ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –அஹம் வேத்மி மஹாத்மானம்-பால – 19-14–

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம ஸூ லப ஸ்ரீ தரஸ் சதா-

பால காண்டம் 19-14
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்ரமம்
வசிஷ்டோபி மகா தேஜோ யே சேமே தபஸி ஸ்திதா தே அபி விதந்தி-

நானே ஸ்ரீ ராமனை மகாத்மாவாகவும் சத்ய பராக்ரமனாகவும் அறிவேன்
மிகுந்த தேஜஸ்சை உடைய வசிஷ்ட மஹ ரிஷியும் அறிவார்
இங்கே இருக்கிறவர்களாய் -இமே
தபஸ் சிலே நிலை நிற்கிறவர்களான யாவர் சில மக ரிஷிகள் உண்டோ அவர்களும் அறிவார்கள்-

ந யுத்த யோக்யதாம் அஸ்ய பச்சாமி -அவர் அயோக்யதையை சொல்லுகைக்கு நீ ஒருவனுமே உள்ளாய்
இவர் யோக்யதையை அறிக்கைக்கு நாங்கள் இத்தனை பேரும் உண்டு என்கிறான்-

1-அஹம் வேத்மி –
ந சஷூஷா க்ருஹ்யதே -முண்டோக்யம் 3-1-8-
மனஸா து விசுத்தே ந -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -273-2-
என்றேனும் கட் கண்ணால்   காணாத அவ்வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால்  காணும் உணர்ந்து -பெரிய திருவந்தாதி -28
நான் அறியும் அத்தனை போக்கி
பாஹ்ய சஷூஸ்சாலே காண்கிற உனக்குத் தெரியாது காண்-

2-அஹம் வேத்மி
ஜ்ஞான வ்ருத்தாமா ராஜன் பகவ பர்யுபாசிதா –
பல ஆச்சார்யர்களை சேவித்த நான் அறியும் அத்தனை போக்கி
நாட்டாராலே சேவிக்கப் படுகிற உனக்குத் தெரியுமோ –

3-அஹம் வேத்மி –
குச தர்ப்ப தரா -புல்லும் கையுமான நான் அறியும் அத்தனை போக்கி
வில்லும் கையுமான நீ அறியாய்-

4-அஹம் வேத்மி –
தலையும் சடையுமான நான் அறியும் அத்தனை போக்கி
தலையும் முடியுமான நீ அறியாய்-

5-அஹம் வேத்மி –
சாத்விக பிரக்ருதியான நான் அறியும் அத்தனை போக்கி
ராஜச பிரக்ருதியான நீ அறியாய்-

6-அஹம் வேத்மி
நீச சய்யா ஆசனம் சாஸ்ய நிதயம் ச்யாத குரு சன்னிதௌ-என்று
ஆசனத்தின் கீழே இருந்த எனக்குத் தெரியும் அத்தனை போக்கி
சிம்ஹாசனே பிரபு -ஆசனத்தின் மேலே இருக்கிற உனக்குத் தெரியுமோ-

7-அஹம் வேத்மி
யோக க்ரமம் அறியும் நான் அறியுமத்தை போக
க்ரமம் அறியும் நீ அறிவுதியோ-

8-அஹம் வேத்மி
மோஷ காமேஷ்டி பண்ணின நான் அறியும் அத்தனை போக்கி
புத்திர காமேஷ்டி பன்னன நீ அறிவுதியோ-

9–அஹம் வேத்மி
தர்ம மோஷ பரனான நான் அறியுமத்தை
அர்த்த காம பரனான உன்னால்  அறியப் போமோ –

நானேயோ அறியாதேன் –
நேதி  நேதி-என்றும்
க இத்தா வேட யத்ரச-என்றும்
பிரமாணங்களான வேதங்கள் தான் அறிந்ததோ –

ப்ரஹ்ம ருத்ர இந்திர பூதானாம் மநாம்ப்ய கோசரம் -என்றும்
நான் முகனும் செஞ்சடையான் என்று இவர்கள் எம்பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் -திருவாய் -8-3-9-என்றும்
பிரமாதாக்களான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தான் நிலமோ

பிரமாதக்கள் அளவேயோ –
சோ அங்க வேதி யதி வா ந வேத -என்றும்
தனக்கும் தன் தன்மை அறிவரியானை -திருவாய் -8-4-6-என்றும்
பிரமேய பூதனானவன் தனக்கும் தெரியுமோ

இத்தனை பேர் அறியார்களே காண் என்ன

10-அஹம் வேத்மி
யஸ் சர்வஜ்ஞஸ்  சர்வவித
ஸ்வா பாவிகீ ஜ்ஞான பலக்ரியா ச -என்கிற பிரமாணங்களை விச்வசித்து சர்வஜ்ஞம் கொண்டாடி
ஓர் ஆச்சார்யன் பக்கல் குனிந்து கேளாமையாலே அவனுக்கும் தெரியாதே-

ததாமி புத்தியோகம் -ஸ்ரீ கீதை -10-10-என்றும்
மயர்வற   மதிநலம் அருளினான் -என்றும்
சம்ப்ரதாய சித்த ஜ்ஞானம் உடையவனுக்கு தெரியும் இறே.

ஆச்சார்யன் இடத்தில் கேளாத அக்குறை -அவ்விழவு தீருகைக்கு இறே
பஹூ ஸ்ருதானாம் வ்ருத்தானாம் ப்ராஹ்மணா நாமுபாசிதா -அயோத்யா -2-33-என்று
அறிவுடையார் கால் கடையிலே துவண்டு திரிந்தது

11-அஹம் வேத்மி-
தமேதம் வேத அநுவசநேந ப்ராஹ்மணா  விவிதி ஷந்தி யஜ்ஞேந தானேந  தபஸா அநாசகேந -ப்ரு -6-4-22-என்றும்
ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசிதவ்ய -ப்ரு-6-5-6-என்றும்
அவனை அறிக்கைக்கு நான் பட்ட வருத்தம் சொல்லப் போமோ –

நீ அறிந்த பிரகாரம் என் என்னில்-

1-மஹாத்மானம் -அறப் பெரியவன் -என்று அறிவேன்
தேஜசாம ஹி ந வய சமீஷ்யதே -ரகுவம்சம் -11-1-என்கிறபடியே
வடிவு சிறுத்து இருந்ததே யாகிலும் பரத்வம் உறைத்து இருக்கும் காண்

2-மஹாத்மானாம் -ஆத்மா ஜீவே -தருதௌ (தைர்யத்திலும் )-
தே ஹே -ஸ்வபாவே-பரமாத்மிநி -யத்னே-ஆகாசக்னௌ-சூர்யன் அக்னி -மநோ-புத்தி -வாதே -காற்று -என்று
அநேகார்த்த வாசி இறே ஆத்ம சப்தம்
அதில் முற்பட ஜீவ வாசியான போது
மஹாத்மானம் -என்று -யஸ் யாத்மா சரீரம் -ப்ரு -5-7-26-என்றும்
ய ஆத்ம நி திஷ்டன் நாத மநோ அந்தர -ப்ரு -5-7-26-என்றும்
சர்வ ஜீவாத்மாக்களும் சரீரமாம் படி சர்வாத்ம சரீரியாய் இருப்பான் என்னும் இடம் அறிவன்
அன்றியிலே

3- மஹாத்மானம் -என்று திருதியிலே   யாய் -தைர்யத்தில் –
ஆபதயபி ஸ்வ கார்யேஷூ கர்த்த வ்யத்வஸ்திதிர் தருதி-என்று
தாடகா தாடகேய பரமுகரான பிரபல விரோதி பரம்பரைகள் உண்டே யாகிலும்
யஜ்ஞ  விக்ன கரம் ஹந்யாம்-என்று நாம் ஏறிட்டுக் கொண்ட கார்யம் தலைக் கட்டலாம் படியான
நிலையை யுடையராய்க் காண் இருப்பது என்றுமாம்
அன்றியிலே

4-மகாத்மானம் -தேக வாசியாய்
நித்யம் நித்யாக்ருதிதரம் -என்றும்
ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர் மாமஸ மேதோ அஸ்தி சாம்பவா -என்றும்
மாசூணாச் சுடருடம்பாய் -திருவாய் -3-1-8-என்றும் சொல்லுகிறபடியே
சத்ருக்களால் அழிக்க ஒண்ணாத படி
நித்ய நிரவதய நிரதிசய ஔஜ்வல்ய விக்ரஹராய் காண் இருப்பது -என்றுமாம்
அன்றியே

5- மஹாத்மானாம் -ஸ்வபாப வாசியாய்
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் யேதத் வ்ரதம் மம-யுத்த-18-34-என்றும்
பாஸூ பால்யம் ஹி வ்ருத்தி-என்றும்
ஆபன்ன ஜன ரஷணத்தை ஸ்வபாவமாக உடையராய்க் காண் இருப்பது -என்றுமாம் –
அன்றியிலே

6- மஹாத்மானம் -என்று பரமாத்மா வாசியாய்
பரோமா அஸ்மாதிதி பரம -என்றாய்
யஸ்மாத் பரம நா பரமஸ்தி கிஞ்சித் -என்றும்
ந தத்சமச்சாப் யதி கச்ச த்ருச்யதே -என்றும்
ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா -திருவாய் -2-3-2-என்றும் சொல்லுகிறபடியே
தம்மை ஒழிந்த சகல தேவதைகளுக்கும் மேலாய்
அவை தனக்கும் அந்தர்யாமியாய் இருக்கும் படி அறிவன் -என்றுமாம்
அன்றியிலே

7- மஹாத்மானம் -என்று யத்ன வாசியாய் –
அதாவது பரயத்னமாய்
பிரயத்ன ஸ்வாத்ம தர்ம ச்யாதுத்சாஹோ பாவநா ச ஸ-என்றும்
விநாசாய ஸ துஷ்க்ருதாம் சம்பவாமி -கீதை -4-8-என்றும்
சொல்லுகிறபடியே
துஷ்க்ருத விநாசத்துககாக அவர் உத்சாஹித்துப் போந்த படி அறிவேன் -என்றுமாம்
அன்றியிலே

8- மஹாத்மானாம் -என்று
அர்க்க வாசியாய் -சூர்யன் –
ராம திவாகர சத்ருர ஷோமயம்  தோயமுப சோஷம் ந்யிஷ்யதி -என்றபடி
ஆயுத நிரபேஷமாய் தம்முடைய பிரதாபத்தாலே சத்ரு ரஷஸ்ஸூக்களாகிற  நீரை ஊற்றகப் படச் சுவரும்படி
பண்ண வல்லர்-என்னும் இடம் அறிவன் என்றுமாம்
அன்றியிலே

9-மஹாத்மானம் -என்று அக்னியாய்
அபித பாவ கோபமம-அயோத்-99-26-என்றும்
நிர்தஹே தபி காகுத்ச்த க்ருததஸ் தீவ்ரேண சஷூஷா-என்றும்
அனலுருவில்  திகழும் சோதி தன்னுருவாய் -திரு நெடும் -1-என்றும் சொல்லுகிறபடியே
சத்ரு சரீரங்களை யடையச் சுட்டுக் கூறாய் நீறாய்ப் போம்படி பண்ண வல்லர் என்னும் இடம் அறிவன் என்றாகவுமாம் –
அன்றியிலே

10-மஹாத்மானம் -என்று மதி வாசியாய் –
சர்வ சாஸ்த்ரார்த்த தத்வஜ்ஞ-பால -1-15-
புத்த்யாஹயஷ்டாங்கயா யுக்த-சுந்த -116-27-என்றும் சொல்லுகிறபடியே
இருந்த இடத்தில் இருந்து சத்ருக்கள் முடியும்படியான விரகுகள் வகுக்க வல்லர் என்னும் இடம் அறிவன் என்றுமாம்
அன்றியிலே

11-மஹாத்மானம் என்று வாத வாசியாய்
தஸ்மை வாதாத்மனே நம-என்றும்
காலாய் தீயாய் -என்றும் சொல்லுகிறபடியே
மகா வாதஹதமான தூல ராசி போலே சத்ருக்களைப் புக்கவிடம் அறியாமல் ஓட்டுபவர் என்று அறிவன் என்றுமாம் –
அன்றியிலே

12-மஹாத்மானம் -ம்ருத சஞ்சீவனம் ஹி ராம வ்ருத்தாந்தம் -என்று
சர்வ பிராணி பிராணன் ஹேதுவான காற்று போலே உஜ்ஜீவனகாரராக வல்லர் என்னும் இடம் அறிவன் என்றுமாம்-

வேத்தி வேதயதீதி வேத -என்று
தானும் அறிந்து பிறரை யும் அறிவிக்கக் கடவதான வேதம் அகப்பட
வேதாஹா மேதம் புருஷம் -என்று நான் அறிவேன் என்று சொல்லி -அறிந்தபடி என் என்ன

அறிந்தன வேத வரும் பொருள் நூல்கள் அறிந்தன கொள்க அரும் பொருளாதல் -திருவாய் -9-3-3-என்கிறபடியே
மஹாந்தம் -என்று அபரிச்சின்னன் என்று சொல்லி விட்டத்து இத்தனை இறே
யஸ்யா  மதம் தஸ்ய மதம் யஸ்ய ந வேத ஸ -என்று அவ்வஸ்துவை அறிக்கையாவது
அது அபரிச்சின்னம் என்று உள்ளபடி அறிகை இறே

வேதாஹ மேதம் -என்ற வேத வாக்கியம் தன்னை இறே
அஹம் வேத்மி -என்று உப ப்ரும்ஹிக்கிறது –

அங்குற்றை வேத -என்கிறத்தை இறே
இங்கு வேத்மி -என்கிறது

ஏதம் -என்று சௌலப்ய ஸூ சகமான ஏதச் சப்தார்த்தை இறே
இங்கு ராமம் என்று அவதார நிர்த்தேசம் பண்ணுகிறது

அங்குற்றை புருஷ சப்தத்தாலே நிர்த்திஷ்டமான சௌர்ய வீர்யாதிகளை இறே
இங்கு சத்ய பராக்கிரமம் -என்கிறது –

அங்கு மஹாந்தம் -என்கிறத்தை இறே
இங்கு மஹாத்மானம் -என்கிறது

ஆக
வேத புருஷனோடு
வைதிக புருஷர்களோடு வாசி யற
இவ்விஷயத்தில் பாசுரம் ஒன்றாய் இறே இருப்பது

இப்படி மஹாத்மானம் என்று பேசுகிற வஸ்து தான்
தேசாந்தரத்த்லேயாய் எட்ட ஒண்ணாதோ என்னில்

ராமம் –
பிதரம் ரோசயாமாச -பால -16-8-என்று உன்னை இசைவித்து ராம ரூபேண வந்து
பிறந்த இவர் அப்பர வஸ்து காண் -என்கிறார்

ராமம் –
பர வஸ்து என்று நீயும் நானும் உட்கூசுதல் நம்மை அருவருத்து அவர் தாம் அகல நிற்றல் செய்யாதே
எனக்கு கையாளாக அழைக்கலாம் படியாய் தம்மை அமைத்து
தாழ நிற்கையாலே தெரிகிறது இல்லை காண் –

ராமம் மஹாத்மானம் –
ஸ ஸ்ரேயான் பவது ஜாயமான -என்று
அவர் தம்மைத் தாழ விட்டு பிறந்த பின்பு காண் மஹத்வம் ஒப்பமிட்டது –

நீ தானே ராமம் -என்று சொன்னாய் இன்னம் வடிவில் சுணை அழிந்தது இல்லை –
ஸ்ரமத்தால் உடல் இறுகிற்றில்லை
இவர் பராக்ரமத்துக்கு சக்தரோ -என்ன
1-சத்ய பராக்ரமம் –
இவர் வடிவு போலே வேண்டின போது கொள்ளவும் தவிரவும் படி அல்ல காண்  இவர் குணங்கள் இருப்பது
அவை நித்யமாய்க் காண் இருப்பது –

2- சத்ய பராக்கிரமம் –
சதைக ரூப ரூபாயா -என்றும்
த இமே சத்ய காமா -என்றும்
ஏதாமச்ச சத்யான் காமான் -என்றும் சொல்லுகிறபடியே
விக்ரஹம் இச்சமாய் குணங்கள் நித்தியமாய் காண் இருப்பது

இது தன்னை பராசர மகரிஷியும் –
இச்சாக்ருஹீதாபி மதோரு தேக -என்று விக்ரஹ பரிக்ரகம் இச்சம் என்னும் இடத்தைச் சொல்லி
தேஜோ பலைச்வர்ய மகாவபோத ஸூ வீர்ய சக்த்யாதி குணைக ராசி -என்று
குணங்கள் ஸ்வாபாவிகங்கள் என்னும் இடத்தைச் சொன்னான் இறே

3- சத்ய பராக்கிரமம் –
அவ்யவஸ்தௌ ஹி த்ருச்யதே யுத்தே ஜய பராஜ யௌ-என்று நாட்டாரைப் போலே
இவருடைய ஆண் பிள்ளைத் தனம் அவ்யச்தம்-அயோத் -2-37-என்றும்
அபி யாதா ப்ரஹர்த்தா ஸ -அயோத்யா -1-29-என்றும்
சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே -திருச்சந்த -56-என்றும் சொல்லுகிறபடியே
இவர் எழுந்து இருந்தால் சத்ருக்களை ஆக்கிரமித்துத் தலை அழித்து அல்லது மீளார் காண்

தஸ்மின் த்ருஷ்டே பராவரே -என்றும்
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வக் குழாங்கள் கை தொழக் கிடந்த -திருவாசிரியம் -1- என்றும்
தம் தாமைப் பரராக நினைத்து இருக்கிற ப்ரஹ்ம ருத்ராதிகளை அகப்படக்   கீழ்ப்படுத்தி
அவ் வருகாய் இருக்கிற வஸ்து ஷூத்ரரான சத்ருக்களை விடுமோ

4-சத்ய பராக்கிரமம்
சத்யரான பரரை ஆக்கிரமிப்பார் என்றாகவுமாம்
அதாவது
பிரகிருதி சம்பந்த நிபந்தனமாக ப்ராதி கூல்யம் பண்ணினால் அவர்கள் மீண்டும் அநு கூலிப்பார்களோ என்று
யதி வா ராவண ஸ்வயம் -யுத்த -18-34-என்றும்
கச்சா நுஜா நாமி -என்றும் யுத்த -59-143- என்றும்
வாளுகிர்ச் சிங்க வுருவாய் உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வகலம் பிளந்திட்ட -பெரியாழ்வார் -1-6-9- என்றும்
ஒரு நிலை நின்று முட்ட ப்ராதி கூல்யத்திலே நிலை நின்றார்கள் ஆகில் அவர்களை முடிப்பார் என்கிறது –

5-ராமம் சத்ய பராக்கிரமம்
ஆக்ரமிக்கும் இடத்தில் த்ரிவிக்ரமனைப் போலே சொல்லுவது ஓன்று செய்வது ஓன்று அன்றியிலே
ஏக ரூபமாய்க் காண் இருப்பது

6-ராமம் சத்ய பராக்கிரமம்
பிறரை அழிக்கும் இடத்தில் ஆயுதம் எடுத்தல் பராக்ரமித்தல் செய்ய வேணுமோ
ஹதான் யே கேன ராமேண்-ஆரன் -26-36-என்றும்
ராம பாணாபி ஹதோ ப்ருசார்த்தச்சால சாபஞ்ச முமோச வீர -யுத்த-59-139-என்றும்
ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தப -சுந்த -38-25-என்றும் சொல்லுகிறபடியே
அழகும் எழிலுமே பரிகரமாக இழியாரோ –

ஏதேனுமாகக் கொடு போகத் தேடுகிற படியாலே போரப் பொலியச் சொல்லுகிற
இந்த வாக்கியம் விஸ்வநீயமோ-என்ன
1-வசிஷ்டோபி –
சர்வஜ்ஞனாய் பரம ரிஷியான ஸ்ரீ வசிஷ்ட பகவானும் அறியும்

2-வசிஷ்ட –
என் கார்யத்துக்கு வந்த நான்  ஒழிய
ச தேஹம் பிதுராசார்யா -அயோத் -111-4-என்று
உன் கார்யத்துக்குக் கடவனாய் உனக்கு ஆப்தனான வசிஷ்ட பகவானைப் கேட்க மாட்டாயோ –

3-வசிஷ்ட –
வஸ் நஸ்ஸிலே சப்தமியாய் -குல குருர் பகவான் வசிஷ்ட -என்கிறபடியே
எங்கள் பக்கலிலே சந்நிஹிதனாய் உங்கள் ஹிதத்திலே நிலை நின்றவன் அன்றோ –

4-வசிஷ்ட –
இதம் வோ யாஜ்யா நாமுதிதம் யத் குலமபூத்
யதிஷ்டம் வா குர்வன்ன க்ருத சகர பூர்த்தமுததிம்
அசௌ தி பூர்வேஷாம் ஸூ சரிதா பதாகா யதமர
ஸ்ரவந்தீ க்ருத்ஸ் நோய்ம த்ரிபுவன குரோஸ் தஸ்ய விபவ -என்று முராரியும் சொன்னான் இறே
நீ தானும் இஷ்வாகு குல சாத்தான் ஆகையாலே உனக்கும் ஒவ்வாதோ அவற்றில் அந்தர்பாவம் என்ன

5-வசிஷ்டோபி வேத்தி
அவரும் அறிவார் –
அம்மர்யாதை குலைந்து இவன் புத்ராதிகளைக் கொள்ளுவது இவன் ஸூரபியைப் பறிப்பது -இவனோடு யுத்தம் பண்ணுவது
இவனாலே பரிபூதனாவதாய் -இப்படிக்கு விரோதம் பிறந்த படியால் எனக்காகப் பொய் சொல்லான்
அப்படிக்கொத்த இவனையும் கேட்டுக் கொள்

6-அபி சப்தம் -நானே அல்ல -இவனும் அறியும் என்று சமுச்சயமாக்கவுமாம்

7-அன்றியிலே -அபி -சப்தம் விரோதம் த்யோதயாதி
எனக்கு விருத்தனான இவனும் அறியும் என்றாகவுமாம்-

இவனுக்கு ஏற்றம் ஏது என்னில்
1-மகா தேஜா
சரஸ்வதி வல்லபனான ப்ரஹ்ம புத்ரனுமாய்
ஸ்வ யோக சித்த ஜ்ஞானனுமாகையால் வந்த மதிப்பை யுடையவன்

2- மகா தேஜா –
லோக நாதனான புருஷோத்தமன் அகப்படத் தன் காலிலே குனியும்படியான ஏற்றம் யுடையவன்

3-மகா தேஜோ –
கௌசிகோ யச சாம நிதி -என்று நாட்டில் புகழுக்கு எல்லையான நான் அகப்பட
வசிஷ்டோ மாமேவம் வதது-என்றும்
சத்யம் சகாரா ப்ரஹ்ம ரிஷி ரேவ மஸ்த்விதி சாப்ரவீத் -பால -65-25-என்றும்
அவன் வாயாலே ப்ரஹ்ம ரிஷி பட்டமும் பரியட்டமும் பெற வேண்டும்படி பெரு மதிப்பனானவன்
இப்படி உமக்கு ஏறப் பெரியராகில்
தேஷாம தேஜோ விசேஷேண்  பிரத்யவாயோ ந வித்யதே   -ஆபஸ்தம்பதர்-2-13-8-என்று
உமக்குப் பொய் சொன்னாலும் பொறுக்கும் படியாய் இருந்ததே என்ன

4-மகா தேஜோ
சத்ய தர்ம பராயண -அயோத் -2-29-என்றும்
சத்யம் வத தர்மம் சர-தை- சீஷா -11- என்றும்
தானும் சத்தியத்தை ஹிதமாக அனுஷ்டித்து பிறரையும் அகப்பட அனுஷ்டிப்பித்து இப்படி மகா தேஜச்வியாய்
பெரும் தவத்தனாய் இருக்குமவன் தேஜோ ஹானி பிறக்கும் படி அசத்தியம் சொல்லுமோ

5- மகா தேஜா
திக்பலம் ஷத்ரிய பலம் ப்ரஹ்ம தேஜோ பலம் பலம் -பால -56-23–என்னும்படி
நிரவதிக ப்ரஹ்ம தேஜச்வியாய் இருக்கிறவன் –

அப்படிப் பெரியவராய் இருந்தாலும்
யத் பிராமணச் சாப்ராஹ்மணச்ச பிரஸ்நமே  யாதாம் பிராமணா யாதி ப்ரூயாத் -என்றும்
ப்ராஹ்மானார்த்தே கவார்த்தே வா சத்ய பிராணான் பரித்யஜேத்-மனு -11-79- என்றும்
நானும் நீயுமானால் தன்னை அழிய மாறியும் ப்ரஹ்ம ரிஷியான உனக்காக வார்த்தை சொல்லும்
அத்தனை போக்கி ஷத்ரியனான எனக்காகச் சொல்லுமோ என்ன
1-யே சேமே தபஸி ஸ்திதா -தவத்தில் நிலை நிற்கும் இவர்களும் அறிவார்கள் –
படை வீட்டார் தம் பலம் மதித்து முகத்துக்குத் தக்க வார்த்தை சொல்லுகிற எங்களை விட்டுச்
சருகிலை தின்னிகளான இவர்களைக் கேட்க மாட்டாயோ -என்றுமாம்

2- இமே தபஸி ஸ்திதா
ஊன ஷோடச வர்ஷ -பா -20-2- என்று அவர் பருவம் நிரம்பாமையை இட்டு அவர் யோக்யதைக்கு நீ தட்டுளப்பட வேண்டா
தஸ்ய தீரா பரிஜா நந்தி யோ நிம –புருஷ ஸூக்தம் -என்று அவனுடைய ஜன்ம ரஹச்ய ஜ்ஞானமுடைய இவர்களைக் கேளாய்

3-இமே -இவர்கள் -புலச்த்யன் அகஸ்த்யன் -பராசரன் -பராசர புத்ரனான வியாசன் -என்றால் போலே
நான் இவர்களுக்கு சில வைலஷண்யம் ஆபாதிக்க இருந்து கேட்க வேணுமோ
நரை  தலையும் -முசியும் மோவாயும் -ஒட்டின கதுப்பும் -திரங்கின தோலும் -உலர்ந்த வடிவும் -எண்ணுகிற விரலும் –
சபிக்கிற வாயும் -வடிகிற கண்ணீரும்-ஆறாத பகவத் அனுசந்தானமும்
மயிர் எறிந்த உடம்புமாயிருக்கிற இருப்பிலே தெரியாதோ
ஆஹ்லாத சீத நேத்ராம்பு புல கீக்ருத காத்ரவான் சதா பர குணாவிஷ்டோ த்ரஷ்டவ்யஸ்  சர்வ தேஹிபி -ஸ்ரீ விஷ்ணு தத்வம் –
என்னும்படி இருக்கிறவர்கள் அன்றோ –

4- இமே -இவர்கள் இப்படி இதம் ச்ப்தத்தாலே சொல்லி விரலிட்டுக் காட்டும் அத்தனை ஒழிய
வேறு பாசுரம் இட்டு வாங் மனஸ்ஸூக்களுக்கு விஷயமோ –

5-இமே -சிறியன் என்று என் இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய் சிறுமையின் வார்த்தையை
மாவலி யிடைச் சென்று கேள் -பெரியாழ்வார் -1-4-8-என்று
தூரச்தனாய் இருப்பான் ஒருவன் பக்கலிலே கேட்க வேண்டாத படி இங்கே சந்நிஹிதராகப் பெற்றோம் இறே

6-இமே -மகா பலியைப் போலே ஆசூர பிரக்ருதியாகை அன்றிக்கே பரம சத்வ நிஷ்டரான ரிஷிகளாகப் பெற்றோம் இறே

7-இமே -என்னைப் போலே ஸ்ரீ வசிஷ்ட பகவானைப் போலே ஒருவராகை அன்றிக்கே
பூயாசாம் ஸ்யாத் பலீயஸ்த்வம்-என்று இவர்கள் பலரானதுவும் உனக்கு விஸ்வாச ஹேது விறே-

இவர்கள் பலரானால் பிரயோஜனம் என்
பொய் சொல்லாத படியான தார்மிகராக வேணுமே என்னில்
1-தபஸி ஸ்திதா –
தபோ தானம் தபஸ் சத்யம் தபோ தர்ம ப்ரதிஷ்டித -என்கிறபடியே
சர்வ காலமும் தப பரர ஆகையாலே பரம தார்மிகர் என்கிறது –

2- தபஸி ஸ்திதா
பகவதீயமாய் நித்தியமான ஆத்ம வஸ்துவுக்கு ஹிதம் தேடி அல்ப அஸ்திரமான சரீரத்தை ஒருத்துப் போருமவர்கள்

3- தபஸி ஸ்திதா
ஹூத மிஷ்டஞ்ச தப்தஞ்ச தர்மச்சாயம் குலச்ய தே
க்ருஹாத் பிரதி நிவர்த்தந்தே பூர்ண காமா யதர்த்தின -என்று
அதிதிகளாயும் அப்யாகதராயும் யுள்ளவர்களை உகப்பிக்கையே பரம தர்மம் என்று இருக்குமவர்கள்

4- தபஸி ஸ்திதா –
தப சப்த வாச்யமான அர்த்த த்ரயத்திலும் நிலையுடையவர்கள்
அதாவது தப சந்தாபே -என்கிற தாதுவிலேயாய்
யஜ்ஞ்ஞேன தானென தபஸா -ப்ரு-6-4-22- என்றும்
கர்ம யோகஸ் தபஸ் தீர்த்த  தான யஜ்ஞாதி சேவனம் -ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -22-என்றும் சொல்லுகிறபடியே
ஆத்ம ஜ்ஞான ரூபமான ஜ்ஞான யோகத்திலே நிஷ்டர் ஆனவர்கள் என்றாகவுமாம்
அன்றியிலே

5-தபஸி ஸ்திதா –
தப ஐஸ்வர்ய-என்கிற தாதுவிலேயாய்
பிரசாசி தாரம் சர்வேஷாம் -மனு -12-122-என்றும்
யே சேமே ஆரண்யே ஸ்ரத்தா தப இத்யுபாசதே -சாத் -5-10-1-என்றும்
பரமம யோ மகாத்தப -சஹஸ்ரநாமம் -என்றும் சொல்லுகிறபடியே
சர்வ பிரசாசிதாவாய் தபஸ் சப்த வாச்யனான பரமாத்மா விஷயத்திலே ஜ்ஞான பக்தி யோக நிஷ்டர் என்றாகவுமாம்
அன்றியிலே

6-தபஸி ஸ்திதா -என்று வாசிக தபசான ஸ்வ அத்யாயத்திலே உளர் என்றாகவுமாம் –
தத்தி தபஸ் தத்தி தப -தை சிஸா -9-வேதாத்யயனமே தவமாகும் –
அன்றியிலே

7-தபஸி ஸ்திதா
பரபக்தி பரஜ்ஞான பரம பக்திகளை உடையவர் என்றாகவுமாம்
அன்றியிலே

8-தபஸி ஸ்திதா
என்று -தஸ்மான் ந்யாச மேஷாம் தபஸா மதிரிக்தமா ஹூ -என்றும்
தேஷாம் து தபஸாம் ந்யாசமதிரிக்தம் தப ஸ்ருதம -என்றும் சொல்லுகிறபடியே
சர்வாதிசாயி தபசான பிரபத்தியிலே நிஷ்டர் ஆனவர்கள் -என்றுமாம் –

இஸ் ஸ்லோஹம் தன்னால் -ஊன ஷோடச வர்ஷ -பால -20-2-என்கிற ஸ்லோஹத்துக்கு உத்தரம் சொல்லுகிறது
பச்யாமி -என்று மேல் எழுந்த கண்ணாலே நீ காண்கிறது காட்சி அன்று காண்
யோக பரிசுத்தமான உட் கண்ணாலே நான் காண்கிறது காட்சி -என்கிறது-

அஹம் வேதமி -என்கையாலே -ஊன ஷோடச வர்ஷ-என்று பருவத்தை இட்டு எளியன் என்று இருக்க வேண்டா காண் –
விரோதி நிரசன ஷமராம்படி பெரியார் காண் -என்கிறது-

மஹாத்மானம் -என்கையாலே –
மே ராம -என்று நீ உன்னுடைய மமகாரத்திலே ஒதுக்க ஒண்ணாது காண் –
லோகாபி ராமோயம்-அயோத்-2-44-என்று சர்வ லோக சரண்யராய்க் காண் இருப்பார் என்கிறது
வெறும் -ராமம் -என்கிறத்தாலே-

ராஜீவ லோசன -என்று பொழுது புகுவதற்கு முன்னே உறங்குவார்
நிசாசரோடு பொருகைக்கு ஆள் அல்லர் என்று நினைத்து இருக்க வேண்டா
ஸூக ஸூ ப்த பரந்தப -சுந்தர -38-25-என்று அவ்வுறக்கம் தான் எதிரிகளை அழிக்கும்படி
நித்ய பராக்ராமர் காண் என்கிறது -சத்ய பராக்கிரமம் -என்கிறத்தாலே –

அஸ்ய ராஷசை -என்று இவரோ ஒருவர் அவர்கள் பலர்
இவர் மனுஷ்யர் அவர்கள் ராஷசர் என்று நினைத்து இருக்க வேண்டா
உட்குடையசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவன் -திருவாய் -7-2-3- என்றும்
திண் கொள் அசுரரைத் தேய  வளர்கின்றான் -பெரியாழ்வார் -1-2-16-என்றும்
ஒரு கோடி பேருக்கு ஒருவனே அமைந்து காண் இருப்பது என்கிறது .

இவற்றில் ஏக வசனத்தாலும் –
மஹாத்மானம் -என்று தர்மி நிர்த்தேசத்தாலும் —
ராமம் -என்று -பச்யாமி -என்கிற ஏவ வசன சித்தனான நீ ஒருவனுமே இறே இவர்
அயோக்யதையைச் சொல்லுகைக்கு உள்ளது
அவருடைய யோக்யதையைச் சொல்லுகைக்கு கிடக்கிற பேர் ஒரு வெள்ளம் காண் என்கிறது
வசிஷ்டோபி யே சேமே தபஸி ஸ்திதா -என்கிறத்தால்
ஆக
இப்படி இந்த ஸ்லோஹத்துக்கு உத்தரமாய் இருக்கிறது இஸ் ஸ்லோஹம் –

ஸ்ரீ சீதா ராம ஜெயம் –

பால காண்டம்

ஸர்க்கம்-19; ஶ்லோகம்-14

அஹம் வேத்3மி மஹாத்மாநம் ராமம் ஸத்யபராக்ரமம்|

வஸிஷ்டோ2பி மஹாதேஜா யே சேமே தபஸி ஸ்தி2தா:||

பொழிப்புரை:
இராமனை மஹாத்மாவாகவும், ஸத்யபராக்ரமனாகவும் இருப்பதாய் நான் அறிவேன்.
மஹாதேஜஸ்வியான வஸிஷ்ட மஹரிஷியும் அறிவார்.
மற்றும் இங்கே கூடியுள்ள தபஸ்ஸில் நிலைபெற்ற மஹரிஷி கணங்களும் இவ்வாறு அறிவார்கள்.

அயோத்தியில் த3ஶரத2ரின் அரசவைக்கு வருகை தந்த விஶ்வாமித்ர மஹரிஷி தஶரதனிடம்,
கரிய செம்மல் ஒருவனைத்  (இராமனை) தன்னுடன் அனுப்பிவைத்து
அவர் செய்யும் யக்ஞத்திற்கு உதவியாய் தர்மத்தைக் காக்கும்படி வேண்டிக்கொள்கிறார்.
இராமனை அனுப்ப மனமில்லாத தஶரதன் அதற்கு காரணமாக இராமன் மிக இளம்பருவம் உடையவன்,
அரக்கர்களை எதிர்கொள்ளச் சக்தியற்றவன் என்பன பல வார்த்தைகளைச் சொல்லித் தட்டிக் கழிக்கிறான்.
அதைக் கேட்ட விஶ்வாமித்திரர் கூறும் பதிலாக அமைந்ததுதான் இந்த ஶ்லோகம்.

த3ஶரத2ன், “ ந யுத்3த4யோக்3யதாம் அஸ்ய பஶ்யாமி” அதாவது,
‘இவனிடம் போர் செய்வதற்குண்டான அருஹதை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை’ என்று வாத்ஸல்ய மேலீட்டால் சொன்னாலும்,
விஶ்வாமித்திரருக்கு மனதிலே கோபம் கனன்று எழுகிறது.

“அஹம் வேத்3மி” ‘நானறிவேன்’ இவன் யாரென்று. இவனை மஹாத்மாவாகவும், ஸத்யப்ராக்ரமனாகவும் நானறிவேன்.
பரமாத்மா கண்ணாலே காணப்படுகிறவன் அல்லன் (ந சக்ஷுஷா க்3ருஹ்யதே: மு.உ.3-1-8),
தூய்மையான மனத்தாலேயே காணத்தக்கவன் (மநஸா து விஶுத்3தே4ந: வி.த.275-2).
உன்னைப்போலே ஊனக்கண்களால் காண இயலாது.
‘என்றேனும்  காணாத கட்கண்ணால் அவ்வுருவை நெஞ்சேனும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து’ (பெரி.தி.-28). (1)
யோகத்தினாலே அழுக்கற்ற உட்கண்ணாகிற நெஞ்சாலே நான் அறிவேனேயொழிய,
வெளிக் கண்ணாகிற கட்கண்ணாலே காணும் உனக்குத் தெரியாது காண்.
அரசனே! என்னால் அறிவில் முதிர்ந்த பல மஹநீயர்கள் உபாஸிக்கப்பட்டிருக்கிறார்கள்.

(2) பல ஆசார்யர்களை ஸேவித்த நான் அறிவேனேயொழிய பாமரர்களால் ஸேவிக்கப்படும் நீ அறிவாயோ?
(3) கையிலே புல்லைப் பிடித்த நான் அறிவேன்; கையில் வில்லைப் பிடித்த நீ அறிவாயோ?
(4) தலையிலே சடையை உடையவனான நான் அறிவேன்; தலையிலே முடிதரிக்கும் நீ அறிவாயோ?
(5) ஸாத்விக ஸ்வரூபனான நான் அறிவேன், ராஜஸ ஸ்வரூபியான நீ அறிவாயோ? (6)
குருவின் ஆஸநத்திற்கு கீழே இருந்த எனக்குத் தெரியுமேயொழிய பிரபு என்று ஸிம்ஹாஸநத்தின் மேலிருக்கிற உனக்குத் தெரியுமோ?
(7) யோகவழியறியும் நான் அறியும் விஷயத்தைப் போகவழியறியும் நீ அறிவாயோ?
(8) மோக்ஷத்தை விரும்பி யாகம் செய்த நான் அறியும் விஷயத்தைப் புத்ரனை விரும்பி யாகம் செய்த நீ அறிவாயோ? (
9) த4ர்ம மோக்ஷ புருஷார்த்தங்களில் ஈடுபட்ட நான் அறிவதை அர்த்த காம புருஷார்த்தங்களில் ஈடுபட்ட உன்னால் அறியமுடியுமோ?
இதுபோன்று பலவாறாக வினவிய விஶ்வாமித்திரர் மேலும் பரமாத்மாவை யார் யார் அறியமாட்டார்கள் என்றும் சொல்லத் தொடங்குகிறார்.

ப்ருஹ்மம் இவ்வளவுமட்டுமன்று, இப்படிப்பட்டது (வேறொன்றும்) இல்லை’ [நேதி, நேதி: ப்ருஹ.உப. 4-3-6],
‘அந்த ப்ருஹ்மம் எப்படிப்பட்டது என்று எவன் அறிவான்?’ [க இத்தா2 வேத3யத்ர ஸ: கட.உப. 1-2-25]
என்றும் ப்ரமாணங்களாக இருக்கும் வேதங்களும் அறிந்தனவா? வேறு சொல்வானேன்? ‘
நான்முகன் செஞ்சடையானென்றிவர்கள் எம்பெருமான் தன்மையை யாரறிகிற்பார்?’ [திருவாய் 8-3-9]. என்றும்
அறிவாளிகளான ப்ருஹ்ம ருத்ராதி3களுக்கும் அறியக்கூடிய விஷயமாவானோ?
அவன் தானே தன்பெருமையை அறிவானோ, அறியமாட்டானோ? [தை-ப்ரா 2-8-9]
தனக்கும் தந்தன்மை அறிவரியானை [திருவாய் 8-4-6].

இத்தனை பேர்கள் அறியாதிருக்கும் போது, ஓராசார்யன் பக்கல் குனிந்து கேளாமையாலே அல்லவோ இவர்கள் யாரும் அறிந்திலர்?
இது இவ்வாறிருக்க, தான் மட்டும் எங்ஙனம் அறிந்து கொண்டார்?
‘நான் என் பக்தர்களுக்கு என்னை அறிய உதவும் புத்தியைக் கொடுக்கிறேன்’ என்று தேர்த்தட்டிலிருந்து சொன்ன வாக்கியமிருக்கிறதே [
த3தா3மி புத்3தி4யோக3ம் தம்; கீதை 10-10],
‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்பதும் ஸித்தமாயிருக்கிறதே.
அவனை அறிகைக்கு நான் பட்ட வருத்தம் சொல்லப்போமோ?
‘கேட்கத்தக்கதும் நினைக்கத்தக்கதுமான பரமாத்மா தியானிக்கத்தக்கது’
[ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்4யாஸிதவ்ய: ப்ருஹ. உப. 6-5-6] என்று
அவனை அறிய நான் பட்ட சிரமம் சொல்லவும் முடியுமோ?

வடிவு சிறுத்திருந்தாலும் பரத்வம் நிறைந்திருக்கும் அல்லவா?
தேஜஸ்ஸை உடையவர்களிடத்தில் வயது கவனிக்கப்படுவதில்லை [தேஜஸாம் ஹி ந வய: ஸமீக்ஷ்யதே; ரகு4வம்ஶம் 11-1].
அவனை மஹாத்மா என்று அறியவேண்டும்.
வைஜயந்தி என்னும் நூல் ஆத்மா என்னும் பதத்தின் தன்மையை விவரிக்கிறது.
அதாவது ஆத்மா ஜீவனிடமும், தைர்யத்திலும், தேஹத்திலும், ஸ்வபாவத்திலும், முயற்சியிலும்
என்று இவ்வாறு பல விஷயங்களில் ப்ரயோகம் உள்ளது என்று சொல்லுகிறது.
1. எவனுக்கு ஆத்மா ஶரீரமோ, எவன் ஆத்மாவில் நின்றுகொண்டு ஆத்மாவில் நுழைந்திருக்கிறானோ [ப்ரு.உப]
எல்லா ஜீவாத்மாக்களும் தன்னுடைய ஶரீரமாம்படி இருக்கும் மஹாசேதனன் என்று அறிவேன்.
2. ஆபத்துக் காலத்திலும் தைர்யத்தோடு நிலைநிற்கும் தன்மை உடையவன்
[தாடகை, ஸுபாஹு மாரீசாதிகளை வதம் செய்யும் வலிமையும் தைர்யமும் பொருந்தியவன்]
3.நித்யனாய், நித்யமான தேஹத்தை உடையவன் [மாசூணாச்சுடருடம்பு; திருவாய் 3-1-8] சத்ருக்களால் அழிக்கமுடியாதபடி நித்யன்
4. ஸ்வபாவவாசியாய், என்னைச் (பரமாத்மாவை) சரணமென்று வந்தவர்க்கு எல்லா பூதங்களிடமிருந்தும் அபயமளிக்கிறேன்,
இது என் விரதம் [அபயம் ஸர்வபூதேப்ய: ததாமி ஏதத் வ்ரதம் மம; ராமாயணம் யுத்: 18-34].
5. பரமாத்ம வாசியாய், இவனைக் காட்டிலும் மேலொருவனில்லை என்ற பரம ஶப்தார்த்திற்கு ஏற்ப
[ஒத்தார்   மிக்காரை இலையாய  மாமாயா; திருவாய் 2-3-2] தன்னையொழிந்த எல்லா தேவதைகளுக்கும் மேலாய்,
அவர்களுக்கும் அந்தர்யாமியாய் இருக்கிறபடியை அறிவேன்.
6. யத்ந வாசியாய், அதாவது பிரயத்நமாய். துஷ்ட நிக்ரஹத்திற்காக உத்ஸாஹிப்பது ஆத்ம தர்மம்மாகும்.
[விநாஶாயச து3ஷ்க்ருதாம் ஸம்ப4வாமி; கீதை 4-8]
7. அர்க்க வாசியாய், அதாவது ஆத்மா அர்க்கன் அல்லது ஸூர்யன் [ராம தி3வாகர:]
சர ஸமூகங்களாகிற கிரணங்களையுடைய ராமன் என்னும் ஸூரியன், ஸத்ருராக்ஷஸர்களாகிற நீரை வற்றச்செய்யும் வல்லமை உடையவன் என்று அறிவேன்.
8. ராமனை அக்நி ஸ்வரூபனாயும் அறிவேன். ராமன் கோபமடைந்தால், தன் கண்களாலே எரித்துவிடுவார்
[நிர்த3ஹேத3பி காகுஸ்த்த2: க்ருத்3த4ஸ்தீவ்ரேண சக்ஷுஷா; ஸு.கா: 30-14],
அனலுருவில் திகழும் சோதி தன்னுருவாய் [திருநெடு -1] ஸத்ரு ஶரீரங்களைச் சாம்பலாக்க வல்லவர்.
9. மதி வாசியாய், ராமன் எல்லா தத்துவங்களையும் அறிந்தவர்
[ஸர்வ ஶாஸ்த்ரார்த்த2 தத்வஜ்ஞ: ரா. பால.கா. 1-15] இருந்த இடத்திலேயிருந்தே ஶத்ருக்களை அழிக்க வல்லவன்
10. வாத வாசியாய், (வாயு ரூபியாய்) ‘வாயு ரூபியாய் இருக்கும் அவனுக்கு நமஸ்காரம்’
[தஸ்மை வாதாத்மநே நம: விஷ்.புரா. 1-14-31].
“காலாய்த் தீயாய்” [திருவாய் 6-9-1]
என்று சொல்லுகிறபடியே, பெருங்காற்றால் அடிக்கப்பட்ட பஞ்சுக்குவியலைப் போலே
எதிரிகளைப் போனவிடமறியாதபடி விரட்டிவிடும் மஹாவாயு இவர் என்பதை அறிவேன்.
அன்றிக்கே ‘ராமவ்ருத்தாந்தம் இறந்தவர்களையும் பிழைக்க வைப்பது”  [ம்ருத ஸஞ்ஜீவநம் ஹி ராமவ்ருத்தாந்தம்; பட்டர் ஸஹஸ்ரநாம பாஷ்யம்]
என்று எல்லா உயிர்ப்பிக்கும் காற்று போலே அநுகூலர்களை உய்ப்பிக்கும் மஹாவாயு என்று அறிவேன்.

தானும் அறிந்து பிறரையும் அறிவிக்கையாலே வேதம் [‘வேத்தி வேத3யதீதி வேத3:’] என்று வேத பதத்திற்கு வ்யுத்பத்தி சொல்லுமிடத்திலே,
நான் இந்தப் புருஷனை அறிவேன் [வேதா3ஹமேதம் புருஷம்; புரு.ஸூக்], என்று சொல்லி, அறிந்தது எப்படி? என்னும் கேள்வி எழ,
‘அறிந்தன வேதவரும்பொருள் நூல்கள் அறிந்தன கொள்க அரும்பொருளாதல்’ [திருவாய்: 9-3-3] என்கிறபடியே,
அளவற்றவன் என்று சொல்லி (மஹாந்தம்) முடித்தது அன்றோ?
எவனுக்கு அப்பரவஸ்து அளவிட்டு அறியப்படாததாகிறதோ அவனுக்கு அறிப்படாததாகிறது.
எவன்  அளவிட்டு அறிந்தேன் என்று சொல்வானோ அவன் உண்மையில் அறியாதவனாகிறான்.

கேனோபநிஷத் இதைச் சொல்லுகிறது. வேதா3ஹமேதம் (வேத3+அஹம்+ஏதம்), வேத என்னும் பதத்தை இங்கே ‘வேத்3மி’ என்றது;
அஹம் என்பது இரண்டு இடங்களிலும் மாறாமல் இருக்க, ஏதம் என்னும் பதம் இங்கே ‘ராமம்’ என்று குறிக்கிறது.
அஹம் வேத்3மி ராமம் என்பது வேதவாக்கியமான ‘வேதா3ஹமேதம்’ என்பதுடன் பொருந்தியிருக்கிறது.
அங்கே புருஷ ஶப்ததாலே காட்டப்பட்ட சௌர்ய வீர்யாதி குணங்களை இங்கே’ ஸத்யபராக்ரமம்’ என்னும் பதம் காட்டுகிறது.

குணங்களாலே பூர்ணன் (புருஷன்) அங்கு ‘மஹாந்தம்’ இங்கு ‘மஹாத்மாநம்’ ஆகிறது.
மஹாத்மா என்னும் பரமாத்மா இந்த உலகத்திலே ஒருவருக்கும் எட்டாததோவென்னில், ‘
பிதரம் ரோசயாமாஸ’ என்று உன்னையிசைவித்து,  ராமரூபேண வந்து பிறந்தவர் அந்த பரவஸ்து என்பதை அறிவாயாக.
ராமன் இப்படித் தன்னைத் தாழ விட்டுக் கொண்டு இருப்பதனால் நீ அவன் பெருமையை உணரவில்லை.
ராமனை மஹாத்மாவானவனை ‘அவன் பிறந்த பிறகே மேன்மையை அடைகிறான்’
[ஸ உ ஶ்ரேயாந் ப4வதி ஜாயமாந: யஜுர்.அஷ்.3-6-3] என்பதால் அறியலாம்.

ராமன் மிக இளம்பருவத்தினன்:

என் மகன் ராமனுக்குக் இன்னும் பதினாறு வயது நிரம்பவில்லை; [ஊனஶோடஷ]
இவனுக்கு வடிவில் மெருகழியவில்லை; கடினகாரியங்களைச் செய்து உடல் இன்னும் இறுகவில்லை;
இவன் பெருஞ்செயல் செய்யவல்லனோ?
ரமயதீதி ராம: ரமிக்கச்செய்பவனாக இருக்க இவனை அரக்கர்களை அடக்க நான் எவ்வாறு உம்முடன் அனுப்புவேன்?’ என்று பதிலிறுத்த தஶரதனுக்கு,
விஶ்வாமித்திரர் எப்படி ‘ஸத்யப்ராக்ரமம்’ (ராமம் ஸத்யபராக்ரமம்) என்னும் பதத்தின் உட்பொருளை விளக்குகிறார் என்று இங்கே காண்போம்.

ஸத்யபராக்ரமன் என்றால் நித்யமான, என்றும் மாறாத பராக்ரமத்தை உடையவன்.
ஸதை3கரூபரூபாய [விஷ்.ஸஹ] என்பதிலிருந்து அறியலாம்.

ஸத்யப்ராக்ரமன் எப்பொழுதும் ஒருபடிப்பட்டிருக்கும் பராக்ரமத்தை உடையவன்.
த இமே ஸத்யா: காமா: என்று விஷ்ணு புராணத்திலும்,
பகவானுடைய இந்த குணங்கள் ஸத்யமான காமங்கள் என்பபடுகின்றன என்று சாந்தோக்கியத்தும் சொல்லப்பட்டிருக்கிறது.
அவதார விக்ரஹம் இச்சையினால் எடுக்கப்படுவதால், குணங்கள் நித்யமாய் காணக்கிடைக்கின்றன என்று விஷ்ணு புராணத்திலும் காணலாம்.
தேஜஸ், பலம், ஐஶ்வர்யம், ஞான வீர்ய ஶக்தி ஆகிய குணங்களின் குவியலாய் இருப்பவன் பரமாத்மா என்றும் விஷ்ணு புராணம் மேலே விவரிக்கிறது.

லௌகீகர்களுடைய பராக்கிரமம் போலே அன்றிக்கே, ஸத்யபராக்ரமன் ‘ஜயிக்காமல் திரும்பமாட்டான் ராமன்’
[அபி4யாதா ப்ரஹர்த்தா ச; அயோ.கா. 2-37] என்றும்,
‘சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே’ [திருச்சந்த 56] என்று சொல்லுகிறபடியே,
இவர் போர் புரியப் புறப்பட்டால், எதிரிகளை வெல்லாமல் திரும்ப மாட்டார் காண்.

ஆக, இப்படியாக அழகையே ஆயுதமாகக் கொண்டும் வெல்வான் ராமன்.
ஶ்ரீமான் ஸுக2ஸுப்த: பரந்தப: [யு.கா. 38-25] என்று சொல்லுகிறபடியே அழகும் எழிலுமாகவே எதிரிகளின் படையை அழிக்க வல்லவன் ராமன் என்று அறியலாம்.

அடுத்தது,  வஸிஷ்டரும் அறிவார் (வஸிஷ்டோபி மஹாதேஜா) என்று ஏன் சொன்னார் என்று பார்ப்போம்.
விஶ்வாமித்திரர் அரசரிடம், ‘என் கார்யம் நடக்கவேண்டும் என்று வந்து உன்னிடம் கேட்கும் என்னை நீ நம்பமாட்டாயானால்,
உனக்கு ஆப்தனான வஸிஷ்டபகவானைக் கேட்கலாமே!
ரிஷிகளில் மஹாதேஜஸ்வியானவர். ப்ருஹ்மாவின் புத்திரர். லோகநாதனான புருஷோத்தமனும் தன்னை வணங்கும்படி ஏற்றமுள்ளவர்.
அவரது திருவாயாலே அடியேனுக்கு ப்ருஹ்மரிஷி பட்டமும் தந்தவர்.
ஸத்யம் வத3, த4ர்மம் சர என்று அனைவருக்கும் உபதே3ஶிக்கும்படியான இந்த கு3ருவரர் அஸத்யம் சொல்வாரோ? ‘
தஸ்ய தீ4ரா: பரிஜாநந்தி யோநிம்’ [புருஷ. ஸூ] என்று ராமனுடைய ஜந்மரஹஸ்ய ஞானமுடைய வஸிஷ்டரைக் கேளாய்!’

மேலும் இங்கே கூடியிருக்கும் மற்ற ரிஷிகணங்களும் அறிவார்கள் (யே சேமே தபஸி ஸ்திதா2: ) என்பதை விளக்குகிறார்.
“அகஸ்த்யர், பராஶரர், வியாஸர் என்ற பல மேன்மை மிக்க ரிஷிவரர்கள் ஒருவேளை தம் பெருமை நிலைநிற்க பக்ஷபாதம் செய்யக்கூடும்.
ஆனால், இங்கே அமர்ந்திருக்கும் ரிஷிகளோ தபஸ்ஸில் நிலை நின்றவர்கள்.
இவர்களுக்குப் பெருமை என்னவென்றால், இவர்களது நரைத்தலையும், ஒட்டிய கன்னமும், சுருங்கிய சருமமும்,
ஜபிக்கிற வாயும், வடிகின்ற கண்ணீரும் மட்டுமே அடையாளங்கள்.
விஷ்ணு தத்துவத்தில் சொன்னபடி. பகவதநுபவத்தாலே ஆநந்தம் பெருக குளிர்ந்த கண்ணீர் பெருகுபவராய்,
மயிர்க்கூச்செறியும் தேஹத்தினராய், எப்போதும் பரமாத்மாவின் குணங்களைத் த்யானிப்பவராய் இவர்கள்
(இமே) பெருமையை அளவிடமுடியுமோ?
‘சிறியனென்று இளஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய்; சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச்  சென்று கேள்’ (பெரியாழ்வார் 1-4-8) என்று
எங்கேயோ பாதாளத்திற்குச் சென்று மஹாபலியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டிய வாமனன் பெருமை அன்று;
இவன் பெருமை அறிய இதோ இங்கிருக்கும் இவர்களிடம் கேள்.
மஹாபலியோ ஒரு அஸுரன்; இவர்களோ பரமஸாத்விகர்களான ரிஷிகள்;
என்னையும், வஸிஷ்டரையும் போல் தனி ஒருவரல்லர்; பலராய் இங்கே இருக்கிறார்கள்;
உனது நம்பிக்கைக்கு ஹேதுவாக இருக்கும்.” என்று விஶ்வாமித்திரர் அரசருக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்.

ஒருகால் இவர்கள் அஸத்யம் சொல்வரோ என்ற ஸந்தேஹம் அரசரின் மனத்தில் தோன்றினால், என் செய்வது? என்று எண்ணி,
விஶ்வாமித்திரர், மேலும் சொல்கிறார். இவர்கள் பொய் சொல்லாத தார்மிகராக இருப்பாரோவென்னில், தபஸி ஸ்திதா2: என்றார்.
‘தபோ தா3னம் தபஸ் ஸத்யம் தபோ த4ர்ம: ப்ரதிஷ்டித2:’ என்கிறபடியே எக்காலமும் தபத்திலே ஈடுபட்டவராகையாலே தர்மஶ்ரேஷ்டரென்கிறது.
மேலான தர்மமான (பரமம் யோ மஹத்தப: விஷ்ணு. ஸஹ) பகவானிடமே பக்தி செய்பவராய்
தபஸ்ஸிலே நிலைநிற்பவர்கள் (தபஸி ஸ்திதா2:) என்றுமாம்.

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading