ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —உங்கள் புழைக்கடை—

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

—————–

அவதாரிகை –
இவை எல்லாவற்றுக்கும் தானே கடவளாய்-
எல்லாரையும் தானே எழுப்பக் கடவதாய்ச் சொல்லி வைத்து
அது செய்யாதே உறங்குகிறாள் ஒருத்தியை
எழுப்புகிறார்கள் –

இத் திரளுக்கு எல்லாம் நிர்வாஹகையாய் –
எல்லார்க்கும் முன்னே உணர்ந்து
எல்லாரையும் எழுப்பக் கடவேன் என்று சொல்லி வைத்து
அத்தை மறந்து
சுருக்கம் ஒழிய உணர்ந்து கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

(பாசுரத்தில் இன்னும் தூங்கிக் கொண்டு இருப்பதாக இல்லையே –
எழுந்திராய் என்பதால் தூங்கிக் கொண்டு இருப்பது ஸூசகம்
சுருக்கம் ஒழிய -குறை இல்லாமல் )

இதுக்கு எல்லாம் கடவளவாய்-எல்லாருக்கும் முன்னே நான் உணர்ந்து
எல்லாரையும் உணர்த்தக் கடவளாக ப்ரதிஜ்ஜை பண்ணினாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

உங்கள் பாகவத சமுதாயத்துக்கு எல்லாம் தாமே கடவராய்
இவர்களுக்கு எல்லாம் பகவத் சம்பந்த கடகர் தாமேயாம்படி
ஜ்ஞான பக்தி வைராக்யங்களாலே பூரணரான
பாகவதரை எழுப்புகிறார்கள் –

பகவத் விஷயத்தில் மூட்டுகையிலே அதிகரித்த நிர்வாஹகர் முன்பாக
பகவத் அனுபவம் பண்ணுகை ஸ்வரூபம் -என்கிறது –

ஸுகந்திய சாரஸ்ய யுக்தர் விகாசத்தையும் சத்வ உத்ரிக்த்தர் சமாராதன சம்விதான தத் பரர் ஆகிற படியையும் காட்டி
பரிபூர்ண ஞானரையும் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன தத் பரராக்கிச் சேர்த்துக் கொள்ளும் படி சொல்லுகிறது –

நா உடையாய் என்கையாலே
தமிழ் மறையை இயலிசை யாக்கின நா வீறு உடைமையாலே
ஸ்ரீ மன் நாத முனயே -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின —
சங்கிடுவான் போதந்தார் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சவ்கந்த்ய சாரஸ்யா யுக்தர் விகாசத்தையும் –
சத்வோத்ரிகர் சமாராதான சம்விதான தத் பரராகிற படியையும் காட்டி
பரிபூர்ண ஞானரையும் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன தத் பரராக்கிச் சேர்த்துக் கொள்ளும் படி சொல்லுகிறது
எல்லார்க்கும் தானே நிரவாஹகையாய் –
எல்லாரையும் தானே எழுப்பக் கடவளாகச் சொல்லி விஸ்மரித்து
கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

இத்தால்
பகவத் விஷயத்தில் மூட்டுகையிலே அதிகரித்த நிர்வாஹகர் முன்னாக
பகவத் அனுபவம் பண்ணுகை ஸ்வரூபம் என்கிறது –

ஆய்ச்சியர் திரளுக்கெல்லாம் தலைவியாய்,
‘நான் எல்லார்க்கும் முன்னே உணர்ந்து வந்து எல்லாரையும்
உணர்த்தக் கடவேன்’ என்று சொல்லி வைத்து,
அதனை மறந்து உறங்குவாளொருத்தியை உணர்த்தும் பாசுரம், இது–

————

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்-
செங்கழு நீர் அலர்ந்து ஆம்பல் வாய் மொட்டிக்கும்படி
போது விடிந்தது
உறங்குவதே இன்னம் -என்ன –

நீங்கள் வயலிலே போனீர்களோ என்ன –
புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழு நீர் அலர்ந்து ஆம்பல் மொட்டித்து என்ன –( தலைக்கடை -வாசல் -கடைத்தலை வாழும் சோம்பர் -புழக்கடை -கொல்லை)

அது பின்னை நீங்கள் வலிய அலர்த்தினிகோள் -என்ன

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்-
எங்களுக்கு புகுர ஒண்ணாதே
அசூர்ய அம்பஸ்யமான உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் மொட்டித்தன –
வெயில் பட்டன்றிக்கே
கால பாகத்தாலே -என்கை –

இவள் எழுந்திராத இன்னாப்பாலே -உங்கள் புழக் கடை என்று வேறிட்டுச்  சொல்கிறார்கள்

அலரப் புகுகிற அளவிலே
கழிய அலர்ந்தது என்று சொல்லுகிறி கோள்
வேறு அடையாளம் உண்டோ என்ன –

நாங்கள் வந்து உன் வாசலிலே நிற்க எழுந்து இராதே ஒழிவதே என்ன –

விடிவுக்கு அடையாளம் என் –
எழுந்து இருக்கும் போது விட வேணுமே என்ன

(செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
வாவியுள்–செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
தோட்டத்து வாவியுள்–செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்–செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்–செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
இப்படி ஒவ்வொன்றாகக் கூட்டி வியாக்யானம் )

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்-

செங்கழு நீர் அலர்ந்து ஆம்பல் மொட்டிக்குமது அடையாளம் அன்றோ -என்ன

நீங்கள் இவ் வாசலிலே வந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே உங்கள் கண்கள் அலர்ந்து –
நான் வார்த்தை சொல்லா விட்ட வாறே நீங்கள் வெறுத்து லஜ்ஜித்து வாய் மூடினதும்-
செங்கழு நீர் அலர்ந்ததாகவும் ஆம்பல் மொட்டிட்டதாகவும் தோற்றுகிறது என்ன –

அது ஊரிலது இறே-
வாவியுள் செங்கழு நீர் காண் என்ன —

வயல் எல்லாம் உலாவி -அலருவன அலர்த்தி
மொட்டிப்பன மொட்டுவிக்கை யன்றோ உங்களுக்கு இரவு எல்லாம் பணி என்ன

தோட்டத்து வாவியுள்
தடமணி வயல்களிலும் -(திருவாய் 10-1-1-திரு மோகூர் வயல்)
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனிகளிலும் (பெரிய திருமொழி 7-5-10-தேரழுந்தூர் கழனி )உள்ளவை அல்ல –
தோட்டத்தில் அவை காண் என்ன —

அவ்விடங்களிலும் நீங்கள் உலாவினி கோளாம் அத்தனை என்ன

புழக்கடை தோட்டங்காள்–என்ன –

அத்தனை இடம் போக வேண்டாதே
அணித்தான அத்தனை அன்றோ என்ன –

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-என்கிறார்கள் –

அஸூர்யம் பஸ்யமான உன்னுடைய தோட்டத்தில் வெய்யில் பட அன்றிக்கே –
கால பாகத்தாலே அலர்ந்தவையும் மொட்டைத்தவையும் அடையாளம் அன்றோ –
சோலைச் செறிவாலே உச்சிப்பட்டாலும்
ஆதித்ய ரஸ்மி காண ஒண்ணாத உன்னுடைய புழக்கடையில் அவை அன்றோ –

தாங்கள் புறம்பே உள்ளுப் புகுரப் பெறாதே நிற்கிறவர்கள் –
இவள் புழக்கடையில் அவை அலர்ந்தவை அறிந்தபடி என் என்னில்

புறம்பு உள்ளவை அலர்வன மொட்டிப்பன வானபடியைக் கண்டு
அநு மித்திச் சொல்லுகிறார்கள்

இவள் எழுந்து இராத இன்னாப்பாலே உங்கள் புழக்கடை -என்று
வேறு கூறிட்டுச் சொல்கிறார்கள் – –

நீர் நுமது -என்றும்
யானே என் தனதே -என்றும்
அஹங்காரம் மமகாராம் த்யாஜ்யமாக உணர்ந்தவர்கள் –
உங்கள் எங்கள் -என்கை விருத்தம் அன்றோ என்னில்

தேஹாத்ம அபிமானத்தால் வரும் அஹங்காரம் த்யாஜ்யம் ஆவதும்
பகவத் சம்பந்தத்தால் வரும்து உபாதேயம் ஆவதும் –

அச்யுத அஹம் தவ அஸ்மி சம்சார பேஷஜம் -என்றும் –
அபிமான துங்கன் செல்வனைப் போலே திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -என்றும் –
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பி -என்றும் -சொல்லிற்று இற்று இறே
(ஆத்மஞானம் கை வந்த தால் -நீர் உன்னுடையது – அதுவே எனக்கு உத்தேச்யம்
என்றானே மின்னுடைய மடவார் பதிகத்தில்
சாத்விக அஹங்காரம் உபா தேயம் உத்தேச்யம் என்பதற்கு இந்த பிரமாணங்கள் )

பதார்த்தங்கள் ஆகின்றன –
கால க்ருத பரிணாமியாய் யன்றோ இருப்பது என்ன –

(ப்ராத)சந்த்யா சமயத்தில் படியாய் அன்றே
மத்திய ராத்திரியில் படி இருப்பது –

அலர உபக்ரமித்த மாத்திரமே கொண்டு கழிய அலர்ந்ததாகவும் –
மொட்டிக்கத் தொடங்கின போதே மொட்டித்ததாகவும்
உங்கள் த்வரையாலே பிரதம தசையில் இப்படியே தோற்றுகிறது –
இது ப்ராதர் லக்ஷணம் அன்று –
வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் என்ன

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்-
இவள் வாசலிலே வந்து -போது விடிந்தது காண் -எழுந்திராய் -என்ன
விடிந்தமைக்கு அடையாளம் என் என்ன –

பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களும் வாய் பேசுவாரும் பேராது இருப்பாருமாய் வந்து நிற்கிறது
விடிந்தமைக்கு அடையாளம் அன்றோ -என்று
செங்கழு நீர் வளர்ந்தால் போலேயும் ஆம்பல் மொட்டித்தால் போலேயும் -என்று தாங்கள் வாயைச் சொல்ல

உங்கள் வாய் நீங்கள் வேண்டின போது அலர்ந்து மொட்டியாதோ என்ன

வயலில் அவையும் அப்படியே -என்ன

நீங்கள் போய் அலர்த்தியும் மொட்டிக்கப் பண்ணியும் வந்திகோள் -என்ன

தோட்டத்து வாவியும் அப்படியே என்ன

வயலில் அணித்து அன்றோ உங்களுக்குத் தோட்டத்து வாவி என்ன

புழைக்கடைத் தோட்டத்து வாவியும் அலர்ந்து மொட்டித்தது -என்ன

அது உங்களுக்குக் கை வந்தது அன்றோ என்ன

அஸூர்யம்பஸ்யமாய் கிருஷ்ணனுக்கும் புகுரா ஒண்ணாத (உங்கள்) புழக்கடையில்
தோட்டத்து வாவியில் செங்கழு நீர் அலர்ந்து ஆம்பல் மொட்டித்தது -என்ன

அலரப் புக்க மாத்திரத்திலே கழிய எல்லாம் அலர்ந்தது என்றும் –
மொட்டிக்கப் புக்க மாத்திரத்திலே முட்ட மொட்டித்தது -என்றும் சொல்லுகிறீர்கள்
இது ஒழிய அடையாளம் உண்டானால் சொல்லுங்கோள் -என்ன

(அபிசந்தி விராத மாத்திரம் -குற்றங்களை செய்யாமல் இருக்க சங்கல்பம் கொள்ள
சிந்திக்கும் பொழுதே எல்லாமே செய்ததாக அவன் கொள்ளுமா போலே)

(நாம் அவனை நோக்கி அத்வேஷம் மாறின உடனே ஆபி முக்கியாதிகளை தானே உண்டு பண்ணி
அருளி கைக்கொள்ளும் அவனைப் போலவே இவர்களும் அலரத் தொடங்கியதுமே -என்றவாறு )

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்-
ஆகார த்ரய விசிஷ்டரான உங்களுடைய
விஹார ஸ்தானமான திருமந்த்ரத்தின் உடைய
மத்யே வர்த்திக்கிற நமஸிலே
பாரதந்த்ர்யம் பிரகாசமாய்
ஸ்வ தந்த்ர்யம் தலை மடிந்தது காண் –

————–

செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார் –
அளற்றுப் பொடியிலே புடைவையைப் புரட்டி
ப்ரஹ்மசர்யம் தோற்ற பல்லை விளக்கி
தண்ட பரிஹார்தமாக தபோ வேஷத்தை உடையரான சிவத்விஜரும் கூட
தங்கள் தேவதைகளை ஆராதிக்கும் காலம் ஆய்த்து-

திருக் கோயில் -என்றது அவர்கள் சொல்லும் பாசுரத்தாலே
சங்கு -என்றது ஆராதன உபகரணத்துக்கு உப லஷணம் –
குச்சி இட என்றுமாம் –
இத்தால் அசூத்தரும் கூட எழுந்து இருக்கும் காலம் ஆய்த்து என்கை –

சன்யாசிகள் சந்த்யா வந்தனம் பண்ணித் தங்கள் உடைய
அகங்களிலே திருவாராதனம் பண்ணும் காலம் ஆய்த்து
என்றுமாம் –

தம பிரசுர அனுஷ்டானம் பிரமாணமோ -என்ன
தர்மஜ்ஞையான உன்னுடைய சமயமும் பிரமாணம் அன்று இறே-என்கிறார்கள்

செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்-தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
தமஸ் பிரசுரரும் கூட உணரும் காலமாய்த்து -இது விடிவுக்கு உடல் அன்றோ என்கிறார்கள் –

செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்-தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
அளற்றுப் பொடியில் புடைவையைப் புரட்டி –
இரவு எல்லாம் வெற்றிலை தின்று கிடந்து
ப்ரஹ்மசர்யமும் விரக்தியும் தோற்ற பல்லை விளக்கி
சபையார் பெரியவர்கள் கோமுற்றவர் தண்டம் கொள்வார் என்று
தபோ வேஷத்தை யுடையரான சிவ த்விஜரும் கூட பயப்பட்டு
உணர்ந்து தங்கள் தேவதைகளை ஆராதிக்கும் காலமாய்த்து

திருக் கோயில் -என்றது
அவர்கள் சொல்லும் படி —

சங்கு -என்று பரிகரத்துக்கும் கொத்துக்கும் உப லக்ஷணம்

சங்கிடுவான் என்றது குச்சி இடுவான் என்றுமாம்

தாமச பிரக்ருதிகளை சொல்லுகிறது -என்று எம்பார் –

தமஸ் பிரசுரர் உணர்ந்தார்கள் என்று சொல்லியோ எழுப்புவது என்று
அவள் நினைத்து இருக்கும் என்று
சத்துவ நிஷ்டரான ஸந்நியாசிகளை சொல்லுகிறது என்று திருமலை நம்பி –

யதஹரேவ விவ்ரு ஜேத் ததஹரேவ ப்ரவ்ரஜேத் (ஜாபால உபநிஷத் )–என்று
பரமாத்மனி யோரக்தோ விரக்த அபரமாத்மனி -என்று
பகவத் விஷயத்தில் சக்தராய்
இதர விஷயங்களில் விரக்தராய் -காஷாய வஸ்த்ரங்களைத் தவிர்த்து –
போக்கிய த்ரவ்யங்களில் விரக்தராய்
சாத்விகராய் இருக்கும் சந்நியாசிகள் சந்த்யா வந்தனங்களைப் பண்ணி
அகங்களிலே திருவாராதனம் பண்ணும் காலம் ஆயத்து என்ன

சததம் கீர்த்த யந்தோமாம்–நமஸ் யந்தச்ச மாம் பக்த்யா நித்ய யுக்தா உபாஸதே -என்றும்
அநவரதம் ஸ்நேஹத்தோடே உபாசிப்பவர்கள் என்றும் சொல்லப் படுபவர்கள்
விடிவோரே ஒருக்கால் சமாராதானம் பண்ணி
அல்லாத போது பேசாதே இருப்பார்களோ
இது விடிவுக்கு அடையாளம் அன்றே –
இது தான் பிரமாணமும் அன்றே -என்ன –

சாத்விகாரோடே தமோ அபி பூதரோடே வாசியற உணர்ந்தது பார் என்கிறார்கள் –

செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்-
அளற்றுப் (காவி)பொடியிலே புடவையைப் புரட்டி ப்ரஹ்மசாரியம் தோற்றப் பல்லை விளக்கி
சபையார் பொடிகிறார்கள்-கோமுற்றவன் தண்டம் கொள்ளுகிறான் என்று போது வைகிற்று என்று
அஸூசிகளும் அகப்பட உணர்ந்தார்கள்(பிரியமாக போவான் சாத்விகன் -இவர்கள் பயத்தால் போகிறார்கள் )

தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
அவர்கள் சொல்லும் பிரகாரம் —

சிறு பதத் தூற்றத் துறையிலே ஒரு தபசி பரிசிலே ஏறி ஆற்றினுள்ளே புக்கு
காவேரி தேவிக்குச் சங்கு ஊதுகிறேன் என்று அங்கே ஊத-
பரிசிலே போகிற குதிரை மிதித்து அதில் ஏறின மனிச்சர் அடைய செத்துப் போச்சுது -என்று
எம்பார் அருளிச் செய்த வார்த்தை-

சங்கு என்று குச்சியை (சாவியை )சொல்லுகிறது -என்றுமாம்

வெள்ளையை தவிர்ந்து காஷாயத்தை உடுத்து
போக உபகரணங்களைத் தவிர்ந்து தபஸ்சர்யை உடையராய் இருக்குமவர்கள்
சந்த்யா வந்தனாதிகள் சமைந்து அகங்களில் திரு முற்றத்திலே எம்பெருமான்களை ஆராதிக்கும் காலமாயிற்று என்றுமாம்

(வேதம் அறிந்தவர்கள் அனுஷ்டானம் பிரமாணம் வேதமும் பிரமாணம் அடுத்தது
பெரிய ஜீயர் -இன்றும் -காண்கிறோமே -தங்கள் திருக்கோயில் என்று
திருமலையைச் சொன்னவாறு என்பாராம் பெரிய திருமலை நம்பி -)

சங்கு சமாராதனத்துக்கு உப லக்ஷணம்

தம பிரசுரர் லக்ஷணத்தையோ சத்வஸ் த்தரான நமக்குச் சொல்லுவது
தர்மஞ்ஞ சமய பிரமாணம் வேதாஸ் ச -என்று சத்வஸ்த்தர் படியைச் சொல்ல வேண்டாவோ -என்ன

சத்வ ஸ்த்தைகளான நாங்கள் சொன்னபடியையும் செய்கிறிலை என்கிறார்கள் –

நான் செய்தது என் என்ன

செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்-
ராக பிரயுக்தமான சேஷத்வ ஜ்ஞானம் உடைய
மந்த ஸ்மிதம் உடையரான
பிரபன்ன அதிகாரிகள்
தங்கள் தங்கள் எம்பெருமான் சந்நிதியிலே
திருவாராதனம் பண்ணுகைக்குப் போந்தார்கள் –

இவ்வடையாளங் கூற, உள்ளுள்ளவள் கேட்டு,
“தோழிகாள்! ‘ஸததம் கீர்த்த யந்தோமாம்’ என்றும்,
‘தெரித்தெழுதி, வாசித்துங் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது’ என்றுமுள்ள பிரமாணங்களை மறந்தீர்களோ?
பரமை காந்திகளான பாகவதர்கள் ஒருகால் பகவதாராதநம் பண்ணி மற்றைப் போது கிடந்துறங்குவரென்று நினைத்தீர்களோ?
எப்போதும் அவர்கள் பகவதாராதநத்திலேயே ஊன்றியிருப்பர்களாதலால் அவர்களுடைய பணி விடிவுக்கு அடையாளமாகாது” என்ன;

மேல் அதற்கு உத்தரமாகச் சொல்லுகிறார்கள், எங்களை என்று தொடங்கி;

—————

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் –
எல்லாரையும் நானே எழுப்புகிறேன் என்று சொன்னது
உன் பக்கல் கண்டிலோமீ -என்கிறார்கள் –

அதுக்கு உத்தரமாகச் சொல்லுகிறது மேல் –
எங்களை முன்னம் எழுப்புவான்-
தர்மஞ்ஞ சமய பிரமாணம் வேதாச் ச –யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட
(வேதமும் பிரமாணம் என்று இவர்கள் செயல்களே முக்ய பிரமாணம்-)என்றும் –
மேலையார் செய்வனகள் -என்னுமது பிரமாணமாக நீ சொன்னாயே

சாத்விக அக்ரேசசரையாய் இருக்கிற நீ எங்களை எழுப்புவதாகச் சொல்லி வைத்து
அத்தை மறந்து கிடந்து உறங்குகிறாய் அன்றோ
தர்மஞ்ஜையான உன்னுடைய சமயமும் பிரமாணம் அன்று இறே என்கிறார்கள் –

எங்களை முன்னம் எழுப்புவான் –
எல்லாரையும் நா

———–

வாய் பேசும் –
உக்தி மாத்ரமேயாய் -அனுஷ்டானம் இன்றிக்கே இருக்கை –
கிருஷ்ணன் உடன் பழிகின உனக்கு பொய் சொல்லுகை வம்போ –

வாய் பேசும்
ஹிருதயத்தில் இல்லாதது வாயாலே பேசலாமோ தான் –
யுக்தி மாத்ரமேயாய் அனுஷ்டானம் இன்றிக்கே இருக்கை
நினைவும் சொல்லும் விபரீதமாய் இருக்கும்
கிருஷ்ணனோடு பழகிச் சேர்த்தியாய் இருக்கிற உனக்கு பொய் சொல்லுகை வம்போ –

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்நங்காய் எழுந்திராய் –
எங்களை எல்லாம் நாங்கள் அபேஷிப்பதற்கு முன்னம் ஞானிகள் ஆக்கும்படி
ஸ்ரீ சூக்திகளை அருளிச் செய்யும் பூர்த்தியை உடையவரே -எழுந்திராய் –

—————

நங்காய் –
பூரணை இறே
எனக்கு உங்களை ஒழியச் செல்லாது என்று சொல்லும்படியும் –
உன் நைர பேஷ்யமும் எல்லாம் கண்டோம் இறே –
சொலவும் செயலும் பேராதார்க்கு ஒரு பூர்த்தியும் வேணுமோ –

நங்காய் –
உன்னுடைய லாபத்துக்கு நாங்கள் வேண்டாத படியாய் இருந்ததே இறே –
எங்களை ஒழிய நீ நிரபேஷையாய் இருந்தாய் இறே
எனக்கு உங்களை ஒழியச் செல்லாது -என்று இருந்தது எல்லாம் கண்டோம் இறே
சொல்லும் செயலும் சேராதார்க்கு ஒரு பூர்த்தியும் வேணுமோ –
இரண்டும் சேர்ந்த இடத்தில் அன்றோ பூர்த்தி உள்ளது
அது இல்லாத இடத்தில் ஆதித்யர்கள் பக்கல் ஒவ்பசாரிகமாகச் சொல்லும் பகவத் சப்தம் போலே அன்றோ

நங்காய்
சொன்னத்தோடே சிலவாகிலும் கூட்டாதே இருப்பார்க்கு ஒரு பூர்த்தியும் வேணுமோ -என்கை

(பேச்சு மட்டும் இருந்து அனுஷ்டானம் இல்லா விடில் நாய் வால் போலே வீணாகுமே )

ஒரு காலும் பிரிகிலேன்(பெரிய திருமொழி – 7-4 )என்றதும் பொருள் இதுவோ

————–

எழுந்திராய் –
எங்கள் குறை தீர்க்க எழுந்திராய்

———

நாணாதாய்-
சொல்லி வைத்து சொன்னபடி செய்யப் பெற்றிலோம் என்னும் லஜ்ஜையும்
இன்றிக்கே இருந்ததீ –
நீ இருந்த ஊரில் பூசணியும் காயாதே -என்கை –
பூசணி உடைய சரசரப்பையும் சுணை என்பதால் –

நாணாதாய்
நீ தான் எழுந்து இருக்க வேணுமோ –
நாம் பிற்பாடார் ஆனோமே என்று கிடந்த இடத்தே கிடந்து
சொன்ன படி செய்யப் பெற்றிலோமே என்று லஜ்ஜிக்கத் தான் பெற்றதோ –
நீ இருந்த ஊரிலே பூசணியும் காயாதோ –
ஹ்ரீ ரேஷா ஹி மமாதுல-(ராமபிரானே ரிஷிகள் இடம் வெட்கப்பட்டாரே )-என்னுமவனோடே அன்றோ உனக்கு வாசனை
எங்களை லஜ்ஜிப்பிக்கத்தான் பெற்றோமோ –
நாட்டார் அளவோ உனக்கு நாக்கு

எழுந்திராய்
இவர்கள் பேச்சே அமைந்தது இவளுக்கு -எங்கள் குறையையும் தீராய்-
இப்படிச் சொல்லி வைத்துச் செய்யப் பெற்றிலோம் என்னும் லஜ்ஜையும் கூட இன்றிக்கே இருப்பதே

நாணாதாய்
நீ இருந்த ஊரில் பூசணியும் காயாதோ என்கை(வெறும் வாய்ப்பந்தல் என்றபடி )

(தொட்டால் சுணை -அரிக்கும் சூடு சுரணை இல்லை -கொண்டு லஜ்ஜை இல்லை என்கிறாள்)

நாணாதாய் –
சொல்லும் செயலும் ஒத்து இராதார்க்கு
நாணமும் இன்றிக்கே ஒழிவதே
இப்படி என்னை ஷேபித்துக் கொண்டாகிலும்
என்பக்கல் சாபேஷராய் வருவது என்ன –

—————-

நாவுடையாய் –
என்னை ஷேபித்துக் கொண்டாகிலும் வருகிறது என்-என்ன
உன் பேச்சின் இனிமை கேட்க
இவள் எல்லாம் படுத்தினாலும் விட ஒண்ணாத நா வீருடைமை
உங்களுக்கு செய்ய வேண்டுவது என் என்ன –

நாவுடையாய்
என்னை ஷேபித்துக் கொண்டாகிலும் வருகிறது என் என்ன –

நாவுடையாய்
ந ரிக்வேத விநீ தஸ்ய ந யஜுர்வேத தாரிண -என்றும்
நூநம் வியாகரணம் க்ருத்ஸ்னம் -என்றும்
சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்றும்
நீ எல்லாம் படுத்தினாலும் உன் பேச்சின் இனிமை கேட்க்கும் படி நா வீறுடையவள் அன்றோ –

நான் உங்களுக்குத் செய்ய வேண்டுவது என் என்ன

நாவுடையாய்
வாயே இறே உனக்கு உள்ளது(ஆர்ஜவம் இல்லையே மனஸ் வாக்கு செயல் மூன்றும் ஒன்றாக இருக்காமல் )
நாந் ருக்வேத விநீதஸ்ய –நா சாம வேத விதூஷா –இத்யாதி (விரிஞ்சனோ -கல்லாத கலை இல்லையே -திருவடி பற்றி வாக்மீ-என்று வால்மிகி கொண்டாடும் -பெருமாள்-பணிவு இருப்பதால் ருக் வேதம் அறிந்தவன் – அர்த்தம் தரிக்க இருந்தவன் ஆகையால் யஜுர் வேதம் அறிந்தவன் ஞானம் மிக்கு இருப்பதால் சாமவேதம் அறிந்தவன் -என்ற கொண்டாட்டம் போல் )இவள் எல்லாம் படுத்தினாலும் விட ஒண்ணாத நா வீறுடைமை
விண்ணப்பம் செய்வார் எல்லா அநீதிகள் செய்யிலும் சத்துக்கள் தலையால் சுமக்கிறது நா வீறு அன்றோ –

(நா அவகாரியம் -பெரியாழ்வார் செய்யக் கூடாததையும் அருளிச் செய்கிறார் )

நாவுடையாய்-
வாக் மாதுர்யமுடையவரே
நீர் அஹ்ருதமாய் சொல்லிலும்
பேச்சின் இனிமையைப் பார்த்தால்
ஸ்வதஸ் சர்வஞ்ஞனான ஈஸ்வரனுக்கும் இது சஹ்ருதயம்
அவசியம் கர்த்தவ்யம் -யென்னும்படியாய் இருக்கை –

வாய் பேசும் நாவுடைமை -நா உடைமை அவனைப் பற்றிப் பேசியும் நமக்கு உணர்த்தி வேட்க்கை எழுவிப்பவராயும் -நாக்கு ரச இந்த்ரியமும் வாக் இந்த்ரியமும் -திராவிட கவி -பரம கவி-இன் கவி – உறையிலாடத கவி -இளைய புன் கவி -பாண் கவி -சதுஷ் கவி -மதுர கவி -அத்யாபயந்தி கவி –

————

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஏந்தி
அந்த ஸ்பர்ச்யத்தாலே வளர்ந்த
திருக் கைகளை உடையவனாய் -ஆழ்வார்களிலே வந்து
அலை எறிகிற கண்களை உடையவனை-

இளவாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் -என்று
இவர்களைத் தோற்பித்துக் கொள்ளும் கண் இறே
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
அனுபவிப்பாரை பிச்சேற்ற வல்லக் கடவ
திரு ஆழியையும்
திருமேனிக்கு பரபாகமான திரு பாஞ்ச ஜன்யத்தையும்
முற்பட தன்னை எழுதிக் கொடுத்து பின்னை எழுதிக் கொள்கிற திருக் கண்களையும் உடையவனை

பாட
உன் ப்ரீதிக்கு போக்கு விட்டு எங்களையும் உஜ்ஜீவிப்பிக்க

கிருஷ்ணன் கையில் இப்பொழுது ஆழ்வார்கள் உண்டோ -என்னில்
எப்போதும் உண்டு
அது பெண்களுக்கு தோற்றும்
அல்லாதார்க்கு தோற்றாது
இவர்களுக்கு தோற்றத் தட்டில்லை இறே

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்-பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்
கிருஷ்ணன் திரு நாமங்களை பாட –
திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச சன்னியத்தையும் ஏந்தி அந்த ஸ்பர்சத்தால் வந்த
வளர்த்தியை யுடைய திருக் கைகளை யுடையனாய்
ஆழ்வார்களில் வந்து அலை ஏறி கிற திருக் கண்களையும் யுடையனான கிருஷ்ணனை

தாமரைக்கண்ணன் -சுரி சங்கு ஆழி ஏந்தி –(வெள்ளைச் சுரி சங்கோடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் காடாகின்ற -திருவாய் 7-3-1 )

தாமரை மலரவும் மொட்டிக்கவும் இவை இரண்டும் -அங்கு மலரும் குவியும்
கண் நாடு பிடிக்க வளர ஆழ்வார்கள் அளவும் நீண்டு இருக்குமே
ஆராவமுத ஆழ்வான் உத்சவர் இன்றும் சேவித்தால் சங்கு சக்கரம் காதுகளுக்கு அருகிலே இருக்குமே )

கூராழி வெண் சங்கு ஏந்தி —
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை –
ஆசைப்படப் பண்ணுமதுவும்
அறிவு கெடப் பண்ணுமதுவும் திவ்ய ஆயுதங்கள் யுடைய சேர்த்தியே இறே

பங்கயக் கண்ணானை
முற்பட பெண்களுக்கு தன்னை எழுதிக் கொடுத்து எழுத்து வாங்கப் பண்ணும் கண்கள் –
தூது செய் கண்கள் –
விடவே செய்து விழிக்கும் -(1-7)
கண்களுக்கு அற்றுத் தீர்ந்து –
ஜிதந்தே –
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகன் (2-6)-என்று
உபய விபூதியையும் தோற்பிக்கும் கண் அழகு யுடையவனை –

சந்த்ர ஆதித்யர்கள் சேர உதித்தால் போல் இருக்கிற இரண்டு திவ்ய ஆயுதங்களையும் கண்டு –
ஆங்கு மலரும் குவியும் என்கிற
திரு நாபீ கமலம் போலே திருக் கண்களும் அலருவதும் மொட்டிப்பதாகவுமாகா நிற்கும்

கிருஷ்ணன் கையில் ஆழ்வார்கள் யுண்டோ என்னில் –
எப்போதும் உண்டு –
அது பெண்களுக்குத் தோற்றும் –
ஆண்களுக்குத் தோற்றாது

உப ஸம்ஹர-என்றது உகாதார்க்கு கூசி இறே –
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய (1-2-)-என்று
யசோதை பிராட்டி தாலாட்டுகையாலே இவர்களுக்குத் தோற்றத் தட்டில்லை

(பெண்களுக்குத் தோற்றியதுக்கு பிரமாணம்
கம்சனை வதம் செய்யும் வரை மறைக்கச் சொன்னார்களே –
இயற்கையாகவே உண்டே )

பாட
உன் ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாட –
ஒரு நீர்ச்சாவி போலே கிடக்கிற இத் திரள் உஜ்ஜீவிக்கும் படி வர்ஷியாய்

பங்கயக் கண்ணானைப் பாட
உத்காயாதீநாம் அரவிந்த லோசனம் –
(இந்த பாகவத ஸ்லோகத்திலும் பங்கயக் கண் உண்டே )

நான் உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்ன
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்-பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்-
இவர்கள் இது எல்லாம் சொல்லுகிறது தாங்கள் ஆர்த்தி இறே என்று பார்த்து –
இவர்கள் தரிப்பிக்கைக்காக நாவால் உள்ள கார்யம் கொள்ளுங்கோள் என்ன –
அவன் திரு நாமங்களை பாடு என்கிறார்கள்(வாஸா தர்மம் அவாப்நோதி -திருவடி இடம் பிராட்டி -)

ஏந்தும் தடக் கையன்
பூ ஏந்தினால் போலே திரு வாழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஏந்தி
அந்த ஸ்பர்சத்தாலே வளர்ந்த திருக் கை மலர்களை யுடையவனாய் இருக்கை-
(பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை )இன்னார் என்று அறியேன் -இத்யாதி -என்று மதி கெடுக்கும் கையில் திருவாழியையும் சொல்லுகிறது

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் –10-10-9-

பங்கயக் கண்ணானை
ஜிதம் தே புண்டரீ காஷ-
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை என்னப் பண்ணும் கண்ணை யுடையவனை –
ஆங்கு மலரும் -இத்யாதி —
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைச் சந்திரன் என்றும் திரு ஆழி ஆழ்வானை ஆதித்யன் என்றும்
திரு நாபீ கமலம் மொட்டிப்பது அலருவது ஆமா போலே கண்ணாகிய தாமரையும் மொட்டிப்பது அலருவதாம்-என்கை –
சந்த்ர ஸூர்யர்களையும் தாமரைப் பூவையும் ஒரு கலம்பக மாலையாகத் தொடுத்தால் போலே இருக்கும்படியைச் சொல்லுகை –

(பத்ம நாபன் கையில் ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து கீழே பார்த்தோம்)

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனைத் துழாய் விரைப்
பூமருவு கண்ணி எம்பிரானைப் பொன்மலையை
நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட நா அலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே! வள்ளலே!–2-6-3-

ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து  —மூன்றாம் திருவந்தாதி —67-

பங்கயக் கண்ணானை
கண்ணாலே நமனக்கு எழுத்து வாங்கி நம்மை எழுத்து வாங்குவித்துக் கொள்ளுமவன்
தூது செய் கண்கள் இறே-9-9-9-
இள வாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான்-1-7-5-

(ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9–மாலைப்பூசல் )

(விடுவேனோ என் விளக்கை என்னாவியை
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்
விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–விடவே செய்து-தூத்வ கிருத்யம் )

பாட
உன்னுடைய ப்ரீதிக்குப் போக்கு விட்டு எங்கள் வறட்சி கேட்டைத் தீராய் –

ஞானம் உண்டானால் செய்வது என் என்ன –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணனையே பாடேலோ –
திருவாய்மொழி பாடுகையே பிரயோஜனம்
எழுந்திராய் -என்கிறார்கள் –

கண்ணபிரான் திருவவதரிக்கும் போது திருவாழியுந் திருச்சங்குமாகத் தோன்ற, தேவகியார் அதுகண்டு அஞ்சி,
‘அப்பனே! இவ்வாயுதங்களை மறைத்துக்கொள், மறைத்துக்கொள்; எழும் பூண்டெல்லாம் அஸுரமயமாயிருக்கப் பெற்ற
இந்நிலத்தில் இவை விளங்குவதற்குரியனவல்ல’ என வேண்ட; அவன் அங்ஙனமே அவ்வாயுதங்களை
உடனே உபஸம்ஹரித்திட்டானென்று இதிஹாஸபுராணங்கள் இயம்பா நிற்க,
இவ்வாய்ச்சிகள் அக்கண்ணபிரானைச் சங்கொடு சக்கரமேந்தும் தடக்கையனாகக் கூறுதல் பொருந்துமாறென்? எனில்;

கண்ணபிரான் அவ்வாயுதங்களை மறைத்திட்டது உகவாத பகைவர்கட்காகவே யாதலால்
அவர்களை யொழிந்த மற்றை அன்பர்கட்குத் தோற்றத்தட்டில்லை யெனக்கொள்க;

“நெய்த்தலை நேமியுஞ் சங்கும் நிலாவிய, கைத்தலங்கள் வந்து காணீரே” என்று யசோதைப் பிராட்டி
ஆய்ப்பாடியிற் பெண்டுகளை அழைத்துக் காட்டின பாசுரமுங் காண்க.

ய ஏஷ யந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்யஸ் மஸ்ரூர் ஹிரண்ய கேசக ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண -தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணி- சாந்தோக்ய உபநிஷத்
கப்யாஸம் என்கிற சொல்லை கபி ஆஸம் என்று இரண்டாகப் பிரித்தார். கபி என்றால் குரங்கு; ஆஸம் என்றால் அதன் பின்பகுதி. ஆகவே பகவானுடைய கமலக் கண்கள் குரங்கின் பின்பகுதியை போல சிவந்து இருந்தன என்று விபரீதமாக அர்த்தம் சொன்னார்.
‘கம்பீராம்பஸ்ஸமுத்பூத-ஸும்ருஷ்டந ள-ரவிகரவிகஸித புண்டரீக தலாம
லாயதேக்ஷ :* கம்பீராம்பஸ்ஸமுத்பூதமாயும், ஸும்ருஷ்டநாளமாயும், ரவிகரவிகஸித
மாயுமிருக்கிற புண்டரீகத்தை எம்பெருமானுடைய திருக்கண்களுக்கு உவமையாகச் சொல்லுவது பொருத்தம்

—————————————————

(ஸ்வாபதேசம்)

ஒன்பதாம் பாட்டில் –
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய் -என்கிறது
நம்மாழ்வாரை -அது எங்கனே என்னில் –

திருமாலுக்கு உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் என்னும் படியான சேஷத்வ பூர்த்தியை யுடையவராய் –
அவன் அடியராய் நனிமாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே -என்னும்படி
பாகவத ஸம்ருத்தியைக் காண்கையிலே-அபிவ்ருத்த மநோ ரதத்தை யுடையராய் –
அனயாப தேசத்திலும் -அடிச்சியோம் என்கையாலும் –

பின்னை கொல்-என்கிற ஒப்பனையாலும் –

சூட்டு நன் மாலைகள் -என்று தொடங்கி –
அடலாயர் தம் கொம்பினுக்கே -என்று நப்பின்னைப் பிராட்டிக்காக அவன் விடை யடர்த்த வியாபாரத்தை பேசியும் –

பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலான -என்றும்
என்னை நெகிழ்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் -என்றும் –
வேயின் மலி யுரை தோளி பின்னைக்கு மணாளனை -இத்யாதியாலும் –
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன் தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேன் –
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவுடையம் -என்றும் –
எருது ஏழ் தழி -என்றும் -சடையினார் -என்றும் -இத்யாதியாலே
பல படியாக அவள் புருஷகார வைபவத்தை ஆதரித்து –

மற்றும் எத்திறம் என்று பிறந்த வாற்றிலே கிருஷ்ண சேஷ்டிதங்களிலே ஈடுபட்டு

குரவை ஆய்ச்சியரிலே நண்ணி வணங்கி அனுபவித்தும்

எல்லாம் கண்ணன் -என்றும் –

நீராடப் போதுவீர்-என்றத்தை -கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் -என்கையாலும் –

மந்தாதிகாரிகளை -என் நெஞ்சால் நோக்கிக் காணீர்-என்று உணர்த்தியும் –

சகோதரிகளை உயிராகத் தேடி -இசைமின் என்று போதிக்கையாலும்-

நீராட -என்றத்தை -காலை நன் ஞானத் துறை படிந்தாடி -என்றும் –
அப்பன் திருவருள் மூழ்கினன் -என்கையாலும் –

இதில் நாணாதாய் என்றத்தை -நாணும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை -என்றும்

நா உடையாய் என்றத்தை -என் நா -என்றும் –
வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவை யுடை மால் வண்ணனை மலக்குடை நாவுடையேன் -என்கையாலே
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் -என்கிறது நம்மாழ்வாரை –

இப்பாட்டில் –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் பங்கயக் கண்ணானைப் பாட -என்றதையே
பங்கயக் கண்ணனையே -என்றும்-பங்கயக் கண்ணன் என்கோ-என்றும்
வீவில் சீரன் மலர்க கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை வீவில் காலம் இசை மாலைகள் ஏத்தி -என்றும் பேசினார் இறே –

—————————

தொண்டரடிப் பொடிகளுக்கு அடுத்த திருப்பாணாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
இதில், நங்காய்! நாணாதாய்! நாவுடையாய்! என்ற மூன்று விளிகளும் பாண் பெருமாளுக்கு நன்கு பொருந்தும்,

நங்கை யென்பது குண பூர்த்தியைச் சொல்லுகிறது.
லோக ஸாரங்க மஹாமுனிகள் வந்து என் தோளின்மீது ஏறிக்கொள்ளுமென்ன,
அத்யந்த பார தந்திரிய ஸ்வரூபத்தை நினைத்து அதற்கு உடன் பட்டமை குண பூர்த்தி,

அங்ஙனம் அந்தணர் தலைவரது தோளின்மீது ஏறியீருக்கச்செய்தேயும் சிறிதும் செருக்குக் கொள்ளாமல்
‘அடியார்க்கென்னை யாட்படுத்த விமலன் என்றே பேசினவராதலால் நாணாதவர். (நாண் – அஹங்காரம்)

‘பாண்பெருமாள் பாடியதோர் பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுமின்கள்’ என்று தேசிகன் பணித்தபடி
ஸகல வேதார்த்தங்களையும் பத்துப் பாசுரத்திலே அடக்கிப் பேசின பரம சதுரராதலால் நாவுடைடயார்

“கையினார் சுரிசங்கனலாழியர்” என்று சங்கொடு சக்கர மேந்தின வழகை யநுபவித்தமை பற்றியும்
‘கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள்’ என்று
கண்ணழகில் ஈடுபட்டும் பேசினமை பற்றியும் ‘சங்கொடு சக்கரமேந்துந் தடக்கையன் பங்கயக் கண்ணனைப் பாட என்றாள்.

இவ்வாழ்வார் தமது சாதி நிலைமைக்கு ஏற்ப வாழ்ந்த விடத்தைக்கருதி உங்கள் புழைக்கடை யித்யாதி அருளிச் செய்யப்பட்டது.

இவரது சரிதையில் ஸம்பந்தப்பட்ட லோகஸாரங்க மஹாமுனிகளின் தன்மையைக் காட்டுவது போலுள்ளது
செங்கற் பொடிக்கூறை யித்யாதி.

‘எங்களை முன்ன மெழுப்புவான் வாய் பேசும் நங்காய்’ என்பதில் ஒரு அழகிய பொருள் தொனிக்கும்.
(அதாவது-) எழுப்புவதாவது – தூக்கிக் கொள்வது. எங்களை என்றது பாகவதர்களை யென்றபடி.
பாண்பெருமாளே! உம்முடைய முதற் பாசுரத்தில் ‘அடியார்க் கென்னையாட்படுத்தவிமலன்’ என்ற
சொல் நயத்தை நோக்குங்கால் பாகவதர்களை நீர் தோளில் தூக்கிக் கொண்டாடுபவர் போலத் தெரிகின்றது.
உமது கதையோ அப்படியில்லை. மஹாபாகவதரான லோகஸாரங்க மஹா முனியின் தோளின் மீதேறி நீர் இருந்ததாகவுள்ளது.
ஆகவே, முந்துற முன்னம் பாகவத சேஷத்வத்தை நீர் சொல்லிக் கொண்டது வாய்பேசு மத்தனையே போலும் என்று விநோதமாகக் கூறுகிறபடி.

———————————————————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading