ஸூக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே–1-
யஸ்ய த்விரத வக்த்ராயா பாரி ஷத்யா பரச் சதம்
விக்நம் நிக் நந்தி ஸததம் விஷ்வக் ஸேநம் தாமாஸ்ரயே–2-
வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே பவுத்ர மகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே ஸூக தாதம் தபோ நிதம்–3-
வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே
நமோ வை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம-4
அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
ஸதக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே-5
யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்த நாத்
விமுச்யதே நமஸ் தஸ்மை விஷ்ணவே ப்ரப விஷ்ணவே-6-
ஓம் நமோ விஷ்ணவே ப்ரப விஷ்ணவே
—————
ஸூக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ந உப ஸாந்தயே –1
ஸர்வ விக்னம் உபசாந்தி அர்த்தத்துக்கு
வெண் பட்டாடை அணிந்து
எங்கும் நிறைந்து
சந்த்ர வர்ணன் -ஆஹ்லாத கரத்வம்
நான்கு திருத்தோள்கள் உடன் விளங்கி
பிரஸன்ன வதனம் -மதுர வீக்ஷணம் -பேசத் துடிக்கும் அதரம் –
த்யாயேத் -த்யானிப்பாய்
அதுக்கு ஏற்ற ஸூபாஸ்ரய திரு மேனியை வர்ணித்து –
வேப்பன்குடி நீரையோ குடிக்கச் சொல்கிறது
பாலைக் குடிக்கக் காலைப் பிடிக்கிறார்
——–
யஸ்ய த்விரத வக்த்ராய பாரி ஷத்யா பரச்சதம்
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக் ஸேநம் தமாஸ்ரயே –2
யஸ்ய விரத -யானை முகம் -கஜேந்திர -மங்கள ஸ்லோகம் -விஷ்வக் சேனர் –
நூறு நூறு பிரதானர்கள் கொண்டவர்
வாசல் காப்பார் உடன் கூடிய விஷ்வக் சேனரை ஆஸ்ரயிப்போம்
விக்னங்கள் தொலையவே விஷ்வக் சேனர் ஆராதனம் தொடங்குகிறோம்
முதல் ஸ்ரீ வைஷ்ணவர் இவரே
நம்மாழ்வார் தொண்டர் தொண்டர் சடகோபன் பெருமை கொண்டவர்
———
வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே பவுத்ரம் அகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே ஸூக தாதம் தபோ நிதம்–3-
வ்யாஸம் -கிரந்த கர்த்தா பரம்பரை -வந்தே கிரியா பதம்
வசிஷ்ட நப்தாரம் -பேரனுக்குப் பிள்ளை
ப்ரஹ்மா வசிஷ்டர் தொடங்கி -சக்திக்கு பேரன்-அகல்மஷம் குற்றம் அற்ற -பராசர மகரிஷிக்கு பிள்ளை
———
வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே
நமோ வை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம–4-
வ்யாஸாய –நமோ நம -மீண்டும் நமஸ்காரம்
வசிஷ்டர் குலம் -விஷ்ணு அவதாரம் -விஷ்ணு ரூபாயா நம
முக்ய அவதாரம் –
ஸ்வரூப ஆவேச -சக்தி ஆவேச அவதாரங்கள்
வ்யாஸ ரூபாய விஷ்ணுவே நம
ப்ரஹ்ம ஞானம் நிதி இவரே
———
அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
சதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே–5-
அவிகாராய -ஸ்வரூபத்தாலும் ஸ்வ பாவத்தாலும் -ரூபத்தாலும் விகாரம் இல்லையே
ஆத்மாவுக்கு ஸ்வரூப விகாரம் இல்லை –
தளிர் புரையும் -ஸ ஏகாகி ந ரமேத -கர்மாதீனம் இல்லை கிருபாதீனம் இவை
ஸூத்தாயா
நித்யாய –
பத்த முக்த நித்ய இதர ஸமஸ்த விலக்ஷணன்
பரமாத்மனே -இவன் ஒருவனே
நம
ஸதா ஏக ரூப ரூபாய -ஸ்வரூபம் உருவான -அந்தாம –கண்கள் சிவந்து -விஜூர ப்ரமோத -பக்தர் அதீனம்
விஷ்ணவே -சர்வ ஜிஷ்ணவே -எங்கும் வியாபித்து வெற்றி அளிப்பவன்
——–
யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தநாத்
விமுச்யதே நமஸ் தஸ்மை விஷ்ணவே ப்ரப விஷ்ணவே–6-
யஸ்ய ஸ்மரணம் மாத்ரத்தால் ஜென்ம ஸம்ஸார பந்தம் விமுச்யதே
நமஸ் தஸ்மை விஷ்ணவே நம
இங்கும் ஆறு ஸ்லோகங்கள்
ஆறு பத்துக்களில் திருவாய் மொழியில் எல்லாம் உண்டே
——–
த்யானம்
ஷீரோ தந்வத் பிரதேச சுசி மணி விலஸத் ஸைகதே மௌக்தி நாம்
மாலா க்லுப்தாஸ நஸ்த ஸ்படிக மணி நிபைர் மௌக்திகைர் மண்டிதாங்க–
சுப்ரை ரதப்ரை ருபரி விரசிதைர் முக்த பீயூஷ வர்ஷை
ஆனந்தீ நஸ் புநீயாதரி நளின கதா சங்க பாணிர் முகுந்த–
1-ஷீரோ தந்வத் பிரதேச —முகுந்த-
பரிசுத்தமான ரத்னங்களாலே பிரகாசிக்கிற மணல் குன்றுகளை யுடைய திருப்பாற் கடலில்
முத்து மாலைகளால் அலங்கரிக்கப் பட்ட திவ்ய ஆஸனத்தில் எழுந்து அருளி இருப்பவரும்
ஸ்படிக மணி போல் விளங்குகிற முத்து மாலைகளால் அலங்கரிக்கப் பட்ட திரு மேனியை யுடையவரும்
மேலே ஸஞ்சரிக்கிற வெண்மையான அநேக மேகங்களால் வர்ஷிக்கப் பட்ட –பீயூஷ வர்ஷை-அம்ருத தாரைகளாலே ஸந்தோஷிப்பவரும்
சக்ரம் பத்மம் கதை சங்கம் ஆகிய இவைகளைத் திருக் கரங்களில் யுடையவரும்
பக்தர்களுக்கு முகுந்த-போக மோக்ஷங்களை அளிப்பவருமான
ஸ்ரீ மன் நாராயணன் நம்மைப் பரிசுத்தம் ஆக்க வேண்டும்
———
2-பூ பாதவ் யஸ்ய நாபிர் வியத ஸூரா நிலஸ் சந்த்ர ஸூர்யவ் ச நேத்ரே
கர்ணா வாஸாஸ் சிரோ த்யவ்ர் முகமபி தஹநோ யஸ்ய வாஸ்தேயமப்தி
அந்தஸ்தம் யஸ்ய விஸ்வம் ஸூர நரகககோ போகி கந்தர்வ தைத்யை
சித்ரம் ரம் ரம்யதே தம் த்ரி புவந வபுஷம் விஷ்ணும் ஈசம் நமாமி-
பூ பாதவ் யஸ்ய —விஷ்ணும் ஈஸம் நமாமி
யாருக்கு பூமி திருவடிகளோ
ஆகாசம் நாபியோ
வாயு பிராணனோ
சந்த்ர ஸூர்யர்கள் கண்களோ
திசைகள் காதுகளோ
ஸ்வர்க்கம் திருமுடியோ
அக்னி திரு முக மண்டலமோ
கடல் நாபியின் கீழ் பாகமோ –வாஸோயம் என்பது பதம் -இந்தக்கடல் யாருக்கு ஆடையோ
தேவர்கள் மனிதர்கள் பக்ஷிகள் பசுக்கள் பாம்புகள் கந்தர்வர்கள் அஸூரர்கள் இவர்களால்
பலதரப்பட்ட இந்த உலகு எவருடைய உதரத்தில் களிப்புடன் இருக்கின்றதோ
மூன்று புவனங்களையும் திருமேனியாக யுடையவரும்
ஸர்வ ரக்ஷகரான ஸ்ரீ விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –
விராட் ஸ்வரூப வர்ணனை -தியானிக்க விஸ்வ ரூபம் -தெரியாத 14 லோகங்களைக் கொண்டு தியானிக்க முடியாதே
கோல மேனி -திவ்ய மங்கள விக்ரஹம் தியானிக்க -பரிக்ஷித்துக்கு ஸூகர்-
பவ்வ நீருடை யாடையாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா
செவ்வி மாதிரமெட்டும் தோளா வண்டம் திரு முடியா நின்றான் பால் செல்ல கிற்பீர்
கவ்வை மா களிருந்தி விண்ணி ஏற்றிக் கழல் மன்னர் மணி முடி மேல் காகமேறத்
தெய்வ வாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம், சேர்மின்களே –6-6-3-திருநறையூர் எம்பெருமானை மங்களாசாசனம்
திருமுடியா நின்றான் (6. 6: 3) (பவ்வம் – கடல்: உடை ஆடை – அரையில் உடுத்தும் பீதாம்பரம்; பார் அகலம்-பூமிப்பரப்பு; பவனம்-வாயு மெய்-திருமேனி, செவ்வி-அழகிய, மாதிரம்-திசை; தோள்-புயம்; அண்டம்-அண்ட பித்தி; திருமுடி-திருஅபிஷேகம்! என்று அவன் ஜகத்ஸ்வரூபியாய் இருக்கும் தன்மையை அழகிய உருவகத்தால் அநுபவித்து மகிழ்கின்றார். எங்கும் பரவி (விபு) நிற்கும் எம்பெருமானுக்குக் கடல் நீர் அரையில் உடுக்கும் பீதாம்பரமாகின்றது; பூமிப் பரப் பெல்லாம் திருவடியாகின்றது; வாயுவெல்லாம் திருமேனி யாகின்றது; எட்டுத் திசைகளும் திருத்தோள்களாகின் றன; அண்டகடாகம் திருமுடியாகின்றது. ஆக இவ் வகைகளினால் ஜகத்ரூபியாயிருக்கின்ற எம்பெருமான்
—————–
3-சாந்தாகாரம் புஜக சயனம் பத்ம நாபம் ஸூரேசம்
விஸ்வா தாரம் ககந ஸத்ருசம் மேக வர்ணம் ஸூப அங்கம்
லஷ்மீ காந்தம் கமல நயனம் யோகி ஹ்ருத் த்யான கம்யம்
வந்தே விஷ்ணும் பவ பய ஹரம் ஸர்வ லோக ஏக நாதம்
சாந்தாகாரம் —–ஸர்வ லோக ஏக நாதம்
சாந்தமான ஆகாரத்தை யுடையவரும்
ஆதி சேஷன் மீது பள்ளி கொண்டவரும்
தாமரை பூத்த திரு நாபியை யுடையவரும்
தேவர்களுக்குத் தலைவரும்
விச்வா தாரம் -விஸ்வத்துக்கு ஆதாரமாக -விஸ்வமே வடிவாக யுடையவரும்
ஆகாசத்தைப் போல் எங்கும் நிரம்பி இருப்பவரும்
நீல மேகம் போன்ற வடிவம் யுடையவரும்
உத்தம லக்ஷணங்கள் பொருந்திய அங்கங்கள் யுடையவரும்
லஷ்மீ பதியும்
செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடையவரும்
யோகிபிர் த்யான கம்யம் -யோகிகளால் தியானத்தால் அடையப்படுபவரும் என்றும்
யோகிகளுடைய ஹ்ருதயத்தில் தியானத்தினால் அறியப்படுபவரும்
பிறவியின் பயத்தைப் போக்குபவரும்
ஸகல லோகங்களுக்கும் தலைவருமான
விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன்
———-
4– மேகஸ்யாமம் பீத கௌஸேயா வாஸம் ஸ்ரீ வத் சாங்கம் கௌஸ்துப உத்பாஸி தாங்கம்
புண்யோபேதம் புண்டரீகாய தாக்ஷம் விஷ்ணும் வந்தே ஸர்வ லோக ஏக நாதம் —
மேகஸ்யாமம் –ஸர்வ லோக ஏக நாதம்
நீல மேகம் போன்ற கரிய திரு மேனியை யுடையவரும்
பீதாம்பரத்தைத் தரித்தவரும்
ஸ்ரீ வத்ஸம் என்னும் மறுவை அடையாளமாக யுடையவரும்
கௌஸ்துபம் என்னும் மணியினால் பிரகாசிக்கின்ற அங்கத்தை யுடையவரும்
புண்ய புருஷர்களால் சூழப் பட்டவரும்
தாமரை மலர் போன்ற விசாலமான திருக் கண்களை யுடையவரும்
ஸர்வ லோகங்களுக்கும் ஒப்பற்ற தலைவருமான
ஸ்ரீ யபதியை நமஸ்கரிக்கிறேன் –
———–
ஸ சங்க சக்ரம் ஸ கிரீட குண்டலம் ஸ பீத வஸ்த்ரம் ஸராஸீ ருஹ ஈஷணம்
ஸ ஹார வக்ஷஸ்தல ஸோபி கௌஸ்துபம் நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்ப்புஜம்
திவ்ய ஆயுதங்கள்
திவ்ய ஆபரணங்கள்
மஞ்சள் பட்டாடை சாத்தி
ஸ்ரீ கௌஸ்துபம் சாத்தி
விஷ்ணுவை வணங்குவோம்
சாயாயாம் பாரி ஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸ நோபரி
ஆஸீ நமம் புதஸ் யாமம் ஆயாதாஷாம் அலங்க்ருதம்
சந்த்ராநநம் சதுர் பாஹும் ஸ்ரீ வத் ஸாங்கித வக்ஷஸம்
ருக்மிணீ ஸத்ய பாமாப்யம் ஸஹிதம் கிருஷ்ணம் ஆஸ்ரயே –
தங்க ஸிம்ஹாஸனம்
பாரிஜாத கொடிக்கு கீழே
மேக ஸ்யா மளன்
ஆயாதாஷா -நீண்ட அப் பெரிய வாய திருக் கண்கள்
நான்கு திருத்தோள்கள்
ஸ்ரீ வத்ஸவம் திரு மார்பில்
ருக்மிணி சத்ய பாமை பிராட்டிமார் ஸஹிதம்
————
தத்ர ப்ராகேவ பௌந:புந்யேந தத்ர தத்ர பர தத்த்வ பரேஷு
ப்ரதேஸேஷு அஸேஷார்த- நிர்ணய ஶ்ரவணாத் துஷ்டம் மந்ய தயா
ஸ்வயமப்ருச்சதே ஜநமேஜயாய பரம ஸௌஹார்தாத் அந்யத் குஹ்ய தமம் க்ராஹயந் ஸ்வயமேவ,
ஶ்ரீவைஶம்பாயந உவாச-
ஶ்ருத்வாதர்மாந ஸேஷேண பாவநாநி ச ஸர்வஶ:| யுதிஷ்டிர: ஶாந்தநவம் புநரே வாப்ய பாஷத || 1 ||
அதில் முதலிலேயே பலமுறை பரதத்வத்தைச் சொல்லுகிற பல இடங்களிலே விசேஷ அர்த்தங்களை
நிச்சயித்துக் கேட்டுத் திருப்தி யானதாக நினைத்துக் கொண்டு இருப்பதனால் வினவாமல் இருக்கும் ஜனமேஜயருக்கு
அவர் இடம் உள்ள பேர் அன்பினால் மற்றொரு மிக்க ரஹஸ்யத்தைத் தெரிவிப்பதற்காக வைசம்பாயனர் தாமாகவே சொல்லாத தொடங்குகிறார்
ஜனமேஜர் வினவினார் என்று இல்லாமல் வைசம்பாயனர் தானே சொல்லாத தொடங்கினார் என்று தொடங்கி இருப்பதைக் காணலாம்
பூமா வித்யை சனத்குமாரர் நாரதருக்கு உபதேசம் -இதே போல்
கண்ணன் -ஆறு அத்யாயம் சொல்லி பக்தி யோகம் பற்றி அர்ஜுனன் கேட்க்காமலேயே 7 அத்யாயம் சொல்லி
மீண்டும் 10 அத்யாயம் சொல்லத் தொடங்கியது போல்
மூவர் அனுபவம்
ஶ்ருத்வேத்யாதி|தர்மாந் ஶ்ருதி ஸ்ம்ருத்யாதி சோதநா லக்ஷணாப்யுதயநி:
ஶ்ரேயஸ பலாந் ராஜ மோஷ தாந தர்ம ரூபேண பஹூந் |
அஸேஷேண- கார்த்ஸ்ந்யேந,
யே ச யாவந்த: தாவதஶ்ச இத்யர்த:|
பாவ நாநிச தபஸ் தீர்த ஸேவாதீநி ஶுத்தி கராணி ச |
ஸர்வஶ:—–— ஸர்வ ப்ரகாரம்; பலத:அங்கத: ஸ்வரூபத: அதிகார தஶ்ச |ஶ்ருத்வா யுதிஷ்டிர:-
ஸாக்ஷாத் தர்ம ஸூநு:|ஶாந்தநவம் ஶந்தநோர் கங்காயாம் ஜாதத்வேந அபிஜாத தமம்|
ஸ்ரீ வைசம்பாயனர் உவாஸ –சொல்லலானார்
ஸ்ருத்வா தர்மான் –அப்ய பாஷத
யுதிஷ்ட்ரர் -ராஜ தர்மம் -மோக்ஷ தர்மம் -தான தர்மம் போன்ற ஸாஸ்த்ர விஹிதமான தர்மங்களையும்
தவம் தீர்த்த யாத்திரை முதலிய பாவனார்த்தமானவற்றையும்
அவற்றின் அங்கங்கள் செய்யும் முறை -அதிகாரி ஸ்வரூபம் எல்லாவற்றையும் கேட்டபிறகு
பீஷ்மரை நோக்கித் திரும்பவும் வினவலானார்
கேட்டவர் சாஷாத் தர்ம தேவதையின் புதல்வர்
சொன்னவர் சந்தனுவுக்கு கங்கையிடம் பிறந்தவர்
இருவரும் உத்தம குலத்தில் பிறந்தவர்கள்
புநரே வாப்ய பாஷத –
புநஶ்ச பப்ரச்ச | புந:ப்ருச்சா ச பீஷ்மேண
ஆத்மநீநதயா ஸ்வீக்ருதமதம் ஜ்ஞாதும்;
‘ கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:’ இத்யநந்தரோக்தே 😐
தச்ச ஸதாசார ப்ராவண்யாத் |
ஸந்தோ ஹ்யாசார்யநிஷ்டாம் அந்விஷ்ய தத் ருசி பரிக்ருஹீத மேவ
தத்த்வம் ஹிதம் ச ரோசயந்தே ; ந து ப்ராமாணிகத்வ மாத்கரண ||1 ||
சாதுக்கள் தம் ஆச்சார்யர் உகந்து அனுஷ்டிப்பதையே அனுஷ்டிப்பார்களே யல்லாமல் பிரமாணத்தை மாத்திரம் ஆதாரமாகக் கொள்வதை விரும்ப மாட்டார்கள்
ஆகையால் பீஷ்மர் தமக்கு ஹிதமாகக் கொண்டு இருக்கும் ஆசாரத்தை தெரிந்து கொள்ளும் விருப்பத்தினால் திரும்பவும் வினவலானார்-என்றார்-
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் -ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமாய் இருக்க வேண்டுமே
பவத பரமோ மத என்று மேலே வருவதால் இது நன்கு விளங்கும்
யுதிஷ்ட்ரர் சதாசார்யத்தில் ஈடுபட்டவர் ஆதலால் இங்கனம் கேட்கலானார் –
வைசம்பாயனோ ஜனமேஜயமுவாச:
ஶ்ருத்வா தர்மானஷேஷேன பாவனானி ச ஸர்வஶ: |
யுதிஷ்டிர: ஷாந்தனவம் புனரேவாப்யபாஷத||
பயிலும் சுடர் ஒளி மூர்த்தி- நெடுமாற்கு அடிமை கேட்டு- மதுரகவி நிஷ்டை
திரிபுரா தேவி -உடையவர் காட்டும் பரம் பொருளையே ஆஸ்ரயிப்போம்
தத்ரேதம் ஆதாமேவ உதைரிராம—ப்ரேக்ஷாவத்பிஸ் : ப்ரமாணேந பரிச்ச்த்ய
அநுகூலம் ப்ரமேயம் உபாதேயமிதி | தச்ச த்வைதம் வர்ததே உபாயா உபேயாத்மநா |
விவேகிகள் ப்ரமாணத்தைக் கொண்டு -ப்ரமேயத்தை -விஷயத்தை பகுத்து அறிந்து அதில்
அனுகூலமான ப்ரமேயத்தை ஆதரிப்பார்கள் என்று முன்னமே அவதாரிகையில் சொல்லப் பட்டது
தத்வம் ஹிதம் புருஷார்த்தம் மூன்றுமே அறிய வேண்டுவது-அதுவே உபாயம் உபேயம் இரண்டாகும்
அப்படிப்பட்ட ப்ரமேயம் உபாயம் உபேயம் என்று இரண்டு வகைப்படும்
உபாயம் -சாதனம் -காரியத்துக்கு இன்றியமையாதது
உபேயமாவது ஸாத்யம் -பயன் –
உபேயம் ச ப்ரிய ப்ரிய தர ப்ரிய தம ரூபேண த்ரைதம்|
உபாயஶ்ச ஹித ஹித தர ஹித தம ரூபேண|
தத்ர உபேயஸ்ய ஜந்ம ருத்தி பரிணாமா நித்யத்வாதய:, சேதந தர்மா: க்லேஶ கர்ம விபாகா ஆஶயாஶ்ச கதோஷா:;
குணாஶ்ச தோஷ அஸம்பேத ருசிரத்வ ஸ்தாவரத்வ பூயஸ்த்வ விஶிஷ்டா:
ஸம்வித ஆநந்வ ஐஶ்வர்ய விபூதி விஸேஷாதய:|
உபாயஸ்ய து வ்ய யாயாஸ பூயஸ்த்வ வ்யபிசாரித்வ பல்கு பலத்வாதகயா தோஷா:|
குணாஶ்ச நியத நிரபாய லகு தர பஹு பலேத்வாதய:|
உபாயம் -ஹிதம் ஹித தரம் ஹித தமம்-என்று மூன்று வகைப்படும்
உபேயம் -பிரியம் பிரிய தரம் பிரிய தமம்-என்று மூன்று வகைப்படும்
உபேயத்துக்கு பிறப்பு வளர்ச்சி மாறுபாடு அழிவு போன்ற தர்மங்களும்
கிலேசம் கர்மம் -விபாகம் -அதாவது கர்ம பலங்களான -ஜென்மம் ஆயுள் போகம் முதலியவையும்
ஆசயம் -மனத்தின் கண் உள்ள ஸம்ஸ்காரம் முதலிய சேதனர்களுக்கு உரிய தர்மங்களும் தோஷங்களாகும் –
குணங்களோ -தோஷம் கலவாமல் -ருசிரத்வ -அதாவது அழகு அமைந்து அழிவில்லாது மேம்பாடுடைய-பேர் அறிவு ஆனந்தம் ஐஸ்வர்யம் முதலிய விபூதி விசேஷங்களாம்
உபாயத்துக்கு -பெரும் செலவு செய்வதற்கு அருமை கருதிய பயனைப் பயவாமை- சிறு பயனுடைமை ஆகியவை தோஷங்களாகும்
குணங்களோ பயணித்த தவறாது அளித்தல் -அபாயம் இல்லாமை -செய்வதற்கு எளிமை -மிகு பயன் அளித்தல் போன்றவையும்
ஏவம் வித தோஷ ஹாந குணவத்த்வ தார தம்யேந உபாக உபேயயயோ : தர தம பாவ: உபயத்ராபி ஸம் பவதி |
உத்க்ருஷ்ட தமே உத்க்ருஷ்ட உத்க்ருஷ்ட தரயோ : நிக்ருஷ்டவத் வர்ஜநீயத்வமேவ |
உபாய உபேயங்களில் இப்படிப்பட்ட குண தோஷங்கள் ஏறக்குறைய இருப்பதால் தாரதம்யம் உண்டாகக் கூடும்
குணங்களைக் கொள்ளுதலில் மேல் உள்ளத்தை நோக்க கீழ் உள்ளவை குறைந்தவையாகத் தோன்றும்
ஆதலால் உத்க்ருஷ்ட தமத்தை நோக்க உத்க்ருஷ்ட தரமும் உத்க்ருஷ்டமும் நிஷ்க்ருஷ்டங்கள் போலவே விடத் தக்கவையே யாகும்
அசாரம் -அல்ப சாரஞ்ச -சாரம் -சார தரம்- தள்ளி -சார தமம் கொள்ள வேண்டுமே
தத்ர அநிஷ்டேப்ய: இஷ்டேப்யோ அபி நிக்ருஷ்டேப்ய: நிஷ் க்ருஷ்ய உத் க்ருடதமமுபாதாதும் உபாய உபேயௌ ஹை தாரதம்யேந ப்ரஷ்டவ்யௌ |
தௌ ச விவக்ஷாவஸேந ஷோடா விபஜ்ய ப்ருச்சந் யுதிஷ்டிர உவாச, கிமேகமிதி ஶ்லாேக த்வயேந |
ஆகையால் யுதிஷ்ட்ரர்
அநிஷ்டத்தையும்
இஷ்டத்தில் தாழ்ந்தவையையும் -விலக்கி
மிகச் சிறந்த இஷ்டத்தைக் கைக் கொள்ள விரும்பி
உபாய உபேயங்களைத் தாரதம்யப்படி நன்றாகக் கேட்டுத் தெளிய வேண்டும் என்னும் கருத்துடன்
அவற்றை ஆறு விதமாகப் பிரித்து
இரண்டு ஸ்லோகங்களாலே கேட்க்கிறார் –
கிமேகம் தைவதம் லோகே கிம் வாப் யேகம் பராயணம்
ஸ்துவந்த கம் கமர்ச்சந்த ப்ராப்யுனுயுர் மாநவா ஸூபம்
கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத: |
கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்ம ஸம்ஸார பந்தனாத் ||
இங்கு இரண்டு ஸ்லோகங்களில் ஆறு கேள்விகள்
நாலு ஸ்லோகங்களில் ஆறு அவதார ரஹஸ்யங்கள் கண்ணன் கீதையில்
ரஹஸ்ய சிகாமணி -வராஹ சரம ஸ்லோகம் -இரண்டு ஸ்லோகங்களில் ஐந்து அர்த்தங்கள் -மூவர் அனுபவம் இங்கும்
ஸ்வ ஞானம் -ப்ராப்ய ஞானம் -ப்ராபக ஞானம் -மூன்றுமே முமுஷுவுக்கு வேண்டுமே
ஆத்மாவைத் தெரிந்து கொள்வது என்றாலே தேகத்தை விட வேறுபட்டு -அவனுக்கு சேஷம் –
மற்ற இரண்டு தத்வங்களைக் காட்டிலும் வேறுபட்டு
அவனுக்கு பிரகாரமாய் -சரீரமாய் -சேஷமாய் இருப்பவன் என்று அறிய வேண்டுமே
இவற்றையே தத்வ ஹித புருஷார்த்த ஞானங்கள் என்பர் –
முமுஷுக்கு அறிய வேண்டும் ரஹஸ்யங்கள் மூன்று-அவற்றில் சொல்ல வந்ததும் இந்த மூன்றுக்கே
இவை ஒன்றுக்கு ஓன்று தொடர்பு கொண்டவை தானே
ஏதத் அந்யத -ஞானம் உதவாதே
தத்வம் பற்றி ஒரு கேள்வி–முதலில்
ப்ராப்யம் பற்றி ஒரு கேள்வி-அடுத்து –
உபாயம் பற்றி நான்கு கேள்விகள் -இதில் தானே பல வழிகளும் -சங்கைகளும் உண்டு -ஆகவே அநேகம்
ஸித்த ஸாத்ய ஸா ஆலம்பன மூன்று வகை உபாயங்கள் உண்டே -இவை பற்றி நான்கு கேள்விகள்
பவத: பரமோ மத: |லோகே-இவற்றை அனைத்திலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
கிமேகம் தைவதம் லோகே பவத: பரமோ மத: | –லோகே ஸாஸ்த்ரத்தில் தத்வம் பற்றிய கேள்வி -ஏகம் ஒப்பற்ற ஒப்பில்லா அப்பன் –
ஒத்தால் மிக்கார் இலையாய மா மாயன் -ஏக தைவதம்
லோகே -கிம் வாப் யேகம் பராயணம்-பவத: பரமோ மத: |-பரமமான உபேயம் -லோகே இங்கும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
லோகே-ஸ்துவந்த கம் -பவத: பரமோ மத: |-மூன்றாவது கேள்வி
லோகே-கம் அர்ச்சந்த-பவத: பரமோ மத: | -நான்காவது கேள்வி
ப்ராப்யுனுயுர் மாநவா ஸூபம்
கோ தர்ம: ஸர்வ தர்மானாம் பவத: பரமோ மத: |
கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்ம ஸம்ஸார பந்தனாத் ||
இந்த ஆறு கேள்விகளுக்கும் -6-4-3-5-2-1–இந்த முறையில் பதில்கள்
———
அவதாரிகை
தத்ர உபாயஸ்ய உபேய அர்தத்வாத், ப்ரதாந பூதம் உபேயம் ப்ருச்சந்
தஸ்ய ச தத்த்வ ஶாஸ்த்ரேஷு பர தத்த்வ பரம ப்ராப்யாத்மநா த்வேதா உபதேஶ தர்ஶநாத்,
பர தத்த்வ ரூபம் ப்ருச்சதி –
யுதிஷ்டிர உவாச
கிமேகம் தைவதம் லோகே கிம் வாऽப்யேகம் பராயணம் |
உபாயத்தை அறிவது உபேயத்தை அடைவதற்கு ஆதலின்
காரணமான உபாயத்தை விட்டு
பிரதானமான உபேயத்தை முதலிலே கேட்கத் தொடங்குகிறார்
அது தத்வ சாஸ்திரங்களில்
பர தத்வம் என்றும்
பரம ப்ராப்யம் என்றும்
இரண்டு வகை யாகக் கூறப்படும்
அவற்றில் பர தத்வ ரூபமான உபேயத்தை முதலில் வினவுகிறார்
கிமேகம் தைவதம் லோகே
கிமேகமிதி|
லோகே இதி ப்ரதி ப்ரஶ்ந மநுஷஜ்யதே ;
பவத: பரமோ மத:
இதி ச ஸிம்ஹ அவலாேகந ந்யாயேந |
யதார்ஹம் ச விபக்தி: விபரிணமநீயா|
லோக்யதே அநேநேதி லாேகே :,
ஶ்ருதி ஸ்ம்ருத்யாதி ஶரீரம் ஶாஸ்த்ரம்|
ஏகம் –ப்ரதாநம் -ஸமாதிக ரஹிதம்,
’பரமம் யோ மஹத் தேஜ:’,
’தஸ்ய லாேக ப்ரதாநஸ்ய’ இதி ப்ரதி வசந அநு குண்யாத் |
ந ச அயம் ஸ்வரூப மாத்ர பர:
ஏகத்வ ஸம்க்யாபரோ வா ஏக ஶப்த:;
தைவதம் இதி ப்ராதிபதிகைக வசநாப்யாம் ஸித்தத்வாத், –தயோர் வ்யாவர்த்ய அபாவாச்ச;
முதலாவது வினா -கிமேகம் தைவதம் லோகே -சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட ஒப்புயர் வற்ற கடவுள் யார்
லோகே -என்பது ஸாஸ்த்ரம்
இதனை எல்லாக் கேள்விகளிலும் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்
தைவதம் என்பது பிரகாசித்தல் முதலிய வேறே மற்று ஒன்றுக்கு இல்லாத பரமேஸ்வரத் தன்மையுடன் கூடியதும்
தத்வ சாஸ்த்ரங்களால் பிரதிபாதிக்கப்படுவதும்
உமக்கு மிக்க அபிமதமுமானது -என்பது கருத்து-பர தத்வம் பரஞ்சோதி பரமாத்மா பராயணம் -எல்லாமே நாராயணனே –
மேலே வரும் பவத பரமோ மத -என்பதையும் எல்லா வினாக்களில் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்
இது ஸிம்ஹ அவ லோகநம்-சிங்கத்தின் நோக்கு –
இடத்துக்கு ஏற்ப வேற்றுமை உருபை மாற்றிக் கொள்ள வேண்டும் –
ஏகம் -என்றது -எண்ணிக்கையும் தனித் தன்மையும் சொல்ல வரவில்லை -தைவதம் சொல்லவே இவை சித்தம்
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -தன்னிகர் அற்றவன் -தைவதம் -ஒளி- விளையாட்டு -பரம ஐஸ்வர்யம் -பல அர்த்தங்கள்
இத்தையே-ஏகத்வ ஸம்க்யாபரோ வா ஏக ஶப்த:;
தைவதம் இதி ப்ராதிபதிகைக வசநாப்யாம் ஸித்தத்வாத், –தயோர் வ்யாவர்த்ய அபாவாச்ச;–
மாம் ஏகம் -இங்கு ஸ்வீ காரத்தில் உபாய பாவம் தவிர்க்கிறது போல் இங்கும்-
ந ஹி கிம்சித் தைவதம் அஸ்வ ரூபம் அநேகம் வாஅஸ்தி, யேந கஸ்யசித் தைவ ஏகத்வம் விஸேஷ:; ததநுகுண ப்ரதி வசந அபாவாச்ச |
தைவதம்– த்யோதநாதி பரம ஐஶ்வர்ய அஸாதாரண குண சிஹ்நிதம் ,
தத்த்வ ஶாஸ்த்ரேஷு ப்ரதி பாத்யம் பவத:கிம் பரமம் மத மித்யர்த:|
அயம் ச ஶாஸ்த்ரேஷு ஸமயேஷு ச ஸர்வாதிகம் தத்த்வம் அப்யுபேயுஷாம் அபி மாயாத்த யௌபாதிக விவர்த பரிணாம விஸேஷ
நிர்வாஹ்ய ஜ்ஞாந ஶத்யாத்ய ஐஶ்வர்யத்வ ஸ்வாபாவிக ஸர்வ ஐஶ்வர்யத் வாததௌ ஸாமாந்யதோ விஸேஷ தஶ்ச
ஹரி ஹர ஹிரண்ய கர்பாதி தத்த்வ பராவர பாவேந விப்ரதிபத்தி தர்ஶநேந
ஸாஸ்த்ரங்களிலும்-ஸமயேஷு-சம்ப்ரதாயம் -அந்த அந்த மதங்களிலும்
அப்யுபேயுஷாம் அபி –பரதத்வம் ஓன்று உண்டு என்று ஒத்துக் கொள்பவர்களும்
ஸர்வேஸ்வரனுக்கு ஞான சக்தி முதலிய ஐஸ்வர்யங்கள்
மாயையின் சம்பந்தத்தால் என்றும்
இயற்கையால் என்றும்
சந்தேகப்படுவதோடு -விசேஷமாக
ஹரி
ஹர
ஹிரண்ய கர்ப்பாதி
தத்துவங்களில் ஏற்றத் தாழ்வு கருதப்படுதலாகிய சந்தேகமும் இருத்தலால்
இவ்விதம் வினவுதற்குக் காரணமும் ஏற்படுகிறது
பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய -ஆளவந்தார்-பற்றிய நமஸ்கார ரூப மங்கள ஸ்லோகம் -வேதார்த்த ஸங்க்ரஹம்
இந்த ஸ்லோகம் ஸ்ரீ யாமுநாசார்யரைப் புகழ்ந்து ஸமர்ப்பிக்கப்பட்டது.
அவர் காலத்தில் வேதங்களின் உள்ளுறைப் பொருளைப் புரிந்து கொள்வதில் இருந்த குழப்பங்களை நீக்குவதில்
அவரது பெரும் பங்கு இதில் வற்புறுத்தப் படுகிறது.
வேதங்களின் நிலைப்பாட்டை விளக்க
ஸ்ரீ யாமுநாசார்யர் ஸித்தி த்ரயம் மற்றும் ஆகமப் ப்ராமாண்யம் போன்ற க்ரந்தங்களை சாதித்தருளினார்.
இந்த ஸ்லோகத்தில் எம்பெருமானார் தம் காலத்தில் இருந்த
மூன்று ப்ரதான வேதாந்தக் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.
இம் மூன்று கோட்பாடுகளையும் ஏற்பதில் உள்ள பெரும் ப்ரச்சினைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறார்.
இவ்வாறாக, மாற்றுக் கோட்பாடுகளைப் பற்றிய ஒரு சிறு விமர்சத்தை நமக்கு வைக்கிறார்.
சங்கர பாஸ்கர யாதவ பிரகாச மதங்களை நிரசித்தும்
தம்மை ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷித்து அருளிய
ஸ்ரீ ஆளவந்தாரை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் இதில்
(i) பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி
ப்ரஹ்மம் நிர்விசேஷ சின் மாத்திரம் -ஞான மயம் -ஸ்வயம் பிரகாசம் -மற்றவை அனைத்தும் மித்யா –
அந்த ப்ரஹ்மமே மாயையால் அஞ்ஞானத்தால் ஜகத்தாகத் தோற்றம் அளித்து
ஜென்ம ஜரா மரணாதி துக்கங்களை அடைகிறது என்பர் அத்வைதிகள்
அத்வைதத்தில் பர ப்ரஹ்மமே குழம்பியுள்ளது, ஸம்ஸாரத்தில் அந்வயிக்கிறது.
“பரம்” எனும் சொல் எல்லா வகையிலும் மேன்மையைக் குறிக்கும்.
வேதங்களில் ப்ரஹ்மத்தின் மேன்மை விளக்கப் படுகிறது.
ப்ரஹ்மம் எல்லா மங்களங்களாலும் நிறைந்தது, ஒரு குறையுமற்றது.
ஆகவே தான் அது ப்ரஹ்மம் எனப்படுகிறது,
அறியப்பட வேண்டியது என ஓதப்படுகிறது.
தன்னை உபாசிப்போர் குறைகளைப் போக்கி,
அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கிறது.
அத்வைதத்தில் இரு முரண்பாடுகள் உள்ளன –
(i) எல்லா வகையிலும் மேன்மையுற்ற ப்ரஹ்மமே அஞ்ஞானத்தில் மூழ்குமாயின் அதை
ப்ரஹ்மம் என்றழைக்க அதன் மேன்மை தான் யாது?
(ii) எல்லாரையும் உஜ்ஜீவிப்பிக்க வேண்டிய ப்ரஹ்மம் சோகிக்குமாயின் அதை உய்விப்பார் யார்?
”ஏவ” எனும் சொல் இந்த முரண்பாடுகளை வலியுறுத்துகிறது.
எப்பொழுதும் தனக்குத் தானே பிரகாசித்துக் கொண்டு இருக்கும் ப்ரஹ்மத்துக்கு தன்னை அறியாமையாகிய
அவித்யை எப்படி சம்பவிக்கும் -என்கிற விரோதமும்
ப்ரஹ்மமே சம்சாரம் அடைந்தால் மோக்ஷம் பெற வேதாந்த ஸ்ரவணாதிகள்
செய்ய வேண்டி இருக்கும் விரோதமும் உண்டாகுமே
தனக்கு ஏற்படும் அஞ்ஞானத்தினால் ப்ரஹ்மம் மாயையில் சிக்குண்கிறது
(ப்ரம பரிகதம்) இம்மாயையே பார்வையில் வேறுபாட்டை விளைக்கிறது.
அத்வைதத்தில் ப்ரஹ்மம் ஒன்றே உணர்வுள்ளதாக ஒப்புக் கொள்ளப் படுவதால் வேறுபாடு பற்றிய
உணர்வு பூர்வமான அநுபவம் மட்டுமே இருக்க முடியும்.
ப்ரஹ்மம் மாயையை அனுபவிப்பதில்லை,
பிற யாவும் அனுபவிக்கின்றன என அத்வைதியால் வாதாட இயலாது.
ப்ரஹ்மம் தவிர்த்த ஏனைய யாவும் மாயையின் பாற்பட்டனவே.
மாயையினால் உண்டான ஒன்று மாயையை அனுபவிப்பது என்பது முரண்பாடாகும்.
முதலில் தான் ஸ்ருஷ்டித்த மாயையின் விளைவு தன் மாயையைத் தானே உருவாக்க முடியாது.
மாயையின் பொருள்களை அநுபவிக்க வேண்டுமாயின் அம்மாயை முன்பே இருக்க வேண்டும்.
ஆகவே, ப்ரஹ்மம் தானே அதை முதலில் அநுபவித்தாக வேண்டும்.
(ii) தத் பரோபாத்யாலீடம் விவசம்
ப்ரஹ்மன் மாற்றம் விளைப்பவற்றால் கட்டுண்டு கிடக்கிறது.
இது பாஸ்கராசார்யரின் கொள்கையை விளக்குகிறது.
தான் மட்டுமே ஸத்யமாயுள்ள ப்ரஹ்மத்தை மாயை-அவித்யை எவ்வாறோ குழப்புகிறது
என்பதை நிலை நிறுத்துவதில் உள்ள ஸ்ரமங்களை பாஸ்கரர் உணர்ந்திருந்தார்.
“பர” என்றதால்
இயல்வுகள் யாவும் தனிப்பட்டவை, உண்மையானவை என்பதும் பெறப்படுகிறது.
இவ் வியல்புகள் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை.
இவற்றால் தளை யுண்டு ப்ரஹ்மம் கர்ம சக்கரத்தில் மாட்டிக் கொள்கிறது.
மேலும் இவ் விளக்கத்தில், மேம்பட்ட ஒரு ப்ரஹ்மம் தானே கட்டுண்பதும்
துக்கத்தில் உழல்வதுமான முரண்பாடும் உள்ளது.
(iii) அசுபஸ் யாஸ் பதம் = ப்ரஹ்மம் அசுபங்களின் இருப்பிடமாகிறது
இது யாதவ ப்ரகாசரின் கொள்கையை விளக்குகிறது.
யாதவ ப்ரகாசர் ப்ரஹ்மமே அறிவுள்ளன-அறிவற்றன இரண்டுமாகவும் பிரிந்திருப்பதாகவும்,
ஆகவே அசுபங்களின் இடமாய் இருப்பதாகவும் கருதினார்.
அறிவற்றனவின் அசுபத்தன்மை அவை எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதாலும்,
நிலை நில்லாமையாலும் ஏற்படுகிறது.
அறிவுள்ளனவற்றின் அசுபத் தன்மை அவை கர்ம ஸாகரத்தில் மாட்டிக் கொள்வதாலும்
அவ்வினைகளால் துன்புறுவதாலும் ஏற்படுகிறது.
வேதங்களில் சொல்லப்படும் ப்ரஹ்மம்
“ஸ்வேதர-ஸமஸ்த-வஸ்து-விலக்ஷண”மாய் , அதாவது
மற்றெல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டும்,
அவற்றின் அசுபங்கள்-அமங்கலங்கள் யாதொன்றும் இல்லாமலும் இருக்கிறது.
ஆனால், யாதவ ப்ரகாசரின் யோஜனையில், வேதக் கோட்பாட்டுக்கு விருத்தமாக,
ப்ரஹ்மமே அமங்கலங்களின் இருப்பிடமாய் உள்ளது.
”பரம் ப்ரஹ்மைவ” எனும் சொற்கள் இம் மூன்று கோட்பாடுகளுக்குமே பொருந்தும்.
அதாவது
எல்லாப் பொருள்களுக்கும் மேலானதும்
எல்லா வகைகளிலும் மேம்பட்டதும்
ஆனந்த ஸ்வரூபமானதும்
குறைகளே அற்றதும்
எல்லா வகைகளிலும் மங்கலமானதும் பரிசுத்தமானதும் ஆன ஒன்றை
சங்கரர், பாஸ்கரர், யாதவ ப்ரகாசர் மூவருமே
அஞ்ஞானம், அமங்கலங்கள், துக்கம் இவற்றால் உழல்வதாகக் கருதுகிறார்கள்.
(iv) ச்ருதி ந்யாயா பேதம் ஜகதி விததம் மோஹநம் இதம் தம:
ப்ரஹ்மத்தை பூர்ணம் என்றும், பூர்ணமன்று என்றும் இவ் விளக்கங்களால் அறிந்து கொள்வது
தவறான அறிவும், அறியாமையும் ஆகும்.
“இதம் தம:” என்றது இதையே.
இத்தகைய புரிந்து கொள்ளல் தர்க்க நெறிகளுக்கு முரணானது.
வேதங்களைப் புரிந்து கொள்ள உதவும் நியாய சாஸ்த்ரத்துக்கு முரணானது ஆகும்.
கேள்வி: இவை யாவும் தவறான புரிந்து கொள்ளல், வேதங்களுக்கு விரோதமானவை,
வேதங்களின் அங்கங்களான நெறிகளுக்கு முரணானவை….எனில், இவற்றை விமர்சிப்பான் என்?
விடை: ஏனென்றால், அவைகளும், “ஜகதி விததம்” உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன,
பலரும் இக் கொள்கைகளால் மயங்கியும் கிளர்ச்சி யுற்றும் உள்ளனர்.
அவ்வாறே இருக்கட்டுமே.
இக்கருத்துகள் தவறானவை, மறைகளின் கருத்துக்கு முரணானவை, தமக்குள்ளும் முரண்பாடுகளைக் கொண்டவை
பலராலும் பின்பற்றப் படுபவை…..இருக்கட்டுமே!
நாம் ஏன் அவற்றை விமர்சிக்க வேண்டும்?
விடை: ஏனெனில் இப் பாதைகளைப் பின்பற்றினால் பற்றுவோர் வழி தவறிப் போவர்.
இக் கருத்துகள் “மோஹநம்” = மதி மயக்குபவை.
ஆகவே, அறியாமை இருள் விமர்சிக்கத் தக்கதே.
இப்படிச் சொல்லி, ஆசிரியர் இவ் விமர்சத்தைத் தாம் செய்ய மேற்கொண்ட பின்னணியை விளக்கி யருளுகிறார்.
வேதங்களுக்குத் தவறான விளக்கங்களை ஸ்வாமி தம் கருணையினால் மறுத்துரைக்கிறார்.
ஞானம் பெற்றவர் பெறாதோருக்கு அறிவுறுத்தி நெறிப் படுத்துவது கடமையாகும்.
ஆகிலும் ஸ்வாமி இதைத் தம் ஆசார்யரான
ஆளவந்தார் மேல் ஏறிட்டு ஸாதிக்கிறார்:
(v) யே நா பாஸ்தம் ஸ ஹி விஜயதே யாமுன முநி:
இச் சொன்ன அறியாமை இருளை நீக்கும் யாமுன முநி வென்று நிற்பாராக!
தர்க்க விரோதமானதும் சாஸ்த்ர விரோதமானதுமான கோட்பாடுகளை மறுத்து ஒழிப்பதில் தம்
ஆசார்ய அருள் பெரும் பணியினை நினைவு கூறுகிறார்.
தம் ஆசார்யருக்கு இவ்விஷயத்தில் ஜய கோஷம் இடுகிறார்.
வேதார்த்த ஸங்க்ரஹத்தின் மூலம் யாமுநாசார்யரின் வெற்றியை ஸ்வாமி நிரந்தரமாக்கியுள்ளார் என்ன வேண்டும்.
தம் குருவின் திருவுள்ளத்தை சீடர் இக் க்ரந்தம் முழுக்கத் தெளிவாக அர்த்த புஷ்டி யுள்ளதாக்கி யுள்ளார்.
————————–
2- மோஷே தாவத்
ஸ்வரூப -அவித்யா விஸேஷ -வைஸேஷிேக குணாச்சேத -பரமாத்ம ஸாதர்ம்ய – தத் குண ஸம்க்ராந்தி -தச் சாயா பத்த்தி
ஆநந்தாதி ஸ்வரூப ஆவிர்பாவ மாத்ர –தத் கைஙகர்ய ஆவிர் பாவாதி லக்ஷண
விப்ரதி பத்தி தர்ஶநாத் ஸம்திஹாந: பரமம் உபேயம் ப்ருச்சதி– கிம் வாऽப்யேகம் பராயணமிதி|
பரம ப்ராப்யம் என்னும் உபேயத்தைப் பற்றிய வினா
அவதாரிகை
பலனைச் சொல்லும் சாஸ்திரங்களில் மோக்ஷ விஷயமாக பல சந்தேகங்கள் உண்டாகிற படியால்
எட்டுவித வேறுபாடுகள் -அந்த சந்தேகம் தெளிதல் பொருட்டு -பரம புருஷார்த்தம் எது என்று வினவுகிறார்
கிம் வா அபி ஏகம் பராயணம் -என்று
தைவதம் பராயணமித்யாதி கிம் அந்யதந்யத் உபதிஶ்ய கத,
உத தத்தத வஸ்தா மாத்ர பேதேந ஏகமேவேதி விவேக்தும் வா அபீதி நிபாத த்வயம்
ஏகம் இதி பூர்வ வத் |
பரம் நிர்தோஷ நிரதிஶய மங்கல ஸ்வபாவதயா உத்க்ருஷ்ட தமம் |
அயநம் ப்ராப்யம் |
ஐஹிக ஆமுஷ்மிகேஷு புருஷ அபி லஷணீ யேஷு கஸ்
பரம புருஷார்தோ பவதோ அபிமத இதி | ஏவமுபேயம் த்விதா ப்ருஷ்டம் |
குற்றம் அற்றுத் தன்னிலும் உயர்ந்தது இல்லாத மங்கள ஸ்வபாவமாய் இருப்பதால்
எல்லாவற்றுக்கும் மேலான பரம புருஷார்த்தம் எது
மனிதர்களால் விரும்பப்படுகிற ஐஹிகம் ஆமுஷ்மிகம் என்கிற இவற்றுள் மேலான பரம புருஷார்த்தம்
இன்னது தான் என்று நீர் கொண்டது எது என்பது கருத்து –
வா-விகற்பம் -இதுவோ அதுவோ
அபி -உம்மைத் தொகை இதுவும் அதுவும்-தத்துவமும் ப்ராப்யமும் ஒன்றா வேறா –
நின் கண் வேட்கை எழுவிப்பேன் -எளிமையாக்கி ஆழ்வார்கள் நமக்கு அருளிச் செய்துள்ளார்
இப்படி உபேயம்
பர தத்வம் என்றும்
பரம ப்ராப்யம் என்றும்
இரண்டு விதமாகப் பிரித்துக் கேட்கப்பட்டது
———–
ஸ்துவந்த: கம் இத்யர்தேந
கம் அர்சந்த:
ப்ராப்நுயு: மாநவாஶ் ஶுபம்
யாரை -ஸித்த உபாயத்தைப் பற்றிய கேள்வி
லகு உபாய -அலகு உபாய ஸித்த உபாயம் -இரண்டு வகை-ஸ்தோத்ரம் லகு -அர்ச்சனை அலகு உபாயம்
யாரை ஸ்தோத்ரம் பண்ணி-கீர்த்திமை பாடிப் போய் போல் –
ஸாத்ய பத பிரயோகம் இருந்தாலும் இது ஸித்த உபாயம் பற்றியே
ஸாத்ய உபாயம் -இரண்டு வகை -இதில் தர்மம் பற்றிக் கேள்வி -யார் இடத்தில் என்ற வினா இல்லையே
பரம ஸாத்ய உபாயம் என்றும்
வாசிக ஜப ஆலம்பனம் என்றும்–இரண்டு வகை
அதோபாய: தத் தச் சாஸ்த்ரேஷு கர்ம ஜ்ஞாந பக்தி யாேகா நாம்
விகல்ப ஸமுச்சய அங்காங்கி பாவாதி விவாதாத் ஸம்ஶயாநேந ப்ரஷ்டவ்ய:|
ஸ ச ஸித்த: ஸாத்ய: ஸாலம்பந ரூபஶ்ச |
ஸித்தஸ்து–ஆராத்ய மாநதயா பல ப்ரதா தேவதா |
தாம் ச லகு அலகு உபாய ஸாத்ய தயா-த்வேதா விபஜ்ய ப்ருச்சதி–
ஸ்துவந்த: கம் இத்யர்தேந ஸ்துவந்த:கம்- கம் அர்சந்த: ப்ராப்நுயு: மாநவாஶ் ஶுபம் ||2||
உபாயத்தைப் பற்றிய வினா
அவதாரிகை
உபாயமாவது
அந்த அந்த சாஸ்திரங்களில் கர்ம யோகம் ஞான யோகம் பக்தி யோகம் என்று சொல்லப் பட்டு
அவை தனித் தனி உபாயம் என்றும்
சேர்ந்து உபாயம் என்றும்
ஒன்றுக்கு ஓன்று அங்க அங்கி முறையில் உபாயம் என்றும்
விவாதம் இருப்பதனால் பின்வரும் வினாக்கள் எழுவது அவஸ்யமாகிறது
உபாயம்
ஸித்த உபாயம்
ஸாத்ய உபாயம்
ஸ ஆலம்பன உபாயம் -என்று மூன்று வகைப்படும் –
அவற்றுள் ஸித்த உபாயமாவது -ஆராதனத்தால் பலனை அளிக்கும் தேவதை
அந்தத் தேவதையை லகு உபாயத்தாலும் குரு உபாயத்தாலும் சாதிக்க வேண்டும்
ஆகையால் ஸித்த உபாயம் லகு உபாய ஸாத்ய ஸித்த உபாயம் என்றும் (குண ஸங்கீர்த்தனம் லகு உபாயம் )
அலகு உபாய ஸாத்ய ஸித்த உபாயம் என்றும்(உபாஸன ரூபமான பக்தி அலகு உபாயம் ) இரு வகைப்படும் –
அந்தப்படி இரண்டு வகையாகப் பிரித்து வினவுகிறார் –
கம் ஸ்துவந்த: – குண ஸம்கீர்தந மாத்ரேண ஆராதயந்த:, கமர்சந்த:- உபாஸந ரூபயா பக்த்யா பரமம் பூஜநம் குர்வந்த:|
மாநவா:-மநுஷ்யத்வ மாத்ர பரிகரா:|ஶுபம் – த்விவிதம், அப்யுதயநி:ஶ்ரேயஸ ரூபம் |ப்ராப்நுயு:||
3- லகு உபாய ஸாத்ய ஸித்த உபாயத்தைப் பற்றிய வினா
(ஸ்துவந்த கம் –)
மூன்றாவது வினா
மனிதர்கள் யாரைத் ஸ்துதித்து -ஐஸ்வர்யம் -முக்தி -என்னும் இரு வகை நன்மைகளையும் பெறுவர்
ப்ராப்நுயர் மானவா ஸூபம் -என்பதை இங்கும் கூட்டுக
4- அலகு உபாய ஸாத்ய ஸித்த உபாயத்தைப் பற்றிய வினா
கமர்ச்சந்த –ஸூபம்
நான்காவது வினா
மனிதர்கள் யாரை அர்ச்சித்து ஐஸ்வர்யம் முக்தி என்னும் இரு வகை நன்மைகளையும் பெறுவர்
மானவா -மனிதத் தன்மையை யுடையவர் என்று பொருள்
பகவானை ஸ்துதிக்க மனிதத் தன்மையை போதுமானது என்று கருத்து
ஸூபம் என்பது இம்மைப் பயனையும் மறுமைப் பயனையும் குறிக்கும் –
————–
5- ஸாத்ய உபாயத்தைப் பற்றிய வினா
பரம ஸாத்ய உபாயம் -மிகச் சிறந்த உபாயம் என்றவாறு
அவதாரிகை
வாக்கினாலும் மனத்தினாலும் சரீரத்தாலும் முறையே செய்யப்படுகிற
ஜபம் த்யானம் அர்ச்சனை முதலியவற்றால் தேவதையை வசப்படுத்தும் முறை ஸாத்ய தர்மம் எனப்படும்
அவற்றுள் சிறந்தது எது என்று வினவுகிறார்
கோ தர்ம —பரமோ மத
அத ஸாத்ய: வாங் மந:காய நிஷ்பாத்ய ஜபத்யா நார்சந ப்ரப்ருதி:
தேவதா வர்ஜநாத்மகோ தர்ம: ; தத்ர பரமம் ப்ருச்சதி –
கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:|
கோ தர்ம இதி |
உக்த லக்ஷணாநாம் ஸர்வ தர்மாணாம் மத்யே பரம: –
நிஸ் துல்யாதிக :,
கோ பவத: அபிமத: – ஸுநிஶ்சித்ய ஆபத் தநவத் ஸ்வீக்ருத: ?
ஐந்தாவது வினா
எல்லாத் தர்மங்களிலும் சிறந்த தர்மமாக நீர் -நன்கு நிச்சயித்து -ஆபத்து தனம் போலே கொண்டு இருப்பது எது
———-
6- வாசிக ஜப ஆலம்பனத்தைப் பற்றிய வினா
அவதாரிகை ஸ ஆலம்பனம் -ஆலம்பனத்தோடே கூடியது –
ஆலம்பனம் -பற்றுக் கொம்பு -ஆதாரம் -பிடிப்பு
ஸ்தோத்ரம் -மந்த்ரம் -ஸூப ஆஸ்ரயம் -பகவத் திவ்ய மங்கள விக்ரஹம் போல்வன
கந்தம் புஷ்பம் முதலிய உபகரணங்களைக் கொண்டு செய்யப்படும் உபாயமாம்
அவற்றுள் வாசிகமான ஜபம் என்னும் ஸாலம்பன உபாயத்தைப் பற்றி வினவுகிறார்
ஜெபமாவது மந்த்ரம் முதலியவற்றை அதற்கு உரிய நியமங்களுடன் ஆவ்ருத்தி செய்வது
அத ஸாலம்பநேஷு
ஸ்தோத்ர மந்த்ர ஶுபாஶ்ரய கந்த புஷ்பாத் யுபகரணேஷு
வாசிக ஜப ஆலம்பநம் ப்ருச்சதி-
கிம் ஜபந் முச்யதே ஜந்து: ஜந்ம ஸம்ஸார பந்தநாத் ||3||
கிம் ஜபந்நிதி| நியம விஸேஷவந் மந்த்ராத் யாவர்தநம் ஜப:|
“ஜப்யே நைவது ஸம் ஸித்யேத் ப்ராஹ்மணோ நாத்ர ஸம்ஶய:|
குர்யாத் அந்யத் ந வா குர்யாத் மைத்ரோ ப்ராஹ்மண உச்யதே ||”,
பிராமணன் மற்றக் கர்மங்களை செய்தாலும் செய்யா விட்டாலும் ஜபம் செய்வதினாலேயே ஸித்தியை அடைகிறான்
இதில் சந்தேகம் இல்லை
இப்படிச் செய்பவன் மைத்ர பிராமணன் என்றும் சொல்லப்படுகிறான் -என்றும்
“த்ரவ்ய யஜ்ஞாத் ஜபோ யஜ்ஜோ விஶிஷ்டோ தஶபிர் குணை :|”,
“யஜ்ஞாநாம் ஜப யஜ்ஜோ அஸ்மி”(10-25)
இதி ஜப ஶ்ரைஷ்ட்யாத் மாநஸ காயிக விஷயௌ ந ப்ருச்ச்கயதே |
த்ரவ்ய யஜ்ஜத்தைக் காட்டிலும் ஜெப யஜ்ஜம் பத்து மடங்கு சிறந்தது என்றும்
மநு வசனம் இருத்தலாலும்-
யஜ்ஜங்களுக்குள் நான் ஜெப யஜ்ஜமாக இருக்கிறேன் -என்று பகவத் வசனம் இருத்தலாலும்
மானஸ
காயிகங்களான
மற்ற இரண்டையும் கேளாமல் வாசிகமான ஜெப யஜ்ஜத்தைப் பற்றிக் கேட்க்கிறார்
கிம் ஜபன்–பந்தநாத்
ஜந்து: – ஜநந தர்மா |
ஜந்ம ஸம்ஸார பந்தநாத்–ஜந்மேதி ஜரா மரண கர்ப நிரய யாதநாதி: ஸம்ஸாரஸ்ய கார்ய வர்க : ப்ரதர்ஶ்யதே |
ஸம்ஸார இதி ச அவித்யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி பந்த ரூப: காரண வர்க 😐
தாப்யாம் பந்தநம் பரம பத ப்ராப்தி ப்ரதிபந்த:, தஸ்மாத் முச்யதே த|
இதம் ச ஸர்வ பல உப லக்ஷணம், ஜபாதே : ஸகல பல ஸாதநத்வஸ்ய வக்ஷ்ய மாணத்வாத் |
ஆறாவது வினா
மனிதன் எதை ஜபம் செய்வதினால் ஜென்மம் சம்சாரம் ஆகிய இவற்றால் உண்டான
பந்தத்தில் நின்றும் விடுபடுவான்
ஜென்மம் -என்றதனால் –
ஜரை மரணம் கர்ப்ப வாஸம் நரக வாஸம் முதலிய கார்ய வர்க்கங்களும் கொள்ளப்படும்
சம்சாரம் என்றதனால்
அவித்யை பூர்வ கர்மம் அதனால் உண்டான வாஸனை அது பற்றி வரும் அவா
அதன் அடியாக வரும் பிரகிருதி சம்பந்தம் ஆகிய காரண வர்க்கங்களும் கொள்ளப்படும் –
அனந்த கிலேச பாஜனம் -நிரதிசய ஆனந்த ரூபத்துக்கு எதிர் தட்டு
இவை பரமபதம் அடைவதற்குத் தடையாக இருப்பது பற்றி பந்தனம் என்று சொல்லப்பட்டன
முஸ்யதே -என்பதனால்
மோக்ஷம் வரையில் உள்ள இதர பலன்களும் கொள்ளப்படும் –
தத்ர ‘அஸேஷேண, ஸர்வஶ:’ இத் யுபக்ரமேண
‘லோகே மாநவா: ஶுபம்’ இத்யாதி விஸேஷணைஶ்ச கால அதிகாரி
அங்க பல ப்ரகார விஸேஷா அபி ப்ரக்ருஷ்டா: ப்ரஷ்டவ்யதயா ஸூசிதா:||3||
அசேஷேண -எல்லாவற்றோடும் என்றும்
ஸர்வஸ -முழுவதும் -என்றும்
தொடங்கி இருப்பதாலும்
லோகே –ஸாஸ்த்ரங்களில் என்றும்
மானவா ஸூபம் -மனிதர்கள் நன்மைகளைப் பெறுவர் என்றும்
விசேஷித்து கூறி இருப்பதாலும்
காலம்
அங்கம்
பயன்
அதிகாரி –ஆகிய இவற்றுள் உத்தமமானவை எவை என்று கேட்டதாகவும் குறிப்பிக்கப் படுகிறது
இமாம் ஷட் ப்ரஸ்நீம் ப்ரதி ப்ருவாணோ பீஷ்ம உவாச |
அத்ர ப்ராயேண வ்யுத் க்ரமேண ப்ரதி வசநம் க்ரமி கோப நிபந்தநம் ச ப்ரதி வசநம் வக்ஷ்யதே |
தத்ர உபாய த்வார கத்வாத் உபேயஸ்ய ப்ரதமம் தம் ப்ரதி விவக்ஷந்
ஆநந்தர்யாத் தத்ரைவ ஆதராதிஶயாச்ச ஜபாலம்பநம் ப்ரதி வக்தி-
இப்படி உபாயம்
லகு உபாய ஸித்த உபாயம் என்றும்
குரு உபாய ஸித்த உபாயம் என்றும்
பரம ஸாத்ய உபாயம் என்றும்
வாசிக ஜப ஆலம்பனம் என்றும்
நான்கு வகையாகப் பிரித்து வினவப்பட்டமை காண்க
மேலே கூறிய ஆறு வினாக்களுக்கும் பீஷ்மர் விடை அளிக்கலானார்
கேட்ட முறை இல்லாமல் மாறி விடை அளிக்கப் படுகிறது –
இந்த ஆறு கேள்விகளுக்கும் -6-4-3-5-2-1–இந்த முறையில் பதில்கள்
நாராயணனே நமக்கே பறை தருவான் -உபதேசத்துக்காய் ஆசை வளர்க்க உபேயம் முன்னாக
அனுஷ்டானம் கறைவைகள் சொல்லி சரண் அடைந்து சிற்றம் சிறு காலை –
தருவான் பறை -இறைவா நீ தாராய் பறை போல் இங்கும்
ஸ்ரீபீஷ்ம உவாச:
ஜகத் ப்ரபும் தேவதேவம் அனந்தம் புருஶோத்தமம் |
ஸ்துவன் நாம ஸஹஸ்ரேணே புருஶ: ஸததோத்தித: ||–4-
தமேவ சார்ச்சயன் நித்யம் பக்த்யா புருஶமவ்யயம் |
த்யாயம் ஸ்துவன்னமஸ்யம்ச்ச யஜமானஸ்தமேவ ச ||-5-
ஸ்துவன்-ஜெபத்துக்கு அங்கமாக நாம சங்கீர்த்தனம்
ஸ்துவன் மேலும் வரும் அங்கே வேறே அர்த்தங்கள்
புருஶ:-புண்டரீகாக்ஷன் என்று பாஷ்யம் -தன்னையே நமக்கு நல்கும் கற்பகம் -உதார ஸ்வ பாவன்
———
கிமேகம் தைவதம் லோகே -பவத பரமோ மத –ஒப்பற்ற தெய்வம் யார்
கிம்வாபி ஏகம் பராயணம் -பவத பரமோ மத –அடையத் தக்க பிராப்யம் எது
ஆக பிராப்யம் பற்றி முதல் இரண்டு கேள்விகள் –
ஸ்துவந்த கம் -பவத பரமோ மத -யாரை குண சங்கீர்த்தனம் பண்ணி பூஜித்து
கம் அர்ச்சந்த மாநவா சுபம் ப்ராப்நுயு -பவத பரமோ மத -யாரை பக்தியுடன் உபாசித்து இஹ பர இன்பங்கள் அடைகிறார்கள் –
கோ தர்மஸ் சர்வ தர்மாணாம் -பவத பரமோ மத -தேவரீர் ஸ்வீகரித்த மேலான தர்மம் எது –
கிம் ஜபன் முச்யதே ஜந்து ஜன சம்சார பந்தநாத் -பவத பரமோ மத -எந்த மந்திர ஜபத்தால் பந்தம் அறும்
இவை உபாயம் பற்றிய நான்கு கேள்விகள்
பவத பரமோ மத -உமது அபிப்ராயத்தால் –ப்ரிய தமமான பலனையும் ஹித தமமான உபாயத்தையும் கேட்கிறார்
——————
1- வாசிக ஜப ஆலம்பந வினாவுக்கு விடை
உபாயத்தைக் கொண்டு உபேயத்தை அடைய வேண்டுமாகையாலே முதலில் உபாய விஷயமான கேள்விக்கு விடை அளிக்கிறார்
அந்த வினாக்களுக்குள் கடைசியில் கேட்ட ஜப ஆலம்பந வினா சமீபத்தில் இருக்கையாலும்
தமக்கும் அதில் மிக விருப்பம் இருக்கையாலும்
அதற்கு முதலில் விடை அளிக்கிறார்
பீஷ்மர் சொல்லலானார் –ஜகத் பிரபும் —-சததோத்தித–
பீஷ்ம உவாச –
ஜகத் ப்ரபும் தேவ தேவம் அநந்தம் புருஷோத்தமம் |
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ : ஸததோத்தித:||4||
ஜகத் ப்ரபுமிதி|
ஜகதோ ஜங்கம அஜங்கமஸ்ய ப்ரபும் ஸ்வாமிநம் |
யதா மநுஷ்யேப்யோ தேவா: ஐஶ்வர்ய பரிசர்யாப்யாம் அதிகா :
ஏவம் ஏதேஷாம் அபீதி தேவ தேவம் |
அநந்தம்—ஸர்வதோ அநவச்சேத்ய வைபவம் –புருஷோத்தமம்- பரம உதாரம், (அலம் புரிந்த நெடும் தடக்கை அமரர் வேந்தன் )
நாம ஸஹஸ்ரேண- ஜப ஆலம்பநீ க்ருதேந;
ஸ்துவந் ஸ்துவந்நிதி
“லக்ஷண ஹேத்வோ :” இதி ஹேதௌ ஶத்ரு ப்ரத்யய:|ஸர்வ து:காதிகோ பவேத் இத்யநேந ஸம்பந்த:|
ஸ்தவநம் ஸர்வ துக்க நிவர்தகம் இத்யர்த:|
க ஏவம் ஸ்யாத் ? புருஷ சேதந:|கதம் பூத:?ஸததோத்தித: – நிரந்தரம் உத்யுஞ்ஜாந:|
பகவத் ஸ்துதி சிந்தாத் யவிச்சே தஸ்ய பரம ப்ரிய ஹிதத்வாத்
தத் விச்சேதஸ்ய வைஶ ஸத்வாச்ச ஶ்ரூயதே ஹி –(பிரியமாயும் ஹிதமாயும் இருப்பதால் இடையூறு வந்தால் பெரும் துன்பம் வருமே -குதூகலமாக சொல்ல வேண்டுமே )
“யதா ஹ்யேவைஷ ஏதஸ்மிந் அத்ருஶ்யே
அநாத்ம்யே அநிருக்தே அநிலயநே அபயம் ப்ரதிஷ்டாம் விந்ததே |
அத ஸோ அபயம் கதோ பவதி |யதா ஹ்யே வைஷ ஏதஸ்மிந் உதர மந்தரம் குருகத |
அத தஸ்ய பயம் பவதி” இத்யாதி |
(அருகில் போக போக பயம் நீங்கி விலக விலக பயம் மிக்கு வருமே
ஆர்வம் தொழ குனிப்பார் அமரரால் தொழப்படுவாரே )
உபப்ருஹ்ம்பதே ச “யந் முஹூர்த க்ஷணம் வா அபி வாஸு தேவோ ந சிந்த்யதே |
ஸாஹாநி: தந் மஹச் சித்ரம் ஸா ப்ராந்தி: ஸா ச விக்ரியா ||”,
“வரம் ஹுதவஹ ஜ்வாலா பஞ்ஜராந்தர் வ்யவஸ்திதி:|
ந ஶௌரி சிந்தா விமுக ஜந ஸம்வாஸ வைஶஸம் ||”,
(அக்னி கூண்டுக்குள் இருந்தாலும் தேவலை -சவுரி நினைப்பார் உடன் கூட இருப்பது கடினம்)
“ஏகஸ்மிந் நப் யதி க்ராந்தே முஹூர்தே த்யாந வர்ஜிதே | தஸ் யுபிர் முஷி தேநேவ யுக்த மாக்ரந்தி தும் ப்ருஶம் ||” இதி ச | ஏவம் ஸாத்யேஷு
ஜபஸ் யாலம்பந முக்தம் ||
ஆறாவது கேள்வி ஜெபத்தைப் பற்றியதாகையாலும்
இது அதற்கு விடை யாகையாலும்
ஸ்துவன் என்பதற்கு -ஸா ஆலம்பந உபாயத்துக்கு அங்கமான ஸ்தோத்ரம் -ஜபம் -என்றே பொருள் கொள்ள வேண்டும்
ஸ்துவன் நாம ஸஹஸ்ரேண –என்று சேர்த்துச் சொன்னமையும்
நாம ஸஹஸ்ரேண என்பதற்கு ஜெபத்திற்கு ஆலம்பனமாக ச் செய்யப்பட்டவை என்று
பாஷ்யத்தில் விளக்கம் கூறி இருப்பதும்
ஸ்துவன் என்னும் சொற்களுக்கும் வேறு பொருள் கூறி இருப்பதும் இதனை நன்கு விளக்கும்
ஜபம் என்பது மந்த்ரம் முதலியவற்றை பலமுறை நியமத்துடன் சொல்லுவதாகையாலும்
பொதுவாகையால் ஸ்துதி செய்வது என்று இல்லாமல் இங்கே ஆயிரம் நாமங்களினால் ஸ்துதி செய்வது என்று இருப்பதாலும்
ஜப பரமாகவே பொருள் கொள்ள வேண்டும்
சங்கர பாஷ்யத்திலும் இதனை ஆறாவது வினாவிற்கு விடையாக
ஆயிரம் நாமங்களினால் ஸ்துதித்து என்றே கூறி இருப்பதும் காண்க –
மற்ற விடைகளில் கேள்விகளில் உள்ள சொற்களையே வைத்துக் கூறி இருத்தலாலும்
ஆறாவது கேள்வியில் உள்ள ஜபம் என்ற சொல்லை வைத்து விடை கூறப்படாமையாலும்
விடைகளில் முதலில் உள்ளது இன்ன கேள்விக்கு விடை என்று மூலத்தில் கூறப்படாமையாலும்
பாரிசேஷ நியாயமாக இதனை ஆறாவது கேள்விக்கு விடையாகக் கொண்டனர் போலும் –
எம்பெருமானைத் த்யானித்தலும் ஸ்துதி செய்தலும் இடையூறு இன்றி நடக்குமாகில்
அவை மிக்க பிரியமாகும் ஹிதமாயும் இருக்கும் என்றும்
நடுவில் இடையூறு நேர்ந்து தடைப்படுமாகில் மிக்க வருத்தத்தைத் தரும் என்றும் ஸாஸ்திரங்கள் சொல்லுகின்றன –
இவ்விதம் ஸாத்யமான உபாயங்களுள் ஜபம் என்னும் ஸா ஆலம்பன உபாயம் சொல்லப்பட்டது –
———-
4-சித்த உபாயத்தைப் பற்றிய விடை
அவதாரிகை
அர்சந ஸ்தவ நயோரேவ பரம தர்மத்வேந விவக்ஷி தத்வாத் தர்ம விஷயம்
பஞ்சமம் ப்ரஶ்ந முல்லங்கய ப்ரதமம் அர்சநீய ஸ்தோதவ்ய விஷயௌ
சதுர்த த்ருதீயௌ ப்ரதி வதந் அர்ச்ய தமம் தாவத் ஸ அர்சநா ப்ரகாரம் ஆஹ–
அர்ச்சனையும் ஸ்தோத்ரமுமே பரம தர்மம் என்று சொல்வது பீஷ்மருக்கு விருப்பமாகையாலே
தர்ம விஷயமான ஐந்தாவது கேள்விக்கு விடை கூறாமல்
அர்ச்சனை விஷயமாகவும் ஸ்தோத்ர விஷயமாகவும் உள்ள
நான்காது மூன்றாவது கேள்விகளுக்கு விடை கூறத் தொடங்கி
அர்ச்சிப்பதற்கு மிக்க தகுதி யுடையவன் எவனோ அவனை அர்ச்சிக்கும் முறையோடு சொல்கிறார்
தமேவ ச அர்சயந் நித்யம் பக்த்யா புருஷம் அவ்யயம் |
த்யாயம் ஸ்துவந் நமஸ் யம்ஶ்ச யஜமாநஸ்த மேவ ச ||5||
அலகு உபாய -ஸாத்ய ஸித்த வினாவிற்கு விடை
அவதாரிகை
கீழ்ச் சொன்ன ஜெபத்துக்கு எவன் விஷயமோ அவனே அர்ச்சிக்கத் தகுந்தவர்களுக்குள் சிறந்தவன்
என்பதை பல பிரமாணங்கள் காட்டி உறுதி செய்கிறார்
தமேவ அர்ச்சயன் –யஜமான -கிம் அர்ச்சயன் கேள்விக்குப் பதில்
யஜமாநஸ்-மதன் யாஜி -யஜிப்பவன் -என்ற அர்த்தம்
மன் மநா பவ மத் பக்தா மத் யாஜி மாம் நமஸ்குரு -அதே நாலும்
அலகு உபாய ஸாத்ய ஸித்த உபாயம் இங்கு –
தமேவேதி யஜமாந இத்யந்தேந | உக்த ஜப ஆலம்பந விஷய ஏவ
அர்ச்ய தமோ அபி இத்ய வதாரயதி – தமேவ சேதி|
யதாஹு: — “தமிமம் ஸர்வ ஸம்பந்நம் ஆசார்யம் பிதரம் குரும் |
அர்ச்யம் அர்சிதும் இச்சாம: ஸர்வே ஸம்மந்து மர்ஹத ||”,
(அக்ர பூஜை கண்ணனே அனைத்தும் நிரம்பியவர் -அர்ச்சிக்கத் தக்கவன் -ஸபா பர்வம்
சஹா தேவன் -இவனைத் தவிர வேறு யாருக்கும் தகுதி இல்லை)
“தஸ்மாத் பூஜ்ய தமம் நாந்யம் அஹம் மந்யே ஜநார்தநாத்”,
“ப்ரஹ்மாணம் ஶிதி கண்டம் ச யாஶ்சாந்யா தேவதா:ஸ்ம்ருதா:|
ப்ரதி புத்தாந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் ||” இத்யாதி;
(அல்ப அஸ்த்ர பலம் மற்றவர்)
“அந்தவத்து பலம் தேஷாம்” (7-23)இதி ச |
புருஷம் – புண்டரீகாக்ஷம்|
அவ்யயம் – ஸதா அநுபவேதி அபி அநுரூப அக்ஷய உத்தர உத்தர குண ஸம்ஸ்தவம் ;
அர்சயந்—தத் பரி சரண ரூபம் பக்தி யோகம் உபாததாந:அதிகாரீ
நித்யம் “மச் சித்தா மத் கத ப்ராணா:போதயந்த பரஸ்பரம் ”(10-9)(திருநெடும் தாண்டகம் மூன்று பத்துக்களும் இவற்றையே சொல்லும் )
இதி ப்ரக்ரியயா அந்யதா க்ஷணமபி ஸ்தாதுமஶக்நுவந் |
கதமர்சயந் ? பக்த்யா – ஸ்வாமிநி தாஸஸ்ய அநுராக மயீ ஸ்திதி: பக்தி:; தயா இத்தம் பூத:|
புநஶ் ச கதம் ?
த்யாயந்-மாநஸம்-அவிச்சிந்ந அம்ருத தாரா காரம் நிஸ் சேஷ ஸம்ஸார தாப த்ரய நிர்வாபண-பகவத் குண சிந்தநம் குர்வந் |
நான்காவது வினாவுக்கு விடை
செந்தாமரைக் கண்ணரும்-(புருஷன் என்பது மூலம் -புண்டரீகாக்ஷம் என்பது பாஷ்யம் -)
இடை விடாது அனுபவித்தாலும் குறைவு படாதவைகளும்
அவருக்கே உரியவைகளும்
மேன்மேலும் வளருகின்றவைகளுமான திருக் கல்யாண குணங்களை யுடையவருமான பரம புருஷரையே
எக்காலமும் அடிமை பூண்டு
தனக்கு ஸ்வாமி என்னும் ப்ரேமையுடன் பக்தி யோகத்தால் அர்ச்சயன் -உபாஸனை செய்தும்
மனத்தில் இடைவிடாமல் பெருகுகின்ற அம்ருத தாரை போலே ஸூகமாய் இருப்பதும்
சம்சாரத்தினால் யுண்டான ஆத்யாத்மீகம் முதலிய தாப த்ரயங்களையும் அடியோடு போக்குவதுமான பகவத் குணத்தை
த்யாயன் –த்யானம் செய்தும்-
மேலும் வாயாலும் ஸ்துவன் -மனத்தினால் சிந்திக்க -வாயினால் பாடி இங்கு
புநஶ்ச கதம் ? ஸ்துவந்– வாசிகம் ச தாத்ருஶம் ததநுபவ ஜந்ய ஹர்ஷ ப்ரகர்ஷ புலகித ஶரீரம்
பாஷ்ப கத்கத கண்டம் தத் குண ஸம்கீர்தநம் ஸமீம்ஹமாந:|
அந்த தியானத்தினால் யுண்டான சந்தோஷ மிகுதியால் சரீரத்தில் புளகம் அடைந்து
ஆனந்த பாஷ்பத்தால் சொல் எழாமல் தொண்டை தழு தழுத்து அந்தக் குணங்களையே
ஸ்துவன் -ஸங்கீர்த்தனம் செய்தும்
புநஶ்ச கதம்? நமஸ்யந் -அத்யந்தம் ப்ரஹ்வீ பவந் |
பக்தி பராதீநதயா பாஹ்யாந்தர ஸகல கரணை :
நிர் மமத்வாவ நம்ரை : ஆத்மீயை : ஶரீரேண வசஸா ச ஸஹ ஸர்வம் மதீயம்
த்வதீயம் த்வமேவ க்ருஹாணேதி பகவத் பாத பத்மயோ : ஆத்மாநம் அஹம் மாந மலீமஸம் ஸமர்பயந் இத்யர்த:|
ப்ரஹ்வீ பவந்-வணக்குடை தவநெறி -உள்ளே வணக்கம் எண்ணம் வேண்டுமே
பக்தி மேற் கொண்டு -வணக்கமுற்று -மமகாரத்தை ஒழித்து —
தேகம் இந்திரியங்கள் மனம் வாக்கு ஆத்மா ஆகிய என்னுடையவை எல்லாம் உம்முடையவையே தாம்
நீரே அங்கீ கரித்து அருளுக என்று
அஹங்காரத்தால் தோஷப்பட்டு இருந்த தன்னைப் பகவான் திருவடிகளிலே
நமஸ்யன் -சமர்ப்பணம் -செய்தும்
மாம் மதீயம் நிகிலம் சேதன அசேதனாத்மகம் -தேசிகன்
யானும் நீயே என்னுடைமையும் நீயே
புநஶ்ச கதம்? யஜமாந:- தேவ பூஜநமாசரந்;
ஸ்வ விஷயீகார மஹா உபகாரா அநுரூப ப்ரத் யுபகாரா தர்ஶந புவா ஸம்ப்ரமேண
அக்ருத்ரிம பக்த் யுபஹ்ருத ப்ரயத மநோஹர அர்க்ய புஷ்ப
மதுபர்க ப்ரபத்த யௌபசாரிக – ஸாம்ஸ்பர்ஶிக
ஆப்யவஹாரிக ரூப பாேக அநுரூப போக அநு பூர்வ்யா தேவ ஸமாராதநம்
அஸாதாரணம் அத்யந்தம் ஆதரேண குர்வாண இத்யர்த:|
ஏவம் வத்த:ஸர்வ து:காதிகோ பவேதிதி||5||
அவர் தன்னை அங்கீ கரித்த மஹா உபகாரத்துக்குத் தக்கபடி ப்ரத்யுபகாரம் ஒன்றும் காணாமையாலே உண்டான பரபரப்போடும்
பேர் உதவிக் கைம்மாறு செய்ய ஒன்றும் இல்லையே இங்கும் அங்கும் -முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –
உண்மையான பக்தியோடும்
சேகரிக்கப் பட்டனவும்
பரிசுத்தமும் ரம்யமுமான அர்க்யம் புஷ்ம் மது பர்க்கம் முதலிய
ஓவ்பசாரிகம் –உபசாரத்துக்கு ஆகவும் –
ஸாம் ஸ்பர்ஸிகம் -தொடுவதற்கு இனிமையான சந்தனம் புஷ் பாதிகள்
அப்யவஹாரிகம் –உள் கொள்ளத் தக்க உணவுப் பொருள்கள்
என்று சொல்லப் பட்டனவும் -அவருடைய போகத்துக்கு ஏற்றனவுமான போக உபகரணங்களைக் கொண்டு
முறைப்படி மிக்க ஆதரவோடு அவருக்குத் திரு வாராதனம் செய்பவன்
எல்லாத் துன்பங்களையும் கடந்தவன் ஆவான்
அயமேவ பக்தி யோக : முக்தி மஹாபத: த்ரய்யந்தேஷு சிந்த்யமாந: ப்ரத்யபிஜ்ஞாயதே |
ததா ஹி வர்ணாஶ்ரம தர்மை : ஆராதுபகாரகை :
ஶமதமாதிபி: ஆத்ம குணை : ஸந்நி பத்ய உபகாரகைஶ் ச அங்க ஜாதை :
அபிநிஷ்பாத்யம் வேதந த்யாந த்ருவாநுஸ்ம்ருதி
விகவே ஜாதி பத பர்யாய கோசர ஆந்தர ப்ரதீதி ஸந்ததிபி: சித்த வ்ருத்திபி:
அவ்யவஹித அநவரத ப்ரவாஹ அஸக்ருத் ஆவ்ருத்த ஸ ஆதர ப்ரத்யய ஸம்ஸ்கார ப்ரசய கடித படுதர ப்ரத்யக்ஷ
ஶிரஸ்கம், தத் தத் ஸதாநந்த புருஷ உபகோஸலாதி ஸம்ஜ்ஞக பர வித்யா வ்யவஸ்தித குண உப ஸம்ஹார மர்யாதம்
ப்ரஹ்ம உபாஸநம் பகவாந் பாதராயண:“
இந்த பக்தி யோகமே முக்திக்கு –மஹாபத-ராஜ மார்க்கம் என்று வேதாந்தங்களில் கூறப்படுவதாக் காணப்படுகிறது என்று கூறி
அதற்கு ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களில் இருந்தும் ஆதாரங்கள் காட்டப்பட்டுள்ளன
பக்தி உபாஸனை ஸேவை -ஒரே பொருள் சொற்கள் -ஸேவா பக்தி உபாஸ்த்தி -நிகண்டு
வர்ணாஸ்ரம தர்மம்
அதனால் ஷாந்தி தமம் சமம் வர வர
அதனால் த்யானம் கிட்டும்
அதனால் மேலே உபாஸனம் -பக்தி -படிக்கட்டு
இந்த உபாஸனம் அடிமையை ருசி யுள்ளதாய் இருக்கும் என்பதும்
பக்திக்கு நாம ஸங்கீர்த்தநாதிகள் சரீர ஸ்தானம் என்பதும்
இந்த பக்தியே சர்வ சாஸ்திர அர்த்தங்களிலும் ஸாரமானதாலும்
பரம ரஹஸ்யம் என்று விளக்கப் பட்டுள்ளன –
தமேவம் வித்வாந்”,“ப்ரஹ்ம விதாப்நோதி பரம்”,
“யஜ்ஜேந தாநேந தபஸா அநாஶகேந”,
“ஶாந்தோ தாந்த:”, இத்யாதி த்ரய்யந்த வசநாநி,
“ஸர்வ அபேக்ஷா யஜ்ஞாதி ஶ்ருதே : அஶ்வவத்”,
“ஶம தமாத்யுபேத: ஸ்யாத்”,
“ஆவ்ருத்திர் அஸக்ரு துபதேஶாத்”(ப்ரஹ்ம ஸூத்ர-4-1)
இத்யேவம் ப்ரகார ப்ரஹ்ம ஸூத்ர ந்யாயை : மதித்வா மோக்ஷ ஸாதநம் நிரணைஷீத் ||
வாக்ய காரஶ்ச “வேதநம் உபாஸநம் ஸ்யாத் தத் விஷயே ஶ்ரவணாத்” இதி |
இதமேவ உபாஸநம் விபக்த்ரிமம் பக்தி: இத்யுச்யதே ,நாந்யத் |
உபாஸனமும் பக்தியும் ஒன்றே -மூன்று காரணங்கள் மேல் காட்டுகிறார்
பலமும் -செய்யும் வடிவம் ரூபமும் -விதி வாக்கியம் சோதன வாக்கியம் ஒன்றாக இருப்பதால்
குத:?ஸம்யாேக ரூப சோதநாக்யா விஸேஷாத் | ஜ்ஞாப்யதே
ஹ்யுபாஸநஸ் யேவ பக்தேரபி மோக்ஷ லக்ஷணேந பலேந ஸம்யாேக:|
யதா– “ந ஸம் த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சக்ஷுஷா பஶ்யதி கஶ்சநைநம்|
ஹ்ருதா மநீஷா மநஸா அபிக்லுப்தோ ய ஏநம் விதுரம் ருதாஸ்தே பவந்தி ||”
இதி |ஹ்ருத் இதி பக்தி:; ஶ்ருத் யந்தரேண ஸ்ம்ருதி பிஶ்ச “ந ஸம்த்ருஸே திஷ்டதி” இத்யுபக்ரம்ய
“பக்தயா ச த்ருத்யா ச ஸமாஹிதாத்மா ஜ்ஞாந ஸ்வரூபம் பரிபஶ்ய தீஹ” இதி ஹ்ருச் சப்த ஸ்தாநே பக்தி பத ப்ரயாேகாத் |
(கண்ணால் பார்க்க முடியாது -மனிதர் ஹ்ருதயத்தால் -பார்த்தவன் அம்ருதத் தன்மை அடைகிறான்
ஹ்ருதயம் -பக்தி உபாசனம் வேறே இடத்திலும் உண்டே)
யதா ச “புருஷஸ் ஸ பர: பார்த பக்தயா லப்யஸ் த்வநந்யயா”,(8-22)
“பக்தயா த்வநந்யயா ஶக்ய:”,
“பக்த்யா மாமபிஜாநாதி”,
“பக்த்யா அவிசிந்நயா முக்தி:” இதி ஆங்கிரஸ ஸ்ம்ருததௌ|
வைஷ்ணவே தர்ம“பரமாத்மநி கோவிந்தே பக்திரவ்யபி சாரிணீ |
ப்ரயச்சதி ந்ருணாம் முக்தி॒ம் மாதே அபூத்–அத்ர ஸம்ஶய:||”,
“யே த்வாம் தேவம் த்ருவம் பக்தா: புராணம் புருஷோத்தமம் |
ப்ராப்நுவந்தி ஸதா காமாநிஹ லோகே பரத்ர ச ||
அமாேகாஸ்தே பவிஷ்யந்தி பக்தி மந்தஶ்ச யே நரா:||” இதி ஶ்ரீமதி ராமாயணே |
ஶ்ரீவாமநே , “யேஷாம் விஷ்ணு: ப்ரியோ நித்யம் யே விஷ்ணோ : ஸததம் ப்ரியா:|
ந தே புந:ஸம்பவந்தி தத் பக்தாஸ் தத் பராயணா:||” இதி |
ரூபம் ஸ உபயத்ர புண்டரீகாக்ஷம் ப்ரஹ்மைவ|
ஸோதநா ச உபாஸ்ஸ்வ பஜஸ்வேதி |
உபாஸ்தி பஜதீ ஹி ஸேவா விஸேஷ விஷயௌ|
அத ஏவ நைகண்டுகா :“ஸேவா பக்தி: உபாஸ்தி:” இதி |
லைங்கமார் கண்டே யயோ
“பஜ இத்யேஷ தாதுர்வை ஸேவாயாம் பரிகீர்தித:|
தஸ்மாத் ஸேவா புதை : ப்ரோக்தா பக்தி ஶப்தேந பூயஸீ ||” இதி|
உபாஸ்யஸ்ய பகவதோ நிரவத்ய மஹா குணத்வாத் நிஸ் ஸீம ப்ரீதி ரூபம்
நிர் வ்யாஜ ஸ்வாம்யாத் தாஸ்ய ஏக ருசி கர்பம் ச இதமேவ உபாஸநம் விவிச்யத இதி பக்தித்வ வ்யபதேஶ:|
ஏவம் விதம் ப்ரியத்வம் ஆஶ்ரித்ய ஹி
“ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ அத் யர்தம்”,(7)
“பஜதாம் ப்ரீதி பூர்வகம்”,
“துஷ்யந்தி ச ரமந்தி ச”,
“நாத யோநி ஸஹஸ்ரேஷு”,(விஷ்ணு புராணம் -என்நின்ற யோனியில் பிறந்தாலும் இடைவிடாத பக்தி வேண்டும் )
“யா ப்ரீதி: அவி வேகநாம்”-(விஷயாந்தர பிராவண்யம் லோகம் வைப்பது போல் _-இதி ஶ்லாேக த்வயம்,(முதல் அம்சம் -18-19)
“தத் ஸ்ம்ருத்ய ஆஹ்லாத ஸம்ஸ்தித:”,
“தந் நாம ஸ்மரணோத் பூத புலகோ திதி புங்கவ:”(ப்ரஹ்லாதன் பிரார்த்தனை )
இதி ஶ்ரீவிஷ்ணுதத்த்வே
“ஸேவா பக்திஸ் ஸமாக்யாதா ஜ்ஞாந வாஸந யாக்ருதா | உத்பந்நாயாம் ததஸ் தஸ்யாம் ஸ்நேஹ பாவ: ஸ்வயம் பவேத் ||” இதி |
“பரமாத்மநி யோ ரக்கதா விரக்தோ அபரமாத்மநி |
ஸர்வேஷணா விநிர்முக்: ஸ்ஸ பைக்ஷம் போக்தும் அர்ஹதி” இதி |
“ஸ நோ தேவ: ஶுபயா ஸ்ம்ருத்யா ஸம்யுநக்து” (தைத்ரியம் )இத்யாத் யுபாஸந விதிஷு வசநாநி ப்ரவ்ருத்தாநி ||
தாஸ்யைக ருசி கர்ப ஜ்ஞாபகாநி ச “மாமநுஸ்மரந்”, “பார்த அநுசிந்தயந்”,
“க்ருஷ்ண அநுஸ்மரணம் பரம்” இத்யாதீநி |
அநுரித்யயம் நிஹீந அர்தோ ஹி ஜ்ஞாப்யதே தஜ்ஜ்ஜை 😐
நிஹீநத்வம் சாஸ்ய ஸ்வாபாவிகம் தாஸ்யம்,
தத் அநுஸந்தாந கர்பம் உபாஸநம் அநு ஸ்மரணம் |
ப்ரீதி சேவா அநு ஸ்ம்ருதி வர வர பிராயச்சித்தம் ஆகும்
அநு ஸ்மரணம் -தொடர்ந்து என்றும் -தாஸ பாவத்துடன் என்றும் இரண்டு அர்த்தங்கள்
பக்தேஶ்ச கீர்தநாதி ஶரீரத்வம்
“ஸததம் கீர்தயந்த:”,
“மந்மநா பவ” இத்யாதௌ வ்யக்தம் |
அஸ்யா ஏவ ஸகல ஶாஸ்த்ரார்த ஸாரத்வேந பரம குஹ்ய தமத்வம் ச
“இதம் து தே குஹ்ய தமம்”,(9)
“யஜ் ஜ்ஞாத்வா நேஹ பூயோ அந்யத்”,
“ஸர்வ குஹ்ய தமம் பூய:” இத்யாததௌ தர்ஶிதம் |
அலம் ப்ரஸஜ்ய ||
மேல் சொன்னால் விரிவடையும் என்று பிரமாணங்களை அருளிச் செய்வதை நிறுத்துகிறார்
————
அஞ்சாவது -அஞ்சும் படி உள்ளதே -மேல் எளிதான உபாயம்
லகு உபாய சித்த ஸாத்ய உபாயம் மேல் பார்ப்போம்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் -கீதாச்சார்யன் அருளாலே ஆழ்வார்கள் சரணாகதி சொன்னது போல்
கீதையில் அங்க பிரபத்தி மாம் ஏகம் –இத்யாதி அருளிச் செய்தானே
3- லகு உபாய –ஸாத்ய ஸித்த உபாய வினாவிற்கு விடை
இந்த பக்தியானது பல ஜென்மங்களுக்குப் பிறகு ஞானவானாகி என்னை அடைகிறான் என்பது முதலாக
ஸாஸ்த்ரங்களில் சொல்லியபடி அநேகம் ஆயிரம் ஜென்மங்களில் சம்பாதித்த புண்ய பரிபாகத்தால்
எல்லாப் பாபங்களையும் போக்கிக் கொண்டவர்களுக்கும்
நெடுநாள் இடைவிடாமல் உபாஸிப்பதால் மாத்திரம் உறுதிப்படுகிறது
அப்படியானால் ஸாஸ்த்ரத்தில் சொன்ன எந்த உபாயத்தையும் அனுஷ்ட்டிக்கத் திறமை இல்லாத பிராணிகளுக்கு என்ன கதி
என்கிற பயத்தைப் போக்குவதற்காக லகு உபாயத்தைக் காட்டக் கருதி
மூன்றாவது கேள்விக்கு விடை கூறுகிறார்
எல்லா விதத்தாலும் புருஷோத்தமனே ஸ்தோத்ரத்துக்குத் தகுந்தவன் என்கிற அபிப்ராயத்தால்
இதர தேவதைகளைக் காட்டிலும் இவனுக்கு உண்டான ஏற்றத்தை
அநாதி நிதனம்
விஷ்ணும்
ஸர்வ லோக மஹேஸ்வரம்
லோகாத்யக்ஷம்
ப்ரஹ்மண்யம்
ஸர்வ தர்மஞ்ஞம்
லோகாநாம் கீர்த்தி வர்த்தனம்
லோக நாதம்
மஹத் பூதம்
ஸர்வ பூத பவோத் பவம்
என்கிற பத்து குணங்களால் காட்டுகிறார்
தமேவச –அநாதி நிதனம் — –ஸர்வ துக்காதிகோ பவத்
ஹந்த! இயம் பக்தி:
“பஹூநாம் ஜந்ம நாம் அந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்யே ”,
“ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு” இத்யாதி ப்ரகாரேண(தபோ ஞான சதாப்தி நராணாம் ஷீண பாபேந-பக்தி ஆரம்ப விரோதி பாபங்கள் போகும் விஷ்ணு தர்மம் -பல்லாயிரம் பிறவிகளுக்குப் பின் )
பஹு தர ஜந்ம ஆர்ஜித ஸுக்ருத் பரிபக்வ ஷயாணாம்
தீர்க கால நைரந்தர்ய ஸேவிதா த்ருட பூமி:பவதீதி,
ஶாஸ்த்ரீய ஸர்வ உபாய தரித்ராணாம் ப்ராணிநாம் கா கதிர் இதி பயம் அபநேதும் லகூபாயம் தர்ஶயந்(இதில் இருந்து கீழ் அலகு உபாயத்துக்குப் பதில் -இது மூன்றாம் கேள்வியான லகு உபாயத்துப் பதில்-இயன்றவரை ஸ்தோத்ரம் போதுமே )
ஸ்துவந்ந: கம்’ இதி ததீயம் ப்ரஶ்நம் ப்ரதி வக்தி
தமேவ இத்யாதி ஸர்வ பூத பவோத் பவம் இத்யந்தேந|(ஆறாவது ஸ்லோகம் தொடங்கி ஏழாவது ஸ்லோகம் வரை )
அஸ்யைவ ஸர்வதோ முகம் ஸ்துதி யோக்யத்வம்
அபிப்ரயம் ஸ்தத் அபேக்ஷயாஸ்
அபேக்ஷிக க்ஷுத்ர தேவதாந்தராதி வ்யாவர்தகை : அநாதி நிதநத்வாதிபி: தஶபி: விஶிநஷ்டி –
——–
அநாதி நிதனம் விஶ்ணும் ஸர்வலோக மஹேஶ்வரம் |
லோகாத்யக்ஷம் ஸ்துவன் நித்யம் ஸர்வது:காதிகோபவேத் ||–6-
ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஞ்யம் லோகானாம் கீர்த்தி வர்த்தனம் |
லோக நாதம் மஹத் பூதம் ஸர்வபூத பவோத்பவம்||–7-(பத்து பெருமைகளைக் கொண்டவனை நித்தியமாக ஸ்தோத்ரம் பண்ணி )
அநாதி நிதநம் —தஸ்மாத் அகலா உபாதிகம் உபகாரிணம் |(முதல் முடிவும் இல்லாமல் காலத்தால் அபரிச்சேதம் )
விஷ்ணும்-அதேஸ உபாதிகம் |(தேசத்தால் பரிச்சேதம் இல்லாதவன்-கரந்து எங்கும் பரந்துளன் )
ஸர்வ லோக மஹேஶ்வரம் — ஸ்தோத்ரு-மநோரத பூரண பர்யாப்த மஹா விபூதிகம்|(நியமன ஸாமர்த்ய-அலம் புரிந்த நெடும் தடக்கை அமரர் வேந்தன் )
லோக அத் யக்ஷம்-தத் உசித நிருபாதிக அநு ஸந்தாநம் |(உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி )
ப்ரஹ்மண்யம் —-ப்ரஹ்மணோ அநந்த ஶாகாய வேதாய ப்ரபிபாத்ய தயா ஹிதம் ;அத ஏவ உத்காடித ஸ்துதி விஷயம்|(எளிமையாக ஸ்தோத்ரம் பண்ண விஷயம் ஆகிறான் )
ஸர்வ தர்மஜ்ஞம் —அத ஏவ ஸ்வ ஸ்துதி பரம தர்மஜ்ஞம்|
லோகாநாம் கீர்தி வர்தநம் —ஸர்வ லாேக ஆஶ்ரயிணாம் ஸ்தோத்ரு ப்ரப்ருதீநாம் ஆத்மந இவ “யம் ஸ்துவந் ஸ்தவ்ய தாமேதி”
இதி ப்ரகாரேண அஸேஷ லோக வேத ப்ரஶஸ்ய கீர்தி காரணம்|(தனக்கு நிகராக ஸ்தோத்ரம் பண்ணத் தகுதியாக்கி அருளுகிறார் )
லோக நாதம் —-லாேகா நாம் ஸ்வாமிநம்;-அத: ஸ்துத்யாதி ஸர்வ பரிசரண அர்ஹம் |
மஹத் பூதம் –-ஐஶ்வரேண பரம மஹத்த்வேந ஸ்வரூப அநுபந்திநா யுக்தம் ; அத: அக்லேஸேந ஸ்தோத்ர மாத்ரேண ஸ்வாராத்யம் |
மஹாந்தோ ஹி ஸ்வ அநுக்ரஹ ஸம்வாத ஸூசந மாத்ரேண ஹ்ருஷ்டா:, ந பஹு வாஞ்சந்தி |
மூன்றாவது வினாவிற்கு விடை
ஆதியும் அந்தமும் இல்லாதவரும்
எங்கும் வியாபித்து இருப்பவரும்
எல்லா உலகங்களுக்கும் முதல் கடவுளும்
எல்லா உலகங்களையும் பிரத்யக்ஷமாகப் பார்ப்பவரும்
வேதங்களால் உரைக்கப் படுபவரும்
எல்லாத் தர்மங்களையும் அறிந்தவரும்
தம்மை ஸ்துதிக்கும் உலகோருக்கு புகழைப் பெருகச் செய்பவரும்
உலகங்களுக்கு ஸ்வாமியும்
சிறந்த பொருளும்
எல்லாப் பொருள்களின் இருப்புக்கும் காரணமான
அந்தப் பகவானை எப்போதும் ஸ்துதிப்பதனால் எல்லாத் துன்பங்களையும் கடந்தவன் ஆவான்
ஆதியந்தம் இல்லாதவர் என்றதனால் -காலத்தால் அளவிடக் கூடாதவர் என்பதும்
எங்கும் வியாபித்தவர் என்பதனால் -தேசத்தால் அளவிடக் கூடாதவர் என்பதும்
எல்லா உலகங்களுக்கும் முதல் கடவுள் என்பதனால்
ஸ்துதிப்பவருக்கு வேண்டியவற்றை வேண்டியபடி அளிக்கும் ஐஸ்வர்யம் உடையவர் என்றும்
எல்லா உலகங்களையும் ப்ரத்யக்ஷமாகப் பார்ப்பவர் என்றதனால் ஸ்துதிப்பிவனுக்குத் தக்கது இன்னது என்று தாமாகவே சிந்திப்பவர் என்பதும்
வேதங்களால் உரைக்கப் படுபவர் என்பதால் ஸ்தோத்ரம் செய்ய வேண்டிய விஷயம் உள்ளவர் என்றும்
எல்லாத் தர்மங்களையும் அறிந்தவர் என்பதால் தம்மைத் ஸ்துதிப்பது பரம தர்மம் என்று அறிந்தவர் என்பதும்
தம்மை ஸ்துதிக்கும் உலகோருக்கு புகழைப் பெருகச் செய்பவர் என்பதால் எந்தப் பிராணியும் தன்னை ஸ்தோத்ரம் செய்வதால்
தன்னைப் போலவே இருக்க அருளி புகழச் செய்பவர் என்றும்
உலகங்களுக்கு ஸ்வாமி என்பதால் ஸகல பரிசரணைகளுக்கும் உரியவர் என்றும்
சிறந்த பொருளாக இருப்பவர் என்பதால் ஆராதனைக்கு எளியவர் என்றும்
எல்லாப் பொருள்களின் இருப்புக்கும் காரணமாக இருப்பவர் என்பதால் அவர்களை அனுக்ரஹிப்பவர் என்றும்
அந்தப் பகவானை எப்போதும் ஸ்துதிப்பதனால் எல்லாத் துன்பங்களையும் கடந்தவன் ஆவான் என்பதால் பரிபூர்ண பக்தி யோகம்
அனுஷ்ட்டிக்க இயலாமல் இயன்ற வரை குண சங்கீர்த்தனம் செய்பவன் தாப த்ரயங்கள் நீங்கப் பெற்று
சீதள மடுவைப் போல் இருக்கும் அவன் இடம் நீராடப் பெறுவார் என்பதும் சொல்லிற்று ஆயிற்று –
யத உத்யோகே
“அந்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அந்யத் பாதாவநே ஜநாத்|
அந்யத் குஶல ஸம் ப்ரஶ்நாத் ந சேச்சதி ஜநார்தந:||” இதி|
(தூய நீர் கொண்ட சொம்பு தீர்த்தத்துக்கு மேல் எதிர்பார்க்காமல்
மாலா காரர் –
ஜனங்கள் ஜனியையைப் போக்கும் ஜனார்த்தனன்)
ஸர்வ பூத பவ உத்பவம் – அஸத் வ்யாவ்ருத்தாநாம் ஸத்தா ஹேதும் ;
அத அவர்ஜநீயத்வாத் தேஷாம் அவஶ்யம் அநுக்ரஹீதாரம் ;
ஏவம் பூதம் ஸ்துவந் –(இப்படி பத்து பெருமைகளை யுடைய )
பரிபூர்ண பக்தி யாேகா ஸம்பவே அபி:யதா ததா வா அபி குண ஸம்கீர்தநம் குர்வந் |–
ஸர்வ து:காதிகோ பவேத்–
தாப த்ரய தவ தஹநம்-அதீத்ய நிரதிஶய அநந்த ஶீதல ஹருதம் பகவந்தம் கச்சேத்|(தயரதன் பெற்ற மரகத மணித்தடம் )
அஸ்ய ச யுக்தம் லகு தர ஸ்துதி மாத்ர விஷயத்வம்,(இது பழைய ஸ்துவன் அல்ல -கீழ் ஜபம் -பக்தி யோகம் இங்கு ஸ்துவன் மாத்திரம் )
“த்யாயம் ஸ்துவந் நமஸ்யந்” இத் யநந்த ரோக்த த்யாநாதி ஸஹ சர குரு தர ஸ்தவந வைலக்ஷண்ய ப்ரதீதே :,
அந்யதா புநருக்தி ப்ரஸங்காத், “ஸ்துவந்த: கம்” இதி
ஸ்வதந்த்ர ப்ரஶ்நாந்தர ப்ரயுக்தத்வாத், அநேக
ஶாஸ்த்ராந்தர ஸங்க தத் வாச்ச அவகம்யதே ||6, 7||
(ஸூத்த சத்வம் வேறே =மிஸ்ர தத்துவத்தில் இரண்டைக் கழித்து பெரும் ஸுத்த சத்வத்துக்கு நிகர் சொல்ல முடியாதே
அதே போல் ஸ்தவனம் -கீழ் இரண்டிலும் வேறே -இங்கு லகு ஸ்தோத்ரம் மாத்திரமே
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திரு நாமம் நாரணமே
இந்த நாராயணன் -நாராயணன் பரஞ்சோதி இத்யாதி நாராயணன் போல் அல்லவே )
கோ தர்ம இதி பஞ்சமம் ப்ரஶ்நம் பரிஹரதி-
ஸ்துவன் என்பதற்கு இங்கு இயன்றவரை ஸ்தோத்ரம் செய்வதே தகுதியான பொருள் -ஏன் எனில்
இதற்கு முன் ஸ்துவன் என்பது த்யானம் முதலியவற்றுடன் சேர்ந்தே கூறப்பட்டு இருப்பதால்
அத்தை பெரிய ஸ்தோத்ரம் என்றும்
இதனை லகுவான ஸ்தோத்ரம் என்றும் கொள்ள வேண்டும்
இல்லாவிடில் புனர் யுக்தி தோஷமாகும்
மேலும்
ஸ்துவந்த கம் என்பது தனித்த வினாவாகையாலும்
மற்றும் அநேக சாஸ்த்ரங்களோடே ஒத்து இருக்கையாலும் இதுவே பொருத்தமானது –
—————-
4- பரம ஸாத்ய உபாய வினாவிற்கு விடை
அவதாரிகை
தியானித்தல்
ஸ்துதித்தல்
நமஸ்கரித்தல்
முதலிய கைங்கர்யங்களே சிறந்த தர்மம் என்கிறார் –
ஏஶ மே ஸர்வ தர்மாம் தர்மோ அதி கதமோ மத: |
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைர் அர்சன நர: ஸதா||–8-(இதில் நாலாவது ஸ்தவன் )
ஏஷ மே இதி |ஏஷ-அநந்த ரோக்தோ பகவ தர்சந ஸ்தவநாதி ரூபோ
யதாதிகாரம் குரு லகு பாவேந வ்யவஸ்தித:|
ஸர்வ தர்மாணாம் மத்யே அதிகதமோ மத:| தர்மா: ஹி
1-ஐஹிகா : பஶு புத்ராத் யர்தா:,
2-ஆமுஷ்மிகா :–ஸ்வர்காத் யர்தா:, 3-அஸங்கை : பகவத் ஆராதந போத அநுஷ்டித
இஷ்டா பூர்த பரி கர்மித தத்த்வ ஜ்ஞாந ஸமாதி ஶரீரோ மோக்ஷார்த:,
4-ஸ அநுராக பகவத் ஸ்மரண கீர்தந ப்ரணாமாதி:, தத் அஸாதாரண பரி சரணாத்மா சேதி சதுர்விதா:|
தத்ர அதிக தம இதி தமபா த்ரிப்ய: சதுர்தம் உத்கர்ஷயதி |(அர்த்த பத பிரயோகம் இதில் மட்டும் இல்லையே-ஸ்வயம் பிரயோஜனம் -கைங்கர்ய ரூபமாக ஸ்தோத்ரம்-எனக்கே யாட் செய் -எக்காலத்தும் -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே )
ஐந்தாவது வினாவிற்கு விடை
செந்தாமரைக் கண்ணரை ஒரு மனிதன் பக்தியுடன் எக் காலமும் ஸ்தோத்ரங்களால் அர்ச்சிப்பதே
எல்லாத் தர்மங்களிலும் மிகச் சிறந்த தர்மம் என்று நான் நினைத்து இருக்கிறேன்
1-தர்மங்கள் பசு புத்ரன் முதலான இம்மைப் பயனை அளிப்பதாகவும்
2-ஸ்வர்க்காதிகளான மறுமைப் பயன் அளிப்பதாகவும்
3-பயனையே எதிர்பாராமல் பகவத் ஆராதனம் என்னும் நினைப்புடன் அனுஷ்ட்டிக்கப் படும்
இஷ்டா பூர்த்தாதி -இஷ்டம் -யாகம் முதலியன செய்தல் -பூர்த்தம் -குளம் வெட்டுதல் -தோட்டம் வைத்தல் முதலியன
இவற்றைச் செய்வதால் பரிஷ்கரிக்கப்பட்ட ஸமாதி ரூபமாகிய மோக்ஷத்தை அளிப்பனவாயும்
4-எம்பெருமானை ப்ரீதியோடே நினைப்பது -அவன் குணங்களை ஸ்தோத்ரம் செய்வது -அவனை வணங்குவது
முதலிய ஏகாந்தமாக அவனுக்கு அடிமை செய்வதும்
ஆக நான்கு வகைப்பட்டு இருக்கும்
முதல் மூன்றைக் காட்டிலும் நான்காவதே மிகச் சிறந்தது –
இங்கே எல்லாத் தர்மங்களிலும் மிகச் சிறந்த தர்மம் என்று கூறுவதால் மற்ற மூன்றைக் காட்டிலும்
எம்பெருமானுக்கு ஏகாந்தமாக அடிமை செய்வதே மிகச் சிறந்தது என்று கூறப்பட்டதாகும் –
ததுப பாதயதி – யத் பக்த்யேதி| யஸ்மாத் பக்த்யாதி குணவாந் தஸ்மா ததிகதம இதி |
பக்த்யா இதி அநுஷ்டாந ஸமயே அபி ப்ரீதி கர்பத்வேந ஸுக உபாதாநத்வ பரம் |
கீதம் ஹி “ஸு ஸுகம் கர்தும்” (9-2)இதி | யுக்தம் ஸைதத் ப்ரிய தம பதிஸ்மரணம் ப்ரியமதி ஸ்மரணம் பிரியம் கரமதி
பக்தியுடன் என்றதால் ஸூ ஸூகம் கர்த்தும் -செய்வதற்கு இனியது -என்று கீதையில் அருளிச் செய்தபடி
அனுஷ்டான சமயத்திலும் பிரீதியுடன் இருத்தலால் இனிதாக அனுஷ்ட்டிக்கத்தக்கது என்கிறது
இதனால் இதற்கும் இதர தேவதைகளின் உபாசனத்துக்கும் வாஸி தெரிவிக்கப்படுகிறது –
ராஜ வித்யா ராஜ குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷ அவாகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம் –9-2-
இந்த பக்தி யோகம் வித்யைகளுக்குள் சிறந்ததாய் ரஹஸ்யங்களுக்குள் சிறந்ததாய் –
பாபங்களைப் போக்கடிப்பவற்றுள் உயர்ந்ததாய் -என்னை -நேரில் காட்டுவதாய்
என்னை அடைவிக்கும் சாதனமாயும் இருப்பதாய் -அனுஷ்டிப்பதற்கு மிகவும் இனியதாய் –
பலத்தைக் கொடுத்த பின்பும் அழியாததாய் இருப்பது –
அநேந அஸ்வாமிஷு தேவதாந்தரேஷு
கஷாய பாநவத் விரஸத்வே அபி ஹித புத்த்யா அநுஷ்டீய மாநேப்யோ வ்யாவ்ருத்தி: க்ரியதே |
புண்டரீகாக்ஷம் இதி விஷய அபி ரூப்யேண விகத பயங்கர தத்த்வாந்தர பஜநேப்யோ வ்யாவ்ருத்தி:|
ஸ்வைவரிதி வாங் மாத்ர ஸாத்யத்வேந விஶ்வஜிச் சாந்த்ராயணாதிப்யோ வ்யய ஆயாஸ
பஹுலேப்கயோ வ்யாவ்ருத்தி:|(திருமாலிருஞ்சோலை என்ன–திருமால் வந்து நெஞ்சு நிறையப் புகுவானே )
புண்டரீகாக்ஷன் -செந்தாமரைக் கண்ணன் என்பதனால் சேவிக்கப்படுபவன் மிக அழகாக இருப்பவன் என்றும்
பயங்கர ரூபத்தை யுடைய தேவதாந்த்ரங்களை உபாசிப்பதை விட இங்கு உள்ள ஏற்றம் சொல்லிற்று
ஸ்தோத்ரங்களினால் -என்றதாலும்
ஸ்தோத்ரம் என்பது வாக்கினால் மாத்திரம் செய்யப்படுவது ஆகையால்
விஸ்வ ஜித் சந்த்ராயணம் முதலியவைகளை போல் பொருள் செலவும் மிக மெய் வருத்தமும் இதற்கு வேண்டுவது இல்லை என்பதும்
அர்ச்சிப்பது -என்றதால் ஒரு புருஷ விசேஷத்தை நேராக ஆராதனம் பண்ணுவதே போல் இருப்பதால்
கண்ணுக்கு விஷயமாகாமையால் உண்டாகும் வருத்தமும் இதில் இராது என்றும் தெரிவிக்கப்பட்டது
ததா ஹி பகவாந் வ்யாஸ:
“ஆர்தா விஷண்ணா: ஶிதிலாஶ்ச பீதா:
கோரேஷு ச வ்யாதிஷு வர்தமாநா:|
ஸம்கீர்த்ய நாராயண ஶப்த மாத்ரம்
விமுக து:க்காஸ் ஸுகிநோ பவந்தி||” இதி |
ஶ்ரீவிஷ்ணுபுராணே “அவஸே நாபி யந்நாம்நி” இத்யாதி |(6-8)
வைஷ்ணவே தர்மே “அஜ்ஞாநதோ ஜ்ஞாநதோ வா வாஸுதேவஸ்ய கீர்தநாத் | தத் ஸர்வம் விலயம் யாதி தோயஸ்தம் லவணம் யதா||”,
“ஶமாய அலம் ஜலம் வஹ்நே : தமஸோ பாஸ்கர உதய:|
ஶாந்தி: கலே : அகௌ கஸ்ய நாம ஸம்கீர்தநம் ஹரே :||”,
“யந் நாம ஸம்கீர்தந கதா விமுச்யதே ”,
“யந் நாம ஸம்கீர்தந கதா மஹா பயாத் விமோக்ஷமாப்நோதி”,
“ஸக்ருதுச் சரிதம் யேந ஹரிரித்ய க்ஷர த்வயம் |
பத்த: பரி கரஸ்தேந மோக்ஷாய கமநம் ப்ரதி ||”,
“யஸ்ய நாம்நி ஸ்ம்ருதே மர்த்ய: ஸமுத் க்ராந்தே : அநந்தரம் |
ப்ராப்நோதி வைஷ்ணவம் ஸ்தாநம் புநரா வ்ருத்தி வர்ஜிதம் ||”,
“அச்யுத அநந்த கோவிந்த நாமோச் சாரண பேஷஜாத் |
நஶ்யந்தி ஸகலா ரோகா : ஸத்யம் ஸத்யம் வதாம் யஹம் ||” இத்யாதி |
அந்யத்ர ச “ஸம்கீர்தயேத் ஜகந் நாதம் வேதம் வா அபி ஸமீரயேத்” இதி ச|
வைஷ்ணவே ஸூக்தே ”ஆஸ்ய ஜாநந்தோ நாம சித் விவக்தந”,
“த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜநாஸ:”|
அஸ்ய கீரய: – கீர்தயிதார:, த்ருவாஸ: – அபுநராவர்திநோ பவந்தி |
அர்சேதிதி- அஸ்ய தர்மஸ்ய புருஷ விஸேஷ ஸமாராதந ரூபாம் அநதி பரோக்ஷாம் ஹி ஸூசயதி |
கீதம் ச “ப்ரத்யக்ஷாவகமம்” இதி|
ந ஹ்யஸ்ய தபஸ் தீர்தாதிவத் புருஷ ப்ரீணநத்வம் ஶாஸ்த்ர ஆஸ்திக்யைக ஸாத்யம் |(ஸாஸ்த்ர ஆஸ்திக புத்தியால் தாபம் தீர்த்தம் பாவனம் இது அப்படி இல்லையே )
நர இதி ப்ராயேண
ஸர்வ சேதநா நாம் யதா ஸம்பவம் அதிகாரம் ஸூசயதி |
ஏக வசநம் ச மஹா யாேகாதி பஹு ஸஹகாரி நைரபேக்ஷ்ய பரம்
நிந்த்ய குண வ்ருத்த ஜந்ம நாமபி
பக்த்யபி ருசி மாத்ர மஹா குணேந அகுதோ பயம் பஜநீயோ ஹி பகவாந்–(நீசராலும் பக்தியில் விருப்ப மாத்திரத்தாலே பயமோ இல்லாமல் பஜனம் பண்ணலாம் என்று தானே அருளிச் செய்தானே
இந்த ஒரு குணமே போதுமே ஸ்தோத்ரம் பண்ண )
———–
உபநிஷத் -கீதை -அங்க பிரபத்தி -பக்தி ஆரம்ப விரோதியைப் போக்க
ஸ்வ தந்த்ர பிரபத்தி -கத்ய த்ரயம் -ராமானுஜர் அனுஷ்டானம் –
விஷ்ணு ஸஹஸ்ர நாமம் ஸாத்ய உபாயம் ஒன்றே
ஸித்த உபாயம் பற்றி முதல் இரண்டு கேள்விகள் -சொன்னாலும் நாலுமே ஸாத்ய உபாயத்தைப் பற்றியது தான்
ஓன்று நாம் பண்ணும் கிரியை
அதுக்குப் பலம் தரும் பகவான் -கிரியை பலம் தரட்டும் என்று சங்கல்பித்து
த்யானம் அர்ச்சனம் ஸ்தோத்ரம் இவை –
ஸங்கல்பம் பண்ணிய அவனுக்கு முக்யத்வம் கொடுத்து ஸித்த உபாயம்
எந்த செயல்களை செய்து முக்தி -அவற்றுக்கு முக்யத்வம் கொடுத்தால் ஸாத்ய உபாயம் ஆகும்
இந்த வாசியை உணர வேண்டும் –
ஜபம் ஒரு கிரியை
ஸ்தவனம் கிரியை
நான்கு இடங்களிலும் ஸ்துவன் –
ஆலம்பன உபாயம் ஜெபத்துக்கு அங்கம்
த்யாயன் ஸ்துவன் நமஸ்யந்த -இது பக்தி- சார்வே தவநெறி பக்தி யோகம் -மன் மநா பவ இத்யாதி
இவை இரண்டும் பகவானைப் பற்றியவை
அடுத்து
லகு உபாயம் த்யாயனம் நமஸ்காரம் -இல்லாமல் ஸ்தோத்ரம் மாத்திரம் -மூன்றாவது பதில்
அடுத்து நீர் அறிந்த தர்மங்களில்-உபாயங்களில் சிறந்த உபாயம் எது -கேள்வி -கோ தர்ம ஸர்வ தர்மாணாம் -பவத பரமோ மத
சொல்லப்பட்ட மூன்று தர்மங்களில் இல்லை
வேற்றுமை உறுப்புக்கு அர்த்தம் இங்கு -தர்மங்களுக்குள் என்பது இல்லை -தர்மங்களை விட என்று அர்த்தம் கொள்ள வேண்டும் –
கேள்வி ஆறாம் வேற்றுமை உருபில் இருந்தாலும் ஏஷாம் தர்ம -பதில் இருப்பதால் -இப்படியே கொள்ள வேண்டும் –
ப்ரீதி கர்ப்பத்த்வம் இதில் பூர்த்தியாக இருப்பதால் இது சிறப்பு
பக்தி என்றாலே ப்ரீதி தானே என்றால் -யமம் நியமம் தொடங்கி தாரணம் அப்புறம் தான் ப்ரீதி
இங்கு தொடக்கத்திலே ப்ரீதி
கீழ் எல்லாம் எந்தப் பலத்தைக் குறித்தும் பண்ணலாம்
பலம் இங்கு அவனைப் பற்றிய -ஸ்வயம் பிரயோஜனம் -கைங்கர்யமே பலம் -மிகச் சிறப்பு அதனால் தான் –
கதி த்ரய மூலத்வாத் –ஆர்த்தோ இத்யாதி –தேஷாம் பக்தி விசிஷ்யதே -அவர்களுக்குள் ஞானி நித்ய யுக்தாம் ஏக பக்தி விசிஷ்யதே போல்
—————
அத க்ஷிப்ரமேவ பாகீரதீ ப்ரவாஹ நேவ நிர்ணிக்த கல்மஷ ருசி:
பரம தார்மிகோ பவதீதி கீயதே |
குண விஷயே தாவத்
“ஸமோ அஹம் ஸர்வ பூதேஷு”;
வ்ருத்த விஷயேஷு ச “அபி சேத் ஸு துராசார:”;
ஜந்ம விஷயே அபி “மாம் ஹி பார்த வ்யபாஶ்ரித்ய யே அபி ஸ்யு: பாபயாேநய:” இத்யாதி |
ந சை தாவதா துராசாராதே : தர்மத்வம் |
“நா விரதோ துஶ் சரிதாத் நா ஶாந்தோ நா ஸமாஹித:”(கட உபநிஷத் ), “அப்ராப்ய: கேஶவோ
ராஜந் இந்த்ரியை : அஜிதை ந்ருணாம்” இத்யேவம் ப்ரகார வசநேப்ய: தஸ்ய
பகவத் அநிஷ்டத்வேந அதர்மத்வா வகமாத் |(இந்திரியங்களை ஜெயிக்காதவர்களால் கேசவனை அடைய முடியாது )
அத ஏவ அநந்தர மாஹ “க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ” இதி |
ஸர்வ ஆஶ்ரமிணாம் அநாஶ்ரமிணஶ்ச விதுராதே :-(3-4-27-மனைவியை இறந்தவனுக்கு அக்னி கார்ய யோக்யதை இல்லையே சங்கை -இருவருக்கும் உண்டே )
“ஶம தமாத் யுபேதஸ் ஸ்யாத்”,
“அந்தரா சாபி து தத் த்ருஷ்டே :” இத்யாதீநி ப்ரஹ்ம ஸூத்ராணி அதிகாரம் நிரணஷத
ஸமோஹம் ஸர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய–
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் —৷৷9.29৷৷
நான் பலவகைப் பட்டு இருக்கும் ஜீவ ராசிகள் விஷயத்திலும் -என்னை ஆஸ்ரயிக்கும் விஷயத்தில் சமமாய் இருப்பவன்
எனக்குத் தாழ்ந்தவன் என்னும் காரணத்தால் ஆஸ்ரயிக்கத் தகாதவன் எவனும் இல்லை
எவர்களோயெனில் -என்னிடம் பக்தியையே பலனாகக் கொண்டு அன்பு செய்கிறார்களோ
என்னிடத்தில் அவர்கள் வாழ்கிறார்கள் –
அவர்கள் இடத்தில் நானும் வாழ்கிறேன் -என்னிலும் உயர்ந்தவர்கள் இடத்தில் போல் பரிமாறுகிறேன்
தேவ மனுஷ திரியக் ஜங்கமங்கள் சர்வருக்கும் சமம் -யாரையும் த்வேஷிக்காதவன் –
அபி சேத் ஸு துராசாரோ பஜதே மாமநந்யபாக்.–
ஸாதுரேவ ஸ மந்தவ்யஸ் ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ—৷৷9.30৷৷
மிகவும் தாழ்ந்த ஒழுக்கைத்தை உடையவனாய் இருந்தாலும் -என்னிடம் வேறு பயனை விரும்பாதவனாய்
பக்தி செய்தானாகில் அவன் தலை சிறந்த ஞானிகளோடு சமமானவன் ஆவான் -கொண்டாடத் தக்கவனும் ஆவான் –
ஏன் எனில் அவன் அவன் நன்கு என்னிடத்தில் உறுதியான ஈடுபாடு உடையவன் அன்றோ –
க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஸஸ்வச் சாந்திம் நிகச்சதி.–
கௌந்தேய ப்ரதிஜாநீஹி ந மே பக்த ப்ரணஸ்யதி—৷৷9.31৷৷
என் விஷயமான ஸ்வயம் பிரயோஜன பக்தியைச் செய்பவன் துராசாரம் உள்ளவனாயினும் விரைவிலேயே
தடை நீங்கப் பெற்ற பக்தி யோகத்திலேயே ஈடுபட்ட நெஞ்சை உடையவன் ஆகிறான் –
நிலையான துராசார நிவ்ருத்தியை நன்கு அடைகிறான் –
குந்தீ புத்திரனே -என்னுடைய பக்தன் அழிய மாட்டான் என்னும் இந்த அர்த்தத்தை நீயே ப்ரதிஜ்ஜை செய்வாய் –
மனிதன் என்றதால் ஸகல சேதனரும் அதிகாரிகளே என்றும்
ஒரு மனிதன் -ஒருமையாகச் சொல்லுவதால் ஸஹ காரிகள் பலரும் தேவை உண்டோ என்னும் வருத்தமும் இராது என்பதும்
எக் காலமும் என்பதால் கால நிர்பந்தமும் இல்லை என்பதும் காட்டப்பட்டன
இதனால் அயனம் ருது மாசம் பக்ஷம் நக்ஷத்ரம் முஹூர்த்தம் என்னும் கால விசேஷத்தை அபேக்ஷிக்கும்
மற்றவற்றைக் காட்டிலும் இதுக்கு உண்டான வாசி தெரிவிக்கப்பட்டது
இனி ஜெபிப்பவனுடைய பரிசுத்தியைப் பற்றியும்
அதிகாரியினுடைய தாரதம்யத்தைப் பற்றியும்
ஸங்கீர்த்தனம் முதலிய லகுவாகச் செய்யக்கூடிய உபாயத்தைப் பற்றியும் விசாரித்து இருக்கிறது –
யுக்தஶ்ஸைஷ: ஸர்வ அவஸ்தேநாபி புருஷேண மாதுர் இவ புத்ரேண பரம வத்ஸலஸ்ய ஸர்வ பந்தோ :
நிஸ் ஸர்க ஸுஹ்ருதஶ்ச பகவதோ நாம க்ரஹணாதௌ அப்ரதிஷேத:;
த்ருஷ்டஶ்ச கஜேந்த்ர-க்ருத்ரராஜ வாயஸ-ராவணா வரஜ(ராவணனுக்குத் தம்பி )-கௌஸலே நாகர ஜாந பத(கோசல தேச சராசரங்கள் )-வல்லவீ- மாலாகார ப்ரமுகேஷு |(இப்படி அதிகாரம் இல்லாதவர்களுக்கு த்ருஷ்டாந்தங்கள் -முன் ஜென்ம புண்ய கர்ம வாசனை பதிவுகள் இவர்களுக்கு )
அப ஶூத்ராதி கரணே து அத்ரை வர்ணிகாநாம்
அநக்நி வித்யத்வாத் அக்நி வித்யாங்கேஷு குரூபஸதநாத்(அக்னி வித்யை அங்கமாகக் கொண்ட மஹா உபாசனம் )
யௌபநிஷத ஸம்ஸ்காரா பாவேந வேதாந்த வேத்ய பர வித்யோபார்ஜநே ச அநுபாயத்வாத் அநதிகாரோ ராத்தாந்தித: |
ததீயா பகவத் ஸமாஶ்ரயண அதிகார வ்யவஸ்தா அத்ரை வர்ணிகாநாம்
ஸமுத் ரிக்த ஸத்த்வ தயா முமுக்ஷூணாம அப்ரதிபத்தி ஶ்ரவண மநநாத் யௌபநிஷத ப்ரஹ்ம வித்யாே மஹா பதே ந ப்ரஸித்த அதிகார: |
(நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு அனைத்தும் உபதேசம்
பேயாழ்வார் திருமழிசை ஆழ்வாருக்கு உபதேசம்
இந்த இருவரும் மற்றவரை விட ஸ்ரேஷ்டம்)
தேஷ்வேவ ரஜஸ் தமஸ் ஸம் பேத ஸிதாஸித ஸத்த்வ தயா பலகாம தயா விப்ர லப்தாநாம்
தாத்ருஸோ யதா யோக முபாஸநேஷு ஸ்த்ரீ ஶூத்ர திரஶ்சாம் ச ப்ராசீந
பவ பரம்பரா ப்ரசித ஸம்ஸ்கார படிம்நா ஸுப்த ப்ரபுத்த ந்யாயேந(தூங்கி எழுந்தவன் உணர்வது போல் முன் ஜென்ம புண்ய பலனால் )
ப்ரத் யுத் பந்ந ஜ்ஞாநாம் விதுர தர்ம வ்யாத ப்ரப்ருதீநாம்
ப்ராரப்த கர்ம அநுஶய லேஶ-(ப்ராரப்த கர்மத்தால் இப்பிறவி -பிறவி எடுத்ததுமே அது தொலைந்து போனதே முன் ஜென்ம பதிவால் இப்பொழுது கஜேந்திரன் ஜடாயு இவர்களுக்கு )அந்ருண்யா அநுஜ்ஞாத ஜுகுப்ஸித ஜாதி ஸம்ஸர்காணாம் அபி தத் தஜ் ஜாத்ய ப்ரதிஷித்த ஸாமாந்ய தர்மாங்கேஷு
உபாஸநேஷு துர்வாரோ அதிகார:, அநுத்பாத்ய வித்யத்வாத் |
ந்ய தர்ஶி ச பகவதா சவ்நகேந ”தர்ம வ்யாதா தயோ அப் யந்யே பூர்வாப் யாஸாஜ் ஜுகுப்ஸிதே |
வர்ண அவரத்வே ஸம் ப்ராப்தா: ஸம் ஸித்திம் ஶ்ரமணீ யதா” (சபரியைப் போல் )இதி ||
அநுத் பந்தஜ் ஞாநாநாமபி க்ரம பாவிந்யா முக்ய பக்தே :
உபக்ரம பூத ஸ்மரண-ஸம்கீர்தந -ஶ்ரவணாதி: அப்ரதிஷித்த: |
தர்ம ஸ்மர்தாரோ அபி ஹி அஹிம்ஸா-ஸத்ய-ஶௌச-பரோபகார-
மாதா பித்ரு ஶுஶ்ரூஷண-ஶ்ரேஷ்ட தேவத அநுகூல்யாதிகம் -ஸாமாந்ய தர்மம் ஆசண்டாலம் அநுமந் யந்தே |
ஸ்வயம் ஸம்கீர்தந நிஷதே அபி கீர்தயித்ரு புருஷ அநுவர்தந -அநுமோதந – அமர்ஷண-அவிரோத மாத்ரேண
ஸுதூரோ அபி ஸம்பந்த ஸம்பவ: |(கீர்த்தனம் பண்ணுபவரை அனுவர்த்தித்து-விரோதம் பண்ணாமல் இருந்தாலே -பலன் பெறலாமே )
ஸ்மர்யதே ஹி -”தர்ம : ஶ்ருதோ வா த்ருஷ்டோ வா கதிதோ வா க்ருதோ அபி வா | அநுமோதிதோ வா ராஜேந்த்ர! புநாதி புருஷம் ஸதா ||” இதி |
“ப்ரயோஜயிதா அநுமந்தா கர்தா இதி ச விஸேஷதோ பகவத் தர்மஸ்ய ஸ்பர்ஶ வேதித்வம் |
உத்கோஷித: பூஜிதோ வா த்ருஷ்டோ வா நமிதோ அபி வா | ப்ரஸஹ்ய ஹரதே நரமத பாபம் கோ ந ஸேவேத் ஹரிம் தத: ||”
“கீர்தித: ஸம்ஸ்ம்ருதோ த்யாத: பூஜித: ஸம்ஸ்க்ருதஸ் ததா |
ஐஹிக ஆமுஷ்மிகீம் ரக்ஷாம் கரோதி பகவாந் ஹரி: ||”,
“ஶ்ருண்வந்தி யே வை படதஸ் ததா அந்யே பஶ்யந்தி யே மாமீரயந்தி” இத்யாதி |(விஷ்ணு தர்மம் )
அபி ச இதிஹாஸ புராணாதிஷு ஶ்வபாகாதேரபி பகவத் பஜநாநுமதி: |
வைஷ்ணவே தர்மே – — “நம இத்யேவ யோ ப்ரூயாத் மத் பக்த: ஶ்ரத்தயா அந்வித: |
தஸ்ய அக்ஷயோ பவேல்லோக: ஶ்வபாகஸ்யாபி நாரத ||”
இத்யாதி வசநாநி தத் பஹு மந்தவ்யத்வ நிஶ் ஸ்ரேயஸ ப்ராப்த்யாதி-வ்ருத்தாந்தாஶ்ச ஸாலம்பநா : |
ஏவம் ந கிம்சிதபி ஶாஸ்த்ரம் குப்யேத், வ்யவஸ்தித விஷயத்வாத் |(அதிகாரிகள் வேறே வேறே -சாஸ்திரம் வீணாகாதே )
இனி தேச கால வாசி இல்லாமல் பலன் கிட்டும் என்பதற்கு பிரமாணங்கள் காட்டி அருளுகிறார்
நரன் ஸதா -அனைவருக்கும் அதிகாரம் -எப்பொழுதும் நாமங்களை சொல்லிக் கூப்பிட கால தேச அபேக்ஷை இல்லையே
ஸதா -தேசத்துக்கும் காலத்துக்கும் -உப லக்ஷணம்
ஸதேதி கால விஸேஷாந் அபேக்ஷத்வம் ;
தேச ஶௌசாதி விஸேஷாந் அபேக்ஷாயா அபி ப்ரதர்ஶந மேதத் |
தேந அயந ர்து மாஸ பஷ நக்ஷத்ர முஹுர்த விஸேஷஸவ்ய பேஷேப்ய: ப்ரகர்ஷ: |
அத்ர ச “சக்ராயுதஸ்ய நாமாநி ஸதா ஸர்வத்ர கீர்தயேத் |
நா ஶௌசம் கீர்தநே தஸ்ய பவித்ரம் பகவாந் ஹரி:||”,(விஷ்ணு தர்மம்)
“ப்ராதர் தேவேதி க்ருஷ்ணேதி கோவிந்தேதி ச ஜல்பதாம் |
மத்யாஹ்மே சாபராஹ்ணே ச யோ அவஸாத: ஸ உச்யதாம் ||(பிரகலாதன் ஜல்பிக்க உபதேசம் )
” இத்யேதாநி ருஷி வசநாநி த்ரஷ்டவ்யாநி |
ந ஹி பகவத: ப்ரயத அப்ரயத அதிகாரி ஸம்ஸர்காத் உபகாத:,
தச் சௌசாதி ஸஹ காரி விரஹாத் தத் அநுக்ரஹா ஸாமர்த்யம் வா;(தூய்மை சஹகரிக்காது -அழுக்கு பாதிக்காது )
ப்ரத்யுத ஸ்வ ஸம்பந்த அயோக்யமபி புநாந: ஸ்வோசிதம் விதாய ஸ்வீகரோதி, பரம பாவநத்வாத் |(தனக்குத் தகுதியாக்கி அழைத்துச் செல்வான் )
அதோ ஹீத முதீர்யதே “நா ஶௌசம் கீர்தநே ” இத்யாதி|(கீர்த்தனம் பண்ணுவதே சுத்தியைக் கொடுக்கும்)
ஸதஸததிகாரி தாரதம்ய ஶாஸ்த்ராணி து உச்சா வசநாம் அதிகாரிணாம் பரஸ்பர ஸங்கரேண தர்ம ஸம் ப்லவோ மா ப்ரஸாங்க்ஷீதிதி |
ஸ்வரூபதோ அல்பீய நாபி ஸங்கீர்தநாதி: பலதோ மஹீயாந் |
யதாஹ — ”ஸ்வல்பம் அப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்” (2-40)இதி |
ந சாஸ்ய தர்மாந்தர வத் அபிக்ரம நாஶ: “நேஹா அபி க்ரம நாஸோ அஸ்தி” இதி வசநாத் |(நாம சங்கீர்த்தனம் தொடங்கி வீணாகப் போகாதே -தப்பாக பண்ணும் பாபமும் இல்லையே )
“ந மே பக்த: ப்ரணஶ்யதி”,
“யம் ப்ரணம்ய ந ஸீததி”,
“ந வாஸு தேவம் ப்ரணிபத்ய ஸீததி”,
“ஜநார்தநம் ப்ரணிபதிதோ ந ஸீததி” |
ந ச அயதா வித்யநுஷ்டாநாத் ப்ரபல ப்ரதிபக்ஷாத் வா ப்ரத்யவாய:”,
“ப்ரத்யவாயோ ந வித்யதே ” இதி |(நானும் சொன்னேன் -நமரும் உரைமின் -நாராயணா -நாரண -திண்ணம் நாரணனே -சுருக்கிச் சொன்னாலும் பாபங்கள் கிட்டாவே )
ந ச ஏதேஷாம் அர்த வாதத்வம் ஶக்ய ஶங்கம்; அநதி வாதித்வாத் ||(புகழ்ந்து பேசினது இல்லை உண்மையே )
இஹ பகவத் தத்த்வஜ் ஞாந பக்தி ப்ரதிபந்தக பாப நிர்ஹரண ஸத்த்வ ஸம்ருத்த் யாதி க்ரமேண தத் ப்ராப்த் யுபக்ரே உச்யதே |(பக்தி ஆரம்ப விரோதிகளை ஸத்வ குணம் வளர இருக்கும் விரோதிகளை நாம சங்கீர்த்தனம் பண்ணிக் கொடுக்குமே )
“பத்த: பரிகரஸ்தேந மோக்ஷாய கமநம் ப்ரதி”,(விஷ்ணு தர்மம் -நாராயணா மணி வண்ணா சொன்னாலே மோக்ஷம் என்றது பகவத் பிரபாவம் சொல்ல வந்ததே )
“யஸ்மிந் ந்யஸ்த மதிர் நயாதி நரகம் ஸ்வர்கோ அபி யச் சிந்தநே விக்நோ யத்ர நிவேஶித தாத்ம மநஸோ
ப்ராஹ்மோ அபி லோகோ அல்பக: |(சத்ய லோகமும் இவனுக்கு அல்பமே )
முக்திம் சேதஸி யஸ் : ஸ்திதோ அமதியாம் பும்ஸாம் ததாதி அவ்யய: கிம் சித்ரம் யதகம் ப்ரயாதி விலயம் தத்ராச்யுதே கீர்திதே ||
” இத்யாததௌ ச |
ந ஸைஷ: பூர்ணாஹுதி ந்யாயஸ்ய விஷய:, தஸ்ய அதிவாத விஷயத்வாத்; ஸம்கீர்தநாதி ப்ரகரணேஷு
ப்ராயேண வாக்ய ஸேஷத்வ- ப்ரார்தநாத் யர்தவாத லிங்க அதர்ஶநாச்ச |
கிஞ்ச ப்ரபல ப்ரமாண விரோதா பாவே அர்தவாத பதாநாம் அபி ஸ்வத: ப்ராமாண்யத: ஸ்வார்த பரித்யாகஶ்ச ஸாஹஸம், அந்யாய்யத்வாத் |
(பூர்ணாஹுதியே பலம் கொடுக்கும்-என்றாலே முன் பலவும் செய்ய வேண்டும் போல் நாம சங்கீர்த்தனமே பலன் கொடுக்கும்
என்றாலும் வேறே ஒன்றும் வேண்டாம் -தொடக்கத்துக்கு வேறே வேண்டாம் –
உடனே முத்தி என்பது இல்லை–மேலே மேலே பக்தி வளர்ந்து முக்தி)
(மேல் பக்தியை விதிக்கும் வலிய உபாயங்களை விதிக்கும் ஸாஸ்த்ரம் வீணாகாது என்பதையும் விளக்குகிறார்)
நநு, குரு தீர்க துஷ்கர தபஸ் ஸமாதி விஸேஷ ரூப மஹா தர்ம ஸாத்ய தத்த்வ ஜ்ஞாந உபக்ரமஸ்ய
வாங்மாத்ர ஸாத்யத்வ வாதோ அப்யதிவாத:, குரு ஶாஸ்த்ர
வையர்த்ய ப்ரஸங்கேந ப்ரமாண விருத்தம் ச |
ததிதம் அவிதித பகவத் ப்ரபாவஸ்யச் சாந்தஸஸ்ய பைஶாசம் |(பகவத் பிரபாவம் அறியாதவன் பேச்சாகும்)
லகீயோ அபி பகவத் ஸங்கீர்தநம் துர் வஹாமபி துரம் தாரயத்யேவ |
குரு ஶாஸ்த்ர அநர்தக்யம், தஸ்ய ஸமர்த அதி காரத்வாத் |
அஸ்ய து ஸத்யஸதி வா ஸாமர்த்யே பகவத ஸாதாரண ருசி ஸமுசித பாக்யவத் அதிகாரத் வாச்ச |
கரீயஸோ அபி பகவத் ப்ரஸாத ஏவ பலஹேது: லகீயஸி கிம் தண்டவாரித: ?(பலம் கொடுப்பவன் இவனே விதி வாய்க்கின்று காப்பார் யார் )
யதா ச கரீயஸி ப்ரயோக வைபுல்யாத் தேவ: ப்ரஸீததி, ததா லகீயஸ்யபி பாவ ஶுத்தி விஸேஷாத் ப்ரஸீதேத் |(உள்ளத்திலே பாவ ஸூத்தி – அன்பு -ஆசை உடையார்க்கும் உண்டே)
யதோக்தம் – “ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ:”,(9)
“பத்ரம் புஷ்பம் பலம் தோயம்”,
“யோ ந வித்தை : ந விபவை : ந வா ஸோபி: ந பூஷணை : |
தோஷ்யதே ஹ்ருதயேநைவ கஸ்தமீஶம் ந பூஜயேத்||”,
வ்யாஸ ஸ்ம்ருதௌ —“தத்யாத் புருஷ ஸூக்தேந ய: புஷ்பாண்யப ஏவ வா | அர்சிதம் ஸ்யாஜ் ஜகதிதம் தேந ஸர்வம் சராசரம் ||”,
வைஷ்ணவை தர்ம் “ப்ருதிவீம் ரத்ந ஸ பூர்ணாம் ய: க்ருஷ்ணாய ப்ரயச்சதி|
தஸ்யாப் யந்ய மநஸ் கஸ்ய ஸுலபோ ந ஜநார்தந : ||” இத்யாதி |
(எண்ணாயிரத்து எச்சன் -பணக்காரன் -அடியார்களை மதியாமல் இழந்தானே)
பாவ பேத ஏக ஹி தர்ம அதர்ம நிதாநம், ந க்ரியா விஸேஷ: |(எண்ணமே முக்கியம் -செயல்களின் பஹுத்வம் இல்லையே )
யதா ஶ்ரீவிஷ்ணு தத்த்வே “பாவ ஶுத்திர் மநுஷ்யாணாம் ப்ரமாணம் ஸர்வ வஸ்துஷு |
அந்யதாஸ் அலிங்க்யதே காந்தா ஸ்நேஹேநே துஹிதா அந்யதா||”.
ததா, “தபோ ந கல்கோ அத்யயேம் ந கல்க: ஸ்வாபாவிகோ வேத விதிர் ந கல்க: |
ப்ரஸஹ்ய சித்தாஹரணம் ந கல்க: தாந்யேவ பாவோ பஹிதாநி கல்க:||”.(ஆதி பர்வம்)
அந்யத்ர “கங்காதி தீர்தேஷு வஸந்தி
மத்ஸ்யா தேவாலயே பக்ஷி ஸங்காஶ்ச நித்யம் | பாவோஜ் ஜிதாஸ்தே ந பலம் லபந்தே தீர்தாநி புண்யாயதநாஶ் ச முக்யா:||” இதி |(மீன்கள் கங்கையில் -பறவைகள் கோயிலில் இருந்தாலும் பலன் இல்லையே )
உபபந்நம் ஸைதத் ஸர்வஜ்ஞஸ்ய அவாப்த ஸமஸ்த காமஸ்ய
அந பேக்ஷஸ்ய பகவதோ பாவ ஶுத்த்ய ஆராத்யத்வம், ந த்ரவிணகண அர்பணாதிநா ,
“யாதாதத்யேந பண்டித: (தம்)” இதி ந்யாயாத் |
தேஶ கால ஸஹ கார்யாதி வைகல்மய அபி ஸ்வல்பாதபி ஸமக்ராதிவ தேவ: ப்ரஸீதேத் |
ததுக்தம் – “த்யாயந் க்ருதே யஜந் யஜ்ஜை : த்ரேதாயாம்
த்வாபரே அர்சயந் | யதாப்நோதி ததாப்நோதி கலௌ ஸம்கீர்த்ய கேஶவம் ||” இதி |(விஷ்ணு புராணம்)
ததா- “விநிந்தாம் ப்ரதமே பாதே கரிஷ்யந்தி ஹரேர் நரா: (கலியுகத்தில் முதல் பாதத்தில்-90000 வருஷங்களில் ஹரியை நிந்திப்பார்கள்) | யுகாந்தே ச ஹரே நாம நைவ கஶ்சித் க்ரஹீஷ்யதி ||(இறுதியில் சொல்ல முயன்றால் -ஆசைப்பட்டால் -ஆசைப்பட முயன்றால் திருப்தி ஆவான்)
தந்யாஸ்தே புருஷ வ்யாக்ர பவாம் போதாவ மாயிந : |
யத்நே நாபி கலௌ விஷ்ணோ : க்ரஹீஷ்யந்தி
அக்ஷயாத்மந:”. யுஜ்யதே ஸைதத் |
ஸுஶீலோ ஹி ந்ருபதி: பிதராவிவ
க்ருச்ச்ரேஷு கிஞ்சிந் நயாய வ்ருத்தமபி பஹுபகாரிணமிவ அநுக்ருஹ்ணீதே |
அத ஏவ தைவ பித்ர்ய ப்ராயஶ் சித்தாதிஷு
தேஶ காலோபபத்த்யாதிவஶேந அதிநிம் நோந் நதாநாம் அபி ப்ரயோகாணாம்
துல்ய கக்ஷ்யத் வேந மவே விதிஸ் :, ஶிஷ்டைஸ் ததா அநுஷ்டாநம் ச |
(எட்டு வித ஸ்ரார்த்தம் சாஸ்திரத்தில் உண்டே-ஒரே பலன்-ஆபத்துக் காலத்தில்
கையைத் தூக்கி ஒன்றும் பண்ண முடியவில்லை என்று சொன்னாலே போதுமே)
அத ஏவ யதா ஸர்வ ஸ்வ ஸாத்ய ப்ரயோக விஸ்தாரஸ்ய ஸ்தாநே
ஸ்வ அநுபபத்தி க்யாபந மேவ ஆபதி ஶ்ராத்த ப்ரத்யாம் நாநம்,
யதா வா தத் தத் கர்ம தௌஷ் கர்யே தத் தந் மந்த்ர ஜப: இத்யாதி |
எட்டு காரணங்கள் –தர்மே அதிகமத: பீஷ்ம மத-நாம சங்கீர்தன மஹிமை மேல்
ததேவம் ப்ரிய தம விஷய தயா -1-ஸுக க்ரியத்வாத் -2-வ்யய ஆயாஸ ரஹித தயா ஸுகரத்வாத்,
3-அநதி பரோக்ஷ ஆத்ம நாத ப்ரீணந பாவேந ஆகர்ஷகத்வாத்,
4-அதி லாகவே அபி அதி குரு-துர்வஹ -பவ பயோந் மூல நமஹா பலத்வாத்,
5-அப்ரத்யவாய வத்த்வாத், 6-ஸுபிக்ஷாதிகாரி தயா விஶ்வ ஜநீநத்வாத்,
7-தேஶ கால தஶா விஸேஷாதி விஷேப வர்ஜநேந நிர் வ்யாஜத்வாத்,
8-விஷய (பகவத் )ப்ரபாவேந நிஷ் ப்ரத்யூஹத் வாச்ச இத்யேவம் ப்ரகாரேப்யோ ஹேதுப்ய:
பகவத் அஸாதாரண ஸம் கீர்தநாதி தர்மே அதிகமத: பீஷ்ம மத: |
அந்யேஷாம் அபி பரமர்ஷீணாம் “ஸர்வேஷாேம் அபி தர்மாணாம் உத்தமோ வைஷ்ணவோ விதி: |
ரக்ஷதே பகவாந் விஷ்ணு: பக்தாந் ஆத்ம ஶரீரவத்||”,
“கோவிந்த பக்த்யப்யதிகம் ஶ்ரேயஶ் ச அந்யத் ந வித்யதே ” இத்யாதி:தாஹார்ய: || 8 ||
சா ஆலம்பன -6-கேள்வி
அலகு உபாயம்-ஸாத்ய ஸித்த உபாயம் பற்றிய -பக்தி யோகம் பற்றிய -4-கேள்வி
லகு உபாயம் 3-கேள்வி-பத்து பெருமைகளை சொல்லி அவனை ஸ்தோத்ரம் பண்ண –
ஸித்த உபாயம் -5-கேள்வி-நரன் -அனைவர்க்கும் யோக்யதை உண்டே
இதுவரை உபாய பரமான நான்கு கேள்விகளுக்கும் பதில் பார்த்தோம்
———–
5- பரம ப்ராப்யம் என்னும் உபேய விஷயமான வினாவிற்கு விடை
அவதாரிகை
இதற்கு விடை அளிக்கத் தொடங்கிப் பரம ப்ராப்யம் இன்னது என்பதை விளக்குகிறார்
இதில் சொல்லப்படும் விசேஷணங்கள் ஆறும் பகவத் ஸ்வரூபம் மிகவும் ஆசைப்படும்படி இருக்கும்
என்பதைக் காட்டுவதால் அதுவே பரம புருஷார்த்தம் என்பது விளங்குகின்றது
பரமம் யோ மஹத் தேஜ: பரமம் யோ மஹத் தப: |
பரமம் யோ மஹத் ப்ரஹ்ம பரமம் ய: பராயணம் ||–9-
பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாணாம் ச மங்களம் |
இரண்டாவது வினாவிற்கு விடை
எவர் ஒப்புயர் அற்ற பேர் ஒளியாய் இருப்பாரோ
எவர் தேவர்களையும் ஆள்வதால் சிறந்த பெரும் தவமோ –
தபஸ் -கட்டளை இடுதல் -மஹேஸ்வரன் -என்று பொருள் கூறி இதற்கு ஸ்ருதி ப்ரமாணங்களைக் காட்டி அருள்கிறார்
ஆஜ்ஜா பயதி-என்று கட்டளை இடுகிறார் ஸ்ருதி வாக்கியம் உண்டே –
எவர் அளவற்ற கல்யாண குணங்களாலும் எங்கும் வியாபித்து இருப்பதனாலும்
தம்மைச் சேர்ந்தவரைப் பெருகும்படி செய்வதாலும்
எல்லாவற்றுக்கும் சிறந்த பர ப்ரஹ்மமோ
எவர் பரிசுத்தம் செய்யும் அனைத்தையும் பரிசுத்தப்படுத்து கின்றாரோ
எவர் சிறந்த மங்களுக்கு எல்லாம் மங்களமோ
அவரே எல்லாவற்றுக்கும் முடிவான பரம புருஷார்த்தம்
அத உபேய ப்ரஶ்நம் ப்ரதிவதந் ஸ்ரீ மந் நாம ஸஹஸ்ர ஶ்ரவணாய தர்ம ராஜோ நியுஜ்யதே பரமம் ய: இதி சதுர்பி: |
நான்கு இடத்தில் பரமம் -உயர்வற உயர் நலம் உடையவன் –எவன் –எவன் எவன் -அவன் -துயர் அடி தொழ வேண்டும் போல் இங்கும் நான்கும் பிரஸித்தம்
யார் பேர் ஒளியோ -மிகச் சிறந்த -தன்னைக்காட்டிலும் மேம்பட்டது இல்லாத
தபஸ் -ஈஸ்வர சாமர்த்தியம் –
ப்ரஹ்ம -எங்கும் வியாபித்து பெரிய -தன்னை அண்டியவர்களையும் ப்ரஹ்மம் ஆக்கும்
சஹா பராயணம் -இருக்க ய பராயணம் -பிரசித்தம் அன்றோ
தர்ப்பம் கங்கா தீர்த்தம் பவித்ரம் -மஞ்சள் போல்வன மங்களப் பொருள்கள்
தத்ர ப்ரதமேந ஸார்தேந கிம் வா அப்யேகம் பராயணம் இதி த்விதீயம் ப்ரத்யாஹ |(இரண்டாம் கேள்விக்குப் பதில் )
தேஜ ஆதிபி: ந பும்ஸக லிங்கை : ய: இதி ஸமபி வ்யாஹாரேண லிங்க வைரூப்யம் ந ஶக்யம் |(பலர் வந்தனர் லிங்கம் -தேஜஸ் -நபும்ஸக லிங்கம் -சொல் -ய புல்லிங்க சொல் -தப்போ என்று நினைக்க வேண்டாம் -வியாகரணம் படி சரியே )
லிங்க ஸம்க்யாப்யாம் பூர்வம் விஸேஷி தஸ்ய பதஸ்ய
பதாந்தர ஸமபி வ்யாஹாராத், தல் லிங்க ஸம்க்யா விஸேஷேண
அவிஸேஷ்யத் வாச்ச விஸேஷ் யஸ்ய, “வேதா: ப்ரமாணம்“, “தத்த்வம் நாராயண: பர:” இதிவத் |
பரமம் அடைமொழி தேஜஸ்ஸுக்கு உண்டே -வேதா புல்லிங்க பஹு வசனம் பிரமாணம் நபுஸிம்ஹ ஏக வசனம் போல் இங்கும்
ஸர்வதா ஸ்ப்ருஹணீய தமத்வேந பரம புருஷார்த க்யாபகாநி பரம தேஜஸ் த்வாதீநி ஷட் விஸேஷணாநி |(ஆறு விசேஷணங்கள்)
தேஜ: – ஸ்வபாவத ஏவ பாஸ்வரம், அந்ய அவ பாஸகஞ்ச | (இவனுக்கே இயற்கையில் தேஜஸ் மற்ற தேஜஸ் பதார்த்தங்களை ஒளி உடையவையாய் ஆக்குகிறார் )“பரம் ஜ்யோதி ருப ஸம்பத்ய”,(சாந்தோக்யம் )
“தஸ்ய ஆதித்யோ பாம் உபயுஜ்ய பாதி” (ஒளியை இரவல் வாங்கிக் கொண்டு மினுக்கிக் கொண்டு இருக்கிறான் )இதி பாஸ்வரத்வஸ்ய நிஸ் ஸீமத்வம்
மஹதிதி |
பரம் இதி ச ஸம அதி ஶாய்ய ஸம்பவ: |(பரமம் மஹத்–மிகப் பெரியது என்றும் தன்னை விட பெரியது இல்லை என்றும் என்பதால் இரண்டு பத பிரயோகம் )
ஏவம் உத்தரத்ராபி யதா விஸேஷ்யம் | (தபஸ் ப்ரஹ்மம் பராயணம் என்கிற இடங்களிலும் இதே அர்த்தம் கொள்ள வேண்டும் )
ஈஷ்டே ஸர்வஸ்யேதி தப: | யதா“யோ தேவேப்ய ஆதபதி”,
“தமீஶ்வராணாம் பரமம் மஹேஶ்வரம்”,-ஸ்வேதாஸ்வரம்
“ஏஷ ஸர்வேஶ்வர:” (ப்ரஹ்ம தாரண்யம் )இத்யாதி |
அநவச் சிந்ந கல்யாண ஸ்வரூப குணத்வேந -ப்ருஹத்த்வாத், ஸர்வ ஶக்தித்வேந -ஸர்வ ப்ரும்ஹணத்த்வாச்ச ப்ரஹ்ம |(தானும் ப்ரஹ்மம் அண்டினவர்களையும் ப்ரஹ்மம் ஆக்கி அருளுகிறவன் )
பவித்ராணாம் மத்யே பரமம் மஹத் பவித்ரம்;
பவித்ரம் –ஶுத்தி விஸேஷ ஹேது: |
ஶுத்திஶ்ச –தோஷ விஸேஷ நிர்மோக: |
தோஷஶ்ச–ரஜஸ் தமஸ் :ப்ராய பரிணாம பேத ஆஸ்பதத்வம் அசேதநஸ்ய;
சேதநஸ்ய து-தத் பரிரம்ப ஸம்பவ: அவித்யா பகவத் அபராத ராக த்வேஷாதி: |
தம் பகவாநேவ ஸமூலகாஷம் கஷதி (வேரோடு பிரதிபந்தகங்களைப் போக்கி அருளுபவர் இவனே )| தஸ்யைவ ஸர்வதா தத் விரோதி ஸ்வபாவத்வாத்|(அகில ஹேய ப்ரத்ய நீகன் இவனே )
பவித்ரமாவது சுத்திக்கு காரணம்
சுத்தி -தோஷ நிவ்ருத்தி
தோஷம் இரண்டு வகைப்படும் –
அவை ரஜோ தமோ குணங்களால் விகாரப்படும் அசேதனத்தின் தோஷமும்
அசேதன சேர்க்கையால் உண்டாகும் அஞ்ஞானம் பகவத் அபராதம் ராக த்வேஷம் முதலிய சேதன தோஷங்கள் ஆக இரண்டும்
ஏவம் பூத துக்கமும் சுகமும் இவனுக்கு உண்டாக ஹேது என்ன சொல்லுகிறது மேல்-அநந்த க்லேச நிரதிசய ஆனந்த ஹேது
மறந்தேன் அறியகிலாத உணர்விலேன் ஏணிலேன் அயர்த்து என்றும்
உய்யும் வகை நின்ற ஒன்றை நன்கு அறிந்தனன்
உணர்வினுள்ளே ஆம் பரிசு என்றும்
சொல்லுகிற ஞாதவ்ய பஞ்சக ஞான -அஞ்ஞானங்கள் –ஆதித்ய ஹ்ருதயம் -சூரணை-5-
க்ரோஶந்தி ச ஶாஸ்த்ராணி—”ஏதம் ஹ வா வந தபதி”,(தைத்ரியம் ஆனந்த வல்லி-அறிந்தவன் மோக்ஷம் பற்றி தபிக்க மாட்டான்)
“தத்யதா புஷ்கர பலாச ஆபோ ந ஶ்லிஷ்யந்தே (சாந்தோக்யம் )”“தத் யதா இஷீக தூலம் அக்நவ் ப்ரோதம் ப்ரதூயேத”,,(மெய் மேல் வினை முற்றவும் சாரா -தீயில் இட்ட பஞ்சு -தாமரை இலைத் தண்ணீர் போல் போய பிழையும் புகுதருவான் நின்றனவும்- பூர்வாகம் உத்தராகம் -)
“தத் ஸுக்ருத துஷ்க்ருதே தூநுதே ”,(கௌஷீகதம்)
“ததா வித்வாந் புண்ய பாபே விதூய”,(முண்டகம்)
“ஷேத்ரஜ்ஞஸ்ய ஈஶ்வரஜ்ஞாநாத் விஶுத்தி: பரமா மதா”,(வியாக்யவல்க ஸ்ம்ருதி)
“த்யாயேத் நாராயணம் தேவம் ஸ்நாநாதிஷு ச கர்மஸு |
ப்ராயஶ் சித்திர் ஹி ஸர்வஸ்ய துஷ் க்ருதஸ்யேதி வை ஶ்ருதி: ||”,(த்யானித்தே குளிக்க உள் அழுக்கு போகும்)
“யோ மாம் அஜம் அநாதிம் ச”,(10-3)
“பாவந : ஸர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தந ”,(சபரி வார்த்தை )
“ப்ராயஶ் சித்தாநி அஸேஷாணி” இத்யாதி ப்ராயஶ் சித்த ப்ரகரணம் கார்த்ஸ்ந்யேந |(விஷ்ணு புராணம்-முழுவதுமான இடங்களில் பகவத் சம்பந்தமே பராயணம் )
“யதா அக்நி ருத்த தஶிக: கஷம் தஹதி ஸாநில: | ததா
சித்தஸ்திதோ விஷ்ணு: யோகி நாம் ஸர்வகில்பிஷம்||” இதி |(நெருப்புடன் காற்று சம்பந்தம் போல் சித்தத்தில் பெருமாள் உடன் யோகி சேர அனைத்தும் போகுமே )
அந்யஸ்யாபி தீர்தாதே : பவித்ரத்வம் தத் ஸம்ஶ்லேஷ ஆயத்தம் தர்ஶயதி பரமம் மஹத் இதி விஸேஷணாப்யாம் |(இவன் சம்பந்தத்தால் கங்கா தீர்த்தாதிகள்; பாவனத்வம் -ஆகவே இவனே பரமமும் மஹத்தும் )
ந கலு ஸ்வபாவ மலிநா நாம்
(அ)சேதநா நாம் ததுபஹ தாநாம் வா தேவாதீநாம்
ஸ்வ ஸத்ருஶ வஸ்த்வந்தர ஸோதகத்வம் யுக்திமத் |
அத ஏவ பராஶர ஶௌந காதிபி: ஶுபாஶ்ரய ப்ரகரணாதிஷு தத் ஸம்ஶீலநம் நிஷித்யதே ,(பாபம் போக்குவது சுபம் -தியானத்துக்கு இருப்பிடம் ஆஸ்ரயம் -இவனது திருமேனியே ஸூபாஸ்ரயம் )
தத் அர்ச்சனம் பாத சேவா பாவனத்வம் பிரசித்தம்-மற்ற தேவதாந்த்ரங்கள் தள்ளுபடி ஆகுமே
“அஶுத்தாஸ்மத ஸமஸ்தாஸ்து தேவாத்யா: கர்ம யாேநய:”,க்மராஶந்தி ச ஶாஸ்த்ராணி—(விஷ்ணு புராணம் ஆறாம் அம்சம் -மற்றவர்களுக்கு கர்ம வஸ்யத்வம் உண்டே )
“ஆப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தா: ஜகதந்தர் வ்யவஸ்திதா: | ப்ராணிநா : கர்ம ஜநித ஸம்ஸார வஶவர்திந : ||” இத்யாதிஷு |
தத்ர தேவதாநாம் பாவநத்வம் ததுபாஸந அர்ச்சன பாதோதக ஸேவாதிநா ப்ரஸித்தம்;(விஷ்ணு தர்மம் -தத் அர்ச்சனம் பாத சேவா பாவானத்வம் பிரசித்தம்-சரீர ஆத்ம மனஸ் சுத்திக்கு மூன்று தரம் அவன் சம்பந்த தீர்த்தம் )
தீர்த ஆய தநாத: தத் ஸாமீப்யாத்; யதா கங்காயா: வைஷ்ணவே
“விஷ்ணு வாம பதாங்குஷ்ட விநிஸ் ஸ்ருதஸ்ய ஜலஸ்ய எதந் மஹாத்ம்யம்”இதி;(விஷ்ணு புராணம் கங்கை கங்கை என்னும் வாசகத்தாலே பரம பாவனத்வம்-இடது திருவடிக்கட்டை விரல் சம்பந்த தீர்த்தமே கங்கை -)
விஷ்ணோர் ஆயதநம் ஹ் யாப: ஸ ஹ்யபாம் பதிருச்யதே “ இத”ஜல மாத்ரஸ்ய ச |(ஆப முதலில் ஸ்ருஷ்ட்டி பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து தீர்த்தம் -அபாம் பதி அவனுக்கு திரு நாமம் -மனத்துள்ளான் மா கடல் நீர் உள்ளான்)
காலஸ்ய ச ததவதார தத் தைவத்ய தச் சயநோத் தாநவத்த்வாத் த்வாதஶீ ஜயந்தீ ஶ்ரவணாதிவத் தத் ஸம்பந்தாத்|(ஏகாதசி திருவோணம்-நவமி -அஷ்டமி அவன் சம்பந்தத்தால் ஏற்றம் )
ஆத்ம குணாநாம் ஶமாதீநாம் தஜ் ஜ்ஞாந அநு குண்யாத் க்ரியாணாம் ச(சமதமாதி குணங்கள் அவனை அறிய உதவுவதால் ஏற்றம்)
யஜ்ஞ தாந தபஸ் :ஶ்ராத்த ப்ரப்ருதீ நாம ததாராதேத்வாத் |
ப்ராஹ்மணாதி ஜாதே :
தத் பரவேதாத் யயநாதௌ ஸாக்ஷாததிகாராத் ; யதா
“விஷ்ணும் காந்தம் வாஸு தேவம் விஜாநந் விப்ரோ விப்ரத்வ மாயாத் தத்த்வ தர்ஶீ” இதி |(ப்ராஹ்மணனுக்கு நேராக ஸாஷாத் அதிகாரம் -வேதம் கற்று கற்பிக்க வேண்டுமே )
ஶ்ருதி ஸ்ம்ருத்யாதே : தத் பரத்வாத் தச் சாஸநத் வாச்ச,
“நாராயண பரா வேதா:”,
“ஶ்ருதிஸ் மதீ மமை வாஜ்ஞா” இதி |(விஷ்ணு தர்மம்)
ஆரண்யகே தீர்த யாத்ராயாம், “புண்யா த்வாரவதீ” இத் யுபக்ரம்ய,
“ஆஸ்தே ஹரிர சிந்த்யாத்மா தத்ரைவ மது ஸூதந : | தத் புண்யம் தத் பரம் ப்ரஹ்ம தத் தீர்தம் தத் தபோவநம் ||(வன பர்வம் அவன் சம்பந்தத்தால் துவாரகைக்கு ஏற்றம் )
இதி தத் ஸம்பந்த ஹேதுகம் தேஶஸ்ய பாவநத்வ மபிதாய
“பவித்ரணாம் ஹி கோவிந்த: பவித்ரம் பரமுச்யமத |
புண்யாநாமபி புண்யோ அஸௌ” இத்யேவமேவ ஸ்பஷடம் நிகம்யதே ||
பவித்ராணாம் பவித்ரம் என்பதால் இந்த தோஷங்களை வேரோடு களைந்து எறியும் பரம பாவனன் என்கிறது
பரிசுத்தி செய்பவர் என்றதனால் பகவத் சம்பந்தத்தினாலேயே கங்காதி தீர்த்தங்களும் இதர தேவதைகளும் க்ஷேத்ர விசேஷங்கசளும்
கால விசேஷங்களும் பரிசுத்தி கரங்கள் ஆகின்றன
ஆதலால் அவனே பரம பாவனன் என்று பல ஸாஸ்த்ரங்களின் ஆதாரங்களால் விளங்கும்
பவித்ரம் விளக்கி இனி மங்கள விளக்கம்
ஸுரபிஸ் ரகங்கராக ஸுர ஸுந்தரீ ஸுதார ஸாதிப்யோ
நிரஸ்த ஸமஸ்த ஸம்ஸார நிர்மல நிர் மர்யாத ஸ்வ ரஸ
ஸம்வித ஆநந்த ஸாந்த்ராத் ப்ரத்ய காத்ம நஶ்ச அத்யந்தம்
அபிலஷணீ யத்வாத் மங்கலாநாம் ச மங்கலம் |
அத: பரமம் ய: பராயணம்- ப்ராப்யம் | ப்ரபஞ்சயிஷ்யதே சைதத் ||(பின்னால் மேலும் விளக்குவோம் )
ய: ஏவம் ஸ: பரமம் பராயணமிதி விதாய ப்ரதி வக்தவ்யே ய:
பராயணமிதி ஸித்தவதநுவாத: ஶாஸ்த்ர ப்ரஸித்த யதிஶய ப்ரதர்ஶ நார்த: || 9 ||
வாசனை மிகுந்த பூ மாலை சந்தனம் தேவ ஸ்த்ரீ அம்ருத ரசம் முதலியவைகளும்
சம்சார பந்தம் முழுவதும் நீங்கி அதி பரிசுத்தனாகி இயற்கையில் அளவற்ற ஞான ஆனந்த ரூபனாக விளங்கும்
ஜீவாத்மாவைக் காட்டிலும் பரமாத்மா மிகவும் ஆசைப்படும் படி இருத்தலால் அவனே மங்களங்களுக்கு எல்லாம்
சிறந்த மங்களம் என்கிறார்
பரமம் யஸ் பராயணம் என்பது மூலம்
ஸ பராயணம் என்று இல்லாமல் யஸ் பராயணம் என்றது
ஸகல ஸாஸ்த்ரங்களிலும் அவனே பரன் என்பது ப்ரஸித்தம் என்று தோற்றுதற்காகவே –
———————
யார் முழு முதல் கடவுள் கேள்விக்குப் பதில்-ஜகத் காரணத்வம் -அகில காரணம் அத்புத காரணம் நிஷ் காரணம் -ஆதியுகாகமே-ஆதி யுக ஆகமே முதல் யுக தொடக்கத்தில் -நிமித்தம் ஸ்ருஷ்ட்டி லயம் உபாதானம் -ச காரம் ஸஹ காரி-தானோர் வித்து தனி வித்து ஓர் வித்து சதேவ ஆஸீத் ஏக மேவ ஆஸீத் அத்விதீயம் ஆஸீத் -வேர் முதலாய் வித்தாய் -முதல் தனி வித்தேயோ –
பர தத்வ ரூபமான உபேய விஷயமான வினாவிற்கு விடை
(தைவதம் –பாப பயாபஹம் )
தைவதம் தேவதானாம் ச பூதானாம் ய அவ்யய: பிதா ||–10-
யத:, ஸர்வாணி, பூதானி, பவந்தி, ஆதியுகாகமே |
யஸ்மின், ச, ப்ரளயம், யாந்தி, புன:, ஏவ, யுகக்ஷயே ||–11-
தஸ்ய, லோக ப்ரதானஸ்ய, ஜகன்னாதஸ்ய, பூபதே |
விஶ்ணோ:, நாம ஸஹஸ்ரம், மே, ஶ்ருணு, பாபபயாபஹம் ||–12-
அத “கிமேகம் தைவதம்” இதி ப்ரதமம் ப்ரஶ்நம் ப்ரதி ப்ரூதே – தைவதமிதி ஸார்தேந |(10 ஸ்லோகம் 11 ஸ்லோகம் முதல் பாதியால்)
ஸ ஏவ தேவதாநாம் விதி ஶிவ ஶத மகாதீநாம் மஹா தைவதம் தத்த்வம் |
குத:? தேஷாமேவ பூதாநாம் ஸத்பாவ பாஜாம் பிதா,
யதஸ் தஸ்யா அர்வாசீந பித்ருப்யோ விஸேஷ: அவ்யய: இதி |(இவனே அழிவில்லா பிதா–பூதா இருப்பை உடையவை ஸத்பாவமே இவனாலேயே-கண்ண நீர் பாய்ச்ச வேண்டாதா தாய் தந்தை -எவ் உயிர்க்கும் தாய் தந்தை )
ந ஹி தேந ஸநாதநேந பித்ருமந்த: கதாசிதநாதா:|
பித்ருத்வம் உபபாதயதி யதஸ் ஸர்வாணீதி | யத: நிமித்த காரணாத்| ஸர்வாணி த்ருஹிண த்ருமாவதீநி |
பூதாநி பவந்தி – ஜாயந்தே | யத்யபி ப்ரஹ்ம ஸர்காதுபரி அவாந்தர ஸர்கே
ச ப்ரஹ்மாதி முகேந ஸ்ருஜதி, அதாபி ப்ரதம ஸ்ருஷ்டௌ ந ததேதி ஸூசயதி ஆதியுகாகம இதி |
உபாதான -சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம்
நிமித்த -ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம்
ஸஹ காரி- ஞான சக்தியாதி விஸிஷ்ட ப்ரஹ்மம் –
உபாதாந காரண அபி தமேவாஹ | அந்திமே (கடைசி யுகம் -இல்லாதவற்றைத் தருவித்துக் கொள்ள வேண்டும்) யுக க்ஷயே புந: யஸ்மிந் நேவ தாநி ப்ரலயம் யாந்தி – ப்ரலீயந்தே |
லய: கலு உபாதாநே ஏவ கார்யஸ்ய, யத ஊர்ண அபிதந்த்வாதே : லாலாதௌ |(கடல் அலை சிலந்தி மயில் தோகை –மூன்றும் ப்ரஹ்மம் ஸ்ருஷ்டிக்கு த்ருஷ்டாந்தங்கள்)
ஸ்திதி ப்ரவ்ருத்த்யாதி ஹேதுத்வம் ஸஹ காரி காரணத்வம் ச சகாரேண த்யோத்யதே |(ச காரம் -ரக்ஷணம் அர்த்தமும் -ஸஹ காரி காரணம் -இரண்டும் கொள்ள வேண்டும் -அகில ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே)
ஏவம் லக்ஷணகம் ஹி பர தத்த்வம் ஶ்ரூயதே
“யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே ” இத்யாததௌ |(தைத்ரியம் ப்ருகு வல்லி)
ஸூத்ர்யதே ச “ஜந்மாத் யஸ்ய யத:” இதி |
அஸ்ய ஸைவ த்ரிவித காரணத்வம் ச “ப்ரஹ்ம வநம் ப்ரஹ்ம ஸ வ்ருக்ஷ ஆஸீத்” இத்யுதாஹ்ருத்ய(அஷ்டகம்-காடாகவும் மரமாகவும் ப்ரஹ்மமே )
“ப்ரக்ருதிஶ் ச ப்ரதிஜ்ஞா த்ருஷ்டாந்தாநுபமராதாத்”(ப்ரஹ்ம ஸூத்ரம்-1-4-23-ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகும் -ப்ரதிஜ்ஜைக்கு திருஷ்டாந்தம் இதுவே -ஸமஸ்த ஜகத்துக்கும் ப்ரஹ்மமே காரணம் )இத் யதிகரமண நிரணாயி |
ஏதேந “உபாதாநம் து பகவாந் நிமித்தம் து மஹேஶ்வர:” இதி காரண பேதேந அநபிமத மஹேஶ்வர வாதோ ந வைதிக: |(வேதத்துக்கு ஒத்துக்கொள்ளாத வாதம் )
ந ச ஜகதுபாதாநத்வாத் பகவதி விகாராதி தோஷ ப்ரஸக்தி: |
ஸ்வ ஶரீரதயா பரிக்ருஹீத ப்ரக்ருத் யாத் யேகதேஶ த்வாரகத்வம் பரிணாமாதே :
ஊர்ணநாபி த்ருஷ்டாந்த அவஷ்டம்பேந உபபாதயந்தீ தத்ர பவதீ ஶ்ருதிரேவ பர்யஹா ர்ஷீத் |
(உபாதானம் -மண் மாறி குடம் -இவனோ அவிகாராய -ஸ்வரூபம் மாறாது -பிரகிருதி சரீரம் மாறலாம்
சரீராத்மா பாவம் கொண்டே சமன்வயப் படுத்த வேண்டும்-சிலந்தி சிலந்தி கூடு த்ருஷ்டாந்தம் போல் )
அத்ராபி விதாதவ்யே யோ தைவதமித் யநுவாத: ஶாஸ்த்ர ப்ரஸித்தி ப்ரதர்ஶந பர: |(ஸஹ வர வேண்டும் இடத்தில் யஸ் எவன் என்று சொல்லி இருப்பது பிரஸித்தம் என்பதால்
இப்படி இருப்பவர் யாரோ -இருப்பது ஸாஸ்த்ர ப்ரஸித்தம் என்றவாறு)
ததா ஹி உபநிஷதாதிஷு பரதத்வஸ்ய லக்ஷண தத்வஸ்தித் யுபாஸந ப்ராப்தி
ப்ரதிபாதந இனம் பர்ய அபர்யவஸாயிஷு ஸதஸத் ப்ரஹ்ம அக்ஷர அதிபதை : நிருபபதை :(ஸத அஸத் ப்ரஹ்ம அக்ஷர அதிபதை–சொற்கள் பர்யவஸான பர்யந்தம் அர்த்தம் கொள்ள வேண்டுமே-உப பதம் கையில் வஜ்ராயுதம் பிடித்த இந்திரன் என்றாலும் ஸ்ரீ மன் நாராயணனே -இவன் அந்தர்யாமியாய் இருந்தால் தானே இவனுக்கு சத்தை -முக்கியமான வேதாந்த அர்த்தம் -)
பரமாத் யுபபத ஸநாதைஶ்ச ஸாமாந்ய வாசிபி:
நிர்திஶ்ய மாநஸ்ய விதி ஹரி ஶிவாதி விஸேஷ பர்யவஸித ஆ காங்க்ஷாயாம்
“நாராயண பரம் ப்ரஹ்ம தத்த்வம் நாராயண: பர:”,(தத்வம் ஆத்மா ப்ரஹ்மம் தேஜஸ் நான்குக்கும் நாராயண -வேறே யாருக்கும் இல்லை என்பதால் பரம் பத பிரயோகம்)
“த விஷ்ணோ : பரமம் பதம்”,(பிராப்தியும் அவனே)
“யஸ்மாத் பரம் நா பரம் அஸ்தி கிம்சித்”,(கட உபநிஷத் -இன்றும் என்றும் நேற்றும் நாளையும் இவனை விட மேம்பட்டது இல்லை)
“புருஷாந்த பரம் கிம்சித்”,(7-7)
“உத்தம : புருஷஸ் த்வந்ய:” (15)இத்யாதிபி: கண்டோக்திபி:,(சேநா தூளித –சாரத்ய வேஷமே மாம் ) ஸ்ருஷ்டி வாக்ய கதி ஸாமாந்யாத்,(வார்த்தைகளின் போக்கே -கதி சாமான்யம்)
(யன் மூல காரணம் –ஸ்ருஷ்டி வாக்கியம் -ப்ரஹ்மம் சத் ஆத்மா -நாராயண ஸ்திதி மஹா உபநிஷத்
ஸூ பால உபநிஷத்துக்கும் அத்தையே தொடர்ந்து சொல்லும்
திவ்யம் தேவன் ஏகம் நாராயணன்)
தத்த்வ பர புருஷ ஸூக்த- உத்தர நாராயண-ப்ரப்ருதி ப்ரபல ப்ரதேஶாந்தர தாத்பர்யாத்,
ஸுபால மைத்ராயணீய மஹா உபநிஷச் சாந்தோக்ய தைத்திரீய ஐதரேய கடவல்லீ ப்ரப்ருதி
பஹு உபநிஷதுத் கோஷோண
ஸாத்விக இதிஹாஸ புராண ப்ராசுர்யேண தேவதா பாரமார்த்யஜ்ஞ பராஶர பாராஶர்ய ப்ராசேதஸாதி (வால்மீகி போன்றவர்களும்) பரமர்ஷிமதை :
அஸ்யைவ
வேத ஸித்தாந்தத்வே ஸ்வ பரம ஆகம ஸம் ப்ரதிபத்த்யா ரூப ஆயுத வாஹந சாரித்ர விஸேஷாதி ஸாமர்த்யதஶ்ச
கலு பகவதோ நிரங்குச ஐஶ்வர்யம் ததிதர நிகர்ஷஶ்ச புத்திமதாம் ஸ்வத்யவஸாநம் |
தஹர வைஶ்வாந ராத்யதிகரணை : ஸமந்வயாத்யாய ஏவ ஸைவம் அத்யவஸஸு: அஸ்மதாசார்யா இதி ந அதி விஸ்த்ருணீமஹே ||(நம் முன்னோர் ஆச்சார்யர்கள் பலவாறு விளக்கி உள்ளார்கள் -நான் விரிவுக்கு அஞ்சி நிற்கிறேன் )
ததா ச ஸம்சிக்ஷிபு: யாமுநா சார்யா:, “த்வாம் ஶீல ரூப சரிதை :”(15)இத்யாதிநா |
த்வாம் ஶீல ரூப சரிதை: பரம ப்ரக்ருஷ்ட
ஸத்வேந ஸாத்த்விகதயா ப்ரபலைஶ்ச ஶாஸ்த்ரை: |
ப்ரக்யாததைவ பரமார்த்த விதாம் மதைஶ்ச
நைவாஸுர ப்ரக்ருதய: ப்ரபவந்தி போத்தும் ||ஶ்லோகம் 15 –
[ஐயோ!] எல்லோரையும் விட உயர்ந்தவனான உன்னை அஸுரர்கள் அறிந்து கொள்ள முடியாது.
உன்னை அறிந்து கொள்ளும் வகைகள்:
உன்னுடைய சீல (எளிமை) குணம், வேதத்தில் கொண்டாடப்பட்ட ரூபங்கள் மற்றும் திவ்யமான லீலைகள்
சுத்த ஸத்வத்தால் நிறைந்திருக்கும் உன்னுடைய பரம பதம்
தன்னிடம் இருக்கும் நன்மையினால் திடமாக இருக்கும் சாஸ்த்ரம்
உன்னைப் பற்றிய உண்மையை அறிந்தவர்களின் அபிப்ராயத்தின் மூலம்
தாத பாதாஶ்ச (கூரத்தாழ்வானும்- )“தத்த்வார்த தத் பர பரஶ் ஶத வேத வாக்யை :ஸாமர்த்யத:ஸ்ம்ருதி பிரப்யத தாத்ருஶீபி: |
த்வாமேவ தத்த்வ பர ஸாத்விக ஸத் புராணை : தைவஜ்ஞதீ பிரபி நிஶ்சிநும: பரேஶம்||”,
“ரூபஶ்ரியா பரமயா பரமேண தாம்நா சித்ரைஶ் ச கைஶ்சிதுசிசத: பவதஶ் சரித்ரை : |
சிஹ்நை : அநிஹ்நவபதை : அபரைஶ்ச கைஶ்சித் நிஶ்சிந்வதே த்வயி விபஶ்சித ஈஶித்ருத்வம் ||” இதி ||(ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -23)
சர்வ ஸ்ருதிஷு அநுகதம் ஸ்திரம் அப்ரகம்ப்யம்
நாராயணாஹ்வயதரம் த்வாம் இவ அந வத்யம்
ஸூக்தம் து பவ்ருஷம் அசேஷ ஜகத் பவித்ரம்
த்வாம் உத்தமம் புருஷம் ஈசம் உதா ஜஹார–23-
எம்பெருமானே -தேவரீர் போலவே சர்வ வேதங்களிலும் ஓதப்பட்டும் -ஸ்திரமானதும் –
குதர்க்கங்களால் அசைக்க ஒண்ணாததும்
நாராயண திரு நாமத்தை உடையதும் நிர் துஷ்டமானதும் சர்வ லோக பாவனமுமான புருஷ ஸூக்தமோ என்றால்
தேவரீரை புருஷோத்தமராகவும் சர்வேஸ்வரராகவும் ஓதி வைத்தது
யந் மூல காரணம் அபுத்த்யத ஸ்ருஷ்ட்டி வாக்யை
ப்ரஹ்ம இதி வா சதிதிவ ஆத்மகிரா தவ தத்
நாராயணஸ் த்விதி மஹா உபநிஷத் பிரவீதி
ஸுவ்பாலிகீ ப்ரப்ருதயோபி அநு ஜக்முர் ஏநாம் –25-
ஸ்ருஷ்ட்டி பிரகரணத்தில் உள்ள காரண வாக்யங்களாலே -சத் என்றோ -ப்ரஹ்ம -என்றோ -ஆத்மா -என்றோ
எந்த வஸ்துவானது மூல காரணமாக அறியப்பட்டு இருக்கின்றதோ –
அந்த வ்யக்தி நாராயணனே என்று மஹா உபநிஷத்து ஓதுகின்றது–
இந்த மஹா உபநிஷத்தை ஸூபால உபநிஷத் முதலானவைகளும் பின் செல்லுகின்றன –
—————
அடுத்த ஸ்லோகத்துக்கு அவதாரிகை
ஏவம் ஸுநிர்ணீதயோ : ஸர்வ பரயோ : தத்த்வ ஹிதயோ : ஸர்வ யோக்யம் ஹித விஸேஷம் அவதாரயந் ஶ்ரோதாரம் நிமந்த்ரயதே தஸ்யேதி –
தஸ்ய, லோக ப்ரதானஸ்ய, ஜகன்னாதஸ்ய, பூபதே |
விஶ்ணோ:, நாம ஸஹஸ்ரம், மே, ஶ்ருணு, பாபபயாபஹம் ||–12-
தஸ்ய யதோக்த மஹா மஹிம்ந: (கீழ் பரமமான தத்வம் மஹிமையை யுடைய )| லோக ப்ரதாநஸ்ய அஸேஷ ஸேஷிண: |
ஜகந் நாதஸ்ய ஸர்வ நியந்து: |
விஷ்ணோ : (நீக்கமில்லா நிறைந்து )ஸம்பந்திஷு ஸத் ஸ்வபி பஹுஷு ததா வர்ஜந உபாயாந்தரேஷு,
நாம ஸஹஸ்ர மேவ
ஸர்வ பாப பயாபஹம் ஸர்வ ப்ரகாரம் பாபம் தத்தேதுகம் பயம் ச ஸ மூலகாதம் ஹந்யயாத் இத் ஶம்ஸநார்ஹம் யத்தத் மே மத்த: மதர்தம் வா ஶ்ருணு |(என்னிடத்தில் கேள் -என்றும் எனக்காக கேள் என்றும்-பாலைக் குடிக்கக் காலைப் பிடிக்கிறார் )
ஸ்வயமேத்ர ஶ்ருண்வத: புநஸ் : ஶ்ரவண நிமிந்த்ரணம் பூபதே இதி ஸம்போதநம் ச வக்து:
ஶ்ரோத்ரு லாபம் அஸ்மிந் விஷயே ஶ்லாக்யம் ஸூசயத: || 12 ||(ராஜா கேள் -ஸஹஸ்ர நாமம் பெருமை அறிந்து -கிடைக்கும் பாக்யம் சொல்ல ஒண்ணாதே)
முதலாவது வினாவிற்கு விடை
எவர் ப்ரஹ்மாதி தேவர்களுக்கு எல்லாம் மகத்தான தேவதையோ
எவர் பிரம்மாதி பீபிலி வரை எல்லாப் பிராணிகளுக்கும் அழிவற்ற பிதாவோ
எவரிடம் இருந்து எல்லாப் பொருள்களும் யுக ஆரம்பத்தில் ஸ்ருஷ்டி காலத்தில் பிரம்மாவை முதலில் படைத்து அவரைக் கொண்டு
மற்றப் படைப்புகளை நடத்துகிற படியால் நான்முகனையும் நாராயணன் தானே படைக்கிறார் என்று தெரிவிக்கிறார்
இதனால் எம்பெருமான் நிமித்த காரணம் -பிதாவானமை விளக்கப்பட்டது
இவரிடத்தில் இருந்து திரும்பவும் பிரளய காலத்தில் லயம் ஆகின்றதோ
கார்யங்கள் எல்லாம் லயித்து உபாதான காரணத்திலே யாகையாலே இவனே உபாதான காரணம் என்கிறது
மூலத்தில் சகாரம் ஸஹ காரி காரணமும் அவனே என்கிறது –
இப்படிப்பட்ட லக்ஷணம் பொருந்தியவரையே பர தத்வமாக ஸ்ருதிகளும் ஸூத்ரங்களும் சொல்லுகின்றன
அப்படிப்பட்ட உலகங்களுக்கு எல்லாம் ஸ்வாமியும் உலகங்களை நடத்துபவருமாகிய விஷ்ணுவினுடைய ஆயிரம் நாமங்களும் பாவங்களையும் அவற்றினால் வரும் பயத்தையும் வேரோடு களைகின்றவை
அரசனே அவற்றை என்னிடம் அடுத்து கேள்
என் நன்மைக்காகக் கேள் என்னவுமாம்
இங்கே இந்தக் கொள்கைக்கும்
இதற்கு விரோதமான கொள்கைகளுக்கும் உள்ள வித்தியாசத்தையும்
பரத்வ நிர்ணயத்தைப் பற்றி விசாரித்து
பல ஆதாரங்கள் காட்டி நிச்சயம் செய்யப்பட்டு இருக்கிறது
இப்படி ஆறு வினாக்களுக்கும் விடை கூறப்பட்டமை காண்க –
- உச்ச தெய்வம் யார்? (“கிம் ஏகம் தெய்வம் லோகே”)
- வாழ்க்கையின் மிக உயர்ந்த குறிக்கோள் என்ன? (“கிம் வாப்யேகம் பராயணம்”)
- மனிதர்கள் எந்த தெய்வத்தின் அசுப குணங்களை ஜெபிக்க வேண்டும்? (“ஸ்துவந்த கம்“)
- எந்த தெய்வத்தை வழிபடுவதன் மூலம் மனிதர்கள் இம்மையில் சுபிட்சத்தையும் மறுமையில் சுகத்தையும் அடைவார்கள்? (“கமர்சந்தஹ் ப்ராப்னுயுர் மானவாஷ் ஷுபம்?”)
- உங்கள் கருத்துப்படி எந்த நடத்தை நெறிமுறை (தர்மம்) உயர்ந்த நடத்தை நெறிமுறை? (“கோ தர்மஸ் சர்வ தர்மானாம் பவந்த: பரமோ மதஹ்”)
- எந்த மந்திரம் அல்லது ஜபத்தை திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம், ஒரு உயிரினம் பிறப்பு, வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட முடியுமா? (“கிம் ஜபம் முச்யதே ஜந்துர் ஜென்ம சம்சார பந்தநாத்”)
பீஷ்மரின் பதில்கள் யுதிஷ்டிரனின் கேள்விகளின் காலவரிசைப்படி அமைக்கப்படவில்லை,
இருப்பினும், யுதிஷ்டிரன் எழுப்பிய கேள்விகளின் வரிசையில் கீழே உள்ள பதில்களைக் கண்டறியவும்:
- புனிதமான அனைத்தையும் புனிதமாக்கும் புனிதமாக இருப்பவர்; மிகவும் மங்களகரமானவர்; தேவர்களின் கடவுளாக இருப்பவர்; எல்லா உயிரினங்களுக்கும் நித்திய தந்தையாக இருப்பவர் ஒரே கடவுள் – பகவான் விஷ்ணு. (“பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களஆனாம் ச மங்களம் தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோ அவ்யய பிதா.”)
- பெரும் பிரகாசமாக இருப்பவர்; பெரும் தவமுடையவர் ; பரம சத்யமாக இருப்பவர்; விஷ்ணுவை அடைவதற்கான மிக உயர்ந்த குறிக்கோள் அவர் தான். (“பரமம் யோ மஹத்-தேஜஹ் பரமம் யோ மஹத்-தபஹ், பரமம் யோ மஹத்-பிரம்ம பரமம் யஹ் பராயணம்.”)
- பரம புருஷர் (நபர்), தேவர்களின் கடவுள், எல்லாருடைய நலனுக்காகவும் எப்போதும் எழுச்சியுடன் இருப்பவர், உலகத்தின் இறைவன் மற்றும் அழிவில்லாதவர் – பகவான் விஷ்ணு. அவருடைய ஆயிரம் நாமங்களை உச்சரித்து தியானிக்கப்பட வேண்டியவர். (“ஜகத்-பிரபும் தேவ-தேவம் அனந்தம் புருஷோத்தமம் ஸ்துவன் நாம-ஸஹஸ்ரேண புருஷঃ ஸததோத்திதঃ.”)
- பக்தியுடன் வழிபடுவதன் மூலமும், புருஷனின் (விஷ்ணுவின்) ஆயிரம் நாமங்களை உச்சரிப்பதன் மூலமும், ஒரு மனிதன் உலக உறவுகளிலிருந்து உண்மையான விடுதலையை அடைய முடியும். (“தமேவ ச அர்ச்சயன் நித்யம் பக்தியா புருஷம் அவ்யயம் ஸ்துவன் நாம-ஸஹஸ்ரேண புருஷঃ ஸததோத்திதঃ.”)
- பகவான் விஷ்ணுவை வணங்குவது, தியானிப்பது மற்றும் வணங்குவது மற்ற எல்லா வாழ்க்கை முறைகளையும் விட உயர்ந்த நடத்தை நெறிமுறையாகும். (“த்யாயந் ஸ்துவன் நமஸ்யாம்ஶ்ச யஜமானஸ் தமேவ ச ஏஷ மே ஸர்வதர்மாநாம் பவதঃ பரமோ மதঃ”)
- மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் மனிதர்கள் உலக வாழ்வின் துன்பங்களில் இருந்து விடுதலை பெறுகிறார்கள். அவருக்கு ஆரம்பம் அல்லது முடிவு இல்லை, அவர் முழு பிரபஞ்சத்தின் மாபெரும் இறைவன் மற்றும் கட்டுப்படுத்துபவர் (“அனாதிநிதானம் விஷ்ணும் சர்வ லோக மஹேஷ்வரம் லோகாதிக்ஷம் ஸ்துவந் நித்யம் சர்வ துஹ்காதிகோ பவேத்”)
- அந்த பகவான் விஷ்ணுவே எல்லா வியாபித்திருக்கும் உண்மை.
- விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதன் மூலமும், பக்தியுடன் இறைவனை தியானிப்பதன் மூலமும் உலக பந்தத்திலிருந்து விடுபட்டு நித்திய சுகத்தை அதாவது மோட்சத்தைப் பெறலாம்.
- விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது விஷ்ணு பகவானை வழிபடுவதற்கும் தியானிப்பதற்கும் சிறந்த வழியாகும்.
“யோ மாம் நாம ஸஹஸ்ரேண ஸ்தோதும் இச்சதி பாண்டவ
ஸோஹம் ஏகேன ஷ்லோகேன ஸ்துத ஏவ ந ஸம்ஷயஹ”–பகவான் விஷ்ணு கூறுகிறார்:
“யாராவது சஹஸ்ரநாமம் சொல்லி என்னை வழிபட விரும்பினாலும், ஒரே ஒரு ஸ்லோகத்தை (108-ல்) உச்சரிக்க முடிந்தால், அந்த வழிபாட்டை முழு சஹஸ்ரநாமத்தை ஜபிப்பதற்கு சமமாக நான் இன்னும் கருதுகிறேன்.”
இன்னும் ஒருபடி மேலே போய், சஹஸ்ரநாமத்தின் முழுப் பலனையும் கொடுக்க ஒரே ஒரு நாமத்தைக் கூட திரும்பத் திரும்பச் சொன்னாலே போதும் என்பது ஐதீகம்.
“கேணோ பயனே லகுனா விஷ்ணோர் நாம சஹஸ்ரகம்
பத்யதே பண்டிதைர் நித்யம் ஷ்ரோதும் இச்சாமி அஹம் ப்ரபோ“-பார்வதி சிவபெருமானிடம் கேட்கிறாள்:
“விஷ்ணு சஹஸ்ரநாமம் தினமும் பாராயணம் செய்ய கற்றவர்கள் பின்பற்றும் எளிதான வழி என்ன?”
“ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராணனே”-சிவபெருமான் பதிலளிக்கிறார்:
பகவான் விஷ்ணு நாரத முனிவரிடம், “நாஹம் வாசமி வைகுந்தே யோகினாம் ஹ்ருதயே ந ச, மத்-பக்த யத்ர காயந்தி தத்ர திஷ்தமி நாரதா”, அதாவது, “நான் வைகுண்டத்திலோ அல்லது யோகிகளின் இதயத்திலோ வசிக்கவில்லை, ஆனால் என் பக்தர்கள் பாடும் இடத்தில் நான் வசிக்கிறேன். ஓ நாரதா. விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதை விட அவருடைய நாமத்தைப் பாடுவதற்கு என்ன சிறந்த வழி!
பராயணம்’ என்ற சொல் ‘பரா’ மற்றும் ‘அயனம்’ என்ற இரு சொற்களைக் கொண்டது . பரா என்றால் எல்லை அல்லது முடிவு மற்றும் அயனம் என்றால் பயணம் என்று பொருள், எனவே சஹஸ்ரநாம பாராயணம் என்பது ஸ்தோத்திரத்தில் உள்ள 1000 பெயர்களின் இறுதி வரை செல்லுதல் என்று பொருள்
—————
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உலகில் ஒரே தேவன் என்று யாரைக் கூறலாம்?
நமது ஆன்மப் புகலிடமான ஒரே பொருளாக யாரைக் கூறலாம்?
எவனை வழிபடுவதன் மூலம், அல்லது எவனுடைய புகழைப் பாடுவதன் மூலம் மனிதர்கள் நன்மையை அடைவார்கள்?(2)
உமது தீர்மானத்தின்படி அறங்கள் அனைத்திலும் முதன்மையான அறம் எது?
எந்த மந்திரங்களை உரைப்பதன் மூலம் பிறவி மற்றும் வாழ்வின் கட்டுகளில் இருந்து ஓர் உயிரினத்தால் விடுபட முடியும்?” என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் தளர்வனைத்தையும் வீசி யெறிந்து விட்டு, அண்டத்தின் தலைவனும், எல்லை யற்றவனும்,
அனைத்திலும் முதன்மையானவனுமான தேவதேவனின் (வாசுதேவனின்) ஆயிரம் பெயர்களைச் சொல்லி
அவனுடைய புகழை உற்சாகமாகப் பாட வேண்டும்.(3)
மாற்றமில்லாதனான அவனை மதிப்புடனும், பக்தியுடனும் எப்போதும் வழிபடுவதன் மூலமும், அவனைத் தியானிப்பதன் மூலமும்,
அவனது புகழைப் பாடி, அவனுக்குத் தலைவணங்குவதன் மூலமும், அவனுக்காக வேள்வி செய்வதன் மூலமும்,
தொடக்கமும், முடிவும், அழிவும் இல்லாதவனும், உலகங்கள் அனைத்தின் பரமத் தலைவனும், அண்டத்தைக் கட்டுப்படுத்தி ஆள்பவனுமான
அந்த விஷ்ணுவைப் புகழ்வதன் மூலமும் ஒருவன் கவலைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்லலாம்.(6)
உண்மையில், பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும், கடமைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தையும் அறிந்தவனாகவும்,
அனைவரின் புகழ் மற்றும் சாதனைகளைப் பெருக்குபவனாகவும், அனைத்து உலகங்களையும் ஆள்பவனாகவும், பேரற்புதம் நிறைந்தவனாகவும்,
அனைத்து உயிரினங்களின் தோற்றத்துக்கான அடிப்படைக் காரணமாகவும் அவனே இருக்கிறான்.(7)
என் தீர்மானத்தின்படி, தாமரைக்கண்ணனான வாசுதேவனிடம் பக்தியுடன் அவனது புகழைப் பாடி எப்போதும்
அவனை வழிபடுவதே ஒருவன் செய்யும் அறங்கள் அனைத்திலும் முதன்மையான அறமாகும்.(8)
உயர்ந்த சக்தி அவனே. உயர்ந்த தவம் அவனே. உயர்ந்த பிரம்மம் அவனே. உயர்ந்த புகலிடம் அவனே.(9)
புனிதங்கள் அனைத்திலும் மிகப் புனிதமானவன் அவனே. மங்கலப் பொருட்கள் அனைத்திலும் புனிதமிக்கவன் அவனே.
தேவர்கள் அனைவருக்கும் தேவன் அவனே, உயிரினங்கள் அனைத்திற்கும் மாற்றமில்லா நிலையான தந்தை அவனே.(10)
தொடக்க யுகம் தொடங்கியபோது உயிரினங்கள் அனைத்தும் அவனிடம் இருந்தே உண்டாகின.
யுகம் தீர்ந்ததும் அனைத்துப் பொருட்களும் அவனிலேயே மறைகின்றன[1].(11)
ஓ! மன்னா, உலகங்கள் அனைத்திலும் முதன்மையானவனும், அண்டத்தை ஆள்பவனுமான விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைக் கேட்பாயாக,
அவை பாவங்களை அழிப்பதில் பெருந்திறன் கொண்டவையாகும்.(12)
முனிவர்களால் பாடப்பட்ட உயரான்ம வாசுதேவனின் ரகசியமான மற்றும் நன்கறியப்பட்ட குணங்களில் இருந்து எடுக்கப்பட்ட
அவனுடைய பெயர்கள் அனைத்தையும் அனைவருடைய நன்மைக்காவும் உனக்குச் சொல்லப் போகிறேன்
கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:|
கிம் ஜபந் முச்யதே ஜந்து: ஜன்ம ஸம்ஸார பந்தநாத்||
தர்மங்கள் அனைத்தினும் உயர்ந்த தர்மம் என நீர் கருதும் தர்மம் எது?
பிறவிச் சுழற்சியெனும் பெருந்தளையினின்றும் எதை ஜபிப்பதால் மானிடர் விடுபடல் ஆகும்?
இவ்வாறு யுதிஷ்டிரன் கேட்க பீஷ்மன் உரைத்த பதில்தான் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்.
இதில் ஜந்து என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் அல்லவா? இதில் ஒரு விசேஷம் இருக்கிறது.
அதாவது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றபடிப் பிறந்த உயிர் அனைத்தும் குறிக்கப்படுகிறது.
இந்த விசேஷத்தைக் காட்டுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ஜந்து: என்றால் பிறவியெடுத்த அனைத்து உயிரும் என்ற பொருளில்
ஜந்து: – ஜனன தர்மா: என்கிறார். அது மட்டுமின்றி இன்னும் விளக்கமாக
‘அநேந ஜந்து சப்தேந ஜப அர்ச்சன ஸ்தவநாதிஷு யதாயோக்யம் ஸர்வப்ராணிநாம் அதிகாரம் ஸூசயதி’ என்று விளக்கம் அளிக்கிறார்.
பொருள் – இந்த ஜந்து சப்தத்தால் ஜபம், அர்ச்சனை, ஸ்தவம் ஆகியன செய்ய முடிந்த அனைத்து உயிர்களுக்கும்
அதிகாரம் இருப்பது குறிப்பிடப்படுகிறது. ஆண், பெண், இளையர், முதியோர், குழந்தைகள் என்று அனைவருக்குமான வழி இஃது.
ஸ்ரீ பராசர பட்டரும் இந்த ஜந்து எனும் சொல்லுக்கு அப்படியே
ஜனன தர்மா: பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்றுதான் பொருள் எழுதுகிறார்.
ஆறு கேள்விகள் கேட்டான் தருமன்.
மிக்குயர்ந்த பெருந்தெய்வம் எது?
அறுதியான இறுதி நிலையம் உயிர்களுக்கு எது?
சுபம் அடைய யாரைத் துதிப்பது?
யாரைப் பூஜை செய்வது?
தர்மங்களில் சிறந்த தர்மம் உங்கள் கருத்துப்படி எது?
எந்த ஜபத்தால் உயிர்கள் முத்தி அடைகின்றன?
ஆறாவது கேள்வி. ‘எதை ஜபித்தால் உயிர் முத்தி பெறலாகும்?’
அவன் அளித்த விடையை அருந்த நமக்கு அளிக்கிறார் ஆதிசங்கரர். —
“நிலைப்பன திரிவன என்று உருவான உலகத்திற்கு உடையவன்; படைப்பின் கடவுளருக்கும் படைக்கும் பெருங்கடவுள்;
இடம் காலம் பொருள் ஆகியவற்றால் அளவிட முடியாதவன்; புருஷோத்தமன், அவனையே சிறிதும் சோர்வில்லாமல்
அவன் விஷயத்திலேயே முயலும் மனிதர் எல்லாவிதத் துக்கத்திலிருந்தும் நீங்கியவர்கள் ஆகிறார்கள்”
பராசர பட்டரின் உரை பேசுகிறது —
“திரிவன நிலைத்தன என்னும் ஜகத் என்பதற்கு உடையவனாகிய ஸ்வாமி; தேவர்களுக்கும் பெருந்தேவன்;
அளவிடக்கூடாத பெருமையுள்ளவன்; தன்னையும் அளிக்கும் பரம வள்ளல் தன்மை கொண்டவன்;
அத்தகைய அவரை ஆயிர நாமங்களால் எக்காலமும் முயன்று துதி செய்வதனால் மனிதர் எல்லாத் துன்பங்களையும் கடந்தவர் ஆவர்.”
இந்த ஆயுதத்திற்கு யார் ரிஷி? சந்தஸ் என்ன? தேவதை எது? பீஜம் எது? சக்தி எது? இதயம் எது? பிரயோஜனம் எது? என்கிறாயா, சொல்கிறேன் கேள்.
வேத வியாசர்தாம் இதைக் கண்டறிந்த ரிஷி.
பாதம் ஒன்றுக்கு எட்டு உயிரெழுத்துக்களால் ஆன அனுஷ்டுப் என்னும் சந்தம் தான் இதற்குச் சந்தஸ்.
தேவதை யார் என்றால் பகவானான விஷ்ணு.
பீஜம் என்பது அம்ருதாம்சூத்பவ: என்பது.
தேவகீநந்தன: என்பது சக்தி.
திரிஸாமா என்பது இதயம்.
அனைத்துக் குற்றங்களையும் களைந்து ஆழ்ந்த நிலைத்த சாந்தி என்பது இதன் பிரயோஜனம்.
பாற்கடலில் பள்ளிகொண்ட மாய மணாள நம்பியைத் தியானித்தபடியே இந்த ஆயுதத்தை நீ நாவினால் ஏவினாலே போதும்,
போய பிழையும், புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்.
எனவே மனத்தால் ஓர்ந்து திடநம்பிக்கையுடன் செப்பு.’ என்கிறான் பீஷ்மன். மரணத்தின் வாயிற்படியில் அமர்ந்தபடி அவன் சொன்னவை இவை.
‘பாதம் ஒன்றுக்கு எட்டு உயிரெழுத்துக்கள் அடங்கிய அனுஷ்டுப் என்னும் சந்தஸில் இந்த ஸஹஸ்ரநாமம் இருக்கிறது.’
அவனுக்கு, அந்த முழுமைக்கு, அந்த நாராயண பரஞ்சோதிக்கு, நாராயண பரந்தாமத்திற்கு,
நாராயண பர தத்துவத்திற்கு ஓர் உருவம் தந்து பார்க்கிறது ஸ்ரீமத் பாகவதம்.
அவனுடைய பாதங்கள் இந்தப் பூமி.
விண்ணுலகம் அவன் சிரம்.
இடைப்பட்ட வானம் அவனுடைய நாபி.
ஞாயிறு அவன் கண்.
வாயு அவன் நாசி.
திசைகள் அவன் செவிகள்.
சந்திரன் அவன் மனம்.
மாயை அவன் முறுவல்
மரங்கள் அவன் ரோமங்கள்
மேகங்கள் அவன் குழல் கற்றை
அவன் மார்பில் இருக்கும் கௌஸ்துபம் சுத்த ஜீவ சைதன்யம்
இப்பொழுது நாம் யார்? எங்கிருக்கிறோம்? என்று தெரிகிறதா? அவன் மார்பில் திகழும் கௌஸ்துபம் நாம். ஜீவர்கள்.
ஜீவர்களின் கூட்டத் திகழ்ச்சி ஸ்ரீவத்ஸம்
வனமாலை மாயையின் விசித்ர குணங்கள்
அவனுடைய மஞ்சள் ஆடை வேதம்
அவன் அணிந்த முப்புரி நூல் மூன்று அக்ஷரங்கள் கொண்ட பிரணவம்.
அநந்தனாகிய ஆதிசேஷன் அவ்யாக்ருதம்.
அவன் அமரும் பத்மம், தர்மம் ஞானம் என்ற இதழ்கள் உடைய சுத்த ஸத்வம்
பிராணன் கதையாகிய கௌமோதகி
அப்பு தத்துவம் பாஞ்சஜன்யம்
அக்னி தத்துவம் சுதர்சனம்
அந்த முழுமையில் தான் அமிழ்ந்து போகும் போதுதான் கரையேற முடிகிறது.
வெறும் கடலில் விழுந்து அமிழ்ந்து போனால் கரை ஏறமுடியாது.
ஆனால் இந்தப் ‘பெரும் புறக்கடலில்’, ‘கிருபா சமுத்திரத்தில்’ அமிழ்ந்து போனால் தான் வாழ்வு.
அப்படி அமிழக் கற்றவர்கள்தாம் ஆழ்வார்கள்.
அந்தத் தத்துவத்தை அன்றோ தியானித்து இங்கே ஸ்ரீமஹாவிஷ்ணு என்று ஆயிர நாமங்களால்
ரீங்காரம் இட்டுலவும் வண்டாக ஆகச் சொல்கிறது பீஷ்மனின் ஜீவ நாதம்.
தியாயந் ஸ்துவந் நமஸ்யம்ச –தியானம் செய், தோற்றுப் போ!
துதி செய், தோற்றுப் போ! –அந்தத் தோல்விக்கு வெற்றிவாகை பாடு! –அதுதான் நமஸ்காரம்.
அரங்கன் திருமுற்றத்தில் உங்களை இடுகிறது தியான ச்லோகம். இப்படி ஓர் திருவின் மணாளன் வீற்ற கோலம்,
அந்த முகுந்தன் யார்? அவர் எப்படி இருப்பார்? அவரா?
அவருக்கு இந்த பூமிதான் பாதங்கள்.
அவருக்கு இந்த வானம் நாபி.
வாயு பிராணன்
சந்திரன் சூரியன் இருகண்கள்
திக்குகள் காதுகள்
திய: என்னும் விண்ணுலகு தலை
அக்கினி வாய்
சமுத்திரம் அடிவயிறு
எந்த வயிற்றில் தேவர், மனிதர், பறவைகள், மிருகங்கள்,
நாகர், கந்தருவர், அசுரர் என என என விரிந்த உலகு
விசித்திரமாக விளையாடிக் களிக்கிறதோ
அந்த மூவுலக வடிவினர்தாம் ஈசராகிய
இந்த விஷ்ணு
இந்த விஷ்ணுவாகிய ஈசரை நமஸ்கரிக்கிறேன்.
அந்தப் பரமாத்மாவாகிய வாஸுதேவருக்கு நமஸ்காரம்
———
ஆறாவது கேள்விக்கு பீஷ்மர் பதில் முதலில்
ஜகத்ப்ரபும் தேவதேவம் அநந்தம் புருஷோத்தமம்
ஸ்துவன் நாம ஸ்ஹஸ்ரேண புருஷ ஸததோத்தித
பழுதே பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் –
அசந்நேவ ஸ் பவதி –
அடுத்து 3/4 கேள்விகளுக்கு பதில்
தமேவ சார்ச்யந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன் நமஸ் யம்ஸ்ஸ யஜமாநஸ்த மேவச –சர்வ துக்காதி கோ பவேத்
ஜப ஆலம்பனம்-ஸஹஸ்ர நாமம்
பக்த்யா அர்ச்சயன்
பக்த்யா த்யாயன்
பக்த்யா ஸ்துவன்
பக்த்யா நமஸ்யன்
அச்சுதா அமரர் ஏறே –என்னும் இச்சுவை
பக்திஸ்ஸ ஜ்ஞான விசேஷ –
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -திருவாய் -10-4-1-
வணக்குடை தவ நெறி -1-3-5-
ஸ்ததம் கீர்த்தயந்தோமாம் நமஸ் யந்தஸ் சமாம் பக்த்யா -ஸ்ரீ கீதை -9-14
மன்மநாபவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு -ஸ்ரீ கீதை -9-4
காரணந்து த்யேய
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே —
நாரணன் எம்மான் பாரணங்காளன் வாரணம் தொலைத்த காரணன் தானே –
தானே யுலகெல்லாம் -தானே படைத்திடந்து தானே யுண்டுமிழ்ந்து தானே யாள்வானே
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
ப்ரஹ்ம வித் ஆப்நோதி பரம்
யஜ்ஞென தானேன தபஸா நோசகேன-
வியாசரும் -ஆலோத்யா சர்வ சாஸ்த்ராணி விசார்யச புன புன
இதமேகம் ஸூ நிஷ்பந்தம் த்யேயோ நாராயணஸ் சதா –
ஆலம்பனம் -கூராழி வெண் சங்கேந்தி
வேர் சூடுமவர் மண் பற்று கழற்றாதாப் போலே
ஜ்ஞானியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும் –
தர்மரின் மூன்றாவது கேள்விக்கு -கம் ஸ்துவந்த –
பீஷ்மர் –
தமேவ சார்ச்யந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன் நமஸ் யம்ஸ்ஸ யஜமாநஸ்த மேவச –
அநாதிநிதனம் விஷ்ணும் சர்வலோக மகேஸ்வரம்
லோகாத் யஷம் ஸ்துவன் நித்யம் சர்வ துக்காதிகோ பவேத் –
ப்ரஹ்மணயம் சர்வ தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்தநம்
லோகநாதம் மஹத் பூதம் சர்வ பூத பவோத் பவம் –
10 அடை மொழிகள்
1-அநாதிநிதனம் -ஆதி அந்தம் இல்லாதவன் -தேச கால வஸ்து பரிச்சேதன்
2-விஷ்ணும் -வ்யாப்தி
3-சர்வலோக மகேஸ்வரம்
4-லோகாத் யஷம் -அனைத்தையும் கண்களால் காண்பவன்
5-ப்ரஹ்மணயம் -வேத பிரதிபாத்யன்
6-சர்வ தர்மஜ்ஞம் –
7-லோகாநாதம்
8-மஹத் பூத்
9-கீர்த்தி வர்த்தநம்
10- சர்வ பூத பவோத் பவம் -ஆதி காரணன் –
ஸ்துவன் நித்யம் சர்வ துக்காதிகோ பவேத் -ஸ்துவந்த கம் கேள்விக்கு இப்படி பீஷ்மர் பதில் அருளுகிறார்
யதாததாவபி குண சங்கீர்த்த்தனம் குர்வன்-ஏதோ ஒரு முறையில் திவ்ய நாம திருக் குணங்களைப் பாடுதல் –
இனி ஐந்தாம் கேள்விக்கு -கோ தர்ம சர்வ தர்மாணாம் -பதில்
ஏஷ மே சர்வ தர்மாணாம் தர்மோதி கதமோ மத ‘
யத் பக்த்யா புண்டரீ காஷம் ஸ்தவைரச் சேன்நரஸ் ஸதா –
ஏஷ -மேலே சொல்லப்பட்ட அர்ச்சன ஸ்தவ நாதிகளால்-அன்புடன் பூஜிக்கை –
அதிகதம -மிகச் சிறந்த தர்மம்
யத் பக்த்யா -ப்ரீதி உட் கொண்ட -ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் –
அர்ச்சேத் -ஆராதிப்பவன்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
சதா -கால தேச சுத்தி வேண்டா
அபஹத பாப்மா -அமலன் -விமலன் -நிமலன் -நின்மலன் –
அவன் திரு உள்ளம் உகந்து -விதி வாய்க்கின்று காப்பாரார் –
ஸ்வாராதன் –
கலௌ சங்கீர்த்ய கேசவம் –
அடுத்து கிம் வாப்யேகம் பராயணம் –உபேயம் பற்றி கேள்விக்கு பதில் –
1-பரமம் யோ மஹத் தேஜ–பரம் -மஹத் இரண்டு விசேஷணங்கள்-கோடி சூர்ய சம ப்ரப-
2- பரமம் மஹத் தப -தப -நியந்தா பொருளில்
பீஷாஸ்மாத் வாத பவதே பீஷோ தேதி ஸூர்ய
3-பரமம் மஹத் ப்ரஹ்ம -ஸ்வரூப ப்ருஹத்வம் குண ப்ருஹத்வம் –
ப்ரஹ்மணத்வம் -தன்னை கிட்டியவரை தன்னைப் போலே பெரிதாக்க வல்லவன் –
4-பரமம் பராயணம்
5-பவித்ரானாம் பவித்ரம்
மாதவன் என்று ஓத வல்லீரேல் தீதொன்றும் சாரா
வாயினால் பாடி -..போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
ஹரிர் ஹரதி பாபானி
தத்யதா இஷீக தூல மக்நௌ ப்ரோதம் ப்ரதூயதே -சாந்தோக்யம்
பவித்ரங்களுக்கும் பவித்ரம் அவனே
6- மங்களா நாஞ்ச மங்களம் –
இனி கிமேகம் தைவதம் லோகே -முதல் கேள்விக்கு பதில் –
தைவதம் தேவதா நாம் ஸ -என்று தொடங்கி
மனிதர்க்குத் தேவர் போலே தேவர்க்கும் தேவாவோ -திருவாய் -8-1-5-
லோக ப்ரதானச்ய – ஜகன்நாதச்ய
சர்வ பாபபயாபஹம் நாம சஹச்ரம்
ஸ்ருணுமே-கேள் -தர்மா -தட்டி எழுப்பி சொல்கிறார் பீஷ்மர்
கௌணாநி -குண சேஷ்டிதங்கள்
விக்யாதாநி -பிரசித்தமானவை
ரிஷிபி -சநகர் நாரதர் போல்வார்
பரிகதாநி -எல்லா திக்குகளிலும் அத்யந்த சிநேக பக்திகளுடன் பாடப்பட்டவை
பூதயே -வாழ்ச்சியின் பொருட்டு
பூ சத்தாயாம்
கடல் வண்ணன் பூதங்கள் -திருவாய் -5-2-1-
மஹாத்மநா-தனக்கும் தன் தன்மை அறிவரியான் –
அஹம் வேத்மி மகாத்மா
அப்ரமேயம் ஹி தத்தேஜ –
கிம் ஜபன் முச்ச்யதே உபோத்காதம்
பத்தோ முச்யேத பந்த நாத்யாதி ப்ரஹ்ம ஸநாதநம் -என்று
சம்சார பந்தம் நிவ்ருதியும்
ப்ரஹ்ம பிராப்தியும்
பலமாக சொல்லி முடிகிறது
யதோபாசனம் பலம்
சூழ்ந்து இருத்து ஏத்துவர் பல்லாண்டு -பல்லாண்டு இங்கே -அதே பலன் அங்கும்
———————————————————-——————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply