அன்ன நாளினில் மன்னவன் தேவியாம் அன்ன மென் நடை,
ஆர் அமுது அன்ன சொல்,
சொன்ன சாயல், சுதேட்டிணைதன் திருத் துணைவர் நூற்று
ஒருநால்வரில், தோற்றமும்,
மன்னும் ஆண்மையும், தேசும், சிறந்துளான்; வரூதினிக்குத்
தலைவன்; முன் தோன்றிய
கன்னல் வேள் அனையான்;-தன் துணைவியைக் காண
வந்தனன்,-காண்தகு மேனியான்.1.-கீசகன் சுதேஷ்ணையைக்காண வருதல்
அன்ன நாளினில் – அந்தக் காலத்திலே, மன்னவன் தேவி
ஆம்-விராடராசனுடைய மனைவியாகிய, அன்னம் மெல் நடை-
அன்னப்பறவையினதுபோன்ற மெல்லிய நடையையும், ஆர் அமுது அன்ன
சொல்-கிடைத்தற்கு அரிய தேவாமிருதம் போன்ற [இனிய] சொல்லையும்,
சொன்னம் சாயல்-ஸ்வர்ணம்போன்ற உடலொளியையுமுடைய,சுதேட்டிணை தன்
– சுதேட்டிணை யென்பாளுடைய, திருத்துணைவர் நூற்றொருநால்வரில் –
சிறந்த உடன் பிறந்தவர்கள் நூற்றுநால்வருக் குள்ளே, – தோற்றம்உம் –
(கம்பீரமாகக் காணப்படுங்) காட்சியும், மன்னும் ஆண்மைஉம் –
நிலையாகப்பொருந்திய பராக்கிரமமும், தேசுஉம்-ஒளியும், சிறந்துளான்-
மிக்குள்ளவனும், வரூதினுக்கு தலைவன்-(விராடனுடைய) சேனைக்குத்
தலைவனும், முன்தோன்றிய கன்னல் வேள் அனையான் – (சிவபெருமானால்
உடலெரிந்து போவதற்கு) முன் வடிவத்தோடு காணப்பட்ட
கரும்புவில்லையேந்திய மன்மதனை யொத்தவனும், காண்தகு மேனியான் –
காணத்தக்க [மிக அழகிய ] உடம்பை யுடையவனுமான கீசகன், தன்
துணைவியை – தன்னுடன்பிறந்தவளான சதேஷ்ணையை, காண – பார்ப்பதற்கு,
வந்தனன்-; (எ – று.)-தேசு – புகழுமாம்.
ஸூதவமிசத்திற்சேர்ந்த கேகயனுக்கு மாளவியென்ற ஒரு பாரியையும்,
அவள் தங்கை மற்றொருபாரியையுமாக இருந்தனர்: மூத்தவளான
மாளவியினிடத்துக் கீசகனும் உபகீசகர் நூற்றைவரும் தோன்றினர்: இவர்கள்
காலேயரென்று பிரசித்தரான அசுரரின் அமிசமானவர்: இவர்களிற் கீசகன்
பாணனுடைய அமிசமானவன்: மாளவியின் தங்கையினிடத்துப் பிறந்தவள்
சுதேஷ்ணையென்பவள். மத்ஸ்யதேசாதிபதியான விராடன்மனைவி சுரதை
யென்பவள் இறந்துவிடவே, அந்த விராடன் இந்தச்சுதேஷ்ணையை
மணந்தனன்: மைத்துனன்மார்களாகிய கீசகர்கள் சிறுதாயின்பெண்ணான
சுதேஷ்ணையோடு மச்சநாட்டை யடைந்தனர்: கீசகன் விராடனிடம்
சேனாபதியாயிருந்து பலநாடுகளையும் அம்மன்னவனுக்கு வென்று தந்தானென்ற
இவ்விவரத்தை முதனூலா லறிக. முதனூலுக்கு ஏற்ப, நூற்றொருநால்வரில்
என்ற இடத்து நூற்றினினறுவரில் என்றாற் போன்று பாடமிருக்கலாமென்று
தோன்றுகின்றது.
முதற்பத்தொன்பதுகவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் ஐந்தாஞ்சீரும்
மாச்சீர்களும், மற்றையவை விளச்சீர்களுமாகி வந்த கழிநெடிலடிநான்குகொண்ட
எண்சீராசிரிய விருத்தங்கள்.
தம்பி, அப் பெருந் தையலை நூபுரத் தாளின் வீழ்ந்து,
தகவுடன் மீடலும்,
அம்பரத்தவர் கற்பகக் கா நிகர், அந்த அந்தப்புரத்து,
அகன் காவினில்,
வெம் புகர்க் களிற்று ஐவர்தம் தேவியாம் விரதசாரிணி,
மென் மலர் கொய்து, இளங்
கொம்பொடு ஒத்து, இடை சோரப் பணைத்த பொற்
கொங்கையாள், இவன் முன்னர்க் குறுகினாள்.2.-தமக்கையைவணங்கிக் கீசகன்மீள்கையில், விரதசாரிணியென்ற
திரௌபதிபூக்கொய்துகொண்டுஇவன்முன் முடுகுதல்
தம்பி-சுதேஷ்ணையின் தம்பியான கீசகன், அ
பெருந்தையலை-பெருமையுள்ள அந்தச்சுதேஷ்ணையை, நூபுரம் தாளின்
வீழ்ந்து-நூபுரமணிந்த பாதங்களிலே வணங்கி, தகவுடன்-பெருமை
யோடு,மீடலும்-மீளாநிற்கையில்,-அம்பரத்தவர் கற்பகம் கா நிகர் அந்த
அந்தப்புரத்து அகல் காவினில்-தேவலோகத்தவரின் கற்பகச்
சோலையையொத்த அந்த அந்தப்புரத்தைச்சார்ந்த அகன்றுள்ள சோலையிலே,
மெல் மலர் கொய்து-மெல்லிய மலர்களைப் பறித்துக் கொண்டு, வெம் புகர்
களிறு ஐவர்தம் தேவி ஆம் விரதசாரிணி – விரும்பத்தக்க
முகப்புள்ளிகளையுடைய ஆண்யானை போன்றவரான பஞ்சபாண்டவரின்
மனைவியாகிய விரதசாரிணியென்கிற, இளங்கொம்பொடுஒத்து-
இளங்கொம்புபோன்று, இடை சோர பணைத்த – இடுப்பானது ஒல்கிநிற்குமாறு
பருத்துள்ள, பொன் கொங்கையாள் – அழகிய ஸ்தநங்களையுடையவள், இவன்
முன்னல்-இந்தக்கீசகனுடைய முன்னிலையிலே, குறுகினாள்-நெருங்கினாள்;
(எ -று.)
தமக்கையைப்பணிந்துவிட்டுக் கீசகன் மீள்கையில், அந்தப்புரத்துச்
சோலையில் பூப்பறித்துக்கொண்டுமீண்ட விரதசாரிணியென்ற திரௌபதிக்கு
அவன் முன்னர்வருமாறு நேர்ந்ததென்க. அந்தப்புரம்-ராஜஸ்திரீகள்
வசிக்குமிடம்.
இயற்கை ஆன கவினுடைப் பாவையை இறைவன் தேவிக்கு
இளையவன் கண்டனன்;
செயற்கை ஆம் நலம் கண்டிலன்; ‘யார்கொல் இத் தெரிவை?’
என்று தன் சிந்தையின் நோக்கினான்;
மயற்கையால் அழிந்தான், ஐம்புலன்களும்; வழக்கு ஒழிந்து
மதி மருண்டான்; இணைக்
கயல் கையான், அக் கயல்தடங் கண்ணியைக் கண்ட
காட்சியில், காமுகன் ஆகியே,3.-கீசகன் திரௌபதியைக்கண்டதும் அவள்மீது
மோகங்கொள்ளுதல்.
இணை கயல் கையான்-இரட்டைக்கயல்மீன் இரேகையைக்
கையிலே யுடையவனாகிய, இறைவன் தேவிக்கு இளையவன் –
விராடராசனுடைய மனைவிக்குத் தம்பியாகிய கீசகன்,- செய்றகை ஆம் நலன்-
(ஆடைஆபரணம் முதலியவற்றால் தோன்றும்) செயற்கையான அழகை,
கண்டிலன்-காணாதவனாகி,-இயற்கை ஆன கவின் உடை பாவையை –
இயற்கையழகை யுடையவளான திரௌபதியை, கண்டனன்-கண்டான்: அ கயல்
தடங்கண்ணியை – கயல்மீன்போன்ற விசாலமான கண்களையுடையவளான
அந்தவிரதசாரிணியை, கண்ட – (அங்ஙனம்) பார்த்த, காட்சியில் –
காட்சிமாத்திரத்திலேயே, காமுகன் ஆகி-, இ தெரிவை யார்கொல் என்று தன்
சிந்தையின் நோக்கினான்-ழுஇந்தமாது யாவளோ?ழு என்று தன் மனத்திலே நாடி,-
மயற்கையால் – காமமோகத்தினால், அழிந்தான் – மனமழிந்து,
ஐம்புலன்கள்உம் வழக்கு ஒழிந்து – (ஐம்பொறிகளும்) ஐம்புலன்களின்மேற்
செல்லுதல் நீங்கி, மதி மருண்டான் – புத்தியில் மயக்கங்கொண்டான்; (எ – று.)
மகாவீர னானதால், உத்தமலட்சணமான இணைக்கயலிரேகை கீசகன்
கையி லமைந்தது.
அருகு நின்ற மகளிரை, ‘மற்று இவள் ஆர்கொல்?’ என்ன
அறியான் வினவினான்;
வரி நெடுங் கண் மகளிரும், ‘மாதரார், வண்ண மா மகள்’
என்றனர்; மையலால்,
உருகுகின்ற அக் காளையும், நாணம் உற்று ஒடுங்கி நின்ற
உயர் தவப் பாவைதன்
இரு பதங்களில் வீழ்ந்து, ‘எனது ஆவி நீ!’ என்று மீளவும்
எத்தனை கூறினான்!5.-கீசகன் அவளைஅருகிருந்தாரால் இன்னாளென அறிந்து,
அவள்காலில்விழுந்து காதலாற் பல கூறுதல்.
அறியான் – (அந்தத்திரௌபதியை இன்னாளென்று)
அறியாதவனான கீசகன், மற்று-பின்பு, அருகுநின்ற – (அங்குச்)
சமீபத்திலேயிருந்த, மகளிரை – மாதராரைநோக்கி, ழுஇவள் ஆர்கொல்-?ழு என்ன
– என்று, வினவினான்-விசாரித்தான்; வரி நெடுங்கண் மகளிர்உம்-
செவ்வரிபரந்த நெடியகண்களையுடையரான (வினாவப்பட்ட) மகளிர்களும்,
மாதரார் வண்ணமாமகள் என்றனர் – (இவள்) மாதரசியான சுதேஷ்ணைக்கு
அலங்காரஞ்செய்யும் சிறந்த மகள் என்று தெரிவித்தனர்: மையலால்
உருகுகின்ற அ காளைஉம் – காமமயக்கத்தால் மனமுருகுகின்ற அந்த
இளவெருதுபோன்றவனான கீசகனும்,நாணம் உற்று ஒடுங்கி நின்ற உயர் தவம்
பாவைதன் – நாணமடைந்து (இவனால் என்ன தீமை விளையுமோ என்ற
அச்சத்தினால்) உடல்குன்றி நின்ற சிறந்த நல்வினையையுடைய அந்தத்
திரௌபதியின், இரு பதங்களில் வீழ்ந்து – இரண்டு கால்களிலே (தன்
சிரசுபடும்படி) விழுந்து கும்பிட்டு, ழுநீ எனது ஆவி – நீ என்னுடைய
உயிர்போல்வாய்,ழு என்று – என்றுசொல்லி, – மீளஉம் – பின்னும், எத்தனை
கூறினான் – எத்தனையோ வார்த்தைகளைச் சொன்னான்; (எ – று.)
காமப்பித்துக்கொண்டு அந்தக்கீசகன் சொன்னவை அனுவதித்தற்கும்
தகாதன என்ற காரணத்தால், அவற்றை விவரியாமல், ழுஎத்தனை கூறினான்ழு
என்று கூறியொழிந்தார். என்று நின்றங்கினியன கூறினான் என்றும் பாடம்
கூறுகின்ற மொழிகளுக்கு உத்தரம் கொடாது, நின்றது ஒர்
கொம்பரின்வாய் மறைந்து,
‘ஏறுகின்ற பழிகளும், பாவமும், இம்மைதானும், மறுமையும்,
பார்த்திலை;
மாறுகின்றிலை, சொல்லத் தகாத புன் மாற்றம், இன்னமும்;
மன்னுயிர் யாவும் வந்து,
ஆறுகின்ற குடை நிழல் வேந்தனுக்கு அழிவு செய்தி;
அறிவிலி போலும், நீ!6.-இதுவும் அடுத்த கவியும் -ஒருதொடர்:கீசகனைப் பழித்தும்
மருட்டியும்திரௌபதிகூறியவற்றைத் தெரிவிக்கும்.
கூறுகின்ற – (அந்தக்கீசகன்) சொல்லுகிற, மொழிகளுக்கு –
வார்த்தைகட்கு, உத்தரம் கொடாது – மறுமொழி தராமல், நின்றது ஒர்
கொம்பரின்வாய் மறைந்து – அருகேயிருந்த ஒருமரக்கிளையிலே
மறைந்துகொண்டு, (திரௌபதி அந்தக்கீசகனைநோக்கிப் பின்வருமாறு
கூறலானாள்):ழுபழிகளும் பாவமும்-, ஏறுகின்ற-(உனக்கு)மிகுகின்றன: இம்மை
தான்உம்-இவ்வுலகத்தில் விளைவதையும், மறுமைஉம் – மறுபிறப்பில்
விளையப்போவதையும், பார்த்திலை-(நீ) ஆலோசித்தாயில்லை: சொல்ல தகாத
புல் மாற்றம்-சொல்லுதற்குத் தகாத அற்பவார்த்தைகளை, இன்னமும்-,
மாறுகின்றிலை-(சொல்லுவதினின்றும்) நீங்குகின்றாயில்லை: (நீ இவ்வாறு
இருந்தால்), மன் உயிர் யாஉம் வந்து ஆறுகின்ற குடை நிழல் வேந்தனுக்கு –
(உலகத்தில்) நிலைபெற்ற பிராணிகளெல்லாம் வந்து இளைப்பாறுதற்கு இடமான
வெண்கொற்றக்குடைநிழலையுடைய விராடனுக்கு, அழிவு – நாசத்தை, செய்தி –
செய்கின்றவனாவாய்: நீ-, அறிவிலி போலும் – அறிவுகெட்டவன் போலக்
காண்கின்றாய்; பிறனில்லாளை விரும்புவதனால் இம்மையிற் பழியும் மறுமையிற்
பாவமும்விளையு மாதலால், ழுஇம்மைதானும் மறுமையும் பார்த்திலைழு என்றாள்:
இதில்இம்மையில் என்கணவனாலிறந்து மறுமையில் தீவினையும் நுகர்வாயென்ற
பொருளும் தோன்றும். இவனுடைய அநியாயத்தால். அரசனுக்கே
தீங்குவிளையக் கூடு மென்று அஞ்சினாள். ஏறுகின்ற -ழுஅன்ழு
சாரியைபெறாதமுற்று
மார சாயகத்தால் உயிர் மாளினும், வசை இலாத
மரபின் வந்தோர், பிறர்
தாரம் ஆனவர்தம் முகம் பார்ப்பரோ? தக்கவர்க்குத்
தகவு இவையே கொலாம்?
சோரன் ஆதலின் சொற்றாய்; இனித் தவிர்; சுரேசர் ஐவர்தம்
காவல் என் தோள் இணை;
வீர! போ; என் அருகு உறில், ஆவி போம், விழித்து இமைக்கும்
முன்!’ என்று விளம்பினாள்.
மார(ன்) சாயகத்தால் – மன்மதபாணத்தினால்,
உயிர்மாளின்உம்- உயிர் போவதாயிருந்தாலும் [இறப்புநேர்வதானாலும்], வசை
இலாத மரபின்வந்தோர் – குற்றமற்ற வமிசத்திற் பிறந்தவர், பிறர் தாரம்
ஆனவர் தம் முகம்பார்ப்பர்ஓ – அயலாருடைய மனைவியானவளின்
முகத்தைக் கண்ணெடுத்துப்பார்த்தலேனுஞ் செய்வரோ? தக்கவர்க்கு –
யோக்கியர்கட்கு, தகவு -நற்குணங்கள், இவை ஏ கொல்-இவ்வாறு
பிறர்மனையை விரும்புதல்முதலியனவோ தாம்? சோரன் ஆதலின் –
கள்ளத்தன முடையாயாதலால்,சொற்றாய் – (நீ இவ்வாறான வார்த்தைகளைச்)
சொன்னாய்: இனி-, தவிர் -(இவ்வாறானபேச்சை) ஒழிவாய்: என் தோள்
இணை – என்னுடைய இரண்டுதோள்களும், சுரேசர் ஐவர் தம்-சிறந்ததேவர்
ஐவர்களின், காவல் -பாதுகாவலிலுள்ளன; வீர – வீரனே! போ-அப்பாற்போ:
என் அருகு உறில் -என்னருகேவந்தாலோ, விழித்து இமைக்கும் முன் –
கண்ணை மூடித் திறக்குங்காலவளவைக்குள், ஆவி போம் – உன்னுயிர்
ஒழிந்திடும், என்று-,விளம்பினாள்-சொன்னாள்; (எ – று.) ஆம் – அசை.
விழித்திமைக்குமுன் போ என்று இயைத்தலும் ஒன்று. கந்தருவர்
காவல்புரி கற்புடையவள் என்று வந்ததற்கு ஏற்ப, சுரேசர் என்பதும் கந்தருவர்
என்ற பொருளைத் தருமென்க.
பேதை இப்படிக் கூறவும், காதல் நோய் பெருகு சிந்தையன்
பின்னையும், முன்பு உறா,
‘ஆதரத்து எனது ஆர் உயிர் போகினும் அமையும்’ என்று,
அவள் அம் புயச் சீறடி-
மீது நெற்றி படத் தொழுதான்; வடி வேற்கணாளும்
வெகுண்டு, விரைவினில்,
தூதுளங்கனி வாய், முத்த வாள் நகை, சுதேட்டிணைப்
பெயராளுழைத் துன்னினாள்.8.-திரௌபதி கடிந்துகூறவும்கீசகன காலில் விழுந்து
வேண்ட, அவள்சுதேஷ்ணையிடஞ் சேர்தல்.
பேதை-மடவரலான திரௌபதி, இப்படி கூறஉம் – இவ்வாறு
(கீசகன்செயலைக் கண்டித்துச்) செல்லவும், காதல் நோய்பெருகு சிந்தையன்-
ஆசைநோய் விஞ்சிய மனத்தையுடையவனாய்,-(கீசகன்),-பின்னைஉம் –
பின்னும், முன்பு உறா – (அவளுடைய) முன்னே வந்து, ழுஆதரத்து எனது
ஆர்உயிர்போகின்உம் அமையும்-காதல் காரணமாக எனது அருமையான உயிர்
இறப்பதானாலும் தகும்,ழு என்று – என்று சொல்லி, அவள் அம்புயம் சிறு
அடிமீது – அந்தத்திரௌபதியின் தாமரைமலர்போன்ற சிறிய பாதங்களின்மேல்,
நெற்றி படதொழுதான் – (தன்) நெற்றிபட வணங்கினான்: வடிவேல்கணாள்
உம் – கூரிய வேற்படைபோன்ற கண்களையுடையளான அந்தத் திரௌபதியும்,
வெகுண்டு – கோபங்கொண்டு,-தூதுளை கனிவாய் முத்தம் வாள் நகை
சுதேட்டிணைப் பெயராளுழை – தூதுளம் பழம்போன்ற சிவந்த வாயையும்
முத்துப்போன்று ஒளிபொருந்திய பற்களையுமுடையளான சுதேஷ்ணை
யென்பாளிடத்தில், விரைவினில் துன்னினாள் – விரைவாகப் போய்ச்சேர்ந்தாள்;
(எ – று.)-முன்பு உறா ஆதரத்து என்று என இயைத்து – இதற்கு முன்பில்லாத
காதலோடு என்றுகூறி எனினுமாம்.
நடுங்கும் மெய்யினள், பேதுறும் நெஞ்சினள், நாணும் நீர்மையள்,
நாவினுள் நீர் இலாது,
ஒடுங்கும் மென்மையள், தன்மையினால் புனல் உகுத்த
கண்ணினள், ஓவியம் போன்று உளாள்,-
‘கடுங் கண் யானைப் பிடர் இருந்து இந் நிலம் காக்கும்
வெண்குடைக் காவலன் தேவி! கேள்:-
தொடுங் கழல் கழலான் நின் துணைவன் எற் சுட்டி
ஆயிரம் சொல்லல சொல்லினான்;9.-சென்ற திரௌபதிதன்வருத்தம் தோன்றநின்று
அவளிடத்து நிகழ்ந்ததுகூறுதல்.
இரண்டு கவிகள் – ஒருதொடர்.
(இ -ள்.) ஓவியம் போன்றுஉளாள்-சித்திரப்பதுமை
போன்றுள்ளவளாகியஅந்தத் திரௌபதி,-நடுங்கும் மெய்யினள்-(அச்சத்தினால்)
நடுக்கமடைந்தஉடம்பையுடையவளும், பேதுறு நெஞ்சினள்-கலங்கிய மனத்தை
யுடையவளும்,நாணும் நீர்மையள் – நாணுகின்ற தன்மையையுடையவளும்,
நாவினுள் நீர்இலாது ஒடுங்கும் மென்மையள் – (தனக்கு நேர்ந்திருக்கின்ற
அவஸ்தையைஎண்ணித் தன்) நாவினிடத்து நீரூறுதலுமில்லாமல்(வறண்டுபோக)
ஒடுங்குதற்குக்காரணமான மென்மைத்தன்மை யுடையவளும், தன்மையினால் –
(மெல்லியலான) தன்மைக்குஏற்ப, புனல் உகுத்த கண்ணினள் –
நீரைச்சிந்துகின்ற கண்களையுடையவளுமாய்,-கடுங்கண் யானை பிடர் இருந்து
இ நிலம் காக்கும் வெள் குடை காவலன் தேவி – கொடிய கண்களையுடைய
யானையின் பிடரியிலே யிருந்துகொண்டு இந்தப்பூவுலகைக் காக்குந்
தன்மையுள்ள வெண்கொற்றக்குடையையுடைய அரசனுடைய மனைவியே! கேள்
– (நிகழ்ந்ததைக்) கேட்பாயாக: தொடும் கழல் கழலான்-அணிந்த வீரக்கழலை
யுடைய பாதங்களை யுடையனான, நின் துணைவன் – உன்னுடன் பிறந்தவன்,
என் சுட்டி – என்னைக் குறித்து, சொல் அல ஆயிரம் சொல்லினான் –
சொல்லத்தகாதனவான பலவார்த்தைகளைச் சொன்னான்; (எ – று.)
முதலிரண்டடிகள்-அந்தத்திரௌபதிக்கு அச்சத்தினால் தோன்றிய
மெய்ப்பாடுகளை விளக்குவன. மூன்றாமடி – நீதிநெறிநடத்தும் மன்னவனுக்கு
நீ மனைவி யாதலால், அநீதிநடவாமல்; பார்க்கவேண்டுவது உனக்கும்
பொறுப்பே யென்பதைக் குறிப்பிக்கும்.
விரதசாரிணி என்பதும், தேவர் என் மெய் புரக்கும்
விரதமும், இங்கு உனக்கு
இரதம் ஆக வர மனைக்கு எய்தும்முன், இயம்பினேன்;
எனை யாவரும் இச்சியார்;
சுரதம் ஆடும் மகளிரைத் தேடி, நின் துணைவன்
வேட்கையும், சோகமும், மாற்றிடு;
சரதம் ஆக நினையாது ஒழி; நெறி தப்பில், ஆர் உயிர்
தப்பும்!’ என்று ஓதினாள்.10.-இனிச்செய்யவேண்டுவது இன்ன தென்றும்,நெறிதவறின்
இன்னது விளையுமென்றும் அந்தத்திரௌபதி கூறுதல்.
விரதசாரிணி என்பதுஉம் – (என்பெயர்) விரதசாரிணி
யென்பதையும், தேவர் என் மெய் புரக்கும் விரதம்உம் – தேவர்கள்
என்உடலைக் காக்கின்ற கொள்கையையும், இங்கு – இங்குள்ள, உனக்கு-,
இரதம் ஆக – இனிமையாக, வரம் மனைக்கு எய்தும் முன் – (உன்னுடைய)
சிறந்த வீட்டில் (வண்ணமகளாய்ச்) சேர்தற்குமுன்னம், இயம்பினேன் –
சொல்லியுள்ளேனே: (இப்படியிருப்பதனால்தான்), எனை – என்னை, யாவர்உம்
– எவரும், இச்சியார் – விரும்பமாட்டார்: (ஆகையால்), சுரதம் ஆடும்
மகளிரை – (விலைப்பொருட்டாகப்) புணர்ச்சியை நிகழ்த்துகின்ற வேசியரை,
தேடி-, நின் துணைவன் – உன்தம்பியின், வேட்கைஉம் – ஆசையையும்,
சோகம்உம் – (மன்மதனால் நிகழ்ந்துள்ள) வருத்தத்தையும், மாற்றிடு –
மாறச்செய்: சரதம் – ஆக – திண்ணமாக, நினையாது ஒழி – (என்னால்
அவனுடைய வேட்கையையும் சோகத்தையும் போக்கலா மென்று) நினையாது
தவிர்வாய்: நெறி தப்பில் – முறைமை தவறி (ஏதேனும்) நிகழுமானால், ஆர்
உயிர் தப்பும் – (உன் தம்பியின்) அரியஉயிரே அழிந்திடும், என்று -, ஓதினாள்
– கூறினாள், (அந்தத் திரௌபதி); (எ – று.)
விரதசாரிணி என்பது-நல்லொழுக்கத்துடன் நடப்பவ ளென்று காரணப்
பொருள்படும். என்பெயரினாலேயே யான் எப்படிப்பட்ட தன்மையுடையவ
ளென்பதை நீ அறிந்திடலாமேயென்பது, குறிப்பு. ஸீரம் – வடசொல்
கேகயங்கள் எனும் எழில் சாயலாள் கிளந்த வாசகம்
கேட்டு, இடிஏறு உறும்
நாகம் என்ன நடுங்கி, அப் பூங்கொடி நயன நீர் துடைத்து,
‘உற்றது நன்று!’ எனா,
வேகமுற்ற மனத்தொடு தம்பியை மிக முனிந்து, தன் வீடு
அணுகாவகை, ‘ஏகுக!’ என்றனள்;என்றலும்,
சோகமோடு ஏகினான், அறம் பாவம் என்று எண்ணலான்.11.-திரௌபதியின்வாசகங்கேட்டுச்சுதேஷ்ணை அவள்கண்ணீர்
துடைத்து ‘என்வீடணுகாவகைபோ’ என்று தம்பியை
முனிதல்.
கேகயங்கள் எனும்-கேகயப்பறவை யென்று சொல்லத்தக்க,
எழில்-அழகிய, சாயலாள்-தோற்றத்தை யுடையவளான திரௌபதி, கிளந்த –
சொன்ன, வாசகம்-வார்த்தையை, கேட்டு-, (சுதேஷ்ணை),-இடிஏறு உறும் –
பேரிடியினோசையைக் கேட்டல் பொருந்திய, நாகம் என்ன – பாம்புபோல,
நடுங்கி-, அ பூங் கொடி நயனம் நீர் துடைத்து – அந்தப் பூங்கொடி போன்ற
திரௌபதியின் கண்ணீரைத் துடைத்து, ‘உற்றது-நேர்ந்த நிகழ்ச்சி, நன்று –
நன்றாகவுள்ளது,’ எனா – என்றுசொல்லி, வேகம் உற்ற – கோபா
வேசம் மிகுந்த, மனத்தொடு – மனத்துடனே, தம்பியை – கீசகனை, மிக
முனிந்து – மிகவும் கோபித்து, தன் வீடு அணுகா வகை – (இனித்) தன்
வீட்டைச்சேராதபடி, ‘ஏகுக – போய்விடுவாயாக,’ என்றனள் – என்று கூறினாள்:
என்றலும் – என்று சொன்னவுடனே, அறம் பாவம் என்று எண்ணலான் –
(இந்தச்செயல்) புண்ணியம் (விளைப்பது, இது) பாவம் (தருவது) என்று
ஆலோசித்த லில்லாதவனாகிய அந்தக்கீசகன், சோகமோடு – துயரத்தோடு,
ஏகினான் – (தன்வீட்டுக்குச்) சென்றான்; (எ – று.)
இடியேற்றைக்கேட்ட நாகம் நடுங்குமென்பது, நூற்கொள்கை:
‘விரிநிறநாகம் விடருளதேனு, முருமின் கடுஞ்சினஞ் சேணின்று முட்கும்”
என்றது, நாலடி. கேகயம் – மயில். அப்பூங்கொடி என்பது சுதேஷ்ணையைச்
சுட்டுவதாயின், நயனம் – (திரௌபதியின்) நயனம் என்க.
சென்று தன் மனை புக்கபின், மன்மதன் செருவில் நொந்து
அழி சிந்தையன் ஆய் மலர்
மன்றல் மெல் அணை வீழும்; ‘வெம் பாலையால் வகுத்ததோ,
இம் மலர் அணைதான்!’ எனும்;
தென்றல்தன்னையும் ‘தீ’ எனும்; திங்களைத் ‘தினகரன்கொல்?’
என்று ஏங்கும்; செயல் அழிந்து,
அன்று அவன் கருங் கங்குலில் பட்ட பாடு அவனை
அல்லதை யார் பாடுவார்களே!12.-அற்றைநாளிராத்திரிகீசகன் பட்ட மன்மதாவத்தை.
சென்று-போய், தன் மனை புக்க பின் – தன் வீட்டினுள்ளே
சேர்ந்தபிறகு, மன்மதன் செருவில் – மன்மதன் செய்யும் போரிலே, நொந்து –
வருந்தி, அழி – அழிந்த, சிந்தையன் ஆய் – மனத்தையுடையவனாய்,-மலர்
மன்றல் மெல் அணை வீழும் – மலர்கொண்டு பரப்பிய நறுமணமுள்ள
மெல்லிய படுக்கையிலே விழுவான்: ழுஇ மலர் அணை தான் – இந்தப்
பூப்படுக்கை, வெம்பாலையால் வகுத்ததுஓ – வெப்பமுள்ள பாலைநிலத்தா
லியன்றதோ?ழு எனும் – என்பான்: தென்றல் தன்னைஉம் – தென்றற்
காற்றையும், தீ எனும் – தீயென்று சொல்வான்: திங்களை – சந்திரனைப்
பார்த்து, (இவன்), தினகரன் கொல் – சூரியனேயோ!ழு என்று – என்றுகருதி,
ஏங்கும்-ஏக்கமடைவான்: செயல் அழிந்து – செய்யவேண்டிய தொழில்
இன்னதென்றுணராது மனகிழ்ந்து, அன்று-அன்றைத்தினம், அவன்-, கருங்
கங்குலில்-கரிய இராப்போதிலே, பட்ட – அடைந்த, பாடு – வருத்தத்தை,
அவனை அல்லது – அவனை யல்லாமல், யார்-(வேறு)யாவர், படுவார்கள்ஏ-
அனுபவிப்பார்களோ? (எ – று.)
பாலை-மிகவும் வெம்மையையுடைய நிலமாதலால், தனக்கு
மிக்கவெப்பஞ்செய்யும் மலரணையை, ழுவெம்பாலையால் வகுத்ததோ
இம்மலரணைதான்ழு என்னலானான். காமமயக்கம் கொள்பவர்க்கு,
குளிர்ந்திருப்பனவான மலரணை திங்கள் தென்றல் முதலியன வெப்பத்தைச்
செய்தல், இயற்கை. அல்லதை ஐ – சாரியை. ழுஅன்றகன் கருங்கங்குலில்ழு
என்றும் பாடம்.
பாவிதன் மனைச் சேடியர் ஆனவர் பலரும் வந்து,
படியுடை மன்னவன்
தேவிதன்னை வணங்கி, அக் காமுகன் சிந்தை நோயும்
செயலும் புகன்று, ‘எழில்
காவி அம் கண்ணவளைத் தனது கண் காணினும்
தணியும், கடுங் காதலும்;
ஆவியும் பெறும்; மெய் அணுகான்; நினது ஆணை’
என்றனர், ஆதரம் ஆற்றுவார்.13.-கீசகனாதரத்தையாற்றநினைந்தஅவன்சேடியர்சுதேஷ்ணை
யிடம்வண்ணமகளைக்கீசகன்கண்டால்தான்ஆவிநிலைக்குமென்று
வேண்டுதல்.
பாவிதன்-பாபிஷ்டனான கீசகனுடைய, மனை-வீட்டிலுள்ள,
சேடியர்ஆனவர் பலர்உம் – பணிப்பெண்கள் பலரும், வந்து-,-படி உடை
மன்னவன் தேவி தன்னை – பூமியைப் பாதுகாத்தலுடைய
விராடமன்னவனுடைய மனைவியை, வணங்கி-, ஆதரம் ஆற்றுவார்-
(அந்தக்கீசகனுடைய) காமவிடாயைத் தணிவிக்க முயல்பவராய்,- அ காமுகன்
சிந்தைநோய்உம் செயல்உம் புகன்று – காமநோய் கொண்டவனான
அந்தக்கீசகனுடைய மனத்திலுள்ள காமநோயையும் (அதற்கு ஏற்ப அவன்
மலரணை முதலியவற்றால் வெப்பங் கொள்ளுஞ்) செய்கையையும் சொல்லி,-
ழுஎழில் காவி அம் கண்ணவளை – அழகிய கருங்குவளைமலர்போலும் அழகிய
கண்களையுடைய அந்த வண்ணமகளை, தனது கண் காணின்உம் –
(அந்தக்கீசகன்) தன் கண்களாற் கண்டாலும், கடுங் காதல்உம் தணியும் –
(அவன்இப்போதுகொண்டுள்ள) கொடியகாதல் தணியப்பெறுவான்: ஆவிஉம்
பெறும் – தன்னுயிரும் இறவாது நிலைத்திருக்கப்பெறுவான்: மெய் அணுகான்
– அவளுடம்பைக் கட்டித் தீண்டான்: (இவ்விஷயத்தில்), நினது ஆணை-,ழு
என்றனர் – என்று கூறினார்கள்; (எ – று.)
பிறர்மனைநச்சுதலென்பது பஞ்சமகாபாதகங்களு ளொன்றாதலால்,
அந்தப்பாதகத்திற்குத் துணிந்த கீசகனை, ழுபாவிழு என்றார். ஆதரம் மாற்றுவார்
என்றும் பிரிக்கலாம். காதலும் ஆவியும் – எச்சவும்மைகள்.
பாசகாரிகள் ஆம் ஐம் புலன்களும் பரிவு கூரப் பரிந்து,
உயர்ந்தோர் புகல்
வாசகாதிகள் கற்றும் தெளிந்திலை; மதன வேதத்தின்
மார்க்கமும் பார்த்திலை;
நாச காலம் வரும்பொழுது, ஆண்மையும், ஞானமும்,
கெடுமோ? நறுந் தார் முடிக்
கீசகா!’ என்று அழுதனள்-அம் மொழி கேட்ட போது,
அக் கிளி நிகர் மென் சொலாள்.14.-அந்தச் சேடியரின்சொல்லைக் கேட்டதும்,
சுதேட்டிணை கீசகன்செயலுக்குவருந்திப் புலம்புதல்.
அ மொழி கேட்ட போது -(சேடியர் சொன்ன) அந்த
வார்த்தை செவிப்பட்டபோது,-அ கிளி நிகர் மெல் சொலாள் – கிளிபோன்று
மென்மையாகப் பேசுபவளான அந்தச்சுதேஷ்ணை,-‘பாசகாரிகள் ஆம்-
மனப்பிணிப்பை யுண்டாக்குவனவான, ஐம்புலன்கள் உம்-(பஞ்சேந்திரியங்கட்கு
உரிய சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும்) ஐந்துவிஷயங்களும், பரிவு
கூர – துன்பத்தை மிகுவிக்க, பரிந்து-(அதனால்) மனம் வருந்தி,-உயர்ந்தோர்
புகல்வாசக ஆதிகள் கற்றுஉம் தெளிந்திலை – பெரியோர் கூறியுள்ள
நீதிவாக்கியங்களையெல்லாம் படித்திருந்தும் மனத்தெளிவு பெற்றாயில்லை:
மதன(ன்) வேதத்தின் மார்க்கம்உம் பார்த்திலை – மன்மதவேதத்தின்
முறைமையையும் காண்கின்றாயில்லை: நறுந் தார் முடி கீசகா –
நறியமாலையையணிந்த முடியையுடைய கீசகனே! நாசகாலம் வரும் பொழுது-
, ஆண்மைஉம் – மனவுறுதியும், ஞானம்உம் – நல்லறிவும், கெடும் ஓ – கெட்டு
விடுமோ?’ என்று – எனச்சொல்லி, அழுதனள் – புலம்பலானாள்; (எ – று.)
பாசம்- பாஸம்: கயிறு என்ற பொருளுள்ள இவ்வடசொல், மனப்பிணிப்புஎன்ற பொருளை இலக்கணையாற் காட்டும். மதனவேதம் –
வாத்ஸ்யாயனம்;அடியோடு தன்மீது விருப்பமில்லாதவரைப் புணரலாகா
தென்பது,மதனவேதத்தின் மார்க்கமாம்.
ஆகுலத்தொடு நெஞ்சம் தளர்ந்து தன் அருகில்
நின்ற அருந்ததியே நிகர்
மீ குலக்கொடிதன் இரு தாள்மிசை வீழ்ந்து, ‘நின்தன்
விழி அருள் உண்டு எனில்,
கோ குலத்தில் உயர்ந்த என் காதலன் கோலும் நீதியும்
குன்றா; எனது உரை
நீ குலைக்கில், அனைத்தும் இன்றே கெடும்; நேரிழாய்!
இது நெஞ்சுறக் கேட்டியால்:15.-மூன்று கவிகள்-ஒருதொடர்:சுதேட்டிணை’நின்கற்புக் குலையா
மல் கீசகனாவிகாக்க,இந்தமாலையைக் கொடுத்துமீள்வாய்’என்று
ஆகுலத்தோடு வண்ணமகளைவேண்டினமையைத்
தெரிவிக்கும்.
(பின்பு அந்தச்சுதேஷ்ணை),- ஆகுலத்தொடு –
வருத்தத்தினால், நெஞ்சம் தளர்ந்து – மனம் சோர்ந்து, தன் அருகில் நின்ற-,
அருந்ததி நிகர் – அருந்ததியை யொத்த, மீ குலம் கொடி தன்-சிறந்த
குடியில்தோன்றிய கொடி போன்றவளான திரௌபதியின், இரு தாள்மிசை
வீழ்ந்து – இரண்டு பாதங்களிலே வணங்கி,- (அவளைநோக்கிப் பின்வருமாறு
கூறலானாள்): நேர் இழாய் – அழகிய ஆபரணங்களை யணிதற்குரியவளே!
நின்தன் – உன்னுடைய, விழி அருள் உண்டு எனில்-கண்ணின் அருள்நோக்கம்
உண்டு என்றால், (அப்போது), கோ குலத்தில் – அரசர்திரளில், உயர்ந்த –
மேம்பட்ட, என் காதலன் – என் கணவனுடைய, கோல்உம் – செங்கோலும்,
நீதி உம்-அரசநீதியும், குன்றா-பழுதுபடா: எனதுஉரை – என் பேச்சை, நீ-,
குலைக்கில்-(செய்யாது) தட்டினால், அனைத்துஉம் – (என் காதலனுடைய
கோலும் நீதியுமாகிய) எல்லாமும், இன்றுஏ கெடும் – இன்றைத்தினமே அழியும்:
இது – (யான்சொல்லிய) இந்தப்பேச்சை, நெஞ்சு உற-மனம் பொருந்த, கேட்டி –
கேட்பாய்; (எ – று.)
நீகீசகனிடத்துப் போய்வரவேணு மென்று நேரே சொல்லுதற்குக் கூசிப்
பூர்வபீடிகையாக இங்ஙனம் சுதேஷ்ணை கூறுகின்றாள். விழியருள்
உண்டெனில் என்பதன் கருத்து – என்மீது கருணை கொண்டு நான்
சொல்வதையேற்றுப் புரிவாயோயானால் என்பது. இது என்று சுட்டியது-
எனதுரை நீ குலைக்கில் அனைத்துமின்றே கெடும் என்பதை. கீசனது
புஜபலத்தினாலேயே விராடன் தேசத்தை இனிது ஆள்கின்றானென்பதுகருதி,
சுதேஷ்ணை இவ்வாறு கூறினாள். ஆல்-ஈற்றசை.
இளையன் ஆதலின், என் இளையோன் மனத்து எண்ணம்
இன்றி இகல் மதன் அம்பினால்
அளையும் மேனியன் ஆகி, நின் மெய்ந் நலம் ஆதரித்து,
இன்று அடாது செய் நீர்மையால்,
விளையுமே கொடு வெம் பழி; இப் பழி விளைவுறாமல்,
விரகின் அக் காதல் நோய்
களையும் ஆறு எண்ணின், ஆங்கு அவன் ஆவியும் காத்து,
நின் பெருங் கற்பையும் காக்குமால்.
என் இளையோன் – என் தம்பி, இளையன் ஆதலின் – (அறிவு
முதிராத) இளமைப்பருவத்தோ னானதனால், மனத்து-, எண்ணம் இன்றி –
ஆலோசனையில்லாமல், இகல் மதன் அம்பினால்- மாறுபாட்டையுடைய
மன்மதனுடைய அம்பினாலே, அளையும்-தொளைக்கப்பெற்று, மேனியன் ஆகி
– உடம்பையுடையவனாய், நின்மெய் நலம்-உனது உடலினாற்பெறலாகும்
இன்பத்தை, ஆதரித்து – விரும்பி, இன்று – இன்றைத்தினம், அடா(த)து –
தகாத செயலை, செய்-செய்யத்தொடங்கிய, நீர்மையால் – தன்மையினால்,
(முடிவில்), கொடு வெம் பழி-மிகக் கொடிய பழி, விளையும்ஏ-உண்டாகுமே:
இ பழி விளைவுஉறாமல்-இந்தப்பழி யுண்டாகாதபடி, விரகின் – தந்திரமாக,
அ காதல்நோய் – (அவனுடைய) அந்த ஆசைநோயை, களையும் ஆறு-
போக்கும்வகையை, எண்ணின் – எண்ணினால், ஆங்கு – அப்போது,
(அச்செயல்), அவன் ஆவிஉம்காத்து – அந்தக்கீசகனுடைய உயிரையுங்
காத்து, நின் பெருங்கற்பைஉம் காக்கும்-; (எ-று.) – ஆல்-தேற்றம்.
திரௌபதியின் மேனியைத் தீண்டினால் பிறர்கற்பை
யழித்தானென்றபழியும், தீண்டாது உயிரொழிந்தால் பிறர்மனை நயந்து உயிர்
நீத்தா னென்ற பழியும் கீசகனுக்கு விளையுமென்னலாம். பழி விளையாமல்
அந்தக்கீசகன் உயிருய்வதற்கு உபாயம் மேலிற் கவியிற் கூறுகிறாள்:
அச்செயலை நீ செய்யவேணுமென்றே பதினைந்தாஞ் செய்யுளில் சுதேஷ்ணை
வேண்டியது.
எண்ணுகின்றனன் யான் ஒன்று; நீ மறாது, எனது வாய்மை
எதிர்கொண்டு, இளையவன்
நண்ணும் இல்லிடைச் சென்று, இந்த நாள்மலர் நறை கொள்
மாலையை நல்கினை மீளுவாய்;
கண்ணின் நின் உருக் காணினும், மற்று அவன் கன்னம்
இன்புறக் கட்டுரை கேட்பினும்,
வண்ண மா மகளே! உயிர் நிற்கும்; நீ வாழி! ஏகி
வருக!’ என வாழ்த்தினாள்.
யான் ஒன்று எண்ணுகின்றனன் – யான் ஒரு வார்த்தையை
ஆலோசித்துச் சொல்லுகின்றேன்:நீ -, மறாது – மறுத்துச்சொல்லாமல், எனது
வாய்மை – எனது வாயிலிருந்து வருவதை, எதிர்கொண்டு – ஏற்றுக்கொண்டு, இளையவன் நண்ணும் இல்லிடை சென்று – (எனது) தம்பி வசிக்கிற
வீட்டினிடத்துப் போய், இந்த நாள் மலர் நறை கொள் மாலையை – இந்தப்
புதியமலர்கொண்டு தொடுத்த நறுமணமுள்ள மாலையை, நல்கினை –
கொடுத்துவிட்டு, (உடனே), மீளுவாய் – திரும்பிவிடுவாய்: அவன் – அந்த
(என் தம்பியான) கீசகன், வண்ணம் மா மகளே – அலங்காரஞ் செய்யுஞ்
சிறந்த பணிப்பெண்ணே! நின் உரு – உன் வடிவத்தை, கண்ணின் காணின்
உம்-, கன்னம் இன்புஉற – காது மகிழ்ச்சியடைய, கட்டுரை கேட்பின்உம்-
(உன்னுடைய) தொடுத்துச் சொல்லும் பேச்சைக் கேட்டாலும், உயிர் நிற்கும்-
(அவனுடைய) உயிர் (உடலில்) தரிக்கும்: ஏகி வருக – போய் வருவாயாக:
நீவாழி – நீ வாழ்வாயாக, என – என்று சொல்லி, (அந்தத் திரௌபதியை),
வாழ்த்தினாள் -; (எ-று.)-மற்று-அசை.
கீசகனிடத்துச் சென்று வருவதனால், நின்கற்பு யாதோரிடையூறுமின்றி
யிருக்கவேணு மென்ற கருத்தினால், ‘நீ வாழி’ என்று வாழ்த்தினாள்.
மொழி அலாத மொழியைச் சுதேட்டிணை மொழிந்த போது,
முதுக்குறைவு உள்ள அப்
பழி இலா மொழிப் பாவை, ‘வெம் பாதகம் பகர்தி; என்னை
வெறாது ஒழி, பாவை! நீ;
அழிவு இலாத பெருங் கிளைக்கு அல்லல் கூர் அழிவு
வந்தது அறிந்திலை’ என்று, தன்
விழிகள் ஆரம் சொரிய, கொடுத்த பூ வேரி மாலைகொண்டு,
ஏகினள், மின் அனாள்.18.-திரௌபதி அந்தச் சுதேஷ்ணை கூறியசொல்லைக் கண்டித்த
படியே வேறு வழியில்லாமையால் அவள்சொற்படி மலர்மாலையைக்
கீசனிடத்துக் கொண்டுபோதல்.
சுதேட்டிணை-, மொழி அலாத மொழியை – சொல்லகாத
பேச்சாகிய அந்தச் சொல்லை, மொழிந்தபோது-,-முதுக்குறைவு உள்ள –
பேரறிவு படைத்த, அ – அந்த, பழி இலாமொழிபாவை – குற்றமில்லாத
பேச்சுக்களையுடைய பெண்ணான திரௌபதி, (சுதேட்டிணையை நோக்கி), –
‘வெம் பாதகம் பகர்தி – கொடியபாவச் செயலைச் சொல்லுகின்றாய்: பாவை
– பிரதிமைபோன்றவளே! (நான் பின்வருமாறு சொல்வது குறித்து), நீ-,
என்னை வெறாது ஒழி – என் மீது வெறுப்புக்கொள்ளாமலிருப்பாயாக:
அழிவு இலாத-அழிதலில்லாத (நல்வாழ்வு வாழ்கின்ற), பெருங் கிளைக்கு –
(உன்னுடைய) பெரிய சுற்றத்துக்கு, அல்லல் கூர் – துன்பம்மிகுதற்குஏதுவான,
அழிவு -, வந்தது-வந்ததை, அறிந்திலை-அறிந்தாயில்லை,’ என்று –
எனச்சொல்லி,-தன் விழிகள்-தனது கண்கள், ஆரம் சொரிய-முத்துப்போன்ற
நீரையுகுக்க,-கொடுத்த-(அந்தச்சுதேஷ்ணை) கொடுத்திட்ட, பூ வேரி மாலை-
மலர் கொண்டு தொடுத்த மணமுள்ள மாலையை, கொண்டு-எடுத்துக்கொண்டு,
மின் அனாள்-மின்னல்போன்ற பேரொளிபடைத்த உடலையுடைய
அந்தத்திரௌபதி, ஏகினள்-செல்லலானாள்; (எ-று.)
நீ சொல்லுகிற வார்த்தையைத் தட்டாமற் செய்யவேண்டுவது
பணிப்பெண்ணாகிய எனக்குக் கடமையென்று செய்கிறேன்: ஆனாலும்,
இதனால் உன்னுடைய தம்பிமார்க்கு நாசமே விளையும்: இதனையறிந்திலை
யென்று மேல்விளையப் போவதை ஆராய்ந்து திரௌபதி கூறின ளென்க.
ஆரம்-கண்ணீருக்கு, உவமவாகுபெயர். சுதேஷ்ணை ‘எனக்குத் தாகமாக
இருத்தலாற் பருகுமாறு சுரையை இந்தப்பாத்திரத்தில் வாங்கிவருக’ என்று
வண்ணமகளை நோக்கிக்கூற, அன்னாள் தடுத்துப்பேச, அந்த இராணி
கட்டாயப்படுத்தியனுப்பினாளென்று முதனூலி லுள்ளது.
ஆண்டு வந்த துருபதன் மா மகள், ‘அடைந்த நாள்
தொட்டு, அமரர் ஒர் ஐவரே
தீண்டல் அன்றி, ஒருவரும் என்னை மெய் தீண்டுவார்
இலை’ என்று என்று செப்பவும்,
நீண்ட செங் கைத் தரணிபன் காதலி நினைவு இலாமல்,
‘நெறி அற்ற தம்பிபால்,
மீண்டும் அவ் வழி ஏகு!’ என்று உரைப்பதே!-விதியை
யாவர் விலக்க வல்லார்களே?19.-திரௌபதியைக்கீசகனிடத்துச் சென்று வரும்படியேவிய
சுதேட்டிணையைக் குறித்த கவிக்கூற்று.
ஆண்டு வந்த-அப்போது வந்த, துருபதன் மா மகள் –
துருபதனுடைய சிறந்த மகளாகிய திரௌபதி, அடைந்த நாள் தொட்டு – (தான்
விராடன்மனைவியிடம் வண்ணமகளாகிச்) சேர்ந்த நாள்முதல், ‘அமரர் ஒர்
ஐவர் ஏ தீண்டல் அன்றி – ஐந்துகந்தருவ தேவர்களே (தன்னைத்)
தீண்டுவதன்றி, ஒருவர்உம் – வேறொருத்தரும், என்னை-, மெய்தீண்டுவார்
இலை-,’ என்று என்று செப்பஉம் – என்று பலமுறை சொல்லியிருக்கவும்,-
நீண்ட செம் கை – (முழந்தாளளவும்) நீண்டுள்ள செவ்விய கையையுடைய,
தரணிபன் காதலி – விராடமன்னவனுடைய மனைவி, நினைவு இலாமல் –
ஆலோசனையில்லாமல், நெறிஅற்ற தம்பிபால் – ஒழுக்கங்கெட்ட தம்பியாகிய
கீசகனிடத்து, மீண்டும்-மறுபடியும், அ வழி-அவனுள்ள இடத்து, ஏகு –
ஏகுவாய், என்றுஉரைப்பதுஏ – என்று (திரௌபதியைநோக்கிச்) சொல்வதா?
[இது தகுதியன்று என்றபடி]: விதியை யாவர் விலக்க வல்லார்கள்-? (எ – று.)
‘விதியை யாவர் விலக்கவல்லார்கள்’ என்ற பொதுப்பொருள் கீழ்க்கூறிய
சிறப்புப்பொருளைச் சமர்த்தித்ததனால், இது வேற்றுப்பொருள்வைப்பணி. விதி
– திரௌபதி வியாஜமாகக் கீசகன் இறக்க வேணுமென்பது
மாது அவள் கீசகன் மனையில் ஏக, அல்
போது அகலவும், அவன் புலம்பல் போகவும்,
பாதம் இல் வன் திறல் பாகன் ஊர்ந்த தேர்
ஆதபன் உதய வெற்பு அணுகினான்அரோ!20.-உதயகாலத்தில்திரௌபதி கீசகன் மனையிலேகுதல்.
மாது அவள் – பெண்ணான அந்தத்திரௌபதி, கீசகன்
மனையில் ஏக(உம்)-கீசகனுடைய மனையிலே செல்லவும், (அவ்வேளையில்),
அல்போது அகலஉம் – இராப்போது கழியவும், அவன் – அந்தக்கீசகனுடைய,
புலம்பல் – தனிமையினாலாகிய துன்பம், போகவும்-,-பாதம் இல் –
காலில்லாதவனான [முடவனான], வல் திறல் – மிக்க சாமர்த்தியத்தையுடைய,
பாகன் – பாகனாகிய அருணனென்பவனால், ஊர்ந்த – செலுத்தப்பெற்ற, தேர் –
தேரின் மீது, ஆதபன் – சூரியன், உதயவெற்பு – உதய மலையிலே,
அணுகினான் – அடைந்தான்; (எ – று.)-அரோ – ஈற்றசை.
தான்காலில்லாதிருக்கையில் ஒற்றைச்சக்கரத்தையுடைய சூரியனது
தேரைஒருநாளிற் பகலும் இரவும் உண்டாகும்படி வெகுவிரைவாகச்
செலுத்துதலால், ழுவன்றிறற் பாகனூர்ந்த தேர்ழு எனப்பட்டது.
இதுமுதல் இருபத்தாறுகவிகள் – பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று
மாச்சீரும், மற்றவை விளச்சீர்களுமாகிய அளவடிநான்கு கொண்ட
கலிவிருத்தங்கள்.
தருக்கிய காமுகன் தகாது சொல்லவே,
உருக் கிளர் சாயலோடு உளம் அழிந்து போய்,
முருக்கு இதழ் வல்லி, தன் முளரிச் செங் கையால்
அருக்கனை இறைஞ்சினாள், அழிவு இல் கற்பினாள்.21.-திரௌபதியைக் கண்டதும்கீசகன் தகாதமொழி சொல்ல,
அவள் சூரியனை வணங்குதல்.
தருக்கிய – வலிமைச்செருக்கைக்கொண்ட, காமுகன் –
காமுகனாகிய கீசகன், தகா (த) து – தகாதவார்த்தைகளை, சொல்லவே-,-அழிவு
இல் கற்பினாள் – அழிதலில்லாத கற்பையுடையவளாகிய, முருக்கு –
பலாசமலர்போன்ற, இதழ் – உதட்டையுடைய, வல்லி – கொடிபோன்றவளான
அந்தத் திரௌபதி,-உரு – (தனது) வடிவத்திலே, கிளர் – விளங்குகின்ற,
சாயலோடு – நிறத்துடனே, உளம் – மனமும், அழிந்து – அழிய, போய்-,-தன்
– தன்னுடைய, முளரி – தாமரைமலர்போன்ற, செங்கையால் – சிவந்த
கையினால், அருக்கனை – சூரியனை, இறைஞ்சினாள் – வணங்கினாள்; (எ –
று.)-சூரியனை வணங்கின படியை அடுத்த செய்யுள் தெரிவிக்கும்.
உலகத்தில் நடப்பதற்கெல்லாம் சாட்சியாகிய தேவதையாதலால்,
சூரியனையிறைஞ்சிக் கூறினான்.
துரங்கம் ஓர் ஏழுடன் சோதி கூர் மணிக்
கரங்கள் ஓர் ஆயிரம் கவினத் தோன்றினாய்!
வரம் கொள்வேன், நின்னை யான்; “மரபு பொன்றும்” என்று
இரங்குறும் என் அகத்து இடரை நீக்குவாய்!’22.-சூரியனைத் தன்னிடரைப்போக்குமாறு திரௌபதி
வேண்டுதல்.
இரண்டுகவிகள் – ஒருதொடர்.
(இ – ள்.) துரங்கம் ஓர் ஏழ் உடன் – ஏழுகுதிரைகளுடனே, சோதிகூர் –
ஒளிமிக்க, ஓர் ஆயிரம் மணி கரங்கள் – அழகிய ஆயிரம் கிரணங்கள், கவின
– விளங்கும்படி, தோன்றினாய்-உதித்துள்ளவனே! நின்னை யான் வரம்
கொள்வேன்-உன்னிடத்துப் பின்வருமாறு நான் வரம் பெறுவேன் [நீ எனக்கு
ஒருவரம் தரவேணு மென்றபடி]: ழுமரபு-என்குலத்தின் பெருமை [கற்புநெறி
கெடாத்தன்மை], பொன்றும்-(இந்தக் கீசகனால்) அழிவுறுமே!ழு என்று-,
இரங்குறும் – வருந்துகின்ற, என் அகத்து-என்மனத்திலுள்ள, இடரை-
துன்பத்தை, நீக்குவாய் – போக்குவாயாக; (எ – று.)
சூரியன் தேர்க்குக் குதிரைகள் ஏழ் என்று சிலவிடத்தும், சூரியன்
குதிரைகள் ஏழில் ஒன்று ஏழ் [ஸப்த] என்றபெயரினது என்று சிலவிடத்தும்
கூறப்பட்டுள்ளது.
என்றுகொண்டு, என்றினைப் பணிந்து, மன்றலால்
கன்றிய கீசகக் கலகன் முன்பு போய்,
மன்றல் அம் தொடையலும் வழங்கி, மெய் வெரீஇ,
நின்றனளால், நிலை நின்ற கற்பினாள்.23.-சூரியனை வேண்டிநின்றதிரௌபதி கீசகன்முன்னர்
மலர்மாலையைக் கொடுத்துவிட்டு நிற்றல்.
என்று கொண்டு – என்றுசொல்லிக்கொண்டு, என்றினை-
சூரியனை, பணிந்து-வணங்கி,- (பின்பு), மன்றலால் – புணர்ச்சி விருப்பினால்,
கன்றிய-வாடிய, கீசகன் கலகன்-கீசகனென்ற கலகஞ்செய்வானது, முன்பு –
முன்னிலையில், போய்-, -மன்றல் அம்தொடையல்உம் வழங்கி –
நறுமணமுள்ள அழகிய பூமாலையையுங் கொடுத்துவிட்டு, மெய் வெரீஇ –
உடல் நடுக்கங் கொண்டு, நின்றனள்-: (யாவளெனில்)-, நிலை நின்ற கற்பினாள்
– உறுதியாகவுள்ள கற்பையுடையவளான திரௌபதி; (எ – று.)
எத்துணைக்கொடியவனாயிருப்பினும் அவன்முன் நிற்கும்போதும் தன்
கற்பைக் கெடாது பாதுகாத்துக்கொள்வது என்ற உறுதியுடன் திரௌபதி நின்றன
ளென்பார் ழுநிலைநின்ற கற்பினாள் நின்றனள்ழு என்றார். கீசகக்காவலன் என்று
பிரதிபேதம். ஆல்-அசை.
காமரு குளிரி, பைங் கதலி மெல் அடை,
தாமரை வளையம், வண் தாது அறா மலர்,
ஆம் முறை அனைத்தும் மெல் அமளிமேல் விரித்து,
ஈம வல் எரியின்மேல் என்ன, வைகினான்.24.-அப்போது கீசகன் படுக்கையி லிருந்தநிலை.காமரு குளிரி – அழகிய குளிர்ச்சியையுடைய, பைங்கதலி
மெல் அடை – இளைய வாழையின் மெல்லிய தளிரிலையும், தாமரைவளையம்
– தாமரைச்சுருளும், வண் தாது அறா மலர் – வளப்பமுள்ள மகரந்தம்
நீங்காத தாமரைமலரும், ஆம் – முதலாகிய, முறை அனைத்துஉம் –
முறைமையாகிய யாவும், மெல் அமளிமேல் விரித்து – மெல்லிய
படுக்கையின்மேற் பரப்பி, ஈமம் வல் எரியின் மேல் என்ன – சுடுகாட்டிற்
சுடுநெருப்பின் மீது (பிணம் இருப்பது) போல, வைகினான்-(தவிப்புற்றுத்)
தங்கியிருந்தான்; (எ – று.)
காமவெப்பத்தைப் பொறுக்கமாட்டாது கீசகன் குளிர்ச்சியை வேண்ட,
ஏவலாளர் சைத்தியோபசாரமாகப் படுக்கையில் வாழைத்தளிர் முதலியவற்றை
யிட்டுவைத்தனராக, அதன்மேற் படுத்திருக்கும் கீசகனுக்கு அப்படுக்கையும்
பெருவெப்பத்தைச் செய்வதனால், ஈமவெரியின்மேற் கிடப்பது போலத்
தவிப்புற்றுக் கிடந்தன னென்கிறார். இவனுக்கு உண்டாகிய காமதாபம்
இவனுயிரையே கொண்டுபோவதற்குக் காரணமா மென்று குறிப்பிக்க, இவனுக்கு
உயிருடனிருக்கும்போதே ஈமவெரியிற் கிடந்தாற்போலுந் தன்மை வாய்த்த
தென்றது. குளிரி – கல்லாரமலரென்பாரும், பீலிக்குஞ்சமென்பாரு முளர்
சாந்தொடு தண் பனிநீரும் தாமமும்
ஏந்திய கரத்தினர், ஏழைமார் பலர்,
காந்திய கனல்மிசை காட்டும் நெய் என,
வேந்தனது உடலகம் வெதும்ப, வீசினார்.25.-பலமாதர் சந்தனம் முதலியவற்றை அவன்தாபந்தணிக்கக்
கருதி வீச, அவையும் வெப்பத்தை மிகுவிப்பன வாதல்
சாந்தொடு – சந்தனமும், தண் பனி நீர்உம் – குளிர்ந்த
பனிநீரும், தாமம்உம் – பூமாலையும், ஏந்திய – தாங்கியுள்ள, கரத்தினர் –
கைகளையுடையவரான, ஏழைமார் பலர் – பலஸ்திரீகள்,-(தாம் ஏந்திய அந்தச்
சாந்துமுதலியவற்றை), காந்திய – பற்றியெரிகின்ற, கனல் மிசை-நெருப்பிலே,
காட்டும்-சொரியப் பெறுகின்ற, நெய் என – நெய்யைப்போல, (ஏற்கெனவே
காமதாபத்தால் வெப்பங்கொண்டுள்ள), வேந்தனது – (கீசகனென்ற)
அரசகுமாரனது, உடல் அகம் – உடம்பு, வெதும்ப – (பின்னும்)
தாபங்கொண்டுஎரியுமாறு, வீசினார் – எறிந்தார்கள்: (எ – று.)
பற்றியெரிகின்ற நெருப்பிற் பெய்யும் நெய் எங்ஙனம் அந்த நெருப்பைப்
பின்னும் பற்றியெரியுமாறு செய்யுமோ, அங்ஙனமே ஏழைமார் கீசகன்மீது
பெய்த சாந்து முதலியவை அவன்காமதாபத்தை மிகுவிக்கலாயின வென்பதாம்.
‘வீசினார்’ என்ற சொல்லினாற்றலால், அவனருகே வந்து சந்தனத்தை யப்புதல்
முதலியன செய்யவும் இயலாதபடி அவன்மேனி வெப்பம் மிக்கிருந்த தென்பது
பெறப்படும். கீசகனுடைய விரகதாபத்தைச் சந்தனம் முதலியன மிகுவித்தன
என்று கூறவேண்டிய இடத்தில் ‘காட்டும்’ என்று பிரயோகித்திருத்தலால்,
இலக்கணையால், அச்சொற்குச் சொரியப் பெற்ற என்று பொருள்
கூறலாயிற்று.
தாக்கிய காம நோய் தழைக்க, அன்புற
நோக்கிய திசை எலாம் காணும் நோக்கினான்,
‘பாக்கியம் நெஞ்சுறப் பலித்தது!’ என்னவே,
நீக்கிய மடந்தை முன் நிற்றல் கண்டுளான்.26-கீசகன் தன்முன்னேநிற்கும் திரௌபதியைக் காணுதல்.
தாக்கிய – (தன்னை) வருத்திய, காமம் நோய் – மன்மதனால்
நேர்ந்த வியாதியானது, தழைக்க – கிளையாநிற்க, அன்புஉற – காதல்
பொருந்த, நோக்கிய-கண்ணுக்குஎட்டிய, திசை எலாம் – திக்குக்கள்
முழுவதிலும், காணும் – பார்க்கின்ற, நோக்கினான் – கண்பார்வையை
யுடையவனான கீசகன்,- ழுபாக்கியம் – (தான் செய்துள்ள) புண்ணியப்பேறு,
பலித்தது – பயனையுண்டாக்கிற்றுழு, என்ன – என்று கருதுமாறு, நீக்கிய
மடந்தை – (தன்னை) முன்பு விலக்கிய பெண்ணாகிய திரௌபதி, முன் நிற்றல்
– முன்னே நிற்பதை, நெஞ்சுஉற – மனமார, கண்டுளான் – பார்த்தவனானான்;
(எ – று.)
காமநோய் மிகமிக, கண்ணுக்குத் தெரியுமிடங்களி லெல்லாம் கீசகன்
மருளமருள விழித்துப் பார்த்தவனாய், திரௌபதிவந்து தன் முன் நிற்றலைக்
கண்டானென்க. அவள் முன்னேநின்றது – தான்செய்த புண்ணியப்பயனே
அவளைத் தன்முன்னே வந்துநிற்குமாறுசெய்தது என்று அந்தக்கீசகன்
கருதுதற்கு இடங்கொடுத்தது என்ற கருத்துப்பட, ழுபாக்கியம்பலித்த தென்ன
நெஞ்சுற மடந்தை முன் நிற்றல் கண்டுளான்ழு என்றார்.
வந்தனள், என்னுடை மா தவப் பயன்!
வந்தனள், என்னுடை வழிபடும் தெய்வம்!
வந்தனள், என்னுடை ஆவி! வாழ்வுற,
வந்தனள், என்னுடை வண்ண மங்கையே!27.-இரண்டுகவிகள் -தன்ஆதரந்தோற்றத் திரௌபதியை
வருகஎன்று கீசகன் அழைத்தலைத் தெரிவிக்கும்.
மூன்றுகவிகள் – ஒருதொடர்.
(இ -ள்.) என்னுடை மாதவம் பயன் – என்னுடைய பெருந்தவத்தின்
பயன் போன்றவள், வந்தனள்-: என்னுடை வழிபடும் தெய்வம் –
யான்வழிபடுகின்ற தெய்வம் போன்றவள், வந்தனள்-: என்னுடை ஆவி – என்
னுடைய உயிர்போன்றவளான பெண், வந்தனள்-: என்னுடை வண்ணமங்கை –
என்னுடைய வண்ண மங்கை, வாழ்வு உற-(யான்) வாழ்ச்சியடைய, வந்தனள்-;
(எ – று.)
வழிபடுகிறதெய்வம் தன்விருப்பத்தை யளிக்கவல்லதாதல் போல இந்த
வண்ணமங்கை தன்விருப்பமாகிய கலவியின்பத்தையளிப்பா ளென்னுங்
கருத்தினால், அவளை ழுவழிபடுந்தெய்வம்ழு என்கின்றான். ழுதனியும் ஒரோவழிழு
[நன். பொது. 41] என்றதனால் ழுமாதவப்பயன்ழு ழுவழிபடுந்தெய்வம்ழு என்பவை
முதலிய பெயர்ச்சொற்கள் ஒரு பொருளையே குறிப்பன என்று தெரிய
நிற்பதனால், பெயர்தோறும் ஒருவினையே கொடுக்கப்பட்டது. என்னுடை
ஆவிவாழ்வு உற என்னுடை வண்ணமங்கைவந்தனள் என்றுகூட்டி
யுரைப்பாருமுளர்.
‘வருக நீ, அருகுற! மதுர வாசகம்
தருக, நீ இரு செவி தழைக்க! உள்ளம் நின்று
உருக, நீ தழுவுக உடலம்! தேம் உறப்
பருக நீ வழங்குக, பவள வாய்!’ எனா,
நீ-, அருகு உற -சமீபத்திற் பொருந்த, வருக -: நீ-, இருசெவி
தழைக்க – (என்னுடைய) இரண்டுகாதுகளும் செழிக்குமாறும், நின்று உள்ளம்
உருக-(உன் வாசகங்கள் என்மனத்திலே) நிற்பதனால் (அந்த) மனம்
உருகுமாறும், மதுரம் வாசகம் – இனிய வார்த்தைகளை, தருக-: உடலம் தேம்
உற – என்னுடம்பு இன்பமடையுமாறு, நீ-, தழுவுக-: நீ-, பருக- (நான்)
நுகருமாறு,- பவளம் வாய் – பவழம் போன்ற (உன்) வாயிதழை, வழங்குக –
தருவாயாக, எனா – என்று சொல்லி,-(எ – று.)- ழுகிடந்தவனெழுந்துழு என்று
மேற்கவியில் தொடரும். ஆதரத்தினால், ழுநீழு என்பது வாக்கியந்தோறும்
வந்தது.
கிடந்தவன் எழுந்து, ஒரு கேடு வந்துறா
மடந்தையைத் தழுவுவான் வந்து சார்தலும்,
விடம் திகழ் விழியினாள் ஓட, வேட்கையால்
தொடர்ந்தனன், அறிவு இலாச் சோரன்தானுமே.29.-தன்னைக் கீசகன் பற்றவருகையில் திரௌபதி யோட,
கீசகனும் தொடர்ந்து செல்லுதல்
கிடந்தவன் – (படுக்கையிற்) படுத்திருந்தவனான கீசகன்,
எழுந்து-, ஒரு கேடு வந்துறா மடந்தையை-ஒருதீங்கும் வரப்பெறாத
பெண்ணாகிய திரௌபதியை, தழுவுவான் – ஆலிங்கனஞ்செய்து
கொள்ளுதற்பொருட்டு, வந்து சார்தலும் – வந்துசேர்ந்த வளவில்,- விடம் திகழ்
விழியினாள் – கொடுமைவிளங்குகின்ற கண்பார்வையையுடையவளான
அந்தத்திரௌபதி, ஓட – ஓடாநிற்கையில்,-அறிவு இலா சோரன் தான்உம்-
நல்லறிவு இல்லாத கள்ளநெஞ்சை யுடையனான அந்தக்கீசகனும், வேட்கையால்
– காதலால், தொடர்ந்தனன் – (அவளைத்) தொடர்ந்து சென்றான்; (எ – று.)
ழுகேடுவந்துறா மடந்தைழு என்றது, அவளுடைய பாதிவிரதியத்திற்கு
ஒருவராலுந் தீங்கு இழைக்கமுடியாது என்ற குறிப்பினது. அவள் நோக்கே
அந்தக் கீசகனுடைய மரணத்திற்குக் காரணமாவதால், ழுவிடந்திகழ் விழியினாள்ழு
என்ற தென்னலாம்: அன்றியும், கருவிழிக்கு விடத்தை உவமை கூறுதலும்
உண்டு.
ஓடிய மடக்கொடி உலகு காவலன்
சூடிய மணி முடி துலங்கு கோயிலின்,
வாடிய கொடி என, வந்து வீழ்ந்தனள்-
நீடிய வேத்தவை நிருபர் காணவே.30.-கீசகனால்தொடரப்பெற்று ஓடின திரௌபதி
அரண்மனையில் அரசர்காண வந்து வீழ்தல்.
ஓடிய-(அங்ஙனம்) ஓடிப்போன, மடம் கொடி – மடப்பத்
தையுடைய கொடிபோன்றவளான திரௌபதி,-வாடிய கொடி என – வாட்டமுற்ற
கொடி போல,-வேந்து அவை நீடிய நிருபர் காண – அரச சபையிலே
மிக்குள்ள அரசரெல்லாங் காணாநிற்கையில், உலகு காவலன் –
விராடதேசத்திற்குத் தலைவனாகிய விராடராசன், சூடிய – அணிந்துள்ள, மணி
முடி – இரத்தினம் பதித்த கிரீடத்தோடு, துலங்கு – விளங்குகின்ற, கோயிலின் –
அரண்மனையிலே, வந்து வீழ்ந்தனள்-; (எ – று.)
தன்முறையீட்டை யுணர்த்துமாறு காவலன்மணிமுடியுடன்
துலங்குகோயிலிற் சென்றன ளென்க. இராசசபையிற் பலஅரசர்
திரண்டிருப்பாராதலால், ழுநீடிய வேத்தவைநிருபர் காணவீழ்ந்தனள்ழு என்றார்.
இனி, நிருபர் என்றது-விராடனைக்காட்டுமென்றலும், தருமபுத்திரனைக்
காட்டுமென்றலும் உண்டு. நீடிய – பெருமைபெற்ற, வேத்தவை யெனினுமாம்.
தொழும் தகை மனுகுலத் தோன்றல் கண் எதிர்
விழுந்து அழும் தெரிவையை, வேட்கை நோயினால்
அழுந்திய காமுகன், அச்சம் இன்றியே,
செழுந் துணைக் கைத்தலம் தீண்ட உன்னினான்.31.-அங்குக் கீசகன்தன்னிணைக்கையால் திரௌபதியைத்
தீண்டக் கருதுதல்.
தொழும் தகை – (யாவராலும்) வணங்குதற்கு உரிய நற்குண
முடைய, மனு குலம் தோன்றல் – மனுகுலத்திலே தோன்றியவனான,
விராடராசனுடைய, கண் எதிர் – கண்ணுக்கு எதிரிலே, விழுந்து-, அழும்-
அழுகின்ற, தெரிவையை-பெண்ணாகிய திரௌபதியை, வேட்கை நோயினால்-
காதல்நோயிலே, அழுந்திய – ஆழ்ந்து விட்ட, காமுகன் –
காமவிச்சையையுடையவனான கீசகன், அச்சம் இன்றி-(பலருங்காண்கையில்
நாம் ஒரு பெண்ணைத் தீண்டலாமோ? என்கிற) கூச்சமு மில்லாமல், செழுந்
துணை கைத்தலம் – வலிமையுள்ள இரட்டையான (தன்)கைகளால், தீண்ட –
(அவளைப்) பற்றுவதற்கு, உன்னினான் – நினைத்தான்; (எ – று.)
மனு -வைவஸ்வதமனு. இந்தக்கீசகன் மனுகுலத்தோன்றலின்
கண்ணெதிரில் அச்சமின்றித் தெரிவையைத் தீண்ட உன்னிய காரணம் –
வேட்கைநோயிலழுந்தியதும், அரசன் தன்னை யொன்றுஞ்
செய்யமாட்டானென்ற நம்பிக்கையு மாகும். ‘ஆசைவெட்கமறியாது’ என்பது,
பழமொழி.
உன்னும் அவ் அளவையின், உருளை ஒன்றுடைப்
பொன் நெடுந் தேரவன் புகல, மற்றொரு
வல் நெடுங் கிங்கரன், சூறை மாருதம்
என்ன, வந்து அடுத்து, அயல் எடுத்து வீசினான்.32.-சூரியனேவலால் ஒருகிங்கரன் விரைவாகவந்து
அந்தத் திரௌபதியைத் தீண்டாதவாறு கீசகனைஅப்பால் வீசுதல்.
உன்னும் அ அளவையின்-(திரௌபதியை அந்தக்கீசகன்
தீண்ட) நினைத்த அவ்வேளையில், உருளை ஒன்று உடை பொன்நெடு
தேரவன்-ஒற்றைச்சக்கரம் பூண்ட அழகிய நீண்ட தேரையுடையவனான
சூரியபகவான், புகல-ஏவ,-மற்று ஒரு வல் நெடு கிங்கரன் – வேறொரு வலிய
நெடிய பணியாளன், சூறை மாருதம்என்ன அடுத்து வந்து – சுழல்காற்றுப்போல
விரைந்து கிட்டிவந்து, எடுத்து -, அயல் வீசினான்-(அந்தக் கீசகனைத்
திரௌபதியைத் தீண்டாதபடி) அப்பால் எறிந்திட்டான்; (எ – று.)
கீழ்இருபத்திரண்டாஞ் செய்யுளில் ழுஇரங்குறு மென்னகத்திடரை
நீக்குவாய்ழு என்று சூரியனைநோக்கி வேண்டிக்கொண்டதற்கு ஏற்ப,
அவனாலேவிய கிங்கரன் இந்தத் திரௌபதியைப் பாதுகாத்தன னென்க. தான்
இருந்த இடத்திற்குச் சுதேஷ்ணையின் கட்டளையினால் திரௌபதி
சுராபாத்திரத்தைக் கொணர்கையில் கீசகன் இவளைக்கண்டு வலியக்
கையைப்பற்ற, இவள்உதறிக்கொண்டு செல்லுகையில் அந்தக்கீசகன்
இவளைப்பின்தொடர்ந்து சென்று இராசசபையிலே கூந்தலைப்பற்றிச்
சினத்தினால் இவளைக்காலினால் தள்ள, அப்போது சூரியனாலேவப்பட்ட
ராக்ஷதனொருவன் வந்து அந்தக் கீசகனைப் பூமியில் தள்ளினானாக, பின்னர்
இவள் விராடராசனிடத்து முறையிட்டும் அவன் விசாரியாதுவிட்டனனென்று
முதனூல் கூறும்.
கண்டனன் இருந்த மண் காவல் வேந்தனும்,
எண் தகு நெறி முறை இடறு கீசகன்
திண் திறல் வலிமையும், செயலும், சிந்தையில்
கொண்டு, ஒரு வாய்மையும் கூற அஞ்சினான்33.-விராடன்கீசகன்செயலைக் கண்டறிந்தும் அச்சத்தினால்
வாளாவிருத்தல்.
இருந்த – (வேத்தவையிலே) தங்கியிருந்த, மண் காவல் வேந்
தன்உம் – பூமியைப் பாதுகாத்தலையுடைய விராடவரசனும், கண்டனன் –
(கீசகனுடைய அக்கிரமச் செயலைக்) கண்கூடாக் கண்டவனாயிருந்தும்,-எண்
தகு நெறிமுறை – (பெரியோரால்) மதித்தற்குஉரிய நியாயவழியினின்று, இடறு –
தவறிய, கீசகன் – கீசகனுடைய, திண் திறல் வலிமைஉம் – மிக்க
வலிமையையும், செயல்உம் – அக்கிரமச் செய்கையையும்,சிந்தையில்கொண்டு
மனத்திலெண்ணி, ஒரு வாய்மை கூறஉம் – ஒருவார்த்தை சொல்லவும்,
அஞ்சினான்-; (எ – று.)
அரசனாதலால் நீதியிற்பிழைத்தகீசகனைத் தண்டிக்கவேண்டியதே
முறையாயிருக்க அதைச் செய்யாவிடினும், ழுநீ செய்வது முறையன்று:
தகாதசெயல்ழு என்றாவது சொல்லியிருக்கலாமே; அதுவுஞ் செய்திலனென்பதாம்.
ழுவாய்மையும்ழு என்ற இடத்தினின்று பிரித்துக் கூட்டப்பட்ட உம்மை,
எச்சப்பொருளது. மண் – அலக்ஷ்யம் தொனிக்கின்றது
அடு தொழில் பலாயனன் அழுத மின்னையும்
கடுமையில் பின்தொடர் காளைதன்னையும்,
படர் உறக் கண்டு, தன் பாங்கர் நின்றது ஓர்
விடவியைப் பிடுங்குவான், வெகுண்டு, நோக்கினான்.34.-கீசகன் திரௌபதி இவர்கள்செயலைக்கண்ட வீமன், கீசகனை
யழிக்குமாறு ஒருமரத்தைப் பிடுங்கும்படி வெகுண்டு நோக்குதல்.
அடு தொழில் -(அரண்மனையிலே) சமையல்வேலையி லமர்ந்
திருந்த, பலாயனன் – பலாயனனென்று மாறுபெயர் பூண்ட வீமசேனன்,- அழுத
மின்னைஉம் – அழுதுகொண்டு முன்னே செல்கின்ற மின்னல் போல்பவளான
திரௌபதியையும், கடுமையில் – விசையாக, பின் தொடர் – (அந்தத்
திரௌபதியைப்) பின்னே தொடர்ந்துசென்ற, காளை தன்னைஉம் – இளவெருது
போல்பவனான கீசகனையும், படர் உற – (தன்மனத்துத்) துன்பமுண்டாக,
கண்டு – பார்த்து,- தன் பாங்கர் நின்றது ஓர் விடவியை –
தன்பக்கத்திலிருந்ததொரு மரத்தை, பிடுங்குவான் – (அந்தக்கீசகனை
மோதியொழிக்கும்படி) வேரோடு பிடுங்கும்பொருட்டு, வெகுண்டு நோக்கினான்
– சினக்குறிப்புக்கொண்டு பார்த்தான்; (எ – று.)
விடவி = விடபீ: கிளைகளையுடையது எனமரத்திற்குக் காரணக்குறி.
முதலில் மரத்தைப் பிடுங்குவான் வெகுண்டு நோக்கியது, தருமன் கருத்தை
யுணர்தற்பொருட்டென்னலுமாம்.
கனிட்டனது எண்ணம் அக் கங்கன் ஆகிய
முனித்தகை உணர்ந்து, அவன் முகத்தை நோக்கி, ‘இத்
தனிப் பெரு மராமரம் தழல் கொளுந்திடாது;
உனக்கு அடும் இந்தனம் அன்று’ என்று ஓதினான்.35.-தருமன் அந்தவீமன்செயலைக் குறிப்பாக விலக்குதல்.
கனிட்டனது-(தன்னினுஞ்)சிறியவனாகிய வீமசேனனுடைய,
எண்ணம் – கருத்தை, அ கங்கன் ஆகிய முனி தகை – அந்தக் கங்கனென்று
மாறுபெயர்பூண்ட துறவியாகிய நற்குணமுள்ள தருமபுத்திரன், உணர்ந்து –
தெரிந்துகொண்டு, (அச்செயலைத் தடுக்குமாறு), அவன் முகத்தை நோக்கி –
அந்த வீமசேனனுடைய முகத்தைப் பார்த்து, ழுஇ தனி பெரு மராமரம் – இந்தத்
தனித்துள்ள பெரிய மராமரமானது, தழல்கொளுந்திடாது – நெருப்புப்பற்றி
யெரிவதற்கு ஏற்றதாகாது: (ஆகையால் இப்போது), உனக்கு அடும் இந்தனம்
அன்று – உனது அடுதொழிற்கு ஏற்ற விறகு அன்று,ழு என்று-, ஓதினான் –
(குறிப்பினாற்) சொல்லி (அந்த வீமன் செயலை)த் தடுத்திட்டான்; (எ – று.)
இந்தனத்துக்கு உதவுமாஎன்று பலாயனன்பார்ப்பதாக வைத்துக்கொண்டு,
ழுஇது விறகுக்கு உதவா தாதலால், இதனைப் பிடுங்கவேண்டாழு என்று
தடுப்பவன்போல ழுஇந்தவேளையில் இதுகொண்டு எதிரியை ஒழிக்க முயல்வது
தகாதுழு என்பதைக் குறிப்பித்தான் தருமபுத்திர னென்க. பலாயனனென்ற
வீமனுடையசெயலை இங்குத் தருமபுத்திரன் வேறுகாரணங்கூறிமறைத்ததாக
வந்தது அணியியலில் – வஞ்சநவிற்சியணியின்பாற்படும்: வடநூலார்
வ்யாஜோக்தி யென்பர். முனித்தகை – முனிவர்க்குரிய நற்குணமுடையவனென
அன்மொழித்தொகை.
தீண்டுதல் தகாது” என, செம்மை ஒன்று இலான்
வேண்டிய செய்வது வேத்து நீதியோ?
ஆண்தகை! இதற்கு நீ, “அல்ல, ஆம்” எனா,
ஈண்டு ஒரு மொழி கொடாது இருப்பது என்கொலோ?37.-மூன்று கவிகள் – விராடனிடம் திரௌபதி
முறையிடுவதைத் தெரிவிக்கும்
நான்கு கவிகள் – ஒருதொடர்.
(இ – ள்.) ழு(என்னை), தீண்டுதல்-,தகாது-ழு, என – என்று சொல்லவும்,-
செம்மை ஒன்று இலான் – நற்குணம் சிறிதுமில்லாதவனாகிய கீசகன்,
வேண்டிய(து)-(தான்) விரும்பியசெயலை, செய்வது – செய்யவிடுவது, வேந்து
நீதிஓ – அரசநீதிக்கு ஏற்குமோ? ஆண்தகை – ஆண்மைக்குண முடையோனே!
நீ-, இதற்கு – இந்தக் கீசகனுடைய செய்கைக்கு, ழுஅல்ல – (இது)
செய்யத்தக்கதல்ல: (அன்றி), ஆம் – (இது) செய்யத்தக்கதே,ழு எனா – என்று,
ஈண்டு – இப்போது, ஒரு மொழி – (இவ்விரண்டில்) ஒருசொல்லை, கொடாது –
தராமல் [வாய்விட்டுச் சொல்லாமல்], இருப்பது-, என் கொல்ஓ –
என்னகாரணமோ? (எ – று.)
நான்கீசகன்செயலைக்குறித்து உன்னிடம் முறையிட்டுக்
கொள்ளுகிறேனே!இப்போது இந்தக்கீசகன்செயலை மன்னவனாகிய நீ
கண்டிக்கவாவதுவேண்டும்: அல்லது அது செய்யமுடியாவிட்டால்,
அவன்செயல் சரியேயென்றாவது பாராட்டவேண்டும்: இவ்விரண்டில்
ஒன்றுஞ்செய்யாது இருப்பதும்ஒருமுறையோ! என்கிறாள்.
அக்கிரமஞ்செய்வதைக் கண்டிப்பதுசெங்கோலன்முறை:
அக்கிரமத்தைச்சரியென்பது கொடுங்கோலன்முறை:இவ்விரண்டில் ஒன்றிலுஞ்
செல்லாதது என்னே! என்கிறாள். வேந்து + நீதி =வேத்துநீதி.
அன்புடைத் தேவிதன் அருகு, தோழியாய்,
நின் பெருங் கோயிலில் நீடு வைகினேன்;
என் பெரு வினையினால், இன்று, உன் மைத்துனன்
தன் புய வலியினால் தழுவ உன்னினான்.
அன்பு உடை – (என்னிடத்து) அன்புள்ள, தேவி தன் அருகு
-(உனது) அரசியின் சமீபத்திலே, தோழி ஆய் – தோழியாகி, நின் பெருங்
கோயிலின் – உனது பேரரண்மனையில், நீடு – வெகுநாட்கள், வைகினேன் –
தங்கினேன்: என் பெரு வினையினால் – என்னுடைய பெருத்த
தீவினையினாலே, இன்று-, உன் மைத்துனன்-, தன் புயம் வலியினால் –
தன்னுடைய புஜபலத்தைக்கொண்டு, தழுவ-(என்னை)
ஆலிங்கனஞ்செய்துகொள்ளுதற்கு, உன்னினான் – நினைத்தான்; (எ – று.)
புயவலிபடைத்திருத்தலால் தான் அக்கிரமச்செயலைச் செய்தாலும்
மன்னவன் கண்டிக்கமாட்டா னென்ற கருத்தினாலேயே அந்தக்கீசகன்
என்னைத் தழுவநினைத்தது என்று குத்துப்பாடாகத் திரௌபதி எடுத்துக்
காட்டுகின்றா ளென்க. மைத்துனன் – மனைவியினுடன் பிறந்தவன்.
பெருந் தகை அன்று இது; பேசல் அன்றி, நீ
இருந்தனை; உனக்கு அரசு எங்ஙன் செல்வது?
வருந்தினர் வருத்தம் நீ மாற்றலாய் எனில்,
அருந் திறல் அரச! நின் ஆணை பொன்றுமே!’
நீ-, இது பேசல் – (கிசகனைக் கண்டித்துக்) கூறுவதான
இச்செயலை, அன்றி – செய்யாமல், இருந்தனை-: பெருந் தகை அன்று – (இது
உனக்குப்) பெருமைக்குணமாகாது: உனக்கு-(அநீதி புரிபவரைக்
கண்டிக்கமாட்டாத) நினக்கு, அரசு – அரசத்தன்மை, எங்ஙன் செல்வது –
எங்ஙனம் நடக்கும்? அரு திறல் – அருமையான திறமையையுடைய, அரச –
அரசனே! வருந்தினர் – வருத்தமடைந்தவரின், வருத்தம் – வருத்தத்தை, நீ-,
மாற்றலாய் – மாற்ற வல்லமையற்றவன், எனின் – என்றால், நின் ஆணை
பொன்றும் – உன்னுடைய அரசுசெலுத்துந்தன்மை அழிந்துவிடும்; (எ – று.)-ஏ
– இரக்கம்.
அரசத்தொழிலென்பது நலிவுபட்டோரைக் காத்தலே யாதலால், அது
செய்யமாட்டாத அரசும் அரசோ! என்றவாறு. பெருந்தகை – பண்புத்தொகை.
அருந்திறல்என்ற அடைமொழி எள்ளலைக் குறிப்பிக்கு மென்னலாம்.
என, இவள் புலம்பி, மெய் ஏய்ந்த பூழியும்,
கனதனம் நனைத்திடும் கண்ணின் நீருமாய்,
மனம் மிக மறுகிட, மன்னன் தேவிபால்
இனைவுடன் எய்தி வீழ்ந்து, ஏங்கி, விம்மினாள்.40.-இங்ஙனம் புலம்பிய திரௌபதி அந்தக்கோலத்தோடு
மன்னவன்தேவியிடம் வீழ்ந்து ஏங்குதல்
என – என்று, இவள் – இந்தத்திரௌபதி, புலம்பி – அழுது,
மெய் – உடம்பிலே, ஏய்ந்த – படிந்த, பூழிஉம்-புழுதியும், கனம் தனம்
நனைத்திடும்-பருத்த தனங்கள் நனையப்பெற்ற, கண்ணின் நீர் உம் ஆய்-
கண்ணீரையுங் கொண்டவளாய், மனம் – (தன்) நெஞ்சம், மிக மறுகிட –
மிகவுங் கலங்க, மன்னன் தேவிபால் – விராடமன்னவனுடைய மனைவியாகிய
சுதேஷ்ணையினிடம், இனைவுடன் – வருத்தத்துடனே, எய்தி-போய்ச்சேர்ந்து,
வீழ்ந்து – கீழ்வீழ்ந்து, ஏங்கி விம்மினாள் – ஏக்கமுற்று அழுதாள்;(எ – று.)
ஏங்குதல் – அக்கிரமஞ்செய்தவனையொறுத்துத் தன்னைப்
பாதுகாக்கவேண்டியசெயலை மன்னவன் செய்யாமையால் மனவாட்டங்
கொள்ளுதல்.
பூதலம் ஆண்மையால் புரக்கும் மன்னவர்
தீ தொழில் புரிஞரைத் தெண்டியார்எனின்,
நீதியும் செல்வமும் நிலை பெறும்கொலோ’
“ஏதிலர், தமர்” என இரண்டு பார்ப்பரோ?41.-மூன்றுகவிகள்-ஒருதொடர்: கங்கனென்று மாறுபேர்பூண்டிருந்த
யுதிஷ்டிரன் விராடனுக்கு இடித்து மதிகூறுதலைத் தெரிவிக்கும்.
பூதலம் – பூமியை, ஆண்மையால் – (தமது) பராக்கிரமத்தால், புரக்கும்-பாதுகாக்கின்ற,மன்னவர் – அரசர், தீ தொழில் புரிஞரை – கொடுஞ்செயலைச் செய்கின்றவரை, தெண்டியார்எனின் – சிட்சிக்காமற்
போவாரே யானால், (அப்போது மன்னவர்க்கு), நீதிஉம் –
நியாயமென்பதும், செல்வம்உம் – ஐசுவரியமும், நிலைபெறும் கொல் ஓ-
நிலைத்துநிற்குமோ? (முறைசெலுத்தும் மன்னவர் தாம் செலுத்த வேண்டிய
நீதிநெறியில்), ழுஏதிலர் – (இவர் நமக்கு) யாதோரியையும் இல்லாதவர்: தமர்-
(இவர் நமக்குச்) சுற்றத்தார்ழு, என-என்று சொல்லப்படுகின்ற, இரண்டு-(அந்த)
இரண்டையும், பார்ப்பர்ஓ-கருதுவார்களோ? (எ – று.)
அரசர்முறைசெலுத்தும்போது ழுதமர்ழு, பிறர்ழு என்று பார்த்தல்
தகாதாகையால், தமரிற் சேர்ந்த கீசகன் தீங்குஇழைத்தஇப்போது அவனையுந்
தண்டித்தலே தகுதி யென்றவாறு. ழுதீத்தொழில்ழு என வரற்பாலது,
செய்யுளோசையின்பம் நோக்கி ழுதீதொழில்ழு என இயல்பாயிற்று. பெறுங்கொல்
ஓ என்ற விடத்து, கொல்-அசை; கொல் – வினாவெனில், ஓ அசை.
யாரும் இல் ஒருத்தி நின் இல்லில் வைகினால்,
ஆர்வம் உற்று அவள்வயின் அன்பு கூர்வது,
வீரமோ’ தருமமோ? விருப்பமோ? இவை
பூரியர் அலாதவர் புரிதல் போதுமோ?
யார்உம் இல் – வேறொருகதியும் அற்றவளான, ஒருத்தி –
ஒருபெண்பிள்ளை, நின் – உன்னுடைய, இல்லில் – மனையிலே, (உன்னையே
கதியாகநம்பி), வைகினால் – தங்கினாளானால், (ஒருத்தன்), அவள் வயின்-
அவளிடத்து, ஆர்வம் உற்று – ஆசைகொண்டு, அன்பு கூர்வது –
காதல்மிகுவது,-வீரம்ஓ-வீரச்செயலோ? (அன்றி), தருமம் ஓ – நியாயத்துக்கு
ஏற்றசெயலோ? விருப்பம்ஓ – காதற்செயலோ? இவை – இவ்வாறான
செயல்களை, பூரியர் அலாதவர் – கீழ்மக்களல்லாதார், புரிதல் – செய்வது,
போதும்ஓ – தகுமோ? (எ – று.)
அகதியான ஒருத்திக்கு ஒருதீங்கும் வராதுபார்ப்பது வீரச்செயலும்
தருமச்செயலும் ஆகுமன்றி, அவளைப் பலாத்காரஞ் செய்வது
காதற்செயலுக்கும் தகாது: இங்ஙன் காதலிப்பதுபோன்ற செயல் அற்பர்செய்யுஞ்
செய்கையே யாமென்றவாறு.
கீசகன்ஆயினும் கேடு செய்தனன்;
ஆசை நோய் மன்பதை அனைத்தினுக்கும் உண்டு;
ஏசு இது நினக்கும்’ என்று, இருந்த வேந்தொடும்
வாசகம் பல சொனான், மறை வலானுமே.
கீசகன் ஆயின்உம் – கீசகனாயிருந்தாலும், கேடு செய்தனன் –
செய்யத்தகாத காரியத்தைச் செய்தான்: (இதற்குக் காரணம்), ஆசை நோய் –
காதல்நோயென்பது, மன்பதை அனைத்தினுக்கு உம் –
மனிதவர்க்கத்திற்கெல்லாம், உண்டு – உள்ளதொன்றே (என்பது): (ஆனால்,
மன்னவனானவன் தீங்குசெய்தாரை ஒறுக்கவேண்டியவன்: அவ்வாறு
தீங்குசெய்த கீசகனை நீ ஒறுக்காது வாளா இருக்கின்ற), இது – இச்செயல்,
நினக்கு உம் ஏசு – (மன்னவனான) உனக்கும்குற்றம்விளைப்பதே, என்று –
இவ்வாறு, இருந்த – (ராஜசபையிலே) தங்கியிருந்த, வேந்தொடுஉம் –
விராடராசனோடும், வாசகம் பல சொனான் – பலவாசகங்களைச் சொன்னான்:
(யாவனெனில்),-மறைவலான்உம் – வேதங்களில் வல்லவனான
அந்தணவடிவங்கொண்டிருந்த யுதிஷ்டிரனும்; (எ -று.)
இரண்டாவது அடி, முதலடியைச் சமர்த்தித்துநின்றது:
வேற்றுப்பொருள்வைப்பணி. கீசகனாயினும் என்ற இடத்துள்ள சிறப்பும்மை
-அவன் வலியுடையவனும் மன்னவனுக்கு நெருங்கிய உறவினனும்
என்றபொருளைக் காட்டும். நினக்கும் என்ற எச்சஉம்மை – எவ்வாறு
கீசகனுக்கு ஏசு உண்டாக்குமோ அதுபோலவே உனக்கும் ஏசினையுண்டாக்கும்
என்ற கருத்தினது.
முன்னுற முனிவரன் மொழிந்த வாய்மையும்,
இன்னலோடு அழுது அவள் இசைத்த வாய்மையும்,
கன்னம் ஊடுறச் சுட, கருத்து அழிந்து, போய்,
மன்னனும், தன் திரு மனையில் எய்தினான்.44.-விராடன் மனமழிந்து தன்மனையிற் சேர்தல்
முன் உற -(தன்) எதிராக, முனிவரன் மொழிந்த – முனிச்
சிரேஷ்டனான கங்கனென்ற யுதிஷ்டிரன் சொன்ன, வாய்மைஉம் –
உண்மையான வார்த்தையும், இன்னலோடு – மனவருத்தத்தோடு, அழுது –
புலம்பிக்கொண்டு, அவள் – அந்தத்திரௌபதியாகிய வண்ண மகள், இசைத்த-
சொன்ன, வாய்மைஉம் – உண்மைவார்த்தையும், கன்னம் ஊடுஉற –
காதைத்தொளைத்துக்கொண்டு சென்றதனால், சுட – (தன்) மனத்தைச் சுடவே,
மன்னன்உம் – விராடராசனும், கருத்து அழிந்துபோய் – மனம் அழிந்திட்டு,
தன் திருமனையில் – தன் அழகிய வீட்டிலே, எய்தினான் – போய்ச்சேர்ந்தான்;
(எ – று.)
ழுமுன்னுறழு என்பது – மொழிந்த என்பதனோடு மாத்திர மன்றி, இசைத்த
என்பதனோடும் இயையும். ழுமன்னனுந் தன் திருமனையிலெய்தினான்ழு என்ற
இடத்து – உம்மை, மேற்செய்யுளில் ழுவீமன் மடையி லெய்தினான்ழு
எனத்தழுவுவதால், எதிரதுதழுவியஎச்சமாம்: இனி ழுமன்னன் தேவிபால்
திரௌபதி யெய்திழு என்றதைத் தழுவுவதால், இறந்தது தழுவியதுஎனினுமாம்
கண் நெருப்பு எழ, இரு கைந் நெருப்பு எழ,
உள் நெருப்பு எழ, தனது உடல் நெருப்பு எழ,
மண் நெருப்பு எழ, வரு மடை இல் எய்தினான்-
திண் நெருப்பினும் மிகு சினம் கொள் வீமனே.45.-வீமனும் சமையல்செய்யுமிடத்துக்குச் செல்லுதல்.
திண் நெருப்பின்உம் – (எப்படிப்பட்ட பொருளையும்
எரிக்கும்)வலிமையுள்ள நெருப்பைக்காட்டிலும், மிகு சினம் கொள் –
மிக்ககோபத்தைக்கொண்ட, வீமன் -,-கண் நெருப்பு எழ – (தன்)
கண்களிலிருந்து கோபாக்கினியின்பொறி பறக்கவும், (அவ்வாறே), இரு
கை நெருப்பு எழ – (மோதிப் பகையழிக்கவல்ல) இரண்டுகைகளினின்றும்
நெருப்புத்தோன்றவும், உள் நெருப்பு எழ – மனத்திலும் உக்கிரந் தோன்றவும்,
தனது உடல் நெருப்பு எழ – (உள்ளிருக்கும் சினத்தீ வெளியேமூள்வதனால்)
தன் உடம்பினின்றும் நெருப்புத் தோன்றவும், மண் நெருப்பு எழ எழ –
(அந்தச் சினத்தோடு உக்கிரங்கொண்டு நடத்தலால்) நடக்கும்
பூமியினின்றுங்கூட நெருப்பு மிகுதியாகத் தோன்றவும், மடையில் – சமையல்
செய்யுமிடத்தில், எய்தினான் – போய்ச்சேர்ந்தான்; (எ – று.)
ஒருபொருளையுடைய ‘நெருப்பெழ’ என்ற தொடர் பன்முறை வந்தது –
சொற்பொருட்பின்வருநிலையணி. கைந்நெருப்பெழ என்றது – அப்போது
பகையைமோதி யொறுப்பதற்குக் கை ஒருபால் விரைவு கொண்டிருந்தமையைக்
குறிப்பிக்கும். நெருப்பெழவருமடையில் என்றும் பாடம்
பன்னிருவரினும் நாள்தொறும் கனக பருப்பதம்
வலம் வரும் தேரோன்
மின் நிகர் மருங்குல் விரதசாரிணிபால் விளைவுறு
துயரமது உணர்ந்து,
தன்ஒரு மரபில் தோன்றலை வெறுத்து, தனிப்
பெருந் தேர் குட பொருப்பின்
சென்னியின் உருள, உருட்டி, அத் திசையும் சிவப்புற,
தானும் மெய் சிவந்தான்46.-சூரியாஸ்தமன வருணனை.
பன்னிருவரின்உம் – (ஆதித்தர்) பன்னிருவருள்ளே, நாள்
தொறுஉம் – தினந்தோறும், கனகம் பருப்பதம் – பொன்மலையாகிய
மேருமலையை, வலம் வரும் – பிரதட்சிணமாக வருகின்ற, தேரோன் –
தேரையுடைய சூரியன்,- மின் நிகர் மருங்குல் விரதசாரிணிபால்-
மின்னலையொத்து விளக்கத்துடன் துவண்டு தோன்றுகின்ற இடையையுடைய
விரதசாரிணி யென்று மாறுபேர்பூண்ட திரௌபதியினிடத்தில், விளைவுறு –
தோன்றிய, துயரம் அது – மனவருத்தத்தை, உணர்ந்து -,- தன் ஒரு மரபில்
தோன்றலை – தனது ஒப்பற்ற வமிசத்திற்பிறந்த ஆண்களிற்சிறந்தோனாகிய
விராடமன்னவனை, வெறுத்து-, தனி பெரு தேர் -(தனது) தனித்த பெரிய
தேரை, குடபொருப்பின் சென்னியின் உருள உருட்டி – மேற்குமலையின்
[அஸ்தமயபருவதத்தின்] சிகரத்திலே உருண்டு செல்லுமாறு செலுத்திவிட்டு, அ
திசைஉம் சிவப்பு உற – அந்தமேற்குத்திக்குஞ் செந்நிறமடைய, தான்உம்
மெய்சிவந்தான்-.
ஆதித்தியர் [சூரியர்] பன்னிருவராவார் – தாதா சக்கரன் அர்யமன்
மித்திரன் வருணன் அம்சுமான் ஹிரண்யன் பகவான் விவஸ்வான் பூஷா
ஸவிதா துவட்டா என்பவர்; இன்னும் சிறிது வேறாகவும் கூறப்படுவர்,
இந்தப்பன்னிரு பெயரைக்கொண்ட சூரியன் ஒவ்வொருமாதத்தில் ஒவ்வொரு
பெயர்பூண்டு மேருவை வலம்வந்துபகலையுண்டாக்குவ னென்ப. இந்தச்
சூரியன், விரதசாரிணிக்குத் துன்பம் உண்டாகி அன்னாள் முறையிடவும்
அதனைச் செவியேற்று அன்னாள்துயரத்தைப் போக்காது வாளாவிருந்த
தன்வமிசத்தவனான விராடனை வெறுத்துத் தான் அங்கிருத்தற்கும்
விருப்பற்றுத் தன்தேரை மேற்குமலையான அஸ்தமயமலையில் உருண்டு
செல்லச் செலுத்தி அம்மனவேறுபாட்டால் தான்செல்லுந்திசையும் சிவப்புறத்
தன்மெய்யுஞ் சிவந்தானென்பதாம். சிவத்தல் – வெகுளிக்குறி; வெகுளி – நீதி
நடத்தாமைபற்றி விராடன்மேற்கொண்டது: சிவத்தல் நாணத்தினாலாகியதுமாம்.
இதுமுதல் ஒன்பது கவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று நான்கு
ஐந்தாஞ்சீர்கள் விளச்சீர்களும், மற்றைமூன்றும் மாச்சீர்களுமாகிவந்த
கழிநெடிலடி நானகுகொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள்.
குந்திதன் புதல்வர் ஐவரும் சோகம் முதிர்ந்திட,
இதயமும் கொதித்தார்;
வெந் திறல் வடி வேல் விராடனும், தனது வேத்தியல்
பொன்றலின், வெறுத்தான்;
செந் திரு அனைய சுதேட்டிணை என்னும் தெரிவையும்
தெருமரல் உழந்தாள்;
அந்த மா நகரில் அனைவரும் நைந்தார்; ஆர்கொலோ,
ஆகுலம் உறாதார்?47.-விராடநகரத்தில் யாவரும் ஆகுலமுறுதல்.
குந்திதன் புதல்வர் ஐவர்உம் – குந்திபுத்திரர்களான பஞ்ச
பாண்டவர்கள், சோகம் முதிர்ந்திட – துயரம் மிக, இதயம்உம் கொதித்தார் –
மனமும் அழன்றார்கள்: வெந் திறல் வடி வேல் விராடன்உம் –
கொடுந்திறலையும் காய்ச்சியடிக்கப்பட்டவேற்படையையுமுடைய விராடராசனும்,
தனது – தன்னுடைய, வேந்துஇயல் – அரசத்தன்மை, பொன்றலின் –
அழிந்திட்டதனால், வெறுத்தான்-: செந் திரு அனைய சுதேட்டிணை என்னும்
தெரிவைஉம் – அழகிய இலக்குமியையொத்த சுதேட்டிணை யென்னும்
பெண்ணும், தெரு மரல் உழந்தாள் – மனச்சுழற்சி கொள்ளலானாள்: அந்த மா
நகரில் – அந்தப் பெரிய நகரத்திலே, (இங்ஙன்), அனைவர்உம் – யாவரும்,
நைந்தார் – வருந்தினார்கள்: ஆகுலம் உறாதார் ஆர்கொல்ஓ-(அந்தநகரத்தில்)
துன்பமடையாதார் யாவர்தாமோ? [எவருமில்லை என்றபடி]; (எ – று.)
விராடநகரத்தில் யாவரும் வருந்தினாரென்பதை வற்புறுத்த,
ழுஅந்தமாநனகரிலார்கொலோ வாகுலமுறாதார்? அனைவரும் நைந்தார்ழு என்று
வினாவும் விடையுமாகக் கூறினர்.
அனைவரும் துயின்று, கங்குலும் பானாள் ஆனபின்,
அழுத கண்ணீரோடு
இனைவரு தையல், கண்கள் நீர் மல்க, இறைமகன்
மடைப்பளி எய்தி,
‘நினை வரு செற்றம் முடித்திட வல்லார் நீ அலது
இல்லை; இக் கங்குல்,
கனைவரு கழலாய்! புரிவது யாது?’ என்றாள்; காளையும்
கனன்று, இவை சொல்வான்:48.-திரௌபதி நள்ளிரவில் வீமனைக் கிட்டிப்
பகையைமுடிக்குமாறு வேண்டுதல்.
அனைவர்உம் – மக்களெல்லாம், துயின்று – உறங்கி,
கங்குல்உம் – இரவும், பால் நாள் – பாதிராத்திரியாக, ஆன பின் -, அழுத
கண்ணீரோடு இனைவரு – பெருகுகின்ற கண்ணீரோடு வருந்துகின்ற, தையல் –
பெண்ணாகிய திரௌபதி, கண்கள் நீர் மல்க – (தன்னிரண்டு) கண்களிலும் நீர்
நிரம்பி நிற்க, இறைமகன் – ராஜகுமாரனாகிய வீமசேனனுடைய, மடைப்பளி –
சமையல் செய்யுமிடத்தை, எய்தி – போய்ச் சேர்ந்து, ழுநினைவரு-எண்ணத்தக்க
(பெருத்த), செற்றம் – பகையை, முடித்திட – ஒழித்திடுதற்கு, வல்லார் –
வல்லமையுள்ளவர், நீ அலது – நீயல்லாமல், (வேறொருவர்), இல்லை – இலர்:
கனைவரு கழலாய் – ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்தவனே! இ கங்குல் –
இந்தஇரவில், புரிவது – (நீ) செய்யப்போவது, யாது – எது?ழு என்றாள் –
என்றுவினவினாள்; காளைஉம் – இளவெருதுபோன்றவனான வீமனும், கனன்று
– மனங்கோபித்து, இவை – இவ்வார்த்தைகளை, சொல்வான் –
சொல்பவனானான்; (எ – று.)-வீமன் சொல்வதை, மேலிரண்டு கவிகளிற்
காண்க.
கீசகனாற் பரிபவம் நேர்ந்ததுமுதல் கண்ணீர்பெருக வருந்திய
வண்ணமிருத்தலால், திரௌபதியை, ழுஅழுத கண்ணீரோடினைவருதையல்ழு
என்று குறித்தார். இக்கங்குலிலே தான் புரியக் கருதியதை ஐம்பதாம்பாடலில்
வீமன் விவரிப்பன். புரிவதியாதென்றாள் என்ற இடத்துக் குற்றியலிகரம் அலகு
பெறவில்லை. இனைவரு, கனைவரு, வா – துணைவினை.
பொறை எனப்படுவது ஆடவர்தமக்குப் பூண் எனப்
புகலினும், பொருந்தார்
முறை அறப் புரிந்தால், அக் கணத்து அவர்தம் முடித்தலை
துணிப்பதே முழுப் பூண்;
நறை மலர்க் குழலார்தமக்கு மெய் அகலா நாணமே
நலம் செய் பூண் எனினும்,
நிறையுடைப் பெரும் பூண், அமளிவாய் நாணம் நிகழ்வுறா
நிகழ்ச்சியே அன்றோ?49.-இரண்டுகவிகள் – ஒருதொடர்: வீமசேனன் கூறுவன
தெரிவிக்கும்.
ஆடவர் தமக்கு-, பொறை எனப்படுவது – பொறுமையென்று
சொல்லப்படுவது, பூண் என புகலின்உம் – ஆபரணம்போல் விளக்கந்தருவது
என நூல்களிற் கூறப்படினும், பொருந்தார் – பகைவர், முறை அற புரிந்தால் –
முறைமைதவறத் தொழில்செய்தால், அ கணத்து – அந்தநொடியில்தானே,
அவர்தம் – அப்பகைவருடைய, முடிதலை – கிரீடமணிந்த தலையை,
துணிப்பதே-, முழுப்பூண் – பேரணி கலம்போல் விளக்கந்தருவதாம்: ழுநறைமலர்
குழலார் தமக்கு – நறுமண மலரையணிந்த கூந்தலையுடைய ஸ்திரீகட்கு, மெய்
அகலா நாணம்ஏ – அவருடைம்பைவிட்டு நீங்காத லஜ்ஜையென்பதுவே, நலம்
செய் – அழகையுண்டாக்குகின்ற, பூண் – ஆபரணமாகும்ழு, எனின்உம் –
என்றாலும், அமளிவாய் – (புருஷனோடு கலவிநிகழ்த்தும்) படுக்கையில்,
நாணம் நிகழ்வுஉறா நிகழ்ச்சிஏ – நாணம் நேர்தலில்லாமையாகிய தன்மையே,
நிறை உடை பெரும் பூண் அன்றோ – நிரம்பிய பேராபரணமாகு மல்லவோ?
(எ – று.)
பொறைஆடவர்க்கு வேண்டுமென்று வற்புறுத்துக் கூறப்பட்டிருப்பினும்
அப்பொறைக்குரிய இடத்து அதனை மேற்கொள்ளுதல் தக்கதேயன்றி,
முறையறப் பொருந்தார் புரிந்தபோது அப்பொறையை மேற்கொள்வது தகுதியன்
றென்பதாம். இவ்விஷயத்தைவிளக்கப் பின்னிரண்டடிகளை எடுத்துக்காட்டாகப்
பேசுகிறார்.
அரசவைப் புறத்தில் சௌபலன் சூதில் அழிந்த
நாளினும், எமை அடக்கி,
முரச வெங் கொடியோன் தேசு அழித்தனனால்; இன்றும்
அம் முறைமையே மொழிந்தான்;
புரசை வெங் களிற்றின் மத்தகம் பிளக்கும் போர் உகிர்
மடங்கல்போல், இன்னே,
துரிசு அறப் பொருது, கீசகன் உடலம் துணிப்பன், யான்,
துணைவரோடு’ என்றான்.
சௌபலன் சூதில் அழிந்த நாளின்உம் – சுபலனது புத்தி
ரனாகிய சகுனியோடு ஆடிய சூதாட்டத்தில் தோற்ற காலத்திலும், அரசு
அவைப்புறத்தில் – ராஜசபையிலே, (தீண்டாக்காலத்தில் திரௌபதியாகிய
உன்னைத் துரியோதனன் துச்சாதனனைக்கொண்டு கொணர்வித்துத்
துகிலுரிகையிலும்) எமை-(தன் தம்பியராகிய) எங்களை, அடக்கி – (வெகுண்டு
பகையழிக்காதபடி) தடுத்து, முரசம் வெம் கொடியோன் – முரசமென்ற
வெவ்விய கொடியையுடைய யுதிஷ்டிரன், தேசு அழித்தனன் – (எங்களுடைய)
பராக்கிரமத்தை வெளியிடவொட்டாது செய்தான்: இன்றுஉம் – இன்றைக்கும்,
அ முறைமைஏ – அந்தக்கிரமத்தின்படியே, மொழிந்தான் – (உன்னைப்
பரிபவப்படுத்திய கீசகனை அந்நிலையிலேயே யழிக்கவெட்டாது குறிப்பு)
மொழியால் தடுத்திட்டான்: புரசை வெம் களிற்றின் மத்தகம் பிளக்கும் போர்
உகிர் மடங்கல் போல் – கழுத்திடு கயிற்றையுடைய கொடிய மதயானையின்
மத்தகங்களைப் பிளக்கும் வல்லமையையுடைய போர்செய்யவல்ல
நகாயுதமானசிங்கததைப்போல, இன்னே – இப்போதே, பொருது – போர்செய்து,
துரிசு அற – (அன்னான் செய்த) குற்றம்நீங்க, கீசகன் உடலம் –
அந்தக்கீசகனுடைய உடம்பை, யான்-, துணைவரோடு – (அவனுடைய) தம்பி
மார்களுடனே, துணிப்பன் – பிளந்திடுவேன், என்றான் -: (எ – று.)
‘இக்கங்குல் புரிவது யாது?’ என்று வினாவிய திரௌபதிக்கு, வீமன்
‘இன்னே கீசகனுடலத்தைத் துணைவரோடு துரிசறத்துணிப்பன்’ என்று
விடைகூறியவாறு. தேசு-தேஜஸ்: ஒளி: வீரர்கட்குள் மிக்குத்தோன்றுதற்குக்
காரணமான பராக்கிரமம். ஆல் – தேற்றம்: ஈற்றசையுமாம்
மருத்தின் மா மதலை வார்த்தை கேட்டு, அந்த மருச்சகன்
மடக்கொடி உரைப்பாள்:
‘உரைத்த நாள் எல்லாம் சில் பகல் ஒழிய ஒழிந்தன,
ஒழிவு இலா உரவோய்!
“அருத்தியோடு ஒருவர் அறிவுறாவண்ணம் இருந்த
சீர் அழிவுறும்” என்னும்
கருத்து நின் தம்முற்கு உண்மையின் தடுத்தான், காலமும்
தேயமும் உணர்வான்.51.-தருமபுத்திரன் தடுத்ததற்குத் திரௌபதி காரணங் கூறுதல்.
இரண்டு கவிகள் – ஒருதொடர்.
(இ -ள்.) மருத்தின் மா மதலை வார்த்தை கேட்டு – வாயுதேவனுடைய
சிறந்தபுத்திரனாகிய வீமசேனனுடைய வார்த்தையைக் கேட்டு, அந்த மருச்சகன்
மடம் கொடி – அக்கினிதேவனிடத்தினின்று தோன்றியவளான
மடமைக்குணமுடைய கொடிபோன்ற அந்தத்திரௌபதி, உரைப்பாள் –
(பின்வருமாறு) சொல்பவளானாள்: ஒழிவு இலா உரவோய் – (நீங்குதலில்லாத
வலிமையுள்ளவனே! உரைத்த நாள் எல்லாம் – (பன்னிரண்டு வருஷம்
வனவாசமும் ஒருவருஷம் அஜ்ஞாதவாசமுஞ் செய்யவேண்டுமென்று)
சொல்லிய நாட்களெல்லாம், சில் பகல் ஒழிய ஒழிந்தன – சிலதினங்கள்போல்
நீங்கப் பெரும்பாலும் கழிந்திட்டன: அருத்தியோடு – (அஜ்ஞாதவாசகாலம்
இனிது கழியவேணுமே என்ற) விருப்பத்தோடு, ஒருவர் அறிவுறா வண்ணம்-
பிறரெவரும் அறியாதபடி, இருந்த – இருந்திட்ட, சீர் – நிலைமை, அழிவுறும் –
குலைந்திடும், என்னும் – என்கின்ற, கருத்து – எண்ணம், நின் தம்முற்கு –
உனது தமையனார்க்கு, உண்மையின் – இருத்தலால், காலம் உம் தேயம்உம்
உணர்வான் – (எந்தக்காலத்தில் எந்த இடத்தில் அடங்கியிருக்கவேணுமோ,
எந்தக்காலத்தில் எந்த இடத்தில் வலிமையை வெளிக்காட்டவேணுமோ அந்தத்)
தேசகாலங்களை யறிந்தவனான அந்தத்தருமன், தடுத்தான் –
(இராசசபையிலேயே நீ கீசகனை அப்போதே மரத்தினால் மோதி யொழிக்க
முயல்வதைத்) தடுத்திட்டான்; (எ – று.)
இதனால், யுதிஷ்டிரன் மானக்கேடுநிகழ்கையிலும் அதற்குப் பதில்
செய்யவொட்டாது என்னை யடக்கிச் சிறுமையை விளைக்கின்றானென்று
அவன்மீது வீமன் குறைகூறியதற்கு, அவன்செயல் தக்கதே யென்று திரௌபதி
காரணத்துடன் சமாதானங் கூறுகின்றாள். பாண்டவர் விராடநகரத்தில் பத்துமா
தங்கடத்தியபின்னரே கீசகன் திரௌபதியைக் காமித்தலாகிய இச்செயல்
நிகழ்ந்ததென்றும், கிட்டத்தட்ட வருஷம் முற்றுப்பெறுஞ் சமயத்தில்தான்
கீசகவதம் நிகழ்ந்த தென்றும், முதனூலால் அறியப்படும்; அக்கருத்தை
யுட்கொண்டே, ழுஉரைத்த நாளெல்லாஞ் சில்பகலொழிய வொழிந்தனழு என்று
திரௌபதிகூற்றாகக் கூறியது. மருச்சகன் – மருத்ஸக; காற்றை
நண்பனாகவுடையவன் என்ற காரணம்பற்றி அக்கினியைக் காட்டும் வடசொல்.
முன் – முன்னே பிறந்தவனுக்குக் காலவாகுபெயர்.
பாயும் வெஞ் சிறகர்க் கலுழன்முன் பட்ட பாந்தள்போல்,
கீசகன் பதைப்ப,
காயுமது இந்தக் கங்குலில் கடன் அன்று; ஒரு பகல்
இரு பகல் கழிந்தால்,
‘நேயமோடு இன்று வந்து கந்தருவர் நேர்பட மலைந்தனர்”
என்னும்
தூய சொல் விளையப் பொருவதே உறுதி’ என்ன,
அத் திரௌபதி சொன்னாள்.52.-திரௌபதி ழுஇரண்டொருநாள் கழித்தபின் கந்தருவர்கொன்றா
ரென்னும் வார்த்தை தோன்றுமாறு கீசகனை இரவிற்
கொல்லலாம்ழு எனல்.
பாயும் வெம் சிறகர் – (வானத்திற்) பாய்ந்து செல்ல வல்ல
வெவ்விய சிறகுகளையுடைய, கலுழன்முன் – கருடனுக்கு முன்னே, பட்ட –
அகப்பட்ட, பாந்தள் போல் – பாம்புபோல, இந்த கங்குலில் – இன்று இரவில்
தானே, கீசகன்-, பதைப்ப – உயிர் துடிக்க, (அவனை), காயுமது –
வெகுண்டுகொல்வது, கடன் அன்று – செய்யத்தக்க செயலன்று: ஒருபகல்
இருபகல் கழிந்தால் – இன்னும் இரண்டொருநாள்கள் கடந்திட்டால், ழுஇன்று –
இன்றைத்தினம், நேயமோடு – அன்போடு, வந்து-, – கந்தருவர்-, நேர் பட –
எதிராக நின்று, மலைந்தனர் – பொருதுகொன்றார்கள்ழு, என்னும் – என்கின்ற,
தூய சொல் – பரிசுத்தமான சொல், விளைய – (ஊரில் எங்கும்) பரவுமாறு,
பொருவதுஏ – போர்செய்து கொல்வதே, உறுதி – செய்யத் தக்க செயலாகும்,
என்ன-, அ திரௌபதி – அந்தத் திரௌபதி, சொன்னாள்-: (எ – று.)
ழுஇன்னே கீசகனுடலந் துணிப்பேன்ழு என்று வீமன் கூறியதனால், ழுகீசகன்
பதைப்பக் காயுமது இந்தக் கங்குலிற் கடனன்றுழு என்று அவன் கூறியதை
மறுத்து, இரண்டொருநாள் பொறுத்தே ஒருவியாஜம்வைத்து அத்தொழிலை
நிறைவேற்றவேணு மென்றாள் திரௌபதி யென்க.
‘ஐ’ என இவனும், தன்னை முன் பயந்த ஆர் அழல்
அனைய கற்புடைய
தையல்தன் மொழியைத் தானும் உட்கொண்டு, தகு
செயல் விரகுடன் சாற்றி,
வெய்ய தன் சினமும், தன் புய வலிபோல்
மேலுற மேலுற வளர,
நெய் உறு கனலின் பொங்கி, அக் கங்குல் நீந்தினான்,
வேந்தனுக்கு இளையோன்.53.-வீமன் அப்பேச்சை அங்கீகரித்து, இனிநிகழ்த்தவேண்டிய
செயலை உபாயம் பொருந்தச் சொல்லி அவ்விரவைமெல்லக்கழித்தல்.
தன்னை முன் பயந்த ஆர் அழல் அனைய கற்புஉடைய –
தன்னை முன்னேபெற்ற நிரம்பிய நெருப்புப்போலப் பிறராலணுகவொண்ணாத
கற்பையுடைய, தையல்தன் மொழியை – பெண்ணான திரௌபதியின் பேச்சை,
இவன்உம் – இந்தவீமசேனனும், ஐஎன – ஐயென்று சொல்லி, தானும்-,
உட்கொண்டு – அங்கீகரித்து, (பிறகு), தகு செயல் – (அந்தத் திரௌபதி
சொல்லியவாறு நிகழ்த்தத்) தக்கசெயலை, விரகுடன் – தந்திரமாக, சாற்றி-
சொல்லிவிட்டு,- வெய்ய தன் சினம்உம் – கொடிய தன்கோபமும், தன் புயம்
வலிபோல் – தன்னுடைய தோள்வலிபோல, மேல்உற மேல்உற வளர –
மேலாக மேலாக வளராநிற்க, நெய் உறு கனலின் – நெய்வார்க்கப் பெற்ற
அக்கினிபோல, பொங்கி -, வேந்தனுக்கு இளையோன் – தருமனுக்குத்
தம்பியாகிய அந்தவீமன், அ கங்குல் நீந்தினான் – அவ்விரவை மெல்லக்
கடத்தினான்; (எ – று.)
ழுஇக்கங்குலில் வலுவில் கீசகனிருக்கு மிடத்துச்சென்று அவனைக்
கொல்லலாகாது: கொன்றால், அஜ்ஞாதவாசகாலம் முடிவதற்குள் நாம்
வெளிப்பட்டு விடுவோ மாதலால், முன்னைய ஏற்பாட்டின் படி
மீண்டும்வனவாசாதிகள் செய்ய நேரிடும்: ஆகவே, அவ்வாறான
தொந்தரைக்கு இடமில்லாமல் ழுவண்ணமகளின்கணவன்மாரான கந்தருவர்
நேரேவந்து மலைந்து கொன்றார்கள்ழு என்று யாவரும் கருதுமாறு
இரண்டொருபகல் கழித்துக் கருதிய தொழிலைச் செய்ய வேணும்ழு என்று
திரௌபதி கூற, வீமனும் அவ்வாறே செய்யலாமென்று உடன்பட்டு,
அவள்நினைவுமுற்றுமாறு செய்யப்படவேண்டிய செயலுக்கு உபாயமுங்
கூறிவிட்டு, மாற்றானைப் பற்றி நினைக்குந்தோறும் தன்மனத்துச் சினமும்
தோள்வலியும் மிகாநிற்க, அன்றையிரவை அரிதிற் கழித்தன னென்பதாம். ஐ –
அங்கீகாரக்குறிப்பு: விரைவுக்குறிப்பு என்பாரு முளர்.
அற்றை நாள் இரவில் தன் பரிதாபம் ஆறிய
அறிவுடைக் கொடியும்,
மற்றை நாள், அந்தச் சுதேட்டிணை கோயில் மன்னவன்
மைத்துனன் வரலும்,
கற்றை வார் குழலில் பூழியும், கண்ணீர் கலந்த வான்
கொங்கையும், சுமந்து, ஆங்கு,
ஒற்றை மென் கொடிபோல் நின்றனள்; அவனும், உளம்
கவர் அவள் நிலை கண்டான்.54.-மற்றைநாளில் பூழிபடிந்தகூந்தலும் கண்ணீர்கலந்த
கொங்கையுமாய் அரண்மனையிலிருக்கும்
வண்ணமகளினிலையைக்கீசகன் காணுதல்.
அற்றை நாள் இரவில் – அன்றைத்தினத் திரவில், தன்
பரிதாபம் – தன் வருத்தம், ஆறிய – தணியப்பெற்ற, அறிவுஉடை –
நல்லறிவையுடைய, கொடிஉம் – கொடிபோன்றவளான திரௌபதியும், மற்றை
நாள் – மற்றைநாளிலே, அந்த சுதேட்டிணை கோயில் – அந்தச்
சுதேஷ்ணையென்ற மன்னவன்தேவி வசிக்கின்ற அரண்மனையிலே, மன்னவன்
மைத்துனன் – விராடமன்னவனுடைய மைத்துனனாகிய கீசகன், வரலும் –
வந்தவுடனே,- ஆங்கு – அங்கே, கற்றை வார் குழலில் – தொகுதியான நீண்ட
கூந்தலிலே படிந்த, பூழிஉம் – புழுதியையும், கண்ணீர் கலந்த வான்
கொங்கைஉம் – கண்ணீர் பொருந்திய பெரிய தனங்களையும், சுமந்து –
தாங்கிக்கொண்டு, ஒற்றை மெல்கொடி போல் – ஒரு மெல்லியகொடிபோல,
நின்றனள் -; அவன்உம் – அந்தக் கீசகனும், உளம் கவர் – மனத்தைக் கவர்
கின்ற, அவள் நிலை-அவ்வண்ணமகளின் நிலைமையை, கண்டான்-; (எ – று.)
‘பரிதாபமாறிய வறிவுடைக்கொடி மற்றை நாள் குழலிற் பூழியும்
கண்ணீர்கலந்த கொங்கையுஞ் சுமந்து நின்றனள்’ என்றதனால், அந்தக்
கீசகனோடு சம்பாஷித்தற்காகவே அந்நிலைமையைப் பூண்டாளென்பது
பெறப்படும். கொடி – ஆகுபெயர்.
கலைமதி கண்ட காந்தக்கல் என உருகிச் சிந்தை,
தலைமகன் அல்லான், வஞ்சம் தனக்கு ஒரு
வடிவம் ஆனோன்,
நிலை பெறு கற்பினாளை நேர்உற நோக்கி, பின்னும்,
உலைவு உறு காதல் மிஞ்ச, உரன் அழிந்து,
உரைக்கலுற்றான்:55.-கீசகன் அவளைக் கண்டதும் காதல்விஞ்சிச்
சொல்லத் தொடங்குதல்.
தலைமகன் அல்லான் – சிறந்தகுணமுள்ள மகனல்லாதவனும்,
வஞ்சம் தனக்கு ஒரு வடிவம் ஆனோன் – வஞ்சமென்பதே ஒரு
வடிவுபடைத்தாற் போன்றவனுமான கீசகன்,-நிலை பெறு கற்பினாளை-
நிலைத்துள்ள கற்பையுடைய திரௌபதியை, நேர் உற நோக்கி –
நேராகப்பார்த்து,-கலைமதி கண்ட-(பதினாறு) கலைவரையும்
வளருந்தன்மையுள்ள சந்திரன் தோன்றக்கண்ட, காந்தம் கல் என – சந்திர
காந்தக்கல்போல, சிந்தை உருகி – மனமுருகி, பின்உம் – மேலும் [முன்னிலும்
மிகுதியாக], உலைவு உறு காதல் மிஞ்ச-வருந்துதற்குக் காரணமான
ஆசைநோய் விஞ்சாநிற்க, உரன் அழிந்து – மனவலிமை குன்றி, உரைக்கல்
உற்றான் – சொல்லத் தொடங்கினான்; (எ – று.)-கீசகன் உரைக்கலுற்றதை
மேற்கவியிற் காண்க.
ழுகலைமதிகண்டழு என்று அடைமொழி கொடுத்ததனால், காந்தம் –
சந்திரகாந்தம் ஆயிற்று.
இதுமுதற் பதினொருகவிகள் – முதற்சீரும் நான்காஞ்சீரும்
விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்
‘மன்னவன் வாழ்வும், இந்த வள நகர் வாழ்வும், எல்லாம்
என்னது வலி கொண்டு என்பது, இன்று, உனக்கு
ஏற்பக் கண்டாய்;
உன்னை மெய் காக்கும் தேவர் உறுதியும், உரனும், கண்டாய்;
என்னைகொல், இனி உன் எண்?’ என்று, இரு
கரம் கூப்பினானே.56.-கீசகன் தன்னை மணக்குமாறு காரணங்காட்டிக் கூற,
திரௌபதி சங்கேதமான இடத்தைக் கூறுதல்.
மன்னவன் வாழ்வுஉம் – விராடராசனது நல்வாழ்க்கையும்,
இந்த வளம் நகர் வாழ்வுஉம் – இந்த வளமுள்ள விராடநகரம் (மேம்பட்டு)
வாழ்ச்சி பெற்றிருப்பதுவும், எல்லாம் – ஆகிய யாவும், என்னது வலிகொண்டு
– என்னுடைய வலிமையினாலேயே, என்பது-என்கின்ற இவ்விஷயத்தை, இன்று
– இக்காலத்து, உனக்குஏற்ப – உன் மனத்திற்குத் தெரிய, கண்டாய்-(நீ)
அறிந்துள்ளாய்: உன்னை மெய்காக்கும் – உன்னுடலைக் காக்கின்ற, தேவர் –
கந்தருவதேவரின், உறுதி உம் – (காக்குந்தொழிலிற் கொண்டுள்ள)
உறுதியையும், உரன்உம் – வலிமையையும், கண்டாய் – கண்டறிந்துள்ளாய்:
இனி-, உன் எண் – உன் கருத்து, என்னை கொல் – யாதோ? என்று -, இரு
கரம் – (தன்) இரண்டுகைகளையும், கூப்பினான் – குவித்து(த் தன்மீது
மனமிரங்குமாறு) வேண்டிக்கொண்டான்; (எ – று.)
ழுவிராடமன்னவன் பகைவென்று மேம்பட்டிருப்பதும், இந்த நகரம்
மற்றைநகரினும் பகைத்துன்பம் முதலியன இல்லாமல் இனிதிருப்பதும் எல்லாம்
என் வலிமைகொண்டே யென்பது, விராடனிடத்து நீ முறையிடவும் அவன்
என்னைக் கேளாமையால் இனிது விளங்கும்: அன்றியும், என்வலிமைக்கு
முன்னே அஞ்சியதனால்தான் உன்மெய்காக்குந் தேவரும் என்னை இப்போது
உபேட்சித்திருக்கின்றன ரென்பதும் நீ ஆராய்ந்து தெளியலாம்: இந்நிலையில்,
இனி உன் எண்ணம் என்னையோ? என்மீது மனமிரங்குவாய்,ழு என்று கீசகன்
திரௌபதியைக் கைகூப்பித்தொழுதா னென்பதாம். எண் = எண்ணம்:
கருவிப்பொருள்விகுதி புணர்ந்துகெட்ட பெயர்.
கருத்து இனி முடியும்’ என்று, கடுங் கனல்
முகத்தில் தோன்றும்
திருத் தகு பாவை, அந்தத் தீயவன்தன்னை நோக்கி,
‘வருத்தம் நீ உறவும் முன்னர் மறுத்தனன்; மரபினாலும்,
சரித்திரத்தாலும், கொண்ட தவ விரதத்தினாலும்.57.- இரண்டுகவிகள் ஒருதொடர்: திரௌபதி கீசகனிடம்
முன்னர் மறுத்தற்குக் காரணங்கூறி இணங்கினாள்போன்றிருத்தலைத் தெரிவிக்கும்.
கடுங் கனல் முகத்தில் தோன்றும் – கொடிய
அக்கினியின்முகத்திலிருந்து தோன்றிய, திரு தகு பாவை – அழகு
தக்கிருக்கப்பெற்றபதுமைபோன்றவளான திரௌபதி, இனி கருத்து முடியும்
என்று-ழுஇனி (தான்எண்ணிய) எண்ணம் [கீசகவதை] (இனிது) நிறைவேறும்ழு
என்று நினைத்து,அந்த தீயவன் தன்னை நோக்கி -(பிறன்தாரத்தை
நச்சுதலாகிய) தீயகுணத்தையுடையவனான அந்தக்கீசகனைப் பார்த்து,-ழுநீ-,
வருத்தம் உறஉம் – (என்னைப்பெறும்பொருட்டு) வருத்தமடையாநிற்கவும்,
மரபினால்உம் – (நான்) பிறந்தகுலத்தினாலும், சரித்திரத்தால்உம் –
(மேற்கொண்ட) நல்லொழுக்கத்தினாலும்,கொண்ட தவவிரதத்தினால்உம் –
மேற்பூண்ட தவவொழுக்கத்தினாலும்,முன்னர் – முன்பு, மறுத்தனன் –
(உன்கருத்திற்கு இசையாது) மறுத்தேன்: (மேலும்) (எ – று.)
திரௌபதி கீசகனைத் தான் சேர முதலில் மறுத்ததற்குக் காரணம்-
தன்மரபு சரித்திரம் [கற்புநெறிவழுவாது நடக்கை] ஐம்பொறிகளைக் கண்டபடி
போகவொட்டாது நிறுத்திவைக்குங்கொள்கை என இவை முக்கியமானவை:
இவை 57-ஆஞ் செய்யுளிற் கூறப்பட்டன
கந்தருவரும் மற்று என்னைக் காப்பது மறந்தார்போலும்!
இந்திரன் எனினும் மாதர் எளிமையின் ஒருப்பட்டு எய்தார்;
புந்தியில் ஒன்றும் கொள்ளேல்; ஆர் இருள்
பொழுதில், இன்று,
சந்து அணி குவவுத் தோளாய்! தனித்து நீ வருதி!’ என்றாள்.58.- இரண்டுகவிகள் ஒருதொடர்: திரௌபதி கீசகனிடம்
முன்னர் மறுத்தற்குக் காரணங்கூறி இணங்கினாள்போன்றிருத்தலைத் தெரிவிக்கும்.
கந்தருவர் உம் – (என்னைக் காவல்புரியும்) கந்தருவர்களும்,என்னை -, காப்பது- காத்தற்றொழிலை, மறந்தார்போலும்-:
(மற்றும்), இந்திரன் எனின்உம் – (தம்மைக் காதலிப்பவன்) தேவேந்திரனே
யானாலும், மாதர் – மகளிர், எளிமையின் – இலேசில், ஒருப்பட்டு எய்தார் –
இசைந்து வந்துவிடமாட்டார்கள்: (ஆகவே நான் முன்பு மறுத்து உன்னை
உபேட்சித்துச் சொன்னேன்: அங்ஙன் சொன்னதற்காக), புந்தியில் – (உன்)
கருத்திலே, ஒன்றுஉம் கொள்ளேல் – ஒன்றும் வைத்துக்கொள்ளாதே: சந்து
அணி குவவு தோளாய் – சந்தனக்குழம்பை யணிந்த திரண்ட
தோள்களையுடையவனே! இன்று – இன்றைத்தினம், ஆர் இருள் பொழுதில்
– நிரம்பிய இருளைக் கொண்டஇரவிலே, நீ -, தனித்து-, வருதி – வருவாய்ழு
என்றாள்-என்று கூறினாள்; (எ – று.)
58-ஆஞ் செய்யுளிலே கந்தருவர் தன்னைப் பிற ஆடவர் காதலித்து
வலிய மணக்காதபடி பாதுகாப்பரென்று கருதியிருப்பதாக நடித்தமை நான்காம்
காரணம். மேலும் ழுஇந்திரனெனினும் மாதர் எளிமையினொருப்பட்டெய்தார்ழு
என்பது மற்றொரு காரணம்; ஆக, இவ்வைந்தும் காரணங்கள்: இப்போதுதான்
கீசகனைச்சேர உடன்படக்காரணம், இவ்வைந்தில் அச்சாணி போன்ற
காரணம் தப்பினமையே யென்றற்காக ழுகந்தருவருமற்றென்னைக்காப்பது
மறந்தார்போலும்ழு என்று வஞ்சகமாகக் கற்பித்துக்கொண்டு கூறுகின்றாளென்க.
இங்குள்ள நான்காங்காரணம் 58-ஆஞ்செய்யுளின் முதலடியால்
ஊகிக்கப்படுவதாகும். தனித்து வருதியென்று கூறியவள் இன்னவிடத்துவருக
என்று குறியிடத்தை மேற்செய்யுளிற் கூறுவள். மற்றென்னை, மற்று – வினைமாற்று
அக் கொடி உரைத்த மாற்றம் அவன் செவிக்கு
அமுதம் ஆகிப்
புக்கு, உயிர் நிறுத்தி, மெய்யும் புளகு எழ, இளகி நெஞ்சம்,
மிக்கது ஓர் வேட்கை கூர, விடுத்தலின், வேந்தன் கோயில்
கொக்கின்மேல் குயில்கள் கூவும் குளிர் பொழில்
குறியும் சொன்னாள்.59.-திரௌபதி கீசகனுக்குக் குறியிடங் கூறுதல்
அ கொடி உரைத்த மாற்றம் – கொடிபோன்றவளான அந்தத்
திரௌபதி கூறிய சொல், அவன் செவிக்கு – அந்தக்கீசகனுடைய காதுக்கு,
அமுதம் ஆகி புக்கு – அமுதமயமாய் (ச் செவி வழியாக உள்ளே) புகுந்து,
உயிர் நிறுத்தி – (தவித்துக்கொண்டிருந்த அவனுடைய) பிராணனை
நிலைத்திருக்கச்செய்து, (அதனால்), மெய் புளகு எழஉம் – அவனுடம்பு
மயிர்க்கூச்சு எறியவும், நெஞ்சம் இளகி மிக்கது ஓர் வேட்கை கூர(உம்) –
மனங்குழைந்து மிகுந்ததான ஒப்பற்ற ஆசை விஞ்சவும், விடுத்தலின் –
செய்ததனால்,-(அப்போது வண்ணமகளாகிய திரௌபதி), வேந்தன் கோயில் –
அரசனுடைய அரண்மனையைச் சார்ந்துள்ள, கொக்கின்மேல் குயில்கள் கூவும்
குளிர் பொழில் – மாமரத்தின்மீது குயில்கள் கூவாநிற்கும் குளிர்ந்த
சோலையாகிய, குறிஉம் – குறியிடத்தையும், சொன்னாள்-; (எ – று.)
நர்த்தனசாலையைக் குறியிடமாகக் கூறினாளென்று முதனூலிலுள்ளது:
பொழிலிடத்துக் கூடுவரென்று தமிழ்நூல்களிற்பயிலுவதால், நூலாசிரியர்
குளிர்பொழிற் குறியுஞ் சொன்னாளென்று முதலிற்கூறி, மேற்செய்யுளில்
இன்பமண்டபத்து வம்மின் என்றனளென்பர். ழுமாமரத்தைக் கொக்கு என்பது
துளு என்றனர், நச்சினார்க்கினியர். விடுத்தலின் – தங்குதலால்
என்பாருமுளர்.
குருட்டு இயல் மதியினானை, கோது இலா அறிவில் மிக்காள்,
மருட்டினள் ஆகி, ‘அந்த வளர் தடம் பொழிலின் ஓர் சார்,
இருட்டிடை நிலவு காட்டும் இன்ப மண்டபத்தில் வம்மின்;
உருள் தடந் தேரோய்!’ என்றாள்; அவனும்
அஃது ஒருப்பட்டானே.60.-குறியிடமாகியபொழிலிலுள்ள மண்டபத்தில் வருமாறுகூற,
கீசகனும் ஒருப்படுதல்.
கோது இலா அறிவில் மிக்காள் – குற்றமற்ற அறிவினால்
மேம்பட்டவளான திரௌபதி,-குருடு இயல் மதியினானை – குருட்டுத்தன்மை
பொருந்திய புத்தியையுடையவனான அந்தக்கீசகனை, மருட்டினள் ஆகி –
மதிமயங்கச்செய்தவளாய்,-ழுஅந்த வளர் தடம் பொழிலின் ஓர் சார்-(நான்
குறித்த) அந்தவளர்ந்த பெருஞ்சோலையின் ஒருபுறத்திலுள்ள, இருட்டிடை
நிலவு காட்டும் – மிக்க இருட்டிலும் நிலாவெளிச்சம்போன்று பளிச்சென்று
தோன்றுவதாகிய, இன்பம் மண்டபத்தில் – இனிதான மண்டபத்தில், உருள் தட
தேரோய் – (இனிதுஉருண்டு செல்லுகின்ற) உருளைகளையுடைய
பெருந்தேரையுடையவனே! வம்மின்-வாருங்கள்,ழு என்றாள் – என்று (கூடுதற்கு
உரிய இடத்தைக்) கூறினாள்; அவன்உம்-அந்தக் கீசகனும், அஃது-அந்த
வண்ணமகளின் பேச்சுக்கு, ஒருப்பட்டான் – சம்மதித்தான்;
ழுமுன்புதன்னை வேண்டாமையை அத்துணைகாட்டியவள் இப்போது
இசைந்து, இருட்பொழுதில் தனித்துவருதி என்கிறாளே? இவள் நம்மைக்கொல்ல
விரகு தேடியிருந்தால் என்செய்வது?ழு என்று கருதி அதற்காக ஆராய்ச்சியும்
செய்யவேண்டியிருக்க அஃது சிறிதுமின்றி, கீசகன் இசைந்ததனால், அவனை
ழுகுருட்டியன் மதியினான்ழு என்கின்றார், தேரோய் வம்மின் – ஒருமைப்
பன்மைமயக்கம். உருள் என்பது தடந்தேரோய் என்ற விளியோடு இயைந்து,
அமங்கலப்பொருளைக் காட்டுவதாதலையும் அறிக. வம்மோஎன்ற பாடத்துக்கு,
வம்-வாரும் என்பதன் மரூஉ: ஓ-அசை: மோ-அசையுமாம்.
குறி அவன்தனக்கு நேர்ந்த கொடிய வெங் கொலை
வேற் கண்ணாள்,
தறி பொரு களிற்றின் அன்ன, சமீரணன் மகனை எய்தி,
செறிவொடு, அக் காளையோடு செப்பிய யாவும் செப்பி,
பிறிது ஒரு கருத்தும் இன்றி, பெரும் பகல் போக்கினாளே.61.-திரௌபதி அச்செய்தியைவீமனிடத்துக்சொல்லிவிட்டு
அப்பகலைப் போக்கியமை
அவன் தனக்கு குறி நேர்ந்த – அந்தக்கீசகனுக்குக்
கூடுமிடத்தை உடன்பட்டுக்கூறிய, கொடிய வெம் கொலை வேல் கண்ணாள்-
மிகக்கொடிய கொலைசெய்யவல்ல வேற்படை போன்ற கண்களையுடையவளான
அந்தத்திரௌபதி, தறி பொரு களிற்றின் – கட்டுத்தறியைமோதி முறிக்கின்ற
மதயானையையொத்த, அன்ன சமீரணன் மகளை- அந்தவாயுவின்புத்திரனான
வீமசேனனை, எய்தி-அடைந்து,-செறிவொடு- மனநெருக்கத்தோடு, அ
காளையோடு செப்பிய – இளவெருதுபோன்ற அந்தக்கீசகனோடு சொல்லிய,
யாஉம் – எல்லாவற்றையும், செப்பி-சொல்லி, பிறிது ஒரு கருத்துஉம் இன்றி –
(கீசகன் இறப்பதை எப்போது காணப்போகிறோம் என்ற எண்ணத்தைத்
தவிர்த்து) வேறோரெண்ணமுமில்லாமல், பெரும் பகல் – நெடிதாகத்தோன்றும்
அந்தப்பகற்காலத்தை, போக்கினாள் – அரிதிற்கழித்தாள்; (எ – று.)-தாம்
ஒருகாரியத்தைமுடிவுபெறக்காணும் அவாவுள்ளவர்க்கு அச்செயல் நிகழ்வதற்கு
முற்பட்டகாலம் நெடிதாகத்தோன்றல் இயற்கை.
எல்லை எண் திசையும் போன இருள் எலாம் மீண்டு துன்ற,
எல்லையின் தலைவன் ஆன இரவியும் குட வெற்பு எய்த,
எல்லை இல் காதலோனும் இடை இருளிடையே, அந்த
எல்லையை நோக்கிச் சென்றான், யமன்திசை
என்ன மன்னோ.62.-சூரியன் அத்தமித்துஎங்கும் இருள்சூழ, கீசகன்
குறியெல்லையை நோக்கிச்செல்லுதல்.
எண் திசை எல்லைஉம் போன – எட்டுத்திக்கினெல்லை
வரையிலும் ஒதுங்கிச்சென்ற, இருள் எலாம் – இருட்டுமுழுவதும், மீண்டுதுன்ற
– மீண்டு வந்துநெருங்கவும், எல்லையின் தலைவன் ஆன இரவி-
பகற்போதுக்குத் தலைவனான சூரியன், குட வெற்பு எய்தஉம்-
மேற்குமலையாகிய அத்தமனபருவதத்திலே போய்ச்சேரவும். எல்லைஇல்
காதலோன்உம்-(இவ்வளவு என்று) அளவிடமுடியாத காதலையுடையவனான
அந்தக்கீசகனும், இடை யிருளிடைஏ – அந்தநள்ளிரவிலே, யமன் திசை என்ன
– யமனிருக்குமிடம் (நாடிச்செல்வது) போல, அந்த எல்லையை நோக்கி –
(வண்ணமகள் கூறிய) அந்த இடத்தை நோக்கி, சென்றான்-; (எ – று.)-மன் ஓ-
ஈற்றசை.
கீசகன் இப்போது செல்லும் பயணம் அவன்மரணத்துக்கே ஏதுவாதலால்,
ழுஎல்லையைநோக்கிச் சென்றான் யமன்திசையென்னழு என்று தம் குறிப்பைத்
தெரிவிக்கிறார். இரண்டாமடியில், எல்லை என்பதில், ஐ-சாரியை,
திரிபுஎன்னுஞ்சொல்லணிஇதிற் காண்க. இருள்-இரவுக்கு இலக்கணை.
இடையிருள் – இருளிடை யென்பது முன்பின்னாகமாறிவந்தது:
இலக்கணப்போலி.
வடு அறத் தெவ்வர் போரும், மன்னவன் உணவும், கையால்
அடு தொழிற்கு உரிய செம் பொன் வரை இரண்டு
அனைய தோளான்,
உடு முகத்து இன்மை வானம் ஒளி அற இருண்ட கங்குல்
நடுவுறு அப் பொழுதில், செவ்வி நவ்வியர்
கோலம் கொண்டான்.63.-வீமன் பெண்கோலங்கொள்ளுதல்
வடு அற-குற்றம் நீங்க, தெவ்வர் போர்உம் – பகைவர்
போரையும், மன்னவன் உணவுஉம் – அரசனுணவையும், கையால் –
கையினால்,அடு-அடுகின்ற, தொழிற்கு-செய்கையில், உரிய-உரிமை பூண்ட,
செம்பொன் வரை இரண்டு அனைய தோளான் – செம்பொன் மயமான
மேருமலை இரண்டையொத்த தோளையுடையவனான வீமன்,-உடு முகத்தின் –
நட்சத்திரங்களைத் தன்னிடத்திலேயுடைய, மைவானம் – கருநிறமாகத்
தோன்றுகின்ற ஆகாயம், ஒளி அற இருண்ட-ஒளியற்று இருண்டுகிடக்கிற,
கங்குல்-இராப்போதானது, நடுஉறு – நடுப்போதான [அர்த்தராத்திரியாய்
விட்ட],அ பொழுதில் – அந்த வேளையிலே, செவ்வி நவ்வியர் – அழகிய
மான்போன்ற கண்களையுடையரான பெண்டிரின், கோலம் – அலங்காரத்தை
[பெண் வேடத்தை], கொண்டான் – மேற்கொண்டான்; (எ – று.)
அடுதொழில் என்பது – இரட்டுறமொழிதலால், சமைத்தல் கொல்லுதல்
என்ற இருபொருளைத் தந்தது. உடுமுகத்து இன்மை-நட்சத்திரங்கள்
தம்மிடத்து இல்லாமையால் என்று கூறினாரு முளர்: இது எவ்வாறு
பொருந்துமென்பது புலப்பட வில்லை. உடுமுகத்தின் என்று வானத்திற்கு
அடைமொழி கொடுத்தமையால், ஒளியையுண்டாக்கும் சந்திரனைப்
பெற்றிருக்கவில்லை அக்கங்குற்போது என்பது பெறப்படும். மை, வானத்திற்கு
இயற்கை யடைமொழி. நடுவுற பொழுதில் என்றுபிரித்தலும் உண்டு
அங்கியில் தோன்றும் நாளாயனியுடன், அள்ளிக்கொள்ளப்
பொங்கிய இருளில், முன்னம் புகன்ற அப் பொங்கரூடு
தங்கிய தவள மாடம்தன்னிடைப் புகுந்து, சான்ற
இங்கிதத்துடனே நோக்கி, இருந்தனன், இமைப்பு இலாதான்.64.-குறித்தபொழிலிடையே திரௌபதியுடன் வீமன்
பெண்கோலத் தோடுசென்று கீசகன்வருகையைநோக்கியிருத்தல்.
(அங்ஙனம் மாதரார்கோலம் பூண்ட வீமன்),-அங்கியில்
தோன்றும் நாளாயணியுடன் – நெருப்பினின்று தோன்றிய
நாளாயணியென்பாளுடனே, அள்ளிக்கொள்ள பொங்கிய இருளின் –
அள்ளிக்கொள்ளலாம்படி மிகச் செறிந்த இருட்டிலே, முன்னம் புகன்ற அ
பொங்கரூடு-முன்பு கூறிய அந்தச் சோலையிலே, தங்கிய – பொருந்திய,
தவளம் மாடந்தன்னிடை – வெண்ணிற மாடத்திலே, புகுந்து – போய்ச்சேர்ந்து,
சான்ற இங்கிதத்துடன் – மிக்க கவனத்தோடு, இமைப்பு இலாதான் –
கண்கொட்டாதவனாய், நோக்கி இருந்தனன் – (கீசகன்வருகையை)
எதிர்பார்த்திருந்தான்; (எ – று.)
நாளாயணியென்பது – மௌத்கல்யமுனிவரின் பார்யையான
இந்திரசேனையின் பெயர்: இவளே பிறகு திரௌபதியாகப் பிறந்தாள். இந்தச்
சரித்திரத்தை ஆதிபருவத்துத் திரௌபதிமாலையிட்ட சருக்கத்து 72-
ஆஞ்செய்யுட்குமேல் காண்க. அள்ளிக்கொள்ளப் பொங்கிய விருள் –
தன்மைத்தற்குறிப்பேற்றம். இங்கிதம் – (பிறனிடம் தோன்றுகின்ற) குறிப்பு;
மிக்க கவனம் என்றபொருளை இங்கு இலக்கணையால் தந்தது. தங்கிய
கனகமாடந்தன்னிடை யென்று பிரதிபேதம்.
அணங்கு அன சாயலாளை அப்புறம் கரந்து வைத்து,
மணம் கமழ் அலங்கல் மார்பன் மண்டபத்து இருந்த காலை,
பிணம் கலன் அணிந்தது அன்ன, பேர் எழில்
பெற்றியான், நெஞ்சு
உணங்க, நாப் புலர, வந்து, அவ் உயர்
பொழிலூடு சேர்ந்தான்65.-திரௌபதியைஒருபுறத்தில் மறைத்துவைத்திட்டு
வீமசேனன்இருக்க, கீசகன்அப்பொழிலூடு சேர்தல்.
அணங்கு அன – தெய்வப்பெண்போன்ற, சாயலாளை –
மென்மையான அழகையுடைய திரௌபதியை, அப்புறம் – அங்கு ஒருபுறமாக,
கரந்து வைத்து – மறைந்திருக்குமாறு வைத்திட்டு,-மணம் கமழ் அலங்கல்
மார்பன் – நறுமணம் வீசுகின்ற மலர்மாலையை யணிந்த மார்பையுடையனான
(பெண்வேடம்பூண்டிருந்த) வீமன், மண்டபத்து இருந்த காலை – மண்டபத்தி
லிருந்தபோது,-பிணம் கலன் அணிந்தது அன்ன பேர் எழில் பெற்றியான் –
பிணத்துக்கு அணிகல னணிந்தாற்போன்று அலங்காரத்தாற் பேரெழில்படைத்த
தன்மையுடையனான அந்தக்கீசகன், (காமதாபத்தால்), நெஞ்சு உணங்க –
இதயம் வாடவும், நா புலர – நாக்குவரளவும், வந்து-, அ உயர் பொழிலூடு –
ஓங்கிய மரங்களைக்கொண்ட அந்தச்சோலையிலே, சேர்ந்தான்-; (எ – று.)-
கவிஞர் கீசகனிடத்து அவனது ஒழுக்கக்கேட்டாற் கொண்ட அவமதிப்பினாலும்,
விரைவில் அந்தக் கீசகன் பிணமாகக்கிடக்கப்போவதனாலும், அவனை,
ழுபிணங்கலனணிந்ததன்ன பேரெழிற்பெற்றியான்ழு என்றது.
சாந்தினால் மெழுகிய தவள மாளிகை
ஏய்ந்த பொன்-தூணிடை இலங்கும் மின் எனச்
சேர்ந்து உறை பெண் உருக் கண்டு, சிந்தையில்
கூர்ந்த பேர் ஆர்வமோடு இறைஞ்சிக் கூறுவான்66.-அம்மாளிகையிற்பொற்றுணைச்சேர்ந்திருந்த பெண்ணுருவைக்
கண்ட கீசகன் ஆர்வங்கொண்டுகூறலுறுதல்.
சாந்தினால் – (அரைத்த) சுண்ணாம்பினால், மெழுகிய-
பூசப்பெற்றுள்ள, தவளம் மாளிகை – வெண்ணிறமுள்ள மாளிகையிலே, ஏய்ந்த-
பொருந்திய, பொன் தூண்இடை – பொற்கம்பத்தினிடத்தை, இலங்கும் மின் என
சேர்ந்து-விணங்குகின்ற மின்னல் போலச் சார்ந்து, உறை-வசிக்கின்ற, பெண்
உரு-பெண்வடிவத்தை, கண்டு-பார்த்து,(கீசகன்), சிந்தையில் கூர்ந்த பேர்
ஆர்வமோடு – மனத்திலே மிகுந்த காதலோடு, இறைஞ்சி – வணங்கி,
கூறுவான் – (பின்வருமாறு) சொல்லலானான்; (எ – று.)-கீசகன் ஆர்வமோடு
கூறுவதை மேற்கவியிற் காண்க.
பெண்ணுருஎன்றதனால் – இயற்கையிற் பெண்ணல்ல:
பெண்ணுருக்கொண்ட ஆடவனான வீமன் எனக் காட்டியவாறு.
அனுவாதத்தால் வீமசேனன் பெண்ணுருக்கொண்டிருந்தமையைத் தெரிவித்தார்.
இதுமுதல் இருபத்தொருகவிகள் – மூன்றாஞ்சீரொன்று மாச்சீரும்,
மற்றவை விளச்சீர்களுமாகிவந்த அளவடிநான்குகொண்ட கலிவிருத்தங்கள்
என் பெருந் தவப் பயன் என்று அறிந்திலேன்;
மின் புரை மருங்குலாய்! வேட்கை விஞ்சலால்,
புன் பிழை செய்தனன்; பொறுத்தி, நீ!’ என,
அன்புடன் சிலம்பு அணி அடியில் வீழ்ந்து, மேல்,67.-ஆதரத்தாற் சிலகூறிக்
கீசகன் பெண்ணுருவின்தாளிற்பணிந்து வேண்டுதல்.
நான்கு கவிகள் – ஒருதொடர்.
(இ -ள்.) ழுமின் புரை மருங்குலாய்-மின்னலையொத்த இடையை
யுடையவளே! என் பெருந் தவம் பயன் என்று – என்னுடைய (முற்பிறவியிற்
செய்த) பெருத்த நல்வினைப்பயனாகத் தோன்றியுள்ளாய் நீ என்பதை,
அறிந்திலேன்-(முன்னர்) அறியாதவனாய்விட்டேன்: (அதனால்), வேட்கை
விஞ்சலால்-காதல் விஞ்சியதனால், புல் பிழை செய்தனன் – (உன்திறத்திற்)
சிறிய பிழையைச் செய்திட்டேன்: நீ பொறுத்தி-(யான் உன்திறத்துச் செய்த)
சிறுபிழையைப் பொறுப்பாயாக,ழு என-என்று, அன்புடன்-காதலோடு, சிலம்பு
அணி அடியில் – நூபுரமணிந்த பாதத்தில், வீழ்ந்து – விழுந்து பணிந்து, மேல்
– பிறகு,-(எ – று.)-ழுஎனா மொழிபல கூறினான்ழு என்று எழுபதாங்கவியில்
தொடர்ந்து முடியும். கீசகன்செய்த பிழையை 21 – முதல் 29-வரையிலுள்ள
செய்யுள்களிற் காண்க
பைங் குலைக் குரும்பையைப் பழித்த கொங்கையாய்!
மங்குலைப் புழுகு அளை வைத்த கூந்தலாய்!
கங்குலில் கால் வழி காட்ட வந்தது, இன்று,
இங்கு உலப்புறும் எனது ஆவி ஈயவோ?68.-மூன்றுகவிகள் -ஒருதொடர்: பின்னும் காதல்விஞ்சக்
கீசகன் பலமொழி கூறினமைதெரிவிக்கும்.
பைங் குலை குரும்பையை பழித்த கொங்கையாய் –
பசுமையாய்க் குலைகுலையாகவுள்ள குரும்பையை (ழுஇவை எமக்கு ஒப்பாகாழு
என்று) ஏளனஞ்செய்த கொங்கையையுடையாய்! மங்குலை புழுகு அளை
வைத்த கூந்தலாய் – இரவைக் கஸ்தூரிப்புழுகெண்ணெய்கொண்டு
தடவிவைத்தாற்போன்றுள்ள கூந்தலையுடையவளே! கங்குலில் –
இந்தநள்ளிரவில், கால்வழி காட்ட – பாதமே (நடந்துசெல்லும்) வழியைக்
காட்டாநிற்க, இன்று இங்கு வந்தது – இன்றைக்குஇவ்விடத்துக்கு வந்தது,
உலப்புஉறும் – அழியும் நிலைமையையடைந்த, எனது ஆவி-என்னுயிரை,
ஈயஓ-கொடுத்தற்குத்தானோ; (எ – று.)
நிலாதீபம் என்றாற்போன்ற ஒளியைத் தருவது யாதொன்றும்
இல்லாமையால், செறிந்தஇருளில் கண்ணால் வழியைக் கவனிக்க முடியாமல்
காலாலேயே தடவித்தடவி அன்னாள் வந்தாளென்று குறிக்க ழுகால்வழி காட்ட
வந்ததுழு என்கின்றான். கால்வழிகாண என்று பிரதிபேதம்
கிஞ்சுகம் மலர்ந்து, நின் கிள்ளை வாய்மையால்,
‘அஞ்சல்!’ என்று ஓர் உரை அளித்தல் காண்கிலேன்;
நஞ்சு அன விழிக்கடை நயந்த பார்வை கொண்டு,
எஞ்சும் என் உயிரினை எடுப்பது என்று நீ
கிஞ்சுகம் மலர்ந்து-பலாசமலர் போன்ற (உன்) வாயைத்திறந்து,
நின் கிள்ளை வாய்மையால் – உனது கிளிபோன்ற வாய்வார்த்தையால்,
அஞ்சல் என்று – (காமதேவனுக்குப்) பயப்படாதே என்று, ஓர் உரை-
ஒருபேச்சை, அளித்தல் – அன்போடுதர, காண்கிலேன் – பார்க்கின்றிலேன்
[கேட்கிலேன் என்றபடி]: நஞ்சுஅன – விஷத்தையொத்த, விழிக்கடை-
விழியின்கடையினால் [கடைக்கண்ணால்], நயந்த-விரும்பிக் காண்கின்ற,
பார்வைகொண்டு – பார்வையினால், எஞ்சும்-ஒடுங்குகின்ற, என் உயிரினை-,
நீ-, எடுப்பது – பாதுகாப்பது, என்று-எப்போது? (எ – று.)
உயிரினையெடுப்பது – உயிரையடியோடு போக்குவதுஎன்ற ஒரு விபரீதப் பொருளுந் தோன்றும். விழிப்பது-விழி: காரணக்குறி. கருநிறத்தாலும் உயிரைக்கவருந்தன்மையாலும் விழிக்குநஞ்சுஉவமை.
வழிபடு தெய்வமும், மற்றும், முற்றும், நீ!
இழிபடு பிறர் முகம் என்றும் நோக்கலேன்;
கழிபடர் உற்றது, என் காம நோய்!’ எனா,
மொழி பல கூறினான், முகம் புகுந்துளான்
வழிபடு தெய்வம்உம் – (நாடோறும் நான்) கும்பிடும்
கடவுளும், மற்றும் முற்றுஉம் – மற்றுமுள்ள எல்லாமும், நீ – நீயே; (இனி),
இழிபடு – (உன்கட்டழகுக்கு முன்னே) இழிவாகத்தோன்றுகிற, பிறர் முகம்-
அயல் மாதராரின் முகத்தை, என்றுஉம் – எப்போதும், நோக்கலென் –
பார்க்கமாட்டேன்; என் காமம் நோய் – என்னுடைய காதல்நோயானது, கழி
படர் உற்றது – மிகப்பரவுதலைப் பொருந்தியிட்டது, எனா – என்று, முகம்
புகுந்து உளான் – அவ்விடத்துவந்து பொருந்தியவனான கீசகன், பல மொழி
கூறினான்-பல வார்த்தைகளைப் பேசினான்; (எ – று.)
மாறுவேடம்பூண்டு வீமன் வந்து எதிரில் தூணத்தில்
ஒதுங்கிநின்கின்றானென்பதைக் கீசகன் அறியாமல் திரௌபதிதான்
வந்துள்ளாளென்று கருதியதனால், இவ்வாறெல்லாம் கூறலானானென்க.
கழிபடருற்றது- மிக்கதுன்பத்திற்குக் காரணமாகப் பொருந்தியது எனினுமாம்.
எதிர்புகுதல் – நோக்கிற்கெதிர்சென்று புகுதல்என்றனர், ஐங்குறுநூற்றுரைகாரர்.
கீசகன் இம் முறை கிளந்த பற்பல
வாசகம் கேட்டலும், மலம் கொள் நெஞ்சுடைப்
பூசகர் பூசை கொள்ளாத புன் பவ
நாசகக் கடவுள்போல், நகைத்து, நோக்கியே,71.-இரண்டுகவிகள் -ஒருதொடர்: பெண்ணுருக்கொண்டவீமன்
கீசகனை நகைத்துநோக்கிஇருகைகளாற் பற்றியமை கூறும்
கீசகன்-, இ மறை-இப்படியாக, கிளந்த-கூறிய, பல்பல வாசகம்-மிகப்பலவான காதற்குறிப்புள்ள வார்த்தைகளை, கேட்டலும்-
கேட்டவுடனே,-மலம் கொள் நெஞ்சுஉடை பூசகர் பூசை கொள்ளாத –
அபரிசுத்தியைக்கொண்ட நெஞ்சத்தையுடைய பூசகரின் பூசையை
யேற்றுக்கொள்ளாத, புல் பவம் நாசகம் கடவுள் போல் – புல்லியபிறவியை(த்
தன்னையடைந்தார்க்கு)ப் போக்கவல்ல கடவுளைப்போல, நகைத்து நோக்கி-
சிரித்து (அந்தக்கீசகனைப்) பார்த்து,-(எ-று.) -ழுபெற்றமாமகன் பொறிவந்திட
இருகை பற்றினான்ழு என்று மேற்கவியில்முடியும்.
திரிபுரசங்காரகாலத்திற் சிரித்து எதிரிகளை யழித்த கடவுள் சிவபிரானே யாதலால், புன்பவநாசகக் கடவுள் என்பது அக்கடவுளையே காட்டும். ழுஸங்காரத் ஜ்ஞாந மந்விச்சேத்ழு என்றது காண்க. நகைத்துநோக்கி என்பதற்கு,
மேற்செய்யுளில்வரும் பெற்றமாமகன் என்பது எழுவாய். மலம்-ஆணவம்
மாயை கன்மம் என்னும் மும்மலமுமாம்
பெண்ணுடை உருக்கொளும் பெற்ற மா மகன்
கண்ணுடைப் பொறி எழும் கனலின் வந்திட,
மண்ணுடைக் காவலன் மைத்துனன்தனை
எண்ணுடைக் கைகளால் இரு கை பற்றினான்
பெண்உடை உரு கொளும் – பொண்ணினுடைய உருவத்தைக்
கொண்ட, பெற்றம் மா மகன் – வாயுவின் சிறந்த குமாரனான வீமன், கண்
உடை – இருகண்களும் கொண்டுள்ள, பொறி – (கோபாக்கினியின்) பொறிகள்,
எழும் கனலின் வந்திட – கொழுந்துவிட்டெரியும் அக்கினியினின்று
புறப்படுவனபோல வெளிப்படாநிற்க,-மண் உடை – மச்சநாட்டிற்குஉரிய,
காவலன் – அரசனான விராடனுடைய, மைத்துனன் தனை – மனைவியின்
உடன் பிறந்தவனான கீசகனை, எண்உடை கைகளால் – (வலிமையினால்)
மதிப்பையமைந்த இரண்டு கைகளால், இரு கை பற்றினான் – (கீசகனுடைய)
இரண்டுகைகளையும் பிடித்துக்கொண்டான்; (எ – று.)
ஒருபெண் தன்னைக் கைப்பற்றுகின்றாளென்று அந்தக்கீசகன்
குதூகலமாக இருக்க, ஒருகையாற் பற்றுதற்குப்பதில் இருகை களாலும்
இறுகப்பற்றினான் வீம னென்பதாம். எண் – ஏண் என்பதன்
விகாரமெனின், வலிமையென்று பொருளாம்.
பற்றினான்; பற்றிய பாணியால் எழச்
சுற்றினான், கறங்கு என; தூணம் ஒன்றினோடு
எற்றினான், சென்னியை; எடுத்த தன் வினை
முற்றினான், நெடும் பெரு மூச்சன் ஆகியே73.-வீமன் கீசகன்திறத்துக்கருதிய செயலைமுடிக்கத்
தொடங்குதல்.
பற்றினான் – (அந்தக்கீசகனைத் தன்னிருகைகளாலும் வலியப்)
பிடித்தான்: பற்றிய பாணியால் – (தான்) பிடித்த கைகளினால், கறங்கு என எழ
சுற்றினான்-காற்றாடிபோல (வானத்தின் மீதே) எழ(அந்தக்கீசகனை)க் கறகற
வென்று சுழற்றினான்: தூணம் ஒன்றினோடு சென்னியை எற்றினான் –
(ஆங்கிருந்ததொரு) கம்பத்தில் அவன் தலையை மோதினான்: நெடும் பெரு
மூச்சன் ஆகி-மிகப்பெருமூச்சுடையனாய், (அவ் வீமன்), எடுத்த தன் வினை
முற்றினான்-மேற்கொண்ட தன் செயலை நிறைவேற்றலானான்; (எ – று.)
மேற்கொண்டசெயல் – கீசகவதம். இச்செய்யுளிற் பற்றினானென்றது –
கீழ்ச்செய்யுளின் அனுவாதம்.
வீமனை, பிடித்த கை விலக்கி, மற்று அவன்
மா முகத்து இரு கையும் மாறி மோதினான்;
தீ முகத்தவனை, அச் செம்மல், மீளவும்
சாமுகத்தவன் எனத் தள்ளி, வீழ்த்தினான்.74.-வீமனைக் கீசகன்மாறிமோத வீமன்
கீசகனைத் தள்ளிவீழ்த்துதல்
வீமனை -, பிடித்த கை விலக்கி – (தன்னைப்) பற்றியுள்ள
கைகளை விலக்கிவிட்டு, மற்று-பின்பு, அவன் – அந்தக் கீசகன், மா முகத்து –
பெரிய (வீமனுடைய) முகத்திலே, இருகைஉம் – (தன்னுடைய) இரண்டு
கைகளையும், மாறி – (முன்னையநிலை) மாறி, மோதினான் – தாக்கினான்: அ
செம்மல்-செம்மைக்குணமுடையனாகிய அந்த வீமசேனன், தீ முகத்தவனை –
தீமைக்கு இருப்பிடமான அந்தக்கீசகனை, மீளஉம் – மறுபடியும், சா
முகத்தவன் என – (கண்டவர் யாவரும்) சாமூஞ்சிபட்டவன் (இவன்) என்று
கருதுமாறு, தள்ளி-, வீழ்த்தினான் – விழச்செய்தான்; (எ – று.)
வீமன்வீழ்த்தியதனால் கீசகனுக்கு முன்னிருந்த வீரப்பொலிவுமாறி,
முகம்சாமூஞ்சிபட்டதென்க.
ஓர் ஒரு குத்து ஒரு உருமு வீழ்ந்தென
மேருவொடு ஒத்த தோள் வீமன் குத்தலும்,
ஈரிடத்தினும் விலா எலும்பு நெக்கன,
கூர் உகிர்த் தலைகளால் குருதி கக்கவே,75.-ஐந்து கவிகள் – வீமகீசகயுத்தம் கூறும்.
கூர் உகிர் தலங்களால் – கூரிய நகத்தோடு கைத்தலங்கள்
பட்டதனால், குருதி கக்க – இரத்தத்தை வெளிப்படுத்துமாறு, ஓர் ஒரு குத்து-
ஒவ்வொருகுத்தும், ஒரு உருமு வீழ்ந்தென – ஒருஇடி விழுந்தாற்போல வீழ,
மேருவோடு ஒத்த தோள் – மேருவோடொத்த தோள்களையுடைய, வீமன்-,
குத்தலும்-குத்தவே,-(கீசகனுக்கு), ஈர் இடத்தின்உம்- இரண்டுபுறத்தும், விலா
எலும்பு-விலாப்புறமுள்ள எலும்புகள், நெக்கன-பிளந்து விண்டன; (எ-று.);-
குத்தெரியுருமு என்றும், கூருகிர்த்தலைகளால் என்றும் பிரதிபேதம்
கேளொடு கெடுதரு கீசகன் கழல்
தாளொடு தாள் உறத் தாக்கி, மல் கெழு
தோளொடு தோள் உறத் தோய்ந்து, கன்னல் வில்
வேளொடு வரு நலம் விஞ்ச, மேவினான்.
கேளொடு – சுற்றத்தாருடனே, கெடுதரு – அழியப்போகின்ற,
கீசகன் – கீசகனானவன்,-கழல் தாளொடு-வீரக்கழலையணிந்த (வீமன்)
பாதங்களுடனே, தாள் உற – (தன்) தாள்கள் பொருந்த, தாக்கி – மோதியும்,
மல் கெழு – வலிமை விளங்குகின்ற, தோளொடு – (தன்) தோளுடனே, தோள்
– (வீமன்) தோள்கள், உற – பொருந்த, தோய்ந்து – படிந்தும், கன்னல் வில்
வேளொடு வருநலம் விஞ்ச – கரும்புவில்லையேந்திய மன்மதனால் வருகிற
இன்ப நலமும் விஞ்சும்படி, மேவினான்-(மற்போரினால்) தழுவினான்; (எ – று.)
காமவின்பம் நுகர்கையில் தாளொடு தாளும் தோளொடு தோளும்
தாக்கிப்பொருந்தல் நிகழு மாதலாலும் இந்த மற்போரிலும் அச்செயல் மிக
நிகழ்தலாலும், ழுவேளொடுவருநலம் விஞ்ச மேவினான்ழு என்றார்: இச்செய்யுளில்
ழுவேளொடு வருநலம் விஞ்ச மேவினான்ழு என்றது, வீமன் செயலை யென்றலும்
ஒன்று.
தாழ் வரைத் தடக் கையால், தையலாள் எதிர்,
காழ் வரப் பொரு திறல் காளைதன்னையும்,
சூழ்வரச் சூறையில் சுற்றி, பார்மிசை
வீழ்வரப் புடைத்தனன், மிடலில் விஞ்சினான்.
மிடலில் விஞ்சினான்-வலிமையில் விஞ்சினவனாகிய கீசகன்,-
வரை தாழ் தட கையால் – வரைபோன்றனவும் தொங்குவனவுமான பெரிய
கைகளால், தையலாள் எதிர் – திரௌபதியின் எதிரிலே, காழ் வர – உறுதி
பொருந்த, பொரு – போர்செய்கின்ற, திறல் – வல்லமையையுடைய, காளை
தன்னைஉம் – இளவெருது போன்றவனான வீமனையும், சூறையின் –
சுழல்காற்றிலகப்பட்டாற்போல, சூழ்வர சுற்றி – மண்டலமாகப் பொருந்தச் சுற்றி,
பார்மிசை வீழ்வர – பூமியில் விழுமாறு, புடைத்தனன்-மோதினான்; (எ – று.)
காளைதன்னையும், உம்மை-உயர்வுசிறப்பு. இனி, காளை-வீமன்,
தன்னையும் சூறையிற் சூழ்வருமாறு சுற்றி மிடலில் விஞ்சினானாகிய கீசகன்
பார்மிசை வீழ்வரப் புடைத்தனன் என்றலுமாம்.
விழுந்தவன் மீளவும் வெய்துயிர்த்தனன்;
எழுந்து, தன் பகைவனது இருண்ட குஞ்சியை
அழுந்த வல் விரல்களால் சுற்றி, ஆய் மரக்
கழுந்து எனப் புடைத்தனன், கைகள் சேப்பவே.
விழுந்தவன் – விழுந்த வீமன், வெய்து உயிர்த்தனன்-
வெம்மையாகப் பெருமூச்சு விட்டவனாய், மீளவும் எழுந்து-, தன் பகைவனது –
தன் பகைவனான கீசகனுடைய, இருண்ட குஞ்சியை-கருநிறமுள்ள
தலைமயிரைஅழுந்த – உறுதியாக, வல் விரல்களால் சுற்றி-, ஆய்மரம் கழுந்து
என – ஆராயப்பெற்ற மரத்தின் கழுந்தைப் புடைப்பதுபோல, கைகள்சேப்ப –
அவன் தலைமயிரைப் பிடித்ததன்) கைகள் செந்நிறத்தையடையா நிற்க,
புடைத்தனன்-;
கழுந்து- மரக்கட்டை.
புடைத்தனன் இவன், அவன் புடைத்த கைகளை
விடைத்தனன் அகற்றி, மெய்ம் மேவு பூதியும்
துடைத்தனன் ஆகி, அத் தோன்றல் வாயினை
உடைத்தனன், ஒரு கையால் ஒரு கை பற்றியே.
புடைத்தனன் இவன் – புடைக்கப் பட்டவனாகிய இவன்,
புடைத்த அவன் கைகளை – புடைத்த அந்தவீமன் கைகளை, விடைத்தனன்-
கோபித்தவனாய், அகற்றி-நீக்கி, மெய் மேவு பூதிஉம் துடைத்தனன் ஆகி –
(பார்மிசைப் புடைத்ததனால் தனது) உடம்பிற்பட்ட புழுதியையும்
துடைத்தவனாகி, ஒரு கை பற்றி-(ஒருகையால் அவனைப்) பிடித்துக்கொண்டு,
ஒரு கையால் – மற்றொருகையினால், அ தோன்றல் வாயினை – அந்தவீரனது
வாயை, உடைத்தனன்-.
இது,கீசகன்செயலைக் கூறியது. விடைத்தனன் என்பதற்கு – விரைந்தவனாய் என்றும், விடுத்தவனாய்என்றும் தடுத்து என்றும் கூறுவாரு முளர்.
வீரமும், வலிமையும், விரகும், ஒத்தவர்
தீரமும், தெளிவும், நாம் செப்பற்பாலவோ?
‘நேரமும் சென்றது நிசை’ எனா, மிகு
சூரமும் செற்றமும் உடைய தோன்றலே80.-இருவரும் ஒத்துப்பொரஇரவில் வெகுநேரங் கழிதல்.
வீரம் உம் – வீரத்திலும், வலிமைஉம்-தேகவலிமையிலும்,
விரகு உம் – (போர்செய்யுந்) திறத்திலும், ஒத்தவர்-ஒத்தவர்களான அந்தக்
கீசகவீமர்களின், தீரம்உம்-மனோதைரியமும், தெளிவு உம் -(போரிலுள்ள)
உத்ஸாஹமும், நாம் செப்பற்பாலஓ – நம்மாற் சொல்லுந்தரத்தவோ?
மிகுசூரம்உம் – மிக்க சூரத்தனமும், செற்றம் உம் – பகைமையும்,
உடைய-, தோன்றல் – வீரனான வீமன், ழுநிசைநேரம்உம் சென்றது –
இரவின்நேரமும் வெகுவாகக் கழிந்திட்டது,ழு எனா – என்று கருதி,- (எ – று.) –
ழுமன்னவன் மைத்துனன் மார்பொடிந்திட, ஒன்றிட, தாக்கி, சுருக்கினான்ழு என
மேலிற் கவியில் முடியும்.
தெளிவு- போரிலுள்ள தெளிவான ஞானமுமாம். நிசை = நிஸா:
வடசொல்.
மன்னவன் மைத்துனன் மார்பு ஒடிந்திட,
சென்னியும் தாள்களும் சேர ஒன்றிட,
தன் இரு செங் கையால் தாக்கி, வான் தசை
துன்னிய மலை எனச் சுருக்கினான்அரோ!81.-இரண்டுகவிகள்-கீசகனுடலைத் தசையின்மலையெனத்
தோன்றச்சுருக்கி வீமன்அவனாவியைப் போக்கினமை
கூறும்.
மன்னவன் மைத்துனன் – விராடமன்னவனுடைய
மைத்துனனாகிய கீசகனுடைய, மார்பு-, ஒடிந்திட-ஒடியவும், சென்னிஉம்
தாள்கள்உம் சேர ஒன்றிட – சிரசும் பாதங்களும் ஒன்றுபடச் சேர்ந்திடவும்,
(வீமன்), தன் இரு செங்கையால் தாக்கி – தன்னுடைய இரண்டு செவ்விய
கைகளாலும் மோதி, வான் தசை துன்னிய மலைஎன-மிக்கசதை நெருங்கிய
குன்று என்று (கண்டவர்) சொல்லும்படி, சுருக்கினான் – (பரவியிருந்த
அவனுடலைச்) சுருங்குமாறு பிடித்து வைத்தான் ; (எ – று.)
கைகால் சென்னி முதலியவை ஒன்றுந் தெரியாது மாமிசபருவதமென்று
ஒன்றுதான் தோன்றும்படி கீசகனுடைய உடலத்தை அடக்கியதனால், சுருக்கினா
னென்றார். சென்னி தாள்களைக்கூறியது, கைக்கும் உபலட்சணம்: 84-ஆங்
கவியைக் காண்க. அரோ-ஈற்றசை.
மாற்றினான், அவன் பெரு மையல் ஆவியைக்
கூற்றினார் கைக்கொளக் கொடுத்து, தன் சினம்
ஆற்றினான்; அத் திறல் ஆர்கொல் வல்லவர்,
காற்றினால் வரு திறல் காளை அல்லதே?
அவன் – அந்தக் கீசகனுடைய, பெரு மையல் ஆவியை –
மிக்க காமமோகங்கொண்ட உயிரை, மாற்றினான்-(உடம்பினின்று)
வேறுபடுத்தினவனாய், கூற்றினார் கைக்கொள கொடுத்து-யமன் கையினாற்
பெற்றுக் கொள்ளும்படி கொடுத்து, (வீமன்), தன் சினம் மாற்றினான் – தன்
கோபத்தைப் போக்கினான்: காற்றினால் வருதிறல் காளை அல்லது-
வாயுதேவனா லுண்டாக்கப்பட்டுத் தோன்றிய வலிமையுள்ள இளவெருதுபோன்ற
வீமசேனனை யல்லாமல், அ திறல் யார் கொல்வல்லவர் – அந்தப்பராக்கிரமச்
செயலைச் செய்யவல்லவர் வேறுயாவருளர்? (எ – று.)-மூன்றாமடியில்,
ஆற்றினான் என்றும் பிரிக்கலாம்.
பண்ணிய வினைகளின் பயன் அலாது, தாம்
எண்ணிய கருமம் மற்று யாவர் எய்தினார்?
திண்ணிய கீசகன் செய்த தீங்கு இவன்
புண்ணியம் ஆனதால், புகல்வது என்கொலாம்?83.- கீசகனை வீமன்வதைத்ததைப் பற்றிய கவிக்கூற்று
பண்ணிய-(அவரவர்) செய்த, வினைகளின்-புண்ணியபாவ
ரூபமான செய்கைகளின், பயன் அலாது – பயனை அடைவதல்லாமல், தாம்
எண்ணிய கருமம் – தாம் நினைத்த செயலை, மற்று-வினைப்பயனுக்குமாறாக,
எய்தினார் யாவர்-(தாம் நினைத்தபடி) அடைந்தவர் யாவர்? திண்ணிய கீசகன்
– வலிமையுள்ள கீசகன், செய்த-, தீங்கு – தீச்செயல், இவன் – இந்த
வீமசேனனுக்கு, புண்ணியம் ஆனது – நல்வினைப்பயனைத் தருவதாக
ஆயிற்று; புகல்வது என்கொல் – (இதுபற்றி நாம் வேறு) சொல்லத்தக்கது யாது?
(எ – று.)
கீசகன் திரௌபதியைச் சேரக்கருதிவந்தது தீச்செய லாதலால்
அத்தீவினைப்பயன் அவனை யழிக்க, அதுவே வீமனுக்கு வெற்றியைத் தரும்
புண்ணியப்பயனாக இருந்த தென்று, கவி, உலகோருக்கு ஒருநீதியை இதனாற்
கற்பிக்கின்றன ரென்க. முதலிரண்டடிகட்கு – கீசகன் தான் செய்த
வினைப்பயனை யடைந்தானேயன்றி, எண்ணிய பயனைப் பெறவில்லையென்க.
ஆல் – தேற்றம். ஆம் – அசை.
செங் கை கால் உடலொடு சென்னி துன்றிட,
அங்கையால் அடக்கி நின்று, அநேகம் ஆயிரம்
வெங் கை யானையின் மிடல் வீமன், வெற்பு அன
கொங்கையாள் தன்னையும் கூவினான்அரோ!84.-கீசகனுடலைக் கால் தலைஎன்று தெரியாதபடி
சுருக்கினபின்பு திரௌபதியைவீமசேனன் அழைத்தல்.
செம் கை – செந்நிறமுள்ள கை, கால்-, உடலொடு-உடல்,
சென்னி – தலை என்ற இவைகள் யாவும், துன்றிட – ஒன்றுபட்டுச் சேர, வெம்
கை அநேகம் ஆயிரம் யானையின் மிடல் வீமன் – விரும்பத்தக்க
துதிக்கையையுடைய அனேகவாயிரம் யானைகளின் வலிமையைப்படைத்த
வீமசேனன், அம் கையால் அடக்கிநின்று – (தன்னுடைய) அழகிய கையாற்
சுருக்கி, வெற்புஅன கொங்கையாள் தன்னைஉம் – மலையையொத்த
தனங்களையுடையளான திரௌபதியையும், (அதனைக்காட்டும்பொருட்டு),
கூவினான்-அழைத்தான் ; (எ – று.) – அரோ – ஈற்றசை.ழு
பூங்கொடி அனையவள் புறவடிப் புறத்து,
ஓங்கிய கீசகன் உடல்-பிழம்பினை,
‘நீங்கிய வாய்மைகள் நிகழ்ந்தது!’ என்னவே,
பாங்கினில் வைத்து, அடல் பவனன் மைந்தனே85.-வீமன் அந்தக்கீசகனுடலைத் திரௌபதியின்
பாததலத்தில் வைத்தல்.
இரண்டுகவிகள் – ஒருதொடர்.
(இ -ள்.) பூங் கொடி அனையவள் – பூங்கொடி போன்றவளான அந்தத்
திரௌபதியின், புறம் அடிப்புறத்து – புறவடியினிடத்து, ஓங்கிய கீசகன் உடல்
பிழம்பினை – (குன்றுபோல) உயர்ந்திருந்த கீசகனுடற் பிண்டத்தை, அடல்
பவனன் மைந்தன் – வலிமையுடைய வாயுகுமாரனான வீமன், நீங்கிய
வாய்மைகள் நிகழ்ந்தது என்ன-ஒழுக்கந்தவறிய வாய்வார்த்தைகளால்
நேர்ந்ததாகும் (இத்தன்மை) என்று கருதும்படி, பாங்கினில் வைத்து –
இனிதாகவைத்து, (எ – று.) – ழுதுயரநீங்க, சுவாலைசெய்தனன்ழு என மேலிற்
கவியில் முடியும்.
அந்தக்கீசகன் சொல்லத்தகாத வார்த்தைகளைச் சொல்லியதும்
நேர்மையற்ற வழியில் ஒழுகியதுமே அவன் மாண்டதற்குக் காரணமாதலால்,
அவற்றை யுணர்ந்தவர்கள் கீசகனுடற் பிழம்பினைக் காண, நீங்கிய
வாய்மைகளால் இது நிகழ்ந்ததென்ப ரென்க. நீங்கிய வாய்மைகள் – தவறிய
நேரிய வழிகள் என்றுமாம்.
விடும் குழை மராமரம் ஒன்று வேருடன்
பிடுங்கினன், கைகளால் பிசைந்து, தீ எழ,
‘சுடும்கொல்!’ என்று அஞ்சிலன், சுவாலை செய்தனன்,
நெடுங் கணாள் கண்டு, தன் துயரம் நீங்கவே.86.-வீமன் ஒருமரத்தைப்பிடுங்கிக் கைகளாற் பிசைந்து
தீயெழச்சுவாலைசெய்துகீசகனுடலைத் திரௌபதிக்குக் காட்டுதல்.
விடும் – மேன்மேல் தோன்றுகின்ற, குழை – தளிர்களை
யுடைய, மராமரம் ஒன்று – ஒருமராமரத்தை, வேருடன் பிடுங்கினன் –
வேரோடு பிடுங்கி, கைகளால் பிசைந்து – (தன்) கைகளால் (நெருப்புத்
தோன்றுமாறு அந்தமரத்தைப்) பிசைந்து, தீ எழ சுடும் கொல் என்று
அஞ்சிலன் – (அங்ஙன் பிசைந்தபோது அதினின்று) அக்கினி தோன்றவும்
சுடுமோ என்று சிறிதும் அஞ்சாதவனாய், நெடுங் கணாள் கண்டு தன் துயரம்
நீங்க-நீண்ட கண்களையுடையவளான திரௌபதி கண்டு தன்துயரம் நீங்குமாறு,
சுவாலை செய்தனன்-(தோன்றிய நெருப்பைக்) கொழுந்துவிட்டெரியச் செய்தான்
;(எ – று.)
பிடுங்கினன், அஞ்சிலன் – முற்றெச்சங்கள்.
தோட்டு மென் மலர்ச் சோலையின் ஓதையும்,
மோட்டு வன் கர முட்டியின் ஓதையும்,
மாட்டு, வண் சுதை மண்டபத்து ஓதையும்,
கேட்டு, உணர்ந்தனர், கீசகன் தம்பிமார்.88.-அப்போதுதோன்றியபலவகையோசையால்
கீசகன்தம்பிமார்துயிலுணர்தல்.
தோடு – அகவிதழ்களையுடைய, மெல் மலர்-மெல்லிய
புஷ்பங்களையுடைய, சோலையின் – சோலையிலே, ஓதைஉம் –
(மானுடசஞ்சாரம் முதலியவற்றால் தோன்றிய) ஓசையையும், மோடு வல் கரம்
முட்டியின் ஓதைஉம் – பருத்த வலிய கைம்முட்டிகளால் மோதியதனாலான
ஓசையையும் மாடு வள் சுதை மண்டபத்து ஓதைஉம் – (அச்சோலைக்குப்)
பக்கத்திலேயுள்ள வளவிய சுண்ணாம்புபூசிய மண்டபத்தினின்று தோன்றிய
ஓசையையும், கேட்டு-, கீசகன் தம்பிமார் – உபகீசகர்யாவரும், உணர்ந்தனர் –
துயிலுணர்ந்தார்கள் ; (எ – று.)
தொய்யில் ஆதி சுதேட்டிணைக்கு ஒப்பனை
கையில் ஆர் அழகு ஏறக் கவின் செயும்
தையலாள் பொருட்டாகத் தனக்கு உறும்
மையலால், மிக வாடி, வருந்தினான்;9.-மூன்றுகவிகள் -ஒருதொடர்:
உபகீசகர் தம்மனத்திற்கருதியதைக் கூறும்.
சுதேட்டிணைக்கு – விராடன்மனைவியான சுதேஷ்ணையென்
பவளுக்கு, தொய்யில் ஆதி – தொய்யில்முதலிய, ஒப்பனை –
அலங்காரங்களை, கையில்-(தன்) கையினால், ஆர் அழகு ஏற-நிரம்பிய அழகு
பொருந்த, கவின் செயும் – அலங்கரிக்கவல்ல, தையலாள் பொருட்டாக –
பெண்ணின்நிமித்தம், (நமது அண்ணனாகிய கீசகன்), தனக்கு உறு மையலால் –
தனக்குப் பொருந்திய காமமயக்கத்தால், மிக வாடி-, வருந்தினான் –
வருத்தமுற்றிருந்தான் ; (எ – று.)
தொய்யில் – மகளிரின் தோள்களிலும் தனங்களிலும் சந்தனக் குழம்பால்
எழுதுங் கோலம்.
வண்டு அறாத மலர்க் குழல் வல்லியைக்
கண்ட காவில், இக் கங்குல் பொழுதிடைச்
சண்ட வேகக் களிறு அன்ன தன்மையான்
கொண்ட மாலின் குறுகினன் போலுமால்.
(ஆகையால்), வண்டு அறாத மலர் குழல் வல்லியை)
வண்டுகள் நீங்காத மலர்களையணிந்த கூந்தலையுடைய கொடிபோன்ற
பெண்ணாகிய அந்தவண்ணமகளை, கண்ட – பார்த்த, காவில்-சோலையிலே, இ
கங்குல் பொழுதிடை – இந்தஇராத்திரியிலே, சண்டம் வேகம் களிறு அன்ன
தன்மையான் – கொடிய வேகத்தையுடைய மதயானைபோன்ற
தன்மையையுடையனான (நம்அண்ணனான) கீசகன், கொண்ட – (தான்)
அடைந்துள்ள, மாலின் – காமமோகத்தினால், குறுகினான்போலும் –
நெருங்கினான்போலும் ; (எ – று.)
போலும் என்பது – அந்தஉபகீசகர்கள் தம்ஊகத்தைப்பேசுகின்றா
ரென்பதைப் புலப்படுத்தும். ஆல் – ஈற்றசை.
தூவி வாசம், துளி மதுச் சோலையில்,
ஏவலால் இயற்றும் எழில் பாவை மெய்
காவல் ஆகிய கந்தருவப் பெயர்த்
தேவரால், வெஞ் செரு உளது ஆனதோ!’
வாசம் தூவி-நறுமணத்தைச் சிதறவிட்டுக்கொண்டு-மது துளி –
தேனைச் சொட்டுகின்ற, சோலையில் – அந்தச்சோலையிலே,-ஏவலால் –
(அரசன்தேவியின்) கட்டளைப்படியே, இயற்றும் – பணிசெய்கின்ற, எழில் –
அழகிய, பாவை-பிரதிமை போன்றவளான அந்த வண்ணமகளின், மெய்-
உடலுக்கு, காவல் ஆகிய -, கந்தருவப் பெயர் தேவரால்-கந்தருவரென்று
பேர்பூண்ட தேவவர்க்கத்தவரோடு, வெம் செரு-கொடியபோர், உளது ஆனதுஓ
– நேரிட்டதோ? (எ – று.) – அதனால்தான் இவ்வாறான ஓசைகள்
தோன்றியிருக்க வேண்டுமென உணர்ந்த உபகீசகர் எண்ணினார் என்று
வருவித்து முடிக்க. சோலையில் காவலாகிய கந்தருவப்பெயர்த்தேவரால் செரு
உளதானதோ? என்க.
அழிந்த கீசகன் அன்றி, மற்று உண்டு என
மொழிந்த தம்பியர் நூற்றொரு மூவரும்,
கழிந்த தீ உமிழ் கண்ணினர் ஆய், ‘உயிர்
ஒழிந்து போதும்!’ என்று உன்னினர், ஓடினார்.92.-அங்ஙன் கருதிய உபகீசகர்சோலையைநோக்கிச்
சினத்தோடு ஓடுதல்.
அழிந்த – உயிரொழிந்த, கீசகன் அன்றி – கீசகனல்லாமல்,
மற்று – பின்னும், உண்டு என மொழிந்த – உள்ளாரென்று கூறப்பட்ட, தம்பியர்
நூற்றொருமூவர்உம் – (அந்தக்கீசகனுடைய) தம்பிமாரான நூற்றொரு
மூன்றுபேர்களும்,-கழிந்த – மிக்க, தீ – நெருப்பை, (பெருஞ்சினத்தால்), உமிழ்
– வெளிச்சொரிகிற, கண்ணினர் ஆய் – கண்களையுடையவராய், உயிர்
ஒழிந்துபோதும் என்று – நம்முயிர் ஒழியப்பெற்றாலும் போகிறோமென்று,
உன்னினர் – எண்ணினவராய், ஓடினார்-(அந்தச்சோலையைக் குறித்து)
ஓடிச்சென்றார்.
ழுகந்தருவரோடு செருவிளைந்து அதனால் நம்மண்ணனுக்கு ஒருகால்
மரணம் நேரிட்டிருப்பின் நாம் சென்றாலும் நமக்கும் அந்நிலை நேரக்கூடும்:
ஆயினும் ஒருகை பார்த்தேதீரவேண்டும்ழு என்று கருத்துடனே அந்த உபகீசகர்
சோலையைநோக்கி விரைந்துசென்றன ரென்பதாம். முதனூலுக்குஏற்ப ழுநூற்றொ
டொரைவரும்ழு என்று பாடமிருப்பின் நலம்.
நகரி எங்கும் வெருவர, நள் இருள்
நுகருமாறு பல் நூறு ஒளித் தீபமோடு,
அகரு நாறு தண் காவில், அரும் பகல்
நிகரும் என்ன, நெருங்கினர், நேடினார்.93.-பன்னூறு தீபங்களோடுஅந்தச்சோலையிலே சென்று
உபகீசகர் தேடிப்பார்த்தல்.
நகரி எங்குஉம்-(அந்தஉபகீசகர் செய்த ஆர்ப்பாடத்தினால்)
அந்தவிராடநகரில் எவ்விடத்திலுள்ளாரும், வெருவர – அச்சமடையாநிற்க,-
அரும் பகல் நிகரும் என்ன – (அவ்விரவு) அருமையான பகற்பொழுதை
யொத்திருக்கு மென்று கருதும்படி, நள் இருள் நுகரும் ஆறு – செறிந்த
இருளைப் போக்குமாறு, பல் நூறு ஒளிதீபமோடு-பல நூற்றுக்கணக்கான
ஒளியைக்கொண்ட தீபத்தோடு, அகரு நாறு தண் காவில் – அகருவின் மணம்
வீசுகின்ற குளிர்ந்த அச்சோலையில்,(அந்தஉபகீசகர்கள்),நெருங்கினர்- நெருங்
கிப்போய், நேடினார்- (நிகழ்ந்ததை யுணருமாறு) தேடிப்பார்த்தார்கள்
சுதை நிலா ஒளி சூழ் மண்டபத்திடை,
சிதையும் மெய்யொடும், செம் பொற் சிலம்பு என,
கதைவலான் வெங் கடுங் கொடுங் கைகளால்
வதை செய் தம்முன் வடிவு கண்டார்களே!94.-உபகீசகர்மண்டபத்திடையிலே வீமனாற் சிதைவுண்ட
கீசகன்வடிவைக் காணுதல்.
சுதை நிலா ஒளி சூழ்-சுண்ணச்சாந்தின் வெண்ணிறவொளி
சூழப்பெற்ற, மண்டபத்திடை – மண்டபத்திலே, சிதையும் மெய்யொடுஉம் –
(உறுப்புக்கள் தெரியாது) சிதைந்துள்ள உடம்புடனேகூடிய, கதை வலான் வெம்
கடுங் கொடுங் கைகளால் வதைசெய் – கதாயுதத்தில்வல்லவனான
வீமசேனனுடைய வெவ்விய மிகக்கொடிய கைகளாற் கொல்லப்பட்ட, தம் முன்
வடிவு – தமது அண்ணனுடைய வடிவத்தை, (அந்த உபகீசகர்கள்), செம்பொன்
சிலம்பு என – மேருமலைபோல(த் தோன்ற), கண்டார்கள்-
எண் இலா மனத்து எம்முனை, எண்ணுடை
விண்ணுளார் சிலர் வீத்ததற்கு ஏதுவாம்
வண்ண மா மகள்தன்னையும், வன்னியால்
அண்ணலோடும் அடுதும்!’ என்றார்களே96.-உபகீசகர்தம்அண்ணனுடலுடன் அவனது மரணத்திற்கு
ஏதுவான வண்ணமகளையுமஉடனிட்டெரிக்க நிச்சயித்தல்
ழுஎண் இலா மனத்து – (பிறவீரரை) மதித்தலில்லாத மனத்தை
யுடைய, எம்முனை – எமக்கு முன்பிறந்தவனான [அண்ணனான] கீசகனை,
எண்உடை விண்உளார் சிலர்-மதிப்புள்ள தேவவருக்கத்தைச் சேர்ந்த சிலர்,
வீத்ததற்கு – கொல்லுதற்கு, ஏது ஆம் – காரணமாக விருந்த, வண்ணமாமகள்
தன்னைஉம் – வண்ணமகளாகத் தொழில்புரிபவளையும், அண்ணலோடுஉம் –
பெருமைவாய்ந்த அண்ணனுடனே, வன்னியால் – ஈமவெரியாலேயே,
அடுதும் -எரித்திடுவோம்,ழு என்றார்கள் – என்று (அந்த உபகீசகர்)
தீர்மானித்திட்டார்கள்; (எ – று.)
எண்ணிலாமனத் தெண்ணுடை-தொடைமுரண், வண்ணமகளையும்
ஈமவெரியாலடுமாறு உபகீசகர் வெகுளியால் தீர்மானித்தனரென்க. எண் நிலா
மனத்து என்று பிரித்து – வலி நிலாவுகின்ற மனத்தையுடைய என்று பொருள்
கூறுவாருமுளர்: இப்பொருளில் எண்-ஏண்என்பதன் விகாரம். விண்ணுளா
ரென்றது, கந்தருவரை.
சொல்லும் ஆடவர் சொல்லினர்ஆயினும்,
கொல்லுமோ கனல், தான் பெற்ற கோதையை?
மல்லல் மாலையினார் வந்து பற்றலும்,
அல்லல் கூர, அரற்றினளால், அவள்.97.-இரண்டு கவிகள்-ஒரு தொடர்:வண்ணமகளை ஈமவெரியிலிடு
மாறு உபகீசகர் வந்துபற்றுதலும் அவள் தன்மெய்காக்குங்
கடவுளரைக்குறித்து அரற்றுதல்.
சொல்லும்-(இவ்வாறு வண்ணமகளை ஈமவெரியிலிட்டெரிக்குமாறு
தீர்மானித்துச்) சொல்லிய, ஆடவர்-, சொல்லினர் ஆயினும்-, கனல் – அக்கினி,
தான் பெற்ற கோதையை – தான் பெற்ற பெண்ணை, கொல்லும்ஓ-உயிர்நீங்கச்
சுட்டெரிக்குமோ? [எரிக்காதன்றோ?] (இதுநிற்க): மல்லல் மாலையினார் –
வளப்பமுள்ள மலர்மாலையை யணிந்தவரான உபகீசகர்கள், வந்து-, பற்றலும் –
(அந்தவண்ணமகளைப்) பிடித்துக்கொள்ளுதலும், அவள்-, அல்லல்கூர-
துன்பம்மிக, அரற்றினள் – கதறலானாள்; (எ – று.)
அந்தவண்ணமகள் அரற்றினவகை மேற்கவியிற் பெறப்படும்.
முதலிரண்டடிகள்-உபகீசகரெண்ணம் பலிக்கா தென்பதைப் பற்றிய கவிக்கூற்று:
ஒருகால் உபகீசகர்கள் அந்தத்திரௌபதியை ஈமவெரியிலிட்டாலும்,
எரியினின்று பிறந்தவளான அவளை அந்தஎரி எரிக்காதென்றவாறு. கோதை –
மயிர்முடி: உடையாளுக்கு ஆகுபெயர்: இனி, கோதை – மாலை: அதுபோல்
மெல்லியலாளுக்கு உவமவாகு பெயருமாம்.
வெருவரும் கருங் கங்குலில், வெங் கொலை
நிருபர், என்னை நெருப்பிடை வீழ்த்துவான்
கருதினார்கள்; மெய் காக்கும் கடவுள்காள்!
வருதிர்!’ என்று கண் வார் புனல் சோரவே,
வெருவரும் – அஞ்சத்தக்க, கருங் கங்குலில்-கரிய இரவிலே,
வெங் கொலை நிருபர் – கொடிய கொலைப்பாதகத்தைச் செய்யக்கருதிய சில
மன்னவர், என்னை-, நெருப்பிடை-, வீழ்த்துவான் – தள்ளும்பொருட்டு,
கருதினார்கள் – எண்ணியுள்ளார்கள்: மெய்காக்கும் கடவுள்காள் –
என்னுடலைப் பாதுகாக்கின்ற தெய்வங்களே! வருதிர் – (என்னைப் பாதுகாக்க)
வாருங்கள்,’ என்று – என்றுசொல்லிக்கொண்டே,- கண் வார் புனல்
சோர – கண்களினின்று மிக்க நீர் பெருக,- (எ -று.)-‘அல்லல்கூரவரற்றினள்’
என்று கீழிற்கவியில் முடியும்
மடைப் பெரும் பள்ளி எய்திய மாருதி,
‘கிடைப்பது அன்று இக் கிளர் பெரும் போர்’ எனா,
தொடைப் பெரும் பவனத்து, அனல் சோர்தரப்
புடைப்ப, ஓடினன், போர் மத மா அனான்.99.-அதுகேட்டுப் பெரும்போர்புரிய வீமன் அங்கு
விரைந்துஓடுதல்.
போர் மதம் மா அனான்-போர்செய்யவல்ல மதக்களிறு
போன்றவனான, பெரு மடைப்பள்ளி எய்திய மாருதி – பெரிய
மடைப்பள்ளியைச் சேர்ந்திருந்த வீமன், ழுஇ கிளர் பெரும் போர் கிடைப்பது
அன்று – இந்த உற்சாகத்துடன்செய்யத்தக்க பெரும்போரானது (எப்போதும்)
கிடைக்கக் கூடியது அன்று,ழு எனா – என்று (போரைக் குறித்து) மகிழ்ச்சி
கொண்டு, தொடை பெரும் பவனத்து-(விரைந்து செல்வதால்) தொடையினின்று
வெளிப்படுகின்ற பெருங்காற்றிலே, அனல் சோர்தர புடைப்ப – நெருப்புத்
தோன்றுமாறு (ஒருதுடையோடு மற்றொருதுடை) மோத, ஓடினன்-: (எ – று.)
துடைகள் ஒன்றோடொன்று மோதிப் பெருங்காற்றை
வெளிப்படுத்துவதால்அந்த அதிர்ச்சியில் நெருப்புத்தோன்றி
மூளுவதாயிற்றென்க.துடைப்பரும்பவனத்துஎன்ற பாடத்துக்கு – அழித்தற்கு
அரிய வீட்டினின்றும்,தான்செல்லும் விசையாலே, அனல்சோர்தர ஓடினான்
என்பர். துடைப்பரும்புவனத்தினிற் சோர்தர என்றும் பாடம்.
அகப் பொழில் கண்ட அம் மரம் யாவையும்,
மிகப் பிடுங்கினன், வேரொடும் கோட்டொடும்;
உக, புடைத்தனன்; ஓடத் தொடங்கினார்,
தகச் செயா மதிக் கீசகன் தம்பிமார்.100.-இரண்டுகவிகள்-வீமசேனன்மரங்களைக்கொண்டு
உபகீசகர்களைத் துரத்திதுரத்தி யடித்து உயிர்தொலைத்ததை
கூறும்.
அகப்பொழில்-சோலையினுட்புறத்தே, கண்ட-காணப்பட்ட, அ
மரம் யாவைஉம் – அந்த மரங்களை யெல்லாம், வேரொடுஉம் கோட்டொடுஉம்
– வேரோடும் கிளையோடும், மிக பிடுங்கினன் – மிகுதியாகப் பிடுங்கி,-உக –
(அவ்வுபகீசகர்கள்) உயிர்சிந்துமாறு, புடைத்தனன் – மோதினான்; தக –
தகுதியாக, செயா – (தொழில்களைச்) செய்யமாட்டாத, மதி –
துர்ப்புத்தியையுடைய, கீசகன் தம்பிமார்-, -ஓட தொடங்கினார் – ஓட
ஆரம்பித்தார்கள்; (எ – று.)
திரௌபதியை உயிரோடு கொளுத்துவதென்று முயன்றவ ராதலால்,
அவர்களை ழுதகச்செயாமதிக் கீசகன்தம்பிமார்ழு என்றார். பிடுங்கினான் –
முற்றெச்சம்.
போன போன திசைதொறும் போய்த் தொடர்ந்து,
ஆன வானவன், ஒக்க, அக் கோட்டினால்,
மானமும், அவர் ஆவியும், வாங்கினான்;
ஏனையோர்களும் தம்முனொடு எய்தினார்.
போன போன திசைதொறுஉம் – (உபகீசகர்) ஓடிப்போன
திக்குக்களிலெல்லாம், தொடர்ந்து போய் – (அவர்களைத்) தொடர்ந்து சென்று,
ஆன – (திரௌபதியைக் காப்பதற்காக) வந்த, வானவன் ஒக்க –
கந்தருவதேவனையொப்ப (த்தோன்றி), அ கோட்டினால் – அந்த
மரக்கிளையினால், மானம்உம் – (அவர்களுடைய) கருவத்தையும், அவர்
ஆவிஉம் – அவர்களுடைய உயிர்களையும், வாங்கினான் – (வீமன்)
பறிக்கலானான்: ஏனையோர்கள்உம் – மற்றையோரான உபகீசகர்களும்,
தம்முனொடு எய்தினார் – தம் அண்ணனோடு போய்ச் சேர்ந்தார்கள்
[இறந்தார்கள்]: (எ – று.)
தொடர்ந்து-, ஆன – பொகுந்திய, வானவன் – பெரியோனான
வீமசேனன், ஒக்க – ஏற்க என்று உரைப்பாரு முளர். இரண்டாமடியில்,
ஆனைமானவனக்கொடுங்கோட்டினான் என்றும் பாடம்.
துவன்று கற்புடைத் தோகையை விட்டு, முன்
நுவன்ற கீசகர் நூற்றொரு மூவரும்,
அவன்தன் வாகுவினால் அழிவுண்டபின்,
கவன்றதால், அக் கடி நகர் எங்குமே.102.-ஊரார் வருந்துதல்.
துவன்ற – நெருங்கிய, கற்பு உடை-பதிவிரதைத் தன்மையை
யுடைய, தோகையை – மயில்போன்ற சாயலையுடையளான திரௌபதியை,
விட்டு-(தாம் ஈமவெரியிலிடுமாறு பற்றியிருந்ததை) விட்டிட்டு, முன் நுவன்ற
கீசகர் நூற்றொருமூவர்உம் – முன்னே சொன்ன உபகீசகர் நூற்றுமூன்று
பேர்களும், அவன் தன் வாகுவினால் – அந்த வீமசேனனுடைய கையினால்,
அழிவுண்டபின்-இறந்து விட்டபிறகு, அ கடி நகர் எங்குஉம் கவன்றது –
அந்தக் காவலுள்ள நகரம்முழுதும் வருந்திற்று; (எ – று.)-ஆல் – ஈற்றசை.
ஏககாலத்தில் விராடனுடைய தேவியின் தம்பியர்யாவரும் இறந்தது
குறித்து நகரத்தவர் சோகித்தன ரென்பதாம். நகரத்துக்குப் பாதுகாவல்
குறைந்திட்டது குறித்துச் சோகித்தன ரெனலுமாம். நூற்றொடொரைவரும்
என்றுபாட மிருக்கலாம்.
கற்கும் யாழுடைக் கந்தருவர்க்கு எதிர்
நிற்பரோ, உடன் நேர் பொர மானவர்?
கிற்கும் மைந்துடைக் கீசகர் யாவரும்
தற்கினால் மடிந்தார்; தகவு ஒன்று இலார்.’103.-இரண்டுகவிகள் ஒருதொடர் :நகரத்தவர்கீசகவதத்தால்
நடுங்கிட, வீமனும் திரௌபதியும் தத்தமிடத்தைச் சேர்தல் கூறும்.
கற்கும் – பயின்ற, யாழ்உடை – யாழையுடைய, கந்தருவர்க்கு
எதிர் – கந்தர்வர்க்கு முன்னே, நேர் பொர – நேர்நின்று சண்டைசெய்ய,
மானவர் உடன் நிற்பர்ஓ – மனிதர் உடன் நிற்கவல்லரோ? [வல்லரல்லர்]:
(ஆதலால்), கிற்கும் மைந்து உடை – ஆற்றல்படைத்த வலிமையையுடைய,
கீசகர் யாவரும் -, தகவு ஒன்று இலார் – நற்குணம் சிறிதும் இல்லாதவராய்,
தற்கினால் – செருக்கினால், மடிந்தார் – இறந்திட்டார்; (எ – று.) – கிற்கும்
மைந்து – செய்யும் வலிமையுமாம்.
என்று மா நகர் யாவும் நடுங்கிட,
துன்று கங்குலில் சோரர்தம் ஆர் உயிர்
பொன்றுவித்த பொருநனும் பூவையும்,
சென்று, தத்தம சேர்விடம் நண்ணினார்.
என்று – என்றுசொல்லி, மா நகர் யாஉம் – பெரிய நகரத்தி
லுள்ள ஜநங்களெல்லாம், நடுங்கிட – நடுங்காநிற்க,- துன்று கங்குலில் –
(இருள்) நிரம்பிய இரவிலே, சோரர்தம் – வஞ்சனைக் குணமுடையரான
கீசகரின், ஆர் உயிர் – அருமையான உயிரை, பொன்று வித்த – அழியுமாறு
செய்த, பொருநன்உம் – வீரனாகிய வீமனும், பூவையும் – நாகணவாய்ப்
பறவைபோன்று கொஞ்சிப்பேசுந் தன்மையளான திரௌபதியும், சென்று –
(ஆங்குநின்றும்) போய், தத்தம் – தம் தமக்குஉரிய, சேர்வு இடம் – சேர்தற்கு
உரிய இடத்தை, நண்ணினார் – சேர்ந்தார்கள்; (எ – று.)
நகர்- இடவாகுபெயர். பூவை – உவமவாகுபெயர். ‘வண்ண மகளோ
பேரழகுபடைத்த வடிவினள்: அவளைக் கண்ணெடுத்துப் பார்ப்பவரோ
கீசகர்கதியைக் கந்தருவதேவரா லடைவது திண்ணம்: ஆதலால், இவளை
இந்நகரில் தங்கஇடங்கொடுக்காமல் அப்பாற் செல்லச் செய்வதே தகுதி’ என
நகரத்தவர் விராடனிடம் வேண்ட, விராடனும் வண்ணமகளை நகரைவிட்டுப்
போய்விடுமாறு சுதேஷ்ணை மூலம் தெரிவிக்க, அரசகட்டளையைக் கேட்ட
வண்ணமகள் ஒரு திங்கள் அங்குவசிக்க அநுமதிகொடுக்குமாறு
வேண்டிக்கொள்ள, சுதேஷ்ணை உடன்பட்டனளென்னும் முதனூல்
கரிய கங்குல், கனை இருள் போர்வையோடு
இரிய, வந்த இருள்வலி தன்னினும்,
புரியின், அன்று புரிந்த அப் போரும், வன்
கிரியின் மன்னும் கிளர் விளக்கு ஆனதே.105.-சூரியோதயமாகஇரவில்நடந்த போர் எங்கும் பிரசித்தமாதல்.
கரிய கங்குல் – கருநிறமாகத் தோன்றும் இரவானது, கனை
இருள் போர்வையோடு இரிய – நெருங்கிய இருளாகிய போர்வையோடு
நிலைகெட்டோட, வந்த-அப்போது உதித்த, இருள்வலி தன்னின்உம் –
சூரியனைக்காட்டிலும், புரியின் அன்று புரிந்த அப்போர்உம் – அந்த
விராடநகரத்திலே அன்று செய்யப்பட்ட அந்தயுத்தமும், வல் கிரியின் மன்னும்
கிளர் விளக்கு ஆனது – வலியமலைமீதுபொருந்திய கொழுந்துவிட்டெரிகின்ற
தீபம்போல எங்கும் விளக்கமுற்றுப்பரவியது; (எ – று.)
பலநகரங்களிலும் இதேபேச்சாயிற் றென்றவாறு. சூரியன் குன்றின்
மேலிட்ட விளக்குப்போன்று உலகெங்கும் பிரகாசித்தனனன்றோ:
அதுபோலவே கீசகர்களின்வதமும் எங்கும் தெரிய லாயிற்றென்க. இருள்வலி
– இருளையொழிக்கும் வலிமைபெற்றவன் எனச்சூரியனுக்கு
அன்மொழித்தொகை.
புலியினும், பெரும் போரில், தனித்தனி
வலியர் ஆகிய மைத்துனர் யாரையும்
பலியிடும் கந்தருவரைப் பார்க்கவே,
மெலிவு உழந்தனன், விற் கை விராடனே.106.-தன் மைத்துனன்மார்கந்தருவரா லிறந்தது கேட்டு
விராடன் மெலிவுழத்தல்.
பெரும் போரில் – பெரிய போர்முனைகளில், புலியின்உம்
தனித்தனி வலியர் ஆகிய – புலியைக்காட்டிலும் தனித்தனி வலிமையைக்
காட்டுபவராகிய, மைத்துனர் யாரைஉம் – (தன்) மைத்துனர் யாவரையும்,
பலியிடும் – உயிர்ப்பலிகொண்ட, கந்தருவரை -, பார்க்கவே-, வில் கை
விராடன் – வில்லையேந்திய கையையுடைய விராடமன்னவன், மெலிவு
உழந்தனன் – மனச்சோர்வடைந்தான்; (எ – று.)
மைத்துனர் யாரையும் பலியிடுங் கந்தருவரைப் பார்த்தல் தன்
மைத்துனன்மாருயிரைக் கந்தருவர்கொள்ளை கொண்டா ரென்று உணர்தல்.
பார்த்தல் – இங்கு, மனத்தாற் காணல். பார்க்கவே என்ற இடத்து, பற்றவே
என்றும் பாடமுண்டு.
காண்தகும் தம வேடம் கரந்து உறை
ஆண்டு சென்றது, இனிச் சில நாள் என;
‘மீண்டு தோன்றுதும்!’ என்று விரதராம்
பாண்டு மைந்தரும், பான்மையின் நண்ணினார்.107.-பெரும்பாலும்அஜ்ஞாதவாசகாலம் கழிந்துவிட்டதால்
பாண்டவர் இனி விரைவில் வெளிப்படுவோமென்ற
மனப்பான்மையோ டிருத்தல்.
விரதர் ஆம் – விரதவொழுக்கத்தை யுடையவரான, பாண்டு
மைந்தர்உம் – பாண்டவர்களும்,- ழுகாண்தகும் தம வேடம் – (இன்னாரென்று)
கண்டறியத்தக்க நிஜரூபத்தை, கரந்து – மறைத்துக்கொண்டு, உறை –
வசிக்கின்ற, யாண்டு – ஒருவருஷமும், இனி சில நாள் என – இனிச் சில
நாளே யுள்ளன என்னுமாறு, சென்றது – (பெரும்பாலும்) கழிந்திட்டது; மீண்டு
தோன்றுதும் – (விரைவில் தானே நிஜரூபத்துடன்) மறுபடியும்
வெளிப்படுவோம்,ழு என்று – என்றுகருதி, பான்மையின் – (அதற்கேற்ற)
மனப்பான்மையோடு, நண்ணினார் – பொருந்தியிருந்தார்; (எ – று.)
விரதராம் பாண்டுமைந்தர் – அஜ்ஞாதவாசஞ்செய்யுமாறு விரதம் பூண்ட
பாண்டவரென்க.
———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply