
எனவே, இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை நெற்கதிர்கள் என நினைத்த வீரர்கள் அவர்களை வாளால் வெட்டினர்.
முனிவர்களின் நிலையைக் கண்ட விஷ்ணு, சிறுவன் வடிவில் வந்து உபரிசிரவசுவுடன் போர் புரிந்தார்.
மன்னனின் படையால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை.
எனவே, இறுதியாக மன்னன் தான் கற்றிருந்த அஷ்டாட்சர மந்திரத்தை சிறுவன் மீது ஏவினான்.
அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது.
இதைக்கண்ட மன்னன் தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு எனத் தெரிந்து மன்னிப்பு கேட்டான்.
விஷ்ணு அவனை மன்னித்து நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார்.
அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார்.
பின், மன்னன் விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு கோயில் எழுப்பினான்.
‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தின் முடிவு நிகழ்ந்த இடம் இது. அஷ்டாச்சர சொரூபி மந்திர உபதேசம் பெற்ற தலம்.
இந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்தம் கிடைக்கும் என்பதால் இந்த பெருமாள் தலத்தில் சொர்க்க வாசல் கிடையாது.
மற்ற தலங்களில் அபய காட்சியோடு பெருமாள் இருப்பார்.
இங்குள்ள பெருமாள் தானம் வாங்கிக் கொள்தல் போல காட்சியில் இருப்பார்.
இதன் பொருள் நம் கஷ்டங்களை பெருமாள் வாங்கிக் கொள்ளுதல் போல ஐதீகம்.
இத்தலத்தில் பெருமாள் சக்கரம் பிரயோகச் சக்கரம் வதம் பண்ணுவதாய் உள்ளது.
சவுரிராஜப் பெருமாளிடம் திருமங்கை ஆழ்வார் மந்திர உபதேசம் பெற்ற தலம் இது.
திருமங்கை ஆழ்வார் 100 பாசுரம் இத்தலம் குறித்து பாடியுள்ளார்.
குலசேகர ஆழ்வார் சவுரிராஜப் பெருமாளை இராமனாக நினைத்துக் கொண்டு தாலேலோ
(ராத்திரி தூங்க வைக்கப் பாடும் பாசுரம்)பாடிய திவ்ய தேசம் திருக்கண்ணபுரம் மட்டுமே.
நம்மாழ்வார் 11 பாசுரம் பாடியுள்ளார்.
கருட தண்டக மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த தலம்.
பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்று
திருக்கண்ணபுரம் , திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, கபிஸ்தலம், திருக்கோயிலூர் என்று
இந்த ஐந்தும் கிருஷ்ணன் வாழ்ந்து உறைந்த இடம்
இத்தலத்தில் உள்ள உற்சவர் “சவுரிராஜப் பெருமாள்’ என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார்.
அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும்.
“சவுரி’ என்ற சொல்லுக்கு “முடி’ என்றும், “அழகு’ என்றும் பொருள்கள் உண்டு.
கோயிலின் பெருமைகள் ;
1.ஸ்ரீமந் நாராயணன் எல்லா அக்ஷரங்களிலும் இந்தக்ஷேத்திரத்தில் ஸாந்நித்யம் செய்கிறபடியால்
இந்த ஸ்தலம் “ஸ்ரீமத்ஷ்டாக்ஷர மஹா மந்தரஸித்தி க்ஷேத்திரம்” என்று பெயர் பெற்றது.
2. திருமங்கையாழ்வாருக்கு திருமந்திர உபதேசம் செய்யப்பட்ட ஸ்தலம்.
3. ரங்கபட்டர் என்கிற அர்ச்சகர் சோழ அரசனுக்கு . பெருமாளுக்கு கேசம் வளர்ந்ததை காட்டுவதாக வாக்களித்ததைக்
காப்பாற்ற, பெருமாள் தன் திருமுடியில் திருக்குழல் கற்றையை வளர்த்துக் கேசத்தைக் காட்டியருளியதால்
செளரிராஜன் என்று அழைக்கப்பட்டார்.
4. விபீஷண ஆழ்வாருக்கு, ஸ்ரீ ரங்கநாதர் அருளியபடி அமாவாசை தினத்தன்று
பகவான் நடை அழகை காட்டியருளிய ஸ்தலம்.
5.பெருமாள் தன் சக்ராயுத்தால் விகடாக்ஷன் என்ற துஷ்டாசுரனை நிக்ரஹம் செய்தார்.
மஹரிஷிகளின் பிரார்த்தனைப்படி சக்ரப்பிரயோகம் செய்த கோலத்தில். மூலவர் காட்சி அளிக்கிறார்.
6. முனையதரையர் என்ற மஹாபக்திமான் தம்முடைய மனைவி சமைத்த பொங்கலை அர்த்தஜாமத்திற்குப் பிறகு
கோயிலுக்குள் போக முடியாமல் மானஸீகமாக பக்தியுடன் ஸமர்ப்பித்தார்.பகவான் அதை ஏற்றுக் கொண்டார்.
மூடிய கோயிலில் மணி ஓசை கேட்டு பட்டர்கள் பார்த்த போது மூலஸ்தானத்தில் வெண்பொங்கல் வாசனை நிரம்பி இருந்தது.
அது முதல் அர்த்தஜாமப் பொங்கல் நிவேதனத்திற்கு “முனியோதரம் பொங்கல்” என்ற பெயர்.
தினந்தோறும் வெண்ணெய் உருக்கி, பொங்கல் செய்து பெருமாளுக்கு நிவேதனம் செய்வது விசேஷம் .
திருக்கண்ணபுரத்தின் சிறப்புப் பிரசாதம் ’முனையதரன் பொங்கல்’. இந்த சிறப்புப்பொங்கலுக்கு தனி வரலாறு உண்டு.
சோழ மண்டலச் சதகம் எனும் நூலின் 42 வது பாடலில் இவ்வரலாறு கூறப்படுகின்றது. பாடல்:
புனையும் குழலாள் பரிந்தளித்த பொங்கல் அமுதும் பொறிக்கறியும்
அனைய சவுரிராசருக்கே ஆம் என்று அழுத்தும் ஆதரவின்
முனையதரையன் பொங்கல் என்று முகுந்தற்கு ஏறமுது கீர்த்தி
வளையும் பெருமை எப்போதும் வழங்கும் சோழ மண்டலமே
மங்களாசாஸனம்: பாசுரங்கள்
பெரியாழ்வார் – 71
ஆண்டாள் – 535
குலசேகராழ்வார் – 719- 729
திருமங்கையாழ்வார் _ 1648-1747- 2067- 2078- 2673 (72)
நம்மாழ்வார் – 3656-3666
மொத்தம் 128 பாசுரங்கள்.
திருநெற்றியில் தழும்பு
உற்சவ மூர்த்தியின் திருமேனியில் வலப்புருவத்திற்கு மேல் சிறு தழும்பும் இன்றும் காணலாம்.
முன் காலத்தில் அந்நியர் திருமதில்களை இடித்து வந்தபோது திருக்கண்ணபுரத்து அரையர், மனம் புழுங்கி,
“பெருமானே பொருவரை முன்போர் தொலைத்த பொன்னழி மற்றொரு கை என்றது பொய்த்ததோ’ என்று
கையிலிருந்த தாளத்தை வீசி எறிந்தார். அது பெருமானது புருவத்தில் பட்டது.
“தழும்பிருந்த பூங்கோரையாள் வெருவப் பொன்பெயரோன் மார்பிடந்த வீங்கோத வண்ணர் விரல்’ என்ற
பாசுரத்தில் போல இத்தழும்பை இன்றும் காட்டித் தமக்கு அடியாரிடம் கொண்ட பரிவைப் பெருமான் விளங்குகின்றார்
காளமேகப்புலவரும் கண்ணபுரம் பெருமாளும்
வைணவக்குடும்பத்தில் பிறந்த காளமேகம் சைவராக மாறிவிட்டாரே என்று கண்ணபுரம் பெருமாளுக்கு கோபம் ஏற்பட்டதாம்.
மழைநாளில் கண்ணபுரம் பெருமாள் கோயிலில் மழைக்காக புலவர் ஒதுங்க, கோயில் கதவுகளை மூடிப்
பெருமாள் உள்ளே விடவில்லை.உடனே காளமேகப்புலவர் கவிதை ஒன்று இயற்றி,
பெருமாளை நோக்கிப் பாட கோயில் கதவுகள் திறந்தனவாம்.
கண்ணபுரமருவே கடவுனினும் நீயதிகம்
உன்னிலுமோ நான் அதிகம் ஒன்று கேள் – முன்னமே
உன் பிறப்போ பத்தாம் உயர் சிவனுக் கொன்றுமாம்
என் பிறப்போ எண்ணத் தொலையாது
————————
புண்டரீக விசாலாக்ஷம் சரத் சந்த்ர நிபா நநம்
நீலாத்ரி இவ த்ருஷ்டந்தம் நீல மேகம் அஹம் பஜே
புண்டரீக விசாலாக்ஷம் -தாமரை போன்ற திருக்கண்கள் -அகன்ற பருத்த நீண்ட
சரத் சந்த்ர நிபாநநம் –சரத் காலச் சந்த்ரன் நிர்மலம் தெளிந்த அழகிய அம்ருத தாரை சொட்டும்
கோவர்த்தனம் -சரத் பூர்ணிமா கொண்டாடுவார்கள் -த்வாரகையிலும் பல லக்ஷம் பேர் வருவார்களே –
அதே போல் திருமுக மண்டலம் –
நீலாத்ரி இவ த்ருஷ்டந்தம் கருவரை போல் நின்றானை
நீல மேகம் -நைல்யம்-சமஸ்க்ருதத்தில் – கறுமை -கான்சத்யாமாம் கார் முகில் கார் வானம்
அஹம் பஜே -அடியேன் வணங்குகிறேன்
16 குணங்கள் இதில் உண்டே -நான்கு விசேஷணங்களிலும் உண்டே
ஷோடஸ கலா பரிபூர்ணன்
புண்டரீகாக்ஷ விசாலாக்ஷம்
தாமரைக்கண்ணன் –
1-பராத்பரன்
மனிசர்க்குத் தேவர் போலே தேவருக்கும் தேவாவோ
கப்யாஸம் புண்டரீக மேவ அக்ஷிணீ -சாந்தோக்யம்
க புண்டரீக நயன புருஷோத்தம
ஸ்ரீ யபதி -கண்ணபுர நாயகி கேள்வன் -சர்வாதிகன்
இணைக் கூற்றங்களோ அறியேன்
தூது செய் கண்கள்
2-ஸுந்தர்யம்
கரியவாகி –பேதைமை செய்தனவே
அதீர்க்கம் –ஸூ ந்தர பஹு ஸ்தவம்
தாமரை ஒப்புமை சொல்ல முடியாதே
பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணாம்
கண்டவர் தம் மனம் கமழும் கண்ணபுரத்தம்மானே
3-ஸுலப்யம்
தூது செய் கண்கள் ஓன்று பேசி -முதல் தொடர்பு
கடாக்ஷித்து வஸ்துவாக்கி -குளிரக் கடாக்ஷித்து –
ஸம்பாஷணம் –வீக்ஷணனே -பராசர பட்டர்
4- வாத்சல்யம்
செவ்வரியோடி -ஐஸ்வர்யத்தாலும் சிவந்து – -வாத்சல்யம் அடியாகவும் சிவந்து —
ஸூத்த ஸத்வ குணத்தால் -குற்றங்களையே குணமாகக் கொண்டு –
காட்டவே கண்டார் திருப்பாணாழ்வார்
5-பாவந கரத்வம் –தோஷங்களைப் போக்கி -பூதராக்கின நெடு நோக்கு –
காம க்ரோதம் அஹங்கார மமகாரங்கள் -கர்மங்கள் அனைத்தையும் போக்கி
செங்கண் சிறுச் சிறிதே –எங்கள் மேல் சாபம் களைந்து
சரத் சந்த்ர நிபாநநம்
மாசற்ற பூர்ண சந்திரன் போல் அழகிய முகம்
அபூத உவமை
6-ஆஹ்லாத கரத்வம்
தாபத் த்ரயங்கள் போகும்படி –
ஆத்யாத்மிக-ஆதி தைவிக -ஆதி பவ்திக
7-ப்ரீதி கரத்வம்
சந்த்ர காந்த –அத்தீவை ப்ரிய தர்சனம் –பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணாம்
8- நிர்ஹேதுக விஷயீ காரத்வம்
ஸூர்யன் இவ ஞானம் -ப்ரயத்னம் -ஸூர்ய துல்ய யாதாத்ம்ய ஞானம் -ரிஷிகள் -உபாசகர்கள்
முளைத்து எழுந்த திங்கள் தானாய் -மயர்வற மதிநலம் அருளி –
அக்லிஷ்ட்ட அத்புத அசிந்த்ய ஞான வைராக்ய ராஸயே ம் -நாதனுக்கு ஆழ்வார் அருள –
நீலாத்ரி இவ –
ஊற்றம் உடையாய் பெரியாய்
மலை இலங்கு தோள் நான்காய்
கருவரை போல் நின்றானே
9-தைர்யம் -ஹிமவான் இவ
அடியார் ரக்ஷண தீக்ஷிதம்
சுக்ரீவன் -விபீஷணன்
பிராட்டி இளைய பெருமாள் எனது உயிர் விட்டாலும் தீஷிதம் விடேன் -பெருமாள் -சத்ய ப்ரதிஜ்ஜை -ஸ்திர ப்ரதிஞ்ஞன்
10-ரக்ஷகத்வம்
காக்கும் இயல்பினன் கண்ணன்
கோவர்த்தனமே ரக்ஷிக்கும் காட்டிய வ்ருத்தாந்தம்
11-ஜகத் காரணத்வம்
த்ரிவித காரணம்
நதிகளுக்கு உத்பத்தி ஸ்தானம் -சாக்யாத்ரி -காரணம்
ஆறு பெருகும் ஸ்தானம்
உபாதான நிமித்த ஸஹ காரி ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் -ஆறுக்கும் காரணம்
த்ருஷ்டந்தம்
நிலையார நின்றானே
ஆதி அம் சோதி உருவை அங்கே வைத்து நின்ற வண்ணம் நிற்கவே
12-அபேக்ஷ நிரபேஷத்வம்
கருட வாஹனனும் நிற்க
ஒன்றும் தேவும் –நின்ற ஆதிப்பிரான் நிற்க -மற்றது தெய்வம் நாடுதிரே
64 சதுர்யுகங்களாக நின்று அருளி இங்கு
13-ஸூஹ்ருதத்வம்
இரா மடமூற்றுவாரைப் போலே
என் ஊரைச் சொன்னாய் -பேரைச் சொன்னாய்
சோம்பாது -திருத்திப் பணி கொள்ளவே அனைத்து வியாபாரங்களும் –
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று அவசர ப்ரதீஷிதனாய் நிற்கிறான்
நீலமேகம் கரு முகில்
14- வள்ளல் தன்மை
வஸிஸிஷ்டர் சண்டாள விபாகம் அற –
கார் வானம் நின்ற கண்ணபுரத்து அம்மானைக் கண்டார் கொலோ
மின்னு மா மழை தவழும் மேக ஒண்ணா
மழை முகிலே ஒக்கும்
15-பர கத ஸ்வீ காரம்
மலை இருக்கும் இடம் நாம் செல்ல வேண்டும்
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட
வந்து உனது அடியேன் உளம் புகுந்தாய் புகுந்த பின் சிந்தனைக்கு இனியாய்
16-சரண்ய முகுந்தத்வம்
மிக சேஷனே -மேகம் -எங்கும் தெளிக்கும் சாமர்த்தியம்
ஸகல பல ப்ரதத்வம்
மலையிலே படிந்து உள்ள சீதள காள மேகம் -பட்டர்
———————-
உத்பலாவதகே திவ்யே புஷ்பக்ரேஷணம்
சவுரி ராஜம் அஹம் வந்தே ஸதா ஸர்வாங்க ஸூந்தரம்
விமானம் –உத்பலா வதகம் என்ற பெயருடனும் திவ்யமாகவும் உள்ள விமானம்
மாம்ஸ -பலம் ஆசை விட்டு -உபேக்ஷித்து
ஆத்மாவில் நோக்கு தேகத்தில் ஆசை இல்லாமல்
ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் ஆகிறார்
ஆத்மாவை நிழலிலே வைத்து தேகத்தை பேணாமல் வெய்யிலில் வைத்தவர்
கைங்கர்யத்துக்கு வேண்டிய அளவு -தர்ம சாதனம் சரீரம் –
வாடினேன் வாடி -இத்யாதி
ஆத்ம ஞானம் வந்து -அனைத்தும் அவனது சரீரம் -உணர்ந்து
இதுவே உத்பல –
மோக்ஷமே பரம புருஷார்த்தம் -அத்தை அருளவே இதன் கீழே நிற்கிறார்
உத்பலரானவர்களுக்கு அருளவே –
விக்ரமாதித்யன் ஸிம்ஹாஸனம் போல்
கோயிலுக்குள்ளே இருந்து சேவிக்க முடியாது
வெளிப்பிரகாரத்தில் உள்ள திருமங்கை ஆழ்வார் சந்நிதியில் இருந்து ஸேவை யாகும்படி
சிற்பக்கலை அர்த்தம் அறிந்து செய்தது
காரியத்தால் வந்த பண்புப்பெயர் இது
திவ்யமான விமானம்
மோக்ஷ பூமி திவ்ய பூமி -அப்ராக்ருதம் -ப்ரக்ருதி மண்டலத்துக்கு அப்பால்
ஸூத்த ஸத்வ மயம் –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பு
மூன்றும் இங்கு உண்டே
அஞ்ஞானம் -அனுஷ்டானம் தப்பாக்கும் -அதன் காரணமாக தூய்மையான ஆத்மாவுக்கு அழுக்கு உடம்பு கிடைக்குமே –
அர்த்த பஞ்சக ஞானம் வேண்டுமே
புஷ்பம் -ஈஷணம் கண் அழகும் குழல் அழகும் சேர்ந்து
மீனுக்கு எங்கும் தண்ணீர் போல் எங்கு சேவித்தாலும் ஸூந்தரம்
நீல மகத்துக்கு உள்ளே ஒளி பிழம்பு போல்
ஸுவ்ரி ராஜன் -குழல் அழகர் –
அருகிலேயே திரு நாகை அழகியார் -சவுந்தர ராஜன்
அழகும் அரசும் சேர்ந்தால் -ஆசையுடன் கைங்கர்யம் ராக பிராப்தம் –
வணங்குதல் -வாசக -காயிக -மாநஸம் –
வணங்கா முடி -உள்ளம் அடங்காமல் அஹங்காரம் கொண்டவன் –
பொய் நின்ற ஞானம் -பாசுரம் அர்த்த பஞ்சகமும் உண்டே
இனி யாம் உறாமை அடியேன் செய்யும் விண்ணப்பம் இதர விஷய சங்கம் அற்று —
வாசிக கைங்கர்ய பிரார்த்தனை -உபேய ஸ்வரூபம்
அடியேன் -ஜீவாத்ம-ஸ்வ ஸ்வரூபம்
இமையோர் தலைவா -பர ஸ்வரூபம்
உத்பல வதகம்-விரோதி ஸ்வரூபம்
அஹம் -ஸ்வ ஸ்வரூபம்
ஸுரி ராஜம் -பர ஸ்வரூபம்
வந்தே -சரணம் வரிக்கச் செய்யும் -புஷ்கர ஈஷணம் -உபாயம்
ஸர்வாங்க ஸூந்தரம் -பல்லாண்டு பாடுவதே -கைங்கர்யம் -புருஷார்த்தம்
பொய் நின்ற ஞானம் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -விரோதி ஸ்வரூபம்
அருளாய் -ப்ராபக -உபாய ஸ்வரூபம்
பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு தானே –
ஸுரி ராஜம் அஹம் வந்தே
திருவல்ல வாழ் கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் –
ஆசை யுடையோருக்கு எல்லாம் ஆரியர்கள் கூறும் –வரம்பு அறுத்து –
வந்தே -வணங்கத் தகுதி
உத்பலா –அஹம் -வைராக்யம் யுடைய அடியேன் –
புஷ்கர ஈஷணம் -அஹம் -தாமரைக் கண்ணுக்கு இலக்கண அடியேன்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடரே
உன் அருளுக்கும் அதுவே புகல்-இனி அகலும் பொருள் என் -பயன் இருவோருக்குமான பின்பு -அமுதனார் –
இரக்கத்துத் தகுதியான அடியேன்
ஸுரி ராஜம் அஹம் -ஸ்வாமி சொத்து அறிந்த அடியேன்
ஸதா வந்தே அஹம் -ஸ்வரூப ஞானம் விடாமல் எப்போதும் இருக்கும் அடியேன்
ஸர்வாங்க ஸூந்தரம் அஹம் –போக்யம் –காட்டிலே எரிந்த நிலைக்கு ஆகாமல் -அனுபவிக்க -எப்போதும் ஏங்கும் அடியேன்
வந்தே பதம் தோறும் -சேர்த்து
ஜிதந்தே போற்றி பல்லாண்டு வந்தே பர்யாயம்
புஷ்கர ஈஷணம் வந்தே -தாமரைக் கண் கடாக்ஷம் உபாயம்
நம -ந ம -ச கண்ட வாகவும் -அகண்ட வாகவும் -வணங்குகிறேன் -நான் எனக்கு அல்லேன்
உனது கடாக்ஷம் உபாயம் -விஷ்ணோர் கடாக்ஷம் பெற்றால் தானே கார்ய கரம் ஆகும் -சகண்ட நமஸ் ஸூ
ஸுரி ராஜம் வந்தே -ஸ்வாமி -அரசே வணக்கம் அகண்ட நமஸ்ஸூ
அஹம் வந்தே -ஸ்வரூப ஞானம் வந்து பல்லாண்டு பாடுதல் இங்கு அர்த்தம் -அவனுக்கே அற்றுத் தீர்ந்து -சேஷத்வம் பாரதந்தர்யம் அறிந்து –
ஸதா வந்தே -சூழ்ந்து இருந்து -இங்கும் அங்கும் -வினைச் சொல் இல்லாத பல்லாண்டு பாசுரம் -போல் -இருக்க வேண்டுமே –
திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
ஸதா ஸர்வாங்க ஸூ ந்தரம் வந்தே -எல்லா இடங்களிலும் அழகு
சங்கு சக்கரம்
திருப் பிராட்டியார்
திரு அபிஷேகம்
திரு ஆபரணம்
ததீய சேஷத்வம் -அடியார்களுக்கு பரதந்த்ரம் சேஷத்வம் அறிந்து -பல்லாண்டு
அடியோமோடும் நின்னோடும் -பாசுரார்த்தம் உணர வேண்டுமே –
அந்தமில் பேர் இன்பத்து அடியோரோடும் பல்லாண்டு –
——————————————————–
மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -8-10-3-
தாய் எட்டு அடி பாய்ந்தால் குழந்தை 16 அடி பாடுமே
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
அநன்யார்ஹ சேஷத்வ அநந்ய சரண்யத்வ அநந்ய போக்யத்வங்கள்
யாதாத்மயமே ததீய பர்யந்தம் –
திருமந்த்ரார்த்தமும் இந்த த்யான ஸ்லோகம் சொல்லுமே
அறிவு உணர்வு உணர்த்தி -அநந்யார்ஹ சேஷத்வம்-ஸுரி -ராஜா என்றாலே சேஷி -ஓங்கார பிரணவம் அர்த்தம்
திட அத்யவசாயம் -உத்பல வதகே திவ்யே விமானே -அருகில் ஸந்நிஹிதன் -அநந்ய சரண்யத்வம்
பேற்றுக்கு த்வரிக்க–ஸதா -ஸர்வாங்க ஸூந்தரம் -இனிமை அழகு இனிமை -அநந்ய போக்யத்வம்
———–
அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-
மந்த்ர ரத்னத்தில் மத்யமபத நிஷ்டர்கள்
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
இருவருக்கும் நிரூபகமாய் இருக்கிற படி
இவர் அருள் பெறுவார் அடியார் தம் அடியார்
அவன் ஆழியான்
இருவருக்கும் நிரூபகம் ததீயரே
———–
திவ்ய விமானே -இரங்கி வந்து ஸுசீல்யம்
புஷ்கார ஈஷனே -வாத்சல்யம் -செவ்வரியோடே
சவுரி ராஜா ஸ்வாமித்வம்
ஸதா சர்வாங்க ஸூ ந்தரம் –ஸுலப்யம் –
கொற்றப் புள் ஏறி –ஸகல மனுஷ நயன விஷய தாங்கம்
பற்றின பின்பு
ஞாப்தி பக்தி இருக்க முக்தி தருவான் ஆவான்
ஆஸ்ரித கார்ய ஆபாத கல்யாண குணங்கள்
1-சர்வஞ்ஞத்வம்
2-ஸர்வ சக்தித்வம்
3-பிராப்தி
4-பூர்த்தி
நான்கும் வேண்டுமே
திவ்யே விமானே –நம்முடையவர் -பிராப்தி உண்டே -64 சதுர்யுகமாக நமக்காக உள்ளானே
புஷ்கர ஈஷணம் -ஸர்வஞ்ஞத்வம்-கண் என்றாலே ஞானம்
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்
சவுரி ராஜா -சர்வ சக்தித்வம்
கோதில மணி வண்ணன் வேண்டிற்று எல்லாம் தருவான்
ஸதா சர்வாங்க ஸூந்தரம் -பூர்த்தி
————
கன்று மேய்த்து -அதனாலேயே இனிது உகந்து -அதனாலேயே காளாய் -நித்ய யுவா –
திவத்திலும் -பசு நிரை மேய்ப்பு உவத்தி –
பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்னும் –
இங்கு பழுத்த பழமே சவுரி ராஜப்பெருமாள் –
திருவாய்ப்பாடி திருப் பிருந்தாவனம் பழுத்த கனி கண்ணன் போல் –
——-
சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ 8-1-1-
செருவரை முன்னா சறுத்த சிலையன்றோ கைத்தலத்து என்கின்றாளால்
பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை என்கின்றாளால்
ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா வென்னப்பா வென்கின்றாளால்
கருவரை போல் நின்றானைக் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-2-
துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால்
பொன்னின் மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால்
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-3-
தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால்
போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார்வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-4-
அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித் தலமும் பொற் பூணும் என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால்
வடித்தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின்றாளால்
கடிக்கமலம் கள்ளுகுக்கும்கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-5-
பேராயிரம் உடைய பேராளன் பேராளன் என்கின்றாளால்
ஏரார் கன மகரக் குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால்
நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால்
காரார் வயல்மருவும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-6-
செவ்வரத்த உடை ஆடை யதன் மேலோர் சிவ்ளிகைக் கச்சென்கின்றாளால்
அவ்வரத்த வடியிணையும் அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால்
கைவளர்க்கும் அழலாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-7-
கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்
வெற்றிப் போர் இந்திரர்க்கும் இந்திரனே யொக்குமால் என்கின்றாளால்
பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால்
கற்ற நூல் மறையாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-8-
வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-9-
மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று
காவளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன
பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
பூவளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே –8-1-10-
ஸுரிக்கொண்டைக்கு ராஜா -முன்னிலும் பின் அழகு பெருமாள்
புஷ்கார ஈஷணம் -ஸுரி ராஜம் -அவயவ சோபை சவுந்தர்யம்
ஸர்வாங்க ஸூந்தரம் – சமுதாய சோபை லாவண்யம்
அரசன் என்று -வந்தே-வணங்குவது – வேறே வகை ஸ்வரூப க்ருத தாஸ்யம் -ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம்
அழகுக்கு -வந்தே-வணங்குவது குண க்ருத தாஸ்யம் -இதுவே நிலைக்கும்
——
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-
——–
ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் -நமக்கு வேண்டும்
ஆஸ்ரயண ஸுபாதக ஆபாதக கல்யாண குணங்கள்
ஆஸ்ரிய கார்ய ஆபாதக கல்யாண குணங்கள்
இரண்டு வகைகளும் அவனுக்கு உண்டே
அகலகில்லேன் இறையும் என்று* அலர்மேல் மங்கை உறை மார்பா,*
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!* என்னை ஆள்வானே,*
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,*
புகல் ஒன்று இல்லா அடியேன்* உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.
நிகர் இல் புகழாய் –வாத்சல்யம்
உலகம் மூன்று உடையாய்! -ஸ்வாமித்வம்
என்னை ஆள்வானே,–ஸுஸீல்யம் -ஸ்ரீ ரெங்க நாத மம நாத
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,* -ஸுலப்யம்
வைத்த அஞ்சல் என்ற கையும் –இத்யாதி
குற்றம் கண்டு வெறுவாமைக்கு வாத்சல்யம்
கார்யம் செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம்
ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு ஸுசீல்யம்
கண்டு பற்றுகைக்கு ஸுலப்யம்
விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுக்கைக்கு ஞான சக்திகள் –முமுஷுப்படி –138-
திருக்கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்களும்
வைத்து அஞ்சல் என்ற கையும்
கவித்த முடியும்
மிகவும் முறுவலும்
ஆஸன பத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்குத் தஞ்சம் —
கையும் உழவு கோலும் பிடித்த சிறுவாய்க்கயிறும் ஸேனா தூளி தூ சரிதமான திருக்குழலும்
தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற சாரத்ய வேஷத்தை மாம் என்று காட்டுகிறான்
இவற்றுக்கு எல்லாம் அடி
திருக் கண்ண புர நாயகித் தாயார்
பரத்வ ஸுலப்ய இரண்டுக்கும் இவள் ஸம்பந்தமே ஹேது
————-
7 அடுக்குகளைக் கொண்டது சவுரிராஜப் பெருமாள் கோயிலின் ராஜ கோபுரம். கருவறை மூலவர் ‘நீலமேகப் பெருமாள் ‘ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். தாயார் ‘கண்ணபுர நாயகி‘ தனிச் சந்நிதியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றாள்.
(திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், திருக்கவித்தலம் மற்றும் திருக்கோவலூர் ஆகிய ஐந்து தலங்களும் பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரங்கள் என்றே போற்றப்படுகின்றன.)
க்ஷேத்ரம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என ஏழும் இங்கு சேர்ந்திருப்பது மிகவும் அரிதானது.
அரக்கர் தொல்லையிலிருந்து தங்களைக் காத்தருளுமாறு வேண்டிக் கொண்ட முனிவர்களுக்காக பெருமாள் தன் சக்ராயுதத்தைப் பிரயோகித்து’வீகடாக்ஷன்’ என்ற அசுரனை அழித்த தலம் என்பதால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் வலக்கரத்தை நீட்டி சக்ராயுதத்தை வீசுவதுபோல் காட்சி தருவது மற்றொரு விசேஷம்.
15 கிமீ தூரத்திலுள்ள திருமலைராயன்பட்டினக் கடற்கரையில் மாசி மாத பௌர்ணமி தினத்தில் பெருமாளைத் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்து தீர்த்தவாரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசிமாதத்தில் பிரம்மோதற்சவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
மாதப் பிறப்பு, ஏகாதசி மாதத்தில் இரண்டு நாட்களில் திருமஞ்சனமும் உற்சவர் புறப்பாடும் உண்டு. இத்தலத்து அமாவாசை உற்சவம் குறிப்பிடத்தக்க ஒன்று. விபீஷணனுக்கு பெருமாள் தன் நடை அழகைக் காட்டி அருள் செய்தது ஒரு அமாவாசை நாளில் என்பதை நினைவுகூரும் விதத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் திருமஞ்சனம் செய்து சவுரிமுடி அணிவித்து உற்சவர் புறப்பாடு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. வேண்டியது அனைத்தையும் நிறைவேற்றி வைப்பார் இத்தல பெருமாள்.
—————
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந
நாக பர்யங்கமுத் ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –ஸ்ரீ ஹரி வம்சம் -113 அத்யாயம் -62 ஸ்லோகம் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேத ந-ஸ்ரீ தேவியோடு பிரியாதவனாய் -திருப் பாற் கடலிலே பள்ளி கொள்பவனான -இந்த நாராயணன்
நாக பர்யங்கமுத் ஸ்ருஜ்ய -சேஷ சயனத்தை விட்டு
ஹ்யாகதோ மதுராம் புரீம் -ஸ்ரீ மதுரை நகரம் குறித்து எழுந்து அருளினான் —
அவதாரிகை –
போக்தா போக்கியம் ப்ரேரிதாரம்-ஸ்வே-1-12- என்கிறபடியே
சேதனனாய் இருப்பான் ஒருத்தனுக்குச் சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரய ஜ்ஞானம் யுண்டாக வேணும் –
அதில் அசித்து –அஜாமேகாம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீம் பிரஜாம் ஜனயந்தீம் சரூபாம் -ஸ்வே -4-5- என்கிறபடியே
பகவத் ஸ்வரூபத்தை மறைக்கைக்கு பஹூ வித வர்ணையான திரச்கரிணி போலே இருக்கக் கடவதாய்-
விபரீத ஜ்ஞான ஜனகமாய் -ஷட் வித விகாராஸ் பதமாய் -சதத பரிணாமியாய்-சதத ஷணஷாண ஸ்வபாவமாய் -சர்வேஸ்வரனுக்கு லீலா உப கரணமாய் இருக்கும் –
சித் வஸ்துவைப் பார்த்தால் தேக இந்த்ரியாதி வி லஷணமாய்-ஜ்ஞா நானந்த ஸ்வரூபமாய் -ஜ்ஞான குணகமாய்-பகவத் சேஷ பூதமாய் -ஸ்ரீ கௌஸ்துபாதிகளோ பாதி சர்வேஸ்வரனுக்கு ஸ்ப்ருஹணீ யமாய் இருக்கும் –
ஈஸ்வரனைப் பார்த்தால் இவை இரண்டையும் வியாபித்து இருப்பவனாய்-இவற்றுக்கு ஆதார பூதனாய்-இவை இரண்டையும் சரீரவத் பரதந்த்ரமாக யுடையவனாய் இருக்கும் –
இப்படி த்யாஜ்யதையாலும் -உபாதேயதையாலும் -ஜ்ஞாதவ்யமான தத்வ த்ரயத்திலே அபியோகம் இன்றிக்கே
பகவத அபசார பாகவத அபசார அசஹ்ய அபசாரங்களிலே கை வளர்ந்து போருகிற சேதனரைப் பார்த்தால்
பார லௌகிக பல சித்தி ஹேதுவாக –பதிம் விச்வச்ய -என்கிற லோக உத்தீர்ணனை ஆஸ்ரயியாதே லோகாயத மத அநு சாரிகளையும்
ஸ்யாதிஸ்தி ஸ்யான் நாஸ்தி -இத்யாதிகளால் ஸ்யா ஸ்திதி -ஸ்யான் நாஸ்தி -ஸ்யா தஸ்தி ச நாஸ்தி ச –ஸ்யா தச்தீதி வக்தவ்யம்-ஸ்யா நாஸ்தீதி வக்தவ்யம் –
ஸ்யா தஸ்தி ச நாஸ்தி தி சேதி வக்தவ்யம் -சர்வதா வக்தவ்யம் -என்று சொல்லுகிறபடியே சப்த பங்க வாதிகளாய் -பகவத் ஆஸ்ரயணத்துக்கு அர்ஹராகாதே ஆர்ஹதராயும் -கதிமிச்சே ஜ்ஜநார்த்தநாத் -ப்ரஹ்மாண்ட புராணம் -என்கிறபடியே சர்வேஸ்வர சமாஸ்ரயணத்தாலே ஸூ கதராக ப்ராப்தமாய் இருக்க
ஸூ கதமத -புத்த – மத அநு சாரிகளாயும்
பகவத் சமாஸ்ரயணத்தாலே சங்க்யா வான்களாக ப்ராப்தமாய் இருக்க – சாங்க்யா வஷ்டம்பம் பண்ணி -எண்ணிக்கை அற்ற -ஜன்மத்திலே அசங்க்யாதராயும்
நாராயன பரா வயம் -என்கிறபடியே பகவத் யோகராக ப்ராப்தமாய் இருக்க சமயக் ஜ்ஞான வியுக்த யோக நிஷ்டராயும்
பகவத் ஜ்ஞான விசேஷதத் பரராக ப்ராப்தமாய் இருக்க வைசேஷிக மத அநு சாரிகளாயும்
புண்டரீகாஷா சமாஸ்ரயணத்தாலே மாயா நிஸ்தரணம் பண்ண ப்ராப்தமாய் இருக்க மாயாவாத நிரதராயும்
ஆக இப்படி இடுகுபடுகிற சேதனரைக் கண்டு ஈஸ்வரன் தயமாநம நாவாய்க் கொண்டு
மாநம் ப்ரதீபமிவ காருணிகோததாதி -என்று வேதார்த்தத்தை பிரகாசிப்பித்த அளவிலும் ஐஹிக புருஷார்த்தத்தைக் கோரி –
பத்ரம் கர்ணேபி ஸ்ருணு யாம தேவா –தை ஆர -1- சாந்தி பாடம் -தேவர்களே பத்திரமான வற்றைக் கேட்க வேணும்
ஸ்ருணுயாம்-என்ற போதே சித்தம் அன்றோ -கர்ணேபி-என்ன வேணுமோ –
பத்ரச் ஸ்ரவணத்தோ பாதி -மங்கலமான வார்த்தைகளை -கரண பாடவமும் விதேயம் என்கைக்காக –கர்ணேபி-என்றது கர்ணை-என்றபடி
1-தேவா என்கிற தேவ சப்தம் க்ரீட அர்த்தத்திலே யாய் -உங்களுடைய பத்ர ரூபமான விநோதத்தைக் கேட்க வேணும் -2-தேவா பத்ரம் ஸ்ருணுயாம் -விஜிகீஷார்த்தத் திலேயே –
தேவர்களே விஜிகீஷா ரூபமான உங்களுடைய நன்மையைக் கேட்க வேணும்
3- தேவா பத்ரம் ஸ்ருணுயாம் -தீவு வ்யவஹார -வார்த்தை பொருளில் -உங்களுடைய இனியதான வார்த்தையைக் கேட்க வேணும் –
4-தேவா பத்ரம் ஸ்ருணுயாம்-தீவுத் யுதி ஒளி பொருளில் -உங்களுடைய இழி யுன்டாய்ப் போருகிற வார்த்தையைக் கேட்க வேணும்
5-தேவா பத்ரம் ஸ்ருணுயாம்-தீவு கதி -உங்களுடைய கதி யுண்டான வார்த்தையைக் கேட்க வேணும் பத்ரம் கர்ணேபி ஸ்ருணுயாம தேவா பத்ரம் பச்யேம -என்று பத்ரச் ஸ்ரவண மாத்ரமே போராது-பத்ர தர்சனமும் பண்ண வேணும்
பத்ரம் பச்யேமா ஷபிர்யா ஜத்ரா-ஆஷாபி பத்ரம் பச்யேம -இங்கே பச்யேம என்ற போதே சித்தம் அன்றோ
அஷபி-என்கைக்கு அடி என் என்னில் -தர்சனத்தோ பாதி தர்சன கரண பாடவமும் வேணும் என்றபடி
அன்றிக்கே -கர்ணேபி -அஷேபி -என்று ஸ்வ பாவாக்யாந மாக வுமாம் –
அஷபி -பத்ரம் பச்யேம -ஸ்ரோத்ர இந்த்ரியத்துக்கு இறை இட்டவோபாதி சஷூர் இந்த்ரியத்துக்கும் ஆனந்தம் உண்டாம்படி வி லஷண வஸ்துவைத் தர்சிப்போமாக வேணும்
யஜத்ரா -யஜநாத் த்ராயந்த இதி யஜத்ரா -என்றாய் யஜன நிமித்தமாக ரஷிக்கிற வர்களே -என்றபடி -அதாவது
கால காலங்களிலே வர்ஷத்தை உண்டாக்கி அத்தாலே சஸ்ய வ்ருத்தியையும் யுண்டாக்கி
அதடியாக யஜ்ஞ பதார்த்த சாமக்ரியையும் உண்டாக்கிக் கொடுக்கையாலே யஜத்ரா -என்கிறது இதுவும் தேவ சப்தம் போலே சம்போதனமாய் இருக்கிறது –
ஸ்திரை ரங்கைஸ் துஷ்டு வாம்ச-
பச்ர ஸ்ரவணத்துக்கும் பச்ர தர்சனத்துக்கும் அநு ரூபமாம்படியான ஸ்தோத்ரம் பண்ண வேணும்
ஸ்தோத்ரம் பண்ணும் பொது ஸ்திரமான அங்கங்களோடு கூட வேணும்
ஸ்திரை ரங்கைஸ் துஷ்டு வாம்ச-
ஸ்திரமான அங்கங்களோடு உப லஷிதனாய்க் கொண்டு மேலே மேலே ஸ்தோத்ரம் பண்ண வேணும்
க்ரியாசமபிஹாரே யங்-ஆய்-யங்-லு கந்தம் ஆகையாலே ச்தோத்ரத்தின் யுடைய மிகுதியைக் காட்டுகிறது –
தநூபிர் வ்யசேம தேவஹிதம் யதாயு -இப்படியே ஸ்தோத்ரம் பண்ணுகைக்குஈடாக தேவ ஹிதமான ஆயுஸ் ஸூ யாதொன்று அத்தை சரீரத்தோடு பிரவேசிப்போமாக வேணும்
தநூபிர் வ்யசேம தேவ ஹிதம் யதாயு -க்ரிமி கீடாதிகளுடைய ஆயுஸ் சாக ஒண்ணாது
திர்யக் யோநிகளுடைய ஆயுஸ் சாக ஒணாது
சதாயுர்வை புருஷ -என்கிற புருஷ ஆயுஸ் சாக ஒண்ணாது
ஒரு வத்சரம் தினமாகக் கொண்டு தேவர்களுடைய ஆயுஸ் ஸூ யாதொன்று உண்டு அத்தை சரீரத்தோடு பிரவேசிப்போமாக வேணும்
விசேம என்னாமல் வ்ய சேம -என்று சாந்தசமாகையாலே அடாகமம் பண்ணிக் கிடக்கிறது –
ஆக -இத்தால் -பத்ரச் ஸ்ரவனமும் -பத்ர தர்சனமும் -தத் அநு ரூபமான ச்தோத்ரமும் -அதுக்கு ஈடான ஆயுர்தர்க்யமும்
பிரதிபாதித்தாயிற்று -அங்கன் அன்றியிலே -உதோ தவஸ்மை தன்வம் விசஸ்ரே -என்று கொண்டு ஸ்ருதியினுடைய தாத்பர்யம் அறிந்தவனுக்கு தினுடைய அர்த்த யோகமான சமயத்திலே பரம புருஷார்த்த அந்வயியாக வேணும் -எங்கனே என்னில் –
பத்ரம் கர்ணேபி ஸ்ருணுயாம் தேவா –
இங்கு தேவ சப்தம் -தேவமிவாசார்யம் உபாசீத -என்கிறபடியே ஆச்சார்யா சப்தத்துக்கு உப லஷணம்-
தேவா -என்கிற பாஹூள்யத்தாலே-குருஷூ பஹூ வசனம் -என்கிற ந்யாயம் தோற்றுகிறது-
ஸ்ரீ பராசர ப்ரஹ்ம ரிஷி பக்கலிலே ஸ்ரீ மைத்ரேய பகவான் கேட்குமா போலே ஆச்சார்யன் பக்கலிலே பரமார்த்தம் கேட்க வேணும் -என்கிறதுக்கும் உப லஷணம் –
பத்ரம் கர்ணேபி ஸ்ருணுயாம்-பத்ரம் ஸ்ருணுயாம்-ச்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் -என்றும்
கர்ணாப்யாம் பூரி விஸ்ருவம் -என்றும் -யத்கதா சரவணம் ஹரே -என்றும்
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றும் கேட்பாரோ -திருவாய் -7-5-3-என்று சொல்லுகிறபடியே
பகவத் விஷயத்தைக் கேட்கைக்கு உப லஷணமாய் இருக்கிறது பத்ர சப்தம்
ஸ்ருணுயாம் என்று பிரார்த்தனா ரூபம் ஆகையாலே அதிகாரியினுடைய பிரார்த்தனா விசிஷ்டத்வமும் உப லஷிதம் –
இப்படி ஆச்சார்யன் பக்கலிலே பரமார்த்த ஸ்ரவனமும் அநு பாவ்யமான பகவத் விக்ரஹ தர்சனமும் பண்ண வேணும் என்பதுக்கு உப லஷணம் -பத்ரம் பச்யேம் அஷபிர் யஜத்ரா -என்று –
இங்கு பத்ர சப்தத்தாலே -சதைக ரூப ரூபாய -என்றும் -ந பூத சங்க சம்ஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மன -என்றும்
ரூபௌதார்ய குனைபும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-என்றும்
தத்ரு ஸூர் விச்மிதாகாரா ராமஸ்ய வன வாசி ந -என்றும் சாஷான் மன்மத மன்மத -என்றும்
பகவத் அனுபவ ரூபம் இ றே கண்ணுக்கு இலக்காகுவது
யஜத்ரா -யஜன நிமித்தமாக ரஷணம் தோற்றுகிறது –
யோ அஹம் அஸ்மி ச சந்யஜே-என்றும் -ச ச்வத்வர உதீரித -என்றும் சொல்லுகிறபடியே
தாஸ்ய அநு சந்தான அநு ரூபமான ஹவி பிரதானமும் அத்தாலே வரக் கடவதான ந்யாசமும்
ஏவம் பூதமான நியாச வித்யா பிரதானத்தால் விபரீத ஜ்ஞானர்க்கும் பிரகடமாம்படி ரஷித்துப் போருகை தோற்றுகையாலே இதுவும் ஆச்சார்யா சப்தத்துக்கு உப லஷணமாய்ப் போருகிறது
ஸ்திரி ரங்கைஸ் துஷ்டுவாம்சாஸ் தநூபிர் வ்ய சேம தேவ ஹிதம் யுதாயு –
ச்ரத்தையா தேவோ தேவத்வம் அஸ்நுதே -என்ற ஸ்ரீ யபதிக்கு உள்ள அளவும் பிரதி ஷண வி நாசியான தேஹம் போல் அன்றியே
அப்ராக்ருத விக்ரஹமாய் தோற்றும்படி ஸ்திரமாய் இருக்கிற அங்கங்களோடு கூடி இருக்கிற சரீரத்தோடு
ஹா வுஹா வுஹா வு -ஏதத் சாம காயன் நாஸ்தே -என்று-
ஸ்ருதி தாத்பர்ய பர்யாலோசனம் பண்ண மாட்டாத சேதனரை உத்தீர்ணர் ஆக்குகைக்காக தான் அவதீர்ணனான அவ்வவ தாரங்களில்
மத்ஸ்ய அவதாரத்தைப் பார்த்தால் -பஹூ ஜீவனனாய் இருக்கச் செய்தேயும் -அதிக ஆயுஸ் -நீரில் வாழ்ந்து -கரையிலே ஷணம் நேரமும் வாழ முடியாத –
கூர்ம அவதாரத்தைப் பார்த்தால் -ஜகத்துக்கு ஆதார பூதனாய் இருக்கச் செய்தேயும் ஒருபுறம் சொல்லவே இருக்கும் –
ஸ்ரீ வராஹ அவதாரத்தைப் பார்த்தால் -ஆச்ரயண சௌகர்யம் தோற்றி இருக்கச் செய்தேயும் கோத்ரொத் பேகம் -கோத்திரக் கலப்பு -மலைகளை பிளத்தல் -பண்ணி இருக்கும்
ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தைப் பார்த்தால் இதிகாசம் அடியாகப் பற்றுவார்க்க்கு அநிர்ப்பரணம் -பொறுப்பு இல்லாமை -அகார வாச்யனான பகவானின் பொறுப்பு -தோன்றும் படி இருக்கும்
ஸ்ரீ வாமன அவதாரத்தைப் பார்த்தால் தான் சிறியனாய் இருக்கச் செய்தேயும் ஜகத்தை அடையத் தன அடிக்கீழ் ஆக்கா நிற்கும்
பரசுராம அவதாரத்தைப் பார்த்தால் ப்ராஹ்மன உத்தமனாய் இருக்கச் செய்தேயும் புண்ய ஜன ஹாநி பண்ணா நிற்கும்
ஸ்ரீ ராம அவதாரத்தைப் பார்த்தால் த்ருஷ்ட்வா வை தர்ம சாரிண மங்களாநி பிரயுஜ்ஞானா பிரத்யக்ருஹ்ணன் த்ருடவ்ரதா-ஆரண்ய -1-12- என்றபடி
புண்ய ஜன சேவை உண்டாய் இருக்கச் செய்தேயும் புண்ய ஜன ஹாநி -அரக்கர்கள் அழிவை -பண்ணா நிற்கும்
கிருஷ்ண அவதாரத்தைப் பார்த்தால் -ரூபமே தச்ச சதுர புஜம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-13-என்னும்படி
அவதார தசையிலும் ஆ ஸ்ரீ த சம்ரஷனத்தில் கை வாசி தோற்றி இருக்கும் –
நான்கு வித புருஷார்த்தங்களையும் அளிப்பவன் இ றே
அர்ஜுன ப்ரப்ருதிகளைக் கண்டால் தன் மேன்மை தோற்றாதபடி தௌத்ய சாரத்யங்களைப் பண்ணா நிற்கும் –
ஆழ்வார்களும் ஈடுபடுவதும் இவ்வவதாரத்திலே இ றே
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் -திருவாய் -1-3-1- என்றும்
கோவலனாய் வென்னைய் யுண்ட வாயன் -அமலனாதி -10- என்றும்
திரு மதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே -திருப்பல்லாண்டு -10 என்றும்
கோவிந்தற்க்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய் செய்யும் தவம் தான் என்-நாச் -13-9- -என்றும்
துவராடை யுடுத்து ஒரு செண்டு சிலுப்பிக் கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டுச் சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர் -பெரிய திருமொழி -10-8-2- என்றும்
வார் மணல் குன்றில் புலர நின்ற வாசுதேவா உன் வரவு பார்த்தே -பெருமாள் திரு -6-1- என்றும்
இப்புடைகளிலே ஆழ்வார்களும் இவ்வதாரத்தையே ஆதரித்துக் கொண்டு போந்தார்கள்
ஏவம் பூதனான கிருஷ்ணனுடைய
சகல ஜகத் காரணத்வத்தையும்
சர்வாதிகத்வத்தையும்
சமுத்திர சாயித்வத்தையும்
சகல மநுஜ நயன சார்த்த ஜீவாதுவாம்படி மதுரா புரீ சங்கதத்வத்தையும்
பிரதிபாதிக்கிறது -இஸ் ஸ்லோகத்தாலே-
——–
ஆனால் ஜகத் காரணமுமாய் சர்வாதிகமுமானால் அதீந்த்ரியமாய் அன்றோ இருப்பது என்னில்
1- அவனுடைய சௌலப்யாதிசயம் தோற்றும்படி– ஏஷ -என்கிறார் -(அரையர் தாளம் எறிந்து அடி பட்ட ஸுலப்யம் இன்றும் காணலாமே )
2- ஏஷ -அனுமாநம் ஆகமம் அர்த்தாபத்தி அநுப லப்தி -யாதிகளான–பிரமாணம் வேண்டாதபடி ப்ரத்யஷ சித்தமாய் நிற்கிற ஆகாரம் தோற்றுகிறது -(தேவ தத்தன் பருத்து பகலில் உண்ணாமல் -என்றால் இரவில் உண்கிறான் என்பதே அர்த்தாபத்தி)(காணுமோ கண்ண புரம் -என்று காட்டினாள் -ப்ரத்யக்ஷம் )
(பிரான் இருந்தமை காட்டினாள் திருத் தாயார் –இவளோ திவ்ய தேசம் காட்டுகிறாள் -கருவிலே திருவில்லாமல் கண்ணை மூடி செவிக்கும் துர்பாக்கியவாதிகள் -பட்டர் -கண்ணைத் திறந்து பார்க்க வேண்டுமே–கண்டு மேல் அஞ்சலி பண்ண சொல்ல மாட்டாமல் சேஷம் காட்டினாள் )
(பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் பயில்கின்றாளால் –வர்த்தமானம் நிகழ் காலம் –என்று என்று -முதலில் தெரியும் போல் -பின்பு தெரிந்து கொள்ள முடியாமல் இருக்குமே -அழகைக் காட்டி ஈர்த்து கொள்வானே–பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் போல் )
(அவதாரங்களில் கிருஷ்ண அவதாரம் ஸ்ரேஷ்டம் போல் கண்ணபுரம் அர்ச்சா ஸ்தலங்களில் ஸ்ரேஷ்டம்-வட மதுரைப் பிறந்தான் 9 பத்து ஆரம்பம்- இறுதியில் கண்ணபுரம் மங்களா சாசனம்)
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் –காணுமோ கண்ணபுரம் காட்டினாள் –அங்கு சங்கை இது தெளிவு -இது அன்றோ இதன் ஏற்றம்
3-ஏஷ-அங்கன் அன்றியே -ஆசன்நாவதாரதம் ஆகையாலே சொல்லும் எளிமையை காற்றிற்று ஆகவுமாம் –
4-ஏஷ -அங்கன் அன்றியே –உளன் சுடர் மிகு ஸ்ருதியுள் -திருவாய் -1-1-7- என்று ஸ்ருதி சித்தனாய் இருக்கச் செய்தேயும் மானச விஷயமாகையாலே சொல்லிற்று ஆகவுமாம் –
அணியனாகும் தன் தாள் அடைந்ததற்கு எல்லாம்
சேயன் அணியன் -ஏஷ -அருகில் பரம ஸூ லபனாய் ரத்யக்ஷமாக ஸேவை சாதிக்கிறான் அன்றோ-பார்க்கலாம் -பெருமையைப் பேசி முடிக்க முடியாது
————
எளிமைக்கும் பெருமைக்கும் எல்லை நிலம் இவனே
ஏஷ -சொல்லி -மேல் நாராயண -உத்பாதகத்வேந -நாராயணன்
புண்டரீக மலர் அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே -பெருமாள் திருமொழி -8-2-என்றும்
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே -பெருமாள் திரு -8-10- என்றும்
இப்படி சங்குசித வ்ருத்தியாய் இருப்பான் ஒருவனோ என்னில்
1- நாராயண –
அந்தர் பஹிஸ் ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித –என்று சர்வ வ்யாபகனாய் இருப்பான் ஒருவன் –
(அந்தர் பஹிஸ் ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித
ஸ்தித -இருக்கிறான்
தத் சர்வம் வ்யாப்ய-அனைத்தும் வியாபித்து இருக்கிறான்
அந்தர் பஹிஸ் ச -உள்ளும் புகுந்து நியமிக்கிறார்
இரண்டு ஸமாஸங்கள் உண்டே–தத் புருஷ -பஹு வ்ரீஹீ ஸமாஸம்-நாரங்களுக்கு இருப்பிடம் -ஸமஸ்த இதர வஸ்துக்களுக்கும் இருப்பிடம் -நாரங்களுக்குள் இருப்பவன்–அக்னி -அக்ரே நயதி-முன் கூட்டிச் செல்பவன்-சிவ -மங்களம் அளிப்பவன் -போல் யாருக்கும் சொல்லலாம் -அது போல் நாராயண -சொல்ல முடியாதே -அசாதாரண திரு நாமம் அன்றோ-பாணினி ஸூத்ரம் -அப்பய தீக்ஷிதர் -வரத ஹஸ்தம் இல்லாமல் வரதராஜர் பேர் அருளாளன் -அபய முத்ரை -தஸ்ய யதாம் கப்யாஸம் ஏவம் அக்ஷிணி -இரண்டு கண்கள் -புண்டரீகாக்ஷன் –சிவனுக்கும் -முக்கண்ணனுக்கும் சொல்வார் -ஒருமை இருமை பன்மை -அஷி அஷிணி அஸீணீ -ஓன்று மலராத கண் இரண்டு மலர்ந்த கண்கள் -என்று அர்த்தம் சொல்வார் -அவராலும் நாராயண -அர்த்தம் -ணத்வம் பாதித்தே என்பர்-உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்-ஆத்மா அணு -இவனோ விபு -ஸர்வ அந்தர்யாமி -கறந்த பாலுள் நெய்யே போல்–எங்கும் உளன் கண்ணன்-ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஜ்ஞாநம் அபோஹநம் ச இதி ஸ்ம்ருதேஸ் ச-)
2- நாராயண –
ரூப குண விபூத்யாதிகள் அடைய ஏக தேசத்திலே ஒதுங்கும்படி ஸ்வரூப மஹத்தையை உடையனாய் இருப்பான் ஒருவன் –
3- நாராயண –
சகல ஜகத்தும் சம்ஹ்ருதமான சமயத்திலும் தம்முடைய சத் பாவம் தப்பாதபடி இருப்பான் ஒருவன் –
ஏகோ ஹவை நாராயண ஆசீந் த ப்ரஹ்மா நேசாந நேமே த்யாப்ருதி வீ -மஹா உபநிஷத் -என்றும்
ஆபூத சம்ப்லவே ப்ராப்தே நஷ்டே ஸ்தாவர ஜங்கமே-ஏகஸ் திஷ்டதி விசவாத்மா ஸ து நாராயண பிரபு -பாரதம் -சாந்தி -210-24- என்றும் சொல்லுகையாலே –
4- ஆனால் கார்யாம்சம் அடையக் குலைந்து காரணமான தான் ஒருத்தனும் நிற்கும் அத்தனையோ என்னில் -நாராயண – –
நராஜ் ஜாதா நி தத்த்வா நி -பார ஆநு-186-7-என்கிறபடியே தத் உத்பாதகனாய் இருப்பான் ஒருத்தன் –
5- நாராயண -அங்கன் அன்றியிலே -மேல் ஷீரார்ணவ நிகேத ந -என்று சொல்லுகையாலே அப்புக்களைத் தனக்கு இருப்பிடமாக உடையன் -என்றாக வுமாம் –
தா யதாஸ் யாய நம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருத-மனு -1-10-என்கையாலே –மனத்துள்ளான் மா கடல் நீர் உள்ளான்
6- நாராயண -அங்கன் அன்றியே -சகலர்க்கும் அவர் ஜநீயமாம் படி உடலும் உயிரும் போலே அந்தர்பூதமான சம்பந்த விசேஷத்தை உடையனாய் இருப்பான் ஒருத்தன் என்றாக வுமாம் –
7- நாராயண -அங்கன் அன்றியே -அந்தர் வ்யாப்தி பஹிர் வ்யாப்தி பேதத்தாலே ஜகத்துக்கு ஆதார பூதனுமாய் நியந்தாவுமாய் இருப்பான் ஒருத்தன் –
8- நாராயண –மாதா பிதா ப்ராதா –ஸூபால -இத்யாதி பேதத்தாலே சர்வவித பந்துத்வமும்
ஆச்ரயண உன்முகனான அதிகாரிக்கு அநுரூபமாம் படி வாத்சல்யமும் -ஸ்வாமித்வமும்-சௌசீல்யமும்-சௌலப்யமும்-ஜ்ஞான சக்த்யாதி யோகமும்
இக் குண விசேஷங்கள் அளவிலே விமுகரையும் ஆ பக்தராக்கும் என்னும் இடம் தோற்றுகிறது –
கோன் வஸ்மி குணவான் –16 கல்யாண குணங்களுக்கும் ஒரே இருப்பிடம் பெருமாள் -அமலன் ஆதி பிரான் -அனைத்துக்கும் ஸீமா பூமி இவனே-
அகில காரணன் அத்புத காரணம் நிஷ் காரணன் -ஆதி மூலமே –நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-
————————-
ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பல நாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே!
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-
ஆனால் இதில் தோற்றுகிற காரணத்வம்-ந ஸன் ந சாச்ச்சிவ ஏவ கேவல -என்றும் பதிரேகா ஆ சீத்-என்றும் சொல்லுகிறபடியே
ஹிரண்ய கர்ப்ப சிவாதி சாதாரணம் அன்றோ என்னில்
1-ஸ்ரீ மான் -சர்வாதிகன் -என்கிறது -ஸ்ரீ மான் என்கிற இத்தாலே ஆஸ்ரய ணீ யதையும் போக்யதையும் தோற்றுகிறது-
திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை யங்கண்ணி கொல்லி யம்பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-1-அவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும்–மூன்று உம்மைத்தொகை
2- ஸ்ரீ மான் -இதில் மதுப்பு நித்ய யோகார்த்தித்திலே யாய் -இத்தால் பூவும் மணமும் போலே அவி நா பாவம் தோற்றுகிறது –
ஸ்ரீ -எல்லாராலும் ஆஸ்ரயிக்க பட்டு இருப்பாள் ஒருத்தியாய் உத்தர உத்தர தரமான அதிசயங்கள் எல்லாம் தன்னுடைய கடாஷ அதீநமாம் படி இருப்பாள் ஒருத்தியுமாய்
யஸ்ய சா ஜனகாத்மஜா -ஆரண்ய -37-18-என்கிறபடியே ஈஸ்வரனிலும் கால் வாசி ஏற்றம் உடையவளாய் இருப்பாள் ஒருத்தி-சுவையன் திருவின் மணாளன்
3- ஆனால் இப்படிக்கொத்த இவளால் வந்த அதிசயமோ அத்தலைக்கு என்றால் -ஸ்ரீ மான் -இவளும்
இறையும் அகலகில்லேன் -என்று அலர் மேல் மங்கை திரு மார்பில் சுவடு அறிந்த பின்பு பிறந்தகமான தாமரையும் நெருஞ்சி முள் என்னும்படி ஸ்ப்ருஹாஸ் பதனாய்
திருவுக்குத் திருவாகிய செல்வா -என்றும்
ஸ்ரீய ஸ்ரீ யம் என்றும் சொல்லுகிறபடியே இவள் தானும் மேல் விழும்படி ஸ்வதஸ் சித்த போக்யதையை உடையவனாய் – இவள் தர்மமாய் தான் தர்மியாய் இருப்பான் ஒருத்தன் –
(பிக்ஷை உசிதமான வாமன அவதாரத்திலும் கூட திரு மார்பை விட்டுப் பிரியாதவள் -மான் தோல் – -அந்தப்புரத்துக்கு திரை-இவள் கடாக்ஷம் மா பலிக்கு லேசம் விழுந்தாலும் கார்யகரம் ஆகாதி)
4- ஸ்ரீ மான் –இச் சேர்த்தியைப் பிரியக் கண்டார் யுண்டாகில் ராவணனும் சூர்பணகையும் பட்டது படுவார்கள்
தேவியைப் பிரிந்தனை -வாலி
நித்யை வைஷா ஜெகன் மாதா விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயிநீ
யதா சர்வ கதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம –ஸ்ரீ விஷ்ணு புராணம் –
ஸ்ரீ சப்தம் -ஸ்ரீயதே -ச்ரயதே –ஸ்ருணோதி-ஸ்ராவயதி -ஸ்ருணாதி -ஸ்ரீணாதி-என்று ஆறு படியாக -ஸ்ருணோதி ஸ்ராவயதி -என்கிற வ்யுத்பத்திகளில்
சாபராதரான அடியோங்களை சர்வேஸ்வரன் திருவடிகளில் காட்டிக் கொடுத்து அருள வேணும் என்று
இப் புடைகளிலே ஆஸ்ரிதருடைய ஆர்த்த த்வனியைக் கேட்டு சர்வேஸ்வரனுக்கு விண்ணப்பம் செய்து
இவர்களுடைய ஆர்த்தியை சமிப்பிக்கும்
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே-
ஆக இந்த இரண்டு பதத்தாலும் ஆஸ்ரயண அதிகாரிக்கு அநு சந்தேயமான –சரணத்வமும் -ஸ்ரீ யபதித்வமும் -பிரதிபாதித்தா யிற்று
இத்தைப் பற்ற இறே ஆழ்வார்களும் –திருவில்லாத தேவரைத் தேறேல்மின்-நான்முகன் -53-என்றும் திரு நின்ற பக்கம் -நான்முகன் -62-என்றும் பிரதிபாதித்தது -மகிஷ்யந்தரங்கள் உண்டாய் இருக்கச் செய்தேயும் தஸ்ய ச அஸ்யாம் ப்ரதிஷ்டிதம் -என்று இவள்-அளவிலே நெஞ்சுண்டாய்ப் போருவான் ஒருத்தன் –
அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித் தலமும் பொற் பூணும் என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால்
வடித்தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின்றாளால்
கடிக்கமலம் கள்ளுகுக்கும்கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-5-
தருமான மழை முகிலைப் பிரியாது தன்னடைந்தார்
வருமானம் தவிர்க்கும் மணியை யணி யுருவில்
திருமாலை யம்மானை யமுதத்தைக் கடல் கிடந்த பெருமானை –
அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே –8-9-2-திருமாலை -மத்ய மணி நியாயம்
தாமரை மேல் அயன் அவனை படைத்தவனே! தயரதன் தன்
மா முதலாய்! மைதிலி தன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ– 8-4–
————
அது எங்கே கண்டோம் என்றால் –
1- ஷீரார்ணவ நிகேதந -இவள் பிறந்தகத்தை விடாதே போதே கண்டது இறே
பிள்ளை வேட்டகத்தை ஆசைப்படும் பெண் புக்ககத்தை ஆசைப்படும்
ஜநந பவந ப்ரீத்யா துக்த அர்ணவம் பஹு மந்யஸே
ஜநநி தயித ப்ரேம்ணா புஷ்ணாஸி தத் பரமம் பதம்
உததி பரம வ்யோம்நோ: விஸ்ம்ருத்ய மாத்ருச ரக்ஷண
க்ஷமம் இதி தியா பூய: ஸ்ரீரங்கதாமநி மோதஸே–ஸ்ரீ குண ரத்ன கோஸம்56–
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! நீ பிறந்த இடம் என்ற காரணத்தினால் திருப்பாற்கடலை மிகவும் மதிக்கிறாய்.
நீ புகுந்த இடம் என்ற காரணத்தினாலும், உனது கணவன் மீது உள்ள காதல் என்னும் காரணத்தினாலும்,
அனைவரும் துதிக்கும் பரமபதத்தை மிகவும் விரும்புகின்றாய்.
ஆனால் இரண்டையும் நீ இப்போது நீ மறந்துவிட்டாய் போலும்!
அதனால்தான் உனது பிள்ளைகளான எங்களைப் பாதுகாப்பதற்கு, உனக்கு ஏற்ற இடம் என்று மனதில் கொண்டு,
நாங்கள் உள்ள ஸ்ரீரங்கத்தில் என்றும் மகிழ்வுடன் அமர்ந்தாய் போலும்
2- ஷீரார்ணவ நிகேதந -பாற் கடலில் சாய்ந்த பயோதரம் -நீருண்ட மேகம் -போலே இருப்பான் ஒருத்தன் –
அவனே மேகம்-அவள் மின்னல் -திரு ஆபரணங்கள் வானவில் -கிருபை நம் மேல் தெளிக்கட்டும் –
நிவாஸா இத்யாதி -சென்றால் குடையாம் -திருவனந்த ஆழ்வான் -விமானமும் சலனமும் கறுப்பாக -இருப்பதன் காரணம் -இவன் சயனிப்பதால் -நிழல் யீட்டால் –
நீருண்ட கார் மேகம் கருத்து இருப்பது போல்-கருணை வெள்ளம் வற்றாதே -சுற்றுப்புறம் எங்கும் கறுப்பாக்குமே திருமேனி தேஜஸ்
அந்த கறுப்பு நம்மை ரக்ஷிக்கட்டும்
மேக வண்ணன் முகில் வண்ணன் -கறுத்த வர்ணம் மட்டும் அல்ல ஸ்வ பாவமும் சாத்ருசம் –
நாம் உள்ள இடம் வந்து பொழியும் –
வந்து அருளி என் நெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்து
திருக் கமல பாதம் வந்து –உறையூர் அளவும் நீண்டு -திருப்பாணாழ்வார் கண்ணின் உள்ளே புகுந்ததே
எதிர் சூழல் புக்கு திரிந்து கைக் கொள்வான்
வந்தார் போல் வராதவன் -வராதவன் போல் வருவான்
கிருபை பொழிய மனதை தயார் படுத்திக்க கொள்ள வேண்டுமே
ஏரி வெட்டி தேக்கிக் கொள்ளுவது போல் -மாரி யார் பெய்விப்பார் –
ஜல ஸ்தல விபாகம் இன்றி அநா லோசித விசேஷ அகில -கொட்டுவான்-
மேகம் போல் இவனையும் தூது விடலாம்
இதில் இருந்து அவதாரங்களைச் செய்து மீண்டும் இங்கே வந்து சயனித்துக் கொள்ளுவான்
1- மேகம் பெய்ய வேண்டும் இடம் வரை சென்று பொழியும்
எம்பெருமானும் -வந்து அருளி என்நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து –
-மண் மீது உழல்வாய் -கிருபா ரசம் பொழிய -வாழ உலகினில் பெய்திடுவான் –
2-மேகம் மின்னுள்ள காலம் நீர் நிரம்பி இருக்கும் -இவள் சந்நிதியாலே காகம் தலைப் பெற்றது -அது இல்லாமையாலே ராவணன் முடிந்தான்
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலும் செய்கை –
3- மேகம் தான் மொண்ட இடத்திலும் பெய்யும் வசிஷ்டாதிகளுக்கும் பெருமாள் உபதேசித்த்காது பிரசித்தம்
4- மேகம் பெய்யப் பெறாத காலத்திலே வறக்கும்
கோவிந்தேதி யதாக்ரந்தம் கிருஷ்ணா மாம் தூர வாஸினம் ருணம் பிரவர்த்தமிவ மே ஹ்ருதயாத் நாபசர்ப்பதி-
5-மேகம் இன்ன பொது பெய்யும் என்று அறுதி இட ஒண்ணாது -வந்தாய் போலே வாராதாய் வாராதாய் போல் வருவானே -திரௌபதிக்கு ஆபத்திலே முகம் காட்டாது ஒழிந்தான் அபேஷா நிரபெஷமாக தாவி அன்று உலகமெல்லாம் தலைவிளாக் கொண்டான்
6-வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது அல்லால் மாரி யார் பெய்கிற்பார் மற்று -வளைப்புக்காக கார்யம் செய்பவன் அல்லன் -பெண்ணுலாம் சடையினானும்
பிரமனும் காண்பான் எண்ணிலா ஊழி ஊநிழி தவம் செய்தார் வெள்கி நிற்க விண்ணுளார் வியப்ப ன்று ஆணைக்கு அன்று அருளை ஈந்தவன்
7-மேகம் ஜல ஸ்தல விபாகம் இன்றி பெய்யும் -அநா லோசித விசேஷ அசேஷ லோக சரண்யன் -வசிசிஷ்டர் சண்டாளன் வாசி இல்லாமல் அனுக்ரஹ சீலன்
வேடன் வேடுவிச்சி பஷி குரங்கு சராசரம் இடைச்சி இடையர் தயிர் தாலி கூனி மாலாகாரர் பிணவிருந்து வேண்டி அடிசில் இட்டவர்
அவன் மகன் அவன் தம்பி ஆனை அரவம் மறையாளன் பெற்ற மைந்தன் -நிர்விசெஷமாக அனைவருக்கும் அருளை பொழிபவன் –
8-மேகம் கர்ஜித்துப் போகும் ஆடம்பரம் இன்றியும் பொழியும் -குசேலருக்கு அருள் மலை பொழிந்தான் –
9–விராட பார்வை கால ஷேபம் கேட்க மேகம் வந்து நிற்கும் -பகவத் விஷய கால ஷேபத்துக்கு இவனும் வந்து நிற்பான் –
மா முனிகள் கால ஷேப கோஷ்டியில் ஸ்ரீ சைல தயா பாத்ரம் தனியன் சாதித்துன் கொண்டு வந்தானே –
10-மேகம் சுக்திகளில் பெய்து முத்தாகும் -அடியாருக்கு இன்பமாரியாகிய எம்பெருமான் உடைய கடாஷ தாரையும் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்
இடத்தே ப்ரவஹித்து மிக்க பயன் விளைத்து முத்தன்ன அருளிச் செயல்களையும் ஸ்ரீ வசன பூஷணாதிகளையும் பயக்கும்
11-மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம் -இத்யாதிப் படியே தூது விடப் பெரும் -இவனும் இன்னார் தூதன் என நின்றான் என்றும்
கோதை வேல் ஐவர் க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் -என்ற பாண்டவ தூதன் என்று அழியாப் பெயர் பெற்றான்
12-மழை பெய்ய எல்லா மரங்களும் தளிர்க்கும் -எருக்கிலை போல்வன வீழ்ந்து ஒழியும்-இவனும் பரித்ராணாயா சாது நாம்
விநாசாய ச துஷ்க்ருதாம் -என்று சோதி வாய் திறந்து அருளினானே-கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் -தாயார் மகிழ ஒன்னார் தளர –
13-மேகமானது -எத்தனையோ வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் வேறு புகல் இல்லாமல் –
எம்பெருமானும் -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்றிலேன் -என்று சாதக வ்ருத்திகளான அனன்ய கதிகளால் ப்ரதீஷிக்கப் பட்டிருப்பன் –
14-மேகமானது விருப்பம் இல்லா விடிலும் கண்ணீர் விட்டாலும் வாளா நிற்கும்-ஸ்ரீ பரத ஆழ்வான் -ஏபிச் ச சசிவைஸ் சார்த்தம் சிரஸா யாசிதோ மயா-ப்ராதுச் சிஷ்யஸ்ய
தாஸஸ்ய பிரசாதம் கர்த்துமர்ஹசி-என்று பலருடன் கண்ணநீர் சித்ரகூடத்தில் விட்டாலும்
ச காமம் அநவாப்யைவ-என்னும்படி மநோ ரதம் நிறைவேறப் பெறாமல் மீண்டு போம்படி ஆயிற்று-
15-மேகம் கடலில் படிந்து அங்கு நின்றும் எழுந்து தோன்றி வர்ஷித்து விட்டு மீண்டும் கடலில் புகும் -எம்பெருமானும் அவதார கந்தமான திருப் பாற் கடலிலே படிந்து
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -என்றபடி
ஸ்ரீ ராம கிருஷ்ணாதி திருவவதாரங்களில் கிருபா ரசத்தை பொழிந்து மீண்டும் அங்கே புகுவான்
பின் துரக்கும் காற்று இழிந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய் வன் திரைக்கண் வந்து அணைந்த வாய்மைத்தே -பெரிய திருவந்தாதி
16-மேகம் தான் தோன்றின வாறே மயில்களை சிறகு விரித்து ஆடப் பண்ணும் -கார் முகில் போல் வண்ணன் கண்ணன் எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துல்லாதார் தம்மால் கருமம் என் சொல்லீர்-என்றபடியே தத் பஷ பாதிகளை எழுந்தும் பறந்தும் துள்ளப் பண்ணும் –
3- ஷீரார்ணவ நிகேத ந -அங்கன் அன்றியே -பெரும் புறக்கடல் -பெரிய திருமொழி -7-10-1-என்றும்
சமஸ்த கல்யாண குணாம் ருதோதி-ஸ்தோத்ர ரத்னம் -18- என்றும் சொல்லுகிறபடியே
கடலிலே கடல் சாய்ந்தால் போலே இருக்கிறவர் என்னவுமாம் –
4- ஷீரார்ணவ நிகேதந -கீழ்ச் சொன்ன நாராயணத்வம் இங்கே புற வெள்ளம் இட்டுக் கிடக்கிறது-
கருணைக் கடல் குண ப்ரவாஹம் –லோசன அம்ருத-ஆமோத -திரு மணத் தூண்கள்
கடல் கிடந்த பெருமானை -பெரிய திரு மொழி-8-9-2- என்று ஷீரார்ணவ நிகேதந சப்தார்த்தையும்
அடைந்து –தீர்த்தவாரி
கிடந்து
அடைத்து -பெருமாள்
கூப்பீடு கேட்க்கும் இடம்
மந்த்ர ஆலோசனை செய்யும் இடம்-நம் போல்வார் கூப்பீடு கேட்கவே இங்கே நித்யவாஸம் செய்து அருள்கிறான்
கொங்கு மலி கருங்குவளை கண்ணாகத் தெண் கயங்கள்
செங்கமல முகமலர்த்தும் திருக் கண்ண புரத் துறையும்
வங்கமலி தடங்கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற
செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே —8-3-8-
ஆர்த்தருடைய கூக்குரல் கேட்டு கடுக வந்து ரஷிக்க ஷீராப்தி நாதனாக கண் வளர்ந்து அருளுபவன் இவனே
திரு நாபி கமலம் கொண்டு சிருஷ்டித்து காத்து அருளும் பெருமான் நம்மைக் கை விடான் என்று
நம்பி ஆசை வைத்து பலனாக வளையல்கள் இழந்தேன்-
வெள்ளை நீர் வெள்ளத்து அளைந்த அரவணை மேல்
துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே
வள்ளலே யுன் தமர்க்கு என்றும் நமன் தமர்
கள்ளர் போல் கண்ண புரத்துறை யம்மானே–8-10-7-
திருப் பாற் கடலில் கூக்குரல் -கூப்பீடு இடத்தில் யோகு செய்து அருளுபவனே
யமபடர்கள் பாகவதர்களை கிட்ட மாட்டார்கள் என்று மட்டும் இல்லை
அவர்கள் கள்ளர் போலே மறைந்து ஒளிந்து கிடக்கும் படியாய் அன்றோ உனது பிரபாவம்
சித்ரகுத்தன் எழுத்தால் தென் புலக்கொன் பொறி ஒற்றி வைத்த இலச்சினை மாற்றி தூதுவரோடு ஒளித்தார்-பெரியாழ்வார் –
—————
ஆனால் வ்யூஹ விசேஷமானால் சனகாதிகளுக்கு ஊக விஷயமாய் -சர்வ ஜன சமாஸ்ரயத்வம் இல்லையோ -என்னில் –
1-நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
அநேக சிரஸ் கமான இடத்தை விட்டு -பலர் ஆட்சி செய்யும் இடம் விட்டு -திருவனந்த ஆழ்வான் உடைய பல தலைகளை விட்டு –
திகழும் மதுரைப் பதிக் கொற்றவன் -நாச் -4-6-என்று ஏகாதபத்ரம் நடத்துகிற இடத்தேற வந்தான் –
2- நாக பர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
ஆசி விஷம் உள்ள இடத்தை விட்டு மதுரோத்தரமான இடத்தேறப் போந்தான் –
3- நாக பர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
சாகரத்தை விட்டு நாகரனாம்படி வந்து புகுந்தான் –
ஜலத்தை விட்டு ஸ்தலத்துக்கு ஸ்திரமாக நாகரீகனாக இருக்கவே இங்கு வந்து ஸேவை சாதிக்கிறான்
————–
கிடை அழகு ஒழிய அநு பாவ்யமான நடை அழகு இல்லையோ என்னில்
1-ஆகத-கனத்து இருந்த களிறு -என்றும் -தறி யாரந்த களிறு -பெரிய திரு -2-10-6- என்றும் சொல்லுகிறபடியே
கண்டவர்களுடைய நயன சாபல்யம் பசேளிமாமாம் படி
-மத்த மாதங்க கல்பனாம்படி பிசகி நடந்தான் –
முன்னலோர் வெள்ளிப் பெருமலைக்குட்டன் மொடுமொடு விரைந்தோட*
பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவது போல்*
பன்னியுலகம் பரவியோவாப் புகழ்ப்பலதேவனென்னும்*
தன் நம்பியோடப்பின் கூடச் செல்வான் தளர்நடைநடவானோ.
2- ஆகத -வருகிற போதே மதுரா விலாஸி நீ சார்த்தத்துக்குத் தன் வடிவழகை தூளிதாநம் பண்ணிக் கொண்டு வந்தான்
3- ஆகத -தன் நடை அழகாலே சம்சார பதவீம் வ்ரஜன்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-19- என்கிற ஜங்கா லதையைக் குலைத்துக் கொண்டு வந்தான்-
காளை புகுதக் கனாக் கண்டேன் -மேனாணிப்பு தோற்ற வருவான்-வானுளோர் அறியலாகாதவன் ஸகல மனுஷ நயன தாங்கனாய் -நடந்து
வடவரை நின்றும் வந்தின்று கண புரம்
இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்
மடவரல் மாதர் என் பேதை யிவர்க்கிவள்
கடவதென் கண் துயில் இன்று இவர் கொள்ளவே -8-2-6-அனுகாரத்தாலே அருளும் பாசுரம்
இவருக்கு இதுவும் அர்ச்சையிலே நடக்குமே
வடக்குத் திருமலையில் இருந்து கீழை வீடுக்கு வந்து நித்ய சந்நிதி பண்ணிய சௌரி ராஜ பெருமாள் நானே-மிக சிறுமி -அழகி -இவளை இவன் இப்பாடு படுத்துவது தகுமோ -திருத் தாயார் அநு பாஷித்து பின் அருளுகிறாள்
மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3–
மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3–
——————-
1- மதுராம் புரீம் -மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரி ஸூபா –என்கிறபடியே அவன் தன்னைப் போலே தேசமும் அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் பண்ணிக் கொடுக்கிறது மண் வாசியிலே தோற்றும் இறே-
அவனுக்கும் -அடியார் உடன் கூடி இருத்தல் இஷ்ட பிராப்தி -அதற்காகவே வந்தான் -ப்ரயோஜனாந்த பரர்கள் போல் அன்றியே ஆயர் வடமதுரை சிறுமியர்
2- மதுரா புரீம் -தேவா நாம் பூரயோத்யா என்கிற தேசம் போலே துஷ்ப்ராயையாய் இருக்கை அன்றிக்கே
சத்ரு மித்ர உதாசீனரான கோடி த்ரயத்துக்கும் ஆச்ரயமான தேசம் இறே-அயோத்யை -முற்றுகை இடவோ தகர்க்கவோ முடியாதே
அங்கு இல்லாமல் இங்கு வந்தது சகலருக்கும் கலந்து பரிமாறலாம் படி அன்றோ இருக்கும்
3- மதுராம் புரீம் ஆகாதோ ஹி- ஹி சப்தம் பிரசித்தியிலேயாய்-மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரைப் பிறந்தான் -திருவாய் -9-1-10-என்கிற பிரசித்தியைக் காட்டுகிறது -ஏவ காரமே இங்கு ஹி
4-ஷீரார்ணவ நிகேதந நாக பர்யங்கமுத்ஸ் ருஜ்ய மதுராம் புரீம் -ஆகாதோ ஹி -ஜட
(ஜல) பிரகிருதி சம்சர்க்கத்தை விட்ட பின்பு நாகரிகமான ஆகாரம் நடையிலே தோற்றுகிறது இறே
5-நாராயண மதுராம் புரீம் -ஆகாதோ ஹி -சர்வ காரண பூதனாய் தான் கார்ய ஏக தேசத்திலே ஒதுங்கி வந்தான் –
ஆயர் குலத்தினுள் தோன்றும் அணி விளக்கு-வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு
விட்டில் பூச்சுக்கள் போல் விழுந்து மாள்வார்கள்-மிச்சம் வைக்காமல் முடிக்கும் ஏற்றம் கண்ணனுக்கே
நெடுமால் -தேவகிப்பிராட்டிக்கு அனைத்து பால்ய லீலைகளையும் காட்டி அருளி –
6- ஸ்ரீ மான் மதுராம் புரீம் -ஆகாதோ ஹி -ஏக தார வ்ரதனானவன் -ஸூப்ரபாதா ச ரஜநீ மதுரா வாச யோஷிதாம் பச்யந்த யச்யுத வக்த்ராப்சம் யாஸாம் நேத்ராளி பங்க்த்ய-ஸ்ரீ விஷ்ணு புராணாம் 5-18-24-என்கிறபடியே
படை வீடேறிப் பத்ன்யந்தர பரிக்ரஹம் பண்ணுவாரைப் போலே வந்தான் –-16108 பெண்களுக்கு நல்ல விடியல் ஆவதற்காகவே-கண்ணன் திருக் கண் தாமரையில் மதுவைப் பருகும் வண்டுகள் போல் மதுரைப்பெண்கள்-அயோத்தியார் கோன் பெரும் தேவி கேட்டருளாய் -ஏக தாரா விரதன் அன்றோ -பெருமாளுடைய பெருமைக்குத் தக்க -அவனுக்கு பெருமை அருளும் தேவி -அங்கு
பிரசாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ் -தன்யோஹம் அர்ச்சயிஷ்யாம் ஈத்யாஹா மால்ய உபஜீவன-ஆகதவ் உபாகதவ் -கேஹம் உபாகதவ் –மம கேஹம் உபாகதவ் -என்று பிரித்து ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து இந்த ஸ்லோகம் படியே திருப்பாற்கடலில் சயனித்து இங்கு வந்தான் அன்றோ
கூனி தனது ப்ரேமமே சந்தனமாகக் கொடுக்கவேல் விழி கயல் விழி அடையாளங்கள் சந்தனம் மல்கிய திருமார்பில் அழியாமல் மல்லரைப் பொருத சதுரன் அன்றோ
7-அங்கன் அன்றியே -அதிசயித லஷ்மி யுடையவன் ஒரு படை வீடு சாபேஷனாய் வந்தான் –ஸ்ரீ மான் -பெண்ணமுது வந்து திருமார்பில் அமர்ந்த பின்பு குடியும் குடுத்தனமும் வேண்டி இங்கு வந்தான்
8-நாக பர்யங்கமுத்ஸ் ருஜ்ய மதுராம் புரீம் -ஆகாதோ ஹி –
புஜங்க சய்யையை விட்டவன் புஜங்க சமர்த்தம் உள்ள -காமினிகள் நெருக்கம் -உள்ள இடத்திலே வந்தான் –
திருமேனி அழகை தூளி தர்சனம் பண்ணி -தந்தை காலில் பெரு விலங்கு அறும் படி ஸம்ஸாரம் தளை அறுக்க தான் நடந்து
—————
ஆக இந்த ஸ்லோகத்தாலே-
வாக்ய த்வயம் போலே உபாயத்வேநவும் உபேயத்வநவும் ஆஸ்ரயணீயனாய்
ஒரு தேச விசேஷத்திலே செல்ல வேண்டாத படி தங்கு பயணமாக வந்து
அங்கு செல்ல மாட்டாத பங்குகளுக்கு -நொண்டிகளுக்கு
கங்கா பதநம் போலே ஆ ஸ்ரீ தர் இருந்த தேசத்திலே தான் வந்து
தன் வடிவு அழகாலும்
நடை அழகாலும்
அஜ்ஞரானவர்களையும் வசீகரித்துச் சரிதார்த்தராம்படி பண்ணிற்று ஆயிற்று –
அங்கன் அன்றியே
பண்டு இவரைக் கண்டு அறிவது யெவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால் -பெரிய திரு -8-1-9 என்று ஏதச் சப்தார்த்தையும்
புண்டரீக மலர் அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே -பெருமாள் திருமொழி -8-2-என்றும்
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே -பெருமாள் திரு -8-10- என்றும் உத்பாதகத்வத்தாலே நாராயண சப்தார்த்தையும் –
அணி யுருவில் திருமாலை -பெரிய திருமொழி -8-9-2- என்று ஸ்ரீ மச் சப்தார்த்தையும்
கடல் கிடந்த பெருமானை -பெரிய திரு மொழி-8-9-2- என்று ஷீரார்ணவ நிகேதந சப்தார்த்தையும்
வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது -பெரிய திருமொழி -8-2-6- என்று ஆகத சப்தார்த்தையும்
கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரம் -பெரிய திருமொழி -8-10-5- என்றும்
கற்றார் சேர் கண்ணபுரம் -பெரிய திருமொழி -8-10-5- என்றும்
உண்ணும் நாள் இல்லை உறக்கமும்-தான் இல்லை
பெண்மையும் சால நிறைந்திலள் பேதை-தான்
கண்ணன் ஊர் கண்ணபுரம் தொழும் கார்க் கடல்
வண்ணர்மேல் எண்ணம் இவட்கு இது என்கொலோ?-8-2-4-
கண்ணனூர் கண்ணபுரம் தொழும் காரிகை
பெண்மை என் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள்
வெண்ணெய் உண்டு ஆப்புண்டு வண்ணம் விளம்பினால்
வண்ணமும் பொன்னிறம் ஆவது ஒழியுமே –8-2-5-
இதுவே தாரகமாய் வந்தான் –
கண்ணன் தாரகம் போக்யம் போஷகம் நம்மாழ்வார்
இவரோ கண்ணனூர் தாயகம் போக்யம் போஷகம் –
இதனால் தான் —சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே –4-9-6- என்பர்
பிண்டியார் மண்டை ஏந்தி* பிறர்மனை திரிதந்துஉண்ணும்-
உண்டியான்* சாபம் தீர்த்த ஒருவன்ஊர்,* உலகம் ஏத்தும்-
கண்டியூர் அரங்கம் மெய்யம்* கச்சிபேர் மல்லை என்று-
மண்டினார்,* உய்யல் அல்லால்* மற்றையார்க்கு உய்யல்ஆமே?-–
தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய்
எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்கே
எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே -4-9-5-அர்ச்சை திவ்ய தேசங்களிலேயே -மண்டி இவர் ஒருவரே 47 திவ்ய தேசங்களுக்கு மங்களா சாசனம்-இவரைப் பாடுவித்த முக்கோட்டை திருக்கண்ணபுரம்
அங்கு போல் சில காலம் இருந்து தன்னுடை சோதிக்கு எழுந்து அருளியது போல் அல்லவே 64 சதுர் யுகமாக இங்கு அன்றோ நித்ய வாஸம்
கற்றார் சேரும் கண்ணபுரம் கம்சாதிகள் அல்லவே
தொன்மையூர் திருவரங்கம் -இது புதிதாக வந்து விரும்பி நித்ய வாஸம் செய்து அருளிகிறான்
கண்ணன் ஊர் கண்ணபுரம்–மதுரா புரீ சப்தார்த்தையும்
பிரதிபாதிக்கையாலே ஆபாத சூடம் கிருஷ்ண புரீ நாயகனான சௌரி ராஜ வைபாவத்தையே பிரதிபாதித்த தாயிற்று –
————————————————————————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .-ஸ்ரீ ருக்மிணி சத்ய பாமா சமேத கிருஷ்ணன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கண்ணபுர நாயகி சமேத ஸ்ரீ சௌரி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply