ஸ்ரீ ஸ்ருதிகளும் ஸ்ரீ அர்ச்சாவதாரமும்
ஸவா ஏஷ புருஷ : பஞ்ச,தர பஞ்சாத்மா ” என்று ஸ்ருதி-http://acharya.org/bk/pb/tkvns/tvumpu-tkvns.pdf
ஸவா ஏஷ புருஷ :-எல்லா உலகங்களுக்கும் காரண பூதனாய் இருக்கும் இந்தப் பரமாத்மா தான்
பஞ்ச,தர-பர ஸ்வரூபம். -வ்யூஹ ஸ்வரூபம் -விபவ ஸ்வரூபம் -அந்தர்யாமி -அர்ச்சை
பஞ்சாத்மா -விஷ்ணு புருஷன் ஸத்யன் அச்யுதன் அநிருத்தன் என்ற ஐந்து வகைகளோடே விளங்குகிறான்
விக்ரஹ ஆராதனை பெருமையை வேதம்
“அத்ப்ய : ஸம்பூத ப்ருதிவ்யை ரஸாச்ச௪ விஸ்வ கர்மண ஸம வர்த்தத”
“அத்ப்ய : -ஜலத்தின் உடையவும்
ப்ருதிவ்யை–பூமியின் உடையவும்
ரஸாச்ச ௪’-ஸாரமான பாகத்தினால்
ஸம்பூத -உண்டான சிலையானது
விஸ்வ கர்மண -நான்முகனால்
ஸம வர்த்தத –நன்றாகச் செய்யப்பட்டது
நான்முகனின் ஸங்கல்பத்தினால் பகவானின் திவ்ய மங்கள விக்ரஹ மண்டப ப்ராகாராதிகளின்
நிர்மாணத்துக்கு உசிதமான சிலை கல்லு உண்டாயிற்று
தஸ்ய த்வஷ்டா ரூபம் விததத் தத் புருஷஸ்ய அகரே விஸ்வம் ஆஜாநம் —
தஸ்ய -அந்த சிலைக்கு
த்வஷ்டா -சிற்பியானவன்
ரூபம் -கர சரணாதிகளோடு கூடிய மநோ ஹரமான விக்ரஹத்தை
விததத் -நிர்மித்தான்
தத் -அந்த நிர்மாணமானது
புருஷஸ்ய -பரம புருஷனுடைய
அகரே–உண்டாகப் போகும்
விஸ்வம் -பிரஸித்தமான
ஆஜாநம் –ஆவிர்பாவத்திற்கு காரணமாய் இருக்கிறது
அஸ்ய ரூபம் ஸந் த்ருசே ந திஷ்டதி -கச்சித் ஏநம் சஷுஷா ந பஸ்யதி –
ஆகிலும்,
ஹ்ருதா மநீஷா மநஸா அபிக்லுப்த: யே விது: தே அம்ருதா –
அஸ்ய – இந்த பகவானுக்கு,
ரூபம் -ரூபமானது,
ஸந் த்ருசே – த்ருஷ்டி. விஷயமாய்,
ந திஷ்டதி – இருப்பது இல்லை,
கச்சித் – எவனும்,
ஏநம் – இவனை,
சஷுஷா – கண்ணால்,
ந பஸ்யதி – பார்க்க முடியாது
ஆகிலும்,
ஹ்ருதா – ஸ்ருதி ப்ரமாணத்தாலும்,
மநீஷா – மந் வாதி ஸ்ம்ருதிகளாலும்,
மநஸா – பார்கவாதி பகவச் சாஸ்த்ரங்களாலும்,
அபிக்லுப்த: – பிம்ப ரூபமாக.
யே- எவர்கள்,
விது: – தெரிந்து கொள்ளு கிறார்களோ,
தே- அவர்கள்,
அம்ருதா – மோக்ஷத்தை அடைவார்கள்,
வீர கர்மண்ய: ஸுதஷ தேவநாம்: யுக்த க்ராவ; ஜாயதே
வீர – பகவான்,
கர்மண்ய: – அர்ச்சனாதிகளால் ஆராதிக்கப் பட்டு,
ஸுதஷ – பக்தர்சளின் அபிஷ்டங்களை அருளுமவனாய்,
தேவநாம்: -கிரீடிக்க வேணுமென்ற திரு வுள்ளம் பற்றி, யுக்த க்ராவ; – சிலா மூர்த்தியாக,
ஜாயதே – ஆகிறான்.
அஸ்மாணம் ஆகணம் பாபத்யே”–முதலான வாக்யங்களாலும்,
ஆகணம் -சில்பியினால் ஸாஸ்த்ர யுக்தமாகச் செய்யப்பட்டு-பகவத் ஸாஸ்த்ரங்களின் விதியைக் கொண்டு ப்ரதிஷ்டாதிகளைச் செய்யப்பட்ட
அஸ்மாணம் -சிலா மூர்த்தியான பகவானை
ப்ரபத்யே” -சரணம் புகுகிறேன் .
ஸ்ம்ருதிகளில் :–
” ஏதத் ரூபம் ப்ரதிஷ்டாப்ய ஸூத்தயா சிலயா ந் ருப
*ஸுரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ:
முதலான வாக்யங்களாலும் விக்ரஹ ஆராதனம் சொல்லப் பட்டுள்ளது
அந்த ஸ: பிரபாந்தம் மஹே ஸூராய விஷ்ணவே வ: த்யாய அர்ச்சத –என்று ருக் வேதத்தில் சொல்லப்பட்ட து
அந்த ஸ: – ஆஹாராதி களால் வ்ருத்தி யடையும் கரண களேபரங்களை ஸ்ருஜித்து ,
பிரபாந்தம் -ரக்ஷிக்குமவனான
மஹே ஸூராய – ஸர்வ சக்தனான,
விஷ்ணவே – பகவானை ,
வ: – உங்களுக்கு,
த்யாய – மோஷ ப்ராப்திக்காக,
அர்ச்சத – பூஜியுங்கள்,
பக்த்யா பகவந்தம் நாராயணம் அர்ச்சயேத் -என்றும்
மன்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ் குரு -என்றும்
சொல்லும் பிரமாணங்கள் எம்பெருமானுடைய அர்ச்சனம் மிகவும் உபா தேயம் -என்று அறுதி இடுகின்றன –
—————-
ஸ்ரீ வேதமும்–,ஸ்ரீ திருவேங்கடமும்.
அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே
ஸ்ரீம் பிடஸ்ய ஸத்வபி: தே அபிஷ்ட்வா சாதயாமஸி.–என்று ருக் வேதத்தில் திரு வேங்கடமும்,
அதன் ஸ்வாமியான ஸ்ரீநிவாஸனும் வர்ணிச்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த ஸூக்தத்திற்கு -—
ஹே அராயி – ஏழையே!
காணே – குருடனே
விகடே கிரிம்-:–வேங்கடாசலத்தை
கச்ச – அடைவாயாக.
ஸதான்வே – எப் பொழுதும் ௮ந் வேஷணத்தைப்பண்ணும் அவ் விடத்தைச் சென்று,
அசஞ்சலமான த்யானத்தைப் பண்ணுவாயாக,
கிரிம் பிடஸ்ய -ஸ்ரீ மஹா லஷ்மிக்குப் பீடமான ஸ்ரீநிவாலனுடைய,
ஸத்வபி: – ஸாத்விக குணங்களான,-அடியார்கள் கூட்டமாக செல்லுங்கோள் -என்றுமாம்
தேபி: – அந்த தயா வாத் ஸல்யாதி கல்யாண குணங்களால்,
சாதயாமஸி – உன் பாபங்களை நீக்கி பேரின்பத்தைத் தருகிறோம். என்று அர்த்தம்.
அராயி -ஏழை மனிதனே
காணே -ஞானம் இல்லாமல் கஷ்டப்படுகிறாயா
விகடே -தாபத் த்ரயங்கள் மூலம் கஷ்டப்படுகிறாயா
ஸதான்வே-தடங்கலால் கஷ்டப்படுகிறாயா
கிரிம் கச்ச -திருமலைக்கு போ -திருப்பதி வந்தால் திருப்பம் வரும்
ஸ்ரீம் பிடஸ்ய -அகலகில்லேன் இறையும் என்று அவள்
ஸத்வபி: -அடியார் கூட்டங்களுடன் சென்றால்
தே அபிஷ்ட்வா சாதயாமஸி-அவன் அருளுக்குப் பாத்திரம் ஆவீர்
———-
அதோ யத்தாரு ப்லவதே ஸிந்தோ: பாரே ௮பூருஷம்,
ததராபஸ்வ துர்ஹண: தேந கச்ச பாஸ்தாம். (10-155-3) என்னும் ஸ்ருதிக்கு
ஜகந் நாத க்ஷேத்ர பரமாக அர்த்தம் உண்டே
மேலும்,
ஏவம் ஸ்ரீ க்ருஷ்ண ருபேண கரீடிதோ வெங்கடாசலே
அராயி காணே விகடே கிரிம் கச்சே ” திதம் விது:
ஸோ$யம் வேத மய? ஸாக்ஷாத் கிரீச . பந் நகாசல.,
என்று வேங்கடாசல புராணத்தில் இந்த அர்த்தம் சொல்லப் பட்டுள்ளது
ரயி: ககுத்மான் விததத்வி நஷ்டம் ரயிவத் விதானம்
தஸ்மை ககுத்ரே விகடாய பித்ரே ஸ்வாஹா,
என்று பராமாத்மிக–உபநிஷத்தில் சொல்லப் பட்டு இருக்கிறது.
ரயி: -ஐஸ்வர்யம் மிக்க பெரும் செல்வனும்
ககுத்மான் –வ்ருஷபாஸலத்தில் நித்ய வாஸம் செய்து அருளும் ஸ்ரேஷ்டமானவனும்
விததத்வி நஷ்டம் -அனைவருக்கும் அபீஷ்ட ஸமஸ்த பலன்களையும் அளிப்பவனும்
ரயிவத் விதானம்-அந்தணர் மாடு எனப்படும் ருக் யஜுஸ் ஸாம அதர்வணங்கள் ஆகிற வேதங்களில் பிரசித்தமானவனும்
ககுத்ரே -வ்ருஷ பாசலத்தின் அக்ர பாகத்தில் இருப்பவனும்
விகடாய -வெங்கடாசகத்தில் இருக்கும் பெருமானுக்கு
தஸ்மை பித்ரே ஸ்வாஹா,–நான் ஆத்மாவை ஸமர்ப்பிக்கிறேன்
—————
ஸ்ரீ திருவேங்கடமும் புராணங்களும்
ஏவம் ஸ்ரீக்ருஷ்ண ருபேண க்ரீடிதோ வேங்கடாசலே
அராயி/ காணே / விகடே கிரிம் சச்சேதி தம் விது:
ஏவம் வேத மய ஸாக்ஷாத் கிரீச: பந்நாகசல”‘ –புராண நிர்வசனம்
வராஹ புமாணத்தில்
ஸர்வ பாபானி வேம் ப்ராஹு:, கட? தத்தாஹ உச்யதே .
ஸர்வ பாபாபஹாரித்வாசத் வேங்கடாத்ரி நிதீ ரித —
வேம் எல்லாப் பாபங்களும்
கட -எரிக்கப்படும்
வாமன புராணத்தில்
வகாரோ அம்ருத பீஜம் து , கட மைஸ்வர்ய முச்யதே ,
அம்ருத ஐஸ்வர்ய ஸங்கக்வாத், வேங்கடாத்ரி ரிதி ஸ்ம்ரித..
என்று.
வேம் என்ற சொல்லுக்கு * அம்ருதம்” என்றும்
௧ட என்பதற்கு ஐஸ்வர்யம்” என்றும் – பொருள் கூறப்பட்டன.
நம்மாழ்வார்
வேங்கடங்கள் -கடங்கள் எல்லாம் வேம் -தீயினில் தூசாகும்
——————–
தொல் காப்பியத்தில் பனம்பாரனார் எழுதிய சிறப்புப் பாசுரத்தில்
வட வேங்கடம் தென் குமரி-என்றும்
அக நானூறில்
கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெரினும்
பழகுவ ராதலோ அரிது.” –என்றும்
வென்வேல் திரையன் வேங்கட நெடு வரை , ” என்றும்,
வினைநவில் யாளை விறற்போர்ச் தொண்டையைர்
இனமழை தவழும் ஏற்றரு நெடும்கோட்டு கெடுக்கோட்்(ட)
ஒங்கு வெள் ளருவி வேங்கடத் தும்பர்.” -என்றும்
சிலப்பதிகாரத்தில்
வீங்கு நீரருவி வேங்கட மென்னும்
ஒங்குயர் மலயத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங்கு ஓங்கிய விடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
கன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சம்கமும்
,தகைபெறு தாமரைக் கையில் ஏந்தி
நலங் கிளர் அரா மார்விற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்.”
சமணப் புலவராகிய * ஐயனாரிதனார்” என்பவர், தாம் எழுதிய
புறப்பொருள் வெண்பா மாலையில் ,
வெறிகொள் அறையருவி வேங்கடத்துச் செல்லின்
நெறி கொள் படிவத்தோய் நீயும் -பொறிகட்டு
இருளீயும் ஞாலத்து இடரெல்லாம் நீங்க
௮ருளீயும் ஆழி யவன்,”
என்னும் வெண்பாவில் “: திரு வேங்கடவன் திருமாலே -என்று கூறிப் போந்தார்
———-
(ஆழ்வார்கள். )
ஸ்ரீ பொய்கை யாழ்வார்:–. 10
ஸ்ரீ பூதத்தாழ்வார் i— 9
ஸ்ரீ பேயாழ்வார் :– 19
ஸ்ரீ திருமழிசை யாழ்வார் :….- 14
ஈம்மாழ்வார் :– 44
ஸ்ரீ பெரியாழ்வார் 7
ஸ்ரீ ஆண்டாள் :– 16
ஸ்ரீ குலசேகராழ்வார் :– 11
ஸ்ரீ திருப்பாணாழ்வார் — 2
ஸ்ரீ திருமங்கை யாழ்வார் :- 63
மொத்தம், 195
(திவ்ய ப்ரபந்தங்கள்)
திருப்பல்லாண்டு :–(பெரியாழ்வார்) –1
முதல் திருவந்தாதி :-(பொய்கையாழ்வார்) 10
இரண்டாம் திருவந்தாதி (பூதத்தாழ்வார்) 9
மூன்றாம் திருவந்தாதி :–(பேயாழ்வார்) 19
நரன்காம் திருவந்தாதி :–(திருமழிசை யாழ்வார், 12
திருச்சந்த விருத்தம் :– »2
திருவிருத்தம் —( நம்மாழ்வார்) 8
பாசுரங்கள்.
பெரிய திருவந்தாதி (ஸ்ரீ நம்மாழ்வார்) 1
திருவாய்மொழி :– 35
பெரியாழ்வார் திருமொழி : (பெரியாழ்வார்) 7
நாச்சியார் திருமொழி :– (ஸ்ரீ ஆண்டாள்) 15
பெருமாள் திருமொழி :–(குலசேகராழ்வார்) 11
அமலனாதி பிரான் :–(திருப்பாணாழ்வார்) 2
பெரிய திருமொழி :–(திருமங்கை யாழ்வார்) 55
திருக் குறும் தாண்டகம் :– 1
திரு நெடும் தாண்டகம் :-… 3
சிறிய திருமடல். – 1
பெரிய திருமடல் : -2
மொத்தம், 195 பாசுரங்கள்.
———-
ஸ்ரீ திருவேங்கடமும் ஸ்ரீ பூர்வாச்சார்யர்களும்
ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-
இஷ்ட தேவதா ஸ்தோத்திரம் மங்களம். மங்கள ஆஸி – நமஸ்காரம் .
இதர தேவதா மங்கள ஸ்லோகம் ; சமுசித தேவதா தியானமாகும்.
சங்கீதத்துக்கு ஸரஸ்வதி , ஆயுர் வேதத்துக்கு தன்வந்திரி .
இஷ்ட தேவதையே சமுசித்த தேவதையாகும் போது , சமுசித்திஷ்ட தேவதா தியானமாகும்.
அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||
இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.
லீலையாக
அகில புவன -அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்
மணல் தூள்கள் கணக்கிட முடியாதது போலே -நட்ஷத்ரங்கள் உண்டே-அண்ட கடாகம் – பல உண்டே
எல்லா புவனங்களுக்கும்
லீலை -லோக வஸ்து லீலா கைவல்யம்
கிம் காரணம் –
சு கமயம் துக்க மயம்-நமக்காக செய்கிறானா – அவாப்த சமஸ்த காமன் -தனக்காக செய்கிறானா –
வியாச மகரிஷி லீலா வஸ்து கைவல்யம்
லீலா ஸுயம் பிரயோஜனம் –க்ரீடா லீலா ஸுயம் பிரயோஜன வியாபாரம்
குழந்தைகள் பொம்மை வைத்து விளையாடுவது போலே
பகவத் சாஷாத்காரம் அடைந்தால் தான் அறிவோம்
மம ப்ரஹ்மணி ஷேமுசி பக்தி பூர்வா பவது-ஸங்க்ரஹமாக அனைத்தையும் அருளுகிறார்
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே –ஜகத் காரணத்வம் –உயர்வற உயர் நலம் உடையவன் -அர்த்த விசேஷம்
விநத -மதி நலம் அர்த்தம் -பக்தியால் சத்தை பெற்றமை
மதிநலம் எனக்கு அருளினன் இல்லாததால் முன்பு சத்தை இல்லாமையையை தெரிவித்து அருளினார்
பக்தி வந்த பின்பு என் மனனே என்று சத்தை வந்தமையை வெளியிட்டு அருளினார்
விவித பூத வ்ராத -சம்பந்த சம்பந்திகளுக்கும் பலம் உண்டு என்று அருளிச் செய்கிறார்
பொய் நின்ற –யாம் -என்றும் -கேசவன் தமர் –எமர் -என்றும் அருளிச் செய்தது போல் இங்கும்
ரக்ஷைக தீஷே -துயர் அறு சுடர் அடி -அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தி
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூப -பிரார்த்தித்தே பெற வேண்டும் என்று காட்டி அருளுகிறார்
ப்ரார்த்த நீயம் என்பதை ஆவ்ருத்தி ரஸ க்ருத -ஸூத்ரம்
ஜிஜ்ஞாஸா -இச்சிக்க வேண்டும்
நிதித்யாஸி தவ்ய-ஸ்ருதி அர்த்தம்
அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே” எனும் சொற்கள் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
இரண்டாவதான “ஜன்மாத்யஸ்ய யத:” என்பதும்,
அந்த ஸூத்ரமே “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” என்கிற உபநிஷத் வாக்யம் அடியானது என்பதும் தெளிவு.
இவற்றில். ஸ்தேம எனும் சொல் பாதுகாத்தல், தொடர்ந்து வைத்திருத்தல் இரண்டையும் குறிக்கும்.
இதில் எம்பெருமானின் இயல்வாகிய லோக ரக்ஷணம் அடங்கும்.
இப்படி ரக்ஷணம் பற்றி ஏற்கெனவே தெரிவித்த ஸ்ரீ ஸ்வாமி மீண்டும்,
”விநத-விவித-பூத-வ்ராத ரக்ஷைக -தீக்ஷே” என்கிறார்
ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீநிவாசனின் முதல் குறிக்கோள் தன் அடியார் அனைவரையும் ரக்ஷிப்பதே.
ஸ்ரீ ஆழ்வார் திருவாய்மொழி 1-3-2ல் “எளி வரும் இயல்வினன்” பாசுரத்தில்
ஸ்ரீ எம்பெருமானின் குணாநுபவம் செய்கிறார். அவனது அளவற்ற அப்ராக்ருத கல்யாண குணங்களை அனுபவிக்கிறார்.
மீண்டும் அவனது மோஷ ப்ரதத்வம் எனும் எக் காலத்தும் வீடு பேறளிக்கும் மஹா குணத்தை
“வீடாந் தெளிதரு நிலைமை அது ஒழிவிலன்” என்கிறார்.
முன்பே சொன்ன குணங்களோடு இதுவும் சேராதோ மீண்டும் சொல்வானென் என்று கேட்டதற்கு நம் பூர்வர்கள்,
மோஷ ப்ரதத்வம் ஸ்ரீ எம்பெருமானின் மிகத் தனித்ததொரு குண விசேஷம் என்பதால் இது புனருக்தியன்று என்றனர்.
அணைவதரவணை மேல்”லில் மோக்ஷ ப்ரதத்வத்தை அனுபவிக்கிறார்.
ஸ்ரீ ஸ்வாமி தேசிகனும் த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியில் திருவாய்மொழியின் பிரதம நோக்கு மோக்ஷ ப்ரதத்வமென்று சாதிக்கிறார்.
ஆகவே மோக்ஷப் ப்ரதத்வம் தனியே அனுபவித்தற்குரிய ஒரு குணாதிசயம் என்று தேறுகிறது.
இதிலிருந்து, “விநத விவித வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றதில் ரக்ஷணம் என்பது பொதுவானதன்று
மோக்ஷ ப்ரதத்வத்தை அடக்கியது என்று தெரிகிறது.
ஸ்ரீபாஷ்ய பங்தியில் ஸ்ரீ ஸ்ருதப் பிரகாசிகா பட்டரும்,
“ஜகதுத்பவ-ஸ்திதி-பிரணாச-ஸம்ஸார விமோசன” என ஆளவந்தாரை உதாஹரிக்கிறார்.
பக்தி -சாத்திய -சாதனா -இரண்டும் உண்டே-நான்கு விசேஷணங்கள்-ப்ரஹ்மணி
ஸ்ரீநிவாசே -நான்கு விசேஷணங்களோடு கூடிய பிரஹ்மம் ஸ்ரீநிவாஸன் என்று பேசி
தனக்கு பக்தி ரூபாபன்ன ஞானத்தை பிரசாதிக்க வேண்டும் என்று இதிலே பிரார்த்திக்கிறார்.
———-
கண்ணன் அடி இணை எமக்குக் காட்டும் வெற்பு
கடுவினையர் இருவினையும் கடியும் வெற்பு
திண்ணம் இது வீடு என்னத் திகழும் வெற்பு
தெளிந்த பெரும் தீர்த்தங்கள் இரச. செறிந்த வெற்பு
புண்ணியத்தின் புகல் இது எனப் புகழும் வெற்பு
பொன்னுலகில் போகமெல்லாம் புணர்க்கும் வெற்பு
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு
வேள்கடவெற்பு என விளங்கும் வெற்பே.
கண்ணன்
1-கருமை நிறம்
2-ஆகர்ஷகன்
3 கண் போல் நிர்வாஹகன் -கண்ணாவான் என்றும் மண்ணோர் வொன்னோர்க்கும் வேங்கட வெற்பனே
4-கண்ணாளன் -புருஷோத்தமன் -அனைவரும் ஸ்த்ரீ பேராயர்
5-ஆனந்தம் அளிப்பவன் -எள்ளோயில் மாயனை கண்ணனைத் தாள் பற்றி யான் ஒரு துக்கம்
6-மாயன் -கடல் மலி மாயப்பெருமான் கண்ணன்
7-கண்ணில் நிற்பவன் -கண்ணை விட்டு அகலாமல்
8-கண் அழகு -அணி கொள் செந்தாமரைக் கண்ணன்
9- யசோதை கல்யாண உத்சவம் சேவிக்காத குறை தீர்க்க நித்யம் கல்யாண உத்சவம் –
வகுள மாலிகை -மடப்பள்ளியில் இன்றும் சேவை -வேங்கட கிருஷ்ணன்-கண்ணனின் சரம ஸ்லோகம் காட்டி அருளும் திவ்ய மங்கள விக்ரஹம்
10-ஏழு நாள்கள் -கோவர்த்தனம் –பிரதியாக ஏழு மலையாக இவனைத்தாங்கி
திருக்கர ஸ்பர்ஸமும் திருவடி ஸ்பர்ஸமும்-கோவிந்தா கோஷம் இன்றும் உண்டே –
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் –பரன் சென்று சேர் திரு வேங்கட மா மலை ஒன்றுமே தொழ கருவினை போகுமே
11-ராமனே கண்ணன்-ஸ்ரீ நிவாஸ ராகவன்
வீதி வாய் செல்லும் –யாவருக்கும் கண்ணன் என்றே -மிதிலை மக்களின் கண்களுக்கு உள்ளே பயணிக்கிறான் -கம்பர்
கண்ணில் நிற்பவன் -கண்ணன் -கமலக் கண்ணன் என் கண்ணில் உள்ளான்
12- குருவித்துறை விஸ்வம் பரர் -ஸ்ரீ இராமாயண பாராயண பலனாக பெற்ற ஸேவை -கனவில் காட்டக் கண்டு –
சிற்பி மூலம் செய்த உத்ஸவ மூர்த்திகள்-பிராட்டியுடன் லஷ்மணன் திருவடி கர்ப்பக க்ருஹம் -மடப்பள்ளியில் ஸுக்ரீவன் விபீஷணன் அங்கதன்
13-எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்த -இவனே நரஸிம்ஹன்
14-ஸ்ரீ நிவாஸ கல்யாணம் -ஸ்வாமிக்கு அமுது செய்ய நரஸிம்ஹர் -ஸ்ரேஷ்ட ஆச்சாரம் -அஹோபில நரஸிம்ஹரே இங்கும் சேவை
———————-
திருச் செண்பக மரத் திரு சுற்று -அனந்தாழ்வான் திருமலையில் இப்பொழுது நாம் காணும் வெளி மதிலைக் கட்டி வர
அங்கு செண்பக மரம் இருக்க -தொழுது மதிள் கட்டாமல் போக -மறு நாள் அந்த மரம் நகன்று வழி விட்டதாம்
வேங்கடேச இதிஹாச மாலை இத்தைச் சொல்லும்
பத்து வித கைங்கர்யங்கள் ராமானுஜர்
குருகாய் பிறப்பேனே –உறு மீன் வரும் அளவும் -வேத மந்திரங்களில் -ரிக் வேத மந்த்ரம் திருமலையைப் பாடியதாகக் காட்டி அருளினார்
மீனாக -அமுத வெள்ளத்தில் மூழ்கடிக்க திருமலையில் -திருப்பாவை நித்ய அனுசந்தானம்
வெள்ளிக்கிழமை திரு மஞ்சனம் நாச்சியார் திருமொழி அனுசந்தானம்
பொன் வட்டில் பிடிக்க -அணுக்க தொண்டர் -ஆழ்வார்கள் சந்நிதி –
செண்மகம்-புஷ்ப கைங்கர்யம் -சிந்து பூ மகிழும் திரு வேங்கடம் -அனந்தாண் பிள்ளை-புஷ்ப மண்டபம் –
ராமானுஜர் பெயரால் தோட்டம் w -1 gate -ராமானுஜர் புத்தேரி -அனந்தஅன்பில்லை நிர்மாணம் -பண்ண நினைத்து
கீழேயே இருந்து மங்களா ஸாஸனம் செய்துள்ளார்கள் ஆழ்வார்கள்
ஆதி சேஷன் வடிவம் மட்டுமே அல்ல -திரு மலை ஒன்றுமே தொழ வினை போகுமே -பகவான் வடிவம்
அடிவாரத்தில் பிரதிஷ்டை செய்து அருளினார்
தம்பகம் –புதர் –அடைக்கலம் – மதுரை அருகில் குருவித்துறை -விஸ்வம் பரர் -வம்சத்தார் இடம் ராமரே ராமானுஜர் இடம் எழுந்து அருளப் பண்ணிக் கொடுக்கச் சொல்ல-ராமர் லஷ்மணர் சீதை திருவடி -கர்ப்ப க்ருஹம் ப்ரதிஷ்டை-சுக்ரீவன் அங்கதன் விபீஷணன் -மடப்பள்ளியில் ப்ரதிஷ்டை
புனர்பூசம் புறப்பாடும் சஹஸ்ர தீப சேவை இன்றும் சேவிக்கலாம்
பொற் குவடு -கல் பாறை கைங்கர்யம் -ஸ்ரீ ராமாயணம் திருமலை நம்பியிடம் புளிய மரத்தடியில் கேட்டு இருக்க
பச்சை கர்ப்பூரம் ஸர்வ கந்த வாசனை வர
மலையப்பனே புளிய மரத்தடிக்கு வந்து – ஸேவை சாதித்து -திருவடி பதித்து -துளஸி பூக்களையும்
ஸ்ரீ வாரி பாதம் ப்ரதிஷ்டை செய்து அருளினார்
மலைக்கு ஏற முடியாதார் ஸ்ரீ வாரி பாதம் சேவிக்க வசதியாக
காட்டாறு –பெரிய ஜீயர் திருமடம் நிறுவி கைங்கர்யம்
நெறி -பாதைக்கு விதிகள் -மாட வீதிகளில் காலனி வாகனங்கள் கூடாது
கைங்கர்ய பரர்கள் மட்டுமே திருமலையில் இருக்க வேண்டும்
மலம் இத்யாதி கூடாதே-கோயிலுக்குள்ளே இருக்கும் விதி முறைகள்
படியாய் கிடந்தது பவள வாய் காண்பேனே -பூக்கள் திருவேங்கடத்தானுக்கு மட்டுமே
அங்குள்ள-உணவு பிரசாதம் மட்டுமே-உகப்புக்காகவே அனைத்தும்
ஏதேனும் ஆவேனே -ஆச்சார்யராக இருக்கவே அவன் சங்கல்பம் -அப்பனுக்கு சங்கு ஆழி அளித்து
வேதார்த்த ஸங்க்ரஹம் அருளினார்
பாஷ்யகாரர் சந்நிதியும் -அங்கு -அமர்ந்த திருக் கோலம் -மலையப்பன் நின்ற திருக்கோலம்
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அலர் மேல் மங்கா சமேத ஸ்ரீ திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply