அல்லினுக்கு இந்து என்ன ஆங்கு அவர் உறையும் நாளில்,
‘வில்லினுக்கு இராமன் என்ன, வேலினுக்கு இளையோன் என்ன,
சொல்லினுக்கு உததி தோய் கைத் தொல் முனி என்ன, வன் போர்
மல்லினுக்கு ஒருவன் யானே; வாசவன்’ என்று வந்தான்;-1.-மல்லனொருவன், மற்போரில்ஒப்பற்றவன் என்று
சொல்லிக்கொண்டுஅந்தவிராடநகர்க்கு வருதல்.
அல்லினுக்கு – இராப்போதில், இந்து என்ன – சந்திரன் சிறப்
புற்றிருப்பதுபோல, (மிக்கசிறப்புற), ஆங்கு – அந்தவிராடநகரிலே, அவர் –
அந்தப்பாண்டவர், உறையும் – வசித்துவருகின்ற, நாளில் – காலத்தில்,-
ழுவில்லினுக்கு இராமன் என்ன – வில்வித்தையில் ஸ்ரீராமன்போலவும்,
வேலினுக்கு – வேற்படையில், இளையோன் என்ன – (சிவபிரானுடைய)
இளையகுமாரனாகிய முருகக் கடவுள்போலவும், சொல்லினுக்கு –
தமிழ்மொழிக்கு, உததி தோய்கை – சமுத்திரம்படிந்த கைகளையுடைய, தொல்
முனி என்ன – பழமையான அகத்தியமுனிவன்போலவும், வல் மல் போரி
னுக்கு – உடல்வலிமை கொண்டுசெய்யப்படுகிற மல்லயுத்தத்திற்கு, வாசவன் –
வாசவனாக, யான்ஏ – யானே, ஒருவன் – ஒப்பற்றவன்,ழு என்று – என்று
சொல்லிக்கொண்டு, (ஒருமல்லவீரன்), வந்தான் – (அந்த விராடநகரில்)
வந்துசேர்ந்தான்; (எ – று.)
சொல் – பாஷா என்றவடசொல்லின் மொழிபெயர்ப்பு. உததி தோய்கைத்
தொன்முனி யென்று வருவதனால், சொல் – தமிழ்ச் சொல்லைக் காட்டிற்று.
சூரபத்மாஎன்ற அசுரன் கடலிற் புகுந்து கொண்டானாக, அப்போது
அகத்தியமுனிவன் தேவர்களின் வேண்டுகோளினால் கடனீரைத் தன்கைச்
சுளகத்தி லடக்கி, ஆசமனஞ் செய்தானென்ற வரலாறுபற்றி, ழுஉததிதோய்கைத்
தொன்முனிழு என்றது. முதனூலில், வந்தமல்லன்பெயர் ஜீமுத னென்று
இருப்பதனாலும், மல்லேந்திரனென்று அன்னான் கூறப்படுவதனாலும், வாசவன்
என்பதைப் பேராகக் கொள்ளாமல், ழுமல்லினுக்கு வாசவன் யான் ஒருவனேழு
என்று கூட்டியுரைக்கப்பட்டது. பாண்டவர் வந்து நான்குமாதம் கழிந்ததும்,
விராடநகரத்தில் சங்கரவுத்ஸவம் வந்ததாக, அப்போது பலமல்லர்களும் ஆங்கு
வந்தனர்: அங்ஙனம் வந்தவர்களுள் ஒருவன் என்னில் மிக்காரில்லையென்று
தன்னைப் பாராட்டிக்கூறிக்கொண்டு வந்தா னென்ற விவரத்தை முதனூலா
லறிக. மல்லினுக்குஇந்துஎன்ன என்பதற்கு – இரவில் வானத்துத் தோன்றும்
பல சோதிகளுள் சந்திரன்போல என்று உரைத்து, அத்தொடரையும்
போர்மல்லினுக்கு ஒருவன்யானே என்பதனோடு எட்டுவாரு முளர்.
இச்சருக்கத்திலுள்ள பதினான்குகவிகளும் – பெரும்பாலும் முதற்சீரும்
நான்காஞ்சீரும் விளச்சீர்களும், மற்றவைமாச்சீர்களுமாகி வந்த
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தங்கள்.
அண்ட மா முகடோடு ஒத்த சென்னியன்; அவனி முற்றும்
கொண்ட மா மேரு ஒத்த குங்குமக் கடகத் தோளான்;
சண்டமாருதத்தோடு ஒத்த வலியினன்; தந்தி எட்டின்
கண்டம் ஆர் முகத்தின் நீண்ட கை எனத் திரண்ட காலான்2.-அந்த மல்லனது வருணனை.
(அந்தமல்லன்),-அண்டம் மா முகடோடு ஒத்த-அண்டத்தின்
பெரிய மேலிடத்தையொத்த [ஓங்கிய], சென்னியன் – தலையையுடையவன்:
அவனி முற்றுஉம்-பூமிமுழுவதையும், கொண்ட – தாங்கிக்கொண்டுள்ள, மா
மேருஒத்த-சிறந்த மேருமலைபோன்ற, குங்குமம் கடகம் தோளான் –
குங்குமச்சேறுபூசிய கடகமென்ற தோள்களையையணிந்த தோளையுடையவன்:
சண்டமாருதத்தோடு ஒத்த – கொடுங்காற்றோடு ஒப்பிடத்தக்க, வலியினன்-
பலத்தையுடையவன்: தந்தி எட்டின் – அஷ்டதிக்கஜங்களின், கண்டம் ஆர்
முகத்தின் – கழுத்தையொட்டியுள்ள முகத்தினின்று, நீண்ட – நீண்டுள்ள,
கையினை-துதிக்கைபோல, திரண்ட – திரண்டுள்ள, காலான் –
கால்களையுடையவன்; (எ – று.)
மேருமலை பூமியினிடையேயிருந்து அதனைத் தாங்குவ தென்ற
நூற்கொள்கைபற்றி, ‘அவனிமுற்றுங் கொண்ட மாமேரு’ எனப்பட்டது. தந்தி-
தந்தத்தையுடையது என யானைக்குக் காரணவிடுகுறி. தந்தி எட்டு-கிழக்கு
முதலிய திக்குக்களிலிருக்கும் ஐராவதம் புண்டரீகம் வாமனம் குமுதம்
அஞ்ஜநம் புஷ்பதந்தம் ஸார்வபௌமம் ஸு ப்ரதீகம் என்ற தெய்வயானைகள்.
தந்திக்கையை யுவமமாகக் கூறியதனால், இங்கு ‘கால் என்றது – அரைக்குக்
கீழ்பட்டுத் துடைமுதற் கொண்டுள்ள பகுதியைக் காட்டும்.
ஆயிரம் மல்லர் தன்னை அணி நிழல் என்னச் சூழ,
‘பாய் இரும் புரவித் திண் தேர்மிசை வரும் பரிதி போல,
மா இரு ஞாலம்தன்னில் மற்று இவற்கு எதிர் இன்று!’ என்ன,
சேய் இருந் தடக் கை வேந்தன் திருந்து அவைஅதனைச்
சேர்ந்தான்.3.-அந்தமல்லன் பலமல்லர்தன்னைச் சூழ்ந்துவர,
விராடனவைக்களத்தை யடைதல்.
ஆயிரம் மல்லர்-பலமல்லர்கள், தன்னை-, அணி நிழல்
என்னஅழகிய நிழலைப்போல, சூழ-சூழ்ந்துவர,-பாய் இரு புரவி
திண்தேர்மிசை வரும் பரிதி போல-பாய்ந்துசெல்லும் இயல்புள்ள பெரிய
குதிரைகள் பூட்டிய வலிய தேர்மீதுவரும் சூரியன்போல், (பாயிரும் புரவித்
திண்தேர்மிசை வந்து),-மா இரு ஞாலந்தன்னில் இவற்கு எதிர் இன்று என்ன-
மிகப்பெரியபூமியிலே இந்தமல்லற்கு ஒப்பானவர் இல்லையென்று (கண்டவர்)
சொல்லுமாறு, சேய் இரு தட கை வேந்தன்-செவ்விய பெரிய நீண்ட
கைகளையுடைய விராடராசனது, திருந்து அவை அதனை – திருத்தமுற்ற
சபையை, சேர்ந்தான்-வந்தடைந்தான்;(எ – று.)
சூரியனுக்கு ஒப்பான கிரகம் எங்ஙனம் வானத்திலில்லையோ அவ்வாறே
இந்தமல்லனுக்கு ஒப்பானவர் இப்பூவுலகிலில்லை யென்று சொல்லுமாறு மிக்க
ஆடம்பரஞ்செய்துகொண்டு நிழல்போல ஆயிரமல்லர் தன்னைச் சூழ்ந்துநிற்க,
விராடனுடைய அவைக்களத்தை அந்தமல்லன் வந்துசேர்ந்தானென்க.
கற்றோர்பலர் சேர்ந்திருத்தலால், விராடனுடைய சபை,
திருந்தவையெனப்பட்டது. வந்தமல்லன் தேர்மீதூர்ந்துவந்தா னென்று மேல்
ஏழாம்பாட்டிற் பெறப்படுவதனால், அவனுக்குத் திண்தேர்மிசை வரும் பரிதியை
உவமை கூறினார்
மன்னனை வணங்கி நின்று, ‘வலியுடை மல்லின் போருக்கு
என் அலது இல்லை, இந்த எழு கடல் வட்டத்து!’ என்றான்;
கொல் நவில் வேலினானும், கொடுப்பன கொடுத்து, முன்னம்
தன்னுழை வைகும் மல்லர்தங்களை நோக்கினானே4.-வந்தவன் ழுமற்போருக்குஎன்னைப்போன்றவரில்லைழு
என்ன, விராடன் அவனுக்குச்சிறப்புச்செய்து தன்னிடமுள்ள
மல்லரை நோக்குதல்.
(வந்த மல்லவீரன்), மன்னனை-விராடராசனை, வணங்கி
நின்று -, ழுவலிஉடை – தேகபலத்தைக்கொண்டுசெய்கின்ற, மல்லின் போருக்கு-
மற்போரிலே, (மிக்கவர்), இந்த எழு கடல் வட்டத்து-ஏழு கடல்களாற்
சூழப்பட்ட இந்தப் பூமண்டலத்தில், என் அலது – என்னையல்லாமல், இல்லை-
(வேறொருவரும்) இல்லை,ழு என்றான்-என்று (தன்திறமையைத்) தெரிவித்தான்;
கொல் நவில் வேலினான்உம் – கொல்லுதற்றொழிலிற் பயின்ற
வேற்படையையுடைய விராடராசனும், கொடுப்பன – (அவனுக்குக்
கொடுக்கத்தக்க) சிறப்புக்களை, கொடுத்து-, முன்னம்-(அந்த மல்லவீரன்
வருதற்கு) முன்னமே, தன்னுழை வைகும்-தன்னிடத்துத் தங்கியுள்ள, மல்லர்
தங்களை – மல்லர்களை, நோக்கினான்-; (எ – று.)
தன்னுழைவைகும் மல்லர்களை நோக்கியது – ழுஎன்னினும்மிக்க மல்லர்
இந்தப்பூமண்டலத்தி லில்லைழு என்று கூறுவதனால், இவனுடன் மற்போர்
செய்து வெல்லவேண்டு மென்பதைக் குறிப்பிக்கவாகும்.
அந்த மல் தொழிலின் மிக்கோர் அநேகர், நீடு அசனி ஒப்பார்,
வந்த மல் தலைவன் தன்னை, ‘வருதி நீ, எம்மொடு!’ என்று,
முந்த மற் கலை நூல் சொன்ன முறைமையின், அரசன் காண,
சந்த மற் சமரம் செய்தார், தனித்தனி ஒருவராக5.-மற்றொழிலில்வல்லவர்அநேகர் அந்த மல்லனுடன்
தனித்தனி பொருதல்.
அந்த மல் தொழிலில் – (வந்த மல்லவீரன் வல்லமை
பெற்றுள்ள) அந்த மற்போர்த் தொழிலிலே, மிக்கோர் – மிகவல்லவரான,
அநேகர்-, நீடு அசனி ஒப்பார்-பேரிடியை யொப்பவராய்
(க்கர்ச்சித்துக்கொண்டு), வந்த-, மல் ழுதலைவன் தன்னை – மல்லர் தலைவனை,
ழுஎம்மொடு – எம்முடனே, நீ-, வருதி-(மற்போர்செய்ய) வருவாய், ழுஎன்று-என்று
அறைகூவி,-அரசன் காண – விராட மன்னவன் கண்டுகொண்டிருக்க, முந்த –
விரைவாக, மல்கலை நூல்சொன்ன முறைமையின் –
மற்போர்த்தொழிலைப்பற்றிய சாஸ்திரஞ்சொன்ன முறைமையினால், சந்தம் மல்
சமரம் – அழகிய மற்போரை, தனித் தனி ஒருவர் ஆக – தனித்தனியே
ஒவ்வொருவராக, செய்தார்-; (எ – று.)
கலை -சாஸ்த்ரம். போர்க்கு வரும்போது பெருமுழக்கஞ்செய்து
கொண்டு வருவதனால், அசனியை யொப்பார் என்றது
தத்தியும், தோளும் தோளும் தாக்கியும், சென்னி கொண்டு
மொத்தியும், பற்பல் சாரி முடுகியும், வயிரக் கையால்
குத்தியும், காலும் காலும் கோத்தும், மற் கூறு தோன்ற
ஒத்தியும், பாறை என்ன உரனுடன் உரங்கள் சேர்த்தும்,6.-இதுவும் அடுத்தகவியும்-குளகம்:அரசனிடத்திருந்த மல்லர் வந்தமல்லனோடு தனித்தனிபொருதுதோற்க,அரசன்வந்தவனை
விசேஷமாகச் சம்மானித்தலைக்கூறும்.
தத்திஉம் – தாவியும், தோள்உம் தோள்உம் தாக்கி உம்-
தோளுடன் தோள் பொருந்த மோதியும், சென்னி கொண்டு மொத்திஉம் –
தலையைக்கொண்டு இடித்தும், பல் பல் சாரி முடுகிஉம் – பலபல சாரிகளால்
விரைந்தும், வயிரம் கையால் குத்திஉம் – வயிரம்போலுறுதியான
கைம்முஷ்டிகளாற் குத்தியும், கால்உம் கால்உம் கோத்துஉம் – காலுடன் கால்
சேரப்பின்னியும், மல் கூறுதோன்ற – மற்போரின் கூறுபாடு புலப்பட, ஒத்திஉம்-
சிறிதுபின்னிடைந்தும், பாறை என்ன உரனுடன் உரங்கள் சேர்த்துஉம் – பாறை
ஒன்றோடொன்று சேர்க்கப்படுவதுபோல மார்போடு மார்பைச் சேர்த்தும்,-
(எ -று.)-ழுஆரம ருடற்றிழு என அடுத்த கவியோடு இயையும்.
ழுஓரொருமல்லராக ஆரமருடற்றிழு என மேல் வருவதனால்,
ழுஉரனுடனுரத்தைச் சேர்த்தும்ழு என்று பாடமிருப்பின் நலம். சாரி -வலப்புறமாகவும் இடப்புறமாகவும் சஞ்சரித்தல். ஒத்தியும் – ஒற்றியும்
என்றலுமாம்.
ஓர் ஒரு மல்லர் ஆக ஒரு தனி மல்லன்தன்னோடு
ஆர் அமர் உடற்றி, மல்லர் அனைவரும் அழிந்த பின்னர்,
வீரரில் வீரன் ஆன வென்றி வேல் விராடன் மெச்சி,
தேரின்மேல் வந்த மல்லன்தனக்கு எலாச் சிறப்பும் செய்தான்.
ஒரு தனி மல்லன் தன்னோடு – ஒப்பற்ற தனித்த மல்லனான
(வந்த அந்த) வீரனோடு, ஓர் ஒரு மல்லர் ஆக – ஒவ்வொரு மல்லவீரராக,
ஆர் அமர் – அருமையான மற்போரை, உடற்றி – பொருது, (இங்ஙனம்),
மல்லர் அனைவர்உம் – எல்லாமல்லர்களும், அழிந்த பின்னர் – தோற்ற
பிறகு,-வீரரில் வீரன் ஆன வென்றிவேல் விராடன் – வீரர்கட்குட் சிறந்த
வீரனென்று மதிப்புப்பெற்ற வெற்றிபொருந்திய வேற்படையையுடைய
விராடராசன், மெச்சி – (வந்த மல்லவீரனைப்) பாராட்டி, தேரின் மேல் வந்த
மல்லன் தனக்கு – தேரின்மேல்வந்த (அந்த) மல்லனுக்கு, எலாம் சிறப்புஉம் –
எல்லாச்சிறப்புகளையும், செய்தான்-; (எ – று.)
வீரத்தின்சிறப்புப் பெருவீரனானவிராடனுக்குத் தெரியு மாதலால்,
வந்தமல்லனை மெச்சி பெருமல்லற்குச் செய்யவேண்டிய சிறப்புக்களை அந்த
மல்லனுக்கு விராடமன்னவன் செய்தா னென்க.
அன்று போய் மற்றை நாளின் அரசனோடு அறத்தின் மைந்தன்,
‘வென்ற மா மல்லன்தன்னை வெல்லுதற்கு உரிய மல்லன்,
இன்று நின் மடையர்தம்மில் பலாயனன் என்போன்தன்னை
அன்றி, வேறு இல்லை’ என்றான்; அரசனும், ‘அழைமின்’ என்றான்.8.-மற்றைநாள்தருமபுத்திரன், மன்னனிடம்
ழுஇந்தமல்லனைப் பலாயனன்வெலத்தக்கான்ழுஎன்ன,
அரசன்அவனையழைப்பித்தல்.
அன்று போய்-, மற்றைநாளின் – மற்றைநாளிலே,-அரசனோடு
– விராடராசனுடனே, அறத்தின்மைந்தன் – தருமபுத்திரன், ழுவென்ற-(நேற்று)
வெற்றிபெற்ற, மா மல்லன் தன்னை – சிறந்த மல்லவீரனை, வெல்லுதற்கு உரிய
– ஜயிப்பதற்கு ஏற்ற, மல்லன் – மற்போர்செய்பவன், இன்று – இப்போது, நின்
மடையர் தம்மில் – உன்னுடைய சமையற்காரர்க்குள், பலாயனன் என்போன்
தன்னை அன்றி – பலாயனனென்பவனை யல்லாமல், வேறு – வேறொருத்தர்,
இல்லை-,ழு என்றான்-; அரசன்உம் – விராடராசனும், ழுஅழைமின் – (அந்தப்
பலாயனனை) அழைத்துவாருங்கள்,ழு என்றான் – என்று கூறினான்; (எ – று.)
பலமல்லர்களும் அந்தமஹாமல்லனைக் கண்டு அஞ்சினார்களாகச் சிலர்
எதிர்த்துத் தோற்றார்கள்: அந்தமஹாமல்லன் அப்போது விராடனைப் பார்த்து
ழுநான் மல்லராஜன்: என்னோடு பொரத்தக்கார் எவருமில்லை: சிங்கம் புலி
முதலியவற்றுடனும் பொரவல்லேன் என்றுகர்ச்சித்தான். அப்போது
மற்றைமல்லர்களெல்லாம் அஞ்சி நடுங்கி நிற்பதுகண்டு விராடராசன்
ழுஇந்தமல்லனோடு பொரவல்லார் யார்?ழு என்றுவினாவ, அச்சத்தினால் எல்லா
மல்லரும் வாய்திறவாது இருந்தனர். விராடராசன் வெகுண்டு ழுநான் இந்த
மல்லர்களுக்கு விட்டிருக்கும் கிராமங்களையும் சம்பளங்களையும்
பறித்துக்கொண்டு விடுகிறேன்ழு என்றான்: அப்போது அருகேயிருந்த
அங்கனென்ற யுதிஷ்டிரன் ழுயுதிஷ்டிரனிடத்துக் கண்ட ஒருமல்லனுண்டு: அவன்
நமது அரண்மனையில் மடைப் பள்ளிவேலையிலிருக்கிறான்: அவன் இவனோடு
பொரவல்லான்ழு என்றான்: என்னவும், விராடன் ழுஇந்தமல்லனோடு பொர
அவனை விரைவாக அழைமின்ழு என்றான் என்று முதனூலி லுள்ளது
பைம் பொன் மா மேரு வெற்பின் பராரையைச் சோதி நேமி
விம்பமாய் வளைந்தது என்ன, விளங்கு பொன் கச்சை வீக்கி,
தம்பம் ஆம் என்னத் தக்க தண்டொடு, தரணி வீழா
உம்பர் ஆர் அமுதம் உண்ட உரவினான், விரைவின் வந்தான்.9.-பலாயனனென்று மறுபேருள்ளவீமன் மற்போர்க்குச்
சித்தனாகஅங்கு வருதல்.
தரணி வீழா உம்பர் ஆர் அமுதம் உண்ட உரவினான்-
பூமியிற்கிடைக்காத தேவர்களின் அரியஅமிருதத்தை யுண்ட
வலிமைபடைத்தவனானவீமன்,-பைம் பொன் மா மேரு வெற்பின் ஒரு
அரையை – பசும்பொன்மயமானபெரிய மேருமலையின் பருத்த அரையை,
சோதி நேமி-ஒளி மயமான சக்கரம்,விம்பம்ஆய் வளைந்தது என்ன –
வட்டமாக வளைந்துகொண்டுள்ளதுஎன்னுமாறு, விளங்கு-விளங்குகின்ற, பொன்
கச்சை-பொற்கச்சையை, சேர்த்தி-இடையிற்) கட்டிக்கொண்டு,-தம்பம் ஆம்
என்ன தக்க – தம்பமோ என்றுகருதும்படியுள்ள, தண்டொடு –
தண்டாயுதத்துடனே, விரைவின் வந்தான்-; (எ – று.)
வீமனதுஇடையிற் பொற்கச்சை விளங்குவது, மேருவின்பராரையில்
நேமிவட்டமாச் சூழ்ந்தது போலும்; தற்குறிப்பேற்றம். சோதி நேமி-
சூரியனென்பாரு முளர். தரணி வீழா – கங்கைநீர்ப் பெருக்கில் வீழ்ந்து,
(பாதாளஞ்சென்று), உம்பராரமுதம்உண்ட என்று கூறலுமாம்: இச்சரித்திரம்
வாரணாவதச்சருக்கத்திற் கூறப்பட்டுள்ளது. கச்சை – அரையாடை
யவிழ்ந்திடாதபடி கெட்டியாக இருப்பதற்கு இடையிற் கட்டுவது, பருமை +
அரை = பராரை : பண்புப்பெயர் ஈறுபோய், வருமொழி முதல்நீண்டு
நிலைமொழியீறுகெட்டது: “ஈறுபோதல்… இனையவும் பண்பிற்கியல்பே”
[நன். பத. 9.]
கதையுடைக் காளை வந்து, கடுந் திறல் மல்லன்தன்னோடு,
உதயமோடு அத்தம் என்னும் ஓங்கல் ஓர் இரண்டு சேர்ந்து
துதைவுறப் பொருவதேபோல், தோள் புடைத்து, உருமின் ஆர்த்து,
பதயுகத்தாலும், தம்தம் பாணிகளாலும், சேர்ந்தார்.10.-இரண்டுகவிகள்-பலாயனனும்முன்னர்வெற்றி பெற்றிருந்த
மல்லவீரனும் பொருதலைத் தெரிவிக்கும்.
கதை உடை – கதாயுதத்தையுடைய, காளை – இளவீரனான
பலாயனன், கடுந்திறல் மல்லன் தன்னோடு-கொடிய திறமையையுடைய
மல்லனோடு, வந்து-வந்து சேர்ந்ததனால், (அவ்விருவரும்), உதயமோடு அத்தம்
என்னும் ஓங்கல் ஓர் இரண்டு சேர்ந்து-உதயமலையோடு அத்தமலை
யெனப்படும் ஓரிரண்டுமலையும் ஒன்றுசேர்ந்து, துதைவு உற –
நெருங்குதல்பொருந்த, பொருவதுஏ போல் – போர் செய்வதுபோல, தோள்
புடைத்து – (தம்தோள்களைத்) தட்டியும், உருமின் ஆர்த்து – இடிபோலக்
கர்ச்சித்தும், பதம் யுகத்தால்உம் – இரண்டுபாதங்களாலும், தத்தம் பாணிகளால்
உம் – தங்கள் தங்களுடைய கைகளாலும், சேர்ந்தார் – நெருங்கிப்
பொருதார்கள்; (எ – று.)
பொருவதே போற் சேர்ந்தார் என இயையும்.
உதைத்தனர், வீசி வன்போடு; உரம்கொடு கரங்கள் எற்றிப்
புதைத்தனர், விரல்கள் மெய்யில்; புருவமும், மூக்கும், வாயும்,
சிதைத்தனர்; புயங்கள் என்னும் சிலம்புகள் தாக்கத் தாக்கப்
பதைத்தனர்; ஓடி ஓடிப் பற்றினர், மீள மீள.
(ஒருவரை யொருவர்),- வன்போடு – வலிமையோடு, வீசி
உதைத்தனர்-: உரம்கொடு – வலிமையோடு, கரங்கள் எற்றி – கைகளால்
மோதி, விரல்கள் மெய்யில் புதைத்தனர் – விரலின்வடு உடம்பிலே
புதையும்படி செய்தார்கள்; புருவம்உம் மூக்குஉம்-புருவங்களையும்
மூக்குகளையும், வாயில் – வாயோடு, சிதைத்தனர் – பழுது படச்செய்தனர்:
புயங்கள் என்னும் சிலம்புகள் தாக்க தாக்க – (மாற்றானுடைய)
தோள்களென்கிற மலைகள் மோதுவதனால், பதைத்தனர் – (வலிதாங்க
மாட்டாமல்) துடித்து, ஓடி ஓடி – ஓடி யோடிப்போய், மீள மீள பற்றினர் –
மீண்டும் மீண்டும் (ஒருவரையொருவர் மற்போர் புரியுமாறு) பற்றிக்
கொண்டார்கள்; (எ – று.)
புருவமும் மூக்கும் வாயிற் சிதைத்தனர் என்பதற்கு – புருவத்தையும்
மூக்கையும் வாய்ப்புறத்திலாகும்படி யழித்தன ரெனினுமாம்
கற்றன காயம் எல்லாம் கண்டு, கண் களிக்கக் காட்டி,
உற்றனர் நின்ற போதில், ஊதையின் புதல்வன்-ஊரு
மற்றவன் மருங்கு பற்ற, வன் கரம் மிடறு பற்ற,
செற்றனன்,-இடிம்பன்தன்னைச் செற்ற வெங் கொற்றத் தோளான்.12.-வீமன் வந்த மல்லனையழித்தல்.
கற்றன – (தாம்) அறிந்துள்ளனவான, காயம் எல்லாம்-
இலக்குக்களை யெல்லாம், கண்கண்டு களிக்க காட்டி – (பார்ப்பவர்)
கண்கள்கண்டு களிக்குமாறு தோற்றுவித்து, உற்றனர் – நெருங்கினவராய்,
நின்ற போதில் – (அவ்விரண்டுமல்லரும்) நின்ற சமயத்தில்,-இடிம்பன் தன்னை
செற்ற வெம் கொற்றம் தோளான் – இடிம்பாசுரனை யழித்த கொடிய வெற்றி
தங்கிய தோள்களையுடையவனான, ஊதையின் புதல்வன் – காற்றின்
குமாரனாகிய வீமசேனன், ஊரு – (தன்னுடைய) தொடை, மற்றவன் மருங்க
பற்ற – மற்றொருவனான மல்லனுடைய இடுப்பைச் சுற்றியவண்ணம் பற்றிநிற்க,
வல் கரம் – வலிய கையானது, மிடறு பற்ற – (அவன்) கழுத்தைப் பற்றிநிற்க,
செற்றனன் – (வந்த) மல்லனை யழித்திட்டான்; (எ – று.)
இடிம்பனைச்செற்ற சரிதையை ஆதிபருவத்து வேத்திரகீயச் சருக்கத்துக்
காண்க. காயம் – ஆங்கிலத்தில் ழு Featழு எனப்படும்.
தேர்மிசை வந்த மல்லன் சிதைந்த பேர் உறுப்பினோடும்
பார்மிசைக் கிடக்க, நின்று, பணைப் புயம் கொட்டி ஆர்த்தான்;
சீர் மிகு மல்லன்தன்னைச் சிறப்புறத் தழுவி, ‘எல்லாப்
போர்முகங்களுக்கும் நின்னைப் போல்பவர் இல்லை!’ என்றான்.13.-வந்த மல்லனைவென்றுநின்ற வீமனை
மன்னன் பாராட்டுதல்.
தேர் மிசை வந்த-, மல்லன்-, சிதைந்த – அழிந்திட்ட, பேர்
உறுப்பினோடுஉம் – (தன்னுடைய)பெரிய உறுப்புக்களுடனே, பார்மிசை கிடக்க-
பூமியின்மீது விழுந்துகிடக்க,-நின்று-(வெற்றிபெற்று) நின்று கொண்டு, பணை
புயம் கொட்டி ஆர்த்தான்-(தன்னுடைய) பருத்த தோள்களைக்கொட்டி
யாரவாரஞ்செய்பவனான, சீர் மிகு மல்லன் தன்னை – சிறப்புப்பொருந்திய
மல்லனான பலாயனனென்றுபேர்பூண்ட வீமசேனனை, சிறப்புஉற – சிறப்புப்
பொருந்த, தழுவி-கட்டிக் கொண்டு, ழுஎல்லாம் போர்முகங்களுக்குஉம் –
முனைமுகங்களிலெல்லாம், நின்னை போல்பவர் – (உன்னை) ஒத்திருப்பவர்,
இல்லை-,ழுஎன்றான்- என்று (விராடமன்னவன்) பாராட்டிக் கூறினான்; (எ – று.)
தன்மல்லன் வெற்றி பெற்றது கண்ட மகிழ்ச்சியினால் தன் தேசத்துக்கே
ஒருமேம்பாட்டை யுண்டாக்கிய அந்தமல்லனை மன்னன் தழுவினானென்க
மன்னவர் களிக்கத்தக்க வரிசைகள் அனைத்தும் நல்கி,
முன்னவன் ஆகி வைகும் முனி மனம் களிக்குமாறு,
தன் அருகு அணுக வைத்து, ‘தலத்து எதிர் இல்லை, இந்த
இன் அமுது அடுவோற்கு!’ என்றான், இயல் திறல் விராடன்தானே14.-விராடன் பலாயனனுக்குப்பலவரிசைகளளித்து
அவன் திறமையைப்புகழ்ந்துகூறுதல்.
இயல் திறல் விராடன் – பொருந்திய திறமையையுடைய
விராடராசன்,-மன்னவர்க்கு – அரசர்களுக்கு, அளிக்கத்தக்க –
கொடுத்தற்குஉரிய, வரிசைகள் அனைத்துஉம் – சிறப்புக்களையெல்லாம், நல்கி
– (அந்த வென்ற பலாயனனென்ற மல்லனுக்குக்) கொடுத்து,-முன்னவன் ஆகி
வைகும் முனி மனம் களிக்கும்ஆறு-(தன்)முன்னிடத்தி லிருப்பவனாகித்
தங்கியுள்ள கங்கபட்டனென்ற முனிவனுடைய நெஞ்சம் மகிழ்ச்சியடையுமாறு,
(அந்தப்பலாயனனை), தன் அருகு அணுக வைத்து – தன்னுடைய சமீபத்திலே
சேரவைத்து, ழுஇந்த இன் அமுது அடுவோற்கு – இனிய சமையலைச் சமைக்கும்
இந்தப் பலாயனனுக்கு, எதிர் – ஒப்பானவர், இ தலத்து-இந்தப் பூமியிலே,
இல்லை-ழு, என்றான்-என்று (அந்தப் பலாயனன் திறமையைக் கொண்டாடிக்)
கூறினான்; (எ – று.)-மன்னவர் களிக்கத்தக்க என்றும், அருகணைய வைத்துத்
தலத்து என்றும் பாடம். தான், ஏ-அசைகள்.
———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply