ஸ்ரீ.வில்லிபாரதம் – இரண்டாம் பாகம் -22. நிரை மீட்சிச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

தொழுவார்தம் வினை தீர, முன் கோலம் ஆய், வேலை
சூழ் பார் எயிற்று
உழுவானை, நல் நாமம் ஒன்றாயினும் கற்று,
ஒர் உரு ஓதினார்
வழுவாத சுரர் ஆக, நரர் ஆக, புள் ஆக,
மா ஆக, புன்
புழு ஆக, ஒன்றில் பிறந்தாலும், நரகில் புகார் காணுமே.1.-கடவுள் வணக்கம்:விஷ்ணுஸ்துதி.

தொழுவார்தம் – (தன்னை) வணங்கியப் பிராத்தித்த தேவர்
முனிவர் முதலியோரது, வினை – தீவினை, தீர – நீங்கும்படி, முன் –
முற்காலத்தில், கோலம் ஆய் – வரகாவதாரமாய், வேலை சூழ் பார் – கடல்
சூழ்ந்த நிலவுலகத்தை, எயிறு உழுவானை – கோட்டாற் குத்தியெடுத்த
திருமாலினது, நல் நாமம் – நல்ல (ஆயிரத்தெட்டுத்) திருநாமங்களுள், ஒன்று
ஆயின்உம் – ஒரு திருநாமத்தையாவது, கற்று – (தாம்) அறிந்து, ஒர்உரு –
ஒருமுறை, ஓதினார் – சொன்னவர்,- வழுவாத – (தம்தம் ஊழ்வினையைத்)
தவறாத, சுரர் ஆக – தேவர்களாகவாயுனும் நரர்ஆக – மனிதராகவாயினும்,
புள் ஆக – பறவைகளாகவாயினும், மா ஆக – விலங்குகளாகவாயினும், புன்
புழு ஆக – (எல்லாப் பிறவிகளுள்ளும்) புல்லிய [இழிபிறப்பான] புழுக்களாக
வாயினும், ஒன்றில் – யாதாயினும் ஒருபிறப்பில், பிறந்தால்உம் – தோன்றி
னாலும், நரகில் – நரகலோகத்தில், புகார் – சென்றுசேரமாட்டார்; (எ – று.) –
ஏகாரம் – ஈற்றசை.

     கடவுளின் திருநாமத்தைக் கூறியவர் ஒருகால் எஞ்சிய
பிராரப்தவினையால் சுரர்முதலிய பிறவியில் தோன்றினும்
நரகத்தையடையாரென்க.

     முன்னொருகாலத்திற் பூமியைப் பாயாகச் சுருட்டியெடுத்துக்கொண்டு
கடலில் மூழ்கிப்போன இரணியாக்ஷனென்னும் அசுரராசனைத் திருமால் தேவர்
முனிவர் முதலியோரது வேண்டுகோளின்படி வராகரூபமாகத் திருவவதரித்துக்
கொன்று பூமியைக் கோட்டாற்குத்தி யெடுத்துக்கொண்டு வந்து விரித்தருளின
வரலாற்றை உட்கொண்டு, ழுதொழுவார்தம்வினைதீரமுற்கோலமாய் வேலைசூழ்
பாரெயிற்றுழுவான்ழு என்றார்.  வினை – இங்கே, பிரளயாபத்து நேர்தற்கு ஏற்ற
தீவினை.  நாமத்துக்கு நன்மை – தன்னை ஒருகால் ஓதியவர்க்கும் உயர்பதம்
அளித்தல்.  தேவர், மக்கள், விலங்கு, புள், ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்
என்னும் பிறப்பேழனுள் முதலைந்தனையுங் கூறி, மற்றையவற்றை
உபலக்ஷணத்தாற் பெறவைத்தார்: [உபலக்ஷணமாவது – ஒருமொழி ஒழிந்த தன்
இனங்களையும் குறிப்பது.] எலும்பில்லாத உடம்பினதாதலால், ழுபுன் புழுழு
எனப்பட்டது; ழுஎழுவகைத் தோற்றத் தின்னாப்பிறப்பி, னென்பொழி யாக்கைழு
என்றார் பிறரும்.

     தொழுவார், உழுவான் என்பன – இயல்பினால் இறந்தகாலம்
எதிர்காலமாகச் சொல்லப்பட்ட காலவழுவமைதிகள். கோலம், வேலா,
நாமம், ஸு ரர், நரர் – வடசொற்கள்.  எயிறு – இங்கே, வக்கிரதந்தம்.
உழுவானை = உழுவானது; இரண்டனுருபு, ஆறனுருபின் பொருளில் வந்தது;
உருபுமயக்கம்.  ழுஆகழு என்ற வினையெச்சம் – இடைச்சொல் தன்மைப்பட்டு,
விகற்பப்பொருளில் வந்தது; ஆனதுபற்றியே, இயல்பாயிற்று:  அது,
எண்ணுப்பொருளும் இங்குக்கொண்டுள்ளது.  வழுவாத என்பதனைச் சுரர்
முதலிய எல்லாப் பிறவிகளோடுங் கூட்டுக.  ஸு ரரென்னும் வடசொல்லுக்கு –
திருப்பாற்கடல் கடைந்த காலத்து அதினினின்று உண்டா சுரையை [வாருணி
யென்னும் மதுவை] உண்டவரென்பது பொருள்.  ழுபிறந்தாலும்ழு என்ற
எதிர்மறையும்மை, அவர்கட்குப் பிறப்பின்மையை விளக்கிநின்றது.  காணும்
தேற்றப்பொருளதாய் வந்த முன்னிலை யிடைச்சொல்.

     இதுமுதற் பதினைந்து கவிகள் – பெரும்பாலும்  முதல் நான்கு சீரும்
மாங்காய்ச்சீர்களும், ஈற்றுச்சீரொன்று மாங்கனிச்சீருமாகிய நெடிலடி
நான்குகொண்ட கலிநிலைத்துறைகள்.

மூது ஆர் அழற் பாலை வனமும், தடஞ் சாரல்
முது குன்றமும்,
சூது ஆடி, அழிவுற்று, அடைந்தோர்கள் சரிதங்கள்
சொன்னோம்; இனி,
பாதாரவிந்தத்து மருவார் விழக் கொண்டு பார்
ஆளும் வெங்
கோது ஆர் மனத்தோன், விராடன்தன் நிரை கொண்ட
கோள் கூறுவாம்:2.-கவிக்கூற்று: துரியோதனன்நிரைகவர்செய்தியைக்
கூறுவேனெனல்.

சூது ஆடி – (துரியோதனனுக்கு மாமனான சகுனியுடனே)
சூதாட்டமாடி, அழிவு உற்று – (அந்த ஆட்டத்தில்) தோல்வியடைந்து,
(அதனால்), முது ஆர் அழல் பாலைவனம்உம் – பழமையாக
[இயற்கையாகவே] மிக்க வெப்பமுள்ள பாலைநிலங்களையுடைய காடுகளையும்,
தட சாரல் முதுகுன்றம்உம் – பெரிய சாரல்களையுடைய பழமையான
மலைகளையும், அடைந்தோர்கள் – அடைந்து வசித்த பாண்டவர்களுடைய,
சரி தங்கள் – அஞ்ஞாதவாசக்காலத்து நடந்த வரலாறுகள் சிலவற்றை,
சொன்னோம் – (யாம் கீழ்க்) கூறினோம்; இனி – இனிமேல், பாத அரவிந்தத்து
– (தனது) தாமரைமலர்
 போலும்பாதங்களிலே, மருவார் – பகைவர், விழ –
(சரணமாக வந்து) விழுந்து தண்டனிட, கொண்டு – (அவர்களைக்
கடைக்கண்ணால்) நோக்கிக்கொண்டு, பார் ஆளும் – பூமியை அரசாளுகின்ற,
வெம்கோது ஆர் மனத்தோன் – கொடிய குற்றங்கள் நிரம்பிய
மனத்தையுடையவனான துரியோதனன், விராடன்தன் – விராடராசனது, நிரை –
பசுக்களை, கொண்ட -கவர்ந்து கொண்டுபோன, கோள்-வரலாற்றை, கூறுவாம் –
சொல்வோம்; (எ -று.)


கீழ்ப் பாண்டவசரிதம் கூறிய தாம் இனித்துரியோதனன் நிரைகவர்ந்த
வரலாற்றைக் கூறப்போவதைத் தெரிவிக்கின்றார்:  படிப்பவர் நன்கு
அறியும்பொருட்டுக் கீழ்நடந்தது இன்னது, இனி நடப்பது இன்னது என்று
கூறுவது, ஒரு மரபு.  சூரிய அக்கினிகளின் சேர்க்கையா லல்லாமல்
இயல்பிலேயே வெப்ப மமைந்த தென்பார் ‘மூதாரழற் பாலைவனம்’ என்றது.
பகைவர்கள் இவனது கடைக்கண்பார்வையையே பெரும்பேறாகக் கருதிக்
காலில் விழுகின்றன ரென்பதும், இவன் அவர்களது அடிவீழ்ச்சியைக்
கண்ணோக்கினால் உகக்கின்றானென்பதும் விளங்க, ‘பாதாரவிந்தத்து
மருவார்விழக் கண்டு’ என்றார்; இதனால், அடங்காதவர்களையெல்லாம்
அடக்குந் திறமையுடையவ னென்பதும் வணங்காமுடி மன்ன னென்பதும்
தொனிக்கின்றன.  இனி, விழக் கொண்டு-விழுவதனால் அவர்களைத் தன்னைச்
சேர்ந்தவராக அங்கீகரித்து எனினுமாம்.  கோது – கொடுங்கோன்மை,
பிறராக்கம் பொறாமை, செய்ந்நன்றியறிவின்மை முதலியன.

      பாலை- நீரும் நிழலும் இல்லாத சுரமும், சுரஞ்சார்ந்த இடமும்.  தட +
சாரல் = தடஞ்சாரல்.  தட-பெருமையுணர்த்தும் உரிச்சொல்.  சாரல் –
மலைப்பக்கம்; மலையைச்சார்ந்துள்ளதாகிய பக்கத்துக்குத் தொழிலாகுபெயர்.
குன்றம், அம் – சாரியை. அழிவுற்று – இராச்சியம் முதலிய
செல்வமனைத்தையும் இழந்து. சரிதங்கள் – மற்போர், கீசகன்வதை முதலியன.
சொன்னோம் – கவிமரபுபற்றி வந்தது; தனித்தன்மைப்பன்மை.  பாதாரவிந்த
மென்னும் முன்பின்னாகத் தொக்குவந்த உவமத்தொகை – வடநூன்முடிபு,
தீர்க்கசந்தி; மருவார் – (தன்னோடு) கூடாதவர்; எனவே, பகைவர்.  கோள் –
கொள்கை:  முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

ஈர்-ஆறும் ஒன்றும் சுரர்க்கு உள்ள நாள் சென்ற;
இனி, நம்முடன்
பார் ஆள வரும் முன்னர், அடல் ஐவர் உறை நாடு
பார்மின்கள்!’ என்று,
ஓர் ஆயிரம் கோடி ஒற்றாள் விடுத்தான்; அவ்
ஒற்றாள்களும்,
வார் ஆழி சூழ் எல்லை உற ஓடி, விரைவின்கண்
வந்தார்களே.3.-பாண்டவர்களைக் கண்டுபிடிக்கும் படி துரியோதனன்
அனுப்பிய ஒற்றர் மீண்டும்வருதல்.

(அப்பொழுது துரியோதனன்), ழுஈர் ஆறுஉம் ஒன்றுஉம்
சுரர்க்கு உள்ள நாள் – தேவமானத்தாற் பதின்மூன்று
தினங்கள்[பதின்மூன்றுவருஷங்கள்], சென்ற – (பெரும்பாலுங்) கழிந்தன;
(ஆகையால்), இனி – இனிமேல், அடல் ஐவர் – வலிமையையுடைய
பஞ்சபாண்டவர்கள், நம்முடன் – நம்மோடு ஒப்பாக, பார் ஆள வரும்
முன்னர் – பூமியை ஆளுவதற்கு வரும் முன்னமே, உறை நாடு – (அவர்கள்
உருத்தெரியாமல் மறைந்து) வசிக்கின்ற தேசத்தை, பார்மின்கள் –
(இன்னதென்று தேடிக்) கண்டறியுங்கள்,ழு என்று – என்று சொல்லி, ஓர் ஆயிரம்
கோடி ஒற்று ஆள் – ஓர் ஆயிரகோடி வேவுகாரர்களை, விடுத்தான் –
(தேசங்கள் தோறும்) அனுப்பினான்; அ ஒற்று ஆள்கள்உம் –
அவ்வொற்றர்களும், வார் ஆழி சூழ் – நீண்ட கடல் சூழ்ந்த, எல்லை உற –
நிலவுலகம்முழுவதும், ஓடி – ஓடிச்சென்று (தேடி), (அவர்களிருக்குமிடம்
அறிந்துகொள்ளாமலே), விரைவின்கண் – சீக்கிரமாக, வந்தார்கள் -; (எ – று.)

     இன்னுமுள்ள சிலநாள்களுங் கழிந்தால் அஞ்ஞாதவாசமும் முடிந்து
மீண்டும் பாண்டவர்கள் உலகாளவருவார்கள், அச்சில நாள்களும் கழிவதற்கு
முன்னமே அவர்களை இன்னவிடத்து இன்னாரென்று கண்டுபிடிக்க வேண்டும்:
அங்ஙனங் கண்டுபிடித்தால் முன்னையேற்பாட்டின்படி மீண்டும் அவர்களைக்
காட்டுக்கே துரத்திவிடலாமென்கிற கெடுநினைவால், இவ்வாறு கூறினான்:
இதனை ழுஅரிவையோ டகன்று நீவி ரைவரு மடவி யெய்திச், சுரர்தின மீரா
றங்கட் டுன்னுதிர் மன்னுநாட்டின், ஒருவரு மறியா வண்ண மொருதின
முறைதிர் உங்கள், பெருவிறலரசும் வாழ்வும் பின்னுறப்பெறுதி ரென்றான்,ழு
ழுமறைந்துறை நாளினும்மை மற்றுளோ ரீண்டுளாரென், றறிந்திடின் மீண்டு
மிவ்வா றரணிய மடைதி றென்றான்ழு  என்று கீழ்ச்சூதுபோர்ச்சருக்கத்திற்
கூறியவாற்றால் அறிக.  இத்தகைய கெடுநினைவுகள் பற்றியே, துரியோதனனை
ழுவெங்கோதார் மனத்தோன்ழு என்றது.  இங்ஙன் பாண்டவரை
வஞ்சனையாலன்றி வீரத்தால் வெல்லுதல் அரிதென்னும் நோக்கத்தால்,
ழுஅடலைவர்ழு என்றான்.  அடல் – தேகபலம், புத்திபலம் என்பன:
துரியோதனன்பேச்சு ஆகையால், இங்குத் தெய்வ பலத்தைக் கொள்ளலாகாது.
மனிதர்க்கு ஒருவருடம் தேவர்க்கு ஒரு நாளாதலால், ழுசுரர்க்கு உள்ளநாள்ழு
எனப்பட்டது.  முன்பு துரியோதனாதியர் தவணைகூறும்பொழுது,
பதின்மூன்றுவருடமென்று சொன்னால் கேட்பதற்கு பயங்கரமாயிருக்குமென்று
கருதி அங்ஙனங் கூறாமல் அதனைமறைத்து மேல்நோக்கில் எளிதென்று
தோன்றுமாறு ழுதேவமானத்தாற் பதின்மூன்றுநாள்ழு என்று
சுருக்கமாகக்கூறியமைபற்றி, இங்கும் அங்ஙனமேகூறப்பட்டது;  பாண்டவர்கள்
தேவாமிசமாதல்பற்றியும், அவர்கட்கு அங்ஙனம் வரையறைகூறுதல் சாலும்.
ழுஈராறும் ஒன்றும் சுரர்க்குள்ள நாள் சென்றழு என்றது –
வனவாசஞ்செய்யவேண்டிய பன்னிரண்டாண்டுகளும், அஞ்ஞாதவாசஞ்
செய்யவேண்டிய ஓராண்டிற் பல நாள்களும் கழிந்தன வென்றபடி.
வனவாசகாலம் ழுஈராறும்ழு என்றும், அஜ்ஞாதவாச காலம் ஒன்றும் என்றும்
பகுத்துக் கூறப்பட்டன.  கடத்தற்கு அருமையில் அப்பன்னிரண்டுநாளுக்கு
ஈடாகும் இவ்வொருநாளேயென்பது இங்குப் போதரும். இனி,
ஒன்றும்என்பதனை எண்ணாகக் கொள்ளாது பெயரெச்சமாகக் கொண்டு,
ழுதேவர்க்குப்பொருந்திய நாட்கள் பன்னிரண்டுங் கழிந்தன; இனி,
ஒருநாளைக்குள்ளே கரந்து உறைபவரைக் கண்டறிமின்ழு என்றுமாம்.

      ஈராறு- பண்புத்தொகை.  சென்ற – முற்று.  ழுநம்முடன்ழு என்ற
தனித்தன்மைப்பன்மை, செருக்குப்பற்றி வந்தது.  முன்னர், அர் – சாரியை.
ஐவர் – தொகைக்குறிப்பு. ஓராயிரங்கோடி என்றது – மிகப்பலவாய
எண்ணிற்கு ஒன்று காட்டியவாறு.  ஒற்றாள் – தேயமெங்குஞ் சென்று கண்டு
ஆங்காங்கு நிகழ்வனவெல்லாம் ஒற்றியுணர்ந்து வருகின்ற ஆள்;
வினைத்தொகை: ஒற்றாகிய ஆள் எனக்கொண்டால்,
இருபெயரொட்டுப்பண்புத்தொகையாம்.  ஒற்று – ஒற்றன்;
உயர்திணைப்பொருள்தரும் அஃறிணைச் சொல்

‘காடு என்று, மலை என்று, நதி என்று, கடல் என்று,
கடல் ஆடைசூழ்
நாடு என்று, நகர் என்று, நாடாத திசை இல்லை,
நாள்தோறும், யாம்;-
தோடு என்று தாது என்று தெரியாது மது மாரி
சொரி மாலையாய்!-
நீடு என்று வலம் மேவும் அவனிக்குள் அவர் இல்லை;
நின் பாதமே!’4.-மீண்டுவந்த ஒற்றர் தாம்பாண்டவரைக்காணாமையைத்
தெரிவித்தல்.

 (ஓடிவந்த ஒற்றர்கள், துரியோதனனைநோக்கி), ழுதோடு என்று
தாது என்று – பூவிதழ்இதுவென்றும் பூந்தாது இதுவென்றும், தெரியாது –
பகுத்தறியவொண்ணாதபடி, மது மாரி சொரி – தேன்மழையை மிகுதியாகப்
பொழிகின்ற, மாலையாய் – (நந்தியாவட்ட மலர்) மாலையையுடையவனே!- காடு
என்று – காடுகளும், மலைஎன்று – மலைகளும், நதிஎன்று – ஆறுகளும்,
கடல்என்று – கடல்களும், கடல் ஆடை சூழ் நாடு என்று – கடலாகிய
சேலையினாற் சூழப்பட்ட தேசங்களும், நகர் என்று – பட்டணங்களும் ஆகிய
இவ்விடங்களில் [பூமி முழுவதும்], யாம்-, நாள்தோறும்-, நாடாத திசை இல்லை
– தேடிப்பாராத இடம் (சிறிதும்) இல்லை [முழுவதுந் தேடிவந்தோம்]; நீடு
என்று – நீண்ட சூரியன், வலம் மேவும் – சுற்றிவருகின்ற, அவனிக்குள் –
பூமியிலே, அவர் இல்லை – அப்பாண்டவர்கள் (எங்கும்) இல்லை; நின்பாதம்ஏ
– உன்திருவடிகளாணை,ழு (என்று கூறினார்); (எ – று.)

     ழுசூரியனொளி செல்லுமிடமெல்லாஞ் சுற்றித்தேடினோம், இல்லைழு
என்றார்.  தம் வார்த்தை வாய்மையே யென்றதற்கு, ழுநின்பாதத்தாணைழு
என்றார்; இவ்வாறு சேவகர்கள் எசமானனிடத்துக்கூறுவது இயல்பு.  ழுஆணைழு
என்பது, வருவித்து உரைக்கப்பட்டது.  ழுநின்னாணைழு என்ற பொருளில்
ழுநின்திருவடியாணைழு என்றது, தமது பணிவுதோன்றக்கூறும் உபசாரமொழி.
அழிவின்றி நெடுங்காலம் இருத்தலாலும்,  நெடுந்தூரஞ்சென்று விளங்கும்
ஆயிரங்கிரணங்களை யுடைமையாலும், உலகமுழுவதும் ஒளிர்வதாலும்,
ழுநீடென்றுழு எனப்பட்டது.  நீடு அவனி யெனவும் இயைக்கலாம்.  தாது –
மகரந்தப்பொடி, பூந்துகள்.

     முதலிரண்டடிகளிலுள்ள ழுஎன்றுழு என்னுஞ் சொல்லெல்லாம் –
எண்ணிடைச்சொல்.  பூமியைச் சூழ்ந்துள்ள கடலைப் பூமிதேவியுடுக்கும்
ஆடையென்றல், கவிசமயம்.  நான்காம்அடியில், என்று-சூரியன்:
(இயற்கையிலேயே) ஒளியையுடையது என்று காரணப்பொருள்படும்.  நதீ,
அவநி-வடசொற்கள்.  அவநி-பாதுகாக்கப்படுவதென்க

முன், ஒற்றை, இரு சங்கம், உடன் ஊத, எதிர் சென்று,
முனை வெல்லும் மா
மன் ஒற்றர் இது கூற, மந்தாகினீமைந்தன் மகன்
மைந்தனுக்கு,
‘உன் ஒற்றர் உணர்தற்கு வருமோ, அறன் காளை
உறை நாடு? கார்
மின் ஒற்று மழை உண்டு; விளைவு உண்டு’ எனத்
தேடும் விரகு ஓதினான்,5.-பாண்டவர்வசிக்கிற நாடுஇவ்விதமாயிருக்குமென்று
வீடுமன் கூறல்.

முன்-முன்னே, ஒற்றை-ஊதுகொம்புகளும், இரு சங்கம்-
(வலம்புரி இடம்புரி என்னும்) இருவகைச் சங்குகளும், உடன்ஊத-ஒருசேர
ஊதாநிற்க, எதிர் சென்று-(பகைவர்களை) எதிர்த்துப்போய், முனை வெல்லும்-
போரிற் சயிக்கின்ற, மா மன் – பெரிய அரசனான துரியோதனனது, ஒற்றர் –
வேவுகாரர்கள், இது கூற – இவ்வார்த்தையைச்சொல்ல,-மந்தாகினீ மைந்தன் –
கங்கையினது புத்திரரராகிய பீஷ்மர்,-மகன் மைந்தனுக்கு – (தமது)
பௌத்திரனாகிய துரியோதனனுக்கு,-ழுஅறன் காளை உறை நாடு –
தருமபுத்திரன் (மறைந்து) வசிக்கின்ற தேசம், உன் ஒற்றர் உணர்தற்கு வரும்ஓ
– உனது ஒற்றர்கள் அறியக்கூடுமோ? (அது) மின் ஒற்றும் கார் மழை உண்டு –
மின்னல்கள் பொருந்திய மேகங்கள் பெய்கின்ற (மிக்க) மழையுள்ளதாகும்;
விளைவு உண்டு – (நல்ல) விளைவுள்ளதாகும்,ழு என – என்று, தேடும் விரகு-
(பாண்டவர்களிருக்கின்ற இடத்தைத்) தேடிக் கண்டறியத்தக்க உபாயத்தை,
ஓதினான்-சொன்னார்

ஒற்றாளில் ஒருவன் பணிந்து, ‘என்றும், எவ் வாழ்வும்
உண்டாகியே,
வில்-தானை வெம் போர் விராடன்தன் வள நாடு
மேம்பட்டதால்;
“மல் தாழ் புயக் கீசகன்தானும் ஒரு வண்ண மகள் காரணத்து
இற்றான்” எனும் சொல்லும் உண்டு’ என்று, நிருபற்கு
எடுத்து ஓதினான்.6.-ஓர் ஒற்றன்விராடநகரத்துநிலைமையை யெடுத்துக்கூறுதல்.

(அப்பொழுது),-ஒற்று ஆளில் ஒருவன்-(தேடிவந்த)
ஒற்றர்களுள்ஒருவன்,-பணிந்து – வணங்கி,-ழுவில் தானை-வில்லையுடைய
சேனையையும்,வெம் போர்-(பகைவர்க்குக்) கொடிய போரையுமுடைய,
விராடன்தன் -விராடராசனது, வளம் நாடு ஏ – வளப்பம் பொருந்திய
மச்சதேசமொன்றே,என்றுஉம் – எந்தநாளைக் காட்டிலும், எ வாழ்வுஉம் உண்டு
ஆகி -எல்லாவாழ்வுகளும் உள்ளதாய், மேம்பட்டது -(மற்றையெல்லாநாடுகளினும்இப்பொழுது) மேன்மைப்பட்டிருக்கின்றது; மல் –
மற்போரில்வல்ல, தாழ்-(முழங்காலளவும்) நீண்டு தொங்குகின்ற, புயம் –
கைகளையுடைய, கீசகன்உம்-கீசகனென்பவனும், ஒரு வண்ணம்மகள் காரணத்து
– அலங்காரஞ்செய்கின்றஒரு (பணிப்) பெண்ணை விரும்பிய காரணத்தால்,
இற்றான் – இறந்தான், எனும்சொல்லும்-என்கிற ஒருவார்த்தையும், உண்டு –
உளதுழு, என்று-, நிருபற்கு-துரியோதனராஜனுக்கு, எடுத்து ஓதினான் – எடுத்துச்
சொன்னான்; (எ – று.)

மழைவளநிலவளத்தோடு அறம்தவறியகீசகன் கொல்லப்பட்டானென்று
சொல்லப்படுவதையும் ஓரொற்றன் துரியோதனனுக்குத் தெரிவித்தானென்க.
கீசகன் – விராடன் மனைவியாகிய சுதேஷ்ணையின் உடன் பிறந்தவன்.
கீசகனும்என்றஉம்மை – வீமசேனனைப்போன்ற பெருவீரராலன்றிப் பிறராற்
கொல்லமுடியாத அக்கீசகனது பலவாயிரம் யானைபலங்கொண்ட வலிமையின்
உயர்வைத் தெரிவித்து நின்றது.  வண்ணமகள் – ஒப்பனைசெய்பவள்.
ஒருவண்ணமகள் காரணத்துக் கீசகன் இற்றா னென்ற செய்தியை எடுத்துக்
கூறியது, அங்கு வீமன் இருத்தல்கூடு மென்று குறிப்பித்தற்கு.

     எவ்வாழ்வும், எகரவினா – எஞ்சாமைப்பொருளை யுணர்த்திற்று.
வாழ்வுகள் – ராஜாங்கம், மக்கள், சுற்றம், பொன், மணி, நெல், வாகனம்,
அடிமை என்னும் அஷ்டைசுவரியங்கள்; உம்மை-முற்றுப்

பொருளது. பிரிநிலையேகாரம், பிரித்துக் கூட்டப்பட்டது, வில் – வேல் வாள்
முதலிய மற்றை ஆயுதங்கட்கும் உபலக்ஷணம்.  வளம்-நிலவளம் நீர்வளம்
முதலியன.  கைகள் முழங்காலளவும் நீண்டிருத்தல், உத்தமவிலக்கணம்

‘வண் தார் விராடன்தன் வள நாடு தண்டால்
மலைந்தே, தொறுக்
கொண்டால், அவன் சூழலில் சூழும் வினயம்
குறிப்போர் இருப்பு
உண்டாகின், நிரை மீளும்; இன்று ஆகின், மீளாது; என்
உட்கோள் இது’ என்று,
எண் தாழும் இதயத்து நிருபற்கு உரைத்தான்-இரவி
மைந்தனே.7.-விராடநகரத்துநிரைகவர்வதன்மூலம் பாண்டவரைப்பற்றி
யறியலாமென்று கர்ணன்கூறுதல்.

(அதுகேட்டு),-இரவி மைந்தன் – சூரியபுத்திரனாகிய கர்ணன்,-
ழுவள் தார் விராடன்தன்-வளமான (செங்கழுநீர்) மாலையையுடைய
விராடராசனது, வளம் நாடு – வளப்பம்பொருந்தியநாட்டை, தண்டால் – (நமது)
சேனைகளைக்கொண்டு, மலைந்து-போர்செய்து, தொறு – (அவனது)
பசுக்கூட்டங்களை, கொண்டால்-(நாம்) கவர்ந்து ஓட்டிக்கொண்டு வந்தால்,
அவன் சூழலில் – அவனது நாட்டில், சூழும் வினயம் குறிப்போர் இருப்பு –
பொருந்திய வணக்கத்தைக் காட்டுகின்றவர்களான பாண்டவர்கள் அங்கு
இருத்தல், உண்டு ஆகில்-உள்ளதாகுமானால், நிரை மீளும் – (நாம் கவர்ந்த)
பசுக்கூட்டம் மீட்கப்படும்: இன்று ஆகில் – (அவர்களிருப்பு) இல்லையானால்,
மீளாது – (அது) மீட்கப்படாது; என் உள் கோள் இது – என் மனத்திற்
பொருந்திய எண்ணம் இதுவாகும்,ழு என்று-,  தாழும் எண் இதயத்து நிருபற்கு
உரைத்தான் – இழிந்த எண்ணங்களுள்ள மனத்தையுடைய
துரியோதனராசனுக்குச் சொன்னான்; (எ – று.)

     மகாபலசாலியாய்ச் சேனைத்தலைவனாயிருந்த கீசகனும் தம்பிமாரோடு
இறந்துபோனதனால், அங்குப் பாண்டவர்களிருந்தாலொழிய நிரை மீளாதென்று,
பாண்டவர்கள் அங்கு இருத்தலையும் இராமையையுங் கண்டுபிடித்தற்கு
உபாயங்கூறினான் கர்ணனென்க.

     தார்க்கு வண்மை – மிக்க வாசனை வீசுதலும், தேன் மழைபொழிதலும்.
சூழும் வினயங்குறிப்போர் – ஆராய்ந்துசெய்யுந்தந்திரத்தைக்
கருதியுள்ளவரெனினுமாம்; இனி, சூழும் வில்நயம் குறிப்போர் எனப்பிரித்து –
வளைந்த வில்லின் வித்தையில் வல்லவர் எனினும்பொருந்தும்.  எண்தாழும்
இதயம் – ஆலோசனையில் அழுந்திக்கிடக்கின்ற மனமுமாம்.  கோள்-
கொள்ளப்பட்டது; எண்ணம்.  இரவி = ரவி

தக்கோர் தகும் சொற்கள் கேளாத துரியோதனன்
சொல்லினால்,
மிக்கோர் மிலைச்சும் செழுந் தாம விறல் வெட்சி
மிலை தோளினான்
திக்கு ஓதை எழ விம்ம முரசங்கள், அரசு ஆன
திரிகத்தர் கோன்
அக்ரோணி படையோடு போய், ஆன் அடித்தான்,
அவன் சார்பிலே,8.-விராடநகரில்தெற்குப்பக்கத்து நிரைகோடல்.

 தக்கோர் தகும் சொற்கள் கேளாத – பெரியோர்களது தக்க
நல்வார்த்தைகளைக் கேட்டு அவற்றின்படி நடத்தலில்லாத, துரியோதனன்-,
சொல்லினான் – கட்டளையிட்டான்; (அதனால்), அரசு ஆன திரிகர்த்தர்
கோன் – (பல அரசர்க்குத்) தலைவனான திரிகர்த்தராஜன்,-மிக்கோர்
மிலைச்சும்-மேலான போர்வீரர் அணிகின்ற, செழு – செழுமையான, விறல் –
வலிமையைக் குறிக்கின்ற, வெட்சி தாமம் – வெட்சிப் பூமாலையை, மிலை –
தரித்த, தோளினான் – தோள்களையுடையவனாய்,-திக்கு ஓதை எழ –
திக்குக்களிலெல்லாம் எதிரொலி உண்டாம்படி, முரசங்கள் விம்ம – பேரிகை
வாத்தியங்கள் முழங்க, அக்குரோணி படையோடு – ஓர் அகௌஹிணி
சேனையுடனே, அவன் சார்பிலே – அவ்விராடனது நாட்டினிடத்தே, (தெற்குப்
பக்கத்தே), போய்-, ஆன் அடித்தான் – பசுக்கூட்டங்களைக்
கவர்ந்தோட்டினான்; (எ – று.)

     துரியோதநன் – (பகைவர்க்குக்) கொடிய போரையுடையவன்.
துரியோதனன் சொல்லினான் –  துரியோதனனதுகட்டளைச்
சொல்லினாலென்றுமாம். வெட்சியென்னும் மரத்தின்பெயர், அதன்மலர்க்கு
முதலாகுபெயராம்.வெட்சி – பகைநிரைகவரச்செல்லும் வீரர் அணியும் மாலை.
இமயமலைக்கும்விந்தியமலைக்கும் இடையி லுள்ள தான
ஆர்யாவர்த்தமென்னும் புண்யபூமிக்குவடமேற்றிசையிலுள்ளது திரிகர்த்தேய
மென்பர்.  இத்தேசத்து அரசன் -சுசர்மா.  அக்குரோணி – வடமொழிச்
சிதைவு; அது – தேர் இருபத்தோராயிரத்தெண்ணூற்றெழுபது, யானை
இருபத்தோராயிரத் தெண்ணூற்றெழுபது, குதிரைஅறுபத்தையாயிரத்து
நூற்றுப்பத்து, காலாள் லக்ஷத்தொன்பதினாயிரத்துமுந்நூற்றைம்பது; ஆக –
இரண்டு லக்ஷத்துப் பதினெண்ணாயிரத்தெழுநூறுகொண்டது.

கரை காண அரிதான கடல் ஒத்த வெஞ் சேனை
கை சூழவும்,
தரை காவல் பெறு தோளின் ஆண்மைப் பெருங் கேளிர்
தற் சூழவும்,
விரை காலும் மலர் ஓடை எனுமாறு இருக்கும்
விராடற்கு, நல்
நிரை காவல் நின்றோர் பணிந்து, ஓதினார், தெவ்வர்
நிரை கொண்டதே.9.-பகைவர் நிரைகவர்ந்ததைநிரைகாவலர் விராடனுக்குக்
கூறுதல்.

 (உடனே),-நல் நிரை – நல்ல பசுக்கூட்டங்களுக்கு, காவல் –
காவலாக, நின்றோர் – நின்ற இடையர்கள்,-கரை காணஅரிது ஆன-
கரையைக்காணுவதற்கு அரியதாகிய, கடல் – கடலை.  ஒத்த-போன்ற, வெம்
சேனை – கொடிய சேனை, கை சூழஉம் – (தன் பக்கங்களிற்) சூழ்ந்து
நிற்கவும், தரை காவல் பெறு – பூமியைக் காக்குந்தொழிலைப் பெற்ற, தோளின்
ஆண்மை – புஜபலத்தாலாகிய வீரத்தன்மையையுடைய, பெருங்கேளிர் – சிறந்த
உறவினர்களும்
 சினேகிதர்களும், தன் சூழஉம் – தன்னைச்சூழ்ந்திருக்கவும்,
விரைகாலும் மலர் ஓடை எனும் ஆறு – வாசனை வீசுகின்ற மலர்களையுடைய
நீரோடை யென்று உவமைகூறும்படி, இருக்கும்-(தெளிவும்
குளிர்ச்சியுமுடையவனாய்) அரசுவீற்றிருக்கின்ற, விராடற்கு – விராடராஜனுக்கு,-
தெவ்வர் – பகைவர்கள் [திரிகர்த்தன் முதலியோர்], நிரை கொண்டது –
பசுக்களைக் கவர்ந்துசென்ற செய்தியை, பணிந்து ஓதினார் – வணங்கிச்
சொன்னார்கள்; (எ – று.)

     குறைகூறும் குடிகள்பால் முகமலர்ச்சியையும் தண்ணளியையும்
மாறாமலுடையவ னென்பது, ழுவிரைகாலுமலரோடையெனுமாறிருக்கும் விராடன்ழு
என்பதன் கருத்து; உருவகவணி. ழுமலரோடைழு என்றதனால்
அவனதுசேனையுங்கேளிரும் அவனைப் பிரியாதுநின்று அவனுக்கு
நேரும்இன்ப துன்பங்களை அவனோடொக்கஅனுபவிக்கும்
பேரன்புடையவரென்பதும் தோன்றும்.  ழுஇரட்டுறமொழிதல்ழு என்ற உத்தியால்,
ழுகேளிர்ழு என்ற சொல்லுக்கு – உறவினரும் நண்பரு மென இருபொருள்
ஒருங்கு கொள்ளப்பட்டது.  சேனைக்குக் கடல்ஒப்பு – மிக்கபரப்புக்கும்
ஆரவாரத்துக்கும், அச்சந் தருதற்கும், அணியணியாக வருதற்கு மென்க.  கை
– பக்கம்; இனி, உபசர்க்கமாகவுங் கொள்ளலாம்.  தமது புயவலியாலும்
மனவலியாலும் பகைவரைவென்று அரசாள்பவ ரென்பது விளங்க, ழுதரைகாவல்
பெறு தோளினாண்மைப் பெருங்கேளிர்ழு என்றார்.  ஓடை – நீரோடுமிடம்.

செரு மிக்க படையோடு சதியாக, மதியாது,
திரிகத்தர் கோன்,
நிருமிக்க ஒட்டாத என் பூமிதனில் வந்து நிரை கொள்வதே!
பருமித்த மதயானை, தேர், வாசி, ஆள், இன்ன பண்
செய்யும்’ என்று
உரும் மிக்க முகில்போல் உரைத்தான்-ஒர் அக்ரோணி
உள தானையான்10.-அதுகேட்ட விராடன்சேனையைப் போர்க்குச்
சித்தப்படுத்துதல்.

(அதுகேட்டு),-ஒர் அக்குரோணி உள தானையான் – ஓர்
அகௌஹிணியென்னுந் தொகையுள்ள சேனையை யுடையவனான
விராடராஜன்,- (தன்சேனைத்தலைவர்களைநோக்கி), ழுதிரிகத்தர்கோன்-
திரிகர்த்தராசன், மதியாது-(நம்மிடத்துச் சிறிதும்) மதிப்புக் கொள்ளாமல்
[மிகவும் அலக்ஷ்யமாய்], செரு மிக்க படையோடு-போர்த்தொழிலில் மிக்க
(தனது) சேனையுடனே, நிருமிக்க ஒட்டாத என் பூமிதனில்-(வேறுயாவரும்)
நியமிக்கவொண்ணாத (காவலையுடைய) எனது நாட்டில், சதி ஆக-
வஞ்சனையாக, வந்து-, நிரைகொள்வதுஏ – பசுக்களைக் கவர்ந்து கொண்டு
போவதா? (அந்நிரையை மீட்குமாறு நீங்கள்), பரு மிக்க மதம் யானை –
பருத்துள்ளவையும் மிக்க மதத்தையுடையவையுமான யானைகளும், தேர் –
தேர்களும் வாசி-குதிரைகளும், ஆள்-காலாள்களும், இன்ன-என்னும்
இச்சதுரங்கசேனைகளையும், பண் செய்யும்-அணிவகுத்துப் போர்க்குச்
சித்தஞ்செய்யுங்கள்,ழு என்று-, உரும் மிக்க முகில்போல்-இடிமிகுந்தமேகம்போல,
உரைத்தான் – சொன்னான்; (எ – று.)

      இதுமுதற் பதினான்கு கவிகள் – தென்புறத்து நிரைமீட்சி கூறுகின்றார்.
தான் அறியாதபடி திரிகர்த்தராஜன் வந்து பசுக்களைக் கவர்ந்தமையால்
சினந்து, பெருங்குரலுடன், தன் சதுரங்கசேனைகளைப் போர்க்குச்
சித்தஞ்செய்யுமாறு விராடராஜன் கூறினனென்க.  நிருமிக்க வொட்டாத பூமி –
(எவராலும் இங்ஙனம் பிற இடங்களில்) உண்டாக்கமுடியாத (வளங்களையுடைய)
நாடுஎன்றுமாம்.

     பருமிக்க-பருமை மிகுந்தவென்றுமாம்; வியங்கோள் வினைமுற்றாகக்
கொண்டு, மதயானைகளை அலங்கரிக்க வென்றலுமாம்; பருமம் –
யானைமேற்றவிசு: பருமித்தல்-தவிசிட்டு அலங்கரித்தல்.  பண்செய்தல்-
அலங்காரஞ் செய்தலுமாம்.  ழுஆள்ழு என்ற சொல் உயர்திணையாயினும்,
யானை தேர் வாசி என்ற மூன்று அஃறிணைச்சொற்களோடு சேர்த்து
நிறுத்தப்பட்டதனால், மிகுதிபற்றி ழுஇன்னழு என்ற அஃறிணைமுடிபைக்
கொண்டது.  இனி, ழுஆள்ழு என்றது – காலாட்சேனையையுணர்த்து
வதெனக்கொண்டு அதனை அஃறிணையின்பாற்படுத்துதலு மொன்று

ஒண் தூளி வானம் புதைக்க, பல் இயசாலம் ஒலிபட்டிட,
திண் தூசி அணியாக, நிரை கொண்ட வெஞ் சேனை
சென்று எய்தினான்,
ஞெண்டு ஊரும் வயல்தோறும், வளை நித்திலம் சிந்தி,
நிலவு ஊரவே
வண்டு ஊத மலரும் தடம் பொய்கை சூழ் மச்ச வள நாடனே.11.-விராடன் தன்சேனையுடனேதிரிகர்த்தன்சேனையை
நெருங்குதல்.

ஞெண்டு ஊரும் – (நீர்வளத்தால்) நண்டுகள் ஊர்ந்து
செல்லப்பெற்ற, வயல்தோறும் – கழனிகளிலெல்லாம், வளை – சங்குகள்,
நித்திலம் சிந்தி – முத்துக்களைப் பெற்றதனால், நிலஊரவே –
சந்திரகாந்திபோன்ற வெள்ளொளி பரவவே, (அதனால்), வண்டு ஊத-வண்டுகள்
வந்து ஊதும்படி, மலரும்-(அரும்புகள்) மலரப்பெற்ற, தட பொய்கை – பெரிய
தடாகங்கள், சூழ் – சூழ்ந்த, மச்சம் வளம் நாடன் – வளமுள்ள மச்சமென்னும்
நாட்டையுடையவனான விராடராஜன்,-ஒள் தூளி-(சேனைகள் செல்வதனால்
எழுப்பப்பட்ட) ஒள்ளிய [மிகுதியான] புழுதி, வானம் புதைக்க-ஆகாயத்தை
மறைக்கவும், பல் இயம் சாலம் ஒலி பட்டிட – பலவகைவாத்தியங்களின்
கூட்டம் ஒலிசெய்யவும், திண் தூசி அணி ஆக – வலியசேனை
அணிவகுக்கப்பட்டுச் செல்லவும், சென்று – போய், நிரைகொண்ட வெம்
சேனை – பசுக்களைக் கொண்டுபோன கொடிய திரிகர்த்தன் சேனையை,
[முறையே முன்] எய்தினான் – சந்தித்தான்;

     கொட்டுவனவும் ஊதுவனவும் எழுப்புவனவுமாகிய தோற்கருவி
துளைக்கருவி நரப்புக்கருவி கஞ்சக்கருவி யென்பன வெல்லாம் அடங்க,
ழுபல்லியசாலம்ழு என்றார்.  தூசி – முந்துற்றுப் பொருபடை; முன்னணிச்சேனை.
வயல்களிற் சங்குகளும் முத்துக்களும் வீசுகின்ற வெண்மையான காந்தியை
நிலா என்று மயங்கி ஆம்பல் முதலிய சில நீர்ப்பூக்கள் மலரு மென
மயக்கவணியாகக்கருத்துக்கொள்க.  சங்கு 
முதலியவற்றினின்று முத்துப்பிறக்கு
மென்பதை, ழுதந்தி வராகமருப் பிப்பி பூகந்தழைகதலி, நந்து சஞ்சல மீன்றலை
கொக்குநளினமின்னார், கந்தரஞ்சாலி கழை கன்ன லாவின் பல் கட்செவிகா,
ரிந்துவுடும்பு கரா முத்தமீனு மிருபதுமேழு என்பதனாலும் அறிக.
நிலவளத்துக்குக் காரணமான நீர்வளமிகுதியால் எங்கும் பலவகை மீன்கள்
மலிந்திருத்தல் பற்றி, மத்ஸ்யதேச மென்று அந்நாட்டுக்குப் பெயர்வந்தது
போலும்; அதற்குஏற்பவே, பின்னிரண்டடியில் நீர்வளச்சிறப்பே கூறப்பட்டது.

நண்டுஎன்பதன் போலியாகிய ஞண்டு என்பது – இங்கு மோனைப்
பொருத்தம்நோக்கி ஞெண்டெனத் திரிந்து வந்தது.  பொய்கை-மானிடராக்காத
நீர்நிலை; ஸரஸ்.  மச்சம்=மத்ஸ்யம்.  மலரும் பொய்கை – பெயரெச்சம்,
இடப்பெயர்கொண்டது.  வளை – வலம்புரியாகவாயினும் இடம்புரியாகவாயினும்
உள்ளே வளைவுபெற்றுள்ளதென ஏதுப்பெயர்.  

உள் பேடியாய் வைகும் விற் காளை அல்லாத
ஒரு நால்வரும்,
நட்பு ஏறு பூபாலனுடன் ஏகினார், போர் நலம் காணவே;
கொட்பு ஏறி நிரை கொண்ட வெஞ் சேனையும், செல்
கொடுஞ் சேனையும்,
பெட்பு ஏறி, அமர் செய்ய, முன்னிட்ட குரு சேனை பின்னிட்டதே.12,-அருச்சுனனொழிந்தபாண்டவர்நால்வரும் விராடனுடன்
செல்லுதலும்,திரிகர்த்தன்சேனை புறங்கொடுத்தலும்.

(அப்பொழுது),-பேடி ஆய் – (ப்ருஹந்நளையென்னும்)
நபும்ஸகவடிவமாய், உள் – உள்ளே [உத்தரையினது கன்னிமாடத்தில்], வைகும்
– தங்கியிருக்கிற, வில் காளை அல்லாத – விற்போரில்வல்ல அருச்சுன
னொழிந்த, ஒரு நால்வர்உம் – (மற்றையுதிட்டிரன் பீமன் நகுலன் சகதேவன்
என்னும்) நான்குபேரும், போர் நலம் காண – யுத்தத்தின் சிறப்பைப்
பார்ப்பதற்காக, நட்பு ஏறு பூபாலனுடன் – (தம்மிடத்துச்) சினேகம் மிகுந்த
விராடராசனுடனே, ஏகினார் – சென்றார்கள்; (பின்பு),-கொட்பு ஏறி –
வளைத்துக்கொண்டு, நிரை கொண்ட – பசுக்களைக் கவர்ந்த, வெம்சேனைஉம்-
கொடிய (திரிகர்த்த) சேனையும், செல் கொடுஞ் சேனைஉம்-(அதனை அழித்த
நிரைமீட்கச்) சென்ற பயங்கரமான (விராட) சேனையும், பெட்பு ஏறி – (தாம்
தாம் வெற்றிபெறவேண்டுமென்னும்) விருப்பம் மிகுந்து, அமர் செய்ய –
(ஒன்றோடொன்று) போர்செய்யாநிற்க, -.(அப்போரில்),-முன்னிட்ட குரு சேனை
– முன்னேவந்த கௌரவசேனை, பின்னிட்டது – முதுகுகாட்டி ஓடியது
[தோற்றது]; (எ – று.)

     குருஎன்பவன், சந்திரவமிசத்துப் பேர்பெற்ற ஓர் அரசன்; இவனால்
அக்குலம் குருகுலமென்றும், அந்நாடு குருக்ஷேத்திரமென்றும், அச்சந்ததியார்
கௌரவரென்றும் பெயர்பெற்றவாறு காண்க.  இங்கு, அவன் வமிசத்துத்
தோன்றிய துரியோதனாதியரது சேனைழுகுருசேனைழு எனப்பட்டது.  ழுமுன்னிட்ட
குருசேனை பின்னிட்டதுழு – தொடைமுரண்.  உள் வைகும் என இயையும்.
பேடி – பெண்ணுறுப்பு மிக்கு ஆணுறுப்புக் குறைந்த நபும்ஸகம்;
ஆணுறுப்புமிக்குப் பெண்ணுறுப்புக் குறைந்த நபும்சகம், அலியெனப்படும்;
ழுபேடுழு என்பது, இவ்விருவகைக்கும் பொதுப்பெயர்.  கொட்புஏறி – மாறுபாடு
மிக்கு எனினுமாம்.  பூபாலன் – பூமியைக்காப்பவன்; வடசொல்.  பெட்பேறுதல்
– நான்முன்னே நான் முன்னேயென்று போர்விருப்பங்கொண்டு புறப்படுதல்;
ழுபோரெனிற்புகலும் புனைகழன்மறவர்ழு என்றார் பிறரும்.

மெய்க் கொண்ட புண்ணோடு தன் சேனை நில்லாமல்
வென்னிட்டபின்
கைக் கொண்ட நிரையைக் கடத்தி, பொலம்
பொன்-கழல் காலினான்,
செய்க்கொண்ட கழுநீர் அலங்கல் கரந்தைத் திருத்தாமன்மேல்
மைக் கொண்டல் என வில் வளைத்து, ஆறு-பத்து அம்பு
மழை சிந்தினான்.13.-திரிகர்த்தராசன்விராடராசன்மேல் அம்புமழைபொழிதல்.

பொலம் பொன் கழல் காலினான் – அழகிய பொன்மயமான
வீரக்கழலைத் தரித்த காலையுடையவனான திரிகர்த்தன்,-தன்சேனை-, மெய்
கொண்ட புண்ணோடு – உடம்புமுழுவதும் ஆயுதம்பட்ட விரணத்துடனே,
நில்லாமல் – எதிர்நிற்கமாட்டாமல், வென்இட்டபின் – முதுகு கொடுத்து
ஓடியபின்பு, – கைக்கொண்ட நிரையை – (தான்) கவர்ந்து கொண்ட
பசுக்கூட்டத்தை, கடத்தி – (அப்பாற்) செல்லவிட்டு,-மை கொண்டல் என –
கரியமேகம்போல, வில் வளைத்து-வில்லை வளைத்து (நாணேற்றி),-செய்
கொண்ட கழுநீர் அலங்கல் – வயல்களிலே தோன்றிய செங்கழுநீர்
மலர்களாலாகிய மாலையையும், திரு கரந்தை தாமன்மேல் – அழகிய கரந்தைப்
பூமாலையையுமுடையவனான விராடன்மேல், ஆறு பத்து அம்பு – அறுபது
பாணங்களை, மழை சிந்தினான் – மழைபோலப் பொழிந்தான்; (எ – று.)

     அம்புதொடுத்தற்கு மழைபொழிதலும், வில்லுக்கு இந்திர தனுசும்,
திரிகர்த்தனுக்கு மேகமும் உவமை.  செங்கழுநீர்மாலை – விராடனுக்கு உரிய
அடையாளப்பூமாலை.  கரந்தை – ஓர்செடி; இப்பூமாலை, பகைவர்கவர்ந்து
ஓட்டியநிரையை மீட்பவர் தரிப்பது.  புண்ணோடு – மூன்றனுருபு,
அடைமொழிப்பொருளது.  மைக்கொண்டல் – காளமேகம்.  கொண்டல் –
நீர்கொண்டமேகம்.  ’வயலை ழுசெய்ழு என்பது திசைச்சொல்.  கழனிகளிற்
செங்கழுநீர் மலர்கின்ற தென நீர்வளச்சிறப்புக் கூறியவாறாம்.   

மா மச்ச உடல் புன் புலால் மாறி, வண் காவி
மணம் நாறும் அக்
கோ மச்ச வள நாடனும், கொற்ற வரி வில் குனித்து,
ஐந்து செந்
தாமச் சரம் கொண்டு, தேர், பாகு, கொடி, வாசி
தனுவும், துணித்து,
ஆம் அச்சம் உற, மற்று அவன் 14.-விராடன்அம்புசெலுத்தித் திரிகர்த்தனைத் தேர்முதலியன
அழித்தல்.

மா மச்சம் உடல் – பெரிய மீன்களின் உடம்பு, புல்புலால்
மாறி- (இயல்பிலே அமைந்த) இழிவான புலால்நாற்றம் நீங்கி, வள் காவி
மணம்நாறும் – வளப்பமுள்ள நீலோற்பலமலர்களின் சேர்க்கையால்
அவ்வாசனை வீசப்பெற்ற, அ கோ மச்சம் வளம் நாடன்உம்-அந்தச் சிறந்த
வளம் மிக்க மச்சதேசத்தின் அரசனாகிய விராடனும்,-கொற்றம் வரி வில்
குனித்து-வெற்றியைத் தரவல்ல கட்டமைந்த வில்லை வளைத்து, செம் தாமம்
ஐந்து சரம் கொண்டு – (பகைவர் இரத்தந் தோய்தலாற்) சிவந்த ஒளியையுடைய
ஐந்து அம்புகளை எய்து அவற்றால், தேர் பாகு கொடி வாசி தனுஉம்
துணித்து-(திரிகர்த்தராஜனுடைய) தேர் சாரதி துவசம் தேர்க் குதிரைகள் வில்
என்னும் ஐந்தையும் துண்டுபடுத்தி,-மற்று -பின்னும், ஆம் அச்சம் உற – மிக்க
பயம் உண்டாம்படி, அவன் கோலம் மார்பத்துஉம் – அவனது அழகிய
மார்பிலும், அம்பு ஏவினான் – வேறு பாணங்களைப் பிரயோகித்தான்; (எ -று.)

     திரிகர்த்தன் பொழிந்த பாணவர்ஷத்திற்கு மாறாக, விராடன் அம்பெய்து
அவனது தேர் முதலியவற்றை யழித்தன னென்க. நீலோற்பலமலர்கள் நிறைந்த
வயல்களி லுலாவுகின்ற மீன்கள் அம்மலர்களின் சேர்க்கையால் தமது
புலால்நாற்றம் நீங்கி, ழுபூவோடுகூடி நாரும் மணம் பெற்றதுழு என்றாற்போல
அம்மலர்களின் மணம் நாறுமென்றது, பிறிதின்குணம்பெறலணி. தாமச்சரம்
– வரிசையாய் ஒரு தொடையிலே எய்தசரங்களென்றுமாம்: பாகு=பாகன்:
ஆகுபெயர்.      

தனைத் தேர் அழித்தோனை, நிரை கொண்டு போகின்ற
தனு வீரனும்,
துனைத் தேரும் வேறு ஒன்று மேல் கொண்டு, நால்-ஐந்து
தொடை ஏவியே,
வினைத் தேரும், வய மாவும், வெம் பாகும், விழ எய்து,
வில் நாணினால்,
முனைத் தேர் முகத்தில் பிணித்தான், அவன் சேனை
முகம் மாறவே.15.-திரிகர்த்தன்விராடனைத் தேரிற் கட்டுதல்.

நிரை கொண்டு போகின்ற – பசுக்களைக் கவர்ந்துகொண்டு
போகின்ற, தனு வீரன்உம் – விற்போரில்வல்ல வீரனாகிய திரிகர்த்தனும், துனை
வேறு ஒன்று தேரும் மேல்கொண்டு-விரைந்து செல்லுதலையுடைய
வேறொருதேரில் ஏறிக்கொண்டு,-(விராடனது) வினை தேர்உம் – போர்த்
தொழிலுக்கு உரிய இரதமும், (அத்தேரிற்பூட்டிய), வயம் மாஉம் –
வெற்றியையுடைய குதிரைகளும், வெம் பாகுஉம் – கொடிய [வல்லமையுள்ள]
சாரதியும், விழ – கீழே விழுந்து அழியும்படி, நால்ஐந்து தொடை ஏவி எய்து –
இருபது அம்புகளை வில்லில்தொடுத்துப் பிரயோகித்து,-தனை தேர்
அழித்தோனை – (கீழ்த்) தன்னைத் தேரழியும்படி செய்தவனான
அவ்விராடராசனை, அவன் சேனை முகம் மாற – அவனதுசேனை
முகம்திரும்பும்படி [முதுகுகாட்டும்படி], வில்நாணினால் – வில்லினது
நாணியினால், முனை – போர்க்களத்தில், தேர் முகத்தில் – (தனது) தேரின்
முன்னிடத்தில் [தேர்க்காலில்], பிணித்தான் – கட்டினான்; (எ – று.)

     நாலைந்து தொடை – சிலதொடை என்றலுமாம், முகம் மாற – முகம்
ஒளியிழக்க என்றலுமாம்.  வினைத் தேர் – சித்திரவேலைத்திறமமைந்த
தேருமாம்.       

திண் திறல் சிலை விராடனைத் தேரொடும் பிணித்து,
கொண்டு போதலும், குருகுலக் கோமக முனிவன்
கண்டு, தன் திருத் தம்பியைக் கடைக்கணித்தருள,
மண்டு தீ என எழுந்தனன், மடைத்தொழில் வல்லான்.16.-கங்கபட்டனது தூண்டுதலாற்பலாயனன் போர்க்கு
எழுதல்.

 (இவ்வாறு திரிகர்த்தராஜன்), திண் திறல் சிலை – மிக்க
வலிமையுள்ள வில்லையுடைய, விராடனை-, தேரொடுஉம் பிணித்து-(தன்)
தேருடன் சேர்த்துக்கட்டி, கொண்டுபோதலும் – கொண்டுபோனவளவில், -குரு
குலம் கோமகன் முனிவன் – (கங்கபட்டனென்னும் பெயரோடு)
முனிவேடங்கொண்டுகரந்துறைகின்ற குருகுலத்தில்தோன்றிய சிறந்த அரசனான
யுதிஷ்டிரன், கண்டு – (அதனைப்) பார்த்து, தன் திரு தம்பியை – தனது சிறந்த
தம்பியாகிய (பலாயனனென்னும்பெயர்பூண்ட) பீமசேனனை, கடைக் கணித்தருள
– அருளொடுகடைக்கண்ணாற் பார்த்து (விராடனை விடுவிக்கவேண்டுமென்று)
குறிப்பிக்க,-மடை தொழில் வல்லான் – உணவு சமைத்தற்றொழிலில்
வல்லவனான அப்பலாயனன், மண்டு தீ என – மூண்டெரிகின்ற
நெருப்புப்போல, எழுந்தனன்-(போர்செய்தற்குக்) கொதித்தெழுந்தான்; (எ – று.)

     இதனால் பாண்டவரது நன்றியறிவுடைமையும், தமையனார் கட்டளையை
எதிர்பார்த்து அதனைக்கடவாதுநிற்கும் அத்தம்பியரது தன்மையும் நன்கு
விளங்கும்.  கோமகமுனிவன் – ராஜரிஷி யென்றவாறுமாம்.  திரு-
தைரியலட்சுமியுமாம்.  மடைத்தொழில்-உணவுக்கு உரியதொழில்; எனவே,
சமையலாயிற்று.

      இதுமுதல் ஐம்பத்துநான்கு கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும்
ஈற்றுச்சீரும் மாச்சீர்களும், நடுச்சீர்மூன்றும் விளச்சீர்களுமாகிய நெடிலடி
நான்குகொண்ட கலிநிலைத்துறைகள்.    

உகத்தின் ஈறுதோறு, ஓதையோடு ஊதையாம் தாதை,
நகத்தினால் உயர் நகங்களை நருக்குமா போல,
திகத்த பூபதி தேரினை வேறு ஒரு தேரால்
தகர்த்து, வில்லொடும் அகப்படுத்தினன், அவன்தனையும்.17.-பலாயனன் பொருதுதிரிகர்த்தனைப் பற்றுதல்.

(எழுந்த பலாயனன்),-தாதை ஆம் ஊதை – (தனது)
தந்தையாகிய வாயு, உகத்தின் ஈறு தோறு – யுகமுடிவு [கற்பாந்தகாலந்]தோறும்,
ஓதையோடு – பேரொலியுடனே, நகத்தினால் –
 (பெரிய)மலைகளால், உயர்
நகங்களை – உயர்ந்த மலைகளை, நறுக்கும் ஆ போல-நொருக்கும்
விதம்போல,-திகத்த பூபதி-திரிகர்த்த தேசத்தரசனது, தேரினை-, வேறு ஒரு
தேரால்-, தகர்த்து – நொருக்கி, அவன் தனைஉம் – அத்திரிகர்த்தனையும்,
வில்லொடுஉம் – வில்லுடனே, அகப்படுத்தினன் – அகப்படச்செய்தான்
[வில்லுங்கையுமாய்த் திரிகர்த்தனைப் பிடித்துக்கொண்டானென்றபடி];

     வீமனுக்கு வாயுவும், தேர்க்கு மலையும் உவமை.  தந்தையே
மைந்தனாகின்றா னென்னும் வேதவழக்குப்பற்றி வீமனுக்கு வாயுவை உவமை
கூறினார்.  “தந்தையரொப்பர்மக்கள்” என்றார் தொல்காப்பியனாரும்.
கற்பாந்தகாலத்திற் பெருங்காற்று எழுந்து வீசி உலகங்களை யழிக்கு
மென்க.        

வீரியம் தனக்கு ஒருவனாம் விராடனை, ஒரு பொன்-
தேரில், ‘ஏறுக!’ என்று ஏற்றி, அத் தேரினில், திகத்தன்
சோரி பாய் தடந் தோள்களை வடத்தினால் துவக்கி,
மூரி ஏறு என மீண்டனன்; முறிந்தது, அச் சேனை.18.-பலாயனன் விராடனைமீட்டு அவனது தேர்க்காலில்
திரிகர்த்தனைக் கட்டுதல்.

(இவ்வாறு அகப்படுத்தி),-வீரியந்தனக்கு ஒருவன் ஆம்
விராடனை – வீரத்தன்மையில் ஒப்பில்லாதவனாகிய விராடராஜனை, ஒரு
பொன் தேரில் ஏறுக என்று – ழுபொன்மயமான வேறொரு தேரிலே ஏறுவாயாகழு
என்று சொல்லி, ஏற்றி – (கட்டவிழ்த்து) ஏறவிட்டு,-அ தேரினில் –
அந்தத்தேரிலே, திகத்தன்-திரிகர்த்தராசனது, சோரி பாய் தடதோள்களை –
இரத்தம் பெருகுகின்ற பெரிய புஜங்களை, வடத்தினால் துவக்கி – (விராடனைக்
கட்டிய) கயிற்றினாலேயே கட்டிவிட்டு,-மூரி ஏறு என – வலிமையுள்ள
விருஷபம் போல [கம்பீரமாக], மீண்டனன் – (பலாயனன்) திரும்பி வந்தான்;
(இதுசெய்யவே),-அ சேனை – அந்தத்திரிகர்த்தசேனை, முறிந்தது – அழிந்து
போயிற்று; (எ -று.)-ஏறுகென்று வியங்கோளீற்று அகரம் தொகுத்தல்

பொரு முகத்தினில் பகைவனைப் புயம் உறப் பிணித்து
வெரு முகத்தினில் வீடு கொள் வீமனை, விராடன்,
‘செருமுகத்தினில் எனக்கு நீ செய்த பேர் உதவிக்கு
ஒருமுகத்தினும் இல்லை, கைம்மாறு!’ என உரைத்தான்.19.-விராடன் பலாயனனுக்குநன்றியறிவு கூறல்.

(இவ்வாறு), பொரு முகத்தினில் – போர்செய்கின்ற களத்திலே,
பகைவனை – பகைவனாகிய திரிகர்த்தனை, புயம் உற பிணித்து –
தோள்களை  அழுந்தக் கட்டிவிட்டு, வெரு முகத்தினில் – (யாவரும்)
அஞ்சத்தக்க தோற்றத்துடனே, வீடு கொள் – திரும்பிவருகின்ற, வீமனை –
வீமசேனனை நோக்கி, விராடன்-, ‘செரு
முகத்தினில்- யுத்தகளத்தில், எனக்கு
நீ செய்த-, பேர்உதவிக்கு – இந்த மகோபகாரத்திற்கு, கைம்மாறு – (யான்
செய்யும்) பிரதியுபகாரம், ஒருமுகத்தினும் – ஒருவகையிலும், இல்லை-,’ என
உரைத்தான் – என்று சொன்னான்; (எ – று.)

     காலத்திற் செய்த நன்றி ஞாலத்தினும் மிகப்பெரிய தாதலால், நான் எந்த
உபகாரஞ் செய்தபோதிலும் நீ செய்த பெரிய உபகாரத்துக்கு ஈடாகாதென்றபடி.
பலாயனன் செய்த உபகாரம்-தன்னை மாற்றானிடத்தினின்று விடுவித்து,
மாற்றானைத் தன்தேர்க்காலிற்கட்டி அகப்படுத்தியது.  வீடுகொள் – தன்னை
விடுவித்த என்றுமாம்; (பகைவரைக்) கொல்லுகின்ற என்று
உரைப்பாருமுளர்.      

சேவலான் என, தயித்தியன் அனைய அத் திகத்தர்
காவலானை, அக் கால்மகன் பிணித்தமை கண்டு,
மா வலான் வய மாப் பதினாயிரம் வௌவ,
கோ வலான், அவன் கொண்ட கோ, மீளவும் கொண்டான்.20.-தாமக்கிரந்திதிரிகர்த்தசேனைக்கதிரைகளைக் கவர்தலும்,
தந்திரிபாலன் நிரைமீட்டலும்.

(அப்பொழுதும்),-அ கால் மகன் – வாயுபுத்திரனான அவ்
வீமசேனன், சேவலான் என – கோழிக்கொடியையுடையவனான முருகக்கடவுள்
போல, தயித்தியன் அனைய அ திகத்தர் காவலானை – அசுரனைப்போன்ற
அந்தத் திரிகர்த்ததேசத்தார்க்கரசனை, பிணித்தமை-கட்டியதை, கண்டு-, மா
வலான் – குதிரைசெலுத்துந்தொழிலில் வல்லவனாகிய (தாமக்கிரந்தியென்னும்
பெயர்பூண்ட) நகுலன், வயமா பதினாயிரம் வௌவ – (திரிகர்த்த சேனை
யிலுள்ள) வலிய பதினாயிரங்குதிரைகளைக் கவர்ந்துகொள்ள,-கோவலான் –
பசுக்களைப் பாதுகாக்குந்தொழிலில் வல்லவனாகிய (தந்திரிபால
னென்னும்பெயர் கொண்ட) சகதேவன், அவன் கொண்ட கோ-திரிகர்த்தன்
கொண்டுபோன பசுக்களை, மீளவும் கொண்டான் – திருப்பி (ஊருக்கு)
ஓட்டினான்; (எ – று.)

     இதனால் பாண்டவர்நால்வர் விராடனுக்கு உதவியமை கூறியவாறு. இது,
இப்படலத்துக்கு உயிர்நிலைச்செய்யுள்;நிரைமீட்டல் கூறுகின்றமையின்.
உரிமைபற்றி, மாவலான் மாவௌவக் கோவலான் கோக்கொண்டானென்க.
பலபராக்கிரமங்களிலும் அழகியவடிவிலும் தேவாமிசமாதலிலும்
எளிதிற்பகையழித்தலிலும் வீமனுக்கு முருகக்கடவுளும், அவனால் எளிதில்
அழிக்கப்படுதலிலும் நல்லோர்க்குப் பகையாய்க் கொடுந்தொழில் செய்தலிலும்
திரிகர்த்தனுக்கு அசுரனும் உவமையாவர்.  சேவல்-ஆண்பாற்பெயர்; இனி,
சேவலான்-மயில்வாகனமுடையவ னென்றுமாம்.  ஆசிரியர் தொல்காப்பியனார்
“மாயிருந்தூவி மயி லலங்கடையே” என்றாராயினும், உரைகாரர்
‘செவ்வேளூர்ந்த மயிற்காயின் அதுவும் நேரவும்படுமென்பது’ என்றமை காண்க.
முருகக்கடவுளால் வேல்கொண்டு பிளக்கப்பட்ட சூரபதுமனது உடம்பின் கூறு
இரண்டும் மயில்வடிவமும் கோழி
 வடிவமும்பெற்று அக்கடவுளருளால்
அப்பிரானுக்கு வாகனமும் கொடியுமாக அமைந்தன வென்று அறிக.   

துன்னலன்தனைத் தோள் உறத் துவக்கி முன் தந்த,
பன்னு நூல் மடைப் பலாயனற் கண்டு பாவித்தாங்கு,
அன்னகாலையில் அருக்கனைத் தேரொடும் அணைத்து,
மன்னு தன் திசை வன் சிறைப் படுத்தினன், வருணன்.21.-சூரியாத்தமன வருணனை.

) அன்ன காலையில் – அப்பொழுது, துன்னலன் தனை –
பகைவனாகிய திரிகர்த்தனை, தோள் உற துவக்கி-தோள்களை அழுந்தக்
கட்டி, முன் தந்த-எதிரிலே கொண்ர்ந்து கொடுத்த, பன்னும் – சிறப்பித்துச்
சொல்லப்படுகின்ற, நூல் மடை பலாயனன் – பாகசாஸ்திரத்தையுணர்ந்து
அதன்முறைப்படி சமைத்தலையுடைய பலாயனனென்னும் வீமனை, கண்டு-
பார்த்து,-வருணன்-, ஆங்கு பாவித்து – அவ்வாறே (தானுஞ்செய்வதாகப்)
பாவனைசெய்து, அருக்கனை-சூரியனை, தேரொடுஉம் அணைத்து-தேருடனே
சேர்த்துக் கொண்டுபோய், மன்னு தன் திசை-நிலைபெற்ற தனது [மேற்குத்]
திக்கில், வல் சிறை படுத்தினன் – வலிய காவலிலே அகப்படுத்தினான்; (எ- று.)

     மேற்கிற் சூரியன் இயல்பாக அஸ்தமித்து மண்டலத்தோடு மறைந்து
போனதை, வீமன்போல வருணன் சூரியனைத் தேரோடு சிறைப்படுத்தியதாகக்
குறித்தது – தற்குறிப்பேற்றவணி. புகழ் விளைக்குஞ் சிறந்ததொருசெயலை
ஒருவர்செய்யக் கண்டவிடத்து, அங்ஙனம் தாமுஞ் செய்துசிறப்புற
வேண்டுமென்னுங் கருத்தும் அதற்கேற்றமுயற்சியும் பிறர்க்கும் உண்டாதல்,
உலகவியல்பு.  வீமன் திரிகர்த்தனைக்கட்டியது சூரியாஸ்தமநத்திற்குச் சிறிது
முன்னரென்பது போதரும்.  வருணன் மேற்குத் திக்குப்பாலகனாதலால்,
ழுதன்திசைழு எனப்பட்டது.     

கங்கன் என்று தன் அருகு இருந்தருளிய கடவுள்-
துங்க மா முனி சொற்படி, தோள் வடம் நெகிழ்த்து,
சிங்கம் அன்ன அத் திகத்தனை, ‘செல்க!’ என விடுத்தான்,
அங்க மா மதில் அயோத்திமன், தேரும் ஒன்று அளித்தே22.-கங்கபட்டன்சொன்னபடிவிராடன் திரிகர்த்தனை விட்டிடுதல்.

அங்கம் மா மதில் அயோத்தி மன்-உறுப்புக்களமைந்த பெரிய
மதிலினையுடைய அயோத்தியாநகரத்தின் அரசனாகிய விராடன்,-கங்கன் என்று
– கங்கபட்டனென்று பெயர்கொண்டு, தன் அருகு இருந்தருளிய –
தன்பக்கத்தில் எழுந்தருளியிருக்கின்ற, கடவுள் – தெய்வத்தன்மையையுடைய,
துங்கம் மா முனி – உயர்ச்சி வாய்ந்த மகாமுனிவராகிய தருமபுத்திரரது,
சொல்படி-சொல்லின்படி, சிங்கம் அன்ன அ திகத்தனை-சிங்கம்போன்ற அந்தத்
திரிகர்த்த ராஜனை,தோள் வடம் நெகிழ்ந்து – தோள்களைக்கட்டிய
கயிற்றையவிழ்த்து, தேர்உம் ஒன்று அளித்து – ஒருதேரையுங்கொடுத்தருளி,
செல்க என- ழு(உயிரோடு) போவாயாகழு என்று சொல்லி, விடுத்தான் –
விட்டிட்டான்; (எ-று.)

     விராடன் சூரியகுலத்துத்தோன்றியவனாதலால் ழுஅயோத்திமன்ழு
எனப்பட்டான்.  பகைவர் பக்கலிலும் அறநெறி தவறாத தருமபுத்திரனது
கருணையும், முனிவர் சொல்லைக் கேட்டு அதன்படியொழுகும் விராடனது
நற்குணமும், இங்கு வெளியாம்.  திரிகர்த்தனை இங்ஙனம் விடுத்தது,
தழிஞ்சியென்னும் புறப்பொருள் துறை; அது, வலியிழந்தவர்மேற் போர்க்குச்
செல்லாமல் அவர்க்கு உதவிசெய்து தழுவுவது.  சிங்கம் – வீரனுக்கு நடை
வலிமை நோக்குத் தைரிய காம்பீரியங்களாலும், எளிதிற் பகையழிக்குந்
திறத்தினாலும், தலைமையினாலும் உவமை.  இங்கே ழுசிங்கமன்னதிகத்தன்ழு
என்றது, இகழ்ச்சி; எதிர்மறையிலக்கணை, அன்றி, தோல்வியுற்ற அவனை
ழுசிங்கமன்னவன்ழு என்றது – அவனை வென்றவனான வீமனது பல
பராக்கிரமங்களின் மிக்க சிறப்புத் தானேவிளங்கக் கூறியதுமாம்.  அங்கம் –
மதிலுறுப்புக்கள்.

போர் அணிப் படையொடும் அவன் போனபின், தனது,
தேர் அணிப் பெருஞ் சேனையை ரவி குல திலகன்
பேர் அணிப்பட வகுத்து, மற்று யாரினும் பெரியோன்
ஈர்-அணிப்படை வரும் எனக் கங்குல் அங்கு இருந்தான்23.-அன்றையிராத்திரிவிராடன் அங்கேயே யிருத்தல்.

அவன் – அத்திரிகர்த்தன், போர் அணி படையொடு உம்-
போர்க்களத்துக்கு அலங்காரமான சேனையுடனே, போனபின்-
போய்விட்டபின்பு, ரவி குல திலகன் – சூரியகுலத்துத் திலகம் போன்றவனாகிய
விராடன், ழுமற்று யாரின்உம் பெரியோன் – மற்றையெல்லாரினும்
பெரியவனாகிய துரியோதனனது, ஈர் அணி படை – இரண்டாவது [வேறொரு]
சீர் பெற்ற சேனை, வரும் – இங்குவருதல் கூடும்ழு, என-என்று எண்ணி,-தனது-
தன்னுடைய, தேர் அணி பெருஞ் சேனையை – தேர் முதலியவற்றையுடைய
அழகிய பெரிய சேனையை, பேர் அணி பட வகுத்து – பெரிய (வியூகமாக)
ஒழுங்காக வகைப்படுத்தி, கங்குல்-இராமுழுதும், அங்கு-அங்கேயே [தெற்குப்
பக்கத்தில்], இருந்தான்-தங்கியிருந்தான்; (எ – று.)

     தோல்வியுற்ற சேனையை இங்கே ழுபோரணிப்படைழு என்றது – இகழ்ச்சி;
வீரமின்மை விளக்கிற்று.  ரவிகுலதிலகன்-திலகம் – நெற்றிப்பொட்டு.  அது
நெற்றிக்கு அழகுசெய்வதுபோல, தான் பிறந்த சூரியகுலத்துக்குச்
சிறப்புண்டாக்குபவனென்க.  மற்று-இனியென்றுமாம்; அசையுமாம்.
ஈரணிப்படை – வினைத்தொகையாய், (பகைவரைப்) பிளக்கவல்ல சேனையுமாம்;
ஈர்த்தல் – அரிதல், அறுத்தல், பிளத்தல்.  ழுபோரணிப்படைழு என்ற தொடர் –
போர் செய்தலைத் தனக்கு அலங்காரமாகக்கொண்ட சேனையென்றும், போர்
செய்தற்பொருட்டு (முன்பு) அணிவகுத்துநின்ற சேனையென்றும் பொருள்படும்.
தேர் மற்றைப்படைகட்கும் உபலக்ஷணம்.

     சிறுபான்மை வடசொற்களை அங்ஙனமே பிரயோகித்தலும்
இயல்பாதலால், ழுரவிகுலதிலகன்ழு என்றே கூறினார்; (பிரயோகவிவேகநூலார்
ழுதண்டியாசிரியரும் சிந்தாமணியாரும் வடமொழியிற் பிறந்த வண்ணமே
ழுயுக்தமுமயுக்தமும்ழுழுராசமாபுரிழு ழுரவிகுலதிலகன்ழு என முறையே
கூறுதல் காண்கழு என்றும், ழுநாலடியாரும் தண்டியாசிரியரும் சிந்தாமணியாரும்
வடமொழியிற் பிறந்தவண்ணம் முறையே ழுயோசனையோர் கேட்பர்ழு
ழுயுத்தமுமயுக்தமும்ழுழுரவிகுலதிலகன்ழு எனத் தற்சமமாகக்கூறினாற்போல,
யாமும், உருவபேதமென்னாமலே ரூபபேத மென்றாம்ழு என்றுங் கூறியவை
நோக்கத்தக்கன.)       

கெட்ட வெம் படை கெட்டமை சுயோதனன் கேளா,
முட்ட எண் திசா முகங்களும் பேரிகை முழங்க,
தொட்ட பைங் கடல் சூரியன் தோன்றும்முன் தோன்றி,
வட்ட மா மதில் விராடன் ஊர் வட திசை வளைந்தான்.24.-இதுவும், அடுத்த கவியும்- வடபுறத்து நிரைகவர்தல். 

(பின்பு),-சுயோதனன்-துரியோதனன்,-கெட்ட வெம்படை –
மிகவுங் கொடிய அத்திரிகர்த்தசேனை, கெட்டமை – அழிந்து தோல்வியுற்று
வந்த செய்தியை, கேளா-கேள்வியுற்று,-எண் திசாமுகங்கள்உம் முட்ட-
எட்டுத்திக்குக்களி னெல்லைகளிலும் ஒலிசென்று தாக்கும்படி, பேரிகை முழங்க
– போர்முரசங்கள் ஆரவாரிக்க,- தொட்ட பைங் கடல் – (சகரசக்கரவர்த்தியின்
புதல்வர்) தோண்டிய பசிய கீழ்கடலிலே, சூரியன்-, தோன்று முன்-
உதிப்பதற்குமுன்னே [பின்னிரவிலே], தோன்றி – புறப்பட்டு வந்து,-வட்டம் மா
மதில் – வளைவான பெரிய மதிலையுடைய, விராடன் ஊர் – விராடனது
நகரத்தை, வட(க்கு) திசை-வடக்குப் பக்கத்தில், வளைந்தான் – (சேனையுடனே
நன்கு) முற்றுகைசெய்தான்.  (எ – று.)

     திரிகர்த்தன் தெற்குத்திசை ஆநிரை கவர முயன்ற அன்றைத்தினமே
துரியோதனன் விராடநகரத்தில் வடதிசையில் முற்றுகை செய்தானென்க.
பசுமை, கருமை, நீலம் இவற்றில் ஒன்றற்கு ஒன்று உள்ள சிறு வேறுபாட்டைப்
பெரிதெனக் கெள்ளாமல் அபேதமாக்கூறுதல் கவிசமயமாதலால், கருங்கடலை
ழுபைங்கடல்ழு என்றார்; பசுமை-குளிர்ச்சியுமாம்.

      ழுதொட்டகடல்ழுஎன்றதன் விவரம்:-சூரியகுலத்துச் சகரமகாராசன்
அசுவமேதயாகஞ் செய்கின்றபொழுது பூமிப்பிரதக்ஷிணத்தின் பொருட்டுச்
செலுத்திய குதிரையை, பொறாமைகொண்ட தேவேந்திரன் மாயையால்
ஒளித்துக்கொண்டுசென்று, பாதாளலோகத்தில் தவஞ்செய்துகொண்டிருந்த
கபிலமுனிவர்பின்னே கட்டிவைக்க அவ்வேள்விக்குதிரையை நாடிச்சென்ற
சகரபுத்திரர் அறுபதினாயிரம்பேர் பூமிமுழுவதிலுந் தேடிக்காணாது
பாதாளத்திற்குப் போகும்பொருட்டுப் பெருவழியாகப் பரதகண்டத்தில்
வடகிழக்குப் பக்கத்தில் தோண்டிச்சென்ற பெரும்பள்ளம், பின்பு கங்கை
முதலியவற்றின் நீரினால் நிறைந்து ஸாகரமென்னும் பெயர் பெற்றுக் கடலோடு
கூடித் தானும் கடலின்பாற்பட்டது என்பதாம்.  (ழு நூறுயோசனை
யகலமுமாழமுநுடங்கக், கூறுசெய்தன ரென்பரால் வடகுணதிசையின்,ழு ழுசகரர்
தொட்டலாற் சாகரமெனப் பெயர்தழைப்ப, மகரவாரிதி சிறந்ததுழு என்பன,
கம்பராமாயணம்.)       

வளைய, நாடு எலாம் மன்னவன் வரூதினி பரப்பி,
விளையும் நன் பெரு விளைவு எலாம் வெங் கனல் கொளுத்தி,
அளையும் மா மணி ஆ நிரை கவர்தலும், ஆயர்
உளைய ஓடி வந்து, ஊர் புகுந்து, உத்தரற்கு உரைப்பார்:

) மன்னவன் – துரியோதனன்,-நாடு எலாம் வளைய –
மச்சதேசம் முழுவதுஞ் சூழும்படி, வரூதினி பரப்பி -(தன்) சேனையைப்
பரவச்செய்து,-விளையும் நல் பெரு விளைவு எலாம்-விளைகின்ற நல்ல பெரிய
நெற்பயிர் முதலிய விளைச்சல்களையெல்லாம், வெம் கனல் கொளுத்தி –
வெவ்விய நெருப்பினாற் சுட்டெரித்து,- அளையும் மா மணி –
அசைந்தொலிக்கின்ற பெரிய மணிகளையுடைய, ஆன் நிரை – பசுக்கூட்டத்தை,
கவர்தலும் – கொள்ளைகொண்டு சென்றவளவில்,- ஆயர்-(அப்பசுக்களைக்
காத்துநின்ற) இடையர்கள், உளைய – வருத்த முண்டாக, ஓடிவந்து-, ஊர்
புகுந்து-விராட நகரத்தினுட்சேர்ந்து, உத்தரற்கு – உத்தரகுமாரனுக்கு,
உரைப்பார் – செய்தி சொல்லுபவரானார்கள்; (எ – று.)-அதனை, அடுத்த
இரண்டுகவிகளிற் கூறுகின்றார்.

     துரியோதனன் தன் சேனையை விராடநகரின் வடதிசை முழுவதும்
பரப்பி, விளைச்சலைச் சுட்டெரித்து ஆனிரையைக் கவர்ந்தானாக,
அச்செய்தியை நகரிலிருந்த உத்தரகுமாரனுக்கு ஆயர்தெரிவித்தனரென்க.
உத்தரன் – விரடனது இளையமகன்; (மூத்தமகன்பெயர், சுவேதன்), ழுஎல்லாம்ழு
என்னும் பெயர்- ழுநாடெலாம்ழு என்பதில் ழுமேனியெல்லாம் பசலையாயிற்றுழு
என்பதிற்போல ஒருபொருளின் பல இடங்குறித்தும், ழுவிளைவெலாம்ழு
என்பதில்பொருளின் பன்மைகுறித்தும் நின்றது.   

குடம் நிறைப்பன குவி முலைக் கோ நிரை மீட்பான்
திடனுடைப் புய மன்னவன் தென் திசைச் சென்றான்;
வட திசைப் புலம் முழுவதும் மாசுணக் கொடியோன்
அடல் வயப் படை ஆழியின் பரந்ததை அன்றே.26.-இதுவும், அடுத்தகவியும் -இடையர் உத்தரனுக்குச்
செய்தி கூறல்.

திடன் உடை புயம் மன்னவன் – வலிமையுள்ள தோள்களை
யுடைய (நமது) அரசன் [விராடன்], கு
ம் நிறைப்பன குவிமுலை
கோ நிரை -(இடையர்கள் பால்கறக்கப் பிடிக்கின்ற) குடங்களை
நிரப்புவனவாகிய குவிந்த முலைகளையுடைய பசுக்களின் கூட்டங்களை,
மீட்பான் – (பகைவரினின்று) மீட்டுக்கொண்டு வருதற்பொருட்டு, தென் திசை
சென்றான் – தெற்குப் பக்கத்துக்குப் போனான்: (இப்படிப்பட்ட சமயத்தில்),
மாசுணம் கொடியோன் – சர்ப்பத்தின் வடிவமெழுதிய கொடியையுடையவனான
துரியோதனனது, அடல் வயம் படை – வலிமையையும் வெற்றியையுமுடைய
சேனை, வடதிசை புலம் முழுவதும் – (ஊர்க்கு) வடக்குப் பக்கத்தினிடம்
முழுவதும், ஆழியின் – கடல்போல, பரந்ததை – பரவிற்று; (எ – று.)

     தென்புறத்தில் பசுநிரை மீட்கச்சென்ற சமயம் பார்த்து, வடபுறத்து
ஆனிரை கவருமாறு துரியோதனன் சேனை பரவிற்றென்றனர் ஆயரென்க.
ஒவ்வொருமுலையும் குடம்குடமாகப் பால் சொரியுமென, பசுக்களின் சுரப்பு
மிகுதி கூறியவாறு; “சீர்த்தமுலைபற்றி, வாங்கக் குடநிறைக்கும் வள்ளற்
பெரும்பசுக்கள்” என்றார் பெரியாரும்.  அன்றே – ஈற்றசை.  பரந்ததை-ஐ,
சாரியை.            

நாட்டில் உள்ளன பலன்களும் கவர்ந்தனர்; நறுந் தண்
காட்டில் உள்ளன சுரபியின் கணங்களும் கவர்ந்தார்;
கூட்டில் உள் உறை கலுழனின் குஞ்சுபோல், இனி நீ
வீட்டில் உள் உறைகின்றது என்?-வேந்தன் மா மதலாய்!’

வேந்தன் மா மதலாய் – விராடராசனது சிறந்த குமாரனே!-
(துரியோதனாதியர்), நாட்டில் உள்ளன – (நமது) தேசத்திலுள்ளவையாகிய,
பலன்களும் – (தானியம் முதலிய) விளைபயன்களையும், கவர்ந்தனர் –
ஒழித்துவிட்டார்கள்; நறுந் தண் காட்டில் உள்ளன – (நாட்டையடுத்த) நல்ல
[செழித்த] குளிர்ச்சியான காட்டில் உள்ளவையாகிய, சுரபியின் கணங்களும் –
பசுக்களின் கூட்டங்களையும், கவர்ந்தார் – கொள்ளை கொண்டார்கள்; இனி –
இங்ஙனங் கொண்டு போனபின்பும், நீ -, கூட்டில் உள் உறை கலுழனின்
குஞ்சுபோல் – (வெளிப்பட்டுத் தன்பகையாகிய பாம்புகளை வெல்லாமற்)
கூட்டினுள்ளே அடைந்து கிடக்கின்ற கருடப்பறவையின் குஞ்சு போல, வீட்டில்
உள் உறைகின்றது – வீட்டிற்குள்ளேயே வாசஞ் செய்து கொண்டிருக்கின்றது,
என் – என்னே? (எ – று.)

     பறவைக்கரசனாகிய கருடன் பாம்புகளை அழிக்குமாறுபோல
ராஜகுமாரனாகிய நீயும் வெளிப்பட்டு வந்து பாம்புக்கொடியோனாதியரை
அழிக்க வேண்டாவோவென்றார்; உவமையணி.  மேல்ழுமாசுணக்கொடியோன்ழு
என்று பகைவனைக்குறித்து, இங்கு ழுகலுழனின் குஞ்சு போல்ழு என்று
உத்தரனுக்கு உவமைகூறியது – உன்தந்தையைப் போலவே உன்னையுங்
கண்டமாத்திரத்திலே அப்பகைவர் ஒடுங்கி யொழிவ ரென்று குறிப்பித்து
உத்தரனை உத்ஸாஹப்படுத்துதற்பொருட் டென்க.

      பலன்- போலி.  கலுழன் – கருடனென்ற வடசொல்லின் விகாரம்.
குஞ்சு – இளமைப்பெயர்; மதலாய் – மதலையென்பதன் விளி.  25-ஆம்
செய்யுளில்ழுவிளைவெலாம் வெங்கனல் கொளுத்திழு என வந்ததனால்,
ழுகவர்ந்தனர்ழு என்றது, ழுஉயிர்கவர்ந்தனர்ழு என்றவிடத்துப் போல ஒழித்தன
ரென்றவாறாம்.  

என்ற போதில், அப் புதல்வனைப் பரிவுடன் ஈன்றாள்,
நின்ற மங்கையர்தங்களை நிரை நிரை நோக்கி,
‘சென்ற காவலன் வரும் துணை, செங் கையில் படைகொண்டு,
ஒன்ற ஏகி, நம் எயில் புறம் காமின்!’ என்று உரைத்தாள்.28.-சுதேஷ்ணை மகளிரைநகர்ப்புறங் காவல்செய்யச்
சொல்லுதல்.

என்ற போதில் – என்று (இடையர்) சொன்னபொழுது, – அ
புதல்வனை பரிவுடன் ஈன்றாள் – அவ்வுத்தரகுமாரனை அன்போடு பெற்று
வளர்த்த (விராடன்மனைவியாகிய) சுதேஷ்ணையானவள்,-நிரை நிரை நின்ற
மங்கையர் தங்களை நோக்கி – வரிசைவரிசையாகத் (தனது அருகில்) நின்ற
பரிசனப்பெண்களைப்பார்த்து, ழுசென்ற காவலன் வரும் துணை – (நிரை
மீட்டற்குத் தெற்குப்பக்கம்) போன (நமது) அரசன் திரும்பி வந்து சேருமளவும்,
(நீங்கள்), செம் கையில் படைகொண்டு – சிவந்த கைகளிலே ஆயுதங்களை
ஏந்திக்கொண்டு, ஒன்ற-ஒருசேர [கூட்டமாக], ஏகி – போய், நம் எயில் புறம்
காமின் – நமது (நகரத்து) மதிலைச்சுற்றிலும் இருந்து பாதுகாவல்செய்யுங்கள்,ழு
என்று -, உரைத்தாள் – கட்டளையிட்டாள்;(எ – று.)

     சுதேஷ்ணை வேறுவகையில்லாமையால் மகளிரைக் காக்குமாறு
கூறினாள்:அக்காலத்துமகளிரும் வீரமுள்ளவராயிருந்தமை இதனாற் பெறப்படும்.
(சத்தியபாமை ஸ்ரீக்ருஷ்ணனுக்குத் தேரூர்ந்தமைமுதலியன
இங்குக்கருதத்தக்கன.) தந்தைக்கு மூத்தமகனிடத்தும் தாய்க்கு
இளையமகனிடத்தும் அன்பு முதிர்ந்திருப்பது இயல்பாதல் தோன்ற,
ழுஅப்புதல்வனைப் பரிவுடனீன்றாள்ழு என்றார்.  கை சிவந்திருத்தல்,
உத்தமவிலக்கணம்:  இனி சுதேஷ்ணையின் மெய்க்காவலாகப் படைக்கலம்
பிடித்தலாற் சிவந்த கை யெனினுமாம்

உரைத்த அன்னையைக் கதுமென உத்தரன் வணங்கி,
‘நரைத்த ஓதி! நின் திருமொழி நன்று!’ என நகையா,
‘அரைத்த ஆரமும், ஆரமும், மாலையும், அணிந்து, என்
வரைத் தடம் புயம் வளர்த்தது, மகளிர் போர் பொரவோ?29.-இதுவும் அடுத்தகவியும் -குளகம்: உத்தரன் யான்சென்று
பொருது பகைவரைவெல்வே னென்றதைத் தெரிவிக்கும்.

மூன்று கவிகள் – ஒருதொடர்.

      (இ -ள்.) உரைத்த அன்னையை – (இவ்வாறுமகளிரைநோக்கிச்) சொன்ன
(தனது) தாயை, உத்தரன்-, கதுமென வணங்கி – விரைவாக நமஸ்கரித்து,
ழுநரைத்த ஓதி – வெளுத்திருக்கின்ற கூந்தலையுடையவளே! நின் திருமொழி
நன்று – நீ இப்பொழுது சொல்லிய மேன்மையுள்ள வார்த்தை
நன்றாயிருக்கின்றது!ழு என – என்றுசொல்லி, நகையா – பரிகாசமாகச்சிரித்து,
அரைத்த ஆரம்உம் – அரைத்தசந்தனக் குழம்பையும், ஆரம் உம் –
முத்துமாலைகளையும், மாலைஉம் – பூமாலைகளையும், அணிந்து-, என்வரை
தடபுயம் வளர்த்தது – என்னுடைய மலைபோன்ற [வலிய] பெரிய
தோள்களைவளர்த்தது, மகளிர் போர் பொரஓ – (பகைவரோடு யான் போர்
செய்யாமற்) பெண்பாலார் (சென்று) யுத்தஞ் செய்தற்காகவோ? (எ – று.)-
இச்செய்யுளில் ழுநகையாழு என்ற எச்சம், அடுத்த செய்யுளில் ழுஎன்றான்ழு என்ற
முற்றைக் கொள்ளும்.

      யான்,எனது வளர்ந்த வரைத்தடந்தோள்களாற் பொரவேண்டாவோ?
பொருது வெற்றி பெறவேண்டாவோ? என்றான்.

      கதுமென- விரைவுப்பொருளைத் தருவதோர் இடைச்சொல்.  ஓதி –
பெண்மயிர்; இங்கு அதனையுடையவளுக்குச் சினையாகுபெயர்.  நரைத்த ஓதி
– அடையடுத்த ஆகுபெய ரென்க.  ழுநரைத்த ஓதிழு என்ற பெயர் – இங்கு
அண்மைவிளி யாதலின், இயல்பாயிற்று.  நன்று – இகழ்ச்சிக்குறிப்பு; நன்றன்
றென்றபடி.  இங்குக் கூறிய நகை, இகழ்ச்சி பொருளாக வீரத்தெழுந்த
வெகுளிநகை

கனை கடற்படையுடன் நிரைக் கணம் கவர்ந்தவரை
முனைபடப் பொருது, இமைக்கும் முன் முதுகு கண்டிடுவேன்;
வினைமுகத்தினை அறிந்து, தேர் விசையுடன் விட, என்
நினைவொடு ஒப்பது ஓர் சாரதி நேர்ந்திலன்’ என்றான்.

கனை கடல் படையுடன் – ஆரவாரஞ்செய்கின்ற கடல்
போன்ற சேனையோடு (வந்து), நிரை கணம் கவர்ந்தவரை – (நமது)
பசுக்கூட்டங்களைக் கொள்ளைகொண்ட துரியோதனாதியரை, முனை –
போர்க்களத்தில், பட – அழியும்படி, பொருது – (யான் ஒருவனே போய்ப்)
போர்செய்து, இமைக்கும் முன் – ஒருமுறை கண்ணிமைக்கும் பொழுதைக்கு
முன்னமே [மிகவிரைவில்], முதுகு கண்டிடுவேன்-புறங்கொடுத் தோடச்
செய்வேன்;  (ஆனால்), -வினை முகத்தினை அறிந்து – போர்தொழிலின்
தன்மையைத் தெரிந்து, (அதற்கு ஏற்ப), தேர் – தேரை, விசையுடன் விட –
வேகமாக நடத்துவதற்கு, என் நினைவொடு ஒப்பது ஓர் சாரதி – என்மனத்
தோடொத்த தன்மையையுடைய ஒரு பாகன், நேர்ந்திலன் – (இப்பொழுது
எனக்குக்) கிடைத்தானில்லை, என்றான் – என்று சொன்னான்; (எ – று.)- என்
நினைவிற்கு ஏற்ற சாரதிமாத்திரங்கிடைப்பனாயின், உடனே பொருது வெல்வே
னென்றபடி.

     நேர்ந்திலன் – எதிர்மறையாண்பாலிறந்தகால முற்று; தன்மையொருமை
முற்றாய், சாரதியைப்பெற்றிலே னென்றலு மொன்று.

உத்தரன் புகல் உறுதி கேட்டு, ஒப்பனைக்கு உரியாள்
கொத்து அரம் பொரு கூர் அயில் குமரனைக் குறுகி,
‘வித்தரம் பெறு தேர் விடும், விசயனுக்கு இவள்’ என்று,
அத் தரம் பெறு பேடியைக் காட்டினள், அன்றே.31.-பிருகந்நளைதேர்செலுத்தவல்ல ளென்று விரதசாரணி
கூறுதல்.

உத்தரன் புகல் உறுதி கேட்டு – (இவ்வாறு) உத்தரகுமாரன்
சொன்ன உறுதிமொழியைக் கேட்டு,- ஒப்பனைக்கு உரியாள் –
(சுதேட்டிணைக்குப் பலவகை) அலங்காரமுஞ் செய்தற்கு உரியவளாகிய
(விரதசாரணி யென்னும் பெயர்பூண்ட) திரௌபதி,- கொத்து அரம் பொரு
கூர் அயில் குமரனை – திரண்ட அரமென்கிற வாள்விசேடத்தால்
அராவப்பட்ட
 கூர்மையுள்ள வேலாயுதத்தையுடைய உத்தரகுமாரனை,
குறுகி – சமீபித்து,- ழுஇவள்-, விசயனுக்கு – அருச்சுனனுக்கு, வித்தரம் பெரு
தேர் விடும் – பரப்பமைந்த தேரைச் செலுத்துவாள்ழு, என்று – என்று சொல்லி,-
அ தரம் பெறு பேடியை – அப்படிப்பட்ட வல்லமையைப்பெற்ற
பிருகந்நளையை, காட்டினள்-காண்பித்தாள்; (எ – று.)-அன்றே – ஈற்றசை;
அப்பொழுதே யெனினுமாம்.

      உறுதி- உறுதியை வெளியிடுகின்றமொழிக்கு காரியவாகுபெயர்,
கொத்தரம் பொரு கூரயில் – ழுவாளரந் துடைத்த வை வேல்ழு
என்றார்சிந்தாமணியாரும்.  பெண்ணுறுப்புமிக்கிருத்தலால், ழுஇவள்ழு எனப்
பெண்பாலாற் கூறினர்.  ழுபெண்மைவிட்டாணவாவுவ பேடாண்பால்,
ஆண்மைவிட்டல்லதவாவுவபெண்பால், இருமையுமஃறிணையன்ன
வுமாகும்ழு என்ற நன்னூற்சூத்திரங் காண்க.  ழுபேடி-பெண்ணியல்புமிக்கு
ஆணியல்பு முடையவள்ழு என்பது, திருக்குறள் பரிமேலழகருரை.

     விசயன் – விஜயன் என்னும் வடமொழியின் திரிபு; இதற்கு –
விசேஷமான வெற்றியை யுடையவனென்றுபொருள்.  இராஜசூயயாகத்திற்காக
வடக்கிற்சென்று பல அரசர்களை வென்றதனாலும், காண்டவதகநகாலத்துத்
தேவர்களைச் சயித்ததனாலும், பாசுபதம் பெறுங்காலத்துப் பரமசிவனை
யெதிர்த்து விற்கழுந்தால் முடியிலடித்தனாலும், பின்பு இந்திராதி தேவர்க்கும்
வெல்ல முடியாத நிவா தகவசர்காலகேயர்களை வதைத்ததனாலும், மற்றும் பல
வெற்றிகளாலும், இவனுக்கு இப்பெயர் அமைந்தது.  இனி, விஜயன்-(தன்னைச்)
சயிப்பாரெவருமில்லாதவ னென்றும் பொருள் கொள்வர்.  இங்கு அருச்சுனனை
ழுவிசயன்ழு என்ற பெயராற் குறித்தது – எப்பொழுதும் வெற்றியையே
பெறுபவனான அவனுக்குத் தேர்செலுத்தி யுதவியவளாதலால், இவள்
உடன்செல்லுதல் வெற்றியைவிளைக்கு மென்று குறிப்பதற்கு.

நாடி, வாசியின் நல்லன நான்கு அவை பூட்டி,
தேடி, ஆயுதம் சிலைமுதல் தெரிந்தவை கொண்டு,
கோடி கோடி பைங்கோதையர் குழீஇயினர் வாழ்த்த,
பேடி தேர் விட, சென்றனன், சுதேட்டிணை பிள்ளை.33.-பிருகந்நளைதேர்செலுத்த,உத்தரன் போர்க்குச்
செல்லுதல்.

பேடி – பிருகந்நளை, வாசியில் – குதிரைகளுள்ளே, நல்லன
நான்கு அவை – நல்லிலக்கணமமைந்தனவாகிய நான்குகுதிரைகளை, நாடி-
தேடி அறிந்து, பூட்டி – நுகத்தடியிற் சேர்த்துக்கட்டி, தேர்விட – தேரைச்
செலுத்த,-சுதேட்டிணை பிள்ளை – சுதேஷ்ணையினது புத்திரனாகிய
உத்தரனானவன்,-சிலை முதல்-வில் முதலியனவாகிய, ஆயுதம் அவை –
ஆயுதங்களை, தேடி தெரிந்து – ஆராய்ந்து அறிந்து, கொண்டு – (நல்லனவாக)
எடுத்துக்கொண்டு,-கோடி கோடி பைங்கோதையர் – பசுமையான [கரிய]
கூந்தலையுடைய அநேக கோடி மகளிர், குழீஇயினர் வாழ்த்த – திரண்டு
வாழ்த்துக் கூற, – சென்றனன்-(போர்க்குப்) புறப்பட்டுப் போனான்; (எ – று.)

     இதுமுதல் உத்தரதிசை நிரைமீட்சி கூறுகின்றார்.  ழுதேடியாயுதஞ்
சிலைமுதல்தெரிந்தவைகொண்டுழு என்றதையும் பேடியின் செயலாக
உரைக்கலுமாம்.ழுநான்கவைழு ழுஆயுதமவைழு என்றவற்றில், ழுஅவைழு –
பகுதிப்பொருள் விகுதி.பைங்கோதை – குளிர்ச்சியான கூந்தல்; பசியமாலை
யாகவுமாம்.  ழுகூந்தலுக்குப்பசுமையாவது – எண்ணெயிட்டு வாரி மயிர்ச்சாந்து
தடவப்பெற்றுஅழகுகுறையாமைழு என்பர் ஒருசாரார்.  

விலங்கல் மா மதில்களும் புற வீதியும் கடந்து, ஆங்கு
இலங்கு நேமி ஒன்று உடைய தேர் என்னலாம் தேர்மேல்,
துலங்கு பேர் ஒளி அருக்கனில் உருத்து எழு தோற்றத்து
அலங்கல் உத்தரன், உத்தர திசையை வந்து, அடைந்தான்.34.-உத்தரன் தனது நகரத்து வடபுறஞ் சேர்தல்.

துலங்கு பேர் ஒளி அருக்கனில் – விளங்குகின்ற மிக்க
ஒளியையுடைய சூரியன்போல, உருத்து எழு – மிக்கு விளங்குகின்ற,
தோற்றத்து – காட்சியையும், அலங்கல் – (நிரைமீட்டற்குரிய கரந்தைப்பூ)
மாலையை யுமுடைய, உத்தரன்-, -இலங்கும் நேமி ஒன்று உடைய தேர்
என்னல் ஆம் – விளங்குகின்ற ஒற்றைச் சக்கரத்தையுடைய (சூரியனது)
இரதமென்று (ஒப்புமை) சொல்லத்தக்க, தேர்மேல் – சிறந்ததொரு தேரிலே
(ஏறி),- விலங்கல் மாமதில்கள்உம் – மலைபோலுயர்ந்த பெரிய மதில்களையும்,
புறம் வீதிஉம் – (நகரத்தின்) வெளிவீதிகளையும், கடந்து – தாண்டி,
உத்தரதிசையை – (அந்நகரத்தின்) வடக்குப்பக்கத்தை, வந்து அடைந்தான் -;
(எ – று.)

     ழுஉத்தரனுத்தரதிசையை வந்தடைந்தான்ழு என்ற இடத்தில்
சொற்சமத்காரங்காண்க; உத்தரதிசையையடைதற்கு உரியன் உத்தர னென்பது
போதரும்,அருக்கனில் உத்தரன் உத்தரதிசையை யடைந்தான் என்று
இயைத்து,இலங்குநேமியொன்றுடைய தேரிலேறித் துலங்குபேரொளியருக்கன்
(உத்தராயணத்தில்) வடபுறஞ்செல்லுதல்போல, உத்தரன் தேர்மேல் உத்தர
திசையை யடைந்தானென்று கருத்துக் காணலாம்.  சூரியனது தேர் –
மிகவிரைந்து செல்லுதற்கு உவமை; ழுஒற்றைத்தனி யாழித்தேரென்ன
வோடுவதோர், கொற்றநெடுந்தேர்ழு என்றார், பிறரும்.  விலங்கல் –
(ஊர்க்குஒருபுறமாக) விலகிநிற்பது என்று காரணப்பொருள்.  திருக்குறளில்,
ழுவாய்ந்தமலைழு என்ற இடத்தில் பரிமேலழகர் இடையதன்றி ஒருபுடையதாதலை
மலைக்கு வாய்ப்பென்றமை காண்க.   

விண் கொளா மதி மேன்மை கொள் மீன்இனம் என்ன,
மண் கொளா விறல் மன்னுடை வரம்பு இல் வான் படையை,
எண் கொளா மனத்து இராகவன் திருக்குலத்து இளைஞன்,
கண் கொளாவகை புகுந்து, தன் கண்ணுறக் கண்டான்35.-உத்தரன் துரியோதனனது சேனையைக்காணுதல்.

எண் கொளா மனத்து – (சேனையின் தன்மை இன்னதென்று)
ஓர் எண்ணத்தைக் கொள்ளாத மனத்தையுடைய, இராகவன் திரு குலத்து
இளைஞன் – ஸ்ரீராமபிரான் திருவவதரித்த சிறந்த சூரிய குலத்துத் தோன்றிய
சிறுவனான உத்தரகுமாரன்,-கண்கொளா வகை புகுந்து – (காண்பவர்)
கண்களுக்கு எட்டாதபடி [மிக விரைந்து] சென்று,-(அங்கே),-விண் கொளா மதி
– ஆகாயத்தில் தோன்றாத [பூமியில் தோன்றியதொரு] சந்திரனையும், மேன்மை
கொள் மீன் இனம் என்ன – (அச்சந்திரனைச்சூழ்ந்த) மேன்மைபெற்ற
நட்சத்திரக் கூட்டங்களையும்போல, மண் கொளா விறல் மன் – பூமி
முழுவதிலும் அடங்காத வீரத்தன்மையையுடைய துரியோதனராசனையும், உடை
வரம்பு இல் வான் படையை – அவனைச் சூழ்ந்துள்ள அளவில்லாத பெரிய
சேனையையும், தன் கண் உற கண்டான் – கண்களுக்கெதிரிற் [பிரதியட்சமாக]
பார்த்தான்; (எ – று.)

     தேவாசுரயுத்தம் இராமராவணயுத்தம் போன்ற யுத்தங்களைச்
சித்திரத்திலே கண்டு, ‘சேனை இங்ஙனமே யிருக்கும்:  அதனைத் தான் மிக
எளிதில் அழித்துவிடலாம்’ என்று கருதிப் போர்க்கு வந்தவனாதலால், உத்தரன்
‘எண்கொளா மனத்து இளைஞன்’ எனப்பட்டான்.  கண்கொளாவகை
கண்டானென இயைத்து – கண்களின் பார்வை செல்லுமளவுக்கு மேலுஞ்
சேனைபரந்து கிடத்தலால், கண்களுக்கு எட்டாதபடியாற் கண்டா னென்றுமாம்.
‘விண்கொளா’ என்னும் அடைமொழியை மீனினத்துக்கும் கூட்டுக.
விண்கொளா மதி***மீனினம் – இல்பொருளுவமை. ‘மண்கொளாவிறன் மன்’
என்பதற்கு – மண்ணுலகத்துள்ளாரில் எவரும் அடையாத வலிமையைத் தான்
உடைய மன்ன னென்றுமாம்: பதினாயிரம் யானைபலங் கொண்டவ னாதலால்,
‘மண் கொளா விறல்மன்’ என்றார்.  ‘மண்கொளாவிறல்’ என்றது –
அதிசயோக்திவகையால் துரியோதனனது வீரத்தைச் சிறப்பித்தது.  இனி
‘மண்கொளா’ என்றதைப் படைக்கு அடைமொழியாக்கிப் பூமிமுழுவதிலும்
அடங்காத சேனை யெனினுமாம்.

     ராகவன் என்ற பெயர்க்கு – ரகுமகாராஜனது வமிசத்தில் அவதரித்தவ
னென்பது பொருள்:  சூரியகுலத்தவனாகிய இவ்வரசன் – திக்குவிசயஞ்செய்து
எல்லாத் தேயங்களையும் வென்று ‘விசுவஜித்’ என்னும் வேள்வியை இயற்றி
அதில் தன்செல்வமுழுவதையும் வழங்கிவிட்டு வெறுங்கையனாயிருக்கையில்,
கௌத்ஸனென்னும் பிராமணன் வந்து தன் குருவாகிய
வரதந்துமகாமுனிவனுக்குத் தான் குருதட்சிணை கொடுத்தற்பொருட்டு மிக்க
பொருள் வேண்டுமென்று இரக்க அப்பொழுது குபேரனிடத்திலிருந்து
வேண்டும் பொருள் தானே வரப்பெற்று அந்தக் கௌத்ஸனுக்குக்
கொடுத்தான்: இப்படி இவன் மிக்க வீரமுங் கொடையு முடையவனாய்ப்
பிரசித்திபெற்றவனாதலால், இவன் மரபிற்பிறந்தவனென்று இராமபிரானைக்
குறித்தார்; காளிதாசமகாகவி வடமொழியில் இவன் பெயரால் ‘ரகு வம்ஸம்’
என ஒரு காவியஞ் செய்திருத்தலைக் கொண்டும், இவ்வரசனது பெருமையை
நன்கு உணரலாம்.  

கைந் நடுங்கவும், கால் நடுங்கவும், கருத்து அழிந்து
மெய்ந் நடுங்கவும், நாப் புலர்ந்து, உயிர்ப்பு மேல் விஞ்சிச்
சொல் நடுங்கவும், சுடர் முடி நடுங்கவும், சோர்ந்தான்-
மைந் நெடுங் களிற்று உரனுடை விராடர் கோன் மைந்தன்.36.-அதுகண்டமாத்திரத்தில் உத்தரன் நடுநடுங்கி மூர்ச்சித்தல்.

மை நெடுங் களிறு – கரிய பெரிய ஆண்யானை போன்ற,
உரன் உடை – வலிமையையுடைய, விராடர் கோன் –
விராடதேசத்தார்க்கரசனது, மைந்தன் – குமாரனாகிய உத்தரன்,-
(அந்தத்துரியோதனன் படையைக்கண்ட மாத்திரத்தில் அச்ச மிகுதியால்),
கருத்து அழிந்து – மனங்கலங்கி, நா புலர்ந்து – நாக்கு வறண்டு, உயிர்ப்பு
மேல் விஞ்சி – பெருமூச்சு மேன்மேலும் அதிகமாகப் பெற்று, கை நடுங்கஉம் –
கைகள் நடுக்கமடையவும், கால் நடுங்கஉம் – கால்கள் நடுக்கமடையவும், மெய்
நடுங்கவும் – உடம்பு நடுக்கமடையவும், சொல் நடுங்கஉம் – வார்த்தை
தடுமாறவும், சுடர் முடி நடுங்கஉம் – ஒளியையுடைய கிரீடம் – நடுங்கவும்,
சோர்ந்தான் – தளர்ந்தான் [உணர்வழியலானான்]; (எ – று.)

     இதுவரையிற் காணாத காட்சியைக் காணவே, உத்தரனுக்குப்
பேரச்சமுண்டாயிற்றென்க.  கைநடுங்குதல் முதலியன – அச்சத்தின் செயல்கள்.
முடி – முடியிற் கவிக்கப்படுவது; கிரீடத்திற்குக் காரணப்பெயர்.  களிறு-
யானைச் சேனையையுடைய என்றலுமொன்று.  உரன் என்றதில் தேகபலம்
மநோபலம் ஆயுதபலம் சேநாபலம் முதலிய பலவகை வலிமைகளும் அடங்கும்.
(இரண்டாமடியில், யகரவொற்றுஇடைவந்த ஆசெதுகை காண்க.
பொதுநகரத்துக்கும் சிறப்புனகரத்துக்கும் ஒலிவடிவில் மிக்க வேறுபாடு
இல்லாமை பற்றி, மூன்றாமடியில் னகரம் எதுகையாய் நின்றது.) 

அஞ்சல், அஞ்சல்! நீ பகைவரை ஆர் உயிர் அடுதல்,
துஞ்சல், என்று இவை இரண்டு அலால், துணிவு வேறு உண்டோ?
வெஞ் சமம்தனில் வந்து, புண் படாது இனி மீண்டால்,
வஞ்ச நெஞ்சுடை வஞ்சியர் என் சொலார்?-மறவோய்!37.-இதுவும், அடுத்தகவியும் – பிருகந்நளை உத்தரனுக்குத்
தேறுதல் கூறுதலைத் தெரிவிக்கும்.

மூன்றுகவிகள் – ஒருதொடர்.

    (இ – ள்.)(அப்பொழுது உத்தரனை நோக்கிப் பேடி)- ழுமறவோய் –
வலிமையை யுடையவனே! நீ -, அஞ்சல் அஞ்சல் – பயப்படாதே பயப்படாதே;
பகைவரை ஆர் உயிர் அடுதல் – பகைவர்களை அரிய உயிரழியச் செய்தலும்
[கொல்லுதலும்], துஞ்சல் – (தாம்) இறத்தலும், என்ற இவை இரண்டு அலால் –
என்ற இவ்விரண்டு தொழில்களுள் ஒன்றல்லாமல், வேறு துணிவு உண்டுஓ –
(போர்க்கு வந்தவர்கட்கு) வேறொரு உறுதி உள்ளதோ? [இல்லை]; வெம் சமம்
தனில் வந்து – கொடிய போர்க்களத்திற் புகுந்து, புண்படாது –
விரணப்படாமல், இனி-, மீண்டால் – திரும்பி வாளாசென்றால் வஞ்சம் நெஞ்சு
உடை வஞ்சியர் – வஞ்சனையுள்ள மனத்தையுடைய வஞ்சிக்கொடிபோல
மெல்லியலாரான மாதர்கள், என் சொலார் – என்சொல்லி இகழமாட்டார்கள்?
(எ – று.)

      கீழ்இவன் மகளிர் முன்னிலையில் வீரவாதங் கூறிவந்ததனால், ழுவஞ்சிய
ரென்சொலார்ழு என்றாளென்னலாம்.  மகளிரும் பரிகசிப்ப
ரெனவே,
ஆண்மக்கள் பரிகசிப்ப ரென்பது கூறாதே அமையும்.  துணிவு
வேறுண்டோ என்றது – மீண்டுபோவது துணிவன் றென்பதைத் தெரிவிக்கும்.
வெல்லும் ஆற்றல் இலையேனும் முகத்திலும் மார்பிலும் விழுப்புண்பட்டாயினும்
மீண்டால் ஊறஞ்சாமை விளங்கு மென்றற்கு, ழுபுண்படாது மீண்டாலென்சொலார்ழு
எனப்பட்டது.  மகளிர் திரிகரணமும் வேறுபட அறியவொண்ணாத
நெஞ்சாழமுடையராதலால், அவர்க்கு ழுவஞ்ச நெஞ்சுடைழு என்ற அடைமொழி
கொடுக்கப்பட்டது; ழுஆழாழியென்னவளவுபடா வஞ்ச நெஞ்சப், பாழான மாதர்ழு
என்றார் பின்னோரும்.  ழுவஞ்சியர்ழு என்ற சொல் – வஞ்ச முடையாராதல்பற்றி
அவர்க்கு இப்பெயர் அமைந்ததுபோலு மென்ற கருத்துத் தொனிக்க நிற்கும்.
ழுமறவோய்ழு என்று விளித்தது, உத்ஸாஹ முண்டாக்குதற் பொருட்டு. 

நிலையும் முட்டியும் நிலை பெற நின்று, நேர்படத் திண்
சிலை வளைத்து, வெஞ் சிலீமுகம் சிற்சில தொடுத்து,
மலை இலக்கு என யாரையும் மலைந்திடு; மலைந்தால்,
அலை கடல் புவி அரசரில் ஆர் எதிர் நிற்பார்?

(நீ),-நிலைஉம் – (போரில்) நிற்கும் நிலைமையும், முட்டி உம்-
கையில் ஆயுதங்களைப் பிடிக்குந் தன்மையும், நிலை பெற-
உறுதியாயிருக்கும்படி, நின்று – (தைரியத்தோடு) நின்று,-திண் சிலை – வலிய
வில்லை, நேர்பட – செவ்வையாக, வளைத்து – வணக்கி நாணேற்றி, சில் சில
வெம் சிலீமுகம் தொடுத்து – சிலசில கொடிய அம்புகளை எய்து,- மலை
இலக்கு என – மலை ஒப்பென்னும்படி [சிறிதுஞ் சலியாமல்], யாரைஉம் –
எவரையும், மலைந்திடு – எதிர்த்துப் போர்செய்; மலைந்தால் – (இவ்வாறு)
பொருதால், அலை கடல் புவி அரசரில் – அலைகின்ற கடலாற் சூழப்பட்ட
பூமியிலுள்ள அரசர்களுள், எதிர் நிற்பார் – (உன்) எதிரில் நிற்க வல்லவர்,
ஆர் – யாவருளர்? – (எ – று.) எல்லாரும் புறங்கொடுத்துப் போவரென்பதாம்.

    இதனால், அருச்சுனன் சிறிது தேறிய உத்தரனுக்குத் தைரியத்தை யூட்ட
முயல்கின்றான்.  நிலை – போரில் வில்வளைத்து அம்பினை எய்வார்க்கு உரிய
நிலை: அது – பைசாசம், மண்டலம், ஆலீடம், பிரதியாலீடம் என நான்கு
வகைப்படும்:  அவற்றுள், ஒருகால் நிலைநின்று ஒரு காலை முடக்கல் –
பைசாசநிலை; இருகாலும் பக்கல்வளைய மண்டலித்தல் – மண்டலநிலை;
வலக்கால் மண்டலித்து இடக்கால் முந்துறல் – ஆலீடநிலை; வலக்கால்
முந்துற்று இடக்கால் மண்டலித்தல் – பிரதியாலீடநிலை.  முட்டி = முஷ்டி:
கைப்பிடி.  நேர்படத் தொடுத்து என்று இயைத்து – பகைவர்க்கு எதிராக
அம்புதொடுத்து என்றலும் அமையும்.  ழுமலையிலக்கெனழு என்றதற்கு –
மலையே (எமது அம்புக்கு ஏற்ற) குறியாவது என்று எண்ணி யெனவும்
உரைக்கலாம்;  இக்கருத்து, செருக்கினாலாவது.  சிலீமுகம் – கூர்மையை
முகத்தினுடையதென்று அம்புக்குக் காரணப் பெயர்.

தூண்டு மா இவை, சொரி மதக் களிறு இவை, துரங்கம்
பூண்ட தேர் இவை, பதாதி மற்று இவை!’ எனப் புகல,
‘ஈண்டு நின்றவை யாவையும் யா எனத் தெரியா,
மீண்டு போவதே உறுதி!’ என்றனன் இகல் வீரன்.39.-பிருகந்நளைதேற்றவும் உத்தரன் தேறாது ஓடிவிடப் பார்த்தல்.

ழுதூண்டும் மா இவை – செலுத்தப்படுகின்ற குதிரைகள் இவை:
சொரி மதம் களிறு இவை – பொழிகின்ற மதசலத்தையுடைய யானைகள் இவை:
துரங்கம் பூண்ட தேர் இவை – குதிரைகள் பூட்டிய தேர்கள் இவை: பதாதி
இவை – காலாட்சேனைகள் இவைழு, என – என்று, புகல – (பேடி
சதுரங்கசேனையைக்காட்டி எடுத்துச்) சொல்ல,-இகல் வீரன் – வலிய
வீரத்தன்மையையுடையவனான உத்தரன், ஈண்டு நின்றவை யாவைஉம் –
இங்குப் பொருந்தியவை யெல்லாவற்றையும், யா என – எவை [இன்னவை]
யென்று, தெரியா – தெரிந்துகொள்ளாமல், ழுமீண்டு போவதுஏ – திரும்பிச்
சென்றுவிடுவதே, உறுதி – துணிவான காரியம்,ழு என்றனன் – என்று
சொன்னான்; (எ – று.)

      இவன்படையின் தன்மை கண்டறியா னென்று, பேடி, குதிரை முதலியன
இவைஇவை யெனச் சொல்லிக்காட்டினன்:  காட்டவும் அச்சமிகுதியால்
அச்சொல்லைச் செவியினாலேற்காமல், உத்தரன் இங்குநின்றால் உயிர்தப்புவது
அரிது என்று கருதி மீண்டுபோவதே யுறுதியென்றான்.  உத்தரனை ழுஇகல்
வீரன்ழு என்றது, இகழ்ச்சி.

     துரங்கம் – விரைவாய்ச் செல்வது என்று பொருள்படும் வடசொல்.
ழுபதாதிழு என்ற வடசொல்லுக்கு – கால்களினாலே நடந்து செல்பவனென்பது
பொருள்: இங்கு ழுபதாதிழு என்றது – காலாள்களின் கூட்டத்தை யுணர்த்தி
அஃறிணையின்பாற் பட்டதனால், ழுபதாதி யிவைழு எனப்பட்டது. மற்று – அசை.

வெயர்த்த மேனியை நறும் பனி நீரினால் விளக்கி,
‘அயர்த்து, நீ முதுகிடாது ஒழி, இமைப்பொழுது; ஐயா!
உயர்த்த பல் கொடிப் பகைஞரைத் தனித்தனி ஓட்டி,
பெயர்த்து நல்குவேன் நிரையும்’ என்று உரைத்தனள், பேடி.40.-பிருகந்நளை உத்தரனுக்குச் சைத்தியோபசாரஞ் செய்து,
ழுயான் பொருது பகைவெல்வேன்ழு எனல்.

(பின்பு), பேடி-,-வெயர்த்த மேனியை-(அச்சத்தினால்)
வேர்வையடைந்த (உத்தரனது) உடம்பை, நறும் பனி நீரினால் விளக்கி –
வாசனைவீசுகின்ற பனிநீரைத் தெளித்துத் துடைத்து (அயர்ச்சியைப்போக்கி)த்
தேற்றி,(அவனை நோக்கி), ழுஐயா – தலைவனே! நீ -, இமைபொழுது –
ஒருக்ஷணகாலம், அயர்த்து முதுகு இடாது ஒழி – தளர்ந்து முதுகு கொடுத்து
ஓடாமலிரு; (நான்) உயர்த்த பல் கொடி பகைஞரை – உயர எடுத்த பலவகைத்
துவசங்களையுடைய பகைவர்களை, தனி தனி ஓட்டி – தனித்தனியாக ஓடும்படி
செய்து, நிரைஉம் – பசுக்களையும், பெயர்த்து நல்குவேன் –
(அவர்களிடத்தினின்று) மீட்டுக்கொடுப்பேன்,ழு என்று உரைத்தனள் – என்று
சொன்னாள்; (எ – று.)

     உத்தரனுக்குச் சைத்தியோபசாரஞ் செய்து தேற்றி, பேடிவடிவான
அருச்சுனன் தான் பகைவென்று ஆநிரைகளை மீட்டுத்தருவேனெனக்
கூறினனென்க.  பீஷ்மருக்குப் பனைக்கொடியும், துரோணருக்கு
வேதக்கொடியும், அசுவத்தாமனுக்கு அன்னக்கொடியும், கர்ணனுக்குக்
கச்சைக்கொடியும், துரியோதனனுக்குப் பாம்புக்கொடியும் முதலாக அனைத்தும்
அடங்க, ழுபல்கொடிழு என்றாள்.  வெயர்த்தல் – புழுங்குதல்; இது – இங்கே,
அச்சத்தின் மெய்ப்பாடு.  பனிநீர் – ஒருவகை வாசனை நீர்.  ழுதனித்தனி ஓட்டிழு
என்றது – இருவர் ஒருவழிச்செல்லாதவாறு சிதறடித்தென்றபடி. 

கொடித் தடந் தனித் தேரின்நின்று உகைத்து முன் குதியா,
அடித் தலம் பிடர் அடித்திட ஓடலும், அவனைத்
தொடித் தடம் புயம் இரண்டையும் தொடர்ந்து போய்த் துவக்கிப்
பிடித்து வந்து, ஒரு நொடியினில் தேருடன் பிணித்தான்.41.-உத்தரன் குதித்தோட, பிருகந்நளை
அவனைப்பிடித்துவந்து தேர்க்காலிற் கட்டுதல்.
  

 (அது கேட்டும் உத்தரன் அச்சந்தெளியாமல்), கொடி தட
தனிதேரினின்று – துவசத்தையுடைய பெரிய ஒன்றாகிய [ஒப்பற்ற] தேரினின்று,
உகைத்து – எழும்பி, முன் குதியா – முன்னே குதித்து, அடி தலம் பிடர்
அடித்திட ஓடலும் – பாதங்கள் பின்புறத்திலே அடிக்கும்படி (அதிவேகமாக)
ஓடிப்போன வளவில்,- (அருச்சுனன்), ஒரு நொடியினில் – ஒரு
கணப்பொழுதிலே, அவனை – அவ்வுத்தரனை, தொடர்ந்து போய் –
பின்தொடர்ந்து ஓடிச் சென்று, தொடி தட புயம் இரண்டையும் –
தொடியென்னும் வளையணிந்த (அவனது) பெரிய தோள்களிரண்டையும்,
துவக்கி – கட்டி, பிடித்து வந்து – பிடித்துக்கொண்டு வந்து, தேருடன்
பிணித்தான் – தேரோடு கட்டினான்; (எ – று.)

     ழுதேர்விடும் விசயனுக்கிவள்ழு (31) என்றும், ழுஉரைத்தனள் பேடிழு (40)
என்றும் பேடிவடிவிற்கு ஏற்பப் பெண்பாலாற் கூறி வந்தவர், இனி ஆண்மை
காட்டத் தொடங்கியதனால், ஆண்பாலாற் கூறலாயினர்.  உகைத்தல் –
அழுத்தியெழுதல்.  ழுஅடித்தலம் பிடரடித்திடழு என்றது-அவன் ஓடின
ஓட்டத்தின் வேகமிகுதி கூறியவாறு:  தன்மைநவிற்சியணி.  

பிணித்த தேரினைப் பெற்றமும் பிற்படக் கடாவி,
திணித்து அரும் பெரும் பொதும்பரில் சேர்த்திய சிலையும்
துணித்து மேவலர் முடி உகு சோரி தோய் தொடையும்
கணித்த எல்லையில், கொண்டு, மீண்டு, அமர்க் களம் கலந்தான்.42.-பிருகந்நளை தேர்செலுத்தி, முன்பு தான் வைத்த வில்லையும்
அம்பையும் எடுத்துவருதல்.

(அருச்சுனன்), பிணித்த தேரினை – (அவ்வாறு உத்தரனைச்)
சேர்த்துக் கட்டிய இரதத்தை, பெற்றம்உம் பின்பட – (வேகத்திற்சிறந்த) காற்றும்
பின்னிடும்படி [காற்றினும் விரைவாக], கடாவி-செலுத்திச் சென்று,-அரும்
பெரும் பொதும்பரில் – (பிறர் அறிதற்கு) அரிய பெரிய மரப்பொந்தில்,
திணித்து சேர்த்திய – (முன்பு) கட்டி மறைத்து வைத்துள்ள, சிலைஉம்-(தனது)
வில்லையும், மேவலர் முடி துணித்து – பகைவர்களது தலைகளை அறுத்து,
உகு சோரி தோய் – (அவற்றினின்று) பெருகுகின்ற இரத்தந் தோயப்பெற்ற,
தொடைஉம் – அம்புகளையும், கணித்த எல்லையின் கொண்டு – நினைத்த
மாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, மீண்டு – திரும்பிவந்து, அமர்களம் கலந்தான்
– யுத்தஞ்செய்யுமிடத்தைச் சேர்ந்தான்; (எ – று.)

     ழுபொதும்பரிற் சேர்த்திய சிலையும் தொடையும்ழு என்றது –
கீழ்ப்பாண்டவர்கள் அஞ்ஞாதவாசஞ் செய்யச் செல்லும்பொழுது
விராடநகர்ப்புறத்து நன்காட்டிற் காளிகோயிலுக்கெதிரிற் பெரியதொரு
வன்னிமரத்தின் பொந்திலே தம்தம் ஆயுதங்களையும் கவசங்களையும்
பிறவற்றையும் ஒளித்துவைத்து வேறெவரும் அறியாதபடி மந்திரமோதிக்
காப்பிட்டு வந்தமையிலென்க.  பொதும்பர் – பொதும்பு என்னும்
மென்றொடர்க்குற்றியலுகரத்திற்கு அர்-போலி.  மேவலர் – விரும்பிச்
சேராதவர்.  சொரிவது – சோரி, இரத்தம்.  தொடுக்கப்படுவது, தொடையெனக்
காரணக்குறி. ழுகணித்த எல்லையின்ழு என்பதற்கு – (முன்பு
அஜ்ஞாதவாசத்துக்குக்) குறித்தகாலத்தின் முடிவிலென்று உரைப்பாருமுளர்.
திணிதரும் என்று எடுத்து – வலியமைந்த என உரைப்பர், ஒருசாரார்

எரிப் புறத் தருத் தரு படை யா?’ என வினவ,
‘கிரிப் புறப் பெருங் கான் உறை கிரீடிய’ என்ன,
‘தெரிப்புறப் புகல்; எவ் வயின் சேர்ந்தனன், அவன்?’ என்று,
அரிப் புறத் தடங்கண்ணியைக் கேட்டனன், அவனும்.43.-இதுவும், அடுத்தகவியும் – உத்தரனுக்கும் பிருகந்நளைக்கும்
நடந்த சம்பாஷணையைத் தெரிவிக்கும்.

எரி புறம் – நெருப்பைத் தன்னிடத்தே யுடைய, தரு –
வன்னிமரம், தரு – தந்த, படை – ஆயுதங்கள், யா-எவருடையவை?’ என
வினவ -என்று (உத்தரன்) கேட்க,- ‘கிரி – மலைகளிலும், புறம் – அவற்றின்
புறத்திலுள்ள, பெருங் கான் – பெரிய காடுகளிலும், உறை – வாசஞ்செய்த,
கிரீடிய – அருச்சுனனுடையவை’, என்ன – என்று (உருக்கரந்த அருச்சுனன்)
சொல்ல,- ‘அவன் எ வயின் சேர்ந்தனன் – அவ்வருச்சுனன் எந்த இடத்திற்
சென்று சேர்ந்தான்? தெரிப்பு உற புகல் – தெரியும்படி சொல்,’ என்று-, அவன்
உம் – அவ்வுத்தரனும், அரி புறம் தட கண்ணியை – (சிவந்த) ரேகைகளைத்
தம்மிடத்தேயுடைய பெரிய கண்களையுடையளான பேடியை, கேட்டனன் –
வினவினான்; (எ – று.)

     வேறுவடிவுள்ள அருச்சுனன் படைக்கலங்களை யெடுக்கவே, உத்தரன்
அவனை வினவி, அவ்வருச்சுனன் மறுமொழிகளில் மீண்டுந்தோன்றிய
ஐயத்தைஉத்தரன் வினாவினனென்க.  வன்னிமரத்தைக்கடைந்தால்
நெருப்புத்தோன்று மாதலால் அது ‘எரிப்புறத்தரு’ எனப்பட்டது.  இனி, புறம் –
(நகரத்துக்குப்) புறத்தில் [புறங்காட்டிலேயுள்ள], எரித் தரு – வன்னிமரம், தரு-
கொடுத்த என்றுமாம்.  ‘எரி’ என்ற வடசொல் – வன்னியென்ற சொல்லைக்
குறித்திட, அது – தன்பொருள்களிலொன்றான ஒருவகை மரத்தையுணத்திற்று;
இது, லக்ஷிதலக்ஷணை; தரு – வடசொல். கிரீடிய – பலவின்பாற் குறிப்புமுற்று.
பெண்தன்மை மிக்கிருத்தலால்.  ‘அரிப்புறத்தடங்கண்ணி’ என்றார்.  அவனும்
என்பதற்கு-பிருகந்நளையாகிய அவ்வருச்சுனனும் என்று உரைத்து, அதனை
மேல் 45-ஆஞ் செய்யுளில் வரும் ‘விடுத்தான்’ என்பதற்கு
எழுவாயாக்குதலுமொன்று.

      கிரீடி- கிரீடமுடையவன்; வடசொல்: அதுஈயீறு இகரமாய்க் கிரீடியென
நின்றது.  பாசுபதாஸ்திரம் பெற்றபின்பு நிவாதகவசகாலகேயவதத்திற்காகத்
தேவேந்திரன் அருச்சுனனைத் தன்னுலகத்துக்கு அழைத்துக்கொண்டு
போனபொழுது அங்குத் தன் ஆசனத்தில் அருத்தாசனங்கொடுத்து அதில்
வீற்றிருக்க வைத்து, முன்புபிரமன் தனக்குத் தந்தருளிய இரத்தினகிரீடத்தைச்
சூட்டிட, அம்முடியணியை உரியதாகப் பெற்றனனாதலால், அருச்சுனனுக்குக்
கிரீடி யென்று பெயர்.    

“கிரிடி எங்கு உளன்?” என்று எனைக் கேட்ட நீ, கேண்மோ;
இருடி ஆகி நின் தாதை ஓர் ஆசனத்து இருக்கும்
புருடன் இப் பதி புகுந்த நாள், வந்து உடன் புகுந்து, ஓர்
அரிடம் ஆன தன் விதியினால் பேடியும் ஆனான்.

இதுவும், அடுத்த கவியும் – ஒரு தொடர்.

     (இ -ள்.) (அருச்சுனன் உத்தரனை நோக்கி),- ழுகிரிடி எங்குஉளன் என்று
எனை கேட்ட – அருச்சுனன் எங்கே யிருக்கின்றானென்று என்னை வினவிய,
நீ-, கேண்மோ – கேட்பாயாக: இருடி ஆகி – முனிவடிவமாய், நின் தாதை ஓர்
ஆசனத்து இருக்கும் – உன்தந்தையான விராடராசன் வீற்றிருக்கின்ற
ஆசனத்தில் அவனுடன் எழுந்தருளியிருக்கின்ற, புருடன் – சிறந்த புருஷனான
கங்கபட்ட னென்பவன், இ பதி புகுந்த நாள் – இந்த ஊர்க்கு வந்து சேர்ந்த
நாளில், (அக்கிரீடி), உடன் வந்து புகுந்து – கூட வந்து சேர்ந்து, அரிடம்
ஆன தன் ஓர் விதியினால் – தீமையாகிய தனது ஊழ்வினையொன்றினால்,
பேடிஉம் ஆனான் – பேடியுருவமாகவுமாயினான்; (எ – று.)

     பிருகந்நளை அருச்சுனனுடைய செய்தியைக் கூறலாயினாளென்க.
கேண்மோ, மோ – முன்னிலையசை.  அரிடம் = அரிஷ்டம்:  வடசொல்.
விதியாவது – இருவினைப் பயன் செய்த உயிரைச்
சென்றடைதற்கு ஏதுவாகிய
நியதி, எனை = தொகுத்தல்.  ழுபேடியும்ழு என்ற உம்மை – இறந்தது தழுவிய
எச்சத்தோடு இழிவுசிறப்பு.  ழுஇப்பதிழு என்றது, மச்சநாட்டிற்கு ராசதானியான
விராடநகரத்தை.

ழுஓர்அரிடமான தன்விதியினால்ழு என்றது – வனவாசகாலத்தில்
அருச்சுனன் தான் பரமசிவனிடத்துப் பாசுபதம்பெற்றபின்பு ஆங்கு வந்து
அழைத்துப்போன தந்தையாகிய இந்திரனுடனே தேவலோகஞ்சென்ற பொழுது
அங்குத் தன்னைக்காமித்துத் தன்பக்கல் இரவில் வந்து சேர்ந்த
ஊர்வசியென்னுந் தெய்வமகளைத் தாயென்று கொண்டு தாள்களில் விழுந்து
வணங்கிய வளவில், அவள் மிகவும் மனம்வருந்திக் கோபித்து ழுபேடியாவாய்ழு
என்று சாபங்கொடுத்து, பின்னர் அதனை அறிந்த இந்திராதி தேவர்களின்
வேண்டுகோளினால் தான் வேண்டும்நாளில் அப்பேடிவடிவம் ஓராண்டு
வரும்படி வரமாக மாற்றினமையைக் கருதி.  

யாண்டு சென்றிலது; இன்னமும் ஈர்-இரு கடிகை
வேண்டுமால்; இனி, ஈண்டை அவ் விசயனும் தோன்றும்;
மீண்டு போகலை; விடு, விடு; விரை பரித் தடந் தேர்
தூண்டு நீ!’ என, தோளில் அத் துவக்கையும் விடுத்தான்.45.-பிருகந்நளை உத்தரனைத் தேற்றிக் கட்டவிழ்த்துவிடுதல்.

யாண்டு சென்றிலது – (அஜ்ஞாதவாசத்துக்கு நியமித்த) ஒரு
வருஷகாலம் (இன்னும் முடியக்) கழிந்ததில்லை; இன்னமும்-, ஈர் இரு கடிகை
வேண்டும் – நான்குநாழிகைப்பொழுது கழியவேண்டும்; இனி-(அந்நான்கு
நாழிகைக்குப்) பின்பு, ஈண்டை – இவ்விடத்தில், அ விசயன்உம் – அந்த
அருச்சுனனும், தோன்றும் – வெளிப்பட்டுத் தோன்றுவான்; நீ-, மீண்டு
போகலை – திரும்பி ஓடிப்போவதை, விடு விடு – விட்டுவிடு; விரை பரி தட
தேர் – வேகமாயோடுகின்ற குதிரைகளைப் பூட்டிய தேரை, தூண்டு – செலுத்து,
என – என்று சொல்லி, தோளில் அ துவக்கைஉம் – தோள்களைத் தேரோடு
அணைத்துக் கட்டிய அக்கட்டையும், விடுத்தான்-அவிழ்த்துவிட்டான்; (எ – று.)

     பிருகந்நளை அருச்சுனன் செய்தியைக்கூறி உத்தரனைச்சமாதானப்படுத்தி
அவனைக்கட்டியிருந்த கட்டவிழ்த்துத் தேரைச்செலுத்துமாறு கூறினளென்க.
கடிகை – அறுபது விநாடி.  இனி, விடுவிடு – (மிகவும் விரைவாகத்) தேரை
ஓட்டு என்றலுமாம்.  துவக்கு-முதனிலைத்தொழிற்பெயர்.  ழுஇன்னம்ழு என்பது-
ஓர் இடைச்சொல்.  ழுவேண்டும்ழு என்பது – ஒருவகை வியங்கோள் வினைமுற்று

அறிந்து, தாள் விழுந்து எழுந்து, பின் ஆங்கு அவன் அருளால்,
செறிந்த மால் பெருஞ் சிறப்பை அச் சிறுவனும் பெற்று,
பிறிந்த பற்பல பேர் அணி நால் வகைப் படையும்
முறிந்து போக, அத் தேர் விடு தொழிலினில் மூண்டான்.

அ சிறுவன்உம் – அந்த உத்தரகுமாரனும், அறிந்து –
(அப்பேடியாகிய அருச்சுனன் சொன்னவற்றை யெல்லாந்) தெரிந்து கொண்டு,
ஆங்கு- அப்பொழுது, தாள் விழுந்து – (அவனுடைய) பாதங்களில் வீழ்ந்து
வணங்கி, எழுந்து – எழுந்திருந்து, பின் – பின்பு, அவன் அருளால் –
அவ்வருச்சுனனது கட்டளையால், செறிந்த மால் பெரும் சிறப்பை – (அருள்)
பொருந்திய திருமாலின் [ஸ்ரீ கிருஷ்ணனின்] மிக்க சிறப்பை [அருச்சுனனுக்குச்
சாரத்தியஞ் செய்யுந் தொழிலை], பெற்று – (தான்) அடைந்து,- பிறந்த –
வகுக்கப்பட்ட, பல் பல பேர் அணி – பல பல பெரிய வரிசைகளையுடைய,
நால்வகை படைஉம்-(ரத கஜ துரக பதாதி என்னும்) நான்குவகைப்பட்ட
(துரியோதனாதியர்) சேனைகளும், முரிந்துபோக – அழிந்தோடும்படி, அ தேர்
விடு தொழிலினில் – அந்தத்தேரை யோட்டுஞ் செய்கையில், மூண்டான் –
முயன்றான்; (எ – று.)

     உத்தரன் அருச்சுனனுக்குச் சாரதியானானென்ன வேண்டிய விடத்து
ழுமால் பெருஞ்சிறப்பையச் சிறுவனும் பெற்றுழு என்றது –
பிறிதினவிற்சியணியாம்;சொல்லவேண்டியதை இனிமைபடச் சுற்றுவழியாகச்
சொல்லுதல், இதனிலக்கணம்.  தேவாதிதேவனாகிய தனது பெருமையெல்லாம்
அழியமாறிப் பார்த்தனுக்குச் சாரத்தியஞ் செய்து அடியவர்க்
கெளியனாயிருக்குந் தன்மையை வெளியிடுதலால், ழுசெறிந்த மால்
பெருஞ்சிறப்புழு என்றார்.  அன்றியும், சிறந்த வீரருக்குப் பெரும்போரிற்
சாரதியாயிருத்தலும் ஒரு சிறப்பாகும்; மேற்பதினேழாம் போர்ச்சருக்கத்தில்
ழுபுகழே பூண்டு, வேந்தராயமர்க்களத்தி லதிசயித்த வீரரானவர்க் கிதுதான்
மேம்பாடன்றோ, மாந்தராயெக்கலையும் வல்லார்க்கன்றி வாசி
நெடுந்தேரூரவருமோ?ழு என வருவது காண்க.  மால் பெரு – மிகப்பெரிய என
ஒரு பொருட்பன்மொழி யென்பாரு முளர்.  ழுசிறுவனும்ழு என்ற உம்மை –
இறந்தது தழுவிய எச்சத்தோடு இழிவு சிறப்பு.  ழுஅறிந்துழு என்பதற்கு (இப்பேடி
அருச்சுனனே யென்று) உணர்ந்து என்று உரைப்பர் ஒருசாரார்.  அருள் –
அருளோடு இடுங் கட்டளைக்கு இலக்கணை; காரணவாகுபெயர்.  பற்பல
பேரணி பிறிந்த என்று மொழிமாற்றி – பலபல பேரணிகளாகப் பிரிந்த
வென்றலு மொன்று; பிரி, முரி என்பனபோலப் பிறி, முறி என்னும் வினைகளும்
உள்ளனவாம்.

ஓடினானும் இத் தேர் விரைந்து ஊர்பவன்!’ என்றும்,
‘பேடி நாம் முதல் ஐயுறும் பெருந்தகை!’ என்றும்,
நாடினார்-பலர், நந்தியாவர்த்த நாள்மாலை
சூடினான் நெடுஞ் சேனையில், துரோணனே முதலோர்.47.-துரோணனாதியர் பேடியைக்குறித்துச்சங்கித்தல்.

நாள் நந்தியாவர்த்தம் மாலை சூடினான் – அன்றைக்கு
மலர்ந்த [புதிய] நந்தியாவட்டப்பூமாலையைச் சூடிக்கொண்டிருக்கின்றவனான
துரியோதனனது, நெடுஞ் சேனையில் – பெரிய சேனையிலே, துரோணன்ஏ
முதலோர் பலர் – துரோணாசாரியன் முதலிய (அறிவிற்சிறந்த) பல வீரர்கள்,
‘ஓடினான்உம்-(முன்னே தேரேறிப்போர்செய்ய
வந்து) அஞ்சியோடிய குமாரனும்,
இ தேர் விரைந்து ஊர்பவன் – (பேடியின் செயலால் தேறி) இந்தத்தேரை
விரைவாய்ச் செலுத்துஞ் சாரதியானான்,’ என்றும்-, ‘பேடி-, நாம் முதல் ஐயுறும்
பெருந்தகை – நாம் முதலிற் சந்தேகிக்கத்தக்க பெருமைக்குணங்களையுடைய
அருச்சுனனாம்,’ என்றும்-, நாடினார் – ஆலோசிப்பவரானார்கள்; (எ – று.)

     ஓடினவன் பேடியினால் தேற்றப்பட்டுத் தேரூரும் பாகனாக, பேடி
இப்போது ரதிகனாக ஆய்விட்டதனால், இப்பேடி அருச்சுனனாக
இருக்கவேண்டு மென்ற ஓராலோசனை துரோணாசாரியர்முதலியோருக்கு
உண்டாயிற்றென்பதாம்.  ஓடினானும், உம்மை – இழிவுசிறப்பு.  ஐயுறு –
ஐயமுறு: விகாரம்; காமுறு, ஏமுறு என்பனபோல.  பெருந்தகை –
அன்மொழித்தொகை: தகை – தகுதி, சற்குணம்.  நந்தியாவர்த்தம் – ஒரு
பூஞ்செடி; இதனை, இக்காலத்து நஞ்சாவட்டையென்பர்:  இம்மாலை,
துரியோதனனுக்கு உரிய அடையாளப்பூமாலையாம்.

     துரோணன் – பரத்துவாசமுனிவனது குமாரன்; கிருபாசாரியனுடன்
பிறந்தவளான கிருபியின் கணவன்; அசுவத்தாமனது தந்தை;
ஸகலசாஸ்திரங்களையும் தன் பிதாவினிடம் கற்று, படைத்தொழிலைப்
பரசுராமனிடத்து ஏழுநாளிற்பயின்றவன்: துரியோனாதியர் நூற்றுவர்க்கும்
பாண்டவரைவர்க்கும் அஸ்திரசஸ்திரங்களைக் கற்பித்த ஆசிரியன்:
வைதிகவிரதாநுட்டானஞ் செய்து கொண்டிருக்கையில்
தேவர்களாலேவியனுப்பப்பட்ட மேனகையின் கட்டழகைக்கண்டு காதல்கொண்ட
பரத்துவாசமுனிவனது விருப்பத்தால் ஒரு துரோணகும்பத்திற் பிறந்தமைபற்றி,
இவனுக்குத் துரோணனென்று பெயர்; த்ரோணகும்பம் – பதக்களவுகொண்ட
பாத்திரம்;  துரோணம் – பதக்கு, இரண்டுகுறுணி.  இனி, துரோணம் என்று
வில்லுக்குப் பெயரிருத்தலால், துரோணனென்பது – வில்வன்மைபற்றிவந்த
பெயருமாம்.  இவன், அங்கி வேசமுனிவன் பக்கலிலும் படைகள் தேர்ந்தான்.
ஏ – உயர்வு சிறப்பு.  

பேடி, அன்று, தன் பெண்மையை ஆண்மையாய்ப் பிறர் கொண்-
டாட, அந்த வெஞ் சாபமும் தொடிக் கையில் ஆக்கி,
‘கோடி அம்புகள் ஓர் ஒரு தொடையினில் கோத்து,
வீடுவிப்பன்; நீ அஞ்சிடா விடுக, தேர்!’ என்றான்.48.-பிருகந்நளை கையில்வில்லேந்தி, உத்தரனை அஞ்சாது
தேர் செலுத்தச் சொல்லுதல்.

அன்று – அப்பொழுது, பேடி – பேடிவடிவமமைந்த
அருச்சுனன், பிறர் – அயலார் [பகைவர்], தன் பெண்மையை – தனது
மிக்கிருக்கும் பெண்தன்மையை, ஆண்மைஆய் கொண்டாட –
ஆண்தன்மையாக மெச்சும்படி, அந்த வெம்சாபம் உம் – அந்தக்கொடிய
வில்லையும், தொடி கையில் ஆக்கி – வளையலணிந்த தன் 
கையில்
ஏந்திக்கொண்டு,- (உத்தரனை நோக்கி) ழுகோடி அம்புகள் – அநேகம்
பாணங்களை, ஓர் ஒரு தொடையினில் – தொடுக்கும் முறையொவ்வொன்றிலும்,
கோத்து-தொடுத்து, வீடுவிப்பன் – (பகைவர்களைக்) கொன்று (பசுக்களை)
மீட்பேன்; நீ-, அஞ்சிடா – அச்சங்கொள்ளாமல், தேர் விடுக – தேரைச்
செலுத்துவாயாக,ழு என்றான் – என்று தைரியங் கூறினான்; (எ – று.)

     வன்னிமரத்தினின்று எடுத்துவந்தமை கீழ்க்கூறியதனால், ழுஅந்த
வெஞ்சாபம்ழு என்றார்.  வில்லேந்துதல் ஆடவரியல்பு ஆதலால் ழுபெண்மையை
ஆண்மையாய்ப் பிறர் கொண்டாடச் சாபங்கையிலாக்கிழு எனப்பட்டது.
காண்டவதகன காலத்தில் அருச்சுனனுக்கு அக்கினிபகவான் கொடுத்த வில்,
ழுகாண்டீவம்ழு என்னும் பெயரினது.  முதலிரண்டடிகளில் –
தன்பேடித்தன்மையைப் பிறர் ஆண்மையாய்க் கொண்டாடும்படி முன்னே
ஊர்வசியாற் கொடுக்கப்பட்டு வந்தடைந்த கொடிய சாபத்தையுந் தொடியணிந்த
கைம்மாத்திரத்தில் [கைவசத்தில்] ஆக்கி யென்ற பொருளும் தோன்றும்.
சாபம் – சபித்தல் வில் என இவ்விருபொருளுடையதாதலை, ழுசாபமே சபித்தல்
வில்லாம்ழு என்னும் நிகண்டினாலும் அறிக.  ழுவீடுவிப்பன்ழு என்பதற்கு – உயிர்
விடுவிப்பேனென்றும், நிரைவிடுவிப்பேனென்றும் இருபொருளும் கொள்ளப்
பட்டன.  விடுவிப்பனென்பது  முதல் நீண்டு வந்தது: வீடுவிப்பல் என
அல்லீறாகவும் பிரிக்கலாம்.

என்ற போது, அவன் தேரினை இமைப்பினில் செலுத்த,
சென்று, போர் முனைச் சிலை விடு சிலீமுகங்களினால்,
கொன்ற போர் மன்னர் ஈறு இலர்; குருகுலத்தவர் ஆய்
நின்ற போர் முடி மன்னரும் சுளித்து, உளம் நெளித்தார்.49.-பிருகந்நளை அம்பெய்து பலஅரசரை அழித்தல்.

என்ற போது – என்று (அருச்சுனன்) சொன்னபொழுதில்,
அவன் – உத்தரன், தேரினை – தேரை, இமைப்பினில் – ஒரு
மாத்திரைப்பொழுதினுள்ளே, செலுத்த – (மிகவிரைவாக) ஓட்ட, போர் முனை –
போர்க்களத்தில், சென்று – போய், சிலை விடு – (அருச்சுனன்) வில்லிற்கோத்து
எய்த, சிலீமுகங்களினால் – அம்புகளினால், கொன்ற – கொல்லப்பட்ட, போர்
மன்னர் – போரிற்சிறந்த அரசர்கள், ஈறு இலர் – எல்லையில்லாதவர்கள்
[மிகப்பலர்]; (அதுநோக்கி),-குருகுலத்தவர் ஆய் நின்ற – குருகுலத்தில்
தோன்றியவர்களாய்ப் (போர் முகத்தில்) நின்ற, போர் முடி மன்னர்உம் –
போர்த்தொழிலில் வல்ல கிரீடாதிபதியான (பீஷ்மன் விதுரன் துரியோதனன்
முதலிய) அரசர்களும், சுளித்து – கோபித்து, உளம் நெளித்தார் – மனம்
பதைத்தார்கள்; (எ – று.)

     மன்னர் உளம் நெளிந்தார் – அஃறிணைச்சினைப்பெயர் உயர்திணை
முதலின் முடிபையே பெற்ற திணைவழுவமைதி; [நன். பொது – 26.]
இமைப்பினிற் கொன்ற என்று இயைத்தலுமாம். 

அன்று போல் அலன், அருச்சுனன்; அம்பிகாபதிபால்
துன்று போர் புரி தவத்தினால் சுடு கணை பல பெற்று,
அன்று போரினில் அவுணரை அமரருக்கு ஆக
வென்று, போனகம் நுகர்ந்து, பொன் தரு மலர் வேய்ந்தான்.50.-இதுவும் அடுத்தகவியும்-விதுரன் துரியோதனனை நோக்கிக்
கூறுதலைத்தெரிவிக்கும்.

மூன்று கவிகள் – ஒரு தொடர்.

     (இ -ள்.) (விதுரன் துரியோதனனை நோக்கிக்கூறுவான்:-) அருச்சுனன்-,
அம்பிகாபதிபால் – பார்வதிகொழுநனான பரமசிவனிடத்தில், துன்று போர் புரி
– நெருங்கிய போரைச் செய்து, தவத்தினால் – (அவனை நோக்கிச்செய்த)
தவத்தால், சுடு பல கணைபெற்று – (பகைவரை) அழிக்கவல்ல பல
ஆயுதங்களைப் பெற்று, அன்று – அப்பொழுதே, அமரருக்கு ஆக-(இந்திரன்
முதலிய) தேவர்களின் பொருட்டாக, அவுணரை – (அவர்களால் வெல்லக்
கூடாத நிவாதகவசர் காலகேயர் என்னும்) அசுரர்களை, போரினில் வென்று –
போர்செய்து ஜயித்து, போனகம் நுகர்ந்து – (இந்திரனுடனே ஒக்கஇருந்து
தேவர்கள் தந்த) உணவை யுண்டு, பொன்தரு மலர்வேய்ந்தான் –
பொன்மயமான கற்பகவிருக்ஷங்களின் மலர்களை (அத்தேவர்களால்)
சூட்டப்பெற்றான்; (ஆதலால்), அன்று போல் அலன் – (இப்பொழுது)
முன்னிருந்தவன்போலல்லன்; (எ – று.)

     இச்செய்யுளினால் பேடிவடிவுடன் தனித்து நின்று பொருதது
அருச்சுனனாக இருக்குமென்றும், ஒன்றியாக இருந்தும் வெல்லக்கூடியவ
னென்பதற்கு வேண்டியகாரணம் இன்னதென்றும் துரியோதனனுக்கு விதுரன்
எடுத்துக்காட்டினானென்க.  விதுரன் கூறுவன துரியோதனனை
நோக்கியாகுமென்பது மேலைச் செய்யுளில் ழுஇறைவழு என வந்த விளியால்
வெளியாம்.  துரோணன் முதலியோர் பேடியை அருச்சுனன்தானோ என்று
ஐயுற்றமையை நாற்பத்தேழாஞ்செய்யுளிற் காணலாம்.  இனி, இச்செய்யுளை
விதுரனது உட்கோளைத் தெரிவிப்பதென்று கொள்ளுதலும், ஒன்று:
கவிக்கூற்றென்று கொள்வாரும் உளர்.

     பாண்டவர்கள் வனவாசஞ்சென்றபொழுது அவர்களில் அருச்சுனன்
வியாசபகவானது கட்டளையின்படி, அம்முனிவனிடம் மந்திரோபதேசம்
பெற்றுக் கைலாசகிரிக்குச் சென்று தவம்புரிகையில் அவனையழிக்குமாறு
துரியோதனனால் ஏவப்பட்ட மூகாசுரன் பன்றி வடிவங்கொண்டு
அருச்சுனன்மீது பாய்ந்து அவனைக் கொல்வதாக வந்தவளவில், சிவபெருமான்
வேடவடிவங்கொண்டு அங்குவந்து அப்பன்றியின்மீது ஓர் அம்பை எய்ய, அது
பிளக்குமுன்னே அருச்சுனன் அம்பொன்றை யெய்து வராகத்தை விழுத்த,
அதுகாரணமாக அவ்விருவர்க்கும் உண்டான போரில், பரமசிவன் எதிரியின்
வில்நாணியை அறுக்க, அருச்சுனன் அவ்விற்கழுந்தாற் கடவுளின்
முடியில்அடித்தனன்.  பிறகு சிவபெருமான், தனது நிஜரூபத்துடனே
அருச்சுனனுக்குத் தரிசனந்தந்து, வில் பாசுபதாஸ்திரம் அம்பறாத்தூணி
முதலியவற்றைக் கொடுத்தருளினான்.  பின்பு அருச்சுனன் அங்கு வந்து
தன்னை அழைத்துச்சென்ற தந்தையான இந்திரனுடனே தேவலோகஞ்சேர்ந்து,
அங்குத் தேவர்கள் வேண்டியபடி அவர்கட்குப் பகைவராய்ப் பலநாளாகப்
பெருந்துன்பமியற்றி வந்த கடலிடையிலுள்ள தோயமாபுரத்தில் வசிப்பவர்களான
நிவாதகவசரென்னும் அசுரர் மூன்றுகோடி பேரையும், அந்தரத்திலுள்ள
இரணியபுரத்தில் வசிப்பவர்களான காலகேயரென்னும் அசுரர்
அறுபதினாயிரவரையும் ஆங்காங்குச்சென்று போர்செய்து அழித்திட்டனன்
என்ற ஆரணிய காண்டவரலாறு இங்கு அறியவேண்டிய வரலாறு.

     அன்றுபோல் அலன் – சூதாடிச் செல்வமிழந்து சென்ற
அந்நாளிலிருந்ததுபோலல்ல னென்றபடி.  ழுபுரிழு – புரிந்து; விகுதி முதலியன
கெட்டுப் பகுதிமாத்திரமாய் நின்ற இறந்தகால வினையெச்சம்.  இனி,
அருச்சுனன் தவத்திலிருக்கும்போதே சிவவேடனோடு போர்செய்தனனாதலால்,
போர்புரி தவம் – போர்செய்து இயற்றிய தவமெனினுமாம்.  ழுஆகழு என்றது –
நான்காம் வேற்றுமைச் சொல்லுருபு.  அம்பிகாபதி – பார்வதியின் கணவன்.
தவத்தினால் அம்பிகாபதிபால் துன்று போர்புரி சுடுகணை பல பெற்று என்றும்
இயைக்கலாம்; துன்று போர்புரிசுடுகணை – மிக்கபோரைச்செய்தற்கு உரிய
கொடிய ஆயுதங்களென்க; கணை – இங்கே,, ஆயுதமென்னும்மாத்திரமாய்
நின்றது; அவை – பாசுபதம், வில், அம்பறாத்தூணி முதலியன.
அஸ்திரசஸ்திரங்களைப் பெற்றபொழுதே பயன்கொள்ளுதல் அருமையாதலால்,
ழுஅன்றுழு என்றார்.

 

     அருச்சுனன் = அர்ஜ்ஜு நன்: இவ்வடசொல்லுக்கு – வெண்ணிறமுடையவ
னென்பது, பொருள்.  இது முதலில் இந்நிறமுடைய கார்த்தவீரிய
மகாராசனுக்குப் பெயராயிருந்து, பின்பு அவனைப் போன்ற
சௌரியதைரியங்களையுடைய பார்த்தனுக்கு இட்டு வழங்கப்பட்டது:  இது,
உவமவாகுபெயரின்பாற்படும்:  பார்த்தன் கருநிறமுடையவனாதலால், அவனுக்கு
அருச்சுனனென்ற பெயர் நிறம்பற்றிவந்ததென்றல் பொருந்தாது; மேல் 59 –
ஆங் கவியையும் நோக்குக.  போனகம் = போஜநம்.  பொன்தரு ஐந்து –
ஸந்தாநம், மந்தாரம், பாரிஜாதம், கல்பகம், அரிசந்தநம் என்பன

தன் நிலத்தினில் குறு முயல் தந்தியின் வலிது” என்று,
இந் நிலத்தினில் பழமொழி அறிதி நீ; இறைவ!
எந் நிலத்தினும் உனக்கு எளிதாயினும், இவர் நம்
நல் நிலத்தினில் வர, அமர் தொடங்குதல் நன்றால்.’

(மற்றும்), இறைவ – அரசனே!-ழுதன் நிலத்தினில் – தான்
இருக்குமிடத்திலுள்ள, குறுமுயல் – சிறிய முயற்குட்டி, தந்தியின் வலிது –
(தன்னிடம் விட்டுப் பெயர்ந்துவந்த பெரிய) 
யானையைக்காட்டிலும்
வலிமையுடையது,ழு என்று-, இ நிலத்தினில் – இவ்வுலகத்துச் சொல்லப்படுகின்ற,
பழமொழி – பழமொழியை, நீ -, அறிதி – அறிவாய்; (ஆகையால்), எ
நிலத்தின்உம்-(தன்நிலம்) அயல்நிலம் என்னும்) எந்த இடங்களிலும், உனக்கு-,
எளிது ஆயின்உம் – (போர்செய்வது) எளிதாயிருந்தாலும், இவர் நம் நல்
நிலத்தினில் வர – இவர்கள் நமது நல்ல இடத்தில் வந்தபின்பு, அமர்
தொடங்குதல் – (நாம்) போரைத் தொடங்குதல், நன்று – நல்லது; (எ – று.) –
ஆல் – ஈற்றசை.

     ழுதன்நிலமானால் முயலும் யானையைவெல்லும்ழு என்றல், உலக வழக்கு.
இது, இவர் வலியிலராயினும் நீ மிக்கவலியுடையையாயினும் இவர்
நிலத்திலிருந்து நீ போர்செய்தால் தோல்வியடைவாயென்னும் பொருள்
தோன்றக் கூறியது.  ழுநெடும்புனலுள் வெல்லு முதலை அடும் புனலி,
னீங்கினதனைப் பிறழு என்பர், இடனறிதலில் திருவள்ளுவரும்.  பழமொழி –
பழமையாகிய மொழி: உலகநடையை ஒட்டி உயர்ந்தோரால் உண்டாக்கப்பட்டு
வழங்குகின்ற கட்டுரை வாக்கியம்.  ழுஇனிமேல், அருச்சுனாதியரை வெல்ல
முடியாதோ?ழு என்று துரியோதனனுக்குத் தோன்றக்கூடிய எண்ணத்திற்குச்
சாமாதானங்கூறுகின்றானென்க.  இப்போது பொருதவர் ஒருகால் பாண்டவராக
இருப்பின் பிறகு எப்படியும் அவர்கள் நம்நிலத்தில் வந்து பொருவராதலால்,
அப்போது அவர்களை வென்றுவிடலாமென்பான் ழுஇவர் நம்நிலத்தினில் வர
அமர்தொடங்குதல் நன்றுழு என்றான்.  துரியோதனனுக்கு ஊக்கம்
குறையாதிருத்தற்பொருட்டும், அவனுக்குக் கோபமுண்டாகாமலிருப்பதைக்
கருதியும், ழுஎந்நிலத்தினு முனக்கு எளிதுழு என்றான்.  தந்தீ –
தந்தங்களையுடையது.  ஆயினும், உம் – உயர்வுசிறப்பு.  குறுமுயல் –
பண்புத்தொகை.            

என்று கூறினன் விதுரனும்; ஏனை அங்கு அருகு
நின்ற வீடுமன் துரோணனும், ‘நினைவு இது’ என்றார்;
அன்று நாக வெங் கொடியவன் கொடிய நெஞ்சு அழன்றான்;
குன்றம் ஆயினும் நீறு எழும், அருகுறக் குறுகின்.52.-அதனை வீடுமனும் துரோணனும்,அங்கீகரிக்க,
துரியோதனன் கோபித்தல்.

என்று-, விதுரனும்-, கூறினன் – சொன்னான்; ஏனை – மற்றும்,
அங்கு – அவ்விடத்தில், அருகு நின்ற – சமீபத்திலிருந்த, வீடுமன்
துரோணனும் – பீஷ்மனும் துரோணாசாரியனும், இது நினைவு என்றார் – இது
(இச்சமயத்துக்கு ஏற்ற) எண்ணமேயென்று சொன்னார்கள்; (அது கேட்டு),
அன்று – அப்பொழுது, நாகம் வெம் கொடியவன் – கொடியபாம்புக்கொடியை
யுடையவனான துரியோதனன், கொடிய நெஞ்சு அழன்றான் –
கொடுந்தன்மையையுடைய மனம் கொதித்தான்;(அப்பொழுது), அருகுஉற –
(அத்துரியோதனனது) சமீபத்தில், குறுகின் – நெருங்கினால், குன்றம்
ஆயின்உம் – மலையேயானாலும், நீறு எழும்-பொடியாய்விடுமன்றோ;

      எளியவரும் தம் நிலத்து வலியராவராதலால் விராடனைச் சேர்ந்தோர்
வலியநம்மைத் தந்நிலத்து வெல்வரென்று கூறியதை வீடுமன் முதலோர்
உடன்பட்டனராக, துரியோதனன் மனம் பொறாமல் அருகே சாரின் குன்றும்
நீறாம்படி அவ்வளவு சினங்கொண்டன னென்றவாறு.  தனது எண்ணத்திற்கு
மாறாகப் பகைவர் சிறப்பை எடுத்துக்கூறியமை குறித்து, துரியோதனன்
கோபித்து நெஞ்சழன்றான்.  அன்றியும், அஞ்ஞாதவாசகாலத்திற்குள்
பாண்டவரைக் கண்டுபிடித்து மீண்டும் காட்டிற்கே துரத்திவிடவேணுமென்று
தான் கொண்டிருந்த எண்ணம் நிறைவேறாமையும் கோபத்திற்குக் காரணம்.
ஈற்றடி – துரியோதனனது சினமிகுதியைவிளக்கும் கவிக்கூற்று.  இனி, –
ழுகுன்றமாயினும்ழு என்னும் நான்காம் அடிமுதல் மேலைப்பாட்டின் முடிவளவும்
ஒரு தொடராக்கி, இதனையும் கர்ணன் பேச்சாகக்கொண்டு – சமீபத்தில் நாம்
நெருங்கிப் போர்செய்தால், நமக்கு இலக்காவது மலையேயானாலும் அதுவும்
பொடியாய் விடுமெனக்கூறினனெனக் கொள்வாருமுளர்.  ழுநினைவிதுவென்றார்ழு
என்பதற்கு – (எங்களுடைய) எண்ணமும் இதுவே யென்றனரென்றுமாம்.
குன்றமாயினும், உம்மை – உயர்வுசிறப்பு; அது, மலையினது பெருமை வலிமை
அசைக்கலாகாத நிலைமைகளை விளக்கிநின்றது.  போர்செய்து நெருக்கினால்
எத்துணைவல்லோரும் அழிவ ரென்றபடி.

     விதுரன் – விசித்திரவீரியனது மனைவியரிலொருத்தியான
அம்பிகையினாலேவியனுப்பப்பட்ட தாதிப்பெண்ணினிடத்துவியாஸ
முனிவரருளாற் பிறந்தவன்; திருதராட்டிரனுக்கும் பாண்டுவுக்கும்
தம்பிமுறையாகின்றவனாதலால், துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும்
சிற்றப்பன்:  விற்போர்த்திறத்தில் மற்றையாவரினும் வல்லவன்;
தத்துவஞானமமைந்தவன்.  இவனை யமதருமராஜனது அமிச மென்றும்,
பரமபாகவதர்களிலொருவனென்றும் நூல்கள் கூறும்.  வீடுமன்-பீஷ்மன் என்ற
வடசொல்லின் சிதைவு; பயங்கரனானவனென்பது பொருள்; அச்சந்தருகின்ற
விரதமுடையவனென்பது கருத்து.  இவன், தன் தந்தைக்கு யோஜநகந்தியை
இரண்டாவது மணஞ் செய்வித்தற்கு அவளை வளர்த்த தந்தையான
செம்படவன் இசைதற்பொருட்டு, தான் விவாகஞ்செய்து
கொள்வதில்லையென்றும், மூத்தமகனாதலாற் பட்டத்திற்கு உரிய தனது
இராச்சியத்தையும் மற்றையெல்லாச் செல்வங்களையும் தனக்குச் சிறிய தாயாக
வருமவளுக்குப் பிறக்கும் பிள்ளைக்கே கொடுப்பேனென்றும், இங்ஙனம்
ஒழித்தற்கு அரிய மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை யென்னும்
மூவகையாசைகளையும் இளமையிலேயே யொழித்துக் கேட்போர்
அஞ்சும்படியான சபதத்தைச் செய்ததனால், இவனுக்கு இப்பெயர்.

     நாகம் என்ற வடசொல் – நகத்தில் வாழ்வது என்று பொருள்படும்; நகம்
– இடம்விட்டுப் பெயராதது: மலையும், மரமும்.  கொடியவன் நெஞ்சு
அழன்றான் – திணைவழுவமைதி.  ழுகொடியவன் கொடியழு என்ற இடத்து
மடக்கு என்னுஞ் சொல்லணி காண்க.  

‘தேரும் அங்கு ஒரு தேர்; தனித் தேரின்மேல் நின்று,
வீர வெஞ் சிலை வளைத்த கை வீரனும் பேடி;
யாரும் நெஞ்சு அழிந்து அஞ்சுவது என்கொல்?’ என்று இசைத்தான்-
சூரன் மா மகன் ஆகிய சூரரில் சூரன்.53.-கர்ணன் அலட்சியமாகக் கூறுதல்.

சூரன் மா மகன் ஆகிய – சூரியனது சிறந்த குமாரனாகிய,
சூரரில் சூரன் – வீரர்களிற்சிறந்த வீரனாகிய கர்ணன், ழுஅங்கு – அவ்விடத்தில்
[எதிர்ப்பக்கத்தில்] தேரும்-, ஒரு தேர் – ஒற்றைத் தேராகும்; தனி தேரின்மேல்
நின்று – அந்த ஒரு தேரின்மேற் பொருந்தி, வீர(ர்) வெம் சிலை வளைத்த
கை-வீரர்களுக்குரிய கொடிய வில்லை வளைத்துப்பிடித்த கையையுடைய,
வீரன்உம் – வீரனொருவனும், பேடி – ஆண்மையில்லாத பேடியாம்;
(இங்ஙனமாகவும்), யாரும்-பேர்பெற்ற நீங்களெல்லாரும், நெஞ்சு அழிந்து-
மனந்தளர்ந்து, அஞ்சுவது – பயப்படுவது, என்-என்ன காரணத்தால்?ழு என்று -,
இசைத்தான் – சொன்னான்; (எ – று.)

     ழுசூரன்ழு என்கிற சொல் இரண்டும் – முறையே ஸூரன் ஸூரன் என்ற
வடமொழிகளின் திரிபுகள்.  ழுஒன்று தேரினாலொருவன் கூற்றமே, என்று
கூறினு மொருவனென்செயும், இன்று கோடுநரமெழுகென்றேகினார்ழு என்ற
சீவகசிந்தாமணி, இங்கு ஒப்புநோக்கத்தக்கது.  ஆடவர்க்குரிய வில்தொழிலை
மேற்கொண்டதனால், ழுவீரனும் பேடிழு என ஆண்பாலாகக் கூறினான்.  கர்ணன்
அகம்பாவமுடையனாதலால், ழுவிதுரன் ஒருகால் எதிர்த்தவன்
அருச்சுனனாயிருக்கலாமோ?ழு என்ற கருத்துடன் கூறியதை யவமதித்து,
அவ்விதுரன் முதலானோர் அஞ்சுவதை இழித்தற்பொருட்டு, பேடியை ழுவீரன்ழு
என்றான்.  வீரனும் பேடி என்றதனால், அருச்சுனனோ என்று ஐயுறுதற்கும்
இடனில்லையென்பதையும் காட்டியவாறு.  கொல்-அசைநிலை.  ழுயாரும்ழு
என்றது-இங்கு முன்னிலைப்படர்க்கை.  ஏந்தியவனது வீரத்தை வில்லின்மே
லேற்றி ழுவீரச்சிலைழு என்றதாகவுங் கொள்ளலாம்; ழுசினவாள்ழு என்றாற் போல.

கொண்ட கோ நிரை கோவலர் கொண்டு முன் போக!
தண்டு நிற்க!’ எனத் தம்பியர் அனைவரும் தானும்,
திண் திறல் பெரும் பேடியைத் தேர்மிசைக் கண்டு,
‘மிண்டுவீர்!’ எனக் கூறியே, சுயோதனன் மீண்டான்.54.-துரியோதனனது கட்டளை.

(அதுகேட்டு), சுயோதனன் – துரியோதனன், தானும்-,
ழுகொண்ட கோ நிரை-கவர்ந்துகொண்டுவந்த பசுக்கூட்டங்களை, கோவலர் –
(நமது) இடையர்கள், கொண்டு – ஓட்டிக்கொண்டு, முன் போக – முன்னே
போவாராக:  தண்டு – (நம்) சேனையானது, நிற்க – (அவ்விடையர்க்குத்)
துணை நிற்பதாக,ழு என – என்று கட்டளையிட்டு, ழுதம்பியர் அனைவர்உம் –
தம்பிமாரெல்லீரும், திண் திறல் பெரும் பேடியை – மிக்கவலிமையையுடைய
பெரிய பேடியை, தேர்மிசை கண்டு- தேரின்மேற்பார்த்து, மிண்டுவீர்-நெருக்கிப்
போர்செய்வீர்,ழு என கூறி-என்றுஞ் சொல்லி,- மீண்டான்-(போர்க்களத்துக்குத்)
திரும்பினான்; (எ – று.)

     ழுதானும்ழு என்றது, கர்ணனைப்போலவே இந்தத் துரியோதனனும்
மனநிலைகொண்டு கூறினானென்பதைப் புலப்படுத்தும்.  போக, நிற்க –
வியங்கோள் முற்று.  போக என்பதைச் செயவெனெச்சமாகக் கொள்ளினுமாம்.
அனைவரும் = அனைவீரும்: முன்னிலையிற்படர்க்கைவந்த இடவழுவமைதி.
நிற்கென – அகரம் தொகுத்தல்

மான மா முடி மன்னரை விலக்கி, வல் விரைந்து,
கோ நிரைக் குலம் கொண்டுபோம் கோ நிரை துரந்து,
போன பேடி, வெம் பூசலும் பொழுதுறப் பொருது,
தூ நிறத்து இளங் கன்றுடைத் தொறுக்களும் மீட்டான்55.-அருச்சுனன் வடபுறத்து நிரைமீட்டல்.

(பின்பு), – போன பேடி – (போர்க்குச்) சென்ற பேடியாகிய
அருச்சுனன்,-மானம் மா முடி மன்னரை – மானமுள்ளவர்களும் பெரிய
கிரீடந்தரித்தவர்களுமான பகையரசர்களை, விலக்கி – விலகச்செய்து,-
வல்விரைந்து – மிகவும் விரைவாக, குலம் கோ நிரை கொண்டுபோம் – சிறந்த
பசுக்கூட்டங்களைக் கவர்ந்துபோகின்ற, கோ நிரை – ராஜபரிவாரத்தை, துரந்து
– துரத்திக்கொண்டுபோய்,- வெம் பூசல்உம் – கொடிய போரையும், பொழுது
உற – உரியகாலம் பொருந்த, பொருது – செய்து,- தூ நிறத்து-பரிசுத்தமான
தன்மையுள்ள, இளங் கன்று உடை தொறுக்கள் உம் – சிறுகன்றுகளையுடைய
பசுக்கூட்டங்களையும், மீட்டான் – திருப்பிக்கொண்டுவந்தான்; (எ – று.)

     கீழ் 20 – ஆஞ் செய்யுள்போலவே, இச்செய்யுளும்-வடபுறத்து
நிரைமீட்சி கூறினமையின், இச்சருக்கத்துக்கு
உயிர்நிலைச்செய்யுளாம்.

போரில் மிண்டிய வீடுமன் துரோணன் முதலியவர்களையெல்லாம்
விலகச்செய்து பசுநிரையைக் காத்திருந்த அரசவர்க்கத்தையும் விரைவில்
வென்று பசுக்கூட்டத்தைத் திருப்பிக்கொண்டுவந்தனன், அருச்சுனனாகிய
பிருகந்நளை யென்க.  பொழுதுற – சொற்ப காலத்திலென்றபடி:  இனி,
பொழுது உற – அஜ்ஜாதவாசவருஷங்கழிதற்குக் குறைவாய்நின்ற நான்கு
நாழிகைப்பொழுது கழியுமளவுமென்றும், பொழுதுவிடியுமளவு மென்றும்
உரைப்பாருமுளர்.  ‘மானமா முடி மன்னர்’ என்றது – “மயிர் நீப்பின் வாழாக்
கவரிமாவன்னா, ருயிர்நீப்பர் மானம் வரின்” என்றபடி தம்
தலையைக்கொடுத்தாயினும் மானத்தைக் காக்கவல்ல வீர ரென்றவாறுமாம்.
மானமாவது – எப்பொழுதும் தம்நிலையினின்று தாழாமையும், ஊழ்வினையால்
தாழ்வு வந்த விடத்து உயிர்வாழாமையுமாம்.  இனி, மானம் – செருக்கும், தமது
அரசனிடத்து அபிமானமும், பெருமையும் 
வலிமையுமாம்.  வல்விரைந்து –
ஒருபொருட்பன்மொழி.  வல் – விரைவுப்பொருளுணர்த்தும் இடைச்சொல்.
கோ – பசு என்ற பொருளில் வடமொழியும், அரசரென்ற பொருளில்
தமிழ்மொழியுமாம். குலம் – சிறப்பென்னும் பொருளதாதலை ‘குலபர்வதம்’
என்ற இடத்துங் காண்க.

     ‘தூநிறத்து’ என்றது – இளங்கன்றுடைத்தொறுக்களுக்கு அடைமொழி.
பசுக்கள் ஆதியில் திருப்பாற்கடலினின்று தோன்றியமை, யாகம்முதலிய
வைதிகச்சடங்குகளுக்கு வேண்டிய பால் முதலியவற்றைப் பசுக்கள் உதவுதல்,
பசுக்களின் உறுப்புக்களில் தேவர்களதுகலைகளும் முனிவர்களுடைய
அமிசங்களும் புண்ணிய தீர்த்தங்களின் பகுதிகளும் அமைந்திருத்தல், பசுக்கள்
தரும் பஞ்சகவ்வியங்கள் அனைவர்க்கும் பரிசுத்திகரமாதல், பசுக்களைப்
பரிசித்தல் பிரதக்ஷிணம்புரிதல் பாதுகாத்தல் பிறர்க்குக்கொடுத்தல்
செய்பவர்க்குத் தீவினை தீர்ந்து நல்வினையுண்டாதல் முதலிய சிறப்புக்கள்பற்றி,
பசுக்கூட்டத்துக்கு ‘தூநிறத்து’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.  தூ-
தூய்மை யென்னும் பண்புப்பெயரின் விகாரம்.  குலம் – கூட்டம் என்று
கொண்டு, ஒன்றன்கூட்டம் பலவினீட்டம் என்ற இருவகையைக் கருதி
‘கோநிரைக்குலம்’ என்றன ரென்றலுமொன்று; ஒவ்வொருவகையிலும்
பலபசுக்களென்றவாறாம்.  ‘வல்விரைந்து’ என்றதை ‘கொண்டுபோம்’
என்பதனோடும், ‘துரந்து’ என்பதனோடும் கூட்டலாம்.

முந்த ஆன்தொறு மீட்டலும், முன் கவர் பொதுவர்
வெந்த நெய் என ஆரவம் அடங்கினர், மிகவும்;
அந்த நெய்யினில் பால்-துளி உகுத்தென ஆர்த்தார்,
வந்த மச்சர் கோமகனொடும் வந்த கோபாலர்.56.-துரியோதனனைச் சார்ந்த இடையரதுஒடுக்கமும்,
உத்தரனைச் சார்ந்த இடையரது மகிழ்ச்சியும்.

முந்த – முன்னே, ஆன் தொறு – பசுக்கூட்டத்தை, மீட்டலும்-
(பேடி) மீட்டுக் கொண்டுவந்த அளவில்,-(அதனால்),-முன் கவர் பொதுவர் –
முன்பு (பசுக்களைக்) கவர்ந்துகொண்டுபோன (துரியோதனனோடுவந்த)
இடையர்கள்,-வெந்த நெய் என-நன்றாய்க் காய்ந்த நெய் (ஓசையடங்குதல்)
போல, மிகவும் ஆரவம் அடங்கினர் – முற்றும் ஆரவாரமடங்கினார்கள்; வந்த
மச்சர்கோ மகனொடுஉம் வந்த கோபாலர்-(நிரை மீட்க) வந்த
உத்தரகுமாரனோடு வந்த இடையர்கள்,- அந்த நெய்யினில் – அவ்வாறு
நன்றாகக் காய்ந்து கொதிக்கின்ற நெய்யில், பால் துளி உகுத்து என-
பாலின்துளியைத் தெறித்தால் (மிக்கஓசை எழுமாறு) போல, (மிகவும்) ஆர்த்தார்
– (மகிழ்ச்சியால்) மிகவும் ஆரவாரித்தார்கள்; (எ – று.)

     பொதுவர் – நாடும் நாடுசார்ந்த இடமுமாகிய மருதநிலத்துக்கும் மலையும்
மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சிநிலத்துக்கும் நடுவிடமான காடும் காடு
சார்ந்த இடமுமாகிய முல்லைநிலத்தில் உள்ளவர்; ழுஇடையர்ழு என்பதற்கும்
காரணம் இதுவே.  (பொதுவரென்பதன் பெண் பன்மை, பொதுவியர்.) ஆரவம்
– வடசொல்; இங்கே, கொண்டாட்டத்தாலுண்டாகும் பேரொலி.  ழுமிகவும்ழு
என்றது – 
மத்திமதீபமாய்,முன்நின்ற ழுஅடங்கினர்ழு என்றதனோடும், பின்நிற்கும்
ழுஆர்த்தார்ழு என்பதனோடும் கூட்டப்பட்டது.  ழுஉகுத்தெனழு என்பதை –
உகுத்தாலெனஎன வினையெச்சவிகாரமாக வாயினும், உகுத்ததென
எனத்தொழிற்பெயர் விகாரமாக வாயினுங் கொள்க.  மச்சர்கோ மகன் –
மச்சநாட்டிலுள்ளார்க்கு அரசனாகிய விராடனது குமாரன். கோபாலர் –
பசுக்களைக் காப்பவர்; வடசொல்.

     வெந்தநெய் – காய்ச்சுகையில் வெண்ணெயின் நீர்ப்பசையற்ற நெய்;
கொதிப்புத்தணியாத நெய்.  தொழில்பற்றி வந்த 
உவமையணி. பால்துளி
யுகுத்தல்,  நீர்ப்பசையற்றதையும் அறாமையையும் உணர்தற்கென்க.
வெந்தநெய்யென ஆர்வமடங்கின ரெனவும், அந்த நெய்யினிற்
பாற்றுளியுகுத்தென ஆர்த்தா ரெனவும் கூறியன – இடத்துக்கும் சாதிக்கும்
ஏற்ற உவமைகள்; இங்ஙனங் கூறுவது, மகாகவிகளது இயல்பு. சிந்தாமணியிலும்
கோவிந்தையாரிலம்பகத்தில் ழுஆய்த்தியர்நலக் காசெல் தூணனான்ழு, ழுஆயர்
மத்தெறி தயிரினாயினார்,ழு ழுமத்தம் புல்லிய கயிற்றின் மற்றவ,
ரத்தலைவிடினித்தலைவிடார்,ழு ழுவெண்ணெய்போன்றூறினியண்மேம்பால்போல்
தீஞ்சொல்ல, ளுண்ணவுருக்கிய வானெய்போன் மேனியள்,ழு
ழுஊழிதோறாவுந்தோழும் போன்றுடன் மூக்கழு என ஆங்காங்குக் கூறியிருத்தல்
காண்க. 

பால் எடுத்த பொற்குடம் நிகர் மடியின, பருவச்
சூல் எடுத்த நல் வயிற்றின, மழ விடை தொடர்வ,
கோல் எடுத்து இளங் கோவலர் கூவினர் துரப்ப,
வால் எடுத்தன, துள்ளி மீண்டு ஓடின, வனமே57.-பசுக்கள் மீண்டு ஓடிவருதல்.

பால் எடுத்த பொன் குடம் நிகர் மடியின – பாலை
நிரம்பக்கொண்ட பொன்மயமான குடத்தைப் போன்ற மடியையுடையவைகளும்,
பருவம் சூல் எடுத்த நல் வயிற்றின – பருவமுதிர்ந்த கருப்பத்தைக்கொண்ட
அழகிய வயிற்றையுடையவைகளும், மழ விடை தொடர்வ – இளமையுள்ள
எருதுகளாற் காதலோடு பின் தொடரப்படுவனவும் ஆகிய பசுக்கள்,-
இளங்கோவலர் – (உத்தரகுமாரனோடு) வந்த இளைய இடையர்கள்
[இடைப்பிள்ளைகள்], கோல் எடுத்து – (கையிற்) கோலை ஓச்சி, கூவினர்
துரப்ப-கூவி ஓட்ட, வால் எடுத்தன – வாலைத் தூக்கிக்கொண்டவைகளாய்,
துள்ளி-, மீண்டு – திரும்பி, வனம்-(தாம் வழக்கமாக மேயும்
விராடனதுநகர்ப்புறத்துக்) காட்டிற்கு, ஓடின-; (எ – று.)

     ழுபாலெடுத்தபொற்குடநிகர்மடியினழு – கறக்கும் பசுக்கள்.
ழுபருவச்சூலெடுத்த நல்வயிற்றினழு – சினைமுதிர்ந்த பசுக்கள்.
ழுமழவிடைதொடர்வழு – சினைகொள்ளற்பாலன வாகிய பசுக்கள்.  பருவச்சூல் –
பூர்ணகர்ப்பம்.  வாலெடுத்துத்துள்ளிக் குதித்தோடுதல் – கொண்டாட்டமிகுதி
பற்றி; இது-பசுக்களின் இயல்பு.  இச்செய்யுள் – பசுக்களின் தன்மையை
வருணித்ததனால், 
தன்மைநவிற்சியணி.   

கடிகை நால் அவண் சென்றபின், கடை சிவந்து அகன்ற
நெடிய கண்ணி, அன்று இட்ட வெஞ் சாபமும் நீங்க,
கொடியின்மீது எழும் அனுமனைக் குறிக்க, அக் கொடியும்,
முடி கொள் தன் தனி இரதமும், முன் வரக் கண்டான்.58.-சாபம்நீங்க, அருச்சுனன்தனது தேரினையும்
அநுமத்துவசத்தையும் பெறுதல்.

(அருச்சுனன்),-கடிகை நால் அவண் சென்ற பின்-(அஜ்ஞாத
வாசவருஷத்தின் கடைசி) நான்குநாழிகைப்பொழுதும் அவ்வண்ணம்
கழிந்தபின்பு.- கடை சிவந்து அகன்ற நெடிய கண்ணி – கடைப்பக்கஞ்
செந்நிறமாய்ப் பரந்து நீண்ட கண்களையுடையவளான ஊர்வசி, அன்று –
அந்நாளில் [முன்புதான் தேவலோகத்துக்குச் சென்றிருந்தபொழுது], இட்ட –
(தனக்குக்) கொடுத்த, வெம் சாபம்உம் – கொடிய (பேடிவடிவம் பெறக்
காரணமான) சாபமும், நீங்க – நீங்கியவளவில்,-கொடியின்மீது எழும் – (தனது)
துவசத்தின்மேல் எழுந்தருள்கிற, அனுமனை – அநுமானை, குறிக்க –
தியானிக்க,-(அதனால் அப்பொழுதே), அ கொடிஉம் – அவ்வநுமத்துவசமும்,
முடி கொள் தன்தனி இரதம்உம் – சிகரத்தைக்கொண்ட தனது ஒப்பில்லாத
தேரும், முன்வர-(தனது) எதிரில் வர, கண்டான் – பார்த்தான்; (எ – று.)

     அக்கினிதேவனளித்த தேரையும் அநுமக் கொடியையும் அருச்சுனன்
எதிரில் வரப்பெற்றா னென்றபடி.  குறித்தல்-மனத்தில் நினைத்தல்.
அவண்=அவ்வண்ணம்:  ராஜபரிவாரங்களைத் துரத்திப்பொருது நிரைமீட்டதி
லென்றபடி.  கடைசிவத்தல் – நல்லிலக்கணமாகிய சிலசிவந்த இரேகைகளைக்
கடையிடத்துப்பெறல்.  குரங்குக்கொடியும், நான்கு வெள்ளைக்குதிரைகள்
பூட்டிய தேரும், காண்டீவமென்னும் வில்லும், அட்சயதூணீரமும் –
காண்டவதகனகாலத்து அக்கினிதேவனால் அருச்சுனனுக்கு அளிக்கப்பட்டவை.
பின்பு வீமசேனன் புஷ்பயாத்திரையாக அளகாபுரிக்குச் சென்றபொழுது
இடைவழியிற் கதலிவனத்திலே தவஞ்செய்துகொண்டிருந்தவனும்,
வாயுகுமாரனாதலால் தனக்குத் தமையனுமான அநுமானைக்கண்டு வணங்கி
வேண்டிப் போர்க்களத்தில் அருச்சுனனது தேர்த்துவசத்தில் வந்து நின்று
மகிழ்ந்து கூத்தாடும்படி வரம்பெற்றதனால், ழுகொடியின் மீதெழு மனுமன்ழு
என்றார்.  அநுமந் – ஹநுமாந் என்ற வடசொல்லின் விகாரம்;
(குழந்தைப்பருவத்திலே இளஞ்சூரியனைக் கனிந்த பழமென்று கருதிப் பிடிக்கப்
பாய்ந்தபொழுது அதனையறிந்து சினந்து இந்திரனால் வச்சிராயுதங்கொண்டு
அடிக்கப்பட்டுச் சிதைந்த) கன்னமுடையனாதலால், இப்பெயர் வாய்த்தது;
கன்னத்தில் விசேஷமுடையவ னென்க; ஹநு – கன்னம், மாந்-வடமொழிப்
பெயர்விகுதி.  கேஸரியென்னும் வாநரராஜனது மனைவியான அஞ்சநா
தேவியினிடத்தில் வாயுபகவானது அநுக்கிரகத்தால் தோன்றியவன் இவன்;
இவனிடத்து ருத்திராமிசமும் உண்டு. 

உரிய தேரினை மீதுகொண்டு, உத்தரன் செலுத்த,
கரிய மேனியன், செய்ய தாமரைத் தடங் கண்ணன்,
புரிய வாங்கிய சிலையினன், நின்றனன்-பொலம் பொற்
கிரியின்மீது எழும் மரகத கிரி எனக் கிளர்ந்தே!59.-உத்தரன் ஸாரதியும், அருச்சுனன்இரதிகனுமாகப்
போர்க்கு நிற்றல்.

கரிய மேனியன்-கறுத்த உடம்பின்நிறத்தையுடையவனும்,
செய்ய தாமரை தட கண்ணன் – செந்தாமரைமலர்போன்ற பெரிய
கண்களையுடையவனுமாகிய அருச்சுனன்,-உரிய தேரினை மீதுகொண்டு –
தனக்குரிய தேரின்மேல் ஏறிக்கொண்டு,-உத்தரன் செலுத்த – (அத்தேரை)
உத்தரன் நடத்தாநிற்க,- பொலம்பொன் கிரியின்மீது எழும் – அழகிய
பொன்மயமானதொரு மலையின்மேல் விளங்குகின்ற, மரகதம் கிரி என –
பச்சையிரத்தின மயமானதொரு மலைபோல, கிளர்ந்து – விளங்கி,-புரிய
வாங்கிய சிலையினன்-நன்றாக வளைத்து நாணேற்றிய வில்லையுடையவனாய்,
நின்றனன் – (கம்பீரமாக) நின்றான்; (எ – று.)

     பசுநிரையை மீட்டபின்பும், பகைவர் பொரவர, அருச்சுனன்
அவர்களுடன் போர்புரிவதற்குச் சலியாது சித்தனாய் அம்புதொடுத்தெய்யும்
நிலைமையில் நின்றா னென்க.  பொன்மயமான தேர்க்குப் பொன்மலையும்,
அதன் மேலுள்ள கருநிறமுடைய அருச்சுனனுக்கு மரகதமலையும்-உவமை.
மலர்ச்சியும் குளிர்ச்சியும் சிவப்பும் கண்டோரைமகிழ்வித்தலும் அழகும்பற்றி,
கண்களுக்குச் செந்தாமரை மலர் உவமை.  புரிய – போர்புரிய வென்றுமாம்.
மரகதம் – மரதகம்; எழுத்து நிலைமாறுதல்:  இலக்கணப்போலி.
இரண்டாமடியில் ழுகரியழு ழுசெய்யழு என மாறுபட்ட சொற்கள் வந்தது –
தொடைமுரண்.  மரகதகிரி – வடமொழித்தொடர் ஆதலின், வலிஇயல்பு

படும் குறும் பனி புதைத்தலின் பரிதி தன் உருவம்
ஒடுங்குமாறெஒளித்த தன் பேட்டு உரு ஒழித்து,
நெடுங் கொடுங் கணை நிருபன் வெஞ் சேனையின் வேந்தர்
நடுங்குமாறு முன் தோன்றினன், நரன் எனும் நாமன்60.-அருச்சுனன் பேடிவடிவொழிந்து
நிஜரூபத்தோடு வெளிப்படுதல்.

நரன் எனும் நாமன் – நரனென்ற பெயரையுடையவனான
அருச்சுனன்,-படும் குறும் பனி-(விரைவில்) அழியும் அற்பமாகிய பனி,
புதைத்தலின்-மூடுதலினாலே, பரிதிதன் உருவம் – சூரியனது மண்டலம்,
ஒடுங்கும் ஆறு என – மறையும்விதம்போல, ஒளித்த – (தான்)
உருமறைந்திருப்பதற்குக் காரணமான, தன் பேடு 
உரு – தனதுநபும்ஸகரூபத்தை,
ஒழித்து-நீக்கி,-நெடுங் கொடுங்கணை நிருபன் – நீண்ட கொடிய
அம்புகளையுடைய துரியோதனராசனது, வெம் சேனையின் – கொடிய
சேனையிலுள்ள, வேந்தர் – அரசர்கள், நடுங்கும் ஆறு – அஞ்சி நடுங்கும்படி,
முன் தோன்றினன் – (அவ்வரசர்களுக்கு) எதிரில் வந்து நின்றான்; (எ – று.)

அஜ்ஞாதவாசத்திற் கழிக்கவேண்டிய காலம் கழிந்துவிட்டதனால்,
அருச்சுனன் நிஜரூபத்தோடு அவ்வரசர்கள்முன்னிலையில் வந்துநின்றன
னென்க.  படும் – (தனக்குரியபருவத்தில்) உண்டாகின்ற என்றலுமாம்.
சூரியமண்டலம் – அருச்சுனனுக்கும், குறும்பனி – பேட்டுருவிற்கும் உவமை.
கணைக்குக்கொடுமை-கூரியதாய்ப் பகைவர்களைக் கொல்லுந்திறம்.  நிருபன் –
மனிதரைக் காப்பவனென்று பொருள்படும் வடசொல்.  ழுபேடுழு என்ற சொல் –
ஆணவாய்ப் பெண்ணிழந்த அலியும் பெண்ணவா யாணிழந்த பேடியுமாகிய
நபும்ஸகவகை யிரண்டுக்கும் பொதுவாமென்று உணர்க.  பேடு + உரு =
பேட்டுரு.

    முன்னொருகாலத்திலே குருசிஷ்யக்கிரமத்தை உலகத்தில் அனைவர்க்கும்
விளக்குதற்பொருட்டு நரனென்றசிஷ்யனும் நாராயணனென்ற குருவுமாகப்
பதரிகாச்சிரமத்தில் தோன்றிச் சீடனுக்குக் குரு தத்துவப்பொருள்களை
உபதேசிப்பதாக வீற்றிருக்கின்ற திருமாலின் இருமூர்த்திகள்தாமே இங்கு
முறையே அருச்சுனனும் கண்ணனுமாக அவதரித்ததனால், அருச்சுனனுக்கு
நரனென்று ஒருபெயராயிற்று.

செருச் செய்வான் வரு சேனை வெண்திரையையும் கடப்பான்
பருச் சிலம்பில் நின்று உகைதரு பாவனை போல,
உருச் செழுஞ் சுடர் எறிப்ப, நின்று உலாவினன்-உண்மைக்கு
அருச்சுனன் தடந் தேர்க் கொடி ஆடையில் அனுமன்.61.-அருச்சுனனதுதுவசத்தில் அனுமன் கூத்தாடுதல்.

அனுமன் – அநுமான்,- அருச்சுனன் தட தேர் கொடி
ஆடையில்-அருச்சுனனுடைய பெரிய தேரினது கொடிச்சீலையில், உண்மைக்கு
நின்று – பிரதியட்சமாகப் பொருந்தி,-(முன்பு மகேந்திர மலையின்மேலேறி
இலங்கைக்குச் செல்லக் கடலைத் தாண்டியமைபோலவே), செரு செய்வான்
வரு சேனை வெள் திரையைஉம் – போர் செய்தற்கு எதிர்த்துவருகின்ற
பகைவர்சேனையாகிய வெண்ணிறமான அலைகளையுடைய கடலையும்,
கடப்பான் – தாண்டுதற்பொருட்டு, பரு சிலம்பின் நின்று – பருத்ததொரு
மலைமேல்நின்றும், உகைதரு – உதைந்து எழுகின்ற, பாவனைபோல –
தோற்றம்போல,- உரு செழுஞ்சுடர் எறிப்ப – (தனது) உருவம் மிக்கஒளியை
வீசும்படி, உலாவினன்-உலாவி விளங்கினான்; (எ – று.)

     கடலுவமையால் சேனையின்பரப்பும், மலையுவமையால் தேரின்
பெருமைவலிமைகளும் விளங்கின.  தேர்க்கொடிச்சீலை காற்றில்
அசைகின்றபோது அதிலுள்ள வாநரவடிவத்தில் ஆவேசித்துநின்ற
அநுமான்மேலெழுவான்போல் ஆடியது சீதாபிராட்டியை இலங்கையில்
தேடுமாறு அநுமான் முன்பு மகேந்திரமலையினின்று மேலெழஆடியது
போலுமென்க:  
தற்குறிப்பேற்றவணி.  உண்மைக்கு உலாவினன் என்று
இயைத்து – முன்பு வீமனுக்குத் தான் வரங்கொடுத்த வாய்மை தவறாதபடி
உலாவின னென்றலு மொன்று.

     வெண்டிரை – பண்புத்தொகை அன்மொழித்தொகை; வெண்குடை,
வெண்சாமரை, வெண்புரவி முதலியன சேனையில் நெருங்கியிருத்தல்பற்றி
ழுசேனை வெண்டிரைழு என்றன ரென்னலாம்.  திரைவது திரை: திரைதல் –
சுருங்கிமடிதல்.  உம்மை – இராமாயணகதையைச் சுட்டுவதால்;
இறந்ததுதழுவிய எச்சப்பொருளது;  அக்கதைவருமாறு:-சீதையைத்
தேடுதற்பொருட்டு இராமபிரானால் தென்திசைகுறித்து அனுப்பப்பட்ட அங்கதன்
முதலிய வாநரவீரர்கள் அச்சீதாபிராட்டி தென்கடலிடையேயுள்ள இலங்கைத்
தீவிலிருக்கின்றன ளென்று சம்பாதிசொல்லால் அறிந்தபின்னர் நூறு
யோசனைதூரமுள்ள அக்கடலைக் கடக்கும் ஆற்றலிலராய் வருந்துகையில்,
ஜாம்பவனால் தூண்டப்பட்ட அநுமான் மகேந்திரகிரியின் மேலேறிப்
பெருவடிவங்கொண்டு தாவி அக்கடலை எளிதிற்கடந்து இலங்கைசேர்ந்தன
னென்பதாம். 

மரு மிகும் தொடைத் தடம் புய மகபதி மதலை
பெருமிதம் பட வளைத்த வில் பிறங்கு நாண் ஒலியால்,
செருமி, எங்கணும் கரி, பரி, தேர்மிசை நின்றோர்,
உருமின் வெங் குரல் கேட்ட கோள் உரகரோடு ஒத்தார்.62.-அருச்சுனனதுவில்லின்நாணொலியாற் பகைவர்
அஞ்சுதல்.

மரு மிகும் தொடை – நறுமணம்மிக்க (போர்க்குரியதும்பைப்பூ)மாலையைத் தரித்த, தட புயம் – பெரிய
தோள்களையுடைய, மகபதி மதலை -தேவேந்திரகுமாரனாகிய அருச்சுனன்,
பெருமிதம் பட – (தனது) வீரத்தன்மைதோன்றும்படி, வளைத்த – வணக்கிய,
வில் – வில்லிலே ஏற்றிய, பிறங்கும்நாண் – விளங்குகின்ற நாணின்
[நாணியைக் கைவிரலால் தெறித்ததனாலுண்டான], ஒலியால் – ஓசையால்,
எங்கண்உம் – எல்லாவிடத்தும்[அவனைச்சுற்றிலும்], செருமி – நெருக்கி, கரி
பரி தேர் மிசை நின்றோர் -யானை குதிரை இரதங்களின்மேல்
ஏறிநின்றவர்களான வீரர்கள், – உருமின்வெம் குரல் கேட்ட – இடியினது
கொடிய ஓசையைச் செவியுற்ற, கோள்உரகரோடு – வலிமையையுடைய
நாகசாதியாரோடு, ஒத்தார் -ஒத்தவரானார்கள்; (எ – று.)

இடியொலி கேட்டமாத்திரத்தில் நாகர் அஞ்சி அழிவது போல,
அருச்சுனனது வின்னாணொலியைக் கேட்ட அளவில் பகைவர் அஞ்சின
ரென்றபடி;  இடியோசைக்கு அஞ்சிப் பாம்புகள் ஒடுங்குதல் இயல்பு;
ழுவிரிநிறநாகம் விடருள தேனு, முருகின் கடுங்சினஞ்சேணின்று முட்கும்ழு என்ற
நாலடியாரையுங் காண்க.  மக பதி – யாகங்களுக்குத் தலைவன்; நூறு
அசுவமேதயாகஞ் செய்து தேவேந்திரபதவிபெறுதலால், இப்பெயர் வந்ததென்க.
பெரு மிதம் – எல்லோரோடும் ஒப்ப நில்லாது பேரெல்லையாக நிற்றல்;
எனவே, வீரமாயிற்று.  கரி – கரமுடையது: வடசொல்; கரம் – துதிக்கை.
உரகம் – மார்பினால் ஊர்வது; வடசொல்:  உரம் – மார்பு.  கோள் – உயிரைக்
கொள்ளுந் தன்மையாகவுமாம்.  ழுஉரகரோடொத்தார்ழு என்ற இடத்து,
மூன்றனுருபு – ஒப்புப்பொருளில் வந்தது.  இங்கு ழுமருமிகுந் தொடைழு என்றது
– தேவலோகத்துக் கற்பக விருக்ஷங்களின் திவ்விய புஷ்பங்களா லாகிய
மாலையுமாம்.

குறித்த சங்கு ஒலி, சிங்க நாதத்து ஒலி, குனி வில்
செறித்த நாண் ஒலி, செவிப்பட, சிந்தனை கலங்கி,
பொறித்த பாவையின் உத்தரன் பொறி மயக்குற்று,
மறித்தும் வீழ்ந்தனன், மா விடு தொழிலையும் மறந்தே63.-பலவகையொலிகேட்டு அஞ்சி உத்தரன் பாகுதொழிலையும்
மறந்துமூர்ச்சித்தல்.

குறித்த சங்கு ஒலி – (அருச்சுனன்) ஊதித்தொனி செய்த
(தேவதத்தமென்னுஞ்) சங்கத்தின் நாதமும், சிங்கநாதத்து ஒலி – (அவன்)
சிங்கநாதஞ் செய்த ஓசையும், குனி வில் தெறித்த நாண் ஒலி – (அவன்)
வளைத்த வில்லில் உறுதியாகப்பூட்டிய நாணின் ஓசையும், செவி பட – (தன்)
காதுகளிற் பட்ட [கேட்ட] மாத்திரத்தில், உத்தரன்-, சிந்தனை கலங்கி –
மனங்கலங்கி, பொறி மயக்கு உற்று – அறிவு மயக்கமடைந்து, மாவிடு
தொழிலைஉம் மறந்து – குதிரையோட்டுஞ் செயலையும் மறந்து விட்டு,
பொறித்த பாவையின் – சித்திரத்திலெழுதிய பிரதிமைபோல(ச் செயலற்று),
மறித்தும் – மறுபடியும், வீழ்ந்தனன் – (தேரில்) விழுந்தான் [மூர்ச்சித்தான்].

     ழுமறித்தும்ழு என்றது, கீழ் முப்பத்தாறாங்கவியில் ழுசோர்ந்தான்ழு என
வந்ததை நோக்கி.  முன்புபகைவர் சேனையைக்கண்டு மூர்ச்சித்தமைபோல
இப்பொழுது அருச்சுனன் செய்த நாதங்களைக் கேட்டு மூர்ச்சித்தன னென்க.
ழுதொழிலையும்ழு என்ற உம்மையும் – முன்போர்த்தொழிலை மறந்ததல்லாமல்
இப்பொழுது தேர்த்தொழிலையும் மறந்தானென்னும் கருத்தைத் தருதலால்,
இறந்தது தழுவிய எச்சப்பொருளதே; அதனோடு இழிவுசிறப்புமாம்.  இங்குச்
சங்கு கூறியதனால் கீழ் அருச்சுனன் வன்னிமரத்தினின்றும் வில்லையும்
அம்பையும் எடுத்து வந்த பொழுது தேவதத்தமென்னும் தனது சங்கையும்
உடனெடுத்து வந்தன னென்க.  மனமும் புத்தியும் அந்தக்கரணங்களில்
வெவ்வே றாதலால், ழுசிந்தனை கலங்கிழு என்றும், ழுபொறிமயக்குற்றுழு என்றும்
தனித்தனிக் கூறினார்.  பொறிமயக்குற்று – பஞ்சேந்திரியங்களும் தம்தம்
உணர்ச்சி ஒழிந்து என்றுமாம்.  ஸிம்ஹநாதம் – வீராவேசத்தாற் சிங்கத்தின்
கர்ச்சனைபோல ஆரவாரிப்பது.  பாவை – செயலற்றிருக்கையால்,
உத்தரனுக்குத் தொழிலுவமை.

தாழ்ந்த ஆடையின் உயர் கொடித் தண்டுடைத் தேர்மேல்
வீழ்ந்த பாகனை, மீளவும் விரகுறத் தேற்றி,
சூழ்ந்த தன் பெருந் துணைவனைச் சூதினால் துரந்து
வாழ்ந்த மன்னன்மேல் ஏவினான், வரி சிலை வல்லான்.64.-மீண்டும்அருச்சுனன்உத்தரனைத்தேற்றித் துரியோதனன்மீது
தேர்செலுத்தச்சொல்லுதல்.

தாழ்ந்த ஆடையின் – தொங்கிய சீலையையுடைய, உயர்
கொடி தண்டு உடை – உயர்ந்த [மேலான] துவசதண்டத்தையுடைய, தேர்மேல்
– தேரில், வீழ்ந்த – மூர்ச்சித்துவிழுந்த, பாகனை – சாரதியான உத்தர
குமாரனை, வரி சிலை வல்லான் – கட்டமைந்த வில்லின் தொழிலில்
வல்லவனாகிய அருச்சுனன், மீளஉம் – மறுபடியும், விரகுஉற – பக்குவமாக,
தேற்றி – மயக்கந்தெளியச்செய்து,- சூழ்ந்த – (தான்) வஞ்சனையான
ஆலோசனைசெய்து வரவழைத்த, தன் பெருந்துணைவனை – தனது பெரிய
தமையனாகிய தருமபுத்திரனை, சூதினால் துரந்து – சூதாட்டத்தினால் (ஜயித்து
இராச்சியத்தினின்று) துரத்திவிட்டு, வாழ்ந்த – (அவனது) செல்வவாழ்க்கையைத்
(தான்) அடைந்த, மன்னன்மேல் – துரியோதனராசன்மேலே, ஏவினான் –
(தேரைச் செலுத்தும்படி உத்தரனை) ஏவினான்; (எ – று.)

     ழுதாழ்ந்தவாடையினுயர் கொடித்தண்டுழு – தாழ்வு, உயர்வு –
தொடைமுரண்.  கொடித்தண்டு – கொடிகட்டுகின்ற மரக்கொம்பு.  ழுமீளவும்ழு
என்றது – கீழ் நாற்பதாங் கவியில் ழுவெயர்த்த மேனியை நறும்பனி நீரினால்
விளக்கிழு என்றதனை நோக்கிற்று.  விரகு – உபாயங்களினால், உற தேற்றி –
நன்றாகத் தெளிவித்து என்றலுமாம்.  விரகு உற – அறிவுண்டாகழு என்றுமாம்.
சூழ்ந்த – தம்பியர் நால்வராற் சூழப்பட்ட என்றும், கொடியவிதியினாற்
சூழப்பட்ட என்றுங் கொள்ளலாம்.  பெருந்துணைவன் – யாவர்க்கும்
மூத்தவன்.  ழுசூதினால் துரந்து வாழ்ந்த மன்னன்ழு என்பது, போரினால் வென்று
வாழவலிமையில்லாதவனெனக் குறிப்பித்தற்கு. 

மச்ச நாடன் மா மதலை, அம் மன்னவன் மொழியால்,
அச்சம் அற்று இருந்து, உளவுகோல் அருணனின் கொள்ள,
உச்ச வானிடைப் பகலவன் ஊர்ந்த தேர் பூண்ட
பச்சை வாசியின் ஓடின, சுவேத வெம் பரி மா.65.-அங்ஙனமே உத்தரகுமாரன்நன்கு தேர்செலுத்தல்.

(அவ்வாறே), மச்சநாடன் மா மதலை – மச்சதேசத்தரசனாகிய
விராடனது சிறந்தகுமாரனான உத்தரனும், அ மன்னவன் மொழியால் – அந்த
அருச்சுனனது வார்த்தையால், அச்சம் அற்று இருந்து – பயமில்லாதவனாகி
[தேறி] (எழுந்து தேரின் முன்னிலையில்) இருந்து, அருணனின் –
(சூரியசாரதியாகிய) அருணன்போல, உளவுகோல் கொள்ள – குதிரை
தூண்டுங்கோலைக் (கையிற்)கொண்டு சாரத்தியஞ் செய்ய, சுவேதம் வெம்
பரிமா – வெண்ணிறமான வேக
முள்ள(அருச்சுனன் தேரிற் பூட்டிய) நான்கு
குதிரைகளும், – உச்சம் வானிடை – உயர்ந்த ஆகாயமார்க்கத்தில், பகலவன்
ஊர்ந்த – சூரியன் ஏறிச்செல்கின்ற, தேர் – தேரில், பூண்ட – பூட்டப்பட்டுள்ள,
பச்சை வாசியின் – பசுமை நிறமுடைய குதிரைபோல, ஓடின-;

அருச்சுனனைப் பகையிருளொழிக்கும் ஆதித்த னென்பார், அவனது
தேர்க்குச் சூரியன்தேரையும், குதிரைகட்குச் சூரியன் குதிரையையும்,
பாகனுக்குச் சூரியசாரதியையும் உவமைகூறினார்;  இத்தன்மையை முன்னும்
பின்னுங் காணலாம்.  உவமையணி.  ழுபச்சைவாசியினோடின சுவேதவெம்
பரிமாழு-முரண்தொடை. ராஜகுலத்தவனாதலால், அருச்சுனனை ழுமன்னவன்ழு
என்றது.  உளவுகோல் – குதிரைகளை யடித்தோட்டுஞ் சவுக்கு.  பகலவன் –
தனது சேர்க்கையாற் பகலைச்செய்பவன்.  இந்த நான்கு வெள்ளைக்
குதிரைகள், காண்டவதகனகாலத்து அக்கினிதேவனால் அருச்சுனனுக்கு
அளிக்கப்பட்டவை; இவற்றை யுடைமையால், அருச்சுனனுக்குச்
சுவேதவாகனனென்றுஒரு பெயர்.  குதிரைக்கு வெம்மை – மிக்க விரைவு.
பரி மா – பரியாகிய மா [விலங்கு] என இருபெயரொட்டு

உரவினால் வட மேருவைக் கொடு முடி ஒடித்து,
விரவி என் பெருந் தாதை நின் தாதையை வென்றான்;
பரிவின் நின்னை யான் வெல்வன்’ என்று, அவனிபன் பதாகை
அரவை மற்று இவன் பதாகையில் அனுமன் வந்து அடுத்தான்.66.-துரியோதனனதுதேர்க்கொடியை அருச்சுனனது
தேர்க்கொடி சென்று நெருங்குதல்.

ழுஎன் பெருந் தாதை – எனது பெருமைபொருந்திய
தந்தையானவாயுபகவான், விரவி – பகைமைகொண்டு, உரவினால் – (தன்)
வலிமையால்,வடமேருவை – வடக்கிலுள்ள மகாமேருமலையை, கொடுமுடி
ஒடித்து -மூன்றுசிகரங்களை முறித்துத் தள்ளி, நின் தாதையை – உனது
தந்தையானஆதிசேஷனை, வென்றான் – (முன்பு) ஜயித்தான்; (அவ்வாறே),
யான் -யானும், நின்னை – உன்னை, பரிவின் – துன்பப்படும்படி, வெல்வன் –
ஜயிப்பேன்,ழு என்று – என்றுகருதி, அவனிபன் பதாகை அரவை –
துரியோதனராசனது கொடியிலுள்ள பாம்பை, இவன் பதாகையில் அனுமன் –
அருச்சுனனது கொடியிலுள்ள அனுமான், வந்து அடுத்தான் – வந்து
நெருங்கினான்; (எ – று.) – மற்று – அசை.

     அருச்சுனன் தேர்க்கொடியிலுள்ள அனுமன், துரியோதனனது
தேர்க்கொடியிலெழுதப்பட்டுள்ள பாம்பை நோக்கி ழுஎன் தந்தை உன்
தலைவனை முன்னமே வென்றுள்ளான்: அவ்வாறே இப்பொழுது யான்உன்னை
வெல்வேன்ழு என்று கறுக்கொண்டு வீரவாதங்கூறிப் போர்க்கு
நெருங்குகின்றவாறு போல நெருங்கின னென்றார்; தற்குறிப்பேற்றவணி.
அருச்சுனன் தேர் துரியோதனனதுதேரை வந்து நெருங்கும்பொழுது
அவ்வனுமக்கொடி இவன் அரவக்கொடியை
 நெருங்கிற்றென்க.
பாம்பைப்பிடித்து விடாதபடி உறுதியாகக் கொண்டு வருத்தி
யழித்தல், குரங்கினியல்பு.  உரவுஎனினும், உரமெனினும் ஒக்கும்.  மேரு –
பொன்மலை; இது, பூலோகத்தின் பகுப்புக்களாகிய ஏழுத்வீபங்களுள்
நடுவிலுள்ளதான ஜம்பூதவீபத்தின் நடுவிலே யிருக்கின்றது.  மேரு
எவ்விடத்திலுள்ள தென்றால், நமக்கு வடதிசையிலுள்ள தென வேண்டுதலின்,
அதனை வடமேருவெனக்கூறினார்.  மேருவைக் கொடுமுடி யொடித்து –
இரண்டு செயப்படுபொருள்கள் வந்த வினை.  ழுநின்தாதையைழு என்றது,
சர்ப்பங்களுக்கெல்லாம் ஆதிசேஷன் தலைவனாதல்பற்றி.  பரிவுஇல்நின்னை
என்று எடுத்து – (நல்லோர்பக்கல்) அன்பில்லாத உன்னை யென்றலுமாம்;
ழுபரிவுழு என்ற ஒருசொல்தானே துன்பத்தையும் அன்பையும் உணர்த்துதலை
ழுபரிவென்ப துன்ப மின்பம் பகருமன்பிற்கு மப்பேர்ழு என்ற சூடாமணி
நிகண்டினாலும் அறிக.

      மேருவைக் கொடுமுடியொடித்தகதை:- முன்னொருகாலத்தில் வாயு
தேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் தமக்குள் யார் பலசாலியென்று
விவாதமுண்டாக, அதனைப் பரீக்ஷித்தறிதற்பொருட்டு வாயுதேவன்
மேருமலையின் சிகரத்தைப் பெயர்த்துத்தள்ளுவதென்றும் ஆதிசேஷன்
அதுபெயரவொட்டாமற் காத்துக்கொள்வ தென்றும் கோட்பாடுண்டாகி,
அங்ஙனமே இருவரும் தேவர் முதலியோரது முன்னிலையில் தம்தம்
வலிமையைக் காட்டத்தொடங்கிய பொழுது, ஆதிசேஷன் தனது பெரிய
உடம்பினால் மேருவை வளைந்து தனது ஆயிரந்தலைகளாலும் மேருமலையின்
ஆயிரஞ்சிகரங்களையும் கவிந்து கொண்டு பெயரவொட்டாமல் வெகுநேரங்
காக்க, பின்பு வாயுதேவன் தன்வலிமையால் அம்மலைச் சிகரங்களில் மூன்றைப்
பெயர்த்துக் கொண்டுபோய்த் தென்திசையில் தள்ளிவிட்டன னென்பதாம்

வட்டமாக வில் வளைத்து, எதிர் மண்டல நிலையாய்த்
தொட்ட வாளியான், அடி முதல் முடியுறத் துணிப்புண்டு,
இட்ட மா மணிக் கவசமும் பிளந்து, எதிர்ந்துள்ளார்
பட்டொழிந்தனர்; ஒழிந்தவர் யாவர், புண்படாதார்?67.- அருச்சுனன் பொருதுபலவீரரை யழித்தல்.

(அப்பொழுது அருச்சுனன்), எதிர் – (பகைவர்க்கு) எதிரில்,
மண்டலம் நிலை ஆய் – (விற்றொடுத்து அம்பினையெய்வார்க்கு உரிய)
மண்டலமென்னும் நிலையில் நின்று, வட்டம் ஆக – வட்டவடிவமாக, வில்
வளைத்து – வில்லை வணக்கி, தொட்ட – பிரயோகித்த, வாளியான் –
அம்புகளினால், அடி முதல் முடி உற – கால்முதல் தலை வரையிலும்,
துணிப்புண்டு – அறுக்கப்பட்டவர்களாகியும்,- இட்ட மா மணி கவசம்உம் –
(உடம்பின்மேற் பாதுகாப்பாக) அணிந்த பெரிய ரத்தினங்களிழைத்துச்
செய்யப்பட்ட கவசமும், பிளந்து – பிளக்கப்பட்டவர்களாகியும்,-எதிர்ந்து
உள்ளார் – எதிரிட்டுள்ள பகை வீரர்கள், பட்டு ஒழிந்தனர் –
இறந்துபோனார்கள்; ஒழிந்தவர் – (அவ்வாறு) இறவாமல் நின்றவர்களுள், புண்
படாதார் யாவர் – விரணமடையாதவர் எவர்? (எ – று.)

     அருச்சுனனெய்த அம்புகளினால், பகைவீரர்களிற் பெரும்பாலார்
உடலுறுப்புக்கள் துணிபடக் கவசம்பிளவுபட இறந்தொழிந்தனர்; இறவாமல்
எஞ்சிநின்ற வீரர்களிற் புண்படாதவ ரெவருமில்லை யென்பதாம்.
இரண்டுகால்களையும் மண்டலாகாரமாக வைத்துக் கொண்டு நிற்கின்ற நிலை,
மண்டலநிலை யெனப்படும்; ழுஇருகால் மண்டலித் திடுதல் மண்டல நிலைழு
என்பது, பிங்கலந்தை.  ழுபிளந்துழு என்ற செயவெனெச்சம், காரணப்பொருளது.
கவசம் பிளந்தபின் உடம்பில் அம்புருவுதல் எளிதாதலால், பட்டொழிதலுக்குக்
கவசம் பிளத்தல் காரணமாம். 

வேகம் வற்றிய நதி அன வித நடைப் புரவி,
பாகு அவற்றினைத் தலை அற மலைந்து, பாழ்படுத்தி,
மா கவற்றினில் பொய்த்த சூது ஆடிய வஞ்ச
நா கவற்றிய புன்மொழி நிருபனை நகைத்தான்.68.-அருச்சுனன் துரியோதனதுதேர்க்குதிரைகளையும்
பாகனையும் அழித்து அவனைப்பரிகசித்தல்.

(அருச்சுனன்),- வேகம் வற்றிய நதி அன – நீர்ப்பெருக்கில்
வேகம் குறைந்த ஆறு (தணிந்து ஓடுவது) போன்ற [மந்தமான வேகமுள்ள],
நடை விதம் – கதியின் தன்மையையுடைய, புரவி – குதிரைகளும், பாகு –
சாரதியும், அவற்றினை – ஆகிய அவைகளை, தலை அற – தலை
துணிபடும்படி, மலைந்து – போர்செய்து, பாழ்படுத்தி – அழியச்செய்து,- மா
கவற்றினில் – பெரிய சூதாடுகருவியால், பொய்த்த சூது ஆடிய – பொய்க்கு
இடமான சூதாட்டத்தை (த் தன்மாமனைக்கொண்டு) ஆடி (த் தருமபுத்திரனை)
வென்ற, வஞ்சம் – வஞ்சனையையுடையவனும், நா கவற்றிய புல் மொழி –
நாவினால் (அப்பாண்டவர்கட்கு) மனவருத்தமுண்டாம்படி கூறிய
இழிசொற்களை யுடையவனுமான, நிருபனை – அத்துரியோதனராசனை
நோக்கி, நகைத்தான் – சிரித்தான்; (எ – று.)

     அருச்சுனன் செய்யும் போர்த்திறத்துக்கு அஞ்சித் துரியோதனன்
குதிரைகள் வலிகுறைந்து நடைதளர்ந்ததனால், அவற்றிற்கு வற்றிய நதி உவமை
கூறப்பட்டது.  இனி, வேக என்று பாடங்கொண்டு – (வெயில்) காய்தலால்
எனினுமாம்.  ‘பெரும்போர் செய்து அடையவேண்டிய வெற்றியை எளிதில்
அடையச்செய்தலால், ‘மா கவறு’ எனப்பட்டது; இகழ்ச்சியுமாம்.  புன் மொழி –
திரௌபதியைக் கொணர்ந்து துகிலுரியச் சொன்னது முதலியன.  இங்கு, நகை –
இகழ்ச்சிகாரணமாகப் பிறந்தது.  இச்செய்யுளில் திரிபு என்னுஞ் சொல்லணி
காண்க.        

பாகும் வாசியும் அமைந்தது ஓர் தேர்மிசைப் பாய்ந்து,
மாகு சூழவும் தப்பிய வரி நிற மாபோல்,
ஏகுகின்ற பேர் இராசராசனை எதிர் தகைந்து,
கோகு தட்டிடு தனஞ்சயன் இவை இவை கூறும்:69.-தப்பியோடத்தொடங்கியதுரியோதனனை அருச்சுனன்
மறித்துச் சில கூறத் தொடங்குதல்.

மாகு சூழஉம் – வலையானது (தன்னைச்) சூழ்ந்து
கொள்ளவும், தப்பிய – (அதினின்று) தப்பியோடப்பார்க்கிற, வரி நிறம் மா
போல் – (உடம்பிற்) கோடுகளையும் (பலவகை) நிறங்களையுமுடைய
புலிபோன்று, பாகுஉம் வாசிஉம் அமைந்தது ஓர் தேர்மிசை பாய்ந்து ஏகுகின்ற
– சாரதியும் குதிரைகளும் நன்றாய்ப்பொருந்தப்பெற்றதாகிய வேறொரு
தேரின்மேற் குதித்தேறித் தப்பியோடப் பார்க்கின்ற, பேர் இராச ராசனை –
பெரிய அரசர்கட்கு அரசனாகிய துரியோதனனை, எதிர் தகைந்து – (அங்ஙனம்
எந்தப்பக்கத்திலும் தப்பிப்போகவொட்டாமல் வளைந்துகொண்டு) எதிரே
தடுத்து, கோகுதட்டிடு – (தன்) தோள்களைக் கொட்டி யாரவாரஞ்செய்கின்ற,
தனஞ்சயன் – அருச்சுனன், இவை இவை – இந்த இந்த வார்த்தைகளை, கூறும்
– சொல்வான்; (எ – று.)-அவற்றை, அடுத்த ஐந்து கவிகளிற் காண்க.

      உவமையணி.  தன்காடு புறங்காடு என்னும் வேற்றுமையின்றி எங்கும்
ஒரு நிகராகக் கொடுமைசெய்து திரியும் புலியை உவமை கூறியதனால்,
துரியோதனன் வேற்றரசர்க்குப்போலவே தனது தாயாதிகளான பாண்டவர்க்குந்
தீங்குபுரியு மியல்பின னென்பது தோன்றும்.  மாகு – வலையிற் கட்டியமணி:
அது ஆகுபெயரால் வலையைக் காட்டுமென்பர்.  தநஞ்ஜயன் – வடசொல்;
தருமபுத்திரன் இராசசூயயாகஞ் செய்ய முயன்ற பொழுதில், வடக்கிற்சென்று
பல அரசர்களைச் சயித்து அவர்கள் செல்வத்தைத் திறைகொணர்ந்ததனால்,
அருச்சுனனுக்குவந்த பெயர்; இனி, வெற்றியைச் செல்வமாகவுடையவ னென்றும்
பொருள் கொள்ளலாம்: இப்பெயர், அவனது பல பராக்கிரமங்களை விளக்கும்.
‘ராஜராஜன்’ என்பது, துரியோதனனுக்கு ஒருபெயர்; வடசொல்.  இங்கே
‘பேரிராசராசன்’ என்றது, இகழ்ச்சி.  தோள் தட்டுதல் – வீரக்குறிப்பு.
இவையிவை – அடுக்கு, பன்மைப்பொருளது.  வரிநிறம்மா – புலிக்கு
‘சித்ரகாயம்’ என்று ஒருபெயர் வடமொழியில் வழங்கும்.

கார்முகம் கைத்தலத்து இருப்ப, கைம்மிகு
போர்முகம் தன்னில் நீ புறந்தந்து ஏகினால்,
ஊர்முகக் களிற்றின்மேல் உலாவும் வீதியின்
வார் முகக் கன தன மாதர் என் சொலார்?70.-இதுமுதல் ஐந்துகவிகள் -அருச்சுனன்
துரியோதனனை இகழ்வன.

கார்முகம் – வில், கைத்தலத்து – (உன்) கையிலே, இருப்ப –
துணிபடாதிருக்கவும், நீ -, கை மிகு போர் முகந்தன்னில் – கைகலத்தற்கு
[பொருதற்கு] இடமான யுத்தகளத்தில், புறம் தந்து 
ஏகினால் -முதுகு
காட்டியோடினால்,- ஊர் முகம் – ஊர்கோலமாக, களிற்றின்
மேல் – யானைமேலேறி, உலாவும் – (நீ) பவனிவருகின்ற, வீதியின்-
தெருக்களிலே, வார்முகம் கன தனம் மாதர் – கச்சைமேலே தரித்த
பருத்தகொங்கைகளையுடைய மகளிர், என் சொலார் – என்ன
சொல்லமாட்டார்கள்? (எ – று.)

      நீஊர்க்குச்சென்று யானைமேல் வீதிகளிற் பவனிபோகும்பொழுது
கோலங்காண வருகின்ற மகளிர் உன் வீரமின்மையைப் பற்றி மிகவும் நிந்தனை
சொல்வரே! என்றவாறு.  உனது ஆண்மை மகளிரும் இகழும்படி யானதே
யென்று இகழ்ந்தபடி.  ஆகவே, புறந்தந்தேகாமல் நின்று போர் செய்வாயாக
என்பது, குறிப்பெச்சம்.  ஆயுதமின்றிப் போர்செய்தல் அரியதாதலாற்
கைவில்லும் அற்று ஓடினால் அவ்வளவாக் குற்றமில்லை யென்பான், ழுகார்முகங்
கைத்தலத் திருப்பப் புறந்தந்தேகினால்ழு என்றான்.  இனி, ஊர்முகம் வீதியின்-
ஊரிலுள்ள வீதியிலென்றும், ஊர்முகம்களிறு – ஏறிச் செலுத்தப்படுந்
தன்மையையுடைய களிறு என்றும் ஆம்.  இச்செய்யுளை, கீழ்ப்போந்த 37-
ஆஞ் செய்யுளின் பின்னிரண்டடிகளோடு ஒப்பிடுக.  போரிற் புறங்காட்டுதல்,
தோல்விக்குறி.

     இதுமுதற் பதினேழு கவிகள் – பெரும்பாலும் மூன்றாஞ் சீரொன்று
மாச்சீரும், மற்றை மூன்றும் விளச்சீர்களுமாகிய அளவடி நான்குகொண்ட
கலிவிருத்தங்கள். 

இருபுறம் சாமரம் இரட்ட, திங்கள்போல்
ஒரு குடை நிழற்ற, இவ் உலகம் நின்னதா,
மருவலர் கைதொழ, வாழுகின்ற நீ,
பொரு முனை காண்டலும், போதல் போதுமோ?

இரு புறம் – இரண்டு பக்கங்களிலும், சாமரம் இரட்ட –
சாரமரங்கள் வீசவும், திங்கள் போல் – பூரணசந்திரன்போல, ஒரு குடை –
ஒப்பற்ற வெண்கொற்றக்குடை, நிழற்ற – நிழலைச் செய்யவும், இ உலகம் –
இந்த நிலவுலகமுழுவதும், நின்னது ஆ – உன் வசத்ததாக, மருவலர் கைதொழ
– பகைவர்கள் கைகூப்பிவணங்கும்படி, வாழுகின்ற – அரசாண்டு வீற்றிருக்
கின்ற,  நீ  -, பொரு  முனை  காண்டலும்  –  போர்செய்யுமிடத்தைப்
பார்த்தமாத்திரத்திலே, போதல் – புறங்கொடுத்துஓடுதல், போதும்ஓ-தகுமோ?
(எ – று.)

     ழுபொருமுனை காண்டலும் போதல் போதுமோழு என்றது-சிறிது நேரம்
போர்செய்தாயினும் போகலாகாதோ? போர்க்களத்தைக் கண்டமாத்திரத்தில்
இவ்வாறுமீண்டுபோவது, அரசர்க்கரசனாகிய உனக்குப் பேரவமானந்தருவ
தொன்றன்றோ என்றபடி.  சாமரம் – சமரமென்னும் மானினதுவாலின்
வெண்மயிரினாற் செய்யப்பட்டதோர் இராசசின்னம்.  குடைக்குத் திங்கள் –
வெண்மையாலும், வட்டவடிவாலும், தண்ணொளி பரப்புதலாலும் உவமை

‘உன் பெருந் துணைவரோடு உன்னை, ஓர் கணத்து,
என் பெருங் கணைகளுக்கு இரைகள் ஆக்குவேன்;
வன் பெருங் கொடிமிசை மடங்கல் ஏற்றினான்-
தன் பெரும் வஞ்சினம் தப்புமேகொலாம்!

உன் பெருந் துணைவரோடு – உன்னுடைய பெரிய தம்பி
மார்களையும், உன்னை – உன்னையும், ஓர் கணத்து – ஒருக்ஷணகாலத்திற்குள்,
என் பெருங் கணைகளுக்கு – எனது பெரிய அம்புகளுக்கு, இரைகள்
ஆக்குவேன் – உணவாகச் செய்துவிடுவேன்; (அங்ஙனஞ்செய்வேனாயின்), வல்
பெருங் கொடிமிசை மடங்கல் ஏற்றினான் தன்-வலிய பெரிய கொடியில்
ஆண்சிங்கத்தினது வடிவத்தை யேற்றியவனான வீமசேனனது, பெரு வஞ்சினம்
– பெரிய சபதம், தப்பும் கொல் ஆம் – தவறிப்போகுமே! (எ – று.)- ழுஆதலால்
அதுசெய்திலேன்ழு என்றது, குறிப்பெச்சம்.

     உங்களை இப்பொழுது யான் கொல்லாமல் விடுதற்குக் காரணம் வீமன்
சபதந் தப்பினவ னாவனே யென்கின்ற எண்ணமொன்றேயன்றி வேறன்று
என்றான்.  ழுபெருந் துணைவர்ழு என்றது – தொண்ணூற்றொன்பதின்மரென
எண்ணிற் பெரிய தம்பிய ரென்றற்கு.

     துரியோதனன் சகுனியைக்கொண்டு தருமபுத்திரனைச் சூதில் வென்று
பாண்டவரை அடிமைப்படுத்தியபின்பு திரௌபதியைத் துச்சாதனனைக்
கொண்டு மயிர்பிடித்திழுத்துச் சபையிற் கொணர்ந்து துகிலுரிந்தும் என்
மடியின்மே லுட்கா ரென்று சொல்லியும் பங்கப்படுத்தியபொழுது, அதுகண்டு
பொறாது வீமசேனன் ழுதுரியோதனாதியர் நூற்றுவரையும் நானே கொல்வேன்ழு
என்று பிரதிஜ்ஞை செய்துள்ளான்.  பெருங்கணைகள் – பாசுபதம் முதலியன.
ழுஉன்னை என் கணைகளுக்கு இரைகளாக்குவேன்ழு என்றது – அம்புகளை
எய்து உன்னை அழித்துவிடுவே னென்றபடி; மரபுவழுவமைதி:
ழுஉண்டற்குரிய வல்லாப்பொருளை, உண்டனபோலக் கூறலுமரபேழு என்பது,
தொல்காப்பியம்.  

எங்களைக் கானில் விட்டு, இரவி ஏக வெண்
திங்களைப் போல், நெடுந் திகிரி ஓச்சினீர்!
சங்கு அளை பயில் வள நாடன், தண்டினால்,
உங்களைக் களப்பலி ஊட்டும், நாளையே.

(நீங்கள்), – எங்களை கானில் விட்டு – எங்களைக்
காட்டிற்குப்போகும்படி அனுப்பிவிட்டு, இரவி ஏக-சூரியன் மறைந்து போக,
(அந்தச்சமயத்திலே), வெள் திங்களைப் போல் – வெண்ணிறமான சந்திரன்
ஒளிவீசி விளங்குவது போல, நெடுந்திகிரி ஓச்சினீர் – பெரிய
ஆஜ்ஞாசக்கரத்தை (உலகமுழுவதுஞ்) செலுத்தி வாழ்ந்து விளங்கினீர்கள்;
உங்களை –  (இவ்வாறு துரோகிகளாகிய) உங்களை, நாளைஏ – நாளைக்கே
[வெகுவிரைவிலே யென்றபடி], சங்கு அளை பயில் வளம் நாடன் – சங்குகள்
சேற்றில் ஊர்கின்ற நீர் வளப்பத்தையுடைய குருநாட்டுக்கு உரியவனாகிய
வீமன், தண்டினால் – (தனது சத்துருகாதினியென்னுங்) கதாயுதத்தால், களம்
பலி ஊட்டும் – போர்க்களத்திற்கொன்று பலியிடுவான்;

     இன்றைக்கு யான் உயிரோடுவிட நீங்கள் உய்ந்து ஓடிப்போவீரானாலும்
நாளைக்கு வீமன்கதைக்குத் தப்பிப்போகமுடியா தென்பதாம்.  ழுநாளைழு என்றது,
விரைவி லென்றமாத்திரமாய் நின்றது.  நாங்கள் இந்திரப்பிரஸ்தநகரத்தில்
வசித்திருந்தவரையிலும் நீங்கள் பெருஞ்சிறப்படைந்திலீரென்பான்,
ழுஎங்களைக்கானில் விட்டு இரவியேகவெண்டிங்களைப்போல்
நெடுந்திகிரியோச்சினீர்ழு என்றான்; சூரியன்முன்னே சந்திரனொளி
விளங்காதவாறுபோல வெளிப்பட்டு வந்த எங்கள் முன்னே இனி உங்களரசு
செல்லா தென்பதும் இதில் விளங்கும்.  ஆஜ்ஞையைச் சக்கரமென்றும்
குடையென்றும் கோலென்றும் கூறுதல், மரபு.  சங்குகள் தங்குதல்,
நீர்வளமிகுதியால்.  அளை – குழைசேறு;  வளையுமாம்.  இங்கு, வீமனை
ழுவளநாடன்ழு என்றது – பகைவரை வெல்பவர்க்கு அவர் நாடு உரியதாகின்ற
இயல்புபற்றி.  களப்பலியூட்டும் – துணித்துப் போர்க்களத் தெய்வத்துக்கும்
பேய்களுக்கும் உணவாக இடுவன்.

இரவலர், இளையவர், ஏத்தும் நாவலர்,
விரவிய தூதுவர், விருத்தர், வேதியர்,
அரிவையர், வெஞ் சமர் அஞ்சுவோர், பெருங்
குரவர், என்று இவர்களைக் கோறல் பாவமே!’

 இரவலர் – யாசகர்களும், இளையவர் – இளம் பி்ளைகளும்,
ஏத்தும் நாவலர் – (அரசரைப்) புகழ்கின்ற துதிபாடகர்களும், விரவிய தூதுவர்
– (வேற்றரசரிடமிருந்து) தம்மிடத்துவந்த தூதர்களும், விருத்தர் –
முதியவர்களும், வேதியர் – பிராமணர்களும், அரிவையர் – மகளிரும், வெம்
சமர் அஞ்சுவோர் – கொடிய போரில் அஞ்சியோடுபவர்களும், பெருங்குரவர் –
பெரிய ஐங்குரவர்களும், என்ற இவர்களை -, கோறல் – கொல்லுதல், பாவம் –
தீவினையாம்; (எ – று.)- இதனால், கொல்லத் தகாதவர் இன்னார் என்பதை
அருச்சுனன் கூறுகின்றான்.

     ழுபோரில் முன்னிற்கமாட்டாமல் அஞ்சியோடுகின்றவர்களைக் கொல்லுதல்
பாவமாதல்பற்றியும் உன்னை நான் கொல்லேன்ழு என்றவாறாம்;  இது,
குறிப்பெச்சம்: தருமயுத்தஞ்செய்வேனேயன்றி அதருமயுத்தஞ்செய்யே
னென்றான்.  பொதுப்பொருள்  மாத்திரமே கூறி அதனாற் சிறப்புப் பொருள்
பெறவைத்தது-பிறிதுமொழிதலணி. இந்தச்சந்தர்ப்பத்தில் போரில்
கொல்லத்தகாதவர் இரவலர்முதலியோர் என்று அவர்களையெல்லாம்
ஒப்புமைக்கூட்டவணியால்உடன் கூறினார்.  யாசகர்தம்வயிறு பிழைத்தற்காக
இரத்தலன்றி யாதொரு தீங்குஞ் செய்யாமையாலும், இளைவர் எதிர்த்தற்கு ஏற்ற
அறிவும் ஆற்றலும் இலராதலாலும், நாவலர் துதிமொழி கூறுபவராதலாலும்,
தூதர் தமது தலைவர்பணியைச் செய்பவராதலாலும், விருத்தர் எதிர்த்தற்கு ஏற்ற
திறலிலரும் நன்குமதித்து உபசரிக்கத்தக்க பெருமையுடையரு மாதலாலும்,
சமரஞ்சுவோர்மேற்படைசெலுத்துவது அதருமயுத்த மாதலாலும்,
ஐம்பெருங்குரவர் அரச னுவாத்தியான் தாய் தந்தை தம்முன், நிகரில் குரவ
ரிவரி
வரைத்,தேவரைப்போலத் தொழுதெழுகவென்பதே யாவருங்கண்டநெறிழு
என்றபடி தெய்வமாகக் கொண்டாடத் தக்கவ ராதலாலும், இவர்களைக்
கொல்லுதல் கொடியபாதகமாகு மென்க; ழுமாறன்மையின் மறம்வாடுமென்
றிளையாரையுமெறியான், ஆறன்மையின் முதியாரையு மெறியா னயிலுழவன்ழு
எனற் சிந்தாமணி இங்கு நோக்கத்தக்கது.  
அரசன், உபாத்தியாயன்,தாய்
தந்தை தமையன் என்ற ஐவரும் – ஐம்பெருங்குரவ ரெனப்படுவர்.

     இரவலர் – இரத்தலில் வல்லவர்:  அன்றி, இரவல் அர் –
இரக்குந்தொழிலுடையவர்.  அறிவினாலும் பருவத்தாலும் ஒழுக்கத்தாலும்
முதியவர்களாகிய ஞானவ்ருத்தர் வயோவ்ருத்தர் சீலவ்ருத்தர் என்னும்
மூவகைப்பெரியோரும் அடங்குவதற்கு, பொதுப்பட ழுவிருத்தர்ழு என்றான்.
என்றிவர் – தொகுத்தல்.  கோறல் – தொழிற்பெயர். 

பற்பல உரை இவன் பகரும் ஏல்வையில்,
சொற் பயில் நான் மறைத் துவசன், வீடுமன்,
கற்பகம் நிகர் கொடைக் கன்னன், ஆதியோர்
மல் புய நிருபனை வந்து கூடினார்.75.-துரோணர் முதலியோர்அருச்சுனனை வளைத்தல்.

பல்பலஉரை – (இவ்வாறு) பலபலவார்த்தைகளை, இவன்
பகரும் ஏல்வையில் – இவ்வருச்சுனன் (துரியோதனனை நோக்கிச்) சொல்லி
இகழ்கின்றபொழுதில்,-சொல் பயில் நால் மறை துவசன் – (பலர்) சொல்லுதல்
பொருந்திய நால்வகைப்பட்ட வேதத்தை யெழுதிய கொடியையுடையவனான
துரோணாசாரியனும், வீடுமன் – பீஷ்மனும், கற்பகம் நிகர் கொடை கன்னன் –
கல்பகவிருக்ஷம்போன்ற தானத்தையுடைய கர்ணனும், ஆதியோர் –
முதலானவர்கள், மல் புயம் நிருபனை – வலிமையுள்ள தோள்களையுடைய
அரசனான அருச்சுனனை, வந்து கூடினார் – திரண்டு வந்து வளைந்தார்கள்;
(எ – று.)

      சொல்பயில் – கல்வியைப் பிறர்க்குப்போதிப்பதில் தேர்ச்சியுள்ள
என்றலு மொன்று.  நான்மறை – இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்பன;
தைத்திரியம், பௌடிகம், தலவகாரம், சாமம் என்பாரு முளர்.  மறைத்துவசன் –
வேதக்கொடியுடையான்.  துரோணன் ஆதியில் வீடுமனிடம்
வந்துசேர்ந்தபொழுது வீடுமன் துரோணனைக் கௌரவபாண்டவர்க்குப்
பிரதானவில்லாசிரியனாக்கி அவனுக்கு இராசபட்டத்தையும் அரசர்க்கு உரிய
குடை கொடி சாமரம் தேர் கிரீடம் முதலிய அங்கங்களையும்
அளித்தனனாதலின், இவற்குத் துவசம் உரியதாயிற்று.

     கற்பகம் – கல்பகம்:  (வேண்டுவோர் வேண்டுவனவற்றைக்)
கல்பிப்பதென்று பொருள்படும்:  கல்பித்தல் – உண்டாகச்செய்தல். இது, பிறர்
தன்னிடம்வந்து நினைத்தவற்றையெல்லாம் அவர்
 சொல்லியிரவாதமுன்னே
கைம்மாறு கருதாது கொடுக்குமியல்பினது: இதனை உவமைகூறியது, கர்ணனது
தானச்சிறப்பை விளக்கும். கன்னன்-கர்ணன் என்ற வடசொல்லின் விகாரம்;
இப்பெயர்-கர்ண குண்டலங்களோடு பிறந்தமை பற்றியது: காதின்வழியே
பிறந்ததனால் வந்த பெயரென்றுங் கூறுவர்; கர்ணம்-காது.

மின்னுடன் மின்மினி வெகுளுமாறுபோல்,-
தன்னுடன் நிகர் இலாத் தடக் கை வண்மையான்,-
மன்னுடன் இகல்வது வார்த்தை அன்று; இனி
என்னுடன் மலைதி, நீ!’ என்று கூறினான்.76. கர்ணன் அர்ச்சுனனைப் போர்க்கு அழைத்தல்.

(அவர்களில்), தன்னுடன் நிகர் இலா – தனக்கு ஒப்புடை
பெறாத, தட கை வண்மையான் – பெரிய இரண்டுகைகளாலும் கொடுக்குங்
கொடையையுடையவனான கர்ணன், -மின்னுடன் மின்மினி வெகுளும் ஆறு
போல் – மின்னலுடனே மின்மினிப்பூச்சி கோபித்துப்பகைத்து (ஒளியாமல்)
எதிர்த்தால் அதுபோல, – (அருச்சுனனை நோக்கி), ‘நீ-, மன்னுடன்
இகல்வது – துரியோதனராசனுடனே எதிர்த்துப் பேசுவது, வார்த்தை அன்று
– காரியமன்று; இனி-, என்னுடன் மலைதி – என்னோடு போர்செய்வாய்,’
என்று கூறினான் – என்று வீரவாதஞ்சொல்லிப் போர்க்கு அழைத்தான்;

     மின்னுடன் மின்மினி வெகுளதலாவது-உன்னிலும் நான்
மிக்கவொளியுடையே னென்று மாறுபடுதல்; இது, இல்பொருளுவமை.
மின்னல்-அருச்சுனனுக்கும், மின்மினி-கர்ணனுக்கும் கவி கூறிய உவமம்.
இதனால், வீரத்தில் அருச்சுனனது மிக்கவுயர்வும், கர்ணனது மிக்கதாழ்வும்
விளங்கும். இனி, ‘மின்னுடன் மின்மினி வெகுளுமாறுபோல்’ என்பதனை,
துரியோதனனோடு அருச்சுனன் எதிர்த்ததற்குக் கர்ணன்கூறிய உவமையாகக்
கொண்டு உரைப்பாரும்உளர். மின்மினி-இருளில் மின்னுவதொரு பறக்கும்
புழு; இடைவிட்டு ஒளிசெய்வதென்று பொருள்படுங் காரணக்குறி

கரக் கவுள் மதம் பொழி காய் களிற்றை விட்டு,
உரக் கொடுவரியின்மேல் ஓடும் யாளிபோல்,
நிரக்கும் அந் நிருபனும் நிற்க, வந்து, போர்
இரக்கும் அக் கன்னன்மேல் இரதம் ஏவினான்.77. – அருச்சுனன் கர்ணனை நோக்கித் தேர்செலுத்தல்.

கரம்-(தன்) துதிக்கையினின்றும், கவுள் – கன்னத்தினின்றும்,
மதம் பொழி – மதங்களைச் சொரிகின்ற, காய் களிற்றை –
கோபிக்குமிய்லபுள்ளதொரு யானையின்மேற் பாய்வதை, விட்டு – ஒழித்து,
உரம் கொடுவரியின்மேல் ஓடும் – வலிமையையுடையதொரு புலியின்மேல்
ஓடிப்பாய்கின்ற, யாளி போல்-யாளியென்னும் மிருகம் போல, – (அருச்சுனன்),
– நிரக்கும் அ நிருபன்உம் நிற்க-பொருந்திய அந்தத் துரியோதனராசனும்
நின்று கொண்டிருக்க (அவனைவிட்டு), வந்து போர் இரக்கும் அ
கன்னன்மேல் இரதம் ஏவினான் – எதிரில் வந்து யுத்தத்தை வேண்டுகின்ற
அந்தக்கர்ணனைக் குறித்துத் (தனது) தேரைச் செலுத்தினான்; (எ-று.)

     ஒருயாளி யானையை எளிதில் அழிக்கவல்லதாயிருந்தும் அதனை
அலட்சியத்தால் விட்டு ஒருபுலியின்மேற் பாய்ந்தாற்போல, அருச்சுனன்
துரியோதனனை எளிதிற் கொல்லவல்லனாயிருந்தும் அதுசெய்யாது
இகழ்ந்துவிட்டுக் கர்ணனைநோக்கிப் போர்க்குச் சென்றன னென்பதாம்.
யானை – துரியோதனனுக்கும், புலி – கர்ணனுக்கும், யாளி – அருச்சுனனுக்கும்
உவமை. விற்போரில் துரியோதனனினும் கர்ணன் சிறந்தவனென்பது
இவ்வுவமையில் தொனிக்கு மெனக் கொள்வர் ஒருசாரார். யாளி-துதிக்கையை
யுடையதும் யானையைக்கொல்வதும் சிங்கம்போல்வது மாகிய தொரு மிருக
விசேடம்; இது, யாளியானை யெனவும் படும்: இச்சொல் சிங்கமென்ற
பொருளில் வழங்குதலு முண்டு.

     போரிரத்தல்-‘நீ என்னுடன் போர்செய்ய வா’ என்று அழைத்தல்,
யாவர்க்கும் கேட்டவற்றையெல்லாங் கொடுக்கின்ற வள்ளலாகிய கர்ணன்
அருச்சுனனிடம் வந்து போரையிரந்தன னென ஒருவகைச்சமத்காரம்
அமையக் கவி கூறினார். கொடு வரி – ஒரு சொல்: வளைவான
உடற்கோடுகளையுடையதென்ற காரணப்பொருள் பற்றிப் புலியைக் குறிக்கும்;
பண்புத்தொகைப்புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை, கொடுமை – வளைவு.
‘அருச்சுனன் கர்ணன் மேல் இரதம்ஏவினான்’ என்றதை, உத்தரனுக்குக்
கட்டளையிட்டு அவனைக்கொண்டு செலுத்தின னென்க. 

இரதமும் இரதமும் எதிர்ந்த போது, இரு
குர துரகதங்களும் குமுறி ஆர்த்தன;
உரைதரு பாகரும் உடன்று கூவினார்;
விரை தனு வளைத்தனர்; வீரர்தாமுமே.78.-கர்ணன் அருச்சுனன் என்ற இருவரும் கைகலத்தல்.

இரதம்உம் இரதமும் எதிர்ந்தபோது – (அருச்சுனனது)
தேரும் (கர்ணனது) தேரும் ஒன்றையொன்று எதிரிற்சமீபித்து
நெருங்கியபொழுது, -இரு குரம் துரகதங்கள்உம்-இரண்டுதேரிலும் பூட்டிய
(வலிய) குளம்புகளையுடைய குதிரைகளும், குமுறி ஆர்த்தன-கனைத்து
ஆரவாரித்தன; உரைதரு பாகர்உம்-சிறப்பித்துச்சொல்லப்படுகின்ற
இரண்டுதேர்ச்சாரதிகளும், உடன்று கூவினார்-பெருங்கோபங்கொண்டு
ஆரவாரித்தார்கள்; வீரர்தாம்உம்-இரண்டு வீரர்களும் (கர்ணனும்
அருச்சுனனும்), விரை தனு வளைத்தனர் – விரைவாக வில்லைவளைத்தார்கள்;
(எ-று.)

இரு துரகதம் – இரண்டுபக்கத்துக் குதிரைகள். குர துரகதம்-(ஒற்றைக்)
குளம்புகளினால் விரைந்துசெல்வதான குதிரை. விரை-விரைந்து:
வினையெச்சவிகாரம்; (போர்செய்தலில்) விரைவுகொண்ட, வில் என்றால்,
வினைத்தொகையாம்

இருவரும் எதிர் எதிர் ஏவும் வாளியால்,
வெருவரும் இருள் உற, விசும்பு தூர்த்தனர்;
பொரு அரும் அமர் நெடும் போது தாக்கியும்,
ஒருவரும் இளைத்திலர், ஒத்த ஆண்மையார்.79.-இருவரும் நெடும்பொழுதுசமமாகப் பொருதல்.

ஒத்த ஆண்மையார் – சரிசமமான ஆண்மையையுடையரான,
இருவர்உம் – (கர்ணன் அர்ச்சுனன் என்ற இந்த) இரண்டுபேரும், எதிர் எதிர்
ஏவும் – எதிர்க்கெதிரே [தம்மில் ஒருவரைக்குறித்து ஒருவர்] செலுத்திய,
வாளியால் – அம்புகளினால்,- வெருவரும் இருள் உற – அஞ்சத்தக்க இருள்
உண்டாக, விசும்புதூர்த்தனர் – ஆகாயத்தை மறைத்தனர்; (இவ்வாறு), பொருவு
அரும் அமர் – ஒப்பில்லாத யுத்தத்தை, நெடும் போது தாக்கிஉம் –
வெகுநேரம் உக்கிரமாகச்செய்தும், ஒருவர்உம் இளைத்திலர் – (இவ்விருவரில்)
ஒருவராயினும் சிறிதும் வலிகுறைந்தன ரில்லை; (எ – று.)

     நிரைநிரையாகத்தொடுத்த மிகப்பலவாகிய அம்புகள் அடர்ந்து சூரியனை
மறைத்தலால் இருள் உண்டாயிற் றென்க.  

மற்று ஒரு தொடையினில் சுவேதவாகனன்,
முற்று ஒரு கணத்திடை, மூன்று கோல் விட;
இற்று, ஒரு கணத்திடை, இவுளி, பாகு, தேர்,
அற்று, ஒருவினன், அடல் ஆண்மை அங்கர் கோன்.80.-கர்ணன் தேர்முதலியனஅழிந்து ஓடுதல்.

(இங்ஙனம் பொருகையில்), சுவேத வாகனன் –
வெண்ணிறமானகுதிரைகளையுடையவனாகிய அருச்சுனன், மற்று – பின்பு, ஒரு
தொடையினில்- ஒரு பிரயோகத்தில், முற்று ஒரு கணத்திடை – ஒரு
க்ஷணகாலம்முடிவதற்குள்ளே, மூன்று கோல் விட – மூன்று அம்புகளை
ஒருசேரத்தொடுக்க, (அவற்றால்)-இற்று ஒரு கணத்திடை – இத்தன்மைத்தான
அந்த க்ஷணமொன்றிலே, அடல் ஆண்மை அங்கர் கோன் – வலிமையையும்
வீரத்தன்மையையுமுடைய அங்கதேசத்தார்க்கரசனான கர்ணன், இவுளி பாகு
தேர் அற்று – குதிரைகளும் சாரதியும் தேரும் அழிந்து, ஒருவினன் –
(போரினின்று) நீங்கிச்சென்றான்; (எ – று.)

     அங்கர்கோன் இவுளிபாகுதேர் அற்று ஒருவினன் – சினைவினை,
முதல்வினைகொண்டது.  வெண்ணிறக் குதிரைகள் அக்கினியீந்தவையென்று
முன்னரே கூறப்பட்டன.  மற்று – இடைச்சொல்.  ஒரு தொடை –
தொடுக்குந்தரமொன்று.  முற்று கணம் – வினைத்தொகை.  கணம் – ஒருகால
நுட்பம்.  மதனது அங்கம் [சரீரம்] விழுந்த இடம், அக்காரணத்தால்
அங்கதேசமென்று பெயர்பெற்றது.

ஒருவியிட்டு ஓடி, மற்று ஓர் ஒர் தேர்மிசை
மருவியிட்டு, எதிருற வந்து மோதியும்,
உருவியிட்டன கணை ஒன்றுபோல் பல;
வெருவியிட்டனன், அவன், மீள மீளவே.81.-கர்ணன் மீண்டும் மீண்டும்வந்து பொருது தோற்றோடுதல்.

அவன் – அந்தக்கர்ணன்,- ஒருவியிட்டு ஓடி – (போர்) நீங்கி
ஓடிப்போய், மற்று ஓர் ஒர் தேர்மிசை – வேறு ஒவ்வொரு தேரின்மேல்,
மருவியிட்டு – சேர்ந்து [ஏறி], எதிர் உற வந்து மோதிஉம் – (அருச்சுனனுக்கு)
எதிராக வந்து போர்செய்தும், ஒன்று போல் பல கணை உருவியிட்டன – ஓர்
அம்புபோலவே (அருச்சுனனது) பல அம்புகளும் (ஒருதொடையாகத் தனது
உடம்பில்) தைத்துப் புதைந்தோடினவாக, மீள மீள – மறுபடியும் மறுபடியும்,
வெருவியிட்டனன் – அஞ்சிப்போயினான்; (எ – று.)

     கர்ணன் போரினின்று நீங்கியோடி வேறொரு தேரின்மேலேறி மீண்டு
அருச்சுனனெதிரில்வந்து பொருவதும், அருச்சுனனம்புகள் பல தனது உடலில்
தைக்கப்பெற்றவனாய் அஞ்சித்தோற்றோடுவதுமாகப் பலமுறை நிகழ்ந்த
தென்க. ‘மீள மீள’ என்ற அடுக்கு பன்மைப்பொருளது. 

இம் முறை வந்து வந்து, எதிர்ந்து, வெஞ் சமர்
மும் முறை முறிதலும், முனிவன் மா மகன்,
அம் முறை முதுகிடும் அருக்கன் மைந்தனை,
தெவ் முறைமையின் சில வார்த்தை செப்புவான்:82.-பலமுறை தேற்றோடியகர்ணனை நோக்கி அசுவத்தாமன்
சில பரிகாசச்சொற்களைக் கூறத் தொடங்குதல்.

(கர்ணன்), இ முறை – இவ்வாறு, வெம் சமர் – கொடிய
போரில், வந்து வந்து-, எதிர்ந்து – எதிர்த்து, மும் முறை முறிதலும் –
மூன்றுதரம் தோற்றுப்போனவளவில்,-முனிவன் மாமகன் – துரோணாசாரியனது
சிறந்த குமாரனாகிய அசுவத்தாமன், அ முறை முதுகு இடும் அருக்கன்
மைந்தனை – அவ்வாறு முதுகு காட்டித் தோற்றோடுகின்ற சூரியகுமாரனாகிய
அக்கர்ணனை (நோக்கி), தெவ் முறைமையின் சில வார்த்தை செப்புவான் –
பகைத்தன்மையையுடைய சிலவார்த்தைகளைச் சொல்பவனானான்; (எ – று.) –
அவற்றை, அடுத்த இரண்டுகவிகளிற் கூறுகின்றார்.

     துரோணன் மனைவியாகிய கிருபியின் வடிவழகைக் கேள்வியுற்றும்
ஒருகால்கண்டும் மிகக்காமுற்ற சிவபிரானது அருளினாற்
குதிரையினிடமாகப்பிறந்தவன் இவன்; துரோணனாலும், கிருபியினாலும்
வளர்க்கப்பட்டவன்; ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவன்.    

தேரும் ஒன்று; ஒருவனே, தேரில் ஆளும்; இங்கு
யாரும் அஞ்சுதிர்!” என இகழ்ந்து உரைத்த நீ,
போர் உடைந்து ஓடுதல் போதுமோ?-நறுந்
தாருடன் பொலிதரு தாம மார்பனே!83.-இதுவும், அடுத்தகவியும் -அசுவத்தாமனது
இகழ்ச்சிவார்த்தை.

நறுந் தாருடன் பொலிதரு – வாசனைவீசுகின்ற
பூமாலையுடனேவிளங்குகின்ற, தாமம் மார்பனே – இரத்தினவாரத்தைத் தரித்த
மார்பையுடையவனே! ‘தேர்உம் ஒன்று – (எதிர்ப்பக்கத்தில்) தேரும் ஒன்றுதான்:
தேரில் ஆள்உம் – அத்தேரிலேறிப்போர்க்குவந்தவனும், ஒருவன்ஏ –
ஒருத்தன்தான்; (இங்ஙனமிருக்கவும்), இங்கு யார்உம் அஞ்சுதிர் – இங்கு
எல்லாரும் அச்சமடைகின்றீர்களே!’ என – என்று, இகழ்ந்து உரைத்த –
(எங்களையெல்லாம்) அவமதித்துப்பேசின, நீ-, போர்உடைந்து ஓடுதல் – (அந்த
ஒருவனோடுசெய்யும்) போரில் தோற்று முன்நிற்கமாட்டாமல் ஓடிப்போவது,
போதும்ஓ – தகுமோ? (எ – று.)

     மற்றயாவரையும் இகழ்ந்து பேசிவந்த நீயே இவ்வாறு ஓடினால் யாவரும்
உன்னை இகழாரோ? என்றபடி.  ‘யார்’ என்ற சொல் – இருதிணையைம்பால்
மூவிடத்துக்கும் பொதுவாக வழங்குதலால், ‘யாருமஞ்சுதிர்’ என்ற முடிபை
இடவழுவமைதியென்னாது வழாநிலையாகவே கொள்ளலாம்.  இகழ்ந்துரைத்தது
– கீழ் 53 – ஆஞ்செய்யுளிற் காண்க.  ‘நறுந்தார்’ எனவே, பூமாலையாயிற்று;
இங்கு, வெட்சிப்பூமாலை யெனவுமாம்.  நினது மார்பு போரில் எதிர்த்து
நிற்றற்குஅன்றி அலங்காரத்திற்கே அமைந்ததுபோலு மென்ற கருத்துத்
தொனிக்குமாறு ‘நறுந்தாருடன் பொலிதரு தாமமார்பனே’ என்று விளித்தான்

சொல்லலாம், இருந்துழி; சொன்ன சொற்படி
வெல்லலாம் என்பது விதிக்கும் கூடுமோ?
மல்லல் ஆளியைப் பல வளைந்து கொள்ளினும்,
கொல்லலாய் இருக்குமோ, குஞ்சரங்களால்?’

 இருந்தஉழி – இருந்த இடத்திலே (இருந்துகொண்டு),
சொல்லல்ஆம் – (எவ்வளவு செய்தற்கரியகாரியத்தையும் செய்து
முடிப்பேனென்றுஎளிதில் வாயாற்) சொல்லுதல் (யாவர்க்கும்) எளியதாம்;
சொன்ன சொல்படி -(தான்) சொல்லிய அச்சொல்லின்படியே, வெல்லல் ஆம்
என்பது -(பகைவரைப் போரில்) ஜயித்து விடலா மென்பது, விதிக்குஉம் –
தெய்வத்துக்கும், கூடும்ஓ – நிச்சயமாகக் கைகூடுவதொருகாரியமோ? [அன்று];
(அன்றியும்), மல்லல் ஆளியை – வலிமைமிகுதியுடைய சிங்கத்தை, பல
வளைந்து கொள்ளின்உம் – பலயானைகள் ஒன்றாகத்திரண்டு
சூழ்ந்துகொண்டாலும், குஞ்சரங்களால் – அந்த யானைகளால், கொல்லல் ஆய்
இருக்கும்ஓ – கொல்லும்படியாயிருக்குமோ? [இராதே]; (எ – று.)

     அரியவற்றை எண்ணிச் சொல்லுதல் வலிமையில்லாதவர்க்கும்
இயலுதலால் ழுசொல்லலாம்ழு என்றும், அவற்றை அவ்வாறு செய்தல்
வலிமையுள்ளவர்க்கும் இயலாதுபோதலால் ழுவிதிக்கும் கூடுமோழு என்றும்
கூறப்பட்டன; ழுசொல்லுதல் யார்க்கு மெளிய அரியவாஞ், சொல்லியவண்ணஞ்
செயல்ழு என்றார் திருவள்ளுவரும்.  ழுவிதிக்கும் கூடுமோழு என்றதனால்,
நினக்குக் கூடாமை பெரியதொன்றன்று என்றபடி.  ழுபலயானைகள் கூடினாலும்
ஒரு சிங்கத்தைக் கொல்லமுடியுமோ?ழு என்ற உபமானவாக்கியம், ழுசாதாரண
வீரர் பலர் திரண்டு எதிர்த்தாலும் மகாவீரனான அருச்சுனனொருவனை வெல்ல
முடியாதுழு என்ற உபமேயக்கருத்தைத் தோற்றுவித்ததனால், பின்னிரண்டடி
பிறிதுமொழிதலென்னும்அலங்காரம்.  மல்லல் – மிருகங்கட்கெல்லாம்
அரசாயிருக்குந் தலைமையுமாம்.  

கொழுதும் அம்பினும் மிகக் கொடிய கூற்று இவை
பழுது அறு நாவினான் பகரும் வேலையில்,
முழுது உணர் முனியையும், முந்தைதன்னையும்,
தொழுது, பற்குனன், சில தொடைகள் ஏவினான்.85.-துரோணன்மேலும்வீடுமன்மேலும் அருச்சுனன்
அம்புசெலுத்தல்.

பழுது அறு நாவினான்-குற்றமற்ற நாவையுடையவனான
அசுவத்தாமன், கொழுதும் அம்பின்உம் மிக கொடிய கூற்று இவை –
(உடம்பில்) தைத்து ஊடுருவுகின்ற அம்புகளைக்காட்டிலும்
மிகவுங்கொடுமையுடையனவாகிய இப்படிப்பட்ட வார்த்தைகளை, பகரும்
வேலையின் – (கர்ணனை நோக்கிச்) சொல்லி யிகழ்கின்ற அப்பொழுதில்,-
பற்குனன் – அருச்சுனன்,- முழுது உணர்முனியைஉம் – எல்லாவற்றையும்
அறிந்த துரோணாசாரியனையும், முந்தைதன்னைஉம் – பாட்டனான
பீஷ்மனையும், தொழுது – வணங்காநின்று, சில தொடைகள் ஏவினான்-சில
அம்புகளைப் பிரயோகித்தான்; (எ – று.)

     ழுஅசுவத்தாமன் அம்பினும் மிகக்கொடியனவான இவ்வார்த்தைகளைச்
சொல்லிக் கர்ணனையிகழும்போது, அருச்சுனன் துரோணனையும்
பீஷ்மனையும் வணங்கிச் சில அம்புகளையேவினான்ழு என ஒருவகை
முரண்தோன்றுமாறு சமத்காரமாகக் கூறிய நயம் கருதற்பாலது.  எய்த அம்பும்
கூறிய இழிமொழியும் பிறர் நெஞ்சில் தைத்து அவரை வருத்துதல் தொழிலால்
தம்மில் ஒன்றோடொன்று ஒக்குமாயினும், பின்னர் ஆறிப்போம்படியான
புண்ணையுண்டாக்குகின்ற வில்லம்பைக்காட்டிலும் எந்நாளும் ஆறாதவடுவை
யுண்டாக்குகின்ற சொல்லம்பு மிகவும்கொடிய தாகுதலால், ழுகொழுது மம்பினு
மிகக்கொடிய கூற்றுழு எனப்பட்டது; நினைக்கும்போதெல்லாம் வருத்தத்தைத்
தருஞ் சொல்லென்க.  கொழுதுதல் – துளைத்தல்.  பழுது – பொய்,
புறஞ்சொல், கடுஞ்சொல், பயனில்சொல் என வாக்கில் நிகழும்
பாவம்நான்குமென்றுங் கொள்ளலாம்; இவை சொற்குற்றமெனப்படும்.  இனி,
பழுதுஅறு நாவினான் – (அருள்கொண்டு கூறி
னாலும்வெகுண்டு கூறினாலும்
அந்தந்தப் பயன்களைத் தந்தேவிடுகின்ற நிறைமொழிகளையுடைமையாற்)
பழுதுபடுதல் [தவறிப்போதல்] இல்லாத நாவுடையானென்றுமாம்.

ழுமுழுதுணர்ழு என்னும் அடைமொழியை முந்தைக்குங் கூட்டலாம்;
அவரும் திரிகாலஞானியாதலால். பழமையுணர்த்துகின்ற ழுமுந்தைழு என்ற
பண்புப்பெயர், இங்குப் பாட்டனுக்கு ஆகுபெயராம்.  முன் தந்தை யென்பது
முந்தையென மருவிய தென்பர் ஒருசாரார்:  தந்தைக்கு முற்பட்டவனென்பது
கருத்து:  பீஷ்மன் அருச்சுனனுக்குப் பெரியபாட்டனாவன்.  பற்குனன் –
பல்குந னென்ற வடசொல்லின் விகாரம்: பங்குனி மாதத்தில் உத்தரபல்குநி
[உத்தரம்] என்னும் நக்ஷத்திரத்திற் பிறந்ததனால், பல்குனனென்று
அருச்சுனனுக்குப் பெயர்:  இப்பெயர் தமிழிற் சிறுபான்மை பங்குனனெனத்
திரிந்தும் வழங்கும்.  தொழுது தொடையேவுதல் – இரண்டு பாதங்களிலும்
இரண்டு அம்புகளைச் செலுத்துவது.  ழுதொழா நின்றுழு என்னும்
நிகழ்காலவினையெச்சம், இங்கு ழுதொழுதுழு எனத்திரிந்து நின்றது;
அம்புகளையேவி அதனால் தன்வணக்கத்தை யுணர்த்தின னென்பது கருத்து.
இருவரும் பெருமுதுகுரவ ராதலால், அவர்களைத் தொழுது தொடையேவினான்.

தாள் இணை இறைஞ்சிய தனஞ்சயன் தொடும்
வாளி கண்டு, உளம் மிக மகிழ்ச்சி கூரவும்,
மீளிமை உடைய அவ் வீரன்மீது எழும்
தூளி செய் தேரினைத் துரோணன் உந்தினான்.86.-துரோணர் அருச்சுனனையெதிர்த்தல்.

(அப்பொழுது), துரோணன்-, -தாள் இணை இறைஞ்சிய –
(தனது) உபயபாதங்களை வணங்குதற்பொருட்டு, தனஞ்சயன் தொடும் – (தனது
இரண்டுபாதங்களின்மேலும்) அருச்சுனன் தொடுத்த, வாளி –
அம்புகளிரண்டையும், கண்டு – (தான்) பார்த்தலால், உளம் மிக மகிழ்ச்சி
கூரஉம் – (தன்) மனம் மிகுதியாய் மகிழ்ச்சியடையவும்,- மீளிமை உடைய அ
வீரன்மீது – வெல்லுந்திறமையையுடைய அந்தமகாவீரனாகிய அருச்சுனன்மேல்,
எழும் தூளி செய் தேரினை – மேற்கிளம்பும் புழுதிகளை யுண்டாக்குகின்ற
(தனது) இரதத்தை, உந்தினான் – செலுத்தினான்; (எ – று.)

      கண்டுஉளம்மகிழ்தல்-தனது அந்தரங்கசிஷ்யனான அருச்சுனனது
திறமையையும் பணிவையும் நோக்கி.  இங்ஙனம் மனமகிழவும் அவனுடன்
பொருதற்குத் தேர்செலுத்தியது, துரியோதனனுக்காகச் சோற்றுக்கடன்
கழிக்கவேண்டுதலால்.       

உந்து தேர் முனியை அந்த உதிட்டிரன் இளவல் நோக்கி,
சிந்தையில் அன்பு கூர, சேவடி பணிந்து போற்றி,
‘அந்தணர் அரசே! உன்தன் அருளினால், அடவி நீங்கி
வந்தனம்!’ என்று சிற்சில் வாசகம் இயம்புவானே:87.-அருச்சுனன்துரோணனைநோக்கிச்
சிலகூறத்தொடங்குதல்.

தேர் உந்து முனியை – (அவ்வாறு தன்மேல்) இரதத்தைச்
செலுத்திவந்த துரோணாசாரியனை, அந்த உதிட்டிரன் இளவல் –
தருமபுத்திரனது தம்பியாகிய அந்த அருச்சுனன், நோக்கி – பார்த்து,
சிந்தையில் அன்பு கூர – மனத்திற் குருபக்தி மிகாநிற்க, சே அடி பணிந்து –
(அவ்வாசிரியனது) சிவந்த பாதங்களைக்குறித்து வணங்கி, போற்றி – துதித்து,
ழுஅந்தணர் அரசே – பிராமணச் சிரேஷ்டனே! (நாங்கள்), உன்தன் அருளினால்
– உனது அநுக்கிரகத்தால், அடவி நீங்கி வந்தனம் – காட்டில் வாசஞ்செய்ய
வேண்டிய காலங்களைக்கழித்து மீண்டுவந்தோம்,ழு என்று – என்றுசொல்லி, சில்
சில் வாசகம் இயம்புவான் – (மற்றுஞ்) சிலசிலவார்த்தைகளைச்
சொல்பவனானான்; (எ – று.)-அவற்றை அடுத்த இரண்டுகவிகளிற்கூறுகின்றார்.

     உதிட்டிரன் – யுதிஷ்டிரன் என்ற வடசொல்லின் விகாரம்:  போரிற்
சலியாது உறுதியாய் நிற்பவ னென்பது பொருள்.  இளவல் – இளையவன்:
அருச்சுனனை ழுஉதிட்டிரனிளவல்ழு என்றது, தரும சிந்தையை
யுடையவனென்றற்கு; போரிற் பின்வாங்காதவ னென்பதும் இதில் தோன்றும்.

இதுமுதல் ஐம்பத்தொருகவிகள் – பெரும்பாலும் முதற்சீரும்
நான்காஞ்சீரும் விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்.

யாதும் ஒன்று அறியா என்னை, “இவன் அலாது இலை” என்று, இந்த மேதினி மதிக்குமாறு வில்முதல் படைகள் யாவும்
தீது அறத் தந்த உண்மைத் தெய்வம் நீ; என்றால், பஞ்ச
பாதகம்தன்னில் ஒன்று, உன் பதயுகம் பிழைப்பது ஐயா88.-இதுவும், அடுத்தசெய்யுளும்- ஒருதொடர்: அர்ச்சுனனது
பணிவுமொழி.

ழுஐயா-சுவாமி! யாது ஒன்றுஉம் அறியா என்னை – யாதொரு
கல்வியையும் அறிந்திராத என்னை, இவன் அலாது இலை என்று இந்த
மேதினி மதிக்கும் ஆறு – இவ்வருச்சுனனேயல்லாமல் (இவ்வுலகத்து
வில்லின்திறம் முதலியவற்றில் வேறெவரும் வல்லவர்) இல்லைழு என்று
இந்நிலவுலகத்திலுள்ள வரெல்லாரும் நன்குமதித்துக்கொண்டாடும்படி, வில்
முதல் படைகள் யாஉம் – வில் முதலிய ஆயுதங்களின்
தொழில்களெல்லாவற்றையும், தீது அற தந்த – சிறிதுந்தீங்கில்லாமல் (எனக்கு)
உபதேசித்தருளிய, உண்மை தெய்வம் – சத்தியமான தெய்வமாகின்றாய், நீ-,ழு
என்றால்-, உன் பதம் யுகம் பிழைப்பது-உனது உபயபாதங்களுக்குப்
பிழைசெய்வது, பஞ்சபாதகம் தன்னில் ஒன்று – ஐந்துமகாபாபங்களில்
ஒன்றாகுமன்றோ! (எ – று.)

     ஒன்றுந்தெரியாதிருந்த எனக்கு ழுஇவ்வருச்சுனனல்லாது இவ்வுலகில்
வில்முதலியபடைக்கலங்களின் திறம்படைத்தோர் வேறு இல்லைழு என்று
இவ்வுலகத்தார் மதிக்கும்படி அப்படைக்கலக் கல்விகளைப்
பழுதறக்கற்பித்துக்கொடுத்தவன் நீ யென்றால், உனக்கு மாறாக நடப்பது
ஐம்பெரும்பாதகங்களிலொன்றாகிய குருத்துரோகமன்றோ என்றன னென்பதாம்.
பஞ்சமகாபாதகங்கள்-கொலை, பொய், களவு, கட்குடித்தல், குருத்துரோகம்
என்பன;  சிறிதுவேறுபடக்கூறுதலு முண்டு.

     ழுயாதுமொன்றுழு என்பது, ழுயாதொன்றும்ழு என உம்மை பிரித்துக்
கூட்டப்பட்டது.  இலை – தொகுத்தல்.  இவனலாதிலையென்று இந்த மேதினி
மதிக்குமாறு – ழுகலையின தகலமும் காட்சிக்கின்பமும், சிலையினதகலமும்
வீணைச்செல்வமும், மலையினினகலியமார்பனல்லதிவ், வுலகினிலிலையென
வொருவனாயினான்ழு  என்பவைமுதலியன காண்க.   தனது பணிவும்
குருபக்தியும்தோன்ற, ழுஉனக்குப் பிழைப்பதுழு என்னாது ழுஉன்பதயுகம்
பிழைப்பதுழு என்றனன்.  பூர்வத்தில் திருமாலாற் கொல்லப்பட்ட
மதுகைடபரென்னும் அசுரர்களது மேதஸ்ஸினால் [உடற்கொழுப்பினால்]
நனைந்தமைபற்றி, பூமிக்கு ழுமேதிநீழு என்று பெயர்:  அவ்வடசொல்,
மேதினியெனவிகாரப்பட்டது:  அது – இங்கு இடவாகுபெயராய்,
அதிலுள்ளாரைக் குறித்தது.   

மன்னொடு சூழ நின்ற மாசுணம் உயர்த்த கோவை
மின்னொடும் உரும்ஏறு என்ன வெகுண்டு அமர் புரிவது அல்லால்,
நின்னொடும், கிருபனோடும், நின் மகனோடும், முந்தை-
தன்னொடும், புரியேன், வெம் போர்; தக்கதோ? சரதம் பாவம்!’

மன்னொடு சூழ நின்ற-(பல) அரசர்களாற் சூழப்பட்டு
நிற்கின்ற, மாசுணம் உயர்த்த கோவை – பாம்புக்கொடியை உயர நாட்டியுள்ள
துரியோதனராசனை, மின்னொடுஉம் உரும் ஏறு என்ன வெகுண்டு –
மின்னலுடனே தோன்றுகின்ற பேரிடிபோலக் கோபித்து, அமர்புரிவது அல்லால்
– (அவனுடன்) போர்செய்தலல்லாமல்,- நின்னொடுஉம் – உன்னுடனும்,
கிருபனோடுஉம் – கிருபாசாரியனுடனும், நின் மகனோடுஉம் – உனது
குமாரனாகிய அசுவத்தாமனுடனும், முந்தைதன்னொடுஉம் – பாட்டனாகிய
பீஷ்மருடனும், வெம்போர்புரியேன் – கொடிய யுத்தத்தைச் செய்யமாட்டேன்;
தக்கதுஓ – (உங்களுடன் யான் போர்செய்வது) தகுதியுடையதாகுமோ?
[ஆகாது]:  சரதம் பாவம் – (அது) நிச்சயமாகப் பாவமேயாகும்; (எ – று.)

     துரோணனும் கிருபனும் ஆசிரியர்களாதலாலும், அசுவத்தாமா
ஆசாரியபுத்திர னாதலாலும், பீஷ்மன் பிதாமகனாதலாலும், இவர்களோடு
போர் புரியேனென்றான்.  குருவைப்போலவே குருபுத்திரனையும்
நன்குமதிக்கவேண்டுமென்பது நூற்கொள்கையாத லுணர்க.  மன்னொடுஎன்ற
இடத்திலுள்ள ‘ஒடு’ என்ற மூன்றனுருபு கருத்தாப்பொருளில் வந்தது.
‘மாசுணம்’ என்ற பெரும்பாம்பின்பெயர், அதன் வடிவையெழுதிய
துவசத்துக்கு இங்கு ஆகுபெயராம். உருமேறு – பெரியதையும் சிறந்ததையும்
‘ஏறு’ என்றல், மரபு.

     கிருபன் – கௌதமமுனிவனது பௌத்திரன்; சரத்வாந் என்ற முனிவனது
குமாரன்; துரோணன் மனைவியான கிருபியின் உடன் பிறந்தவன்; ஆதலால்,
துரோணனுக்கு மைத்துனன்;  துரோணன் ஆசிரியனாதற்குமுன்பு
பாண்டவதுரியோதனாதியர்க்கு வில்வித்தை கற்பித்துவந்தன னிவனென
உணர்க.  ஏழுசிரஞ்சீவிகளிலொருவனிவன், நாணற்காட்டிற் பிறந்திருந்த
இவனையும் இவன் தங்கையையும் அங்கு வேட்டையாடவந்த சந்தநுமகாராஜன்
பார்த்துக்கிருபையினா லெடுத்து வளர்த்ததனால், இவர்கட்கு முறையே
கிருபனென்றும் கிருபியென்றும் பெயர்களாயின.  பிறகு ஒருகால் அந்தச்
சரத்வானென்ற முனிவன் அத்தினாபுரிக்கு வந்து தன்மகனான இக்கிருபனுக்கு
வில்வித்தை முழுவதையும் கற்பித்துக்கொடுத்துச் சென்றன னாதலால், கிருபன்
சிறந்த வில்லாசிரியனாய் அங்கு விளங்கினன்.  கௌதமகுலத்தார் ஆதியில்
க்ஷத்திரிய சம்பந்தமுடையராயினமைபற்றி க்ஷத்திரியத்தன்மையோடு கூடிய
பிராமணர்களாயிருந்தார்க ளாதலின், வில்முதலிய படைக்கலங்கட்கு
உரியரானார்.  “இடையிரு வகையோ ரல்லது நாடிற், படைவகை பெறாஅ
ரென்மனார் புலவர்” என்ற தொல்காப்பியத்து மரபியற் சூத்திரத்து ‘நாடின்’
என்பதனால், சிறுபான்மை அந்தணரும் படைக்குஉரிய ரென்பது கொண்டவாறு
காண்க; அச்சூத்திரவுரையில் ‘அவர் இயமதங்கியாரும் துரோணனும் கிருபனும்
முதலாயினா ரெனக் கொள்க’ என்றமையுணர்க.  

அம் முனிதன்னோடு இவ்வாறு அருச்சுனன் புகல, வல் வில்
கைம் முனிவனும், ‘செஞ்சோற்றுக் கடன் கழித்திடுதல் வேண்டும்;
தெவ் முனை மதியா வீரா! தேவர்தம் பகையை வென்ற
வெம் முனை காணுமாறு, உன் வில் வளைத்திடுக!’ என்றான்.90.-துரோணன்ழுபோர்செய்யவேண்டும்ழு என்றல்.

இ ஆறு – இவ்விதமாக, அருச்சுனன்-, அ முனி தன்னோடு
புகல – அந்தத் துரோணாசாரியருடனே சொல்ல,- வல் வில் கை முனிவன்உம்
– வலிய வில்லை யேந்திய கையையுடைய அத்துரோணனும்,-
(அருச்சுனனைநோக்கி,) ழுதெவ் முனை மதியா வீரா – பகைவர்களுடைய
போரைச் சிறிதும் லக்ஷ்யஞ்செய்யாத மகாவீரனே! செம் சோறு கடன்
கழித்திடுதல் வேண்டும் – (துரியோதனனுக்கு நாங்கள்) செவ்விய
சோற்றுக்கடனைக் கழித்திடவேண்டும்;  (ஆதலால்) தேவர்தம் பகையை
வென்ற வெம் முனை காணும் ஆறு – (இந்திரன் முதலிய) தேவர்கட்குப்
பகைவர்களாகிய நிவாதகவசகாலகேய ரென்னும் அசுரர்களைச் சயித்த (உனது)
உக்கிரமான யுத்த சாமர்த்தியத்தை (நாங்கள்) பார்க்கும்படி, உன் வில்
வளைத்திடுக – உனதுவில்லை வளைத்து (எங்களுடன்) போர்செய்வாயாக,ழு
என்றான் – என்று கட்டளையிட்டான்; (எ – று.)

     ழுசெஞ்சோற்றுக் கடன்கழித்திடுதல்வேண்டும்ழு என்றது, துரியோதனன்
எங்களுக்குச் செவ்வையாய் அளித்துவருகின்ற சோற்றுக்குப் பிரதியுபகாரமாக
அவனுக்கு உதவியாய் உங்களுக்குமாறாக நாங்கள் போர் செய்யவேண்டுவது
கடமை யென்றபடி.  பகை – பகைவர்க்குப் பண்பாகுபெயர்.  ழுவேண்டும்ழு
என்பது, ஒருவகைவியங்கோள்; இங்கு, இன்றியமையாதென்னும் பொருளது

குருவும், அக் குருவைத் தப்பாக் குருகுலக் கோவும், தங்கள்
அரு வரைத் தோளில் நாணி அறைதர, பிறைவில் வாங்கி,
கரு உயிர்த்து எழுந்த கால மழை முகில் கால் கொண்டென்ன,
ஒருவருக்கு ஒருவர் வாளி ஓர் ஒரு கோடி எய்தார்.-91.-துரோணனும் அருச்சுனனும்தம்மிற் பொருதல்.

(பின்பு), – குருஉம் – துரோணாசாரியனும், அ குருவை தப்பா
– அந்த ஆசிரியனதுவார்த்தையைத் தவறாத, குரு குலம் கோஉம் –
குருவென்னுஞ் சந்திரகுலத்தரசனது வமிசத்துத் தோன்றிய சிறந்த அரசனாகிய
அருச்சுனனும்,- வில் பிறை வாங்கி – (தம் தமது) வில்லைப்
பிறைச்சந்திரனைப்போல வளைத்து,- தங்கள் அருவரை தோளில் நாணி அறை
தர – தம் தமது அழித்தற்கரிய மலைகள் போலுந் தோள்களிலே வில்லின்
நாண் படும்படி [தோளளவும் நாணியையிழுத்து],- கரு உயிர்த்து எழுந்த காலம்
மழை முகில் கால்கொண்டு என்ன – தன்னுட் கொண்ட நீரைப்
பெய்துகொண்டு வானத்திலெழுந்த கார்காலத்து நீர்கொண்ட (இரண்டு)
காளமேகங்கள் மழைக்கால்களைக் கொண்டாற்போல, வாளி ஓர் ஒரு கோடி
ஒருவருக்கு ஒருவர் எய்தார் – ஒவ்வொரு கோடி அம்புகளைத் தம்மில்
ஒருவரைக் குறித்து ஒருவர் தொடுத்தார்கள்; (எ – று.)

     துரோணனும் அருச்சுனனும் வில்லைவளைத்து நாணியை யிழுத்து
மழைபெய்தாற்போலக் கோடிகோடியம்புகளை ஒருவரைக் குறித்து ஒருவர்
பிரயோகித்தன ரென்பதாம்; உவமையணி.  ழுபோர்புரியேன்ழு என்று சொன்ன
அருச்சுனன் பிறகு துரோணன் ழுவில்லை வளைத்திடுகழு என்ற வளவிலே
அவ்வாசிரியனது கட்டளைக்கு இணங்கிப் போர்தொடங்கியமைபற்றி,
ழுகுருவைத்தப்பாக் குருகுலக்கோழு என்றார்.  ழுகுருவைத்தப்பாக்குருகுலக்கோழு
என்ற தொடரில் ழுகுருழு என்ற ஒரு சொல்லே வெவ்வேறு பொருளில்வந்தது,
சொற்பின்வருநிலையணியாம். 

அதிரதர்தம்மை எண்ணில், அணி விரல் முடக்க ஒட்டா
முதிர் சிலை, முனியும், வீர முனிவு இலா முகனும்; விட்ட
கதிர் முனைப் பவன வேகக் கடுங் கொடும் பகழி யாவும்
எதிர் எதிர் கோத்த அல்லால், பட்டில, இருவர் மேலும்.92.- இருவரும் சிறிதுபொழுதுசமமாகப்பொருதல்.

அதிரதர்தம்மை எண்ணில் – அதிரதர்களை (அறிவுடையார்)
எண்ணுமிடத்து, அணி விரல் முடக்க ஒட்டா – (தன்னை எண்ணி
மடக்கியகடைவிரலுக்குப் பின் தன்னோடொக்க வேறொருவரை யெண்ணிப்)
பவித்திரவிரலைமடக்கக்கூடாத [ஒப்பற்ற என்றபடி], முதிர்சிலை முனிஉம் –
மிகப்பயின்ற வில்வித்தையையுடைய துரோணாசாரியனும், வீரம் முனிவு இலா
முகன்உம் – வீரத்தன்மையினாலுண்டாகின்ற கோபக் குறியில்லாத முகத்தை
யுடையவனான அருச்சுனனும், விட்ட – (தம்மில் ஒருவரைக்குறித்து ஒருவர்)
தொடுத்த, கதிர் முனை – கூரிய நுனியையும், பவனம் வேகம் – காற்றுப்போல
விரைந்துசெல்கின்ற வேகத்தையுமுடைய, கடும்கொடும் பகழி யாஉம் –
மிகக்கொடிய அம்புக ளெல்லாம், எதிர் எதிர் கோத்த அல்லால் – (தம்மில்
ஒன்றற்கு ஒன்று) நேருக்கு நேராய் மோதி இடையில் தடைப்பட்டன
வல்லாமல், இருவர்மேல்உம் பட்டில – (இலக்காக எய்யப்பட்ட) இரண்டு
வீரர்களில் ஒருவருடம்பிலும் பட்டுத் தைத்தனவில்லை; (எ – று.)

துரோணனும் அருச்சுனனும் எதிர்த்துத் தமது பலவகைத்
திறமைகளையுங்காட்டி ஒருவர்மீது ஒருவர் எய்த அம்புகளெல்லாம்
அவரவர்மாறாக எய்த எதிரம்புகளினால் தடுக்கப்பட்டு இடையில்
ஒன்றோடொன்று முட்டிக் கீழ் விழுந்திட்டனவேயன்றி ஒன்றேனும்
இவர்களுடம்பிற்படவில்லை யென்பதாம்.  ழுஓரிரண்டுதனுவும் வாளி
யோரொர்கோடி யுதையவே, காரிரண்டெதிர்ந்து தம்மில் மலைவுறுங்
கணக்கெனப், போரிரண்டுவீரருக்கு மொத்துநின்ற பொழுதிலேழு என்பது,
இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

அதிரதர், மகாரதர், சமரதர், அர்த்தரதர் எனத் தேர்வீரர்
நால்வகைப்படுவர்.  அதிரதர்- முழுத்தேரரசர்; அவராவார் – ஒருதேரில் ஏறி
நின்று தம்தேர் குதிரைசாரதிகட்கு அழிவுவராமற் காத்துப்பலவாயிரந்தேர்
வீரரோடு எதிர்த்து வேறு துணையில்லாமலே போர்செய்து வெல்லும்
வல்லமையுடையார்.  அவரிற் சிறிது தாழ்ந்தவர், மகாரதர்; இவர்,
பதினோராயிரந் தேர்வீரரோடு பொருபவர்.  சமரதர் – ஒருதேர்வீரனோடு
தாமும் ஒருவராயெதிர்க்கவல்லவர்.  அர்த்தரதர் – அவ்வாறு எதிர்க்குமளவில்
தம்தேர் முதலியவற்றை இழந்து போம்படியானவர்.  கடைவிரல், பவித்திரவிரல்,
நடுவிரல், சுட்டுவிரல், பெருவிரல் என்று முறையே கூறப்படுகிற
கைவிரலைந்தனுட் கடைவிரலை முதலாக வைத்து மடக்கி ஒன்று முதலாக
எண்ணித் தொகையிடுதல், மரபு.  உலகத்திலுள்ள சிறந்த அதிரதவீரர்களை
யெண்ணித் தொகையிடக்கருதித் துரோணாசாரியனொருவனென்று முதலிற்
கடைவிரலொன்றை மடக்கியெண்ணிய பின்பு இவனோடொப்பவைத்து
எண்ணுதற்கு ஏற்ற சிறந்த அதிரதவீரர் வேறொருவரில்லாமையால்
இரண்டாவதாகிய பவித்திரவிரலை மடக்கியெண்ணக்கூடாத ஒப்பற்ற சிறப்புள்ள
தநுர்வேதப்பயிற்சி மிகுதியையுடைய துரோணனென்பது, ழுஅதிரதர் தம்மை
யெண்ணி லணிவிரல் முடக்கவொட்டா முதிர்சிலைமுனிழு என்றதன் கருத்து.
மேல் இராசசூயச்சருக்கத்தில், ழுமண்மிசைநால் விரனிற்கு மணிமகுடத்
தணியரங்குழு என்பதும், பதினேழாம்போர்ச் சருக்கத்தில் ழுமற்றையணிவிரன்
முடக்க விணையிலாத மத்திரபூபன்ழு என்பதும் இங்குஒப்புநோக்கத்தக்கன.
அணியப்படுவதென்னும் காரணத்தால் எல்லா ஆபரணங்களையுங் குறிக்கின்ற
ழுஅணிழு என்ற காரணப்பொதுப்பெயர், இங்குச் சிறப்பாய்ப் பவித்திரமென்ற
அணிகலத்தைக் குறித்தது.

இங்குழுசிலைழு என்றது – வில் முதலிய ஆயுதங்களிற் பயிலும்
வகைகளையும் பகைவெல்லுதற்குரிய மந்திராதிப் பிரயோகங்களையும்
அறிவிக்கின்ற தநுர்வேதத்தைக் குறித்தது:  இலக்கணை.  அருச்சுனன் தனது
ஆசிரியனாகிய துரோணன்மீது தன்மனத்துப் பகைமையில்லா திருக்கையில்
அக்குருவின் கட்டளைப்படியே விளையாட்டாகப் போர்செய்கின்றமை தோன்ற,
ழுவீரமுனிவிலாமுகன்ழு என்றார்.  மனக்குறிப்பறிவதற்குக் கருவி முக மாதலால்,
ழுவீராவேசமில்லாத முகமுடையவன்ழு என்றது.  ழுமுனியும் வீரமுனிவிலா முகனும்ழு
என்றவிடத்து, சொல்நிலையால், முனிபவனும் முனிதலில்லாத
முகத்தையுடையவனு மென ஒருபொருள் தோன்றுதலால், தொடைமுரண்
காண்க.  இங்கு ழுமுகன்ழு என்றது – முகமென்ற அஃறிணைப்பெயரின்மேற்
பிறந்த உயர்திணையாண்பாற்பெயர்.

வண்டுதான் முரலும் கஞ்ச மாலையான், பயிற்றுவித்து,
பண்டு, தான் கண்ட கூற்றின் பதின் மடங்கு உயர்ந்த பண்பால்,
மிண்டு தானவரை வென்ற விறலுடை விசயன் வின்மை
கண்டு, தான் அவன்தனோடு கற்பதற்கு உன்னினானே!93.-போர்த்திறத்தில்அருச்சுனன் சிறத்தல்.

வண்டு முரலும் கஞ்சம் மாலையான் – வண்டுகள் (மொய்த்து)
ரீங்காரஞ்செய்கின்ற தாமரைமலர்மாலையையுடையவனான துரோணன்,- மிண்டு
தானவரை வென்ற விறல் உடை விசயன் வின்மை – நெருங்கிய (நிவாதகவசர்
முதலிய) அசுரர்களைச் சயித்த வீரத்தன்மையையுடைய அருச்சுனனது
விற்றொழில் வல்லமை, தான் பண்டு பயிற்றுவித்து கண்ட கூற்றின்
பதின்மடங்கு உயர்ந்த பண்பால் – தான் முன்பு (அவனுக்கு
ஆசிரியனாயிருந்து) கற்பித்துக்கொடுத்துப் பரீஷித்துப் பார்த்திருந்தவளவினும்
பத்துப்பங்கு அதிகமாக மிக்கிருந்ததன்மையினால், கண்டு – அதுகண்டு, தான்
அவன்தனோடு கற்பதற்கு உன்னினான் – தான் அவ்வருச்சுனனிடத்து
(வில்வித்தை) கற்றுக்கொள்ளுமாறு கருதினான்; (எ – று.)

     துரோணன், முன்பு தான் அருச்சுனனுக்குக் கற்பித்து
வைத்திருந்ததைக்காட்டிலும் பலமடங்கு அதிகமாக அவன் இப்பொழுது
போர்செய்கின்ற திறத்தைப் பார்த்து, தான் அந்த அருச்சுனனிடத்தில்
வில்வித்தை கற்றுக்கொள்ளவேண்டு மென்று கருதினனென்க.  துரோணனிடம்
வில்வித்தை கற்றுத்தேர்ந்த அருச்சுனன் பிறகு அக்கினிபகவானிடத்துக்
காண்டீவ வில்லும் அக்ஷயதுணீரமும் பெற்றும், பின்னர் வனவாசகாலத்துப்
பரமசிவனிடத்துப் பாசுபதாஸ்திரமும் வில் அம்பறாத்தூணி முதலியனவும்
பெற்றும்,
 அப்பால் இந்திரனாலழைக்கப்பட்டுத் தேவலோகத்துச் சென்றபொழுது
இந்திரனிடத்துப் பல அஸ்திரசஸ்திரங்களைப் பெற்றும் சிறந்தன னெனவுணர்க.

தாமரை மலர்மாலை அந்தணர்க்கு உரிய தாதலை, “பைங்கமலத்
தண்டெரியற்பட்டர்பிரான்” என்று பெரியார் கூறியதனாலுங் காண்க.  இனி,
கஞ்சமாலை – தாமரைமணிமாலையுமாம்.  கஞ்ஜம் என்ற வடசொல் – நீரில்
தோன்றுவ தென்று காரணப்பொருள்பெறும்; (கம் – நீர்:) தாமரைக்குக்
காரணவிடுகுறிப்பெயர்; அதன் மலர்க்கு அல்லது மணிக்கு முதலாகுபெயர்.
‘அவன்தனோடு’ என்றவிடத்து, மூன்றனுருபு ஏழனுருபின்பொருள்பட்டதனால்,
உருபுமயக்கம்.     

ஏறு தேர் முரிய, வேதம் எழுதிய துவசம், வீழ,
தாறு பாய் புரவி நான்கும் சாரதி தலையும் சிந்த,
கூறு போர் நாணியோடு குனி சிலை துணிய, பின்னர்,
ஆறு கோல் தொடுப்ப, வெள்கி, ஆரியன் முதுகிட்டானே94.-துரோணன்தோல்வியடைதல்.

பின்னர் – பின்பு – (அருச்சுனன்), ஏறு தேர் முரிய –
(துரோணன்) ஏறியுள்ள தேர் முறிந்துபோம்படியும், வேதம் எழுதிய துவசம்
வீழ – வேதத்தையெழுதிய  கொடி துணிபட்டுவிழும்படியும், தாறு பாய் புரவி
நான்குஉம் – தாற்றுக்கோல் பாயப்பெற்ற [இருப்பு முட்கோலாற்குத்தி
யோட்டப்படுகின்ற] நான்கு குதிரைகளும், சாரதி தலைஉம் – தேர்ப்பாகனது
தலையும், சிந்த – துணிபட்டு விழும்படியும், கூறு போர் நாணியோடு –
சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற போர்த்தொழிலுக்குச் சிறந்த
வில்லின்நாணியுடன், குனி சிலை துணிய – வளைந்த வில்லும் ஒடிபடும்படியும்,
ஆறு கோல் தொடுப்ப – ஆறு அம்புகளை எய்தவளவில்,- ஆரியன் –
துரோணாசாரியன், வெள்கி – வெட்கமுற்று, முதுகிட்டான் – புறங்கொடுத்தான்;
(எ – று.)

     அருச்சுனன் ஆறு அம்புகளைத் தொடுத்துத் துரோணனது தேரும்
வேதக்கொடியும் குதிரைகளும் சாரதியும் வில்நாணும் வில்லுமென்ற இவற்றை
அழித்தமாத்திரத்தில், துரோணன் முன்நிற்கமாட்டாமல் தான் தனது
சீடனிடத்தே தோல்வியுறுதலாலாகும் நாணத்துடனே புறங்கொடுத்துப்போயின
னென்பதாம்.  குருவாகிய துரோணனை வெல்லவேண்டுமென்னுங் கருத்தும்
முயற்சியும் அருச்சுனனுக்கு இல்லாதிருக்கவும் அக்குருவின் கட்டளைகடவாது
அருச்சுனன் காட்டிய போர்த்திறம் அத்துரோணனுக்குத் தோல்வியாய்
முடிந்தமைபற்றி, ழுஆரியன் முதுகிட்டான்ழு என்று அவன் செய்தியாகக்
கூறினார்.  தாறு – இருப்பு முள்ளை நுனியிற்கொண்டகோல்; இதுகொண்டு
குத்தியோட்டுதல், அதிவிரைவாகச் செலுத்தற் கென்க.  

தந்தை போர் அழிந்து போன சாபலம் கண்டு, வெம்பி,
இந்திரன் மதலையோடும் எதிர்த்தனன், இவுளித்தாமா;
முந்துற இருவர் வில்லும் முரண் படக் குனித்த போரின்,
அந்தணன் கணையால், மன்னன் வில்லின் நாண் அற்றது அன்றே.95.- அசுவத்தாமன் எதிர்த்து அருச்சுனனது
வில்நாணியை அறுத்தல்.

இவுளித்தாமா – அசுவத்தாமன்,- தந்தை போர் அழிந்து
போன சாபலம் கண்டு – (தனது) தந்தையான துரோணன் போரில் தோற்று
முதுகிட்டுப் போன நிலையில்லாமையை [நடுக்கத்தை]ப்பார்த்து, வெம்பி –
மனம்வெதும்பி, இந்திரன் மதலையோடு உம் எதிர்த்தனன் – தேவேந்திரனது
குமாரனாகிய அருச்சுனனுடனே எதிர்த்துப் போர்தொடங்கினான்; இருவர்
வில்உம் – இவர்களிரண்டு பேரது விற்களும், முரண் பட – மாறுபாடு
உண்டாக, குனித்த – வளைந்துசெய்த, போரின் – யுத்தத்தில், முந்துற –
முதலிலே, அந்தணன் கணையால் – பிராமணஜாதியனான அசுவத்தாமனது
அம்பினால், மன்னன் வில்லின் நாண் அற்றது – க்ஷத்திரிய ஜாதியனான
அருச்சுனனது வில்லின்நாணியானது அறுபட்டது;

     சாபலம் – சபலத்தன்மை.  வெம்புதல் – கொதித்தல்; கோபக்குறி.
அசுவம், இவுளி என்பன குதிரையாகிய ஒரு பொருளைக் குறிப்பன வாதலால்,
அசுவத்தாமாவை ‘இவுளித்தாமா’ என்றார்; இவ்வாறே பரித்தாமா, புரவித்தாமா,
துரகத்தாமா என்றுங் கூறுவர்.  அசுவத்தாமன் என்ற வடமொழிப்பெயர்க்கு –
குதிரையைப் பிறப்பிடமாகவுடையவனென்பது பொருள்; தாமம் – இடம்:
குதிரையின் வயிற்றினின்று பிறந்தவன் இவன்.  வீரரது மாறுபாட்டை அவர்
வில்லின்மேலேற்றி, ‘இருவர் வில்லு முரண்படக்குனித்தபோர்’ எனப்பட்டது;
இனி ‘இருவரும் முரண்படவில்குனித்த போரின்’ என்று எடுத்து இரண்டுபேரும்
ஒருவர்க்கொருவர் மாறாகத் தம்தமது வில்லைவளைத்துச்செய்த போரிலென்று
உரைத்தலுமாம்.  இந்த்ரன் – பரமைசுவரியமுடையவ னென்று
அவயவப்பொருள்படும்.  முரண் பட – வலிமை பொருந்த எனினுமாம்.
அன்றே – ஈற்றசை.     

மந்தரம் அனைய தோளான் மற்று ஒரு வரி வில் வாங்கி,
‘இந்த வெம் பகழிக்கு எல்லாம் ஈடு அறான் இவன்’ என்று எண்ணி,
சந்திரமவுலி தந்த சாயகம் தொடுத்தலோடும்,
நொந்து, ‘இனி என் செய்வோம்!’ என்று ஊர் புக நோக்கினானே.96.-அருச்சுனனெய்தபாசுபதாஸ்திரத்தால்
அசுவத்தாமன் தோற்றல்.

(உடனே),- மந்தரம் அனைய தோளான் – மந்தரமலை
போன்ற தோள்களையுடையவனான அருச்சுனன், – மற்று ஒரு வரி வில்
வாங்கி – வேறொரு கட்டமைந்த வில்லை (எடுத்து) வளைத்து,
இவன் – இந்த அசுவத்தாமன், இந்த வெம் பகழிக்கு எல்லாம் –
இத்தன்மையனவான [சாதாரணமான] கொடிய அம்புகளுக்கெல்லாம், ஈடு
அறான் – வலிமையழியான்,ழு என்று எண்ணி – என்று ஆலோசித்து,-
சந்திரமவுலி தந்த சாயகம் தொடுத்தலோடுஉம் – பிறைச்சந்திரனைத்தரித்த
முடியையுடையவனான பரமசிவன் (முன்பு) கொடுத்தருளிய அம்பை
[பாசுபதாஸ்திரத்தை] வில்லிற் கோத்தவளவில்,-(அசுவத்தாமன்), நொந்து –
வருந்தி, இனி என் செய்வோம் என்று- ழுஇனிமேல் நாம்
யாதுசெய்யக்கடவோம்!ழு என்று எண்ணி [மேலே ஒன்றுஞ்செய்யமாட்டாமல்],
ஊர் புக நோக்கினான் – (தப்பி உயிருடனே தனது) ஊர்க்கு மீண்டுபோக
வழிதேடலானான்; (எ – று.)

     பாசுபதாஸ்திரம் எதிரற்ற தென்ற சிறப்பு இங்குப் புலனாம்.
குலகிரிகளுளொன்றான மந்தரம் பாற்கடலைக்கலக்கியமைபோல அருச்சுனன்
தோள் பகைவர் சேனைக்கடலைக் கலக்கவல்ல தென்பார், ழுமந்தரமனைய
தோளான்ழு என்றார்.  சந்த்ரமௌலி – வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகை; ஊர்புக நோக்கினான் – அத்தினாபுரியிற் சென்று
புகுந்துகொள்ளக்கருதிப் புறங்கொடுத்தோடுவானாயின னென்றபடி.

      ழுசந்திரமவுலிழு என்பதி லடங்கியவரலாறு:- சந்திரன் தக்ஷமுனிவனது
புத்திரிகளாகிய அசுவினிமுதலிய இருபத்தேழுநக்ஷத்திரங்களையும்
மணஞ்செய்து கொண்டு அவர்களுள் உரோகிணியென்பவளிடத்து மிகவுங்காதல்
கூர்ந்து அவளுடனே எப்பொழுதுங் கூடி வாழ்ந்திருக்க, மற்றை மகளிரின்
வருத்தத்தை நோக்கி முனிவன் அவனை ழுக்ஷயமடைவாயாகழு என்று சபிக்க,
அச்சாபத்தாற் சந்திரன் பதினைந்துகலைகளுங் குறைந்து மற்றைக்
கலையொன்றையும் இழப்பதற்கு முன்னம் சிவபிரானைச் சரணமடைய,
அப்பெருமான் அருள் கூர்ந்து அவ்வொற்றைக்கலையைத் தன் தலையிலணிந்து
மீண்டுங்கலைகள் வளர்ந்துவரும்படி அநுக்கிரகித்தனனென்பதாம்.  திருப்பாற்
கடல் கடைகையில் அதினின்று உண்டான பல பொருள்களுடனே விஷமும்
சந்திரனும்தோன்ற, திருமால் அவற்றில் விஷத்தைச் சிவபிரானுக்குக் கொடுத்து
உண்ணச்சொல்லி அதனால் அப்பிரானுக்கு வெப்பமுண்டாகாமல்
தணிந்திருத்தற்பொருட்டு உடனே சந்திரனையுங் கொடுக்க, அதனை
அப்பெருமான் சிரமேற்கொண்டனனென்றும் கூறப்படும். 

கிருபனும், அவனைக் கண்டு கெட்டனன்; கேடு இலாத
நிருபர்கள் பலரும் மோதி, நேர் பொருது, ஆவி மாய்ந்தார்;
பொரு படைச் சேனை யாவும் புக்குழி யாவர் கண்டார்?
ஒரு பரி ஒற்றை ஆழித் தேரவன் உச்சம் ஆனான்.97.-கிருபன்முதலியோர் தோற்றலும், சூரியன் உச்சமடைதலும்.

கிருபன்உம் – கிருபாசாரியனும், அவனை கண்டு கெட்டனன்
– அங்ஙனஞ்சிறந்த போர்செய்கின்ற அருச்சுனனைப்பார்த்த மாத்திரத்தில்
நிலைகெட்டு முதுகிட்டான்; கேடு இலாத நிருபர்கள் பலர்உம் –
வலியழிதலில்லாத பல அரசர்களும், மோதி நேர் பொருது-நெருங்கி
எதிரில் நின்று (அருச்சுனனோடு) போர்செய்து, ஆவி மாய்ந்தார் –
உயிரழிந்தார்கள் [இறந்துபோனார்கள்]; (அப்பொழுது), பொரு படை சேனை
யாஉம் புக்க உழி – போர்செய்யும் ஆயுதங்களையேந்திய சேனைகளெல்லாம்
(போரிற்புறங்கொடுத்து) ஓடியொளித்த இடத்தை, யாவர் கண்டார் – யார்
அறிவர்? [எவரும் அறியா ரென்றபடி]; (அச்சமயத்தில்), ஒரு பரி ஒற்றை ஆழி
தேரவன் – ஒரு குதிரையையும் ஒரு சக்கரத்தையுமுடைய தேரையுடையவனான
சூரியன், உச்சம் ஆனான் – உச்சி வானத்தையடைந்தான்
[மத்தியானகாலமாயிற்று]; (எ – று.)

     ‘அவனைக் கண்டு கெட்டனன்’ என்பதற்கு – அங்ஙனம் முதுகிட்டுப்
போன மகாவீரனான அசுவத்தாமனைப் பார்த்துத் தான் போர் செய்யாமலே
புறங்கொடுத்தன னென்று பொருள்கொள்ளுதலுமாம்.  ஓடிப்போனவர் தவிர
மற்றை யோடாதவரனைவரும் உயிரிழந்தனரென்க.  சேனைகளெல்லாம்
யாவருங்காணாதவிடத்துப்புக்கு ஒளித்துக்கொண்டன வென்பார் ‘புக்குழி
யாவர்கண்டார்’ என்றார்.  கேடிலாத – போரிற் புறங்கொடுத்தலில்லாத
என்றுமாம்.  ‘கெட்டனன் கேடிலாத’ – தொடைமுரண். ‘ஓதி’ என்று எடுத்து,
வீரவாதங்கூறி யென்றலு மொன்று.  பலரும் ஆவி மாய்ந்தார் – ஆவி என்ற
அஃறிணைச்சொல், ‘பலர்’ என்னும் உயர்திணையோடு சார்த்தப்பட்டதனால்,
அவ்வெழுவாயின் பயனிலையாகிய ‘மாய்ந்தார்’ என்னும்
உயர்திணைவினையைக் கொண்டு முடிந்தது; திணைவழுவமைதி. மாய்தல் –
அழிதல்:  என்றும் அழிவின்றி நித்தியமாகிய உயிர்க்குமாய்தலென்றது,
உடம்பினின்று நீங்குதலையாம்.

     சூரியனது தேர்க்குதிரை ‘ஏழு [= ஸப்த ]’ எனப் பெயர்பெற்றதொன்றே
யென்பாரும், ஒரு குதிரையுண்டு அதற்கு ஏழுபெயர்களென்பாரும், ஏழு
குதிரைகளுண்டென்பாரும், ஏழு குதிரைகளுமுண்டு அவற்றிலொன்று ‘ஏழு
[=ஸப்த]’ எனப் பெயர்பெற்றதென்பாரும் உள ராதலின், அவர்களுள் முதலிற்
கூறிய இருவர் மதம்பற்றி ‘ஒருபரி’ எனப்பட்டது.  இனி, ஒப்பற்ற
குதிரையென்றலு மொன்று. ஆழி – வட்டம்; தேருருளைக்குப் பண்பாகுபெயர்.
உச்சமாதல் – நடுவானத்து வருதல். 

வென்னிடும் அளவில், நின்ற வீடுமன், விதுரன், வண்டு
தென்னிடும் அலங்கல் மாலைச் சுயோதனன், சிந்து ராயன்,
துன்னிடு நிருபர் சூழ, சூழ் திசை நான்கும் வந்து,
முன்னிடு தேரோன்தன்னை முனை உற வளைந்துகொண்டார்.98.-வீடுமன் முதலியோர் அருச்சுனனை வளைதல்.

வென் இடும் அளவில் – (இவ்வாறு பலரும்) புறங்கொடுத்
தோடுகின்ற அப்பொழுதில், நின்ற – (தூரத்தில்) நின்ற, வீடுமன் – பீஷ்மனும்,
விதுரன் – விதுரனும், வண்டு தென் இடும்
 அலங்கல்மாலை சுயோதனன் –
வண்டுகள் இசைபாடுதற்கிடமான தொங்கியசைகின்ற (நந்தியாவட்டமலர்)
மாலையையுடைய துரியோதனனும், சிந்து ராயன் – சிந்து தேசத்தரசனான
சயத்திரதனும், (ஆகிய நால்வரும்), துன்னிடு நிருபர் சூழ – (தம்மைச்)
சார்ந்துள்ள அரசர்கள் பலர் சூழ்ந்துவர, சூழ் திசை நான்குஉம் வந்து –
அருச்சுனனைச் சுற்றிலும் நான்கு திக்குகளிலும் வந்து,- முன்னிடு தேரோன்
தன்னை – முன்னே வந்தெதிர்க்கின்ற தேரையுடையவனான அருச்சுனனை,
முனை உற வளைந்துகொண்டார் – போரிற் பொருந்தும்படி
சூழ்ந்துகொண்டார்கள்; (எ – று.)

துரோணன் முதலியோர் தோற்றோடுவதுகண்ட வீடுமன் முதலிய
நால்வரும் பல அரசர்கள்சூழ அருச்சுனனை வளைந்து கொண்டன
ரென்பதாம். தென் இடுதல் – ‘தென்ன தென’ என்று ஆளத்திவைத்து
இசைபாடுதல். ஸிந்துராஜனென்ற வடமொழித்தொடர், விகாரப்பட்டது: இவன்
– விருத்தக்ஷத்திர னென்பவனது புத்திரன்; துரியோதனாதியரது தங்கையான
துச்சளையின் கணவன்; சிந்துதேசத்தரசனாதலாற் சைந்தவனெனவும்படுவன்:
பாண்டவர் வனவாசஞ்செய்கையில் அங்குச்சென்று அவர்களில்லாதசமயம்
பார்த்துத் திரௌபதியை வலிதிற்பற்றிச் செல்பவனாகி அப்பொழுது
தொடர்ந்துவந்த வீமார்ச்சுனர்களாற் பரிபவஞ்செய்யப்பட்டவனிவன்.
முன்னிடுதல் – விரைந்து வருதலும், சிறப்புறுதலுமாம்.  முனை –
போர்க்களத்தில், உற – நன்றாக [சிறிதும்விடாமல்], வளைந்துகொண்டன
ரென்றலு மொன்று.  

இவர், பெருந் தேரின் மேலோன் ஒருவனே இலக்கது ஆக,
தவர் உடன் குனித்து, அநேக சாயகம் தொடுத்த காலை,
கவுரி பங்காளன்தன்னைக் கண்ணுறக் கண்ட காளை,
பவுரி வந்து, ஒன்றும் தன்மேல் படாமல், வெம் பகழி கோத்தான்.99.-அனைவ ரம்பையும் அருச்சுனன் தடுத்தல்.

இவர் – (வந்துவளைந்துகொண்ட) இவ்வரசர்களெல்லாரும்,
உடன் – ஒருசேர, தவர் குனித்து – (தம்தமது) வில்லை வளைத்து,
பெருந்தேரின் மேலோன் ஒருவன்ஏ இலக்கு அது ஆக – பெரியதேரின்
மேலுள்ளவனான அருச்சுனனொருவனையே (தமது அம்புகளுக்குக்)
குறியாகக்கொண்டு, அநேக சாயகம் தொடுத்த காலை – பல அம்புகளை
மேன்மேலெய்தவளவில்,- கவுரிபங்காளன் தன்னை கண்உற கண்ட காளை –
பார்வதியை (த்தனது) இடப்பக்கத்திற்கொண்டருளியவனான பரமசிவனைக்
கண்களுக்கெதிரில் [பிரதியக்ஷமாகத்] தரிசித்த இளவீரனான அருச்சுனன்,
பவுரிவந்து – (தான்) சுழன்றுகொண்டே, ஒன்றுஉம் தன்மேல் படாமல்
வெம்பகழி கோத்தான் – (அவர்களெய்த அம்புகளில்) ஒன்றும் தனது
உடம்பிற்படாதபடி கொடிய அம்புகளை எதிரேதொடுத்துத்தடுத்தான்; (எ – று.)

     வீடுமன் முதலியபலர் அருச்சுனனொருவனை ஒருங்குசூழ்ந்து
அவன்மேற்பற்பல அம்புதொடுத்துப் பொருதபோது அருச்சுனன்தான்
சுழன்றுகொண்டேஎதிரம்புதொடுத்து அவர்களனைவருடைய அம்புகளையுந்
தடுத்தனனென்பதாம்.  பவுரி – தன்னிலே தான் சுற்றுதல்; இது கூத்து
விகற்பங்களிலொன்றுமாம்.  தான் ஒருவனாயிருந்துகொண்டே இங்ஙனம்
பலருடன்ஒருங்குபோர்செய்யும் படியான பெருந்திறம் அருச்சுனனுக்குச்
சிவபிரானருள்பெற்றதனால் அமைந்த தென்பது தோன்ற, இங்கு
ழுகவுரிபங்காளன்றன்னைக்கண்ணுறக்கண்ட காளைழு என்றார்.
ழுஒன்றுந்தன்மேற்படாமல்வெம்பகழிகோத்தான்ழு என்றதனால், தானெய்த
அம்புகளெல்லாம்அவர்கள்மேற்படும்படி தொடுத்தனனென்பது தோன்றுமாறு
அறிக; இது,அருத்தாபத்தி: அவ்விவரம், அடுத்தகவியில் விளங்கும்.  ழுஇவர்
தேர்ழுஎன்பதை வினைத்தொகையாகக்கொண்டு, ஏறுதற்குரிய தேர் என்று
உரைப்பர்ஒருசாரார்.

     இலக்கு-லக்ஷ்யம்: ழுஅதுழு என்றது, பகுதிப்பொருள்விகுதி.  கவுரி –
கௌரீஎன்ற வடசொல்லின் விகாரம்: அப்பெயர் –
மஞ்சள்நிறமுடையவளென்றுபொருள்படும்; இயல்பிற் கருநிறமுடையளாயிருந்த
அம்பிகை பின்புஒருசமயத்தில் தன்னைப் பரமசிவன் ழுகாளி!ழு என்றுவிளித்தமை
குறித்துவருத்தங்கொண்டு அப்பெருமானைப் பிரார்த்தித்துக்
கருநிறத்தைமாற்றிப்பொன்னிறம் பெற்றுக் கவுரியென்னும்
பெயரையுடையளாயின ளென்ற வரலாறு,புராணப் பிரசித்தம்.

      ழுகவுரி பங்காளன்ழு என்றது– வலப்பாகம் சிவரூபமும் இடப்பாகம்
பார்வதிரூபமுமான அர்த்தநாரீசுவரமூர்த்தியை யுணர்த்தும்; தனது வடிவத்தில்
ஒருபங்கை அம்பிகைக்குக் கொடுத்துத் தான் ஒருபங்காயுள்ளவளென்க.
இதன் விவரம்:-முன்னொருகாலத்துக் கைலாசகிரியிலே சிவபிரானும்
உமாதேவியும் ஒரே ஆசனத்தில் நெருக்கமாக வீற்றிருந்தபொழுது,
பிருங்கியென்னும் மகாமுனி பரமசிவனை மாத்திரம் பிரதக்ஷிணஞ்செய்ய
விரும்பி ஒரு வண்டுவடிவமெடுத்து அவ்வாசனத்தை இடையிலே
துளைத்துக்கொண்டு அதன் வழியாய் நுழைந்துசென்று அம்பிகையைவிட்டுச்
சிவபிரானை மாத்திரமே பிரதக்ஷிணஞ்செய்ய, அதுகண்ட பார்வதிதேவி
தன்பதியை நோக்கி ழுமுனிவன் என்னைப் பிரதக்ஷிணஞ்செய்யாமைக்கு ஏது
என்ன?ழு என்று வினவ, உருத்திரமூர்த்தி ழுஇம்மை மறுமைகளில் இஷ்ட
சித்திபெற விரும்புபவர் உன்னையும், முத்திபெற விரும்புபவர் என்னையும்
வழிபடுவர்; இது நூற்றுணிபுழு என்றுசொல்ல, அதுகேட்ட தேவி
ழுஇறைவனுருவத்தைப்பிரிந்து தனியேயிருத்தலினாலன்றோ எனக்கு இவ்விழிவு
நேர்ந்ததுழு என்று இரங்கி, தான் சிவபிரானை விட்டுப்பிரியாதிருக்குமாறு கருதி,
புண்ணியக்ஷேத்திரமான கேதாரத்திற்சென்று தவம்புரிந்து வரம்பெற்று
அப்பிரானது வடிவத்திலே வாமபாகத்தைத் தனக்கு இடமாக அடைந்து
அவ்வடிவிலேயே தான் ஒற்றுமைப்பட்டு நின்றன ளென்பதாம்.

குட திசை மகவான் வாளி, குண திசை வருணன் வாளி,
வட திசை மறலி வாளி, தென் திசை மதியின் வாளி,
அடல் உற இமைப்பின் ஏவி, அவர் அவர் மார்பும் தோளும்
படர் உற, படைகள் நீறு படப்பட, பரப்பினானே!100.-அருச்சுனன் நான்குதிசையிலும் அஸ்திரங்களைப்
பிரயோகித்தல்.

குட திசை – மேற்குத்திக்கில், மகவான் வாளி – இந்திரனைத்
தெய்வமாகவுடைய அம்பும் [ஐந்திராஸ்திரமும்], குண திசை – கிழக்குத்திக்கில்,
வருணன் வாளி – வருணனைத் தெய்வமாகவுடைய அம்பும்
[வாருணாஸ்திரமும்], வடதிசை – வடக்குத்திக்கில், மறலி வாளி – யமனைத்
தெய்வமாகவுடைய அம்பும் [யமாஸ்திரமும்], தென் திசை – தெற்குத்திக்கில்,
மதியின் வாளி – குபேரனைத் தெய்வமாகவுடைய அம்பும் [குபேராஸ்திரமும்],
(ஆக இவ்வாறு), அடல் உற – மாறுபட, இமைப்பின் ஏவி –
ஒருநொடிப்பொழுதிற் பிரயோகித்து, அவர் அவர் மார்புஉம் தோள்உம் படர்
உற – அந்தந்த வீரரது மார்பும் தோள்களும் நோவடையும்படியாகவும்,
படைகள் நீறு படபட – (அவரவரது) ஆயுதங்களெல்லாம் பொடிப்பொடியாய்
அழிந்துபோம்படியாகவும், பரப்பினான் – பரப்பச்செய்தான்; (எ – று.)

மகவான்வாளி – இந்திரனுடைய அஸ்திரம்; பிறவும் இங்ஙனமே கொள்க.
இந்திரன்முதலிய நால்வரும் முறையே கிழக்குமுதலிய நான்குதிசைகளுக்குங்
காவலராவர்.  அந்தந்தத்திக்குப்பாலகரின் அம்பைஅவரவர்நேரிற்
செல்லக்கூடிய எதிர்த்திசையில் தொடுத்தனனென்பது விளங்க,
ழுஅடலுற ஏவிழு எனப்பட்டது.  குடக்கு + திசை = குடதிசை.  நூறு
அசுவமேதயாகங்களைச் செய்தவன் இந்திரபதவி பெறுவனாதல் பற்றி, ழுமகவாந்ழு
என்று இந்திரனுக்கு ஒருபெயர்; வடசொல்: மகம் – யாகம்: மறல் – கொடுமை,
கொலை, அதனைச் செய்பவன் மறலி என யமனுக்குக் காரணக்குறி:  ஸோமன்,
இந்து என்ற வடமொழிகள், சந்திரனுக்கேயன்றிக் குபேரனுக்கும்
பரியாயநாமமாக வழங்குதல்பற்றி குபேரனை ழுமதிழு என்றார்; என்றது,
லக்ஷிதலக்ஷணையென்க. [மதி = ஸோமன், இந்து: ஸோமன்=இந்து, குபேரன்.]
ஸோமனென்பது குபேரனுக்கு வழங்குதலைப் பலவிடத்துங் காணலாம்

கோ கன நாக வேகக் கொடியவன் சேனை யாவும்,
மோகனக் கணை ஒன்று ஏவி, முடி அடி படிக்கண் வீழ்த்தான்;
மா கனற்கடவுள் தந்த மணிப் பொலந் தடந் தேர் வெள்ளை
வாகனக் குரிசில் வின்மை வல்லபம் இருந்தவாறே!01.-அருச்சுனன் மோகநாஸ்திரந்தொடுத்துப்
பகைவர்சேனையை மயங்கிவிழச் செய்தல்.

பின்னும் அருச்சுனன்), மோகனம் கணை ஒன்று ஏவி –
மயக்கத்தையுண்டாக்கும் அஸ்திரமாகிய மோகனாஸ்திரமொன்றைப்
பிரயோகித்து,- கோ கனம் – கண்களையே காதுகளாகவுடைய, நாகம் –
பாம்பையெழுதிய, வேகம் கொடியவன் – (படபடவென்று) விரைந்தடிக்கின்ற
கொடிச்சீலையை யுடையவனான துரியோதனனது, சேனை யாஉம் – சேனைக
ளெல்லாவற்றையும், முடி அடி படிக்கண் வீழ்த்தான் – தலைகளும் கால்களும்
தாறுமாறாகத் தரையில் மயங்கிவிழும்படி செய்தான்; மா கனல் கடவுள் தந்த –
சிறந்த அக்கினிதேவன் (காண்டவதகனகாலத்துக்) கொடுத்தருளிய, தட மணி
பொலம் தேர்-பெரிய அழகிய பொன்மயமான தேரையும், வெள்ளை வாகனம் –
(நான்கு) வெள்ளைக்குதிரைகளையுமுடைய, குரிசில் – பெருமையிற்
சிறந்தவனான அருச்சுனனது, வின்மை வல்லபம் – விற்றொழில் வல்லமை,
இருந்த ஆறுஏ – இருந்தவிதம் அதிசயிக்கத் தக்கது!

     துரியோதனன் சேனைகளையெல்லாம் தானொருவனாகவே பொருந்தி
ஒற்றைக்கணையால் மோகிக்கச்செய்த அருச்சுனனது விற்றிறமையை ஈற்றடியாற்
கவிபாராட்டிக் கூறுகின்றனர்.  கனம் – கர்ண மென்பதன் விகாரம்.
கோகர்ணநாகம் – வடமொழித்தொடர்.  கண்களையே காதுகளாகவுடையதாய்,
அதனால் ழுகட்செவிழு என்றும் பெயர்பெறுதலால், ழுகோகனநாகம்ழு எனப்பட்டது.
மணிப்பொலந்தேர் – அடிக்கும் மணிகள்கட்டிய அழகிய தேரென்றுமாம்;
பெரிய இரத்தினங்கள் பதித்த பொற்றேரென்றும் உரைப்பர்.  வாகநம்
என்பதற்கு – சுமப்பது என்று பொருள்; குதிரைக்குக் காரணக்குறி.
ஈற்றேகாரம், வியப்புத்தோன்ற நின்றது.

இத் தரை, இடம் கொளாமல் இறந்தனர் போல வீழ்ந்த
மத்தரை, மயிர் கொய்தென்ன, மணிக் கொடித் தூசும், தூசும்,
உத்தரை வண்டற் பாவைக்கு உடுத்துதற்கு என்று கொய்தான்-
அத்தரை மவுலித் திங்கள் அமுது உகப் புடைத்த வில்லான்.102.-அருச்சுனன் பகைவர்களுடைய ஆடைகளைப் பறித்தல்.

இ தரை இடம் கொளாமல் – இப்போர்க்களத்தினிடம்
முழுவதிலும் அடங்காமல், இறந்தனர்போல வீழ்ந்த-மரணமடைந்தவர்போல
விழுந்துகிடக்கின்ற, மத்தரை-மயக்கமடைந்த அவ்வீரர்களையெல்லாம், மயிர்
கொய்து என்ன – மொட்டையடித்தாற்போல, மணி கொடி தூசுஉம் –
(அவர்களுடைய) அழகிய துவசங்களிற்கட்டிய சீலைகளையும், தூசுஉம் –
(அவர்கள் தரித்துள்ள) ஆடைகளையும், உத்தரை வண்டல் பாவைக்கு
உடுத்துதற்கு என்று கொய்தான் – உத்தரை வைத்துக்கொண்டு விளையாடுகின்ற
பிரதிமைகளுக்கு (அலங்காரமாக)த் தரிப்பதற்கென் றெண்ணிப் பறித்தான்:
(யாவனெனில்),- அத்தரை – சிவபெருமானை, மவுலி – சிரசில், திங்கள் அமுது
உக புடைத்த – (அங்கு வசிக்கின்ற) பிறைச்சந்திரனிடத்தினின்று அமிருதம்
சிந்தும்படி அடித்த, வில்லான் – வில்லின் தண்டத்தையுடையவனான
அருச்சுனன்; (எ – று.)

உத்தரை – விராடன்மகள்; உத்தரன் தங்கை.  உத்தரனும்
பிருகந்நளையும் போர்க்குப் புறப்பட்டபோது, இவள் தனது விளையாட்டுப்
பிரதிமைகளையலங்கரித்தற்குப் பலவகைப் பட்டாடைகள் கொணர்ந்துதரும்படி
வேண்டின ளாதலால், உத்தரை வண்டற்பாவைக்கு உடுத்துதற்கென்று
தூசுகளைக் கவர்ந்தான்.  ழுஅம்ருத கிரணன்ழு என்று ஒருபெயர்பெறும்படி
சந்திரனது கிரணங்களெல்லாம் அமிருதமயமானவை யாதலால், ழுதிங்களமுதுழு
எனப்பட்டது. பொலிவு இழத்தலை விளக்குதற்கு, ழுமயிர்கொய்தென்னழு என்று
உவமைகூறினார்; மயிர்கொய்தல், அவமானப்படுத்துதற் குறிப்புமாம்:
தூசுபறித்தலும் அப்படியே. ழுஇத்தரையிடங்கொளாமல்ழு என்றதனால்
பகைவர்களின் மிகுதி கூறியவாறாம்.    

விழுந்தவர் நெடும் போதாக, மெய் உணர்வு எய்தி, மெல்ல
அழுந்திய பகழியோடும், அரிபடு கவசத்தோடும்,
எழுந்து, தம் இரதம், யானை, இவுளியின், ஏறி, ஏறி,
தொழும் தகு தெய்வம் அன்ன சூரனைத் துதித்து, மீண்டார்.103.-மயங்கி விழுந்தவர்கள் நெடும்பொழுது கழித்துத்
தெளிந்தெழுந்து அருச்சுனனது வீரத்தைமெச்சி இரதம்
முதலியவற்றிலேறிக்கொண்டு ஊர்க்குத் திரும்புதல்.

விழுந்தவர் – (அவ்வாறு மோகநாஸ்திரத்தால் மயங்கி)
விழுந்துகிடந்த பகைவரனைவரும், நெடும் போது ஆக – வெகுநேரங்கழிந்த
பின்பு, மெய் உணர்வு எய்தி – உண்மையான அறிவு உண்டாகப்பெற்று
[மயக்கந்தெளிந்து], அழுந்திய பகழியோடுஉம் – (உடம்பில்)
தைத்துக்கிடக்கின்ற அம்புகளுடனும், அரிபடு கவசத்தோடுஉம் –
பலதுளைகளையடைந்த கவசத்துடனும், மெல்ல எழுந்து – மெதுவாக எழுந்து,
தம் இரதம் யானை இவுளியின் ஏறி ஏறி – தம் தமது தேர் யானை
குதிரைகளின்மேல் ஏறிக்கொண்டு, தொழும் தகு தெய்வம் அன்ன சூரனை –
(யாவரும்) வணங்கத் தக்க கடவுளைப் போன்ற மகாவீரனாகிய அருச்சுனனை,
துதித்து – மெச்சிக் கொண்டே, மீண்டார் – திரும்பி (த் தமது ஊர்க்கு)ச்
சென்றார்கள்; (எ – று.)

     பிறர்செய்தற்கரிய செயல்களைத் தான் எளிதிற் செய்து முடிக்குந்
திறத்திற் கடவுள்போன்றவ னென்பார், ழுதொழுந்தகு தெய்வமன்னசூரன்ழு
என்றார்.  அவனை இவர்கள் துதித்தது, தம்மை, உயிரோடுவிட்ட உபகாரத்தை
நோக்கி யென்க.  மெய்உணர்வுஎய்தி-உடம்பில் உணர்வு வந்து கூடப்பெற்று
என்றுமாம்.  ழுபகழியோடும்ழு, ழுகவசத்தோடும்ழு என்ற இடங்களில், ழுஓடுழு என்ற
மூன்றனுருபு – அடைமொழிப்பொருளது.  அரிபடுதல் – துளைக்கப்படுதல்.
ழுஏறி ஏறிழு என்ற அடுக்கு – பன்மைப்பொருளது.   

கொடி மதில் பாகை வேந்தன், கொங்கர் கோன், புரவிக் காலால்
வட திசை அரசர்தங்கள் மா மணி மகுடம் போல,
அடலுடை விசயன், ஒற்றை அம்பினால், மீண்டும் சென்று,
பட அரவு உயர்த்த கோவைப் பண்ணினான், மகுட பங்கம்!104.-அருச்சுனன் துரியோதனனை மகுடபங்கஞ்செய்தல்.

கொடி மதில் பாகை வேந்தன் – துவசங்கள்நாட்டிய மதில்கள்
சூழ்ந்த வக்கபாகையென்னும் நகரத்து அரசனும், கொங்கர் கோன் –
கொங்குநாட்டிலுள்ளார்க்குத் தலைவனுமாகிய வரபதியாட்கொண்டானென்பவன்,
புரவி காலால் – (தனது) குதிரைகளின் கால்களால், வடதிசை அரசர் தங்கள்
மா மணி மகுடம் போல – வடக்குத்திக்கிலுள்ள அரசர்களது சிறந்த
இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற கிரீடங்களை (ப் பங்கஞ்) செய்வது போல,-
அடல் உடை விசயன் – வலிமையையுடைய அருச்சுனன், மீண்டும் சென்று –
மறுபடியுந் தொடர்ந்துசென்று, ஒற்றை அம்பினால் – (தனது) அம்பொன்றினால்,
படம் அரவு உயர்த்த கோவை மகுடபங்கம் பண்ணினான் –
படமெடுக்குமியல்புள்ள பாம்பின் வடிவமெழுதிய கொடியை உயர நாட்டிய
துரியோதனராஜனது கிரீடத் தைக் கீழே விழும்படிதள்ளி (அவனை)
அவமானப்படுத்தினான்; (எ – று.)

     தலைதுணித்தால் வீமன் சபதந்தவறு மென்பதுபற்றி, துரியோதனனை
மகுடபங்கம் பண்ணினவளவோடு விட்டிட்டனன்.  அருச்சுனன் துரியோதனனது
கிரீடத்தை ஓரம்பினாற் கீழே தள்ளி அவனை அவமானப்படுத்தியதற்கு,
வரபதியாட்கொண்டான் போரில் தான் ஏறிச்செல்லுகின்ற குதிரையின் தூக்கிய
முன்னங்கால்களை வடதிசையிலுள்ள அரசர்களது முடியிற்சூடிய கிரீடத்தின்மீது
வைத்து அதனை இடறச்செய்து அவர்களை அவமானப்படுத்துதலை
உவமைகூறினார்.  இந்நூலாசிரியர் வரபதியாட்கொண்டானை இந்நூலின்
இடையிடையே புகழ்ந்துபேசுதற்குக் காரணம், நூலாசிரியர் வரலாற்றில்
விளக்கப்பட்டது.  ஒருபெயரின் ஒரு பகுதியைக்கொண்டு அப்பெயர்
முழுவதையுங் குறித்தல் [நாமைகதேஸேநாமக்ரஹணம்] என்ற நியாயத்தால்,
ழுவக்கபாகைழு என்ற ஊர்ப்பெயர் ழுபாகைழு எனப்பட்டது; சத்தியபாமையை
ழுபாமைழு என்றல்போல.  வரபதியாட்கொண்டான் சோழபாண்டியமன்னவர்கட்கு
உதவியாகச் சென்று அவர்கட்குப் பகைவர்களாய் வடக்குத்திக்கிலிருந்த
அரசர்களையெல்லாம் வென்று அச்சோழபாண்டியர்கட்கு
அரசைநிலைநிறுத்தினனென்ற விவரமறிக.  அரவு – அரவக்கொடிக்கு
ஆகுபெயர்.     

வல்லினில் அழிந்து நின் முன் மன் அவைதன்னில் அன்று
சொல்லிய காலம் செல்லாமுன், இவர் தோற்றம் செய்தார்;
புல்லிய கானின் இன்னம் போக, நீ புகறி!’ என்று
வெல் படை வேந்தன் சொல்ல, வீடுமன் மீண்டும் சொல்வான்05.-ழுஅஞ்ஞாதவாசகாலம் நிறைவேறாமுன்
வெளிப்பட்டமையால் இவரை மீண்டும் வனவாசஞ்
செல்லச்சொல்லுகழு என்று துரியோதனன் கூற, வீடுமன்
மறுமொழிகூறலுறல்.

(அப்பொழுது),- வெல் படை வேந்தன் – (பகைவரை)
வெல்லுதற்குரிய ஆயுதங்களையுடைய துரியோதனராஜன்,- (வீடுமனை நோக்கி),
– இவர் – இப்பாண்டவர்கள், வல்லினில்
 அழிந்து -சூதாட்டத்தில் தோற்று,
அன்று – அக்காலத்தில், நின் முன் – உனது முன்னிலையிலே, மன்
அவைதன்னின் – இராஜசபையில், சொல்லிய – வரையறுத்துச் சொல்லி
யுடன்பட்ட, காலம் – அஜ்ஞாதவாசஞ் செய்யவேண்டிய ஒரு வருஷகாலம்,
செல்லாமுன் – முடியக் கழிவதற்கு முன்னமே, தோற்றம் செய்தார் –
வெளிப்பட்டுத் தோன்றிவிட்டார்கள்; (ஆதலால், முன்னைய ஏற்பாட்டின்படி),
இன்னம் – மறுபடியும், புல்லிய கானின் போக – இழிவான காட்டிற்குச்
செல்லும்படி, நீ புகறி – நீ (அப்பாண்டவர்களை நோக்கிச்) சொல்வாயாக,ழு
என்று சொல்ல-, வீடுமன் – பீஷ்மன், மீண்டும் சொல்வான் – (அதற்குப்)
பிரதியுத்தரஞ்சொல்பவனானான்; (எ – று.) – அதனை, அடுத்த கவியிற் காண்க.

வல் -சூதாடுகருவி; அதுகொண்டு ஆடும் ஆட்டத்துக்கு இங்கு
ஆகுபெயர்.  அவை = ஸபா.  கார்முகம் கைத்தலத் திருப்பப்
போர்முகத்துப்புறந்தந்து போனவனை இங்கு ழுவெல்படைவேந்தன்ழு என்றது,
இகழ்ச்சிக்குறிப்பாகியஎதிர்மறையிலக்கணை:  இனி, வெல் படை என்ற
வினைத்தொகையைச் செயப்பாட்டுவினைப்பொருளில் வந்த செய்வினை
யென்றுகொண்டு, (அருச்சுனனால்) வெல்லப்பட்ட சேனையையுடைய
துரியோதனராசனென்று உரைத்தலுமொன்று.

செந்நெலே கன்னல் காட்ட, சேர்ந்து அயல் செறுவில் நின்ற
கன்னலே கமுகு காட்டும் கங்கை நீர் நாட! கேண்மோ:
இன்னலே உழந்தோர் காலம், இந்துவின் இயக்கம்தன்னால்,
நென்னலே சென்றது’ என்றான்-நெஞ்சினில் அழுக்கு இலாதான்.106.-அஞ்ஞாதவாசம் பூர்ணமாய்விட்ட தென்றுவீடுமன்
விடையளித்தல்.

செந்நெல்ஏ கன்னல் காட்ட – செந்நெய்பயிர்கள் தாம்
கரும்புகள்போல வளர்ந்து தோன்றாநிற்க, அயல் செறுவில் சேர்ந்து நின்ற
கன்னல் ஏ கமுகு காட்டும் – பக்கத்துநிலங்களிற் பொருந்தியிருக்கின்ற
கரும்புகள் தாம் பாக்குமரங்கள்போல வளர்ந்து காணப்படுகின்ற, கங்கைநீர்
நாட – கங்காநதியின் நீர் பாயப்பெற்ற குருநாட்டுக்குத் தலைவனே! கேண்மோ
– (நான் சொல்வதை நீ நன்கு) கேட்பாயாக: இன்னல்ஏ உழந்தோர் காலம் –
(இளமை தொடங்கித்) துன்பங்களையே யனுபவித்துவருந்தியவர்களான
பாண்டவர்கள் (மறைந்து வசிக்க வேண்டிய) ஒருவருஷகாலமானது, இந்துவின்
இயக்கந்தன்னால் – சந்திரனது ஸஞ்சாரத்தால் (சாந்திரமானபக்ஷரீதியாய்),
நென்னலே சென்றது – நேற்றோடே கழிந்துவிட்டதுழு, என்றான் – என்று
(துரியோதனனைநோக்கிச்) சொல்லினான்: (யாவனெனில்),-நெஞ்சினில் அழுக்கு
இலாதான் – மனத்திற் களங்கஞ் சிறிதுமில்லாதவனான பீஷ்மன்; (எ – று.)

     இவ்வாறு கூறியது, திருவேங்கடமலைக்கு வடக்கிலுள்ளார்க்குச்
சௌரமான பக்ஷத்தினும் சாந்திரமானபக்ஷம் சிறந்ததாதலின்; சந்திரகுலத்தரசர்
சாந்திரமான பக்ஷரீதியை அநுசரித்தற்குரிய ரென்பது பற்றியுமாம்.  சாந்திரமான
வருஷமாவது – அமாவாசைக்கமாவாசை ஒருமாச மெனக்கொண்டு கணக்கிட்டுச்
சந்திரனுடையசம்பந்தத்தால் ஏற்படுத்தும் வருஷம்; (சூரியன் ஒரு ராசியிலிருந்து
மற்றோரிராசிக்குப்போகுங் காலத்தை ஒருமாசமெனக்கொண்டு
முந்நூற்றறுபத்தைந்து நாள் கணக்கிட்டு ஏற்படுத்தும் வருஷம் சௌரமான
வருஷமென்றும், முந்நூற்றறுபது நாள் கணக்கிட்டு ஏற்படுத்தும் வருஷம்
ஸாவநவருஷமென்றுஞ் சொல்லப்படும்.) பட்சபாதமில்லாமல் உண்மை
கூறியமைபற்றி, ழுநெஞ்சினிலழுக்கிலாதான்ழு என்றார்; மனத்துக்குக் குற்றம் –
தீயசிந்தனை.  பாண்டவர்களை ழுஇன்னலேயுழந்தோர்ழு என்று குறித்ததனால்,
அவர்கள் பக்கல் வீடுமனுக்கு உள்ள இரக்கம் வெளியாம்.

செந்நெற்பயிர்கள் கரும்புகள்போலவும் கரும்புகள் பாக்குமரங்கள்
போலவும் வளரும் நீர்நாடு என, அதிசயோக்திவகையால் நீர்வளச்
செழுமையும் நிலவளச்செழுமையுங் கூறியவாறாம்; ழுகரும்பல்ல நெல்லென்னக்
கமுகல்ல கரும்பென்னழு எனப் பிறர்கூறுமாறுங் காண்க. ழுசெந்நெலேழு,
ழுகன்னலேழு என்ற ஏகாரங்கள் – தேற்றத்தோடு இழிவுசிறப்பு.  செந்நெல்-நீர்
வளத்து விளைவதொரு நெற்சாதி.  கன்னல்காட்டுதல் – கரும்பினுருவைத் தான்
கொண்டு காட்டுதல்; கமுகுகாட்டுத லென்பதும் இவ்வாறே; இங்கு ழுகாட்டழு,
ழுகாட்டும்ழு என்றவை-உவமவாசகமாய் நின்றன.  சேர்ந்து – (நெல்வயலை)
அடுத்து என்றுமாம்.

அரவினை உயர்த்த கோமான் அவ் உரை கேட்ட போழ்தே,
பரவையின் இரவி கண்ட பனிமதி போல மாழ்கி,
வர வர, அறிதும்!’ என்று, மா பெருஞ் சேனையோடும்,
இரவிடை யாரும் துஞ்ச, எயில் வளை நகரி புக்கான்.107.-துரியோதனன் தனது ஊர்க்குச்செல்லுதல்.

அரவினை உயர்த்த கோமான் – பாம்புக்கொடியை உயர
நாட்டிய துரியோதனராசன், அ உரை கேட்ட போழ்துஏ – அந்த வீடுமன்
வார்த்தையைக் கேட்டவளவிலே, பரவையின் இரவி கண்ட பனி மதிபோல
மாழ்கி – (கீழ்) கடலினின்று உதித்த சூரியனைக் கண்ட குளிர்ந்த
சந்திரன்போல ஒளிமழுங்கி [மனந்தளர்ந்து], வர வர அறிதும் என்று –
ழுபோகப்போகப் பார்த்துக்கொள்வோம்ழு என்று எண்ணி, மா பெருஞ்
சேனையோடுஉம் – மிகப்பெரிய சேனையுடனே, இரவிடை யார்உம் துஞ்ச –
நடுராத்திரியில் யாவருந் தூங்குகையில், எயில் வளை நகரி புக்கான் –
மதில்கள் சூழ்ந்த (தனது) அஸ்திநாபுரியிற் போய்ச்சேர்ந்தான்; (எ – று.)

      தாம்தோற்று மீள்வதை ஊரவர்கண்டால் இகழ்வரேயென்னும்
நாணத்தினால், அவர்கள் விழித்திருக்கின்ற சமயத்திற் செல்லவிரும்பாமல்,
அவர்களனைவருந் தூங்குகின்ற நள்ளிரவிற்போய்ச் சேர்ந்தன னென்க.
இரவிடை – இடையிரவு: இராப் பொழுதின்நடுவில்;  பாதிராத்திரியி லென்க:
ழுஎயில்வளைநகரிழு
 என்றார்,மிக்க பாதுகாவலை யுடையதென்றற்கு,
ழுமாபெருஞ்சேனைழு என்றது, சேனை உருவத்திற் பெரிதாயிருந்தும் வலிமையிற்
சிறப்புறாது சிறுமைப்பட்ட தென்ற இகழ்ச்சிகுறித்தற்குப்போலும்.  வரவர என்ற
அடுக்கு – காலக்கிரமத்திலென்றபடி.

வேந்தனை முதுகு கண்ட வெந் திறல் வீரன், மீண்டு
போந்து, முன் எடுத்த வன்னிப் பொதும்பரின் புறத்து வந்து,
வாய்ந்த ஆயுதங்கள் யாவும் வைத்து, எழில் வடிவம் மாற்றி,
ஆம் தகவு எண்ணி, பேடி ஆயினான் என்ப மாதோ!108.-அருச்சுனன் ஆயுதங்களை வைத்திட்டுப்
பேடிவேடங்கொள்ளுதல்.

 வேந்தனை முதுகுகண்ட – துரியோதனராஜனைப்
புறங்கொடுத்தோடச்செய்த, வெம் திறல் வீரன் – கொடிய வல்லமையையுடைய
வீரனாகியஅருச்சுனன், முன் போந்து எடுத்த வன்னிபுறத்து மீண்டு வந்து –
முன்புசென்று தான் ஆயுதங்களையெடுத்துக்கொண்ட வன்னிமரத்தி னருகில்
மறுபடியும்வந்து, வாய்ந்த ஆயுதங்கள் யாஉம் பொதும்பரின் வைத்து-(தனக்கு)
ஏற்றவையாயமைந்த (வில்முதலிய) ஆயுதங்களையெல்லாம் (கட்டி)
அம்மரப்பொந்திலே மறைத்துவைத்து விட்டு, எழில் வடிவம் மாற்றி – அழகிய
தனதுமெய்யுருவத்தை யொழித்து, ஆம் தகவு எண்ணிபேடி ஆயினான் –
இனிமேல் ஆகவேண்டிய காரியத்தை ஆலோசித்து முன்போலப் பேடி
வேடங்கொண்டான்; (எ – று.)  – மாதோ – ஈற்றசை.

     ழுஆந்தகவெண்ணிழு என்றது, பின்னர்த் தருமன் முதலியோருடனே
தானும்ஒருங்குவெளிப்படவேண்டு மென்றுகருதி யென்றவாறு;
ஆந்தகவெண்ணுதல் -இப்போரை உத்தரன்வென்றதாகத் தோன்றுவிக்குங்
கருத்துமாம்.   என்ப -அசை; இனி, என்ப – என்றுசொல்வார் என்று
பலர்பால்முற்றாகக் கொண்டால்,இதற்கு எழுவாய் முதனூலாசிரியராதல்
வேண்டும்.

இவ் வெயில் எறிக்கும் பைம் பொன் இலங்கு தேர்
மீண்டும் ஏக,
கை வெயில் எறிக்கும் பைம் பூண் காளைதன் தேரில் ஏறி,
வெவ் வெயில் ஆறும் வண்ணம் விரைந்துபோய், விராடன் மூதூர்
அவ் எயில் சூழ்ந்த காவில் அமர்ந்தனன், அரசர் ஏறே.109.-அருச்சுனனும் உத்தரனும் விராடனகர்க்கு மீளுதல்.

அரசர் ஏறு – அரசர்கட்கு ஆண்சிங்கம்போன்றவனாகிய
அருச்சுனன்,- வெயில் எறிக்கும் – சூரியனொளிபோன்ற ஒளியை வீசுகின்ற,
பைம் பொன் – பசும்பொன்னினாலாகிய, இலங்கு – விளங்குகின்ற, இ தேர் –
இந்த [அக்கினிபகவான்கொடுத்த] இரதம், மீண்டும் ஏக – திரும்பிச்
சென்றுவிட,- (தான்), – கை வெயி்ல் எறிக்கும் – பக்கங்களில் ஒளியை
வீசுகின்ற, பைம் பூண் – பசுமையான ஆபரணங்களை யணிந்த, காளைதன் –
உத்தரகுமாரனது, 
தேரில்-,ஏறி-ஏறிக்கொண்டு, விரைந்துபோய் –
வேகமாகச்சென்று, வெவ்வெயில் ஆறும் வண்ணம் – கொடிய வெய்யிலின்
வெப்பத்தாலுண்டான தாபம்தணியும்படி, விராடன் முதுஊர் அ எயில் சூழ்ந்த
காவின் அமர்ந்தனன் – விராடராஜனுடைய பழமையான நகரத்தினது
அழகியமதிலின் புறத்திற் சூழ்ந்துள்ள சோலையிற்சேர்ந்து தங்கினான்; (எ – று.)

      போர்முடிந்தவுடனே அருச்சுனனது தேர் அவனது கருத்தின்படி
மீண்டுசென்றுவிட, பேடிவேடங்கொண்ட அருச்சுனன் உத்தரனது தேரிலேறி
முன்போலத் தேர்செலுத்திக்கொண்டு வெயிற்பொழுதில் அதிவேகமாக
விராடநகரத்தை நோக்கிச் செல்லுகையில், வெயில் வெப்பத்தாலாகிய
இளைப்புத் தணியுமாறு அந்நகர்ப்புறச்சோலையிற் சிறிது பொழுது உத்தரனும்
தானுமாகத் தங்கின னென்பதாம்.  அக்கினிபகவான் கொடுத்த
நான்குவெள்ளைக்குதிரைகள் பூண்ட குரங்குக்கொடித்தேர் முன்பு அருச்சுனன்
கருதிய மாத்திரத்தில் வந்து சேர்ந்தமை கீழ்-58-ஆஞ் செய்யுளிற்
கூறப்பட்டதனால், போர்முடிந்தபின்பு.  அத்தெய்வத்தேர் முன்புதான் இருந்த
இடத்திற்கு மீண்டுச்செல்வதை இங்குக் கூறுகின்றார்.  பசும்பொன்னாலாகிய
ஆபரணங்களென்பார், ழுபைம்பூண்ழு என்றார். ழுமூதூர்ழு எனவே,
ஊர்பழையதாயினும் இப்படிப்பட்ட போரை யறிந்திராததென்பது கருத்து.  கா –
பாதுகாக்கப்படுவதென்று பொருள்படுங் காரணக்குறி.   

ஆறிய பசுந் தண் காவின் அசைவு ஒரீஇ, இருந்த வீரன்,
‘ஏறிய கானில் பல் யாண்டு இருந்தபின், ஏனை ஆண்டு
மாறிய வடிவத்தோடு இவ் வள நகர் வைகினோம்’ என்று,
ஊறிய அமுதச் சொல்லால் உத்தரற்கு உரைசெய்தானே.110.-அருச்சுனன் உத்தரனுக்குத் தமது வரலாறுகூறுதல்.

ஆறிய – வெப்பமில்லாத, பசு – பசுமையான, தண்குளிர்ந்த,
காவின் – (அந்தச்) சோலையில், அசைவு ஒரீஇ இருந்த –
இளைப்பாறிக்கொண்டிருந்த, வீரன் – வீரனாகிய அருச்சுனன்,- உத்தரற்கு –
உத்தரனை நோக்கி ,- ழு(நாங்கள்), ஏறிய கானில் பல்யாண்டு இருந்தபின் –
சிறந்த காடுகளில் அநேகவருஷகாலம் [பன்னிரண்டுவருஷம்]
வசித்திருந்தபின்பு, ஏனை ஆண்டு – மற்ற ஒருவருஷகாலம், மாறிய
வடிவத்தோடு – (உண்மையுருவத்தை யொழித்து) வேறுபட்ட உருவத்துடனே, இ
வளம் நகர் வைகினோம் – வளப்பமுள்ள இந்தநகரத்தில் (அஜ்ஞாத)
வாசஞ்செய்தோம்,ழு என்று-, அமுதம்ஊறிய சொல்லால் உரைசெய்தான் –
அமிருதம்போன்ற இனிமைமிக்க வார்த்தைகளினாற் கூறினான்;

      ஏறியகான் – காமியவனம், துவைதவனம், முதலியன.  இதற்கு –
மரங்களுயர்ந்த காடென்று உரைப்பாருமுளர்.  ழுஊறிய அமுதச் சொல்ழு
என்பதற்கு – (பாற்கடல்) சுரந்த அமிருதம்போன்ற சொல் என்றும் உரைப்பர்:
மகிழ்ச்சியை விளைத்தலால், ழுஊறிய அமுதச்
 சொல்ழுஎனவும், இலையின்
பசுமையை முதலாகிய சோலையின் மேலேற்றி, ழுபசுங்காழு எனவும்
கூறப்பட்டன.    

“பேடி தேர் செலுத்தச் சென்ற பிள்ளையும், பெரும் போர்
வென்று,
கோடி தேர் முதுகு கண்டு, கோ நிரை மீட்டான்” என்று என்று,
ஓடி நீர் சொன்மின்!’ என்று தூதரை ஓடவிட்டான்-
நீடு நீர் பரக்கும் கங்கை நாடுடை நிருபர் கோமான்.11.-ழுஉத்தரன் வெற்றிபெற்று மீள்கின்றனன்ழு என்று
விராடனுக்குச் சொல்லும்படி அருச்சுனன் தூதரையனுப்புதல்.

நீடு நீர் பரக்கும்-மிகுதியான நீர் பரவியோடப்பெற்ற, கங்கை –
கங்காநதி பாய்கின்ற, நாடு – குருநாட்டை, உடை – உடைய, நிருபர்கோமான் –
அரசர்க்கரசனாகிய அருச்சுனன்,-பேடி தேர் செலுத்த – ழுஆண்மையில்லாத
பேடி தேரையோட்ட, சென்ற – (போர்செய்வதற்குத் தனியே)
புறப்பட்டுப்போன, பிள்ளைஉம் – இளங்குமாரனான உத்தரனும், பெரும் போர்
வென்று – பெரிய போரில் வெற்றிகொண்டு, கோடி தேர் முதுகு கண்டு-
மிகப்பலதேர் வீரர்களை முதுகுகாட்டி யோடச்செய்து, கோ நிரை மீட்டான் –
(பகைவர் கவர்ந்துசென்ற) பசுக்கூட்டத்தைத் திருப்பிக்கொண்டு வந்தான்ழு,
என்று என்று -, நீர் – நீங்கள், ஓடி சொன்மின் – ஓடிச்சென்று சொல்லுங்கள்,
என்று – என்றுசொல்லி, தூதரை ஓட விட்டான் – (சில) தூதர்களை
(விராடனிடம்) விரைந்து செல்லும்படி அனுப்பினான்; (எ – று.)

 

     தாங்கள் விராடராஜனால் ஆதரிக்கப்பட்டமையால், அவ்வுபகாரத்துக்குப்
பிரதியுபகாரமாக, இப்போரை உத்தரனே வென்றனனென்று அவனது
தந்தையார் முதலியோர் கருதி மகிழும்படி செய்விக்கவெண்ணி அருச்சுனன்
இங்ஙனஞ் செய்திசொல்லுமாறு விராடனைக்குறித்துத் தூதரை யேவினனென்க.
மன்னவன் கவலையையொழிக்க, தூதரை யோடவிட்டனன்.  தேர் –
தேர்வீரர்க்கு ஆகுபெயர்.  மகிழ்ச்சிபற்றிய அடுக்காகப் பலமுறை சொல்லுமாறு
கூறின னென்பது தோன்ற, ழுஎன்று என்றுழு எனப்பட்டது;  ஊர்முழுவதிலும்
அரசனிடத்துஞ் சொல்லும்படி யென்ற கருத்தில் வந்ததுமாம்.  முன்னைய
நியமத்தின்படி வநவாஸ அஜ்ஞாதவாஸங்களை இடையூறின்றிக்
கழித்தாயினமைபற்றியும், குருநாட்டையாளுகின்ற துரியோதனனை
வென்றிட்டமைபற்றியும் இங்கு அருச்சுனனை ழுகங்கை நாடுடை நிருபர்
கோமான்ழு என்றார்.    

இங்கு இவன் இவ்வாறு உய்ப்ப, முற்பகல் ஏகி, ஆங்கண்
கங்குலில் சேனையோடும் கண்படை இன்றி வைகி,
செங்கதிர் எழுந்த பின்னர், தென் திசைப் பூசல் வென்ற
வெங் கழல் விராடன்தானும் மீண்டு, தன் நகரி புக்கான்.112.-அன்றைக்காலையிலேயே விராடராஜன்
தன்நகரத்துவந்து சேர்தல்.

இங்கு – இவ்விடத்தில் [நகர்ப்புறச்சோலையில்], இவன் –
இவ்வருச்சுனன், இ ஆறு உய்ப்ப – இவ்விதமாக (ச் சொல்லித்)
தூதரையனுப்ப,- (அதற்குள்),-முன் பகல் – (அதற்கு) முந்தின நாளின் பகலில்,
தென் திசை – (தனது நகர்க்குத்) தென்புறத்தில், ஏகி – புறப்பட்டுச் சென்று,
பூசல் – (அங்குநடந்த) போரில், வென்ற – (திரிகர்த்தராசனை) வென்று
நிரைமீட்ட, வெம்கழல் விராடன் தான்உம்-(பகைவர்க்கு) அச்சந்தருகின்ற
வீரக்கழலையுடைய விராடராஜனும், ஆங்கண் – அவ்விடத்திலே, கங்குலில் –
அன்றை யிராத்திரிமுழுவதும், சேனையோடுஉம் – (தனது) சேனையுடனே,
கண்படை இன்றி வைகி – தூங்குதலில்லாமல் தங்கியிருந்து, (மறுநாள்), செம்
கதிர் எழுந்த பின்னர் – சிவந்தகிரணங்களையுடைய சூரியன் உதித்த பின்பு,
மீண்டு – திரும்பி, தன் நகரி புக்கான் – தனது நகரத்துக்கு வந்து சேர்ந்தான்;
(எ – று.)

     ழுஉய்ப்பழு என்ற செயவெனெச்சத்தை, மேல் 115-ஆங் கவியிலுள்ள
ழுதூதர்போய்த் தொழுதுசொன்னார்ழு என்பதனோடு கூட்டுக.  இடையிலுள்ளது,
அச்சமயத்திற்குள் நிகழ்ந்திருந்த செய்தியைக் கூறியது, கீழ் 23- ஆஞ்
செய்யுளில் ழுபடைவருமெனக் கங்குலங்கிருந்தான்ழு என்றதனோடு
தொடர்ச்சிப்பட நிகழ்ந்தசெய்தி கூறுகிறார்:  அதனால், கங்குலிற்
கண்படையில்லாதிருந்ததன் காரணம் விளங்கும்.  கண்படை –
கண்மூடியுறங்குதல். செங்கதிர் – பண்புத்தொகைப்புறத்துப்பிறந்த
அன்மொழித்தொகை; அடையடுத்த சினையாகுபெயரெனினும் அமையும்

தடம் பதி அடைந்த காலைத் தன் மனை இருந்த பேடி
திடம் படு தடந் தேர் ஊர, திருமகன் சென்ற செய்கை
விடம் படு வெகுளி வேற்கண் சுதேட்டிணை விளம்பக்
கேட்டு, ஆங்கு
உடம்பு உயிர் இன்றி வீழ்ந்தது என்னுமாறு, உருகி வீழ்ந்தான்.113.-மகன்போர்க்குச்சென்ற செய்தி கேட்டு
விராடன் வருந்துதல்.

(விராடராசன்),- தட பதி அடைந்த காலை – (அவ்வாறு
தனது)பெரிய நகரை யடைந்தபொழுதில், – தன் மனை இருந்த பேடி – தனது
மாளிகைக்குவந்து சேர்ந்திருந்த பிருகந்நளையென்னும் பேடி, திடம் படு தட
தேர் ஊர – வலிமைபொருந்திய பெரிய தேரை யோட்ட, திருமகன் – (தனது)
சிறந்தகுமாரனாகிய உத்தரன், சென்ற – (வடக்குப் பக்கத்திற் போர்க்குச்)
சென்ற, செய்கை-செய்தியை, விடம் படு வெகுளி வேல் கண் சுதேட்டிணை
விளம்ப – நஞ்சுதீற்றிய கோபமுள்ள வேலாயுதம்போன்ற கண்களையுடைய
சுதேஷ்ணையாகிய தனதுமனைவி சொல்ல, கேட்டு – (தான்) செவியுற்று,
ஆங்கு – அப்பொழுதே [கேட்ட அவ்விடத்திலே], உடம்பு உயிர் இன்றி
வீழ்ந்தது என்னும் ஆறு – உடம்பு உயிர் நீங்கி விழுந்த தென்னும்படி, உருகி
வீழ்ந்தான் – (போர்த்திறமில்லாத தனது இளங்குமரன் என்னாவனோ
வென்னும் வருத்தத்தால்) மனங்கரைந்து மூர்ச்சித்துக் கீழே விழுந்தான்; (எ-று.)

      திருமகன் – செல்வப்பிள்ளை.  மைதீட்டிய கண்ணுக்கு உவமையாதற்
பொருட்டு, விடம்படுவேல் கூறினார்.  ஏந்தியவரது கோபத்தை வேலின் மேல்
ஏற்றி ழுவெகுளிவேல்ழு எனப்பட்டது; ழுசினவாள்ழு என்றாற் போல.  

சந்தன அளறும், வாசத் தண் பனிநீரும், வீசி,
வெந் திறல் வேந்தன்தன்னை மெய்ம் மெலிவு, இருந்து, தேற்றி,
‘மைந்தன் இப்பொழுதே வென்று வருகுவன், பொன்-தேர்
ஊர்ந்தாள்
அந்த மெய்ப் பேடி ஆகில்’ என்றனன், அந்தணாளன்.114.-விராடனைக்கங்கபட்டன் தேற்றி, ழுபேடி தேரூர்ந்தாளாயின்
உத்தரன்வென்று இப்போதே வருவான்ழு என்றல்.

அப்பொழுது),- அந்தணாளன் – கங்கப்பட்டனென்கிற
சந்நியாசியாகிய தருமபுத்திரன்,- இருந்து – (பக்கத்தில்) இருந்து,- சந்தனம்
அளறுஉம் – சந்தனக்குழம்பையும், வாசம் தண் பனி நீர்உம் – நறுமணமுள்ள
குளிர்ச்சியான பனிநீரையும், வீசி – (அவ்விராடராசன்மீது) தெளித்து,
வெம்திறல் வேந்தன் தன்னை – (பகைவர்க்கு)அச்சந்தருகிற
வல்லமையையுடைய அவ்வரசனை, மெய் மெலிவு – உடல்
மெலிவை [மூர்ச்சித்து விழுந்ததை], தேற்றி – தெளியச்செய்து, ழுஅந்த மெய்
பேடி – உண்மையான அந்தப்பேடி [பிருகந்நளை], பொன் தேர் ஊர்ந்தாள்
ஆகில்-அழகிய தேரை யோட்டிக்கொண்டு சென்றனளேயாயின், மைந்தன் –
(உத்தர) குமாரன், இப்பொழுதே வென்று வருகுவன் – வெகுவிரைவிலே
(பகைவரைச்) சயித்து (நிரைமீட்டு) வருவன்,ழு என்றனன் – என்று தேறுதல்
கூறினான்; (எ – று.)

     மெய்ப் பேடி – உண்மையன்புடைய பேடி யெனினுமாம்; இத்தொடரில்,
மெய்யினால் [வடிவுமாத்திரத்தால்] பேடி [வலிமையாற் பேடியன்று] என்ற
பொருள்  உள்ளுறையாய்த் தோன்றுதல் காண்க: இனி,
பொய்ப்பேடித்தன்மையை வெளிப்படாது மறைத்தற்கு ழுமெய்ப்பேடிழு
என்றாருமாம்.  அழகிய குளிர்ச்சியை அருளை ஆள்பவனென்ற சொல்லாற்
கங்கபட்டனை அந்தணாளன்என்று கூறியதில், இங்ஙனம் சைத்தியோபசாரஞ்
செய்தும் குளிர்ந்த சொற்களைக்கூறியும் சமயத்தில் தாபசாந்திசெய்தற்கேற்றவ
னென்னும் கருத்துத்தோன்றுதலால் கருத்துடையடை கொளியணி.

அறன் மகன் வாய்மை தேறி, அரசன் ஆங்கு இருந்த எல்லை,
மறனுடை உரககேது வன் சமர் அழிந்தவாறும்,
உற மலைந்து ஒரு தன் தேர்கொண்டு உத்தரன் வென்றவாறும்,
தொறு நிரை மீட்டவாறும், தூதர் போய், தொழுது, சொன்னார்.115.-தூதர் சென்று விராடனிடஞ் செய்திகூறல்.

அறன்மகன் வாய்மை – தருமபுத்திரனது வார்த்தையினால்,
அரசன் – விராடராசன், தேறி – (சிறிது) தெளிவடைந்து, ஆங்கு இருந்த
எல்லை – அவ்விடத்திலிருந்த சமயத்தில்,-தூதர் (அருச்சுனனுப்பிய) தூதுவர்,
போய் – (அவ்விராடனிடஞ்) சென்று,-தொழுது – (அவ்வரசனை) வணங்கி,-
மறன் உடை உரககேது வல் சமர் அழிந்த ஆறுஉம் – வலிமையுள்ள
பாம்புக்கொடியையுடையவனான துரியோதனன் வலியபோரில் தோற்றுப்போன
செய்தியையும்,- உத்தரன்-, ஒரு தன் தேர்கொண்டு – தனது இரதமொன்றைக்
கொண்டே, உற மலைந்து – நன்றாகப் போர்செய்து, வென்ற ஆறுஉம் –
(பகைவரைச்) சயித்த செய்தியையும், தொறு நிரை மீட்ட ஆறுஉம்
– (பகைவர்கவர்ந்த) பசுக்கூட்டங்களை மீட்டுக்கொண்டு வந்த செய்தியையும்,
சொன்னார் – சொன்னார்கள்; (எ – று.)

     வாய்மை தேறி-சொல்லை நம்பி யெனினுமாம்.  இருந்த எல்லை,
சொன்னார் என இயையும்.  மறன் – ஈற்றுப்போலி.  உரக கேது –
பாம்பின்வடிவைக் கொடியிலுடையவன் என வேற்றுமைத்தொகைப் புறத்துப்
பிறந்த அன்மொழித்தொகை; வடநூன்முடிபு.  எளிதில் வெல்லப் பட்டமை
தோன்ற, ழுஅழிந்தவாறுழு என அவன் செய்கையாகக் கூறினார். 

சீதள அமுத வாரி செவிகளில் செறிந்தது என்னத்
தூதர் வந்து உரைத்த சொல்லால், சோகமும் துனியும் மாறி,
தாதை அன்று ஏது செய்தான்’ தனை ஒழிந்து உள்ள சேனை
ஆதிபர் எவரும் எய்தி, அண்ணலை, எதிர்கொள்க!’ என்றான்.116.-அரசன் மகிழ்ந்து அனைவரையும்
எதிர்கொள்ளச் சொல்லுதல்.

சீதளம் அமுதம் வாரி – குளிர்ச்சியான அமிருதவெள்ளம்,
செவிகளில் செறிந்தது என்ன – காதுகளிற் சேர்ந்ததுபோல, தூதர் வந்து
உரைத்த சொல்லால் – அத்தூதர்கள் வந்து சொல்லிய அச்சொற்களினால்,
தாதை – (உத்தரனது) தந்தையாகிய விராடன், சோகம்உம் துனிஉம் மாறி –
துன்பமும் கவலையும் நீங்கப்பெற்றவனாய் [மிகமகிழ்ந்து], அன்று-அப்பொழுது,
ஏது செய்தான் – என்னகாரியஞ்செய்தான், (என்றால்),-ழுதனைஒழிந்து உள்ள
சேனை ஆதிபர் எவர்உம் – தன்னையொருவனைத் தவிர உள்ள சேனைத்
தலைவர்களெல்லாரும், எய்தி-சென்று, அண்ணலை எதிர்கொள்க –
பெருமையிற் சிறந்தவனாகிய உத்தரனை எதிர்கொண்டு அழைத்துவருவாராக,ழு
என்றான்-என்று கட்டளையிட்டான்; (எ – று.)

     தேவாமிருதம் நாவுக்கு இனிமைதருவது போல இத்தூதர் சொற்கள்
அரசனது செவிக்கு இனிமைதருவது பற்றியும், அமிருதம் மரணத்தைத்
தவிர்ப்பதுபோல இத்தூதர்சொற்கள் அரசனது பெருஞ்சோகத்தை
மாற்றுவதுபற்றியும், ழுசீதளவமுதவாரிசெவிகளிற் செறிந்ததென்னத்
தூதர்வந்துரைத்த சொல்லால்ழு எனப்பட்டது.   வியப்புத் தோன்ற, ழுதாதை
அன்று ஏது செய்தான்.  தனையொழிந்துள்ள சேனையாதிபரெவரு
மெய்தியண்ணலை யெதிர் கொள்கென்றான்ழு என்று வினாவும் விடையுமாகக்
கூறினர்.  சேனைத்
 தலைவர்எதிர்கொள்ளவேண்டுமென்பது கூறவே,
சேனைகளும் எதிர்கொள்ளுதல் அடங்கும்.  இனி, சேனைகளும் ஆதிபரும்
எனினுமாம்.  துனி-சோகத்தின்பின் சிறிதுபொழுது நிகழ்வது; அச்சமுமாம்:
துனியும் ஆறி என்று எடுத்து உரைக்கவும் இடமுண்டு.  ஆதிபர் –
விகாரம்.          

சோரர்தம் கருவைத் தங்கள் கரு எனத் தோளில் ஏந்தி,
ஆர்வம் உற்று உருகு நெஞ்சின் அறிவிலார் தம்மைப் போல,
வீரன் வெஞ் சமரம் வெல்ல, விராடன், ‘உத்தரன் வென்றான், அப்
போரினை!’ என்னா, மேனி புளகு எழப் பூரித்தானே.117,- விராடராசன்கொண்ட மிக்கமகிழ்ச்சியைக்
கவி இழித்துரைத்தல்.

சோரர்தம் கருவை – (தம் மனைவியர்பக்கல்) கள்ளப்
புருஷராகிய அயலார்க்குப் பிறந்த குழந்தையை, தங்கள் கரு என –
தங்கட்குப்பிறந்த குழந்தை யென்று எண்ணி, தோளில் ஏந்தி –
(அக்குழந்தையைத் தங்கள்) – தோள்களில் தூக்கிவைத்துக்கொண்டு, ஆர்வம்
உற்று உருகும் நெஞ்சின் – (அக்குழந்தையினிடத்து) அன்புகொண்டு
இளகுகின்ற மனத்தையுடைய, அறிவு இலார் தம்மைபோல – அறிவில்லாத (சில)
ஆடுவரைப்போல,-வீரன் வெம் சமரம் வெல்ல – மகாவீரனான அருச்சுனன்
கொடிய போரில் வெற்றிகொண்டவனாயிருக்க, விராடன் -, அ போரினை-
அந்த யுத்தத்தை, உத்தரன் வென்றான் என்னா-(தன்மகனான) உத்தரன்
ஜயித்தானென்று உட்கொண்டு, மேனி புளகு எழ பூரித்தான் –
(மிக்கமகிழ்ச்சியால்) உடம்பு புளகமுண்டாகப் பருத்து நின்றான்; (எ – று.)

     சோரர்-கள்ளர்; இங்கே, பிறரறியாதபடி வந்து அயலார்க்குரிய மாதரைத்
தமக்குரியராக்கிக்கொள்பவர்:  வடசொல்.  கரு-கர்ப்பமென்ற வடசொல்லின்
சிதைவு: கருப்பத்தினின்று வெளிப்பட்ட குழந்தையைக் காட்டிற்று.  தம்மனைவி
பிறர்க்குப்பெற்ற பிள்ளையைத் தம்பிள்ளை யென்று கொஞ்சிக் குலாவிக்
கொண்டாடும் பேதையர்போல, விராடன் அருச்சுனனது போர்வெற்றியைத்
தன்மகனதுபோர்வெற்றி யென்று மாறுபடக்கருதி உண்மையறியாது
மிகமகிழ்ந்தன னென்பதாம்:  உவமையணி. உண்மையுணருமிடத்து
இவ்வகைத் தகுதியில்லாத மகிழ்ச்சிக்கு இடமில்லையென்பதுபட, ழுஅறிவிலார்ழு
என்றார்; அறிவிலார் – உண்மை யுணராத பேதையர்.  ஆர்வமாவது –
மனைவியரிடத்தும் தாய் தந்தை புத்திரர் முதலிய சுற்றத்தாரிடத்தும்
மனமகிழ்ச்சி நிகழ்த்திப் பிணிப்பித்து நிற்கும் நேயம். புளகு – வடமொழி
விகாரம்.  மேனிபுளகித்தலும், மேனி பூரித்தலும் – மகிழ்ச்சியினாலாகும்
மெய்ப்பாடுகள்.  விராடன் மேனிபூரித்தான் – திணைவழுவமைதி.   

பூழிகள் அடக்கி, செம்பொன் பூரண கும்பம் வைத்து,
வாழையும் கமுகும் நாட்டி, மணி ஒளித் தீபம் ஏற்றி,
சூழ வன் பதாகை கட்டி, தோரணம் பலவும் நாட்டி,
ஏழ் உயர் மாட மூதூர் எங்கணும் கோடித்தாரே.118.-விராடநகரத்தார் தமது நகரத்தையலங்கரித்தல்.

(அந்நகரத்திலுள்ளார் யாவரும்),- பூழிகள் அடக்கி – (நிரம்பத்
தண்ணீர்தெளித்து வீதிகளிற்) புழுதிகளை (மேற்கிளம்பாதபடி) அடக்கியும், செம்
பொன் பூரண கும்பம் வைத்து – சிவந்த பொன்மயமான நீர்நிறை குடங்களை
(வாயில் திண்ணைகளில்) வைத்தும், வாழைஉம் கமுகும் நாட்டி –
வாழைமரங்களையும் பாக்கு மரங்களையும் (பந்தற்கால் முதலியவற்றிற்கட்டி)
நிறுத்தியும், மணி ஒளி தீபம் ஏற்றி – இரத்தினமயமான ஒளியையுடைய
விளக்குகளை ஏற்றிவைத்தும், சூழ வல் பதாகை கட்டி – சுற்றிலும்
[நகரமெங்கும்] வலிய துவசங்களைக் கட்டியும், தோரணம் பல உம் நாட்டி –
பலவகைத்தோரணங்களையும் தாபித்தும், ஏழ் உயர் மாடம் முதுஊர்
எங்கண்உம் கோடித்தார் – உயர்ந்த ஏழுநிலைகளை [உபரிகைகளை] யுடைய
மாளிகைகளைக்கொண்ட பழைமையான அந்நகர முழுவதும்
அலங்கரித்தார்கள்; (எ – று.)

      அரசன்கட்டளைப்படி நகரத்தவரனைவரும் இங்ஙனம் நகரையலங்
கரித்தனரென்க.  தேர் முதலியன வரும்பொழுது புழுதிகிளம்பி
மறைத்திடாமைப் பொருட்டு, தண்ணீர்தெளித்துப் புழுதிகளையடக்குவர்:
பூரணகும்பமும், விளக்கும் கொடியும் – அஷ்ட மங்கலங்களிற் சேர்ந்தவை.
பதாகை – பெருங் கொடி.  ஏழ் – ஏழுநிலைகளுக்கு எண்ணலளவையாகுபெயர்.

‘மகன் வரும் அளவும், வெஞ் சூது ஆடுதும்; வருக!’ என்று, ஆங்கு
அகம் மிக மகிழ்ந்து, வேந்தன் அந்தணன்தன்னோடு ஆட,
மிக முனி அடுத்து வெல்ல, ‘வென்றி உத்தரன்முன் மேவார்
இகல் அழிந்தென்ன, இப் போர் அழிதி நீ, எந்தை!’ என்றான்.119.-விராடனும் கங்கப்பட்டனும்சூதாடுகையில், தோல்வியுற்ற
விராடன் ஒன்றுகூறல்.

ஆங்கு – அப்பொழுது, வேந்தன் – விராடராசன், அகம் மிக
மகிழ்ந்து – மனம் மிகவுங் களித்து, (கங்கபட்டனைநோக்கி) ழுமகன் வரும்
அளவுஉம் – (எனது) புதல்வன் [உத்தரகுமாரன்] வரும்வரையிலும், வெம் சூது
ஆடுதும் – (மேன்மேல்) விருப்பத்தைத்தருகின்ற சூதாட்டத்தை (நாமிருவரும்)
ஆடுவோம், வருக – வருவாயாக,ழு என்று – என்று சொல்லி (வலிய அழைத்து),
அந்தணன் தன்னோடு ஆட-சந்நியாசியாகிய அக்கங்கபட்டனுடனே
சூதாடாநிற்க,- (அச்சூதாட்டத்தில்), முனி-கங்கபட்டன், அடுத்து – அடுத்தடுத்து,
மிக வெல்ல – மிகுதியாக [பல ஆட்டம்] ஜயிக்க,- (அப்பொழுது விராடன்
ஓராட்டந்தொடங்கிக் கங்கபட்டனை நோக்கி), ழுஎந்தை-எமது ஐயனே! வென்றி
உத்தரன் முன் – ஜயசாலியாகிய உத்தரனுக்கு எதிரில், மேவார் இகல் அழிந்து
என்ன – பகைவர்களான துரியோதனாதியர் வலிமை கெட்டமைபோல, இ
போர் – இனி ஆடும் இந்த
 ஆட்டத்தில், நீ-, அழிதி – (என்முன்) தோற்பாய்
[நான் உன்னை வெல்வேன்]ழு, என்றான் – என்று சொன்னான்; (எ – று.)

வெம்சூது – ஆடுவோர்க்கு மிக்கவிருப்பத்தைத்தருகின்ற சூதாட்டம்;
ழுஇழத்தொறுங் காதலிக்குஞ் சூதுழு என்றார் திருவள்ளுவனாரும்.  ழுவெம்மைழு
என்ற சொல் விருப்பத்தையும் உணர்த்தும்.  கொடிய சூதென்று பொருள்
கொள்ளுதல், இங்குச் சிறவாது.  மகனது வெற்றியைப்பற்றித் தான்கொண்ட
அளவிறந்த மனமகிழ்ச்சியால், அதனை இனித் தான் பெறும் வெற்றிக்கு
உவமைகூறினன்.

     படைகளைக்கொண்டு செய்யும் போரில் வெற்றி தோல்விகளால்
இராச்சியத்தைப் பெறுதலும் இழத்தலும் நிகழ்தல்போல, காய்களைக் கொண்டு
செய்யுஞ் சூதாட்டத்திலும் ஜயாபஜயங் காரணமாகப் பொருள்களைப் பெறுதலும்
இழத்தலும் நேர்வது பற்றி, சூது ழுபோர்ழு எனப்பட்டது; உருவகம். அன்றியும்,
சூதாட்டத்தில் ஒருவர் தமது காயைக்கொண்டு எதிரியின் காயைக் கொல், அடி,
வெட்டு என்று கூறிக் களைவதனாலும், சூதாட்டம் பேரெனத் தகும்.
முனிவனை ழுஎந்தைழு என்று விளித்தது, சிறப்புப்பற்றி வந்த மரபுவழுவமைதி;
எமது சுவாமி யென்றவாறாம்.    

என்று அவன் மொழிந்த போதில், ‘எண் இல் வெஞ் சேனையோடு
வன் திறல் உரககேது வலி அழிந்து, உடைந்து போக,
வென்றவன் பேடியே! தன் மெய்ந் நடுங்காமல் போரில்
நின்று, நின் சிறுவன் வெல்ல வல்லனோ?-நிருபர் ஏறே!120 – போர் வெற்றி பேடியினுடையதே யென்று கூறிக்
கங்கபட்டன் பேடியைப்புகழ்ந்து பேசுதலைத் தெரிவிக்கும்.

இவ்விரண்டு செய்யுள்களும் – குளகம்; ஒருங்கு உரைக்கப்படுகின்றன.

(இ – ள்.) (120) என்று அவன் மொழிந்த போதில் – என்று அவ்விராட
ராசன் சொன்னவளவில்,- (120) ழுநிருபர் ஏறே – அரசர்சிங்கமே! வல்திறல்
உரககேது – மிக்கவலிமையையுடைய பாம்புக்கொடியனான துரியோதனன், எண்
இல் வெம் சேனையோடு – கணக்கில்லாத கொடியசேனைகளுடனே, வலி
அழிந்து உடைந்து போக – வலிமைகெட்டுத் தோற்றோடிப்போய் விடும்படி,
வென்றவன் – (தானொருவனாகச்) சயித்தவன், பேடிஏ – (உத்தரனுக்குத் தேர்
செலுத்திக்கொண்டுசென்ற) பேடிதான்; (அவனையன்றி), நின் சிறுவன் – உனது
இளங்குமாரன், தன் மெய் நடுங்காமல் – (அச்சத்) தால்) தனதுஉடம்பு
நடுக்கமடையாமல், போரில் – யுத்தத்தில், நின்று – எதிர்நின்று, வெல்ல
வல்லன்ஓ – (துரியோதனாதியரைச்) சயிக்க வல்லமையுடையனோ?
[அல்லனென்றபடி]; (அன்றியும்),- (எ – று.)

      (120)பகைவரது வலிமையும் பரப்பும் தோன்ற ழுஎண்ணில்
வெஞ்சேனையோடு வன்றிறலுரககேதுழு என்றும், உத்தரனது வலிமையின்மை
தோன்ற ழுசிறுவன்ழு என்றுங் கூறினன்.  ஆகவே, மெய்ந்நடுங்குதலும்
எதிர்நில்லாமையும் இயல்பாயின.  ழுமெய்ந்நடுங்காமல்போரில்நின்று
வெல்லவல்லனோழு என்றது – எதிர்நிற்கவும் வல்லனல்லன் வெல்லவும்
வல்லனல்லன் என்றபடி.  உருவத்தாற் பேடியே யன்றி ஆற்றலாற்
பேடியன்றென்பது விளங்க, ழுவென்றவன் பேடிழு என ஆண்பாலாற் கூறினன்.
ழுவென்றவன் பேடிழு என்ற முடிபை, சொல்நிலைநோக்கிய முடிபன்றிப் பொருள்
நிலைநோக்கிய முடிபென்னலாம்.  தருமபுத்திரன் உண்மையை உள்ளபடி
உணர்த்தவேண்டு மென்று இவ்வாறு கூறினான்.  தமது அன்பர் காரணமின்றிச்
செருக்குக்கொண்டால் அதனைத் தக்கவாறு கூறி யொழித்தல் ஆன்றோர்
கடமை; அரசர்செருக்கிய விடத்து அமைச்சர் செயற்பாலதும் அது.

பிருகந்நளை என்று ஓதும் பேடியைப் பேடி என்று
கருதல் நீ! அவனே முன்னம் காண்டவம் எரித்த காளை;
ஒரு தனித் தடம் பொன்-தேர் ஊர்ந்து, உம்பருக்காக உம்பர்
அரிகளை அரிதின் வென்றான்’ என்றனன், அந்தணாளன்.121 – போர் வெற்றி பேடியினுடையதே யென்று கூறிக்
கங்கபட்டன் பேடியைப்புகழ்ந்து பேசுதலைத் தெரிவிக்கும்.

இவ்விரண்டு செய்யுள்களும் – குளகம்; ஒருங்கு உரைக்கப்படுகின்றன.

(இ – ள்.) (121) அந்தணாளன் – சந்நியாசியாகிய கங்கபட்டன்,-
(விராடனைநோக்கி), – (121) பிருகந்நளை என்று ஓதும் பேடியை –
பிருகந்நளையென்று (பெயர்) சொல்லப்படுகின்ற பேடிவடிவாயுள்ளவனை, நீ-,
பேடி என்று கருதல்-(சாதாரணமான) பேடியென்று இழிவாக எண்ணாதே;
(பின்னை யென்னவென்றால்), அவன்ஏ – அவன்தான், முன்னம் – முன்பு,
காண்டவம் எரித்த காளை – காண்டவவனத்தை (அக்கினிக்கு உணவாகக்
கொடுத்து) எரிப்பித்த வீரனான அருச்சுனனது, ஒரு தனி தட பொன் தேர் –
ஒப்பற்ற தனித்த [வேறுதுணையில்லாத] பெரிய பொன்மயமான தேரை, ஊர்ந்து
– செலுத்திச்சென்று, உம்பருக்கு ஆக – (இந்திரன் முதலிய) தேவர்கட்கு
உதவியாக, உம்பர் அரிகளை – அத்தேவர்கட்குப் பகைவர்களாகிய
அசுரர்களை, அரிதின் – அருமையாக, வென்றான் – சயித்திட்டான்,ழு என்றனன்
– என்று சொன்னான்; (எ – று.)

      (121)அருச்சுனன் பேடிவடிவங்கொண்டு விராடனிடம் வந்தபோது ழுஏய
வெஞ்சிலைக்கையருச்சுனன் கோயிலிருப்பதோர் பேடி நான்ழு என்று
சொன்னதைக் கங்கபட்டன் நேரிற் கேட்டும், விரதசாரணி யென்னும்
வண்ணமகளாகிய திரௌபதி அப்பேடியைக் குறித்துஉத்தரனிடம்
ழுவித்தரம்பெறுதேர்விடும் விசயனுக் கிவள்ழு என்று சொன்னதைக் கேள்வியுற்று
முள்ளானாதலால், அவற்றிற்கேற்ப ழுஅவனே முன்னங் காண்டவமெரித்த காளை
யொருதனித் தடம் பொற்றேரூர்ந்துழு என்றான்.  சத்தியவிரதனும்
அந்தணாளனுமாகிய தருமபுத்திரனது இவ்வார்த்தை- ழுஅவனே முன்னம்
காண்டவமெரித்த காளை: (மற்றும்), ஒப்பற்ற தனித்த பொன்மயமான பெரிய
(இந்திரனது) தேரி லேறிச்சென்று தேவர்கட்காகத் தேவசத்துருக்களாகிய
(நிவாதகவச காலகேய ரென்னும்) அசுரர்களை அருமையாக வென்றவன்ழு என்ற
உண்மைப்பொருளையு
முடையதாதலும், ழுபேடியைப் பேடியென்று கருதல்ழு
என்றதிலும் – பேடியுருவங்கொண்டவனை இயல்பான பேடியென்று எண்ணாதே
[அவன் அருச்சுனனாவன்] என்ற பொருள் தோன்றுதலும் காண்க.  கருதல் –
எதிர்மறை யொருமையேவல்.  ஒரு தனி – தன்னந்தனி யென்றவாறுமாம்.
ழுஉம்பர்ழு என்ற மேலிடத்தின்பெயர் – அங்கு உள்ள தேவர்க்கு
இடவாகுபெயராம்.

      காண்டவமெரித்த கதை:-இந்திரப்பிரத்த நகரத்தைச் சார்ந்ததொரு
பூஞ்சோலையிற் கிருஷ்ணனும் அருச்சுனனும் உல்லாசமாக வசித்திருக்கையில்
ஒருநாள் அக்கினிபகவான் அந்தணவடிவங்கொண்டு வந்து ழுஎனக்கு
மிகப்பசிக்கின்றது;  உணவிடுகழு என்று வேண்ட, அவ்விருவரும் ழுநீ
வேண்டியபடி உணவிடுவோம்ழு என்று வாக்குத்தத்தஞ்செய்ய, உடனே
தீக்கடவுள் நிஜரூபங்கொண்டு ழுஇந்திரனது காவற்காடாய் யாவர்க்கும் அழிக்க
வொண்ணாதபடி நிலவுலகத்திலிருக்கின்ற காண்டவவனத்தை அதிலுள்ள
சராசரங்களுடனே எனக்கு விருந்திடவேண்டும்ழு என்ன, கிருஷ்ண
அர்ச்சுனர்கள் அங்கே புக்கு ஒதுங்கியிருக்கின்ற அசுரர் முதலிய துஷ்டர்களை
யழித்தருளவேண்டு மென்னும் நோக்கத்தால் ழுநீ இதனைப் புசிழு என்று இசைந்து
அளிக்க, உடனே நெருப்புப் பற்றி யெரித்ததென்பதாம்.  அங்ஙனம்
எரிக்கையில், இந்திரன் சினந்து பெய்வித்த பெருமழையைச் சரக்கூடுகட்டித்
தடுத்தும், கோபித்துத் தேவர்கூட்டத்துடன் வந்து பொருத இந்திரனைப்
புறங்கொடுத்தோடச்செய்தும், அவ்வனத்தினின்று தப்பியோடத்தொடங்கிய
பிராணிகளை அம்பெய்து தழலில் விழுத்தியும் பலவாறு உதவி புரிந்ததனால்,
அருச்சுனன் ழுகாண்டவமெரித்த காளைழு எனப்பட்டான்

கோடியின் கோடி ஆன குருக்கள் வெஞ் சேனைதன்னை
ஓடி, என் புதல்வன்தானே ஒரு தனி பொருது வென்று,
நீடிய நிரையும் மீட்டு மீண்டனன்” என்ன, நீ அப்
பேடியை விறல் கொண்டாடிப் பேசுதி, பிரம மூர்த்தீ!122. – விராடன் அதனைமறுத்துப்பேசுதல்.

மூன்று கவிகள் – ஒருதொடர்.

      (இ -ள்.) (அதுகேட்ட விராடன் கங்கபட்டனைநோக்கி),- பிரமமூர்த்தீ –
தவவடிவமுடையவனே! என் புதல்வன் தான்ஏ – எனது புத்திரனே, ஒரு தனி –
தன்னந்தனியே [ஒரு துணையுமில்லாமல்], ஓடி – விரைந்து சென்று, பொருது –
போர்செய்து, கோடியின் கோடி ஆன குருக்கள் வெம் சேனை தன்னை –
பலகோடிக்கணக்கான குருகுலத்தவரது கொடியசேனையை, வென்று – சயித்து,
நீடிய நிரைஉம் மீட்டு – மிகுதியான பசுக்கூட்டங்களையும் திருப்பிக்கொண்டு,
மீண்டனன் – திரும்பிவந்தான், என்ன – என்று (யான்) சொல்லவும், நீ -, அ
பேடியை – அந்தப்பேடியாகிய பிருகந்நளையை,
 விறல்கொண்டாடி பேசுதி-
பெருமை பாராட்டிப் புகழ்ந்து பேசுகின்றாய்;(எ-று.)

     பிரமம் – ஞானமும், வேதமுமாம்; பிரமமூர்த்தி – ஞானமே ஒருவடிவங்
கொண்டாற்போன்றவ னென்க:  அந்தணரை ழுவேதமூர்த்திழு என்றல், வழக்கு.
விவேகியாகிய நீ இங்ஙனங் கூறுதல் தகுமோ? என்பதாம்.  கோடியின் கோடி
– கோடியாகிய கோடியெனப் பண்புத்தொகை; கோடியென்னும்எண்ணினாற்
பெருக்கிய கோடியென்னும் எண் என்பது கருத்து; அது, பதுமமெனவும்,
கோடாகோடியெனவும், மகாகோடியெனவும்படும். தான்-தேற்றம்; ஏ –
பிரிநிலை.  ஒரு தனி – ஒருபொருட்பன்மொழி

புன் நவை ஆன மாற்றம் புகன்றனர் எனினும், கேட்டு, ஆங்கு,
“இன்னவை நன்று நன்று” என்று, இதம்பட மொழிவது அல்லால்,
மன் அவை இருந்து நாளும் வழிபடும் மாந்தர், மன்னர்
சொன்னவை மறுத்து, மாறு சொல்வரோ? சுருதி வல்லாய்!’

சுருதி வல்லாய் – வேதம்வல்லவனே! புல் நவை ஆன
மாற்றம்புகன்றனர் எனின்உம் – மிகவும்பிழையான வார்த்தைகளை (அரசர்)
சொல்லினராயினும், கேட்டு – (அவற்றைச் செவிகொடுத்துக்) கேட்டு, ஆங்கு –
அப்பொழுது, இன்னவை நன்று நன்று என்று – ‘இவ்வார்த்தைகள்
மிகநன்றாயுள்ளன’ என்று, இதம் பட – (அவ்வரசர்க்குப்) பிரியமாக, மொழிவது
அல்லால் – (அரசரையடுத்து வாழ்பவர்) ஒட்டிப்பேசுவதல்லாமல், மன் அவை
நாளும் இருந்து வழிபடும் மாந்தர் – ராஜசபையிலே நாள்தோறும் இருந்து
(அரசர்க்குக்) கீழ்ப்படிந்துநடக்கின்ற மனிதர்கள், மன்னர் சொன்னவை
மறுத்துமாறு சொல்வர்ஓ – (இவ்வாறு) அரசர்சொன்னவற்றைத் தடுத்து எதிர்
பேசுவர்களோ? [பேசார் என்றபடி]; (எ – று.)

     எல்லாந்தெரிந்த உனக்கு அரசரைச்சார்ந்து நடக்கும் முறைமை
தெரியாதோ என்றற்கு, கீழ் ‘பிரமமூர்த்தி’ என்றும், இங்கு ‘சுருதி வல்லாய்’
என்றுங் கூறினான்.  இங்கு, வழிபடுதல் – அரசரது குறிப்பின் வழியிற்சேர்ந்து
ஒழுகுதல்;  என்குறிப்பின் வழிநடப்பதற்குரிய நீ யான் சொன்னவற்றை
வெட்டிப்பேசுதல் தகுதியன்றென்பதாம்.  “இகழி னிகழ்ந்தாங் கிறைமகனொன்று,
புகழினு மொக்கப் புகழ்ப-இகன்மன்னன், சீர்வழிப்பட்டதே மன்பதை மற்றென்
செய்யும், நீர்வழிப்பட்ட புணை” என்ற நீதிநெறிவிளக்கம், இங்கு
நோக்கத்தக்கது.  புல், நவை – ஒருபொருட்பன்மொழி.  ‘புகன்றனரெனினும்’
என்ற உம்மை – அங்ஙனம் அவர்புகலாரென்பது படநின்றது.
நன்றன்றென்றுசொல்வதாயினும் பின்பு சமயம் பார்த்துத்
தக்கபடிசொல்லவேண்டுமேயன்றி அப்பொழுதே மறுத்துச்சொல்லலாகா
தென்பான் ஆங்கு என்றான்: இன்னவை நன்று – பன்மையில் ஒருமை வந்த
வழுவமைதி:  பன்மையொருமைமயக்கம், ‘நன்று நன்று’ என்ற அடுக்கு,
உவகை பற்றியது.  ஸ்ருதி என்ற
 வடசொல்லுக்கு – (எழுதாக்கிளவியாய்க்
குருசிஷ்யக்கிரமத்திலே கர்ணபரம்பரையாற்) கேட்கப்பட்டு
வருவதென்றுபொருள்.     

என்னவும், இடம் கொடாமல், எதிருற, இருடி, மீண்டும்,
‘கன்னன், வில் துரோணன், மைந்தன், காங்கேயன், முதலினோரை,
மன்னவ! வெல்ல, நின் சேய் வல்லனோ? வந்து சொன்னால்
பின்னை நீ தெளிதி’ என்றான், ‘பீடுடைப் பேடிதன்னை.’124.-மீண்டும் கங்கபட்டன்மறுத்துப்பேசுதல்.

என்னஉம் – என்று (விராடன் சினந்து) சொல்லவும், – இருடி
– முனிவனாகிய கங்கபட்டன்,- இடம் கொடாமல் – (அவன் கொள்கைக்குச்)
சிறிதும் இணங்கால் [தாழாமல்],-எதிர் உற – (அவன்வார்த்தைக்கு) மாறாக,
மீண்டுஉம் – மறுபடியும்,-ழுமன்னவ-அரசனே! கன்னன் – கர்ணனும், வில்
துரோணன் – வில்லாசிரியனாகிய துரோணனும், மைந்தன் – அவன் மகனான
அசுவத்தாமனும், காங்கெயன் – கங்காதேவியின் குமாரனான பீஷ்மனும்,
முதலினோரை – முதலிய வீரர்களை, நின் சேய் – உனது மகன் [உத்தரன்],
வெல்ல வல்லன்ஓ – சயிக்கமாட்டுவனோ? வந்து சொன்னால் – (அக்குமரனே)
வந்து கூறினால், பின்னை – பின்பு, நீ-, பீடு உடை பேடி தன்னை –
பெருமையையுடைய அப்பேடியை, தெளிதி – (போர்வென்றவனென்று)
ஐயமறத்தெரிந்து கொள்வாய்ழு, என்றான் – என்று சொன்னான்; (எ – று.)

     பீடுடைப் பேடிதன்னைத் தெளிதி – பேடியின் பெருமையை
யறிவாயென்றபடி.  ருஷி, காங்கேயன் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
காங்கேயன் – கங்கையின் புத்திரன்.  ழுகாங்கெயன் முதலினோர்ழு என்று
பெரியோனான பீஷ்மனைத் தலைமையாக வெடுத்துக்கூறிக் குருகுலத்தவ
ரனைவரையுங் குறித்தனன்

கொடு வில் ண்மையினால் இன்று என் குமரன் வென்றிடவும்,
சற்றும்
நடுவு இலாதவரின் பல் கால் என்கொல் நீ நவில்வது?’ என்னா,
கடு இல் ஆடு அரவின் பொங்கி, கவற்றினால் எறிந்து, நக்கான்,
வடு இலா முனியை மன்னன் வடுப்படுமாறு மன்னோ.125.-விராடன் மிகக்கோபித்துக் கங்கபட்டனைக்
கவறுகொண்டு அடித்தல்.

மன்னன் – (அதுகேட்ட) விராடராசன்,-(கங்கபட்டனை
நோக்கி), ‘இன்று – இன்றைத்தினத்தில், என் குமரன் – எனது மகன், கொடு
வில் ஆண்மையினால் – கொடிய விற்போர்த்தொழிலில் தனக்கு உள்ள
திறமையினால், வென்றிடஉம் – (பகைவரைச்) சயித்திருக்கவும், நீ-, சற்றுஉம்
நடு இலாதவரின் – சிறிதும் நடுவு நிலைமை யில்லாதவர்போல
[பக்ஷபாதமுடையவர்போல], பல் கால் – பலமுறை, நவில்வது – (அதனை
இல்லையென்று மறுத்து என்மகனையிகழ்ந்து பேடியைப்புகழ்ந்து) பேசுவது,
என்கொல் – என்னோ?’ என்னா – என்று சொல்லி, கடு இல் ஆடு அரவின்
பொங்கி – விஷத்
திற்குஇருப்பிடமான படமெடுத்தாடுகின்றதொரு பாம்புபோலச்
சீறி, வடுஇலா முனியை – குற்றமில்லாத அம்முனிவனை, வடு படும் ஆறு –
தழும்பு படும்படி, கவற்றினால் எறிந்து – சூதாடுகருவியினால் வீசியடித்து,
நக்கான் – சிரித்தான்; (எ – று.)- மன் ஓ – ஈற்றசை.

விராடன் சீறுதற்கு நஞ்சுள்ளபாம்பு படமெடுத்துச்சீறினாற்போலுமென
உவமை கூறியவாறாம்.  நடுவுநிலைமையாவது – பகைவர் அயலார்  நண்பர்
என்னும் மூவகையாரிடத்தும் அறத்தின்வழுவாமல் ஒப்பநிற்கின்ற
பக்ஷபாதமில்லாத நிலைமை.  இத்தகைமையில்லாதவரியல்பு, ஒரு
தலையாப்பேசுதல். கடுவில் ஆடு அரவின் – விஷத்தினாற் படமெடுத்தாடும்
பாம்புபோல வென்றுமாம். கடு இல் – விஷமில்லாத என்று உரைப்பாருமுளர்.
சிரித்தது, வெகுளியினால். ‘வடுவிலாமுனியை வடுப்படுமாறு எறிந்து’
என்றவிடத்து, விரோதாலங்காரங்காண்க:  வடு – குற்றமும், தழும்பும்.
கொடுமை – வளைவுமாம். 

எற்றிய கவறு நெற்றி, எதிர் உற இருந்த கங்கன்
நெற்றியில் சென்று, வாசம் நிறைத்த குங்குமத்தின் சேற்றால்
பற்றிய திலகம் போலப் படுதலும், பாங்கர் நின்ற
வற்றிய ஓடை அன்ன வனப்பினாள் மருண்டு கண்டாள்.126.-கங்கபட்டனது நெற்றியிலிரத்தம் பொசிதலை
விரதசாரணி பார்த்தல்.

எற்றிய கவறு – (விராடன்) வீசியெறிந்த அச்சூதாடு
கருவியானது, சென்று – போய், எதிர் உற இருந்த கங்கன் நெற்றியில் –
எதிரில் வீற்றிருந்த கங்கபட்டனது நெற்றியில், வாசம் நிறைந்த குங்குமத்தின்
சேற்றால் பற்றிய திலகம் போல – வாசனையை மிகுதியாக வீசுகின்ற
குங்குமப்பூவின் குழம்பினா லிட்ட திலகம்போல (இரத்தம் பொசியும்படி),
நெற்றி படுதலும் – தாக்கிப் பட்டவளவில், – பாங்கர் நின்ற – பக்கத்தில் நின்ற,
வற்றிய ஓடை அன்ன வனப்பினாள் – நீர்வறண்ட ஓடைபோன்ற
[அலங்காரமில்லாத] அழகுள்ள வண்ணமகளாகிய திரௌபதி, மருண்டு
கண்டாள் – (அதனை) வெருண்டு பார்த்தாள்; (எ – று.)

     மருண்டுகாணுதல், முனி வடிவமாயுள்ள தன்கணவனை அரசன்
புண்படுத்தியதனா லாகிய கவலையால்.  ஆபரணமணிதல் முதலிய வற்றா
லுண்டாகுஞ் செயற்கையழ கில்லாமையும், தன்கணவர் உருக்கரந்து
அடிமைபூண்டிருத்தலா லாகிய வருத்தத்தாற் பொலிவிழந்திருத்தலும்,
அரசியுருவத்தை யொழித்துப் பணிசெய்பவள்வடிவத்தைக் கொண்டிருத்தலும்
பற்றி, ழுவற்றிய வோடையன்னழு என்றும், இயற்கையழகுடைமைபற்றி
ழுவனப்பினாள்ழு என்றுங் கூறினார்.  நெற்றி என்ற சொல் இரண்டனுள், முன்னது
– இறந்தகால வினையெச்சம்;  நெற்று – பகுதி: பின்னது – பெயர்ச்சொல்.
மருண்டு கண்டாள் – கண்டு மருண்டாள் என்று விகுதிபிரித்துக் கூட்டலுமாம்.
மருண்டு கண்டதற்குக்காரணம் மேலே விளங்கும்.  ஓடை – நீரோடுவதெனக்
காரணக்குறி.    

பல்கிய கிளையும், தேசும், பார்த்திவன் வாழ்வும், தாங்கள்
அல்கிய நகரும் இன்றே அழியும்’ என்று அஞ்சியேகொல்?
நல்கிய நேயமேகொல்? நயனம் நீர் மல்க, மல்க,
மல்கிய குருதிதன்னை மாற்றினாள், வண்ண மாதே.127.-அவள்அவ்விரத்தத்தைத் துடைத்தல்.

ழுபார்த்திவன் – (விராட)ராசனது, பல்கிய கிளைஉம் –
மிகுதியான பந்துவர்க்கமும், தேசுஉம் – ஒளியும், வாழ்வுஉம் – வாழ்க்கையும்,
தாங்கள் அல்கிய நகர்உம் – தாங்கள் (அஜ்ஞாதவாசமாகத்) தங்கியிருந்த
அவ்விராட நகரமும், இன்றுஏ அழியும் – (இக்கங்கபட்டனது இரத்தம் கீழே
சிந்தினால்) இன்றைக்கே அழிந்துபோய்விடும்,ழு என்று – என்று எண்ணி
அதனால், அஞ்சிஏ கொல் – அச்சங்கொண்டதனாலேயோ? (அன்றி), நல்கிய
நேயம்ஏ கொல் – (தன் கணவனாகிய அத்தருமபுத்திரனிடத்துத் தான்)
வைத்துள்ள அன்பினாலேயோ? வண்ணம் மாது – வண்ணமகளாகிய
திரௌபதி, நயனம் நீர் மல்க மல்க – (தன்) கண்களினின்று நீர் மிகுதியாய்ப்
பெருகப்பெருக, மல்கிய குருதி தன்னை – (கங்கபட்டனது நெற்றியினின்று)
மிகுதியாய் வெளிப்பட்ட இரத்தத்தை, மாற்றினாள் – (கீழே சிந்தவொட்டாமல்)
துடைத்துப் போக்கினாள்; (எ – று.)

     நிரபராதியும் சாந்தமூர்த்தியும் நற்குணநற்செயல்களிற் சிறந்தவனும்
முனிவடிவமாயுள்ளவனுமான தருமபுத்திரனை விராடன் சினந்து
ஊறுபடுத்தியதனால் அவனது நெற்றியினின்று பெருகும் இரத்தம் கீழே
சிந்துமாயின் அத்தீவினைப்பயனால் விராடனும் அவனதுநாடும் சுற்றத்தோடு
அழிதல் கூடுமென்பதையும், தனது மூத்த தமையனான தருமபுத்திரனை
எவரேனும் புண்படுத்திக் குருதி சிந்துவித்தால் அவரை
வேரொடழித்துவிடுவதென்று அருச்சுனன் விரதங்கொண்டுள்ளவ னாதலால்
அவனால் விராடனுக்குப் பேரழிவு நேர்தல் கூடுமென்பதையும் எண்ணித்
திரௌபதி அஞ்சியதனாலும், தன்பிராணநாயகனாகிய  அத்தருமபுத்திரனிடத்து
அவள் தான் கொண்டுள்ள அன்பினாலும், அருகிலிருந்து கண்ணுற்ற
பணிப்பெண்ணாகிய அவள் கண்ணுங் கண்ணீருமாய் விரைந்தோடிவந்து
தருமனது நெற்றியினிரத்தத்தைக் கீழே சிந்தாதபடி தனது ஆடையினால்
துடைத்தன ளென்ற கருத்தை இங்ஙனம் விகற்பவகையாற் கூறினார்.
(அருச்சுனன் இவ்வகைவிரதமுடையனாதல்பற்றி அவனுக்கு ஜிஷ்ணு என்று
ஒருபெயர் வழங்கிய தென்பதை, ழுமட்டிலாவலி பெற்றுள்ள வானவர்
முதலோரேனும், இட்டமற்றுதிட்டிரப்பேரிறைவனையவமானித்தால், தொட்டவான்
கணையாற் சென்னி துணிப்பதென் றிருக்குஞ் சொல்லாற், சிட்டுணுவென்று
நாமஞ் செய்தனர் தெளிந்தமேலார்ழு என்ற நல்லாப்பிள்ளை பாரதத்தாலும்
அறிக.  மேல் வெளிப்பாட்டுச் சருக்கத்தில் ழுதன்னை நிகர்கிற்பவரிலாத
தனுவல்லோன், என்னை திருநெற்றியிலிகுத்தவடு வென்றான்,
மின்னையும்வெறுத்தொளிரு மேதகுநிறத்தான், பின்னை
யவனுக்கு
நிகழ்பெற்றியுரைசெய்தான்,ழு  ழுஉரைத்தபொழுதிப்பொழுதிவ்வூ
ரெரிகொளுத்தித், தரைத்தலைவனைத் தலைதடிந்திடுவலென்னா,
விரைத்தடவரைப் புயன்வெகுண்டுவிலெடுத்தான், இரைத்துவரு கான்மகனு
மெரிவிழிசிவந்தான்,ழு ழுஅனலுமுதுகானகமகன்று நெடுநாள்நம், நினைவுவழுவாம
லிவனீழலிலிருந்தோம், சினமிகுதலிற்றவறு செய்தன னெனப்போய், முனிதல்
பழுதாகுமென முன்னவன்மொழிந்தான்ழு என வருஞ் செய்யுள்களிற் கூறும்
விஷயமும் நோக்கத்தக்கது.)

     கிளை – மரத்தைக் கிளைபோல ஒருவனைத் தழுவிநிற்கும்
உறவினத்துக்கு உவமவாகுபெயர்.  அரசனுக்கு ஒளி – ழுஉறங்குமாயினு
மன்னவன்றன்னொளி, கறங்குதெண்டிரைவையகங் காக்குமால்ழு என்றபடி
உறங்காநிற்கவும் தான் உலகங்காக்கின்ற அவனது தெய்வத்தன்மையும், தான்
உயிர்வாழுங்காலத்து மிக்குத்தோன்றுதலுடைமையும், புகழுமாம்.  மல்க மல்க –
அடுக்கு, இடைவிடாமை குறிப்பது.  

கண்ணில் நீர் மல்க, வண்ணக் காரிகை, கலையால், அந்த
வண்ண மா முனிவன் சோரி மாற்றிய காலை, ஐயுற்று,
எண்ணமும் செயலும் வேறாய், ‘என் செய்தோம்! என்
செய்தோம்!’ என்று
அண்ணலும், தன்னை நொந்து, ஆங்கு, ‘அருஞ் சினம்
பாவம்!’ என்றான்.28.-விராடன்கழிவிரக்கங்கொள்ளுதல்.

அந்த வண்ணம் – அவ்வாறு, வண்ணம் காரிகை – வண்ண
மகள், கண்ணின் நீர் மல்க – (தன்) கண்களினின்று நீர்பெருக, கலையால் –
(தனது) ஆடையினால், மா முனிவன் சோரி – சிறந்த அந்தக்
கங்கமுனிவனுடைய இரத்தத்தை, மாற்றிய காலை – துடைத்தபொழுது,-
அண்ணல்உம் – பெருமையிற்சிறந்தவனான விராடராசனும், ஐயுற்று –
சந்தேகமடைந்து, எண்ணம்உம் செயல்உம் வேறு ஆய் – நினைப்பும்
தொழிலும் வேறுபட்டு, ழுஎன் செய்தோம் என் செய்தோம்-
(ஆலோசனையில்லாமல்) என்ன தவறான காரியஞ் செய்துவிட்டோம்!  என்ன
தவறானகாரியஞ்செய்து விட்டோம்!!ழு என்று – என்று பலதரம் எண்ணி, தன்னை
நொந்து – தன்னைத்தானே செறுத்துக்கொண்டு, ஆங்கு – அப்பொழுது,
அருஞ் சினம் பாவி என்றான் – ழுஅடக்குதற்கு அரிய கோபம் கெட்டதுழு என்று
பச்சாத்தாபப்பட்டான்; (எ – று.)

      கலை -சேலை; இங்கு, முன்தானை.  முனிவனது நெற்றியிற் பொசியும்
இரத்தத்தை வண்ணமகள் துகிலால் துடைத்ததுஎன்னவென்று விராடன்
சங்கைகொண்டான்.  ழுஎண்ணமுஞ் செயலும் வேறாய்ழு என்றது, இவ்வளவு
காலமாய்க் கங்கபட்டனிடத்து வைத்திருந்த அன்போடு கூடிய மதிப்பாகிய
நினைப்பும் இப்பொழுது கவற்றினாலெறிந்த கடுந்தொழிலும் ஒன்றோடொன்று
ஒற்றுமையுடைய தன்றாகி யென்றபடி.  பாவமென்றும்பாடமுண்டு:
ழுஅருஞ்சினம் பாவிழு என்றதை ழுஅழுக்காறென வொருபாவிழு என்றாற்போலக்
கொள்க.  பண்பிற்குப் பண்பியில்லையாயினும் தன்னை
யுடையவனை
இம்மைமறுமை யிரண்டிலும் கெடுக்கின்ற கொடுமைபற்றி, சினத்தை ழுபாவிழு
என்றனரென்க; கொடியவனை ழுபாவிழு என்னும் வழக்கு இருத்தலால்

ஆயிடை அத்தக் குன்றுக்கு ஆதபன் அணியன் ஆக,
சேயிடை எதிர் கொள் கொற்றச் சேனை மன்னவர்கள் சூழ,
வீயிடை வரி வண்டு ஆர்க்கும் வியன் பெருங் காவு நீங்கி,
போய் இடை நெருங்கி, வேந்தன் புதல்வன், அப்
புரத்தைச் சேர்ந்தான்.129.-மாலைப்பொழுதில்உத்தரன் நகர்க்கு மீளுதல்.

அ இடை – அப்பொழுது, ஆதபன் – சூரியன், அத்தம்
குன்றுக்கு அணியன் ஆக – அஸ்தமநகிரிக்குச் சமீபத்திற்சென்றவனாக
[சாயங்கால மாகுஞ் சமயத்தில்],- வேந்தன் புதல்வன் – விராடராசனுடைய
குமாரன் [உத்தரன்],- சேய் இடை எதிர்கொள் கொற்றம் சேனை மன்னவர்கள்
சூழ – வெகுதூரம்வந்து தன்னை யெதிர்கொண்டு அழைத்துச் செல்லுகின்ற
வெற்றியையுடைய சேனைத்தலைவர்கள் (தன்னைச்) சூழ்ந்து வர,-வீயிடை வரி
வண்டு ஆர்க்கும் – மலர்களில் உடற்கோடுகளையுடைய வண்டுகள் மொய்த்து
ஆரவாரிக்கப்பெற்ற, வியல் பெருங் காவு – அகன்ற பெரிய சோலையினின்று,
நீங்கி போய் – புறப்பட்டுச் சென்று, இடை நெருங்கி – நடுவிடத்தைக் கடந்து
நெருங்கி, அ புரத்தை சேர்ந்தான்-அந்தப் பட்டணத்தை யடைந்தான்; (எ – று.)

     அத்தக்குன்று, மேற்றிசையில் மேல்கடலைச் சாரவுள்ள தெனப்படும்.
தென்புறத்துப் பகை வென்று நிரைமீட்டுவந்தசேனையென்பதுபற்றி,
ழுகொற்றச்சேனைழு என்றார்.  வரி – இசைப்பாட்டுமாம்.  அப்புரம் – விராடபுரம்.

பரந்து வெம் படைகள் மின்ன, பல் இயம், பணிலம்,
ஆர்ப்ப,
சுரந்து மும் மதமும் பாயும் துதிக்கை வாரணங்கள் சூழ,
புரந்தரன் நகரில் காளப் புயல் வருமாறு போல,
உரம் தரு பேடி தன் தேர் ஊரவே, வீதி உற்றான்.130.-உத்தரன் வீதியில்உலாப்போதல்.

(அங்ஙனஞ்சேர்ந்த உத்தரன்), – வெம் படைகள் – கொடிய
ஆயுதங்கள், பரந்து மின்ன – பரவிப் பிரகாசிக்கவும், பல் இயம் – பலவகை
வாத்தியங்களும், பணிலம் – வெற்றிச் சங்கத்தோடு, ஆர்ப்ப –
ஆரவாரிக்கவும்,- சுரந்து மும் மதம்உம் பாயும் – ஊற்றெடுத்து [இடைவிடாமல்]
மூன்றுவகை மதங்களும் பெருகப்பெற்ற, துதிக்கை வாரணங்கள் –
துதிக்கையையுடைய யானைகள், சூழ – (தன்னைச்) சூழ்ந்துவரவும்,-புரந்தரன்
நகரில் – தேவேந்திரனது பட்டணத்தில், காளம் புயல் வரும் ஆறு போல –
கறுத்தமேகம் வருவதுபோல, உரம் தரு பேடி தன் தேர் ஊர – (தனக்கு)
வெற்றியைக்கொடுத்த பேடியாகிய பிருகந்நளை தனதுதேரைச் செலுத்த,
வீதிஉற்றான் – அந்நகரத்து வீதிகளின் வழியே சென்றான்; (எ – று.)

      செல்வவளச்சிறப்புப்பற்றி, விராடபுரத்துக்குத் தேவேந்திரனது
அமராவதிநகரம் உவமை.  இனிமையையும் மகிழ்ச்சியையும் விளைத்தலில்,
உத்தரன் வருதல் நீர்கொண்டகாளமேகம் வருதல் போலு மென்க.
காளமேகத்தை உவமைகூறியதற்கு ஏற்ப, படைகளாகிய மின்னலும்
வாத்தியமுழக்கமாகிய இடியும் யானைமதமாகிய மழையும் கூறின ரென்னலாம்:
உம்மை – முற்றுப்பொருளது.  பரந்துமின்னுதல் – நெடுந்தூரமளவும்
பிரகாசித்தல்.  அருச்சுனன் தான் வென்ற ஆண்மையை உத்தரனதாக
அனைவரும் கருதும்படி தூது போக்கியமைபற்றி, ழுஉரந்தரு பேடிழு என்றார்.
காளப்புயல் என்பதை உவமையாகுபெயராகக்கொண்டு, காளமேகம்போன்ற
திருமாலினவதாரமாகிய உபேந்திரமூர்த்தி எனப்பொருளுரைத்து, விராடனது
மகனாகிய உத்தரன் வெற்றியோடு விராடபுரத்து வீதியில் வருதற்கு, இந்திரனது
தம்பியாகிய உபேந்திரன் பகைவென்று இந்திரநகரத்துவீதியில் வருதல்
ஒப்புமையென்க.  புரந்தரன் – பகைவரது நகரங்களை அல்லது உடம்புகளை
அழிப்பவன்.     

வென்று மீள் குமரன்தன்னை வீதிகள்தோறும், மாதர்
அன்று எதிர்கொண்டு, நல் நீராசனம் எடுத்து, வாழ்த்த,
குன்று எறிந்தவனைக் கண்ட குன்ற வில்லியைப்போல், முந்தச்
சென்று, அவன் பிதாவும் தேர்மேல் சிக்கெனத்
தழீஇக்கொண்டானே.31.-விராடன் எதிர்கொண்டுஉத்தரனைத் தழுவுதல்.

வென்று மீள் குமரன் தன்னை – பகைவென்று மீண்டு வரு
கின்ற இளமகனாகிய உத்தரனை, வீதிகள் தோறுஉம் – (அவன் செல்லுகின்ற
விராடபுரத்து) வீதிகளிலெல்லாம், மாதர் – (அந்நகரத்து மாளிகைகளிலுள்ள)
மகளிர்கள், அன்று – அப்பொழுது, எதிர் கொண்டு – எதிர்கொண்டு சென்று,
நல் நீராசனம் எடுத்து வாழ்த்த – நல்ல மங்களவாலத்தி யெடுத்துச் சுழற்றி
வாழ்த்தாநிற்க,- அவன் பிதாஉம் – அவனது தந்தையாகிய விராடனும்,- குன்று
எறிந்தவனை – கிரௌஞ்சகிரியை (வேல்கொண்டு) பிளந்திட்ட (தனது
இளையகுமாரனான) சுப்பிரமணியனை, கண்ட – பார்த்த, குன்றம்
வில்லியைபோல் – மகாமேருகிரியை வில்லாகக்கொண்டவனாகிய
சிவபிரானைப்போல, முந்த தேர்மேல் சென்று – விரைவாகத் தேரின்மீது (ஏறி
எதிர்கொண்டு) சென்று, சிக்கென தழீஇக்கொண்டான் – (அவ்வுத்தரனை)
இறுகத் தழுவிக்கொண்டான்; (எ – று.)

     உத்தரனது தந்தையாகிய விராடனுக்கு முருகக்கடவுளின் தந்தையாகிய
சிவபிரானும், வெற்றிபெற்று மீண்ட இளையகுமாரனான உத்தரனுக்கு
அங்ஙனமாகிய முருகக்கடவுளும் ஒப்புமையெனக் காண்க.  நீராஜநம் –
திருஷ்டிதோஷங் கழிதற்பொருட்டுச் சுழற்றுவது:  சுண்ணாம்பு கலந்த
மஞ்சள்நீரை ஒரு தட்டிற்கொண்டு அதன் நடுவிற் கர்ப்பூரமேற்றிவைத்து
அதனை எடுத்து மங்களகரமான மாதர்கள் விசேஷகாலங்களில் ஒருவர்க்குச்
சுழற்றுதல் மரபு.  குன்று என்றபொதுப்பெயர், சந்தர்ப்பத்தினால் கிரௌஞ்சமும்
மேருவுமாகிய சிறப்புப்பொருளைக் குறித்தது.

குன்றெறிந்த கதை:-சூரபதுமன் முதலியகொடிய அசுரர்களை
அழித்தருளவேண்டுமென்று பிரார்த்தித்த தேவர்களது வேண்டுகோளுக்கு
இரங்கிய சிவபிரானால் உண்டாக்கப்பட்ட இளையகுமாரனான முருகக்கடவுள்
அவ்வசுரர்களையழித்தற்பொருட்டுப் படையெடுத்துத் தேவர்களுடனே
சூரபதுமனது மகேந்திர நகரத்தை நோக்கிச் செல்லும் வழியிடையே
வானுறவோங்கிய கிரௌஞ்சகிரியைக் கண்டு தேவர்கள் திகைத்திடுதலும்,
நாரதமுனிவன் கூறியதனால் அம்மலையில் ஒருசார் மாயாபுரியிலே
சூரபதுமனது தம்பியான தாரகன் பல அசுரசேனையுடனே யிருத்தலையறிந்து,
முருகக்கடவுள் தனக்குத் தம்பிமுறையாகின்ற வீரவாகுவைச் சேனையோடு
போர்க்கு அனுப்ப, தாரகாசுரனும் சேனையுடன்வந்து போர்செய்கையில்,
அசுரர்கள் அழிந்திட, யானைமுகமுள்ள அத்தாரகாசுரன் கடும்போர்புரிந்து
சுப்பிரமணிய பரிவாரமான பூதகணங்களை யழித்து முடிவில் முன்
நிற்கமாட்டாமல் அந்நிலையில் ஒரு குகையிலே ஒளித்தனனாக,
தொடர்ந்துசென்ற வீரவாகு முதலியோர் பலர் அக்குகையினுள்ளே
அம்மலையின் மாயையால் மயங்கிக்கிடக்க, தாரகன் போர்க்களம் புகுந்து
பூதகணங்களை வருத்தித் துரத்த, இச்செய்திகளை நாரத முனிவன்
சொல்லக்கேட்டு முருகவேள் சேனையுடன்சென்று போர் செய்து அவ்வசுரனது
துதிக்கையையும் தந்தங்களையும் துணித்து அவனதுசேனைகளையழிக்கையில்,
அவன் அக்கிரௌஞ்சமலையுடன் கூடிப் பல மாயைகள்புரிய, ஆறுமுகமூர்த்தி
வேலாயுதத்தை யெறிந்து அம்மலையையும் அவ்வசுரனையும் அழித்து,
மயங்கிக்கிடந்த தனது வீரர்களையெல்லாம் தனது திவ்விய சக்தியால் எழுப்பி
யழைத்துக்கொண்டு அப்பாற்சென்றன னென்பதாம்.  அன்றியும், சிவபிரான்
பரசுராமனுக்கும் சுப்பிரமணியனுக்கும் ஒருங்கு படைக்கலவித்தை
பயிற்றுவித்தபின்பு அவர்கள் திறத்தைப் பரீக்ஷிக்கையில், பரசுராமன்
அம்பெய்து கிரௌஞ்சகிரியைத் துளைக்க, குமாரமூர்த்தி தனது வேற்படையை
அக்கிரியின்மீது எறிந்து அதனைப் பிளந்து தனது வேலின் திறத்தைக் காட்டின
னென்ற வரலாறும் உண்டு.

     சிவபிரான் மகாமேருமலையை வில்லாகக்கொண்டது, திரிபுரசங்கார
காலத்தில்;அவ்வரலாறு வருமாறு:- தாரகாசுரனது புத்திரர்களாகிய
வித்யுந்மாலி தாரகாட்சன் கமலாட்சன் என்னும் மூவரும் மிக்க தவஞ்செய்து
மயனென்பவனால் சுவர்க்க மத்திய பாதாளமென்றமூன்றிடங்களிலும் முறையே
பசும்பொன் வெண்பொன்கரும்பொன்களால் அரண்வகுக்கப்பட்டு
ஆகாயமார்க்கத்திற் சஞ்சரிக்குந்தன்மையுடைய மூன்றுபட்டணங்களைப் பெற்று,
மற்றும் பல அசுரர்களோடு அந்நகரங்களுடனே தாம் நினைத்த இடங்களிற்
பறந்துசென்று பல இடங்களையும் பாழாக்கிவருகையில், அத்துன்பத்தைப்
பொறுக்கமாட்டாத தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளினால்,
சிவபெருமான், பூமியைத் தேராகவும், சந்திர சூரியரைத் தேர்ச்சக்கரங்களாகவும்,
நான்கு வேதங்களைக் குதிரைகளாகவும், பிரமனைச் சாரதியாகவும்,
மகாமேருவை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், விஷ்ணுவை
வாயுவாகிய சிறகமைந்த அக்கினியை முனையாகவுடைய அம்பாகவும்,
மற்றைத்தேவர்களைப் பிறபோர்க்கருவிகளாகவும் அமைத்துக்கொண்டு
யுத்தசன்னத்தனாய்ச் சென்று போர்செய்ய யத்தனித்துப் புன்சிரிப்புச்செய்து
திருமாலாகிய அம்பையெய்து அவ்வசுரரனைவரையும் பட்டணங்களோடு
எரித்தருளின னென்பதாம்.  ழுகுன்றவில்லிழு என்ற பெயரினால், கல்லை
வில்லாகவளைத்து அதுகொண்டு தொழில் செய்ய வல்லவ
னெனச் சிவபிரானது மிக்கதிறமை விளங்கும்.  

தழுவிய அரசன் தாளில் தலை உற வீழ்ந்து, வேந்தர்
குழுவிடைக் கொண்டு போக, கோயிலில் புகுந்த பின்னர்,
பழுது அறு வாய்மை வேத பண்டிதன் பாதம் போற்றி,
செழு மலர் வதனம் நோக்கி, திரு நுதல் வடுவும் கண்டான்.132.-அரண்மனையிற் புகுந்தஉத்தரன் கங்கபட்டனது
நெற்றியில் வடுவைக் காணுதல்.

உத்தரகுமாரன்),- தழுவிய அரசன் தாளில் – (தன்னை)
அணைத்துக்கொண்ட விராடராசனது பாதங்களில், தலை உற – (தனது) தலை
படும்படி, வீழ்ந்து – விழுந்து (ஸாஷ்டாங்கமாக) வணங்கி,- வேந்தர் குழு இடை
கொண்டு போக – அரசர் கூட்டம் (சுற்றிலும்சூழ்ந்து) இடையிலே (தன்னை)
அழைத்துக் கொண்டுபோக, கோயிலில் புகுந்த பின்னர் – அரண்மனையிற்
சேர்ந்தபின்பு,- பழுது அறு வாய்மை – குற்றமற்ற உண்மைமொழிகளையுடைய,
வேத பண்டிதன் – வேதம்வல்லவனாகிய கங்கபட்டனது, பாதம் – சீர்பாதங்
களை, போற்றி – வணங்கி,- செழு மலர் வதனம் நோக்கி – செழுமையான
செந்தாமரைமலர்போன்ற (அவனது) திருமுகத்தைப் பார்த்து, திரு நுதல்
வடுவுஉம் கண்டான் – (அம்முகத்திலே) அழகிய நெற்றியில்
ஊறுபட்டிருத்தலையும் பார்த்தான்; (எ – று.)

     தருமபுத்திரன் சத்தியவிரதனாதலால், அவனுக்கு ழுபழுதறுவாய்மைழு என்ற
அடைமொழி கொடுக்கப்பட்டது.  அந்தணவடிவங்கொண்டவ னாதலால்,
தருமன் ழுவேதபண்டிதன்ழு எனப்பட்டான்.  ழுபூவிற்குத் தாமரையேழு என்றபடி
எல்லா மலர்களினும் தாமரை மலர் மிகச்சிறத்தல்பற்றி, ழுசெழுமலர்ழு
எனப்பட்டது.  ஊறுபட்டிருக்கையிலும் முகச்சுளிப்புறாத பொறையுடைமை,
ழுசெழுமலர் வதனம்ழு என்றதனால் விளங்கும்.        

திகழ்ந்த நின் நுதலின் ஊறு செய்தவர் யார்கொல்?’ என்ன,
நிகழ்ந்தமை தந்தை கூற, நெஞ்சினால் தந்தைதன்னை
இகழ்ந்தமை நுவலும்போதைக்கு எல்லை இன்று; ‘இவனைப் போல
அகழ்ந்த நீர் ஆடை ஞாலத்து ஆர்கொலோ, அமைவின் மிக்கோர்?’133.-நிகழ்ந்த செய்தியையறிந்து உத்தரன் உளம்வருந்துதல்.

இதுவும், அடுத்த கவியும் – ஒருதொடர்.

      (இ -ள்.) (அதுகண்ட உத்தரன்), ‘திகழ்ந்த நின் நுதலின் –
விளங்குகின்ற உனது நெற்றியிலே, ஊறு செய்தவர் – வடுப்படுத்தியவர், யார்
கொல் -யாரோ?’ என்ன – என்று (அக்கங்கபட்டனை) வினாவியவளவில்,
நிகழ்ந்தமை- நடந்தசெய்தியை, தந்தை – தந்தையான விராடன், கூற –
சொல்ல,-(கேட்டறிந்த உத்தரன்), நெஞ்சினால் – (தன்) மனத்தினால், தந்தை
தன்னை -(தன்) பிதாவான அவ்விராடனை, இகழ்ந்தமை – வெறுத்ததை,
நுவலும்போதைக்கு – சொல்லுமளவுக்கு, எல்லை இன்று – ஒரு
வரையறையில்லை,(அங்ஙனம், மிகவெறுத்தபின்பு உத்தரன்), ‘இவனை போல –
இம்முனிவனைப்போல, அமைவின் மிக்கோர் – பொறுமையிற் சிறந்தவர்,
அகழ்ந்த நீர் ஆடை ஞாலத்து – (சக்ரசக்கரவர்த்திகுமாரர்களால்)
தோண்டப்பட்ட கடலை ஆடையாகவுடைய [கடல்சூழ்ந்த] இந்நிலவுலகத்தில்,
ஆர் கொல்ஓ – வேறு யாருளரோ? [எவருமில்லை யென்றபடி]; (எ – று.)

     அமைவாவது – காரணம்பற்றியாவது, பேதைமையாலாவது ஒருவன்
தமக்குக் குற்றஞ்செய்தவிடத்துத் தாமும் அவனுக்கு அதனைச்செய்யாது
பொறுத்தல்.  மிகுதியாக இகழ்ந்தது – அம்முனிவனைத் தருமபுத்திரனென்று
தானறிந்ததனாலும், “வென்றவன் பேடியே” என்று அவன் கூறியது
உண்மையேயாக அதுபற்றி விராடன் அவனைச்சினந்து கவறு கொண்டெறிந்தது
பெருந்தீங்காதலாலு மென்க.  ஐம்பெருங்குரவரிலொருவனாகிய தந்தையைச்
சொற்செயல்களால் வெறுத்தல் கூடாமையாலும், மனம் பொறாமையாலும்,
நெஞ்சினா லிகழ்ந்தான்

செறுப்பது பெருமை அன்று; சிறியவர் செய்த தீமை
பொறுப்பதே பெருமை’ என்று பூசுரன் பாதம் போற்றி,
வெறுப்பது விளைத்த தாதை வீழ்ந்தபின், தானும் வீழ்ந்து,
மறுப்பது புரியா ஞானி, மனத் துனி அகற்றினானே.134.-உத்தரன் தந்தையும்தானுமாய்த் தருமனை வணங்கிச்
சினந்தீர்த்தல்.

ழுசிறியவர் செய்த தீமை – சிறியோர்செய்த தீங்கை, செறுப்பது
– வெறுத்துக் கோபிப்பது, பெருமை அன்று – பெருந்தன்மையன்று;
பொறுப்பதுஏ – (அதனைப்) பொறுத்துக்கொள்வதே, பெருமை –
பெருந்தன்மையாம்,ழு என்று – என்றுசொல்லி, வெறுப்பது விளைத்த தாதை
வீழ்ந்தபின் – வெறுக்கத்தக்க [தீய] காரியத்தைச் செய்த தந்தையான விராடன்
(கங்கபட்டனது பாதங்களில்) விழுந்து நமஸ்கரித்தபின்பு, தான்உம் –
(மைந்தனாகிய) தானும், பூசுரன் பாதம் – அந்தணனாகிய அக்கங்கபட்டனது
பாதங்
களில்,வீழ்ந்துபோற்றி – வீழ்ந்து வணங்கி,- மறுப்பது புரியாஞானி –
(சரணமடைந்தவரது வேண்டுகோளைத்) தடுத்தல்செய்யாத தத்துவஞான
முடையவனான அம்முனிவனது, மனம் துனி – மனத்திலடங்கிய சிறு
கோபத்தையும், அகற்றினான் – போக்கினான்;

     ழுசிறியோர்செய்த சிறுபிழையெல்லாம், பெரியோராயிற்பொறுப்பது
கடனேழுஎன்றார் பிறரும்.  சிறியவர் – அறிவாலும் ஒழுக்கத்தாலும்
பிராயத்தாலும்சிறியவர்.   பூஸு ரன் என்ற வடசொல்லுக்கு –
(பிரமதேஜசினால்) பூமியில்தேவன்போல விளங்குபவ னென்பது பொருள்.
பிறர்வேண்டுகோளுக்குஇசையாமல் மறுதலிக்குங் குணம் இயல்பிலேயே
யில்லாதவ னென்பார்,ழுமறுப்பது புரியா ஞானிழு என்றார்; இத்தொடர்க்கு –
எவராலும்தடுக்கவொண்ணாத கல்வியறிவுடையவனென்ற பொருளும் அமையும்.
சிறியவர்செய்ததீமை -இடைநிலைத்தீவகம்.  

ஆன்று அமைந்து அடங்கு கேள்வி அண்ணலும், அவனைப் பெற்ற
தோன்றலும், பின்னர்ச் சென்று, சுதேட்டிணை கோயில் எய்த,
ஈன்ற அப்பொழுதின் ஓகை எண் மடங்கு ஆக விஞ்ச,
சான்ற தன் மகனைக் கண்டு, மகிழ்ந்தனள், தவத்தின் மிக்காள்.135.-உத்தரகுமாரனைக்கண்டுசுதேட்டிணை மகிழ்தல்.

ஆன்று அமைந்து அடங்கு கேள்வி – மிக நிறைந்து
அடங்கியிருக்கின்ற நூற்கேள்வியையுடைய, அண்ணல்உம் – பெருந்தன்மையிற்
சிறந்தவனான உத்தரனும், அவனை பெற்ற தோன்றல்உம் – அக்குமாரனைப்
பெற்ற தந்தையான விராடராசனும், பின்னர் – பின்பு, சுதேட்டிணை கோயில் –
சுதேட்டிணைவாழ்கின்ற அந்தப்புரத்துக்கு, சென்று எய்த – போய்ச்சேர,-
தவத்தின் மிக்காள் – தவத்தினால் மிக்கவளாகிய அவள்,- சான்ற தன் மகனை
கண்டு – (வெற்றியாற்) சிறந்த தனது குமாரனைப் பார்த்து, ஈன்ற அ பொழுதின்
ஓகை எண் மடங்கு ஆக விஞ்ச – (தான் அப்) பிள்ளையைப் பெற்றபொழுது
அடைந்த மகிழ்ச்சியினும் (இப்பொழுதை) மகிழ்ச்சி எட்டுப்பங்கு அதிகமாகப்
பெருகாநிற்க, மகிழ்ந்தனள் – சந்தோஷமடைந்தாள்; (எ – று.)

      ஈன்றபொழுதை மகிழ்ச்சி – ழுவயாவும் வருத்தமும் ஈன்றக்கானோவும்,
கவாஅன் மகற்கண்டு தாய் மறந்தா அங்குழு என்பதனாற் காண்க.  புதல்வனை
மடியிற்கண்ட பொதுஉவகையினும் சால்புடையனாகக்கண்ட சிறப்புஉவகை
பெரிதாதலால், ழுஈன்றவப்பொழுதினோகை யெண்மடங்காக விஞ்சழு என்றார்;
ழுஈன்றபொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச், சான்றோனெனக் கேட்ட தாய்ழு
என்றார் திருவள்ளுவரும்.  ஓகை – உவகை: மரூஉ. எண்மடங்கு என்றது –
பலமடங்கு என்றபடி.  ஆகவே, தாயின் உவகைக்கு அளவின்றென்றவாறாம்.
இங்குத் தாய்க்குத் தவம் – இவ்வாறு நல்லறிவும் நல்லொழுக்கமுமுடைய
குமாரனைப் பெறுதற்கு ஏற்ற நல்வினை.
 அடங்குகேள்வி –
அடக்கமுடையவனாயிருத்தற்குக் காரணமான நூற்கேள்வி யெனினுமாம். 

ஓடி உத்தரன் தேர் ஊர, ஒரு முனையாகத் தன்னை
நாடி, உத்தரிக்க மாட்டா நராபதிபர் பதாகைத் தூசும்,
கோடி உத்தரியப்பட்டும், குழமகன்தனக்கு நல்கி,
பேடி உத்தரை தன்னோடும் பெற்ற தாய் பின்பு நின்றாள்.136.-பிருகந்நளை செய்தி.

பேடி – பேடியாகிய பிருகந்நளை,- உத்தரன் –
உத்தரகுமாரன்,ஓடி – (முதலிற் பகைவர்சேனையைக்கண்டு) அஞ்சியோடி, தேர்
ஊர – (பின்புதன்வார்த்தையால் தெளிந்து) தேரையோட்ட, (தான்
சென்றுபொருது), தன்னைநாடி – தன்னைக்கண்டமாத்திரத்திலே, ஒரு முனை
ஆக – ஒரே துணிவாக,உத்தரிக்கமாட்டா – முன்நிற்கமாட்டாமற்போன,
நரஅதிபர் -(துரியோதனன்முதலிய) அரசர்களது, பதாகை தூசுஉம் –
கொடிச்சீலைகளையும்,கோடி உத்தரியம் பட்டுஉம் – (அவர்கள்மேலே
தரித்திருந்த) அனேகம்பட்டாடைகளையும், குழமகன் தனக்கு –
(உத்தரைவைத்துக்கொண்டுவிளையாடு கின்ற) பிரதிமைக்காக, நல்கி –
(அலங்கரித்தற்பொருட்டுக்)கொடுத்து, உத்தரை தன்னோடுஉம் –
உத்தரையுடனே, பெற்ற தாய் பின்புநின்றாள் – அவளையீன்ற தாயாகிய
சுதேட்டிணையின் பின்புறத்தில்ஒதுங்கிநின்றாள்; (எ – று.)

இச்செய்யுளில் திரிபு என்னுஞ் சொல்லணி காண்க.  கீழ் 102 – ஆஞ்
செய்யுளில் ழுமணிக்கொடித்ழு தூசுந் தூசும், உத்தரைவண்டற்
பாவைக்குடுத்துதற்கென்று கொய்தான்ழு என்று கூறியவர், அவற்றை
அப்பிருகந்நளையாகிய அருச்சுனன் உத்தரைக்குக் கொடுத்த செய்தியை
இங்குக் கூறினர்.  குழமகன் – மரப்பாவை; இளமகன்போன்ற
வடிவமைந்ததென்று காரணப்பொருள் காணலாம்.  உத்தரன் தேரூர, ஓடி –
(தான்) விரைந்துசென்று என்றுமாம். ழுஒருமுனையாக தன்னைநாடி –
ஒரேதுணிவாகத் தன்னைக் குறித்துப் போர்க்குவந்து, உத்தரிக்கமாட்டா –
(பின்பு) முன்னிற்க மாட்டாமற்போனழு என்றலும் அமையும்.  கோடி –
புதுமையுமாம்.  நரஅதிபர் – மனிதர்க்குத்தலைவர்.  உத்தரீயம் – மேலாடை;
வடசொல்.  உத்தரியப்பட்டு – உத்தரீயமாகிய பட்டு என இருபெயரொட்டு.
நாணத்தால் மகளிர்பின்னே யொதுங்கிநிற்றல், பேடியரியல்பு.

தந்தையும், தானும், ஆங்குத் தனித்து இருந்து, அடையலாரை
முந்திய அமரில் சென்று, முனைந்து, போர் விளைத்தவாறும்,
வந்தவர் சாய்ந்தவாறும், மணி நிரை மீட்டவாறும்,
சுந்தர கிரிகள் போலும் தோளினான், தோன்றச் சொல்வான்:137.-நிகழ்ந்த செய்திகளைஉத்தரன் ஏகாந்த

சுந்தர கிரிகள் போலும் தோளினான் – அழகிய மலைகள்
போன்ற தோள்களையுடையவனான உத்தரன்,- அங்கு – அப்பொழுது,
தந்தைஉம் தான்உம் தனித்து இருந்து – விராடனும் தானுமாகத்
தனியிடத்தெயிருக்கையில், அடையலாரை – பகைவர்களை, முந்திய அமரில்
சென்று – முற்பட்ட யுத்தகளத்திற் போய், முனைந்து – எதிர்த்து, போர்
விளைத்த ஆறுஉம் – யுத்தஞ்செய்த விதத்தையும், வந்தவர் சாய்ந்த ஆறுஉம்
– எதிர்த்துவந்த அரசர்கள் தோற்றுப்போன விதத்தையும், மணி நிரை மீட்ட
ஆறுஉம் – அழகிய பசுக்கூட்டத்தை மீட்டுவந்தவிதத்தையும், தோன்ற
சொல்வான் – விளங்கச்சொல்பவனானான்; (எ – று.) – இதன் விவரத்தை,
அடுத்த கவியிலுங் காண்க.

      தமதுஅரண்மனையிற் பாண்டவர் இரகசியமாக அஜ்ஞாதவாசஞ்
செய்திருந்தமையையும், அவர்களில் அருச்சுனனே இப்போர்வென்றன
னென்பதையும் கூறுகின்றா னாதலின், தனித்திருந்து கூறுபவனானான்.  மணி
நிரை – மணிகள்கட்டிய பசுக்களுமாம்.  ழுசாய்ந்த ஆறுழு என்றதில்;
மோகநாஸ்திரத்தாற் கீழேவிழுந்து கிடந்ததும் அடங்கும்.  கீழ் 101-ஆஞ்
செய்யுளில் ழுமுடியடி படிக்கண் வீழ்த்தான்ழு என்றமை காண்க.  இருந்து =
இருக்க: எச்சத்திரிபு.     

உருப்பசி வெஞ் சாபத்தால் பேடியான உருவம் ஒழித்து,
அருச்சுனன் தன் உருவம் கொண்டு,
பொருப்பு அனைய கவித் துவசத் தேர்மேல், வண்ணப் பொரு
சிலை தன் கரத்து ஏந்தி, புகுந்த போது,
செருப் புரவி இரவி எதிர் திமிரம் போல, திறல் அரி ஏற்று
எதிர் கரியின் திறங்கள் போல,
நெருப்பு எதிர்ந்த பதங்கம்போல், அழிந்தார்-ஐய!-நிரை போக்கி,
அணி ஆகி, நின்ற வேந்தர்.138.-மூன்றுகவிகள் -ஒருதொடர்: உத்தரன் விராடனிடத்துக்
கூறியதைத் தெரிவிக்கும்.

ஐய – தந்தையே! (பிருகந்நளை), உருப்பசி வெம் சாபத்தால்
பேடி ஆன உருவம் ஒழித்து – ஊர்வசியிட்ட கொடிய சாபத்தாற்
பேடியாய்க்கிடந்த செயற்கைவடிவத்தைப் போக்கி, அருச்சுனன் தன் உருவம்
கொண்டு – அருச்சுனனாகிய தனது இயற்கைவடிவத்தையடைந்து, பொருப்பு
அனைய கவி துவசம் தேர்மேல் – மலைபோன்றதும்
குரங்குக்கொடியுடையதுமான (தனக்குரிய) தேரின்மேலேறி, வண்ணம் பொரு
சிலை தன் கரத்து ஏந்தி – அழகிய போர்க்கு உரிய தனது காண்டீவவில்லைத்
தன்கையிலெடுத்துக்கொண்டு, புகுந்தபோது – (போர்க்களத்திற்) புகுந்தபொழுது,
அணி ஆகி நின்ற வேந்தர் – படைவகுத்து வந்துநின்ற பகையரசர்கள், செரு
புரவி இரவி எதிர் திமிரம் போல – போர்செய்யவல்ல  குதிரைபூண்ட
(தேரையுடைய) சூரியனை எதிரிற்கண்ட இருள்போலவும், திறல் அரி ஏறு எதிர்
கரியின் திறங்கள் போல – வலிமையுடைய ஆண்சிங்கத்தை
யெதிரிற்கண்ட
யானைக்கூட்டங்கள் போலவும், நெருப்பு எதிர்ந்த பதங்கம்போல் –
விளக்கையெதிர்த்த விட்டிற்பறவைகள்போலவும், நிரை போக்கி அழிந்தார் –
(அவ்வருச்சுனனைக் கண்டமாத்திரத்தில் தாம் கவர்ந்த) நிரையைப்
போகவிட்டுத் தோற்றோடிப்போனார்கள்;

     இப்பாடலால் அருச்சுனனே பிருகந்நளையென்ற பேடியாயிருந்தமை
யையும், அவனைக் கண்டதும் பகைவர் நிரையை விட்டுவிட்டுத்
தோற்றோடினமையையுங் கூறுகின்றான்.  அருச்சுனனைக்கண்டதும் அழிந்த
பகையரசர்க்குச் சூரியனைக்கண்ட இருளையும், அரியேற்றைக் கண்ட
கரியையும், விளக்கைக்கண்ட விட்டிலையும் உவமைகூறினான்; உவமையணி.
உருப்பசி என்ற பெயர் – தொடையினின்று பிறந்தவளென்று பொருள்படும்:
ஊரு – தொடை.  நாராயணமுனிவரது தொடையினின்று பிறந்தவ ளாதலால்,
இவள் இப்பெயர் பெற்றனள்.  குருசிஷ்யக் கிரமத்தை உலகத்தார்க்கு
உணர்த்துதற்பொருட்டு விஷ்ணுவின் அம்சமாய்க் குருவும் சிஷ்யனுமாகத்
திருவவதரித்த நாராயணன் நரன் என்ற முனிவர்கள் பதரிகாச்சிரமத்தில் தவஞ்
செய்துகொண்டிருக்கையில் இந்திரனேவலால் அப்ஸரஸ் ஸ்திரீகள் பலர்
அங்குவந்து தங்களுடைய மேனிமினுக்கினாலும் ஆடல் பாடலாதி
வினோதங்களாலும் அவர்களுடைய தவத்துக்கு இடையூறு செய்யத் தொடங்க,
அதனாற் சிறிதுங்கலங்காத அவர்களுள் நாராயணமுனிவர் அம்மகளிரை
அவமானப்படுத்தக்கருதித் தமது தொடையினின்று ஒருகட்டழகியைச்
சங்கற்பத்தா லுண்டாக்க, அவளது ஒப்புயர்வற்ற திவ்விய சௌந்தரியத்தை
நோக்கி அத்தேவமாதர்கள் மிக வெள்கி அவளையே தங்கட்குத்
தலைவியாகக்கொண்டு அவளுடன் தமது உலகத்துக்குச்சென்றன ரென்பது
வரலாறு.  போக்கி அழிந்தார் – அழிந்துபோக்கினார் என விகுதிபிரித்துக்
கூட்டுக.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவு முள்ள நான்குகவிகள் –
பெரும்பாலும் ஒன்று இரண்டு ஐந்து ஆறாஞ்சீர்கள் காய்ச்சீர்களும், மற்றை
நான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட
எண்சீராசிரியவிருத்தங்கள்

அருகு விடாது, உனக்கு உயிர் நண்பு ஆகி, நீதி அறம்
உரைப்போன் அறத்தின் மகன் ஆக வேண்டும்;
மரு மலரும், மான்மதமும் துறந்த கூந்தல் வண்ண மகள்
பாஞ்சாலன் மகளே போலும்!
வெருவரும் மற் போர் கடந்த மடையன்தன்னை வீமன் என
அயிர்க்கின்றேன்; வேந்தே! மற்றை
இருவரினும் மா வலான் நகுலன்தானே; இன் நிரையின்
காவலான் இளைய கோவே.

வேந்தே – அரசனே! உனக்கு உயிர் நண்பு ஆகி – உனக்கு
உயிர்போன்ற சிநேகிதனாய், அருகு விடாது – (உன்) சமீபத்தை விடாமல்
[எப்பொழுதும் உனது அருகில் இருந்துகொண்டு], நீதி அறம் உரைப்போன் –
நியாயங்களையும் தருமங்களையும் (அப்பொழுதைக்கு 
அப்பொழுது)எடுத்துச்
சொல்லி வருகின்றவனான கங்கபட்டன், அறத்தின் மகன் ஆகவேண்டும் –
தருமபுத்திரனாக இருத்தல்வேண்டும்; மரு மலர்உம் – நறுமணமுள்ள
மலர்களையும், மான்மதம்உம் – கஸ்தூரிப்புழுகையும், துறந்த –
இழந்திருக்கின்ற, கூந்தல் – கூந்தலையுடைய, வண்ணம் மகள் –
அலங்காரஞ்செய்யும் பணிப்பெண்ணாகிய விரதசாரணி, பாஞ்சாலன் மகள்ஏ
போலும் – பாஞ்சாலதேசத்தரசனான துருபதனுடைய மகளாகிய
திரௌபதிபோலும்; வெருவரும் மல்போர் கடந்த – அஞ்சத்தக்க
மல்லயுத்தத்தில் (எல்லாமல்லரையும் வென்றுவந்தானொரு மல்லனைச்) சயித்த,
மடையன்தன்னை – சமையற்காரனாகிய பலாயநனை, வீமன்என
அயிர்க்கின்றேன் – வீமசேனனென்று நினைக்கின்றேன்; மா வலான் – குதிரைத்
தொழிலில்வல்லவனான தாமக்கிரந்தி, மற்றை இருவரின்உம் –
மற்றைப்பாண்டவர்களிரண்டுபேரிலும், நகுலன் தான்ஏ – நகுலனாகவேண்டும்;
இன்நிரையின் காவலான் – அழகிய பசுக்கூட்டங்களைக் காத்தல்வல்லவனான
தந்திரிபாலன், இளைய கோஏ – (ஐவருள்) இளையவனாகிய
சகதேவனேயாகவேண்டும்;

     இதனால், மற்றைப்பாண்டவரும் திரௌபதியும் இன்னாரின்னாரென்று
உத்தரன் தெரிவிக்கின்றான்.  நண்பு – நண்பனுக்குப் பண்பாகுபெயர்.  அறம் –
தருமக்கடவுளாகிய யமன்.  ‘அறமுரைப்போனறத்தின் மகன்’ என்றதில்,
தந்தையின் தகுதிக்கு ஏற்றபடி மைந்தனும் அறநெறிதேர்ந்தவ னென்றது
விளங்கும்.  மான்மதம் – கஸ்தூரி யென்னும் மானினது கொழுப்பு;
வடமொழியில் மருகமத மெனப்படும்.  திரௌபதி தன்னைத் துரியோதனன்
துச்சாதனனைக்கொண்டு தலைமயிர் பிடித்திழுத்துச் சபையிற்கொணர்ந்து
துகிலுரிந்தும் தன் மடிமேலுட்காரென்று சொல்லியும் பங்கப்படுத்தியபொழுது
“துரியோதனாதியர் நூற்றுவரையுங் கொன்று வெற்றி முரசறைந்தாலன்றி நான்
விரித்த கூந்தலையெடுத்து முடித்து அலங்கரிப்பதில்லை’ என்று சபதஞ்செய்து
அங்ஙனமே தலைவிரிகோலமாயிருத்தலால், ‘மருமலருமான்மதமுந் துறந்த
கூந்தல் வண்ணமகள் பாஞ்சாலன் மகளே போலும்’ என்றான்.  ஆகவேண்டும்,
போலும், அயிர்க்கின்றேன் என்றவை – ஊகித்தற்பொருளன.  ‘என
அயிர்க்கின்றேன்’ என்றதைப் பின்னிரண்டுவாக்கியங்கட்குங் கூட்டுக.

 

     பாண்டவர் அஜ்ஞாதவாசஞ்செய்கையில், ஆயிரம்மல்லர்சூழப்
பெருமல்லனொருவன் விராடராசசபைக்குவந்து மற்போரில்
தன்னோடொப்பவரெவரு மில்லையென்று செருக்கிப் பேச, அப்பொழுது
அரண்மனையிலுள்ள மல்லரனைவரும் அரசன்கட்டளைப்படி
அம்மகாமல்லனுடன் பொருதுதோற்றனராக, பிறகு கங்கபட்டன்சொன்னபடி
விராடன் வீமனாகிய பலாயனனையேவ, அவன் மற்போர்பொருது
அம்மல்லர்தலைவனை எளிதில் வென்றனனென்ற வரலாறு, கீழ்
மற்போர்ச்சருக்கத்தில் விளக்கப்பட்டது

ஆளையே அடும் களிற்றார் தம்மை யாரும் அறியாமல்,
இந் நகர்க்கண் அடங்கி நின்றார்;
நாளையே வெளிப்படுவர்; நெருநலே தம் நாள் உள்ள
கழிந்தனவால்; நயந்து கேண்மோ;
வேளையே அனைய எழில், தோகை வாகை வேளையே
அனைய விறல், விசயன் என்னும்
காளையே, அடியேனுக்கு இளைய காதல் கன்னிகைக்கு
வரன் என்று கருதுவாயே.’

ஆளைஏ அடும் களிற்றார் – பாகனானவனைக் கொல்லுந்
தன்மையுள்ள யானைச்சேனையையுடையவரான பாண்டவர்கள், தம்மை -,
யார்உம் அறியாமல் – எவரும் அறியாதபடி, இ நகர்க்கண் – இந்த நகரத்தில்,
அடங்கிநின்றார் – (இதுவரையில்) மறைந்திருந்தார்கள்; நாளைஏ வெளிப்படுவர்
– நாளைக்கே வெளிப்படுவார்கள்:  நெருநல்ஏ – நேற்றே, தம் நாள் உள்ள
கழிந்தன – தாம் கழிக்க வேண்டியனவாயிருந்த அஜ்ஞாதவாச தினங்கள்
கழிந்துவிட்டன; நயந்து கேண்மோ – (யான் இப்பொழுது சொல்வதை)
விரும்பிக் கேட்பாயாக:  வேளைஏ அனைய – மன்மதனையேபோன்ற, எழில் –
அழகையும், தோகை வாகை வேளைஏ அனைய – மயில்வாகனத்தையும்
வெற்றிமாலையையுமுடைய முருகக்கடவுளையே போன்ற, விறல் –
வெற்றியையுமுடைய, விசயன் என்னும் – அருச்சுனனாகிய, காளைஏ – வீரனே,
அடியேனுக்கு இளைய – எனக்குத் தங்கையாகிய, காதல் கன்னிகைக்கு –
அன்புமிக்க உத்தரைக்கு, வரன் – ஏற்ற கணவன், என்று -, கருதுவாய் –
எண்ணுவாயாக; (எ – று.)

     இதனால், பாண்டவர்களைவரும் அஜ்ஞாதவாசத்தை இங்குக் கழித்தன
ரென்பதையும், உத்தரையை அருச்சுனனுக்கு மணம்
புரிவிக்கவேண்டுமென்றதையும் கூறுகின்றான்.  மதயானை தனக்கு
ஆவனசெய்து தன்னையடக்கி யாளும் பாகன்மீது முன்பு தன்னை அவன்
கடிந்தமைபற்றிக்கறுக்கொண்டு அவனைக் கொல்லுமியல்பினதாதலால்,
ழுஆளையே யடுங்களிறுழு எனப்பட்டது.  நால்வகைச்சேனையுள்ளும்
ழுபடைதனக்கி யானைவனப்பாகும்ழு என்றபடி சிறப்பதாகிய யானையைத்
தலைமைபற்றி யெடுத்துக் கூறியது மற்ற மூன்றுக்கும் உபலக்ஷணம்.  இனி,
களிற்றார் – யானைபோன்றவ ரெனினுமாம்; கோபத்தை
மறைத்தற்குரியகாலத்தே மறைத்து வெளிப்படுத்தற்குரியகாலத்தே
வெளிப்படுத்துந் தன்மைக்கும், வலிமைக்கும், நடைக்கும், காம்பீரியத்துக்கும்
உவமை.  ஆளையே, வேளையே என்றவற்றில், ஏகாரம் – உயர்வுசிறப்பு.
நாளையே, நெருநலே, காளையே என்றவற்றில் ஏகாரம் – தேற்றம்.  ழுவாகைழு
என்ற மரத்தின்பெயர் – அதன் மலர்களாலாகிய மாலைக்கு
இருமடியாகுபெயராம்.  வாகைப்பூமாலை, போரில் வென்றவர் சூடுவது.
மூன்றாமடியில் ழுவேளையேழு என்ற சொல் வெவ்வேறு பொருளில்
அடுத்துவந்தது – மடக்கு என்னுஞ் சொல்லணி.

மகன் இவை மற்று உரைத்த அளவில், தாதை கேட்டு, மனம்
நடுங்கி, நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி கூர்ந்தான்;
பகல் அமரில் ஏறிய மெய்ப் பராகம் மாற, பகலோனும் புனல்
படிவான் பரவை சேர்ந்தான்;
தகவுடைய பாண்டவரும் வண்ண மாதும் தனித்து எண்ணிப்
பரகாய சரிதர் போலப்
புகல் அரிய பழைய தம வடிவம் கொண்டார்; போன பகலவன்
உதயப் பொருப்பின் மீண்டான்.141. இவைகேட்டு விராடன்மகிழ்தல் முதலியன

இவை – இவ்வார்த்தைகளை, மகன் – (தன்) புதல்வனான
உத்தரன், உரைத்த அளவில் – சொல்லியவளவிலே, தாதை கேட்டு – அந்த
உத்தரனது தந்தையாகிய விராடராசன்கேட்டு, மனம் நடுங்கி-, நெகிழ்ச்சியுடன்
– மனத்தளர்ச்சியுடனே, மகிழ்ச்சி கூர்ந்தான் – சந்தோஷம் மிகப்பெற்றான்:
பகல் அமரில் – பகற்பொழுதைய போரிலே, ஏறிய மெய் பராகம் –
தன்னுடம்பிற் படிந்த புழுதி, மாற – போகும்படி, பகலோன்உம் – சூரியனும்,
புனல் படிவான் – நீராடுதற்கு, பரவை சேர்ந்தான் – (மேல்திசைக்) கடலை
யடைந்தான் [அஸ்தமித்தான்]; (அவ்விராத்திரியில்), தகவு உடைய
பாண்டவர்உம் – பெருமையையுடைய பாண்டுபுத்திரரைந்துபேரும், வண்ணம்
மாது உம் – வண்ணமகளாகிய திரௌபதியும், தனித்து எண்ணி – தனியாக
இருந்து இரகசியமாக ஆலோசித்து, பர காய சரிதர் போல – பரகாயப்
பிரவேசஞ் செய்தவர்கள்போல, புகல் அரிய பழைய தம் வடிவம் கொண்டார் –
வருணித்துச்சொல்லுதற்கு அருமையாகவுள்ள பழமையான தங்களது
நிசரூபத்தை யடைந்தார்கள்; போன பகலவன் – அஸ்தமித்த சூரியன், உதயம்
பொருப்பில் மீண்டான் – திரும்பி உதயகிரியில் வந்தான் [உதித்தான்]; (எ –
று.)-மற்று – அசை.

      மிகச்சிறந்தவர்களாகிய பாண்டவர்களையும் திரௌபதியையும் தன் கீழ்
அடங்கிய பரிவாரங்களாகக் கொண்டிருந்ததையும், தருமபுத்திரனைக்
கவறுகொண்டு அடித்ததையுங் கருதி விராடன் மன நடுங்கினன்.  உரைத்தளவு
– தொகுத்தல்.  நெகிழ்ச்சியும் – மனநடுக்கத்தாலானதே.  மகிழ்ச்சி –
பாண்டவர் தன்னிடத்து வாழுமாறு தான் பாக்கியஞ்செய்திருந்ததைக்
கருதியதனாலாகியது.  மாலைப்பொழுதில் விளங்குகின்ற சூரியனது இயற்கைச்
சிவப்பைப் பகற்பொழுதிற் போர்க்களத்தினின்று எழுந்த புழுதி
படிந்ததனாலாகியதாகவும், இயல்பில் அஸ்தமிப்பதை அப்புழுதி நீங்க
மேல்கடலிற் குளிப்பதற்குச்சென்றதாகவும் வருணித்தவாறாம்;
தற்குறிப்பேற்றவணி. பரகாயசரிதர் – தமது உடம்பை விட்டு
வேறோருடம்பிற்புகுந்திருந்து மீண்டும் தமது உடம்பில் வருபவர்; இது,
ஒருவகை யோகசித்தி:  கூடுவிட்டுக் கூடுபாய்தலெனப்படும்.  

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading