ஸ்ரீ பராசர பட்டார்ய ஸ்ரீ ரங்கேச புரோஹித
ஸ்ரீவத் ஸாங்க ஸூதா ஸ்ரீமான் ஸ்ரேயசே மே அஸ்து பூயஸே
ஸ்ரீ ரெங்க நாதனுக்குப் ப்ரோஹிதரும்
ஸ்ரீ வத்சாங்கர் எனப்படும் கூரத்தாழ்வானுடைய திருக் குமாரரும்
ஞான லஷ்மீ பொருந்தியவருமான
ஸ்ரீ பராசர பட்டர் எனப்படும் ஸ்வாமி
எனக்கு மேன்மேலும் ஸ்ரேயஸ்ஸைக் கொடுத்து அருளட்டும்
——–
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்
அர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே
மூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்
யத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத
—————
வந்தே கோவிந்த தாதௌ முநிமத மநவை லஷ்மணார்யம்-மஹாந்தம்
த்யாயேயம் யாமுநார்யம் மம ஹ்ருதி தாநவை ராமமேவாபியாயாம்
பத்மாஷம் ப்ரேஷிஷீய ப்ரதமமபி முநிம் நாதமீடே சடாரிம்
ஸ்தௌமி ப்ரேஷேய லஷ்மீம் சரணம் சரண ஸ்ரீ தரம் சம்ஸ்ரயேயம்–ஸ்ரீ குரு பரம்பரா வணக்கம்
வந்தே கோவிந்த தாதௌ முநிமத மநவை லஷ்மணார்யம்-மஹாந்தம் த்யாயேயம் –
ஆச்சார்யரான ஸ்ரீ கோவிந்தர் என்னும் ஸ்ரீ எம்பார் -தந்தையான ஸ்ரீ கூரத்தாழ்வான் –
த்வந்த ஸமாஸம் -சம பிரதானம் இல்லை -அர்த்த கௌரவத்தால் கோவிந்த முதலில்
இதிஹாச புராணம் -அத்தாலே அது முற்பட்டது -பிரபலம் போல் இங்கும்
ஸ்ரீ லஷ்மண முனியான ஸ்ரீ எம்பெருமானார் –இவர்களைத் த்யானிக்கிறேன்
யாமுநார்யம் மம ஹ்ருதி தாநவை
என் மனம் ஸ்ரீ யாமுனாச்சார்யர் எனப்படும் ஸ்ரீ ஆளவந்தாரால் நிறைந்து இருக்கட்டும் –
ராமமேவாபியாயாம் பத்மாஷம் ப்ரேஷிஷீய —
ஸ்ரீராம மிஸ்ரர் என்னும் ஸ்ரீ மணக்கால் நம்பியையும் ஸ்ரீ புண்டரீகாக்ஷர் எனும் ஸ்ரீ உய்யக் கொண்டாரையும்
நான் பணிவுடன் அணுகுகிறேன்
ப்ரதமமபி முநிம் நாதமீடே சடாரிம் ஸ்தௌமி -ப்ரேஷேய-லஷ்மீம் சரணம் சரண ஸ்ரீ தரம் சாம்ச்ரயேயம்-
நமது பிரதம ஆச்சார்யரான ஸ்ரீ மந் நாதமுனிகளை வணங்குகிறேன் –
ஸ்ரீ எம்பெருமானின் ஸ்ரீ சடாரி எனப்படும் ஸ்ரீ நம்மாழ்வாரை போற்றுகிறேன்
ஸ்ரீ பெரிய பிராட்டியாரின் திருக்கண் கடாக்ஷம் எனக்குக் கிட்ட வேணும்
அநந்ய கதியான அடியேன் ஸ்ரீதரனான ஸ்ரீ பெரிய பெருமாள் இடம் சரண் அடைகிறேன்
ஸ்ரீ கோவிந்த பட்டரையும்
என் பிதாவான ஸ்ரீ வத்ஸாங்க மிஸ்ரரையும்
வந்தனம் செய்கிறேன்
அதன் பிறகு ஸ்ரீ மத் ராமானுஜ முனிவரை எப்போதும் சிந்திக்கக் கடவேன்
பெரிய நம்பியை த்யானம் செய்வேன்
யாமுனாச்சார்யரை ஹ்ருதயத்தில் வைக்கக் கட வேன்
ராம மிஸ்ரரை அடையக் கடவேன்
புண்டரீகாக்ஷரைப் பார்க்கக் கடவேன்
சம்பிரதாயத்துக்கு பிரதம ஆச்சார்யரான ஸ்ரீ மன் நாதமுனிகளை ஸ்துதிக்கிறேன்
நம்மாழ்வாரைப் புகழ்கிறேன்
ஸ்ரீ மஹா லஷ்மியைத் தர்சிக்கக் கடவேன்
வேறு சரணம் இல்லாதவனாய் ஸ்ரீ யபதியை சரணம் அடைகிறேன் –
————–
அஸ்மத் குரு ஸமாரம்பாம் -தொடங்கி -ஸ்ரீயப்பதி பர்யந்தம் சொல்லி
ஸ்ரீ விஷ்வக் சேனருக்குத் தனியாக எடுத்து அருளிச் செய்கிறார்
———–
ஓம் நமோ கஜவக்த்ராத்யை பாரிஷத்யை ப்ரசாஸதே
ஸ்ரீ ரங்கராஜ ஸேநான்யே ஸூத்ரவத்யா ஸமே யுஷே–ஸ்ரீ விஷ்வக் சேனர் ஸ்துதி
கஜானன்
ஜயத்ஸேனன்
ஹரி வக்த்ரன்
கால ப்ரக்ருதி ஸம் ஜ்ஞகன்
என்னும் நான்கு பரிவாரங்களோடு கூடி ஆஜ்ஜையை செலுத்துபவரும்
ஸூத்ரவதி என்னும் பத்னியுடன் கூடியவரும்
ஸ்ரீ ரெங்கராஜருடைய சேனாபதியுமான-சேஷாசனர் -சேஷ அசனர் இவரே –
விஷ்வக் சேனருக்கு ஓம் என்று சொல்லி நமஸ்கரிக்கிறேன்
—————-
நமோ நாராயணாயேதம் கிருஷ்ண த்வைபாய நாத்மகே
யதாமுஷ்யாயணா வேதா மகா பாரத பஞ்சமா–ஸ்ரீ வேத வ்யாஸர் நமஸ்காரம்
ஸ்ரீ மஹா பாரதம் ஐந்தாவது வேதமாகச் சேர்ந்த நான்கு வேதங்களும்
எவரால் வெளிப்பட்டனவோ -எவருடைய வம்சத்தில் பிறந்தனவோ –
அந்த கிருஷ்ண த்வைபாயன ரூபமாக அவதரித்த நாராயணற்கு என்னுடைய நமஸ்காரங்கள்
வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே பவுத்ர மகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே ஸூக தாதம் தபோ நிதம்–
வசிஷ்டர் பிள்ளை சக்தி /அவர் பிள்ளை பராசரர்/ அவர் பிள்ளை வியாசர் ( கிருஷ்ண த்வைபாயனர் )/அவர் பிள்ளை சுகப் ப்ரஹ்மம்
க்ருஶ்ண த்வைபாயனம் வ்யாஸம் ஸர்வ லோக ஹிதே ரதம்|
வேதாப்ஜ பாஸ்கரம் வந்தே ஷமாதி நிலையம் முனிம்||
அனைத்து உலகிற்கும் (அனைத்துலக மக்களுக்கும்) நன்மையையே வேண்டுபவரே! வேதமெனும் தாமரைக்கு (அதை மலர்விக்கும்) கதிரவன் போன்றவரே! பற்றற்று தவ நெறியில் நிலைத்திருப்பவரே! க்ருஷ்ண த்வைபாயனர் என்ற வ்யாஸரே! உம்மை வணங்குகிறேன்!!
—————–
ஜாதோ லஷ்மண மிஸ்ர ஸம்ஸ்ரய தநாத் ஸ்ரீ வத்ஸ சிஹ்நாத் ருஷே
பூயோ பட்ட பராசரேதி பணித ஸ்ரீரங்க பர்த்ரா ஸ்வயம்
ஸ்ரீ ஸ்ரீரங்கபதி ப்ரஸாத த்ருஷயா ஸ்ரீ ரங்க நாதாஹ்வய
ஸ்ரீ ரங்கேஸ்வர காரிதோ விவ்ருணுதே நாம் நாம் ஸஹஸ்ரம் ஹரே–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யம் செய்து அருளியவர்
ஸ்ரீ மத் ராமானுஜ முனிவர் எனப்படும் யதிராஜரை அடுத்து இருப்பதே தனமாகப் பெற்ற
ஸ்ரீ வத்சாங்க மிஸ்ரர் என்னும் ரிஷியிடம் ஜெனித்தவரும்
ஸாஷாத் பெரிய பெருமாளாலேயே பராசர பட்டர் என்று திருநாமம் சாத்தப்பட்டவரும்
ஸ்ரீ ரெங்கநாதன் என்றும் பெயர் பெற்றவருமான இந்த பட்டர் (படர்கையாக தம்மையே சொல்லிக் கொள்கிறார் )
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யத்தை
ஸ்ரீ ரெங்கநாதனாலேயே செய்யப் பெற்று
ஸ்ரீ ரெங்கநாதனுடைய அனுக்ரஹத்தில் உள்ள பெரு அபி நிவேசத்தினால் செய்து அருளுகிறார் –
சம்சாரோ அயம் அபண்டிதோ பகவதி ப்ராகேவ பூய கலௌ
பூர்ணம் மன்யதமே ஜானே ஸ்ருதி சிரோ குஹ்யம் ப்ருவே சாஹசாத்
தத்ர ஸ்தோத்ர மிதம் பிரகாசயதி யஸ் துத்யஸ்ஸ யஸ்தா வுபௌ
வியாச காருணிகோ ஹரிஸ்ஸ ததிதம் மௌர்க்யம் சஹேதாம் மம–அவை யடக்கம் -விநய யுக்தி
இந்த ஸம்ஸாரம் -பிறவியின் தொடர்ச்சி பகவத் ஸ்வரூப விஷயத்தில் முன்னமே அறிவில்லாதது –
கலியில் இன்னும் அதிகம்-எல்லாம் தெரிந்து நிரம்பினதாக நினைத்துக் கொண்டு இருக்கும் ஜனங்கள் இடத்தில்
வேதாந்த ரஹஸ்யத்தை நான் சொல்லுவது ஸாஹஸம்
இந்த விஷயத்தில் இந்த ஸ்தோத்ரத்தை வெளியிட்டவரும்-இதனால் ஸ்துதி செய்யப்படுபவருமாகிய
தயாளுக்களான ஸ்ரீ வியாஸ பகவானும் ஸ்ரீ மன் நாராயணனும்
இப்படிப்பட்ட என்னுடைய அறியாமையைப் பொறுக்கக் கடவர்
பாடின கண்ணனும் பாடப்பட்ட கண்ணனும் பொறுத்து அருளட்டும்
————
அர்த்தே ஹரௌ ததபிதாயிநி நாம வர்கே
தத் வ்யஞ்ஜகே மயி ச பந்த விசேஷ மேத்ய
ஸேவதவமேத தம்ருதம் ப்ரணிபத்ய யாசே
மத்யஸ்த மத் ஸரிஜநா இஹ மாச பூவன் –
ஸஹஸ்ர நாமத்தின் பொருளாகிய ஸ்ரீ யபதியினிடத்திலும்
அவரைச் சொல்லும் ஸஹஸ்ர நாமங்களினிடத்திலும்
அவற்றுக்கு உரை செய்யும் என்னிடத்தில் ஒரு வகையாக அன்பு வைத்து
இந்த அமுதத்தை உட்க் கொள்ளுங்கோள்-நமஸ்கரித்துப் பிரார்த்திக்கிறேன்
யாரும் இந்த விஷயத்தில் உதாசீனர்களாயும் விரோதம் உள்ளவர்களாயும் ஆக வேண்டாம்
———————
ஸஹஸ்ர மூர்த்தே: புருஶோத்தமஸ்ய ஸஹஸ்ர நேத்ரானன பாத பாஹோ:|
ஸஹஸ்ர நாம்னாம் ஸ்தவனம் ப்ரஶஸ்தம் நிருச்யதே ஜன்ம ஜராதி ஷாந்த்யை||
ஆயிரக்கணக்கான முகங்களும், ஆயிரக்கணக்கான கண்களும், ஆயிரக்கணக்கான கை கால்களும் ஆயிரக்கணக்கான உருவங்களும் கொண்ட புருஷோத்தமனான பகவானின் ஆயிரம் திருநாமங்கள் கொண்ட, புகழ் வாய்ந்த, (ஸ்ரீ விஶ்ணு ஸஹஸ்ரநாமமெனும்) துதிக்கு, பிறப்பு மற்றும் மூப்பென்னும் பிணிகளைப் போக்க, இந்த விளக்கவுரை (பாஷ்யம்) எழுதப்படுகிறது.
—————–
மஹா பாரத ஸாரத்வாத் ரிஷிபி பரிகாநன
வேதாசார்ய ஸமா ஹாராத் பீஷ்மோத்க்ருஷ்ட மதத்வத
பரிக்ரஹாதிசயதோ கீதாதியைகார்த்தஸ்ஸ ந
ஸஹஸ்ர நாமாத்யாய உபாதேய தமோ மத–ஸ்ரீ ஸஹஸ்ர நாம அத்தியாயத்தின் சிறப்பு-
1-மகா பாரத சாரத்துவாத்–சாரமானது.
“மதி மந்தாநம் ஆவித்ய யேநாஸௌ ஶ்ருதி ஸாகராத்| ஜகத்திதாய ஜநிதோ மஹா பாரத சந்த்ரமா: ||”
வ்யாஸ பகவான் தமது புத்தி என்னும் மத்தை வேதம் என்னும் கடலிலே செலுத்திக் கடைந்து
உலகோர் நன்மைக்காக மஹா பாரதம் என்னும் சந்திரனை எடுத்து அளித்தார்
என்று வாயு புராணம் சைவ புராணம் சொல்லும்
கிருஷ்ணனும் -கிருஷ்ண த்வைபாயனார் –கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -மூவரும் கடைந்து
அம்ருதம் -ப்ரஹ்ம ஸூத்ரம் -திருவாய் மொழி அருளினார்கள் அன்றோ
மறைப்பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தி தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம்
கறைப் பாம்பு அணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றி சன்ம விடாய்க்கு நிழல் இல்லையே –
பவிஷ்யத் புராணே
“பிபேதி கஹநாத் சாஸ்த்ராத் நரஸ் தீவ்ராதி வௌஷதாத் |
பாரத: ஶாஸ்த்ர ஸாரோ அயமத: காவ்யாத்மநா க்ருத:||“
மனிதன் கடினமான ஸாஸ்த்ரத்தைக் கண்டு கடுமையான மருந்தைக் கண்டது போல் பயப்படுகிறான் -ஆதலால் எல்லா ஸாஸ்த்ரங்களின் ஸாரமாகிய இம் மஹா பாரதம் காவ்யா ரூபமாகச் செய்யப்பட்டுள்ளது -என்றும்
மாத்ஸ்யே
“யஸ்ய த்வை பாயந: புத்ர: ஸ்வயம் விஷ்ணு ரஜாயத |
ப்ரகாஸோ ஜநிதோ யேந மஹா பாரத சந்த்ரமா:||
மஹா பாரதம் என்னும் சந்த்ரனால் உலகத்துக்கு வெளிச்சம் கொடுத்தவராகிய த்வைபாயனர்-த்வீபத்தில் பிறந்தவர் என்னும்
புத்ரராக ஸாஷாத் விஷ்ணுவே பராசரருக்குப் பிறந்தார் என்று மத்ஸ்ய புராணத்திலும்-
“வைஷ்ணவே “
க்ருஷ்ண த்வை பாயநம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் | கோ ஹ்யந்யோ புவி மைத்ரேய மஹா பாரத க்ருத் பகவத் ||“;மூன்றாம் அம்சம்
மைத்ரேயர் கிருஷ்ண த்வை பாயனர் என்னப்படும் வியாஸரைப் பிரபுவான நாராயணர் என்றே அறி
பூமியில் வேறு எவன் மஹா பாரத்தத்தைச் செய்வான் ஆவான் -என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்-பாரசார்யர்-பராசரர் பிள்ளை -பராசரரே கொண்டாடிப் பேசுகிறார்
மார்கண்டேய
“வ்யாஸ வாக்ய ஜலௌகேந குதர்ம தரு ஹாரிணா |
வேத ஸைல அவதீர்ணேந நீரஜஸ்கா மஹீ க்ருதா||“ இத்யாதிபி:;
கெட்ட தர்மங்கள் ஆகிய மரங்களைக் களைவதும் வேதம் என்னும் மலையின் நின்றும் இறங்கியதுமாகிய
வ்யாஸர் வாக்யம் என்னும் ஜல ப்ரவாஹத்தால் பூமியானது
பாவம் இல்லாதாகச் செய்யப்பட்டது என்று மார்க்கண்டேய புராணத்திலும் சொல்லப்பட்டு இருப்பதாலும்
ஸ்வஸ்மிம்ஶ்ச“யோ வித்யாச் சதுரோ வேதாந் ஸாங்கே உபநிஷதாந் த்விஜ:|
ந சாக்யாநமிதம் வித்யாந் நைவ ஸ ஸ்யாத் விசக்ஷண:||“
நாலு வேதங்களையும்-வேதாந்தங்களையும் -உபநிஷத்துக்களையும் அறிந்தும் இம் மஹா பாரதத்தை அறியாத பிராமணன் எவனோ அவன் அறிவித்த தேற்றம் உள்ளவன் ஆகான் என்று ஸ்ரீ மஹா பாரதத்திலும் சொல்லப்படுவதாலும்
இதுவரை மஹா பாரத ஏற்றம் சாத்தி அருளி
அதில் சாரமான ஸஹஸ்ர நாம அத்யாயம் அருளிச் செய்கிறார்
தத்ராபி ஸ்வ ஹ்ருதய பூதே ஆநு ஶாஸநிகே பர்வணி தாந தர்மேஷு
ஸமஸ்த ஶாஸ்த்ரார்த்தே நிஷ் க்ருஷ்ய நிகம்யமாநே, ஸார ஸங்க்ரஹ ரூபேண
கல்வயம் ஸஹஸ்ர நாம்நாமத்யாயோ அவதாரித: |
இம் மஹா பார்த்ததுக்கு உள்ளம் போன்றதாகிய சாந்தி பர்வத்தில்
தான தர்ம முதலிய எல்லா சாஸ்திரங்களின் பொருள்களையும் சாரமாக எடுத்து முடிக்கும் இடத்தில்
இந்த சஹஸ்ர நாம அத்யாயம் எல்லாவற்றினுடைய சார அம்சங்களின் ஸங்க்ரஹமாக அன்றோ நிச்சயிக்கப் பட்டு இருக்கிறது
—–
2-ரிஷிபி : பரிகாநதா:பரிகானன=வக்த்ரு வைலக்ஷண்யம்
சநகர்,சனநந்தர் சனத் குமாரர் ,சனத் சுஜாதர், நாரதர் போன்றோர் பாடிய திரு நாமங்களை வியாசர் தொகுத்து அளிக்கிறார்
ததா ருஷிபி: பரிகாநத: —
ருஷிபி: பரிகீதாநி இத்யேதத் விவரண அவஸர
ஏவைஷ ஹேது ருப உபாதயிஷ்யதே ||
ரிஷிகளினால் ஓதப்பட்டமை-seeyar -இயற்றுபவர் அல்லர் -கண்டு வெளியிட்டவர் ரிஷிகள்-
வேதார்த்த தமங்கள் எல்லாவற்றையும் நேராகக் கண்டு அறிந்த சனகர் சனத்குமாரர் நாரதர்
முதலான மஹரிஷிகளினால் இவ் வாயிர நாமங்கள் சொல் பொருள்களின் தத்துவங்களை அறிந்து கீர்த்தனம் செய்யப்பட்டவையே
இந்த நாமங்கள் வேத வ்யாஸ பகவானால் ஸ்தோத்ர ரூபமாகத் தொகுத்துக் கூறப்பட்டு
ஸம்ப்ரதாய வரிசையில் நமக்குக் கிடைத்து இருக்கின்றன –
———–
3-வேதாச்சர்யா சமா ஹாராத்–பரம ஆப்த தமர் வியாசர்..
கிஞ்ச, வேதாசார்ய ஸமாஹாராத்- பகவாந் ஹி வேதாசார்ய: க்ருஷ்ண த்வைபாயந: பரம ஆப்த தம:,
பகவந் நாராயண அவதாரத்வேந
நிரதிஶய ஜ்ஞாந ஐஶ்வர்யாதி கல்யாண குண கண தயா
நிரஸ்த ஸமஸ்த விப்ரலம்பாதி தோஷ ஸம்பாவநத்வாத்,
கலி பல மந்த அதிகாரி மநுஷ்ய அநு க்ரஹாய
வ்யஸ்த ஸமஸ்த வேதத்வாத்,
வேதார்தயோ :தத்த்வ அநுஷ்டாநயோ :
அஜ்ஞாந ஸம்ஶய விபர்யய பரிஜி ஹீர்ஷயா
ப்ரணீத பஞ்சம வேதத்வாத்,
வியாசர் பகவன் நாமங்களைத் தொகுத்தமை-(ஏழு பெருமைகள் அருளிச் செய்கிறார் )
ஸ்ரீ வேத வ்யாஸ பகவான் வேதாச்சார்யராக அவதரித்த மஹரிஷி யாதலின்
அவரது ஞானம் சக்தி முதலிய கல்யாண குணங்கள் எல்லாவற்றிலும் சிறந்தவை
மயக்கம் பிறரை மயங்கச் செய்வது ஊக்கம் இன்மை சொல்லும் திறமை இல்லாமை ஆகிய குற்றங்கள்
ஒரு சிறிதும் அவர் இடத்தில் இருக்கக் கூடும் என்று நினைப்பதற்கே இடம் இல்லாமையால்
அவர் சொல்வன எல்லாமே ப்ரமாணமே
கலி காலத்தில் சக்தி குறைந்த மனிதர்களின் மேல் அனுக்ரஹம் வைத்து வேதங்களை வகுத்து வேதங்களின் முக்கிய விஷயங்களாகிய
தத்வ ஞானம் அனுஷ்டானம் இவை இரண்டிலும் அஞ்ஞானம் சம்சயம் விபரீத ஞானம் இவற்றைப்
பரிகரிப்பதற்காக ஐந்தாம் வேதமாகிய மஹா பாரதத்தை அவர் இயற்றி அருளினார்
ஸ்வ வசநேந க்ஷத்த்ரியம் விஶ்வாமித்ரம்
ப்ராஹ்மணீ க்ருத வதோ பகவகதோ வஸிஷ்டஸ்ய நப்த்ருத்வாத்,
வஸிஷ்ட புலஸ்த்ய வர ப்ரதாந லப்த தேவதா பாரமார்த்ய ஜ்ஞாந புராண
ஸம்ஹிதா கர்த்ருத்வாதி விஷய வர அதிஶயவத்தயா லைங்காதிஷ்வபி
புராணேஷு ப்ரஸித்தஸ்ய பகவத: பராஶரஸ்ய ச அப யத்வாத்,
அநந்ய ஸாதாரண தபஸ் ஸமாதி விஸேஷஶ்ச அஸேஷ பரமர்ஷி பரிஷத் பூஜிதத் வாச்ச|
மேலும் அவர் ஷத்ரிய ஜாதியில் பிறந்த விச்வாமித்ரரை தமது சொல்லினால் ப்ராமணராகச் செய்த
வஸிஷ்ட பகவானது பிரபவ்வ்த்ரர் -பேரரின் குமாரர் -(வஸிஷ்டர் சக்தி பராசரர் வியாசர் )
வசிஷ்டரும் புலஸ்தியரும் வரம் அளித்ததனால் பர தேவதையின் உண்மை ஸ்வரூபத்தை அறிந்து
புராண ஸம்ஹிதை செய்வது முதலிய மகிமைகளை அடைந்தவர் என்று லிங்க புராணத்தில் சிறப்பித்துக் கூறப்பட்ட பராசரருடைய புதல்வர்–மற்றவர்களுக்கு இல்லாத தவம் தியானங்கள் சிறப்பால் மற்ற மஹ ரிஷி சபைகளால் பூஜிக்கப் பெற்றவர்
ஏவம் விதேந அநேந ருஷிபி: பரி கீதாநாமேவ
பகவந் நாம் நாம் அத்ர ஏதத் ஸ்தோத்ர ரூபேண ஸமாஹ்ருதத்வாச் ச அயம் உபாதேய தம:||
மேற்கூறிய ஸநகாதி மஹரிஷிகளால் ஓதப்பட்ட பகவத் திரு நாமங்களையே கொண்டு
ஸ்தோத்ர ரூபமாக இவர் தொகுத்து அருளி இருப்பதாலும் இந்த ஸஹஸ்ர நாம அத்யாயம்
அனுகூலமாகக் கொள்வதில் அனைத்திலும் மிகவும் -ஸ்ரேஷ்டம்
ஜனமேயன் பரீக்ஷித் திருக் குமாரர் -வைசம்பாயனர் இடம் கேட்டு அறிகிறார் -வேத வியாஸர் அருளிச் செய்தவற்றை உபதேசம்
பாகவதம் வேத வியாசர் அருளி -பரிக்ஷித்துக்கு ஸூகாச்சார்யார் உபதேசம்
அதையே மீண்டும் ஸூத பவ்ராணிகர் சனகாதிகளுக்கு உபதேசம் நைமிசாரண்யத்தில்-இப்படி ஒன்றுக்குள் ஓன்று சம்வாதம்
4-பீஷ்ம உத் க்ருஷ்ட மதத்வத:-அனைத்திலும் சிறந்த தர்மம் என்று பீஷ்மர் நினைத்து இருந்த சிறப்பு
அபி ச பீஷ்ம உத் க்ருஷ்ட மதத்வத:- பீஷ்மோ அபி ஹி (ப்ரத்யாயித) ப்ரதீத தம: |
ததா ஹி, ராஜ தர்மேஷு தர்ம ராஜாய பகவதா வ்யாஸேந
பீஷ்மர் தமது மதமாக ஒப்புக் கொண்டமை(பீஷ்ம வைபவத்துக்கு 10 பிரமாணங்கள் காட்டி அருளுகிறார் )
பீஷ்மாச்சார்யரும் மிகவும் ஆப்த தமர் -மிகவும் நம்பத் தக்கவர்
வேத வ்யாஸ பகவானே தர்ம புத்ரரை நோக்கி(ஆளவந்தார் பராசர மஹரிஷியைக் கொண்டாடினார்
-பராசரர் வ்யாசரைக் கொண்டாடினார் -அந்த வ்யாஸர் பீஷ்மரைக் கொண்டாடுகிறார் )
ஶ்ரோதும் இச்சஸி சேத் தர்மாந் நிகிலேந நராதிப |
ப்ரைஹி பீஷ்மம் மஹா பாஹோ வ்ருத்தம் குரு பிதா மஹம் ||
ஸ தே ஸர்வ ரஹஸ்யேஷு ஸம்ஶயாந் மநஸி ஸ்திதாந் |
சேத்தா பாகீரதீ புத்ர: ஸர்வஜ்ஞ: ஸர்வ தத்த்வ வித் ||
ஸாக்ஷாத் ததர்ஶ யோ தேவாந் ஸர்வாந் ஶக்ர புராேக மாந் ||“இத்யாததௌ,
சிறந்த பராக்ரமசாலியான அரசனே- தர்மங்கள் எல்லாவற்றையும் கேட்க விருப்பம் இருந்தால்
கௌரவர்களின் பிதாமஹரும் பெரியவருமான பீஷ்மரிடம் செல்
ஸர்வஞ்ஞரும் -எல்லாவற்றிலும் உண்மை தெரிந்த கங்கா புத்திரர் -ஸூஷ்ம விஷயங்கள்
எல்லாவற்றிலும் உனது மனத்தில் உள்ள சந்தேகங்களை எல்லாம் அறுத்து விடுவர்
அவர் இந்திராதி தேவர்களை நேராகவே கண்டவர்-
அவர் சபையில் பரிசுத்தரான ப்ரஹ்ம ரிஷிகள் எக் காலத்திலும் ச பிரியர்களாக இருந்தனர்
யஸ்ய ப்ரஹ்ம ர்ஷய: புண்யா நித்யமாஸந் ஸபாஸத:|
யஸ்ய ந அவிதிதம் கிம்சித் ஜ்ஞாநம் ஜ்ஜேயேஷு வித்யதே ||
ஸ தே வக்ஷ்யதி தர்மஜ்ஜோ தர்மாந் ஸூக்ஷ்மார்த்த தத்த்வ வித் ||இத்யாததௌ ச, “(சாந்தி பர்வம் )
ஸ்வயம் ச பேவதா
ஶர தல்பகதோ பீஷ்ம: ஶாம்யந்நிவ ஹுதாஶந:|
மாம் த்யாதி புருஷ வ்யாக்ர: ததோ மே தத் கதம் மந:||
திவ்யாஸ்த்ராணி மஹா தேஜா யோ தாரயதி புத்திமாந் |
ஸாங்காம்ஶ்ச சதுரோ வேதாம்ஸ் தமஸ்மி மநஸா கதா 😐
ஸ ஹி பூதம் பவிஷ்யச்ச பவச்ச பரதர்ஷப |
வேத்தி தர்ம ப்ருதாம் ஶ்ரேஷ்ட: ததோ மே தத்கதம் மந:||
தஸ்மிந் நஸ்தமிதே பீஷ்மே கௌரவாணாம் துரம்தரே |
ஜ்ஞாநாந்யல்பீ பவிஷ்யந்தி தஸ்மாத் த்வாம் சோதயாம் யஹம் ||“இத்யாததௌ ச,
கிருஷ்ண பகவானும்
பீஷ்மர் சர தல்பத்தில் படுத்து அக்னி ஆறுவது போல் இருக்கிறார்
புருஷ ஸ்ரேஷ்டரான இவர் இப்போது என்னையே த்யானம் செய்கிறார்
ஆதலால் என் மனம் அவர் இடம் சென்றது
சிறந்த சக்தி புத்தி உள்ளவரான அவர் நான்கு வேதங்களையும் வேதாந்தங்களை தம் மனத்தில் வைத்து இருக்கிறார்
நானும் என் மனத்தினால் அவரைச் சேர்ந்து இருக்கிறேன்
பரத ஸ்ரேஷ்டரே -தர்ம அனுஷ்டானம் செய்பவர்களில் சிறந்தவராகிய அவர்
முக்காலமும் அறிந்தவர் என்பதாலேயே அவர் இடம் எனது மனமும் சென்றது
குரு வம்ஸ தலைவராகிய அவர் அஸ்தனமாகி விட்டால் ஞானங்கள் குறைந்து போகும்
ஆதலால் நான் உம்மைத் தூண்டுகிறேன் -என்றும்
“யச்ச த்வம் வக்ஷ்யஸே பீஷ்ம பாண்டவாய அநுப்ருச்சதே |
வேத ப்ரலாபா இவ தே ஸ்தாஸ்யந்தி வஸுதாதலே || “ இத்யாததௌ,
பீஷ்மரைப் பார்த்து
ஓ பீஷ்மரே- அறிய வேண்டும் என்று கேட்க்கும் தர்மராஜருக்கு நீர் என்ன சொல்லப் போகிறீரோ
அவை எல்லாம் வேத வாக்கியங்களை போலவே பூமியிலே நிலை நிற்கப் போகின்றன -என்றும்
5-பரிகிரஹா திசயதோ-விலக்ஷணமான அங்கீ காரம் பெற்றது
பரிக்ரஹ அதிஶைத :-
பரிக்ரகஹோ ஹி ஸார்வ பௌமோ பகவந் நாம ஸஹஸ்ரஸ்ய |
ஶாஸ்த்ரேஷு தாவத் ஸபா பர்வணி-“தேவோ நாம ஸஹஸ்ரவாந்” இதி பகவாநபி நாம ஸஹஸ்ர ஸம்பந்தேந பூஷ்யதே |
பெரியோர் பலராலும் அங்கீ கரிக்கப் பட்டமை
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் எல்லாரும் அங்கீ கரிக்கப் பட்டுள்ளது
அன்றியும் ஸபா பர்வத்தில் -பகவான் ஆயிரம் நாமங்களை யுடையவர் -என்றும்
ஶ்ரீவிஷ்ணுதர்மே ச
ஸ்ரீ கஜேந்த்ர மோஷேண
“ஸஹஸ்ர ஶுப நாமா நம் ஆதி தேவம் அஜம் விபும்” இதி |
விஷ்ணு தர்மத்தில் கஜேந்திர மோக்ஷ ப்ரகரணத்தில்
ஆயிரம் மங்களகரமான நாமங்களை யுடையவரும் -ஆதி தேவரும் -ஜனநம் இல்லாதவருமான பிரபுவை என்றும்
ஆயிரம் நாமங்களை பற்றிய சிறப்பு கூறப்பட்டுள்ளது –
அத்ர ச உபோத்காத பல ஶ்ருத்யோ : குண ப்ரபஞ்சோ த்ருஶ்யதே |
ஆயுர் வேதாதிஷு ச த்ருஷ்டாத்ருஷ்ட ஶாஸ்த்ரேஷு, யதா சரக ஸம் ஹிதாயாம்
“விஷ்ணும் ஸஹஸ்ர மூர்தாநம் சராசர பதிம் விபும் |
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண ஜ்வராந் ஸர்வாந் வ்யபோஹதி ||
இந்த ஸ்தோத்ரத்தில் ஆரம்பம் முடிவிலும் பலன் சொல்லும் இடத்திலும் இதன் குணங்கள் மிக விரிவாக வெளியிடப்பட்டுள்ளன
வைத்திய ஸாஸ்த்ரம் முதலியவற்றிலும் இதன் விசேஷம் சொல்லப்பட்டுள்ளது –
வைத்திய சாஸ்திரமாகிய சரக ஸம்ஹிதையில்
ஆயிரம் தலைகளை யுடையவரும் -சராசரங்களுக்கு ஸ்வாமியும் ஸர்வ வ்யாபியான விஷ்ணுவை
இந்த ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம் கொண்டு ஸ்துதிப்பதால் எல்லா வித ஜ்வரங்களையும் போக்கிக் கொள்ளலாம் என்று கூறப் பட்டுள்ளது
இதி| அத்யதேந ச நாநா விப்ர கீர்ண மூலே மேஹஸ்ய ப்ராயஶ் சித்தே ,
“ஜப்யம் புருஷ ஸூக்தகம்” இத்யாரப்ய “ததைவ பகவந் நாம ஸஹஸ்ரம்
பாரதோதிதம்”,
அவ்வாறே நவீனமான ஒரு வைத்திய நூலும் மேக ரோகத்துக்குப் பிராயச் சித்தம் செல்லுகையில்
புருஷ ஸூக்தம் ஜபிக்க வேண்டும் என்றும் சொல்லி மேல்
ஸஹஸ்ர நாமத்தையும் ஜபிக்க வேண்டும் என்றும் கூறுகிறது
யக்ஷ்மண:“ததைவ பகவந் நாம ஸஹஸ்ரம் பரிகீர்தயேத்”,
ஜ்வர விஸேஷஸ்ய,
“ஹோமஸ்து பூர்வ வஜ் ஜப்யம் விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம்”,
க்ரஹாதே : “ஆஸத் மதம் மருத் ஸூக்தம் விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம்
அந்யத்ர ஸ ஏ வம்விதம் அந்வேஷ்டவ்யம் | ப்ராக்ருதா:கவயோ அபீதம்
ஸர்வ ஜீவ ரக்ஷாத்வேந வர்ணயந்தி | யதாஸ் ஸஹ
க்ஷய ரோகத்துக்கு சிகித்சை சொல்லுவதிலும் ஸஹஸ்ர நாம கீர்த்தனம் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறது
கிரஹ சாந்தி சொல்லும் இடத்திலும் வாயு ஸூக்தமும் ஸஹஸ்ர நாம கீர்த்தனமும் செய்ய வேண்டும் என்றும்
இப்படி அநேக இடங்களில் சொல்லப்பட்டு இருப்பதைக் காணலாம்
பட்டபாண: ஸூதிகா க்ருஹ வர்ணநே அவிச்சிந்ந பட்ய மாந நாராயண நாம ஸஹஸ்ரம்” இதி |
லோகே ச க்ரஹண தாரண ஶ்ரவண ஜப ஸம் கீர்தந லேகந வ்யாக்யாந தந் நிஷ்ட பூஜந ப்ரப்ருதிபி:
விஷ-பிஶாச-வ்யாதி-க்ரஹ -து:ஸ்வப்ந-துர் நிமித்தாத் யஶிய உப ஶமநாய,
மஹா பாதகாதி ப்ராயஶ் சித்தாய,
ஐஹிக ஆமுஷ்மிக அப்யுதய ஸித்தயே , ஸம்ஸார॒ க்ரந்தி விஸ்ரம் ஸநாய,
வைஷ்ணவ பரமபத அவாப்தயே , தாதாத் விக பகவத்
குண ஸுதாஸ்வாத ஸுகாய ஆபால மூக மூர்க ஸ்த்ரீ நாஸ்திகைக பேஷஜம்
நிரதிஶய ஶ்ரத்தா பக்தி விஶ்வாஸ பூர்வகம் பரி க்ருஹ்யதே |
ந ஸ ஏவம் வித: பரிக்ரகஹோ வேதாநாமபி; தேஷாம் மூர்காதிபி: அபரிக்ரஹாத்,
குல சரண கோத்ராதி வ்யவஸ்தயா ப்ரதி ஶாகம் பரிக்ரஹ விபாகாச்ச |
ஏவம் பரிக்ரஹ அதிஶயாதப்யஸ்ய உபாதேய தமத்வம் ||
லௌகிகர்களான கவிகளிலும் பட்ட பாண கவி ப்ரஸவ க்ரஹத்தை வர்ணிக்கும் போது
நாராயணனுடைய ஸஹஸ்ர நாம கீர்த்தனம் இடைவிடாமல் செய்கிறார்கள் என்கிறார்
இப்போதும் உலகத்தில் அவ்விதமாக அநேகம் வியாதிகளுக்கும் பாபங்களும் பரிகாரமாக
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் பண்ணுவதைக் காண்கிறோம்
விஷம் பிசாசம் வியாதி க்ரஹம் தீய கனவு அப சகுனம் முதலான வற்றுக்கு சாந்தி செய்வதற்கும்
மஹா பாதகம் முதலான பாதங்களுக்கு ப்ராயச்சித்திக்கும்
இம்மையிலும் மறுமையிலும் மேன்மைகள் கிடைப்பதற்கும்
ஜனனம் மரணம் என்னும் சம்சார விலங்கை விடுவதற்கும்
அவ் விலங்கை விட்டுப் பரம பதம் அடைவதற்கும்
தத் காலத்தில் பகவத் குணங்கள் என்னும் அமுதை உண்டு ஸூகம் பெறுவதற்கும்
குழந்தைகள் ஊமைகள் பித்தர் பெண்கள் நாஸ்திகர் முதலியோரும் மிக்க சிரத்தை பக்தி நம்பிக்கைகளுடன் இத்தை அனுஷ்டிப்பதைக் காண்கிறோம்
இப்படி அங்கீ கரிப்பதற்கு வேதங்களும் இல்லை-மூர்க்கர் வேதங்களை எடுத்துக் கொள்வதும் இல்லை
அந்த அந்த குலம் கோத்ரம் முதலியவற்றுக்கு அந்த அந்த வேத சாகைகள் என்று பிரிக்கப்பட்டு இருப்பதினாலும்
ஒரு சாகையையும் யாவரும் இப்படி கிரகிப்பது இல்லையே
வாஸ்ய பிரபாவம் போல் அல்லவே வாசக பிரபாவம்-
இன்றும் சர்வாதிகாரமாக ஸஹஸ்ர நாம பாராயணம் அனைத்துக்கும் பரிகாரமாக செய்வதைக் கண் கூடாகவே காண்கிறோம்
வேத அத்யயனம் செய்யாதவர்களுக்கு இதுவே கை வந்த மருந்தாகக் காண்கிறோம்
——–
6-கீதாத்யை கார்த்தஸ்ஸ ந:-பகவத் கீதை போன்ற பல நூல்கள் உடன் பொருள் பொருத்தம் உடைய சிறப்பு
கீதாத்யைகார்த்தைஶ்ச –
பாரத ஸித்தாந்த பூத பகவத் கீதா நாராயணீய
யாந ஸந்தி அக்ர பூஜ உத்தம அநுஶாஸந ப்ரப்ருதி ப்ரதேஶாந்தர தாத்பர்ய
நிஷ்கர்ஷ ரூபத்வேந தத் ஏகத அர்தத்வாச்ச|
ஸ்ரீ மத் பகவத் கீதை முதலியவற்றுடன் பொருள் ஒற்றுமை
பகவத் கீதை
நாராயணீயம்
யான சந்தி பர்வம்
அக்ர பூஜை
உத்தம தர்ம அநு ஸாஸனம்
முதலான அநேக இடங்களிலும் தாத்பர்யத்தை இது சுருங்கக் கோருவதால் அவற்றோடு பொருள் ஒற்றுமை இதுக்கு உண்டு
—–
ஏவமேபி: ஷட்பிர் ஹேதுபி: ப்ரேக்ஷா பூர்வ காரிணாம்
பரம உபாதேய தயா நிர்ணீதம்,
வ்யாஸ தேவஶ்ரவோ தேவ ஸ்தாந நாரத
வாத்ஸ்ய அஶ்ம ஸுமந்து ப்ரப்ருதிபி:
ஸகல வித்யா தேஶிகை : ப்ரஹ்ம த்ருஶ்வபி: தேவ ப்ரஹ்ம ரிஷிபி:
ஸ்வயம் ச பகவதா ஸர்வேஶ்வரேண கீத உபநிஷதாசார்யேண பூர்வேஷாமபி குருணா
புண்டரீக விலோசநேந ஶ்ரோத்ரு கோடி நிவிஷ்டேந
பீஷ்மாத் ஸ்ருத்வா அநு மோதிதம் ஶ்ரீமந் நாம ஸஹஸ்ராத்யாயம் பகவத் குண தத்த்வ
ப்ரதி பத்தய வ்யாகுர்மஹே ||
இவ்விதம் ஆறு காரணங்களாலும்
விவேகத்தோடு கார்யங்களை அனுஷ்டிப்பார்களுக்கு இது எல்லாவற்றிலும் சிறந்ததாகவே நிச்சயிக்கப் பட்டு இருக்கிறது
எல்லா வித்யைகளுக்கும் ஆச்சார்யர்களும் ப்ரஹ்ம சாஷாத்காரம் பெற்றவருமான
வ்யாஸர் -தேவ வியாஸரஸ் -தேவ ஸ்தானர் -நாரதர் வாத்ஸ்யர் -அஸ்மர்-ஸூமந்து முதலான
தேவ ரிஷிகளாலும் -ப்ரஹ்ம ரிஷிகளாலும் சொல்லப்பட்டதும்-
பைலர் –வைசம்பாயனர் யஜ்ஜா வர்க்யர்- ஜைமினி போல்வாரைக் கொண்டே வேத பிரிவுகளை பிரசாரம் )
இனி ஏழாவது பெருமை -ஸர்வேஸ்வரனான கீதாச்சார்யனும் முன்னோரான குருக்களுக்கும் குருவான தாமரைக் கண்ணனுமான ஸாஷாத் பகவானே கேட்பவரோடே கூட உட்கார்ந்து கேட்டு அருளி-அங்கீ கரித்து அருளிய இந்த ஸஹஸ்ர நாம அத்யாயத்துக்கு
பகவத் குணங்களின் தத்வ ஞானம் உண்டாவதற்காக வியாக்யானம் செய்கிறோம்
மிதிலைச் செல்வி –தன் சரிதை கேட்டான் பெருமாள்
இன்பம் பயக்க எழில் மாதரும் தாமும் -மிதுனமாக திருவாறண் விளையிலே கேட்டு அருளினார்கள் அன்றோ
பகவத் குண தத்த்வ–பகவத் குண தர்ப்பணம் இதனாலே திரு நாமம்
தொண்டைமான் சக்கரவர்த்திக்கு அங்கு ஏழு நாழிகையில் ஏழு அர்த்தங்கள்
அஷ்ட ஸ்லோஹி யில் -ஆறு சொல்லி -ஏழாவது தனியாக
தேஹாத்ம பிரமம் நிவ்ருத்தி
ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி
அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி –மூன்றும் ஓங்காரம்
ஸ்வ யத்ன நிவ்ருத்தி -நமஸ்
அபந்து -ஆபாச பந்துக்கள் நிவ்ருத்தி நாராயண
விஷய நிவ்ருத்தி ஆய -கைங்கர்ய பிராத்தனை
இப்படி ஆறையும் சொல்லி
நமஸ்ஸில் ஆந்திர அர்த்தமான பாகவத சேஷத்வம் ஏழாவது
அதே போல் இங்கும் பிரதானமாக கண்ணன் தானே அமர்ந்து கேட்டது –
————
இந்த ஏழு காரணங்களால்-:சஹஸ்ர நாம அத்யாய உபாதேய தமோ மத :
உத் = தோஷம் அற்றவன் -தோஷங்களை போக்கடிப்பவன் –
வேதனம் உபாசனம் த்யானம் தர்சனம்/ பஜனம் /சேவை அனைத்துக்கும் விஷயம் அவனது சுபாஸ்ரியமான பகவத் விக்ரகம் தான் —
குஹ்ய தமம் ரஹஸ்யங்களில் உயர்ந்தது திரு நாம சங்கீர்த்தனம்
தேவோ நாம ஸஹஸ்ரவான் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் தமியனேன் பெரிய வப்பனே –திருவாய் 8-1-10-
தமர் உகந்தது எப்பேர் அப்பேர் –
—————————————————————
ஆறாவது கேள்விக்கு பீஷ்மர் பதில் முதலில்
ஜகத்ப்ரபும் தேவதேவம் அநந்தம் புருஷோத்தமம்
ஸ்துவன் நாம ஸ்ஹஸ்ரேண புருஷ ஸததோத்தித
பழுதே பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் –
அசந்நேவ ஸ் பவதி –
அடுத்து 3/4 கேள்விகளுக்கு பதில்
தமேவ சார்ச்யந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன் நமஸ் யம்ஸ்ஸ யஜமாநஸ்த மேவச –சர்வ துக்காதி கோ பவேத்
ஜப ஆலம்பனம்-ஸஹஸ்ர நாமம்
பக்த்யா அர்ச்சயன்
பக்த்யா த்யாயன்
பக்த்யா ஸ்துவன்
பக்த்யா நமஸ்யன்
அச்சுதா அமரர் ஏறே –என்னும் இச்சுவை
பக்திஸ்ஸ ஜ்ஞான விசேஷ –
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -திருவாய் -10-4-1-
வணக்குடை தவ நெறி -1-3-5-
ஸ்ததம் கீர்த்தயந்தோமாம் நமஸ் யந்தஸ் சமாம் பக்த்யா -ஸ்ரீ கீதை -9-14
மன்மநாபவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு -ஸ்ரீ கீதை -9-4
காரணந்து த்யேய
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே —
நாரணன் எம்மான் பாரணங்காளன் வாரணம் தொலைத்த காரணன் தானே –
தானே யுலகெல்லாம் -தானே படைத்திடந்து தானே யுண்டுமிழ்ந்து தானே யாள்வானே
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
ப்ரஹ்ம வித் ஆப்நோதி பரம்
யஜ்ஞென தானேன தபஸா நோசகேன-
வியாசரும் -ஆலோத்யா சர்வ சாஸ்த்ராணி விசார்யச புன புன
இதமேகம் ஸூ நிஷ்பந்தம் த்யேயோ நாராயணஸ் சதா –
ஆலம்பனம் -கூராழி வெண் சங்கேந்தி
வேர் சூடுமவர் மண் பற்று கழற்றாதாப் போலே
ஜ்ஞானியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும் –
தர்மரின் மூன்றாவது கேள்விக்கு -கம் ஸ்துவந்த –
பீஷ்மர் –
தமேவ சார்ச்யந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன் நமஸ் யம்ஸ்ஸ யஜமாநஸ்த மேவச –
அநாதிநிதனம் விஷ்ணும் சர்வலோக மகேஸ்வரம்
லோகாத் யஷம் ஸ்துவன் நித்யம் சர்வ துக்காதிகோ பவேத் –
ப்ரஹ்மணயம் சர்வ தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்தநம்
லோகநாதம் மஹத் பூதம் சர்வ பூத பவோத் பவம் –
10 அடை மொழிகள்
1-அநாதிநிதனம் -ஆதி அந்தம் இல்லாதவன் -தேச கால வஸ்து பரிச்சேதன்
2-விஷ்ணும் -வ்யாப்தி
3-சர்வலோக மகேஸ்வரம்
4-லோகாத் யஷம் -அனைத்தையும் கண்களால் காண்பவன்
5-ப்ரஹ்மணயம் -வேத பிரதிபாத்யன்
6-சர்வ தர்மஜ்ஞம் –
7-லோகாநாதம்
8-மஹத் பூத்
9-கீர்த்தி வர்த்தநம்
10- சர்வ பூத பவோத் பவம் -ஆதி காரணன் –
ஸ்துவன் நித்யம் சர்வ துக்காதிகோ பவேத் -ஸ்துவந்த கம் கேள்விக்கு இப்படி பீஷ்மர் பதில் அருளுகிறார்
யதாததாவபி குண சங்கீர்த்த்தனம் குர்வன்-ஏதோ ஒரு முறையில் திவ்ய நாம திருக் குணங்களைப் பாடுதல் –
இனி ஐந்தாம் கேள்விக்கு -கோ தர்ம சர்வ தர்மாணாம் -பதில்
ஏஷ மே சர்வ தர்மாணாம் தர்மோதி கதமோ மத ‘
யத் பக்த்யா புண்டரீ காஷம் ஸ்தவைரச் சேன்நரஸ் ஸதா –
ஏஷ -மேலே சொல்லப்பட்ட அர்ச்சன ஸ்தவ நாதிகளால்-அன்புடன் பூஜிக்கை –
அதிகதம -மிகச் சிறந்த தர்மம்
யத் பக்த்யா -ப்ரீதி உட் கொண்ட -ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் –
அர்ச்சேத் -ஆராதிப்பவன்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
சதா -கால தேச சுத்தி வேண்டா
அபஹத பாப்மா -அமலன் -விமலன் -நிமலன் -நின்மலன் –
அவன் திரு உள்ளம் உகந்து -விதி வாய்க்கின்று காப்பாரார் –
ஸ்வாராதன் –
கலௌ சங்கீர்த்ய கேசவம் –
அடுத்து கிம் வாப்யேகம் பராயணம் –உபேயம் பற்றி கேள்விக்கு பதில் –
1-பரமம் யோ மஹத் தேஜ–பரம் -மஹத் இரண்டு விசேஷணங்கள்-கோடி சூர்ய சம ப்ரப-
2- பரமம் மஹத் தப -தப -நியந்தா பொருளில்
பீஷாஸ்மாத் வாத பவதே பீஷோ தேதி ஸூர்ய
3-பரமம் மஹத் ப்ரஹ்ம -ஸ்வரூப ப்ருஹத்வம் குண ப்ருஹத்வம் –
ப்ரஹ்மணத்வம் -தன்னை கிட்டியவரை தன்னைப் போலே பெரிதாக்க வல்லவன் –
4-பரமம் பராயணம்
5-பவித்ரானாம் பவித்ரம்
மாதவன் என்று ஓத வல்லீரேல் தீதொன்றும் சாரா
வாயினால் பாடி -..போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
ஹரிர் ஹரதி பாபானி
தத்யதா இஷீக தூல மக்நௌ ப்ரோதம் ப்ரதூயதே -சாந்தோக்யம்
பவித்ரங்களுக்கும் பவித்ரம் அவனே
6- மங்களா நாஞ்ச மங்களம் –
இனி கிமேகம் தைவதம் லோகே -முதல் கேள்விக்கு பதில் –
தைவதம் தேவதா நாம் ஸ -என்று தொடங்கி
மனிதர்க்குத் தேவர் போலே தேவர்க்கும் தேவாவோ -திருவாய் -8-1-5-
லோக ப்ரதானச்ய – ஜகன்நாதச்ய
சர்வ பாபபயாபஹம் நாம சஹச்ரம்
ஸ்ருணுமே-கேள் -தர்மா -தட்டி எழுப்பி சொல்கிறார் பீஷ்மர்
கௌணாநி -குண சேஷ்டிதங்கள்
விக்யாதாநி -பிரசித்தமானவை
ரிஷிபி -சநகர் நாரதர் போல்வார்
பரிகதாநி -எல்லா திக்குகளிலும் அத்யந்த சிநேக பக்திகளுடன் பாடப்பட்டவை
பூதயே -வாழ்ச்சியின் பொருட்டு
பூ சத்தாயாம்
கடல் வண்ணன் பூதங்கள் -திருவாய் -5-2-1-
மஹாத்மநா-தனக்கும் தன் தன்மை அறிவரியான் –
அஹம் வேத்மி மகாத்மா
அப்ரமேயம் ஹி தத்தேஜ –
கிம் ஜபன் முச்ச்யதே உபோத்காதம்
பத்தோ முச்யேத பந்த நாத்யாதி ப்ரஹ்ம ஸநாதநம் -என்று
சம்சார பந்தம் நிவ்ருதியும்
ப்ரஹ்ம பிராப்தியும்
பலமாக சொல்லி முடிகிறது
யதோபாசனம் பலம்
சூழ்ந்து இருத்து ஏத்துவர் பல்லாண்டு -பல்லாண்டு இங்கே -அதே பலன் அங்கும்
———
ஸூபாஸ்ரியமான பகவத் விக்ரகம் தான் —
குக்ய தமம் ரஹச்யங்களில் உயர்ந்தது திரு நாம சங்கீர்த்தனம்
தேவோ நாம ஸஹஸ்ரவான் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் தமியனேன் பெரிய வப்பனே –திருவாய் 8-1-10-
தமர் உகந்தது எப்பேர் அப்பேர் –
அமரர் நன்னாட்டு அரசு ஆள பேர் ஆயிரமும் ஓதுமின்கள் -ஸ்ரீ பெரிய திருமொழி -1-5-10–
இனமலர் எட்டும் இட்டு இமையோர்கள் பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும்
பிரிதி சென்று அடை நெஞ்சே –ஸ்ரீ பெரிய திருமொழி –1-2-7-
ஓதி ஆயிர நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல் ஏதமின்றி நின்று அருளும்
நம் பெரும் தகை இருந்த நல் இமயத்து -1-2-9-
பேர் ஆயிரமுடையான் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே -1-5-4-
பாரு நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவையாயினான் பேருமோர் ஆயிரம்
பேச நின்ற பிறப்பிலி பெருக்குமிடம் –திருவேங்கடம் -1-9-7–
வென்றி கொள் வாள் அவுணன் பகராத அவன் ஆயிர நாமம்-2-4-7-
வருமா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான்
திரு நாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர் -3-2-4-
அண்டரும் வானத்தவரும் ஆயிர நாமங்களோடே திண் திறல் பாட வருவான் சித்திர கூடத்துள்ளானே -3-3-3–
ஓதி ஆயிர நாமமும் பணிந்து ஏத்தி நின்னடைந்தேற்கு -3-5-9-
எண்ணில் பேராளன் பேர் அல்லால் பேசாள் -5-5-7-
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறி துயில் அலை கடல் நடுவே
ஆயிரம் சுடர் வாய் அரவணைத் துயின்றான் அரங்க மா நகர் அமர்ந்தான் -5-7-6–
தாராளன் தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன் முனியாளார் ஏத்த நின்ற பேராளன்
ஆயிரம் பேருடைய வாளன் பின்னைக்கும் மணவாளன் பெருமை -6-6-9-
அமுதம் கொண்ட பெருமான் திரு மார்பன் –நாமம் சொல்லில் நமோ நாராயணமே -6-10-3–
தேனும் பாலும் அமுதமாய் திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே -6-10-6-
பேர் ஆயிரமுடைய பேராளன் பேராளன் என்கின்றாளால் -8-1-6-
திருக் கண்ணபுரத்து உறையும் பேராளன் ஆயிரம் பேர் ஆயிர வாய் அரவணை மேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே -8-3-9–
ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து –11-3-8-
பெற்றாரார் ஆயிரம் பேரானை பேர் பாடப் பெற்றான் கலியன் ஒலி செய் தமிழ் மாலை -11-3-10-
உலகு அளந்த யும்பர் கோமான் பேராளன் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே -11-6-5-
————————–
திருக் கோட்டியூர் கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா வென்று பேசுவார் அடியார்கள்
எந்தம்மை விற்கவும் பெறுவார்களே-பெரியாழ்வார் திருமொழி-4-4-19-
கேசவா புருடோத்தமா வென்றும் கேழலாகிய கேடிலீ என்றும் பேசுவார் எய்தும்
பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே -பெரியாழ்வார் திருமொழி-4-5-1–
—————————-
பேரும் ஓர் ஆயிரம் பிற பலவுடைய எம்பெருமான் பேரும் ஓர் உருவமும்
உளதில்லை இலதில்லை பிணக்கே -ஸ்ரீ திருவாய்மொழி-1-3-4-
பலபலவே யாபரணம் பேரும் பலபலவே பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில் பல பல -2-5-6–
நாமங்கள் ஆயிரமுடைய நம் பெருமான் -5-8-11-
ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற–6 -7 -2 –
ஓர் ஆயிரமாய் உலகு ஏழு அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையன் காராயின
காள நன்மேனியினன் நாராயணன் நங்கள் பிரானே -9-3-1-
ஆயிரம் பேருடை யம்மான் நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி அறியோமே-10-1-2–
சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன் பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே -10-5-8–
——————–
நின்றதுவும் வேங்கடமே பேர் ஓத வண்ணர் பெரிது-ஸ்ரீ முதல் திருவந்தாதி -39-
நினைத்தற்கு அரியானைச் சேயானை ஆயிரம் பேர் செங்கண் கரியானைக் கை தொழுதக்கால் -65-
ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர்– ஸ்ரீ இரண்டாம்-73-
நாமம் பல சொல்லி நாராயணா வென்று நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே –ஸ்ரீ மூன்றாம் -8-
தேசம் திறலும் திருவும் உருவமும் மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத நலம் புரிந்து சென்று அடையும் நன்கு -10-
தான் ஒரு கை பற்றி அலையாமல் பீறக்கடைந்த பெருமான் திரு நாமம் கூறுவதே யாவர்க்கும் கூற்று–ஸ்ரீ நான்முகன் -49-
பேர் பாடி செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் -88-
—————–
திரைக் கண் வளரும் பேராளன் பேரோதச் சிந்திக்க -ஸ்ரீ பெரிய திருவந்தாதி–59-
—————
பேர் ஆயிரமுடையான் என்றாள்—பேர் ஆயிரமுடையான் பேய்ப்பெண்டீர் நும் மகளை தீரா நோய் செய்தான் என உரைத்தாள் —
செங்கண் நெடியானைத் தேன் துழாய்த் தாரானை தாமரை போல் கண்ணானை எண்ணரும் சீர்ப் பேர் ஆயிரமும் பிதற்றி
பெரும் தெருவே ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான் வாரார் பூம் பெண்ணை மடல் –ஸ்ரீ சிறிய திருமடல்
———————————————————————
கிமேகம் தைவதம் லோகே -பவத பரமோ மத –ஒப்பற்ற தெய்வம் யார்
கிம்வாபி ஏகம் பராயணம் -பவத பரமோ மத –அடையத் தக்க பிராப்யம் எது
ஆக பிராப்யம் பற்றி முதல் இரண்டு கேள்விகள் –
ஸ்துவந்த கம் -பவத பரமோ மத -யாரை குண சங்கீர்த்தனம் பண்ணி பூஜித்து
கம் அர்ச்சந்த மாநவா சுபம் ப்ராப்நுயு -பவத பரமோ மத -யாரை பக்தியுடன் உபாசித்து இஹ பர இன்பங்கள் அடைகிறார்கள் –
கோ தர்மஸ் சர்வ தர்மாணாம் -பவத பரமோ மத -தேவரீர் ஸ்வீகரித்த மேலான தர்மம் எது –
கிம் ஜபன் முச்யதே ஜந்து ஜன சம்சார பந்தநாத் -பவத பரமோ மத -எந்த மந்திர ஜபத்தால் பந்தம் அறும்
இவை உபாயம் பற்றிய நான்கு கேள்விகள்
பவத பரமோ மத -உமது அபிப்ராயத்தால் –ப்ரியதமமான பலனையும் ஹிததமமான உபாயத்தையும் கேட்கிறார்
ஆறாவது கேள்விக்கு பீஷ்மர் பதில் முதலில்
ஜகத்ப்ரபும் தேவதேவம் அநந்தம் புருஷோத்தமம்
ஸ்துவன் நாம ஸ்ஹஸ்ரேண புருஷ ஸததோத்தித
பழுதே பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் –
அசந்நேவ ஸ் பவதி –
அடுத்து 3/4 கேள்விகளுக்கு பதில்
தமேவ சார்ச்யந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன் நமஸ் யம்ஸ்ஸ யஜமாநஸ்த மேவச –சர்வ துக்காதி கோ பவேத்
ஜப ஆலம்பனம்-ஸஹஸ்ர நாமம்
பக்த்யா அர்ச்சயன்
பக்த்யா த்யாயன்
பக்த்யா ஸ்துவன்
பக்த்யா நமஸ்யன்
அச்சுதா அமரர் ஏறே –என்னும் இச்சுவை
பக்திஸ்ஸ ஜ்ஞான விசேஷ –
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -திருவாய் -10-4-1-
வணக்குடை தவ நெறி -1-3-5-
ஸ்ததம் கீர்த்தயந்தோமாம் நமஸ் யந்தஸ் சமாம் பக்த்யா -ஸ்ரீ கீதை -9-14
மன்மநாபவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு -ஸ்ரீ கீதை -9-4
காரணந்து த்யேய
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே —
நாரணன் எம்மான் பாரணங்காளன் வாரணம் தொலைத்த காரணன் தானே –
தானே யுலகெல்லாம் -தானே படைத்திடந்து தானே யுண்டுமிழ்ந்து தானே யாள்வானே
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
ப்ரஹ்ம வித் ஆப்நோதி பரம்
யஜ்ஞென தானேன தபஸா நோசகேன-
வியாசரும் -ஆலோத்யா சர்வ சாஸ்த்ராணி விசார்யச புன புன
இதமேகம் ஸூ நிஷ்பந்தம் த்யேயோ நாராயணஸ் சதா –
ஆலம்பனம் -கூராழி வெண் சங்கேந்தி
வேர் சூடுமவர் மண் பற்று கழற்றாதாப் போலே
ஜ்ஞானியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும் –
தர்மரின் மூன்றாவது கேள்விக்கு -கம் ஸ்துவந்த –
பீஷ்மர் –
தமேவ சார்ச்யந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன் நமஸ் யம்ஸ்ஸ யஜமாநஸ்த மேவச –
அநாதிநிதனம் விஷ்ணும் சர்வலோக மகேஸ்வரம்
லோகாத் யஷம் ஸ்துவன் நித்யம் சர்வ துக்காதிகோ பவேத் –
ப்ரஹ்மணயம் சர்வ தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்தநம்
லோகநாதம் மஹத் பூதம் சர்வ பூத பவோத் பவம் –
10 அடை மொழிகள்
1-அநாதிநிதனம் -ஆதி அந்தம் இல்லாதவன் -தேச கால வஸ்து பரிச்சேதன்
2-விஷ்ணும் -வ்யாப்தி
3-சர்வலோக மகேஸ்வரம்
4-லோகாத் யஷம் -அனைத்தையும் கண்களால் காண்பவன்
Leave a Reply